Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
“தேசிய மக்கள் சக்தி இன்று இலங்கையின் மிகப்பெரிய அரசியல் பாய்ச்சலுக்கு தயாராகி வருகின்றது” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க- “இலட்சக்கணக்கான மக்கள் ஏகோபித்த குரலில் இந்த கொடிய ஆட்சியை ஒழித்துக்கட்ட வேண்டுமென்றே கூறுகிறார்கள்” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி- தேசிய மக்கள் சக்தியின் மே தினச் செய்தி நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில்திசைகாட்டியின் மே தினக் கூட்டங்கள் “மே தினத்தை மக்களின் ஆட்சிக்காக மக்களை அணிதிரட்டுகின்ற நாளாக மாற்றிடுவோம்” -மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா-
X

தேசிய மக்கள் சக்தி கார்தினலை சந்தித்தது…

(-Colombo, April 13, 2024-)

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 (உயிர்த்த ஞாயிறு தினம்) இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதியை ஈடேற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் உறுதியுரை பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இன்று (18) முற்பகல் 11.00 மணிக்கு பொரளையில் உள்ள பேராயரின் இல்லத்தில் வைத்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களால் கையளிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 (உயிர்த்த ஞாயிறு தினம்) கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ அடியார்களை இலக்காகக்கொண்டு தீவிரவாதிகள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், அத்தாக்குதலால் நிர்க்கதிக்குள்ளானவர்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் முறையாக சட்டத்தை அமுல்படுத்தும் எனவும்,
மேற்படி தாக்குதலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்ட நபர்களுக்கு எதிராக முறைப்படி சட்டத்தை அமுலாக்குமெனவும் வலியுறுத்தும் 07 விடயங்கள் அந்த உறுதியுரையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்து பேராசிரியர் கிறிசாந்த அபேசிங்க, சட்டத்தரணி சுனில் வட்டகல, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும, சிரேஷ்ட பேச்சாளர் ரொஹான் பெர்ணான்டோ, அருண சாந்த நோனிஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

NPP-meet-Kardinal
NPP-meet-Kardinal
NPP-meet-Kardinal
NPP-meet-Kardinal
NPP-meet-Kardinal