(-2025.06.11 – China-)
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின்பேரில் இந்நாட்களில் சீனாவிற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் நேற்று (10) த சிங் பிரதேசத்தின் வூச கிராமத்தின் சர்வதேச புவிசார் தகவல் நிலையத்தையும் த சிங் பிரதேசத்தின் வெட் வைப்ஸ் (Wet wipes) உற்பத்தி தொழிற்சாலையொன்றையும் பார்வையிடச் சென்றதோடு வூச கிராமத்தின் பிரதானிகளையும் ஹூஜோ நகரத்தின் உப நகராதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.
குறிப்பாக, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வூச கிராமத்தின் குப்பைகூளப் பிரச்சினைக்குத் தீர்வுகண்டுள்ள விதம் பற்றியும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் கிராமத்தின் அபிவிருத்திக்காக பெண்கள் கூடுதலான பங்களிப்பினை வழங்குவதாகவும் வூச கிராமத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
பயிர்ச்செய்கைக்காக இரசாயனப் பசளையையும் கிருமிநாசினி பொருட்களையும் பாவிக்கையில் சீன மத்திய அரசாங்கம் அறிமுகஞ்செய்துள்ள தரநியமங்களைக் கடைப்பிடிப்பது கட்டாயமானதென்பதும் ஊர்மக்கள் அந்த அளபுருக்களை முறைப்படி கடைப்பிடித்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதும் இதன்போது வெளிப்பட்டது.
வூச கிராமம் பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த கற்றாராய்வில் ஒரு கிராமம் என்றவகையில் மிகவும் முன்னேற்றகரமான அபிவிருத்தியை அடைந்துள்ளதெனவும் அதன் அனுபவங்களை இலங்கையின் கிராமிய அபிவிருத்திக்கதாக ஈடுபடுத்து முடியுமெனவும் இதன்போது தோழர் டில்வின் சில்வா குறிப்பிட்டார்.
இந்த தருணத்தில் இளைஞர் அலுவல்கள் பிரதியமைச்சர் எரங்க குணசேகர, தேசிய ஒருங்கிணைப்பு பிரதியமைச்சர் முனீர் முளப்பர் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றதோடு ஹு ஜோ நகரத்தின் உப நகராதிபதி ஜன் ஷின்யூ, ஹுஜோ நகரத்தின் த சிங் பிரதேசத்தின் உப நகராதிபதி ஷீ மின் லீ, வூச கிராமத்தின் சின் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான தோழரையும் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரும் பங்கேற்றனர்.