Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

“பொருளாதாரத்தை மென்மெலும் பலப்படுத்தி முன்னெடுத்துச்செல்வது மக்களுக்கும் எமக்கும் இடையிலான உடன்பாடாகும்” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(-தேசிய மக்கள் சக்தியின் தேசிய தொழில்முனைவோர் மாநாடு – 2024.09.03 – மொனாக் இம்பீரியல் – ஸ்ரீ ஜயவர்தனபுர-) அரசியல் களம் கணிசமான அளவில் சூடுபிடித்துள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலின்போதும் இலங்கையில் தீர்மானகரமானதாக அமைந்தது பொருளாதாரக் காரணியல்ல. ஒரு காலத்தில் யுத்தம், தேசத்தைக் காப்பாற்றிக்கொள்ளல், நாடு ஆபத்தில் போன்ற கோஷங்கள் மேடையில் அடிப்படைக் விடயங்களாக கொள்ளப்பட்டன. அண்மைக்கால வரலாற்றில் முதல்த்தடவையாக பொருளாதாரத்தை முதன்மையாகக்கொண்ட உரையாடலொன்று அரசியல் களத்தில் தோன்றிவந்து கொண்டிருக்கிறது. 2021 – 2022 […]

(-தேசிய மக்கள் சக்தியின் தேசிய தொழில்முனைவோர் மாநாடு – 2024.09.03 – மொனாக் இம்பீரியல் – ஸ்ரீ ஜயவர்தனபுர-)

AKD On Stage At NPP Business Forum

அரசியல் களம் கணிசமான அளவில் சூடுபிடித்துள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலின்போதும் இலங்கையில் தீர்மானகரமானதாக அமைந்தது பொருளாதாரக் காரணியல்ல. ஒரு காலத்தில் யுத்தம், தேசத்தைக் காப்பாற்றிக்கொள்ளல், நாடு ஆபத்தில் போன்ற கோஷங்கள் மேடையில் அடிப்படைக் விடயங்களாக கொள்ளப்பட்டன. அண்மைக்கால வரலாற்றில் முதல்த்தடவையாக பொருளாதாரத்தை முதன்மையாகக்கொண்ட உரையாடலொன்று அரசியல் களத்தில் தோன்றிவந்து கொண்டிருக்கிறது. 2021 – 2022 காலப்பகுதியில் பொருளாதாரம் பாரியளவில் சீர்குலைந்திராவிட்டால் இந்த தேர்தலிலும் வேறு வேறு விடயங்கள் முதன்மையாகக் கொள்ளப்பட்டிருக்கும். ஒருசில காரணிகள் அவர்களாலேயே உருவாக்கிக் கொள்ளப்பட்டவையாகும். எனினும் பொருளாதார சீர்குலைவிற்குப் பின்னர் பிரஜைகளுக்கும் அரசியல் இயக்கங்களுக்கும் பொருளாதாரம் பற்றிய ஏதேனும் முறைசார்ந்த உரையாடலில் பிரவேசிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இத்தகைய பின்னணியிலேயே இத்தடவை தேர்தல் மேடையில் இந்த தலைப்பு முன்நோக்கி வந்துள்ளது. தேசிய மக்கள் சக்தி என்றவகையில் எமது பொருளாதாரப் பாதையை அடிப்படையில் பொழிப்பாக்கி உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டுமென நாங்கள் சிந்தித்தோம். எங்கள் அடிப்படை சாரத்தை அதற்கிணங்கவே இன்று முன்வைக்கிறோம்.

பொருளாதார சீர்குலைவின்போது மக்கள் காட்டுகின்ற பிரதிபலிப்பினை நாங்கள் 2022 இல் கண்டோம்.

அரசியல் மேடையில் மீண்டுமொருதடவை “பயம்” எனும் காரணியை முதன்மைப்படுத்த மாபெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு முன்னர் இந்த காரணி வேறுவிதமாக முன்னெடுத்து வரப்பட்டிருந்தது. “இந்த வேட்பாளரை தெரிவுசெய்து கொள்ளாவிட்டால் தேசம் ஆபத்தில் விழும், இந்த வேட்பாளருக்கு வாக்களிக்காவிட்டால் நாடு ஆபத்தில் வீழந்துவிடும்” என்றவகையில் பலவிதங்களில் பயம் சமூகமயப்படுத்தப்பட்டது. அதுவே தற்போது வித்தியாசமான தோற்றத்தில் “இந்த வேட்பாளரை தெரிவுசெய்து கொள்ளாவிட்டால், கேஸ் சிலிண்டர் வெடிக்கும்” என்ற பயம் உருவாக்கப்பட்டு வருகின்றது. மறுபுறத்தில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றால் பொருளாதாரம் பாரியளவி்ல் சீர்குலைந்து விடுமென்ற பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த சீர்குலைவு பற்றிய உண்மைக்கதை என்ன? நாங்கள் ஓர் அரசியல் இயக்கமென்றவகையில் நீண்டகாலமாக அரசியலில் ஈடுபட்டு வந்தாலும் முதல்த்தடவையாகவே அரச அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள நெருங்குகின்ற வாய்ப்பிற்கு வந்திருக்கிறோம். அது நீண்டகாலமாக மேற்கொண்ட பாரிய அரசியல் நடவடிக்கையின் விளைவு என்றவகையிலாகும். பொருளாதார சீர்குலைவின்போது மக்கள் காட்டுகின்ற பிரதிபலிப்பினை நாங்கள் 2022 இல் கண்டோம். அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதிக்கு இரண்டே ஆண்டுகளில் தப்பியோட நேரிட்டது. நீண்டகாலமாக அரசியல் நோக்கத்துடன் செயலாற்றிய நாங்கள் ஆறுமாதங்களில் தப்பியோடவேண்டிய சூழ்நிலையை உருவாக்குவோமா? பொருளாதார சீர்குலைவிற்கு ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர், நிதி அமைச்சு செயலாளர் போன்றே அத்தருணத்தில் இருந்த மத்தியவங்கி ஆளுனரும் தவறாளிகளென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜனாதிபதிக்குக்கூட எதிராக அத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கையில் நாங்களும் உயர்நீதிமன்றத்தில் தவறாளிகளாக்கப்படுகின்ற நடைமுறைகளை கடைப்பிடிப்போமா? இல்லை. ஒருபோதுமே இல்லை. அதனால் நாங்கள் உங்களுக்கு முதலில் கொடுக்கின்ற உத்தரவாதம்தான் தற்போது நிலவுகின்ற பொருளாதாரத்தை எவ்விதத்திலும் சீர்குலைய ஒருபோதுமே இடமளிக்கமாட்டோம் என்பதாகும். அதைப்போலவே பொருளாதாரத்தை மென்மேலும் பலப்படுத்தி முன்னெடுத்து வருவது எமக்கும் மக்களுக்கும் இடையிலான உடன்பாடாக அமையும்.

NPP Business Forum Crowd

நாங்கள் எவ்விதத்திலும் ஒருதலைப்பட்சமாக சர்வதேச நாணய நிதியத்திலிருந்து நீங்கமாட்டோம் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்குகிறோம்

ஜனரஞ்சகமான போராட்டக் கோஷங்களால் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நோக்கம் எமக்குக் கிடையாது. எப்படிப்பட்ட பொருளாதாரம் எமக்கு கிடைக்கப்போகிறதென்பதை நாங்கள் நன்றாக விளங்கிக் கொண்டிருக்கிறோம். தபால்மூல வாக்களிப்பினை நெருங்கிக்கொண்டிருக்கையில் அரச ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்கின்றது. ஒருவர் 24% அதிகரிப்பதாகக் கூறியதும் அடுத்தவர் அதை முதலில் கூறியது நான்தான் எனக் கூறுகிறார். ஒருவர் சம்பள அதிகரிப்பு 25,000 ரூபா எனக் கூறியதும் அடுத்தவர் குறைந்தபட்ச சம்பளத்தை 57,000 ரூபாவாக மாற்றுவதாக கூறுகிறார். நாங்கள் அந்த இலாபகரமான போட்டியில் இல்லை. பொருளாதாரம் சீர்குலைந்து கொண்டிருக்கின்ற பாரதூரத்தன்மையை நாங்கள் ஆழமாக விளங்கிகொண்டுள்ளோம். துரித திருப்புமுனைகளை, துரித மாற்றங்களை இந்த பொருளாதாரத்தில் ஏற்படுத்துவதற்கான இயலுமை எவ்விதத்திலும் கிடையாது. மிகவும் மெல்லிய நூலினால் முடிச்சுப்போடப்பட்டுள்ள இந்த பொருளாதாரத்தில் ஏற்படுத்துகின்ற சிறிய மாற்றம்கூட மரணம்விளைவிக்க கூடியதாக அமையலாம். அதனால் தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் பொருளாதாரத்தில் எற்படுத்துகின்ற நுணுக்கமான மாற்றங்கள்கூட மிகவும் சிறப்பாக எவ்வாறான பாதகவிளைவுகளை எற்படுத்தும் என்பது பற்றி சிந்தித்து செயலாற்றவேண்டும். நாங்கள் இந்த நாட்டின் மக்களுக்கு பொறுப்புக்கூறுகின்ற பொறுப்பு வகிக்கின்ற ஓர் இயக்கமாவோம். எங்களுடைய ஒட்டுமொத்த சர்வதேச பொருளாதார தொடர்புகளும் சர்வதேச நாணய நிதியம் என்கின்ற கூடைக்குள்ளேயே இருக்கின்றது. இருதரப்பு கடன் கொடுக்கல் வாங்கல்கள், பல்தரப்புக் கடன் கொடுக்கல் வாங்கல்கள், இறையாண்மை முறிகளை உள்ளிட்ட அனைத்தும் நாணய நிதியத்துடன் முடிச்சுப் போடப்பட்டுள்ளது. அதனால் எவரேனும் ஒருதலைப்பட்சமாக அந்த நிகழ்ச்சித்திட்டத்திலிருந்து நீங்குதல் பற்றி சிந்திப்பாரெனில் அவர் நாடு அல்லது நட்டுமக்கள் பற்றிய பொறுப்புக்கூறலை கைவிடுபவராக அமைவார். நாங்கள் எவ்விதத்திலும் ஒருதலைப்பட்சமாக சர்வதேச நாணய நிதியத்திலிருந்து நீங்கமாட்டோம் என்பதற்கான உத்தரவாததை வழங்குகிறோம். நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ள நாட்டுக்குப் பாதகமற்ற அளவுருக்களைப் பேணிவந்து மிகவும் பொருத்தமான பாதை பற்றி நாங்கள் பரிசீலனை செய்வோம். அது எவ்விதத்திலும் நாட்டை சீர்குலைக்கின்ற திசையை நோக்கியதல்ல. எனவே வீண் பயத்தை சமூகமயப்படுத்த வேண்டாமென நாங்கள் சனாதிபதிக்கு வலியுறுத்துகிறோம். பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்தமைக்கான பிரதான காரணகர்த்தா அவரே. நாட்டின் நிதி அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி என்றவகையில் பொருளாதாரம் சீர்குலைதல் பற்றிய வீண் பயத்தை அடிக்கடி வேண்டுமென்றே உருவாக்கி வருகிறார். அதனால் பொருளாதார நெருக்கடியொன்றை உருவாக்குகின்ற திட்டமிட்ட குறிக்கோளுடன் அவர் செயலாற்றுகிறாரோ எனும் பாரதூரமான சந்தேகம் எழுகின்றது. பொருளாதாரம் சீர்குலைய இடமளியோமென நாங்கள் கூறுகின்றவேளையில் அவர் வந்து நாங்கள் பொருளாதாரத்தை வீழ்த்துவதாக கூறுகிறார். தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் சனாதிபதியின் எதிர்பார்ப்பிற்கு ஒருபோதுமே இரையாக மாட்டோம்.

அரசியல் தேவைகளுக்காக மத்தியவங்கி நெறிப்படுத்தப்பட்டமையால் அதன் சுயாதீனத்தன்மை சீர்குலைந்தது

மத்திய வங்கியின் செயற்பொறுப்பு பற்றிய விவாதமொன்று நிலவுகின்றது. எமது நாட்டின் நிதிச் சந்தையில், பணவீக்கத்தின், வட்டி வீதத்தின் மற்றும் செலாவணி விகிதத்தின் நிலைப்பாடுகள் மற்றும் எதிர்வுகூறல்கள் பற்றி தெளிவான கருத்தொன்று நிலவவேண்டும். கடந்த காலத்தில் ஒரே இரவில் செலாவணி விகிதத்தை பாரியளவில் மாற்றியதால் பொருளாதாரத்தில் ஒரு திரிபுநிலையை உருவாக்கினார்கள். அதனால் எம்மால் எதிர்வுகூற இயலுமானவகையில் செலாவணி விகிதத்தை பேணிவருதல், வட்டி வீதத்தை பேணிவருதல் மற்றும் பணவீக்க வீதத்தைப் பேணிவருதல் பொருளாதார உறுதிநிலைக்கு மிகவும் இன்றமையாததாகும். இந்த அலுவல்களுக்கு மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை மிகவும் முக்கியத்துவம் வகிக்கின்றது. அரசியல் தேவைகளுக்காக மத்தியவங்கி நெறிப்படுத்தப்பட்டமையால் அதன் சுயாதீனத்தன்மை சீர்குலைந்தது. அதைப்போலவே பொருளாதாரத்தை நெறிப்படுத்துவதற்காக மக்களால் வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணையை எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக மத்திய வங்கியின் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதை தவிர்ந்தாக எமது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக நாங்கள் ஒருபோதுமே மத்திய வங்கியை பயன்படுத்தப் போவதில்லை. அதைப்போலவே அரசாங்க பொறுப்புமுயற்சிகளை நெறிப்படுத்தல் பற்றிய பாரிய உரையாடலொன்று தோன்றியுள்ளது. பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் கூருணர்வுமிக்தாக அமைகின்ற வலுச்சக்தி, நிதிச்சந்தை மற்றும் தேசிய பாதுகாப்புடன் நேரடியாகவே தொடர்புபடுகின்ற ஒருசில துறைகளில் அரசாங்கத்தின் பிரதான பங்கு நிலவவேண்டும். அதைவிடுத்து இலாபம் பெறுவதை நோக்கமாகக்கொண்ட தொழில்முயற்சிகள் அரசாங்கத்தினால் நெறிப்படுத்தப்படமாட்டாது. தொடர்ந்தும் பேணிவரப்படவேண்டிய மற்றும் கைவிடப்படவேண்டிய துறைகளை நாங்கள் இனங்கண்டுள்ளோம். அதைப்போலவே பிரஜைகளுக்கு அத்தியாவசியமான சேவைகளையும் பண்டங்களையும் இடையறாமல் நியாயமான விலையில் அத்துடன் உரிய தரத்தில் வழங்குவதற்காக பலம்பொருந்திய ஒழுங்குறுத்தல் அதிகாரசபையொன்று அவசியமென நாங்கள் கருதுகிறோம். அத்தகைய நிறுவனக் கட்டமைப்பினைப் பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

AKD Addressing The Crowd At NPP Business Forum From Back

நாங்கள் மக்களின் வாழ்க்கை அனுபவங்கள் வாயிலாக கற்றுக்கொண்ட மனிதர்கள்.

செல்வம் படைத்தவர்களிடமிருந்து செல்வத்தையும், தொழில்முயற்சிகள் உள்ளவர்களிடமிருந்து தொழில்முயற்சிகளையும், வீடுகள் உள்ளவர்களிடமிருந்து வீடுகள் என்றவகையிலுமாக ஆதனங்களை எமது ஆட்சியின்கீழ் சுவீகரித்துக்கொள்வதாக மற்றுமொரு பிரச்சாரத்தை அனுப்பிவைக்கிறார்கள். நாங்கள் சரதியலிடமிருந்து கற்றுக்கொண்டவர்கள் அல்ல. நாங்கள் மக்களின் வாழ்க்கை அனுபவங்கள் வாயிலாக கற்றுக்கொண்ட மனிதர்கள். அவர்கள் முன்னெடுத்துவருகின்ற குறைகூறல்கள் 21 ஆம் நூற்றாண்டுக்கு ஒத்துவரமாட்டாதென்பதையே நாங்கள் கூறவேண்டி உள்ளது. அதைப்போலவே அரச மற்றும் தனியார் பிரிவுகளுக்கிடையில் நிலவுகின்ற தொடர்பினை “சீசருக்கு சொந்தமானதை சீசருக்கும் ஆண்டவனுக்கு சொந்தமானதை ஆண்டவனுக்கும்” என்றவகையில் நாங்கள் நன்றாக விளங்கிகொண்டுள்ளோம். நாங்கள் இந்த இரண்டையும் குழப்பியடித்துக் கொள்ளப்போவதில்லை. அரசியல்வாதிகள் என்றவகையில் எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ள பங்கினையும் தொழில்முனைவோர் என்றவகையில் உங்களிடம் கையளிக்கப்படுள்ள பங்கினையும் நாங்கள் தெளிவாக பகிர்ந்துகொண்டிருக்கிறோம். எமது பொருளாதாரத்தின் ‘எஞ்சின்’ ஆக அமைவது பிரத்தியேக தொழில்முனைவோரும் கைத்தொழிலதிபர்களுமே. எமது அரச கட்டமைப்பின் தன்மை, சட்டங்களின் தன்மை, அரசிய அதிகாரத்துவத்தின் தன்மை போன்ற விடயங்கள் காரணமாக எமது பொருளாதாரம் சிறைவைக்கப்பட்டுள்ளது. இது சுதந்திரமானது எனக்கூறினாலும் எந்தவிதமான சுதந்திரமும் கிடையாது. அவசியப்பாட்டுக்கிணங்க அசைகின்ற பொருளாதாரமொன்று இருந்திருப்பின் 1950 இல் எமது ஏற்றுமதி வருமானம் 316 மில்லியன் டொலரக விளங்கியதோடு கொரியாவில் இது 25 மில்லியன் டொலராகும். அன்று கொரியாவைவிட 12 மடங்கு அதிகமான ஏற்றுமதி வருமானத்தை நாங்கள் பெற்றுக்கொண்டோம். எனினும் இன்று எமது நாட்டின் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலராக அமைகையில் தென் கொரியாவில் அது 685 பில்லியன் டொலராகும். எம்மைவிட 50 மடங்கிற்கு மேலான ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்கின்றது. அதைப்போலவே நாங்கள் ஏன் 3,800 டொலர் என்கின்ற தலா வருமானத்தில் இறுகிப்போனோம்? அது பல தசாப்தங்களாக இறுகிப்போனதன் பெறுபேறாகும். ஊழலும் இலஞ்சமும், தேசிய திட்டத்துடன் நேரொத்ததாக பொருளாதாரத்தை நெறிப்படுத்தாமை போன்ற விடயங்களால் இறுகிப்போயுள்ளோம். வரவு செலவு ஆவணமொன்று வருகையில் முதலீட்டாளர்கள் ஐயப்பாட்டு நிலையிலேயே இருக்கிறார்கள். தொழில்முனைவோர் தமது பொருளாதாரத் தீர்மானங்களை பொருளாதாரரீதியான எதிர்வுகூறல்களுக்கு அமைவாகவே எடுக்கவேண்டியிருப்பினும் எமது தொழில்முனைவோர் ஞானக்கா போன்ற சோதிடம் கூறுபவர்களின் ஆலோசனைகளின்படியே எடுக்கவேண்டியுள்ளது. தற்போது நாட்டின் தொழில்முனைவோர் என்ன நேரிடுமென்ற அச்சத்துடனேயே இருக்கிறார்கள்.

நீங்கள் முதலீடு செய்யுங்கள், நாங்கள் அதன் பாதுகாப்பினை உறுதிசெய்வோம்.

எனினும் தரவுகளை சேகரித்தல், தரவுகளை பகுப்பாய்தல் போன்ற விடயங்களை அடிப்படையாகக்கொண்டே உலகம் முன்நோக்கி நகர்கின்றது. தேசிய நோக்கங்களின் அடிப்படையில் நீங்கள் ஈடுபடவேண்டிய துறைகள் யாவை? அந்த துறைகளுக்கு அரசாங்கம் வழங்குகின்ற உட்கட்டமைப்பு வசதிகள் என்ன? அரச சேவையால் ஈடேற்றிக் கொடுக்கப்படவேண்டிய பணிகள் யாவை? என்பதை நாங்கள் சரிவர விளங்கிக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக அரச சேவையை அரசியல் நோக்கங்களுக்காக ஈடுபடுத்த மாட்டோம். கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளுகக்கான அத்தியாவசியமான வெற்றிடங்களைத் தவிர்ந்த அரச சேவையை நிரப்பமாட்டோம். அரசாங்கத்திடமிருந்து பெறப்படவேண்டிய சேவைகள் பரந்துவிரிந்து காணப்படுவதற்குப் பதிலாக ஒருங்கிணைத்து வினைத்திறன்கொண்டதாக வழங்க அவசியமான பொறியமைப்பினை தயாரிப்போம். ஒருசில காலங்கடந்த சட்டங்களை மாற்றியமைத்து பொருளாதாரத்தை வேகமாக முன்னெடுத்துச் செல்கின்ற பின்னணியை அமைத்துக்கொடுப்போம். பொருளாதாரத்தில் கணிசமான வளர்ச்சியை கையகப்படுத்திக் கொள்ளாவிட்டால் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்வது தொடர்பில் எத்தகைய உண்மையான தேவை நிலவினாலும் எம்மால் அதனை சாதித்துவிட முடியாது. அதன் முன்னோடிச் செயற்பொறுப்பு உங்கள் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீங்கள் முதலீடு செய்யுங்கள், நாங்கள் அதன் பாதுகாப்பினை உறுதிசெய்வோம். கடந்த காலத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பல கைத்தொழில்கள் சீர்குலைந்தன. அதற்கான காரணம் நீங்கள் மேற்கொண்ட தீர்மானங்களிலான தவறு அல்ல: பொருளாதாரத்தின் பாரிய வீழ்ச்சியே காரணமாகும். புதிய தொழில்முயற்சிகளை உருவாக்குவது சற்று கடினமான பணியாகும். அனுபவங்கள் வாய்ந்த, அதனூடாக அறிவினைப்பெற்ற, முகாமைத்துவ ஆற்றல்கள் படைத்தவர்களின் தொழில்முயற்சிகளை மீள்நிறுவுதல் மிகவும் முக்கியமானது. அதனால் நீங்கள் இறுகிப்போயுள்ள பராட்டே சட்டம் போன்ற சட்டங்களால் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைத்துக்கொள்வதற்கான அனைத்துவிதமான பின்னணியையும் அமைத்துக்கொடுப்போம். நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் புதிய தொழில்நுட்பமும் அறிவும் மேற்கிலேயே உருவாகின்றது. அந்த அறிவினை விரைவில் உறிஞ்சிக்கொள்ளத் தவறினால் எமது கைத்தொழிலதிபர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அவசியமான விருத்தியடைந்த மனிதவளத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விடும். பொருளாதார இலக்குகளுக்காக அவசியமாகின்ற மனித வளத்தை எமது கல்விமூலமாக கட்டியழுப்ப நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்காக உலகின் முன்னேற்றமடைந்த பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி கூர்மையாக்கிக்கொண்ட அறிவினை இலங்கைக்கு கொண்டுவருவோம். அதைப்போலவே உலகின் உழைப்புச் சந்தையில் முன்னேற்றமடைந்த பங்கினை கையகப்படுத்திக்கொள்ளவும் பொருத்தமான வகையில் கல்வியில் வேகமான மறுசீரமைப்பினை ஏற்படுத்துவோம்.

Crowd From Front At NPP Business Forum

மிக அதிகமான தொழில்நுட்ப சொத்துவத்தைக் கொண்டுள்ள நாடே எதிர்கால உலகில் பலம்பொருந்தியதாக அமையும்.

மிக அதிகமான தொழில்நுட்ப சொத்துவத்தைக் கொண்டுள்ள நாடே எதிர்கால உலகில் பலம்பொருந்தியதாக அமையும். உலகில் உருவாகிய பாரிய தொழில்நுட்ப மாற்றங்களை எமது எமது கல்வியில் சேர்த்து முன்நோக்கிப் பயணிப்பதற்காக நாங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பற்றிய கொள்கை வெளியீட்டினை தனிவேறாக தயாரித்துள்ளோம். ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, புதிய கண்டுபிடிப்புகளையும் புத்தாக்குனர்களையும் உருவாக்கிக்கொள்வதோடு எமக்கே தனித்துவமான துறைகளை இனங்காணலும் மேற்கொள்ளப்படும். அதைப்போலவே எமக்கு இருக்கின்ற சிறிய சந்தைக்குப் பதிலாக அரச நோக்கு மற்றும் அனுசரணையின்பேரில் வெளிநாட்டுச் சந்தைகளை கைப்பற்றிக்கொள்கின்ற வரத்தக தூதுவர் செவையை உருவாக்குவோம். எமது தொழில்முனைவோரும் நாட்டில் நிலவுகின்ற 22 மில்லியன் சந்தையிலிருந்து வெளியே செல்லாவிட்டால் எமது பண்டங்களின் தரத்தை பாதுகாத்து கிரயத்தைக் குறைத்துக் கொள்வதற்கான இயலுமை கிடைக்கமாட்டாது. உற்பத்திக் கிரயத்தைக் குறைத்துக்கொள்வதற்காக இரண்டு வருடங்களுக்குள் மின்சார பில்லை மூன்றில் ஒன்றால் குறைத்துக்கொள்கின்ற நோக்கமொன்று இருக்கின்றது. அதைப்போலவே 2030 இல் உயிர்ச்சுவட்டு எரிபொருளுக்கான கேள்வி ஆகக்குறைந்த மட்டத்திற்கு வந்து 2050 இல் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி முதன்மைத்தானத்தை அடையும். எமக்கு அவசியமான பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்ள வெளிநாட்டு முதலீடுகள் அத்தியாவசியமாகும். 1978 இல் இருந்து 2022 வரை 22 பில்லியன் டொலர் முதலீடே நாட்டுக்குள் வந்திருக்கிறது. வியட்நாமில் கடந்த வருடத்தில் மாத்திரம் 23 பில்லியன் டொலர் முதலீடு கிடைத்திருக்கிறது. ‘சர்வதெச தொடர்புகள் உள்ளவர்கள்’, ‘வெளிநாட்டு நண்பர்கள் உள்ளவர்கள்’ 42 வருடங்களாக 22 பில்லியன் டொலர்ளை மாத்திரமே முதலீடாக கொண்டுவந்திருக்கிறார்கள். மூலதன அவசியப்பாடு, தொழில்நுட்ப அவசியப்பாடு மற்றும் உலக வர்த்தக சங்கிலித்தொடரில் பிரவேசிக்கின்ற நோக்கத்துடன் வெளிநாட்டு முதலீடுகளுக்கு வாய்ப்புகளை எற்படுத்திக் கொடுப்போம். அதைப்போலவே அவர்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளுக்கு ஒத்த சலுகைகளை உள்நாட்டு முதலீட்டாளர்களாகிய உங்களுக்கும் வழங்குவோம்.

உங்களிடமிருந்து எங்களுக்கு ஒரு கிளாஸ் பச்சைத்தண்ணீர்கூட வேண்டாம். அரசியல்வாதிகள் என்றவகையில் எங்களுக்கு நிலவுகின்ற தேவையைப்போன்றே தொழில்முனைவோரான உங்களுக்கும் தேவை நிலவுகின்றது. இந்நாட்டு வரலாற்றில் முதல்த்தடவைாக அரசியல்வாதியினதும் தொழில்முனைவோரதும் நோக்கங்கள் இணையாக பயணிக்கின்ற அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் நீங்களும் நாமனைவரும் இந்நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றாக உழைக்கின்ற ஒரே சக்தியாக மாறுவோம்.

Few Of The NPP Business Forum
Anura Kumara Dissanayake Surrounded By Crowd
Anura Kumara Dissanayake With Crowd
Show More

“போதைப்பொருள்களின் பின்னணியில் அரசியல் – அனைத்தையும் துடைத்தெறிவேன்”, அநுரகுமார திஸாநாயக்க தெரிவிப்பு

(-யாழ்ப்பாணம், செப். 5-) இன்று (05 பிற்பகல் இடம்பெற்ற வெற்றிக்கான மக்கள் கூட்டத் தொடரின் யாழ்ப்பாணம் மாபெரும் கூட்டத்தில் கலந்துகொண்ட போது. நாட்டில் இன்று பெருமளவான போதைப்பொருள் கடத்தல்களின் பின்னணியில் அரசியல்வாதிகளே இருக்கின்றனர். ஆட்சிக்கு வந்ததும், போதைப்பொருள் சாம்ராட்யம் அடியோடு துடைத்தெறியப்படும் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: போதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்படும் பணம்தான் இன்று பல அரசியல்வாதிகளின் பரப்புரைகளுக்குப் பயன்படுகின்றது. போதைப்பொருளின் பின்னணியில் அரசியல்வாதிகளே உள்ளனர். போதைப்பொருள்கள் இலங்கைக்குரியனவையா? இல்லை. அவை கொண்டுவரப்படுகின்றன. […]

(-யாழ்ப்பாணம், செப். 5-)

Anura Kumara Dissanayake Welcome At The Victory Rally Of Jaffna

இன்று (05 பிற்பகல் இடம்பெற்ற வெற்றிக்கான மக்கள் கூட்டத் தொடரின் யாழ்ப்பாணம் மாபெரும் கூட்டத்தில் கலந்துகொண்ட போது.

நாட்டில் இன்று பெருமளவான போதைப்பொருள் கடத்தல்களின் பின்னணியில் அரசியல்வாதிகளே இருக்கின்றனர். ஆட்சிக்கு வந்ததும், போதைப்பொருள் சாம்ராட்யம் அடியோடு துடைத்தெறியப்படும் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

போதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்படும் பணம்தான் இன்று பல அரசியல்வாதிகளின் பரப்புரைகளுக்குப் பயன்படுகின்றது. போதைப்பொருளின் பின்னணியில் அரசியல்வாதிகளே உள்ளனர். போதைப்பொருள்கள் இலங்கைக்குரியனவையா? இல்லை. அவை கொண்டுவரப்படுகின்றன. அதை அனுமதிக்கின்றனர். எனவே ஆட்சிக்கு வந்ததும், போதைப்பொருள் குழுக்கள் அடியோடு துடைத்தெறியப்படும். இந்த உத்தரவாதத்தை நான் மக்களுக்கு உறுதியுடன் தருகின்றேன் – என்றார்.

The Victory Rally Of Jaffna Crowd

ஊடகப் படுகொலைகளுக்கு முழுமையான விசாரணைகள்

உதயன் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை என்பன தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உதயன் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, உதயன் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் மீதான அடக்குமுறைகள் தாக்குதல்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் படுகொலைகள் தொடர்பில் அநுரவிடம் சுடடிக்காட்டப்பட்டது. இதையடுத்தே ஊடகப் படுகொலைகள் மற்றும் அடக்குமுறைகள் தொடர்பில் மிக ஆழமான விசாரணைகள் நடத்தப்படும் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Anura Kumara Dissanayake Gifted His Painting At The Victory Rally Of Jaffna

அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து நீதி நிலைநாட்டப்படும் என்பதில் நான் மிக ஆழமான உறுதியுடன் உள்ளேன். இந்தக் குற்றங்கள் நிகழ்ந்து எத்தனை வருடங்கள் கடந்திருந்தாலும் நிச்சயமாக நீதியென்பது நிலைநாட்டப்பட்டே தீPரும். அனைத்து வழக்குகள் தொடர்பிலும் நான் தீர்க்கமாக விசாரிப்பேன் – என்றார்.

இதன்போது உதயன் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் குறித்த அறிக்கையொன்று உதயனின் நிர்வாக இயக்குநர் சரவணபவனால் அநுரகுமாரவிடம் கையளிக்கப்பட்டது.

Crowd At The Victory Rally Of Jaffna

விக்னேஸ்வரன் சொல்வதை தமிழர்களே கேட்பதில்லை கண்டுகொள்வேனா நான் அநுரவின் நகைச்சுவை

நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சொல்வதை தமிழர்களே கேட்பதில்லை. நான் அவரையெல்லாம் கண்டுகொள்வேனா? என்று அநுரகுமார தெரிவித்துள்ளார்.

அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், ‘அநுரகுமார ஜனாதிபதியாகத் தெரிவானால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டங்களோ அல்லது சர்வதேச ஒத்துழைப்பையோ அவரால் பெறமுடியாது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டுமானால் அவர்கள் சீனாவின் உதவியை நாட வேண்டிய தேவை ஏற்பாடும். ஏற்கனவே நாடு சீனாவின் கடன்பொறிக்குகள் சிக்கியுள்ள நிலையில் நாட்டு மக்கள் அதனை விரும்ப மாட்டார்கள்’ என்று விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடியாகவே, விக்னேஸ்வரன் கூறுவதை தமிழர்களே பொருட்படுத்துவதில்லை. நான் ஏன் பொருட்படுத்த வேண்டும் என்று அநுர தெரிவித்துள்ளார்.

இன்றைய உலகில் எந்தவொரு நாட்டையும் சார்ந்திருக்காமல் ஒன்றும் செய்ய முடியாது. அரசாங்கங்கள் இன்னொரு அரசாங்கங்களுக்குத்தான் ஆதரவை வழங்குகின்றன. தனி நபருக்கு அல்ல. ஆதலால், இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டிய விடயங்களில் நான் இந்தியாவுடன் நெருக்கமாகவே பணியாற்றுவேன். சீனாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டிய விடயங்களில் நான் சீனாவுடன் நெருக்கமாகவே பணியாற்றுவேன் – என்றார்.

AKD Welcome At The Victory Rally Of Jaffna

போர்க் குற்றவாளிகளை நீதிமன்றுகள் தண்டிக்கும்!

போரின்போது என்ன நடந்தது என்பதை கண்டறிந்து வெளிப்படுத்துவதில் நான் அப்போதும், இப்போதும்உறுதியாகவுள்ளேன். ஆனால் போர்க்குற்றவாளிகளுக்கான தண்டனைகள் நீதிமன்றங்களுடன் தொடர்புடைய விடயம் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுரகுமார அண்மையில் வழங்கிய செவ்வியொன்றில், போரின்போது என்ன நடந்தது என்பதைக் கண்டறிய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது. அவர்கள் எவரையும் தண்டிக்கவேண்டும் என்று கோரவில்லை. எனவே, போரில் என்ன நடந்தது என்று வெளிப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். அவரின் இந்த செவ்வியை மேற்கொள்காட்டி, ‘இறுதிப்போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கும் நிலைப்பாட்டில் நீங்கள் இல்லையா?’ என்று ஊடகவியலாளர்கள் வினவினார்கள். இதற்குப் பதிலளிக்கும்போதே, ‘இறுதிப்போரின்போது என்ன நடந்தது என்பதை கண்டறிவதும் வெளிப்படுத்துவதும்தான் என் வேலை. தண்டனை வழங்குவது நீதிமன்ற சுயாதீனத்துடன் தொடர்புடைய விடயம். நான் போர்க்குற்றவாளிகளைக் கண்டறிவேன்.நீதிமன்றங்கள் அவஎகளைத் தண்டிக்கும்’ என்று அநுர தெரிவித்துள்ளார்.

Show More

“மக்கள் பழக்கப்பட்ட பழைய இடங்களைவிட்டு தேசிய மக்கள் சக்தியை நோக்கி குவிந்து வருகிறார்கள்” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(-தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – எல்பிட்டிய – 2024.09.03-) எமக்கு எதிரானவர்கள் இதுவரை கூறிக்கொண்டிருந்த எம்மால் வெற்றிபெற முடியாது என்கின்ற கதை இப்போது மாறிவிட்டது. இப்போது ரணில் கூறுகிறார் நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால் கேஸ் இல்லாமல் போய்விடுமாம்; எல்லாமே முடிந்துவிடுமாம். அவர்கள் சமூகத்தில் ஒரு அச்சத்தை உருவாக்குகிறார்கள். தோல்வியடைகின்ற தலைவர்கள் சதாகாலமும் சமூகத்தில் ஒரு பீதியை ஏற்படுத்துவார்கள். அவர்கள் வெற்றிபெறாவிட்டால் தேசம் ஆபத்திலாம்; பொருளாதாரம் ஆபத்திலாம். ஆனால் வெற்றிபெற்ற அவர்கள்தான் இந்த நாட்டையும் மக்களையும் […]

(-தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – எல்பிட்டிய – 2024.09.03-)

Anura Kumara Dissanayake Addressing The Alpitiya Rally

எமக்கு எதிரானவர்கள் இதுவரை கூறிக்கொண்டிருந்த எம்மால் வெற்றிபெற முடியாது என்கின்ற கதை இப்போது மாறிவிட்டது. இப்போது ரணில் கூறுகிறார் நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால் கேஸ் இல்லாமல் போய்விடுமாம்; எல்லாமே முடிந்துவிடுமாம். அவர்கள் சமூகத்தில் ஒரு அச்சத்தை உருவாக்குகிறார்கள். தோல்வியடைகின்ற தலைவர்கள் சதாகாலமும் சமூகத்தில் ஒரு பீதியை ஏற்படுத்துவார்கள். அவர்கள் வெற்றிபெறாவிட்டால் தேசம் ஆபத்திலாம்; பொருளாதாரம் ஆபத்திலாம். ஆனால் வெற்றிபெற்ற அவர்கள்தான் இந்த நாட்டையும் மக்களையும் ஆபத்தில் தள்ளிவிட்டவர்கள். இப்போது சஜித் அணியைச் சோ்ந்தவர்களும் நாங்கள் வந்தால் நாடு ஆபத்தில் எனக்கூறுகிறார்கள். அந்த எல்லோரையும் விட இந்த நாடு பற்றியும் நாட்டில் உள்ள மக்கள் பற்றியும் தேசிய மக்கள் சக்தியை சோ்ந்த எமக்கு பொறுப்பு இருக்கின்றதென்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டதன் பாதகவிளைவுகளைத்தான் நாங்கள் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இப்போதும் அப்படித்தான்.

இற்றைக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் இந்த நாட்டின் அரசாங்க ஊழியர்கள் உயிர்வாழ இயலுமான அளவிலான சம்பளத்தை கொடுக்குமாறு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் அப்போது ஒரு சதம் கூட அதிகரித்துக் கொடுக்க முடியாது அவ்வாறு அதிகரித்தால் நாடு சீரழிந்து விடுமென ரணில் கூறினார். நிதியமைச்சின் செயலாளர் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தால் வற் வரியை 21% வரை அதிகரிக்க வேண்டிவரும் எனக்கூறினார். கடந்த ஜுலை மாதத்திலே இவ்வாறு கூறினார். இப்போது கூறுகிறார் ஜனவரி மாதத்திலிருந்து அரசாங்க ஊழியர்களுக்கு ரூபா 25,000 கொடுப்பனவினை வழங்குவதாக; 24% சம்பள அதிகரிப்பினை வழங்குவதாகவும் கூறுகிறார். அவரால் அப்படிக் கூறமுடியும். ஏன்? அவர் என்றால் இந்த தடவை தோல்வியடைவார் அல்லவா! இன்று அமைச்சரவையில் விவசாயிகளின் பயிர்ச்செய்கை கடன்கள் அனைத்தையும் வெட்டிவிடுவதாக தீர்மானம் எடுத்திருக்கிறார்கள். இவ்வாறு இடம்பெற்றால் ஒவ்வொரு நாளும் தோ்தல் நடைபெற்றால் நல்லதென மக்கள் நினைப்பார்கள். இவை தோல்வியின் மத்தியில் கொடுக்கின்ற போலித்தனமான வாக்குறுதிகள். நீங்கள் இப்பொழுது தாமதித்துவிட்டீர்கள் என நாங்கள் ரணிலுக்கு கூறுகிறோம். நீங்கள் இந்நாடு பற்றி இந்த நாட்டு மக்களை பற்றி சிந்தித்திருந்தால் இவற்றில் பெரும்பாலானவற்றை இற்றைக்கு நீண்ட காலத்திற்கு முன்னரே செய்திருக்கவேண்டும். இப்போது அதிகாரம் கைநழுவிப் போய்விடும் என நினைத்து துடிக்கிறார்கள்; மக்கள் தம்மோடு இல்லையென நினைக்கிறார்கள். அதோ பழைய பழக்கங்கள் தோ்தல் ஏமாற்று வேலைகளை செய்ய தொடங்கி விட்டார்கள். ரணில் இன்னமும் பழைய அரசியலில் தான் இருக்கிறார். இந்நாட்டு மக்கள் இனிமேலும் தோ்தல் ஏமாற்று வேலைகளில் மாட்டிக்கொள்ள மாட்டார்கள். சிறிய சிறிய கொடுப்பனவுகளால் இந்நாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என்பது நிரூபணமாகியிருக்கிறது. அவர்கள் இப்பொழுது பழக்கங்களை கைவிட்டு தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி குழுமிக் கொண்டிருக்கிறார்கள். அதனை ரணிலால் மீளத்திருப்ப முடியாது.

Crowd At The Alpitiya Rally

ரணிலுடைய மற்றும் சஜித்துடைய இரண்டாம் மட்டத்தைச் சோ்ந்தவர்களிடம் இப்போது ஒரு கதை அடிபடுகிறது நாங்கள் பிரிந்து சென்றால் அதோ கதிதான். அதனால் ஒன்றுசோ்வதற்கு ஒரு வழிகிடையாதா? என்று. தேசிய மக்கள் சக்தி இவ்வாறு பயணித்தால் வென்றுவிடும். நாங்கள் இருசாராரும் பிரச்சினையில் வீழ்ந்துவிடுவோம். அதனால் ஒன்று சேர ஒரு வழிகிடையாதா? இன்னமும் இரண்டாம் அடுக்கினைச் சோ்ந்தவர்கள் தான் அந்தக் கதையை தொடங்கியிருக்கிறார்கள். அதற்கும் நாங்கள் கூறவேண்டிய பதில் நீங்கள் தாமதித்துவிட்டீர்கள் என்று தான். தற்போது கட்டியெழுப்பப்பட்டுள்ள இந்த மக்கள் பலத்தையும் அதற்கு தலைமைத்துவம் வழங்குகின்ற இயக்கத்தையும் மீளவும் திருப்பமுடியாது. அதனை வெற்றியிலேயே முடிப்போம் என மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். இன்று எமது தோ்தல் இயக்கத்தை மக்கள் தமது கைகளில் எடுத்துவிட்டார்கள். நாங்கள் அறிந்திராத பாரிய மக்கள் சக்தி எமக்காக இப்பொழுது சுயமாக முன்வந்து உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது சுயமாகவே எழுதத்தொடங்கி விட்டார்கள். இப்போது ரணில் நீங்கள் இதனை எப்படி நிறுத்துவது? இதனை நிறுத்த முடியாது. உறுதியாக நாங்கள் வெற்றிபெறுவோம். ஆனால் எங்களுக்கு தேவை சாதாரண வெற்றியல்ல. இந்த நாடு மிகவும் ஆழமான படுகுழிக்குள் இழுத்துப் போடப்பட்டுள்ளது. அதனால் நாட்டை மீட்டெடுக்க நிலையான, பலம்பொருந்திய ஒரு சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. நாடு இவ்விதமாக பாய்ந்து செல்லவேண்டுமானால் அது ஒரு பெரிய பிரச்சினையாகும்.

நாங்கள் தொடர்ந்தும் பாய்ந்தோடுகின்ற இந்த நாட்டிலே அழிவுத்திசையை நோக்கி நீந்திக்கொண்டிருந்தால் நாடு படுகுழிக்குள் நிச்சயமாக வீழ்ந்து விடும். இந்த அழிவுப்பாதையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவே தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தை கோரி நிற்கிறது. அவ்வாறு செய்ய பலம்பொருந்திய தீர்மானங்களை எடுக்கவேண்டும். அதற்காக மக்களின் பலம்பொருந்திய மக்கள் ஆணை அவசியமாகும். இந்த நாட்டை சரியான திசைக்கு திருப்புகின்ற தீர்மானங்களை எடுக்க பலம்பொருந்திய மக்கள் ஆணை அவசியமாகும். முதலில் இந்த அரசியல் போராட்டக்களத்தை சுத்தம் செய்ய வேண்டும். இந்த அரசியலை பொதுமக்கள் அறவோடு வெறுக்கிறார்கள்; அருவருக்கிறார்கள். இப்போது சமூக வலைத்தளங்கள் முன்னேற்றமடைந்து தகவல்கள் எளிதாக பாய்ந்து வருகின்றன. அதனால் இந்த நாட்டை இதுவரை ஆட்சி செய்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்கிறார்கள். ரிச்சட் பத்திரண மகனுக்கு பாதையை அமைக்கிறார். தொடங்கொட மகனுக்கு பாதையை அமைக்கிறார். அப்படித்தான் இவ்வளவு காலமும் அரசியல் பயணம் நிலவியது. இதுவரைகாலமும் அவர்களின் குடும்பங்களுக்கே அவர்களின் அன்பர்களுக்கே பாதையை அமைத்தார்கள். அதனால் மக்கள் இந்த அரசியலை அருவருத்தார்கள். தேசிய மக்கள் சக்தியை சோ்ந்த நாங்கள் அதிகாரத்தை எடுத்து இந்த அரசியல் களத்தை கட்டம் கட்டமாக சுத்தம் செய்வோம்.

AKD Addressing The Alpitiya Rally

ஊர்களில் பொலிஸில் உத்தியோகத்தர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். ஆனால் பிரமுகர்களின் பாதுகாப்பிற்காக அதிகரித்த குழுவினர் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் இவையனைத்தையும் நிறுத்துவோம். இலங்கையில் இதுவரை அரசாங்கம் எனக்கூறி ஒன்றில் ஒரு குடும்பத்தை உருவாக்கினார்கள். அல்லது ஒரு கும்பலை உருவாக்கினார்கள். நாங்கள் இலங்கையில் முதல் தடவையாக அரசாங்கம் என்றால் என்ன? என்பதை உண்மையாக உணர்த்தும் அரசாங்கமொன்றை அமைப்போம். அப்போது மக்களிடம் நம்பிக்கை உருவாகும். மக்கள் தமது பொறுப்புக்கூறலை ஈடேற்ற முனைவார்கள். கைத்தொழில் முனைவோர் தொழில் முனைவோர் தமது பங்கினை ஆற்றத் தொடங்குவார்கள். இந்த எல்பிடியவின் தேயிலை சிறு பற்றுநில உரிமையாளர்கள் தமது வேலைகளை செய்ய தொடங்குவார்கள். அதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு நல்கும். எல்லாத்துறைக்கும் எமது அரசாங்கத்தின் கவனிப்பு கிடைக்கும். அப்போது உங்களுடைய வருமானம் அதிகரிக்கும். நாட்டின் வருமானம் அதிகரிக்கும். நாடு வளமடையும்.

நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்திற்கு ஒத்துவரக்கூடிய கல்வித் திட்டமொன்று, பாடசாலை முறைமையொன்று, பல்கலைக்கழக முறைமையொன்று எம்மால் கட்டியெழுப்பப்படும். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் சுமையாக அமைந்துள்ள இந்த கல்வித்திட்டத்திற்கு பதிலாக அவர்களுக்கு சுமையாக அமைந்திடாத நவீன முன்னேற்றகரமான கல்வி முறையொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம். தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே அதிகாரத்தை கோரி நிற்கிறது. இந்த நாட்டை அழகானதாக்க இந்த நாட்டு மக்களுக்கு அழகான வாழ்க்கையை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்காக இந்த மாதம் 21 ஆம் திகதி தேசிய மக்கள் சக்திக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்க முன்னணிக்கு வருமாறு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

Saumya Sandaruwan Liyanage Addressing The Alpitiya Rally
The Alpitiya Rally Crowd
Rathna Gamage Addressing The Alpitiya Rally
Anura Kumara Dissanayake And Saumya Sandaruwan Liyanage On Stage At The Alpitiya Rally
Show More

“அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நாட்டை அமைதியாக நடாத்திச் செல்ல அர்ப்பணிப்போம்” -அதிட்டன முப்படை கூட்டமைவின் பிரதானி இளைப்பாறிய மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர-

(-தேசிய மக்கள் சக்தி இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவின் ஊடக சந்திப்பு – 2024.09.02-) எங்களின் இராணுவ அங்கத்தவர்கள் தரைப்படை, கடற்படை, விமானப்படை அங்கத்தவர்கள் என்ற வகையில் நீண்டகாலம் கடமை புரிந்து உயர் தோ்ச்சியைப் பெற்று ஆற்றல்களை விருத்தி செய்து சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக வாழ்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியுடன் இளைப்பாறிய முப்படைக்கூட்டமைவின் அதிட்டன கூட்டமைவில் ஏறக்குறைய 40,000 போ் நாட்டில் முனைப்பாக செயலாற்றி வருகிறார்கள். இந்த நாட்டுக்காக ஒழுக்கமுடையவர்களாக பொறுப்புக்களை வெற்றிகரமாக ஈடேற்றி இளைப்பாறியுள்ளதோடு இந்த நாட்டுக்கு […]

(-தேசிய மக்கள் சக்தி இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவின் ஊடக சந்திப்பு – 2024.09.02-)

Aruna Jayasekata At NPP Press Conference

எங்களின் இராணுவ அங்கத்தவர்கள் தரைப்படை, கடற்படை, விமானப்படை அங்கத்தவர்கள் என்ற வகையில் நீண்டகாலம் கடமை புரிந்து உயர் தோ்ச்சியைப் பெற்று ஆற்றல்களை விருத்தி செய்து சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக வாழ்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியுடன் இளைப்பாறிய முப்படைக்கூட்டமைவின் அதிட்டன கூட்டமைவில் ஏறக்குறைய 40,000 போ் நாட்டில் முனைப்பாக செயலாற்றி வருகிறார்கள். இந்த நாட்டுக்காக ஒழுக்கமுடையவர்களாக பொறுப்புக்களை வெற்றிகரமாக ஈடேற்றி இளைப்பாறியுள்ளதோடு இந்த நாட்டுக்கு நோ்ந்துள்ள கவலைக்கிடமான நிலைமையை எம்மால் தெளிவாக காணக்கிடைத்தது. இந்த நிலைமையிலிருந்து மீண்டெழ நாம் ஈடேற்ற வேண்டிய செயற்பொறுப்பினை ஈடேற்றல் பற்றி விசாரித்தறியும்போது தேசிய மக்கள் சக்தி முன்னோக்கி வருகின்ற விதத்தை நாங்கள் கண்டோம். அவர்களுடன் நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடத்தி எமது இரண்டாவது அரும்பணியாக 2021 இறுதியில் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் அதிட்டன கூட்டமைவினை அமைத்துக்கொண்டோம். கழிந்து சென்ற இரண்டு வருட காலப்பகுதிக்குள் நாட்டுக்கு வெளியில் இருக்கின்ற எமது இளைப்பாறியவர்கள் கூட விசேட அர்ப்பணிப்பினை செய்தார்கள். நாங்கள் பெற்றுள்ள தொழில்சார் அறிவையும் ஆற்றலையும் நாட்டை கட்டியெழுப்புவதற்காக தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றுசோ்ந்து வழங்கத் தொடங்கினோம். எமது இளைய தலைமுறையினரைப் போன்றே ஒட்டுமொத்த மக்களையும் நாங்கள் நேசிக்கிறோம். நாங்கள் முனைப்பான சேவையில் இருந்த காலத்தில் மனிதப் பண்புடையவர்களாக மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்ட அனுபவங்களை உச்சளவில் பயன்படுத்தி இந்த விசேட பணிக்காக எமது ஒத்துழைப்பினை வழங்கிக்கொண்டிருக்கிறோம். அதனால் ஏனைய கட்சிகளும் அரசாங்கமும் நினைத்துப் பார்க்காத அதிர்ச்சிக்கு இலக்காகியுள்ளன. தேசிய மக்கள் சக்திக்கு எதிரான அரசியலில் ஈடுபட்டுள்ள கட்சிகளும் குழுக்களும் அதிட்டன முப்படைக் கூட்டமைவு சம்பந்தமாக பல்வேறு சேறுபூசல்களையும் குறைகூறல்களையும் எடுத்தியம்புகின்ற வீடியோக்களையும் போஸ்ட்களையும் ஊடகங்களில் பிரசுரித்து வருகின்றன. திசைக்காட்டிக்கு எதிராக செயலாற்றி வருகின்ற அரசியல் கட்சிகள்கூட ஊடக சந்திப்புக்களை நடத்தி அதிட்டன கூட்டமைவின் செயற்பாடுகள் பற்றி போலியான, பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

அதனால் யுத்தம் நடைபெற்ற கடந்த காலத்தில் இந்த அங்கத்தவர்கள் பாரிய மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் என்பதை முதலிலேயே வழியுறுத்தினேன். நாங்கள் தேசிய மக்கள் சக்தியை நம்புகிறோம். அதைப்போலவே எமது செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். வளமான நாடு – அழகான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் நோக்குடன் செயலாற்றி வருவதோடு கொள்கை ரீதியாக செப்டெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தோ்தலுக்கு உச்சளவிலான ஒத்துழைப்பினை வழங்கி மிகவும் அமைதியான தோ்தலுக்கு இடவசதி ஏற்படுத்திக் கொடுப்போம். அதன் பின்னரும் அமைதிச்சூழலை பேணிவருவது எமது தலையாய கடமையும் பொறுப்புமாகும். அதனை நாங்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டதாக தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஈடேற்றுவோம். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுகின்ற அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இந்த நாட்டை அமைதியான வகையில் பேணிவர அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம். எங்கள் கூட்டமைவு நாட்டு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதற்காக அமைத்துக்கொண்ட ஒரு கூட்டமைவு அல்ல. தீவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மூலைமுடுக்குகள்தோறும் சென்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரான அநுர குமார திசாநாயக்கவின் பெருவெற்றிக்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம். செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டிலே பாரிய கலவரங்களை ஏற்படுத்துவதாகவும் அதில் அதிட்டன இளைப்பாறிய முப்படை கூட்டமைவை சோ்ந்தவர்கள் தொடர்புபடுவதாகவும் சேறுபூசிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான குறைகூறல்களுக்கு செவிசாய்க்க வேண்டாமென நான் மிகுந்த பொறுப்புடன் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுவதற்கு எந்த விதமான வாய்ப்பும் கிடையாது.

நாங்கள் அடிமட்டத்திலிருந்து முப்படையிலிருந்து இளைப்பாறியவர்களை சந்தித்த பின்னரே இந்த கூட்டமைவினை கட்டியெழுப்பினோம். அதனால் இந்த கூட்டமைவு மண்ணில் வளர்ந்த ஆணிவேரைக்கொண்ட மாபெரும் விருட்சமான தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்று சோ்ந்துள்ளது. எதிர்வரும் ஐந்தாம் தேதியும் ஆறாம் திகதியும் தபால் மூல வாக்குகளை அளிக்கையில் முப்படை அங்கத்தவர்களுக்கும் அந்த வாய்ப்பு உரித்தாகியிருக்கின்றது. எம்முடன் கடமையாற்றியவர்கள் என்ற வகையில் இந்த நாட்டுக்கு நோ்ந்துள்ள அவல நிலை பற்றி அனைவருக்கும் மிகச் சிறந்த புரிந்துணர்வு இருக்கிறது. அதனால் தபால் மூலம் வாக்களிக்கையில் விவேகமுள்ளவர்களாக நன்றாக சிந்தித்துப்பார்த்து செயலாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். முப்படை அங்கத்தவர்களுக்கு இற்றைவரை சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள எந்தவொரு வசதியும் குறைவடைய மாட்டாது என்பதையும் குறிப்பாக கொள்கை ரீதியாக தேசிய மாகாநாட்டில் பிரகடனம் செய்துள்ளோம். முப்படையினரின் நன்மதிப்பு, அடையாளம் மற்றும் சட்டப்பூர்வமாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகள் எதுவுமே குறைக்கப்படமாட்டாதென்பதை உறுதி செய்கிறோம். நாங்கள் கூறிய விடயங்களை திரிபுபடுத்தி பிரச்சாரம் செய்யுமளவிற்கு ஒரு சில குழுக்கள் அச்சமடைந்திருக்கின்றன. நாட்டின் அழிவிற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அவ்விதமாக செயலாற்றி வருவதை நாங்கள் காண்கிறோம்.

சிவில் பாதுகாப்பு படையணி ஆற்றல் மிகுந்த ஏறக்குறைய 30,000 அங்கத்தவர்களை கொண்டதாக நாடு பூராவிலும் இயங்கி வருகிறது. அவர்களின் நன்மதிப்பை பாதுகாக்கின்ற வகையில் அவசியமான பயிற்சிகளை வழங்கி நாட்டுக்கு பயனுள்ள பணிகளில் ஈடுபடுத்துவோம். அவர்களின் தொழில் உறுதி நிலையை பாதுகாப்போம். இறந்த மற்றும் காணாமல் போன முப்படை அங்கத்தவர்களின் குடும்ப அங்கத்தவர்களுடன் தேசிய மக்கள் சக்தி நீண்ட உரையாடல்களை மேற்கொண்ட பின்னர் அதற்கான வேலைத்திட்டமொன்றை வகுத்துள்ளது. அதைப்போலவே ஓய்வூதியத்தில் நிலவுகின்ற முரண்பாடுகளை முடிவுறுத்த நடவடிக்கை எடுப்போம். செப்டெம்பர் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் தோ்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் தோ்தல் முடிவடையும்வரை எங்களுடைய டீசேட்டுக்களை அணிய முடியாது. அந்த காலப்பகுதிக்குள் அதிட்டன டீசேட்க்களை அணிந்து செயலாற்றினால் அவர்கள் எங்களுடைய அங்கத்தவர்கள் அல்ல. அதிட்டன டீசேட்களை பாவித்து வீடியோ கிளிப் தயாரித்து போலியான கருத்தியல்களை முன்வைத்திருந்தார்கள். செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை நாங்கள் ஏதாவது பணியை மேற்கொள்வதாயின் இவ்விதமாக பகிரங்க ஊடக சந்திப்பினை நடாத்தி மக்களுக்கு விடயங்களை எடுத்துரைப்போம். இதற்கிணங்க எங்களுடைய செயற்பாடுகள் பற்றி மக்கள் வெளிப்படைத்தன்மையுடன் விளங்கிக்கொள்வது வசதியானதாக அமையும். தேசிய மக்கள் சக்தி மக்கள் மத்தியில் அடைந்துள்ள மாபெரும் வரவேற்பின் மத்தியில் பின்வாங்கியுள்ள குழுவினர் அவர்களின் அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக செயலாற்றுகின்ற விதத்தை மக்களால் இந்நாட்களில் நன்றாக விளங்கிக்கொள்ள முடியும். அதனால் சமூக வலைத்தளங்களை பாவித்து வருங்காலத்தில் பரிமாற்றிக்கொள்ளப்படுகின்ற பொய்யான விடங்களைக் கண்டு ஏமாந்து விடவேண்டாமென கேட்டுக்கொள்கிறோம்.

Sampath Thuyiyakontha At NPP Press Conference

“பயங்கரவாதம், உயிர்த்தஞாயிறு தாக்குதல் அரசியல்வாதிகளின் பலவீனமான தலைமைத்துவம் காரணமாகவே தோன்றியதென்பதை கவலையுடனேனும் குறிப்பிடவேண்டும்.”
-அதிட்டன முப்படை கூட்டமைவின் இளைப்பாறிய எயார்வயிஸ் மாஷல் சம்பத் துய்யகொன்தா-

தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் நாங்கள் கொள்கை பிரகடனமொன்றை வெளியிட்டோம். அதன் 223 வது பக்கத்தில் “உயர்வான தேசிய பாதுகாப்பு – பாதுகாக்கப்பட்ட தேசம்” எனும் அத்தியாயத்தின் கீழ் எமது கொள்கைகைய முன்வைத்திருக்கிறோம். அது சம்பந்தமான விபரங்களை npp.lk இணையத்தளத்தில் பிரவேசித்து எவராலும் பார்க்க முடியும். அது சம்பந்தமாக விழிப்புணர்வு பெறுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். எமது முப்படையில் தற்போது இருக்கின்ற பதவிகளுடன் தொடர்புடையதாக அரசாங்கத்தினால் சட்டபூர்வமாக வழங்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும் அவ்விதமாகவே வழங்குவோம். பொது மக்களுக்கு கிடைக்கின்ற சுகாதார வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை விருத்தி செய்வதன் மூலமாகவும் பயன் கிடைக்கின்றது. இளைப்பாறிய அங்கத்தவர்களுக்காக நிலவுகின்ற விடுமுறை விடுதிகளை உள்ளிட்ட வசதிகள் அவ்வண்ணமே வழங்கப்படும். முப்படையில் தொழில்சார் பயிற்சியை பெற்றவர்கள் இளைப்பாறிய பின்னர் ஈடுபடுவதற்கான தொழில்களை இழப்பதனால் யுக்ரேன் அல்லது ரஷ்யா போன்ற யுத்தக்களங்களுக்கு சென்று உயிராபத்திற்கு இலக்காகியுள்ளார்கள். கௌரவமான இளைப்பாற்று வாழ்க்கையை கழிப்பதற்கான வசதிகளின்மையால் அவர்கள் அத்தகைய அபாய நோ்வினை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

முப்படையினர் பொலிஸாருடன் இணைந்து தேசிய பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்பு செய்து யுத்தகாலத்தில் கூட உச்ச அர்ப்பணிப்புடன் செயலாற்றியிருக்கிறார்கள். பயங்கரவாதம், உயிர்த்தஞாயிறு தாக்குதல் அரசியல்வாதிகளின் பலவீனமான தலைமைத்துவம் காரணமாகவே தோன்றியதென்பதை கவலையுடனேனும் குறிப்பிடவேண்டும். இன்றும் ஆட்சியாளர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அவ்வண்ணமே செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக உயர்நீதிமன்றம் கட்டளை பிறப்பித்த வண்ணம் இன்னமும் பதில் பொலிஸ் மா அதிபரொருவர் நியமிக்கப்படவில்லை. குறுகிய அரசியல் சிந்தனைகள் காரணமாக அந்த பொறுப்புக்களை தவறவிட்டிருக்கிறார்கள். குறுகிய அரசியல் இலாபம் கருதி ஆட்சியாளர்கள் செயலாற்றுகின்ற விதத்தை நன்றாக விளங்கிக்கொள்ளுமாறும் அவர்கள் நாடு பற்றி சிந்திக்காமல் செயலாற்றி வருகின்ற விதத்தை விளங்கிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

நாங்கள் இந்த நிலைமையை மாற்றுவதற்காகவே தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்திருக்கிறோம். நாங்கள் சிவிலியன்கள் என்ற வகையில் சட்டபூர்வமாக தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் ஒருபோதுமே நாட்டுக்குள் வன்முறை உருவாகக்கூடிய வகையில் செயலாற்ற மாட்டோம் என்பதை வலியுறுத்துகிறோம். அது மாத்திரமன்றி முனைப்பான சேவையில் ஈடுபட்டிருந்ததுபோலவே இத்தருணத்திலும் அமைதியான ஒரு நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே செயலாற்றிவருகிறோம்.

Fred Senevirathne At NPP Press Conference

“தேசிய மக்கள் சக்தியில் எமது அரசியல் நடைமுறைகள் மக்களால் பாராட்டப்பட்டுள்ளன.”
-அதிட்டன முப்படை கூட்டமைவின் இளைப்பாறிய ரியர் அட்மிரால் பிரட் செனவிரத்ன-

நாங்கள் எந்த விதமான அரசியல் நன்மையையும் எதிர்பார்த்து இளைப்பாறிய முப்படை கூட்டமைவுடன் இணையவில்லை. நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சமூக அநீதியின் முன்னிலையில் அமைதியாக இருக்க முடியாதென்பதால் நாங்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப செயலாற்றி வருகிறோம். ஏனைய அரசியல் கட்சிகளும் இளைப்பாறிய இராணுவ கூட்டமைவுகளை சோ்த்துக்கொண்டு அமைப்புக்களை கட்டியெழுப்ப முயற்சி செய்தனர். ஊழல்மிக்க அரசியல்வாதிகளும் அவர்களுடன் மரமும் தோலும்போல் இணைந்து செயலாற்றுகின்ற ஒரு சில உத்தியோகத்தர்களும் எமக்கு எதிராக கடந்த காலத்தில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். அதிட்டனவுடன் இணைந்துள்ள சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் அனைவரும் அரசியலுடன் எந்த விதமான தொடர்பும் இன்றி கௌரமாக கடமை புரிந்து முனைப்பான சேவையிலிருந்து இளைப்பாறியவர்களாவர். 40,000 மேற்பட்ட இளைப்பாறிய முப்படை அங்கத்தவர்கள் இந்த நிலைமை காரணமாகவே எம்மைச் சுற்றி இணைந்திருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்திக்குள் எமது அரசியல் நடைமுறை மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டுதலுக்கு இலக்காகியுள்ளது. அரசியல் மேடைகளில் எம்மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற அரசியல்வாதிகளும் இளைப்பாறிய இராணுவ உத்தியோகத்தர்களும் சம்பந்தமாக கருணை அடிப்படையில் சிந்தித்துப்பார்ப்பதோடு அவர்கள் முனைப்பான அரசியலில் ஈடுபட்டிருந்த வேளையில் செயலாற்றிய விதம் சம்பந்தமாக பரிசீலனை செய்யுமாறு சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறோம். விசேட பிரமுகர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு பிரிவு அங்கத்தவர்களின் சட்டபூர்வமான உரிமைகள் எதுவும் மாற்றமடைய மாட்டாதென்பதை வலியுறுத்துகிறோம். அதைபோலவே இதுவரை எம்முடன் சோ்ந்திராத இளைப்பாறிய இராணுவ அங்கத்தவர்களை எம்முடன் இணைந்து கொள்ளுமாறும் மக்கள் நேயமுள்ள அரசாங்கமொன்றை உருவாக்க பங்களிப்புச் செய்யுமாறும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

Upul Kumarapperuma At NPP Press Conference

“சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வாக்காளரின் மனதை திரிபுபடுத்துகின்ற செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.”
-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும-

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக மக்கள் அணிதிரண்டு கொண்டிருக்கின்ற விதத்தைக் கண்டு எதிரான குழுவினர் பதற்றமடைந்து மிகவும் கீழ்த்தரமான சேறுபூசல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று (01) நாங்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனிலுக்கு எதிராக முறைப்பாடொன்றை செய்தோம். அவர் 22 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் அங்கத்தவர்களால் மக்களின் ஆதனங்களை கொள்ளையடித்தல், வாகனங்களை கைப்பற்றிக்கொள்ளல் போன்ற செயல்களை புரிவார்களென பாரிய பீதிநிலையொன்றை சமூகத்தில் விதைக்க முயற்சி செய்கிறார். அதைபோலவே உயர்நீதிமன்றத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணாயக்கார மற்றுமொரு பீதியை கிளப்பி தேசிய மக்கள் சக்தியின் வெற்றியுடன் பாரிய மனிதப் படுகொலைகள் இடம்பெறுமென பிரச்சாரம் செய்து வருகிறார். 1977 தோ்தலின் பின்னர் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியவர்கள் யார் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். 1994 இல் இருந்து இற்றைவரை அவ்விதமான தோ்தல் வன்செயல்கள் இலங்கையில் இடம்பெறவில்லை. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் இதுவரையும் அவர்கள் கூறுகின்ற விதத்தில் தோ்தல் வன்செயல்கள் உருவாகவில்லை. அதனால் 22 ஆம் திகதியோ அதன் பின்னரோ அவர் கூறுகின்ற விதத்திலான வன்செயல்கள் பற்றி மக்கள் அச்சமடைய தேவையில்லை. அதைபோலவே தபால் மூல வாக்காளர்களின் மனதை திரிபுபடுத்துகின்ற விதத்திலான செய்திகளை சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி தொடர்பில் தோன்றியுள்ள மக்கள் ஆதரவினை ஓரளவிற்கேனும் குறைக்க இவை மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாங்கள் மக்களின் நிலையான வைப்புக்களை அரசாங்கத்திற்கு கையகப்படுத்திக்கொள்வதாக தோழர் ஹந்துன்னெத்தி கூறினார் என நேற்று ஆங்கில செய்தித்தாளொன்றில் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்த நாட்டின் மனிதர்களுக்கு ஆதனங்களை வைத்துக்கொள்வதற்கான உரிமை சட்டத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. பணம் என்பது மக்களின் ஆதனங்களில் ஒன்றாகும். சட்டமொன்றை விதிப்பதாயின் அதற்கு முன்னர் சட்ட மூலம் உயர்நீதிமன்றத்திற்கு செல்லும். உயர்நீதிமன்றம் பரிசீலனை செய்த பின்னர்தான் தொடர்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசாங்கமொன்று அதிகாரத்திற்கு வந்து விட்டது என்பதற்காக நினைத்தவாறு சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளமுடியாது. பொய் பிரச்சாரங்களுக்கு ஏமாந்து விடவேண்டாம். எமது நாட்டு மக்களிடம் நான் அதனை மிகுந்த அன்புடனும் கௌரவத்துடனும் குறிப்பிடுகிறேன். அரசியல் சம்பந்தமாக மக்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கெனவே மேற்கொண்டுள்ள தீர்மானத்தை அவ்விதமே செயற்படுத்தி வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் ஜனாதிபதி என்ற வகையில் தோழர் அநுர குமார திசாநாயக்கவை நியமித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Aditana NPP Press Conference

ஊடகவியலாளர்களின் கேள்விக்கான பதில்

கேள்வி: மனுஷ நாணாயக்கார தொடர்பில் கடைப்பிடிக்கப்போகின்ற நடவடிக்கை என்ன?

பதில்: நாங்கள் ஏற்கெனவே பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனிலுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளோம். மனுஷ நாணாயக்காரவுக்கு எதிராக முறைப்பாடு செய்வோம். செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை செய்து வருகின்ற அனைத்து விதமான பொய் பிரச்சாரங்களுக்கும் சேறுபூசல்களுக்கும் எதிராக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

Show More

மேம்பாட்டு அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய சேவை அதிகாரிகளின் தேசிய மாநாடு

(-Colombo, August 30, 2024-) இன்று (30) முற்பகல் கொழும்பு விகாரமகாதேவி திறந்த வெளியரங்கில் இடம்பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கத்தினதும் தொழில்புரிகின்ற பட்டதாரிகள் சங்கத்தினாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் இணைந்த சேவைகள் உத்தியோகத்தர்களின் தேசிய மாநாட்டில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.

(-Colombo, August 30, 2024-)

இன்று (30) முற்பகல் கொழும்பு விகாரமகாதேவி திறந்த வெளியரங்கில் இடம்பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கத்தினதும் தொழில்புரிகின்ற பட்டதாரிகள் சங்கத்தினாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் இணைந்த சேவைகள் உத்தியோகத்தர்களின் தேசிய மாநாட்டில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.

Anura Kumara Dissanayake At Development Officers Summit
Development Officers Summit Crowd
Anura Kumara Dissanayake Addressing The Crowd At Development Officers Summit
Crowd At Development Officers Summit
Chandana Sooriyarachchi Addressing The Crowd At Development Officers Summit
Lal Kantha Addressing The Crowd At Development Officers Summit
Show More

தேசிய மக்கள் சக்தியின் சுற்றாடல் கொள்கை வெளியீடு, இலங்கை மன்றக் கல்லூரி

(-Colombo, August 31, 2024-) தேசிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க ஒரு தேசம் என்ற வகையில் இந்த சுற்றாடல் துறையை மையமாகக் கொண்ட மேலும் பல சட்டங்களால் இந்த துறை பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. அண்ணளவாக எடுத்துக்கொண்டால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட சட்டங்களால் நேரடியாக சுற்றாடல் பாதுகாக்கப்பட்டு வருவதோடு, ஏனைய துறைகள் அமுலாக்கப்படும்போதும் சுற்றாடலை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாங்கள் இற்றைப்படுத்த வேண்டிய சட்டங்களை அவ்வாறு திருத்தியமைக்கலாம். ஐக்கிய நாடுகள் […]

(-Colombo, August 31, 2024-)

AKD Addressing The Nature Policy Launch

தேசிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க

ஒரு தேசம் என்ற வகையில் இந்த சுற்றாடல் துறையை மையமாகக் கொண்ட மேலும் பல சட்டங்களால் இந்த துறை பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. அண்ணளவாக எடுத்துக்கொண்டால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட சட்டங்களால் நேரடியாக சுற்றாடல் பாதுகாக்கப்பட்டு வருவதோடு, ஏனைய துறைகள் அமுலாக்கப்படும்போதும் சுற்றாடலை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாங்கள் இற்றைப்படுத்த வேண்டிய சட்டங்களை அவ்வாறு திருத்தியமைக்கலாம். ஐக்கிய நாடுகள் தாபனத்துடன் நாங்கள் சுற்றாடல் சம்பந்தமான பல்வேறு சமவாயங்களில் கைச்சாத்திட்டு இருக்கிறோம். எனவே, சர்வதேச ரீதியாகவும் நாங்கள் ஒருசில உடன்பாடுகளை செய்திருக்கிறோம். அதுமாத்திரமன்றி எங்களுடைய உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு சில வழக்கு தீர்ப்புகளில் எமது சுற்றாடலை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, கொள்கைகள், சட்டங்கள், சர்வதேச சமவாயங்கள் இவை அனைத்தும் எமக்கு இந்த சூழற்றொகுதியின் பாதுகாப்பினை உறுதி செய்கின்றன.

சட்டங்கள், சமவாயங்கள், வழக்குத் தீர்ப்புகளால் தரப்பட்டுள்ள காப்பீடு எந்தளவிற்கு பாதுகாக்கப்படுகிறது என்பது கேள்விக்குறியாகும்.

1998 இல் பொஸ்பேட் படிவு பற்றிய வழக்கு தீர்ப்பில் எமது நாட்டில் இருந்து பொஸ்பேட் ஏற்றுமதி செய்யப்படுவதை தடுப்பதற்காக வழி சமைத்து கொடுக்கப்பட்டது. ஆனால், நான் சுற்றிவளைத்து விற்க ஆரம்பித்தேன் என அமைச்சர் கூறினார். அதாவது, தற்போது இருக்கின்ற சட்டங்களின் ஓட்டைகளுக்குள் நுழைந்து அந்த வழக்குத் தீர்ப்பினை தவிர்த்து அதில் அகப்பட்டுக் கொள்ளாமல் நான் மீண்டும் அதனை தனியார் கம்பனியின் ஊடாக விற்பனை செய்வதில் வெற்றியடைந்தேன் என அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறினார். அதை அவர் ஒரு வெற்றியென கருதுகிறார். எனவே, இந்த சட்டங்கள், சமவாயங்கள், வழக்குத் தீர்ப்புகளால் தரப்பட்டுள்ள காப்பீடு எந்தளவிற்கு பாதுகாக்கப்படுகிறது என்பது கேள்விக்குறியாகும். அது எங்களுடைய அரசியல் அதிகாரத்துவத்தின் கையிலேயே இருக்கிறது. எனவே, அரசியல்வாதிகள் செயலாற்றுகின்ற விதம் மற்றும் சுற்றாடல் ஆர்வலர்கள் அதை நோக்குகின்ற விதம் என்பவற்றுக்கு இடையில் எமது நாட்டில் முரண்பாடு நிலவுகிறது. அதாவது, சுற்றாடலை பாதுகாப்பதற்கான பணியை சுற்றாடல் ஆர்வலர்கள் புரிந்து வருகின்ற அதேவேளையில் சுற்றாடல் நாசமாக்குகின்ற முன்னோடிப் பணியை அரசாங்கம் செய்வதால்தான் இந்த முரண்பாடு தோன்றுகிறது. எனவே, கடிதங்களை பார்த்தாலும், ஆர்ப்பாட்டங்களை பார்த்தாலும், தாக்கல் செய்த வழக்குகளை பார்த்தாலும் அவற்றில் பெரும்பாலானவை அரசாங்கத்திற்கு எதிரானவை ஆகும்.

Anura Kumara Dissanayake Addressing The Nature Policy Launch

சுற்றாடல் என்பது தொழிலையும் வாழ்க்கையையும் ஒருங்கிணைத்த துறையென நான் நினைக்கிறேன்.

எனவே, நான் ஏற்கெனவே குறிப்பிட்ட விடயங்களை கவனித்து பார்த்தால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் சுற்றாடலை பாதுகாக்க சார்பானவையா? எதிரானவையா? என்பதில் தான் இந்தப் பிரச்சினை தங்கியிருக்கிறது. முரண்பாடு இங்குதான் நிலவுகிறது. எனவே, எமது நாட்டில் எங்கேயாவது பாரியளவிலான மணல் கரைசேர்த்தல், சுற்றாடலை நாசமாக்கும் வகையில் சுரங்க அகழ்வு, அப்படியும் இல்லாவிட்டால் சுற்றாடலை அழிக்கின்ற கருத்திட்டங்கள், சுற்றாடலுக்கு கேடு விளைவிக்கும் கற்குழிகள் இவற்றை பற்றி கவனம் செலுத்தினால் இவற்றில் பெரும்பாலானவற்றிற்கு அரசியல் அதிகாரத்துடன் நேரடியான அல்லது மறைமுகமான தொடர்பு நிலவுகிறது. சற்று சிந்தித்து பாருங்கள், முத்துராஜவெல காணிகள் பற்றிய பிரச்சினையை. அதன் பின்னணியில் அரசியலும் பணத்தை ஈட்டிக்கொள்கின்ற நோக்கமுமே இருக்கின்றது. எனவே, நீங்கள் சுற்றாடலை பாதுகாக்க வேண்டும் என நினைத்துக்கொண்டு இருக்கையில் உங்களுக்கு எதிரானவர்களாக ஆட்சியாளர்களே செயலாற்றி வருகிறார்கள். நாங்கள் அரசியல்வாதிகள். நீங்கள் சுற்றாடல் துறை சார்ந்த சிறப்பறிஞர்கள். ஒரு சில தொழில்கள் இருக்கின்றன. அவர்களின் தொழில் ஒன்று, வாழ்க்கை இன்னொன்று. பொறியியலாளரை எடுத்துக்கொண்டால் அவரது தொழில் நிர்மாணத் தொழிற்றுறை. அவருடைய வாழ்க்கை அதைவிட வித்தியாசமாக நிலவுகிறது. ஆனால், சுற்றாடல் என்பது தொழிலையும் வாழ்க்கையையும் ஒருங்கிணைத்த துறையென நான் நினைக்கிறேன். அது அவர்களின் கல்வியின் ஒரு பகுதியோ, கடமையின் ஒரு பகுதியோ அல்லது சுற்றாடல் மீதான ஈடுபாடு பற்றியது மாத்திரமல்லாமல், தமது வாழ்க்கையுடன் கணிசமான தொடர்பினை கொண்டிருக்கிறது. ஆகவே, சுற்றாடல் ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ள பணிக்கும் அவர்களுடைய வாழ்க்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு நிலவுகிறது. அதனால், ஒரு சிலர் உயிர் ஆபத்துக்களை எதிர்நோக்கி, அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து, சில வேளைகளில் அவமதிப்புக்களை எதிர்நோக்கி தாக்குதல்களுக்கு இலக்காகி இதனை பாதுகாகத்துக் கொள்வதற்காக அரும்பணியாற்றி வருகிறார்கள். எனவே, எங்களுடைய வகிபாகம் என்ன? நாங்கள் அரசியல் தலைமைத்துவத்தை வழங்குகிறோம். அது எதற்காகவென்றால் சுற்றாடலை பாதுகாப்பதற்காக நீங்கள் எடுக்கின்ற முயற்சிக்கு உறுதுணையாக அமைவதற்காகும்.

இப்போது மிக அதிகமான தண்ணீர் கடைகள் அநுராதபுரத்தில் தான் இருக்கின்றன.
நாங்கள் எமது வாழ்நாள் பூராவிலும் அனுபவிக்கின்ற விடயங்கள் இருக்கின்றன. நீங்கள் அதனை சுற்றாடல் ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் கற்று இருப்பீர்கள். என்னை எடுத்துக்கொண்டால், நான் அநுராதபுரத்தை சேர்ந்தவன். நாங்கள் சிறுபராயத்தில் காணிகளில் சிறிது ஆழத்திற்கு தோன்றினால் தண்ணீர் கிடைக்கும். ஆனால், இன்று அதைவிட பலமடங்குகள் தோண்டினாலும் தண்ணீர் கிடைக்காது. அதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதென்பதை நாங்கள் உணர்கிறோம். அதை நாங்கள் இப்போது அனுபவித்து வருகிறோம். முன்னர் எங்களுடைய ஊர்களுக்கு அருகில் யானைகள் சஞ்சரித்தன. ஆனால், ஊருக்குள் நுழையவில்லை. இப்பொழுது நாங்கள் கேள்விப்படுகின்ற விடயம்தான் எங்களுடைய நகரங்களுக்கே யானைகள் வந்துவிட்டன. எனவே, ஏதோவொன்று நடந்துவிட்டதை நாங்கள் உணர்கிறோம். எமது வாழ்நாளில் அநுராதபுரத்தில் தண்ணீரை விற்பனை செய்யும் கடைகளைத் திறப்பார்கள் என நாங்கள் நினைக்கவில்லை. ஏனென்றால், நாங்கள் வக்கடையில் தண்ணீர் பருகியவர்கள். குளத்து நீரை நாங்கள் கைகளால் ஏந்திப் பருகியிருக்கிறோம். கிணறு வெட்டியும் தண்ணீர் குடித்திருக்கிறோம். அதனால், நாங்கள் எங்களுடைய வாழ்நாளில் அநுராதபுரத்தில் தண்ணீர் கடையை திறப்பார்கள் என நினைக்கவில்லை. இப்போது, மிக அதிகமான தண்ணீர் கடைகள் அநுராதபுரத்தில் தான் இருக்கின்றன.

AKD On The Stage Of Nature Policy Launch

எங்களுடைய எதிர்கால சந்ததியினர் இதைவிட பாரிய அனர்த்தங்களை எதிர்நோக்க வேண்டி நேரிடும்

அதைப்போலவே, மக்கள் பலவிதமான நோய்களுக்கு இலக்காகி வருகின்றார்கள். நாங்கள் கண்டிராத சிறுநீரகக் கோளாறு வியாபித்து வருகிறது. சுவாச நோய்களை எதிர்நோக்கி வருகிறார்கள். ஒரு வாரம் மழை பொழிந்தால் குளங்கள் கரைமேவிப் பாய்கின்றன. இரண்டு வாரம் வெய்யில் அடித்தால் குளங்கள் வற்றிப் போகின்றன. எனவே, இங்கு ஏதோவொரு பிரச்சினை ஏற்பட்டுள்ளதை நாங்கள் உணர்கிறோம். அதாவது, எங்கள் வாழ்நாளில் நாங்கள் கண்டிராத வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகள், பாரிய வரட்சி, மண்ணரிப்பு இவை எல்லாவற்றையும் இப்பொழுது நாங்கள் கண்டுகொண்டிருக்கிறோம். எனவே, இவை தொடர்பில் விஞ்ஞான ரீதியான முற்றாய்வுகளை செய்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதென நாங்கள் நினைக்கிறோம். ஒட்டுமொத்தமாக நோக்கினால் இது எமது நாட்டில் சுற்றாடல் துறையில் ஏற்பட்டுள்ள மாபெரும் அழிவையே வெளிக்காட்டுகிறது. அதனை அனுபவிக்கின்ற தலைமுறையாக நாங்கள் மாறியிருக்கிறோம். எங்களுடைய எதிர்கால சந்ததியினர் இதைவிட பாரிய அனர்த்தங்களை எதிர்நோக்க வேண்டி நேரிடும். எனவே, ஒரு நல்லெண்ணம் கொண்ட தேவை எமக்கு இருக்கின்றது. நான் நினைக்கிறேன், இந்த நிலைமை 80ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் துரிதமாகியதென. அந்தக் காலத்திலே 1977 தேர்தல் காலமென நினைக்கிறேன், அப்போது மஹிந்த சோம தேர்தலில் போட்டியிட்டார். ஹபரண வீதியில் மரத்தண்டுகளில் அந்தக் காலத்திலே “வளர்ந்த பின்னர் நாங்களும் மஹிந்த சோமவிற்கே” என காட்போர்டில் எழுதியொட்டி இருந்தார்கள். எனவே, ஹபரண காட்டினை அழித்தவர்கள் அவர்களே என்பது ஒரு பிரபல்யமான விடயமாகும்.

உங்களுடைய தேவையும் எங்களுடைய தேவையும் இணையாக பயணிக்கின்ற ஓர் அரசாங்கமே எமக்குத் தேவை.

எனவே, சுற்றாடலை பாதுகாத்து அதனை அனுபவித்த வாழ்க்கையை போன்றே அதனை அழித்ததன் பாதகவிளைவுகளை அனுபவிக்கின்ற வாழ்க்கையும் இப்போது எங்களுக்கு உரித்தாகியிருக்கிறது. இந்த மாற்றம் இரண்டு, மூன்று தசாப்தங்களில் ஏற்பட்டதென்றால் மேலும் சில தசாப்தங்கள் சென்றால் என்ன கதியேற்படும். எனவே, அரசியல் அதிகாரிகள் என்ற வகையில் எங்களுடைய அரசாங்கம் இந்த துறை பற்றி உங்களால் முன்வைக்கப்படுகின்ற திட்டங்களையும் அவசியப்பாடுகளையும் எங்களுடை தேவைகளாக கருதி இந்த சுற்றாடல் துறையில் ஏற்பட்டுள்ள அழிவை தடுத்து நிறுத்துவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். எனவே, எங்களுக்குத் தேவையான அரசாங்கம் முரண்பாட்டு அரசாங்கம் அல்ல. உங்களுடைய தேவையும் எங்களுடைய தேவையும் இணையாக பயணிக்கின்ற ஓர் அரசாங்கமாகும். இதற்கு முன்னர் அரச உத்தியோகத்தர்கள் என்ற வகையில் உங்களுக்கு உங்கள் கடமையை சரிவர ஆற்றமுடியாத நிலைமை இருந்தது. அரசியல் அதிகாரத்துவம் தன்னால் தயாரித்துக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னிலைப்படுத்துவதற்காக ஒன்றில் அரச அலுவலர்கள் அடிபணிய வேண்டும் அல்லது அதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். அதனால், பெரும்பாலான சுற்றாடல் துறையைச் சேர்ந்தவர்கள் சரிவர கடமையை ஆற்றமுடியாமல் அதிலிருந்து விலகிச் சென்றுள்ளார்கள். நாங்கள் உங்களுக்கு ஒரு உத்தரவாதம் அளிக்கிறோம். உங்களுடைய தேவையும் எங்களுடைய தேவையும் சமமாக பயணிக்கின்ற அரசாங்கத்தைத்தான் தேசிய மக்கள் சக்தி உருவாக்கும். அதுப்போலவே, எங்களுக்கு ஒரு சில துரித தேவைகள் அவசியமாகின்றன. தோழர் ரவீந்திர தொடர்படு அருவி முறைமை பற்றி சுட்டிக்காட்டினார். அரசியல்வாதிகள் உரத்த குரலில் அரசியல் மேடைகளில் அநுர திசாநாயக்க எத்தனை குளங்களை அமைத்தார் என கேட்கிறார்கள். நான் பண்டுகாபய மன்னன் அல்ல. எமது நாட்டிலே 32 ஆயிரம் குளங்கள் இருந்தன. தற்போது அதில் 14 ஆயிரம் குளங்களே எஞ்சியிருக்கின்றன. அதில் 12 ஆயிரம் குளங்கள் ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளன. எங்களுடைய முயற்சி எப்படிபட்டதாக அமைந்தது. ஆபத்தை எதிர்நோக்கியிருக்கின்ற இந்த குளத்தொகுதியை புனரமைப்பதாகும். இவை பலவிதமான அபாயங்களை எதிர்நோக்கியிருந்தன. ஒன்று, அவற்றின் நீரேந்து பரப்புகள் அழிவடைந்திருந்தமை. அதன் காரணமாக குளங்களில் வண்டல் நிரம்பியிருந்தன. குளக்கட்டு சிதைவடைந்திருந்தன. அணைக்கட்டின் மடை அழிவடைந்திருந்தன. வாய்க்கால் தொகுதி சீரழிந்திருந்தன. எனவே, எங்களுடைய முயற்சி குளங்களை கட்டுவதல்ல. இவர்களுக்கு விளங்கவில்லை. பாவம்! எத்தனை குளங்களை அமைத்தீர்கள் என கேட்கிறார்கள். இந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிளாக குளங்களை புனரமைப்பது எமது முயற்சியாக விளங்கியது. சிலவற்றை பழைய நிலைமைக்கே எங்களால் கொண்டுவர முடியதாது. ஏனென்றால், நீரேந்து பரப்பில் ஏற்படுத்திய அழிவுகளை இயல்புநிலைக்கு கொண்டுவர முடியாது. அந்தப் பிரச்சினையை நாங்கள் எதிர்நோக்கினோம். ஆனால், இயலுமான உச்ச அளவில் நாங்கள் இந்தக் குளங்களின் தொகுதியை புனரமைத்தேயாகவேண்டும்.

Crowd At Nature Policy Event

ஒட்டுமொத்த குளங்களின் தொகுதிக்கும் புத்துயிர் அளிப்பதே எமது நோக்கமாகும்.

எங்களுக்கு இரண்டு பருவங்களில் பருவ மழை கிடைக்கின்றது. இடைப்பட்ட காலத்திலும் மழை வீழ்ச்சி கிடைக்கிறது. எனவே, ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால் எமது நாடு மிகச் சிறந்த மழைவீழ்ச்சியை கொண்ட நாடாகும். உலர் வலயத்தை எடுத்துக்கொண்டால் அங்குதான் மிக அதிகமான குளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஏனென்றால், பருவகால மழைநீரை நாங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மிக உயர்வான வெப்பநிலை நிலவுகிறது. எனவே, அவற்றில் சில தொடர்படு அருவி முறைமையாக விளங்கின. எனவே, அதுவொரு தனியான குளம் அல்ல. குளங்களின் தொகுதியாகும். நான் கமத்தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் மதவாச்சி தொகுதியில் நாங்கள் ஒரு தொடர்படு அருவி முறைமையையே மீண்டும் புனரமைத்தோம். அதாவது, தனியொரு குளத்தை அமைப்பதல்ல, ஒட்டுமொத்த குளங்களின் தொகுதிக்கும் புத்துயிர் அளிப்பதாகும். அதுதான் எங்களுடைய தேவையாக அமைந்தது. எனவே, அந்த துறைக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க வேண்டுமென நாங்கள் நம்புகிறோம். மழைநீரை சேமித்துக்கொள்ள வேண்டும். நீர்மட்டத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதற்கு எங்களுக்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிளான குளங்கள் மிகவும் முக்கியமானவையாகும்.

ஒருவருடத்திற்கு 470 யானைகள் என்பதை ஒரு குவியலாக எடுத்துக்கொண்டால் எப்படியிருக்கும்? அது வேதனை மிகுந்தது

அடுத்ததாக யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான மோதலை எடுத்துக்கொண்டால் 2023 ஆம் ஆண்டில் யானைகள் 139 பேரை கொன்றிருக்கின்றன. மனிதர்கள் 470 இற்கு கிட்டிய யானைகளை கொன்றிருக்கிறார்கள். எனவே, இந்த மோதல் ஒன்றிற்கு மூன்று என்ற விகிதத்திலேயே நிலவுகிறது. ஒருவருடத்திற்கு 470 யானைகள் என்பதை ஒரு குவியலாக எடுத்துக்கொண்டால் எப்படியிருக்கும்? நாங்கள் தனியாகத்தானே யானைகளை பார்க்கிறோம். ஆனால், 470 யானைகளை குவித்துப் பார்த்தால் அந்தக் காட்சியை எங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. இதனை நாங்கள் நிறுத்தியாக வேண்டும். எனவே, நாங்கள் இந்த யானைக் கடவைகளை மீள்நிறுவ வேண்டும். அவைகளின் சஞ்சரிப்பு மீது கவனம் செலுத்த வேண்டும். அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். துரிதமாக விஞ்ஞான ரீதியான யானை வேலிக்கு நாங்கள் செல்ல வேண்டும். நீண்டகால ரீதியாக அவற்றுக்கு தேவையான உணவை பெற்றுக்கொள்வதற்கான சூழற்றொகுதியை எவ்வாறு அமைத்துக்கொடுக்கப் போகிறோம். நீரைப் பெற்றுக்கொள்வதற்கான காட்டுக் குளங்கள் தொகுதியை காடுகளில் புனரமைக்க வேண்டும். ஆகவே, இந்த யானைக் கடவைகள் பற்றியும், காட்டுக்குளங்கள் பற்றியும் நாங்கள் மீளவும் கவனம் செலுத்தவேண்டும். மேலும் பல விடயங்கள் இதில் இருக்கின்றன. இயற்கையான தாவரங்களால் இதனை கட்டுப்படுத்த முடியுமா என நீண்டகால ரீதியில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆனால், இது சம்பந்தமான முன்மொழிவுகள் எங்களிடம் இருந்தால் அதனை முன்வையுங்கள். அதுபற்றியும் நாங்கள் பரிசீலனை செய்யத் தயார்.

Nature Policy Launch Crowd

எமது நாட்டில் அண்ணளவாக ஒரு நாளுக்கு 7000 மெற்றிக் தொன் குப்பைகள் குவிகின்றன.

அடுத்தவிடயம், ஒரு நாளில் எமது நாட்டிலே பெருந்தொகையான குப்பைக் கூளங்கள் குவிகின்றன. அண்ணளவாக ஒரு நாளுக்கு 7000 மெற்றிக் தொன்கள். நாங்கள் கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள், மீள்பாவனை போன்ற திட்டங்களைத் தயாரித்தால் 7000 மெற்றிக் தொன் குப்பைக் கூளங்கள் ஒரு நாளில் குவிவதை கட்டுப்படுத்த முடியும். சரியான திட்டத்தை வகுத்தால் எங்களால் இதனை குறைத்துக்கொள்ள முடியும். சேர்கின்ற குப்பைகளின் கணிசமான பகுதியை மீள்சுழற்சி செய்ய முடியும். கனடாவில் இருக்கிறார், இலங்கையைச் சேர்ந்த ஒருவர். உங்களுக்குத் தெரியுமென் நினைக்கிறேன். நீண்ட தலைமயிரை வளர்த்துக்கொண்டு இருக்கிறார். சுதத் என்பது அவரது பெயர். அவர் கனடாவில் குப்பைக்கூள மீள்சுழற்சியில் மிகவும் உயர் மட்ட நிலையில் இருக்கிறார். நான் அவருடைய தொழிற்சாலைகளை பார்க்கப் போயிருக்கிறேன். அவர் தனது தொழில்நுட்பத்தையும் அறிவையும் எடுத்துக்கொண்டு இலங்கைக்கு வர தயார். அதாவது, கொலன்னாவ குப்பை மேடு தொடர்பானதாகும். நான் வந்தேன், ஆனால், ஒரு கம்பனியை உருவாக்கி கம்பனியில் நூற்றுக்கு ஐம்பது வீதமான பங்குகளை அவருக்குத் தருமாறு அமைச்சர் கூறினார். அதனால், நான் திரும்பிப் போனேன். நீங்கள் அரசாங்கத்தை அமைத்த நாளில் நான் பணத்தையும் எடுத்துக்கொண்டு, தொழில்நுட்பத்தையும் எடுத்துக்கொண்டு, அறிவையும் எடுத்துக்கொண்டு வருகிறேன். எனது பணத்திற்கு வட்டிக்கூட தேவையில்லை. உங்களுக்கு இயலுமான வரியை வருடந்தோறும் அந்த தொகையை எனக்கு மீளச்செலுத்துங்கள் என கூறினார். அவர்கள் வரத்தயார். எனவே, அரசியல் காரணமாகவே இவை தடைப்பட்டுள்ளன.

சுற்றாடலை பாதுகாப்பதில் பொது மக்களின் ஒத்துழைப்பு கட்டாயமாக கிடைக்க வேண்டும்

அடுத்ததாக, வெலிகம பக்கத்தில் கடற்கரை பிரதேசத்திலே நடந்தால் கால்களில் சொப்பின் பேக் சிக்கும். பெம்பஸ் சிக்கும். நான் கண்டிருக்கிறேன். ஏனென்றால், அவற்றை கடலில் எறிந்தால் அவை மீண்டும் கரையை வந்துசேரும். ரிவஸ்டன் பக்கத்திற்கு சென்று பார்த்தாலும் அப்படித்தான். பொலித்தீன் பைகள். பிளாஸ்டிக் போத்தல்கள் நிறைந்திருக்கும். ஆகவே, மக்களிடம் மனோபாவ ரீதியான மாற்றமும் சுற்றாடல் தொடர்பில் தேவை. ஒரு சட்டம் போட்டே எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது. சட்டங்கள் இருக்க வேண்டும். மரபுகள் நிலவ வேண்டும். சமூக விதிகள் நிலவ வேண்டும். அப்படித்தானே ஒரு சமூகம் நிலவவேண்டும். எனவே, சுற்றாடலை பாதுகாப்பதில் பொது மக்களின் ஒத்துழைப்பு கட்டாயமாக கிடைக்க வேண்டும். ஏனென்றால், பொது மக்களின் அன்றாட செயற்பாடுகள் சுற்றாடலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, இந்தப் பணியை வெற்றியீட்டச் செய்ய வேண்டுமானால், பொதுமக்களின் பாரிய ஒத்துழைப்பு தேவையென நாங்கள் நினைக்கிறோம். ஆகவே, உலகில் சுற்றாடல் ரீதியாக பல்வேறு வளங்களைக்கொண்ட ஒரு நாடு தான் இலங்கை. ஆனால், எங்களுடைய அரசியல் தலைவர்களால் அழிக்கப்பட்டு, அச்சுறுத்தலுக்கு இழக்காக்கப்பட்ட நாடாக மாறியிருக்கிறோம். எனவே, முதலாவது பணி இவற்றை நிறுத்துவது. அடுத்தது படிப்படியாக மீள்நிறுவுவது.

AKD And Samantha Vidyarathne At Nature Policy Launch

உங்களுடைய அறிவையும் எங்களுடைய தேவையையும் ஒன்றுசேர்த்து நாங்கள் சுற்றாடலை பேணுவோம்

இதற்கு முன்னர் ஒரு தேர்தலின்போது மஹிந்த ராஜபக்ஸ வெற்றிபெற்று மொனராகலையில் உரையாற்றியபோது, கடல்நீரை சுத்திகரித்து மொனராகலை மக்களுக்கு பருக கொடுப்பதற்கான கருத்திட்டமொன்றை ஆரம்பிப்பதாக கூறினார். நான் கேட்கிறேன், மொனராகல கடல் நீரை சுத்திகரித்து பருக வேண்டிய ஒரு பிரதேசமா? அது ஒரு சில உலக நாடுகளுக்கு ஏற்புடையதாகும். அவர்களே சுற்றாடல் மீது பாரிய சேதங்களை ஏற்படுத்தி அவர்களே அதிலிருந்து மீட்புப் பெறுதவற்கான வழிவகைகளையும் முன்வைக்கிறார்கள். அவை பாலைவனங்கள் இருக்கின்ற நாட்டுக்கான தீர்வுகள் ஆகும். எமது நாட்டுக்கு அவை பொருத்தமானவை அல்ல. எனவே, இதுதொடர்பான அறிவும் அனுபவமும் வாய்ந்தவர்களே நீங்கள். உங்களில் ஒரு சிலருக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. என்னைவிட இதுபற்றிய அறிவுமிக்கவர்கள் நீங்களே. எனவே, உங்களுடைய அறிவையும் எங்களுடைய தேவையையும் ஒன்றுசேர்த்து நாங்கள் இதனை சாதிப்போம். அதற்காக அணித்திரள்வோம் எனக்கூறி விடைபெறுகிறேன். நன்றி!

Ravindra Kariyawasam At Nature Policy Launch
Nature Policy Book
AKD Handover Nature Policy Book
Show More