(-Colombo, May 28, 2024-)
உள்ளூரதிகாரசபை ஆளுகைப் பிரதேசங்களுக்காக ஆலோசனைக் குழுக்கள் நியமிக்கப்படுவதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியால் அடிப்படை உரிமைகள் மனுவொன்று இன்று (28) பிற்பகல் 2.30 இற்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இத்தருணத்திற்காக தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வட்டகல, கொழும்பு மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான அசித்த நிரோஷணவை உள்ளிட்ட குழுவினர் கலந்துகொள்வர்.