(-2025.10.14 – Colombo-) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அவர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா அவர்களுக்கும் இடையிலான சுமூகமான கலந்துரையாடல் நேற்று (13) பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை பிரதிநிதித்துவம் செய்து நவ்யா சிங்லா (Navya Singla) அவர்களும் இணைந்து கொண்டிருந்தார். இதன்போது, நாட்டின் நிகழ்கால நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், இந்திய உயர்ஸ்தானிகர் கலந்துகொண்ட வீடுகளற்ற மலையக மக்களுக்கு வீட்டுரிமைகளை […]
(-2025.10.14 – Colombo-)
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அவர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா அவர்களுக்கும் இடையிலான சுமூகமான கலந்துரையாடல் நேற்று (13) பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை பிரதிநிதித்துவம் செய்து நவ்யா சிங்லா (Navya Singla) அவர்களும் இணைந்து கொண்டிருந்தார்.
இதன்போது, நாட்டின் நிகழ்கால நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், இந்திய உயர்ஸ்தானிகர் கலந்துகொண்ட வீடுகளற்ற மலையக மக்களுக்கு வீட்டுரிமைகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் வெற்றி குறித்தும் கலந்துரையாடப்பட்டது. எதிர்காலத்தில் இவற்றுடன் சம்பந்தப்பட்ட உதவிகளை வழங்குவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தார். இந்த வீடுகளை வழங்கும் கருத்திட்டத்திற்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்கு தோழர் டில்வின் சில்வா இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
எதிர்வரும் காலத்தில் இந்திய முதலீடுகள் மற்றும் நன்கொடைகளை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், விவசாயம், தகவல் தொழில்நுட்பம், கடல் தொழிற்றுறை ஆகிய துறைகளில் இந்தியா பெற்றுக்கொண்ட முன்னேற்றம் பற்றிய அனுபவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
(-2025.10.13 – Colombo-) பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்ட் (Rémi Lambert)அவர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில், பிரான்ஸ் தூதுவர் அலுவலத்தின் உதவி செயற்பாட்டுப் பிரதானி மெதிவ் ஜோன் (Matthiev JOHN)மற்றும் ஊடக உத்தியோகத்தர் தினேஷா இலேபெரும ஆகியோரும் இணைந்திருந்ததுடன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை முதன்மையாகக் கொண்ட தேசிய மக்கள் […]
(-2025.10.13 – Colombo-)
பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்ட் (Rémi Lambert)அவர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில், பிரான்ஸ் தூதுவர் அலுவலத்தின் உதவி செயற்பாட்டுப் பிரதானி மெதிவ் ஜோன் (Matthiev JOHN)மற்றும் ஊடக உத்தியோகத்தர் தினேஷா இலேபெரும ஆகியோரும் இணைந்திருந்ததுடன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை முதன்மையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டம் குறித்தும் பிரான்ஸ் தூதுவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
குறிப்பாக பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவுகின்ற இராஜதந்திர உறவுகளை எதிர்காலத்தில் மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதுபோல, இலங்கைக்குள் தேர்தலின் பின்னர் வன்முறைகள் நிலவாமை தொடர்பில் தனது மகிழ்ச்சியை தெரியப்படுத்திய தூதுவர் ரெமி லெம்பர்ட், திசைகாட்டி அரசாங்கம் அதிகாரத்தை கைப்பற்றி ஒரு வருடம் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதுபோல, ஊழல் மோசடித் தடுப்பு மற்றும் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பல் நடவடிக்கைகள் தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் தூதுவர் பாராட்டினார்.
இதன்போது, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா அவர்கள், தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் ஊழல் மோசடியை தடுப்பதற்கும் நிதி வீண்விரயத்தை குறைப்பதற்கும் நிறைவடைந்த காலப்பகுதியில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும், 2026 ஆம் ஆண்டாகும்போது பொருளாதாரத்தை வலிமைப்பெற செய்விப்பதற்கும், அதை நிலையாக வைத்துக்கொள்வதற்குமான நோக்கத்துடன் தாம் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதல், கடல் வளத்தை பாதுகாத்தல் மற்றும் முகாமைத்துவத்திற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் பிரான் தூதுவர் ரெமி லெம்பர்ட் இதன்போது தெரிவித்தார்.
பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவுகின்ற நீண்டகால நட்புறவை மேலும் மேம்படுத்தி தொடர்ந்து பேணுவதற்கும், பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளில் பிரான்ஸின் முதல் வரிசை முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிப்பதற்கும் இதன்போது உடன்பாடு எட்டப்பட்டது.
இலங்கையுடன் தொடர்புகளை பேணும்போது ஒருபோதும் திரைமறைவு நிகழ்ச்சி நிரல் இருக்காது என்றும், எதிர்காலத்தில் அரச தலைவர்கள் பிரான்ஸில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்ட் இதன்போது அழைப்பு விடுத்தார்.
(-2025.09.25 – USA -) – ஜனாதிபதி உலகத் தலைவர்களுக்கு அழைப்பு எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதன்போது, ஒருவருக்கொருவர் எதிராகச் செல்வதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் கைகோர்த்துச் செல்லும் பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது […]
(-2025.09.25 – USA -)
– ஜனாதிபதி உலகத் தலைவர்களுக்கு அழைப்பு
எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அதன்போது, ஒருவருக்கொருவர் எதிராகச் செல்வதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் கைகோர்த்துச் செல்லும் பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வு, நியூயோர் நகரில் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் ஆரம்பமானதுடன், இலங்கை நேரப்படி இன்று (25) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமர்வில் உரையாற்றினார்
காசா பகுதியில் தொடர்ந்து இடம்பெரும் கொடூரமான பேரழிவு குறித்து கவலை தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய அனைத்து தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் இரு தரப்பும் உடனடியாக போர்நிறுத்தத்தில் ஈடுபடுவதுடன், அனைத்து மனிதாபிமான உதவிகளையும் தடையின்றி வழங்கவும், அனைத்து தரப்பிலிருந்தும் பணயக்கைதிகளை விடுவிக்க குரல் எழுப்புவதாகவும் வலியுறுத்தினார். இந்த கொடூரமான கொலைகளை நிறுத்துவதற்கு வலுவான அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஆயுதங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மனித நாகரிகத்தின் மதிப்புகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனிற்கு அனைவரும் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும், பல உலகளாவிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ள வறுமை குறித்து தனது உரையில் சிறப்பு கவனம் செலுத்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சமத்துவமின்மை மற்றும் வறுமையை உலகளாவிய பேரழிவாகக் கருதி அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். கூறினார்.
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு சிக்கலான சவாலாக மாறியுள்ள உலகளாவிய போதைப்பொருள் பிரச்சினையை ஒழிக்க இலங்கை எடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகளையும் இங்கு எடுத்துரைத்த ஜனாதிபதி, உலக சுகாதாரம், உலக ஜனநாயகம், உலக அரசியல் மற்றும் உலக நல்வாழ்விற்கு சவாலாக அமைந்துள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான உலகளாவிய நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த உலகத் தலைவர்கள் இணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவது, அவ்வாறான கடத்தல்காரர்கள் அந்தந்த நாடுகளுக்கு இடம்பெயர்வதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பது மற்றும் போதைக்கு அடிமையான புனர்வாழ்வு நிலையங்களை உருவாக்குவது குறித்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி உலகத் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
சமூகத்தில் பாரிய அழிவுகளையும் அவலங்களையும் ஏற்படுத்தும் ஊழல், அபிவிருத்திக்கு தடையாக இருப்பதுடன் ஜனநாயகம் மற்றும் உலக நலனுக்கு தீர்க்கமான அச்சுறுத்தல் மற்றும் வறுமைக்கும் காரணமாகின்றன என இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஊழலுக்கு எதிரான போராட்டம் கடினமான நடவடிக்கையாக இருந்தாலும், அடுத்த தலைமுறைக்காக இலங்கை அதை ஆரம்பித்துள்ளதுடன், ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு நாட்டின் கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.
இருளுக்கு பதிலாக ஒளியின் பாதையைத் தேர்ந்தெடுத்த இலங்கை மக்கள் இன்று ‘ வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற நடைமுறை தொலைநோக்குப் பார்வையைச் சுற்றி ஒன்றுபட்டுள்ளனர் என்று மேலும் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த வரலாற்றுச் சாதனையை நனவாக்க, ஊழலற்ற நெறிமுறைமிக்க நிர்வாகம், வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தூய்மையான நாடு ஆகிய முக்கிய துறைகளில் அவதானம் செலுத்தியுள்ளதுடன், அதனுடன் இணைந்தவகையில் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், படிப்படியாக அவை அனைத்தும் வெற்றிகொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை கீழே பின்வருமாறு,
தலைவர் அவர்களே, சிறப்பு விருந்தினர்களே, அதிதிகளே,
உலக நாடுகளிடையே நீதியான மற்றும் நீடித்த அமைதியை நிலைநாட்டிப் பேணுவதை உன்னத குறிக்கோளாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தனித்துவமான அமைப்பின் 80 ஆவது அமர்வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஐரோப்பாவின் மையப்பகுதியில் உள்ள அற்புதமான ஜெர்மனியைச் சேர்ந்த அதிமேதகு அந்தெலேனா பெயபெராக் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உலகையே வியக்க வைக்கும் புவியியல் மற்றும் கலாசார பன்முகத்தன்மை கொண்ட நாடான கேமரூனின் முன்னாள் ஜனாதிபதி அதிமேதகு பிலிமோன் யாங் வழங்கிய தலைமைத்துவத்திற்கு இலங்கை தனது பாராட்டுகளைத் தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறேன்.
அமைதியும் ஜனநாயகமும் நிறைந்த அழகிய உலகத்திற்காக எட்டு தசாப்தங்களாக தன்னை அர்ப்பணித்துள்ள ஒரு அமைப்பின் பல்தரப்புப் போக்கிற்கும் எதிர்காலத்திற்கும் திட்டங்கள் வகுக்கப்படும் இந்தச் சிறப்புச் சந்தர்ப்பத்தில் இலங்கையின் ஜனாதிபதி என்ற முறையில் முதல் தடவையாக இந்த கௌரவமான சபையில் உரையாற்றுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த உலகின் பல்வேறு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீங்கள் ஒவ்வொருவரும் அந்தந்த நாட்டு மக்களின் பிரதிநிதிகள். எனது நாடான இலங்கையைப் போலவே, ஏனைய எல்லா நாட்டு மக்களாலும் எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வரலாற்றுப் பொறுப்பு நம் அனைவரின் தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ளது. நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இந்த உலகில் எங்கேனும் வாழும் அனைவரையும் பாதிக்கிறது. அந்த முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் அனைத்தும் உலகின் எதிர்கால இருப்பிற்கு ஒரு தீர்க்கமான பங்களிப்பைச் செய்கின்றன.
மனித நாகரிகத்தின் தொடக்கத்தில் இருந்து எதிர்கொள்ளும் மிகக் கடுமையான துயரமாக வறுமையை அறிமுகப்படுத்தலாம். அந்தப் பாரிய பேரழிவின் விளைவாக எழுந்த பல கடுமையான பிரச்சினைகள் நம் முன் ஒரு இருண்ட துயரத்தை உருவாக்கியுள்ளன.
இந்த சிறப்பு மாநாட்டின் கவனம் அதில் குவிய வேண்டும் என்று என் மனசாட்சி உரக்கச் சொல்கிறது. பெரும்பாலும் இவை அனைத்தும் உங்கள் மனசாட்சியை ஓரளவுக்கேனும் பாதிக்கும் என்று நான் நினைக்கிறேன்.
மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே, வறுமை என்பது உலகின் பெரும்பாலான நாடுகளில் பல நூற்றாண்டுகளாக அனுபவித்து வரும் ஒரு தொடர்ச்சியான மற்றும் மிகவும் வேதனையான போராட்டமாக அடையாளப்படுத்தலாம். இது பல வடிவங்களில் வரும் ஒரு பயங்கரமான எதிரி, இந்த மாநாட்டில் நாங்கள் கூடியிருக்கும் தருணத்தில் கூட, நான் உட்பட இந்த ஒவ்வொரு பிரதிநிதிகளின் நாடுகளிலும் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பட்டினியால் வாடுகிறார்கள். அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி கற்கும் உரிமை என்பது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டு அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடிப்படை மனித உரிமையாகும். ஆனால் உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான குழந்தைகள் ஏழ்மை மற்றும் வறுமை காரணமாக இந்த உரிமை மறுக்கப்படுகிறார்கள்.
தொழில்நுட்பம் நிறைந்ததாக பெருமை பேசும் உலகில், குழந்தைகள் பாடசாலைக் கல்வியை இழப்பது எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது? ஒவ்வொரு பாரிய தேசத்தையும் கட்டியெழுப்புவதற்கான அடித்தளம் கல்வி ஆகும். எதிர்கால உலகின் இருப்பை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும். கல்வியில் முதலீடு செய்வதை உலக முன்னேற்றத்திற்கான முதலீடாக நாங்கள் கருதுகிறோம். பல அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வறுமையை நிவர்த்தி செய்வதில், முன்னேற்றத்திற்கு கடன் சுமைகள் தொடர்ந்து தடையாக உள்ளன. பொதுவாக, குறைந்த வருமான நாடுகள் சுகாதாரம் அல்லது கல்வி சேவைகளை விட நிகர வட்டி செலுத்துதல்களுக்கு இரண்டு மடங்கு அதிகமான நிதியை ஒதுக்குகின்றன. பிரஜைகளாகவும் நாடுகளாகவும் நாம் கடன் பொறிகளில் சிக்கிக் கொண்டுள்ளோம். இந்த சூழ்நிலைக்கு ஒரு சாதகமான தீர்வு அவசியம். நிலைபேறான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரல், யாரையும் கைவிடாது என்றும் முதலில் பின்தங்கியவர்களை சென்றடையவும் உறுதியளிக்கிறது.
இன்று உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய உலகளாவிய சவாலான வறுமையை ஒழிக்கும் சவாலை நிலைபெறு அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரல் அடையாளம் கண்டுள்ளது. 1995 ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் நடைபெற்ற சமூக அபிவிருத்திக்கான உலக உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான முடிவை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இருப்பினும், எதிர்பாராத யுத்தங்கள், அரசியல் கொந்தளிப்புகள் மற்றும் உலகமே புயலில் சிக்கிய கோவிட் தொற்றுநோய் ஆகியவை இலட்சிய நிகழ்ச்சி நிரலை சீர்குலைத்துள்ளன. எனவே, ஏழை பணக்காரர் இடைவெளி மற்றும் வறுமையை ஒரு உலகளாவிய பேரழிவாக நாம் கருத வேண்டும்.
மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, கௌரவ விருந்தினர்களே, இந்த அற்புதமான உலகை சீர்குலைத்து, குழப்பும் புதிய பிரச்சனையாக போதைப்பொருள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை அடையாளம் காண முடியும். ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் அதன் 2025 உலக போதைப்பொருள் அறிக்கையில் கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. உலகளாவிய போதைப்பொருள் பிரச்சனை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு சிக்கலான சவாலாக மாறியுள்ளது. நாளுக்கு நாள், போதைப்பொருள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் உலக
சந்தையை வேகமாக ஆக்கிரமித்துள்ளன. போதைப்பொருள் வர்த்தகமும் அதன் மூலம் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமும் பல உலக நெருக்கடிகளுக்கு வழி வகுத்துள்ளன.
இவற்றில் ஈடுபட்டுள்ள குழுக்கள் நாடுகளை இரையாக மாற்றுகின்றன. இந்த கொள்ளைநோய் உலக சுகாதாரம், உலக ஜனநாயகம், உலக அரசியல் மற்றும் இறுதியாக உலக நல்வாழ்வுக்கு எதிரான ஒரு பெரிய போக்காக மாறியுள்ளது. இலங்கையில் இந்த பெரும் கொள்ளைநோயை ஒழிப்பதற்கான ஒரு சாத்தியமான திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம், மேலும் இந்த அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான உலகளாவிய நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துமாறு நான் உங்களை கௌரவத்துடன் அழைக்கிறேன். இந்த கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துதல், அத்தகைய கடத்தல்காரர்கள் தத்தமது நாடுகளுக்கு குடிபெயர்வதைத் தடுத்தல் மற்றும் இந்த போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வு மையங்களை நிறுவுதல் போன்ற அநேக விடயங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்:
ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்
கௌரவ தலைவர் அவர்களே, மதிப்புமிக்க விருந்தினர்களே, ஊழல் என்பது சமூகத்தில் பரவலான அழிவு மற்றும் சோகத்தை ஏற்படுத்தும் ஒரு நயவஞ்சக தொற்றுநோய் என்று நாங்கள் கருதுகிறோம். ஊழல் என்பது அபிவிருத்திக்கு ஒரு தடையாக இருப்பது எங்கள் நிலைப்பாடு. இது ஜனநாயகம் மற்றும் உலக நல்வாழ்வுக்கு ஒரு முக்கியமான அச்சுறுத்தல் மற்றும் வறுமைக்கு ஒரு காரணம் என்பது எமது நிலைப்பாடாகும். ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது. ஆனால் ஊழலுக்கு எதிராகப் போராடாதிருப்பது இன்னும் ஆபத்தானது என்பதை மிகுந்த மரியாதையுடன் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
1948 ஆம் ஆண்டு மனித உரிமைகள் பிரகடனம் உலகில் மனித சமூகத்திற்கு ஒரு பெரிய வெற்றியைக் கொண்டு வந்தது. மனித நாகரிகத்தின் பல்வேறு சாதனைகள் ஒரே இரவில் கிடைத்துவிடவில்லை. இவை அனைத்தும் மகத்தான தியாகம் மற்றும் விடாமுயற்சியின் பெறுபேறுகள். ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு கடினமான முன்னெடுப்பாகும். ஆனால் நாம் அந்த முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும். நாம் எடுக்கும் முதல் படி கடினமாக இருக்கலாம். ஆனால் நாம் தைரியமாக எடுக்கும் படி சரியானதாக இருந்தால், அதனை பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பல படிகள் எடுத்துவைக்கப்படும் என்று நான் நம்புகிறேன். தைரியமாக இருங்கள் எஞ்சிய அனைத்தும் தானாக நடக்கும் என்ற ஜவகர்லால் நேருவின் கருத்தை இத்தருணத்தில் நான் நினைவுபடுத்துகிறேன்.
நான் சுமார் 22 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய, பிரகாசமான தீவை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். இலங்கையின் மக்கள் தொகை மொத்த உலக மக்கள்தொகையில் சுமார் 0.3% ஆகும். நமது நாட்டின் மக்கள் தொகை அளவு மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் சிறியது என்பது உண்மைதான். ஆனால் நமது நாட்டிற்காகவும் உலகத்திற்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியுள்ளோம். ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்.
நீங்கள் எந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அனைத்து பிரதிநிதிகளும் யுத்தத்தை நிராகரிப்பதில் என்னுடன் கைகோர்ப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உலகில் யுத்தத்தை விரும்பும் எந்த தேசமும் கிடையாது.எங்காவது எப்படியாவது யுத்தமோ அல்லது
மோதலோ ஏற்படும் போதெல்லாம் அது ஒரு துயரம் என்பதை நாங்கள் அறிவோம். இப்போதும் கூட, அந்த துயரத்தின் வலி உலகின் பல பகுதிகளிலும் உணரப்படுகிறது.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக யுத்தத்தின் கசப்பான அனுபவத்தை அனுபவித்த ஒரு நாடாக, அதன் அழிவை நாம் நன்கு அறிவோம். யுத்தத்தினால் உயிரிழந்த ஆயிரக்கணக்கானவர்களின் நினைவிடங்களுக்கு வரும், அவர்களின் பெற்றோர், குழந்தைகள் மற்றும் மனைவியர் எழுப்பும் வேதனையான வேண்டுகோள்களைப் பார்க்கும் எவரும், யுத்தத்தைப் பற்றி கனவு காணக்கூட தயங்குகிறார்கள். அந்த வேதனையான காட்சியை நாம் நம் இரு கண்களால் பார்த்திருக்கிறோம். மோதல்களால் ஏற்படும் துன்பங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டவில்லை என்றாலும், மில்லியன் கணக்கான மக்களின் துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவர தவறி பெரும்பாலும் சர்வதேச சமூகம் வெறும் பார்வையாளராகவே இருந்து வருகிறது.
குழந்தைகள் மற்றும் அப்பாவி பொதுமக்களின் வாழ்க்கையை ஒரு கால்பந்தாட்டமாக மாற்றுவது சந்தர்ப்பவாத அதிகார அரசியலின் துயரமாகும். மற்றவர்களின் வாழ்க்கையை தங்கள் அதிகாரத்தை அதிகரிக்க செல்வாக்கு செலுத்தவும் ஒடுக்கவும் யாருக்கும் உரிமை கிடையாது. ஆட்சியாளர்களின் பங்கு உயிர்களை அழிப்பது அன்றி, உயிர்களைப் பாதுகாப்பதாகும்.
காஸா பகுதியில் நடந்து வரும் கொடூரமான பேரழிவு எங்களுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, காஸா பகுதி ஒரு வேதனையான மற்றும் சோகமான திறந்தவெளி சிறைச்சாலையாக மாறியுள்ளது. அப்பாவி குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் அவலக் குரல்கள் நாளாபக்கமும் கேட்கின்றன . ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய அனைத்து தரப்பினர்களின் உடன்பாட்டின் படி, இரு தரப்பினரும் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும். அனைத்து மனிதாபிமான உதவிகளையும் தடையின்றி அணுக வேண்டும். அனைத்து தரப்பினரும் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் குரல் கொடுக்கிறோம். இந்த கொடூரமான கொலைகளை முடிவுக்குக் கொண்டுவர நாம் வலுவான அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.
பலஸ்தீன நாடொன்றுக்கான பிரிக்க முடியாத உரிமையை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதே போன்று இஸ்ரேலிய மற்றும் பலஸ்தீன மக்களின் நியாயமான பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான பிரச்சினைகளை அடையாளங் காண வேண்டும் . 1967 எல்லைகளில் இரண்டு நாடுகள் அருகருகே இருப்பதற்கான அடிப்படையை வழங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின்படி ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வைத் தேடுவதில் நாம் இணைய வேண்டும். அர்த்தமற்ற போர் காரணமாக உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வேதனைக்கு முன்பாக வெறும் பார்வையாளராக இருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய ஒரு முக்கியமான தருணத்தை நாம் அடைந்துவிட்டோம். உலகைப் பாதிக்கும் யுத்த மோதல்களுக்கு மத மற்றும் இனவாதம் பாரதூரமான காரணிகளாக உள்ளன.
அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுகள் கடந்த பிறகும், இனவெறியின் விஷம் இன்னும் ஆங்காங்கே உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டும். தீவிரவாத மற்றும் இனவாதக் கருத்துக்கள் கொடிய தொற்றுநோய்களைப் போலவே கொடியதாக மாறிவிட்டன. இவ்வளவு முற்போக்கான உலகில் கூட, இந்த இனவெறி மற்றும் இனவாதக் கருத்துக்கள் சாம்பலுக்கு அடியில் உள்ள தீப்பொறிகள் போல இருப்பது நகைப்பிற்கும் ஆச்சரியத்திற்கும் உரிய விடயமாகும். மிகவும் பயங்கரமான சூழ்நிலை என்னவென்றால், அந்த தீப்பொறிகள் அவ்வப்போது, சந்தர்ப்பவாதமாக, பிரபஞ்சத்தின் நல்வாழ்வுக்கு எதிராக பெரும் தீப்பிழம்பாக மாற்றப்படுகின்றன.
உலக சமாதான குடியேற்றங்களை உருவாக்கும் உன்னத சமாதான யாத்ரீகர்களாக மாறுவோம்.
ஆயுதங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மனித நாகரிகத்தின் மதிப்புகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனுக்குள் நாம் பிரவேசிக்க வேண்டும். மில்லியன் கணக்கான குழந்தைகள் பசியால் இறக்கும் உலகில், நாம் பில்லியன் கணக்கான பணத்தை ஆயுதங்களுக்காக செலவிடுகிறோம். சரியான சுகாதார வசதிகள் இல்லாமல் மில்லியன் கணக்கான மக்கள் மரணத்தின் பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது, அர்த்தமற்ற போர்களுக்கு பில்லியன்களை செலவிடுகிறோம்.
இலட்சக்கணக்கான குழந்தைகள் கல்வி எனும் சிறகுகள் கிடைக்காமல் பெருமூச்சு விடும்போது, நாம் மில்லியன் கணக்கில் நில ஆக்கிரமிப்புகளுக்கு செலவிடுகிறோம். உண்மையில், இந்த உலகில் உள்ள ஒவ்வொரு அங்குல நிலத்தையும் அமைதி எனும் குடியேற்றமாக மாற்ற முடிந்தால், அந்த உலகம் ஒரு அற்புதமான உலகமாக மாறும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம். இந்த மாநாட்டில் இணைந்த நாம் அனைவரும் உலக சமாதான குடியேற்றங்களை உருவாக்கும் உன்னத சமாதான யாத்ரீகர்களாக மாற வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்.
ஒரு வரலாற்று முக்கியமான தேர்தலில், இலங்கை மக்கள் பல நூற்றாண்டுகளாக தங்கள் மனதில் இருந்த ஒரு கனவிற்காக தீர்மானம் எடுத்தார்கள் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இதன் விளைவாக சட்டவாக்கம் பன்முகத்தன்மை கொண்டது . ஒருபுறம், நாட்டின் முழு மக்களும் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தனர். மறுபுறம், கட்புலனற்ற பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பெண்கள் மற்றும் ஏனைய இனக்குழுக்களின் பிரதிநிதித்துவம் ஒரு வரலாற்று மைல்கல்லை உருவாக்கியது. பாராளுமன்றத்தில் உள்ள இந்த பன்முகத்தன்மை இலங்கையின் ஆட்சியில் இன பன்முகத்தன்மையை உறுதி செய்கிறது .அனைத்து பிரஜைகளுக்கும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
அதேபோன்று மக்கள் பிரதிநிதிகள் என்பது பொதுமக்களுக்காக சேவையாற்றும் ஊழியர்கள் அன்றி தேவையற்ற சலுகைகளைப் பெறுபவர்கள் அல்ல என்பதற்கு நாங்கள் ஒரு முன்மாதிரியை காட்டியுள்ளோம். மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு நாட்டையும் மக்களையும் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும், தங்களைத் தாங்களே வளர்த்துக் கொள்வது அல்ல என்று நாங்கள் கருதுகிறோம்.
இருளுக்கு பதிலாக ஒளியின் பாதையைத் தேர்ந்தெடுத்த நமது நாட்டு மக்கள், ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற நடைமுறை தொலைநோக்குப் பார்வைக்கு தங்கள் ஆசிர்வாதத்தை வழங்கியுள்ளனர். இந்த வரலாற்று சாதனையை நனவாக்க, ஊழல் இல்லாத நெறிமுறையான ஆட்சி, வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சுத்தமான நாடு ஆகிய முக்கிய துறைகளில் எங்கள் கவனத்தை செலுத்தியுள்ளோம். அதனுடன் இணைந்ததாக , கல்வி மற்றும் சுகாதாரம் குறித்து நாங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். அவை அனைத்தையும் படிப்படியாக வென்று வருகிறோம்.
இன்று, டிஜிட்டல் ஜனநாயகம் எங்கள் புதிய இலக்காகும். ஒவ்வொரு தனிநபரும் ஒவ்வொரு நாடும் டிஜிட்டல் யுகத்தின் வாய்ப்புகளை அணுக முடியும் என்பதை உறுதி செய்வதே உலகின் முன் உள்ள
சவாலாகும். அதில் நாம் வெற்றி பெற்றால், தொழில்நுட்பத்திற்கான பிரவேசம் திறக்கப்படுவதையும் அபிவிருத்தி துரிதப்படுத்தப்படுவதையும் ஆட்சி பலப்படுத்தப்படுவதையும் தவிர்க்க முடியாது. ஆனால் நாம் அவ்வாறு செய்யத் தவறினால், தொழில்நுட்பம் சமத்துவமின்மை, பாதுகாப்பின்மை மற்றும் அநீதிக்கு வழிவகுக்கும் மற்றொரு சக்தியாக இது மாறும் என்று நாங்கள் கருதுறோம்.
டிஜிட்டல் கருவிகளை அணுக முடியாத நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் பிளவு தெளிவாகத் தெரிகிறது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் இன்னும் பாரிய இடைவெளி உருவாகி வருகிறது. இலங்கை உட்பட தெற்காசியாவின் பல நாடுகளிலும், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலும், அபிவிருத்திக்கான கருவியாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பது தடையாக உள்ளது.
மிகச் சிறந்த உலகத்தை உருவாக்குவோம்
நாம் மிகச் சிறந்த உலகத்தை, மனிதர்களின் நித்திய கௌரவத்தை மதிக்கும் உலகத்தை உருவாக்க வேண்டும். இந்த மாநாட்டின் உறுப்பினர்களான நீங்கள், ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கான சிற்பிகளாக இருக்க வேண்டும். 1945 இல் ஐக்கிய நாடுகள் சபையை நிறுவும் சாசனத்தில் கையெழுத்திட்டபோது அமெரிக்க ஜனாதிபதி எஹரி எஸ். ட்ரூமன் கூறியது போல், நமது எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. நாம் அச்சம் அல்லது கடப்பாட்டுக்கு உட்படாமல் நம்பிக்கையை முன்னிறுத்தி செயல்பட வேண்டும். உலகை பேரழிவிற்கு இட்டுச் செல்வதற்குப் பதிலாக, எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ள ஒரு தலைமுறையாக மாற இந்த உச்சிமாநாட்டில் தீர்மானிப்போம்.
இறுதியாக, எனக்கு என் நாட்டின் மீது நம்பிக்கையின் கனவு இருக்கிறது. உங்களுக்கும் உங்களுடைய நாடுகள் தொடர்பில் நம்பிக்கையின் கனவு இருக்கிறது. எனது ஒரே கனவு, என் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையை வழங்குவதுதான். உங்கள் நாட்டு மக்களுக்கும் இதே போன்ற வாழ்க்கையை வழங்குவதே உங்கள் கனவு என்று நான் நம்புகிறேன். அந்தக் அனைத்துக் கனவுகளுக்காகவும் நம்மைப் பிரிக்கும் பயணத்திற்குப் பதிலாக, கைகளை இணைக்கும் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஆரோக்கியமான பூகோளத்தில் அமைதி, கண்ணியம் மற்றும் சமத்துவத்திற்கு அர்ப்பணிப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் குறிக்கோளில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகத்தை உண்மையாகவே மாற்றியமைப்பவர்களாகுவோம் என நான் உங்களை மரியாதையுடன் அழைக்கிறேன்.
மிக்க நன்றி.
(-2025.08.26 – Colombo-) பொதுமக்களின் கோடிக்கணக்கான ரூபாய் செல்வத்தை அழிப்பதற்கான வரமாக அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்த இனி இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். அலரி மாளிகையில் நேற்று (26) பிற்பகல் நடைபெற்ற தேசிய பிக்கு தின நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். தங்களுக்கு வழங்கப்படும் அதிகாரத்தை எல்லையற்ற செல்வத்தைக் குவித்த மற்றும் பொதுமக்களின் பணத்தை விருப்பப்படி செலவிடும் நாசகார பாதையை மாற்றியமைப்பதற்கு உறுதியுடன் செயல்படுவேன் என்று இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி, […]
(-2025.08.26 – Colombo-)
பொதுமக்களின் கோடிக்கணக்கான ரூபாய் செல்வத்தை அழிப்பதற்கான வரமாக அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்த இனி இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
அலரி மாளிகையில் நேற்று (26) பிற்பகல் நடைபெற்ற தேசிய பிக்கு தின நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
தங்களுக்கு வழங்கப்படும் அதிகாரத்தை எல்லையற்ற செல்வத்தைக் குவித்த மற்றும் பொதுமக்களின் பணத்தை விருப்பப்படி செலவிடும் நாசகார பாதையை மாற்றியமைப்பதற்கு உறுதியுடன் செயல்படுவேன் என்று இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி, எவ்வளவு தான் கோசம் எழுப்பினாலும் அந்தப் பயணத்தை மாற்ற முடியாது என்றும், தற்போதைய அரசாங்கம் அந்தப் பொறுப்பை நிறைவேற்றாவிட்டால் எந்த அரசாங்கமும் அதனை மேற்கொள்ளாது என்றும் தெரிவித்தார்.
எனவே, மகா சங்கத்தினர் உட்பட அனைவரும் துணிச்சல், நம்பிக்கை மற்றும் விடாமுயற்சி ஆகிய பண்புகளுடன் சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைந்து முன்னேறுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
“காலோ அயன் தே” – “இது உங்களுக்கான நேரம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த நிகழ்வுக்கு நாடு முழுவதிலுமிருந்து சுமார் ஐந்தாயிரம் பிக்குகள் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முழு உரை
இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நமக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் குறித்து நமது மகா சங்கத்தினர் மற்றும் பொது சமூகத்துடன் கலந்துரையாட வேண்டியது அவசியம். அந்த சந்தர்ப்பத்திற்கு என்னை அழைத்ததற்காக தேசிய பிக்கு முன்னணியின் ஏற்பாட்டுக் குழுவுக்கு நன்றி கூறுகிறேன்.
நமது பிக்கு சமூகத்திற்கு நமது நாடு, மக்கள் மற்றும் நமது நாட்டின் ஆட்சி தொடர்பாக ஒரு பிரிக்க முடியாத வரலாற்று பாரம்பரியமும் பொறுப்பும் உள்ளது. நமது மகா சங்கத்தினர் வரலாற்று ரீதியாக நிறைவேற்றிய மகத்தான பணியின் விளைவாக அந்தப் பொறுப்பு உருவாகியுள்ளது. இல்லையெனில், அது நமது மகா சங்கத்தினருக்கான ஆட்சி தொடர்பான அரசியலமைப்பின் விதிகளை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. நீண்ட காலமாக நமது தாய்நாடு, நமது பொது மக்கள் மற்றும் நமது ஆட்சியாளர்கள் தொடர்பாக காட்டப்பட்ட வரலாற்றுத் தலையீட்டின் காரணமாக இது நிகழ்ந்துள்ளது. ஜனாதிபதியாக, அரசியலமைப்பால் எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், உரித்தின் ஊடாக உங்களுக்குப் பொறுப்பும் கடமைகளும் வழங்கப்பட்டுள்ளன.
பௌத்தம் இன்றுவரை இலங்கை சமூகத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறது. மேலும், இன்றுவரை நமது இலக்கியம் மற்றும் எழுத்துத்துறை வளர்ச்சியில் நமது மகா சங்கத்தினர் ஆற்றிய பங்கு மகத்தானது. இலவசக் கல்விச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது மகா சங்கத்தினர் ஆற்றிய பங்கு மகத்தானது.
ராஜ்ய சபையில், நல்லையா என்ற உறுப்பினர் இவ்வாறு கூறினார்: ” பிக்குகள் இல்லையென்றால், இந்த சட்டமூலம் விவாதிக்கப்பட்டிருக்காது.” அதுதான் உரித்து, நமது நாடு ஒரு காலனித்துவ நாடாக மாறியபோது, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் உட்பட அந்த சமயத்தில் இருந்த மகா சங்கத்தினர், நமது நாட்டின் சுதந்திரத்திற்காகவும் மக்களின் சுதந்திரத்திற்காகவும் ஒரு பாரிய போராட்டம் நடத்தினர். அதுதான் நமது மகா சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தாய்நாட்டின் சுதந்திரத்தின் உரித்து.
இது தொடர்பாக ஆளுநர் மைட்லேண்ட் இங்கிலாந்துக்கு ஒரு அறிக்கையை அனுப்புகிறார். அந்த அறிக்கையில் “பிக்குமார்களின் செல்வாக்கு மிக அதிகம். பல சந்தர்ப்பங்களில், அது பிரபுக்களின் செல்வாக்கை விட அதிகமாக உள்ளது.” அதுதான் நமது மகா சங்கத்தின் வரலாற்று மரபு.
நமது தாய்நாட்டின் சுதந்திரத்திற்கும் மக்களின் உரிமைகளுக்கும் பிக்குகள் ஆற்றிய வரலாற்றுப் பங்கின் உரித்து உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த உரித்தில் ஒரு முக்கியமான மைல்கல் கடந்த ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் நிகழ்ந்ததாக நான் நினைக்கிறேன். நமது நாடு ஒரு பேரழிவு தரும் முடிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நேரத்தில், நமது நாட்டையும் மக்களையும் அந்த சூழ்நிலையிலிருந்து விடுவிப்பதற்கான போராட்டத்தில் நமது மகா சங்கத்தினர் அந்த வரலாற்று உரித்தை மீண்டும் உறுதிப்படுத்தினர். இந்த மாற்றத்தில் பிக்குகள் சிறப்புப் பங்காற்றினர். மிகவும் கடினமான அத்தியாயத்திலிருந்து வெற்றிக்கு நீங்கள் ஆற்றிய பங்கு மிகப் பெரியது.
நமக்கு இப்போது வழங்கப்பட்டுள்ள பொறுப்பு என்ன? நமக்கு முன் எவ்வாறான நாடு உள்ளது? ஒருபுறம், பொறுப்புள்ள அரசு நிறுவனங்களும், அரச அதிகார பொறிமுறையும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. பிரதிப் பொலிஸ்மா அதிபரின் மனைவி புதையல்களைத் தோண்டப் போகிறார். இராணுவத்தின் உயர் அதிகாரிகள் புதையல்களைத் தோண்டச் சென்றுள்ளனர். சிறைச்சாலையின் உயர் அதிகாரிகள் எந்தவொரு பொறுப்புக்கூறலும் அல்லது அனுமதியும் இல்லாமல் கைதிகளை விடுவித்து வருகின்றனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் பாதாள உலகத் தலைவர்களுக்கான கடவுச் சீட்டுக்களை தயாரிக்கிறது. இராணுவ முகாம்களில் இருந்து T-56 ஆயுதங்கள் வெளியில் செல்கின்றன. தமது பொறுப்பு பணத்திற்காக மாற்றியமைக்கின்றனர்.
இதேபோல், பொருளாதாரக் கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. மாத்தறைப் பகுதியில் சில கட்டிடங்கள் எந்த தேவையும் இன்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சரும் தாம் பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் பிரதேசத்திற்கு ஏற்ப ஒவ்வொரு பகுதியிலும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்தக் கட்டிடங்கள் உற்பத்தி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படவில்லை. அதன்படி, பொருளாதாரம் பேரழிவு நிலையை எட்டியுள்ளது.
நமது தேயிலை பயிற்செய்கை மற்றும் றப்பர் பயிற்செய்கை துயரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. நமது தென்னை மரத்திலிருந்து 89 தேங்காய்களைப் பெற முடியும். ஆனால் தற்போது தென்னை மரங்களிலிருந்து 30-40 காய்களை மட்டுமே பெற முடியும். முழு பொருளாதாரக் கட்டமைப்பும் சரிந்துவிட்டது.
சட்டத்தின் ஆட்சி சரிந்துவிட்டது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு சட்டமும், ஏழைகளுக்கு மற்றொரு சட்டமும் செயற்படுத்தப்படுகிறது. அவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்கக்கூடிய ஒரு கலாச்சாரம் உருவாக்கப்பட்டிருந்தது. அடுத்த தலைமுறைக்கு அதிகாரத்தை எவ்வாறு தயார்படுத்துவது என்ற நிகழ்ச்சி நிரலில் அவர்கள் சிக்கியுள்ளனர். எல்லையற்று செல்வத்தைக் குவிக்க அவர்கள் தங்களிடம் இருந்த அதிகாரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர்.
இந்த அழிவுகரமான பயணத்தை மாற்றியமைக்க நாங்கள் உறுதியுடன் செயல்படுகிறோம். எவ்வளவு கோசம் எழுப்பினாலும் இந்தப் பயணம் தலைகீழாக மாறாது. நானோ அல்லது எனது அரசாங்கமோ இதைச் செய்யாவிட்டால், வேறு எந்த அரசாங்கமும் இதைச் செய்யாது.
முதலில், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக இருக்க வேண்டும். நாம் அத்தகைய ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவோம். செல்வம், அதிகாரம், வரலாறு ஆகிய எதுவும் பொருட்டாகாது. நம் நாட்டில் யாராவது ஒரு குற்றத்தில் ஈடுபட்டிருந்தால், யாராவது ஊழலில் ஈடுபட்டிருந்தால், யாராவது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியிருந்தால், அவர்களை நீதியின் முன் நிறுத்த நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம். இது பழிவாங்கல் அல்ல. இது வேட்டையாடுதல் அல்ல. இப்படித்தான் பொதுமக்களிடம் நம்பிக்கையை வளர்க்க முடியும். சட்டத்தின் பொதுவான எண்ணக்கரு என்னவென்றால், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதாகும். அதை நாங்கள் நிலைநாட்டுவோம். பொதுமக்களுக்கு நீதி,நியாயம் தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்துவோம். தங்களுக்கு வழங்கப்படும் அதிகாரம், பொதுமக்களின் செல்வத்தை விருப்பப்படி அழிக்கும் சக்தியாக எண்ணம் கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்துவோம்.
எமக்கு சட்டவிதிகளின் ஊடாக கிடைத்துள்ள பல விடயங்கள் ஏற்கனவே கைவிடப்பட்டுள்ளன. ஆட்சியாளர் சாதாரண பிரஜையின் முன் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். ஆட்சியாளர் சாதாரண பிரஜைக்கு முன்னால் முடிந்தளவு செல்வத்தை வீணடித்துவிட்டு, பின்னர் நாட்டைக் கட்டியெழுப்ப இணையுமாறு சாதாரண பிரஜைக்கு அழைப்பு விடுக்க முடியாது. மக்களின் சொத்துக்களை கோடிக்கணக்கில் அழிக்க கிடைக்கும் ஆணையாக அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு இனி இடமளிக்கப்பட மாட்டாது.
முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வீடு வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டாலும், வீட்டின் அளவு, புதுப்பிக்கும் பணம் பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை.
எனவே, ஆட்சியாளர்கள் அந்தச் சட்டத்தின் வரம்புகள் மனசாட்சி இல்லாமல் 30,000 சதுர அடி வீடுகளைப் பயன்படுத்த செயல்பட்டு வந்தார்கள். செப்டெம்பர் முதல் வாரத்தில் இந்த அளவுகளை நாங்கள் நீக்குவோம். மற்றவர்களை நிமிர்ந்து நிற்கச் சொல்ல நாம் சகதியில் நாட்டிய தடியைப் போல,வலைந்து போக நாம் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் எடுக்கும் முடிவை செயல்படுத்துவோம். பொதுமக்களின் செல்வத்தைத் திருடும் வீணடிக்கும் அரசியலை முடிவுக்குக் கொண்டுவருவோம். திறைசேரிக்கு வரும் பணம் திறைசேரியை வருவதற்கு முன்னர் பல்வேறு இடங்களில் தடைப்பட்டிருந்தன. சில பணம் அமைச்சர்களுக்கு திருப்பி விடப்பட்டது. இதுபோன்ற விடயம் எதிர்காலத்தில் நடக்க இடமளிக்கப்பட மாட்டாது. சட்டவிரோதமாகச் சம்பாதித்த பொதுமக்களின் எந்தவொரு செல்வத்தையும் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அவை திரும்பப் பெறப்படும். தொலைதூர கிராமங்களின் பிள்ளைகள் முறையான கல்வி இல்லாமல் தவிக்கின்றனர். தொலைதூர கிராமங்களின் மக்கள் சரியான சுகாதார வசதி இல்லாமல் தவிக்கின்றனர். எந்தவொரு பிரஜையும் பொது மக்களின் பணத்தை சட்டவிரோதமாக எடுத்திருந்தால், அது திரும்பப் பெறப்படும். எதிர்காலத்தில், எந்தவொரு அரச அதிகாரியோ அல்லது அரசியல்வாதியோ இதுபோன்ற விடயத்தைச் செய்வது குறித்து இருமுறை சிந்திக்கும் வகையில் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்.
கடந்த 75 ஆண்டுகளாக, வரவசெலவுத்திட்ட ஆவணம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் பெற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் அதை விட அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. இலங்கையில் முதல் முறையாக, நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைத்துள்ளது. எதிர்பார்த்ததை விட செலவினங்களைக் குறைக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. திறைசேரிக்கு வரும் செல்வத்தை வேறு இடங்களுக்குத் திருப்பிவிட நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. திறைசேரிக்கு ரூபாய்கள் அவசியம் போன்று, நாட்டிற்கு டொலர்கள் அவசியம்.
டொலர் கையிருப்பை கட்டியெழுப்புவதற்கு, சுற்றுலாத் துறை, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் பணம் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகியவை டொலர் கையிருப்புக்களில் தாக்கம் செலுத்துகின்றன. இந்த மூன்று துறைகளிலும் குறிப்பிடத்தக்க வருமானத்தை இந்த ஆண்டு பெற்றுக்கொள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு முடிந்துள்ளது. வலுவான டொலர் கையிருப்பை உருவாக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தடைப்பட்டிருந்த பொருளாதாரத்தை மீண்டும் செயற்பட வைத்து, முன்னோக்கி கொண்டு செல்ல அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுமார் 130 கோடி டொலர் மதிப்புள்ள வாகன கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பாடசாலை கட்டமைப்புகளை மீள்சீர் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இரண்டு பிள்ளைகள் மற்றும் நான்கு ஆசிரியர்கள். அந்தப் பிள்ளைகளுக்கோ ஆசிரியர்களுக்கோ பயனில்லை. இந்த நாட்டில் உள்ள சுமார் 18% பாடசாலைகளில் 50க்கும் குறைவான பிள்ளைகளே உள்ளனர். 10,000க்கு ஓரளவு மேற்பட்ட பாடசாலைகளில், சுமார் 1,400 பாடசாலைகளில் 50க்கும் குறைவான பிள்ளைகள் உள்ளனர். சுமார் ஐயாயிரம் பாடசாலைகளில் 200க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர். இவை பாடசாலைகள் அல்ல. ஒரு பழைய அறிக்கையின்படி, 30,000 பிள்ளைகள் சாதாரண தரத்தை எழுதாமல் பாடசாலையை விட்டு வெளியேறுகிறார்கள். நாங்கள் ஒரு திட்டத்தை வகுத்து வருகிறோம். சாதாரண தரத்தை எழுதாமல் எந்த ஒரு பிள்ளையும் பாடசாலையை விட்டு வெளியேற முடியாது. அப்படி ஒரு பிள்ளை இருந்தால், அரச அதிகாரிகள் சென்று இதற்கு என்ன காரணம் என்று பார்க்க வேண்டும்.
நமது வறுமை கல்வியறிவின்மையுடன் பின்னிப் பிணைந்துள்ளது. நமது தடுப்புக் காவலில் உள்ள கைதிகளில் 70% க்கும் அதிகமானோர் எட்டாம் வகுப்புக்கு முன்பே பாடசாலையை விட்டு வெளியேறியவர்கள். கல்விக்கும் குற்றத்திற்கும் இடையே தொடர்பு உள்ளது. கல்விக்கும் போதைப்பொருளுக்கும் இடையே தொடர்பு உள்ளது. சமூகத்தை மாற்றுவதில் கல்வி மிக முக்கியமான விடயம். இருப்பினும், நமது தற்போதைய கல்வி முறை அந்த பணியை நிறைவேற்றத் தவறிவிட்டது. எனவே, கல்வியில் ஒரு பெரிய மாற்றம் குறித்து கலந்துரையாடுவோம். விவாதிப்போம். ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், நமது தேரர்கள் அவற்றைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கவும். அதன் மூலம், நமது பிள்ளைகளுக்கு உலகிற்கு ஏற்ற கல்வி முறையை உருவாக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
நமது சுகாதார கட்டமைப்புக்கு ஒரு புதிய பாதை தேவை. ஆண்டுக்கு 40 மில்லியன் மக்கள் அரச மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவில் இருந்து மருந்து பெறுகிறார்கள். 40 மில்லியன் மக்கள் தனியார் துறையிலிருந்து மருந்து பெறுகிறார்கள். அதன்படி, ஆண்டுக்கு 80 மில்லியன் மக்கள் அரச அல்லது தனியார் துறை மருத்துவமனைகளில் இருந்து மருந்து பெறுகிறார்கள்.
மக்கள் தொகை சுமார் 22 மில்லியன். இருப்பினும், 80 மில்லியன் பேர் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அதாவது, கிட்டத்தட்ட ஒருவர் குறைந்தது நான்கு முறையாவது மருத்துவமனைக்குச் செல்லும் ஒரு கலாசாரம் உள்ளது. அது ஒரு தவறான சுகாதார அமைப்பு. அதனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு முதன்மை ஆரம்ப மருத்துவர் வீதம் செயலாற்ற நாம் முயற்சிக்கிறோம். மருத்துவரே நோயாளியை பொருத்தமான இடத்திற்கு பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறின்றி, அந்த முடிவை நோயாளி எடுக்கக்கூடாது.
மேலும், இந்த நாட்டில் விளையாட்டுத் துறையில் ஒரு பெரிய மாற்றம் செய்யப்பட வேண்டும். விளையாட்டு, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவையே சிறந்த குணங்கள் நிறைந்த பிரஜைகளை உருவாக்குகின்றன. இன்று இந்த நாட்டில் நடக்கும் குற்றச் சம்பவங்களுக்குப் பின்னால், இந்த சமூகத்தின் வீழ்ச்சி என்ற பெரும் துயரத்தின் விளைவுகள் உள்ளன.
இன்று, நடைபெறும் சம்பவங்களைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த சம்பவங்களில் பெரும்பாலானவை நமது சமூகத்தின் வீழ்ச்சியின் துயரத்தின் விளைவுகள் என்பதை நமது தேரர்கள் அறிவார்கள். அண்மையில் நான் இலங்கையில் மாகாணங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மாஅதிபர்களை அழைத்திருந்தேன். தற்போது இலங்கையில் அதிகம் பதிவாகும் குற்றங்கள் பாலியல் குற்றங்கள் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். அவற்றில், அதிகம் பதிவாகும் குற்றமாக சிறுவர் பாலியல் குற்றங்களாகும்.
ஏன்? இந்த சமூகம் சிறப்பாக மாற்றப்படவில்லை. கல்வி, சுகாதாரம், விளையாட்டு மற்றும் பொருளாதாரம் போன்றவையை ஒருங்கிணைப்பதன் மூலம் மாத்திரமே ஒரு நல்ல பிரஜையை உருவாக்க முடியும். நமது மகா சங்கத்தினர் கிராமங்களுக்குச் சென்று, ஒரு நல்ல சமூகத்தைப் பற்றி, அவர்களின் கடமைகளைப் பற்றி, சமூகத்தின் மீது அவருக்கு உள்ள பொறுப்பு பற்றி உபதேசித்து, ஒரு புதிய சமூக மாற்றத்திற்காக நாட்டை விழிப்படையச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நாங்கள் நம்புகிறோம்.
நமது மகா சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு வரலாற்று பாரம்பரியமும், ஆட்சியாளர்களாகிய நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு வகிபாகமும் உள்ளது. ஒரு மனிதனாக நான் நிறைவேற்ற வேண்டிய கடமையைப் போலவே, ஜனாதிபதியாக எனக்கு ஒரு வகிபாகமும் உள்ளது. ஒரு மனிதனாக நிறைவேற்ற வேண்டிய கடமையும் எனக்கு உள்ளது. நான் அதை அடையாளம் கண்டுள்ளேன். எனவே, ஆட்சியாளர், மகா சங்கத்தினர், மத குருக்கள் மற்றும் பொது சமூகம் அனைவரும் ஒன்றாக முயற்சி செய்தால், இந்த சமூகத்தை மிக விரைவாக புதிய மாற்றத்திற்கு உட்படுத்த முடியும்.
இதுதான் சந்தர்ப்பம் என்று நான் நினைக்கிறேன். ஆனால், இந்தப் புதிய மாற்றத்துக்குப் பயப்படும் ஒரு குழு இருக்கு. அவர்கள் இந்தப் புதிய மாற்றத்துக்குத் தயாராக இல்லை. சட்டம் அனைவருக்கும் சமம் என்று கூறும்போது அவர்கள் ஏன் குழப்பம் அடைகிறார்கள்?
அவர்களின் மனசாட்சிக்குத் தெரியும், அவர்கள் குற்றவாளிகள் என்று. மோசடிக்காரர்கள் என்று. அதனால், சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று சொல்ற கருத்தை நாம் ஆசிர்வதிக்கணும். கெட்டதுக்கு ஈடாக கெட்டதைக் கொடுப்பது கடினம் இல்லை.
கடந்த காலத்தில் அவ்வாறுதான் நடந்தது. ஆனால் இப்போது நாம் கெட்டதற்குப் பதிலாக நல்லதைக் கொடுக்க வேண்டியுள்ளது. நமக்கு முன்னால் உள்ள அனைத்தும் கெட்டவை. இந்தக் கெட்டதற்குப் பதிலாக நல்லதைக் கொடுப்பதே நமது பயிற்சி. அதற்கு, நமக்கு தைரியம், நம்பிக்கை, விட்டுக்கொடுக்காத குணம் இவை அனைத்தும் அவசியம். அது நம்மிடம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
நமது முதல் படி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது, ஆனால் இரண்டாவது படி அதை விட இன்னும் கடினமான முயற்சியாகும். நமது நாட்டை சிறந்த நாடாக மாற்றவும், இந்த வறண்ட, ஈரம் அற்ற சமூகத்திற்கு ஈரம் மற்றும் வாழ்க்கையையும் மீண்டும் வழங்கவும், மகா சங்கத்தினர் உட்பட நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று கேட்டுக்கொள்கிறேன்
(-2025.08.12 – Colombo-) • இளைஞர் இயக்கம் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் முன்னோடிகளை உருவாக்கும் இயக்கமாக மாறியுள்ளது – ஜனாதிபதி புதிய அரசியல் மாற்றத்துடன் இந்நாட்டின் இளைஞர் இயக்கம் அரசியல் கைக்கூலியாக மாறாமல், நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் முன்னோடிகளை உருவாக்கும் இயக்கமாக மாறியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தமது அரசியல் அதிகாரத்தை பாதுகாக்கும் பங்குதாரர்களாக அன்றி, இளைஞர்களுக்கு உரிய இடத்தை வழங்கி, தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆற்றல் கொண்ட இளைஞர் சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் […]
(-2025.08.12 – Colombo-)
• இளைஞர் இயக்கம் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் முன்னோடிகளை உருவாக்கும் இயக்கமாக மாறியுள்ளது
– ஜனாதிபதி
புதிய அரசியல் மாற்றத்துடன் இந்நாட்டின் இளைஞர் இயக்கம் அரசியல் கைக்கூலியாக மாறாமல், நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் முன்னோடிகளை உருவாக்கும் இயக்கமாக மாறியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தமது அரசியல் அதிகாரத்தை பாதுகாக்கும் பங்குதாரர்களாக அன்றி, இளைஞர்களுக்கு உரிய இடத்தை வழங்கி, தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆற்றல் கொண்ட இளைஞர் சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என தெரிவித்த ஜனாதிபதி, இளைஞர்களை இந்நாட்டின் அபிவிருத்திப் பாதையில் பயணிக்கும் முன்னோடிகளாகவும், பங்குதாரர்களாகவும் மாற்றும் வேலைத்திட்டத்தை இளைஞர் இயக்கத்தினூடாக ஆரம்பிக்க தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தினார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (12) முற்பகல் நடைபெற்ற “Youth Club” தேசிய இளைஞர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்கால இளைஞர் தலைமுறையினர், உலகின் முன் நாட்டை வெற்றிபெறச் செய்யும் தலைமுறையினராகவும், மற்றவர்களிடம் கருணை காட்டும் தலைமுறையினராகவும் இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க தகுதியான அந்த இளைஞர் தலைமுறையை உருவாக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும், அந்த தகுதிகளைக் கொண்டவர்களாக மாற வேண்டும் என்று இந்த நாட்டில் உள்ள முழு இளைஞர் தலைமுறையினரையும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இம்முறை தேசிய இளைஞர் மாநாடு 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றமை சிறப்பம்சமாக உள்ளதோடு, இதில் நாடு முழுவதிலுமிருந்து 6,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். தேசிய இளைஞர் மாநாட்டிற்கு முன்னதாக, நாடு முழுவதும்
பிரதேச மட்டத்தில் “Youth Club” நிறுவுதல் தொடங்கப்பட்டதுடன், இன்று நடைபெற்ற தேசிய மாநாட்டில் புதிய உத்தியோகத்தர்கள் குழு அறிமுகப்படுத்தப்பட்டது.
தேசிய இளைஞர் மாநாட்டில் பங்கேற்றதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
தேசிய இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறியதாவது:
அண்மைய காலங்களில் அதிக கருத்தாடலுக்கும் சர்ச்சைக்கும் உட்பட்ட மாநாடாக இது இருக்கின்றது என்று நான் நினைக்கிறேன். பொதுவாக, நமது நாட்டில் பல துறைகள் ஒரு குறிப்பிட்ட அரசியல் அதிகாரத்தின் அதிகாரத் தேவைகளுடன் இணைந்திருந்தன. ஒரு போதும், தமது திறமை எதிர்பார்ப்புகள் ஊடாக முன்னேறுவதற்கு எந்த வாய்ப்பும் இந்த இளைஞர் இயக்கத்திற்கு இருக்கவில்லை.
நீங்கள் மாவட்டங்களுக்குச் சென்றபோது, உங்கள் மாவட்டத்தில் அரசியல் தலைமையையோ அல்லது ஏனைய நிறுவனங்களின் தலைமையையோ ஏற்பதில் யாருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது? பழைய அரசியல் தலைமையின் மகள்கள், மகன்கள் அல்லது உறவினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. எனவே, இளைஞர் இயக்கம் அதிகாரத்தில் இருப்பவர்களின் அரசியல் நலன்களுடன் அதிகளவில் இணைந்தே இருந்தது. நீண்ட காலம் தமது அரசியல் அதிகாரத்தையும், குடும்ப அதிகாரத்தையும் பாதுகாப்பதற்கும், உறவினர் தலைமுறையை ஆட்சியில் வைத்திருப்பதற்கும் ஒரு கருவியாக இந்த இளைஞர் இயக்கம் கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றத்துடன், இந்த இளைஞர் இயக்கம் இனிமேலும் அரசியல் நலன்களின் கைக்கூலியாக மாறாது, நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கத் தயாராக இருக்கும் முன்னோடிகளை உருவாக்கும் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது. அது இந்த இளைஞர் மாநாடு வரையிலான எமது பயணத்தில் குறிப்பிடத்தக்கது.
சிலர் பதட்டப்படுவதில் ஆச்சரியமில்லை. உண்மையில், இன்று நாம் செய்வது நமது இளைஞர்களை அவர்களுக்கு உரிய இடம் மற்றும் அவர்களின் எதிர்காலம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும், என்ன பொறுப்புகளை ஏற்க வேண்டும்,பொறுப்பான ஒரு இளைஞர் தலைமையை உருவாக்குவதாகும். இல்லையெனில், குடும்ப ஆட்சியாளர்களின் தலைமுறைகளுக்கு நீண்டகாலத்திற்கு அதிகாரத்தைப் பாதுகாக்கும் செயற்பாட்டின் பங்காளர்களாக அல்ல.
நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால், உங்கள் கைகளில் இருப்பதாகக் கூறப்படும் நமது நாட்டின் எதிர்காலத்தின் உண்மையான பாதுகாவலர்களாக உங்களை மாற்றுவதே எமது இலட்சியம். குறிப்பாக, இங்கே ஒரு விடயத்தை உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
இன்று, நாம் ஜனாதிபதி பதவி, அமைச்சர் பதவிகள் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். இருப்பினும், இந்தக் கதிரையில் அமரும்போது, எமக்கு ஒரு சிந்தனை இருக்கிறது, நாம் எப்போதும் இந்தப் பதவியில் இருந்து செல்வோம் என்பதை மனதில் கொண்டே இந்தக் கதிரைகளில் அமர்ந்திருக்கிறோம். இந்தக் கதிரைகளில் நிரந்தரமாக உட்காரும் எண்ணம் எங்களுக்கு இல்லை. எங்களிடம் தெளிவான நல்லெண்ணம் உள்ளது. இந்த நாடு மிகவும் அழிவுகரமான குழுவின் கையில் இருந்தது. அந்தக் குழுவிடமிருந்து அரசியல் அதிகாரம் எங்களிடம் கைமாறியுள்ளது. அவ்வாறு மாற்றப்பட்ட அதிகாரத்தை, விரைவில் உங்களிடம் ஒப்படைக்கும் எதிர்பார்ப்புடன் இந்த கதிரைகளில் நாங்கள் அமர்ந்துள்ளோம். மல்டிபொண்ட் பசை போல இந்தக் கதிரைகளில் ஒட்டிக்கொள்ள எதிர்பார்க்கவில்லை. எனவே, இந்த நாட்டைக் பொறுப்பேற்கும் செயற்திறன், திறமை, நேர்மை, மனசாட்சி உள்ள புதிய தலைமுறை இளைஞர்களை உருவாக்க வேண்டும். நமக்குப் பிறகு இந்த நாட்டை பொறுப்பேற்கத் தயாராக இருக்கும் ஒரு தலைமுறையை நாம் உருவாக்க வேண்டும். நமக்கு எப்படிப்பட்ட தலைமுறை தேவை? ஒன்று, இன்றைய உலகில், மிக விரைவாக அறிவு, உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, விரிவடைந்து வருகிறது. பண்டைய வரலாற்றை நாம் திரும்பிப் பார்த்தால், அறிவில் பெரும் பாய்ச்சல்கள் நீண்ட ஆண்டுகளில் ஏற்பட்டன. ஆனால் இப்போது, பெறப்பட்ட அறிவு விரைவான வேகத்தில் புதிய அறிவை உருவாக்குகிறது.
அதேபோன்று, புதிய அறிவு வேகமாக வளர்ந்து விரிவடைந்து வருகிறது. இருப்பினும், அந்த வளர்ந்து வரும் புதிய அறிவிலிருந்து உருவாகும் பெரும் பாய்ச்சலைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இல்லாத ஒரு இளம் தலைமுறையினரின் கைகளில் இந்த நாட்டை விட்டுவிடக்கூடாது. எனவே, இந்த இளைஞர் இயக்கத்திற்காக உலகில் வளர்ந்து வரும் புதிய அறிவை விரைவாக உள்வாங்கி அதற்கு ஏற்றவாறு மாற்றக்கூடிய புதிய தலைமுறையை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பு. நமது நாட்டின் எதிர்காலத்தை அந்த தலைமுறையிடம் ஒப்படைக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நமக்குள் மனிதநேயமும் கருணையும் இருக்க வேண்டும்.
நமது கல்வி முறை, வாழ்க்கைப் போராட்டம், இவை அனைத்தும் நமது இளைஞர்களை ஒரு சுயநலக் குறுகிய வட்டத்தில் சிக்க வைத்துள்ளன. அத்தகைய குழுவிற்கு சமூகத்தின் மீது எந்த கருணையும் இல்லை. எனவே, சமூகத்தின் மீது உண்மையான கருணை கொண்ட இளைஞர்கள் குழு நமக்குத் தேவை. சுயநலம் நமது சமூகத்தில் உள்ள பல குணங்களை பனிக்கட்டி நீரில் மூழ்கடித்து கொன்றுவிட்டது. அனைத்து நல்ல விடயங்களும் கொல்லப்பட்டுவிட்டன.
நமது நாட்டை முன்னோக்கி நகர்த்தவும், சமூக வளர்ச்சியை அடையவும், நாம் ஒரு கருணையுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும். அந்த சமூகத்தை உருவாக்குவதில் இந்த இளைஞர் இயக்கம் ஒரு பெரிய பங்கை வகிக்கிறது. நீங்கள் கருணையுள்ள பிரஜையாக மாற வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
மேலும், இளம் தலைமுறையினரிடம் இயல்பாகவே இருக்கும் நீதி மற்றும் நியாயத்திற்கான தாகத்தை மீண்டும் எழுப்ப வேண்டும். அநீதி இருக்கும் இடத்தில், நீதிக்காக குரல் எழுப்புவது சாத்தியமாக வேண்டும். குரல் எழுப்புவது போலியாக இல்லாவிட்டால், நீங்கள் முதலில் ஒரு நீதியான மற்றும் நியாயமான நபராக மாற வேண்டும். இன்று, நமது சமூகம் கணிசமான அளவு பொய்களால் சூழப்பட்டுள்ளது. பொதுவான நீதியைப் பற்றிப் பேசுவதன் மூலம் நீதிக்காக நிற்க முயற்சிக்கிறோம். ஆனால், நமது நடைமுறையில் நீதி மற்றும் நியாயத்தை எந்த அளவிற்கு உள்ளடக்கியுள்ளோம் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
நீதி மற்றும் நியாயத்திற்காக நம் குரல் எழுப்புவது நம்மை ஒரு நீதியான நபராக மாற்றாது. நம்மை ஒரு நீதியான குடிமகனாக மாற்றுவதற்கான முதல் காரணி, நாம் எவ்வளவு தூரம் நீதியான மற்றும் நியாயமாக செயல்படுகிறோம் என்பதுதான். எனவே, நீதிக்காக உங்கள் குரலை உயர்த்துங்கள். நீதிக்காக எழுந்து நிற்கவும். அதற்கு முன், நீதி மற்றும் நியாயத்தை உண்மையிலேயே பிரதிநிதித்துவப்படுத்தும் மனசாட்சி கொண்ட ஒரு இளைஞன் அல்லது யுவதியாக மாறுங்கள். இந்த நாட்டை நிலையற்ற மக்கள் குழுவிடம் நாம் ஒப்படைக்கக்கூடாது. நமது நாட்டை உலகத்துடன் மிக நெருக்கமாக இணைக்கக்கூடிய மற்றும் சமூகத்தின் மீது இரக்கம் காட்டக்கூடிய ஒரு புதிய தலைமுறை இளைஞர்களிடம்
நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்க வேண்டும். எனவே, இந்த நாட்டை ஒப்படைக்க ஒரு தகுதிவாய்ந்த இளைஞர் இயக்கத்தை உருவாக்குவதே எங்கள் முயற்சியாகும். அதற்குத் தேவையான தகுதிகளை பூர்த்தி செய்த இளைஞர்களின் குழுவாக மாறுமாறு நான் உங்களை கோருகிறேன்.
இன்று, வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது. நான் அண்மையில் மாலைதீவிற்கு விஜயம் செய்தேன். எங்கள் இளைஞர்களில் சுமார் 30,000 பேர் அங்கு தொழில்புரிகின்றனர். இருப்பினும், அவர்கள் அரசாங்க நிறுவனங்களில் பணியாற்றவில்லை. அரசாங்கம் வெளியே ஒரு தனி பொருளாதாரத்தை உருவாக்கியுள்ளது. ஆனால், வெளியே திறன்கள் மற்றும் திறமைகள் உள்ளவர்களுக்கு வேலைகளை உருவாக்கும் பொருளாதாரத்தை உருவாக்க நாம் நீண்ட காலமாகத் தவறிவிட்டோம். அந்தத் தோல்வியின் விளைவாக, வேலைகளை வழங்கும் நிறுவனமாக அரசு மாறியுள்ளது. அரசாங்கம் தொழில் வழங்கும் நிறுவனம் அல்ல. மாறாக தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் நிறுவனம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
20 ஆம் நூற்றாண்டில் உலகில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த நூற்றாண்டுக்கு முன்பு, அத்தகைய தொழில்நுட்பம் கொண்ட ஒரு அரசு உருவாகும் என்று விஞ்ஞானிகள் கருதினர். இது போன்ற ஒரு அரசியல் உலகம் உருவாகும் என்று அரசியல்வாதிகள் மற்றும் அறிஞர்கள் கருதினர். அதேபோன்று அரச ஆட்சிக்குப் பதிலாக மக்களால் தெரிவாகும் ஆட்சி உலகில் உருவாகும் என்று கருதப்பட்டது. இதேபோல், உலகில் உள்ள பொருளாதார வல்லுநர்கள் உலகில் இதுபோன்ற ஒரு பொருளாதார நிலைமை உருவாகும் என்று கருதினர். இவ்வாறு, 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் எதிர்கால உலகத்தைப் பற்றிய இவ்வாறான எதிர்வு கூறல்களை நாம் பெரும்பாலும் சந்தித்தோம். இந்த அனுமானங்கள் 20 ஆம் நூற்றாண்டில் மட்டுமே யதார்த்தமாக மாற்றப்பட்டன.
தொழில்நுட்பம், அறிவியல், சந்தை மற்றும் மக்களின் வாழ்க்கை முறைகளில் ஏற்பட்ட இந்த மாற்றத்தின் காரணமாக, உலகில் ஒரு பாரிய சந்தை உருவாக்கப்பட்டது. இருப்பினும், அந்த சந்தையை அடையத் தவறிய ஒரு தேசமாக நாம் மாறினோம். எனவே, வெளியே ஒரு பொருளாதாரம் கட்டமைக்கப்படவில்லை. அதன்படி, வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனமாக அரசாங்கம் மாறியது.
இடிபாடுகளின் குவியலாக மாறியுள்ள அரசை நவீனத்துவத்திற்குக் கொண்டு வர வேண்டும். அதற்காக, சுமார் 62,000 பேரை அரச சேவையில் சேர்க்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளோம். வேலைவாய்ப்புப் பிரச்சினைக்கு இதனால் தீர்வு ஏற்படாது. அரசாங்க செயல்முறை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அதற்கான திட்டங்களை நாங்கள் தயாரித்துள்ளோம்.
இந்த ஆண்டு 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் எங்கள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். 2030 ஆம் ஆண்டுக்குள் 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் எங்கள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதன் மூலம், சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதாரம் வெளியில் கட்டமைக்கப்படும். பொருளாதாரத்தின் ஊடாக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
2030 ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் பொருளாதாரத்தை 15 பில்லியன் டொலர்களாக வளர்க்கவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்கள் நாட்டின் தேசிய உற்பத்தியில் 12% டிஜிட்டல் பொருளாதாரம் மூலம் வழங்குவதே எங்கள் எதிர்பார்ப்பு. விவசாயம், மீன்வளம் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் டிஜிட்டல் மயமாக்கலை இணைப்பதன் மூலம் ஒரு பாரிய மாற்றத்தையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்காக, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அறிவு மற்றும் திறன்களைக் கொண்ட ஒரு இளம் தலைமுறை அவசியம். அதன் ஊடாக வேலை வாய்ப்புகள் உருவாகும். துறைமுகத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரம் உட்பட பல துறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாரிய பொருளாதாரத்தையும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதன்படி, அரசாங்கம் தலையிட்டு வேலைகளை உருவாக்கும் ஒரு நாட்டை உருவாக்குவதே எங்கள் திட்டம்.
எங்கள் இளைஞர்கள் தங்கள் திறன்கள் மற்றும் வாழ்க்கை முறையின் அடிப்படையில் அவர்கள் விரும்பும் தொழிலைத் தொடர நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்க்கிறோம். இன்று நம்பிக்கையை உறுதிப்படுத்திய ஒரு பொருளாதாரத்தை நாட்டில் உருவாக்குவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இன்று, இந்த கட்டமைக்கப்பட்ட ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் இந்த நாட்டை ஒரு வளமான நாடாக மாற்றும் பயணத்தைத் தொடங்க நாங்கள் தயாராக உள்ளோம். இளைஞர்களாகிய உங்களுக்கு ஒரு பாரிய பொறுப்பு உள்ளது.
உங்களிடம் அறிவும் ஆற்றலும் உள்ளது. இந்த இளைஞர் இயக்கத்தின் மூலம் உங்களை இந்த வளர்ச்சியின் தலைவர்களாகவும் பங்காளர்களாகவும் மாற்றும் திட்டத்தைத் தொடங்க நாங்கள் தயாராக உள்ளோம். நீங்கள் வளர்ச்சியிலிருந்து விடுபட்டவர்கள் அல்ல. நீங்கள்
வளர்ச்சியில் மனித தூசி அல்ல. நாங்கள் தயாரித்த அபிவிருத்திப் பாதையில் உங்களை முக்கிய பங்காளர்களாக மாற்றுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
மிகவும் கொந்தளிப்பான பின்னணிக்குப் பிறகு, நீங்கள் ஒரு தலைமைத்துவக் குழுவை நியமித்துள்ளீர்கள். இந்த இளைஞர்கள் நமது நாட்டின் இளைஞர் இயக்கத்தை மிகச்
சிறப்பாக வழிநடத்தும் திறனைப் பெறுவீர்கள் என நம்புகிறேன். எதிர்கால சவால்களை முறியடித்பதற்காக நான் உங்களை வாழ்த்துகிறேன்.
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்கள் , வெளிநாட்டு தூதுவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்/பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
(-2025.07.06 – Colombo-) கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மாவட்ட அளவில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற திறமைசாலிகளை கௌரவிக்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் தொடங்கியுள்ளது. அதன்படி, தென் மாகாணத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (06) காலை ருகுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான […]
(-2025.07.06 – Colombo-)
கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மாவட்ட அளவில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற திறமைசாலிகளை கௌரவிக்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் தொடங்கியுள்ளது. அதன்படி, தென் மாகாணத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (06) காலை ருகுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 06 பாடத்திட்டங்களின் கீழ் உயர் சித்திகளைப் பெற்ற 10 மாணவர்கள் வீதம் 361 மாணவர்களுக்கு தலா ரூ. 100,000 வீதம் ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கப்பட்டது. இதற்காக ஜனாதிபதி நிதியம் 36.1 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளது. எதிர்காலத்தில், இந்த திட்டத்தை அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விழாவில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, ஜனாதிபதி நிதியத்தை முறைப்படுத்தவும், அதன் சேவைகளை விஸ்தரிக்கவும், வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். கடந்த கால நடைமுறைகளில் இருந்த தவறுகள் திருத்தப்பட்டு,நன்மைகள் பெறத் தகுதியானவர்களுக்கு நன்மைகள் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கவும், பிராந்திய ரீதியாக பரவலாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான முக்கிய கருவி கல்விதான் என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர் , பிள்ளைகள் இந்த சலுகையை முறையாகப் பயன்படுத்தி, சிறந்த கல்வியாளர்களாகவும், நல்ல பிரஜைகளாகவும் வாழ்க்கையை வெற்றிபெற்று அதன் மூலம் நாட்டையும் தேசத்தையும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் மேலும் கூறினார்.
இதுவரை இருந்த ஜனாதிபதியின் நிதியை தற்போதைய அரசாங்கம் மக்கள் நிதியாக மாற்ற முடிந்துள்ளதாகவும், மக்களின் நல்வாழ்வுக்கான சேவைகளை வழங்கும் நிறுவனமாக இந்த நிறுவனத்தை மாற்ற முடிந்துள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
அரசியல் அடியாட்களின் சிகிச்சை மற்றும் பயணத்திற்காக ஜனாதிபதி நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், தற்போது அது ஒரு பொது நல நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
இந்த புலமைப்பரிசில் பெற்று இலவசக் கல்வியின் ஊடாக முன்னேற்றம் அடையும் மாணவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, எதிர்காலத் தலைவராக மாறிய பிறகு, இந்த நாட்டிற்கும் அதன் பிரஜைகளுக்கும் வழங்க வேண்டிய சேவைகளைப் புறக்கணிக்கக்கூடாது என்றும், பொதுமக்களின் வரிப் பணத்திலிருந்து கற்றுக்கொண்டு நாட்டையோ அல்லது மக்களையோ திருடவோ அல்லது ஏமாற்றவோ கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் நினைவுபடுத்தினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், உலகைக் காண்பதற்காக பறந்து செல்வதற்காக கல்வி எனும் சிறகுகளை வழங்குவது தற்போதைய அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியாகும் என்றும், கல்வி அவர்களை மனிதாபிமான குடிமக்களாக மாற்ற உதவும் என்றும் கூறினார்.
தற்போதைய அரசாங்கம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் கல்விக்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும், ஜனாதிபதி இதற்காகச் செயல்பட்டு வருவதாகவும், ஜனாதிபதி நிதியத்தின் மூலம் கல்வியில் திறமையான மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கல்வி மூலம் மாணவர்களை வளப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இங்குள்ளவர்களில் பலர் இலங்கையையோ அல்லது உலகையோ ஆளும் பல இடங்களில் இருப்பார்கள் என்றும், அவர்கள் மனிதாபிமான குடிமக்களாக இல்லாவிட்டால், கல்வியில் நாம் செய்யும் முதலீடு சிறந்த பலனைத் தராது என்றும் அமைச்சர் சாவித்ரி போல்ராஜ் மேலும் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார சிரமங்களைக் கொண்ட மாணவர்கள் உயர்கல்வியை வெற்றிகரமாகத் தொடரவும் வாழ்க்கையில் வெற்றி பெறவும் இந்தத் திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளதாகவும் அதற்காக ஜனாதிபதிக்கும் ஜனாதிபதி நிதியத்திற்கும் நன்றி தெரிவிப்பதாக நன்றியுரையாற்றிய காலி, சவுத்லெண்ட் கல்லூரி மாணவி சித்மினி மதநாயக்க கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான எல்.எம்.அபேவிக்ரம, லால் பிரேமநாத், அரவிந்த செனரத், ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே, ருஹுணு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் பி.ஏ. ஜெயந்த, மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன, காலி மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஏ. தர்மசிறி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் பிமல் சில்வா மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரிகள்,அரசு அதிகாரிகள், பாதுகாப்புப் படை பிரதானிர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.