Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

“உமாஒயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை அமைத்ததில் 25 கோடி டொலரை கொள்ளையடித்துள்ளனர்” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன-

(ஊடக சந்திப்பு – பதுளை – 24.04.2024) உமாஒயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தோடு தொடர்புடைய 248 மில்லியன் டொலர் ஆரம்பத்திலேயே கசிந்திருந்தது. கனடாவின் டப்ளின் நிறுவனம் இத்திட்டத்துக்கு 155 மில்லியன் டொலரை மதிப்பீடு செய்திருந்தது. அதன்பின்னர் ராஜபக்ஸர்கள் 516 மில்லியன் டொலருக்கு மதிப்பீடு செய்திருந்தார்கள்.  அதற்கிடையில் அவர்கள் பள்ளக்கில் சென்றதாக அன்றைய காலத்தில் மகிந்த அமரவீர தெரிவித்திருந்தார். அரசாங்க பத்திரிகையில் இதுகுறித்து பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழலை பற்றி சிந்திக்காமல் உமாஒயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை நிர்மாணிக்கையில் 25 கோடி டொலரை கொள்ளையடித்துள்ளனர். அந்தப் பணத்தை திருடியவர்கள் யார்? எவருடைய பொக்கெட்டுக்கு […]

(ஊடக சந்திப்பு – பதுளை – 24.04.2024)

உமாஒயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தோடு தொடர்புடைய 248 மில்லியன் டொலர் ஆரம்பத்திலேயே கசிந்திருந்தது. கனடாவின் டப்ளின் நிறுவனம் இத்திட்டத்துக்கு 155 மில்லியன் டொலரை மதிப்பீடு செய்திருந்தது. அதன்பின்னர் ராஜபக்ஸர்கள் 516 மில்லியன் டொலருக்கு மதிப்பீடு செய்திருந்தார்கள்.  அதற்கிடையில் அவர்கள் பள்ளக்கில் சென்றதாக அன்றைய காலத்தில் மகிந்த அமரவீர தெரிவித்திருந்தார். அரசாங்க பத்திரிகையில் இதுகுறித்து பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

சுற்றுச்சூழலை பற்றி சிந்திக்காமல் உமாஒயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை நிர்மாணிக்கையில் 25 கோடி டொலரை கொள்ளையடித்துள்ளனர். அந்தப் பணத்தை திருடியவர்கள் யார்? எவருடைய பொக்கெட்டுக்கு அந்தப் பணம் சென்றது? அதுதொடர்பில் தேடியறிய வேண்டியதில்லையா? இதெற்கெதிராக நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அது தவறா? ஊழலுக்கு எதிராக செயற்பட்டமை தவறா?

பண்டாரவளையில் நடத்தப்பட்ட ஆர்ப்பட்டத்தின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டதாக ஹரிண் பெர்னாண்டோ பத்திரிகைக்கு கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்கவுக்கு அருகில் உள்ள உதவியாளரே இவ்வாறு கூறுகின்றார். 

அபிவிருத்தி திட்டங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். நாட்டில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், இது அபிவிருத்தியல்ல. இதுவொரு ஊழல். எனவே, கோடிகளில் இலாபம் பெறுவதாக கூறுவதைப் போன்றே பல கோடிகளில் அதற்கான நட்டத்தையும் மதிப்பீடு செய்ய வேண்டும். தேசிய மக்கள் சக்தி தலைமையிலான எமது அரசாங்கத்தில் உமாஒயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் தொடர்பில் முழுமையான விசாரணையை நாங்கள் முன்னெடுப்போம்.

Show More

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக்குழுவிற்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு

(-Colombo, April 23, 2024-) நேற்று (23) முற்பகல் மவிமு தலைமை அலுவலகத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் பிரதி அமைச்சரை உள்ளிட்ட தூதுக்குழுவினர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்கள். சீனத் தூதுக்குழுவினர் சார்பில் இந்த சந்திப்பில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் பிரதி அமைச்சரும் அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் […]

(-Colombo, April 23, 2024-)

China-NPP

நேற்று (23) முற்பகல் மவிமு தலைமை அலுவலகத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் பிரதி அமைச்சரை உள்ளிட்ட தூதுக்குழுவினர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்கள்.

சீனத் தூதுக்குழுவினர் சார்பில் இந்த சந்திப்பில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் பிரதி அமைச்சரும் அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் Lin Tao, இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் கவுன்சலர் Chen Xiangyuan, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் Li Jinyan, பிரதிப் பணிப்பாளர் Wen Jun , பிரதி அமைச்சரின் செயலாளர் Jin Yan, இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் Jin Enze, மொழிபெயர்ப்பாளர் Zhang Guyu ஆகியோர் பங்கேற்றனர்.

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம்செய்து தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்களான விஜித ஹேரத், கலாநிதி ஹரினி அமரசூரிய, பேராசிரியர் அனில் ஜயந்த பர்னாந்து, சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பின்போது நடப்பு அரசியல் நிலைமை, எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்கள் மற்றும் வளர்ந்துவரக்கூடிய அரசியல் நிலைமைகள் பற்றி குறிப்பாக இருதரப்பினர்களிடையே கலந்துரையாடப்பட்டது.

தேர்தல் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தயார்நிலை, அதன்பொருட்டு கடைப்பிடிக்க எதிர்பார்த்துள்ள வழிமுறைகள் மற்றும் உபாயமார்க்கங்கள் பற்றியும் தோன்றியுள்ள நெருக்கடியான நிலைமையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக முதலில் அரசியல் உறுதிநிலையை நாட்டில் உருவாக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

தேசிய மக்கள் சக்தி அரசியல் துறையில் வேகமாக வளர்ந்துவந்து மக்கள் மத்தியில் பிரபல்யத்யத்தையும் கவர்ச்சியையும் அடைகையில் கடைப்பிடித்த வழிமுறைகள் மற்றும் அமைப்பாண்மைப் கட்டமைப்புகள் தொடர்பிலும் சீனத் தூதுக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பல்வேறு மக்கள் குழுக்கள், சமூக அடுக்குகள் மற்றும் வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களுடன் நிலவுகின்ற உறவுகள், நாட்டைக் கட்டியெழுப்புகையில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள், கட்சிக் கட்டமைப்புகள் பற்றி தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இவ்வேளையில் சீனத் தூதுக்குழுவினரிடம் வலியுறுத்தினர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் கொண்டுள்ள பரஸ்பர நம்பிக்கை, சமூக கலாசார உறவுகள் மற்றும் ராஜதந்திர உறவுகளை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் மேலும் வளர்த்துக்கொள்வது மற்றும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்கையில் மேற்படி உறவுகளைப் பிரயோகிக்கக்கூடிய விதங்கள் பற்றியும் இருதரப்பினருக்கும் இடையில் மேலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

China-NPP
China-NPP
China-NPP
China-NPP
China-NPP
China-NPP
China-NPP
China-NPP
China-NPP
Show More

தேசிய மக்கள் சக்தி கார்தினலை சந்தித்தது…

(-Colombo, April 13, 2024-) 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 (உயிர்த்த ஞாயிறு தினம்) இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதியை ஈடேற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் உறுதியுரை பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இன்று (18) முற்பகல் 11.00 மணிக்கு பொரளையில் உள்ள பேராயரின் இல்லத்தில் வைத்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களால் கையளிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 (உயிர்த்த ஞாயிறு தினம்) கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ அடியார்களை […]

(-Colombo, April 13, 2024-)

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 (உயிர்த்த ஞாயிறு தினம்) இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதியை ஈடேற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் உறுதியுரை பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இன்று (18) முற்பகல் 11.00 மணிக்கு பொரளையில் உள்ள பேராயரின் இல்லத்தில் வைத்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களால் கையளிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 (உயிர்த்த ஞாயிறு தினம்) கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ அடியார்களை இலக்காகக்கொண்டு தீவிரவாதிகள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், அத்தாக்குதலால் நிர்க்கதிக்குள்ளானவர்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் முறையாக சட்டத்தை அமுல்படுத்தும் எனவும்,
மேற்படி தாக்குதலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்ட நபர்களுக்கு எதிராக முறைப்படி சட்டத்தை அமுலாக்குமெனவும் வலியுறுத்தும் 07 விடயங்கள் அந்த உறுதியுரையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்து பேராசிரியர் கிறிசாந்த அபேசிங்க, சட்டத்தரணி சுனில் வட்டகல, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும, சிரேஷ்ட பேச்சாளர் ரொஹான் பெர்ணான்டோ, அருண சாந்த நோனிஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

NPP-meet-Kardinal
NPP-meet-Kardinal
NPP-meet-Kardinal
NPP-meet-Kardinal
NPP-meet-Kardinal
Show More

புதிய தேசிய மறுமலர்ச்சிக்கான பயணத்தை ஆரம்பிக்க புத்தாண்டினை புதிய வலிமையாகக்கொள்வோம்!

புத்தாண்டுச் செய்தி (-Colombo, April 13, 2024-) இலங்கை சிங்கள மற்றும் தமிழ் மக்களால் புத்தாண்டின் பிறப்பினை நிமித்தமாகக்கொண்டு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்ற பாரிய கலாசார வைபவம் இத்தடவை 13 ஆந் திகதி இடம்பெறுகின்றது. மரபுரீதியான நம்பிக்கைக்கிணங்க சூரியன் மீன ராசியில் இருந்து மேட ராசிக்கு இடம் மாறுவதால் வட்டமொன்று நிறைவடைவதன்பேரிலான புதிய வருடப் பிறப்பினைக் கொண்டாட ஒன்றுசேருமாறு சிங்கள தமிழ் மக்களுக்கு நாங்கள் வாழ்த்துக்களை கூறிக்கொள்ள விரும்புகிறோம். புது வருட வைபவமானது வீட்டிலுள்ள பொருட்கள் தொடக்கம் மக்கள் […]

புத்தாண்டுச் செய்தி

(-Colombo, April 13, 2024-)

Sinhala-Hindu-New-Year

இலங்கை சிங்கள மற்றும் தமிழ் மக்களால் புத்தாண்டின் பிறப்பினை நிமித்தமாகக்கொண்டு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்ற பாரிய கலாசார வைபவம் இத்தடவை 13 ஆந் திகதி இடம்பெறுகின்றது. மரபுரீதியான நம்பிக்கைக்கிணங்க சூரியன் மீன ராசியில் இருந்து மேட ராசிக்கு இடம் மாறுவதால் வட்டமொன்று நிறைவடைவதன்பேரிலான புதிய வருடப் பிறப்பினைக் கொண்டாட ஒன்றுசேருமாறு சிங்கள தமிழ் மக்களுக்கு நாங்கள் வாழ்த்துக்களை கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

புது வருட வைபவமானது வீட்டிலுள்ள பொருட்கள் தொடக்கம் மக்கள் வாழ்க்கையுடன் தொடர்புடைய அனைத்துப் பிரிவுகளிலும் புதியதாக அமைதல் மற்றும் புதுப்பித்துக்கொள்ளலுடன் பின்னிப்பிணைந்துள்ளது மாத்திரமன்றி அது மீண்டும் மக்கள் வாழ்க்கைமீது சாதகமான தாக்கமேற்படுத்துகின்ற சமூக நிகழ்வாகவும் அமைகின்றது. சிலகாலமாக பேணிவந்த அநாவசியமானவற்றை நீக்கிவிட்டு வீடுவாசல்களைப்போன்றே வாழ்க்கையையும் புதுத்தன்மையால் நிரப்பிக்கொள்ள வாய்ப்புவசதிகளை அமைத்துக்கொடுக்கிறது. அந்த புதுத்தன்மையில் இற்றைவரை தாம் வந்த பயணத்தை புதியகோணத்தில் சிந்தித்துப் பார்க்கச் செய்விக்கின்ற அகத்தூண்டுதலும் உள்ளடங்குகின்றது.
நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிக்குள் மக்களில் பெரும்பாலானோருக்கு புதிய வருடத்தை தமது எதிர்பார்ப்பிற்கிணங்க கோலாகலமாக கொண்டாடுதல் பற்றி சிந்தித்துப் பார்ப்பதுகூட வேதனைமிக்க அனுபவமாக அமையக்கூடும். ஒரு வட்டத்தை நிறைவுசெய்ததன் மூலமாக புத்தாண்டு பிறந்தபோதிலும் நிலவிய மற்றும் நிலவிக்கொண்டிருக்கின்ற ஆட்சிகளால் 76 வருடகாலமாக இலங்கை சமூகத்தை மக்களின் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்குகின்ற ஓரே மூர்க்கத்தனமாக வட்டத்திற்குள் பயணிக்கச் செய்வித்ததன் காரணத்தினாலேயே அவ்வாறு நேர்ந்துள்ளது. கிடைக்கின்ற முதலாவது தருணத்திலேயே நிலவுகின்ற மூர்க்கத்தனமான ஊழல்மிக்க சமூக பொருளாதார அரசியல் வட்டத்திலிருந்து நீங்கி வங்குரோத்து நிலையுற்றுள்ள நாட்டை அதிலிருந்து மீட்டெடுக்கின்றதும் முன்னேற்றமான மற்றும் நியாயமான சமூகநிலைக்கு உயர்த்திவைக்கின்றதுமான மக்கள்நேயமுள்ள ஆட்சியை தெரிவுசெய்வதற்காக பிறந்த புத்தாண்டு வாய்ப்புவசதிகளை திறந்துவைத்துள்ளது. அவ்வாறான நிலைமையில் மாத்திரமே புத்தாண்டில் ஏற்படுத்திக்கொள்கின்ற பிரார்த்தனைகள் உண்மையாகவே ஈடேறும்.

வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கின் அனைத்து இனங்களையும் சேர்ந்த மக்கள் பேதங்களை ஒழித்துக்கட்டி அத்தகைய சுபமூகூர்த்தம் பிறக்கும்வரையே மக்கள்நேயமுள்ள ஆட்சியின் அவசியப்பாட்டுக்காக அணிதிரண்டு கொண்டிருக்கிறார்கள். நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையான வெற்றியை பெற்றுக்கொடுக்கின்ற புதிய தேசிய மறுமலர்ச்சிக்கான வரலாற்றுப் பயணத்தை தொடங்க புத்தாண்டு புதிய வலிமையாக அமையட்டுமாக என நாங்கள் நல்வாழ்த்துக் கூறுகிறோம்.

அநுர குமார திசாநாயக்க
தலைவர்
தேசிய மக்கள் சக்தி
2024.04.13

Show More

சகோதரத்துவம் நிறைந்த ஒரே இலங்கை தேசத்தவராக எழுச்சிபெறுவோம்

(ரமழான் பெருநாள் செய்தி – 2024.04.10) இஸ்லாமிய அடியார்களால் ஒரு மாத காலமாக அநுட்டித்த நோன்பு காலத்தின் நிறைவினைக் குறிக்கின்ற ரமழான் பெருநாள் இந்த ஏப்பிறல் மாதம் 10 ஆந் திகதி பிறந்துள்ளது. அந்த பெருநாளைக் கொண்டாட ஒன்றுசேர்கின்ற இலங்கை இஸ்லாமிய அடியார்களுக்கு தேசிய மக்கள் சக்தி தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. அன்றாட வாழ்க்கையில் சிரமங்களை பொறுமையுடன் தாங்கிக்கொண்டு ஒருமாத காலமாக அநுட்டிக்கின்ற நோன்பு மூலமாக சேமித்துக்கொள்கின்ற செல்வத்தை தமது சகோதர மக்களுக்கு உதவும்பொருட்டு பாவனைக்கு எடுத்தல் […]

(ரமழான் பெருநாள் செய்தி – 2024.04.10)

Ramadhan-Wish

இஸ்லாமிய அடியார்களால் ஒரு மாத காலமாக அநுட்டித்த நோன்பு காலத்தின் நிறைவினைக் குறிக்கின்ற ரமழான் பெருநாள் இந்த ஏப்பிறல் மாதம் 10 ஆந் திகதி பிறந்துள்ளது. அந்த பெருநாளைக் கொண்டாட ஒன்றுசேர்கின்ற இலங்கை இஸ்லாமிய அடியார்களுக்கு தேசிய மக்கள் சக்தி தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

அன்றாட வாழ்க்கையில் சிரமங்களை பொறுமையுடன் தாங்கிக்கொண்டு ஒருமாத காலமாக அநுட்டிக்கின்ற நோன்பு மூலமாக சேமித்துக்கொள்கின்ற செல்வத்தை தமது சகோதர மக்களுக்கு உதவும்பொருட்டு பாவனைக்கு எடுத்தல் ரமழான் வைபவத்தின் நோக்கமாகும். ரமழான் வழிபாட்டு முறைகளானது நிகழ்கால ஊழல்மிக்க சமூக முறைமையால் மனிதர்கள் மத்தியிலிருந்து பலவந்தமாக தூரவிலக்கி வைத்துக் கொண்டிருக்கின்ற மனிதம் மற்றும் பொதுநலம் ஆகிய பண்புகளை மீண்டும் வாழ்க்கைக்குள் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிரயத்தனமாக அமைகின்றது.

எழுபத்தாறு வருடகால ஊழல்மிக்க அரசியலால் நாடும் மக்களும் தள்ளப்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூகப் பேரழிவினை நாங்கள் அனுபவித்து வருகிறோம். அத்துடன் அதிகாரவேட்கைமிக்க அரசியல் தேவைகளுக்காக இனவாதம், மதவாதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்துவைக்கின்ற கொடிய போக்குகள் மற்றும் அதற்காக பெருநிலத்தில் இரத்த ஆறு பெருக்கெடுத்தோடிய விதத்தை நாங்கள் கண்டிருக்கிறோம். எவ்வாறாயினும் இந்த ஊழல்மிக்க அதிகாரமோகம்கொண்ட அரசியல் கலாசாரத்தையும் அதன் மூர்க்கத்தனமான தேவைகளையும் இன்றளவில் ஒட்டுமொத்த மனித சமுதாயமும் உணர்ந்து நிராகரித்து முன்நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி தருகின்றது. இந்த மக்கள் அபிப்பராயத்தைக் கண்டே ஊழல்மிக்க ஆட்சியாளர்கள் அச்சமடைந்துள்ளார்கள். மக்கள் அனைவருக்கும் தமது இனத்தை விஞ்சியதாக சகோதரத்துவத்துடன் பின்னிப்பிணைந்த ஒரே இலங்கை தேசத்தவராக எழுச்சிபெற சகோதரத்துவத்தை அடிப்படையாகக்கொண்ட ரமழான் பெருநாள் காட்டுகின்ற வழியை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்.

இலங்கை தேசத்தில் புதிய மறுமலர்ச்சி யுகமொன்றை ஆரம்பிக்க தயாராகியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வருடமொன்றில் ரமழானைக் கொண்டாடுகின்ற இஸ்லாமிய அடியார்களுக்கு சகோதரத்துவத்தின் நாமத்தால் ஒரே இலங்கைத் தேசத்தவராக கைகோர்த்துக்கொள்ளுமாறு நாங்கள் அழைப்பு விடுகிறோம்.

அநுர குமார திசாநாயக்க
தலைவர்
தேசிய மக்கள் சக்தி
2024.04.10

Show More

“மக்களை தீர்மானகரமாக பாதிக்கின்ற கல்வி சம்பந்தமான முடிவுகளை எடுக்க சனாதிபதிக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய-

(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.04.08) இன்றளவில் சமூகத்தில் பேசுபொருளாக அமைந்துவிட்ட முக்கியமான கொள்கையொன்று சனாதிபதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. “தேசிய கல்விக் கொள்கைச் சட்டகம்” என அழைக்கப்படுகின்ற அந்த கொள்கைத்தொடர் மூலமாக இதுவரை ஓரளவுக்கேனும் பாதுகாக்கப்பட்டிருந்த இலவசக் கல்வி செயற்பாங்கின் முதுகெலும்பினை முறித்து பணம் ஈட்டுகின்ற ஒரு பொறியமைப்பாக மாற்றிக்கொள்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகின்றது. இது சம்பந்தமாக ஆர்வம் காட்டுகின்ற பல்கலைக்கழகங்களிலும் அதற்கு வெளியிலும் உள்ள குழுக்களிலும் அது பற்றிய உரையாடல் இடம்பெற்று வருகின்றது. […]

(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.04.08)

pressnpppress

இன்றளவில் சமூகத்தில் பேசுபொருளாக அமைந்துவிட்ட முக்கியமான கொள்கையொன்று சனாதிபதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. “தேசிய கல்விக் கொள்கைச் சட்டகம்” என அழைக்கப்படுகின்ற அந்த கொள்கைத்தொடர் மூலமாக இதுவரை ஓரளவுக்கேனும் பாதுகாக்கப்பட்டிருந்த இலவசக் கல்வி செயற்பாங்கின் முதுகெலும்பினை முறித்து பணம் ஈட்டுகின்ற ஒரு பொறியமைப்பாக மாற்றிக்கொள்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகின்றது.

இது சம்பந்தமாக ஆர்வம் காட்டுகின்ற பல்கலைக்கழகங்களிலும் அதற்கு வெளியிலும் உள்ள குழுக்களிலும் அது பற்றிய உரையாடல் இடம்பெற்று வருகின்றது. இதனை கல்வி தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற மிகவும் பிற்போக்கான இடையீடாகவே நாங்கள் காண்கிறோம். அது சம்பந்தமாக பல விடயங்களை முன்வைக்க வேண்டியுள்ளது.

என்னதான் சிக்கல்களுக்கு மத்தியிலும் எமது நாட்டின் இலவசக் கல்வி இற்றைவரை நிலவுகின்றது. அதைப்போலவே அது பாதுகாக்கப்படவேண்டுமென நாமனைவரும் எற்றுக்கொள்கிறோம். எமது நாட்டை இந்த அளவக்கேனும் பேணிவர இலவசக் கல்விக் கொள்கை எந்தளவுக்கு பங்களிப்புச் செய்ததெனும் புரிந்துணர்வு எம்மனைவருக்கும் உண்டு. அறிமுகஞ் செய்துள்ள தேசிய கல்விக் கொள்கைச் சட்டகம் மூலமாக நிலவுகின்ற இந்த நிலைமையை பின்நோக்கித் தள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தனியார்மயமாக்கலின் திசையை நோக்கி ஆற்றுப்படுத்தப்பட்டிருப்பது பல்கலைக்கழக முறைமை மாத்திரமன்றி இந்த கொள்கைச் சட்டகத்திற்குள் பாடசாலைகளில்கூட இலவசக் கல்விக் கோட்பாடுகள் மீது தாக்குதல் நடாத்தப்படுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. மிகவும் எளிமையானவகையில் கல்வியின் நோக்கங்களை முன்வைத்து தூரநோக்கற்ற பிற்போக்கான விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த கொள்கைச் சட்டகம் பற்றிய பொறுப்பு வகிக்கின்ற ஒருவர் கிடையாது. எமது நாட்டின் கல்வி சம்பந்தமான கொள்கைகளை அமுலாக்குகின்ற செயற்பாங்கொன்று நிலவுகின்றது. அதில் தேசிய கல்வி ஆணைக்குழு கொள்கை வகுப்பதில் முன்னணி வகிக்கின்றது. எனினும் தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு இதுபற்றித் தெரியாது. அது செயலற்றுப்போகச் செய்விக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்கைச் சட்டகம் பற்றி பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் ஓர் அறிவித்தலை விடுத்துள்ளது. உயர் கல்விக்கு இதனால் ஏற்படுகின்ற தாக்கம் பற்றி விபரமாக விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கு பிரதிபலிப்புச்செய்து கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இந்த கொள்கை வெளியீடு எங்கிருந்து வந்ததென கேள்வி எழுப்புகிறார். கல்வி அமைச்சும் அது பற்றித் தெரியாது எனக் கூறுகிறது. அது சனாதிபதி அலுவலகத்தின் முத்திரை பொறிக்கப்பட்டே வெளியிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமான உத்தியோகபூர்வமான பொறுப்பினை வகிக்கின்ற தேசிய கல்வி ஆணைக்குழுவோ அல்லது கல்வி அமைச்சோ அறிந்திராதவகையில் இந்த அறிக்கைகள் எவரது தேவையின் பிரகாரம் வெளியிடப்படுகின்றதெனும் பாரதூரமான பிரச்சினை நிலவுகின்றது. பாராளுமன்றம், அமைச்சரவை, வேறு பொறுப்புக்கூறவேண்டிய நிறுவனங்கள் எதுவுமே அறிந்திராதவகையில் அரசியலமைப்புச் சபையைக்கூட பொருட்படுத்தாமல் சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடந்து கொள்கிறார் என்பது இதன்மூலமாக மீண்டும் உறுதியாகின்றது. குழுக்கள் மூலமாக கொள்கைகளை வகுத்து, சம்பந்தப்பட்ட உத்தியோகபூர்வ கட்டமைப்பினை முற்றாகவே ஒதுக்கிவிட்ட மக்கள் ஆணையற்ற இந்த சனாதிபதி நடந்துகொள்கிறார். அது மிகவும் பயங்கரமானது. ரணில் விக்கிரமசிங்க முழுநாடுமே நிராகரித்த அரசியல் பாசறையொன்றின் பிரதிநிதியாவார். அவருக்கு எந்தவிதமான மக்கள் ஆணையும் கிடையாது. அரசியலமைப்பினால் விதிக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட பொறுப்புகள் மாத்திரமே இருக்கின்றன. இன்னும் சில மாதங்களில் அதுவும் அற்றுப்போய்விடும். அதற்கிடையில் நாட்டையும் மக்களையும் பாதிக்கின்ற தீர்மானங்களை மேற்கொள்ள அவருக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. அவருக்கு எந்தவிதமான உரிமையும் அற்ற பிரதேசங்களில் அடாவடித்தனமாக பிரவேசித்து புரிகின்ற இந்த செயல்களுக்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்பதை வலியுறுத்துகிறோம்.

கல்வித்துறை சம்பந்தமாக இத்தருணத்தில் அரசாங்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் பலவிதமாக கொள்கைச் சட்டகங்களை முன்வைத்து வருகிறார்கள். ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து ஒன்று, விஜேதாச ராஜபக்ஷவின் குழுவிலிருந்து புதிய முன்மொழிவுகள், அமைச்சர் புதிய முன்மொழிவு பற்றிப் பேசுகிறார். அந்த ஒன்றுமே சரியாக சமர்ப்பிக்கப்படவில்லை. விஜேதாச ராஜபக்ஷவின் குழுவில் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவம் செய்து நானும் இருந்தேன். அந்த குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நான் கையொப்பமிடவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன அதில் கையொப்பமிட்டார். நான் கல்விச் சீர்திருத்தங்களை எதி்ர்ப்பதாலேயே கையொப்பமிடவில்லை என அவர் கூறினார். அந்த முன்மொழிவுகளுடன் நாங்கள் உடன்படவில்லை என்பதாலேயே கையொப்பமிடவில்லை. எனினும் அவருடைய கட்சியும் அது தொடர்பில் ஏகோபித்த அபிப்பிராயத்தில் இல்லை. அவர் குழுவின் முன்மொழிவுகளில் கையொப்பமிட்டாலும் அவருடைய தலைவரே பல்கலைக்கழக விரிவுரையாளர் மத்தியில் ” பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன இந்த அறி்க்கையில் கையொப்பமிட்டாலும் தலைவர் என்றவகையில் நான் அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்வதில்லை” எனக் கூறினார். எமது கொள்கைத் தீர்மானங்கள் பற்றி பேசுவதைவிட அவருடைய கட்சியில் ஏகோபித்த கருத்து நிலவாத விடயங்கள் பற்றி வலியுறுத்துவே நல்லதென பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவிற்கு நான் முன்மொழிகிறேன்.

pressnpppress

“இனிமேல் உருவாகின்ற பல்கலைக்கழகங்களை மாகாண சபைகளுக்கு கையகப்படுத்த ரணில் முன்மொழிந்துள்ளார்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் கலாநிதி திலீப விதாரண-

எமது நாட்டுக்கு 1931 இல் இலவசக் கல்வி அறிமுகஞ் செய்யப்பட்ட பின்னர் சமர்ப்பித்த மிகவும் பாரதூரமான திருத்தம் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு காலகட்டங்களில் பலவிதமான சவால்களுக்கு இலக்காகி வந்தபோதிலும் உயர் கல்விக் கொள்கையானது அடிப்படை அத்திவாரத்தில் அடிப்படை சாரத்தில் இதுவரைகாலமும் நிலவியது. 93 வருடகால இலவசக் கல்வி கொள்கைமீது விழுகின்ற பிரமாண்டமான தாக்குதலாக புதிய திருத்தங்களை அடையாளப்படுத்த முடியும். இங்கே இருப்பது இலவசக் கல்வியின் முழுமையான உட்பொருளை மாற்றியமைக்கின்ற முன்மொழிவுகளாகும். ரணில் விக்கிரமசிங்கவை முதன்மையாகக்கொண்ட நவ லிபரல் பார்வைக்கோணம் முன்மொழிகின்ற பிரதானமான நிபந்தனையாக அமைவது கல்வியிலிருந்து அரசாங்கம் விடுபட வேண்டுமென்பதாகும். சவால்களுக்கு இலக்காகினாலும் எண்ணக்கருரீதியாக ஆரம்பக் கல்வியில் இருந்து பல்கலைக்கழக கல்விவரை அனைத்து வலயங்களிலும் அமுலாக்கப்பட்டது. மாணவர்களுக்கு இனிமேலும் இலவசக் கல்வி கிடையாதென்பதே இதன் மூலமாக முன்மொழியப்படுகின்றது: பணம் செலுத்தியே கற்கவேண்டுமென்பதாகும். அரசாங்கத்தினால் உயர்கல்விக்காக இதுவரை ஈடுபடுத்திய பணம் நின்றுவிடுமென்பதும் பல்கலைக்கழக கல்வி முறைமை மாணவர்களிடமிருந்து சேர்க்கப்படுகின்ற பணத்தின் அடிப்படையிலும் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற கடனின் அடிப்படையிலும் பேணிவரப்பட்டு கடன் செலுத்தவும் பல்கலைக் கழகங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ளது. உலகில் இன்றளவில் மோசமான நிலையை அடைந்துள்ள மாணவர்களுக்கு கடன்கொடுத்தலும் முன்மொழியப்பட்டுள்ளது. ஐக்கிய அமரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் உயர்கல்வி பயில்கின்ற மாணவர்களால் பெறப்பட்ட இத்தகைய கடனைச் செலுத்தமுடியாமல் போனமையால் நேர்ந்துள்ள கவலைக்கிடமான நிலைமை பற்றி பாரதூரமான உரையாடல்கள் நிலவுகின்றன.

மத்திய அரசாங்கம் ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலை கல்வியிலிருந்து விலகி மாகாணசபை சட்டகத்திடம் கையளிக்கப்பட உள்ளது. தற்போது மத்திய அரசாங்கத்தின்கீழ் நிலவுகின்ற தேசிய பாடசலைகள்கூட மாகாண சபைகளிடம் கையளிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதன் பிரதான அர்த்தத்தை விளங்கிக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும். 1987 இல் இருந்து சரிவர அமுலாக்கப்படாத பொறியமைப்பொன்றே மாகாண சபைகளில் இருக்கின்றன. அவ்வாறான இடத்திற்கு ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலைக் கல்வியை தள்ளிவிடுவதன் மூலமாக அரசாங்கம் முற்றாகவே கல்வியிலிருந்து நீங்குவதற்கான முதலாவது அடியெடுப்பு வைக்கப்படுகின்றது. 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாகாணசபை தேர்தல்கள்கூட நடாத்தப்படவில்லை. அவ்வாறான இடத்திற்கு ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலைக் கல்வியை ஒப்படைக்கவே தயாராகி வருகிறார்கள். இனிமேல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படுமாயின் அவற்றை மாகாண சபைகளிடம் கையளிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதன் பின்னர் தேசிய பல்கலைக் கழகங்கள் உருவாக மாட்டாதென்பதே அதன் மூலமாக கூறப்படுகின்றது. அதைப்போலவே ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலை கல்விக்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படுவது சம்பந்தப்பட்ட பாடசாலையின் மாணவர் எண்ணிக்கை மற்றும் இந்த பாடசாலைகளைப் பேணிவருகின்ற நிலைமையின் அடிப்படையிலேயே எனக் கூறப்படுகின்றது. அதன் மூலமாக இடம்பெறுவது தற்போது நிலவுகின்ற பிரபலமான, பலம்பொருந்திய பாடசலைகளுக்கு அரசாங்க நிதி ஒதுக்கப்படுதலாகும். சிறிய பாடசாலைகளுக்கு முழுமையாகவே நிதி கிடைக்காமல் போய்விடும். மறுபுறத்தில் கல்வியை வழங்குகின்ற மொழிமூலமாக ஆங்கிலம் முன்மொழியப்பட்டுள்ளது. ஆங்கில மொழிக்கு விசேட இடம் வழங்குகின்ற காரணத்தின்பேரில் இன்றளவில் ஓரளவுக்கேனும் பாதுகாக்கப்பட்டுள்ள சமூக நீதி முற்றாகவே இல்லாதொழிந்துவிடும்.

எந்தவொரு கொள்கைச் சட்டகத்தினதும் வரைவாளர்கள் யாரென முதலில் அறிமுகஞ் செய்யப்படுவர். எனினும் இங்கு அந்த பொறுப்பினை வகிக்கின்ற குழுவொன்று குறிப்பிடப்படவில்லை. எனினும் சமூக வலைத்தளத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஓர் அறிக்கையின்படி அது தொடர்பாக 25 பேர் இடையீடு செய்துள்ளார்கள். அவர்கள் மத்தியில் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனம் கிடையாது. குறிப்பாக கல்விக் கொள்கைக்காக பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனம் தொடர்ச்சியாக இடையீடுசெய்து வருகின்றது. அதைப்போலவே அந்த 25 பேர் மத்தியில் எந்தவோர் ஆசிரியர் சங்கமோ மாணவர் சங்கமோ கிடையாது. கல்வியை ஒரு வியாபாரமாக காண்கின்ற பல்வேறு குழுமங்கள் இதில் இருக்கின்றன. அரச உத்தியோகத்தர் தவிர்ந்ததாக தனியார் பல்கலைக் கழகங்களை பிரதிநிதித்துவம் செய்பவர்கள், பாரியளவிலான கம்பெனிகள் மற்றும் நவலிபரல் பொருளாதாரத்தின் கோட்பாடு வகுப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து இந்த கொள்கைச் சட்டகத்தை வகுத்துள்ளார்கள். 1931 இல் இருந்து அமுலில் உள்ள இலவசக் கல்வியில் இருந்து பயன்பெற்றவர்களாலேயே இந்த திரிபுநிலையுற்ற கொள்கைச் சட்டகத்தைக் கொண்டுவந்திருப்பது பாரதூரமான ஒரு விடயமாக அமைகின்றது. இதுவரை காலமும் நிலவிய எந்தவோர் அரசாங்கமும் புரிந்திராத இந்தளவுக்கு பாரதூரமான தாக்குதல் எவ்வாறு இலவசக் கல்விமீது மேற்கொள்ளப்படுகின்றதென நாங்கள் கேள்வி கேட்கிறோம்.

pressnpppress

“கல்வி தொடர்பான பொறுப்பிலிருந்து அரசாங்கத்தை விலக்குகின்ற கொள்கைச் சட்டகத்திற்கு எதிராக அணிதிரள வேண்டும்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் கலாநிதி அநுர கருணாதிலக-

எமது நாட்டின் கல்வி சம்பந்தமாக இலவசக் கல்விச் சட்டத்தைப் போன்றே இலங்கை அடைந்துள்ள பொருளாதார, சமூக, கலாசார, சர்வதேச சமவாயம் எனும் இரண்டு அடிப்படை விடயங்கள் மிகவும் முக்கியமானவை. சர்வதேச சமவாயம் மூலமாக அனைவருக்கும் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. சுதந்திரமான சமூக பிரஜை கல்வி மூலமாகவே உருவாக்கப்படுகிறான் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அதைப்போலவே அனைத்து இனங்களுக்கிடையிலும் பரஸ்பர புரிந்துணர்வு, சமாதானம் மற்றும் ஒற்றுமை பிரஜைகளின் கல்வி மூலமாகவே உறுதிசெய்யப்படுவதாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எந்தவொரு மட்டத்திலுமான கல்வியை பெற்றுக்கொள்வதற்கான சமமான அணுகுமுறை பிரஜைகளுக்கு இருக்கவேண்டுமென்பது எற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். தமது இயலுமை மற்றும் தோற்றுவாய்களின் அடிப்படையில் அரச கல்வியை விரிவாக்குவதிலான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்பது குறிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேசரீதியாக எற்றுக்கொள்ளப்பட்ட இந்த கோட்பாடுகள் அனைத்தையும் மறந்து வகுத்த கொள்கைச் சட்டகமொன்று சனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கைச் சட்டகத்தை அமுலாக்கினால் தரமான கல்வி சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படுவதை தவிர்க்க இயலாது. இன்றளவில் ஆரம்பக் கல்வியில் இருந்து உயர்கல்வி வரை நிலவுகின்ற வேற்றுமைகளை மென்மேலும் விரிவாக்கி உறுதிசெய்ய இந்த முன்மொழிவுகள் வழிசமைக்கின்றன.

முதலீடுகளும் வளங்களும் என பெயரிடப்பட்டுள்ள தலைப்பின்கீழ் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியில் இருந்து வருடம் 12 வரை கல்வி பயில்கின்ற பிள்ளைகளுக்கு செலுத்துவதற்குள்ள இயலுமைக்கு தடையேற்படாதவண்ணம் செயற்படவேண்டுமெனக் குறிப்பிடப்படுகின்றது. புறப்பாடவிதானச் செயற்பாடுகளையும் உள்ளிட்டதாக பாடசாலைகளில் பணம் அறவிட இன்றளவில் நிலவுகின்ற தடைகள் அனைத்தையும் நீக்குவதாகக் குறப்பிடப்பட்டுள்ளது. அதைப்போலவே பல்கலைக் கழகங்கள் சம்பந்தமான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினை ஒழித்து தனிவேறான தேசிய உயர் கல்வி ஆணைக்குழு எனும் நிறுவனமொன்றை அறிமுகஞ்செய்து அரச, அரசதுறைல்லாத, தேசிய மற்றும் மாகாண உயர் கல்வி நிறுவனங்களில் கல்விக்கான தரத்தை சான்றுரைப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்குகின்ற செயற்பாங்கிலிருந்து நீங்கி கல்வியின் தரத்தை வகுப்பது மாத்திரம் தேசிய கல்வி ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படுகின்றது. பணத்தை அறவிடல், மாணவர்களை சேர்த்துக்கொள்ளல், நிருவாகத்தை உள்ளிட்ட அனைத்து அலுவல்களையும் கையளிக்க முன்மொழியப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தமது பணத்தை தேடிக்கொள்ள வேண்டுமென்பதே இதன் கருத்தாகும். சிலவேளைகளில் பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக்கொள்வதற்கான தரநியமங்களைக் குறைத்து அதிகமாக மாணவர்களை சேர்த்துக்கொண்டு அதிகமாக பணத்தை ஈட்டிக்கொள்ளவும் இதன் மூலமாக வாய்ப்பு கிடைக்கும். மறுபுறத்தில் பணத்தை பிறப்பித்துக்கொள்வதற்காகவே ஆக்கப்பட்ட பாடநெறிகளை அறிமுகஞ்செய்யவும் கவனஞ் செலுத்தப்படும்.

இதுவரை இலவசக் கல்விச் செயற்பாங்கு ஓரளவுக்கேனும் பாதுகாக்கப்பட்டிருந்த முதுகெலும்பினை சிதைத்து பணம் ஈட்டுகின்ற பொறியமைப்பாக மாற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முதன்மையாகக்கொண்டு இந்த புதிய கொள்கைச் சட்டகம் முன்வைக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது. அரசாங்கத்தினால் கல்விக்காக பணம் ஈடுபடுத்தப்படுதல், தரமான கல்வியை வழங்குதல், அனைவருக்கும் கல்வியை வழங்குவதற்கான பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகுதல் ஆகிய அனைத்து விடயங்களையும் ஒரே தடவையில் முடிவுக்கு கொண்டுவருகின்ற உத்தேச கொள்கைச் சட்டகத்திற்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும்.

pressnpppress
Show More