(-2025.08.26 – Colombo-) பொதுமக்களின் கோடிக்கணக்கான ரூபாய் செல்வத்தை அழிப்பதற்கான வரமாக அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்த இனி இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். அலரி மாளிகையில் நேற்று (26) பிற்பகல் நடைபெற்ற தேசிய பிக்கு தின நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். தங்களுக்கு வழங்கப்படும் அதிகாரத்தை எல்லையற்ற செல்வத்தைக் குவித்த மற்றும் பொதுமக்களின் பணத்தை விருப்பப்படி செலவிடும் நாசகார பாதையை மாற்றியமைப்பதற்கு உறுதியுடன் செயல்படுவேன் என்று இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி, […]
(-2025.08.26 – Colombo-)
பொதுமக்களின் கோடிக்கணக்கான ரூபாய் செல்வத்தை அழிப்பதற்கான வரமாக அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்த இனி இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
அலரி மாளிகையில் நேற்று (26) பிற்பகல் நடைபெற்ற தேசிய பிக்கு தின நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
தங்களுக்கு வழங்கப்படும் அதிகாரத்தை எல்லையற்ற செல்வத்தைக் குவித்த மற்றும் பொதுமக்களின் பணத்தை விருப்பப்படி செலவிடும் நாசகார பாதையை மாற்றியமைப்பதற்கு உறுதியுடன் செயல்படுவேன் என்று இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி, எவ்வளவு தான் கோசம் எழுப்பினாலும் அந்தப் பயணத்தை மாற்ற முடியாது என்றும், தற்போதைய அரசாங்கம் அந்தப் பொறுப்பை நிறைவேற்றாவிட்டால் எந்த அரசாங்கமும் அதனை மேற்கொள்ளாது என்றும் தெரிவித்தார்.
எனவே, மகா சங்கத்தினர் உட்பட அனைவரும் துணிச்சல், நம்பிக்கை மற்றும் விடாமுயற்சி ஆகிய பண்புகளுடன் சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைந்து முன்னேறுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
“காலோ அயன் தே” – “இது உங்களுக்கான நேரம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த நிகழ்வுக்கு நாடு முழுவதிலுமிருந்து சுமார் ஐந்தாயிரம் பிக்குகள் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முழு உரை
இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நமக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் குறித்து நமது மகா சங்கத்தினர் மற்றும் பொது சமூகத்துடன் கலந்துரையாட வேண்டியது அவசியம். அந்த சந்தர்ப்பத்திற்கு என்னை அழைத்ததற்காக தேசிய பிக்கு முன்னணியின் ஏற்பாட்டுக் குழுவுக்கு நன்றி கூறுகிறேன்.
நமது பிக்கு சமூகத்திற்கு நமது நாடு, மக்கள் மற்றும் நமது நாட்டின் ஆட்சி தொடர்பாக ஒரு பிரிக்க முடியாத வரலாற்று பாரம்பரியமும் பொறுப்பும் உள்ளது. நமது மகா சங்கத்தினர் வரலாற்று ரீதியாக நிறைவேற்றிய மகத்தான பணியின் விளைவாக அந்தப் பொறுப்பு உருவாகியுள்ளது. இல்லையெனில், அது நமது மகா சங்கத்தினருக்கான ஆட்சி தொடர்பான அரசியலமைப்பின் விதிகளை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. நீண்ட காலமாக நமது தாய்நாடு, நமது பொது மக்கள் மற்றும் நமது ஆட்சியாளர்கள் தொடர்பாக காட்டப்பட்ட வரலாற்றுத் தலையீட்டின் காரணமாக இது நிகழ்ந்துள்ளது. ஜனாதிபதியாக, அரசியலமைப்பால் எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், உரித்தின் ஊடாக உங்களுக்குப் பொறுப்பும் கடமைகளும் வழங்கப்பட்டுள்ளன.
பௌத்தம் இன்றுவரை இலங்கை சமூகத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறது. மேலும், இன்றுவரை நமது இலக்கியம் மற்றும் எழுத்துத்துறை வளர்ச்சியில் நமது மகா சங்கத்தினர் ஆற்றிய பங்கு மகத்தானது. இலவசக் கல்விச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது மகா சங்கத்தினர் ஆற்றிய பங்கு மகத்தானது.
ராஜ்ய சபையில், நல்லையா என்ற உறுப்பினர் இவ்வாறு கூறினார்: ” பிக்குகள் இல்லையென்றால், இந்த சட்டமூலம் விவாதிக்கப்பட்டிருக்காது.” அதுதான் உரித்து, நமது நாடு ஒரு காலனித்துவ நாடாக மாறியபோது, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் உட்பட அந்த சமயத்தில் இருந்த மகா சங்கத்தினர், நமது நாட்டின் சுதந்திரத்திற்காகவும் மக்களின் சுதந்திரத்திற்காகவும் ஒரு பாரிய போராட்டம் நடத்தினர். அதுதான் நமது மகா சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தாய்நாட்டின் சுதந்திரத்தின் உரித்து.
இது தொடர்பாக ஆளுநர் மைட்லேண்ட் இங்கிலாந்துக்கு ஒரு அறிக்கையை அனுப்புகிறார். அந்த அறிக்கையில் “பிக்குமார்களின் செல்வாக்கு மிக அதிகம். பல சந்தர்ப்பங்களில், அது பிரபுக்களின் செல்வாக்கை விட அதிகமாக உள்ளது.” அதுதான் நமது மகா சங்கத்தின் வரலாற்று மரபு.
நமது தாய்நாட்டின் சுதந்திரத்திற்கும் மக்களின் உரிமைகளுக்கும் பிக்குகள் ஆற்றிய வரலாற்றுப் பங்கின் உரித்து உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த உரித்தில் ஒரு முக்கியமான மைல்கல் கடந்த ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் நிகழ்ந்ததாக நான் நினைக்கிறேன். நமது நாடு ஒரு பேரழிவு தரும் முடிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நேரத்தில், நமது நாட்டையும் மக்களையும் அந்த சூழ்நிலையிலிருந்து விடுவிப்பதற்கான போராட்டத்தில் நமது மகா சங்கத்தினர் அந்த வரலாற்று உரித்தை மீண்டும் உறுதிப்படுத்தினர். இந்த மாற்றத்தில் பிக்குகள் சிறப்புப் பங்காற்றினர். மிகவும் கடினமான அத்தியாயத்திலிருந்து வெற்றிக்கு நீங்கள் ஆற்றிய பங்கு மிகப் பெரியது.
நமக்கு இப்போது வழங்கப்பட்டுள்ள பொறுப்பு என்ன? நமக்கு முன் எவ்வாறான நாடு உள்ளது? ஒருபுறம், பொறுப்புள்ள அரசு நிறுவனங்களும், அரச அதிகார பொறிமுறையும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. பிரதிப் பொலிஸ்மா அதிபரின் மனைவி புதையல்களைத் தோண்டப் போகிறார். இராணுவத்தின் உயர் அதிகாரிகள் புதையல்களைத் தோண்டச் சென்றுள்ளனர். சிறைச்சாலையின் உயர் அதிகாரிகள் எந்தவொரு பொறுப்புக்கூறலும் அல்லது அனுமதியும் இல்லாமல் கைதிகளை விடுவித்து வருகின்றனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் பாதாள உலகத் தலைவர்களுக்கான கடவுச் சீட்டுக்களை தயாரிக்கிறது. இராணுவ முகாம்களில் இருந்து T-56 ஆயுதங்கள் வெளியில் செல்கின்றன. தமது பொறுப்பு பணத்திற்காக மாற்றியமைக்கின்றனர்.
இதேபோல், பொருளாதாரக் கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. மாத்தறைப் பகுதியில் சில கட்டிடங்கள் எந்த தேவையும் இன்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சரும் தாம் பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் பிரதேசத்திற்கு ஏற்ப ஒவ்வொரு பகுதியிலும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்தக் கட்டிடங்கள் உற்பத்தி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படவில்லை. அதன்படி, பொருளாதாரம் பேரழிவு நிலையை எட்டியுள்ளது.
நமது தேயிலை பயிற்செய்கை மற்றும் றப்பர் பயிற்செய்கை துயரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. நமது தென்னை மரத்திலிருந்து 89 தேங்காய்களைப் பெற முடியும். ஆனால் தற்போது தென்னை மரங்களிலிருந்து 30-40 காய்களை மட்டுமே பெற முடியும். முழு பொருளாதாரக் கட்டமைப்பும் சரிந்துவிட்டது.
சட்டத்தின் ஆட்சி சரிந்துவிட்டது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு சட்டமும், ஏழைகளுக்கு மற்றொரு சட்டமும் செயற்படுத்தப்படுகிறது. அவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்கக்கூடிய ஒரு கலாச்சாரம் உருவாக்கப்பட்டிருந்தது. அடுத்த தலைமுறைக்கு அதிகாரத்தை எவ்வாறு தயார்படுத்துவது என்ற நிகழ்ச்சி நிரலில் அவர்கள் சிக்கியுள்ளனர். எல்லையற்று செல்வத்தைக் குவிக்க அவர்கள் தங்களிடம் இருந்த அதிகாரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர்.
இந்த அழிவுகரமான பயணத்தை மாற்றியமைக்க நாங்கள் உறுதியுடன் செயல்படுகிறோம். எவ்வளவு கோசம் எழுப்பினாலும் இந்தப் பயணம் தலைகீழாக மாறாது. நானோ அல்லது எனது அரசாங்கமோ இதைச் செய்யாவிட்டால், வேறு எந்த அரசாங்கமும் இதைச் செய்யாது.
முதலில், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக இருக்க வேண்டும். நாம் அத்தகைய ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவோம். செல்வம், அதிகாரம், வரலாறு ஆகிய எதுவும் பொருட்டாகாது. நம் நாட்டில் யாராவது ஒரு குற்றத்தில் ஈடுபட்டிருந்தால், யாராவது ஊழலில் ஈடுபட்டிருந்தால், யாராவது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியிருந்தால், அவர்களை நீதியின் முன் நிறுத்த நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம். இது பழிவாங்கல் அல்ல. இது வேட்டையாடுதல் அல்ல. இப்படித்தான் பொதுமக்களிடம் நம்பிக்கையை வளர்க்க முடியும். சட்டத்தின் பொதுவான எண்ணக்கரு என்னவென்றால், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதாகும். அதை நாங்கள் நிலைநாட்டுவோம். பொதுமக்களுக்கு நீதி,நியாயம் தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்துவோம். தங்களுக்கு வழங்கப்படும் அதிகாரம், பொதுமக்களின் செல்வத்தை விருப்பப்படி அழிக்கும் சக்தியாக எண்ணம் கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்துவோம்.
எமக்கு சட்டவிதிகளின் ஊடாக கிடைத்துள்ள பல விடயங்கள் ஏற்கனவே கைவிடப்பட்டுள்ளன. ஆட்சியாளர் சாதாரண பிரஜையின் முன் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். ஆட்சியாளர் சாதாரண பிரஜைக்கு முன்னால் முடிந்தளவு செல்வத்தை வீணடித்துவிட்டு, பின்னர் நாட்டைக் கட்டியெழுப்ப இணையுமாறு சாதாரண பிரஜைக்கு அழைப்பு விடுக்க முடியாது. மக்களின் சொத்துக்களை கோடிக்கணக்கில் அழிக்க கிடைக்கும் ஆணையாக அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு இனி இடமளிக்கப்பட மாட்டாது.
முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வீடு வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டாலும், வீட்டின் அளவு, புதுப்பிக்கும் பணம் பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை.
எனவே, ஆட்சியாளர்கள் அந்தச் சட்டத்தின் வரம்புகள் மனசாட்சி இல்லாமல் 30,000 சதுர அடி வீடுகளைப் பயன்படுத்த செயல்பட்டு வந்தார்கள். செப்டெம்பர் முதல் வாரத்தில் இந்த அளவுகளை நாங்கள் நீக்குவோம். மற்றவர்களை நிமிர்ந்து நிற்கச் சொல்ல நாம் சகதியில் நாட்டிய தடியைப் போல,வலைந்து போக நாம் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் எடுக்கும் முடிவை செயல்படுத்துவோம். பொதுமக்களின் செல்வத்தைத் திருடும் வீணடிக்கும் அரசியலை முடிவுக்குக் கொண்டுவருவோம். திறைசேரிக்கு வரும் பணம் திறைசேரியை வருவதற்கு முன்னர் பல்வேறு இடங்களில் தடைப்பட்டிருந்தன. சில பணம் அமைச்சர்களுக்கு திருப்பி விடப்பட்டது. இதுபோன்ற விடயம் எதிர்காலத்தில் நடக்க இடமளிக்கப்பட மாட்டாது. சட்டவிரோதமாகச் சம்பாதித்த பொதுமக்களின் எந்தவொரு செல்வத்தையும் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அவை திரும்பப் பெறப்படும். தொலைதூர கிராமங்களின் பிள்ளைகள் முறையான கல்வி இல்லாமல் தவிக்கின்றனர். தொலைதூர கிராமங்களின் மக்கள் சரியான சுகாதார வசதி இல்லாமல் தவிக்கின்றனர். எந்தவொரு பிரஜையும் பொது மக்களின் பணத்தை சட்டவிரோதமாக எடுத்திருந்தால், அது திரும்பப் பெறப்படும். எதிர்காலத்தில், எந்தவொரு அரச அதிகாரியோ அல்லது அரசியல்வாதியோ இதுபோன்ற விடயத்தைச் செய்வது குறித்து இருமுறை சிந்திக்கும் வகையில் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்.
கடந்த 75 ஆண்டுகளாக, வரவசெலவுத்திட்ட ஆவணம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் பெற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் அதை விட அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. இலங்கையில் முதல் முறையாக, நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைத்துள்ளது. எதிர்பார்த்ததை விட செலவினங்களைக் குறைக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. திறைசேரிக்கு வரும் செல்வத்தை வேறு இடங்களுக்குத் திருப்பிவிட நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. திறைசேரிக்கு ரூபாய்கள் அவசியம் போன்று, நாட்டிற்கு டொலர்கள் அவசியம்.
டொலர் கையிருப்பை கட்டியெழுப்புவதற்கு, சுற்றுலாத் துறை, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் பணம் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகியவை டொலர் கையிருப்புக்களில் தாக்கம் செலுத்துகின்றன. இந்த மூன்று துறைகளிலும் குறிப்பிடத்தக்க வருமானத்தை இந்த ஆண்டு பெற்றுக்கொள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு முடிந்துள்ளது. வலுவான டொலர் கையிருப்பை உருவாக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தடைப்பட்டிருந்த பொருளாதாரத்தை மீண்டும் செயற்பட வைத்து, முன்னோக்கி கொண்டு செல்ல அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுமார் 130 கோடி டொலர் மதிப்புள்ள வாகன கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பாடசாலை கட்டமைப்புகளை மீள்சீர் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இரண்டு பிள்ளைகள் மற்றும் நான்கு ஆசிரியர்கள். அந்தப் பிள்ளைகளுக்கோ ஆசிரியர்களுக்கோ பயனில்லை. இந்த நாட்டில் உள்ள சுமார் 18% பாடசாலைகளில் 50க்கும் குறைவான பிள்ளைகளே உள்ளனர். 10,000க்கு ஓரளவு மேற்பட்ட பாடசாலைகளில், சுமார் 1,400 பாடசாலைகளில் 50க்கும் குறைவான பிள்ளைகள் உள்ளனர். சுமார் ஐயாயிரம் பாடசாலைகளில் 200க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர். இவை பாடசாலைகள் அல்ல. ஒரு பழைய அறிக்கையின்படி, 30,000 பிள்ளைகள் சாதாரண தரத்தை எழுதாமல் பாடசாலையை விட்டு வெளியேறுகிறார்கள். நாங்கள் ஒரு திட்டத்தை வகுத்து வருகிறோம். சாதாரண தரத்தை எழுதாமல் எந்த ஒரு பிள்ளையும் பாடசாலையை விட்டு வெளியேற முடியாது. அப்படி ஒரு பிள்ளை இருந்தால், அரச அதிகாரிகள் சென்று இதற்கு என்ன காரணம் என்று பார்க்க வேண்டும்.
நமது வறுமை கல்வியறிவின்மையுடன் பின்னிப் பிணைந்துள்ளது. நமது தடுப்புக் காவலில் உள்ள கைதிகளில் 70% க்கும் அதிகமானோர் எட்டாம் வகுப்புக்கு முன்பே பாடசாலையை விட்டு வெளியேறியவர்கள். கல்விக்கும் குற்றத்திற்கும் இடையே தொடர்பு உள்ளது. கல்விக்கும் போதைப்பொருளுக்கும் இடையே தொடர்பு உள்ளது. சமூகத்தை மாற்றுவதில் கல்வி மிக முக்கியமான விடயம். இருப்பினும், நமது தற்போதைய கல்வி முறை அந்த பணியை நிறைவேற்றத் தவறிவிட்டது. எனவே, கல்வியில் ஒரு பெரிய மாற்றம் குறித்து கலந்துரையாடுவோம். விவாதிப்போம். ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், நமது தேரர்கள் அவற்றைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கவும். அதன் மூலம், நமது பிள்ளைகளுக்கு உலகிற்கு ஏற்ற கல்வி முறையை உருவாக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
நமது சுகாதார கட்டமைப்புக்கு ஒரு புதிய பாதை தேவை. ஆண்டுக்கு 40 மில்லியன் மக்கள் அரச மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவில் இருந்து மருந்து பெறுகிறார்கள். 40 மில்லியன் மக்கள் தனியார் துறையிலிருந்து மருந்து பெறுகிறார்கள். அதன்படி, ஆண்டுக்கு 80 மில்லியன் மக்கள் அரச அல்லது தனியார் துறை மருத்துவமனைகளில் இருந்து மருந்து பெறுகிறார்கள்.
மக்கள் தொகை சுமார் 22 மில்லியன். இருப்பினும், 80 மில்லியன் பேர் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அதாவது, கிட்டத்தட்ட ஒருவர் குறைந்தது நான்கு முறையாவது மருத்துவமனைக்குச் செல்லும் ஒரு கலாசாரம் உள்ளது. அது ஒரு தவறான சுகாதார அமைப்பு. அதனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு முதன்மை ஆரம்ப மருத்துவர் வீதம் செயலாற்ற நாம் முயற்சிக்கிறோம். மருத்துவரே நோயாளியை பொருத்தமான இடத்திற்கு பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறின்றி, அந்த முடிவை நோயாளி எடுக்கக்கூடாது.
மேலும், இந்த நாட்டில் விளையாட்டுத் துறையில் ஒரு பெரிய மாற்றம் செய்யப்பட வேண்டும். விளையாட்டு, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவையே சிறந்த குணங்கள் நிறைந்த பிரஜைகளை உருவாக்குகின்றன. இன்று இந்த நாட்டில் நடக்கும் குற்றச் சம்பவங்களுக்குப் பின்னால், இந்த சமூகத்தின் வீழ்ச்சி என்ற பெரும் துயரத்தின் விளைவுகள் உள்ளன.
இன்று, நடைபெறும் சம்பவங்களைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த சம்பவங்களில் பெரும்பாலானவை நமது சமூகத்தின் வீழ்ச்சியின் துயரத்தின் விளைவுகள் என்பதை நமது தேரர்கள் அறிவார்கள். அண்மையில் நான் இலங்கையில் மாகாணங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மாஅதிபர்களை அழைத்திருந்தேன். தற்போது இலங்கையில் அதிகம் பதிவாகும் குற்றங்கள் பாலியல் குற்றங்கள் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். அவற்றில், அதிகம் பதிவாகும் குற்றமாக சிறுவர் பாலியல் குற்றங்களாகும்.
ஏன்? இந்த சமூகம் சிறப்பாக மாற்றப்படவில்லை. கல்வி, சுகாதாரம், விளையாட்டு மற்றும் பொருளாதாரம் போன்றவையை ஒருங்கிணைப்பதன் மூலம் மாத்திரமே ஒரு நல்ல பிரஜையை உருவாக்க முடியும். நமது மகா சங்கத்தினர் கிராமங்களுக்குச் சென்று, ஒரு நல்ல சமூகத்தைப் பற்றி, அவர்களின் கடமைகளைப் பற்றி, சமூகத்தின் மீது அவருக்கு உள்ள பொறுப்பு பற்றி உபதேசித்து, ஒரு புதிய சமூக மாற்றத்திற்காக நாட்டை விழிப்படையச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நாங்கள் நம்புகிறோம்.
நமது மகா சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு வரலாற்று பாரம்பரியமும், ஆட்சியாளர்களாகிய நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு வகிபாகமும் உள்ளது. ஒரு மனிதனாக நான் நிறைவேற்ற வேண்டிய கடமையைப் போலவே, ஜனாதிபதியாக எனக்கு ஒரு வகிபாகமும் உள்ளது. ஒரு மனிதனாக நிறைவேற்ற வேண்டிய கடமையும் எனக்கு உள்ளது. நான் அதை அடையாளம் கண்டுள்ளேன். எனவே, ஆட்சியாளர், மகா சங்கத்தினர், மத குருக்கள் மற்றும் பொது சமூகம் அனைவரும் ஒன்றாக முயற்சி செய்தால், இந்த சமூகத்தை மிக விரைவாக புதிய மாற்றத்திற்கு உட்படுத்த முடியும்.
இதுதான் சந்தர்ப்பம் என்று நான் நினைக்கிறேன். ஆனால், இந்தப் புதிய மாற்றத்துக்குப் பயப்படும் ஒரு குழு இருக்கு. அவர்கள் இந்தப் புதிய மாற்றத்துக்குத் தயாராக இல்லை. சட்டம் அனைவருக்கும் சமம் என்று கூறும்போது அவர்கள் ஏன் குழப்பம் அடைகிறார்கள்?
அவர்களின் மனசாட்சிக்குத் தெரியும், அவர்கள் குற்றவாளிகள் என்று. மோசடிக்காரர்கள் என்று. அதனால், சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று சொல்ற கருத்தை நாம் ஆசிர்வதிக்கணும். கெட்டதுக்கு ஈடாக கெட்டதைக் கொடுப்பது கடினம் இல்லை.
கடந்த காலத்தில் அவ்வாறுதான் நடந்தது. ஆனால் இப்போது நாம் கெட்டதற்குப் பதிலாக நல்லதைக் கொடுக்க வேண்டியுள்ளது. நமக்கு முன்னால் உள்ள அனைத்தும் கெட்டவை. இந்தக் கெட்டதற்குப் பதிலாக நல்லதைக் கொடுப்பதே நமது பயிற்சி. அதற்கு, நமக்கு தைரியம், நம்பிக்கை, விட்டுக்கொடுக்காத குணம் இவை அனைத்தும் அவசியம். அது நம்மிடம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
நமது முதல் படி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது, ஆனால் இரண்டாவது படி அதை விட இன்னும் கடினமான முயற்சியாகும். நமது நாட்டை சிறந்த நாடாக மாற்றவும், இந்த வறண்ட, ஈரம் அற்ற சமூகத்திற்கு ஈரம் மற்றும் வாழ்க்கையையும் மீண்டும் வழங்கவும், மகா சங்கத்தினர் உட்பட நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று கேட்டுக்கொள்கிறேன்
(-2025.08.12 – Colombo-) • இளைஞர் இயக்கம் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் முன்னோடிகளை உருவாக்கும் இயக்கமாக மாறியுள்ளது – ஜனாதிபதி புதிய அரசியல் மாற்றத்துடன் இந்நாட்டின் இளைஞர் இயக்கம் அரசியல் கைக்கூலியாக மாறாமல், நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் முன்னோடிகளை உருவாக்கும் இயக்கமாக மாறியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தமது அரசியல் அதிகாரத்தை பாதுகாக்கும் பங்குதாரர்களாக அன்றி, இளைஞர்களுக்கு உரிய இடத்தை வழங்கி, தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆற்றல் கொண்ட இளைஞர் சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் […]
(-2025.08.12 – Colombo-)
• இளைஞர் இயக்கம் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் முன்னோடிகளை உருவாக்கும் இயக்கமாக மாறியுள்ளது
– ஜனாதிபதி
புதிய அரசியல் மாற்றத்துடன் இந்நாட்டின் இளைஞர் இயக்கம் அரசியல் கைக்கூலியாக மாறாமல், நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் முன்னோடிகளை உருவாக்கும் இயக்கமாக மாறியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தமது அரசியல் அதிகாரத்தை பாதுகாக்கும் பங்குதாரர்களாக அன்றி, இளைஞர்களுக்கு உரிய இடத்தை வழங்கி, தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆற்றல் கொண்ட இளைஞர் சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என தெரிவித்த ஜனாதிபதி, இளைஞர்களை இந்நாட்டின் அபிவிருத்திப் பாதையில் பயணிக்கும் முன்னோடிகளாகவும், பங்குதாரர்களாகவும் மாற்றும் வேலைத்திட்டத்தை இளைஞர் இயக்கத்தினூடாக ஆரம்பிக்க தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தினார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (12) முற்பகல் நடைபெற்ற “Youth Club” தேசிய இளைஞர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்கால இளைஞர் தலைமுறையினர், உலகின் முன் நாட்டை வெற்றிபெறச் செய்யும் தலைமுறையினராகவும், மற்றவர்களிடம் கருணை காட்டும் தலைமுறையினராகவும் இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க தகுதியான அந்த இளைஞர் தலைமுறையை உருவாக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும், அந்த தகுதிகளைக் கொண்டவர்களாக மாற வேண்டும் என்று இந்த நாட்டில் உள்ள முழு இளைஞர் தலைமுறையினரையும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இம்முறை தேசிய இளைஞர் மாநாடு 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றமை சிறப்பம்சமாக உள்ளதோடு, இதில் நாடு முழுவதிலுமிருந்து 6,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். தேசிய இளைஞர் மாநாட்டிற்கு முன்னதாக, நாடு முழுவதும்
பிரதேச மட்டத்தில் “Youth Club” நிறுவுதல் தொடங்கப்பட்டதுடன், இன்று நடைபெற்ற தேசிய மாநாட்டில் புதிய உத்தியோகத்தர்கள் குழு அறிமுகப்படுத்தப்பட்டது.
தேசிய இளைஞர் மாநாட்டில் பங்கேற்றதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
தேசிய இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறியதாவது:
அண்மைய காலங்களில் அதிக கருத்தாடலுக்கும் சர்ச்சைக்கும் உட்பட்ட மாநாடாக இது இருக்கின்றது என்று நான் நினைக்கிறேன். பொதுவாக, நமது நாட்டில் பல துறைகள் ஒரு குறிப்பிட்ட அரசியல் அதிகாரத்தின் அதிகாரத் தேவைகளுடன் இணைந்திருந்தன. ஒரு போதும், தமது திறமை எதிர்பார்ப்புகள் ஊடாக முன்னேறுவதற்கு எந்த வாய்ப்பும் இந்த இளைஞர் இயக்கத்திற்கு இருக்கவில்லை.
நீங்கள் மாவட்டங்களுக்குச் சென்றபோது, உங்கள் மாவட்டத்தில் அரசியல் தலைமையையோ அல்லது ஏனைய நிறுவனங்களின் தலைமையையோ ஏற்பதில் யாருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது? பழைய அரசியல் தலைமையின் மகள்கள், மகன்கள் அல்லது உறவினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. எனவே, இளைஞர் இயக்கம் அதிகாரத்தில் இருப்பவர்களின் அரசியல் நலன்களுடன் அதிகளவில் இணைந்தே இருந்தது. நீண்ட காலம் தமது அரசியல் அதிகாரத்தையும், குடும்ப அதிகாரத்தையும் பாதுகாப்பதற்கும், உறவினர் தலைமுறையை ஆட்சியில் வைத்திருப்பதற்கும் ஒரு கருவியாக இந்த இளைஞர் இயக்கம் கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றத்துடன், இந்த இளைஞர் இயக்கம் இனிமேலும் அரசியல் நலன்களின் கைக்கூலியாக மாறாது, நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கத் தயாராக இருக்கும் முன்னோடிகளை உருவாக்கும் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது. அது இந்த இளைஞர் மாநாடு வரையிலான எமது பயணத்தில் குறிப்பிடத்தக்கது.
சிலர் பதட்டப்படுவதில் ஆச்சரியமில்லை. உண்மையில், இன்று நாம் செய்வது நமது இளைஞர்களை அவர்களுக்கு உரிய இடம் மற்றும் அவர்களின் எதிர்காலம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும், என்ன பொறுப்புகளை ஏற்க வேண்டும்,பொறுப்பான ஒரு இளைஞர் தலைமையை உருவாக்குவதாகும். இல்லையெனில், குடும்ப ஆட்சியாளர்களின் தலைமுறைகளுக்கு நீண்டகாலத்திற்கு அதிகாரத்தைப் பாதுகாக்கும் செயற்பாட்டின் பங்காளர்களாக அல்ல.
நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால், உங்கள் கைகளில் இருப்பதாகக் கூறப்படும் நமது நாட்டின் எதிர்காலத்தின் உண்மையான பாதுகாவலர்களாக உங்களை மாற்றுவதே எமது இலட்சியம். குறிப்பாக, இங்கே ஒரு விடயத்தை உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
இன்று, நாம் ஜனாதிபதி பதவி, அமைச்சர் பதவிகள் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். இருப்பினும், இந்தக் கதிரையில் அமரும்போது, எமக்கு ஒரு சிந்தனை இருக்கிறது, நாம் எப்போதும் இந்தப் பதவியில் இருந்து செல்வோம் என்பதை மனதில் கொண்டே இந்தக் கதிரைகளில் அமர்ந்திருக்கிறோம். இந்தக் கதிரைகளில் நிரந்தரமாக உட்காரும் எண்ணம் எங்களுக்கு இல்லை. எங்களிடம் தெளிவான நல்லெண்ணம் உள்ளது. இந்த நாடு மிகவும் அழிவுகரமான குழுவின் கையில் இருந்தது. அந்தக் குழுவிடமிருந்து அரசியல் அதிகாரம் எங்களிடம் கைமாறியுள்ளது. அவ்வாறு மாற்றப்பட்ட அதிகாரத்தை, விரைவில் உங்களிடம் ஒப்படைக்கும் எதிர்பார்ப்புடன் இந்த கதிரைகளில் நாங்கள் அமர்ந்துள்ளோம். மல்டிபொண்ட் பசை போல இந்தக் கதிரைகளில் ஒட்டிக்கொள்ள எதிர்பார்க்கவில்லை. எனவே, இந்த நாட்டைக் பொறுப்பேற்கும் செயற்திறன், திறமை, நேர்மை, மனசாட்சி உள்ள புதிய தலைமுறை இளைஞர்களை உருவாக்க வேண்டும். நமக்குப் பிறகு இந்த நாட்டை பொறுப்பேற்கத் தயாராக இருக்கும் ஒரு தலைமுறையை நாம் உருவாக்க வேண்டும். நமக்கு எப்படிப்பட்ட தலைமுறை தேவை? ஒன்று, இன்றைய உலகில், மிக விரைவாக அறிவு, உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, விரிவடைந்து வருகிறது. பண்டைய வரலாற்றை நாம் திரும்பிப் பார்த்தால், அறிவில் பெரும் பாய்ச்சல்கள் நீண்ட ஆண்டுகளில் ஏற்பட்டன. ஆனால் இப்போது, பெறப்பட்ட அறிவு விரைவான வேகத்தில் புதிய அறிவை உருவாக்குகிறது.
அதேபோன்று, புதிய அறிவு வேகமாக வளர்ந்து விரிவடைந்து வருகிறது. இருப்பினும், அந்த வளர்ந்து வரும் புதிய அறிவிலிருந்து உருவாகும் பெரும் பாய்ச்சலைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இல்லாத ஒரு இளம் தலைமுறையினரின் கைகளில் இந்த நாட்டை விட்டுவிடக்கூடாது. எனவே, இந்த இளைஞர் இயக்கத்திற்காக உலகில் வளர்ந்து வரும் புதிய அறிவை விரைவாக உள்வாங்கி அதற்கு ஏற்றவாறு மாற்றக்கூடிய புதிய தலைமுறையை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பு. நமது நாட்டின் எதிர்காலத்தை அந்த தலைமுறையிடம் ஒப்படைக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நமக்குள் மனிதநேயமும் கருணையும் இருக்க வேண்டும்.
நமது கல்வி முறை, வாழ்க்கைப் போராட்டம், இவை அனைத்தும் நமது இளைஞர்களை ஒரு சுயநலக் குறுகிய வட்டத்தில் சிக்க வைத்துள்ளன. அத்தகைய குழுவிற்கு சமூகத்தின் மீது எந்த கருணையும் இல்லை. எனவே, சமூகத்தின் மீது உண்மையான கருணை கொண்ட இளைஞர்கள் குழு நமக்குத் தேவை. சுயநலம் நமது சமூகத்தில் உள்ள பல குணங்களை பனிக்கட்டி நீரில் மூழ்கடித்து கொன்றுவிட்டது. அனைத்து நல்ல விடயங்களும் கொல்லப்பட்டுவிட்டன.
நமது நாட்டை முன்னோக்கி நகர்த்தவும், சமூக வளர்ச்சியை அடையவும், நாம் ஒரு கருணையுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும். அந்த சமூகத்தை உருவாக்குவதில் இந்த இளைஞர் இயக்கம் ஒரு பெரிய பங்கை வகிக்கிறது. நீங்கள் கருணையுள்ள பிரஜையாக மாற வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
மேலும், இளம் தலைமுறையினரிடம் இயல்பாகவே இருக்கும் நீதி மற்றும் நியாயத்திற்கான தாகத்தை மீண்டும் எழுப்ப வேண்டும். அநீதி இருக்கும் இடத்தில், நீதிக்காக குரல் எழுப்புவது சாத்தியமாக வேண்டும். குரல் எழுப்புவது போலியாக இல்லாவிட்டால், நீங்கள் முதலில் ஒரு நீதியான மற்றும் நியாயமான நபராக மாற வேண்டும். இன்று, நமது சமூகம் கணிசமான அளவு பொய்களால் சூழப்பட்டுள்ளது. பொதுவான நீதியைப் பற்றிப் பேசுவதன் மூலம் நீதிக்காக நிற்க முயற்சிக்கிறோம். ஆனால், நமது நடைமுறையில் நீதி மற்றும் நியாயத்தை எந்த அளவிற்கு உள்ளடக்கியுள்ளோம் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
நீதி மற்றும் நியாயத்திற்காக நம் குரல் எழுப்புவது நம்மை ஒரு நீதியான நபராக மாற்றாது. நம்மை ஒரு நீதியான குடிமகனாக மாற்றுவதற்கான முதல் காரணி, நாம் எவ்வளவு தூரம் நீதியான மற்றும் நியாயமாக செயல்படுகிறோம் என்பதுதான். எனவே, நீதிக்காக உங்கள் குரலை உயர்த்துங்கள். நீதிக்காக எழுந்து நிற்கவும். அதற்கு முன், நீதி மற்றும் நியாயத்தை உண்மையிலேயே பிரதிநிதித்துவப்படுத்தும் மனசாட்சி கொண்ட ஒரு இளைஞன் அல்லது யுவதியாக மாறுங்கள். இந்த நாட்டை நிலையற்ற மக்கள் குழுவிடம் நாம் ஒப்படைக்கக்கூடாது. நமது நாட்டை உலகத்துடன் மிக நெருக்கமாக இணைக்கக்கூடிய மற்றும் சமூகத்தின் மீது இரக்கம் காட்டக்கூடிய ஒரு புதிய தலைமுறை இளைஞர்களிடம்
நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்க வேண்டும். எனவே, இந்த நாட்டை ஒப்படைக்க ஒரு தகுதிவாய்ந்த இளைஞர் இயக்கத்தை உருவாக்குவதே எங்கள் முயற்சியாகும். அதற்குத் தேவையான தகுதிகளை பூர்த்தி செய்த இளைஞர்களின் குழுவாக மாறுமாறு நான் உங்களை கோருகிறேன்.
இன்று, வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது. நான் அண்மையில் மாலைதீவிற்கு விஜயம் செய்தேன். எங்கள் இளைஞர்களில் சுமார் 30,000 பேர் அங்கு தொழில்புரிகின்றனர். இருப்பினும், அவர்கள் அரசாங்க நிறுவனங்களில் பணியாற்றவில்லை. அரசாங்கம் வெளியே ஒரு தனி பொருளாதாரத்தை உருவாக்கியுள்ளது. ஆனால், வெளியே திறன்கள் மற்றும் திறமைகள் உள்ளவர்களுக்கு வேலைகளை உருவாக்கும் பொருளாதாரத்தை உருவாக்க நாம் நீண்ட காலமாகத் தவறிவிட்டோம். அந்தத் தோல்வியின் விளைவாக, வேலைகளை வழங்கும் நிறுவனமாக அரசு மாறியுள்ளது. அரசாங்கம் தொழில் வழங்கும் நிறுவனம் அல்ல. மாறாக தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் நிறுவனம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
20 ஆம் நூற்றாண்டில் உலகில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த நூற்றாண்டுக்கு முன்பு, அத்தகைய தொழில்நுட்பம் கொண்ட ஒரு அரசு உருவாகும் என்று விஞ்ஞானிகள் கருதினர். இது போன்ற ஒரு அரசியல் உலகம் உருவாகும் என்று அரசியல்வாதிகள் மற்றும் அறிஞர்கள் கருதினர். அதேபோன்று அரச ஆட்சிக்குப் பதிலாக மக்களால் தெரிவாகும் ஆட்சி உலகில் உருவாகும் என்று கருதப்பட்டது. இதேபோல், உலகில் உள்ள பொருளாதார வல்லுநர்கள் உலகில் இதுபோன்ற ஒரு பொருளாதார நிலைமை உருவாகும் என்று கருதினர். இவ்வாறு, 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் எதிர்கால உலகத்தைப் பற்றிய இவ்வாறான எதிர்வு கூறல்களை நாம் பெரும்பாலும் சந்தித்தோம். இந்த அனுமானங்கள் 20 ஆம் நூற்றாண்டில் மட்டுமே யதார்த்தமாக மாற்றப்பட்டன.
தொழில்நுட்பம், அறிவியல், சந்தை மற்றும் மக்களின் வாழ்க்கை முறைகளில் ஏற்பட்ட இந்த மாற்றத்தின் காரணமாக, உலகில் ஒரு பாரிய சந்தை உருவாக்கப்பட்டது. இருப்பினும், அந்த சந்தையை அடையத் தவறிய ஒரு தேசமாக நாம் மாறினோம். எனவே, வெளியே ஒரு பொருளாதாரம் கட்டமைக்கப்படவில்லை. அதன்படி, வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனமாக அரசாங்கம் மாறியது.
இடிபாடுகளின் குவியலாக மாறியுள்ள அரசை நவீனத்துவத்திற்குக் கொண்டு வர வேண்டும். அதற்காக, சுமார் 62,000 பேரை அரச சேவையில் சேர்க்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளோம். வேலைவாய்ப்புப் பிரச்சினைக்கு இதனால் தீர்வு ஏற்படாது. அரசாங்க செயல்முறை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அதற்கான திட்டங்களை நாங்கள் தயாரித்துள்ளோம்.
இந்த ஆண்டு 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் எங்கள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். 2030 ஆம் ஆண்டுக்குள் 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் எங்கள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதன் மூலம், சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதாரம் வெளியில் கட்டமைக்கப்படும். பொருளாதாரத்தின் ஊடாக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
2030 ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் பொருளாதாரத்தை 15 பில்லியன் டொலர்களாக வளர்க்கவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்கள் நாட்டின் தேசிய உற்பத்தியில் 12% டிஜிட்டல் பொருளாதாரம் மூலம் வழங்குவதே எங்கள் எதிர்பார்ப்பு. விவசாயம், மீன்வளம் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் டிஜிட்டல் மயமாக்கலை இணைப்பதன் மூலம் ஒரு பாரிய மாற்றத்தையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்காக, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அறிவு மற்றும் திறன்களைக் கொண்ட ஒரு இளம் தலைமுறை அவசியம். அதன் ஊடாக வேலை வாய்ப்புகள் உருவாகும். துறைமுகத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரம் உட்பட பல துறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாரிய பொருளாதாரத்தையும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதன்படி, அரசாங்கம் தலையிட்டு வேலைகளை உருவாக்கும் ஒரு நாட்டை உருவாக்குவதே எங்கள் திட்டம்.
எங்கள் இளைஞர்கள் தங்கள் திறன்கள் மற்றும் வாழ்க்கை முறையின் அடிப்படையில் அவர்கள் விரும்பும் தொழிலைத் தொடர நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்க்கிறோம். இன்று நம்பிக்கையை உறுதிப்படுத்திய ஒரு பொருளாதாரத்தை நாட்டில் உருவாக்குவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இன்று, இந்த கட்டமைக்கப்பட்ட ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் இந்த நாட்டை ஒரு வளமான நாடாக மாற்றும் பயணத்தைத் தொடங்க நாங்கள் தயாராக உள்ளோம். இளைஞர்களாகிய உங்களுக்கு ஒரு பாரிய பொறுப்பு உள்ளது.
உங்களிடம் அறிவும் ஆற்றலும் உள்ளது. இந்த இளைஞர் இயக்கத்தின் மூலம் உங்களை இந்த வளர்ச்சியின் தலைவர்களாகவும் பங்காளர்களாகவும் மாற்றும் திட்டத்தைத் தொடங்க நாங்கள் தயாராக உள்ளோம். நீங்கள் வளர்ச்சியிலிருந்து விடுபட்டவர்கள் அல்ல. நீங்கள்
வளர்ச்சியில் மனித தூசி அல்ல. நாங்கள் தயாரித்த அபிவிருத்திப் பாதையில் உங்களை முக்கிய பங்காளர்களாக மாற்றுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
மிகவும் கொந்தளிப்பான பின்னணிக்குப் பிறகு, நீங்கள் ஒரு தலைமைத்துவக் குழுவை நியமித்துள்ளீர்கள். இந்த இளைஞர்கள் நமது நாட்டின் இளைஞர் இயக்கத்தை மிகச்
சிறப்பாக வழிநடத்தும் திறனைப் பெறுவீர்கள் என நம்புகிறேன். எதிர்கால சவால்களை முறியடித்பதற்காக நான் உங்களை வாழ்த்துகிறேன்.
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்கள் , வெளிநாட்டு தூதுவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்/பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
(-2025.07.06 – Colombo-) கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மாவட்ட அளவில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற திறமைசாலிகளை கௌரவிக்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் தொடங்கியுள்ளது. அதன்படி, தென் மாகாணத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (06) காலை ருகுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான […]
(-2025.07.06 – Colombo-)
கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மாவட்ட அளவில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற திறமைசாலிகளை கௌரவிக்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் தொடங்கியுள்ளது. அதன்படி, தென் மாகாணத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (06) காலை ருகுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 06 பாடத்திட்டங்களின் கீழ் உயர் சித்திகளைப் பெற்ற 10 மாணவர்கள் வீதம் 361 மாணவர்களுக்கு தலா ரூ. 100,000 வீதம் ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கப்பட்டது. இதற்காக ஜனாதிபதி நிதியம் 36.1 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளது. எதிர்காலத்தில், இந்த திட்டத்தை அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விழாவில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, ஜனாதிபதி நிதியத்தை முறைப்படுத்தவும், அதன் சேவைகளை விஸ்தரிக்கவும், வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். கடந்த கால நடைமுறைகளில் இருந்த தவறுகள் திருத்தப்பட்டு,நன்மைகள் பெறத் தகுதியானவர்களுக்கு நன்மைகள் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கவும், பிராந்திய ரீதியாக பரவலாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான முக்கிய கருவி கல்விதான் என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர் , பிள்ளைகள் இந்த சலுகையை முறையாகப் பயன்படுத்தி, சிறந்த கல்வியாளர்களாகவும், நல்ல பிரஜைகளாகவும் வாழ்க்கையை வெற்றிபெற்று அதன் மூலம் நாட்டையும் தேசத்தையும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் மேலும் கூறினார்.
இதுவரை இருந்த ஜனாதிபதியின் நிதியை தற்போதைய அரசாங்கம் மக்கள் நிதியாக மாற்ற முடிந்துள்ளதாகவும், மக்களின் நல்வாழ்வுக்கான சேவைகளை வழங்கும் நிறுவனமாக இந்த நிறுவனத்தை மாற்ற முடிந்துள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
அரசியல் அடியாட்களின் சிகிச்சை மற்றும் பயணத்திற்காக ஜனாதிபதி நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், தற்போது அது ஒரு பொது நல நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
இந்த புலமைப்பரிசில் பெற்று இலவசக் கல்வியின் ஊடாக முன்னேற்றம் அடையும் மாணவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, எதிர்காலத் தலைவராக மாறிய பிறகு, இந்த நாட்டிற்கும் அதன் பிரஜைகளுக்கும் வழங்க வேண்டிய சேவைகளைப் புறக்கணிக்கக்கூடாது என்றும், பொதுமக்களின் வரிப் பணத்திலிருந்து கற்றுக்கொண்டு நாட்டையோ அல்லது மக்களையோ திருடவோ அல்லது ஏமாற்றவோ கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் நினைவுபடுத்தினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், உலகைக் காண்பதற்காக பறந்து செல்வதற்காக கல்வி எனும் சிறகுகளை வழங்குவது தற்போதைய அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியாகும் என்றும், கல்வி அவர்களை மனிதாபிமான குடிமக்களாக மாற்ற உதவும் என்றும் கூறினார்.
தற்போதைய அரசாங்கம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் கல்விக்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும், ஜனாதிபதி இதற்காகச் செயல்பட்டு வருவதாகவும், ஜனாதிபதி நிதியத்தின் மூலம் கல்வியில் திறமையான மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கல்வி மூலம் மாணவர்களை வளப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இங்குள்ளவர்களில் பலர் இலங்கையையோ அல்லது உலகையோ ஆளும் பல இடங்களில் இருப்பார்கள் என்றும், அவர்கள் மனிதாபிமான குடிமக்களாக இல்லாவிட்டால், கல்வியில் நாம் செய்யும் முதலீடு சிறந்த பலனைத் தராது என்றும் அமைச்சர் சாவித்ரி போல்ராஜ் மேலும் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார சிரமங்களைக் கொண்ட மாணவர்கள் உயர்கல்வியை வெற்றிகரமாகத் தொடரவும் வாழ்க்கையில் வெற்றி பெறவும் இந்தத் திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளதாகவும் அதற்காக ஜனாதிபதிக்கும் ஜனாதிபதி நிதியத்திற்கும் நன்றி தெரிவிப்பதாக நன்றியுரையாற்றிய காலி, சவுத்லெண்ட் கல்லூரி மாணவி சித்மினி மதநாயக்க கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான எல்.எம்.அபேவிக்ரம, லால் பிரேமநாத், அரவிந்த செனரத், ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே, ருஹுணு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் பி.ஏ. ஜெயந்த, மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன, காலி மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஏ. தர்மசிறி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் பிமல் சில்வா மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரிகள்,அரசு அதிகாரிகள், பாதுகாப்புப் படை பிரதானிர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
(-2025.07.04 – Colombo-) • கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக மாற்ற வேண்டும் • சமூக சக்தி வேலைத்திட்டத்தின் நோக்கம் அரச பொறிமுறை, அரச அதிகாரி மற்றும் பிரஜை ஆகியோரை ஒருங்கிணைந்த பொறிமுறைக்குள் கொண்டு வருவதாகும் – ஜனாதிபதி நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும், எந்தப் பயனும் இருக்காது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒருபுறம், நாட்டில் பொருளாதார […]
(-2025.07.04 – Colombo-)
• கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக மாற்ற வேண்டும்
• சமூக சக்தி வேலைத்திட்டத்தின் நோக்கம் அரச பொறிமுறை, அரச அதிகாரி மற்றும் பிரஜை ஆகியோரை ஒருங்கிணைந்த பொறிமுறைக்குள் கொண்டு வருவதாகும்
– ஜனாதிபதி
நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும், எந்தப் பயனும் இருக்காது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒருபுறம், நாட்டில் பொருளாதார வளர்ச்சியை அடைவதுடன், மறுபுறம், பொருளாதாரத்தை விரிவுபடுத்தி கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்து, அவர்களை பொருளாதாரத்தில் பங்கேற்பாளர்களாக மாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.
அலரி மாளிகையில் இன்று (04) பிற்பகல் நடைபெற்ற “சமூக சக்தி” தேசிய வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
” சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டம் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான திட்டமாக, சமூகத்தை வலுப்படுத்துவதற்கும் சமூகத்தில் பொருளாதார நன்மைகளை சமமாக விநியோகிப்பதை உறுதி செய்வதற்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிராமியஅபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, சமூக சக்தி தேசிய வேலைத்திட்ட நிகழ்வில் பங்கேற்றவர்களை வரவேற்றதுடன், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சமூக சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் நோக்கங்களை விளக்கினார்.
பின்னர் ” சமூக சக்தி” தேசிய செயற்பாட்டுக் குழுவின் தலைவரும், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சருமான கலாநிதி உபாலி பன்னிலகே சமூக சக்தி தேசிய செயற்பாட்டை அறிமுகப்படுத்தினார்.
சமூக சக்தி உத்தியோகபூர்வ இணையத்தளம் இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு ஆற்றிய முழுமையான உரை, குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்ததை நாம் அறிவோம். இந்த வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்களை நாம் அடையாளம் காண முடியும். ஆனால், அந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு எந்தவிதத்திலும் காரணமாகாத கிராமங்களில் உள்ள சாதாரண மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அவர்களுக்கு உணவு கொள்வனவு செய்தல், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிறந்த மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்ளல், கல்விக்கான வசதிகளை உருவாக்குதல், கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற துறைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. எனவே, தற்போதைய அரசாங்கத்திற்கு கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் சவாலும் பொறுப்பும் உள்ளது. அது கைவிட முடியாத ஒரு பொறுப்பு ஆகும். எமது அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணிகளில் கிராமிய வறுமையை ஒழிப்பதை ஒரு அத்தியாவசிய காரணியாக நாங்கள் கருதுகிறோம்.
தற்போது, பொருளாதாரத்தை குறிப்பிடத்தக்க அளவு நிலையான நிலைக்குக் கொண்டு வர முடிந்துள்ளது. நீண்ட காலமாக டொலரின்பெறுமதியை சுமார் 300 ரூபா அளவில் வைத்திருத்தல், அந்நியச் செலாவணி இருப்புக்களை முறையாக அதிகரித்தல், திறைசேரியின் வருமானத்தை நாம் எதிர்பார்த்த இலக்குகளுக்குக் கொண்டு செல்வது, வங்கி வட்டி விகிதத்தை ஒற்றை இலக்கத்தில் வைத்திருப்பது போன்ற பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கான காரணிகளை கணிசமான அளவில் நிறைவுசெய்ய முடிந்துள்ளது.
மேலும், நமது நாடு குறித்து முதலீடுகள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை படிப்படியாக வளர்க்க முடிந்துள்ளது. நிறுத்தப்பட்டிருந்த பல திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துள்ளோம்.
பல புதிய திட்டங்களுக்கான ஏராளமான முன்மொழிவுகளும் கிடைத்துள்ளன. அதன் பல முக்கியமான முன்மொழிவுகள் கடந்த அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எனவே, புதிய முதலீடுகள் மற்றும் புதிய அபிவிருத்தித் திட்டங்களில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். நாம் செயல்படுத்தும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டங்கள் ஊடாக ஒருபுறம் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் மறுபுறம் பொருளாதார வளர்ச்சியையும் அடைய முடியும். ஆனால், அந்தப் பொருளாதாரப் பலன்கள் கீழ்நிலைக் கிராமிய மக்களுக்கு செல்லவில்லை என்றால், புள்ளி விபரத்தில் மாத்திரம் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் பொருளாதார வளர்ச்சியையும் அடைவதில் பயனில்லை.
எனவே ஒருபுறம் பொருளாதார வளர்ச்சியும் மறுபுறம் பொருளாதார விரிவாக்கமும் அடைய வேண்டும். கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகள் உருவாக்கப்படாவிட்டால், அவர்கள் பொருளாதாரத்தில் பங்கேற்பாளர்களாக இல்லாவிட்டால், சாதாரண மக்கள் பொருளாதாரத்தில் இருந்து வெளியேறும் குழுவாக மாறிவிடுவார்கள்.
எனவே, பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதும், கிராமப்புறங்களில் சிதறிக் கிடக்கும் மக்களை அந்தப் பொருளாதாரத்தில் பங்கேற்பவர்களாக மாற்றுவதும்தான் எங்களின் முக்கிய அணுகுமுறை என்பதைக் கூற வேண்டும். மக்கள் தற்போது ஈடுபட்டுள்ள பொருளாதார மூலங்களை மிகவும் பயனுள்ளதாகவும், திறமையாகவும், இலாபகரமாகவும் மாற்றினால் மாத்திரமே அதனை அடைய முடியும். எனவே, கிராமிய மக்கள் தற்போது ஈடுபட்டுள்ள துறைகளின் உற்பத்தித் திறனை அதிகரித்து, இலாபகரமான தொழிலாக அதனை மாற்ற வேண்டும். மேலும், அவர்களின் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவது மிகவும் முக்கியமானது. அதன்படி, கிராமிய மக்களுக்கு புதிய பொருளாதார மூலங்களை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளித்துள்ளோம்.
அவ்வாறு செய்வதன் மூலம் பொருளாதாரத்தில் வலுவான பங்கேற்பாளர்களாக அவர்களை மாற்ற முடியும். வறுமை என்பது பொருளாதார மட்டத்தைத் தாண்டிச் செல்லும் ஒரு சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது. ஏழை மக்கள் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட குழுவாக மாறிவிட்டனர்.
எனவே, கிராமப்புற வறுமையை ஒழிப்பது அரசாங்கத்தின் முக்கிய பணியாகக் கருதப்படுகிறது. இந்த விடயத்தில், கல்வி மிகவும் முக்கியமான துறையாகும். வறுமைக் கோடும், கல்வி அறிவில்லாத கோடும் ஒன்றாகச் சேர்ந்துள்ளன. எனவே கல்வி வாய்ப்புகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இவை அனைத்தையும் செய்தாலும், எந்தவொரு சமுதாயத்திலும், எந்தக் காலத்திலும் கஷ்டப்படும் மக்கள் சமூகம் உள்ளது.
வளர்ந்த நாடுகளாகக் கருதப்படும் நாடுகளில் கூட இத்தகைய சமூகங்கள் உள்ளன. அந்த மக்களைக் கவனித்துக் கொள்ள நிவாரணத் திட்டம் தேவை. நிவாரணம் என்பது ஒரு மோசமான கருவி அல்ல. ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு சமூகம் பாதுகாக்கப்படாவிட்டால், அந்த சமூகத்தைப் பாதுகாப்பது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
இருப்பினும், இந்தப் பொறுப்பு கணிசமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு அரசியல் கருவியாக மாறிவிட்டது. நிவாரணத் திட்டம் குறிப்பிடத்தக்க அரசியல்மயமாக்கலுக்கு உள்ளாகியுள்ளதால், அது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. இலக்குமயப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணங்களை வழங்குவதே எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கையாகும். யார் யாருக்கு? என்ற இலக்குடன் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு அத்தகைய பொறுப்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், மேலும் சமூகமும் அதில் கவனம் செலுத்த வேண்டும்.
அரசாங்கம் ஏதாவது வழங்கினால், அவர்கள் பெறும் அனைத்தையும் நாமும் பெற வேண்டும் என்ற ஒரு எண்ணம் நம் சமூகத்தில் உள்ளது. அது தவறு. நமது அரசு அத்தகைய கலாசாரம், சமூக பிணைப்பு கொண்ட அரசு அல்ல. பராமரிக்க வேண்டியவர்களை எப்போதும் கவனித்துக் கொள்வது நமது கலாசார பண்பு ஆகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட திரிவுபடுத்தப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக, இன்று உதவி பெறத் தகுதியானவர்களுக்கு நாம் உதவி வழங்க முயற்சிக்கும்போது, அதைத் தாங்களும் பெற வேண்டும் என்று சிலர் முயற்சிக்கிறார்கள். எனவே, ஒரு புதிய கலாசாரம் தேவை. அரசாங்கம் வழங்கும் உதவிகள் தகுதியானவர்களுக்கு மாத்திரமே கிடைக்க வேண்டும் என்பதை மக்கள் தானாக உணர வேண்டும். தனக்கு திறன் இருந்தாலும், அடுத்த வீட்டுக்காரருக்கு அதே திறன் இல்லை. மக்களுக்கு உதவ வேண்டும் என்று உணர வேண்டும்.
ஆனால், இன்று நமது நாட்டின் கலாசாரம் என்ன? ஏதாவது கொடுக்கப்பட்டால், அதைப் பெறுவதற்கு ஒரு போராட்டம் உள்ளது. அது தனக்கு பொருத்தமானதா? இல்லையா? அவசியமா? இல்லையா? தனக்கு அதற்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? என்று சிந்திக்காமல். எனவே, மிகவும் வலுவான தரவுக் கட்டமைப்பை உருவாக்க எதிர்பார்க்கிறோம். ஆனால், நாம் அனைவரும் அறிந்தபடி, நாம் எப்போதும் கதைக்கும் இந்த நிவாரணத் திட்டத்தை எப்போதும் நம்பியிருக்க முடியாது. எப்போதும் நிவாரணத் திட்டத்திற்கான தேவை உள்ளது.
அதனால்தான் எப்போதும் நிவாரணத் திட்டம் உள்ளது. ஆனால் அது ஒரு நபருக்காகவோ, ஒரு சமூகத்திற்காகவோ மாத்திரம் அல்ல. ஏனையவர்களும் பொருளாதாரத்தின் பங்காளர்களாக மாற்றப்பட வேண்டும்.
இதற்காக குறிப்பிடத்தக்க அளவு அரசாங்கம் பணம் செலவிடப்பட்டுள்ளது. அஸ்வெசும திட்டத்திற்கு மட்டும் சுமார் 230 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய நிவாரணத் திட்டங்களுக்கு அதிக அளவு பணம் செலவிடப்படுகிறது. ஆனால், இந்த பணத்தை உதவிகள் சென்றடையவேண்டிய சமூகத்திற்கு நாம் கொடுத்திருக்கிறோமா? அந்த பணத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் நன்மைகள் பெறப்பட்டதா? இல்லை, அந்த நன்மை கிடைக்கவில்லை.
பல்வேறு சர்வதேச அமைப்புகள் இந்த நாட்டில் நிவாரணத் திட்டங்களை செயல்படுத்துகின்றன. அவற்றைப் நோக்கும்போது, அவற்றில் 50% க்கும் அதிகமான தொகை உதவி வழங்குவதற்கான பொறிமுறையைத் தயாரிப்பதற்கு செலவிடப்படுகின்றன. ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டதும் அதில் ஒரு பகுதி தனக்குப் பெறுவதற்கு அதிகாரி ஒருவர் காத்திருப்பார். அவருக்கு ஒரு தொழில் இருக்கும். அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஒரு கொடுப்பனவு தேவை என்று அவருக்குத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த நிவாரணத் திட்டத்தில் ஒரு பெரிய தொகை உதவி, பெற வேண்டிய நபர்களுக்கு அன்றி உதவி வழங்குவதற்கான பொறிமுறைக்கு செலவிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், அது தொடர்பான பயிற்சிக்காக அதிக அளவு பணம் செலவிடப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும். உதவி சென்றடையவேண்டிய சமூகத்திற்கு உதவி வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் அரச அதிகாரிகளுக்கும் உள்ளது.
இதனை தவறாகப் பயன்படுத்த இடமளிக்க மாட்டோம் என நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். தகுதியானவர்களுக்கு உதவி வழங்குவதற்கான முன்னெடுப்பொன்றை தொடங்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு அமைச்சும் ஏதாவதொன்றை வழங்க வேண்டும் என்று நினைக்கும் போக்கு காணப்படுகிறது. இருப்பினும், மிகவும் துல்லியமான தரவுக் கட்டமைப்பின் அடிப்படையில் என்ன வழங்கப்பட வேண்டும்? எந்த நோக்கத்தில் வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். இருப்பினும், தற்போது அவ்வாறு நடக்கவில்லை. ஒவ்வொரு நிறுவனமும் திணைக்களமும் உதவி வழங்க விரும்புகின்றன. இருப்பினும், கிராமப்புற மக்களுக்குச் செல்லும் உதவிகளும், அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். உயிர்வாழ்வதற்காக மட்டுமே எங்கள் உதவியில் அதிக பகுதி வழங்கப்பட்டுள்ளது. அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியவில்லை. அதனால்தான் ஒரு கூட்டு முன்னெடுப்பு தேவை. அந்த முன்னெடுப்பிற்காக நாங்கள் சமூக சக்தி திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். இது ஒரு இலக்காகக் கொண்ட திட்டமாகும். இந்தத் திட்டம் பிரதேச செயலக மட்டம் வரை தயாரிக்கப்பட வேண்டும்.
தற்போது, நிர்வாகக் கட்டமைப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் ஒரு குழந்தை இனி பிறக்கும் என்று நான் நினைக்கவில்லை. உரிய வயதை அடையும் போது, அவர் அடையாள அட்டையை பெறுவார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், டிஜிட்டல் மயமாக்கல் பொறிமுறை செயல்படுத்தப்படும். அப்படியானால், பொறிமுறையில் கீழ் மட்ட நிர்வாகத்தின் பொறுப்பு என்ன? அதன் தன்மையைக் கண்டறிந்து, அந்த அலகை அந்த இயல்புடன் முன்னோக்கி எடுத்துச் செல்ல ஒரு திட்டத்தை உருவாக்குவதே கீழ் மட்டத்திலுள்ள நிர்வாக அலகின் பொறுப்பாகும்.பிரதேச செயலக அலுவலகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான ஒரு திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். அந்த இடத்திற்காக பணத்தைச் செலவிட வேண்டிய அவசியம் உள்ளது.அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நமது அரச இயந்திரம் குறிப்பிடத்தக்க அளவிற்கு பழுதடைந்த நிலையில் உள்ள ஒரு அரச இயந்திரம் என்பதையும் நான் ஏற்கிறேன். அரச அதிகாரிகளுக்குச் சொந்தமான அனைத்து வாகனங்களையும் எடுத்துக் கொண்டால்,
அவை 15 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. வீதியில் உள்ள பஸ்களில் 50% க்கும் அதிகமானவை வீதியில் பயணிக்கத் தகுதியற்றவை. அலுவலகத்தில் உள்ள கணினிகள் கணிசமானவை பழமையானவையாகும். எங்கள் நிறுவனங்களில் உள்ள முறைமைகள் புதுப்பிக்கப்படவில்லை. கட்டிடங்கள் சிதைந்து வருகின்றன. ஒவ்வொரு கோணத்திலிருந்தும் பார்த்தால், எங்களிடம் ஒரு அரசு இயந்திரம் பழுதடைந்துள்ளது. ஒரு சாதாரண கிராமவாசியைப் போல, எங்கள் பையில் கொஞ்சம் வெற்றிலையுடனும் பாக்குடனும் அலுவலகத்திற்கு வருகிறோம். அதுதான் உண்மை. கடந்த வரவு செலவுத்திட்டத்தில், சம்பளம் அதிகரிக்கப்பட்டது. மனித வளங்களுக்கு தேவையான ஆதரவு வழங்கப்பட்டது.
எனவே, அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் அரச இயந்திரத்தின் பௌதீக வளங்களை கட்டியமைக்க நாங்கள் பாடுபட இருக்கிறோம்.பெளதீக வளங்களை உருவாக்குவதை விட புதிய மென்பொருள் அமைப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரச கட்டமைப்பை நவீனமயமாக்குவோம். இருப்பினும், பிரஜைகளுக்காக நாங்கள் அதைச் செய்வோம்.
அவ்வாறு நவீனமயமாக்கப்பட்ட அரசாங்கத்தில், பழைய நாற்காலியில் அதே பழைய நபர்அமர்ந்தால், அதில் எந்தப் பயனும் இல்லை. எனவே, அந்த நவீனமயமாக்கப்பட்ட அரச இயந்திரத்தில் நமக்கு ஒரு புதிய அரச ஊழியர் அமர வேண்டும். அப்போதுதான் இந்த சவாலை நாம் வெற்றி கொள்ள முடியும். இல்லையெனில், இது ஒரு அரசியல் அதிகாரத்திலுள்ளவர்களின் பொறுப்பு கிராம உத்தியோகஸ்தரின் பணி, அபிவிருத்தி அதிகாரியின் பணி, பிரதேச செயலாளர் பணி என நாம் ஆங்காங்கே பிரித்து இதனைச் செய்ய முடியாது. அரசியல் அதிகாரத்தையும் அரச இயந்திரத்தையும் கைவிடாத ஒரு கூட்டு நடவடிக்கை தேவை. அரச இயந்திரம், அரச அதிகாரி மற்றும் குடிமகனை ஒரு கூட்டு பொறிமுறைக்குள் கொண்டுவருவதே சமூக சக்தி திட்டத்தின் நோக்கமாகும். அவ்வாறின்றி எதையும் வெற்றிகொள்ள முடியாது. இருக்கும் ஒரு அரசை பராமரிக்க எமக்குத் தேவையில்லை. அவ்வாறு செய்வதானால் இருக்கும் அரசை தற்பொழுது இருப்பது போன்றே பராமரிக்கலாம்.
வீழ்ச்சியடைந்த ஒரு அரசை கட்டியெழுப்ப , அரசியல் அதிகாரம், அரச இயந்திரம் மற்றும் குடிமகனை ஒரு ஒன்றிணைந்த நடவடிக்கைக்குள் கொண்டு வர வேண்டும். எனவே, வீழ்ச்சியடைந்த அரசில் பொருளாதாரத்தை இழந்த ஒரு சமூகம் உள்ளது. பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க அந்த சமூகத்திற்கு ஒரு கூட்டு நடவடிக்கை அவசியப்படுகிறது. இந்த சமூக சக்தி திட்டத்தை வெற்றிபெறச் செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கோருகிறேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
– சமூக சக்தி தேசிய கொள்கைச் சபையின் ஒருங்கிணைப்பாளரும், தேசிய நடவடிக்கைக் குழுவின் தலைவரும் , கிராமிய அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்ததாவது, நமது நாட்டில் வறுமை பற்றிப் பேசுகையில், கிராமம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. இலங்கையில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும், குறிப்பாக ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கப் பகுதிகளைப் நோக்கினால், கிராமத்தை மறந்துவிடாமல் வறுமையைப் –
பற்றி ஆராய முடியாது. அதனால் தான் ஐக்கிய நாடுகள் சபை ஜூலை 6 ஆம் திகதியை உலக கிராமப்புற அபிவிருத்தித் தினமாக அறிவித்துள்ளது.
நம் நாட்டில் கிராமப்புற வறுமை பற்றி பல தசாப்தங்களாக பேசப்பட்டு வருவதோடு அதை மாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உதாரணமாக, 2000 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, நம் நாட்டில் நிவாரணத்தை நம்பியிருக்கும் மக்களின் எண்ணிக்கை 1.1 மில்லியனாக இருந்தது. 2010 ஆம் ஆண்டளவில், அது 1.5 மில்லியனாக அதிகரித்தது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில், நிவாரணத்தை நம்பியிருக்கும் மக்களின் எண்ணிக்கை சுமார் 1.8 மில்லியனை எட்டியது.
வறுமையை ஒழிக்க எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், நம் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. உலக மக்கள் தொகை வேகமாக நகரமயமாகி வந்தாலும், நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 79% ஆனோர் கிராமப்புறங்களில் அல்லது தோட்டங்களை அண்டியதாக வாழ்கின்றனர். எனவே, தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமாக, எங்கள் கொள்கைகளைத் திட்டமிடும்போது கிராமப்புற வறுமையை ஒழிப்பதை ஒரு முக்கிய எண்ணக்கருவாகக் கொண்டோம்.
இந்தத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன், நம் நாட்டில் செயல்படுத்தப்படும் வறுமை ஒழிப்புத் திட்டங்களின் பலவீனங்களை நாங்கள் கவனமாக ஆய்வு செய்தோம். அந்த பலவீனங்களை ஒதுக்கி நம் நாட்டில் வறுமையை உண்மையிலேயே எவ்வாறு ஒழிப்பது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த திட்டத்தை நாங்கள் தயாரித்தோம். இந்த திட்டத்தின் மூலம் பல நோக்கங்களை அடைய நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க,பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க உள்ள அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் , மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, மாகாண ஆளுநர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
(-2025.06.19 – China-) சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் இந்நாட்களில் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா அவர்களை உள்ளிட்ட குழுவினர் பீஜிங் நகரத்தில் பிரதான மக்கள் மண்டபத்தில் சீன கம்யூனிஸ் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்கள், நிலையியற் குழு உறுப்பினர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புப் பிரிவின் பிரதானி தோழர் ஷீ தெய்ஃபென் உள்ளிட்ட மேல் மட்டத் தலைவர்களை சந்தித்தனர். மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன […]
(-2025.06.19 – China-)
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் இந்நாட்களில் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா அவர்களை உள்ளிட்ட குழுவினர் பீஜிங் நகரத்தில் பிரதான மக்கள் மண்டபத்தில் சீன கம்யூனிஸ் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்கள், நிலையியற் குழு உறுப்பினர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புப் பிரிவின் பிரதானி தோழர் ஷீ தெய்ஃபென் உள்ளிட்ட மேல் மட்டத் தலைவர்களை சந்தித்தனர்.
மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ் கட்சிக்கும் இடையில் நிலவுகின்ற நீண்டகால உறவு பற்றி நினைவுகூர்ந்த தோழர் ஷீ தெய்ஃபென், கட்சித் தொண்டர்களின் அரசியல் கோட்பாடு சார்ந்த அறிவினை தொடர்ச்சியாக விருத்தி செய்வதில் உள்ள முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன், சீனா எந்தவொரு நேரத்திலும் தனது அனுபவத்தை மக்கள் விடுதலை முன்னணியுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு இணங்க தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தாம் தயார் என்றும், அதுதொடர்பான சில புரிந்துணர்வுகள் இந்த வருடத்தின் தொடக்கத்தில் சீனாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுடுன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலும் நிலவுகின்ற நட்புறவு இந்த சுற்றுப்பயணத்தின் ஊடாக இன்னொருபடி விரிவடைந்தது என்று தோழர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
அத்துடன், சீனாவின் ஜஜியான் மாநிலத்திலும் குய்ஷு மாநிலத்திலும் உள்ள ஊர்களில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் அந்த ஊர்களை முன்னேற்றுவதற்கு மேற்கொண்ட செயன்முறைகள் பற்றி சிறந்த புரிந்துணர்வினை ஏற்படுத்திக் கொள்ள முடிந்ததென்றும் இலங்கையை அபிவிருத்தியடைச் செய்யும் வேலைத்திட்டத்தை வெற்றிமிக்கதாக்கிட இந்த அனுபவங்கள் உதவி புரியும் என்றும் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இறப்பர் – அரிசி ஒப்பந்தம் முதற்கொண்டு வெவ்வேறு முறைகளின் மூலம் சீனா இலங்கைக்கு உதவி புரிந்து வருவதாகவும் நிகழ்காலத்திலும் இலங்கைப் பாடசாலை பிள்ளைகளுக்கு சீறுடைத் துணிகளை வழங்கியமை குறித்து வரவேற்று கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா, 2026 ஆம் ஆண்டிலும் இவ்வாறு சீறுடைத் துணிகள் இலங்கையின் பாடசாலைகளுக்கு கிடைக்கும் என்று தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசப் பிரிவின் பிரதி அமைச்சர் தோழர் சுன் ஹெய்யான் உள்ளிட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மேல் மட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், மக்கள் விடுதலை முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம். ஜெகதீஸ்வரன், மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தீப்தி வாசலகே, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மபிரிய விஜேசிங்க உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
(-2025.06.17 – China-) சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின்பேரில், இந்நாட்களில் சீனாவிற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வாவை உள்ளிட்ட குழுவொன்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகார திணைக்களத்தின் தலைமையகத்தில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜின்தாவோவை உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடினர். மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் நிலவுகின்ற நீண்டகால நட்புறவை எவராலும் சிதைக்க முடியாதென்றும் அந்த நட்புறவை சிதைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் […]
(-2025.06.17 – China-)
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின்பேரில், இந்நாட்களில் சீனாவிற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வாவை உள்ளிட்ட குழுவொன்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகார திணைக்களத்தின் தலைமையகத்தில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜின்தாவோவை உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடினர்.
மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் நிலவுகின்ற நீண்டகால நட்புறவை எவராலும் சிதைக்க முடியாதென்றும் அந்த நட்புறவை சிதைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜின்தாவோ இதன்போது வலியுறுத்திக் கூறினார்.
நாட்டை அபிவிருத்திச் செய்யும் வேலைத்திட்டத்திற்கு எந்தவொரு வேளையிலும் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு சீனா தயாராக இருப்பதாகவும் எந்தவொரு நாட்டின் தன்னாதிக்கத்திற்கும் குந்தகம் ஏற்படும் வகையில் சீனா செயற்படாது என்றும் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜின்தாவோ தெரிவித்துள்ளார்.
இதன்போது, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா குறிப்பிட்டதாவது,
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலும் நிலவுகின்ற நட்புறவு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், ஜனாதிபதி தோழர் அநுர குமார திசாநாயக்கவின் விஜயத்தின்போது மேலும் ஒருபடி உறுதிபெற்றுள்ளதாகவும், அதைப்போலவே, என்னை உள்ளிட்ட எமது தோழர்கள் மேற்கொண்ட இந்தச் சுற்றுப்பயணத்தில் தமது நட்புறவு இன்னொருபடி உறுதியானதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வின் அடிப்படையில் தாம் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் சீனா இலங்கைக்கு வழங்குகின்ற ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் எதிர்காலத்திலும் அந்த ஒத்துழைப்பினை தாம் எதிர்பார்ப்பதாகவும் இதன்போது தெரிவித்தார்.
சீனாவில் மேற்கொண்ட இந்த சுற்றுப்பயணத்தில் சீனாவை கட்டியெழுப்புவதற்கு முன்னாள் தலைவர் மாவோ சேதுங் தொடக்கம் நிகழ்கால தலைவர் ஷீ ஜின் பிங் வரை சீனாவில் செயற்பட்டு வரும் விதம் பற்றி தாம் மகிழ்ச்சியடைவதாகவும் சீனா தமக்கே உரித்தான பாணியில் மார்க்சிஸத்தை முன்னோக்கி கொண்டு செல்வது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் குறிப்பிட்டார்.
இந்தச் சுற்றுப்பயணத்தின்போது கட்சிப் பாடசாலைகளில் மற்றும் ஊர்களை கட்டியெழுப்புவதற்காக செயற்பட்டுள்ள விதம் பற்றிய கல்வியில் பெற்றுக்கொண்ட அனுபவம் இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கு சிறப்பாக பங்களிப்புச் செய்யும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சுன் ஹெய்யானை உள்ளிட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகார திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவம் செய்து இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.ஜெகதீஸ்வரன், மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தீப்தி வாசலகே, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மபிரிய விஜேசிங்க உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டனர்.