Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு “ரணில் விக்கிரமசிங்கவைப்போல் அரசியலமைப்பினை மீறிய தலைவரொருவர் இலங்கை வரலாற்றில் இல்லை” -சட்டத்தரணி சுனில் வட்டகல- “மறுமலர்ச்சிக்காக முழு நாடுமே ஒன்றாக” எனும் தொனிப்பொருளில் நேற்று (21) முற்பகல் கொட்டகலை மலையகம் மக்கள் சபை நிகழ்வு இடம்பெற்றது. “உலகின் எந்தவொரு நாட்டுடனும் போட்டியிட்டு பயணிக்கக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதே திசைகாட்டியின் எதிர்பார்ப்பு” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க- ஜப்பானுக்கு அநுர
X

பேரிடர் நிவாரணத்தை குறைப்பதற்கு எதிராக அபிவிருத்தித்துறை அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியை சந்தித்தனர்…

-Colombo, February 08, 2024-

அனர்த்த நிவாரண வேலைத் திட்டத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் அரசாங்கத்தின் முயற்சி குறித்து தேசிய மக்கள் சக்தியிடம் கலந்துரையாட அபிவிருத்தித்துறை அதிகாரிகள் பெப். 08 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணி பிரதான அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர். இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன சூரியஆராச்சி உள்ளிட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

மேலும்,
-> இயற்கைப் பேரிடரின் போது இதுவரைகாலம் மக்கள் பெற்று வந்த அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை குறைக்க அரசாங்கத்தின் முயற்சி
-> பேரிடர் கால நிவாரண சேவை அதிகாரிகள் உட்பட 117 அதிகாரிகள் பணி நீக்கம்
-> பேரிடர் நிவாரண சேவைகளின் தேசிய செயல்முறை வீழ்ச்சியடையும் ஆபத்துக்கள்
அடங்கலாக பல்வேறு விடயங்கள் தொடர்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் தேசிய மக்கள் சக்தியிடம் தெரியப்படுத்தினர்.