Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

“நாட்டை கட்டியெழுப்பும் மக்கள் சக்தி திரண்ட மேதினக் கூட்டம்”

(-2025.05.01 காலி முகத்திடலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டம்.-) – மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி வலியுறுத்தல் அறுபத்தைந்து ஆண்டுகளாக ஒரே குறிக்கோளுக்காக தன்னை அர்ப்பணித்து அதிகாரத்தைப் பெறுவதற்கான மிகப் பாரிய சவாலை வெற்றிகொண்ட தனது அரசியல் இயக்கம், இந்த நாட்டைக் கட்டியெழுப்புதல் மற்றும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்ற சவாலை நிச்சயமாக வெல்லும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். நாட்டைக் கட்டியெழுப்பி முன்னோக்கி கொண்டுசெல்லத் தயாராக இருக்கும் ஒரு இயக்கத்தால் […]

(-2025.05.01 காலி முகத்திடலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டம்.-)

President AKD addressing crowd at the may day rally
  • கடுமையான யதார்த்தத்தை புதிய பாதைக்கு மாற்றுவதில் குறுக்குவழிகள் எதுவும் இல்லை: அது மிகவும் முறையான மற்றும் திட்டமிடப்பட்ட முயற்சியாகும்
  • நாட்டைக் கட்டியெழுப்புதல் மற்றும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்ற சவாலை நாம் நிச்சயமாக வெற்றிகொள்வோம்.
  • சவால்களை எதிர்கொள்வதில் ஒரே நோக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் பாரம்பரியம் எம்மிடம் உள்ளது.
  • நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சியை வெற்றிக்கொள்ள தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

– மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி வலியுறுத்தல்

அறுபத்தைந்து ஆண்டுகளாக ஒரே குறிக்கோளுக்காக தன்னை அர்ப்பணித்து அதிகாரத்தைப் பெறுவதற்கான மிகப் பாரிய சவாலை வெற்றிகொண்ட தனது அரசியல் இயக்கம், இந்த நாட்டைக் கட்டியெழுப்புதல் மற்றும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்ற சவாலை நிச்சயமாக வெல்லும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

நாட்டைக் கட்டியெழுப்பி முன்னோக்கி கொண்டுசெல்லத் தயாராக இருக்கும் ஒரு இயக்கத்தால் இன்று நாடு ஆளப்படுகிறது என்றும், அதன்போது, இந்த நாட்டின் தொழிற்சங்க இயக்கமும் தனது பழைய ஆடைகளைக் களைந்து புதிய ஆடைகளை அணிய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் தெரிவித்த ஜனாதிபதி,

நாட்டைக் கட்டியெழுப்பும் பணியை வெற்றியடையச் செய்ய அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு அனைத்து தொழிற்சங்கங்க இயக்கங்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

காலி முகத்திடலில் இன்று (01) பிற்பகல் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

” நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் சக்தி அணிதிரளும் மே தினக் கூட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த மக்கள் பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

President AKD on stage at the may day rally

இன்று செயற்படும் ஒரே அரசியல் இயக்கமாக இருப்பது தேசிய மக்கள் சக்தி என்றும், இந்த நாட்டின் எதிர்காலமும் மக்களின் எதிர்காலமும் முழுமையாக தேசிய மக்கள் சக்தியின் கைகளில் உள்ளது என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் முழுமையான உரை வருமாறு,

நாங்கள் நீண்ட காலமாக மே தினத்தை கொண்டாடியிருக்கிறோம். அப்போது அதிகாரத்தை கைப்பற்ற மக்களை திரட்டுவதே நோக்கமாக இருந்தது. இன்று முதல் முறையாக அதிகாரத்தை கைபற்றி நாட்டை கட்டியெழுப்புவதற்கான கூட்டத்தை நடத்துகிறோம். இன்று தேசிய மக்கள் சக்தி மட்டுமே அரசியல் கட்சியாக உள்ளது. இந்நாட்டின் எதிர்காலமும் மக்களின் எதிர்காலமும் தேசிய மக்கள் சக்தியின் கைகளிலேயே உள்ளது. மற்றைய எதுவும் அரசியல் கட்சிகள் அல்ல. அவை இடிபாடுகள் மட்டுமே. ஆனால் சில குரல்கள் கேட்கிறது. அவற்றில் என்ன தெரிகிறது. நீண்ட காலம் அவர்கள் நாட்டை ஆண்டனர். அத்தோடு நின்றுவிடாமல் அதிகாரத்தை தமது தலைமுறையினர் மீது மாட்டியிருந்தனர். மகன், தம்பி,தந்தை மற்றும் மகன்,மருமகன் என்ற வகையில் அதிகார வரைவு மாட்டப்பட்டிருந்தது. தந்தை, தாய்,மகள் என்ற வகையில் அதிகார வரைவு மாட்டப்பட்டிருந்தது.

மாமன் மருமகன் அதிகார வரைவு மாட்டப்பட்டிருந்தது. அதனால் அவர்கள் நீண்டகாலமாக அவர்களின் தலைமுறையினர் கைகளில் அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டு, எமது நாட்டு மக்களை நெருக்கடிக்கும் அநீதிக்கும் உட்படுத்தி அதிகாரத்தை கொண்டுச் செல்ல முடியுமென நினைத்திருந்தனர். ஆனால் கடந்த செப்டம்பர் 21 இந்நாட்டு மக்கள் மிகத் துணிச்சலாக தீர்மானமொன்றை எடுத்தனர். அந்த தீர்மானத்தின் ஊடாக பல தலைமுறைகளுக்கு அதிகார வரைவை மாட்டிக்கொண்டிருந்தவர்களின் கைகளிலிருந்து மக்களின் கைகளுக்கு ஆட்சி மாற்றிக்கொள்ளப்பட்டது. அந்த அதிகார இழப்பு மற்றும் எதிர்பார்ப்புக்களை இழந்ததன் அவலக் குரலை எமக்கு கேட்கிறது.

May Day Rally crowd at Gallface

மறுதிசையில் அவர்கள் அதிகாரத்தில் இருந்த வேளையில் மக்கள் பணத்தை விரயம் செய்து, மிகுந்த வரப்பிரசாதங்களுடன் கூடிய வாழ்வைக் கழித்தனர். பொது சட்டங்களுக்கு அடிபணியாமல் வாழ்ந்தனர். பொதுமக்களுக்கு மேலாக அதிகார பராக்கிரமத்தை கட்டமைத்துக்கொண்டு மக்களுக்கு மேலிருக்கும் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தினர். இன்று என்ன நடந்திருக்கிறது. பொது சட்டத்துக்கு பணிந்துள்ளனர். வரப்பிரசாதங்களை இழந்துள்ளனர். சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதனால் அவர்களுக்கு இப்போது கவலை வந்திருக்கிறது. அதனால் தான் எதிர்த்திசையில் வேதனையின் அவலக்குரல் கேட்கிறது.

இன்னொரு பக்கத்தில் அவர்கள் செய்த குற்றங்களின் அளவை எங்களை விடவும் அவர்களே அறிவார்கள். அவர்கள் செய்த ஊழல்களையும் எங்களை விட நன்றாக அறிவர். அவர்கள் ஊழல் மற்றும் மோசடி, குற்றங்களின் ஈடுபட்ட விதத்தை அறிவார்கள். அதனை போலவே நாம் யார் என்பதையும் அறிவார்கள். நினைவில் கொள்ளுங்கள்! அவர்களின் குற்றங்களை அறிந்திருக்கும் அளவிற்கு நாங்கள் யார் என்பதும் அவர்களுக்கு தெரியும். அதனால் பீதியின் அவலக் குரல் கேட்கிறது. அதனால் அரசியலின் மறுமுனையில் இன்று என்ன இருக்கிறது? எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாததன் வேதனை. வரப்பிரசாதங்களை இழந்திருப்பதன் அவலக்குரல். பீதியில் அல்லாடுகிறார்கள். அதனால் வேறு அரசியல் கட்சிகள் இல்லை. அவர்கள் பொதுவௌியில் வெட்டித்தனமாக பாடித்திரியும் குழுக்களாக மாறியுள்ளனர்.

மார்ச்சில் அரசாங்கம் சரியும் என்று சொல்கிறார்கள். மார்ச் மாதம் முடிந்தவுடன் ஓகஸ்ட் என்று சொல்கிறார்கள். ஓகஸ்ட் வரும் முன்பாக அடுத்த ஏப்ரல் வரை ஒத்திவைக்கிறார்கள். பின்னர் அடுத்தவர் டிசம்பரில் வருவதாக சொல்கிறார். அவை வெட்டித்தனமான பாடல்கள். அந்த பக்கத்தில் அரசியல் கட்சிகள் இல்லை. தூரநோக்கம் இல்லை. ஒருங்கிணைக்கும் இயலுமை இல்லை. செய்வது என்னவென்று தெரியவில்லை. அங்குமிங்கும் சிதறிய தொகுதிகளின் கூட்டிணைவு காணப்படுகிறது. அவை அரசியல் கட்சியல்ல.அதனால் எங்களுக்கு வௌியில் எங்களுக்கு சவாலொன்று இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

President AKD speaking at the may day rally

எங்களுக்கு வௌியே எங்களுக்கு சவாலொன்று உள்ளதா? இல்லை! எங்களுக்கு வௌியில் இன்று காணப்படுவது இடிபாடுகளின் கூட்டிணைவே அன்றி சவால் அல்ல. எனவே சவால் எங்கு உள்ளது. எங்களுக்குள்ளேயே எங்களுக்கான சவால் உள்ளது. அதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சவால் இருப்பது எமக்கு அண்மையில்தான். சவால் இருப்பது எமக்கு அருகில் தான். அதனால் சவாலை போக்குவதற்கு நாம் எமக்குள்ளேயே காணப்படுகின்ற எதிர்ப்புக்கள், பொருத்தமின்மை, புதிய நிலைக்கு மாறுவதற்கு இயலாமை,புதிய நிலையை புரிந்துகொள்ள இயலாமை, புதிய நிலைமைக்கு அமைவாக இசைவாக்கம் அடைவது எவ்வாறு? இசைவாக்கம் அடைய இயலாமை என்பன எம்மிடத்திலேயே உள்ளன. வௌியில் வேறு சவால்கள் இல்லை. நாம் யார்? நாம் சிறிய காலமன்றி 65 வருடகால அர்ப்பணிப்பின் உரிமை எம்மிடத்தில் உள்ளது. ஒரு நோக்கத்துக்கான அர்ப்பணித்த கட்சியே இன்று இங்கு கூடியுள்ளது.

பல தலைமுறைகளாக வெற்றி, தோல்வி, கடுமையான சவால்கள், அருகில் இருந்தவர்கள் கைவிட்டுச் சென்றமை, கைவிட்டுச் சென்றது மட்டுமல்லாது எதிரான கட்சிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்களுடன் நாம் நோக்கத்தை கைவிடாமல் இருந்தோம். எனவே நாங்கள் யார்? நோக்கத்துக்கான உரிமைகளை தோலில் சுமந்து செல்லும் அமைப்பு. சில நேரங்களில் நாம் பழகிப்போன அதிகாரத்திற்கு வேலை செய்திருக்கிறோம். இலக்குகளை மிகத்தூரமானவை சவால்கள் நெருக்கமானவை எமக்கு முன்பாக பல குழப்பங்கள், ஆனாலும் நாம் பாடுபட்டோம், எமது வழக்கமான அதிகாரம் எம்மை பாடுபட தூண்டியது. வேலை செய்வதால் வந்த வழக்கம் எம்மை பாடுபட தூண்டியது. இவை அனைத்தையும் செய்து கடந்த செப்டம்பர் 21 அதிகாரத்தை கைபற்றினோம்.

இப்போது எம்மிடம் இருப்பது வழக்கமான அதிகாரம் அல்ல. மாறாக நம்பிக்கையின் அதிகாரமே உள்ளது. எமக்கு நம்பிக்கை உள்ளது. இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். இந்த நாட்டு மக்கள் எம்மை நம்புகிறார்கள். எம்மீது எதிர்பார்ப்புக்களை வைத்துள்ளனர். அரசியல் கட்சி என்ற வகையில் நாங்கள் பொதுமக்களை ஒரு நோக்கத்தை நோக்கி திரட்டிக்கொண்டிருக்கிறோம். அதுவே நம்பிக்கையின் பலம். எனவே எமக்கு இருப்பது அரசியலமைப்பில் கிடைத்த அதிகாரத்தை மிஞ்சி செல்லும், பாராளுமன்றத்தில் எமக்கு கிடைத்த அதிகாரத்தை மிஞ்சிய நம்பிக்கையின் பலம் எம்மிடம் உள்ளது. 65 வருடங்களாக ஒரே நோக்கத்துடன் கடுமையான சவால்களுக்கு மத்தியில் வரம்புகளை மிஞ்சிய அதிகாரத்தை பெற்றுக்கொண்டுள்ள நாங்கள், உறுதியாக இந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கையின் சக்தியுடனே நாங்கள் இதில் இறங்கியிருக்கிறோம்.

Crowd at May Day Rally

அதனால் பெரும் நம்பிக்கையோடு நாம் இந்த பணியை செய்கிறோம். மிகப்பெரிய நம்பிக்கை கொண்டிருக்கிறோம். நடைமுறை தன்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. மிகக் கடுமையான யாதார்த்தமே எம்முன் உள்ளது. பாதாளத்திற்குள் விழுந்திருக்கும் பொருளாதாரம், சமூகத்தில் மற்றையவர் மீதான கருணையை இழந்திருக்கும் சமூகம், சட்டம் ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்பட நடைமுறைப்படுத்தப்பட்ட சமூகம், எமது நாட்டின் நிறுவனக் கட்டமைப்புக்கள் மற்றும் அவற்றின் நோக்கங்கள் முழுமையாக சரிவடைந்திருந்த நிலைமை, சமூக பொறுப்புணர்வு தொடர்பில் அனைத்து பிரஜைகள் மத்தியிலும் சிதைந்துபோன நம்பிக்கை நிறைந்த சமூகமே இருக்கின்றது. எம்முன் இருப்பது யதார்த்தம் கடுமையானது என்பதை நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். ஆனாலும், சமூகத்தின் நீதி மற்றும் நியாயத்துக்காக போராடுகிறோம். கடுமையான யதார்த்தம் எம்முன் இருந்தாலும் எமது நோக்கங்கள் எவ்வாறானது? நாம் சமூகத்தில் நீதியை உருவாக்குகிறோம். நீதியை நிலைநாட்டுகிறோம். அவ்வாறு கைவிடாமல் போராடுவோம். கைவிடப்போதவில்லை!

சமூக நீதியை நிலைநாட்டுவது நாளாந்தம் நடக்கும் தினசரி நிகழ்வல்ல. சமூக நீதியை உருவாக்குவது ஓரிரு இரவுகளில் நடக்காது. ஆனாலும் சமூகத்தின் நீதி மற்றும் நியாயத்திற்காக நாம் மிகவும் சரியான முறையில் செயல்படுகிறோம். அது அனைவருக்கும் தெரியும். பொதுவாக விவசாயியொருவர் தனது அறுவடையை செய்துகொள்ளும் வரையில் எடுக்கின்ற முயற்சிகள் முறையான நெசவாகும். வயல்களை சுத்தப்படுத்தி, வரம்புகளை கட்டி, வயல்களை உழுது, நெல்களை நாட்டி, புல்களை அகற்றி,உரமிட்டு அறுவடை செய்ய வேண்டும். எனவே தனது அறுவடையை பெற்றுக்கொள்ள சரியான முறையொன்று அவசியம் என்பது எந்தவொரு விவசாயிக்கும் தெரியும். அதனை விவசாயிகள் அறிவர். பொதுவாக வீட்டுப் பணிகளை செய்யும் பெண்மணி அதற்கான தகுந்த முறைமையை அறிவார். எழும்புதல், உணவு சமைத்தல், பிள்ளைகளை பராமரித்தல், பிள்ளைகளுக்கு ஆலோசனை வழங்குதல், வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளல், அவசியமான வருமான வழிகளை உருவாக்குதல் என்ற வகையில் பெண்னொருவர் வீட்டை பராமரிப்பதும் சரியானதொரு முறையிலாகும்.

எனவே, கடுமையான சமூக யராத்தம் கொண்ட நாட்டில் சமூக நீதியை நிலைநாட்டுவது சமூக நியாயத்தை நிலைநாட்டுவது போகிற போக்கில் செய்யப்படும் காரியம் அல்ல. அது தற்செயலாக நடப்பதும் அல்ல. அது மிக நன்றாக திட்டமிடப்பட்ட நல்லதொரு முறைமையாகும். ஒரே இரவில் பிரதிபலன்களை எதிர்பார்ப்பவர்களுக்கே இதனை சொல்கிறேன். 76 வருடங்களாக அழிவின் ஆழத்திற்கே கொண்டுச் சென்று, ஆறு மாதங்களில் பலனை எதிர்பார்ப்பவர்களுக்குச் சொல்கிறேன். மிகக் கடுமையான யதார்த்தமொன்று உள்ளது அதனை நாம் புரிந்துகொண்டுள்ளோம்.

JVP secretary Tilvin Silva addressing the crowd at the may day rally

அந்த யதார்த்திற்கு மத்தியில் திட்டமிடப்பட்ட எதிர்காலத்தை உருவாக்க சரியான முறையொன்று அவசியம். எமது செயல்பாடுகளை மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்து அதனை சரியான முறையில் செய்வோம் என்பதை இந்நாட்டு மக்களுக்கு உறுதியாக கூறுகிறேன். வெற்றிகரமாக அதனை செய்வோம். முயற்சி கைவிடப்போவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது தற்செயலாகவோ, எதேற்சையாகவோ நடக்காது. கடுமையான யதார்த்தத்திலிருந்து புதிய சமூகத்தை தோற்றுவிக்க குறுக்கு வழிகள் இல்லை. இது மிகவும் சரியான திட்டமிடப்பட்ட முயற்சியாகும். தேசிய மக்கள் சக்தி மக்களின் எதிர்பார்ப்பு, நோக்கங்கள், மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் தன்மை என்ற அனைத்தையும் புரிந்துகொண்டுள்ளது.

நீங்கள் சொல்வதை விடவும் அதிகமாக நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் சக்தியை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம். எனவே நாங்கள் மிகவும் திட்டமிட்டவாறு அழிவுகரமான சமூகத்தை, சரியான பொருளாதாரம் சரியான சமூக அணுமுறைகளுடன் கூடிய பயணத்தை செல்லக்கூடிய நாடாக மாற்றுவதற்கான பயணத்தை ஆரம்பித்திருக்கிறோம். ஆரம்பம் எங்குள்ளது. அதற்கு வழுவான அத்திபாரத்தை இட வேண்டும். அத்திபாரம் இல்லாத நாடே எம்மிடம் இருந்தது. துடுப்பு உடைந்த கப்பலை போன்றது. இலக்கு இல்லாமல் மிதந்துகொண்டிருந்த நாடு. எல்லையின்றி போகிற போக்கில் சென்றுகொண்டிருந்த நாடு. போகிற போக்கில் சென்ற சமூகம், இதனை சரியான பாதைக்கு மாற்ற வலுவான அத்திபாரத்தை இட வேண்டும். அதுவே முக்கியமானது. கடந்து வந்த காலத்தில் அத்திபாரத்தை அமைத்தற்காக நாங்கள முடிந்தளவில் பாடுபட்டிருக்கிறோம். அத்திவாரத்தின் பிரதான தூண்கள் யாவை? ஊழலற்ற அரசியல், இந்நாட்டை கட்டியெழுப்புவதற்காக பாதையை அமைத்துகொள்ள கட்டியெழுப்ப வேண்டிய முதல் தூண் ஊழலற்ற அரசியல். 76 வருடங்களுக்கு பின்பு மக்களின் ஒரு ரூபாவைக்கூட திருடாத விரயம் செய்யாத அரசியல் இலங்கையில் உருவாகியிருக்கிறது. அந்த தூண் இல்லாமல் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

அந்த அத்திபாரத்தை நாம் அமைத்திருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அடுத்தாக அந்த வலுவான அத்திபாரத்தை அமைக்க எமக்கு தேசிய ஒற்றுமை அவசியம். தேசிய ஒற்றுமை இல்லாமல் எமது நாடு முன்னோக்கிச் செல்ல முடியாது. என்ன நடந்திருக்கிறது. கடந்த பொதுத் தேர்தலில் எம்மையும் மிஞ்சி மக்கள் அதற்காக அடி வைத்திருக்கிறார்கள். சில நேரங்களில் நாங்கள் பின்தங்கியிருப்பதாக நினைக்கிறோம். மக்கள் முற்போக்காக இருக்கிறார்கள். வடக்கு , கிழக்கு மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது பாரிய நம்பிக்கை வைத்து எம்மையும் மிஞ்சிய அடியை வைத்தனர். எவ்வாறான நிலைமை. வடக்கோடு மிகக் குறைவாகவே அரசியல் செய்திருக்கிறோம். கிழக்கிலும் மிகக் குறைவாகவே அரசியல் செய்திருக்கிறோம். வடக்கிலும் கிழக்கிலும் தமிழில் தொடர்பாடல் செய்ததும் மிகக் குறைந்த அளவிலாகும். ஆனால் வடக்கின் பாரம்பரிய அரசியல் கட்சிகள் பாரம்பரிய தலைவர்கள் அனைவரையும் புறக்கணித்து எம்மை நம்பியதால் என்ன தெரிகிறது. தேசிய ஒற்றுமையின் தேவைக்காக எம்மை மிஞ்சிய அடி வைக்கப்பட்டுள்ளது. அந்த மக்கள் திரும்பிச் செல்வதற்கு நாம் ஒருபோதும் இடம்கொடுக்கப்போவதில்லை. அவர்களின் உரிமைகள், கலாச்சார உரிமைகள், மொழி உரிமை, பூர்வீக காணி உரிமை, சுதந்திரமாக வாழும் உரிமை மற்றும் அவர்கள் இந்நாட்டு பிரஜைகளாக வாழ்வதற்கான உரிமைகள் என அனைத்தையும் உறுதிப்படுத்துவோம்.

NPP secretary Nihal Abeysinghe at the may day rally

அதுவே நாட்டின் முன்னேற்றத்துக்கான இரண்டாவது தூண். அது இல்லாமல் எமது நாட்டை கட்டியெழுப்புவது குறித்து நினைத்துப்பார்க்கவும் முடியாது. பழைய அரசியல் என்பது யாது? பிளவுபடுத்தப்பட்ட அரசியல். வேறுபடுத்தப்பட்ட அரசியல். முதல் முறையாக இலங்கையை ஒற்றுமைப்படுத்தும் அரசியல் வென்றிருக்கிறது. வடக்கு,கிழக்கு,தெற்கு மக்கள் ஒரே நம்பிக்கையுடன் ஒரே அரசியல் கட்சியுடன் இணைந்திருக்கிறார்கள். எமக்கு தேவையான அத்திபாரம் அதுவாகும். அதனை நாங்கள் அமைத்திருக்கிறோம். அதுவே அளவீடு, அதுவே புரட்சி, அதுவே நாம் பெற்றுக்கொள்ளும் வெற்றி. மிக்க முக்கியமான அடியை நாங்கள் வைத்திருக்கிறோம். அதேபோல் எமக்கு வலுவான அரச சேவையொன்று அவசியம். எமது அரச சேவை சரிந்திருந்தது. அரச நிறுவனங்கள் சரிந்து கிடந்தன. நாம் வலுவான அரச சேவையை ஆரம்பிப்போம். 30 ஆயிரம் பேரை இணைத்துகொள்ளவுள்ளோம். அரச சேவையின் அடிப்படைச் சம்பளத்தை பெருமளவில் அதிகரித்திருக்கிறோம். அரச சேவை மீதான ஈர்ப்பை உருவாக்கியிருக்கிறோம்.

அதேபோல் அரச சேவையில் மேலீட்டுக் காணப்படும் அலட்சியத்தன்மை, செயலதிறன் இன்மை, உள்ளிட்ட அனைத்தையும் நீக்கி வலுவான அரச சேவையை கட்டமைப்பதற்கான அத்திபாரத்தையும் இட்டுள்ளோம். அடுத்த முக்கியமான விடயம் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வது, எமது நாடு எவ்வாறான நாடாக இருந்தது? மேலிருப்பவர்களுக்கு சட்டம் இல்லாத நாடு, மேலிருப்பவர்கள் சட்டத்துக்கு அடிபணிவதில்லை. மேலிருப்பவர்களுக்கு சட்டத்துக்கு பயமும் இல்லை. இலங்கையில் முதல் முறையாக மேலிருப்பவர் கீழிருப்பவர், அதிகாரத்தில் இருப்பவர் , அதிகாரம் இல்லாதவர் என்று அனைவருக்கும் சட்டத்தை சமமாக நடைமுறைப்படுத்தும் நாடொன்றை உருவாக்கியிருக்கிறோம். நல்லமல்லவா! அவ்வாறான நாடொன்று வேண்டுமல்லவா! ஆனால் பழைய நாடு என்று நினைத்துக்கொண்டிருக்கும் சிலர் ஒவ்வொரு கதைகளை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கதை சொன்ன மாத்திரத்திலேயே இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படுகிறார்.

அவர் இன்றும் பழைய நாடு என்ற நினைப்பில் இருக்கிறார். இல்லை இது புதிய நாடு. சட்டத்திற்கு அனைவரும் அடிபணிய வேண்டும். சட்டத்துக்கு முன் அனைவரும் சமமானவர்கள். சட்டமா அதிபர் திணைக்கம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, கீழ் மட்ட மக்களுக்கு மாத்திரம் செயல்படும் நிறுவனம் என்று நினைத்தால் அது பழைய யுகம். சட்டம் அனைவருக்கும் சமமான நாட்டை உருவாக்கியுள்ளோம். அதுவே இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான அடுத்த முக்கியமாக அத்திபாரம். அதனை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். சட்டத்தினால் நிறுவனங்களை பலப்படுத்துவதற்கு அப்பால் நடைமுறையிலும் அதனை காண்பிப்போம். குற்றம் செய்தது எப்போது, ஊழல் செய்தது எப்போது என்று இல்லாமல் காலம் எப்போதாக இருந்தாலும் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

Samanmalee Gunasinghe at the may day rally

சட்டத்தின் முன்பு அச்சப்பட வேண்டும், சட்டத்திற்கு பணிய வேண்டும் அதுவே சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான பாதை. அதனையும் நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். அடுத்ததாக சர்வதேசத்தின் முன்பாக கரும்புள்ளி வைக்கப்பட்ட நாடாக இலங்கை மாறியிருந்தது. நாம் படிப்படியாக மிக வலுவாக சர்வதேசத்திற்கு முன்பாக பாராட்டப்படும், சர்வதேசத்தின் முன்பாக எமது சுயாதீனத்தன்மை, எமது நாட்டை முன் நிறுத்தி செயல்படக்கூடிய அரசாங்கத்தை கட்டமைத்திருக்கிறோம். அதுவே நாட்டின் தேவை. அதனாலேயே ஜப்பான் அரசாங்கம் நிறுத்திய வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கிறது. சீனா அரசாங்கம் நிறுத்திய திட்டங்களை ஆரம்பிக்கிறது. இந்திய அரசாங்கம் மேலும் பல அன்பளிப்புக்களை வழங்க இஙணங்கியுள்ளது. நாம் மிக வலுவான சர்வதேச ஒத்துழைப்புக்கான அத்திபாரத்தை அமைத்திருக்கிறோம். இவ்வாறான அத்திபாரங்கள் அவசியம்.

ஊழலற்ற ஆட்சி, சகலருக்கும் சமமான சட்டத்தை கொண்ட நாடு, இனவாதத்திற்கு பதிலாக தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் ஆட்சி, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் ஆட்சி என்ற அனைத்தையும் நாங்கள் கட்டியெழுப்பியிருக்கிறோம். அதனால் இந்த அத்திபாரத்தின் மீது மிக வலுவான கட்டிடத்தை அமைப்போம். அதில் சமத்துவம், நீதி, சமூக கருணை, சமூகத்தின் பிணைப்பு, ஒருவருக்கொருவர் கௌரவம் செயதல், பொருளாதார மலர்ச்சி, தூய்மையான நாடு, சுற்றாடலை மிகவும் தூய்மையாக பராமரிக்கும் சமூகம் அதற்கு இருக்கும். வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியின் மீதும் அன்பு காட்டும் சமூகத்தை நாம் தோற்றுவிக்க வேண்டும். எனவே அவ்வாறான சமூகத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அத்திவாரத்தை அமைத்திருக்கிறோம். அமைத்துக்கொண்டும் இருக்கிறோம். சமூக எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்துகொள்ளக்கூடிய மிகப்பெரிய கட்டிடத்தை இதன் மீது நாங்கள் அமைப்போம். அந்த கட்டுமானத்தில் நம் அனைவருக்குமான பணிகள் உள்ளன.

அரசியல் அதிகார தரப்பான எமக்கும் பெரும் பணி உள்ளது. எமது பணிகளை நாம் அறிந்துகொண்டிருக்கிறோம். எமது வரம்புகளையும், இயலுமைகளையும், இயலாமைகளையும் அறிந்துகொண்டிருக்கிறோம். எம்மால் முடியாதவற்றை மற்றையவர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறோம். எம்மால் செய்ய முடியாதவற்றை மற்றையவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். கற்றுக்கொண்டு ஊழல்,மோசடி, விரயமற்ற ஆட்சிக்காக அர்ப்பணிப்போம். அத்திபாரத்தை அமைக்க மிக வலுவான அரசியல் தலைமைத்துவம் அவசியம் அதனை நாம் வழங்குவோம். அதனை செய்திருக்கிறோம். அடுத்ததாக எமது கைதொழில் மற்றும் தொழில் முனைவோருக்கு முதலீடு செய்வதற்கான அழைப்பை விடுத்திருக்கிறோம். உங்களுக்கு அவசியமான வசதிகளுடன் முடங்கும் இடங்களை கூறுங்கள் அதற்கு தீர்வு தருகிறோம். கொழும்பு நகருக்குள் வணிக பெறுமதியுடைய வெற்று நிலங்கள் மற்றும் தரிசு நிலங்களை எமது முதலாவது ஆட்சி காலத்தில் வெற்றிடங்களாக வைக்கமாட்டோம் என்று உறுதியளிக்கிறோம். அவை அனைத்தையும் நாட்டின் அபிவிருத்திகாக பயன்படுத்திக்கொள்வோம். அதற்காக கைத்தொழிலாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். தேவையான சட்ட பாதுகாப்பை வழங்குவோம். உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தித் தருவோம். ஆனால் சரியான வரியை செலுத்துங்கள் அதில் ஒவ்வொரு ரூபாவையும் நாங்கள் பாதுகாத்து தருவோம்.

Lal Kantha addressing at the may day rally

கைத்தொழிலாளர்கள், தொழில்முனைவோர், விவசாயிகளுக்கு பெரும் பணி உள்ளது நாட்டின் விளைச்சல் நிலங்களில் மீண்டும் விளைச்சலை ஆரம்பியுங்கள். ஒரு பகுதியிலும் வெற்று நிலங்களை வைக்காமல் விவசாய புரட்சியை நாட்டில் ஏற்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம். உர நிவாரணத்தை அதிகரிப்போம், சிறந்த விதை நெல்லை பெற்றுத்தருவோம். விவசாயத்தில் தொழில்நுட்பத்பை புகுத்த நடவடிக்கை எடுப்போம். நிலையான விலையை வழங்க நடவடிக்கை எடுப்போம். இந்த நாட்டில் விலைச்சலை ஆரம்பியுங்கள். நாட்டை கட்டியெழுப்ப விவசாயிகளான உங்களுடைய பங்களிப்பு அவசியம். எல்லை தெரியாமல் எமது பெரும் கடல் பரப்பில் சென்று மீன்பிடிக்கும் மக்களுக்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் வசதிகளை தருகிறோம். கடலுக்குச் செல்லுங்கள் மீன்பிடித்தல் அறுவடையை செய்யுங்கள். நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்புச் செய்யுங்கள்.

அதேபோல் எமது தொழிற்சங்கங்கள் பழைய அணுகுமுறைகளை கைவிடுங்கள். ஊசித் துண்டுக்கும் போராடிய காலத்தை கைவிடுங்கள். எமக்கு சட்டத்தினாலும், நியதிகளாலும் விடயங்களை கைவிடக்கூடிய அரசியல் கட்டமைப்பொன்று உருவாகியுள்ளது. எனவே தொழிற்சங்கங்கள் ஊசித் துண்டிலிருந்து அனைத்தையும் கேட்காதீர்கள். கால அவகாசம் தாருங்கள். வீதியில் இறங்கி விழிப்பூட்ட வேண்டிய கட்சி நாங்கள் அல்ல என்பதையும் நீங்கள் அறிவீர்கள். உங்களோடு பணியாற்றியிருக்கிறோம். உங்களுடைய எதிர்பார்ப்புக்களை புரிந்துகொண்டுள்ளோம். அவ்வாறு இல்லாவிட்டால் உங்கள் அடிப்படைச் சம்பளத்தை அதிகரித்திருக்க மாட்டோம். உங்களுடைய சிறிய அழுத்தம் கூட இல்லாமல் அடிப்படைச் சம்பளத்தை அதிகரித்தோம். நீங்கள் கேட்காமல் அனர்த்த கடனை அதிகரித்தோம். உங்களுடைய கோரிக்கை இன்றி சம்பள உயர்வை அதிகரித்தோம். மேலதிக நேர கொடுப்பனவை அதிகரித்தோடம். மேலதிக வேலை நேர கொடுப்பனவை அதிகரித்தோம். எனவே சிறிதொரு சொல்லின் மீது நின்று போராட தயாராக வேண்டாம்.

அது அநீதியானது. இன்று வந்திருப்பது நாட்டை கட்டியெழுப்ப தலையீடு செய்யும், நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்லும் கட்சியே ஆட்சிக்கு வந்துள்ளது. அதனால் எமது தொழிற்சங்கங்கள் பழைய ஆடைகளை அகற்றிவிட்டு புதிய ஆணைகளை அணிய வேண்டிய காலம் வந்திருக்கிறது. அரச சேவையை வலுவூட்டும் எண்ணம் கொண்ட அரசியல் கட்சியே இன்று இருக்கிறது. நாட்டின் முன்னேற்றத்துக்கு வலுவான அரச சேவை அவசியம் என்பதை நம்புகின்ற அரசியல் கட்சி, அரச சேவையை பலப்படுத்துவதற்கான குழுக்களை உள்ளீர்க்க முடியும் என்ற நம்பிக்கை மிகுந்த அரசியல் கட்சி, பதவி உயர்வை அரசியல் அன்றி இயலுமை மற்றும் திறனுக்கு முன்னுரிமை அளித்து வழங்க வேண்டுமென நினைக்கும் அரசியல் கட்சியே இன்று உள்ளது. இன்று இருப்பது தொழிற் சங்கங்களுடன் ஒன்றாக பணியாற்றிய அவர்களின் இதயத் துடிப்பை அறிந்த, அவர்களித் தேவைகளுக்காக சுவரொட்டிகளை வரைந்த, அதற்காக போராடிய, அவர்களுக்காக குரல்கொடுத்த அரசியல் கட்சி. எம்மிடையே இருக்க வேண்டிய வேறுபாடுகள் என்ன? எந்த முரண்பாடுகளும் இருக்க முடியாது. ஒற்றுமையாக இந்த நாட்டை கட்டியெழுப்பும் முயற்சிகளை முன்னெடுக்க எம்மோடு இணைந்துகொள்க.

Muneer Mulaffar at the may day rally

எமது இளம் அமைப்பினருக்கு பெரும் பணி உள்ளது. இளையோரின் எதிர்காலம் தொடர்பிலான மிகப் பாதகமான வரைபே அவர்களின் முன்பாக இருந்தது. சரிந்துபோன கனவுகளே இருந்தன. மீண்டும் கனவு காணும் இளம் சமூகத்தை உருவாக்குவோம். இந்த நாட்டுடன் இணைந்து உங்களுக்கான பணியை ஆற்றத் தயாராகுங்கள். பொதுமக்கள், கலைஞர்கள், சாகித்தியர்கள், மீனவர்கள், விவசாயி, வர்த்தகர், கைத்தொழில் முயற்சியாளர், அரசியல் வாதிகள் என்ற வகையில் நாங்கள் உட்பட அனைவரும் எமது சந்ததியை விடவும் எமது எதிர்கால சந்ததிக்கு நல்லதொரு நாட்டை அமைத்துக்கொடுக்க போராடுவோம்! மல்லுக்கட்டுவோம்! எம்மால் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்லதொரு நாட்டை உருவாக்க வேண்டும்.

எமது விரல்கள் தொங்கி பாலர் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு நல்ல நாடொன்றை உருவாக்க வேண்டும். எமது தாயின் கர்ப்பத்தில் துடிக்கும் குழந்தைக்கு இப்போது இருப்பதை விடவும் நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். அதற்காகவே இந்த அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டிருக்கிறோம். எனவே வௌியில் இருப்பவர்கள் வெட்டிப் பாடல் பாடித் திரிவோர். அரசியலும் சவாலும் எங்களிடமே உள்ளது. அவ்வளவுதான்! வௌியில் எந்த சவாலும் இல்லை. தலைவர்கள் உள்ளனரா? அரசியல் கட்சிகள் உள்ளதா? இலட்சக்கணக்கில் கிராம மக்கள் இங்கு கூடியுள்ளனர். நண்பர் சென்று கிராமங்களை பிடித்துகொண்டாரா என்பது தெரியவில்லை. மக்கள் காலி முகத்திடலுக்கு வந்தவுடன் கிராமங்களை கைபற்றுவார்களாம்! வெட்டிப் பேச்சு! அவர்களின் அரசியல் கட்சிகளும், நோக்கங்களும் முடிவைக் கண்டுள்ளன. அடி நுனியின்றி சிதைவை கண்டுள்ளனர். சில நேரங்களில் அவர்களின் வலது கைகள் எழுதுவதை வாய் பேசுவதில்லை. ஒரு மேடை சொல்வதை மற்றைய மேடையில் சொல்வதில்லை. பாரிய குழப்பத்தில் உள்ளனர். எனவே வௌியே சவால்கள் முடிந்துவிட்டன. இப்போது இங்கு மட்டுமே உள்ளது. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும். மக்களை மென்மேலும் முன்னோக்கி கொண்டுச் செல்லும் பயணத்தை நாம் ஆரம்பித்திருக்கிறோம். அந்த பயணத்தை வெற்றியோடு நிறைவு செய்ய, எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க புதிய பாய்ச்சலை புதிய துணிச்சலுடன் நாம் ஆரம்பிப்போம்.

Harini Amarasooriya at the may day rally

அதற்காக இலட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து இந்த சவாலை ஏற்கத் தயார் என்று காண்பித்துள்ளனர். நாட்டை கட்டியெழுப்ப தயார் எனும் செய்தியை கூறுகின்றனர். தேசிய மக்கள் சக்தியே நம்பிக்கைக்குரிய கட்சி என்ற செய்தியை கூறுகின்றனர். எதிர்காலம் சிறக்கும் என்ற செய்தியை கூறுகின்றனர். நாட்டுக்கும் உலகத்திற்கு வெட்டிப் பேச்சு பேசுவோருக்கும் இதுவே செய்தி. நாம் மேற்கொள்ள வேண்டிய புதிய பாச்சலை மே 6 மேற்கொள்ள முடியும். ஜனாதிபதி, கெபினட், பாராளுமன்றம், பிரதேச சபை ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும் என்பதே எமது தேவையாகும். ஒரே வகையில் அணிவகுத்து நிற்க வேண்டும். அரசியல் அதிகார தரப்பு ஒரே திசைக்கு பயணிக்க வேண்டும். ஜனாதிபதி பதவி தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளது. அமைச்சரவை தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளது. பாராளுமன்றம் தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளது. எனவே பிரதேச சபைகளும் நகர சபைகளும் தேசிய மக்கள் சக்தி வசமாக வேண்டும். அதனுடன் இணைந்த மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அனைத்தையும் ஒன்றிணைக்க வேண்டு்ம். எனவே இனியும் மத்திய அரசு திருடாது. பிரதேச சபையும் திருட்டுக்கள் இல்லாத பிரதேச சபை. மத்திய அரசு விரயம் செய்யாது. பிரதேச சபையிலும் விரயம் இருக்காது. மத்திய அரசாங்கம் சேவையும் செய்யும். பிரதேச சபையும் நகர சபையும் சேவை செய்வதாக அமையும். அவைதான் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபைகளும் நகர சபைகளுமாகும். நல்லதொரு மக்கள் ஆணையுடன் வென்றோம். இந்த நாட்டை புதிய புரிதலுடன் மலரச் செய்து, முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டும்.

எமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எமக்கு இவ்வாறான வாய்ப்பு சில சமயங்களில் கிடைத்திருக்கிறது. மீண்டும் இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை விட எமக்கு எவ்வகையிலும் நியாயமான உரிமை இல்லை. எனவே கிடைத்திருக்கும் வாய்ப்பை சரியாக முகாமைத்துவம் செய்து. சரியாக திட்டமிட்டு, இலக்குகளுடன் இந்த நாட்டை புதிய திசைக்கு மாற்றுவோம். சமூக நீதியையும் நியாயத்தையும் நிலைநிறுத்திய எதிர்கால சமூகத்தை கட்டமைப்போம். அதற்காக முன்வருவோம். அர்ப்பணிப்போம். நன்றி!

Show More

தொழிலாளர் தினச் செய்தி

(-2024.05.01 – Colombo-) 1886 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில், 08 மணி நேர வேலை நேரத்தைக் கோரி போராட்டம் நடத்தியபோது இடம்பெற்ற அடக்குமுறை துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இரத்தம் சிந்திய தொழிலாளர்களை நினைவுகூறும் வகையில், 1889 ஆம் ஆண்டு கூடிய இரண்டாவது கம்யூனிஸ சர்வதேசம், அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 01 ஆம் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்த முடிவு செய்தது. […]

(-2024.05.01 – Colombo-)

President AKD May Day Message

1886 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில், 08 மணி நேர வேலை நேரத்தைக் கோரி போராட்டம் நடத்தியபோது இடம்பெற்ற அடக்குமுறை துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இரத்தம் சிந்திய தொழிலாளர்களை நினைவுகூறும் வகையில், 1889 ஆம் ஆண்டு கூடிய இரண்டாவது கம்யூனிஸ சர்வதேசம், அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 01 ஆம் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்த முடிவு செய்தது.

இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட பொது மக்கள், இந்த முறை இந்நாட்டின் ஊழல் மிக்க, சிறப்புரிமை அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்கள்நேய ஆட்சியின் கீழ், நாடும் சமூகமும் ஆழமான, சாதமான மாற்றத்துடன் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஒரு சில குடும்பங்கள் மற்றும் பரம்பரைகளால் 76 ஆண்டுகாலமாக மேற்கொள்ளப்பட்ட ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, இந்நாட்டின் அரசியலில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கும் வகையில், கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் இன, மத வேறுபாடின்றி இந்நாட்டின் அனைத்து மக்களும் செயல்பட்டனர்.

அந்த மக்கள் ஆணையின் அபிலாஷைகளை உணர்ந்து, நாட்டில் பொருளாதார, சமூக, அரசியல் ரீதியான திருப்பத்தை ஏற்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி செயலாற்றுகிறது. ஊழல் நிறைந்த, சிறப்புரிமை அரசியல் முறைமையால் பாதாலத்திற்குள் தள்ளப்பட்ட இந்நாட்டின் பொருளாதாரத்தை, மீட்டெடுத்து நிலையான ஆரம்பத்தை ஏற்படுத்துவதில் தற்போது நாம் வெற்றி பெற்றுள்ளோம். இதன் தெளிவான அறிகுறிகள் இப்போது அனைவருக்கும் தெரிகின்றன.

அரசாங்கத்தின் முதல் வரவுசெலவுத்திட்டத்திலேயே வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தமை உட்பட விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் மாத்திரமன்றி, உற்பத்தியாளர்கள், சிறிய வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபடுபவர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினர்களுக்கும் நன்மைகளை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோன்று, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அவர்களின் குடியுரிமை உரிமைகளை உறுதி செய்வதற்கும் நாம் நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.

நாளாந்தம் மாறிவரும் உற்பத்தி அற்றலுக்கு ஏற்ப நாம் அனுபவிக்கும் உரிமைகளில் ஒரு புதிய அத்தியாயத்தின் அவசியத்தை நாங்கள் காண்கிறோம். 1948 மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலில் இல்லாத டிஜிட்டல் பிரவேச உரிமைகள், சுற்றுச்சூழல் உரிமைகள் உள்ளிட்ட மாறிவரும் அரசியல் கட்டமைப்புகளின் தோற்றம் மற்றும் உலக அமைதியை அடிப்படையாகக் கொண்ட புதிய அபிவிருத்தித் தேவைகளுக்கமைய உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை இன்றைய சமூக கோருகிறது. இது குறித்த புரிதலுடன், தலையீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை சர்வதேச தொழிலாளர் தினமான இந்த சந்தர்ப்பத்தில், நாம் மீண்டும் நினைவூட்டுகிறோம்.

சர்வதேச புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கும் இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்து, ஊழல் நிறைந்த சிறப்புரிமை அரசியலால் அழிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி “வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை” உருவாக்க சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து போராட இந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுப்பதுடன் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அர்த்தமுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அநுர குமார திசாநாயக்க

ஜனாதிபதி

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

2025 மே மாதம் 01ஆம் திகதி

Show More

“உயிர்த்தஞாயிறுதாக்குதல்களின்உண்மையானசூத்திரதாரிகளைபொதுமக்களுக்குஅம்பலப்படுத்தும்பொறுப்பைநிறைவேற்றுவோம்” பொலன்னறுவையில்ஜனாதிபதிவலியுறுத்தல்

(-பொலொன்னருவா – 2025.04.20-) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் அனைத்து ஆவணங்களையும் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும், இந்தக் மிலேச்சத் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். 2019 ஏப்ரல் முதல் 2024 செப்டம்பர் வரையிலான கடந்த ஐந்தரை ஆண்டுகளில் நடத்தப்பட்ட விசாரணைகள் உண்மையான சூத்திரதாரிகளை மறைப்பதற்காகவே நடத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த ஆறு […]

(-பொலொன்னருவா – 2025.04.20-)

President AKD addressing the Polonnaruwa Public Rally

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் அனைத்து ஆவணங்களையும் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும், இந்தக் மிலேச்சத் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

2019 ஏப்ரல் முதல் 2024 செப்டம்பர் வரையிலான கடந்த ஐந்தரை ஆண்டுகளில் நடத்தப்பட்ட விசாரணைகள் உண்மையான சூத்திரதாரிகளை மறைப்பதற்காகவே நடத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த ஆறு மாதங்களில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு மிகத் தெளிவான, படிப்படியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் அனைத்து பாகங்களும் பொதுமக்களுக்கோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கோ வழங்கப்படவில்லை என்றும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருக்காவிட்டால் அந்த ஆவணங்கள் தொடர்ந்தும் மறைக்கப்பட்டிருக்கும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

Polonnaruwa Public Rally crowd

பொலன்னறுவையில் இன்று (20) இடம்பெற்ற “ வெற்றி நமதே. கிராமம் எமதே” பேரணித் தொடரின் மற்றுமொரு பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:

பாராளுமன்றத்தை சுத்தப்படுத்தித் தருமாறு மக்கள் கோரினார்கள். முழுமையாக சுத்தப்படுத்தினோம்.உள்ளுராட்சி சபைகளின் அதிகாரம் எமக்கு அவசியம். தேசிய மக்கள் சக்தி தவிர தெரிவு செய்வதற்கு வேறு தலைமையோ கட்சியோ உள்ளதா? மக்கள் பல்வேறு கட்சிகளுடன் பிணைப்பை வைத்திருந்தனர். அவற்றில் இருந்து ஒதுங்கி மக்கள் எமக்கு ஆணையை வழங்கினார்கள். அந்த மக்கள் ஆணையை சிறிதேனும் மக்களுக்கு எதிராக பயன்படுத்த மாட்டோம்.

2022-23 காலப்பகுதியில் நாடு நெருக்கடி நிலையை எதிர்கொண்டது. 77 வருடங்கள் ஆட்சியாளர்களால் நாசமாக்கப்பட்ட நாட்டை தேசிய மக்கள் சக்தி மீளமைக்கும். 30 வருட யுத்தம்,இனவாதத்தினால் மக்களிடையே சந்தேகம் ஏற்பட்டது. தேர்தல்களில் மக்களை பிரித்தாளும் நிலை காணப்பட்டது.வாக்குகளுக்காக இனவாதத்தை பிரயோகித்தனர். ஆனால் சகல பிரதேச மக்களும் இணைந்து தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்தனர். மக்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்தனர். இது இலங்கை அரசியல் வரலாற்றில் விசேடமான நிலை அல்லவா.

Crowd at Polonnaruwa Public Rally

இருக்கும் சட்டங்கள் போதாவிட்டால் புதிய சட்டங்களை உருவாக்கியாவது இனவாதத்தை ஒழிப்போம்.தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவோம். 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தில் அதிகாரத்திற்காக பாரிய அனர்த்தம் இடம்பெற்றது.2019 ஏப்ரல் முதல் 2024 செப்படம்பர் வரை சுமார் ஒன்றரை வருடங்கள் உண்மையான சூத்திரதாரிகளை மறைக்கவே விசாரணைகளை நடத்தினர். 2019 வரை இருந்த அரசாங்கங்களோ அதன் பின்னர் அரசாங்கங்களோ எவ்வகையிலும் உண்மையான சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. எவருக்கும் சந்தேக நபர்களை வெளிப்படுத்தும் நோக்கமிருக்கவில்லை.6 வருடங்கள் கடந்து விட்டன. நாம் கட்டம் கட்டமாக சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தத் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.உயிர்த்த ஞாயிறு தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் சில பகுதிகள் மறைக்கப்பட்டன. நாட்டிற்கோ சி.ஐ.டிக்கோ முழுமையான அறிக்கை முன்வைக்கப்படவில்லை.சில பகுதிகள் மறைக்கப்பட்டே அறிக்கை வெளியிடப்பட்டது. உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் சகல ஆவணங்களையும் இன்று சி.ஜ.டிக்கு அனுப்பினேன். முழுமையாக ஆராய்ந்து விசாரணை நடத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளேன். அதில் பல பரிந்துரைகள் உள்ளன .அவற்றை செயற்படுத்துமாறும் கேட்டுள்ளேன்.இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகங்கள் உள்ளன.வவுனதீவு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கொல்லப்பட்ட இடத்தில் ஜெக்கட் ஒன்றை இட்டது யார். அது தொடர்பில் சந்தேகம் உள்ளது. அதனை ஆராய வேண்டும். சில தொலைபேசிகளின் இமி இலங்கங்களை பயன்படுத்தினார்கள் என்பதில் சந்தேகம் உள்ளது. அனைத்து சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் விசாரணைகளை முன்னேடுப்போம். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதை வெளிப்படுத்தும் பொறுப்பை ஏற்று செயற்பட்டு வருகிறோம்.

கடந்த 6 மாத காலத்தில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் சவாலை எதிர்கொண்டோம்.பொருளாதாரத்தை ஒரளவு ஸ்தீரப்படுத்தியுள்ளோம்.300 ரூபாவாக டொலரின் பெறுமதி பேணப்படுகிறது. பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி வருகிறோம். எரிபொருள் மற்றும் மின்சார விலைகளை குறைத்துள்ளோம். அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்து வருகிறோம். கட்டுநாயக்க விமான நிலையத் திட்டம் உட்பட 11 திட்டங்களை மீள ஆரம்பிக்க ஜப்பான் முன்வந்துள்ளது.76 புதிய மற்றும் பழைய திட்டங்களை மீள ஆரம்பிக்க சீனா உடன்பாடு கண்டுள்ளது.

People at Polonnaruwa Public Rally

காற்றாலை மற்றும் சூரிய சக்தி திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சம்பூரில் 120 மெகா வோர்ட் சூரிய சக்தி திட்டம் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சியம்பலாண்டுவில் 100 மெகா வோர்ட் மின்திட்டம் மற்றும் மன்னாரில் 50 மெகாவோர்ட் புதிய மின் திட்டம் ஆரம்பிக்கப்படும்.

நீர்ப்பாசன துறைக்கு மாத்திரம் 78 ஆயிரம் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மூலதனச் செலவுகளுக்கு பாரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டை கட்டியெழுப்ப நிதி ஒதுக்கப்படுகிறது. டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டும்.கோரும் அனைத்து நிதியையும் வழங்க முடியும். ஆனால் அரச இயந்திரம் வீழ்ச்சியடைந்துள்ளது. பலமான அரச சேவை உருவாக்கப்பட வேண்டும்.அரச துறைக்கு ஒன்றரை வருடத்தில் 30 ஆயிரம் பேரை இணைக்க இருக்கிறோம்.

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.ஓய்வூதியம் பெறுவோரின் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. வறுமைய ஒழிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மாணவர்களுக்கு சுமையாக உள்ள கல்வி முறையை மாற்ற இருக்கிறோம்.2026 முதல் புதிய பாடவிதாணம் அறிமுகம் செய்யப்படும்.மாணவர்கள் செல்ல வேண்டிய பாதை 10 ஆம் வகுப்பில் தீர்மானிக்கப்படும். 13 வருட பாடசாலை கல்வி கட்டாயமானது. எந்த மாணவரும் வெறும் கையுடன் வெளியேற மாட்டார்கள்.

President AKD gifted a suvenier at Polonnaruwa Public Rally

பசளை மானியத்தை அதிகரித்துள்ளோம். உப பயிற்செய்கைக்காகவும் 15 ஆயிரம் ரூபா பசளை மானியம் வழங்க முடிவு செய்துள்ளோம். வழங்கப்படும் பசளை மானியத்தினால் பசளை மாத்திரமே கொள்வனவு செய்ய வேண்டும். பசளைபெற வவுச்சர் வழங்கப்படும். அறுவடையை நியாயமான விலைக்கு வாங்குவோம். இம்முறை எவருக்கும் நெல்விலை தொடர்பான பிரச்சினை எழுந்திருக்காது.இனி ஒருபோதும் அவ்வாறான பிரச்சினை எழாது. 3 மெற்றிக் தொன் களஞ்சியம் செய்யக் கூடிய களஞ்சியங்கள் அமைக்கப்பட்டன.குறைந்த விலைக்கு செல்லும் அனைத்து நெல்லையும் அரசாங்கம் வாங்கும். 500 கோடி ஒதுக்கினோம். ஆனால் நெல் வரவில்லை. விவாசாயிக்கு நியாயமான விலை நெல்லுக்கு வழங்க வேண்டும்.

விவசாயிகளின் காணி உறுதி தொடர்பான பிரச்சினை உள்ளது. விவசாயிகளுக்கு காணி உறுதி வழங்க தயார். ஆனால் அவற்றை விற்க முடியாது.

கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதன் ஊடாக வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும். இந்த வருடத்தில் முதற்கட்டமாக பஸ்கொள்வனவிற்காக 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Polonnaruwa Public Rally

சட்டம் அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்படுகிறது. பதிவு செய்யப்படாமல் வீதியில் வாகனம் செலுத்திய முன்னாள் அமைச்சர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். இலஞ்ச ஊழல் திணைக்களம்,சட்டமா அதிபர் திணைக்களம் என்பன பலப்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் ஐந்து சதத்தைக் கூட திருடாத வீண் விரயம் செய்யாத அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வருக்கு எதிராக ஒரு வழங்கும் அடுத்த மகனுக்கு எதிராக இரு வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. பாட்டிக்கு எதிராகவும் வழக்கு பதிவாகும்.சி.ஐ.டி ஊடாக பல விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. சட்டவிரோதமாக உழைத்த சொத்துக்களை மீளப் பெற பலமான சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் இதற்காகத்தான் எமக்கு ஆணை வழங்கினார்கள். பயந்தவர்கள் தான் அதிகமாக பேசுகிறார்கள்.முடிந்தால் தன்னை கைது செய்யுமாறு சவால் விடுகிறார்கள். எமக்கு யாரையும் பலிவாங்கத் தேவையில்லை.தற்பொழுது தான் திறைசேரியின் நிதி மக்களுக்கு சென்றடைகிறது. மக்களின் வரிப்பணம் நாட்டு நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது.

ஜனாதிபதி, அமைச்சர்கள், பாராளுமன்றம்,பிரதேச சபை.நகர சபைகள் அனைத்தும் இணைந்து பல வருடங்கள் போராடி நாட்டை கட்டியெழுப்புவோம் என்றும் தெரிவித்தார்.

Show More

எந்த வடிவத்தில் வந்தாலும் இனவாதம் மீண்டும் தலைதூக்க நாங்கள் இடமளிக்க மாட்டோம்

(-வெற்றி நமதே.. ஊர் எமதே.. யாழ்ப்பாணம் வெற்றிப் பேரணி-2025.04.17-) – ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவிப்பு எந்த வடிவத்தில் இனவாதம் நாட்டில் மீண்டும் தலைதூக்க முயற்சித்தாலும் அதனைத் தோற்கடிக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இனவாதத்தைத் தூண்டும் குழுக்களுக்கு என்ன முத்திரை குத்த முயற்சித்தாலும், வடக்கு மற்றும் தெற்கில் உள்ள மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டில் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார். […]

(-வெற்றி நமதே.. ஊர் எமதே.. யாழ்ப்பாணம் வெற்றிப் பேரணி-2025.04.17-)

President AKD welcomed at the Jaffna public rally
  • எந்தவொரு மாகாண மக்களின் உரிமைகளையோ அல்லது பாரம்பரியத்தையோ பறிக்க அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது.
  • மக்களின் வாழ்க்கையையும் மேம்படுத்தி, முறையான திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் அபிவிருத்தி செய்யப்படும்
  • இருண்ட காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டை எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் இது – அச்சமின்றி தாய்நாட்டிற்குத் திரும்பி, முதலீடு செய்யுங்கள்.

– ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவிப்பு

எந்த வடிவத்தில் இனவாதம் நாட்டில் மீண்டும் தலைதூக்க முயற்சித்தாலும் அதனைத் தோற்கடிக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இனவாதத்தைத் தூண்டும் குழுக்களுக்கு என்ன முத்திரை குத்த முயற்சித்தாலும், வடக்கு மற்றும் தெற்கில் உள்ள மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டில் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.

“வெற்றி நமதே – ஊர் எமதே” மக்கள் பேரணித் தொடரின் மற்றொரு பேரணி யாழ்ப்பாணத்தில் நேற்று (17) நடைபெற்றதுடன் அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

எந்தவொரு மாகாண மக்களின் உரிமைகளையோ அல்லது பாரம்பரியத்தையோ பறிக்க அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது என்று கூறிய ஜனாதிபதி, திஸ்ஸ விகாரையின் பிரச்சினையைத் தீர்க்க, அதில் உள்ள அரசியல் அகற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும், போரின் கசப்பான வரலாறும், நாம் மறந்துவிட வேண்டிய வரலாறும் மீண்டும் நிகழ அனுமதிக்கப்படாது என்றும் தெரிவத்த ஜனாதிபதி, யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, புதிய நகரத் திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

காணாமல் போனவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனுபவிக்கும் வலியை தாம் நன்கு அறிவதாகக் கூறிய ஜனாதிபதி, அந்த வலியைப் போக்க, அவர்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், உண்மையை வெளியே கொண்டுவர அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்காக நாட்டு மக்கள் இணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நியமித்ததாக மேலும் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இருண்ட கடந்த காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் இது என்றும், மீண்டும் கட்டியெழுப்பப்படும் நாட்டிற்கு வருகை தந்து முதலீடு செய்யுமாறு தான் தமிழ் புலம்பெயர்ந்தோருக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

Jaffna public rally crowd

பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை வழங்கியதற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாட்டில் எப்போதும் தேர்தல்களில் மக்களிடையே பிரிவினை ஏற்படுகின்றது. ஆனால் கடந்த பொதுத் தேர்தலில், வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கில் உள்ள சிங்களவர்கள், முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் என அனைத்து மக்களின் விருப்பமும் தேசிய மக்கள் சக்தியாக இருந்தது. கடந்த தேர்தலில் பிளவுபடுவதற்குப் பதிலாக, மக்கள் நாட்டுக்காக ஒன்று திரண்டனர். இவ்வாறு ஒன்றுபட்ட நாம், மீண்டும் ஒருபோதும் பிரிந்து விடக்கூடாது. நாம் ஒருவருக்கொருவர் பயத்துடனும் சந்தேகத்தடனும் வாழும் ஒரு நாட்டை நாம் விரும்பவில்லை.

சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து, இறக்கும் ஒரே தாயகமாக, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சம உரிமைகளைப் பெறும் ஒரு நீதியான நாட்டைக் கட்டியெழுப்புவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விருப்பமாகும், நாங்கள் ஒருவரையொருவர் வெறுத்துள்ளோம். போர் நடத்தியுள்ளோம்.

ஆனால் எங்களிடம் எதுவும் மிச்சமில்லை. எங்களுக்கு எஞ்சியிருந்தது பேரழிவிற்குள்ளான வடக்கு மாகாணமும், தங்கள் குழந்தைகளை இழந்த பெற்றோர்களும் மாத்திரமே. எங்கள் உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் இழந்துவிட்டோம். இது வடக்கிலும் தெற்கிலும் நடந்தது. மீண்டும் அப்படி ஒரு சகாப்தம் நமக்கு வேண்டாம். நாம் இப்போது அதனை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். எமது தலைமுறை போர்களை நடத்தியது. சண்டைபிடித்தோம்.

ஆனால், தேசிய மக்கள் சக்தி நமது குழந்தைகளின் தலைமுறைக்காகப் போர் செய்யாத, சண்டையிடாத, அனைவரும் ஒற்றுமையாக வாழும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

நம் நாட்டில் இனிமேலும் இனவெறி இல்லை. அரசியல்வாதிகளுக்குத் தேவையானதுதான் இனவெறி. திஸ்ஸ விகாரையை தொடர்பில் ஒரு பிரச்சினை இருப்பது உங்களுக்குத் தெரியும். கடந்த பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில், திஸ்ஸ விகாரை பிரச்சினையைத் தீர்ப்பது இலகுவானது என்று நான் கூறினேன். அந்தப் பிரச்சினையின் பின்னணியில் நடத்தப்படும் வடக்கு மற்றும் தெற்கின் அரசியல் அகற்றப்பட வேண்டும். திஸ்ஸவிகாரையில் உள்ள அரசியல் நீக்கப்பட்டால், அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

விகாரையின் விகாராதிபதி, அந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள், நாக விகாரையின் தேரர் ஆகியோர் ஒன்று சேர்ந்தால், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். அரசியல்வாதிகள் விரும்புவது மீண்டும் இனவாதத்தைத் தான். ஒரு அரசாங்கமாக, எந்தவொரு மாகாண மக்களின் உரிமைகளையோ அல்லது பாரம்பரியத்தையோ பறிக்கும் எந்த நடவடிக்கையையும் நாங்கள் ஒருபோதும் எடுக்க மாட்டோம்.

President AKD Addressing at the Jaffna public rally

இந்த நாட்டில் எங்கெல்லாம் தொல்பொருள் கலைப்பொருள் காணப்பட்டாலும், எங்கெல்லாம் வரலாற்று இடிபாடுகள் காணப்பட்டாலும், அவற்றை சிங்களவர், தமிழர் அல்லது முஸ்லிம் என்று நாம் அடையாளம் காணத் தேவையில்லை. நாம் அதை நாட்டின் பாரம்பரியமாகப் பார்க்க வேண்டும்.

ஆனால் இப்போது, ​​தொல்பொருட்களும் வரலாற்று இடிபாடுகளும் கண்டுபிடிக்கப்படும்போது, ​​அவை சிங்களமா அல்லது தமிழா என்பதை தீர்மானிக்க முயற்சிக்கிறார்கள். அதுதான் இனவெறியரின் இயல்பு. ஆனால் அவற்றைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு வழங்க நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.

இந்த இனவாதக் குழுக்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டன. ஆனால் மீண்டும், அதே இனவெறியை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் மோதல்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், எந்த உருவத்தில் அல்லது எந்த வழியில் இனவாதம் மீண்டும் தலைதூக்க முயன்றாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதைத் தோற்கடிக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நமக்கு தேசிய ஒற்றுமை அவசியம். யாழ்ப்பாணத்தில் பாரம்பரிய அரசியல் தலைவர்கள் இருந்தனர்.

பாரம்பரிய கட்சிகள் இருந்தன. இந்த பெரிய கட்சிகள் இருந்தபோதும், சிறந்த தலைவர்கள் இருந்தபோதும் நீங்கள் எங்களை நம்பினீர்கள். எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டாலும், எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஒருபோதும் உடைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். எங்களை நம்பி நீங்கள் தீர்க்க விரும்பும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

நாங்கள் அவற்றைத் தீர்ப்போம். இனவாதக் குழுக்களால் எத்தகைய முத்திரைகள் சூட்டப்பட்டாலும் சரி, எத்தகைய போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் சரி, உங்கள் உரிமைகளையும் தேசிய ஒற்றுமையையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.

முதலாவதாக, பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட மக்களுக்குச் சொந்தமான நிலங்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். இனிமேலும் பாதுகாப்பு காரணங்கள் என்ற போர்வையில் மக்களின் நிலங்களை வைத்திருக்க அரசாங்கத்திற்கு உரிமை இல்லை. விடுவிக்கப்படக்கூடிய அனைத்து நிலங்களும் விடுவிக்கப்படும். நீங்கள் நிலங்களில் குடியேறுங்கள். பயிரிடுங்கள்.

யுத்தம் வரும் என்று எதிர்பார்த்து நாங்கள் செயற்படவில்லை, யுத்தம் வராமல் தடுக்க தேசிய மக்கள் சக்தி செயற்படுகிறது. அதுதான் ஒரு அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்தப் பகுதியில் ஏராளமான வீதிகள் மூடப்பட்டிருந்தன. நாங்கள் அந்த வீதிகளை படிப்படியாக மீண்டும் திறந்து வருகிறோம். நீங்கள் சுதந்திரமாக செயல்படுங்கள். கொழும்பிலும் வீதிகள் மூடப்பட்டிருந்தன.

Crowd at the Jffna Public Rally

ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் உள்ள வீதி, அலரி மாளிகைக்கு முன்னால் உள்ள வீதியும் மூடப்பட்டிருந்தன. நாங்கள் அந்த வீதிகளைத் திறந்தோம். ஜனாதிபதி, பிரதமர் மாளிகைகளுக்கு முன்னால் வீதிகளைத் திறக்க முடியும் என்றால், யாழ்ப்பாணத்தில் வீதிகளை மூடுவதற்கு எந்த உரிமையும் இல்லை.

இந்த யாழ்ப்பாணத்தை நாங்கள் மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவோம். போரின் கசப்பான வரலாறு, நாம் மறக்க வேண்டிய வரலாறு, மீண்டும் நிகழ இடமளிக்க மாட்டோம். காணாமல் போனவர்கள் பற்றிய ஒரு பிரச்சினை இருப்பதாக எனக்குத் தெரியும். நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். உங்கள் பிள்ளையை அரசாங்கத்திடம், பொலிஸ் நிலையத்திலோ அல்லது இராணுவ முகாமிலோ ஒப்படைக்கப்பட்டால், அவருக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அது ஒரு பொறுப்பான அரசாங்கத்தின் கடமையாகும்.

காணாமல் போன பிள்ளைகளின் பெற்றோரின் வலியை நான் அறிவேன். பொதுவாக ஒருவர் இறந்தால், நாம் அந்த உடலைக் காண்கிறோம். மதச் சடங்குகள் செய்யப்படுகின்றன. எமது கையாலே இறுதிச்சடங்குகளை நிறைவேற்றுகிறோம். நாம் காலப்போக்கில் இயல்பு நிலைக்குத் திரும்புகிறோம். ஆனால் ஒரு பிள்ளை காணாமல் போகும் போது அவ்வாறு இல்லை. மிகுந்த வலி இருக்கிறது. என் உறவினர் ஒருவரும் காணாமல் போனார். அதனால் அந்த வலி எனக்குத் தெரியும். அந்த வலி தீரவேண்டுமாயின், பிள்ளைகளைப் பற்றிய உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். அது யாரையும் பழிவாங்குவதற்காக அல்ல. அது அமைதிக்கு அவசியம். நாங்கள் அதை ஒரு அரசாங்கமாக நிறைவேற்றுவோம்.

நாம் வரலாற்றில் வாழ்வதிலிருந்தும் அதன் வலியிலிருந்தும் நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். நாம் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க வேண்டும். அதனால்தான் நீங்கள் எங்களை நம்பினீர்கள். நீங்கள் பழையதை விரும்பினால், பழைய கட்சிகளைத் தெரிவு செய்திருப்பீர்கள். நீங்கள் எங்களை புதிய விடயத்திற்காகத் தேர்ந்தெடுத்தீர்கள். அந்தப் புதிய விடயங்களை நாங்கள் பயமின்றிச் செய்வதை உறுதிசெய்கிறோம். அது செய்யப்பட வேண்டும். இது எமது நாடு. இதுதான் நாம் அனைவரும் வாழும் நாடு.

அது மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையை படிப்படியாக மேம்படுத்த வேண்டும். பழைய ஆட்சியாளர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை பாரியளவில் சீர்குலைந்தனர். எரிபொருள், மருந்தை இறக்குமதி செய்ய முடியாத, கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத ஒரு நாட்டை அவர்கள் உருவாக்கினர். ஆனால் நாம் இப்போது படிப்படியாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி வருகிறோம்.

இதற்காக அனைத்து நாடுகளிடமிருந்தும் நாங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம். இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதே எங்கள் குறிக்கோள். வளரும் பொருளாதாரத்தின் நன்மைகளை இந்த நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கும் நாங்கள் தற்போது செயற்பட்டு வருகிறோம்.

President AKD waving at Jaffna public rally

நான் அண்மையில் இந்த யாழ்ப்பாண மாவட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

அங்கு எங்களுக்கு பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அந்த ஒவ்வொரு திட்டத்திற்கும் நாங்கள் பணம் ஒதுக்கினோம். காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை சிறந்த திட்டத்திற்காக யாழ்ப்பாணத்திற்கு வழங்க நான் தயாராக இருப்பதாக அதன்போது தெரிவித்தேன்.

இதுபோன்ற இடங்களை மக்களுக்காக செயற்படும் இடங்களாக மாற்ற வேண்டும். நம் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இடங்களாக அவை இருக்க வேண்டும். அதற்காக நாங்கள் அவர்களை விடுவிக்கிறோம்.

மேலும், நாங்கள் இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பத்து இலட்சத்து 5,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது, இது இந்த மாகாணத்தில் வீதிப் புணரமைப்புக்காக அண்மைய காலங்களில் செய்யப்பட்ட அதிகபட்ச ஒதுக்கீடாகும். அது மட்டுமல்ல, வரலாற்றில் இருண்ட நிகழ்வுகளில் ஒன்று யாழ்ப்பாண நூலகத்துடன் தொடர்புடையது. ஒரு நூலகத்தின் அழிவு எங்கள் இதயங்களை பாதித்தது.

நூலகத்தை எரிப்பது இனவெறியின் உச்சம். இந்த ஆண்டு நூலக வசதிகளை மேம்படுத்துவதற்காக 10 கோடி ரூபாவை ஒதுக்கினோம்.

அதுமட்டுமல்ல, இந்த நகர சபைக்கு ஒரு பாரிய கட்டிடம் இருக்கிறது. ஆனால் எந்தப்பயனும் இல்லை. அது ஒரு பாரிய கட்டிடம். எங்கள் கிராமங்களில் வீடுகள் மிகச் சிறியவை. எங்கள் நகர சபை மிகப் பெரியது. அதன் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்காக அதைப் புதுப்பிக்க பத்து இலட்சத்து 400 ரூபாவை ஒதுக்கியுள்ளோம். இவற்றைக் புணரமைத்து மக்களுக்கான இடங்களாக மாற்ற வேண்டும்.

மேலும், வடக்கு மாகாண மக்கள் நிலத்துடன் தொடர்புபடும் மக்கள். நாம் உர மானியத்தை 15,000 த்திலிருந்து 25,000 ஆக அதிகரித்தோம். மரக்கறி மற்றும் பழங்களைப் பயிரிடுவதற்காக உர மானியங்களை வழங்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வட மாகாணத்தில் 16,000 ஏக்கரில் தென்னை பயிரிடலாம். ஒரு புதிய தேங்காய் முக்கோணத்தை உருவாக்கலாம்.

அதற்கு அரசாங்கம் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்காக நாங்கள் 500 மில்லியன் ஒதுக்கினோம். தென்னை வளர்க்கும் விவசாயிகளுக்கு அரசாங்கம் தென்னங் கன்றுகளை வழங்குகிறது. தென்னை உரம் வழங்கப்படும். தென்னை அகழிகளை வெட்டி நிலத்தை தயார் செய்ய பணம் தருகிறேன். பயிர்செய்யத் தயாராகுங்கள். வடக்கு, தெற்கு அல்லது கிழக்கு என்ற பேதமின்றி இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நாங்கள் பாடுபடுவோம்

இந்த வட மாகாணத்தில் சுற்றுலாவுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அருகம்பே அல்லது தெற்கிற்கு வருவது போல் வடக்குக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை. உள்நாட்டு விமான சேவைகளை மேலும் வலுப்படுத்தி, கொழும்புக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு பயணிக்கும் வேலைத்திட்டம் உருவாக்கப்படும்.

யாழ்ப்பாணம் ஒரு புதிய சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டும். பழைய யாழ்ப்பாணத்தைப் பிரதிபலிக்கும் புதிய அபிவிருத்தித் திட்டத்துடன் அடுத்த ஆண்டு யாழ்ப்பாண நகரத்தை மறுவடிவமைக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம். யாழ்ப்பாணம் ஒரு வரலாற்று நகரமாக பிரதிபலிக்கப்பட வேண்டும்.

Jaffna public rally with crowd

அவர்களின் கலாசாரம், வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் மீண்டும் கட்டியெழுப்ப தற்போது நகர அபிவிருத்தி அதிகாரசபை திட்டங்களைத் தயாரித்து வருகிறது. அடுத்த ஆண்டு அதற்கான பணத்தை ஒதுக்குவோம்.

யாழ்ப்பாண மக்களின் குடிநீர் மற்றும் கழிவகற்றல் பிரச்சினைகளைத் தீர்க்கவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். நாங்கள் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு என்ற பேதமின்றி அனைத்து மாகாண மக்கள் மீதும் கவனம் செலுத்துவதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் நம்பிக்கை கொண்ட ஒரு அரசாங்கம்

மேலும் 1983 ஆம் ஆண்டு முதல் ஏராளமான தமிழர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்பது நமக்குத் தெரியும். இன்று அவர்கள் உலகில் பாரிய தொழிலதிபர்களாகவும் செல்வந்தர்களாகவும் மாறிவிட்டனர். உங்கள் உறவினர்கள் வசிக்கும் பூமியை கட்டியெழுப்பவும், அவர்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடிந்தவரை முதலீடு செய்யவும், புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரையும் இலங்கைக்கு மீண்டும் திரும்பி வருமாறு நான் அழைக்கிறேன்.

இந்த நாடு இப்போது பாதுகாப்பானது. இனவாதம் இல்லாத நாடாக மாறியுள்ளது. அனைவரின் உரிமைகளையும் நியாயமாக அங்கீகரிக்கும் நாடு. அனைத்து கலாசாரங்களையும் மதிக்கும் நாடு. எனவே, இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உங்கள் முதலீடுகளைப் பயன்படுத்துமாறு நான் உங்களை அழைக்கிறேன்.

இது ஒரு புதிய அத்தியாயம், பழைய இருண்ட கடந்த காலத்தை நிறைவுசெய்து புதிய எதிர்காலத்திற்குச் செல்லும் ஒரு அத்தியாயம். இது மிகவும் முக்கியமான அரசியல் மாற்றமாகும். இது எங்கள் தாய்மார்களும் தந்தைமார்களும் நீண்ட காலமாக பிரார்த்தித்த ஒன்று. அவர்கள் பல்வேறு வழிகளில் இத்தகைய அரசாங்கமொன்றை எதிர்பார்த்தனர்.

இப்போது அந்த அரசாங்கம் அமைக்கப்பட்டுவிட்டது. , பொதுமக்களின் பணத்தில் ஒரு சதத்தையேனும் திருடாத அரசாங்கம் இன்று அமைக்கப்பட்டுள்ளது. பழைய அரசியல் இந்த நாட்டை ஏழ்மையாக்கியது. மக்கள் ஏழைகளாக்கப்பட்டனர். ஆனால் ஆட்சியாளர்கள் செல்வந்தர்களானார்கள். அந்தக் கலாசாரத்தை நாம் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம். இப்போது, ​​அனைவரையும் ஒன்றிணைந்து பிரதேச சபைகளையும், நகர சபைகளையும் வலுப்படுத்தி, அந்தத் திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லுமாறு நான் அழைக்கிறேன்.

Show More

வரலாற்றில் முதன்முறையாக தேசிய ஐக்கியத்திற்கான அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

(-வெற்றி நமதே.. ஊர் எமதே.. மன்னார் வெற்றிப் பேரணி-2025.04.17-) புத்தளத்திற்கும் மன்னாருக்கும் இடையிலான பாதைக்கு மாற்றுத்திட்டத்துடன் புதிய வகையில் இணைக்க நடவடிக்கை சட்டவிரோத கடற்றொழில் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை வடக்கில் 16 ஆயிரம் ஏக்கரில் தெங்கு பயிரிட திட்டம் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைத்து மக்களின் கருத்துக்களுடனே மன்னாரில் காற்றாலை திட்டங்கள் முன்னெடுப்பு – மன்னாரில் ஜனாதிபதி தெரிவிப்பு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த பின்னர், மாற்று திட்டங்களுடன் மன்னாரையும் புத்தளத்தையும் புதிய வழியில் இணைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி […]

(-வெற்றி நமதே.. ஊர் எமதே.. மன்னார் வெற்றிப் பேரணி-2025.04.17-)

புத்தளத்திற்கும் மன்னாருக்கும் இடையிலான பாதைக்கு மாற்றுத்திட்டத்துடன் புதிய வகையில் இணைக்க நடவடிக்கை

சட்டவிரோத கடற்றொழில் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை

வடக்கில் 16 ஆயிரம் ஏக்கரில் தெங்கு பயிரிட திட்டம்

சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைத்து மக்களின் கருத்துக்களுடனே மன்னாரில் காற்றாலை திட்டங்கள் முன்னெடுப்பு

– மன்னாரில் ஜனாதிபதி தெரிவிப்பு

President AKD speaking at Mannar public rally

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த பின்னர், மாற்று திட்டங்களுடன் மன்னாரையும் புத்தளத்தையும் புதிய வழியில் இணைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இந்த வீதி திறக்கப்படுவதால் புத்தளத்திற்கான தூரம் சுமார் 90 கிலோமீட்டர் குறையும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டு மக்களுக்கு செவிசாய்த்து மக்களுக்காக பாடுபடும் ஒரு அரசாங்கம் என்றும் வலியுறுத்தினார்.

மன்னாரில் இன்று (17) நடைபெற்ற ‘ வெற்றி நமதே – ஊர் எமதே’ மக்கள் பேரணித் தொடரின் மற்றொரு பேரணியில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக இனவாத அரசாங்கங்களுக்குப் பதிலாக தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, நாட்டில் இனி இனவாதத்திற்கு இடமில்லை என்றும், தற்போதைய அரசாங்கம் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைத்து மக்களையும் சகோதரத்துவத்துடன் நடத்தும் மற்றும் அனைவரின் உரிமைகளையும் அங்கீகரிக்கும் அரசாங்கமாகும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

Mannar public rally crowd

மன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையே படகு சேவையை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான மன்னாரிலுள்ள வளங்களைப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெற்று சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்து அவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

யுத்த காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு வன பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்ட வடக்கில் உள்ள காணிகளை மக்களிடம் திருப்பிக் கொடுப்பதற்கும், மூடப்பட்ட பாதைகளை மீண்டும் திறப்பதற்கும் தேவையான பின்னணி உருவாக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். பேசாலை பகுதியில் சட்டவிரோத மீன்பிடித்தல் பிரச்சினையைத் தீர்க்க இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் இரு உறுப்பினர்களும் தேசியப்பட்டியல் ஊடாக ஒருவரும் தெரிவானார்கள். இந்த வெற்றிக்கு இப்பகுதி மக்கள் பெரும் பங்காற்றினர். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக பிரித்தாளுகின்ற அரசியலுக்கு முடிவு கட்டியுள்ளோம். இதற்கு முன்னர் வாக்குகளினால் மக்களை பிரித்தனர்.வடக்கு மக்கள் தமிழ் கட்சிகளை தெரிவு செய்தனர். கிழக்கு மக்கள் முஸ்லிம் கட்சிகளை தெரிவு செய்தனர். தெற்கிலுள்ள மக்கள் சிங்கள கட்சிகளை தெரிவு செய்தனர். கடந்த தேர்தலில் அனைத்து மக்களும் தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்தனர். அனைவரும் ஒன்றாக வாழும் நாடே எமக்குத் தேவை. இனவாதத்தினால் நாம் மோசமாக பாதிக்கப்பட்டோம். இனியும் இனவாதத்திற்கு இடமளிக்காது தேசிய ஐக்கியத்திற்கான அரசை உருவாக்கியுள்ளோம்.

இதற்கு முன்னர்அவ்வாறான அரசு உருவானதா? இனவாத அரசுகளே இருந்தன.சிங்களவராக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் தமிழராக இருந்தாலும் அவர்கள் இலங்கையர்கள். பிரித்தாளும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். யுத்தத்தை காரணம் காட்டி இப்பகுதி மக்களின் காணிகள் அரசாங்கத்திற்கு பெறப்பட்டுள்ளன. சில வீதிகள் மூடப்பட்டுள்ளன. சில தனியார் காணிகள் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு பெறப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினைகளை தீர்க்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

Mannar public rally people

நாட்டை முன்னேற்றுகையில் மன்னார் மாவட்டம் முக்கிய பிரதேசமாகும். மன்னார் மக்கள் கடற்றொழிலில் வாழுகின்றனர். எமது கடலில் சட்டவிரோதமாக படகுகளில் வந்து பாரிய சேதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அண்மையில் இந்திய பிரதமரின் வருகையின் போது இது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் நடத்தினோம்.எமது கடல்வளம் எமது மக்களுக்குரியது. இந்தப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எமது கடலை பாதுகாக்கும் பொறுப்பை மேற்கொள்வோம். இது தொடர்பில் கடற்படைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.

மன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையில் படகுச் சேவை இருந்தது. அதனை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் ராமேஸ்வரத்திற்கான படகு சேவையை ஆரம்பிப்போம். மன்னாரில் பாரிய காற்றலை மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய பிரதேசமாகும். மக்களின் கருத்துக்களை செவிமடுக்காது காற்றாலை திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவற்றை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு காற்றாளை செயற்பட தயாராக இருக்கிறோம். அனைத்துத் திட்டங்களும் மக்களின் ஒப்புதலுடன் பாதிப்புகளை குறைத்து மேற்கொள்வோம். சுற்றாடலுக்கு பாதிப்பான திட்டங்களுக்கு அனுமதி வழங்க மாட்டோம்.

புத்தளத்திற்கும் மன்னாருக்கும் இடையிலான பாதை நீண்டகாலமாக மூடப்பட்டுள்ளது. இந்தப் பாதையை திறந்தால் புத்தளத்திற்கான பயணத்தூரம் 90 கிலோமீட்டர் வரை குறையும். புத்தளத்திற்கான பாதை தொடர்பிலான சுற்றாடல் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளோம்.தற்பொழுது நிர்மாணிக்கப்படும் பாதைக்கு மாற்றுவழியுடன் புதிய விதத்தில் புத்தளம் மற்றும் மன்னாரை இணைக்க இருக்கிறோம். மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே இந்த அரசாங்கம் உள்ளது.மக்களின் பிரச்சினைகளை செவிமடுக்கும் அரசாங்கத்தை மக்கள் தான் ஒன்றிணைந்த உருவாக்கினார்கள்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்தி வருகிறோம். 5 வருடங்களின் பின்னர் டொலர் கையிருப்பு பாரியளவில் அதிகரித்துள்ளது. 6 மாதங்களாக ரூபாவின் பெறுமதி அசையாமல் இருக்கிறது. எரிபொருள்,மின்சார விலைகளை குறைத்துள்ளோம்.மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வருகிறோம். அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தினோம். அஸ்வெசும கொடுப்பனவை அதிகரித்துள்ளதோடு கொடுப்பனவு பெறுவோரின் தொகையை 4 இலட்சத்தினால் அதிகரித்துள்ளோம். பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் பெறுவதற்கு 16 இலட்சம் மாணவர்களுக்கு 6 ஆயிரம் ரூபா வீதம் வழங்கினோம். புதிதாக 30 ஆயிரம் பேரை அரச சேவைக்கு இணைக்க இருக்கிறோம். அமைச்சர்களின் பின்னால் சென்று தொழில் கேட்கத் தேவையில்லை.பரீட்சைில் அதிக புள்ளி பெறுபவர்களுக்கு தொழில் கிடைக்கும். அரச சேவையில் தமிழ்மொழியில் பணியாற்றுவோரின் குறைபாடு உள்ளது. பொலிஸிலும் தமிழ் போசுவோரின் குறைபாடு உள்ளது. உங்கள் பிள்ளைகளையும் அரச சேவையிலும் பொலிஸ் சேவையிலும் இணையுங்கள்.

Crowd at Mannar public rally

எமது நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமாக நிலைநாட்டப்பட வேண்டும். முன்னர் பணம் செல்வாக்கிருந்தோருக்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அவ்வாறான ஒரு நாடு தேவையில்லையா? இன்று பேதமின்றி அனைவருக்கும் சமனாக சட்டம் நிறைவேற்றப்படுகிறது. அதனால் தான் பொலிஸ்மா அதிபருக்கு பொலிசுக்குப் பயந்து தலைமறைவாக நேரிட்டது.

லஞ்ச ஊழல் திணைக்களத்தினால் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.முன்னாள் முதலமைச்சர்கள் விளக்கமறியலில் உள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளின் புதல்வர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்படுகிறது. வரலாற்றில் முதன்முறையாக பொதுமக்களின் பணத்தை திருடாத வீண்விரயம் செய்யாத அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தை பாதுகாத்து பலப்படுத்த வேண்டும். நாம் திருடுவதில்லை. திருடியவர்களை தண்டிப்போம். முன்னர் இருந்தவர்கள் ஜனாதிபதியாக தெரிவான திகதியில் இருந்து அமைச்சராக தெரிவான தினத்தில் இருந்து திருடுவதற்குத் தான் திட்டம் தீட்டினார்கள். வடமத்திய முதலமைச்சர் 26 இலட்சம் ரூபாவை மோசடி செய்த காரணத்தால் அவருக்கு எதிராக 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தவறுகள் குறித்தும் விசாரணைகளையும் நடத்தி தண்டனை வழங்குவோம். கொலை,திருட்டு,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என அனைத்தையும் விசாரணை செய்வோம். தவறு செய்த அமைச்சர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் மக்களுக்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த நிலையை மாற்றியுள்ளோம்.

உள்ளுராட்சி சபைகளுக்கு குறைவான வருமானமே கிடைக்கிறது. முசலி பிரதேச சபை குறைந்த வருமானம் பெறும் சபையாகும். மன்னார் நகர சபைக்கு குறைந்த வருமானமே கிடைக்கிறது.ஆனால் அதிக பணிகள் உள்ளன. வீதிகளை நிர்மாணிக்க வேண்டும்.வடிகாண்களை சீரமைக்க வேண்டும்.பொதுமயானங்களை சீர்செய்ய வேண்டும். முன்பள்ளிகளை அமைக்க வேண்டும். ஆனால் எமது அரசாங்கத்திடம் நிதி உள்ளது. வடக்கு மாகாண வீதிகள் சீரமைக்க இந்த வருடம் 5 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளோம். மேலும் வடக்கில் 16 ஆயிரம் ஏக்கரில் தென்னங்கன்றுகளை நட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதற்கான சகல வசதிகளையும் வழங்குவோம். அந்த நிதியை யாருக்கு ஒதுக்க வேண்டும். உள்ளுராட்சி சபையிடம் நிதி இல்லாத போது மத்திய அரசு அதற்கான நிதியை வழங்கப்படும். உள்ளுராட்சி சபைகளிடம் இருந்து வரும் பரிந்துரைகளை ஆராய்ந்து நிதி ஒதுக்குவோம்.நிதியை ஒதுக்க முன்னர் யார் அந்த பரிந்துரைகளை அனுப்புகின்றனர் என்று ஆராய்வோம்.

மன்னார் நகர சபை தேசிய மக்கள் சக்தியின் கீழ் இருக்கும் உள்ளுராட்சி சபையெனின் அந்த பரிந்துரையை கண்ணை மூடிக்கொண்டு அனுமதிப்போம். ஆனால் ஏனைய கட்சியின் கீழ் உள்ள உள்ளுராட்சி சபைகள் எனின் ஆயிரம் தடவை ஆராய்வோம்.வீதிக்கு கொங்கிரீட் இட நிதி கோருவார்கள். வீதிக்கு கொஞ்சம் தான் பணம் செல்லும். அதிக தொகையை சுருட்டிக் கொள்வார்கள். மத்திய அரசாங்கம் திருடாமல் பணத்தை சேகரித்து வைத்த பணத்தை திருடுவதற்காக மன்னாருக்கு அனுப்ப வேண்டுமா? மத்திய அரசு திருடாவிடின் உள்ளுராட்சி சபையும் அவ்வாறே இருக்க வேண்டும். நகர சபை,மற்றும் பிரதேச சபைகளை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக் கொடுங்கள்.இல்லாவிடின் மத்திய அரசு திருடாத நிலையில் உள்ளுராட்சி சபை திருடும் நிலை ஏற்படும். தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரும் வாக்களியுங்கள்.எதிர்வரும் மே 6 ஆம் பலமான மக்கள் ஆணையை பெற்றுத் தாருங்கள். இங்கு என்ன நிலைமை என்ன என்று கேட்டேன். ‘ நல்லம்’ என்றார்கள். பொதுத்தேர்தலை விட சிறந்த பெறுபேறு இந்த தேர்தலில் கிடைக்கும். நாடு முன்னேற்றப் பாதைக்கு வந்துள்ளது. பழைய தோல்வியடைந்த பாதையில் இனியும் சென்று பயனில்லை.

அமைச்சர் ராமலிங்கம் சந்ரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜகதீஸ்வரன் ஆகியோரும் இங்கு உரையாற்றியதோடு உள்ளுராட்சி சபை வேட்பாளர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

Show More

“புவிசார் அரசியலிலுள்ள சாதகமற்ற சூழ்நிலைகளை சமாளிக்கத் திட்டங்கள் தயார்செய்யப்படும்” -ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க-

(-வெற்றி நமதே.. ஊர் எமதே.. காலி வெற்றிப் பேரணி – 2025.04.07-) செப்டம்பர் 21 வரையிருந்த அரசியல் பாதையை மாற்றியமைத்து தனித்துவமான அரசியல் தீர்மானமொன்றை மக்கள் எடுத்தனர். பழைய தோல்வியுற்ற அரசியல் முகாம்களைத் தோற்கடித்து, அதிகாரத்தை சாதாரண மக்களுக்கு அளிக்கும் வெற்றியாக அது அமைந்தது. பின்னர், அந்த வெற்றியை மேலும் வலுப்படுத்தி, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவர்கள் எங்களுக்கு மற்றொரு விசேடமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்கள். அதேபோன்று உள்ளுராட்சித் தேர்தல் மே 6 ஆம் திகதி நடைபெற […]

(-வெற்றி நமதே.. ஊர் எமதே.. காலி வெற்றிப் பேரணி – 2025.04.07-)

செப்டம்பர் 21 வரையிருந்த அரசியல் பாதையை மாற்றியமைத்து தனித்துவமான அரசியல் தீர்மானமொன்றை மக்கள் எடுத்தனர். பழைய தோல்வியுற்ற அரசியல் முகாம்களைத் தோற்கடித்து, அதிகாரத்தை சாதாரண மக்களுக்கு அளிக்கும் வெற்றியாக அது அமைந்தது. பின்னர், அந்த வெற்றியை மேலும் வலுப்படுத்தி, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவர்கள் எங்களுக்கு மற்றொரு விசேடமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்கள்.

அதேபோன்று உள்ளுராட்சித் தேர்தல் மே 6 ஆம் திகதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தல் மார்ச் 2023 இல் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் முந்தைய அரசாங்கம் இந்தத் தேர்தலை ஒத்திவைத்தது. சிறிய தேர்களை ஒத்திவைத்தாலும் பெரிய தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்று மக்களிடம் கூறினோம். அதை உண்மையாக்கும் வகையில் இந்த நாட்டின் அரசியலை நாங்கள் முழுமையாக மாற்றியமைத்தோம்.

இந்த உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு சில விடயங்களை நிறைவுசெய்ய வேண்டியிருந்தது. முன்னர் பெறப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்யவும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதற்கான புதிய சட்டத் திருத்தமொன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டியிருந்தது, தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நமது அரசாங்கத்தின் முதல் திருத்த சட்ட மூலமாக உள்ளுராட்சித் தேர்தல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. பின்னர் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு சென்றது. திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து, ஏப்ரல் 6 அல்லது 7 ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்த முடியும்.

புத்தாண்டுக்கு முன்பு தேர்தலை நடத்த நாம் விரும்பினோம். ஆனால் எதிர்க்கட்சிகள் தேர்தலை ஒத்திவைக்குமாறு தேர்தல் ஆணைக் குழுவை கோரியிருந்தன. அதன்படி, தேர்தல் மே 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால் நாங்கள் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியவாறு தேர்தல் ஆணைக்குழு செயல்பட்டிருந்தால், இந்நேரம் உள்ளுராட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்கும். எங்களுக்கு தொடர்ந்து தேர்தல்களை நடத்த வேண்டிய தேவையில்லை. வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மாவட்ட அளவில் அதிக அளவில் பணத்தை வழங்கியுள்ளோம். டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்பு அந்தப் பணத்தைக் கொண்டு நாம் பணியாற்ற வேண்டும். இப்போது, ​​அந்த நடவடிக்கைகள் மே 6 ஆம் திகதி வரை தாமதிக்க நேரிட்டது. ஆனால், தேர்தல் ஒத்திவைக்கப்படுவதால் ஒரு கடினமான அரசியல் சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்பதை எதிர்க்கட்சி நினைவில் கொள்ள வேண்டும்.

இலங்கை வரலாற்றில் இந்தத் தேர்தலைப் போல அரசியலில் இவ்வளவு தெளிவான பிளவு இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை. இன்று, நாட்டின் அரசியல் இரண்டு முகாம்களாக பிரிந்துள்ளது. அந்த இரண்டு முகாம்களும் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நமது அரசாங்கமும், ஆங்காங்கு ஒன்றிணைந்துள்ள இடிபாடுகளும் அந்த இரண்டு முறைகள் ஆகும். அவர்களின் தேர்தல் மேடை, அவர்களின் பாராளுமன்ற உரை, பாராளுமன்றத்திற்கு வெளியே அவர்கள் ஆற்றும் உரைகள் ஆகியவற்றை நோக்கும் போது, ​​அனைவரின் எதிர்ப்பும் தேசிய மக்கள் சக்திக்கு என்பதை உணரலாம்.

People at the Public Rally Galle

செப்டம்பர் 21 ஆம் திகதி பெற்ற வெற்றியை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காக தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பை வெற்றிபெறச் செய்வதா இன்றேல் அந்தப் பயணத்தைத் திருப்புவதற்காக ஒன்றிணைந்துள்ள இடிபாடுகளின் குவியலை முன்னோக்கிக் கொண்டு செல்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில், இந்த நாட்டு மக்கள் பழைய அரசியல் முகாம்களை தீர்க்கமாக தோற்கடித்தனர். அந்தத் தோல்விக்குப் பிறகு பெற்ற வெற்றியை முன்னோக்கி எடுத்துச் செல்வதா இல்லையா என்பதை மக்கள் இப்போது முடிவு செய்ய வேண்டும். நம் நாட்டு மக்கள் நாட்டிற்காக முன்வைத்த காலை ஒரு அங்குலமேனும் பின்நோக்கி வைக்க மாட்டார்கள் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சியை முறையாக நிலைநாட்ட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நாடு இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு, நம் நாட்டில் சட்டம் பலவீனமானவர்களுக்கு எதிராக மட்டுமே செயற்படுத்தப்பட்டது. சட்டம் ஒரு சிலந்தி வலையைப் போன்றது. பெரியவர்கள் அதனை கிழித்துக் கொண்டு செல்வர் சிறியவர்கள் பிடிபடுகின்றனர். எனவே, இன்று நாம் பலவீனமானவர்களுக்கு ஒரு சட்டம், அதிகாரமுள்ளவர்களுக்கு ஒரு சட்டம் என்ற நிலையை மாற்றியுள்ளோம். இலங்கை வரலாற்றில் ஒருபோதும் பொலிஸ்மா அதிபர் தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியம் இதற்கு முன்பு இருந்ததில்லை. இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. அந்த நிறுவனங்களுக்கு நாங்கள் சுதந்திரமாக செயற்பட இடமளித்துள்ளோம். சட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதை மட்டுமே நாங்கள் கவனிக்கிறோம். ஆனால் முன்பிருந்த , அரசாங்கங்கள் அதிகாரத்தில் இருப்பவர்களைப் பாதுகாக்க தலையிட்டன. குற்றம், மோசடி அல்லது ஊழல் செய்திருந்தால், அவரது அந்தஸ்து என்னவாக இருந்தாலும் சட்டம் அமுல்படுத்தப்படும் ஒரு ஆட்சியை முதன் முறையாக நாங்கள் உருவாக்கியுள்ளோம். எனவே, தேசிய மக்கள் சக்தி என்பது இந்த நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் தரப்பாகும். எதிர்காலத்தில் இந்த நாட்டின் பிள்ளைகளுக்கு நம்பகமான நாட்டைக் கட்டியெழுப்பும் ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தி தான் என்பதை நினைவுபடுத்த வேண்டும்.

அது மட்டுமல்லாமல், நமது நாட்டின் அரசியல் கலாச்சாரத்திலும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளோம். இலங்கையில் முதன்முறையாக, பொதுமக்களின் பணத்தில் ஒரு சதம் கூட திருடாத அல்லது வீணாக்காத ஒரு அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளது. இந்த நாட்டில் மக்களின் பணத்தைத் திருடாத அல்லது வீணாக்காத ஒரு அரசாங்கம் நமக்குத் தேவை.

நாம் நாட்டைக் பொறுப்பேற்ற போது, ​​பொருளாதாரம் மிகவும் கடினமான நிலையில் இருந்தது. ஆனால், படிப்படியாக நமது நாட்டின் பொருளாதாரத்தை ஸ்தீர நிலைக்குக் கொண்டு வந்துள்ளோம். நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்யாமல் நாம் எதுவும் செய்ய முடியாது. எனவே, எங்கள் முதல் முயற்சி பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதாகும். இன்று நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான பல சமிக்ஞைகள் காணப்படுகின்றன. டிசம்பர் 21 ஆம் திகதி கடன் மறுசீரமைப்பு திட்டத்தை நாங்கள் முழுமையாக நிறைவுசெய்தோம். அதே சமயம், நமது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டது. அதே நேரத்தில், தடைபட்டிருந்த வெளிநாட்டு திட்டங்களை மீண்டும் தொடங்க முடிந்துள்ளது.

மேலும், டொலரின் பெறுமதி 300 ரூபாய்க்கு நெருங்கிய அளவில் பேணுவதில் எமது அரசாங்கம் வெற்றி பெற்றது. 35%-40% ஆக இருந்த வங்கி வட்டி விகிதங்கள், இன்று 10% விட குறைவாக ஒற்றை இலக்கத்தில் பராமரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, குறைந்த வட்டி விகிதத்தில் கைத்தொழிலாளர்கள், வர்த்தகர்களுக்கு கடன்களைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

President Anura Kumara Dissanayake Addressing at the Public Rally Galle

அன்று, நாட்டில் பணவீக்கம் 70% -75% ஆக உயர்ந்தது. இன்று நாம் அதை குறைக்க முடிந்துள்ளது. இன்று முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய பயப்படுவதில்லை. சுற்றுலாத் துறை மிகப் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

அதன்படி, நமது நாட்டின் பொருளாதாரத்தின் மீது உலகில் உள்ள அனைவரினதும் நம்பிக்கையும் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களும் பயனடைய வேண்டும். அதற்காக அஸ்வெசும பயன்களை அதிகரித்தல், ஓய்வூதிய கொடுப்பனவுகளை அதிகரித்தல் மற்றும் அண்மைய வரலாற்றில் மிகப்பெரிய அதிகரிப்பபாக அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரித்தல் உள்ளிட்ட சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்காக 33,000 கோடி ரூபாய் செலவிடப்படும். இந்தப் பணம் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்று சிலர் எங்களிடம் கேட்கிறார்கள். பொதுமக்களின் ஒவ்வொரு ரூபாவையும் கவனித்து, அதைப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கைக்குள் இதைச் செய்கிறோம்.

நாம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 16 இலட்சம் மாணவர்களுக்கு பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்ய 6,000 ரூபாவை இலங்கையில் முதல் முறையாக வழங்கினோம். மேலும், மஹபொல புலமைப்பரிசில் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவுக்காக வழங்கப்படும் தொகை அதிகரிக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு பிரஜையையும் பாதுகாக்கும் பொறுப்பை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்.

பாரிய பொருளாதார மாற்றங்கள் அன்றி, சிறிய திருப்பத்தின் மூலம் பெறும் பணத்தை படிப்படியாக மக்களின் நலனுக்காக செலவிடத் தொடங்கியுள்ளோம். நாங்கள் அத்தோடு நிற்கவில்லை. இந்த ஆண்டு, மூலதனச் செலவினங்களுக்காக 1400 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளோம்.

Crowd at the Public Rally Galle

இந்தப் பணம் வீதிகள், வடிகால் கட்டமைப்பு ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கு செலவிடப்படுகிறது. இலங்கையின் வரலாற்றில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மிகப்பாரிய மூலதனச் செலவை இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கியுள்ளோம். இந்தப் பணத்தை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் செலவழிக்க வேண்டும்.

அவ்வாறாயின் இந்த நாடு மீண்டும் பணியிடமாக மாற்றப்பட வேண்டும். இந்த 1400 பில்லியன்களை நமது நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் முதலீடு செய்தால், நாம் 3%-4% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைய முடியும்.

மேலும், தற்போது ஒரு சாதகமற்ற புவிசார் அரசியல் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. நமது ஏற்றுமதியில் சில தாக்கத்தை ஏற்படுத்தும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதைத் தீர்க்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து, அதைப் பற்றி கலந்துரையாடி வருகிறோம். அத்தகைய சவாலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், அதைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வது குறித்தும் நாங்கள் திட்டங்களை வகுத்துள்ளோம்.

இது நாம் எதிர்பார்க்காத ஒரு சூழ்நிலை என்றாலும், நாம் அதை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் நமது பொருளாதாரம் மிகச் சிறந்த முன்னேற்றத்தைக் காட்டுகிறது. அதன்படி, 2025 ஆம் ஆண்டு இலங்கையில் பல துறைகளில் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதங்களைப் பதிவு செய்யும் ஆண்டாக இருக்கும்.

President Anura Kumara Dissanayake with bhikshu at the Public Rally Galle

அதில் முதலாவதாக, 2025 ஆம் ஆண்டு இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஆண்டாக இருக்கும். மேலும், 2025 ஆம் ஆண்டு இலங்கையில் அதிக மூலதனச் செலவினங்களைக் கொண்ட ஆண்டாக இருக்கும். மேலும், 2025 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருமானத்தை ஈட்டும் ஆண்டாக இருக்கும்.

சர்வதேச அளவில் உருவாகியுள்ள சூழ்நிலை அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலிலோ அல்லது முடிவுகளிலோ ஒரு பிரச்சினையாக இல்லை. இங்கே ஒரு புவிசார் அரசியல் பிரச்சினை எழுந்துள்ளது. நாம் அந்தப் பிரச்சினையை ஒரு கட்சியாக அல்ல, ஒரு நாடாக எதிர்கொள்ள வேண்டும்.

எனவே, இந்த நாட்டின் அனைத்து மக்களும் இதுபோன்ற ஒரு பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்க தங்களால் இயன்றவரை தலையிட வேண்டும் என்றும், அத்தகைய பிரச்சினையை எதிர்கொள்ள ஒரு தேசமாகத் தயாராக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். எந்தவொரு நாட்டிற்கும் தமது நாட்டின் வரி தொடர்பில் தீர்மானிக்க உரிமை உண்டு.

அந்த உரிமையை நாம் மறுக்க முடியாது. இது எங்களை குறிவைத்து நடத்தப்பட்ட அல்லது எங்களைப் பின்தொடர்ந்த வந்த விடயம் அல்ல. ஒரு பொதுவான நிகழ்வு. அதன்போது சில பாதகமான சூழ்நிலைகள் ஏற்படும் அபாயத்தை நாங்கள் எதிர்கொள்கிறோம். இன்று காலை சர்வதேச நாணய நிதியத்துடனும் நான் கலந்துரையாடினேன்.

இந்த ஆண்டு நாம் அடைய வேண்டிய இலக்குகளை சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ளது. உருவாகியுள்ள புதிய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய பரிமாணங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்ற விடயத்தின் மீது நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இந்த நடவடிக்கைகளுக்கு அதிகபட்ச ஆதரவை நாங்கள் பெற்றுக்கொள்வோம்.

Public Rally Galle Crowd

இந்தியப் பிரதமரின் வருகையின் போது, ​​சிறந்த பொருளாதார சாதனைகளை அடைய நாங்கள் முயற்சித்தோம். இந்த ஆண்டு நமது நாட்டிற்கு சுமார் ஆயிரம் கோடி நன்கொடை வழங்க அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும், சம்பூரில் 120 மெகாவோட் மின் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டது.

இந்தியா டிஜிட்டல் மயமாக்கலில் மிகப் பாரிய வெற்றியை பெற்றுக்கொண்டுள்ள நாடு. இந்தியப் பிரதமர் டிஜிட்டல் மயமாக்கலில் எங்களுக்கு உதவவும், கிழக்கு மாகாணத்தில் பல துறைகளில் உதவி வழங்கவும், மருந்து உற்பத்தியில் ஆதரவை வழங்கவும் ஒப்புக்கொண்டார்.

நாம் இதில் எதையும் தனிப்பட்ட எமது அரசாங்கத்தின் நலனுக்காகச் செய்யவில்லை, மாறாக இந்த நாட்டை வளமான நாடாக மாற்றுவதற்காகவே செய்கிறோம். பாதுகாப்பு ஒப்பந்தம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. ஆனால் இப்போது நடக்கும் விடயங்களே அதில் உள்ளன.

கூட்டு நடவடிக்கைகள் மற்றும் கூட்டுப் பயிற்சிகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. அவற்றை முறைப்படுத்த இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.இந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும். அதிக திறன் மற்றும் நிபுணத்துவம் கொண்ட நாடுகளிடமிருந்து நாம் உதவிகளைப் பெற வேண்டும்.

கடந்த எழுபத்தாறு ஆண்டுகளில் நமது நாட்டை தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முன்னணிக்குக் கொண்டுவர இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், நாம் அதைச் செய்ய வேண்டி இருக்காது. ஆனால் உலகம் தொழில்நுட்பத்தில் முன்னேறும்போது, எதையும் உள்வாங்காத ஒரு நாடாக நாம் இருந்தோம்.

எனவே நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், அந்த முன்னேற்றத்தை அடைந்த நாடுகளின் ஆதரவைப் பெறுவதுதான். நாம் யாரையும் வாங்க முடியாது. இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த வாழ்க்கையையும், நாட்டிற்கு பெருமையையும் உருவாக்கும் நோக்கத்துடன் இதையெல்லாம் செய்கிறோம் என்பதைக் கூற வேண்டும்.

Show More