Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் இந்திய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார்

(-Colombo, August 30, 2024-) இன்று (30) பிற்பகல் கொழும்பில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் திரு. Ajit Doval அவர்களை தேசிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையில் நிலவுகின்ற அரசியல் தொடர்புகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் சார்ந்த அரசியல் நிலைமைகள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத்தும் இத்தருணத்தில் பங்கேற்றார்.

(-Colombo, August 30, 2024-)

இன்று (30) பிற்பகல் கொழும்பில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் திரு. Ajit Doval அவர்களை தேசிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் நிலவுகின்ற அரசியல் தொடர்புகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் சார்ந்த அரசியல் நிலைமைகள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத்தும் இத்தருணத்தில் பங்கேற்றார்.

AKD Meets Ajit Doval
Show More

“இனவாதத்தை தமது நிகழ்ச்சிநிரலாக மாற்றிக்கொள்ளாத அரசாங்கமொன்றை அமைத்திடவேண்டும்”-தேசிய மக்கள் சக்தியின் சனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க-

(-“நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கிண்ணியா கூட்டம் – 2024.08.28-) செப்டெம்பர் 21 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியியின் அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள முடியும். சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் அனைவரதும் நம்பிக்கையை வென்றெடுத்த அரசாங்கமொன்றே எமக்குத்தேவை. பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்துடன் மாத்திரம் அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்வதில் பலனில்லை. உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும். கடந்த காலத்தில் எமது நாட்டில் இனவாத அரசியலே நிலவியது. தெற்கில் முற்றாகவே சிங்கள இனவாதமே வெற்றிபெறுகின்றது. அதற்கு மாறாக […]

(-“நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கிண்ணியா கூட்டம் – 2024.08.28-)

AKD At Kinniya Rally

செப்டெம்பர் 21 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியியின் அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள முடியும். சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் அனைவரதும் நம்பிக்கையை வென்றெடுத்த அரசாங்கமொன்றே எமக்குத்தேவை. பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்துடன் மாத்திரம் அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்வதில் பலனில்லை. உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும். கடந்த காலத்தில் எமது நாட்டில் இனவாத அரசியலே நிலவியது. தெற்கில் முற்றாகவே சிங்கள இனவாதமே வெற்றிபெறுகின்றது. அதற்கு மாறாக கிழக்கில் முஸ்லீம் இனவாதம் மேலோங்குகின்றது. அதைப்போலவே வடக்கிலும் தமிழ் இனவாதம் கட்டிவளர்க்கப்படுகின்றது. மக்கள் மத்தியில் இனவாதம் இல்லாவிட்டாலும் ஒரு இனவாதத்தால் மற்றுமொரு இனவாதத்தை கட்டிவளர்க்கக்கூடிய அரசியலை முன்னெடுத்துவர அரசியல்வாதிகள் முயற்சிசெய்தார்கள். 2019 இல் கோட்டாபய வெற்றிபெற்றமைக்கான பிரதான காரணம் இனவாதமாகும். 2015 இல் தோல்விகண்ட ராஜபக்ஷாக்கள் மீளவும் எழுச்சிபெற்றது ஊழல், மோசடி, ஜனநாயகம், தேசிய ஒற்றுமை போன்ற விடயங்களின் அடிப்படையிலல்ல. இவர்கள் அரச அனுசரணையுடன் முஸ்லீம் மக்களுக்கு எதிரான அரசியல் கருத்திட்டமொன்றை ஆரம்பித்தார்கள். மலட்டு கொத்து, மலட்டு உடைகள், மலட்டு மருத்துவர்களின் பின்னர் உயிர்த்தஞாயிறு தாக்குதலை நடாத்தினார்கள். 2019 ஏப்ரல் 19 ஆந் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தினத்திலேயே கோட்டாபய வெற்றிபெறுவது உறுதியாயிற்று. அதற்கான காரணம் இனவாதமாகும்.

கொவிட் பெருந்தொற்றினால் மனிதர்கள் இறந்தால் ஏனைய நாடுகளில் நல்லடக்கம் மற்றும் தகனம்செய்தல் ஆகிய இரண்டையுமே மேற்கொண்டவேளையில் இலங்கை அரசாங்கம் மாத்திரம் தகனம் செய்யவேண்டுமென்ற முடிவினை எடுத்தது. இனவாதத்தின் அடிப்படையில் அமைக்கின்ற அரசாங்கம் இனவாதத்தின் அடிப்படையிலேயே செயலாற்றும். உங்கள் மார்க்க நம்பிக்கைக்கிணங்க உங்கள் உறவினரொருவர் இறந்தால் ஈமக்கிரியைகளை செய்யவேண்டியது உயிருடன் இருப்பவர்களின் பொறுப்பாகும். எனினும் அந்த நம்பிக்கைக்கு எதிராக தகனம் செய்யவேண்டியநிலை உங்களுக்கு ஏற்பட்டது. ஒருசிலர் அவர்களை தகனம்செய்யவேண்டி ஏற்படுமென அதனை மறைத்தார்கள். இனவாத அரசாங்கங்கள் இனவாதத்தின்படி நடந்துகொள்வதால் மேலும் வேதனைகள் அதிகரிக்கும். அதனால் இனவாதத்திற்கு கட்டுப்படாத இனவாதத்தை நிகழ்ச்சிநிரலில் கொண்டிராத அரசாங்கமொன்றை அமைத்திட வேண்டும். மொட்டு என்பது இனவாதத்தின் சேர்க்கையாகும். இப்போது அதன் ஒரு சிறுதுண்டு மகிந்தவுடனும் இருக்கிறது. 2019 இல் முஸ்லீம்களுக்கு எதிராக செயற்பட்ட எஞ்சிய பகுதி சஜித்துடனும் இருக்கிறது. முஸ்லீம் விரோத அரசாங்கத்தில் இருந்தவர்கள் தற்போது ரணில், சஜித், நாமலுடன் மூன்றாக பிரிந்து இருக்கிறார்கள். சஜித் பிரேமதாச கிழக்கிற்கு வரும்போது சம்பிக்க ரணவக்கவை ஒளித்துவைத்துவிட்டு ஹக்கீமோடு வருகிறார். ஆனால் தெற்கிற்கு போவது சம்பிக்கவுடனேயே. மாத்தறைக்கு ஹக்கீம் அல்லது ரிஷாட்டுடன் போவதில்லை. சம்பிக்க, திலங்க, கொடஹேவா போன்றவர்களுடனேயே அங்கு போகிறார். இது இரட்டைவேடமல்லவா? மகரகம இனவாத மேடையில் சம்பிக்கவும் திலங்கவும் ஒரே மேடையில் இருந்தார்கள். அவர்கள் இருவருமே தற்போது சஜித்தின் மேடையில். வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இனவாத அரசியலை சுமந்துசென்றவர்கள் இப்போது மூன்றாகப் பிரிந்து உள்ளார்கள். வரலாற்றில் ஒருபோதுமே இனவாதத்தை தமது அரசியலுக்காக பாவித்திராத ஒரே இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமாகும். நீங்கள் உண்மையாகவே இனவாதத்திற்கு எதிரானவர்களெனில் தேசிய மக்கள் சக்தியை மாத்திரமே தெரிவுசெய்துகொள்ள வேண்டும். இனவாதத்திற்கு எதிரானவர்களெனில் சஜித்திற்கோ ரணிலுக்கோ புள்ளடியிட வேண்டாம். இனவாதத்திற்கு எதிரான தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கம் தேவையென்றால் தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரமே புள்ளடியிட வேண்டும்.

Crowd At Kinniya Rally

முழுநாடுமே ஒரேவிதமாக பயணிக்கையில் கிழக்கு மாத்திரம் வித்தியாசமான பாதையில் போகுமா?

தெற்கின் பெரும்பான்மை சிங்கள மக்கள் திசைகாட்டியுடனேயே இருக்கிறார்கள். தெற்கு. சபரகமுவ, மேற்கு, வடமத்திய, மத்திய, வடமேல் ஆகிய எல்லா மாகாணங்களிலும் பெரும்பான்மை மக்கள் எங்களைச் சுற்றியே இருக்கிறார்கள். அவர்கள் எங்களிடம் கேட்பது “தோழர் கிழக்கு என்னவாகும்” என்று. முழுநாடுமே ஒரேவிதமாக பயணிக்கையில் கிழக்கு மாத்திரம் வித்தியாசமான பாதையில் போகுமா? இந்த தடவை தேசிய மக்கள் சக்தியை தெரிவுசெய்து கொள்ளுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். நடைபெறப்போவது ஜனாதிபதி தேர்தலாகும். இப்போது தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகளை அளித்து பொதுத்தேர்தல் வந்ததும் உங்கள் பிரதேசத்திற்கு அவசியமான உறுப்பினர்களைத் தெரிவுசெய்து கொள்ளுங்கள். ஆனால் அவ்வாறு தெரிவுசெய்யும்போதும் சரியானவரைத் தெரிவுசெய்யுங்கள். 2019 இல் முஸ்லீம் காங்கிரசிற்கு புள்ளடியிட்டு தௌபிக்கை பாராளுமன்றம் அனுப்பினீர்கள். பைசர் காசீமை பாராளுமன்றம் அனுப்பினீர்கள். அவர்கள் கோட்டாபயவை தோற்கடிப்பதற்காக வாக்கு கேட்டவர்கள். கோட்டாபயவின் அதிகாரங்களை அதிகரிப்பதற்காகவே அரசியலமைப்பிற்கான இருபதாம் திருத்தம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது. நீங்கள் கோட்டாபயவிற்கு எதிராக வாக்குகளை அளித்தாலும் அவர்கள் பாராளுமன்றம்போய் கோட்டாயவின் அதிகாரங்களை அதிகரிப்பதற்காக வாக்களித்தார்கள். ஜனாதிபதி தேர்தலில் எங்களுக்கு வாக்களித்து இறந்தகாலம் பற்றி சிந்தித்துப்பார்த்து பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் விரும்புகின்ற தலைவருக்கு வாக்களியுங்கள். ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களிடம் கொள்கைகள் கிடையாது, விடயங்கள் கிடையாது, அதனால் சேறு பூசிக்கொண்டு, குறைகளைக் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் சிங்களப் பிரதேசங்களுக்குச் சென்று வந்தால் பெரஹெராவை நிறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். நாங்கள் வந்ததும் தானம் வழங்குவதை நிறுத்திவிடுவதாக ஒருசில பிக்குமார்கள் கூறுகிறார்கள். சிங்கள மக்களிடம் அவ்வாறுகூறி முஸ்லீம் பிரதேசங்களுக்கு வந்ததும் “எங்கள் அரசாங்கத்தின்கீழ் நீங்கள் ஐந்துவேளை தொழுவதை நிறுத்துவதாக” கூறுகிறார்கள். வர்த்தகம் செய்ய இடமளிக்கமாட்டோமெனக் கூறுகிறார்கள். தாடி வளர்க்க இடமளிக்கமாட்டோமெனக் கூறுகிறார்கள்.

தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் உருவாக்குவோம்.

இவ்வாறான குறைகூறல்கள், பொய்யான, திரிபுபடுத்திய தகவல்களை பரப்பி வருகிறார்கள். ஹக்கீம் அதைப்போன்ற ஒரு கதையைக் கூறினார். “முஸ்லீம் தாய்மார்களின் கருப்பையிலிருந்து பயங்கரவாதம் உருவாகியது” என நான் கூறினோமாம். சதாகாலமும் இனவாதம் என்கின்ற கருப்பையிலேயே வன்முறை உருவாகிறது என நான் கூறுகிறேன். சிங்கள இனவாதம் என்கின்ற கருப்பையில் வன்முறை தோன்றுகிறது. முஸ்லீம் இனவாதம் என்கின்ற கருப்பையில் முஸ்லீம் வன்முறை தோன்றுகிறது. தமிழ் இனவாதம் என்கின்ற கருப்பையில் தமிழ் வன்முறை உருவாகிறது. நான் இவ்வாறு கூறும்போது முஸ்லீம் தாய்மார்களின் கருப்பையில் பயங்கரவாதம் தோன்றியதாக நான் கூறினேன் என ஹக்கீம் கூறுகிறார். நான் சிங்களத்தில் கூறியது ஹக்கீமிற்கு விளங்கவில்லையா என்று தெரியாது. எனவே நான் கூறிய கூற்றினை சரியாக கூறும்படி நான் கூறினேன். அவ்வாறு கூறாவிட்டால் வழக்குப் போடுவேன் என. சரிசெய்யவில்லை என்பதால் வழக்குப்போட்டேன். எமது நாட்டு அரசியல் மேடைகளில் இனிமேலும் இனவாத கோஷங்களை எழுப்ப இடமளிக்கக்கூடாது. தேசிய மக்கள் சக்தியின் மேடையிலும் வேறு எந்த இடத்திலும் இனவாதக் கூற்றுகளை விடுக்க எமது அரசாங்கம் இடமளிக்க மாட்டாது. அவ்விதமாக தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் உருவாக்குவோம்.

Arun Hemachandra And AKD At Kinniya Rally

நீங்கள் திருட்டுகளுக்கு எதிரானவர்கள் என்றால் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களிக்கவேண்டும்.

அதைப்போலவே திருட்டுகளை நிறுத்தி இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். திருட்டினை நிறுத்தினால் நீண்டகாலம் தாக்குப்பிடிக்கக்கூடிய வீதிகளை அமைக்கலாம். கடந்த காலத்தில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்ஜெக்ஷன் எனக்கூறி எமது நாட்டுக்குகொண்டுவந்த தண்ணீரை நோயாளிகளுக்கு ஏற்றினார்கள். இவ்வாறான திருட்டு, ஊழல், விரயத்தை தடுத்துநிறுத்துகின்ற அரசாங்கமொன்றை அமைத்திடவேண்டும். சஜித்தால் அவ்வாறான அரசாங்கமொன்றை அமைக்க முடியுமா? திருட்டுகளை நிறுத்துவதற்காக சஜித்திற்கு புள்ளடியிடுவதில் பலனில்லை. ரணிலுக்கு புள்ளிடியிடுவதாலும் பலனில்லை. இவ்வளவு திருடியிருக்கும்போது வாக்குகளை அளித்தால் அவர்கள் திருடினால் பரவாயில்லை என்று நினைப்பார்கள். எனவே நீங்கள் திருட்டுகளுக்கு எதிரானவர்கள் என்றால் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களிக்கவேண்டும்.

உங்களால் திருட்டினை நிறுத்தமுடியாமல் திருடுகின்ற ஒருவருக்கு வாக்குகளை அளித்தால் அது ஹராம்.

திருட்டுகளை நிறுத்திவிடுவது மாத்திரம் போதுமானதாக அமையமாட்டாது. திருடியவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும். திருடர்களை பிடித்து கோல்பேஸ் மைதானத்திற்கு கொண்டுவந்து தோலை உரிப்பதாக 1994 இல் சந்திரிக்கா கூறினார். விஜேபால மெண்டிஸ் அரசாங்கத்தின் தென்னந்தோட்டங்களை கள்ளத்தனமாக எழுதிக்கொண்டமைக்காக தண்டனை வழங்குவதாகக் கூறினார். இரண்டு மூன்று வருடங்கள் கழிந்ததும் அவருக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்தார். 2015 இல் எயார்போர்ட்டை மூடுவதாக மைத்திரிபால சிறிசேன கூறினார். மூன்று வருடங்கள் கழியும்போது மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்ஷவிற்கு சட்டவிரோதமாக பிரதமர் பதவியைக் கொடுத்தார். மத்திய வங்கியை உடைத்த ரணில் விக்கிரமசிங்கவை சிறையில் அடைப்பதாக 2019 இல் கோட்டாபயவின் மேடையில் கூறினார்கள். அதற்காக நீங்கள் புள்ளடியிட்டாலும் இரண்டு மூன்று வருடங்களாகும்போது ஜனாதிபதி பதவியைக் கொடுத்தார்கள். அதனால் கள்வர்களைத் தண்டிப்பதற்கான அரசாங்மொன்றை அமைக்கவேண்டும். அதற்காக ரணிலுக்கு சஜித்திற்கு வாக்களிப்பதில் பயனில்லை. உங்களின் மார்க்கத்தின்படி உங்களால் திருட்டினை நிறுத்த முடியாவிட்டால் அதனை செய்யக்கூடிய ஒருவருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென கூறப்படுகின்றது. பாராளுமன்றத்தில் இருந்த ஒரு முஸ்லீம் அமைச்சர்தான் என்னிடம் அவ்வாறு கூறினார். அவர் அமைச்சரவையில் இருந்தவேளையில் ஒருசில அமைச்சரவைப் பத்திரங்களை என்னிடம் கொடுத்தார். “தோழரே என்னால் திருட்டுகளை நிறுத்தமுடியாது. அதனால் நிறுத்தக்கடிய ஒருவருக்கு உதவி பரிய வேண்டுமென எங்களுடைய மார்க்கம் போதித்துள்ளது. அதனால் இந்த பத்திரங்களை நான் உங்களிடம் கொடுக்கிறேன்” என்று கூறினார். உங்களால் திருட்டினை நிறுத்தமுடியாமல் திருடுகின்ற ஒருவருக்கு வாக்குகளை அளித்தால் அது ஹராம். அப்படியானால் திருட்டுகளை நிறுத்துவதற்காக தேசிய மக்கள் மக்கள் சக்திக்கு வாக்குகளை அளிக்கவேண்டும். அதுதான் ஹலால். உங்கள் மார்க்கத்தின்படி பார்த்தாலும் இத்தடவை தேசிய மக்கள் சக்திக்கே புள்ளடியிட வேண்டும். திருட்டுகளை நிறுத்துவது மாத்திரமல்ல, திருடியவர்களுக்கு தண்டனை வழங்குவது மாத்திரமல்ல, திருடிய சொத்துக்களையும் பறிமுதல் செய்வோம்.

Kinniya Rally Crowd

நானோ எமது உயர்பீடத்தில் இருப்பவர்களோ தொழில்முயற்சிகளில் ஈடுபடப்போவதில்லை

நாங்கள் வாக்குகளைக் கோருவது அதற்காகவே. அதுமாத்திரம் போதுமானதாக அமையமாட்டாது. நாட்டின் பொருளாதாரத்தையும் சீராக்க வேண்டும். நானோ எமது உயர்பீடத்தில் இருப்பவர்களோ தொழில்முயற்சிகளில் ஈடுபடப்போவதில்லை. அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே பார் லயிஷன் கொடுக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அவரது சகாக்களுக்கும் சஜித்தை சேர்ந்தவர்களுக்கும் பார் லயிஷன் பகிர்ந்தளித்தார். அதைப்போலவே பெற்றோல் ஷெட் பகிர்ந்தளித்தார். இரத்தினபுரியில் இரத்தினக்கல் சுரங்கங்களை அகழ்பவர்கள் அரசியல்வாதிகளே. மணல் பேர்மிற் வாங்குபவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களே. கிழக்கின் கடற்கரைப் பரப்பில் ஹோட்டல் அமைப்பவர்களும், கற்குழிகளை பேணிவருபவர்களும் அரசியல்வாதிகளே. நாங்கள் அவற்றைப் புரிவதற்காக வரப்போவதில்லை. இந்த நாட்டில் தொழில்முயற்சிகளில் ஈடுபடவேண்டியவர்கள் நீங்களே. அவற்றை முன்னேற்றுவதற்கான உதவிகளை செய்வதையே எமது அரசாங்கம் செய்யும். உங்களுக்கு சுற்றுலா ஹோட்டலை அமைக்க வேண்டுமானால் காணியை அரசாங்கம் வழங்கும். எமக்கு ஒரு கிளாஸ் தண்ணீர்கூட வேண்டாம். ஆனால் உரிய காலத்தில் ஹோட்டலை நிர்மாணிக்காவிட்டால், அதனை கையகப்படுத்தி இயலுமான ஒருவரிம் கையளிப்போம். அது நல்லதல்லவா? இந்த நாட்டில் மாத்திரம் பிஸ்னஸ் செய்தால் போதாது. உலகச் சந்தைக்கும் எமது தொழில்முயற்சிகளை கொண்டுசெல்ல வேண்டும். அவ்விதமாக கைத்தொழில்களையும் தொழில்முயற்சிகளயும் விருத்திசெய்து அரசாங்கம் வரி அறவிடும். அவ்விதமாக அறவிட்ட வரித்தொகைககள் எவ்வாறு ஈடுபடுத்தப்பட்டன என்பதை பற்றிய செய்தியை போஃனுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாக அறிவிக்கின்ற சிஷ்ஸ்டமொன்றை ஒரிரு வருடங்களில் கட்டியழுப்புவோம். கல்விக்காக, சுகாதாரத்திற்காக, பாதுகாப்பிற்காக, வீதிகளை அமைப்பதற்காக ஈடுபடுத்திய விதத்தை விபரங்களுடன் முன்வைப்போம். தேசிய ஒற்றுமையை உருவாக்குகின்ற, திருட்டுகளை நிறுத்துகின்ற, வெளிப்படைத்தன்மையுடன் செயலாற்றுகின்ற அரசாங்கமொன்றை கட்டியெழுப்புவதற்கான தொடக்கத் திகதி அடுத்த 21 ஆந் திகதியாகும்.

ஊரிலுள்ள வாக்குப்பெட்டிகளை திசைகாட்டிக்கு புள்ளியிட்ட வாக்குளால் நிரப்பவேண்டியது நீங்கள்தான்

நீங்கள் 21 அந் திகதி தெரிவு செய்வது புதிய அரசாங்கத்தையா? பழைய பாதையிலேயே போகப்போகிறீர்களா? எம்மால் விடயங்களை தெளிவுபடுத்த மாத்திரமே முடியும். எனினும் ஊரிலுள்ள வாக்குப்பெட்டிகளை திசைகாட்டிக்கு புள்ளியிட்ட வாக்குளால் நிரப்பவேண்டியது நீங்கள்தான். பழைய முஸ்லீம் கட்சிகள் பதற்றமடைந்துள்ளன. பெருமளவிலான இளம் முஸ்லீம் சமுதாயத்தினர் தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்காக செயலாற்றுவதால் அவர்கள் கலவரமடைந்திருக்கிறார்கள். இந்த மேடை இந்த புதிய இளைஞர்களால் நிரம்பியுள்ளது. அவர்கள் ஊருக்குப்போய் முதியர்களுடன் பேசுவார்கள். முகநூலில் எழுதுவார்கள், முச்சக்கரவண்டியை ஓட்டும்போது பேசுவார்கள். கடைக்கு வந்தால் பேசுவார்கள். அதனால் அந்த வாய்ப்பினை கைநழுவ விடவேண்டாம். நாட்டை வறுமையாக்கிய திருடர்களை விரட்டியடிக்க உகந்த தருணம் இதுவே. நாட்டை வளமாக்குகின்ற அரசாங்கமொன்றை அமைக்ககூடிய தருணம் இதுவே. அதோ அதற்காக எல்லோருடனும் பேசுங்கள். 21 ஆந் திகதி கிண்ணியா பிரதேசத்தின் வாக்குப்பெட்டிகளை திசைகாட்டிக்கான வாக்குகளால் நிரப்புவோம்.

Kinniya Rally Stage
Show More

“வாக்காளர்கள் சுயமாக முன்வந்து தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கிறார்கள்” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(-பெருவெற்றிக்கான கந்தளாய் கூட்டம் – 28.08.2024-) நீங்கள் நீண்டகாலமாக வாக்களித்து வந்திருக்கிறீர்கள். ஆனால், இந்த தேர்தல்தான் தேர்தல் தினம் வரும்வரை மக்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்ற தேர்தல். முன்பெல்லாம் தேர்தல் என்றால் வேட்பாளரின் கட்சியை சேர்ந்தவர்கள் அழைப்பார்கள், சப்பாடு, சாராயம், பணம் போன்றவற்றை கொடுப்பார்கள். அம்மாவுக்கு சில் புடவைகளை கொடுப்பார்கள். அப்பாவுக்கு சாராய போத்தல் கிடைக்கும். இது எல்லாமே வாக்காளர்களுக்கு கொடுக்கும் இலஞ்சம் ஆகும். ஆனால், இது மக்கள் முதல் தடவையாக சுயமாக முன்வந்து தேசிய மக்கள் […]

(-பெருவெற்றிக்கான கந்தளாய் கூட்டம் – 28.08.2024-)

Anura Kumara Dissanayake At The Victory Rally Of Kanthale

நீங்கள் நீண்டகாலமாக வாக்களித்து வந்திருக்கிறீர்கள். ஆனால், இந்த தேர்தல்தான் தேர்தல் தினம் வரும்வரை மக்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்ற தேர்தல். முன்பெல்லாம் தேர்தல் என்றால் வேட்பாளரின் கட்சியை சேர்ந்தவர்கள் அழைப்பார்கள், சப்பாடு, சாராயம், பணம் போன்றவற்றை கொடுப்பார்கள். அம்மாவுக்கு சில் புடவைகளை கொடுப்பார்கள். அப்பாவுக்கு சாராய போத்தல் கிடைக்கும். இது எல்லாமே வாக்காளர்களுக்கு கொடுக்கும் இலஞ்சம் ஆகும். ஆனால், இது மக்கள் முதல் தடவையாக சுயமாக முன்வந்து தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விப்பதற்காக உழைக்கின்ற தேர்தலாகும். கடைகள், முச்சக்கர வண்டிகள், சமூக வலைத்தளங்கள் எல்லாமே திசைகாட்டியின் சார்பில் தோற்றி வருகின்றன. நாங்கள் அவர்களை ஒருபோதுமே சந்தித்ததில்லை. மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் இந்த எழுச்சியை ரணிலுக்கோ, சஜித்துக்கோ என்ன செய்தாலும் தடுத்து நிறுத்த முடியாது.

இத்தடவை தேர்தலில் ஊழலுக்கு இடமில்லை

ஆனால், ரணில் விக்ரமசிங்க இறுதி நேரத்தில் ஏதாவது திருகுதாளம் போடுவார் என மக்கள் மத்தியில் ஒரு ஐயப்பாடு நிலவுகிறது. தேர்தலில் ஊழல்களை நடாத்த தேர்தல் பணியாளர்களின் உதவி தேவை. ஆனால், அரச அலுவலர்கள் எல்லோரும் திசைகாட்டிக்கே சார்பானவர்கள். எனவே, அந்த அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க உதவ மாட்டார்கள். அடுத்ததாக, அதுபோன்ற விசமத்தனமான வேலைகளை செய்ய பொலிசாரின் ஒத்துழைப்பு அவசியம். பொலிசாரும் ஒத்துழைக்க மாட்டார்கள். அவர்கள் வந்து இந்தக் கூட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறார்கள். அது அவர்களின் கடமை. ஆனால், அவர்கள் செயலாற்றுகின்ற விதத்தை பார்த்தால் அவர்கள் ஒரே மூச்சுடன் திசைகாட்டியின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பது தெளிவாகின்றது. அடுத்ததாக, இராணுவத்தினரின் ஒத்துழைப்பு தேவை. இராணுவத்தை பற்றி நினைத்துப்பார்க்க கூட ரணிலுக்கு முடியாது. அவர்களின் ஒத்துழைப்பும் தேசிய மக்கள் சக்திக்கே. எனவே, மக்களின் இந்த எதிர்பார்ப்பு மிகுந்த பயணத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. எங்களுக்குத் தேவை சாதாரண வெற்றியல்ல. பலம்பொருந்திய வெற்றியாகும். எனவே, நாங்கள் உங்களிடம் வேண்டுகோள் விடுப்பது செப்டெம்பர் 21 ஆம் திகதி வரை வெற்றிக்காக உழைப்பது மாத்திரமல்ல, அதன்பின்னர் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக அயராது உழைக்க அர்ப்பணிப்புடன் முன்வர வேண்டும்.

AKD Reading On Stage At The Victory Rally Of Kanthale

தேர்தல் வெற்றியின் பின்னர் பழிவாங்கலுக்கு களம் அமைத்திட மாட்டோம்.

செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத ஏனைய கட்சியை சேர்ந்தவர்களை எந்தவிதத்திலும் நோகடிக்க வேண்டாம். அந்த அரசியல் கலாசாரம்தான் எமக்கு தேவை. நாங்கள் பிரிந்து சண்டை போட்டுக்கொள்ள வேண்டுமா? ஊர் பிளவுபட்டால் கூத்தாடிக்குத்தான் கொண்டாட்டம் என்பார்கள். அவர்கள் தேர்தலுக்குப் பின் ஏனைய தரப்பினரை தாக்கினார்கள், கொடுமைப்படுத்தினார்கள். இறுதியில் மஹிந்தவும் ரணிலும் ஒன்றுசேர்ந்து அரசாங்கத்தை அமைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு இடையில் கோபதாபங்கள் இருக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஸ, சஜித் பிரேமதாசவின் தங்கையை முன்னாள் ஜனாதிபதியின் மகள் என்பதற்காக கள்ளப்பணம் சம்மந்தமான பிரச்சினையில் இருந்து விடுவித்தார். ரணில் விக்ரமசிங்க ஷிரந்தி ராஜபக்ஸவை 350 இலட்சம் ரூபாவை கொடுத்து டொரின்டனில் ஒரு வீடு வாங்கிய வேளையில் பணம் எங்கே இருந்து வந்தது என்ற விசாரணை மேற்கொள்ளப்பட்ட வேளையில் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறக்கூடாது என தீர்மானித்தார். அவர்கள் அப்படித்தான்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் கள்வர்கள் தண்டிக்கப்படுவார்கள்

திருடியிருந்தால், மோசடி செய்திருந்தால் செப். 22 ஆம் திகதிக்கு பின்னர் கட்டாயமாக அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவோம். அது ஒரு பழிவாங்கல் அல்ல. தற்போது வைத்தியசாலையில் மருந்து கிடையாது, பிள்ளைக்கு உணவு கிடையாது, கல்வி கற்பதற்கான வசதி கிடையாது. அதற்கான காரணம் என்ன? பொதுப்பணத்தை இவர்கள் கோடிக்கணக்கில் கபளீகரம் செய்துவிட்டார்கள். எனவே, அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமல்லவா? எங்களுடைய அயல்நாடான இந்தியாவை பாருங்கள். 80இன் பின்பகுதியில் இந்திய அமைதிப்படை வந்ததல்லவா உங்களுடைய பிரதேசத்திற்கு? அவர்கள் கடைக்குப்போய் சவர்க்காரத்தை சேகரித்தார்கள். சாப்பிடுவதற்காகவா? இல்லை. ஏனென்றால், அந்தக் காலத்திலே ஒரு சில பிரதேசங்களில் அந்த சவர்க்காரம் இல்லை. அவர்கள் விடுமுறைக்கு போகும்போது அவற்றை எடுத்துச் செல்வார்கள். தேங்காய் எண்ணெயும் அப்படித்தான். மல்வத்த அனுநாயக்க தேரர் என்னிடம் கூறினார், அந்தக் காலத்தில் இந்தியாவுக்கு ஒரு குடையை எடுத்துச் சென்றாலும் அதை வாங்கிக் கொள்வார்களாம். அந்த இந்தியா இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறது. சந்திரனுக்கு போகிறது. இந்த பிராந்தியத்துக்கு மருந்து வகைகளை, துணிமணிகளை, பைசிக்களை, முச்சக்கர வண்டிகளை, மோட்டார் வாகனங்களை, விதையினங்களை, உணவுப் பொருட்களை வழங்குகின்ற நாடாக இப்போது மாறியிருக்கிறது. அந்த தலைவர்களுக்கு இந்தியாவை எவ்வாறு உற்பத்தியில் உயர்ந்த இடத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற தூரநோக்கு இருந்தது.

AKD On Stage At The Victory Rally Of Kanthale

உற்பத்தி செய்து நாட்டை வளமுடையதாக்க வேண்டும் என்றால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.

எங்கள் ஆட்சியாளர்கள் கந்தளாய் சீனி ஆலையை மூடினார்கள். வாழைச்சேனை கடதாசி ஆலையை மூடினார்கள். பால்மா தொழிற்சாலையை மூடினார்கள். துல்ஹிரிய, மத்தேகொட, பூகொட நெசவாலைகளை மூடிவிட்டார்கள். உங்களுடைய ஊரில் இருந்த கைத்தறி நெசவாலைகள் எங்கே? அதற்குப் பதிலாக Buying and Selling பொருளாதாரமொன்றை உருவாக்கியுள்ளார்கள். இந்தியா உற்பத்தி செய்கிறது. நாங்கள் விலைக்கு வாங்குகிறோம். இந்தியா முட்டை உற்பத்தி செய்கிறது. நாங்கள் முட்டை வாங்கி பொரிக்கிறோம். இந்தியா உற்பத்திக்கு உயிர் கொடுத்ததால்தான் முன்னேற்றம் அடைந்தது. எமது நாட்டில் உற்பத்தி சீரழிக்கப்பட்டது. ஏனென்றால், இறக்குமதி செய்தால் சட்டை பைகள் நிறைகின்றன. சீனி வரி மோசடி ஞாபகமிருக்கிறதா? 1500 கோடி ரூபாய் வரி மோசடி. ஒரு கப்பல் நிறைய பசளை கொண்டுவந்தார்கள் ஞாபகம் இருக்கிறதா? அதில் ஒரு மூடையைக் கூட தரையிறக்கவில்லை. 60 இலட்சம் டொலரை செலுத்தினார்கள். அதாவது, 1800 மில்லின் ரூபாய். இந்தியாவில் இருந்து நெனோ உரத்தை கொண்டுவந்தார்கள். அதனை வயலுக்கு போட்டால் குண்டு வெடிப்பதை போல விளைச்சல் கிடைப்பதாக கூறினார்கள். இப்பொழுது மறுக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பொருளாதாரத்தை சீராக்க வேண்டுமென்ற உண்மையாக தேவை இருக்கவில்லை. நாடு வறுமைபட்டது. ஆனால், ஆட்சியாளர்கள் தனவந்தர் ஆகினார்கள். மஹிந்த வறியவரா? ரணில் வறியவரா? நாட்டின் உற்பத்தி அதிகரித்தால் அவர்களுக்கு கொமிசன் கிடைக்காது. ஆகவே, இந்த பொருளாதார பயணத்தை முழுமையாக திசைத்திருப்புகின்ற தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை நாங்கள் அமைப்போம். வெங்காயம், மிளகாய் அங்கிருந்து கொண்டுவந்து சாப்பிட வேண்டுமென்றால், ரணிலின் அரசாங்கத்தை அமைத்துக்கொள்ளுங்கள். ஆனால், இந்த நாட்டில் உற்பத்தி செய்து நாட்டை வளமுடையதாக்க வேண்டும் என்றால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.

கிராமங்களில் வறுமை தாண்டவமாடுகின்றது

எமது ஊர்களில் வறுமை தாண்டவமாடுகிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பெற்றோர்கள் வறியவர்கள். அதனால் பிள்ளைகளும் வறியவர்கள். அதாவது, பரம்பரை வறுமையாகும். மற்றுமொரு வறுமை இருக்கிறது. நல்ல பயிர்ச்செய்கை இருந்தது. நல்லவொரு கடை இருந்தது. திடீரென பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. வயலுக்கு சேதமேற்பட்டது. வருமானத்தை இழந்தார்கள். கடனை மீளச் செலுத்த முடியவில்லை. அதனால், வறுமைபட்டார்கள். வீட்டில் வருமானத்தை ஈட்டுகின்ற கணவர் இருக்கின்றார். பிள்ளை இருக்கிறது. திடீர் அனர்த்தம் ஏற்பட்டு வருமான வழிவகை தடைப்படுகிறது. அதனால், வறுமையடைகிறார்கள். அதனால், எங்களுடைய கிராமப்புற மக்கள் வறுமை நிலையில் இருக்கிறார்கள். கழுத்தில் போட்டிருந்தா தங்கச்சங்கிலி எங்கே? வங்கியில். திருமண மோதிரம் எங்கே? வங்கியில். வங்கியைத்தான் திருமணம் முடித்தீர்களா? சின்னவனுக்கு கழுத்தில் போட்ட பஞ்சாயுதம் எங்கே? வங்கியில். கையில் போட்ட வளையல் எங்கே? வங்கியில். அதுதான் வறுமை.

Crowd At The Victory Rally Of Kanthale

தேசிய மக்கள் சக்தி கல்விக்கே முன்னுரிமை அளிக்கும்

எனவே, எங்களுடைய முதலாவது முக்கியமான வேலைத்திட்டம் வறிய மக்களை பொருளாதார வறுமையில் இருந்து மீட்டெடுப்பது. அதில் பிரதான இடம் வகிப்பது கல்வியாகும். வறுமைக்கோடும் கல்வியறிவற்ற நிலையின் கோடும் சமச்சீராகவே பயனிக்கிறது. கல்வியறிவு இல்லா விட்டால் வறுமை. வறுமை: என்றால் கல்வியறிவு இல்லை. எனவே, கிராமிய மக்கள் வறுமையில் இருந்து வெளியில் வர வேண்டுமானால் பிள்ளைகளுக்கு நன்றாக கல்வி புகட்ட வேண்டும். எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நாட்டின் கல்விக்கு முதன்மைதானம் வழங்கும். இப்பொழுது கல்வி பெற்றோருக்கு சுமையானதாக மாறியுள்ளது. பிள்ளை சாதாரண தரம் படித்தால், உயர்தரம் படித்தால் அது பெற்றோருக்கு சுமையாகும். உலகில் எந்தவொரு நாட்டிலும் அப்படியில்லை. ஆனால், எங்களுடைய தாய்மார்கள் வாழ்க்கையில் பெரும் பகுதியை கல்வி புகட்டுவதற்காகவே செலவழிக்கிறார்கள். அதனால், வசிக்கின்ற இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டருக்குள் பாடசால கிடைக்கத்தக்க வேலைத்திட்டமொன்றை நாங்கள் அமுலாக்குவோம். அதேபோல் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்திசெய்வோம். ஆசிரியர்கள் பயிற்சி பெற்ற பாடத்தையே போதிக்க வேண்டும். அழகியல் துறையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் விஞ்ஞானம் பாடம் கற்பிக்கிறார்கள். இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். அருகில் உள்ள பாடசாலைக்கு ஆசியரியர்களையும் வசதிகளையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைத்துக் கொடுக்கும். பாடசாலைக்கு வருகின்ற ஒவ்வொரு பிள்ளையும் ஒன்று கல்வியில் முன்னேறிச் செல்ல வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கைத் தொழிலில் முன்னேறிச் செல்ல வேண்டும். ஒரு பிள்ளை கூட இடைநடுவில் பாடசாலையில் இருந்து விலகிவிடக் கூடாது. அதற்கான கல்வி முறைமையை அமுல்படுத்துவோம். கல்வி கற்ற பிள்ளை இருக்கின்ற ஒரு குடும்பம் நிச்சயமாக கரைசேரும்.

கிராமிய பொருளாதாரத்தை உயர்த்திவைப்போம்.

அடுத்தது, கிராமப்புற மக்கள் ஈடுபடுகின்ற பொருளாதாரம். பெரும்பாலானவர்கள் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். திருகோணமலையின் கரையோர பகுதிகளில் மீன்பிடித் தொழில். கந்தளாய் குளத்தை சார்ந்த பகுதிகளில் நன்னீர் மீன்பிடி. மகாவலி ஆற்றின் மருங்கில் மணல் கரை சேர்க்கிறார்கள். இவைதானே தொழில்கள். விவசாயத்தை கைவிட முடியுமா? முடியாது. ஆனால், விவசாயம் வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்ற தொழில்துறையாக மாறவேண்டும். இன்றைய நிலைமை என்ன? வயலை விதைக்கிறார்கள். அது கடனுக்காகவே. உழுவதும் கடன் வாங்கியே. விதைநெல், உரம், விளைச்சல் பெறும் வரை கடையில் சமான் வாங்க வேண்டும். எல்லாமே கடனுக்குத்தான். நெல் மணிகள் விளையும் பருவத்தில் வயலுக்குப் போய் பார்த்தால் நெற்கதிர்கள் செழிப்பாக நிலத்தை நோக்கி வளைந்திருக்கும். விவசாயிகள் முகத்தில் சிரிப்பு தோன்றும். ஆனால், முன்னர்போல் அறுவடையை வீட்டுக்கு எடுத்து வருவதில்லை. முன்பெல்லாம் வீடுகளில் நெல் மூடைகளை குவித்து வைத்திருப்பார்கள். எனக்கு ஞாபகம் இருக்கிறது. சிறிய வயதில் எங்களுக்கு நெல் மூடைகள் மீது படுத்துறங்குவதில் அலாதி பிரியம். அந்த அளவுக்கு நெல் இருந்தது.

இப்போதைய நிலைமை என்ன? களத்து மேட்டிலேயே நெல் உலர்வதற்கு முன்பே விற்பனை செய்யப்படுகிறது. பணம் கைக்கு வருகிறது. வரும் வழியில் உரம் வாங்கிய கடைக்கு கடனை கொடுக்க வேண்டும். பொருட்கள் வாங்கிய கடைக்கு கொடுக்க வேண்டும். கிருமிநாசினி கடைக்கு கொடுக்க வேண்டும். விதை நெல் கடைக்கு கொடுக்க வேண்டும். வீட்டுக்கு வரும்போது வேதனையை தாங்க முடியாமல் மூக்கு முட்ட குடித்துவிட்டு வருவார்கள். அறுவடை செய்த நாளில் இது கட்டாயமாக நடக்கும். இதற்கான காரணம் என்ன? கவலையின் வெளிப்பாடு அதுதான்.

The Victory Rally Of Kanthale Crowd

கடன் சுமைக்கு தீர்வு வழங்குகின்ற அபிவிருத்தி வங்கி முறையை உருவாக்குவோம்

எனவே, விவசாயிகள் கடன் சுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறந்ததொரு ஆய்வினை மேற்கொண்டு கமக்காரர்களை இந்த கடன் சுமையில் இருந்து விடுவிக்கும். வங்கியில் இருந்து பெற்றுள்ள கடன்களில் ஓரளவினை வெட்டிவிடும். மீண்டும் கடன் பெறாது இருப்பதற்காக நாங்கள் அபிவிருத்தி வங்கியொன்றை உருவாக்குவோம். இப்பொழுது ஊரிலே கடன் வாங்கினால் 20 வீத மாதாந்த வட்டி செலுத்த வேண்டும். வங்கியில் இருந்து பெற்றால் வருடத்துக்கு நூற்றுக்கு 20 வீதம். நுண்கடனிடம் இருந்து வாங்கினால் ஒரு வாரத்திற்கு 1000 ரூபா. அதனால், கடன் பொறிக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். இந்தியா, சீனா, வியட்நாம் போன்ற ஒவ்வொரு நாட்டிலும் அபிவிருத்தி வங்கி இருக்கிறது. கமக்காரர்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்குகிறார்கள். எனவே, கடன்மேடு குவிய மாட்டாது. நாங்கள் கமக்காரர்களை கடன் சுமையில் இருந்து அகற்றிக் கொள்ளலாம். எங்களுடைய ஊர்களை பற்றி சிந்தித்து பாருங்கள். கடன் வாங்க வெட்கப்படுவார். கடன்காரன் என்பதை அவப்பெயராக கருதுவார்கள். இப்போதைய நிலைமை என்ன? கடன்படாத ஒருவரை தேடி கண்டுபிடிக்க முடியுமா? எனவே, கமக்காரரை கடன் பொறியில் இருந்து மீட்டெடுப்பதற்கான திட்டமொன்றை நாங்கள் வகுத்திருக்கிறோம்.

விவசாயத் தொழிற்றுறையை மேம்படுத்துவோம்.

அடுத்ததாக, விவசாயத் தொழில் இலாபகரமானதாக அமைய வேண்டும். பாருங்கள் இந்தியாவின் முட்டை இலங்கைக்கு வரும்போதும் இலங்கையின் குளியாப்பிட்டிய முட்டை கந்தளாய்க்கு வரும்போதும் இலாபகரமானது எது? இந்திய முட்டை தான். அப்படியானால் இந்தியாவில் ஒரு கோழி இரண்டு முட்டைகள் வீதம் போடுகிறதா? அவர்கள் உற்பத்திக்கான செலவை குறைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே, விளைச்சலை அதிகரித்தால் ஏக்கருக்கான செலவினை கட்டுப்படுத்திக் கொள்ளலாம். எனவே, விளைச்சலை அதிகரிப்பதற்கான திட்டம் இருக்க வேண்டும். அதற்காக நல்ல விதை நெல் இருக்க வேண்டும். எங்களுடைய விதை உற்பத்தி செய்யும் விவசாய பண்ணைகள் அனைத்துமே மூடப்பட்டு விட்டன. நாங்கள் அந்த பண்ணைகளுக்கும் விதை ஆராய்ச்சி நிலையங்களுக்கம் மீண்டும் புத்துயிர் அழிப்போம். இந்தக் கந்தளாய் விவசாய செயற் திட்டத்தின் ஒரு பகுதியினர் இருக்கிறார்கள். அவர்கள் விதை நெல்லை உற்பத்தி செய்வார்கள். கால்வாயின் ஒரு பக்கத்திலே விதை நெல்லை உற்பத்தி செய்வார்கள். ஆகவே, அவர்களிடம் இருந்து நியாயமான விலைக்கு விதை நெல்லை பெற்றுக்கொள்ள முடியும். இன்று ஒரு கிலோ விதை நெல் 500 ரூபாவை விட அதிகரித்துவிட்டது. விதை நெல் மாத்திரம் இருந்தால் போதாது. தண்ணீரும் தேவை. எங்களிடம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பல குளங்கள் இருக்கின்றன. இவற்றை புனரமைக்க வேண்டும். எங்களுடைய பண்டைய மன்னர்கள் 32 ஆயிரம் குளங்களை அமைத்தார்கள். இப்பொழுது எஞ்சியிருப்பது 14 ஆயிரம் மாத்திரமே. ஒரு வாரம் மழை பெய்தால் குளங்கள் கரை மேவிப் பாயும். இரண்டு வாரம் வரட்சி என்றால் குளங்கள் வற்றிப் போய்விடும். குளங்களில் தண்ணீரை விட சேறும் வண்டல் படிவுகளுமே இருக்கும். குளத்து மேடுகளை நாசமாக்கினார்கள். ஹோட்டல்களை அமைத்தார்கள். ஆகவே, நாங்கள் இந்த குளங்களை புனரமைத்து இரு போகங்களிலும் தங்குதடையின்றி தண்ணீரை வழங்குவோம். இடைப்பட்ட போகமொன்று பற்றியும் நாங்கள் சிந்திக்க வேண்டும். முன்பெல்லாம் இடைபட்ட போகத்தில் பாசிப்பயறு பயிரிட்டோம். அவை அவரையினத் தாவரங்கள் என்பதால் அந்தப் பயிர்கள் மூலமாக மீண்டும் நிலத்துக்கு நைதரசன் கிடைக்கும். அதனால், மீண்டும் சிறுபோகத்தில் நன்றாக பயிர் செய்யலாம்.

AKD Blessing At The Stage Of Kantale Victory Rally

விவசாய உள்ளீடுகளின் விலைகள் குறைக்கப்படும்.

அடுத்ததாக கிருமிநாசினிகளின் விலைகளை குறைப்போம். இப்பொழுது அறுவடை பெற்று மது அருந்தி தள்ளாடித்தள்ளாடி வீட்டுக்கு வருகின்றவர் இனிமேல் களத்து மேட்டில் நெல்லை விற்பனை செய்து மது அருந்தி மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வருவார். ஆனால், இந்த தேவை எங்களது ஆட்சியாளர்களிடம் இருக்கவில்லை. விவசாயிகளுக்கு அது மாத்திரம் போதாது. அதற்கான நல்லவொரு இடம்தான் கந்தளாய் சீனி ஆலை. மீண்டும் நாங்கள் அதை ஆரம்பிப்போம். நான் கமத்தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் அந்த காணி உரிமை கமத்தொழில் அமைச்சிடமே இருந்த்து. தொழிற்சாலை கைத்தொழில் அமைச்சரான அநுர பண்டார நாயக்கவிடமே இருந்த்து. சீன முதலீட்டாளர் ஒருவர் வந்தார். நான் அநுர பண்டார நாயக்கவை சந்தித்தேன். அநுர பண்டார நாயக்க திருடன் அல்ல. அநுர நீ விரும்பிதை செய் என்று எனக்கு கூறினார். லங்கா தீப செய்தித்தாளில் தலைப்புச் செய்தி “அநுரவும் அநுரவும் இணைந்து விட்டார்கள்” என வந்தது. எங்களுக்கு உங்களிடமிருந்து எதுவுமே வேண்டாம். நீங்கள் களு கங்கையில் இருந்து தண்ணீரை பெற்று கந்தளாய் வேலையை செய்யுங்கள் என சீன முதலீட்டாளரிடம் கோரிக்கை விடுத்தேன். இறுதியில் நான் அமைச்சு கைவிட்டு வந்தேன். சீன முதலீட்டாளர் சீனாவுக்கு திரும்பிச் சென்றார். காரணம் என்ன? வந்தவர்கள் பகா கேட்கத் தொடங்கினார்கள். அதனால், நாங்கள் கந்தளாய் சீனி ஆலையை ஆரம்பித்து கமக்கார்ர்களுக்கு புதிய வருமான வழியை சேர்ப்போம்.

விளைதிறன்கொண்ட பயன்பாடு

மற்றுமொரு விடயம் திருகோணமலையில் 99 எண்ணெய் குதங்கள் இருக்கின்றன. ஒரு குதத்தின் கொள்ளளவு 10 ஆயிரம் மெற்றிக் தொன் ஆகும். அண்ணளவாக 1 இலட்சம் மெற்றிக் தொன்னை களஞ்சியப்படுத்த முடியும். எங்களுக்கு அது அளவுக்கு அதிகமானதாகும். அங்கே எண்ணெயை களஞ்சியப்படுத்தினால் எங்களால் எண்ணெயை குளிக்கவும் எடுக்க முடியும். அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? திருகோணமலை துறைமுகம் வழியாக எண்ணெயை ஏற்றுமதி செய்கின்ற நாடாக இலங்கையை மாற்ற முடியும். திருகோணமலையில் தூய்மையகம் ஒன்றை தொடங்கி வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்ப முடியும். அதை எமது நாட்டின் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் மாத்திரம் சாதித்துவிட முடியாது. அந்தப் பணியை செய்யக்கூடிய சர்வதேச கம்பனியொன்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் ஒருங்கிணைந்து இப்போது இற்றுப்போய்க்கொண்டிருக்கின்ற இந்த எண்ணெய்க் குதங்களுக்கு புத்துயிர் அளிப்போம்.

புல்மோட்டையில் கனிய மணல் இருக்கிறது. அவை அலைகளால் கொண்டுவந்து கரைசேர்க்கப்படுகின்றது. ஆனால், நாங்கள் மூலப்பொருளாகவே அதனை பகுத்தெடுக்காமல் ஏற்றுமதி செய்கிறோம். தேசிய மக்கள் சக்தி அந்த இடத்துக்கு புதியவொரு இரசாயன தொழிற்சாலையை கொண்டுவந்து பெறுமதி சேர்த்த கனிம உற்பத்தியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும். எனவே, அப்போது இங்குள்ளவர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கும். கந்தளாய் இருக்கின்ற பிள்ளை தொழில் தேடி கொழும்புக்கு செல்ல வேண்டியதில்லை. ஊர் மக்கள் ஊரிலேயே இருந்து கொண்டு பொருளாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அமைத்துக் கொடுக்கும்.

Aloka Sampath At The Victory Rally Of Kanthale
Sunil Handunneththi At The Victory Rally Of Kanthale
Show More

முஸ்லிம் சகோதரத்துவ சந்திப்பு – கொழும்பு

(-Colombo, August 26, 2024-) நேற்று (26) The Taprobane Entertainment இல் இடம்பெற்ற கொழும்பு “முஸ்லிம் சகோதரத்துவ சந்திப்பு” நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டிருந்தார். “வளமான நாடு – அழகான வாழ்க்கை” ஐ உருவாக்கிக் கொடுக்கின்ற புதிய மறுமலர்ச்சிப் பாதைக்கு நாட்டை இட்டுச் செல்கின்ற 2024 ஜனாதிபதித் தேர்தலின் பெருவெற்றிக்காக கொழும்பு வாழ் முஸ்லிம் மக்கள் பலர் இணைந்துகொண்டிருந்தனர்.

(-Colombo, August 26, 2024-)

நேற்று (26) The Taprobane Entertainment இல் இடம்பெற்ற கொழும்பு “முஸ்லிம் சகோதரத்துவ சந்திப்பு” நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டிருந்தார்.

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” ஐ உருவாக்கிக் கொடுக்கின்ற புதிய மறுமலர்ச்சிப் பாதைக்கு நாட்டை இட்டுச் செல்கின்ற 2024 ஜனாதிபதித் தேர்தலின் பெருவெற்றிக்காக கொழும்பு வாழ் முஸ்லிம் மக்கள் பலர் இணைந்துகொண்டிருந்தனர்.

Show More

“பெண்கள் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டிருப்பது ஒரு வகையிலே கோழைத்தனமாகும்” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சமன்மலி குணசிங்க-

(தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் கூட்டம் – P.D. சிறிசேன மைதானம், மாளிகாவத்தை. – 25-08-2024) தோழர் அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதி ஆக்குகின்ற, அந்த வெற்றியை பெரு வெற்றியாக மாற்றுகின்ற பெண்களின் பலமே இது. “பெண்களின் சக்தி ஒரே மூச்சுடன் – நாளைய தினத்திற்காக நாடு அநுரவோடு” அதுவே எங்களுடைய தொனிப்பொருள். தேசிய மக்கள் சக்தியின் பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன் ஒன்றிணைந்து இந்த நாட்டை புதிய மறுமலர்ச்சியை நோக்கி கொண்டு செல்கின்ற பாதையை அந்த […]

(தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் கூட்டம் – P.D. சிறிசேன மைதானம், மாளிகாவத்தை. – 25-08-2024)

Samanmalee Gunasinghe At Stage

தோழர் அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதி ஆக்குகின்ற, அந்த வெற்றியை பெரு வெற்றியாக மாற்றுகின்ற பெண்களின் பலமே இது. “பெண்களின் சக்தி ஒரே மூச்சுடன் – நாளைய தினத்திற்காக நாடு அநுரவோடு” அதுவே எங்களுடைய தொனிப்பொருள். தேசிய மக்கள் சக்தியின் பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன் ஒன்றிணைந்து இந்த நாட்டை புதிய மறுமலர்ச்சியை நோக்கி கொண்டு செல்கின்ற பாதையை அந்த வெற்றியை குறிக்கும் முகமாக இந்த இடத்தில் ஒன்றிணைந்துள்ளோம்.

நாங்கள் கடந்த பல வருடங்களாக வறட்சிக்கு தாக்குப்பிடித்துக் கொண்டு இருந்தவர்களாவோம். வறட்சிக்கு முகம் கொடுத்து அன்பான குடும்பத்தை பாதுகாத்துக் கொண்ட துணிச்சல் மிக்க பெண்களே நீங்கள். பெண்கள் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டிருப்பது ஒரு வகையிலே கோழைத்தனமாகும். எமது நாட்டின் அரசியல்வாதிகள் பல்வேறு துறைகளில் பெண்களை சிறைப்படுத்தி வைத்திருந்தார்கள். பெண்கள் பலவீனமானவர்கள், அவர்களுக்கு ஒன்றுமே விளங்காது, பெண்களுக்கு அரசியல் தேவையில்லை, பெண்கள் மரக்கட்டைகளாக வாழ்ந்து மடிந்து போகவேண்டுமென நினைத்தார்கள். உங்களை செல்லாக்காசாக நினைத்துக் கொண்டிருந்த வேளையில் நீங்கள் சுற்றுமுற்றும் பார்த்தீர்கள். அந்த நேரத்தில் தான் பெண்களாகிய நாங்கள் ஊருக்குள் வந்து உங்கள் வீட்டுக் கதவுகளை தட்டினோம்.

அவர்கள் தேசிய மக்கள் சக்தியை சுற்றி குழுமினார்கள். திடசங்கற்பம் கொண்டார்கள். இந்த அரசியலை மாற்ற முடியாது, சதாகாலமும் அவர்கள் தான் மன்னர்கள் என நினைத்தார்கள். சதாகாலமும் பாதிக்கப்பட்ட நசுக்கப்பட்ட அழுது புலம்பிய பெண்கள் தான் நாங்கள். நாங்கள் அவர்களை சந்தித்து அவர்களின் பெறுமதியை எடுத்துரைத்தோம். அவர்களின் சாத்திய வளங்களை, வலிமைகளை உணர்ந்து இன்று முழு நாட்டிலுமுள்ள பெண்கள் இந்த நாட்டை மாற்றியமைக்க வேண்டுமென ஒரே மூச்சுடன் முன்வந்தார்கள். அவர்கள் மறுமலர்ச்சியை நோக்கிய பயணத்திற்கு வலிமைசோ்க்கவே முன்வந்திருக்கிறார்கள். எமது கைகளில் ஒரு பாரிய பணி சுமத்தப்பட்டிருக்கிறது. அது தான் தேசிய மக்கள் சக்தியின் தோழர் அநுர குமார திசாநாயக்கவை வெற்றியீட்ட செய்விப்பது. அந்த வெற்றியின் பங்களாளிகளாக நீங்கள் மாறவேண்டும். இந்த நாட்டை மாற்றியமைப்பதற்கான திடசங்கற்பம் கொண்ட பெண்களாக மாறவேண்டும். அதற்காக உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

Wasantha Subhasinghe Speeking At NPP Womens Rally

“பெண்கள் அரசியலில் பிரவேசித்தது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி தருகின்ற விடயமாகும்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் வசந்தா சுபசிங்க-

பெண்கள் அரசியலில் பிரவேசித்தது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி தருகின்ற விடயமாகும். தோழர் அநுர குமார திசாநாயக்கவின் வெற்றியை முழு உலகுமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. செப்டெம்பர் 21 ஆம் திகதி என்பது அரசியல்வாதிகளால் வீழ்த்தப்பட்ட நாட்டை நிமிர்த்தி வைக்கின்ற தினமாகும். அந்த வெற்றிக்கான உங்களின் அர்ப்பணிப்பே இது. எமது நாட்டின் வரலாற்றினை பொன்னெழுத்துக்களால் குறிக்கின்ற யுகத்தை நாங்கள் ஏற்படுத்திக் கொடுப்போம். இயற்கையாகவே இருக்கின்ற பால் நிலை வித்தியாசத்தை தவிர்த்த வேறு எந்த விதமான வித்தியாசமும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் கிடையாது. பெண்கள் என்பதனால் மாத்திரமே நாங்கள் பல்வேறு பிரச்சினைகளை அனுபவித்து வருகிறோம். வறுமையை அதிகமாக அனுபவிப்பவர்கள் பெண்களே.

இலங்கை பெண்களை எடுத்துக் கொண்டால் வீட்டில், களத்தில், களத்துமேட்டில், ஆலையில், வேலைத்தளத்தில் அவளுக்கு பெரும் பங்கினை ஆற்றவேண்டியுள்ளது. இந்த எல்லா இடத்திலும் பெண்களுக்கு பாரிய செயற்பொறுப்பு நிலவுகின்றது. அந்த பெண்களின் பிரதிநிதித்துவம் தான் இது. இலங்கையின் குடும்பங்கள் பற்றிய கணக்கெடுப்பினை செய்தால் 25 சதவீதமான குடும்பங்கள் பெண்களை தலைமையாகக் கொண்டதாகவே இருக்கின்றன. அந்த தாய்மார்களும் சகோதரிகளும் தான் குடும்பங்களையும் கவனத்திற்கொண்டு பொருளாதார செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே அதற்காக தேசிய மக்கள் சக்தி பாரிய பணியை ஆற்றவேண்டியுள்ளது.

Womens Crowd At NPP Womens Rally

எமது பாடசாலைகளில், வைத்தியசாலைகளில், பல்கலைக்கழகங்களில் அதைபோலவே வெளிநாட்டு சேவைகளில், பெண்களே அதிகமாக பொருளாதார பங்கினை ஆற்றி வருகிறார்கள். எனவே அவர்களின் பாதுகாப்பிற்கான கொள்கையை நாங்கள் வகுத்திருக்கிறோம். வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற எமது அன்புக்குரிய சகோதரிகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அவர்களின் உரிமைகள் முறையாக அவர்களுக்கு கிடைப்பதில்லை. அவர்கள் அடிமை சேவகம் புரிந்து வருகிறார்கள். வேலைக்கேற்ற சம்பளம் அவர்களுக்கு கிடைப்பதில்லை. பாதுகாப்பு கிடையாது. இந்த பிரச்சினைகள் பற்றி தேசிய மக்கள் சக்தி அதிக கவனம் செலுத்தியுள்ளது. எனவே பெண்களுக்கு சிறந்த பயிற்சியளிக்கப்பட்டு சிறந்த சம்பளத்துடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்கக்கூடிய வகையில் எங்களுடைய அரசாங்கத்தினூடாக அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும். எனவே வெளிநாடு சென்றுள்ள பெண்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியமொன்றை நாங்கள் பரிந்துரைக்கின்றோம்.

வெளிநாடுகளிலுள்ள தூதரகங்கள் நடந்து கொள்கின்ற விதம் பற்றி நாங்கள் அறிவோம். எனவே வெளிநாடுகளில் பணியாற்றுபவர்கள் மீது கரிசனைகொண்ட வெளிநாட்டு தூதரக சேவையொன்றை நாங்கள் உருவாக்குவோம். ஆகவே நாங்கள் இந்த தூதரக சேவையை வசதி நிறைந்த சேவையாக மாற்றுவோம். பெண்கள் அடிமைத்தனமான பாலியல்சேவைக்காக அனுப்பிவைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. எனவே வெளிநாட்டு தொழில்வாய்ப்பு முகவர் நிலையங்களும் அரசாங்கமும் அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கவேண்டும். எனவே செப்டெம்பர் 21 ஆம் திகதி தோழர் அநுர குமார திசாநாயக்கவின் வெற்றி பெண்கள் சமத்துவம் அனுபவிக்கின்ற சமூகத்தை உருவாக்கிக் கொடுக்கும். இந்த செய்தியை உங்கள் ஊருக்கும் உறவினருக்கும் எடுத்துச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Pushpamali Ramanayake At NPP Womens Rally

“இலங்கையின் வரலாற்றின் புதிய பக்கத்தை எழுதக்கூடிய பெறுமதிமிக்கவர்கள் பெண்கள்”
-பொதுநலவாய அமைப்பு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றெடுத்த விளையாட்டு வீராங்கனை புஷ்பமாலி ராமநாயக்க-

நான் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளமையையிட்டு பெருமிதமடைகிறேன். இவ்வளவு பிரமாண்டமான ஒரு மேடையில் ஏறி எமது நாடு வீழ்ந்துள்ள படுகுழியிலிருந்து மீட்டெடுப்பதற்காக ஒரு சில வார்த்தைகளையேனும் கூற கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். எமது நாடு 76 வருடங்களாக சாபக்கேட்டுக்கு இலக்காகியிருக்கிறது. இந்த ஊழல்மிக்க அரசியல்வாதிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய காலம் இப்பொழுது பிறந்திருக்கிறது. அதற்காக கைகோர்த்து செயற்படுவதற்காகவே நாங்கள் இங்கு குழுமியிருக்கிறோம். அதற்காக நாங்கள் தோழர் அநுர குமார திசாநாயக்கவை தோ்ந்தெடுத்திருக்கிறோம்.

இவ்வளவு காலமும் எமது நாட்டுக்கு மன்னர்களே தலைவர்களாக வந்தார்கள். இப்பொழுது முதல் தடவையாக மண்ணில் கால் பதித்த மக்களின் இதயத்துடிப்பினை உணர்ந்த மண்ணின் மைந்தனொருவர் தலைவராகப் போகிறார். செப்டெம்பர் 21 ஆம் திகதி அதற்காக நாங்கள் எங்களை அர்ப்பணிப்போம். அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். இலங்கையில் வாக்காளர்களில் அதிகமான எண்ணிக்கை கொண்டவர்கள் பெண்களே. குடும்பத்திலும் தீர்மானமெடுக்கின்ற செயற்பாட்டில் பெண்களே அதிக பங்களிப்பினை கொண்டிருக்கிறார்கள். பெண்களின் வாக்குகள் மூலமாக மாத்திரம் தேசிய மக்கள் சக்திக்கு பெரு வெற்றியை பெற்றுக்கொடுக்க முடியும் என்பதை மனதிற்கொள்ளுங்கள். இலங்கையின் வரலாற்றின் புதிய பக்கத்தை எழுதக்கூடிய பெறுமதிமிக்கவர்களாக உங்களால் மாற முடியும். நாங்கள் வெற்றியை நெருங்கிவிட்டோம். அதனை பெருவெற்றியாக மாற்றுகின்ற பொறுப்பு உங்கள் கைகளில் இருக்கின்றது. அதற்காக உங்கள் அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறேன்.

Haiman Suleyiman At NPP Womens Rally

“தோழர் விஜித ஹேரத் தான் 2003 ஆம் ஆண்டில் எங்கள் முஸ்லிம் மாணவிகளுக்கு பர்தா துணியை பெற்றுக்கொடுத்தார்”
-தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ஆசிரியை ஹய்மன் சுலைமான்-

இன, மத, சாதிபேதமின்றி நாட்டின் எதிர்காலத்திற்காக தூரநோக்குடைய மூன்றாவது மில்லேனியத்தின் சவால்களுக்கான தீர்வினைகொண்டுள்ள சகோரத்துவத்துடன் அனைவரையும் சமமாக மதிக்கின்ற மனிதத்துவம் நிறைந்த ஒரே தலைமைத்துவத்தைக் கொண்ட ஒரே கட்சியாக அமைவது தேசிய மக்கள் சக்தியாகும். நாட்டை வெற்றியீட்டச் செய்விக்க அர்ப்பணிக்க விரும்புகின்ற ஒவ்வொருவரும் ஒன்று சேரவேண்டிய இடம் இந்த தேசிய மக்கள் சக்தியாகும்.

இதுவரையும் வேறெந்த கட்சியின் மேடையிலும் ஏறியிராத எனக்கு மறுமலர்ச்சிக்காக தமிழில் உரையாற்ற வாய்ப்புக்கிடைத்தமையை நான் பெற்ற பேறாக கருதுகிறேன். எங்களுடைய தமிழ் பேசும் சகோதர சகோதரிகளை தட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அந்த பொறுப்பினை ஈடேற்ற இந்த மேடையை நான் பயன்படுத்திக் கொள்ளப்போகிறேன்.

நான் உரையாற்றும்போது அதனை இனவாதம் அல்லது மதவாதம் என நினைத்துவிட வேண்டாம். எம்மை பாதுகாக்கவென எம்மால் நியமிக்கப்பட்ட தலைவர்கள் எங்களை ஏமாற்றுவதால் நாங்கள் உங்களிடம் ஏமாறாப்போவதில்லை என்ற செய்தியை இந்த மேடையிலிருந்து கொடுக்க நான் விரும்புகிறேன். ஒரு பிரபலப் பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியையாகிய நான் இந்த இடத்தில் இந்த நேரத்தில் உங்கள் முன் ஏன் தமிழில் உரையாற்ற வந்திருக்கிறேன் என்றால் 76 வருடங்களாக இந்த நாட்டையும் எம்மையும் ஏமாற்றி இந்த நாட்டை பிளவுப்படுத்திருக்கும் இந்த குப்பை அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்புவதே அதன் நோக்கமாகும்.

Womens At NPP Womens Rally

இவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. ஆனால் நிறம் மாத்திரம் வித்தியாசமானவை. என்னுடைய இரத்தத்திலும் பச்சை நிறம் தான் ஊறியிருந்தது. பச்சை நிறத்திற்காக புள்ளடியிடுவதே எனது வேலையாக இருந்தது. யானை அல்லது டெலிபோன் என்றால் புள்ளடியிடுவேன். முஸ்லிம் அரசியல்வாதிகளாக இருக்கலாம் ஏனைய அரசியல்வாதிகளாக இருக்கலாம். தோ்தல் காலத்தில் மாத்திரம் எம்மீது கரிசனைக காட்டுவார்கள். ஆடு நனையுதென்று ஓநாய் அழுகிறதாம். அதுபோல எமது துன்பங்கள் துயரங்கள் கஷ்டங்கள் எல்லாம் அவர்களுக்கு ஞாபகம் வந்துவிடும். ஓடோடி வருவார்கள். எங்களுடைய கஷ்டங்களை போக்குவதாக வாக்குறுதியளிப்பார்கள். ஆனால் இதுவரை எந்த பிரச்சினையையும் தீர்க்கவில்லை.

ரவூப் ஹக்கீம் அவர்களே இந்த பேச்சு உங்களுக்காகத்தான். நீங்கள் அரசியல் வங்குரோத்து நிலையை அடைந்திருக்கிறீர்கள். தேசிய மக்கள் சக்தியின் உண்மைத்தன்மை மக்களை சென்றடையாமல் எவ்வாறு பிரபல மீடியாக்கள் தடுக்கின்றனவோ அதைப்போலத்தான் இன்டனெஷனல் மீடியாக்களும் முஸ்லிம்களின் உண்மை நிலையை மக்களுக்கு சென்றடைவதை தடுத்துக் கொண்டிருக்கின்றன. அது தான் உண்மை. நீங்கள் அதை செய்வதை தவறவிட்டு அரசியல் வங்குரோத்து நிலைக்கு வந்த பின்னர் அந்த விடயத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு முஸ்லிம்களின் கவனத்தை திசைதிருப்புகிறீர்கள். கடந்த 30 வருடங்களாக தோல்வியடைகின்ற கட்சிகளின்பால் முஸ்லிம்களை வழிநடத்தி முஸ்லிம் மக்களை கேவலமான நிலையில் வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு திடீரென என்ன கவலை வந்திருக்கிறது.

Womens Crowd At NPP Womens Rally

முஸ்லிம் பெண்களுக்காக என்ன செய்தீர்கள்? முஸ்லிம் பெண் மாணவிகளுக்கான காற்சட்டை துணிகளை இதுவரை பெற்றுக்கொடுத்தீர்களா? தோழர் விஜித ஹேரத் தான் 2003 ஆம் ஆண்டில் எங்கள் மாணவிகளுக்கு பர்தா துணியை பெற்றுக்கொடுத்தார். நீங்கள் உண்மையை மறைத்து எங்களை ஏமாற்றி வாக்குகளை பறித்து சுகபோகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்றுடன் உங்களுடைய ஏமாற்று வித்தையை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் மும்மொழித் திறமை இருப்பது உங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அல்ல. முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்துக் கொள்வதற்கே. இதுவரை ஒன்றுமே செய்யாமல் இருந்துகொண்டு அநுர திசாநாயக்கவின் குறைகளை சொல்லிக் கொண்டு சஜித்தை வெல்லவைக்கப் போகிறீர்களா? ஒன்றுமே விளங்காத புத்தித்தெளிவில்லாத ஒருவரை இந்த நாட்டின் தலைவனாக்கப் போகிறீர்களா? அதற்கு எந்த மதம் இடம் தந்தது என்று சிந்தியுங்கள்.

எதிர்வரும் பாராளுமன்ற தோ்தலில் குளிர்காய்வதற்காகவே நீங்கள் இதனை செய்து வருகிறீர்கள். இனவாதத்தைத் தூண்டி சகோதரத்துவத்தை குழிதோண்டி புதைக்கின்ற மோசமான வேலையில் ஈடுபடவேண்டாம். இந்த கிழட்டு முஸ்லிம் தலைமைகளைக் கண்டு ஏமாந்து விடவேண்டாம். புதிய சிந்தனைகொண்ட இளைய தலைமைகளை தேடியெடுங்கள். உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம்கள் என்ற பெருமையோடு இந்த நாட்டில் நிம்மதியாக கௌரவத்துடன் சரிசமமாக வாழவேண்டுமா? அப்படியானால் திசைகாட்டியை வெற்றியீட்டச் செய்வித்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை தோ்தெடுங்கள். அது தான் உங்களுடைய வெற்றிக்கும் விடுதலைக்குமான ஒரே வழி என்று கூறி விடைபெறுகிறேன்.

Nilanthi Kottahachchi At NPP Womens Rally

“பெண்களுக்கும் சிறார்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கின்ற யுகத்தை உருவாக்குவோம்”
-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி-

பெண்கள் மலர்களைப் போன்றவர்கள். ஆனால் தேவையேற்பட்டால் கூர்மையுள்ள வாளாக, கத்தரிக்கோலாக, ஒரு விறகுக்கட்டாக இணையக்கூடியவர்கள் என்பதை வெளிக்காட்டிய திசைகாட்டியின் அன்புக்குரிய சகோதரிகளே உங்களை நான் மதிக்கிறேன், நேசிக்கிறேன். பெண்கள் இனிமேலும் அரசியல் ரீதியாக உறங்கிக்கொண்டிருப்பவர்களல்ல என்பது இன்று இங்கே திரண்டிருக்கின்ற பெண்களைப் பார்க்கும்போது நிரூபணமாகின்றது. இரண்டாவது விடயம் 76 வருடகாலமாக ஆட்சியாளர்கள் முன்னெடுத்து வந்த அயோக்கியத்தனமான, காடைத்தனமான அரசியல் பேச்சுகள் செப்டெம்பர் 21 இல் முடிவடைந்துவிடும் என்பதாகும்.

மூன்றாவது செய்தி இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 வது ஜனாதிபதி தோழர் அநுர குமார திசாநாயக்க என்பதை நீங்கள் எடுத்துக்காட்டுகிறீர்கள். பெண்களாகிய எங்களின் வாக்குகளால் தான் அவர் ஜனாதிபதி தோழராக மாறுகிறார் என்பதை ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுகின்ற அத்தனை வேட்பாளர்களுக்கும் நாங்கள் கூறிவைக்கிறோம். நாங்கள் பாடசாலைக்கு, தொழிலுக்கு, பல்கலைக்கழகத்திற்கு, பொது போக்குவரத்துச் சேவை மூலமாகவே போகிறோம். இந்த நாட்டின் பொதுபோக்குவரத்தை பாவிக்கின்ற பெண்களின் 90 சதவீதமானவர்கள் பாலியல் தொல்லைகளுக்கு இலக்காகிறார்கள். அதிலும் பொலிசில் முறைப்பாடு செய்து நூற்றுக்கு நான்கு வீதம் எனப்படுகின்ற சிறிய அளவிலேயே சட்டநடவடிக்கையை எடுக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு நாங்கள் பதில் தேடவேண்டாமா? இந்த நாட்டில் பெரும்பான்மையானவர்கள் பெண்களே. அப்படியானால் இதுவரைகாலமும் ஆட்சியாளர்கள் கடுமையான உறக்கத்திலா இருந்தார்கள். செப்டெம்பர் 22 ஆம் திகதிக்குப் பின்னர் பெண்களின் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகொடுக்கப் போகிறோம். தனக்கு அநீதி ஏற்பட்ட வேளையில் சட்டத்தின் முன் செல்ல பெண்கள் தயக்கம் காட்டுகிறார்களென்றால் மனதில் சந்தேகமும் ஐயமும் இருக்குமென்றால் சட்டத்தில் ஒரு பிரச்சினை இல்லையா? சட்டம் மீதான நம்பிக்கை பற்றிய பிரச்சினை இல்லையா? உங்கள் இதயத்தை தட்டிக் கேட்டுப்பாருங்கள் அப்படியொரு பிரச்சினை இல்லையா? சட்டத்தை அறிந்திராமை தண்டனையிலிருந்து விடுபட ஒரு காரணமாக அமையமாட்டாது என எங்களுக்கு கற்பித்திருந்தாலும் இந்த நாட்டின் பிரஜைகளில் பெரும்பான்மையினருக்கு சட்டம் பற்றிய குறைந்தபட்ச புரிந்துணர்வுகூட கிடையாது. எனவே பாடசாலைக் கல்விப் பாடவிதானத்தில் சட்டத்தை உள்ளடக்கி பாடசாலை சிறார்களுக்கு சட்டம் பற்றிய குறைந்தபட்ச அறிவினை பெற்றுக்கொடுக்க வேண்டும். சட்டத்தின் முன் கேள்விக்குட்படுத்துகின்ற ஒரு சமூகத்தை உருவாக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

Womens Crowd At NPP Womens Rally

குற்றச்செயல் இடம்பெற்றதும் பெண் அச்சமடைந்தால் முறைப்பாடு செய்த பின்னர் வழக்கு விசாரணை தொடங்கினால் பிணையில் செல்கின்ற சந்தேக நபர் மூலமாக தொடர்ந்தும் தனக்கோ தனது குடும்ப அங்கத்தவருக்கோ உறவினர்களுக்கோ அழுத்தம் ஏற்படும் என்ற காரணத்தினால் பெண்கள் சட்டத்தின் முன் செல்லமாட்டார்கள். உலகில் முன்னேற்றமடைந்த சட்டங்கள் நிலவுகின்ற நாடுகளில் பிணையில் செல்கின்ற சந்தேக நபர்களை அவதானிப்பதற்கான தொழில்நுட்ப முறையியல்கள் மூலமாக அவர்களின் நடத்தைகளை அவதானித்து வருகின்றனர். எங்களுடைய நாட்டில் அப்படி இடம்பெறுகிறதா? அந்த பிரச்சினைக்கு நாங்கள் பதில் கொடுப்போம். எங்களுடைய நாட்டில் சட்டத்தை அமுலாக்குகின்ற நிறுவனங்களை நாங்கள் ஒழுங்குபடுத்துவோம். அதற்கு பொறுத்தமான உத்தியோகத்தர்களை நியமிப்போம். அவர்கள் சட்டத்தை மீறினால் அனைவருக்கும் முன்னால் அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுலாக்குவோம். சட்டம் தாமதமாவது என்பது சட்டம் நிராகரிக்கப்படுவதாகும்.

எங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் சிக்கல் ஏற்பட்டால் நாங்கள் பெண்கள் அது எங்களுடைய தலைவிதியென பெண்கள் நினைத்தால் அந்த மனோபாவத்திலிருந்து இந்த நாட்டை மாற்றியமைக்க வேண்டுமென்ற செய்தியை இதுவரை எமது நாட்டை ஆட்சி செய்தவர்கள் உங்களுக்கு கொடுத்தார்களா? இருக்கின்ற சட்டங்கள் போதும். ஆனால் அவை முறையாக அமுலாக்கப்படுவதில்லை. அது மண்ணில் யதார்த்தமாக மாறவேண்டும். இறுதியாக ஒரு செய்தியைக்கூற விரும்புகிறேன். 2010 இல் ஸ்கொட்லாந்து பொலிஸ் எமது நாட்டின் சமுதாய பொலிசுக்கு எந்த விதமான கட்டணமும் அறவிடாமல் மூன்று நோக்கங்களுக்காக ஒரு விசேட பயிற்சியை அளித்தது. முதலாவது, இந்த நாட்டில் பெண்களுக்கு இடம்பெறுகின்ற பாலியல் துன்புறுத்தல்கள் நிறுத்தவேண்டும். இரண்டாவது, நோக்கம் வீட்டுக்குள் கூட தனது கூரைக்கு அடியில்கூட பெண்களுக்கு துன்புறுத்தல் இடம்பெற்றால் அதனை நிறுத்தவேண்டும். மூன்றாவது, அதைபோலவே பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் சமூகத்தில் இடம்பெறுகின்ற பாரபட்சம் காட்டப்படுதலை ஒழித்துக் கட்டுங்கள். அப்படித்தான் பயிற்சியளித்தார்கள். பயிற்சியை எவ்வளவு நன்றாக கொடுத்தார்கள் என்றால் இந்த பயிற்சியை இடைநடுவில் நிறுத்தவேண்டுமென ஸ்கொட்லாந்து அரசாங்கம் தீர்மானிக்கிறது. காரணமென்ன? பொலிஸ் கைதில் இருக்கும்போதே எங்களுடைய சந்தேக நபர்கள் துன்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள்.

அதாவது எமது நாட்டில் மனித உரிமை மீறப்படுதல் பற்றி பாரிய உரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் சிறுவர் மீது பாரபட்சம் காட்டப்பட்டது. அதனால்தான் ஸ்கொட்லாந்து அரசாங்கம் பயிற்சியை நிறுத்திக் கொண்டது. எமது நாட்டின் ஜனாதிபதி எமது நாட்டின் பிரதமர் எமது நாட்டின் பொலிஸ் மா அதிபர் இதற்கு பதிலளித்தாரா? இல்லை. சட்டவிரோத தடுத்து வைத்தலுக்கு துன்புறுத்தலுக்கு எதிராக குற்றச்சாட்டப்பட்ட ஒருவர் பொலிஸ் மா அதிபராக்கப்பட்ட ஒரு நாடு தான் இது. அப்படிப்பட்ட பொலிஸ் மா அதிபர் ஒருவரின் கீழ் பெண்களாகிய எங்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? செப்டெம்பர் 22 ஆம் திகதியிலிருந்து பிரமாண்டமான அரண்போல இருக்கின்ற பெண்களாகிய நாங்க

Anura Kumara Dissanayake Speeking At NPP Womens Rally
Anura Kumara Dissanayake At Stage Of NPP Womens Rally From the Back of the Stage
Harini Amarasooriya Wawing At NPP Womens Rally
Womens Singing At NPP Womens Rally
Show More

அநுர குமார திஸாநாயக்க அகில இலங்கை ஜம்மிய்துல் உலமா அமைப்பினை சந்தித்து கலந்துரையாடினார்

(-Colombo, August 21, 2024-) இன்று (21) முற்பகல் ஜயந்த வீரசேகர மாவத்தையில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமை அலுவலகத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் பிரதானி மதிப்பிற்குரிய அஷ் சேக் முஃப்தி ஏ.ஜே.ஏ. ரிஷ்வி, மதிப்பிற்குரிய அஷ் சேக் அர்கம் நுரஅமித் மற்றும் கலாநிதி ஏ.ஏ.அஹமட் அஷ்வர் ஆகியோரை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க சந்தித்தார். இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமைகள் பற்றி […]

(-Colombo, August 21, 2024-)

இன்று (21) முற்பகல் ஜயந்த வீரசேகர மாவத்தையில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமை அலுவலகத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் பிரதானி மதிப்பிற்குரிய அஷ் சேக் முஃப்தி ஏ.ஜே.ஏ. ரிஷ்வி, மதிப்பிற்குரிய அஷ் சேக் அர்கம் நுரஅமித் மற்றும் கலாநிதி ஏ.ஏ.அஹமட் அஷ்வர் ஆகியோரை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க சந்தித்தார்.

இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமைகள் பற்றி முஃப்திமார்களுடனும் நிர்வாக மௌலவிமார்களுடனும் கலந்துரையாடிய அநுர குமார திசாநாயக்க அவர்கள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நல்லாசியையும் பெற்றுக்கொண்டார்.

இத்தருணத்தில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத் என்னுடன் இணைந்துகொண்டார்.

Show More