Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

විකෘති පාලනයෙන් – ජනතා පාලනයකට | සම්මන්ත්‍රණය | NPP

“පොහොට්ටුව කියන පක්ෂයෙන් අලුත් නායකයෙක් හදන්නේ නෑ, ඇයි ඒ..!!” – අනුර කුමාර දිසානායක

“පොහොට්ටුව කියන පක්ෂයෙන් අලුත් නායකයෙක් හදන්නේ නෑ, ඇයි ඒ..!!”

– අනුර කුමාර දිසානායක

Show More

විකෘති පාලනයෙන් – ජනතා පාලනයකට | සම්මන්ත්‍රණය | NPP

“රනිල් වික්‍රමසිංහ කියන්නේ පාවිච්චි කරපු කොන්ඩම් එකක්” – නීතීඥ හර්ෂණ නානායක්කාර

“රනිල් වික්‍රමසිංහ කියන්නේ පාවිච්චි කරපු කොන්ඩම් එකක්”

– නීතීඥ හර්ෂණ නානායක්කාර

Show More

රනිල් වික්‍රමසිංහට ඕන වුණා අරගලකරුවන් ඉවත්වීමට පෙර ප්‍රහාරය එල්ලකරලා වීරයා වෙන්න

රනිල් වික්‍රමසිංහට ඕන වුණා අරගලකරුවන් ඉවත්වීමට පෙර ප්‍රහාරය එල්ලකරලා වීරයා වෙන්න

රනිල් වික්‍රමසිංහට ඕන වුණා අරගලකරුවන් ඉවත්වීමට පෙර ප්‍රහාරය එල්ලකරලා වීරයා වෙන්න

Show More

Ranil Wickremesinghe is as much a part of the problem as the Rajapakses.

“Ranil Wickremesinghe is as much a part of the problem as the Rajapakses. So to expect him to do anything differently now, to take the country in a different direction and actually address the fundamental causes of why we are in an economic crisis is not realistic”

“Ranil Wickremesinghe is as much a part of the problem as the Rajapakses. So to expect him to do anything differently now, to take the country in a different direction and actually address the fundamental causes of why we are in an economic crisis is not realistic”

Show More

அமைதிவழி போராட்டதில் வெற்றிபெறும்வரை சட்டத்தரணிகள் ஒத்துழைப்பு வழங்குவார்கள்

அரசாங்கத்தின் இராணுவத்தை ஈடுபடுத்தி இன்று அதிகாலை காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலை தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் கண்டிக்கிறார்கள். சனாதிபதி அலுவலகம் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் இன்று மாலை 2.00 மணிக்கு   கையளிப்பதாக கூறியிருந்தவேளையில் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டது. போராட்டத்திற்காக  ஆரம்பத்தில் இருந்து தோற்றிய சட்டத்தரணி நுவன் போபகே கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டத்தரணி சாமிக்க ஜயசிங்க மீது வான் படை, இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஆகிய சிப்பாய்கள் தாக்குதல் நடாத்தியுள்ளார்கள். நாற்பதற்கு கிட்டிய போராட்டக்காரர்கள் […]

சட்டத்தரணி சுசந்த தொடாவத்த

அரசாங்கத்தின் இராணுவத்தை ஈடுபடுத்தி இன்று அதிகாலை காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலை தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் கண்டிக்கிறார்கள். சனாதிபதி அலுவலகம் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் இன்று மாலை 2.00 மணிக்கு   கையளிப்பதாக கூறியிருந்தவேளையில் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டது. போராட்டத்திற்காக  ஆரம்பத்தில் இருந்து தோற்றிய சட்டத்தரணி நுவன் போபகே கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டத்தரணி சாமிக்க ஜயசிங்க மீது வான் படை, இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஆகிய சிப்பாய்கள் தாக்குதல் நடாத்தியுள்ளார்கள். நாற்பதற்கு கிட்டிய போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டிருந்தாலும் பிணியாளர் வண்டி மூலமாக அகற்றிக்கொள்ளக்கூட தடையேற்படுத்தப்பட்டது. மக்கள் அதிவாரமற்ற பாராளுமன்றத்தின் மண்டைகளை மாற்றுவதால் புதிதாக நியமிக்கப்பட்ட ரனில் விக்கிரமசிங்க எனப்படுகின்ற ஆட்சியாளனால் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டு மிகவும் மனிதாபிமானமற்றவகையில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.  மிகவும் அமைதியான சூழ்நிலை நிலவுகையில்  போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட ஏனைய இடங்கள் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அதைப்போலவே அமைதியைப் பாதுகாப்பதற்காக பொலீஸாரிம் ஒப்படைக்கப்படவேண்டி இருந்தநிலையில் சனாதிபதியால் திடீரென வெளியிடப்பட்ட வர்த்தமானி பத்திரிகையின்படி இராணுவம் அழைக்கப்பட்டு குறைந்தபட்ச பலம்    பிரயோகிக்கப்படாமல்கூட சர்வதேச ஊடகவியலாளர்களுக்கும் இந்நாட்டு ஊடகவியலாளர்களுக்கும் தாக்குதல் நடாத்துகின்ற நிலைக்குச் சென்றுள்ளார்கள்.    அமைதியானவகையில் சனநாயகரீதியாக எதிர்ப்பினைக் காட்டுவதற்கான உரிமைக்கு எதிராக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  மிரிஹானையில் தொடங்கிய இந்த  மக்கள் எழுச்சிக்காக ஆரம்பத் தருணத்தில் இருந்து இற்றைவரை நீதிமன்றத்திற்குள்ளேயும் அதற்கு வெளியிலும் சட்டத்தரணிகள் என்றவகையில் நாங்கள் செய்த இடையீட்டினை இந்த போராட்டம் வெற்றிபெறும்வரை தொடர்ச்சியாக மேற்கொள்வோம் என்பதை வலியுறுத்துகிறோம்.

தாக்குதலை மேற்கொள்ளவந்த இராணுவ உத்தியோகத்தர்கள் மதுபோதையில் இருந்திருக்கிறார்கள்

சட்டத்தரணி உபுல் குமரப்பெரும

நாடு இன்று மிகவும் பாரதூரமான அராஜகநிலையை அடைந்துள்ளது. நாட்டைப் பராமரித்து வருவதற்கு அவசியமான பணம் நாட்டில் கிடையாது. அதனால் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  எங்களுக்கு கடன்வழங்குகின்ற அமைப்புகளும் நாடுகளும் எமது நாட்டு ஆட்சியாளர்களிடம் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்த விடயம் சட்டத்தின் ஆட்சியை முறைப்படி பேணிவரப்பட வேண்டுமென்பதாகும். அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்பதாகும். நாட்டில் உறுதியான ஆட்சியை நிலைநிறுத்துமாறே ஆகும்.  காலிமுகத்திடல் தாக்குதல் மூலமாக இன்னமும் நாகரிகமடையாத ஒரு நாடு எனும் செய்தியே உலகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியமும், ஐக்கிய அமெரிக்காவும், கணடாவும் இந்த தாக்குதல் சம்பந்தமாக கவலையைத் தெரிவித்துள்ளன. நாங்கள் இந்த நாடுகளின் பிரதிநிதிகளுடனேயே கடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடவேண்டும். அவ்வாறு இருக்கையில் நாட்டின் நிதி அமைச்சர், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுனர் உலகின் முன்னிலையில் எமது நாட்டின் மனித உரிமைகள் பற்றி, சட்டத்தின் ஆட்சி பற்றி பேச முடியுமா? போராட்டக் களம் பற்றி சர்வதேச கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுத் தூதுவர்கள் இந்த அமைதிவழிப் போராட்டத்தை பாதுகாக்குமாறு முன்னாள் சனாதிபதிக்கும் இந்த சனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும் அறிவித்திருந்தார்கள். அவையனைத்தும் இருக்கையில் தாக்குதலுக்கு இலக்காகிய பலியானவர்கள் சார்பாக செயலாற்றிய சட்டத்தரணிகள் விடயங்களை எடுத்துரைத்தும் தாக்குதல் நடாத்திய இராணுவத்தினர் மிகையான மதுபோதையில்  இருந்ததாக அறிவித்துள்ளார்கள்.

தாக்குதல்தாரிகள் மண்வெட்டிப் பிடிகளை ஒத்த தடிகளால் தாக்குதல் நடாத்தியதாக கூறப்பட்டுள்ளது. மே 09 ஆந் திகதி தாக்குதலுக்கு இலக்காகிய அநுரங்க எனப்படுகின்ற போராட்டக்காரரையும் தாக்கியவேளையில் சட்டத்தரணி நுவன் போபகே அவரைக் காப்பாற்ற இடையீடு செய்துள்ளார். இத்தருணத்திலேயே நுவன் போபகே தாக்கப்பட்டுள்ளார். ஒரு பெண்ணையும் மனிதாபிமானமற்ற வகையில் தாக்கியவிதம் புகைப்படங்கள் மூலமாக வெளியாகின்றது. நாட்டிலுள்ள சாதாரண பொதுமக்கள்மீது தாக்குதல் நடாத்த  இராணுவத்திற்கு எங்கிருந்து அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது? திருவாளர் ரனில் விக்கிரமசிங்கவின்  அரசாங்கத்தில் 1988 – 1989 இன் அடக்குமுறையை நான் தனிப்பட்டமுறையில்  கண்டிருக்கிறேன். நீண்டகாலமாக ரனில் விக்கிரமசிங்க முதிர்ச்சியடைந்த, சட்டத்துடன் செயலாற்றுகின்ற, பாராளுமன்ற சனநாயகத்தை பாதுகாக்கின்ற ஒருவர் எனும் மாயை நிலவியது.  மனிதர்கள் அந்த மாயையை நம்பினார்கள்.  சனாதிபதி பதவியில் பதவிப்பிரமாணம்செய்து 24 மணித்தியாலங்கள் கழிவதற்கு முன்னராக இருந்த இடத்தை விட்டகல தயாராகி இருந்த போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்தியமைக்கான காரணம் என்ன? எதற்காக இராணுவம் அனுப்பப்பட்டது? படைத் தளபதிகளையும் பாதுகாப்புச் செயலாளரையும் சந்திக்க சனாதிபதி நேற்று மாலை  சென்றதாக செய்தி வெளியாகியது. அரச தலைவர் “ இதனை அடித்து நொறுக்குங்கள்” எனக் கூறியுள்ளாரா? நிராயுதபாணிகளான மக்கள் மீது தாக்குதல் நடாத்துமாறு கட்டளையிட அரச தலைவருக்கு முடியுமா?  இராணுவம் என்பது ஒழுக்கக்கட்டுப்பாட்டுடன்  நிறைவேற்றுத்துறையின் ஒரு பகுதியாக நிருவகிக்கப்படுகின்ற நிறுவனமாகும்.  நாட்டு மக்களை பொல்லுகளால் தாக்க, துப்பாக்கியால் அல்லது வேறு ஆயுதங்களால் அடிக்க, அவர்களின் அதனங்களை அழிக்க இராணுவத்தால் முடியாது.  

படைத்தளபதிகள் மூவரும் பொலீஸ் மா அதிபரும் நேற்று நடாத்திய தாக்குதல் சம்பந்தமாக, அதன் மிலேச்சத்தனம் சம்பந்தமாக, காணாமல்போன ஆதனங்கள் சம்பந்தமாக புலன்விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும். போராட்டக்களம் ஒரு கட்டத்தில் இந்த நாட்டின் கலாசாரக் களமாக மாறியிருந்தது. அந்த இடத்தில் கெமரா இருந்தது. திரையரங்குகள் இருந்தன. கலையகமொன்று இருந்தது. நூலகமொன்று இருந்தது. புரொஜெக்டர், கம்பியூட்டர், வீடீயோ கெமரா, அவர்களின் தொலைபேசிகள் ஆகிய எல்லாவற்றையும் அள்ளிச்சென்றுவிட்டார்கள். குற்றச்செயலொன்று சம்பந்தமானதெனில்  வழக்குப் பொருட்கள் என்றவகையில் கைப்பற்றுவதற்கான  வழிமுறை இருக்கின்றது. இந்த இடத்தில் கொள்ளையடித்தலே இடம்பெற்றது. முப்படைத் தளபதிகளுக்கும் பொலீஸ் மா அதிபருக்கும் தாக்குதல் ஏன் நடாத்தப்பட்டது? ஆதனங்கள் எந்த விடயத்தின்பேரில் நாசமாக்கப்பட்டன? எக்காரணத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டார்கள்? பண்டங்களும் பொருட்களும் எக்காரணத்தின்பேரில் எடுத்துச் செல்லப்பட்டன? என்பதை தெளிவுபடுத்தவேண்டிய பொறுப்பு இருக்கின்றது. அது சம்பந்தமான புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்? இன்றளவில் சனாதிபதி மீதும் இந்த பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. உடனடியாக இது சம்பந்தமான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.   

கோட் அணிந்து, ஆங்கிலம் பேசிவிட்டால் மாத்திரம் மனிதர்கள் நாகரிகமுடையவர்களாக மாற மாட்டார்கள்

சட்டத்தரணி அகலங்க உக்வத்த

குடியரசு என்பது மக்களாவர். மக்களால் நியமிக்கப்பட்ட அரசாங்கம் மேலே இருக்கின்ற ஆட்களின் கட்டளைப்படி மக்கள்மீது தாக்குதல் நடாத்துவது அரசியலமைப்பினை மீறுவதாகும்.  அது சம்பந்தமாக குற்றவியல் சட்டம் அமுலாக்கப்படவேண்டும். ஒருசில தலைவர்கள் தம்மை ரஷ்யாவின் லூயி மன்னர் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தற்காலிகமாக இருக்கின்ற ஆட்சியாளர்கள் மாத்திரமே. இந்நாட்டின் எட்டாவது நிறைவேற்று சனாதிபதி சனநாயகரீதியான அரசியலமைப்பினை அறிந்த பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளை அறிந்த ஏனைய ஒன்றுமே அறியாதவர் என நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நாட்டில் பாசிஸவாதத்தை மேலோங்கச் செய்விக்க இடமளிக்க மாட்டேன் என அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார். மக்களின் விருப்பத்தைப் பெற்று அதிகாரத்திற்கு வர முடியாமல்  வேறுவிதமான கேம் விளையாடி மக்கள் அபிப்பிராயம் அல்லாதவகையில் அதிகாரத்திற்கு வந்தவர் பாசிஸவாதம் எனக் கூறுவதில் இவையும் அடங்கும் என நாங்கள் கூறுகிறோம். அவரது நடத்தைகள் மூலமாக பாசிஸவாதத்தை மேலோங்கச் செய்விக்க வேண்டாமென நாங்கள் வலியுறுத்துகிறோம்.  

அவரது மாமா 1906 இலேயே பிறந்துள்ளார். 1977 இல் அதிகாரத்திற்கு வந்து நாட்டின் முதலாவது நிறைவேற்று சனாதிபதியாகும்போது வயது 72 ஆகும். 1981 ஆகும்போது ரனில் விக்கிரமசிங்கவின் இன்றைய வயதாகும். அவரது மாமாவும் மக்களுக்கு எதிராக பாசிஸவாதத்தை இந்த வயதில்தான் நடைமுறைப்படுத்தினார். அதற்கிணங்க பரம்பரைப் பிரச்சினையொன்று உள்ளதா என நினைக்கிறோம். அரசாங்கத்திற்கு அடக்குமுறை என்பது ஆயுதமாகும். மக்களை பேதமடையச் செய்வித்து  அடக்குமுறையைப் பிரயோகிக்கவே இந்த தயார்நிலை. முப்படையினருடன் பேதமடையச் செய்வித்து 1983 இன் நிலைமையை உருவாக்கவே இந்த முயற்சி செய்யப்படுகின்றது. ஆனால் இத்தருணத்தில் மக்கள் முற்றாகவே நிராயுதபாணிகளாவர். போராட்டக்காரர்களிடம் போன் மாத்திரமே இருக்கின்றது. அந்தக்காலத்திலும் இலத்திரனியல் ஊடகம் உலகிற்கு திறந்துவிடப்பட்டிருந்தால் அன்றைய போராட்டமும் இவ்விதமே தெளிவாகியிருக்கும்.  இவை அநாகரிகமான சமூகத்தில் புரியப்படுகின்ற மிலேச்சத்தனமான செயல்கள் என்பதை வலியுறுத்துகிறோம். கோட் அணிந்து ஆங்கிலம் பேசிவிட்டால் மாத்திரம் மனிதர்களாக நாகரிகமடைய மாட்டார்கள். அவருடைய கல்வி, வாசிப்பு பற்றி நாங்கள் பாராட்டுகிறோம்.  ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டதும் எல்லாநேரத்திலும் தம்ம பதத்தை ஞாபகப்படுத்துகிறார்.  செயல்களால் தாம் வெளியுலகிற்கு புலனாவதென்பதே புத்தசமயத்தில் கூறப்பட்டுள்ளது. தம்ம பதத்தில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

நூறு நாட்களுக்கு மேலாக நிலவிய போராட்டத்தை அடக்க அதிகாலை வேளையில் முப்படையினரை ஈடுபடுத்தியதன் மூலமாக அங்கிருந்த குழப்பநிலை தெளிவாகின்றது. நீங்கிச்செல்லவேண்டி இருந்தவர்களுக்கு மக்களுடன் முப்படையினரின் குழப்ப நிலைமையை உருவாக்க வேண்டுமா? அரசாங்கம் அடக்குமுறையை பிரயோகிப்பதற்காக மக்களுக்கும் முப்படையினர் மற்றும் பொலீஸாருக்கும் இடையில் முரண்பாட்டினை உருவாக்குகிறார்கள் என்பதை மக்கள் விளங்கிகொள்ள வேண்டும். மோதல் எனப்படுகின்ற கருவிக்காக அரசாங்கம் ஒத்தாசை புரியுமானால்  போராட்டக்காரர்களும் மக்களும் அந்த கருவியை பாவிக்காதிருக்க திடசங்கற்பம் பூணவேண்டும். வன்முறையற்றதன்மை ஒரு கோழைத்தனம் என நினைத்துவிடலாகாது  என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். இந்த வெற்றியை மென்மேலும் நிலையானதாக்கிக்கொள்ள அமைதியான போராட்டமென்றவகையில் வரலாற்றில் சேர்ந்துகொள்ளவேண்டும். சட்டத்தரணிகள் சமுதாயம் என்றவகையிலும் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் இந்த நிந்திக்கத்தக்க  தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு  மிரிஹானை தொடக்கம் மக்கள் போராட்டதுடன் இணைந்திருந்த சட்டத்தரணிகள் தொடர்ந்தும் தோற்றுவார்கள் என்பதை வலியுறுத்துகிறோம். அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள வெளிப்படுத்தல்கள் மற்றும் கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்தை முறைப்படி அமுலாக்குவதற்காகவே சட்டத்தரணிகள் சமுதாயம் அவ்விதமாக செயலாற்றி வருகின்றது. சட்டத்தரணிகள்மீதும் அரசாங்கத்தின் அடக்குமுறை வருமாயின் மக்களும் சட்டத்தரணிகளுடன் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். மக்களைப் பாதுகாத்து அதியுயர் சட்டத்திற்காக மக்களுடன் அரண் அமைத்துக்கொள்ள ஒன்றுசேர்ந்தோம்.  தற்போது அந்த மக்கள் அரணை அமைத்துக்கொண்டு முன்நோக்கி வருகிறார்கள் என்பதை நாமறிவோம்.  நாங்கள் அதனை மக்களுக்கு வலியுறுத்துகிறோம்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கான பதில்கள்

கேள்வி:- இது சம்பந்தமாக எதிர்காலத்தில் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வீர்களா?

பதில்:-

நிச்சயமாக மேற்கொள்வோம். தாக்குதலுக்கு மேலதிகமாக இங்கிருந்த பொருட்கள் காணாமல் போயுள்ளது. கொள்ளையடித்தல் போன்றது.  அவையனைத்தும் சம்பந்தமாக ஏற்கெனவே சட்டத்தரணிகள் செயலாற்றி வருகிறார்கள். மூர்க்கத்தனமாகவும் மனிதபிமானமற்ற வகையிலும் சரியாக அரச பயங்கரவாதம் போன்று  செயலாற்றுதல் சம்பந்தமாக தாக்குதலுக்கு கட்டளை பிறப்பித்த அனைவருக்கும் எதிராக அடிப்படை உரிமைகள் மற்றும் ஏனைய சட்ட ஏற்பாடுகளின்கீழ்  செயலாற்றுவோம்.

கேள்வி:- மக்களின் பிரச்சினைகளுக்கு பதிலளிக்கவேண்டிய ஆட்சியாளர்கள் ஏன் இவ்வாறு செய்கின்றன?

பதில்:-

பிரச்சினைகளுக்கு பதிலளிக்காத தலைவர்கள்தான் அடக்குமுறையாளர்களாக அமைவார்கள். சனாதிபதி அலுவலகத்திலிருந்து நீங்கிச்செல்ல போராட்டக் களத்தில் இருந்தவர்களே தீர்மானித்திருந்தார்கள்.  இன்றைய தினத்தில் நீங்கிச்செல்ல சம்பந்தப்பட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தவேளையில் போராட்டக்காரர்களின் விடைபெறுதல் கௌரவமான வகையில் இடம்பெற்றால் எதிர்காலத்தில் வருகின்ற பிரச்சினைகளுக்கு  ஆட்சியாளர்களுக்கு நல்ல பதிலாக அமையமாட்டாது. மக்களின் பிரச்சினைகளுக்கு  பதில் கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டத்திற்கு வருவதாக போராட்டக்காரர்கள் கூறினாலும் அரசாங்கத்தின் எதிரில் நிலவுகின்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான  ஆற்றல் இல்லாமல் போகும். இதனால்த்தான் அடக்குமுறை எனும் கருவி கொண்டுவரப்பட்டது. அதைப்போலவே பொலீஸாரையும் இராணுவத்தையும் மக்களையும் மோதவிடுவதற்காகவே இந்த வேலையை செய்தார்கள். இன்றளவில் சாதாரண மக்களும் இராணுவத்திற்கு ஆதரவான குழுக்களும் முகநூலில் பிரசுரித்துள்ள கூற்றுக்கள் மூலமாக இது தெளிவாகத் தெரிகின்றது.  ஆட்சியாளர்களுக்கு அவசியமானவை ஓரளவுக்கு இடம்பெற்றுள்ளது.    1988 காலத்தில் இதுதான் இடம்பெற்றது. அதனால் மக்கள் விவேகமுள்ளவர்களாக நடந்துகொள்ளவேண்டும். மக்கள் பார்க்கவேண்டியது இராணுவத்துடன் உள்ள பிரச்சினை என்றல்ல. அரசாங்கத்துடனான பிரச்சினை என்ற வகையிலாகும். அதனால் மிகவும் புத்திசாதுரியமாக நடந்துகொள்ளுமாறும் உணர்ச்சிகளுக்கு அடிமையாக வேண்டாமெனவும் மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.  யூலை 09 ஆந் திகதி மக்களும் படையினரும் ஒன்றுசேர்வதை நாங்கள் கண்டோம். இதனை ஒரு பிரிவினையாக மாற்றவேண்டியதே அரசாங்கத்தின் தேவையாகும். பாதுகாப்பு பிரிவுகளுடன் எந்தவிதமான மோதலுக்கும் செல்லாமல் செயலாற்றவேண்டிய விசேட பொறுப்பு மக்களுக்கு இருக்கின்றது. பாதுகாப்புப் பிரிவுகளுக்கு கட்டளை பிறப்பிப்பது ஆட்சியாளர்களே. அவர்களுக்கு அவசியமாவது பிரிவினையை ஏற்படுத்துவதே.  அதற்கு  இடமளிக்காதிருக்கவேண்டிய பொறுப்பு   இந்த நாட்டின் அனைத்துப் பிரசைகளுக்கு உண்டு.

Show More

ரனில் விக்கிரமசிங்கவை சனாதிபதியாக எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. அவர் ராஜபக்ஷாக்களுக்கே சேவை புரிகிறார். நாடு பூராவிலும் இருக்கின்ற பொதுமக்கள் போராட்டத்தை தாக்குதல்களால் நிறுத்திவிட முடியாது

ராஜபக்ஷாக்களின் கொந்துராத்து முறைக்கிணங்க நியமிக்கப்பட்ட ரனில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின்பேரில் கோல்பேஸ் போராட்டக்காரர்கள் மீது பாரிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களின் சனநாயகரீதியான நியாயமான போராட்டத்தை அடக்குமுறையால் இல்லாதொழிக்க அவர் ஆரம்பத்தில் இருந்தே முயற்சிசெய்து அதன் ஒரு படிமுறையாக நேற்றிரவு மிலேச்சத்தனமான தாக்குதலொன்றை அமுலாக்கினார். பெருந்தொகையானோருக்கு காயமேற்படுத்தி பத்து பேருக்கு மேற்பட்ட எண்ணிக்கை கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இரண்டு வெகுசன ஊடகவியலாளர்களை தடுத்துவைத்திருந்தமையால் பொழுதுபுலரும்வரை தேடிக்கொள்ள முடியவில்லை. தாக்குதலுக்கு இலக்காகியவர்கள் மத்தியில் சட்டத்தரணியொருவரும் இருக்கிறார். வெகுசன ஊடகவியலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள்மீது தாக்குதல் […]

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் – ரில்வின் சில்வா

ராஜபக்ஷாக்களின் கொந்துராத்து முறைக்கிணங்க நியமிக்கப்பட்ட ரனில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின்பேரில் கோல்பேஸ் போராட்டக்காரர்கள் மீது பாரிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களின் சனநாயகரீதியான நியாயமான போராட்டத்தை அடக்குமுறையால் இல்லாதொழிக்க அவர் ஆரம்பத்தில் இருந்தே முயற்சிசெய்து அதன் ஒரு படிமுறையாக நேற்றிரவு மிலேச்சத்தனமான தாக்குதலொன்றை அமுலாக்கினார். பெருந்தொகையானோருக்கு காயமேற்படுத்தி பத்து பேருக்கு மேற்பட்ட எண்ணிக்கை கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இரண்டு வெகுசன ஊடகவியலாளர்களை தடுத்துவைத்திருந்தமையால் பொழுதுபுலரும்வரை தேடிக்கொள்ள முடியவில்லை. தாக்குதலுக்கு இலக்காகியவர்கள் மத்தியில் சட்டத்தரணியொருவரும் இருக்கிறார். வெகுசன ஊடகவியலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள்மீது தாக்குதல் நடாத்தி அந்த இடத்தில் இருந்தவற்றை உடைத்தெறிகின்ற கீழ்த்தரமான தாக்குதலை தேசிய மக்கள் சக்தி கண்டிக்கின்றது. இந்த நிலைமையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டுமென நாங்கள் மக்களை வலியுறுத்துகிறோம். சனநாயகரீதியாக கடந்த காலம் பூராவிலும் போராட்டத்தில் இருந்த மக்கள் இந்த நிலைமையை தோற்கடித்திட உடனடியாக அணிதிரளவேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறோம்.  இரத்தம் மீது பயணித்து ராஜபக்ஷாக்களின் நோக்கங்களை ஈடேற்ற ரனில் விக்கிரமசிங்க தயாராகி வருகிறார்.  ராஜபக்ஷவிற்கோ ரனில் விக்கிரமசிங்கவிற்கோ அந்த இயலுமை கிடையாதென எமக்கு நன்றாகவே தெரியும்.

போராட்டம் நிச்சயமாக முன்நோக்கி நகரும். கோல்பேஸ் மீதது தாக்குதல் நடாத்தி மக்களின் எதிர்ப்பினை முடிவுக்கு கொண்டுவர முயற்சிசெய்யப்படுமாயின் அது அவ்வாறு நடைபெற மாட்டாது. கோல்பேஸ் மைதானம் போராட்டத்தின் ஒரு கேந்திரநிலையமாக இருந்தாலும் நாடுபூராவிலும் மக்கள் மத்தியில் போராட்டம் நிலவுகின்றது.  நாடுபூராவிலும் இருக்கின்ற பொதுமக்கள் போராட்டத்தை அடக்குமுறையால் நிறுத்திவிட இயலாதென்பதை நாங்கள் தெளிவாகவே கூறுகிறோம். சதிநிறைந்த, கொந்துராத்து முறைக்கிணங்க  ரனில் விக்கிரமசிங்கவை சனாதிபதியாக்கிய பின்னர்  அடக்குமுறையை அமுலாக்கமுன்னர் போராட்டக்காரர்கள் கைப்பற்றிய இடங்களிலிருந்து படிப்படியாக நீங்கிச்சென்று கொண்டிருந்தார்கள்.  அத்தகைய குழுவினர்மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றது. அதனை முழு நாடும் முழு உலகுமே கண்டிக்கவேண்டும். இதனை ரனில் விக்கிரமசிங்கவின் முதலாவதும் இறுதியுமான தாக்குதலாக மாற்றிக்கொள்ள வேண்டும். மக்கள் ஆணையின்றி புண்ணியத்திற்காக பிரதமர் பதவி கிடைத்து ராஜபக்ஷாக்களின் நல்லாசியுடன்  சனாதிபதி பதவியையும் பெற்ற ரனிலினால் பாதுகாக்கப்படுவது மக்கள் அல்ல. ராஜபக்ஷாக்களே. அவருக்கு சனாதிபதி பதவியைக் கொடுத்தது மக்கள் அல்ல, ராஜபக்ஷாக்களே. மக்கள் ஆணை இல்லாத ரனில் விக்கிரமசிங்கவை சனாதிபதியென எமது நாட்டில் எவருமே கணக்கெடுக்கத் தேவையில்லை. கோட்டாபய ராஜபக்ஷ விரட்டியடிக்கப்பட்டாலும் அவருக்கு மக்கள் ஆணை இருந்தது. ரனில் விக்கிரமசிங்கவிற்கு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக்கூட பெறமுடியவில்லை. போராட்டம் காரணமாக பதவியைக் கைவிடவேண்டி நேரிட்ட, மகுடங்கள் கழன்ற ராஜபக்ஷாக்களுக்கே ரனில் சேவகம் புரிகிறார்.  போராட்டக்காரர்களை பழிவாங்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கின்றது. அந்த கொந்துராத்து வேலை ரனிலிடமே ஒப்படைக்கப்படுகின்றது.

ரனில் விக்கிரமசிங்க ஒருபோதுமே மண்ணில் கால்பதித்து இருந்தவரல்ல. இப்போதுகூட மண்ணில் நிலவுகின்ற  பாரிய மக்கள் எதிர்ப்பினை விளங்கிக்கொள்ளவில்லை.  ஐந்து வருடங்களுக்காக தெரிவுசெய்யப்பட்ட சனாதிபதியை இரண்டரை வருடங்களில் விரட்டியடித்த மக்கள் அபிப்பிராயத்தை விளங்கிக்கொள்ளாமல் அவசரகால சட்டத்தைப் பிரகடனஞ்செய்து இராணுவத்தை ஈடுபடுத்தி இருக்கிறார். பயமுறுத்தி இராணுவத்தை ஈடுபடுத்துகின்ற தந்திரோபாயத்தை ரனிலைவிட சிறந்தமுறையில் ராஜபக்ஷ அமுலாக்கினார். பிரமாண்டமான சமூக பொருளாதார நெருக்கடியின் மத்தியில் அதனால் பாதிக்கப்பட்ட மாபெரும் மக்கள் எதிர்ப்பின் மத்தியில் விளையாட்டு காட்டுவது கடுகளவேனும் மூளையுள்ள ஒரு தலைவர் செய்யக்கூடியதொன்றல்ல. மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்குப் பதிலாக அச்சுறுத்தி போராட்டத்தை அடக்க முயற்சி செய்வாராயின்  அது  எவ்வித்திலும் வெற்றியளிக்க மாட்டாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். எவருமே பயப்படமாட்டார்கள். பயப்பட நாங்கள் இடமளிக்கவும் மாட்டோம். இந்த நாட்டு மக்களின் இறைமையை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஆட்சியொன்றை  நிறுவும்வரை இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தேசிய மக்கள் சக்தி பிரமாண்டமான இடையீட்டினைச் செய்யும்.

தமது பகைவர்கள் எங்கே இருக்கிறார்கள், பிரச்சினை சரியாக என்னவென்பதை மக்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். மக்களால் உறுப்பினர் பதவிகூட வழங்கப்படாத ரனில் விக்கிரமசிங்கவை இந்த நாட்டின் சனாதிபதியாக்கியது ராஜபக்ஷநேயமுள்ள பாராளுமன்ற உறுப்பினர் குழுவாகும். ரனில் விக்கிரமசிங்க மாத்திரமல்ல, இந்த பாராளுமன்றமும் மக்கள் அபிப்பிராயத்திற்கு  முரணானதாகும். பொதுமக்களின் விருப்பமின்றி ரனில் விக்கிரமசிங்க பிரதமராகவும், சனாதிபதியாகவும் நியமிக்கப்பட்ட மக்கள் ஆணையை திரிபுநிலையுறச் செய்வித்த பாராளுமன்றத்திற்குப் பதிலாக உண்மையான மக்கள் அபிப்பிராயத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற பாராளுமன்றத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டியது அவசியமாகும். பாராளுமன்றத்தின் இந்த உள்ளடக்கத்தை வைத்துக்கொண்டு,  மக்கள் அபிப்பிராயம் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்ற உண்மையான பாராளுமன்றத்தை நியமித்துக் கொள்ளாமல் ஓரங்குலம்கூட முன்நோக்கி நகரமுடியாது. தற்போது ரனிலை விரட்டுகின்ற போராட்டம் மாத்திரமல்ல இந்த பாராளுமன்றத்தையும் சேர்த்து விரட்டவேண்டும். அதற்காக நாங்கள் கூட்டாக போராடவேண்டி உள்ளது. அதுவரை இந்த போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படும். ரனில் விக்கிரமசிங்க, கோட்டாபய கற்றுக்கொண்ட பாடத்தை கற்றுக்கொள்ளப் போகின்றார்.   அதற்காக எமது நோக்கங்கள், போராட்டக் கோஷங்களை சரியாக விளங்கிக்கொண்டு போராட்டங்களை மேற்கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இராணுவம் பொலீஸ் என்பவர்களும் இந்த நாட்டின் பிரசைகளே. முழுநாடுமே எதிர்த்து நிற்கையில்  இராணுவத்தினாலும் பொலீஸாரினாலும் இதனை பாதுகாக்க முடியாது.  புதிய படிமுறையொன்றிலான போராட்டத்தை தொடங்கவேண்டும். அதுவரை கைதுசெய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறும் அதற்காக போராடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

திருட்டு சனாதிபதி போராட்டக்காரர்களை எப்படி பாசிஸவாதிகள் எனக்கூறுவது?

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினீ அமரசூரிய


நிராயுதபாணிகளான, அமைதிவழி போராட்டக்காரர்கள் மீது சனநாயக விரோதமான வன்முறைத் தாக்குதலை நடாத்தி  சுற்றுப்புறத்தில் இருந்தவர்களையும் அந்த இடத்திற்குள் பிரவேசிக்க இடமளிக்காமல் இறுதியில் காயமடைந்தவர்களை அகற்றிக்கொள்ளக்கூட இடமளிக்கவில்லை. அனைத்துவிதமான அடிப்படை உரிமைகளையும் மீறி சனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அவரது பணிகளைத் தொடங்கினார். துர்நாற்றம் வீசுகின்ற அரசியலை மாற்றியமைக்குமாறே பாரிய போராட்டம் மூலமாக மக்கள் கோரிநிற்கிறார்கள். அந்த போராட்டத்தின் ஒருசில வெற்றிகள் பெறப்பட்டுள்ள பின்னணியில் ரனில் விக்கிரமசிங்கவின் தலைமையில் துர்நாற்றம் வீசுகின்ற அரசியல் கலாசாரத்தையே முன்னெடுத்துச் செல்ல முயற்சி செய்கிறார்கள். அதற்காக மக்கள்மீது தாக்குதல் நடாத்த தலைமை வகிப்பவர் ரனில் விக்கிரமசிங்கவே.  இந்த சம்பவங்கள் ஏன் இவ்விதமாக வரிசைப்படுத்தப்படுகின்றன என்பதை நாங்கள்  சரிவர விளங்கிக்கொள்ள வேண்டும். 

இலங்கையில் பல வருடங்களாக பிரதிநிதித்துவ சனநாயகம் பாவனையில் இருந்து வருகின்றது. மக்களின் அபிப்பிராயத்தை வெளிப்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. தேர்தலில் போன்றே எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்கள் ஊடாகவும்  வெளிப்படுத்தவதற்கான உரிமை இருக்கின்றது. தேர்தல் நடைபெறாத நேரத்தில் மக்களுக்கு எதிரான அரசாங்கத்திற்கு  போராட்டங்கள் மூலமாக தமது அபிப்பிராயத்தை வெளிக்காட்டுகிறார்கள். அவ்விதமாக அபிப்பிராயங்களை வெளிப்படுத்துபவர்களை பாசஸவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் என இந்த திருட்டு சனாதிபதி கூற ஆரம்பித்துள்ளார். மாபெரும் லிபரல்வாத, சனநாயகத்தை மதிக்கின்ற ஒருவராக தோற்றினாலும் அவரது உண்மையான இயல்பினை இந்த காலத்தில் விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. போராட்டத்தின் அடுத்த கட்டம் என்னவென்பதை நாங்கள் சரியாக தெரிவுசெய்யவேண்டும். இன்றளவில் மக்கள் ஆணையற்ற  பாராளுமன்றமும், சனாதிபதியொருவரும் இருக்கிறார்கள். மக்கள் ஆணை கிடையாது என்பது மாத்திரமல்ல அனைத்துப் பிற்போக்குவாத கும்பல்களையும் அவர்களின் செயல்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற இடமாக பாராளுமன்றம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த பாராளுமன்றம் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு இடமல்ல. மக்களின் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துகின்ற இடமுமல்ல. அதனால் மக்கள் ஆணை மூலமாக புதிய பிரதிநிதிகளை நியமித்துக் கொள்வதற்காக  பாராளுமன்றம் கலைக்கப்படவேண்டும். அது நாளுக்குநாள் உறுதிசெய்யப்பட்டு வருகின்றது. உருவாக்கிகொண்ட சனாதிபதியும் இன்று பதவிப்பிரமாணம் செய்கின்ற அமைச்சரவையும் மாத்திரமல்ல பாராளுமன்றமும் உண்மையாகவே மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற இடமாக மாற்றப்படவேண்டும். அதனூடாக மாத்திரமே போராட்டத்தின் இறுதி வெற்றியை அடையமுடியும்.

நாட்டை இரத்தக் களரியாக்காமல் மக்களின் ஆட்சியை தாபித்துக்கொள்ள இடமளிக்க வேண்டும்

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் மகிந்த ரத்நாயக்க  

மக்களின் அங்கீகாரம் இல்லாத ரனில் விக்கிரமசிங்கவின் ஆட்சியால் கோல்பேஸ் போராட்டக்காரர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலை அருவருப்புடன் கண்டிக்கிறோம். நாடு பூராவிலும் கடந்த காலத்தில் பல்வேறு போராட்டங்கள் நிலவினாலும் அதிக கவனத்தை வென்றெடுத்தது கோல்பேஸ் போராட்டக் களமாகும். அதன் முதலாவது கட்டத்தில் கட்சிசார்பற்ற, சர்வகட்சி போராட்டமே நிலவியது. அங்கு ரனில் விக்கிரமசிங்கவின் ஆட்களும் இருந்தார்கள். அவர் பிரதமராகிய பின்னர் முதலில் போராட்டத்தைப் பாதுகாப்பதாகவே கூறினார். அந்த மனிதன் சனாதிபதியாகி ஒரேயடியாக ஏன் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறார். இந்த நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்தினர்கூட ஒன்றுசேர்ந்து கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்ப குரலெழுப்பினார்கள்.  அவர் தொடர்ந்தும் இருந்திருந்தால் முதலாளித்துவ வர்க்கத்தினருக்கும் பாரதூரமான பிரச்சினை உருவாகி இருக்கும். தருணம் பார்த்து  அவரது மாமாவின் அரசியலமைப்பு உறுப்புரைகளால் போராட்டத்தை கொள்ளையடிப்பதையே ரனில் விக்கிரமசிங்க செய்தார். உலக வரலாற்றிலும் இத்தகையவை இடம்பெற்றுள்ளன.  எந்தவிதமான மக்கள் ஆணையும் இல்லாதவர்கள் அரசியலமைப்பினைப் பாவித்து அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள்.  

அமைதிவழிப் போராட்டத்திற்கு பொதுவான தலைமைத்துவம் இருந்தமையால் பல்வேறு சிக்கலான தருணங்கள் நிலவின. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த நாட்டை இரத்தக்களரியாக்க இடமளிக்க முடியாது. மக்கள் தமது விருப்பத்தை பாவிக்க போராட்டம் காரணமாக  இடமளிப்பதற்குப் பதிலாக பாசிஸவாத லேபளை ஒட்டினார். மக்களின் விருப்பத்தைப் பாவிக்க இடமளிப்பதற்குப் பதிலாக இராணுவத்தைப் பாவித்து இந்த நாட்டை இரத்தக்களரியாக்காமல் மக்களின் ஆட்சியை நிறுவ இடமளிக்கவேண்டும். இந்த நாட்டின் வரலாற்றில் 20 வருடங்களுக்கொருதடவை இரத்தம் சிந்தப்பட்டுள்ளது.  ஆட்சியாளர்களின் அதிகாரத்தைப் பாவித்து நடாத்திவந்த இந்த நாட்டியத்தை அரசியல் நெறிமுறைகளற்ற அரசியல் புனிதத்தன்மையற்ற  தவறான பிறப்பினைக்கொண்ட ஆட்சியாளன் இப்போதாவது நிலவுகின்ற நிலைமையை விளங்கிக்கொள்ள வேண்டும். மக்களின் அங்கீகாரமற்ற இராணுவத்தை ஈடுபடுத்தி இந்த கீழ்த்தரமான அரசியலை மேற்கொண்டுவர தீத்தொழில் புரிகின்ற மூலதனத்தினால் நெறிப்படுத்துகின்ற ஆட்சியாளர்கள் முயற்சி செய்வார்களாயின்  அது சாதிக்க முடியாத விடயமாகும்.  ரனில் விக்கிரமசிங்கவின் பிரபுக்கள் வர்க்க அரசியல் இனிமேலும் செல்லுபடியாக மாட்டாது. அதைப்போலவே சனநாயகப் பாதையிலிருந்து மீறிச்செயற்பட எவ்விதத்திலும் இடமளிக்க வேண்டாமென போராட்டக்காரர்களையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.  போராட்டத்தின் வெற்றி சனநாயக பாதையிலேயே நிலவுகின்றது. தேர்தல் ஊடாக  மக்கள் பிரதிநிதிகளை நியமித்துக் கொள்வதன் மூலமாக மாத்திரமே தீர்வினைக் காண முடியும். ரனில் விக்கிரமசிங்க ஒரு சனநாயகவாதியெனில், லிபரல்வாதியெனில் உடனடியாக தேர்தலுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும். 

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்

கேள்வி:- சமூக வலைத்தளங்களில் கோட்டாபயவின் ஆட்சி நியாயப்படுத்தபட்டு வருகின்றது. அது சம்பந்தமாக என்ன கூறகிறீர்கள்?

பதில்:- ரனில் விக்கிரமசிங்கவா கோட்டாபயவா நல்லவர் என நினைத்துவிட இயலாது. அவர்கள் ஒரே குலையின் தேங்காய்கள். ஒரே பையில் உள்ள உப்பு. கோட்டாபயவினால் ஆட்சிசெய்ய முடியாது என்பதால் கைவிட்டுச்செல்லவேண்டிய நிலயேற்பட்டது. மக்கள் விரும்பாத ஆட்சியாளர் ஒருவரை விரட்டியடித்ததும் விரும்புகின்ற ஆட்சியாளர் ஒருவரை தெரிவுசெய்ய வாய்ப்பு வழங்கவேண்டும். அதற்குப் பதிலாக மக்கள் விரும்பாத ஆட்சியாளர் அரசியலமைப்பினை பாவித்து அதிகாரத்திற்கு வந்துள்ளார். தவறான, கொள்ளைக்கார, அடக்குமுறைசார்ந்த அரசியல் கலாசாரம்கொண்ட ஒருநாட்டில் எவர் வந்தாலும் வித்தியாசமில்லை. அந்த அரசியல் கலாசாரத்தைத்தான் கோட்டாபய – ரனில் இருவரும் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். எனவே ரனிலைப் பார்க்கிலும் கோட்டா நல்லவர் எனக்கூற எவருமே பதற்றப்பட வேண்டியதில்லை.

கேள்வி:- புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- நியமிக்கப்பட்ட பிரதமரைப் பார்த்ததும் அமைச்சரவைக்கு என்ன  நேரிடுமென்பது தெரிகின்றது. இந்த வயோதிபர்காளல் எமது நாட்டு இளைஞர்களின் எதிர்காலம்தீர்மானிக்கப்படுவது கவலைக்குரிய விடயமாகும். நிலவிய வகையைச்சேர்ந்த அமைச்சரவையொன்றையே அமைத்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலைமையே ரனில் விக்கிரமசிங்கவிற்கு ஏற்படும்.

கேள்வி:- அமைச்சரவையிலிருந்து சாதகமான மாற்றமொன்றை எதிர்பார்க்க முடியாது என்றா நீங்கள் கூறுகிறீர்கள்? பதில்:- எந்தவொரு விடயத்தையும் எதிர்பார்க்க முடியாது. பல பொய்யான வாக்குறுதிகளை அளித்தே அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். சனாதிபதியாக்குவதற்காக வாக்களித்த அனைவருக்கும் கவனிப்பு காட்டவேண்டும். ஏற்கெனவே ஒரு பகுதியினருக்கு பணத்தினால் கவனிப்பு காட்டப்படடுள்ளது. இவர்களுக்கு அமைச்சர், பிரதி அமைச்சர், இராஜாங்க அமைச்சர் பதவிகளைக் கொடுக்காவிட்டால் அதிகாரத்தில் இருக்கமுடியாது. அதனால் அவர்களுக்கு கவனிப்பு கிடைக்கும். பாராளுமன்றத்தில் இருக்கின்ற திருட்டுக் கும்பலுக்கு அதிகாரத்தில் இருக்க இடமளிப்பதற்குப் பதிலாக இன்று இரவுகூட பாராளுமன்றத்தைக் கலைத்து தமது பிரதிநிதிகளை நியமித்துக்கொள்ள மக்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். பொருளாதார பிரச்சினைகள், அதன்மீது தோன்றிய சமூகப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள் ஆகிய அனைத்தையுமே புதிய மக்கள் ஆணை மூலமாகவே  தீர்த்துக்கொள்ளவேண்டும். அந்த மக்கள் ஆணையை இயலுமானவரை சீக்கிரமாக பெற்றுக்கொள்ள அணிதிரளுமாறு நாங்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

Show More