Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு “ரணில் விக்கிரமசிங்கவைப்போல் அரசியலமைப்பினை மீறிய தலைவரொருவர் இலங்கை வரலாற்றில் இல்லை” -சட்டத்தரணி சுனில் வட்டகல- “மறுமலர்ச்சிக்காக முழு நாடுமே ஒன்றாக” எனும் தொனிப்பொருளில் நேற்று (21) முற்பகல் கொட்டகலை மலையகம் மக்கள் சபை நிகழ்வு இடம்பெற்றது. “உலகின் எந்தவொரு நாட்டுடனும் போட்டியிட்டு பயணிக்கக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதே திசைகாட்டியின் எதிர்பார்ப்பு” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க- ஜப்பானுக்கு அநுர
X

நோர்வே தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு

(-Colombo, May 02, 2024-)

புதுடில்லியிலுள்ள நோர்வே தூதுவர் திருமதி May-Elin Stener அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (02) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் திரு. John Bjerkem அவர்களும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத் அவர்களும் பங்கேற்றனர்.

இன்றளவில் இலங்கை முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை இருதரப்பினரதும் நீண்ட உரையாடலுக்கு இலக்காகியது. தேசிய சிக்கலின் நிகழ்கால வளர்ச்சிப்போக்குகள் பற்றியும் இவ்வருடத்தில் நடாத்தப்படவுள்ள தேர்தல்கள் பற்றியும் கவனஞ் செலுத்தப்பட்டது. நோர்வே அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் பற்றியும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் இத்தடவை இலங்கைக்கு வந்தபின்னர் மேற்கொள்ளப்படுகின்ற முதலாவது சந்திப்பு எனவும் நோர்வே தூதுவர் சுட்டிக்காட்டினார்.

Norway-Embassador
Norway-Embassador
Norway-Embassador
Norway-Embassador