(-2024.05.01 – காலிமுகத் திடல்-) 1886 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில், 08 மணி நேர வேலை நேரத்தைக் கோரி போராட்டம் நடத்தியபோது இடம்பெற்ற அடக்குமுறை துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இரத்தம் சிந்திய தொழிலாளர்களை நினைவுகூறும் வகையில், 1889 ஆம் ஆண்டு கூடிய இரண்டாவது கம்யூனிஸ சர்வதேசம், அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 01 ஆம் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்த முடிவு […]
(-2024.05.01 – காலிமுகத் திடல்-)
1886 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில், 08 மணி நேர வேலை நேரத்தைக் கோரி போராட்டம் நடத்தியபோது இடம்பெற்ற அடக்குமுறை துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இரத்தம் சிந்திய தொழிலாளர்களை நினைவுகூறும் வகையில், 1889 ஆம் ஆண்டு கூடிய இரண்டாவது கம்யூனிஸ சர்வதேசம், அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 01 ஆம் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்த முடிவு செய்தது.
இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட பொது மக்கள், இந்த முறை இந்நாட்டின் ஊழல் மிக்க, சிறப்புரிமை அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்கள்நேய ஆட்சியின் கீழ், நாடும் சமூகமும் ஆழமான, சாதமான மாற்றத்துடன் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஒரு சில குடும்பங்கள் மற்றும் பரம்பரைகளால் 76 ஆண்டுகாலமாக மேற்கொள்ளப்பட்ட ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, இந்நாட்டின் அரசியலில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கும் வகையில், கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் இன, மத வேறுபாடின்றி இந்நாட்டின் அனைத்து மக்களும் செயல்பட்டனர்.
அந்த மக்கள் ஆணையின் அபிலாஷைகளை உணர்ந்து, நாட்டில் பொருளாதார, சமூக, அரசியல் ரீதியான திருப்பத்தை ஏற்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி செயலாற்றுகிறது. ஊழல் நிறைந்த, சிறப்புரிமை அரசியல் முறைமையால் பாதாலத்திற்குள் தள்ளப்பட்ட இந்நாட்டின் பொருளாதாரத்தை, மீட்டெடுத்து நிலையான ஆரம்பத்தை ஏற்படுத்துவதில் தற்போது நாம் வெற்றி பெற்றுள்ளோம். இதன் தெளிவான அறிகுறிகள் இப்போது அனைவருக்கும் தெரிகின்றன.
அரசாங்கத்தின் முதல் வரவுசெலவுத்திட்டத்திலேயே வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தமை உட்பட விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் மாத்திரமன்றி, உற்பத்தியாளர்கள், சிறிய வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபடுபவர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினர்களுக்கும் நன்மைகளை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோன்று, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அவர்களின் குடியுரிமை உரிமைகளை உறுதி செய்வதற்கும் நாம் நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.
நாளாந்தம் மாறிவரும் உற்பத்தி அற்றலுக்கு ஏற்ப நாம் அனுபவிக்கும் உரிமைகளில் ஒரு புதிய அத்தியாயத்தின் அவசியத்தை நாங்கள் காண்கிறோம். 1948 மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலில் இல்லாத டிஜிட்டல் பிரவேச உரிமைகள், சுற்றுச்சூழல் உரிமைகள் உள்ளிட்ட மாறிவரும் அரசியல் கட்டமைப்புகளின் தோற்றம் மற்றும் உலக அமைதியை அடிப்படையாகக் கொண்ட புதிய அபிவிருத்தித் தேவைகளுக்கமைய உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை இன்றைய சமூக கோருகிறது. இது குறித்த புரிதலுடன், தலையீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை சர்வதேச தொழிலாளர் தினமான இந்த சந்தர்ப்பத்தில், நாம் மீண்டும் நினைவூட்டுகிறோம்.
சர்வதேச புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கும் இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்து, ஊழல் நிறைந்த சிறப்புரிமை அரசியலால் அழிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி “வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை” உருவாக்க சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து போராட இந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுப்பதுடன் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அர்த்தமுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2025 மே மாதம் 01ஆம் திகதி
(-பொலொன்னருவா – 2025.04.20-) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் அனைத்து ஆவணங்களையும் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும், இந்தக் மிலேச்சத் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். 2019 ஏப்ரல் முதல் 2024 செப்டம்பர் வரையிலான கடந்த ஐந்தரை ஆண்டுகளில் நடத்தப்பட்ட விசாரணைகள் உண்மையான சூத்திரதாரிகளை மறைப்பதற்காகவே நடத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த ஆறு […]
(-பொலொன்னருவா – 2025.04.20-)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் அனைத்து ஆவணங்களையும் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும், இந்தக் மிலேச்சத் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
2019 ஏப்ரல் முதல் 2024 செப்டம்பர் வரையிலான கடந்த ஐந்தரை ஆண்டுகளில் நடத்தப்பட்ட விசாரணைகள் உண்மையான சூத்திரதாரிகளை மறைப்பதற்காகவே நடத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த ஆறு மாதங்களில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு மிகத் தெளிவான, படிப்படியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் அனைத்து பாகங்களும் பொதுமக்களுக்கோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கோ வழங்கப்படவில்லை என்றும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருக்காவிட்டால் அந்த ஆவணங்கள் தொடர்ந்தும் மறைக்கப்பட்டிருக்கும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
பொலன்னறுவையில் இன்று (20) இடம்பெற்ற “ வெற்றி நமதே. கிராமம் எமதே” பேரணித் தொடரின் மற்றுமொரு பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:
பாராளுமன்றத்தை சுத்தப்படுத்தித் தருமாறு மக்கள் கோரினார்கள். முழுமையாக சுத்தப்படுத்தினோம்.உள்ளுராட்சி சபைகளின் அதிகாரம் எமக்கு அவசியம். தேசிய மக்கள் சக்தி தவிர தெரிவு செய்வதற்கு வேறு தலைமையோ கட்சியோ உள்ளதா? மக்கள் பல்வேறு கட்சிகளுடன் பிணைப்பை வைத்திருந்தனர். அவற்றில் இருந்து ஒதுங்கி மக்கள் எமக்கு ஆணையை வழங்கினார்கள். அந்த மக்கள் ஆணையை சிறிதேனும் மக்களுக்கு எதிராக பயன்படுத்த மாட்டோம்.
2022-23 காலப்பகுதியில் நாடு நெருக்கடி நிலையை எதிர்கொண்டது. 77 வருடங்கள் ஆட்சியாளர்களால் நாசமாக்கப்பட்ட நாட்டை தேசிய மக்கள் சக்தி மீளமைக்கும். 30 வருட யுத்தம்,இனவாதத்தினால் மக்களிடையே சந்தேகம் ஏற்பட்டது. தேர்தல்களில் மக்களை பிரித்தாளும் நிலை காணப்பட்டது.வாக்குகளுக்காக இனவாதத்தை பிரயோகித்தனர். ஆனால் சகல பிரதேச மக்களும் இணைந்து தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்தனர். மக்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்தனர். இது இலங்கை அரசியல் வரலாற்றில் விசேடமான நிலை அல்லவா.
இருக்கும் சட்டங்கள் போதாவிட்டால் புதிய சட்டங்களை உருவாக்கியாவது இனவாதத்தை ஒழிப்போம்.தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவோம். 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தில் அதிகாரத்திற்காக பாரிய அனர்த்தம் இடம்பெற்றது.2019 ஏப்ரல் முதல் 2024 செப்படம்பர் வரை சுமார் ஒன்றரை வருடங்கள் உண்மையான சூத்திரதாரிகளை மறைக்கவே விசாரணைகளை நடத்தினர். 2019 வரை இருந்த அரசாங்கங்களோ அதன் பின்னர் அரசாங்கங்களோ எவ்வகையிலும் உண்மையான சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. எவருக்கும் சந்தேக நபர்களை வெளிப்படுத்தும் நோக்கமிருக்கவில்லை.6 வருடங்கள் கடந்து விட்டன. நாம் கட்டம் கட்டமாக சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தத் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.உயிர்த்த ஞாயிறு தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் சில பகுதிகள் மறைக்கப்பட்டன. நாட்டிற்கோ சி.ஐ.டிக்கோ முழுமையான அறிக்கை முன்வைக்கப்படவில்லை.சில பகுதிகள் மறைக்கப்பட்டே அறிக்கை வெளியிடப்பட்டது. உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் சகல ஆவணங்களையும் இன்று சி.ஜ.டிக்கு அனுப்பினேன். முழுமையாக ஆராய்ந்து விசாரணை நடத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளேன். அதில் பல பரிந்துரைகள் உள்ளன .அவற்றை செயற்படுத்துமாறும் கேட்டுள்ளேன்.இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகங்கள் உள்ளன.வவுனதீவு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கொல்லப்பட்ட இடத்தில் ஜெக்கட் ஒன்றை இட்டது யார். அது தொடர்பில் சந்தேகம் உள்ளது. அதனை ஆராய வேண்டும். சில தொலைபேசிகளின் இமி இலங்கங்களை பயன்படுத்தினார்கள் என்பதில் சந்தேகம் உள்ளது. அனைத்து சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் விசாரணைகளை முன்னேடுப்போம். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதை வெளிப்படுத்தும் பொறுப்பை ஏற்று செயற்பட்டு வருகிறோம்.
கடந்த 6 மாத காலத்தில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் சவாலை எதிர்கொண்டோம்.பொருளாதாரத்தை ஒரளவு ஸ்தீரப்படுத்தியுள்ளோம்.300 ரூபாவாக டொலரின் பெறுமதி பேணப்படுகிறது. பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி வருகிறோம். எரிபொருள் மற்றும் மின்சார விலைகளை குறைத்துள்ளோம். அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்து வருகிறோம். கட்டுநாயக்க விமான நிலையத் திட்டம் உட்பட 11 திட்டங்களை மீள ஆரம்பிக்க ஜப்பான் முன்வந்துள்ளது.76 புதிய மற்றும் பழைய திட்டங்களை மீள ஆரம்பிக்க சீனா உடன்பாடு கண்டுள்ளது.
காற்றாலை மற்றும் சூரிய சக்தி திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சம்பூரில் 120 மெகா வோர்ட் சூரிய சக்தி திட்டம் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சியம்பலாண்டுவில் 100 மெகா வோர்ட் மின்திட்டம் மற்றும் மன்னாரில் 50 மெகாவோர்ட் புதிய மின் திட்டம் ஆரம்பிக்கப்படும்.
நீர்ப்பாசன துறைக்கு மாத்திரம் 78 ஆயிரம் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மூலதனச் செலவுகளுக்கு பாரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டை கட்டியெழுப்ப நிதி ஒதுக்கப்படுகிறது. டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டும்.கோரும் அனைத்து நிதியையும் வழங்க முடியும். ஆனால் அரச இயந்திரம் வீழ்ச்சியடைந்துள்ளது. பலமான அரச சேவை உருவாக்கப்பட வேண்டும்.அரச துறைக்கு ஒன்றரை வருடத்தில் 30 ஆயிரம் பேரை இணைக்க இருக்கிறோம்.
அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.ஓய்வூதியம் பெறுவோரின் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. வறுமைய ஒழிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மாணவர்களுக்கு சுமையாக உள்ள கல்வி முறையை மாற்ற இருக்கிறோம்.2026 முதல் புதிய பாடவிதாணம் அறிமுகம் செய்யப்படும்.மாணவர்கள் செல்ல வேண்டிய பாதை 10 ஆம் வகுப்பில் தீர்மானிக்கப்படும். 13 வருட பாடசாலை கல்வி கட்டாயமானது. எந்த மாணவரும் வெறும் கையுடன் வெளியேற மாட்டார்கள்.
பசளை மானியத்தை அதிகரித்துள்ளோம். உப பயிற்செய்கைக்காகவும் 15 ஆயிரம் ரூபா பசளை மானியம் வழங்க முடிவு செய்துள்ளோம். வழங்கப்படும் பசளை மானியத்தினால் பசளை மாத்திரமே கொள்வனவு செய்ய வேண்டும். பசளைபெற வவுச்சர் வழங்கப்படும். அறுவடையை நியாயமான விலைக்கு வாங்குவோம். இம்முறை எவருக்கும் நெல்விலை தொடர்பான பிரச்சினை எழுந்திருக்காது.இனி ஒருபோதும் அவ்வாறான பிரச்சினை எழாது. 3 மெற்றிக் தொன் களஞ்சியம் செய்யக் கூடிய களஞ்சியங்கள் அமைக்கப்பட்டன.குறைந்த விலைக்கு செல்லும் அனைத்து நெல்லையும் அரசாங்கம் வாங்கும். 500 கோடி ஒதுக்கினோம். ஆனால் நெல் வரவில்லை. விவாசாயிக்கு நியாயமான விலை நெல்லுக்கு வழங்க வேண்டும்.
விவசாயிகளின் காணி உறுதி தொடர்பான பிரச்சினை உள்ளது. விவசாயிகளுக்கு காணி உறுதி வழங்க தயார். ஆனால் அவற்றை விற்க முடியாது.
கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதன் ஊடாக வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும். இந்த வருடத்தில் முதற்கட்டமாக பஸ்கொள்வனவிற்காக 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டம் அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்படுகிறது. பதிவு செய்யப்படாமல் வீதியில் வாகனம் செலுத்திய முன்னாள் அமைச்சர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். இலஞ்ச ஊழல் திணைக்களம்,சட்டமா அதிபர் திணைக்களம் என்பன பலப்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் ஐந்து சதத்தைக் கூட திருடாத வீண் விரயம் செய்யாத அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வருக்கு எதிராக ஒரு வழங்கும் அடுத்த மகனுக்கு எதிராக இரு வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. பாட்டிக்கு எதிராகவும் வழக்கு பதிவாகும்.சி.ஐ.டி ஊடாக பல விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. சட்டவிரோதமாக உழைத்த சொத்துக்களை மீளப் பெற பலமான சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் இதற்காகத்தான் எமக்கு ஆணை வழங்கினார்கள். பயந்தவர்கள் தான் அதிகமாக பேசுகிறார்கள்.முடிந்தால் தன்னை கைது செய்யுமாறு சவால் விடுகிறார்கள். எமக்கு யாரையும் பலிவாங்கத் தேவையில்லை.தற்பொழுது தான் திறைசேரியின் நிதி மக்களுக்கு சென்றடைகிறது. மக்களின் வரிப்பணம் நாட்டு நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது.
ஜனாதிபதி, அமைச்சர்கள், பாராளுமன்றம்,பிரதேச சபை.நகர சபைகள் அனைத்தும் இணைந்து பல வருடங்கள் போராடி நாட்டை கட்டியெழுப்புவோம் என்றும் தெரிவித்தார்.
(-வெற்றி நமதே.. ஊர் எமதே.. யாழ்ப்பாணம் வெற்றிப் பேரணி-2025.04.17-) – ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவிப்பு எந்த வடிவத்தில் இனவாதம் நாட்டில் மீண்டும் தலைதூக்க முயற்சித்தாலும் அதனைத் தோற்கடிக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இனவாதத்தைத் தூண்டும் குழுக்களுக்கு என்ன முத்திரை குத்த முயற்சித்தாலும், வடக்கு மற்றும் தெற்கில் உள்ள மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டில் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார். […]
(-வெற்றி நமதே.. ஊர் எமதே.. யாழ்ப்பாணம் வெற்றிப் பேரணி-2025.04.17-)
– ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவிப்பு
எந்த வடிவத்தில் இனவாதம் நாட்டில் மீண்டும் தலைதூக்க முயற்சித்தாலும் அதனைத் தோற்கடிக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இனவாதத்தைத் தூண்டும் குழுக்களுக்கு என்ன முத்திரை குத்த முயற்சித்தாலும், வடக்கு மற்றும் தெற்கில் உள்ள மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டில் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.
“வெற்றி நமதே – ஊர் எமதே” மக்கள் பேரணித் தொடரின் மற்றொரு பேரணி யாழ்ப்பாணத்தில் நேற்று (17) நடைபெற்றதுடன் அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
எந்தவொரு மாகாண மக்களின் உரிமைகளையோ அல்லது பாரம்பரியத்தையோ பறிக்க அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது என்று கூறிய ஜனாதிபதி, திஸ்ஸ விகாரையின் பிரச்சினையைத் தீர்க்க, அதில் உள்ள அரசியல் அகற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும், போரின் கசப்பான வரலாறும், நாம் மறந்துவிட வேண்டிய வரலாறும் மீண்டும் நிகழ அனுமதிக்கப்படாது என்றும் தெரிவத்த ஜனாதிபதி, யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, புதிய நகரத் திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
காணாமல் போனவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனுபவிக்கும் வலியை தாம் நன்கு அறிவதாகக் கூறிய ஜனாதிபதி, அந்த வலியைப் போக்க, அவர்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், உண்மையை வெளியே கொண்டுவர அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்காக நாட்டு மக்கள் இணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நியமித்ததாக மேலும் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இருண்ட கடந்த காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் இது என்றும், மீண்டும் கட்டியெழுப்பப்படும் நாட்டிற்கு வருகை தந்து முதலீடு செய்யுமாறு தான் தமிழ் புலம்பெயர்ந்தோருக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.
பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை வழங்கியதற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நாட்டில் எப்போதும் தேர்தல்களில் மக்களிடையே பிரிவினை ஏற்படுகின்றது. ஆனால் கடந்த பொதுத் தேர்தலில், வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கில் உள்ள சிங்களவர்கள், முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் என அனைத்து மக்களின் விருப்பமும் தேசிய மக்கள் சக்தியாக இருந்தது. கடந்த தேர்தலில் பிளவுபடுவதற்குப் பதிலாக, மக்கள் நாட்டுக்காக ஒன்று திரண்டனர். இவ்வாறு ஒன்றுபட்ட நாம், மீண்டும் ஒருபோதும் பிரிந்து விடக்கூடாது. நாம் ஒருவருக்கொருவர் பயத்துடனும் சந்தேகத்தடனும் வாழும் ஒரு நாட்டை நாம் விரும்பவில்லை.
சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து, இறக்கும் ஒரே தாயகமாக, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சம உரிமைகளைப் பெறும் ஒரு நீதியான நாட்டைக் கட்டியெழுப்புவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விருப்பமாகும், நாங்கள் ஒருவரையொருவர் வெறுத்துள்ளோம். போர் நடத்தியுள்ளோம்.
ஆனால் எங்களிடம் எதுவும் மிச்சமில்லை. எங்களுக்கு எஞ்சியிருந்தது பேரழிவிற்குள்ளான வடக்கு மாகாணமும், தங்கள் குழந்தைகளை இழந்த பெற்றோர்களும் மாத்திரமே. எங்கள் உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் இழந்துவிட்டோம். இது வடக்கிலும் தெற்கிலும் நடந்தது. மீண்டும் அப்படி ஒரு சகாப்தம் நமக்கு வேண்டாம். நாம் இப்போது அதனை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். எமது தலைமுறை போர்களை நடத்தியது. சண்டைபிடித்தோம்.
ஆனால், தேசிய மக்கள் சக்தி நமது குழந்தைகளின் தலைமுறைக்காகப் போர் செய்யாத, சண்டையிடாத, அனைவரும் ஒற்றுமையாக வாழும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
நம் நாட்டில் இனிமேலும் இனவெறி இல்லை. அரசியல்வாதிகளுக்குத் தேவையானதுதான் இனவெறி. திஸ்ஸ விகாரையை தொடர்பில் ஒரு பிரச்சினை இருப்பது உங்களுக்குத் தெரியும். கடந்த பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில், திஸ்ஸ விகாரை பிரச்சினையைத் தீர்ப்பது இலகுவானது என்று நான் கூறினேன். அந்தப் பிரச்சினையின் பின்னணியில் நடத்தப்படும் வடக்கு மற்றும் தெற்கின் அரசியல் அகற்றப்பட வேண்டும். திஸ்ஸவிகாரையில் உள்ள அரசியல் நீக்கப்பட்டால், அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
விகாரையின் விகாராதிபதி, அந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள், நாக விகாரையின் தேரர் ஆகியோர் ஒன்று சேர்ந்தால், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். அரசியல்வாதிகள் விரும்புவது மீண்டும் இனவாதத்தைத் தான். ஒரு அரசாங்கமாக, எந்தவொரு மாகாண மக்களின் உரிமைகளையோ அல்லது பாரம்பரியத்தையோ பறிக்கும் எந்த நடவடிக்கையையும் நாங்கள் ஒருபோதும் எடுக்க மாட்டோம்.
இந்த நாட்டில் எங்கெல்லாம் தொல்பொருள் கலைப்பொருள் காணப்பட்டாலும், எங்கெல்லாம் வரலாற்று இடிபாடுகள் காணப்பட்டாலும், அவற்றை சிங்களவர், தமிழர் அல்லது முஸ்லிம் என்று நாம் அடையாளம் காணத் தேவையில்லை. நாம் அதை நாட்டின் பாரம்பரியமாகப் பார்க்க வேண்டும்.
ஆனால் இப்போது, தொல்பொருட்களும் வரலாற்று இடிபாடுகளும் கண்டுபிடிக்கப்படும்போது, அவை சிங்களமா அல்லது தமிழா என்பதை தீர்மானிக்க முயற்சிக்கிறார்கள். அதுதான் இனவெறியரின் இயல்பு. ஆனால் அவற்றைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு வழங்க நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.
இந்த இனவாதக் குழுக்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டன. ஆனால் மீண்டும், அதே இனவெறியை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் மோதல்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், எந்த உருவத்தில் அல்லது எந்த வழியில் இனவாதம் மீண்டும் தலைதூக்க முயன்றாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதைத் தோற்கடிக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நமக்கு தேசிய ஒற்றுமை அவசியம். யாழ்ப்பாணத்தில் பாரம்பரிய அரசியல் தலைவர்கள் இருந்தனர்.
பாரம்பரிய கட்சிகள் இருந்தன. இந்த பெரிய கட்சிகள் இருந்தபோதும், சிறந்த தலைவர்கள் இருந்தபோதும் நீங்கள் எங்களை நம்பினீர்கள். எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டாலும், எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஒருபோதும் உடைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். எங்களை நம்பி நீங்கள் தீர்க்க விரும்பும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
நாங்கள் அவற்றைத் தீர்ப்போம். இனவாதக் குழுக்களால் எத்தகைய முத்திரைகள் சூட்டப்பட்டாலும் சரி, எத்தகைய போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் சரி, உங்கள் உரிமைகளையும் தேசிய ஒற்றுமையையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.
முதலாவதாக, பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட மக்களுக்குச் சொந்தமான நிலங்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். இனிமேலும் பாதுகாப்பு காரணங்கள் என்ற போர்வையில் மக்களின் நிலங்களை வைத்திருக்க அரசாங்கத்திற்கு உரிமை இல்லை. விடுவிக்கப்படக்கூடிய அனைத்து நிலங்களும் விடுவிக்கப்படும். நீங்கள் நிலங்களில் குடியேறுங்கள். பயிரிடுங்கள்.
யுத்தம் வரும் என்று எதிர்பார்த்து நாங்கள் செயற்படவில்லை, யுத்தம் வராமல் தடுக்க தேசிய மக்கள் சக்தி செயற்படுகிறது. அதுதான் ஒரு அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்தப் பகுதியில் ஏராளமான வீதிகள் மூடப்பட்டிருந்தன. நாங்கள் அந்த வீதிகளை படிப்படியாக மீண்டும் திறந்து வருகிறோம். நீங்கள் சுதந்திரமாக செயல்படுங்கள். கொழும்பிலும் வீதிகள் மூடப்பட்டிருந்தன.
ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் உள்ள வீதி, அலரி மாளிகைக்கு முன்னால் உள்ள வீதியும் மூடப்பட்டிருந்தன. நாங்கள் அந்த வீதிகளைத் திறந்தோம். ஜனாதிபதி, பிரதமர் மாளிகைகளுக்கு முன்னால் வீதிகளைத் திறக்க முடியும் என்றால், யாழ்ப்பாணத்தில் வீதிகளை மூடுவதற்கு எந்த உரிமையும் இல்லை.
இந்த யாழ்ப்பாணத்தை நாங்கள் மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவோம். போரின் கசப்பான வரலாறு, நாம் மறக்க வேண்டிய வரலாறு, மீண்டும் நிகழ இடமளிக்க மாட்டோம். காணாமல் போனவர்கள் பற்றிய ஒரு பிரச்சினை இருப்பதாக எனக்குத் தெரியும். நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். உங்கள் பிள்ளையை அரசாங்கத்திடம், பொலிஸ் நிலையத்திலோ அல்லது இராணுவ முகாமிலோ ஒப்படைக்கப்பட்டால், அவருக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அது ஒரு பொறுப்பான அரசாங்கத்தின் கடமையாகும்.
காணாமல் போன பிள்ளைகளின் பெற்றோரின் வலியை நான் அறிவேன். பொதுவாக ஒருவர் இறந்தால், நாம் அந்த உடலைக் காண்கிறோம். மதச் சடங்குகள் செய்யப்படுகின்றன. எமது கையாலே இறுதிச்சடங்குகளை நிறைவேற்றுகிறோம். நாம் காலப்போக்கில் இயல்பு நிலைக்குத் திரும்புகிறோம். ஆனால் ஒரு பிள்ளை காணாமல் போகும் போது அவ்வாறு இல்லை. மிகுந்த வலி இருக்கிறது. என் உறவினர் ஒருவரும் காணாமல் போனார். அதனால் அந்த வலி எனக்குத் தெரியும். அந்த வலி தீரவேண்டுமாயின், பிள்ளைகளைப் பற்றிய உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். அது யாரையும் பழிவாங்குவதற்காக அல்ல. அது அமைதிக்கு அவசியம். நாங்கள் அதை ஒரு அரசாங்கமாக நிறைவேற்றுவோம்.
நாம் வரலாற்றில் வாழ்வதிலிருந்தும் அதன் வலியிலிருந்தும் நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். நாம் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க வேண்டும். அதனால்தான் நீங்கள் எங்களை நம்பினீர்கள். நீங்கள் பழையதை விரும்பினால், பழைய கட்சிகளைத் தெரிவு செய்திருப்பீர்கள். நீங்கள் எங்களை புதிய விடயத்திற்காகத் தேர்ந்தெடுத்தீர்கள். அந்தப் புதிய விடயங்களை நாங்கள் பயமின்றிச் செய்வதை உறுதிசெய்கிறோம். அது செய்யப்பட வேண்டும். இது எமது நாடு. இதுதான் நாம் அனைவரும் வாழும் நாடு.
அது மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையை படிப்படியாக மேம்படுத்த வேண்டும். பழைய ஆட்சியாளர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை பாரியளவில் சீர்குலைந்தனர். எரிபொருள், மருந்தை இறக்குமதி செய்ய முடியாத, கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத ஒரு நாட்டை அவர்கள் உருவாக்கினர். ஆனால் நாம் இப்போது படிப்படியாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி வருகிறோம்.
இதற்காக அனைத்து நாடுகளிடமிருந்தும் நாங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம். இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதே எங்கள் குறிக்கோள். வளரும் பொருளாதாரத்தின் நன்மைகளை இந்த நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கும் நாங்கள் தற்போது செயற்பட்டு வருகிறோம்.
நான் அண்மையில் இந்த யாழ்ப்பாண மாவட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
அங்கு எங்களுக்கு பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அந்த ஒவ்வொரு திட்டத்திற்கும் நாங்கள் பணம் ஒதுக்கினோம். காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை சிறந்த திட்டத்திற்காக யாழ்ப்பாணத்திற்கு வழங்க நான் தயாராக இருப்பதாக அதன்போது தெரிவித்தேன்.
இதுபோன்ற இடங்களை மக்களுக்காக செயற்படும் இடங்களாக மாற்ற வேண்டும். நம் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இடங்களாக அவை இருக்க வேண்டும். அதற்காக நாங்கள் அவர்களை விடுவிக்கிறோம்.
மேலும், நாங்கள் இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பத்து இலட்சத்து 5,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது, இது இந்த மாகாணத்தில் வீதிப் புணரமைப்புக்காக அண்மைய காலங்களில் செய்யப்பட்ட அதிகபட்ச ஒதுக்கீடாகும். அது மட்டுமல்ல, வரலாற்றில் இருண்ட நிகழ்வுகளில் ஒன்று யாழ்ப்பாண நூலகத்துடன் தொடர்புடையது. ஒரு நூலகத்தின் அழிவு எங்கள் இதயங்களை பாதித்தது.
நூலகத்தை எரிப்பது இனவெறியின் உச்சம். இந்த ஆண்டு நூலக வசதிகளை மேம்படுத்துவதற்காக 10 கோடி ரூபாவை ஒதுக்கினோம்.
அதுமட்டுமல்ல, இந்த நகர சபைக்கு ஒரு பாரிய கட்டிடம் இருக்கிறது. ஆனால் எந்தப்பயனும் இல்லை. அது ஒரு பாரிய கட்டிடம். எங்கள் கிராமங்களில் வீடுகள் மிகச் சிறியவை. எங்கள் நகர சபை மிகப் பெரியது. அதன் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்காக அதைப் புதுப்பிக்க பத்து இலட்சத்து 400 ரூபாவை ஒதுக்கியுள்ளோம். இவற்றைக் புணரமைத்து மக்களுக்கான இடங்களாக மாற்ற வேண்டும்.
மேலும், வடக்கு மாகாண மக்கள் நிலத்துடன் தொடர்புபடும் மக்கள். நாம் உர மானியத்தை 15,000 த்திலிருந்து 25,000 ஆக அதிகரித்தோம். மரக்கறி மற்றும் பழங்களைப் பயிரிடுவதற்காக உர மானியங்களை வழங்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வட மாகாணத்தில் 16,000 ஏக்கரில் தென்னை பயிரிடலாம். ஒரு புதிய தேங்காய் முக்கோணத்தை உருவாக்கலாம்.
அதற்கு அரசாங்கம் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்காக நாங்கள் 500 மில்லியன் ஒதுக்கினோம். தென்னை வளர்க்கும் விவசாயிகளுக்கு அரசாங்கம் தென்னங் கன்றுகளை வழங்குகிறது. தென்னை உரம் வழங்கப்படும். தென்னை அகழிகளை வெட்டி நிலத்தை தயார் செய்ய பணம் தருகிறேன். பயிர்செய்யத் தயாராகுங்கள். வடக்கு, தெற்கு அல்லது கிழக்கு என்ற பேதமின்றி இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நாங்கள் பாடுபடுவோம்
இந்த வட மாகாணத்தில் சுற்றுலாவுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அருகம்பே அல்லது தெற்கிற்கு வருவது போல் வடக்குக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை. உள்நாட்டு விமான சேவைகளை மேலும் வலுப்படுத்தி, கொழும்புக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு பயணிக்கும் வேலைத்திட்டம் உருவாக்கப்படும்.
யாழ்ப்பாணம் ஒரு புதிய சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டும். பழைய யாழ்ப்பாணத்தைப் பிரதிபலிக்கும் புதிய அபிவிருத்தித் திட்டத்துடன் அடுத்த ஆண்டு யாழ்ப்பாண நகரத்தை மறுவடிவமைக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம். யாழ்ப்பாணம் ஒரு வரலாற்று நகரமாக பிரதிபலிக்கப்பட வேண்டும்.
அவர்களின் கலாசாரம், வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் மீண்டும் கட்டியெழுப்ப தற்போது நகர அபிவிருத்தி அதிகாரசபை திட்டங்களைத் தயாரித்து வருகிறது. அடுத்த ஆண்டு அதற்கான பணத்தை ஒதுக்குவோம்.
யாழ்ப்பாண மக்களின் குடிநீர் மற்றும் கழிவகற்றல் பிரச்சினைகளைத் தீர்க்கவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். நாங்கள் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு என்ற பேதமின்றி அனைத்து மாகாண மக்கள் மீதும் கவனம் செலுத்துவதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் நம்பிக்கை கொண்ட ஒரு அரசாங்கம்
மேலும் 1983 ஆம் ஆண்டு முதல் ஏராளமான தமிழர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்பது நமக்குத் தெரியும். இன்று அவர்கள் உலகில் பாரிய தொழிலதிபர்களாகவும் செல்வந்தர்களாகவும் மாறிவிட்டனர். உங்கள் உறவினர்கள் வசிக்கும் பூமியை கட்டியெழுப்பவும், அவர்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடிந்தவரை முதலீடு செய்யவும், புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரையும் இலங்கைக்கு மீண்டும் திரும்பி வருமாறு நான் அழைக்கிறேன்.
இந்த நாடு இப்போது பாதுகாப்பானது. இனவாதம் இல்லாத நாடாக மாறியுள்ளது. அனைவரின் உரிமைகளையும் நியாயமாக அங்கீகரிக்கும் நாடு. அனைத்து கலாசாரங்களையும் மதிக்கும் நாடு. எனவே, இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உங்கள் முதலீடுகளைப் பயன்படுத்துமாறு நான் உங்களை அழைக்கிறேன்.
இது ஒரு புதிய அத்தியாயம், பழைய இருண்ட கடந்த காலத்தை நிறைவுசெய்து புதிய எதிர்காலத்திற்குச் செல்லும் ஒரு அத்தியாயம். இது மிகவும் முக்கியமான அரசியல் மாற்றமாகும். இது எங்கள் தாய்மார்களும் தந்தைமார்களும் நீண்ட காலமாக பிரார்த்தித்த ஒன்று. அவர்கள் பல்வேறு வழிகளில் இத்தகைய அரசாங்கமொன்றை எதிர்பார்த்தனர்.
இப்போது அந்த அரசாங்கம் அமைக்கப்பட்டுவிட்டது. , பொதுமக்களின் பணத்தில் ஒரு சதத்தையேனும் திருடாத அரசாங்கம் இன்று அமைக்கப்பட்டுள்ளது. பழைய அரசியல் இந்த நாட்டை ஏழ்மையாக்கியது. மக்கள் ஏழைகளாக்கப்பட்டனர். ஆனால் ஆட்சியாளர்கள் செல்வந்தர்களானார்கள். அந்தக் கலாசாரத்தை நாம் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம். இப்போது, அனைவரையும் ஒன்றிணைந்து பிரதேச சபைகளையும், நகர சபைகளையும் வலுப்படுத்தி, அந்தத் திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லுமாறு நான் அழைக்கிறேன்.
(-வெற்றி நமதே.. ஊர் எமதே.. மன்னார் வெற்றிப் பேரணி-2025.04.17-) புத்தளத்திற்கும் மன்னாருக்கும் இடையிலான பாதைக்கு மாற்றுத்திட்டத்துடன் புதிய வகையில் இணைக்க நடவடிக்கை சட்டவிரோத கடற்றொழில் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை வடக்கில் 16 ஆயிரம் ஏக்கரில் தெங்கு பயிரிட திட்டம் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைத்து மக்களின் கருத்துக்களுடனே மன்னாரில் காற்றாலை திட்டங்கள் முன்னெடுப்பு – மன்னாரில் ஜனாதிபதி தெரிவிப்பு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த பின்னர், மாற்று திட்டங்களுடன் மன்னாரையும் புத்தளத்தையும் புதிய வழியில் இணைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி […]
(-வெற்றி நமதே.. ஊர் எமதே.. மன்னார் வெற்றிப் பேரணி-2025.04.17-)
புத்தளத்திற்கும் மன்னாருக்கும் இடையிலான பாதைக்கு மாற்றுத்திட்டத்துடன் புதிய வகையில் இணைக்க நடவடிக்கை
சட்டவிரோத கடற்றொழில் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை
வடக்கில் 16 ஆயிரம் ஏக்கரில் தெங்கு பயிரிட திட்டம்
சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைத்து மக்களின் கருத்துக்களுடனே மன்னாரில் காற்றாலை திட்டங்கள் முன்னெடுப்பு
– மன்னாரில் ஜனாதிபதி தெரிவிப்பு
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த பின்னர், மாற்று திட்டங்களுடன் மன்னாரையும் புத்தளத்தையும் புதிய வழியில் இணைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இந்த வீதி திறக்கப்படுவதால் புத்தளத்திற்கான தூரம் சுமார் 90 கிலோமீட்டர் குறையும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டு மக்களுக்கு செவிசாய்த்து மக்களுக்காக பாடுபடும் ஒரு அரசாங்கம் என்றும் வலியுறுத்தினார்.
மன்னாரில் இன்று (17) நடைபெற்ற ‘ வெற்றி நமதே – ஊர் எமதே’ மக்கள் பேரணித் தொடரின் மற்றொரு பேரணியில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக இனவாத அரசாங்கங்களுக்குப் பதிலாக தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, நாட்டில் இனி இனவாதத்திற்கு இடமில்லை என்றும், தற்போதைய அரசாங்கம் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைத்து மக்களையும் சகோதரத்துவத்துடன் நடத்தும் மற்றும் அனைவரின் உரிமைகளையும் அங்கீகரிக்கும் அரசாங்கமாகும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
மன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையே படகு சேவையை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான மன்னாரிலுள்ள வளங்களைப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெற்று சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்து அவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
யுத்த காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு வன பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்ட வடக்கில் உள்ள காணிகளை மக்களிடம் திருப்பிக் கொடுப்பதற்கும், மூடப்பட்ட பாதைகளை மீண்டும் திறப்பதற்கும் தேவையான பின்னணி உருவாக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். பேசாலை பகுதியில் சட்டவிரோத மீன்பிடித்தல் பிரச்சினையைத் தீர்க்க இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் இரு உறுப்பினர்களும் தேசியப்பட்டியல் ஊடாக ஒருவரும் தெரிவானார்கள். இந்த வெற்றிக்கு இப்பகுதி மக்கள் பெரும் பங்காற்றினர். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக பிரித்தாளுகின்ற அரசியலுக்கு முடிவு கட்டியுள்ளோம். இதற்கு முன்னர் வாக்குகளினால் மக்களை பிரித்தனர்.வடக்கு மக்கள் தமிழ் கட்சிகளை தெரிவு செய்தனர். கிழக்கு மக்கள் முஸ்லிம் கட்சிகளை தெரிவு செய்தனர். தெற்கிலுள்ள மக்கள் சிங்கள கட்சிகளை தெரிவு செய்தனர். கடந்த தேர்தலில் அனைத்து மக்களும் தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்தனர். அனைவரும் ஒன்றாக வாழும் நாடே எமக்குத் தேவை. இனவாதத்தினால் நாம் மோசமாக பாதிக்கப்பட்டோம். இனியும் இனவாதத்திற்கு இடமளிக்காது தேசிய ஐக்கியத்திற்கான அரசை உருவாக்கியுள்ளோம்.
இதற்கு முன்னர்அவ்வாறான அரசு உருவானதா? இனவாத அரசுகளே இருந்தன.சிங்களவராக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் தமிழராக இருந்தாலும் அவர்கள் இலங்கையர்கள். பிரித்தாளும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். யுத்தத்தை காரணம் காட்டி இப்பகுதி மக்களின் காணிகள் அரசாங்கத்திற்கு பெறப்பட்டுள்ளன. சில வீதிகள் மூடப்பட்டுள்ளன. சில தனியார் காணிகள் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு பெறப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினைகளை தீர்க்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
நாட்டை முன்னேற்றுகையில் மன்னார் மாவட்டம் முக்கிய பிரதேசமாகும். மன்னார் மக்கள் கடற்றொழிலில் வாழுகின்றனர். எமது கடலில் சட்டவிரோதமாக படகுகளில் வந்து பாரிய சேதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அண்மையில் இந்திய பிரதமரின் வருகையின் போது இது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் நடத்தினோம்.எமது கடல்வளம் எமது மக்களுக்குரியது. இந்தப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எமது கடலை பாதுகாக்கும் பொறுப்பை மேற்கொள்வோம். இது தொடர்பில் கடற்படைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.
மன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையில் படகுச் சேவை இருந்தது. அதனை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் ராமேஸ்வரத்திற்கான படகு சேவையை ஆரம்பிப்போம். மன்னாரில் பாரிய காற்றலை மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய பிரதேசமாகும். மக்களின் கருத்துக்களை செவிமடுக்காது காற்றாலை திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவற்றை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு காற்றாளை செயற்பட தயாராக இருக்கிறோம். அனைத்துத் திட்டங்களும் மக்களின் ஒப்புதலுடன் பாதிப்புகளை குறைத்து மேற்கொள்வோம். சுற்றாடலுக்கு பாதிப்பான திட்டங்களுக்கு அனுமதி வழங்க மாட்டோம்.
புத்தளத்திற்கும் மன்னாருக்கும் இடையிலான பாதை நீண்டகாலமாக மூடப்பட்டுள்ளது. இந்தப் பாதையை திறந்தால் புத்தளத்திற்கான பயணத்தூரம் 90 கிலோமீட்டர் வரை குறையும். புத்தளத்திற்கான பாதை தொடர்பிலான சுற்றாடல் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளோம்.தற்பொழுது நிர்மாணிக்கப்படும் பாதைக்கு மாற்றுவழியுடன் புதிய விதத்தில் புத்தளம் மற்றும் மன்னாரை இணைக்க இருக்கிறோம். மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே இந்த அரசாங்கம் உள்ளது.மக்களின் பிரச்சினைகளை செவிமடுக்கும் அரசாங்கத்தை மக்கள் தான் ஒன்றிணைந்த உருவாக்கினார்கள்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்தி வருகிறோம். 5 வருடங்களின் பின்னர் டொலர் கையிருப்பு பாரியளவில் அதிகரித்துள்ளது. 6 மாதங்களாக ரூபாவின் பெறுமதி அசையாமல் இருக்கிறது. எரிபொருள்,மின்சார விலைகளை குறைத்துள்ளோம்.மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வருகிறோம். அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தினோம். அஸ்வெசும கொடுப்பனவை அதிகரித்துள்ளதோடு கொடுப்பனவு பெறுவோரின் தொகையை 4 இலட்சத்தினால் அதிகரித்துள்ளோம். பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் பெறுவதற்கு 16 இலட்சம் மாணவர்களுக்கு 6 ஆயிரம் ரூபா வீதம் வழங்கினோம். புதிதாக 30 ஆயிரம் பேரை அரச சேவைக்கு இணைக்க இருக்கிறோம். அமைச்சர்களின் பின்னால் சென்று தொழில் கேட்கத் தேவையில்லை.பரீட்சைில் அதிக புள்ளி பெறுபவர்களுக்கு தொழில் கிடைக்கும். அரச சேவையில் தமிழ்மொழியில் பணியாற்றுவோரின் குறைபாடு உள்ளது. பொலிஸிலும் தமிழ் போசுவோரின் குறைபாடு உள்ளது. உங்கள் பிள்ளைகளையும் அரச சேவையிலும் பொலிஸ் சேவையிலும் இணையுங்கள்.
எமது நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமாக நிலைநாட்டப்பட வேண்டும். முன்னர் பணம் செல்வாக்கிருந்தோருக்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அவ்வாறான ஒரு நாடு தேவையில்லையா? இன்று பேதமின்றி அனைவருக்கும் சமனாக சட்டம் நிறைவேற்றப்படுகிறது. அதனால் தான் பொலிஸ்மா அதிபருக்கு பொலிசுக்குப் பயந்து தலைமறைவாக நேரிட்டது.
லஞ்ச ஊழல் திணைக்களத்தினால் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.முன்னாள் முதலமைச்சர்கள் விளக்கமறியலில் உள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளின் புதல்வர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்படுகிறது. வரலாற்றில் முதன்முறையாக பொதுமக்களின் பணத்தை திருடாத வீண்விரயம் செய்யாத அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தை பாதுகாத்து பலப்படுத்த வேண்டும். நாம் திருடுவதில்லை. திருடியவர்களை தண்டிப்போம். முன்னர் இருந்தவர்கள் ஜனாதிபதியாக தெரிவான திகதியில் இருந்து அமைச்சராக தெரிவான தினத்தில் இருந்து திருடுவதற்குத் தான் திட்டம் தீட்டினார்கள். வடமத்திய முதலமைச்சர் 26 இலட்சம் ரூபாவை மோசடி செய்த காரணத்தால் அவருக்கு எதிராக 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தவறுகள் குறித்தும் விசாரணைகளையும் நடத்தி தண்டனை வழங்குவோம். கொலை,திருட்டு,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என அனைத்தையும் விசாரணை செய்வோம். தவறு செய்த அமைச்சர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் மக்களுக்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த நிலையை மாற்றியுள்ளோம்.
உள்ளுராட்சி சபைகளுக்கு குறைவான வருமானமே கிடைக்கிறது. முசலி பிரதேச சபை குறைந்த வருமானம் பெறும் சபையாகும். மன்னார் நகர சபைக்கு குறைந்த வருமானமே கிடைக்கிறது.ஆனால் அதிக பணிகள் உள்ளன. வீதிகளை நிர்மாணிக்க வேண்டும்.வடிகாண்களை சீரமைக்க வேண்டும்.பொதுமயானங்களை சீர்செய்ய வேண்டும். முன்பள்ளிகளை அமைக்க வேண்டும். ஆனால் எமது அரசாங்கத்திடம் நிதி உள்ளது. வடக்கு மாகாண வீதிகள் சீரமைக்க இந்த வருடம் 5 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளோம். மேலும் வடக்கில் 16 ஆயிரம் ஏக்கரில் தென்னங்கன்றுகளை நட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதற்கான சகல வசதிகளையும் வழங்குவோம். அந்த நிதியை யாருக்கு ஒதுக்க வேண்டும். உள்ளுராட்சி சபையிடம் நிதி இல்லாத போது மத்திய அரசு அதற்கான நிதியை வழங்கப்படும். உள்ளுராட்சி சபைகளிடம் இருந்து வரும் பரிந்துரைகளை ஆராய்ந்து நிதி ஒதுக்குவோம்.நிதியை ஒதுக்க முன்னர் யார் அந்த பரிந்துரைகளை அனுப்புகின்றனர் என்று ஆராய்வோம்.
மன்னார் நகர சபை தேசிய மக்கள் சக்தியின் கீழ் இருக்கும் உள்ளுராட்சி சபையெனின் அந்த பரிந்துரையை கண்ணை மூடிக்கொண்டு அனுமதிப்போம். ஆனால் ஏனைய கட்சியின் கீழ் உள்ள உள்ளுராட்சி சபைகள் எனின் ஆயிரம் தடவை ஆராய்வோம்.வீதிக்கு கொங்கிரீட் இட நிதி கோருவார்கள். வீதிக்கு கொஞ்சம் தான் பணம் செல்லும். அதிக தொகையை சுருட்டிக் கொள்வார்கள். மத்திய அரசாங்கம் திருடாமல் பணத்தை சேகரித்து வைத்த பணத்தை திருடுவதற்காக மன்னாருக்கு அனுப்ப வேண்டுமா? மத்திய அரசு திருடாவிடின் உள்ளுராட்சி சபையும் அவ்வாறே இருக்க வேண்டும். நகர சபை,மற்றும் பிரதேச சபைகளை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக் கொடுங்கள்.இல்லாவிடின் மத்திய அரசு திருடாத நிலையில் உள்ளுராட்சி சபை திருடும் நிலை ஏற்படும். தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரும் வாக்களியுங்கள்.எதிர்வரும் மே 6 ஆம் பலமான மக்கள் ஆணையை பெற்றுத் தாருங்கள். இங்கு என்ன நிலைமை என்ன என்று கேட்டேன். ‘ நல்லம்’ என்றார்கள். பொதுத்தேர்தலை விட சிறந்த பெறுபேறு இந்த தேர்தலில் கிடைக்கும். நாடு முன்னேற்றப் பாதைக்கு வந்துள்ளது. பழைய தோல்வியடைந்த பாதையில் இனியும் சென்று பயனில்லை.
அமைச்சர் ராமலிங்கம் சந்ரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜகதீஸ்வரன் ஆகியோரும் இங்கு உரையாற்றியதோடு உள்ளுராட்சி சபை வேட்பாளர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
(-வெற்றி நமதே.. ஊர் எமதே.. காலி வெற்றிப் பேரணி – 2025.04.07-) செப்டம்பர் 21 வரையிருந்த அரசியல் பாதையை மாற்றியமைத்து தனித்துவமான அரசியல் தீர்மானமொன்றை மக்கள் எடுத்தனர். பழைய தோல்வியுற்ற அரசியல் முகாம்களைத் தோற்கடித்து, அதிகாரத்தை சாதாரண மக்களுக்கு அளிக்கும் வெற்றியாக அது அமைந்தது. பின்னர், அந்த வெற்றியை மேலும் வலுப்படுத்தி, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவர்கள் எங்களுக்கு மற்றொரு விசேடமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்கள். அதேபோன்று உள்ளுராட்சித் தேர்தல் மே 6 ஆம் திகதி நடைபெற […]
(-வெற்றி நமதே.. ஊர் எமதே.. காலி வெற்றிப் பேரணி – 2025.04.07-)
செப்டம்பர் 21 வரையிருந்த அரசியல் பாதையை மாற்றியமைத்து தனித்துவமான அரசியல் தீர்மானமொன்றை மக்கள் எடுத்தனர். பழைய தோல்வியுற்ற அரசியல் முகாம்களைத் தோற்கடித்து, அதிகாரத்தை சாதாரண மக்களுக்கு அளிக்கும் வெற்றியாக அது அமைந்தது. பின்னர், அந்த வெற்றியை மேலும் வலுப்படுத்தி, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவர்கள் எங்களுக்கு மற்றொரு விசேடமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்கள்.
அதேபோன்று உள்ளுராட்சித் தேர்தல் மே 6 ஆம் திகதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தல் மார்ச் 2023 இல் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் முந்தைய அரசாங்கம் இந்தத் தேர்தலை ஒத்திவைத்தது. சிறிய தேர்களை ஒத்திவைத்தாலும் பெரிய தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்று மக்களிடம் கூறினோம். அதை உண்மையாக்கும் வகையில் இந்த நாட்டின் அரசியலை நாங்கள் முழுமையாக மாற்றியமைத்தோம்.
இந்த உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு சில விடயங்களை நிறைவுசெய்ய வேண்டியிருந்தது. முன்னர் பெறப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்யவும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதற்கான புதிய சட்டத் திருத்தமொன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டியிருந்தது, தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நமது அரசாங்கத்தின் முதல் திருத்த சட்ட மூலமாக உள்ளுராட்சித் தேர்தல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. பின்னர் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு சென்றது. திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து, ஏப்ரல் 6 அல்லது 7 ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்த முடியும்.
புத்தாண்டுக்கு முன்பு தேர்தலை நடத்த நாம் விரும்பினோம். ஆனால் எதிர்க்கட்சிகள் தேர்தலை ஒத்திவைக்குமாறு தேர்தல் ஆணைக் குழுவை கோரியிருந்தன. அதன்படி, தேர்தல் மே 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் நாங்கள் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியவாறு தேர்தல் ஆணைக்குழு செயல்பட்டிருந்தால், இந்நேரம் உள்ளுராட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்கும். எங்களுக்கு தொடர்ந்து தேர்தல்களை நடத்த வேண்டிய தேவையில்லை. வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மாவட்ட அளவில் அதிக அளவில் பணத்தை வழங்கியுள்ளோம். டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்பு அந்தப் பணத்தைக் கொண்டு நாம் பணியாற்ற வேண்டும். இப்போது, அந்த நடவடிக்கைகள் மே 6 ஆம் திகதி வரை தாமதிக்க நேரிட்டது. ஆனால், தேர்தல் ஒத்திவைக்கப்படுவதால் ஒரு கடினமான அரசியல் சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்பதை எதிர்க்கட்சி நினைவில் கொள்ள வேண்டும்.
இலங்கை வரலாற்றில் இந்தத் தேர்தலைப் போல அரசியலில் இவ்வளவு தெளிவான பிளவு இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை. இன்று, நாட்டின் அரசியல் இரண்டு முகாம்களாக பிரிந்துள்ளது. அந்த இரண்டு முகாம்களும் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நமது அரசாங்கமும், ஆங்காங்கு ஒன்றிணைந்துள்ள இடிபாடுகளும் அந்த இரண்டு முறைகள் ஆகும். அவர்களின் தேர்தல் மேடை, அவர்களின் பாராளுமன்ற உரை, பாராளுமன்றத்திற்கு வெளியே அவர்கள் ஆற்றும் உரைகள் ஆகியவற்றை நோக்கும் போது, அனைவரின் எதிர்ப்பும் தேசிய மக்கள் சக்திக்கு என்பதை உணரலாம்.
செப்டம்பர் 21 ஆம் திகதி பெற்ற வெற்றியை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காக தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பை வெற்றிபெறச் செய்வதா இன்றேல் அந்தப் பயணத்தைத் திருப்புவதற்காக ஒன்றிணைந்துள்ள இடிபாடுகளின் குவியலை முன்னோக்கிக் கொண்டு செல்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில், இந்த நாட்டு மக்கள் பழைய அரசியல் முகாம்களை தீர்க்கமாக தோற்கடித்தனர். அந்தத் தோல்விக்குப் பிறகு பெற்ற வெற்றியை முன்னோக்கி எடுத்துச் செல்வதா இல்லையா என்பதை மக்கள் இப்போது முடிவு செய்ய வேண்டும். நம் நாட்டு மக்கள் நாட்டிற்காக முன்வைத்த காலை ஒரு அங்குலமேனும் பின்நோக்கி வைக்க மாட்டார்கள் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சியை முறையாக நிலைநாட்ட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நாடு இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு, நம் நாட்டில் சட்டம் பலவீனமானவர்களுக்கு எதிராக மட்டுமே செயற்படுத்தப்பட்டது. சட்டம் ஒரு சிலந்தி வலையைப் போன்றது. பெரியவர்கள் அதனை கிழித்துக் கொண்டு செல்வர் சிறியவர்கள் பிடிபடுகின்றனர். எனவே, இன்று நாம் பலவீனமானவர்களுக்கு ஒரு சட்டம், அதிகாரமுள்ளவர்களுக்கு ஒரு சட்டம் என்ற நிலையை மாற்றியுள்ளோம். இலங்கை வரலாற்றில் ஒருபோதும் பொலிஸ்மா அதிபர் தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியம் இதற்கு முன்பு இருந்ததில்லை. இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. அந்த நிறுவனங்களுக்கு நாங்கள் சுதந்திரமாக செயற்பட இடமளித்துள்ளோம். சட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதை மட்டுமே நாங்கள் கவனிக்கிறோம். ஆனால் முன்பிருந்த , அரசாங்கங்கள் அதிகாரத்தில் இருப்பவர்களைப் பாதுகாக்க தலையிட்டன. குற்றம், மோசடி அல்லது ஊழல் செய்திருந்தால், அவரது அந்தஸ்து என்னவாக இருந்தாலும் சட்டம் அமுல்படுத்தப்படும் ஒரு ஆட்சியை முதன் முறையாக நாங்கள் உருவாக்கியுள்ளோம். எனவே, தேசிய மக்கள் சக்தி என்பது இந்த நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் தரப்பாகும். எதிர்காலத்தில் இந்த நாட்டின் பிள்ளைகளுக்கு நம்பகமான நாட்டைக் கட்டியெழுப்பும் ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தி தான் என்பதை நினைவுபடுத்த வேண்டும்.
அது மட்டுமல்லாமல், நமது நாட்டின் அரசியல் கலாச்சாரத்திலும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளோம். இலங்கையில் முதன்முறையாக, பொதுமக்களின் பணத்தில் ஒரு சதம் கூட திருடாத அல்லது வீணாக்காத ஒரு அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளது. இந்த நாட்டில் மக்களின் பணத்தைத் திருடாத அல்லது வீணாக்காத ஒரு அரசாங்கம் நமக்குத் தேவை.
நாம் நாட்டைக் பொறுப்பேற்ற போது, பொருளாதாரம் மிகவும் கடினமான நிலையில் இருந்தது. ஆனால், படிப்படியாக நமது நாட்டின் பொருளாதாரத்தை ஸ்தீர நிலைக்குக் கொண்டு வந்துள்ளோம். நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்யாமல் நாம் எதுவும் செய்ய முடியாது. எனவே, எங்கள் முதல் முயற்சி பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதாகும். இன்று நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான பல சமிக்ஞைகள் காணப்படுகின்றன. டிசம்பர் 21 ஆம் திகதி கடன் மறுசீரமைப்பு திட்டத்தை நாங்கள் முழுமையாக நிறைவுசெய்தோம். அதே சமயம், நமது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டது. அதே நேரத்தில், தடைபட்டிருந்த வெளிநாட்டு திட்டங்களை மீண்டும் தொடங்க முடிந்துள்ளது.
மேலும், டொலரின் பெறுமதி 300 ரூபாய்க்கு நெருங்கிய அளவில் பேணுவதில் எமது அரசாங்கம் வெற்றி பெற்றது. 35%-40% ஆக இருந்த வங்கி வட்டி விகிதங்கள், இன்று 10% விட குறைவாக ஒற்றை இலக்கத்தில் பராமரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, குறைந்த வட்டி விகிதத்தில் கைத்தொழிலாளர்கள், வர்த்தகர்களுக்கு கடன்களைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அன்று, நாட்டில் பணவீக்கம் 70% -75% ஆக உயர்ந்தது. இன்று நாம் அதை குறைக்க முடிந்துள்ளது. இன்று முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய பயப்படுவதில்லை. சுற்றுலாத் துறை மிகப் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
அதன்படி, நமது நாட்டின் பொருளாதாரத்தின் மீது உலகில் உள்ள அனைவரினதும் நம்பிக்கையும் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களும் பயனடைய வேண்டும். அதற்காக அஸ்வெசும பயன்களை அதிகரித்தல், ஓய்வூதிய கொடுப்பனவுகளை அதிகரித்தல் மற்றும் அண்மைய வரலாற்றில் மிகப்பெரிய அதிகரிப்பபாக அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரித்தல் உள்ளிட்ட சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்காக 33,000 கோடி ரூபாய் செலவிடப்படும். இந்தப் பணம் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்று சிலர் எங்களிடம் கேட்கிறார்கள். பொதுமக்களின் ஒவ்வொரு ரூபாவையும் கவனித்து, அதைப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கைக்குள் இதைச் செய்கிறோம்.
நாம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 16 இலட்சம் மாணவர்களுக்கு பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்ய 6,000 ரூபாவை இலங்கையில் முதல் முறையாக வழங்கினோம். மேலும், மஹபொல புலமைப்பரிசில் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவுக்காக வழங்கப்படும் தொகை அதிகரிக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு பிரஜையையும் பாதுகாக்கும் பொறுப்பை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்.
பாரிய பொருளாதார மாற்றங்கள் அன்றி, சிறிய திருப்பத்தின் மூலம் பெறும் பணத்தை படிப்படியாக மக்களின் நலனுக்காக செலவிடத் தொடங்கியுள்ளோம். நாங்கள் அத்தோடு நிற்கவில்லை. இந்த ஆண்டு, மூலதனச் செலவினங்களுக்காக 1400 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளோம்.
இந்தப் பணம் வீதிகள், வடிகால் கட்டமைப்பு ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கு செலவிடப்படுகிறது. இலங்கையின் வரலாற்றில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மிகப்பாரிய மூலதனச் செலவை இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கியுள்ளோம். இந்தப் பணத்தை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் செலவழிக்க வேண்டும்.
அவ்வாறாயின் இந்த நாடு மீண்டும் பணியிடமாக மாற்றப்பட வேண்டும். இந்த 1400 பில்லியன்களை நமது நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் முதலீடு செய்தால், நாம் 3%-4% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைய முடியும்.
மேலும், தற்போது ஒரு சாதகமற்ற புவிசார் அரசியல் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. நமது ஏற்றுமதியில் சில தாக்கத்தை ஏற்படுத்தும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதைத் தீர்க்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து, அதைப் பற்றி கலந்துரையாடி வருகிறோம். அத்தகைய சவாலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், அதைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வது குறித்தும் நாங்கள் திட்டங்களை வகுத்துள்ளோம்.
இது நாம் எதிர்பார்க்காத ஒரு சூழ்நிலை என்றாலும், நாம் அதை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் நமது பொருளாதாரம் மிகச் சிறந்த முன்னேற்றத்தைக் காட்டுகிறது. அதன்படி, 2025 ஆம் ஆண்டு இலங்கையில் பல துறைகளில் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதங்களைப் பதிவு செய்யும் ஆண்டாக இருக்கும்.
அதில் முதலாவதாக, 2025 ஆம் ஆண்டு இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஆண்டாக இருக்கும். மேலும், 2025 ஆம் ஆண்டு இலங்கையில் அதிக மூலதனச் செலவினங்களைக் கொண்ட ஆண்டாக இருக்கும். மேலும், 2025 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருமானத்தை ஈட்டும் ஆண்டாக இருக்கும்.
சர்வதேச அளவில் உருவாகியுள்ள சூழ்நிலை அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலிலோ அல்லது முடிவுகளிலோ ஒரு பிரச்சினையாக இல்லை. இங்கே ஒரு புவிசார் அரசியல் பிரச்சினை எழுந்துள்ளது. நாம் அந்தப் பிரச்சினையை ஒரு கட்சியாக அல்ல, ஒரு நாடாக எதிர்கொள்ள வேண்டும்.
எனவே, இந்த நாட்டின் அனைத்து மக்களும் இதுபோன்ற ஒரு பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்க தங்களால் இயன்றவரை தலையிட வேண்டும் என்றும், அத்தகைய பிரச்சினையை எதிர்கொள்ள ஒரு தேசமாகத் தயாராக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். எந்தவொரு நாட்டிற்கும் தமது நாட்டின் வரி தொடர்பில் தீர்மானிக்க உரிமை உண்டு.
அந்த உரிமையை நாம் மறுக்க முடியாது. இது எங்களை குறிவைத்து நடத்தப்பட்ட அல்லது எங்களைப் பின்தொடர்ந்த வந்த விடயம் அல்ல. ஒரு பொதுவான நிகழ்வு. அதன்போது சில பாதகமான சூழ்நிலைகள் ஏற்படும் அபாயத்தை நாங்கள் எதிர்கொள்கிறோம். இன்று காலை சர்வதேச நாணய நிதியத்துடனும் நான் கலந்துரையாடினேன்.
இந்த ஆண்டு நாம் அடைய வேண்டிய இலக்குகளை சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ளது. உருவாகியுள்ள புதிய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய பரிமாணங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்ற விடயத்தின் மீது நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இந்த நடவடிக்கைகளுக்கு அதிகபட்ச ஆதரவை நாங்கள் பெற்றுக்கொள்வோம்.
இந்தியப் பிரதமரின் வருகையின் போது, சிறந்த பொருளாதார சாதனைகளை அடைய நாங்கள் முயற்சித்தோம். இந்த ஆண்டு நமது நாட்டிற்கு சுமார் ஆயிரம் கோடி நன்கொடை வழங்க அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும், சம்பூரில் 120 மெகாவோட் மின் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டது.
இந்தியா டிஜிட்டல் மயமாக்கலில் மிகப் பாரிய வெற்றியை பெற்றுக்கொண்டுள்ள நாடு. இந்தியப் பிரதமர் டிஜிட்டல் மயமாக்கலில் எங்களுக்கு உதவவும், கிழக்கு மாகாணத்தில் பல துறைகளில் உதவி வழங்கவும், மருந்து உற்பத்தியில் ஆதரவை வழங்கவும் ஒப்புக்கொண்டார்.
நாம் இதில் எதையும் தனிப்பட்ட எமது அரசாங்கத்தின் நலனுக்காகச் செய்யவில்லை, மாறாக இந்த நாட்டை வளமான நாடாக மாற்றுவதற்காகவே செய்கிறோம். பாதுகாப்பு ஒப்பந்தம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. ஆனால் இப்போது நடக்கும் விடயங்களே அதில் உள்ளன.
கூட்டு நடவடிக்கைகள் மற்றும் கூட்டுப் பயிற்சிகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. அவற்றை முறைப்படுத்த இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.இந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும். அதிக திறன் மற்றும் நிபுணத்துவம் கொண்ட நாடுகளிடமிருந்து நாம் உதவிகளைப் பெற வேண்டும்.
கடந்த எழுபத்தாறு ஆண்டுகளில் நமது நாட்டை தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முன்னணிக்குக் கொண்டுவர இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், நாம் அதைச் செய்ய வேண்டி இருக்காது. ஆனால் உலகம் தொழில்நுட்பத்தில் முன்னேறும்போது, எதையும் உள்வாங்காத ஒரு நாடாக நாம் இருந்தோம்.
எனவே நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், அந்த முன்னேற்றத்தை அடைந்த நாடுகளின் ஆதரவைப் பெறுவதுதான். நாம் யாரையும் வாங்க முடியாது. இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த வாழ்க்கையையும், நாட்டிற்கு பெருமையையும் உருவாக்கும் நோக்கத்துடன் இதையெல்லாம் செய்கிறோம் என்பதைக் கூற வேண்டும்.
(-Colombo, April 1, 2025-) – புத்தல பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை நாட்டின் வெற்றிகள் உள்ளூராட்சி சபைகளின் ஊடாக கிராமத்திற்கு கொண்டு வரப்படும் என்றும், அதற்காக அச்சம், சந்தேகமின்றி நிதி ஒதுக்கக்கூடிய பிரதேச பொறிமுறை அவசியம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைகளை நிறுவ வேண்டும் என்பதோடு, பிரதேச அரசியல் அதிகார தரப்பின் முன்மொழிவுகள் ஜூலை-ஒகஸ்ட் மாதத்திற்குள் மத்திய அரசாங்கத்திடம் வழங்க வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி, […]
(-Colombo, April 1, 2025-)
– புத்தல பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை
நாட்டின் வெற்றிகள் உள்ளூராட்சி சபைகளின் ஊடாக கிராமத்திற்கு கொண்டு வரப்படும் என்றும், அதற்காக அச்சம், சந்தேகமின்றி நிதி ஒதுக்கக்கூடிய பிரதேச பொறிமுறை அவசியம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைகளை நிறுவ வேண்டும் என்பதோடு, பிரதேச அரசியல் அதிகார தரப்பின் முன்மொழிவுகள் ஜூலை-ஒகஸ்ட் மாதத்திற்குள் மத்திய அரசாங்கத்திடம் வழங்க வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி, அதன்படி
கிராமத்திற்கு தேவையான நிதி நவம்பர் மாதமளவில் வழங்கத் தயாரெனவும் கூறினார்.
“வெற்றி நமதே- ஊர் எமதே” வெற்றிப் பேரணித் தொடரின் நேற்று (31) புத்தல பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டிலும் தேசிய மக்கள் சக்தியினால் வெற்றிபெற முடிந்தது. எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 10 உள்ளூராட்சி மன்றங்களையும் வெற்றிகொள்வோம் என்பதில் சந்தேகமில்லை. எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் இந்த நாட்டு மக்களுக்கு தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்வதை தவிர ஏனைய தெரிவுகள் இருக்காது. எனவே, இந்நாட்டின் எதிர்காலத்தையும், மக்களின் எதிர்காலத்தையும் பொறுப்பேற்றுகொள்ள இருக்கின்ற ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தியாகும்.
இந்த நாட்டில் முன்பிருந்த ஆட்சியாளர்களிடமிருந்து அதிகாரத்தை மாற்ற நீண்ட காலமாக மக்கள் பல வழிகளில் முயன்றனர். ஆனால் அவதூறு, பொய் தகவல், வன்முறை கும்பல் போன்ற பலவற்றைச் செய்து நீண்டகாலம் அதிகாரத்தை தங்கள் கைகளில் வைத்துக் கொண்டார்கள். இதன் இறுதி விளைவாக நாடு வங்குரோத்தடைந்தது. அவர்களால் முடிந்த எல்லாவிதமான அழிவுகளையும் நாட்டுக்கு செய்தார்கள். அதற்கு மறு திசையில் அவர்கள் வளர்ந்தனர்.
மேலும் அவர்கள் வீடுகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மதுபான விற்பனை நிலைய அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொண்ட விதம் தெரியவருகிறது. வீடுகளை எரிந்து விட்டதாக கூறி பணம் பெற்றமை தொடர்பிலும் எதிர்காலத்தில் தெரியவரும். தனமல்வில மக்கள் வன்முறை கும்பல்களுக்கு அஞ்சாமல் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக தலையீடு செய்தனர். அவ்வாறு பெரும்பணியாற்றி அமைத்துக்கொண்ட அரசாங்கமே இன்று இருக்கிறது. இந்த அரசாங்கம் கவிழப்போவதில்லை. கவிழ்க்கவும் எவரும் இல்லை. நாம் இந்த நாட்டை கட்டியெழுப்பிய பின்பே திரும்பிப் பார்ப்போம்.
மிகக் குறுகிய காலத்தில் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பல பணிகளைச் செய்துள்ளோம். பொருளாதார ரீதியாக ஸ்திரமற்ற ஒரு நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியாது. இந்த 6 மாதங்களுக்குள் நாட்டை பொருளாதார ரீதியாக ஸ்திரப்படுத்தியுள்ளோம். நீண்ட காலத்திற்கு வட்டி விகிதத்தை தனி இலக்கமாக பேணிச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்திரமற்ற பொருளாதாரம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த 76 வெளிநாட்டுத் திட்டங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வங்கித் துறையில் நம்பிக்கை ஏற்பட வேண்டும். நாடு ஸ்திரப்படுத்தப்பட்டிருப்பதால் இன்று மீண்டும் முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருகின்றனர். கொழும்பு நகரில் மாத்திரம் பாரிய திட்டங்களுக்காக 15 காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முதலீட்டாளர்கள் நாட்டின் மீது நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். முதலீட்டாளர்கள் தங்கள் திட்டங்களை கமிஷன் வழங்காமல் ஆரம்பிப்பதற்கான சூழலை உருவாக்கியுள்ளோம். குறைந்த விலையில் மின்சாரம் வாங்குகிறோமே தவிர, முன்னைய அரசாங்கங்களைப் போல அதிக விலைக்கு கொடுத்து மின்சாரம் கொள்வனவு செய்வதில்லை.
வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றில் பெருமளவான நிதி வீதிகள், கால்வாய்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பணம் இருந்தாலும், வேலை செய்யும் அளவுக்கு அரச அதிகாரிகள் இல்லை. அரச துறையின் உயர் பொறிமுறை வலுவாக இருந்தபோதிலும், வினைத்திறனான அரச சேவைக்காக 30,000 புதிய அரச ஊழியர்களை உள்வாங்க தீர்மானம் எடுத்துள்ளோம். அரச தொழில் பெற அரசியல்வாதியை பின் தொடரும் காலம் முடிந்துவிட்டது. இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால், எமக்கு வலுவான அரச சேவையும் அவசியம்.
அரச ஊழியர்களுக்கு அதிகபட்ச சம்பளம் அதிகரிக்கப்படுள்ள அதேநேரம், எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்கிறோம். தற்போது வழங்கப்படும் 10 இலட்சம் காப்புறுதி 2 1/5 இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. வாகன அனுமதி இல்லை. எரிபொருள் ஒதுக்கீடு அரைவாசியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு அரசியல் தலைவர்கள் என்ற வகையில் நாம் முன்னுதாரணமாக செயற்பட்டுள்ளோம். கடந்த காலங்களில் எம்.பி.க்கள் எம்.பி சம்பளத்துடன் ஓய்வூதியமும் பெற்று வந்தனர்.
குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம், 4 இலட்சம் குடும்பங்களுக்கு புதிதாக அஸ்வெசும வழங்கப்படும். அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது, ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறான நன்மைகள் எதுவும் கிடைக்காத 8 இலட்சம் பேர் இந்நாட்டில் உள்ளனர். இவ்வருடத்தில் அவர்களுக்கு ஐயாயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் 2500 ரூபாவிற்கு வழங்கப்படவுள்ளது. மேலும், இந்த ஏப்ரல் மாதம் முதல் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்க தீர்மானித்துள்ளோம். மக்களை பாதுகாக்கவே அரசாங்கம் இருக்க வேண்டும். இதற்கு முன்பு இவ்வாறான அரசாங்கங்கள் இருந்ததா?
விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர நிவாரணம் 25,000 ஆக அதிகரிக்கப்பட்டது. எதிர்காலத்தில் வயல்களில் மாற்றுப் பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு இம்முறை சிறு போகத்தில் உர நிவாரணமாக 15,000 ரூபா வழங்கப்படும். நெல்லுக்கு உரிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொனராகலை மாவட்டத்திலுள்ள அனைத்து வயல்களிலும் இம்முறை சிறு போகத்தில் பயிர்ச் செய்கை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நமது நாட்டை இங்கிருந்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமானால், பிள்ளைகளுக்கு புதிய பொருளாதார தேவைகளை வழங்க வேண்டும். இந்த நாட்டை கட்டியெழுப்ப, அன்னிய செலாவணியை ஈட்டுவது அவசியம். நாடு தற்போது சுற்றுலாத் தொழில், ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து டொலர்களைப் பெற்றுக்கொள்கிறது. மேலும் நாட்டுக்கு தேவையான டொலர் தொகையை ஈட்டுவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்.
டொலர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதை தவிர்க்க நம்மால் முடிந்த அனைத்தையும் உற்பத்தி செய்ய வேண்டும். நெல் விளையக்கூடிய ஒவ்வொரு காணியிலும் நெல் பயிரிடுமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம். தென்னைச் செய்கையை மேம்படுத்துவதற்கு உர நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் பல ஏக்கர்களில் தென்னைச் செய்கைக்காக 5000 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீனி இறக்குமதிக்கு பெருமளவில் டொலர்களை செலவிடுகிறோம். பெலவத்தை சீனி நிறுவனம் மட்டும் VAT வரி உள்ளடங்களாக 394 கோடி ரூபாவை கடனாக செலுத்த வேண்டியுள்ளது. இன்றைய நிலையில் பெலவத்தை சீனி தொழிற்சாலை சரிவடையச் செய்யப்பட்டுள்ளது. எனவே, சீனி உற்பத்தி செய்யும் போது, உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் நாட்டிலிருந்து ஒரு கிலோ சீனியை 190 ரூபாவிற்கு கொண்டு வர முடியும். எனேவ நுகர்வோரை பற்றி சிந்தித்து உற்பத்தி செய்வதை விட இறக்குமதி செய்வது இலாபமானது. இப்படி தொழிற்சாலைகளை நடத்த முடியுமா? இவ்வாறு சரிவடைந்த நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்ப கால அவகாசம் வழங்குங்கள்.
ஊழியர் பிரச்சினை நியாயமான முறையில் தீர்க்கப்படுவதோடு சீனி உற்பத்தி நிறுவனத்தை இலாபமீட்டும் நிலைக்குத் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிறுவனங்களுக்காக நாம் மேலும் கடன்பட வேண்டுமா? இந்த நிறுவனங்களின் சொத்துக்கள் குறைவு ஆனால் கடன் அதிகம். இந்த நிறுவனங்களை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதன் மூலம் இந்த பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். திருட்டு, மோசடி, ஊழல் என்பதே பிரச்சினைகளுக்கு காரணமாக காணப்பட்டது.
சுற்றுலாத் துறையில் இருந்து நாட்டுக்கு கிடைக்கும் டொலர்களின் எண்ணிக்கை பெருமளவானது. 2025 அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகைத் தந்த ஆண்டாக மாறும். மார்ச் 30ஆம் திகதி வரை 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் வந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் 30 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருவார்கள். பெலவத்தையை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாத்துறையை மேம்படுத்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். கட்டுநாயக்க விமான நிலையத்தை வினைத்திறனாக்கும் பணிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
அதேபோல், 2025 ஆம் ஆண்டு பொருட்கள் மற்றும் சேவைகளின் விற்பனை மூலம் அதிக ஏற்றுமதி வருவாய் ஈட்டப்படும் ஆண்டாக மாறும். 2030க்குள், 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை இலக்காகக் கொண்டு திட்டங்களைத் தயாரித்துள்ளோம். மேலும், 2025ஆம் ஆண்டு வெளிநாட்டு தொழிலாளர்கள் அதிக அளவு டொலர்களை அனுப்பும் ஆண்டாக மாறும். இவை நல்ல விடயங்கள் அல்லவா? 2021, 2022-2023 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட நிலைமை மீண்டும் ஏற்படுவதற்கு இடமளியோம்.
மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் கிராமத்துக்கு வர வேண்டும். நாட்டின் வெற்றிகள் கிராமத்தை வந்தடைவதற்கு உள்ளூராட்சி மன்றம் அவசியம். ஒன்றோடொன்று இணைந்திருக்கும் பிரதேச சபைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டாமா? அடுத்த வரவு செலவு திட்டத்தை நவம்பர் மாதம் சமர்பிப்போம். ஜூன் மாதம் முதல் அதற்கான முதற்கட்ட முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வோம். அதன்போது பிரதேச அரசியல் அதிகார தரப்பினால் மத்திய அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். வரவு செலவுத் திட்டம் முடியும் வரை தேர்தலை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தன. ஆனால் மே 6 ஆம் தேதி தேர்தல் திகதி மிகவும் தாமதமானது. தேர்தலை மட்டும் நடத்திக்கொண்டிருக்க முடியாது. ஜூன் 02 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைகள் நிறுவப்பட வேண்டும். ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதத்திற்குள் அவற்றின் முன்மொழிவுகள் மத்திய அரசாங்கத்திடம் வழங்கப்பட வேண்டும். நவம்பர் மாதமளவில் தேவையான பணத்தை வழங்குவோம்.
நான் வடமாகாணத்திற்கு சென்ற போது, வடமாகாணத்தில் பழுதடைந்த வீதிகளை புனரமைக்க பணம் தேவை என மாவட்ட அபிவிருத்தி குழு கலந்துரையாடலில் யோசனை முன்வைக்கப்பட்டது. பழுதடைந்துள்ள வீதிகளை சீரமைக்க இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 5000 இலட்சம் ஒதுக்கியுள்ளோம். இந்த 5000 இலட்சத்தை செலவழித்து இந்த டிசம்பருக்குள் வீதிகளை அமைக்க வேண்டும் என்பதுதான் இப்போது அவர்களுக்கு சவாலாக உள்ளது. அதற்கு பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளின் ஆதரவு தேவை. அநுராதபுரம் சென்றபோது, ராஜாங்கனை குளம், நாச்சதுவ குளம், ஹுருலுவெவ உள்ளிட்ட நீர்ப்பாசன முறைகளை நவீனப்படுத்த பணம் தேவை என்று கூறினர். அவற்றை சீரமைக்க வரவு செலவுத் திட்டத்தில் 3000 இலட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு பேசிவிட்டு, 3,000 இலட்சம் அதிகம், 2,000 இலட்சம் போதுமானது என்று திறைசேரிக்கு அறிவித்துள்ளனர். அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அழைத்து, மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை கூறினேன். இந்த டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினேன். மேலும், அமைச்சுக்களின் செயலாளர்களையும் வரவழைத்து டிசம்பர் 31ஆம் திகதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று பணித்திருக்கிறேன்.
இப்போது, பணம் இருக்கிறது, வேலை செய்ய வேண்டும். அதற்கு கிராமத்திற்குள் வலுவான பொறிமுறையொன்று தேவை. முன்பெல்லாம், 10 இலட்சம் செலவாகும் வீதிக்கு 20 இலட்சம் வழங்க வேண்டியிருக்கும். இப்போது 10 இலட்சம் கொடுத்தால் போதும். அன்றைய பணத்திற்கு முன்பை விட இரண்டு மடங்கு அதிகமாக பணியாற்ற முடியும். ஆனால் இம்முறை பணம் அதிகரித்துள்ளதால் பணிகளை சிறப்பாகச் செய்ய முடியும். அச்சமின்றி பணத்தை ஒதுக்கக்கூடிய நல்ல பிரதேச பொறிமுறையொன்று எமக்குத் தேவைப்படுகிறது. உள்ளூராட்சி சபையொன்றின் அதிகாரத்தை வேறு யாராவது கைப்பற்றி யோசணைகளை அனுப்பினால் அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்க வேண்டியிருக்கும். அப்படி நடந்தால், பணத்தை ஒதுக்க முடியாது. எங்களுக்கு நம்பிக்கையான குழுவை அனுப்புங்கள். முன்னைய ஆட்சியாளர்கள் செய்த செயற்பாடுகள் காரணமாக வேறு தரப்புகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
76 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மக்களின் பணத்தை திருடாத அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் வேலை கிடைத்தால் அரசியல்வாதிகளுக்கும் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டும். வீதி அமைக்கும் போது கூட அமைச்சரின் வீட்டுக்கு ஒரு தொகை சென்றது.அரசாங்க அதிகாரிகளும் மோசடி, ஊழலில் ஈடுபடுவதாக எங்களுக்கு தகவல் வருகிறது. அது தெரியவரும் பட்சத்தில், கஷ்டங்களுடன் தேடிக்கொண்ட தொழிலை மிகக் குறுகிய காலத்தில் இழக்க நேரிடும். அப்படியல்லவா நாடு சீரமைக்கப்பட வேண்டும்? பொலிஸ் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பலர் ஊழல் காரணமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அரசியல் அதிகார தரப்பு திருடிக்கொண்டிருக்கும் போது, அரசாங்க அதிகாரிகளை திருட வேண்டாம் என்று சொல்ல முடியாது. அந்த பொறிமுறையை நாங்கள் சரியாக சீரமைத்திரு்கிறோம். மீண்டும் ஊழல்வாதிகள் ஆட்சி அமைக்க இடமளிக்கப்படாது. மத்திய அரசாங்கத்தின் திருட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக அதிகளவிள் சுரண்டப்பட்ட பிரதேச சபைகளையும் தூய்மைப்படுத்தி எங்களிடம் தாருங்கள்.
மோசடி செய்பவர்கள், ஊழல்வாதிகள் மீது ஏன் வழக்குத் தொடரவில்லை என்ற கேள்வி இன்னும் கேட்கப்படுகிறது. மோசடி செய்பவர்களை, ஊழல்வாதிகளை தண்டிக்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லை. நீதிமன்றங்கள் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்து தண்டனை வழங்க வேண்டும். அதற்கான முழு சுதந்திரமான அதிகாரத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளோம். இதுபோன்ற மோசடி மற்றும் ஊழல் செய்பவர்கள் மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. முன்னைய ஆட்சியாளர்களுக்குச் சொந்தமான செவனகல, கதிர்காமம் வீடுகள் தொடர்பிலும் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஈஸ்டர் தாக்குதல், கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே மூன்று முன்னாள் அமைச்சர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் தலைமறைவாகியுள்ளார். எவ்வளவு காலம் மறைந்திருப்பார்கள் என்று பார்ப்போம். முன்னாள் பொலிஸ் மா அதிபரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாடு, அதிகாரம், பதவி, செல்வம் பற்றிய சிந்தனை இல்லாமல் செயல்பட்டவர்களுக்கு எதிராக சட்டம் செயல்படும் நாடு உருவாகியுள்ளது.