Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

“உலகின் எந்தவொரு நாட்டுடனும் போட்டியிட்டு பயணிக்கக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதே திசைகாட்டியின் எதிர்பார்ப்பு” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(-ஜப்பானின் Tsukuba இலங்கை மக்கள் சந்திப்பு – 2024 . 07 . 21-) வாரத்தின் களைப்பான வேலைகளுக்குப் பின்னர் ஓய்வுநாளில் எம்மை செவிமடுக்க வந்தமை எமக்கு பலத்தையும் தெம்பினையும் நம்பிக்கையையும் பெற்றுக்கொடுக்கின்றது. ஜப்பானில் நாங்கள் நடாத்திக் கொண்டிருப்பது தேர்தலுக்கு முன்னராக நடைபெறுகின்ற இறுதி வெளிநாடுகளிலுள்ள இலங்கையருடனான சந்திப்பாகும். வெளிநாடு சென்றுள்ள இலங்கையருடனான இறுதி சந்திப்பினை ஜப்பானில் நடாத்த தீர்மானித்தமைக்கான காரணம் எமது நாட்டின் பொருளாதாரத்தில் பங்கேற்கக்கூடிய பாரிய குழுவொன்று ஜப்பானில் இருப்பதாலாகும். அதைப்போலவே அறிவு, அனுபவம், […]

(-ஜப்பானின் Tsukuba இலங்கை மக்கள் சந்திப்பு – 2024 . 07 . 21-)

AKD-JApan-Meeting

வாரத்தின் களைப்பான வேலைகளுக்குப் பின்னர் ஓய்வுநாளில் எம்மை செவிமடுக்க வந்தமை எமக்கு பலத்தையும் தெம்பினையும் நம்பிக்கையையும் பெற்றுக்கொடுக்கின்றது. ஜப்பானில் நாங்கள் நடாத்திக் கொண்டிருப்பது தேர்தலுக்கு முன்னராக நடைபெறுகின்ற இறுதி வெளிநாடுகளிலுள்ள இலங்கையருடனான சந்திப்பாகும். வெளிநாடு சென்றுள்ள இலங்கையருடனான இறுதி சந்திப்பினை ஜப்பானில் நடாத்த தீர்மானித்தமைக்கான காரணம் எமது நாட்டின் பொருளாதாரத்தில் பங்கேற்கக்கூடிய பாரிய குழுவொன்று ஜப்பானில் இருப்பதாலாகும். அதைப்போலவே அறிவு, அனுபவம், திறன்கள் கொண்ட குழுவினரைப்போலவே பாரிய இளைஞர் சமுதாயமொன்றும் ஜப்பானில் இருக்கிறது. உங்களின் அந்த வலிமையையும் பலத்தையும் எமது நாட்டின் நிலைமாற்றத்திற்காக பலம்பொருந்தியவகையில் சேர்த்துக்கொள்கின்ற நோக்கத்துடன் வெளிநாடு சென்றுள்ள இலங்கையருக்கான இறுதி சந்திப்பினை ஜப்பானில் நடாத்துகிறோம். எனது வெளிநாட்டு விஜயங்களுக்காக 700 இலட்சம் செலவாகியதாக ஒருவர் கூறியிருந்தார். இலங்கைக்கு திரும்பிச்சென்றதன் பின்னர் சிலநாட்களுக்குள் வெளிநாட்டு விஜயங்களுக்கான அனைத்தச் செலவுகள் பற்றிய விபரங்களையும் மக்களிடம் சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறேன். அதைப்போலவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியை வகிக்கின்ற காலப்பகுதிக்குள் வெளிநாட்டு விஜயங்களுக்காக செலவிட்ட தொகைகளையும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பர்னாந்துவும் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்காரவும் செய்த செலவினங்கள் பற்றியும் அறிவிக்கவேண்டுமென நினைக்கிறேன். நாங்கள் செலவிட்டிருப்பது அரசாங்கப் பணத்தையல்ல என்பதையும் உறுதியாகக் கூறுகிறோம். வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்மீது சிலர் பாரிய குற்றச்சாட்டினை முன்வைத்து இத்தடவை வாக்களிக்க செல்லவேண்டாமென்ற கதைகளைக் கூறியுள்ளார்கள்.

பலர் நாட்டைவிட்டுச் சென்றமைக்கான காரணம் எமது நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையாகும். அதைப்போலவே எமது நாட்டின் அரசியல் மாற்றமொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களுக்கு விசேட உரிமை இருக்கின்றது. ஏனெனில் இன்றும் எமது நாடு ஓடிக்கொண்டிருப்பது வெளிநாடுகளில் தொழில்புரிபவர்கள் அனுப்பிவைக்கின்ற பணத்திலாகும். கடந்த வருடம் அண்ணளவாக 5900 மில்லியன் டொலர்களை அனுப்பிவைத்திருக்கிறார்கள். இவ்வருடத்தில் இன்றளவில் 3000 மில்லியன் டொலர்களை விஞ்சியுள்ளது. இந்த இரண்டு வருடங்களுக்குள் அனுப்பிவைத்துள்ள பணம் 10,000 மில்லியன் டொலர்களை விஞ்சியிருக்கிறது.

அரசாங்கத்திற்கு சொந்தமான வெளிநாட்டு ஒதுக்கங்களின் அளவு அதில் அரைவாசியாகும். எமது நாட்டின் அரசியலால் அந்நியர்களாக்கப்பட நிர்ப்பந்தித்துள்ள உங்களுக்கு எமது நாட்டில் புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான புனிதமான உரிமை இருக்கின்றது. அந்த உரிமையை ஏற்றுக்கொள்வது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. இந்த மாதம் கழிவதற்கு முன்னராக தோ்தல்கள் ஆணைக்குழுவினால் வேட்பு மனுக்கள் கோரப்படுகின்ற தினம் மற்றும் தோ்தல் நடைபெறுகின்ற தினம் பற்றி அறிவிக்கப்படுமென நாங்கள் நினைக்கிறோம். அவ்வாறு இருக்கையில் ரணில் விக்கிரமசிங்க தோ்தலுக்காக போட்டியிடுவது தொடர்பில் தான் கொண்டுள்ள ஐயப்பாட்டினை சமூகத்திற்கு விடுவித்துள்ளார். அவர் தோ்தலில் போட்டியிடுவாராயின் எந்த கட்சியிலிருந்து? தோ்தல் சின்னம் என்ன? ரணிலுக்கு மகிந்த ஒத்துழைப்பு வழங்குவாரா? போன்ற சிக்கல்கள் காரணமாக அவர் ஐயப்பாட்டுடனேயே இருக்கிறார். நீதிமன்றத்தினூடாக பிற்போட எடுத்த முயற்சிகள் இரண்டுமே உயர் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால் அரசியல் அமைப்புக்கான 22 வது திருத்தத்தை வர்த்தமானியில் பிரசுரித்து ஒரு குழப்பநிலையை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். இந்த அரசியலமைப்பு திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கு இரண்டு வாரங்கள் கழிய இடமளித்து, அடுத்த மூன்று வாரங்கள் நீதிமன்ற அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டு, அந்த மூன்று வாரங்களுக்கு பின்னர் நீதிமன்றத் தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டு, பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை நடாத்தி பாராளுமன்றத்தில் 2/3 வாக்குப்பலத்துடன் அங்கீகாரம் பெறப்படவேண்டும். அதன் பின்னர் மக்கள் தீர்ப்பொன்றுக்கு அழைப்பு விடுப்பதற்கு ஏதுவாக தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவேண்டும். இந்த செயற்பாங்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் ரணில் விக்கிரமசிங்க வீட்டுக்குச் செல்லவேண்டி நேரிட்டிருக்கும்.

AKD-JApan-Meeting

மக்கள் தீர்ப்புக்குச் செல்வதாயின் 1000 கோடி ரூபா செலவாகும். ஆனால் உயர்நீதிமன்றத்தினால் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என்பது ஏற்கெனவே உறுதிசெய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் மூன்று சந்தர்ப்பங்களில் வழங்கிய தீர்ப்புகள் மூலமாக பதவிக்காலம் ஐந்து வருடங்களே என்பது தீர்மானிக்கப்பட்டுவிட்டது. தேசிய மக்கள் சக்தியை சோ்ந்த நாங்கள் எந்தவொரு தேர்தலுக்கும் தயார். ஜனாதிபதி தேர்தல் உரிய வகையில் நடாத்தப்படும். ரணில் வீட்டுக்குச்செல்லவேண்டிநேரிடும். அவர் அமைதியாக வீட்டுக்குச் செல்வார். தலைவர்களை வீட்டுக்கு அனுப்புகின்ற முதலாவது தருணம் இதுவல்ல. எமது நாட்டில் நீண்டகாலமாக மக்கள் தலைவர்களை வீட்டுக்கு அனுப்பி புதிய தலைவர்களை கொண்டுவந்திருக்கிறார்கள். எனினும் இதுவரை மிகவும் சிறப்பாக சட்டம் அமுலாக்கப்படுகின்ற, ஒழுக்கம் நிலவுகின்ற, எந்தவொரு தொழிலையும் புரிபவருக்கு தரமான உணவுவேளையொன்றை பெற்றுக்கொள்வதற்கான இயலுமை கிடைப்பதைப்போலவே அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் நிறைவடைந்த ஒரு நாடு உருவாக்கப்படவில்லை. இன்று நிலவுவது நாங்கள் எதிர்பார்த்த அடிப்படை விடயங்களில் மிகவும் வறுமைப்பட்ட ஒரு நாடாகும். பொருளாதாரத்தில் மாத்திரமல்ல உளப்பாங்குகளில், சட்டத்தை அமுலாக்குவதில், சுற்றாடலை சுத்தமாக வைத்துக்கொள்வதில் வறுமைப்படுள்ளதோடு, குற்றச்செயல்கள் நிறைந்த, போதைப்பொருட்கள் நிறைந்த, மோசடி, ஊழல்கள், விரயங்கள் நிறைந்த ஒரு நாடு உருவாக்கப்பட்டுள்ளது. உலகத்திற்கு கடன் செலுத்திக்கொள்ள முடியாத அளவுக்கு நாடும் பிரஜைகளும் வறுமைப்பட்ட மிகவும் பாதகமான கடினமான வாழ்க்கை உரித்தாகிய மக்கள் இருக்கின்ற ஒரு நாடாக இலங்கை ஏன் மாறியது?

எஸ்.பீ. திசாநாயக்க கண்டியில் அறுபதாம் தசாப்தத்தில் கொரியாவும், சிங்கப்பூரும், வியட்நாமும் எம்மைவிட தாழ்ந்த மட்டத்தில் இருந்தாலும் இன்றளவில் அந்த நாடுகள் எம்மை விட உயர்ந்த மட்டத்தில் இருப்பதாக கூறினார். இந்தக்காலப்பகுதிக்குள் நாட்டை ஆட்சி செய்தவர்கள் யார்? 1970 இல் பாராளுமன்றத்திற்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ தற்போது 54 வருடங்களை கழித்திருக்கிறார். இங்கு குழுமியுள்ள பெறும்பாலானோரின் வயது 54 வருடங்களை விட குறைவானதாகும். பாராளுமன்ற உறுப்பினர் பதவி, அமைச்சர் பதவி, எதிர்கட்சி தலைவர் பதவி, பிரதமர் பதவி மற்றும் 10 வருடங்கள் ஜனாதிபதி பதவியையும் வகித்து மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொண்டு இருக்கிறார். ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வந்த 1977 இலிருந்து இதுவரை 47 வருடங்களாக இருக்கிறார். தினேஷ் குணவர்தன 1983 லேயே பாராளுமன்றத்திற்கு வந்தார். தற்போது 41 வருடங்களாகின்றன. நான் இங்கு குறிப்பிட்டது பிரதானமான மூன்று பேர்களின் விபரங்களேயாகும். அவர்கள் ஆட்சி செய்த ஐந்து தசாப்தங்களுக்கு கிட்டிய காலப்பகுதிக்குள் வியட்நாம், தென்கொரியா, சிங்கப்பூர் எம்மை விட மேலே உயர்ந்து நாங்கள் இருந்த இடத்தை விட கீழே இறங்கி வங்குரோத்து அடைந்துவிட்டோம். 1950 இல் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 316 மில்லியன் டொலர்களாகும். தென்கொரியாவின் ஏற்றுமதி வருமானம் 25 மில்லியன் டொலர்களாகும். இன்று எங்களின் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்களாகும். தென்கொரியாவில் 688 பில்லியன் டொலர்களாகும். வியட்நாம் 1980 இல் 400 மில்லியன் டொலர்களை ஏற்றுமதி வருமானமாக பெற்றது. அன்று இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1500 மில்லியன் டொலர்களாகும். ரணில் விக்கிரமசிங்காக்கள் அரசாங்கத்தை அமைத்துக்கொள்ள அண்மித்திருந்த காலத்தில் அந்த நிலைமையிலிருந்த இலங்கையில் தற்போது ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்களாக அமைகின்றபோது வியட்நாமில் 452 பில்லியன் டொலர்களாகும். உலகில் தோன்றியுள்ள புதிய மாற்றங்களுக்கு நேரொத்த வகையில் எமது நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைத்து முன்னெடுத்துச் செல்லவில்லை. பொருளாதார ரீதியாக சீரழிந்த ஒரு நாட்டில் ஒழுக்கம் நிலவமாட்டாது. அதைபோலவே குற்றச் செயல்கள் அற்ற ஒரு நாடு உருவாகவும் மாட்டாது. சாதகமான சமூகம் உருவாகவும் மாட்டாது பிறருக்கு மதிப்பளிக்கின்ற சமூகமொன்று உருவாகவும் மாட்டாது. சாதகமான சுற்றாடல் தொகுதியொன்று நிலவவும் மாட்டாது. நீங்கள் ஜப்பானின் பெரும்பாலான பண்புகள் பற்றி பேசி வருகையில் இலங்கை இந்த அரசியல் காரணமாகவே அனர்த்தத்திற்கு இலக்காகி இருக்கிறது. பழைய பாணியிலான அரசியல் கலாச்சாரம் காரணமாக பொதுமக்கள் இரவு விழுந்த கிடங்கில் பகலிலும் விழுகின்ற மட்டத்திற்கே 76 வருடங்களாக பயணித்துள்ளார்கள். 76 வருடகால இந்த பயணப்பாதையை நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து மாற்றியமைப்போம் என்ற செய்தியைக் கொடுக்கவே நாங்கள் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம்.

AKD-JApan-Meeting

அந்த அழிவுமிக்க பயணப்பாதையை மாற்றியமைப்பதற்கான மிகச் சிறந்த வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இதற்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியை சோ்ந்த நாங்கள் அதிகாரத்தை கோரினாலும் சமூகம் அதிகாரத்தை கொடுக்க தயார் நிலையில் இருக்கவில்லை. அதனால் நாங்கள் பாராளுமன்றத்தின் ரிமோட் கொன்ரோலை எங்களிடம் கொடுக்குமாறும் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் திறவுகோலை எங்களிடம் ஒப்படைக்குமாறும் வேண்டுகோள் விடுத்து இவ்வளவு தூரம் பயணித்திருக்கிறோம். கடந்த சில தசாப்தங்களில் மக்களின் சிந்தனைகள் பெருந்தொகையான கள்வர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்து அந்த கள்வர்களை பிடிப்பதற்காக ஜே.வி.பி. யின் மூன்று நான்கு பேரை அனுப்பிவைப்பதிலேயே இருந்தது. அரசாங்கம் தவறான வேலைகளை செய்யும்போது அவற்றை அம்பலத்திற்கு கொண்டுவர அவர்கள் இருந்தால் நல்லது எனும் எண்ணக்கருவே நிலவியது. எனினும் தற்போது மக்களின் மனங்களில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றை அமைக்கவேண்டும் என்பது நிலைகொண்டுள்ளது. எங்களுடைய தேவை இருக்கின்றதென்பதற்காக அதிகாரத்தை எடுத்துவிட முடியாது. அதனையொத்த தேவை மக்களின் பக்கத்திலும் உருவாக்க வேண்டும். நாங்கள் இதுவரை செய்தது தாக்குப்பிடித்துக் கொண்டிருப்பதேயாகும். 3% இற்கு வீழ்ந்தாலும் நாங்கள் பற்றிப்பிடித்துக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு சிலர் எமக்குக் கூறியது மக்களுக்கு தேவையில்லை என்றால் நீங்களும் கைவிட்டுவிட்டு வீட்டுக்கு போங்கள் என்றாகும். எனினும் நாங்கள் பற்றிப்பிடித்துக்கொண்டிருந்தோம். இன்று வடக்கு, தெற்கு என்கின்ற பேதமின்றி, சிங்கள,தமிழ்,முஸ்லிம் பேதமின்றி, உள்நாட்டில் வெளிநாட்டில் வசிக்கின்ற இலங்கையர் என்ற பேதமின்றி தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை கட்டியெழுப்ப வேண்டுமென்ற நிலைப்பாட்டிற்கு வந்திருக்கிறார்கள். எங்களிடமும் உங்களிடமும் கையளிக்கப்பட்டுள்ள செயற்பொறுப்பு அதனை வெற்றியை நோக்கி நெறிப்படுத்துவதாகும்.

எனினும் இந்த தோ்தல் இலங்கை வரலாற்றில் மிகவும் அசிங்கமான சம்பவங்கள் இடம்பெறுகின்ற தோ்தலாக அமையக்கூடும். இது வெறுமனே ஒரு எளிமையான தோ்தல் அல்ல. ஜனாதிபதி தோ்தல் 1982 இலிருந்து நடாத்தப்பட்டுள்ளது. எனினும் அத்தகைய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடத்துவார்களா இல்லையா என்கின்ற சந்தேகம் நிலவவில்லை. எனினும் இன்னமும் 19வது அரசியலமைப்பு திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஐயப்பாட்டு நிலைமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தோ்தல் அந்தளவிற்கு தனித்துவமானது என்பதாலேயே இன்னமும் ஐயப்பாட்டினை பேணிவருகிறார்கள். இந்த தோ்தலின்போது அரச அதிகாரத்தை பாரியளவில் பிரயோகிப்பதற்காக ரணில் விக்கிரமசிங்க மேலதிகமாக 875 கோடி ரூபாவை ஒதுக்கிக் கொண்டார். உறுமய கருத்திட்டம் முற்றாகவே அவருடைய தோ்தல் இயக்கம் ஒன்றாகும். அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 5000 ரூபாவினால் அதிகரிக்கப்போகிறார். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பணத்தை நாடுபூராவிலும் விரயமாக்கிக்கொண்டு மனுஷ நானாயக்கார இயங்கி வருகிறார். இளைஞர்கள் சேவைகள் மன்றத்திற்கு மேலதிகமாக 400 மில்லியன் அண்மையில் தோ்தல் வேலைகளுக்காக ஒதுக்கப்பட்டது. இலங்கை வரலாற்றில் ஒருபோதுமே இல்லாத வகையில் ஆளுநர்களின் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டார்கள். லக்ஷ்மன் யாப்பாவின் அனைத்து நியமனங்களையும் இரத்துச் செய்ய செயலாற்றிய தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு நாங்கள் நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறோம். அது மாத்திரமல்ல விரிவான ஊடக இயக்கமொன்றும் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு சில ஊடகங்கள் எம்மைக் குறிவைத்து தாக்குதல் நடாத்த தொடங்கியுள்ளன. எல்லாவற்றையும் விட உயரத்தில் இருப்பதாகக்கூறினாலும் ஒரு சிலர் அடியிலிருந்து இயங்கி வருவது புலனாகின்றது. இந்த நிலைமாற்றத்தை தடுப்பதற்காக அவர்களின் பக்கத்தில் இருந்து மேற்கொள்ளக்கூடிய எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளார்கள். மக்கள் எங்களுக்கு வழங்குகின்ற ஊக்கமும் நம்பிக்கையுமே தேசிய மக்கள் சக்தியின் வலிமையும் எதிர்பார்ப்புமாக அமைகின்றது. அதன் அடிப்படையில் வெற்றியை நோக்கி எங்களால் நெறிப்படுத்த முடியும். நிச்சயமாக எங்களால் வெற்றிபெற முடியும்.

AKD-JApan-Meeting

எங்கள் நண்பர்களும் வாழ்த்துக்கூறுபவர்களும் எங்களுடைய உயிர் பாதுகாப்பு பற்றி குறிப்பாக பேசுகிறார்கள். அவ்வாறான சந்தேகம் ஏற்பட இது எப்படிப்பட்ட சமூகம்? எவராவது அபேட்சகர் ஒருவரை சகித்துக்கொள்ள முடியாமல் கொலை செய்யப்படுவார் என்கின்ற சந்தேகம் எழுமாயின் நாங்கள் உயிர்வாழ்வது எப்படிப்பட்ட ஒரு நாட்டில்? தனிப்பட்ட முறையில் எங்களுடைய பாதுகாப்பு அல்ல பிரச்சினை, அத்தகைய ஒரு சிந்தனை ஏற்படுகின்ற ஒரு சமூகம் இருப்பது எவ்வளவு பயங்கரமானது? அத்தகைய உணர்வு ஏற்படுகின்ற பின்னணியே இந்த ஆட்சியாளர்களை விரட்டியடிக்க போதுமானது. தம்மால் இணங்க முடியாத தலைவர் ஒருவர் ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக அவரை படுகொலை செய்யவேண்டுமென்ற சிந்தனை உருவாகுமானால் அதற்கு பின்னால் இருக்கின்ற எமது நாட்டின் அரசியல் எவ்வளவு பயங்கரமானது? எல்லா விதத்திலும் செல்வம் கொழிக்கின்ற ஒரு நாட்டை உருவாக்குவதற்காகவே நாங்கள் வெற்றிபெற வேண்டும். பொருளாதார ரீதியாக, உளப்பாங்கு ரீதியாக, சட்டத்தின் ஆட்சியில் வெற்றிபெற்ற, ஒருவரையொவர் மதிக்கின்ற, இயற்கை சுற்றாடல் நிறைந்த ஒரு நாட்டை, உலகின் நவீனமான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்தினை உறிஞ்சி எடுத்துக்கொள்வதில் வெற்றிபெற்ற ஒரு நாட்டை நாங்கள் உருவாக்கவேண்டும். தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு உலகத்தில் எந்தவொரு நாட்டுடனும் சரிசமமாக நிற்கக்கூடிய ஒரு தேசத்தை உருவாக்குவதாகும்.

நாங்கள் எந்த இடத்தில் ஆரம்பிக்க வேண்டும்? ஒருவருக்கொருவர் இடையில் சந்தேகம், அவநம்பிக்கை, வன்மம், குரோதத்தை வளர்த்தெடுத்ததால் முன்னேற்றமடைந்த ஒரு தேசம் உலகில் இல்லை. அவை மூலமாக வறிய நாடுகள் மாத்திரமே உருவாக்கப்படும். எமது நாட்டில் தேசிய ஒற்றுமையை உருவாக்குவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதானமான பணிகளின் ஒன்றாகும். பிரதானமாக பேசப்படுகின்ற இரண்டு மொழிகளும் நான்கு மதங்களை பின்பற்றுகின்ற மக்களும் எமது நாட்டில் இருக்கிறார்கள். தமிழ் இந்துக்களின் கலாச்சாரம், சிங்கள பௌத்தர்களின் கலாச்சாரம், முஸ்லிம் இஸ்லாமியர்களின் கலாச்சாரம் ஆகிய பன்வகைமை நிறைந்த ஒரு நாடு கலாச்சாரத்துறையில் நிலவுகின்றது. பன்வகைமையை ஏற்றுக்கொண்டு ஒருவரை ஒருவர் மதித்து முன்னோக்கி நகர்கின்ற ஒரு நாட்டை உருவாக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்காக எடுக்கின்ற பிரயத்தனத்தை அந்த ஒற்றுமை உருவாகியிருக்கிறது. கடந்த காலத்தில் பிறருக்கு எதிரான அரசியலில் ஈடுபடுவதன் மூலமாகவே அரசாங்கங்கள் உருவாக்கப்பட்டன. 2019 இன் தோ்தலாது முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டியெழுப்பப்பட்ட மாபெரும் ஆழிப்பேரலையாகும். கோட்டாபய அந்த பேரலை மூலமாகவே அதிகார பீடத்திற்கு கொண்டுவரப்படுகிறார். பேருவளை, அளுத்கம பிரதேசங்களில் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வசித்தாலும் மொட்டுக்கட்சியின் வேட்பு மனுவில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இருக்கவில்லை. தேசிய மக்கள் சக்தி மீது பெரும்பான்மை சிங்கள மக்கள் நம்பிக்கை வைத்திருந்தாலும் அப்படிப்பட்ட அரசாங்கமொன்றை நாங்கள் அமைப்பதில் பயனில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கை, முஸ்லிம் மக்களின் நம்பிக்கை உள்ளிட்ட பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையைக் கொண்டதாக தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை அமைத்திடவேண்டும். கட்டியெழுப்பப்படுகின்ற ஆட்சிக்குள்தான் ஒற்றுமை என்பது உருவாகும். இந்த முயற்சியூடாக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையால் கட்டியெழுப்பப்படுகின்ற அரசாங்கமொன்று வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்ற பேதமின்றி அனைவரதும் அரசாங்கமொன்று உருவாக்கப்படும். நாங்கள் அரசாங்கமொன்றை அமைப்பதற்குள்ளேயே ஒற்றுமை கட்டி வளர்க்கப்படும். எமது தலைமுறையினர் பெருநிலம் நனையும் அளவிற்கு இரத்தமும் கண்ணீரும் பாய்ந்து செல்கின்ற யுத்தமொன்றை புரிந்துள்ளது. எங்களுடைய பிள்ளைகளின் தலைமுறையினருக்கு ஒற்றுமையைக் கொண்ட ஒரு தேசத்தை கட்டியெழுப்புவது தேசிய மக்கள் சக்தியின் பிரதானமான பணியாகும்.

AKD-JApan-Meeting

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கின்ற எண்ணக்கரு இருந்தாலும் பணமும் பலமும் படைத்தவர்கள் சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறார்கள். வறிய, பலவீனமானவர் தண்டிக்கப்படுகிறார். சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்ற நிலைமையை உருவாக்குகின்ற ஆட்சியை தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்கும். அதனை எங்களால் மாத்திரமே சாதிக்க முடியும். சட்டத்திலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், முறையற்ற வகையில் செல்வத்தை ஈட்டுபவர்கள் எங்களுடன் இல்லை. பலம் பொருந்திய ஒரு நாட்டை கட்டியெழுப்புகையில் வினைத்திறன் மிக்க அரச சேவையொன்று எமக்கு அவசியமாகின்றது. இன்று அரச சேவையிலிருந்து கருமம் ஒன்றை ஈடேற்றிக் கொள்ள செல்பவரும் அரச ஊழியரும் ஆகிய இரு சாராருமே திருப்தியடைந்தவர்களாக இல்லை. பதவியுயர்வு, இடமாற்றம், ஆட்சோ்ப்பு முற்றாகவே அரசியலின் பிடிக்குள் கட்டுப்பட்டுள்ளது. அரசியல் அதிகார நிலையின் இரையாக மாற்றப்பட்டுள்ள அரச சேவையை புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வினைத்திறன் மிக்க உயர்வான அரசசேவையாக மாற்றிடுவோம்.

அதைபோலவே உலகின் ஏனைய நாடுகளுடன் சமாந்திரமான அங்கீகரிப்பினை பெறுகின்ற நாடாக மாற்றியமைக்க வேண்டும். இன்று எமது நாட்டின் பாஸ்போர்ட் ஹய்ட்டி போன்ற நாடுகளின் நிலைமைக்கு இழுத்துப் போடப்பட்டுள்ளது. உலகத்தின் முன்னிலையில் கொச்சப்படுத்தப்பட்டுள்ள இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சிந்திப்பது தமக்கு கிடைக்கின்ற முதலாவது சந்தர்ப்பத்திலே நாட்டிலிருந்து வெளியேறுவதேயாகும். உலகின் முன்னிலையில் அபகீர்த்தியடைந்துள்ள நிலையிலிருந்து மீட்டெடுத்து மதிப்பளிக்கப்படுகின்ற ஒரு நாடாக இலங்கையை மாற்றியமைப்பது தேசிய மக்கள் சக்தியின் முதன்மை பணியாகும். உலகத்தார் முன்னிலையில் எமது நாட்டை அபகீர்த்திக்குள்ளாக்க பங்களிப்புச் செய்த பசில் ராஜபக்ஷவின் கடவுச்சீட்டு அமெரிக்கன் கடவுச்சீட்டாகும். எம்மால் தீர்த்துவைக்கப்படவேண்டிய சமூக பிரச்சினைகளுக்கு விடையளிக்கையில் முதலில் பொருளாதார நிலைமாற்றமொன்று அவசியமாகின்றது. நானோ எமது கட்சியின் உயர் பீடங்களில் இருக்கின்ற எவருமோ வியாபாரத்தில் ஈடுபடபோவதில்லை. ஹோட்டல்களை நிறுவ, பார்களை திறக்க, மணல் கரைசோ்க்க, கல்லுடைக்க, சுற்றுலா ஹோட்டல்களை அமைக்க, பெற்றோல் ஷெட் போட நாங்கள் எவருமே வரப்போவதில்லை. பொருளாதாரத்தின் ஒரு சில செயற்பாடுகளை நெருங்கிய குழுக்களின் கைகளில் சிறைப்படுத்துகின்ற பொருளாதார சனநாயகத்தை இல்லாதொழிப்போம். இலங்கையின் பொருளாதாரத்தை புதிய உற்பத்தி பொருளாதாரமொன்றின் பால் ஆற்றுப்படுத்துவதற்காக இருக்கின்ற அனைத்து சாத்திய வளங்களையும் மதிப்பீடு செய்து முறைப்படி ஈடுபடுத்துவோம். மின்சாரம், நீர், கப்பற் கைத்தொழில், IT தொழில்நுட்பம் போன்ற சேவைகளை வழங்குகின்ற சாத்திய வளங்களை முறைப்படி பயன்படுத்துவோம். எமது மனித வளத்தை முறைப்படி நெறிப்படுத்தக்கூடிய புதிய கல்விசார் மாற்றங்களை ஏற்படுத்துவோம். பல துறைகளில் ஒருங்கிணைந்த முகாமைத்துவ ஆற்றல்களை உறிஞ்சி எடுத்த தேசிய திட்டமொன்றின் பேரில் நெறிப்படுத்துவோம். இவ்விதமாக நாட்டை கட்டியெழுப்புவதற்காக தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக நீங்களும் உங்கள் நண்பர்கள் உறவினர்களை ஊக்குவித்து தோ்தலுக்காக அணிதிரளுங்கள். உங்கள் சமூக வலைத்தள கணக்குகளூடாக அவர்களை விழிப்படைய செய்வியுங்கள். அத்தோடு நின்று விடாமல் தோ்தல் நெருங்கும்போது இலங்கைக்கு வருகை தாருங்கள். நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து இந்த அழிவினை தோற்கடிப்பதற்காக முனைப்பாக இடையீடு செய்வோம்.

AKD-JApan-Meeting

சபையிலிருந்து முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள்

கேள்வி: ஆட்சியாளர்கள் இதுவரை புரிந்த தவறுகள் தொடர்பில் உங்களுடைய ஆட்சியின் கீழ் எவ்வாறு செயற்பட போகிறீர்கள்?

பதில்: எங்களிடம் எவரையும் பழிவாங்கும் நோக்கம் கிடையாது. அந்த எவர் தொடர்பிலும் எங்களுக்கு தனிப்பட்ட பகைமையும் கிடையாது. மக்களின் சொத்துக்களை கோடிக்கணக்கில் கொள்ளையடித்ததாலேயே எமது நாடு இவ்வளவு வறிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் மருந்து இல்லாமல் ஒரு தாய் இறப்பதாயின், உணவு இல்லாமல் பிள்ளை ஒன்று இறக்குமாயின், தனது பச்சிளம் குழந்தையை தனியாக விட்டுவிட்டு வெளிநாடு செல்லவேண்டிய நிலை ஏற்படுமாயின், அவை அனைத்தும் ஏற்பட்டிருப்பது மக்களின் பணத்தை அவர்கள் கொள்ளையடித்ததாலேயே. அது தொடர்பில் நிச்சயமாக அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். அவரிடம் எல்லா தகவல்களும் இருப்பதாகவும் என்னிடம் வெற்றுக்கோப்புகளே இருக்கின்றதெனவும் ரணில் விக்கிரமசிங்க கடந்த தினம் ஒன்றில் கூறினார். ஊழலை கட்டுப்படுத்துவதற்கான செயலகத்திற்கு பெருமளவிலான முறைப்பாடுகள் கிடைத்தன. பழைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் செயலாற்றத் தொடங்கிய சந்தர்ப்பத்தில் புதிய முறைப்பாடுகள் வரத்தொடங்கின. அவை மத்தியில் ரவி கருணாநாயக்க சம்பந்தமாக பிராடோ ஊர்தி மோசடி சம்பந்தமான முறைப்பாடொன்றும் வந்தது. வெளிநாடுகளிலிருந்து கறவைப்பசுக்களை கொள்வனவு செய்தல் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் மோசடிகள் பற்றி பி. ஹரிசனுக்கு எதிராக முறைப்பாடுகள் வந்தன. காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணி மோசடிகள் பற்றியும் முறைப்பாடுகள் வந்தன.

பழைய முறைப்பாடுகள் தொடர்பில் செயலாற்றிக்கொண்டிருக்கையில் புதிய முறைப்பாடுகள் வந்து குவிந்தமையால் ரணில் விக்கிரமசிங்க இந்த அலுவலகத்தை மூடிப்போட்டார். அது மாத்திரமல்ல, ரணில் விக்கிரமசிங்க சம்பந்தமான முறைப்பாடுகளும் வந்தன. ரணில் விக்கிரமசிங்க பற்றிய இரண்டு கோப்புகளை உள்ளிட்ட அனைத்து முறைப்பாடுகளும் பற்றிய தகவல்கள் என்னிடம் இருக்கின்றன. அவர்களை சட்டத்தின் முன் கொண்டு செல்வதோடு கையகப்படுத்தக்கூடிய அனைத்து ஆதனங்களையும் கையகப்படுத்துவோம். ஊழல் மோசடி மாத்திரமல்ல கால ஓட்டத்திலே மூடி மறைக்க முயற்சித்த பல குற்றங்களும் இருக்கின்றன. லசந்த விக்கிரமதுங்க, தாஜுடீன், எக்நெலிகொட போன்ற படுகொலைகளும் அரசியல் சூழ்ச்சிக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டமை போன்ற குற்றச் செயல்கள் சம்பந்தமாகவும் முறையான விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்துவோம். பரப்பரப்பினை ஏற்படுத்திய குற்றச் செயல்கள் பற்றி விசாரணைகளை மேற்கொண்ட ஷாணி அபேசேகர மற்றும் ரவி செனெவிரத்ன போன்றவர்கள் தேசிய மக்கள் சக்தியின் இளைப்பாறிய பொலிஸ் கூட்டமைவின் பிரதானிகளாக இருக்கிறார்கள். அவர்களை பழிவாங்கலுக்கு இலக்காக்கினார்கள். எங்களுடைய நாட்டின் பாதாள உலகத்தை அரசியல்வாதிகளே நெறிப்படுத்துகிறார்கள். அவை அனைத்தும் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவோம்.

கேள்வி: முதலீடுகளை இலங்கைக்கு கொண்டு வருகின்ற சந்தர்ப்பங்களில் இதுவரை இடம்பெற்று வருகின்ற மிகப் பெரிய கொமிஸ் தொகை கோரல்களை நிறுத்த முடியுமா?

பதில்: எந்தவொரு தொழில் துறையும் முறையான சாத்திய வளங்களை கொண்டுள்ளதாவென ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். அதன்படி ஆக்கவிளைவுமிக்க எந்தவொரு கருத்திட்டத்திற்கும் ஒரு கிளாஸ் பச்சை தண்ணீர் கூட வாங்கிக் கொள்ளாமல் முதலீடுகளை ஈடுபடுத்துவோம். எத்தனை தொழில்கள் உருவாக்கப்படும்? எந்தளவு ஏற்றுமதி வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும்? எந்தளவுக்கு எங்களுடைய வளங்களை பயன்படுத்திக் கொள்வதில் வெற்றி பெறுகிறோம்? ஆகிய விடயங்களை உறுதி செய்து கொள்வது மாத்திரமே எமக்கு தேவை. இலங்கையில் ஒரு சீனிக் கம்பெனி வீசியெறியப்படுகின்ற கரும்பு கழிவுகளிலிருந்து மின்சாரத்தைப் பிறப்பிக்க தொடங்கியது. அந்த மின்சார உற்பத்தி அவருடைய தொழிற்சாலையின் தேவையை விட அதிகமானதாகும். மேலதிகமான அந்த மின்சாரத்தை தேசிய முறைமையுடன் சோ்த்துக்கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கான அமைச்சருடன் பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டது. அமைச்சரின் முன்மொழிவாக அமைந்தது யாதெனில் அமைச்சரின் மருமகனின் கம்பெனியொன்றை நிறுவி அந்த கம்பெனிக்கே வழங்கி அதனூடாக தேசிய முறைமைக்கு வழங்குவதாகும். அதைபோலவே நீங்கள் கூறியவாறு கழிவுப்பொருள் மீள்சுழற்சிக்காக வந்தவர்களிடம் அமைச்சர் தொழில் முயற்சியிலிருந்து 50% ஐ அவருக்கு கொடுக்குமாறு கூறியிருந்தார். அதனால் மக்களின் தேவையும் ஆட்சியாளின் தேவையும் ஒரே இலக்காக அமைகின்ற ஆட்சியொன்றை நாங்கள் நிறுவுவோம். பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்வதற்காகவே அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டார்கள். நாங்கள் மக்களின் நோக்கங்களும் ஆட்சியாளனின் நோக்கங்களும் ஒன்றாக அமைகின்ற ஆட்சியை நிறுவிக்கொள்வோம்.

கேள்வி: உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலில் எனது கணவரும் இரண்டு மகள்மார்களும் இறந்தார்கள். நான் மாத்திரம் காயங்களுடன் உயிர் பிழைத்தேன். இன்றைக்கு அந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ஐந்து வருடங்களும் மூன்று மாதங்களும் கழிந்துள்ளன. அது சம்பந்தமாக நான் நிதிரீதியான நட்டஈட்டினை எதிர்பார்ப்பதில்லை. அதற்கான நீதி எவ்வாறு நிலைநாட்டப்படும்?

பதில்: கேட்டுக்கொண்டிருக்க முடியாத ஒரு உணர்வு அது தொடர்பில் எனக்கிருக்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று சில நாட்களுக்கு பின்னர் நான் ஒரு கூற்றினை வெளியிட்டேன். வேட்டையாடிச் செல்வது யார் என்று பார்த்தால் துப்பாக்கியை கட்டியவர் யாரென அறிந்து கொள்ள முடியுமென. தாக்குதலை மேற்கொண்ட சந்தர்ப்பத்திலும் அந்த சந்தேகம் எமக்கிருந்தது. அதன் பின்னர் பாராளுமன்ற தெரிகுழு, ஜனாதிபதி ஆணைக்குழு அதைபோலவே மேலும் விசாரணை நிறுவனங்கள் இது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டன. விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டாலும் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டிய ஒரு சில இடங்கள் எஞ்சியுள்ளன. வவுணதீவில் படுகொலை செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றிய விசாரணைகள் முறைப்படி மேற்கொள்ளப்பட்டிருந்தால் சஹரானின் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றிருக்க மாட்டாது. எனினும் அந்த விசாரணைகளை மாஜி எல்.ரி.ரி.ஈ. யின் உறுப்பினர் ஒருவர் மீது திசை திருப்பினார்கள். மற்றுமொரு பக்கத்தில் ஏப்ரல் 04 ஆம் திகதி தாக்குதலை நடாத்துதல் பற்றிய தகவல்கள் வந்திருந்தன. ஏப்ரல் 09 ஆம் திகதி தாக்குதலை நடத்துபவர் யார் என்ற தகவல்கள் வந்திருந்தன. ஏப்ரல் 20 ஆம் திகதி நாளைய தினம் தாக்குதல் நடாத்தப்படும் என்ற தகவல் வந்திருந்தது. ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 7.00 மணிக்கு தாக்குதல் நடாத்தப்படப்போகின்ற இடங்கள் பற்றிய தகவல்கள் வந்தன. இந்த தகவல்களை நன்றாக புலனாய்வு செய்தால் அதனை தடுப்பதற்கு அத்தியாவசியமான தகவல்கள் சில கிடைக்கவில்லை என்பது புலனாகின்றது. கிட்டிய ஒருவர் தகவல்களை வழங்கினாலும் பாணந்துறை பிரதேசத்தின் வீடொன்றிலிருந்து தாக்குதல் நடாத்துவதற்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தமைக்கான தகவல் கிடைத்திருக்கவில்லை. தாக்குதலுக்கு அவசியமான பொருட்கள் பத்தரமுல்ல பிரதேசத்திலிருந்து கொள்வனவு செய்யப்பட்டமை பற்றிய தகவல்கள் கிடைப்பதுமில்லை. அப்படியானால் தாக்குதல் பற்றிய தகவல்களை கொடுத்தவர் யாரென கண்டறியவேண்டும். மூன்றாவதாக தாஜ் சமுத்ரா ஹோட்டலிலிருந்து வந்த ஜமீல் குண்டை வெடிக்கச் செய்யாமல் திரும்பிச் சென்றார். அவர் தெஹிவள பிரதேசத்தில் குண்டை வெடிக்கச் செய்விக்க முன்னர் இராணுவ உளவுப்பிரிவு ஜமீலின் வீட்டிற்கு சென்றது. அது எவ்வாறு இடம்பெற்றதென கண்டுபிடிக்க வேண்டும். தாக்குதலுக்கு பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு அதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டவர் யாரென்பதையும் கண்டுபிடிக்க வேண்டும். மாத்தளையிலிருந்த பொடி சஹரானை நெறிப்படுத்திய ஒருவர் பொறுப்பினை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிடம் ஏற்றுக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார். அவ்வாறு பேசியவர் யாரென்பதை கண்டுபிடிக்க வேண்டும். கட்டுவாப்பிட்டியவில் குண்டினை வெடிக்கச் செய்வித்தவரின் மனைவி இறக்கவில்லை என்பது இரண்டு டி.என்.ஏ. பரிசோதனைகள் மூலமாக அம்பலமாகியது. மூன்றாவது பரிசோதனையில் அவர் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலமாக வெளிப்பட்ட இந்த விடயங்களை சரியாக தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

வெடிமருந்துகளை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக போக்குவரத்து செய்கையில் வாகனத்தை பரிசோதனை செய்யவேண்டாமென பணிப்புரை விடுத்தது யாரென்பதை கண்டறியவேண்டும். நீண்டதொரு விசாரணையல்ல, இந்த சிக்கல்களை தீர்த்துக்கொண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவோம். அதைபோலவே தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகம் மீது சந்தேகத்துடனும் வன்மத்துடனும் நோக்குகின்ற நிலைமை உருவாக்கப்பட்டது. கர்தினால் ஆண்டகையின் இடையீடு இடம்பெற்றிராவிட்டால் எமது நாடு பாரிய தீப்பிழம்பாக மாறியிருக்கும். வேதனைகளுக்கு இலக்கானவர்களின் பொறுப்பினை கர்தினால் ஆண்டகை ஏற்றுக்கொண்டு செயலாற்றியமை தொடர்பில் இன்றும் நாங்கள் நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் அந்த பொறுப்பினை ஏற்றுக்கொண்டமைக்காக இன்று அவர் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த சகோதரியை இந்த பிரச்சினை மிகவும் பாதித்துள்ளதை போன்றே சமூகத்திற்கும் அவ்விதமான உணர்வினையே ஏற்படுத்தியுள்ளது. அரசியல் அதிகாரத்திற்காக இத்தகைய திட்டமிட்ட தாக்குதல்களை நடத்துவது மிகவும் பாரதூரமானது. அதைபோலவே தாக்குதல்களை தடுத்து நிறுத்தவேண்டியவர்களே தாக்குதலை திட்டமிடுபவர்களாக அமைந்தால் நாளைய தினமும் நாங்கள் பாதுகாப்பற்றவர்களே. அதனால் இந்த தாக்குதல் காலத்தினால் அல்லது வரலாற்றினால் அல்லது கண்ணீரினால் முற்றுப்பெற இடமளித்தலாகாது. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றின் கீழ் இந்த அத்தனை தகவல்களையும் நாங்கள் வெளிப்படுத்துவோம். இவ்வாறான அனர்த்தமொன்று மீண்டும் ஏற்படாதிருக்க இதற்கு பொறுப்புக்கூறவேண்டியவர்களை தராதரம் பாராமல் சட்டத்தின் முன் கொண்டு வருகின்ற பொறுப்பினை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

கேள்வி: இலங்கையின் நிர்மாணத்துறையின் செயலாற்றக்கூடியவர்கள் ஜப்பானில் இருக்கிறார்கள். இப்போது இருக்கின்ற கயிற்றுப்பாலமல்ல, அவர்களை எமது நாட்டுக்கு வரவழைத்துக்கொள்ளக்கூடிய சக்திவாய்ந்த பாலத்தை அமைத்துக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பதில்: ஒரு சில துறைகளுக்கு அவசியமான மூலதனம் எம்மிடம் கிடையாது. ஒரு சில துறைகளுக்கு அவசியமான தொழில்நுட்பம் எம்மிடம் கிடையாது. மூலதனத்தையும் தொழில்நுட்பத்தையும் நாட்டுக்குள்ளே கொண்டு வந்து முதலீடு செய்வதன் மூலமாக பெற்றுக்கொள்கின்ற இலாபத்தில் நியாயமான ஒரு பங்கினை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுங்கள். எங்களுடைய வரிக்கொள்கைகளிலும் தனியார்துறையை பங்கேற்கச் செய்வதற்கான கோட்பாடு அதுவாகும்.

கேள்வி: நான் இலங்கை இராணுவத்தின் விசேட அதிரடிப் படையணியில் முனைப்பாக செயலாற்றிய வேளையில் ஊனமுற்ற ஒரு சிப்பாய். எனக்கு இப்போது ஜப்பானின் பிரஜாவுரிமை இருக்கிறது. எனினும் யுத்தத்தினால் ஊனமுற்ற 12,000 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சொச்சத் தொகையை ஓய்வூதியமாக பெற்று வசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவ்வாறான ஊனமுற்றவர்களுக்காக உங்களுடைய ஆட்சியின் கீழ் கடைப்பிடிக்கின்ற வழிவகை என்ன?

பதில்: ஆகஸ்ட் 04 ஆம் திகதி இளைப்பாறிய முப்படை கூட்டமைவின் தேசிய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த துறைகளில் உள்ளவர்கள் எதிர்நோக்குகின்ற சிக்கல்கள் பற்றி ஆராய்ந்து கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் சம்பந்தமாக எடுக்கின்ற தீர்மானங்கள் பற்றி 04 ஆம் திகதி வெளிப்படுத்த இருக்கிறோம்.

……………………………………………….

இந்த மக்கள் சந்திப்புக்காக தொழில் முயற்சியாளர்கள், தொழில்வாண்மையாளர்கள் போன்றே பெருந்தொகையான புத்திஜீவிகள் பங்கேற்றதோடு அவர்களை பிரதிநிதித்துவம் செய்து பேராசிரியர் ஸ்ரீகாந்த ஹேரத், பேராசிரியர் கீர்த்தி எச். குருகே, ஜப்பான் தேசத்தவரான சந்தவா மெஹெருமசா, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாணவர் சங்கத்தின் ஜப்பான் பிரதிநிதி யோனிக் ஹான்ஸ், ஜப்பானின் இலங்கை தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க, சௌரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் தலைவர் ஜயந்த ஹெட்டியாராச்சி, சோவியத் ரஷ்யாவின் லுமும்பா நட்புறவுச் சங்கத்தின் தலைவர் இளைப்பாறிய இராணுவ பிரிகேடியர் மொஹமட் சனுய் இஸ்ருப், மீடியா ஸ்கிறீன் எஞ்ஜினியரின் நிறுவனத்தின் முகாமையாளர் கலாநிதி தம்பிக்க மான்னக்கார, ஜப்பான் – ஸ்ரீ லங்கா தேசிய பேரவையின் தலைவர் ருக்மன் ஸ்ரீலால் வடுதந்திரி, பி.எச். குலோபல் டிரேடிங் நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ குணசேன, நயோசா ருச்சிரன் டிரேடர்ஸ் தலைவர் நெவில் ஹெந்தா விதாரண, அறிஸ்டா ஜப்பான் நிறுவனத்தின் தலைவர் விஷ்மி இஸ்மயில், சிகா சிங்கராஜ தொழில் முயற்சியின் அதிபதி கமல் காரியவசம், தேசிய மக்கள் சக்தியின் கியோட்டோ கிளையின் லக்மினி களு ஆராச்சி, பெஸ்போன்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் அஜுவட், தேசிய மக்கள் சக்தியின் நகொயா கிளையின் சானக சம்பத், தேசிய மக்கள் சக்தியின் கியோட்டோ கிளையின் ஆனந்த, என்.கே.ஆர். எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் தலைவர் குமார குணதிலக ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைத்தனர்.

Show More

ஜப்பானுக்கு அநுர

(-Colombo, July 19, 2024-) எதிர்வரும் இரு நாட்களில் ஜப்பானில் வாழ்கின்ற இலங்கையர்களுடனான சந்திப்பு மற்றும் தொழில்வாண்மையாளர்களுடனான சந்திப்பு ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஜப்பானில் Narita சர்வதேச விமானநிலையத்தில் இலங்கையர்களால் வரவேற்றப்பட்ட தருணம்…

(-Colombo, July 19, 2024-)

எதிர்வரும் இரு நாட்களில் ஜப்பானில் வாழ்கின்ற இலங்கையர்களுடனான சந்திப்பு மற்றும் தொழில்வாண்மையாளர்களுடனான சந்திப்பு ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஜப்பானில் Narita சர்வதேச விமானநிலையத்தில் இலங்கையர்களால் வரவேற்றப்பட்ட தருணம்…

AKD-Japan
Show More

“தேர்தலுக்காக நிறைவேற்று அதிகாரத்தை முறைகேடாக பாவிப்பதை தடுக்கவேண்டியது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.” -தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி-

(-தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.07.19-) கடந்த 17 ஆந் திகதியிலிருந்து சனாதிபதி தேர்தலுக்காக செயலாற்றுவதற்கான அரசியலமைப்பு ரீதியான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்திருந்தபோதிலும் ரணில் விக்கிரமசிங்கவின் பிம்பத்தைக் கட்டியெழுப்புவதற்காக சனாதிபதி அதிகாரம், உத்தியோகத்தர்கள், பொதுப்பணம் செலவிடப்பட்டு பல்வேறு கருத்திட்டங்கள் இடையறாமல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரச நிதிகளின் முறைகேடான பாவனையை தடுத்து உண்மையான மக்கள் அபிப்பிபராயம் சித்தரிக்கப்படுவதற்கான ஊழல்மிக்க முறைமையில் மாற்றமொன்றைக் கொண்டுவருவதற்காகவே 2022 போராட்டத்தின்போது மக்கள் வீதியில் இறங்கினார்கள். எனினும் இன்றும் சிதைந்துபோன […]

(-தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.07.19-)

npp-press-sunil

கடந்த 17 ஆந் திகதியிலிருந்து சனாதிபதி தேர்தலுக்காக செயலாற்றுவதற்கான அரசியலமைப்பு ரீதியான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்திருந்தபோதிலும் ரணில் விக்கிரமசிங்கவின் பிம்பத்தைக் கட்டியெழுப்புவதற்காக சனாதிபதி அதிகாரம், உத்தியோகத்தர்கள், பொதுப்பணம் செலவிடப்பட்டு பல்வேறு கருத்திட்டங்கள் இடையறாமல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரச நிதிகளின் முறைகேடான பாவனையை தடுத்து உண்மையான மக்கள் அபிப்பிபராயம் சித்தரிக்கப்படுவதற்கான ஊழல்மிக்க முறைமையில் மாற்றமொன்றைக் கொண்டுவருவதற்காகவே 2022 போராட்டத்தின்போது மக்கள் வீதியில் இறங்கினார்கள். எனினும் இன்றும் சிதைந்துபோன ரணிலின் பிம்பத்தைக் கட்டியெழுப்புவதற்காக கருத்திட்டங்கள் அமுலாக்கப்பட்டு வருகின்றன. சமுதாய பொலிஸ் குழுக்களை அரசியலாக்குகின்ற நோக்கத்துடன் ஒன்றுசேர்த்து வருகிறார்கள். இந்த கூட்டங்களுக்காக பொலி்ஸ் வெகுமதிகள் நிதியத்தை முறைகேடாக பாவிப்பதோடு சுற்றறிக்கைகள் ஊடாக வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகத்தை ஈடுபடுத்துவதற்காக வெளிநாடு சென்றுள்ள உழைப்பாளிகளின் நிதியங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு மேலதிகமாக இளைஞர் அலுவல்களுக்காக பணம் கிடையாதெனக் கூறுகின்ற அதேவேளையில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணத்தை பலவிதங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளக்காக பிரயோகித்து வருகிறார்கள்.

நிதிசார் முறைகேடான பாவனையைத் தடுப்பதற்காக விரிவான மக்கள் அபிப்பிராயமொன்று அவசியமாகின்றது. ஏறக்குறைய 200 கோடி ரூபா பணத்தை சனாதிபதி செலவுத் தலைப்பிலிருந்து ஒதுக்கி சட்டபூர்வ உத்தரவாதமற்ற உறுதிகளை வழங்குகின்ற வைபவங்களை நடாத்தி வருகிறார்கள். வருடத்தின் தொடக்கத்தில் சனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தொகையைவிட பெருமளவிலான பணத்தை குறைநிரப்பு மதிப்பீடுகளிலிருந்து பெற்றுக்கொள்வதோடு வேறு செலவுத் தலைப்புகளைக்கூட பாவிக்கின்ற முன்மொழிவுகள் பாராளுமன்றத்தில் அங்கீகரித்துக் கொள்ளப்பட்டுள்ளன. 2024 சனாதிபதி செலவுத் தலைப்புக்காக 6607 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கையில் மேலும் 8758 மில்லியன் ரூபாவை ஒதுக்கிக்கொண்டு தேர்தல் செயற்பாங்கிற்காக ஈடுபடுத்தி இருக்கிறார்கள். இன்னமும் ஒரு வேட்பாளராக உத்தியோகபூர்வமாக பெயர்குறிக்கப்பட்டிராத நிலைமையின்கீழ் பொதுப்பணத்தைப்போன்றே உத்தியோகத்தர்களையும் ஈடுபடுத்தி உள்ளார்கள். தேர்தல் சம்பந்தமாக திகதியொன்று ஆணைக்குழுவினால் பிரகடனஞ் செய்யப்பட்ட பின்னர் அதிகாரத்தை துர்ப்பிரயோகம்செய்து பிரச்சார அலுவல்களுக்காக ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளார்கள். அதற்கெதிராக மக்கள் மற்றும் அரசியல் கட்சி என்றவகையில் நாங்கள் இடையீடு செய்வதோடு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் பாரிய பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது.

npp-press-sunil

“பிணைமுறி மோசடி மற்றும் உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான இரண்டு கோப்புகள் இருக்கின்றன என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் வசந்த சமரசிங்க-

தேர்தல் நெருங்கும்பொதது அரச வளங்கள் முறைகேடாக பாவிக்கப்படுவதைப்போன்றே அரச சொத்துக்களை சொச்சத்தொகைக்கு விற்றுத்தீர்த்து கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளித்தும் வருகிறார்கள். இன்று இந்த நேரத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் கலகமடக்கல் பிரிவைச் சேர்ந்தவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளார்கள். தமது பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள்வதற்காக வந்த 3000 இற்கு மேற்பட்ட பிரிவினர் அலுவலகத்திற்கு முன்னால் குழுமியிருக்கையில் அதனை ஒன்லயின் திட்டத்தின்படி பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்துள்ளார்கள். அதனோடு தொடர்புடைய உள்ளக சுற்றுநிருபம் கடந்த 17 ஆந் திகதியன்றே வெளியிடப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் ஒன்றை வழங்குவதற்காக இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அது சம்பந்தமாக கண்டறிகையில் பாஸ்போர்ட் சேவையை வழங்குதல் டெண்டர் அழைப்பித்து ரணில் விக்கிரமசிங்காக்களின் நண்பரொருவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மறுபுறத்தில் விமான நிலையத்தில் வீசா வழங்குதலை கூட்டாளிகளுக்கு பெற்றுக்கொடுத்தலுக்காக செயலாற்றிய விதத்தை நாங்கள் அண்மையில் கண்டோம். நாட்டின் வளங்களை தமது கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிப்பதில் காட்டுகின்ற வேகத்தை நிக்கவரெட்டியவில் கால்நடைவளப் பண்ணையை கையளிக்க மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முயற்சியூடாக கண்டுகொள்ளலாம். ,எனினும் பிரதேச செயலாளர் பண்ணையின் ஊழியர்கள் வெளிக்காட்டியுள்ள எதிர்ப்பினை பொருட்படுத்’தாமல் பிரதான வீதியை நோக்கியதாக இருக்கின்ற 20 ஏக்கர் காணியை 30 வருடக் குத்தகைக்கு ரூபா 60,000 இற்கே வழங்கியுள்ளார். கால்நடைவள பண்ணை உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்திருக்கையில் இந்த பண்ணையில் 1000 ஏக்கர் காணியில் 20, 25 ஏக்கர் காணித்துண்டங்கள் என்றவகையில் துண்டாடி நண்பர்களுக்கு வழங்குகின்ற செயற்பாங்கு தொடங்கப்பட்டுள்ளது. சனாதிபதி செயலாளர் அலுவலகத்திலிருந்து கிடைத்த பணிப்புரையின்பேரில் தேர்தலுக்கு முன்னராக காணிக்கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதைப்போலவே பொலநறுவை நகர மத்தியில் இருக்கின்ற ஐந்து கோடி ரூபா மதிப்பீட்டுப் பெறுமதிகொண்ட 40 பர்ச்சஸ் காணியை இரண்டு கோடி ரூபாவிற்கு புதிய மதிப்பீட்டு அறிக்கையொன்றைப் பெற்று நண்பரொருவருக்கு குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள்.

சதொசவிற்குச் சொந்தமான 100 மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 51 ஐ தமது நண்பர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை அர்ஜுன் அலோசியஸ் போன்றோர் அமுலாக்கி வந்தார்கள். நாங்கள் அதனை அம்பலமாக்கியதால் தற்காலிகமாக நிறுத்தி சதொச களஞ்சியங்களை தமது அன்பர்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். மக்கலம் வீதியின் வாகனத் தரிப்பிடத்தை ஒரு இலட்சம் ரூபா வீதம் குத்தகைக்கு விட தயாராகி வருகிறார்கள். நுவரெலியா வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள சதொசவிற்குச் சொந்தமான பங்களாவை 05 இலட்சம் ரூபா மதிப்பீடு இருக்கையில் கூட்டாளிகளுக்கு ஒரு இலட்சத்து பதினையாயிரம் ரூபாவிற்கு வாடகைக்குக் கொடுக்க தயார் செய்திருக்கிறார்கள். தொழில் அமைச்சின் வெளிநாட்டுத் தொழில்கள் சம்பந்தமான பகுதியை மாத்திரம் அமைச்சரின் அலுவல்களுக்காக முனைப்பானதாக்கி இருக்கிறார்கள். “வெற்றிபெறுவோம் ஸ்ரீலங்கா” எனும் பிரச்சார வேலைத்திட்டம் இன்றளவில் 22 நகரங்களில் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டுத் தொழில்களுக்காக புறப்பட்டுச் சென்றவர்களின் எண்ணிக்கையைவிட இந்த பிரச்சார வேலைத்திட்டத்திற்குள்ளே வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. எனினும் இந்த கண்காட்சியொன்றுக்காக 200 இலட்சம் ரூபா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணம் செலவிடப்படுகின்றது. எந்தவிதமான டெண்டர் நடைமுறைகளுமின்றி அமைச்சரின் நண்பரொருவருக்கு இந்த கண்காட்சி கூடங்களை அமைப்பதற்காக ரூபா 200 இலட்சம் வீதம் வழங்கப்படுகின்றது. ஏற்கெனவே 4400 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுவிட்டது.

சுற்றுலாத்துறை அமைச்சு, பொதுமக்ககள் பாதுகாப்பு அமைச்சின் சமுதாய பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சார அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வைத்தியசாலைகளில் 75 அத்தியாவசியமான ஔடத வகைகள் இல்லாத பின்னணியிலேயே மக்களின் நலன்கருதி செலவிடவேண்டியுள்ள பணத்தை இவ்விதமாக தனது பிரச்சார வேலைகளுக்காக ஈடுபடுத்தி வருகிறார்கள். பல பாடசாலைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள பின்னணியிலாகும். தேர்தலைக்கண்டு அஞ்சியுள்ள ஆட்சியாளர்கள் பொதுப்பணத்தை இவ்விதமாக பாவிப்பதை தடுக்க அவசியமான அதிகாரத்தைப் பிரயோகிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வலியுறுத்திக் கூறுகிறோம். ரணில் விக்கிரமசிங்க சட்டத்துறை தலைமை அதிபதிக்கு அறிவுறுத்தல் வழங்கி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்ற குற்றப்பகர்வு சம்பந்தமான 31 கோப்புகளை கடந்த காலத்தில் அகற்றிக்கொண்டுள்ளார். எனினும் இந்த தருணத்திலும் பொலநறுவை பண்ணையினதும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினதும் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் பற்றிய தகவல்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அது சம்பந்தமான சட்ட நடவடிக்கைகள் வெகுவிரைவில் மேற்கொள்ளப்படுமென்பதோடு மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான இரண்டு கோப்புகள் இருக்கின்றன என்பதை ஞாபகப்படுத்துகிறேன். அதற்கு மேலதிகமாக கடந்த காலத்தில் நாங்கள் முன்வைத்த ஊழல், மோசடிகள் அனைத்தும் தொடர்பிலான நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முறைப்படி மேற்கொள்ளுமென்பதை வலியறுத்துகிறோம்.

npp-press-sunil

“ராஜபக்ஷாக்களின் அயோக்கியத்தனமான அரசியல் கலாச்சாரத்தையே ரணிலும் முன்னெடுத்து வருகிறார்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் டாக்டல் நளிந்த ஜயதிஸ்ஸ-

ராஜபக்ஷாக்களின் அசிங்கமான, அயோக்கித்தனமான அரசியல் கலாச்சாரத்தையே தானும் முன்னெடுத்து வருவதை ரணில் விக்கிரமசிங்க இன்றளவில் நிரூபித்துக்கொண்டிருக்கிறார். 2014 இல் ராஜபக்ஷாக்கள் தொலைத் தொடர்புகள் ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவின் பணத்தை பாவித்து சில் அனுட்டிப்பதற்கான புடவைகளை பகிர்ந்தளிப்பதில் முதன்மையாக செயலாற்றிய உத்தியோகத்தர்களுக்கு மேல்நீதிமன்றம் தண்டனை வழங்கியதென்பதை ரணில் விக்கிரமசிங்க மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகள் தொடர்பில் அரச உத்தியோகத்தர்களின் கடுமையான எதிர்ப்பு நிலவுகின்றது. எதுவுமே செய்ய முடியாத பின்னணியிலேயே உத்தியோகத்தர்கள் அதில் பங்கேற்கிறார்கள். இது சம்பந்தமாக விழிப்புடன் இருந்து தேர்தலில் சரியான பதிலடி கொடுக்குமாறு நாங்கள் மக்களை வலியுறுத்துகிறோம்.

Show More

“அபகீர்த்திக்குள்ளாகிய நாட்டை உலகின் கீர்த்திமிக்க நாடாக மாற்றுகின்ற பொறுப்பினை ஏற்க தேசிய மக்கள் சக்தி தயார்” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(-“மறுமலர்ச்சிக்காக முழுநாடுமே ஒன்றாக” தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்டக் கூட்டம் – கண்டி நகரம் – 2024.07.16-) இன்று இரண்டு பிரதான செய்திகள் பிரசுரமாகின. ஒன்றுதான் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஊடக கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இந்த மாதத்தின் இறுதிக்குள் சனாதிபதி தேர்தல் பற்றிய அறிவிப்பினை வெளியிடுவதாக கூறப்பட்டது. சனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோருவதாக கூறப்பட்டது. அதற்கிணங்க 16 தொடக்கம் 21 நாட்களுக்கிடையில் வேட்பு மனுக்கள் கோரப்படும். வேட்பு மனுக்கள் கோரப்பட்ட திகதியிலிருந்து நான்கு – ஆறு […]

(-“மறுமலர்ச்சிக்காக முழுநாடுமே ஒன்றாக” தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்டக் கூட்டம் – கண்டி நகரம் – 2024.07.16-)

Kandy-Public-Rally

இன்று இரண்டு பிரதான செய்திகள் பிரசுரமாகின. ஒன்றுதான் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஊடக கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இந்த மாதத்தின் இறுதிக்குள் சனாதிபதி தேர்தல் பற்றிய அறிவிப்பினை வெளியிடுவதாக கூறப்பட்டது. சனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோருவதாக கூறப்பட்டது. அதற்கிணங்க 16 தொடக்கம் 21 நாட்களுக்கிடையில் வேட்பு மனுக்கள் கோரப்படும். வேட்பு மனுக்கள் கோரப்பட்ட திகதியிலிருந்து நான்கு – ஆறு வாரங்களுக்கிடையில் தேர்தலை நடாத்துவதாக கூறினார்கள். தலைவரின் கூற்றுகளை சுருக்கமாக எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் செப்டெம்பர் 28 ஆந் திகதி தேர்தல் நடைபெறும். எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் எவ்வாறான முடிவினை எடுக்கவேண்டும்? இந்த தீர்மானகரமான தேர்தலை எமது நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்ற தேர்தலாக மாற்றிக்கொள்ள முடியும்.

இரண்டாவது செய்தி பந்துல குணவர்தன அமைச்சரவை பேச்சாளர் கூறுகிறார் அரசியலமைப்பில் சிக்கலொன்று இருக்கிறதாம் ஐந்தா, ஆறா என. உறுதியாக ஆறு எனக் கூறுவதற்கான தீர்மானமொன்றை மேற்கொண்டதாக. அரசியலமைப்பிற்கான பொருள்கோடல் வழங்குவது அமைச்சரவையல்ல. அரசியலமைப்பின் 135 வது உறுப்புரையின் பிரகாரம் பொருள்கோடல் வழங்குவதற்கான அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கே உரித்தானது. ஐந்தா ஆறா என்கிற கேள்வி பல சந்தர்ப்பங்களில் உயர்நீதிமன்றத்திடம் வினவப்பட்டுள்ளது. அமைச்சரவை அங்கீகரிக்கின்ற சட்டம் கெசட் பண்ணப்பட்டு ஒருவாரம் இருக்கவேண்டும். அடுத்ததாக பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்து இரண்டு வாரம் இருக்கவேண்டும். பிரஜை ஒருவரால் நீதிமன்றத்திடம் செல்ல முடியும். உயர் நீதிமன்றத்தில் மூன்று வாரம் இருக்கவேண்டும். உயர்நீதிமன்றத்தின் அங்கீகாரத்தின் பின்னர் மீண்டும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு வாக்குகளால் நிறைவேற்றப்படவேண்டும். உயர்நீதிமன்றத்தினால் மக்கள் தீர்ப்புக்கு செல்லுமாறு கூறுவதால் ரணில் விக்கிரமசிங்க அந்த இடத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் மக்கள் கருத்துக்கணிப்பொன்றுக்கு அழைப்பு விடுக்குமாறு தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை கொடுப்பார். அந்த வேளையில் ரணில் வீட்டில். ரணில் இங்கு முயற்சிப்பது நாட்டுக்குள் ஒரு குழப்பநிலையை ஏற்படுத்துவதற்காகவே. ரணில் ஒரு ஐயப்பட்டிலேயே இருக்கிறார். இன்று தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வந்தது. போட்டியிட சின்னம் ஒன்று கிடையாது. கட்சியொன்று கிடையாது. நிறம் ஒன்று கிடையாது. இந்த தோ்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் பாசறை குழப்பநிலையை அடைந்துள்ளது. அந்த குழப்பநிலையை சமூகத்திற்கு கொண்டுவர முயற்சிக்கிறார்கள். நீங்கள் குழப்பமடையவேண்டாம். தோ்தல் நிச்சயம் நடைபெறும்.

Kandy-Public-Rally

நீண்டகாலமாக இந்த நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் நாட்டை இந்த அனர்தத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். கமக்காரர்களுக்கு மீனவர்களுக்கு கிடைக்கின்ற வருமானத்தைக் கொண்டு சீவிக்க முடியாதுள்ளது. தொழில் முயற்சி சமுதாயம் எடுத்தகடனை மீளச்செலுத்தமுடியாமல் இருக்கிறது. மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை கைவிட்டுச் செல்வது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். இளைஞர் தலைமுறையினர் உயிர்வாழ்வதற்கான ஒரே வழிவகை நாட்டை விட்டு வெளியேறுவதே என சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். குற்றச்செயல்களும் போதைப்பொருட்களும் தாண்டவம் ஆடுகின்றன. கடன் செலுத்த முடியாத நாடாக மாறியுள்ளது. ஒரு நாட்டுக்கு நேரக்கூடிய அனைத்துவிதமான அனர்த்தங்களும் எமக்கு ஏற்பட்டுவிட்டன. அதனால் எல்லா இடங்களிலும் மக்கள் மாற்றத்தை வேண்டி நிற்கிறார்கள். இந்த மாற்றத்தை ஏற்படுத்தப்போவது யார்? இந்த நாட்டை நான்கு ஐந்து தசாப்தங்களாக ஆட்சி செய்த தோல்வி கண்ட அரசியல் பாசறையால் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

இன்று இந்த நாட்டுக்கு ஓர் அரசியல் மாற்றம் அவசியமாகின்றது. எமது மனோபாவங்களில், கல்வியில், அனைத்து துறைகளிலும் மாற்றமொன்று அவசியமாகிறது. இந்த நாட்டை புதிய அரசியல் மறுமலர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். இருபதாம் நூற்றாண்டு உலகிற்கு பல்வேறு வெற்றிகளை கொண்டுவந்த நூற்றாண்டாகும். இருபதாம் நூற்றாண்டுக்கு முன்னர் அரசியல்வாதிகள், சிந்தனையாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் எதிர்காலம் எவ்வாறு அமையவேண்டுமென்பதை பற்றி சிந்திக்க தொடங்கினார்கள். இலக்கியவாதிகள் இவ்வாறான உலகம் எமக்கு வேண்டுமென்றே எழுதினார்கள். விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு எதிர்காலம் இவ்வாறு அமையவேண்டுமென முன்மொழிந்தார்கள். அரசியல் சிந்தனையாளர்கள் குடும்பங்களுக்கு இரத்தமரபுரிமை வருகின்ற ஆட்சியதிகாரத்திற்கு பதிலாக மக்களின் பங்கேற்புடனான ஆட்சி அதிகாரமொன்று உருவாகுமென்று கூறினார்கள். 14 வது 18 வது நூற்றாண்டுகளில் சிந்தித்தவை இருபதாம் நூற்றாண்டிலே பௌதீக ரீதியாக கட்டியெழுப்பப்படுகின்றது. இருபதாம் நூற்றாண்டின் வெற்றிகளை உறிஞ்சி எடுத்து எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கான நோக்கமோ இயலுமையோ எங்களின் ஆட்சியாளர்களுக்கு இருக்கவில்லை. நாங்கள் இருபதாம் நூற்றாண்டை தவறவிட்ட ஒரு நாடாகும். உலகத்தில் தோன்றியுள்ள அறிவின் வளர்ச்சிகள், தொழில்நுட்பத்தின் வளர்ச்சிகள், கலையின் இசையின் இலக்கியத்தின் வளர்ச்சிகளை உறிஞ்சி எடுத்துக்கொண்ட புதிய இலங்கை தேசமொன்றாக மாற்றுவதற்கான சவாலைத்தான் தேசிய மக்கள் சக்தி பொறுப்பேற்கின்றது. இந்த நாடு உலகின் முன்னிலையில் அபகீர்த்திக்கு இலக்காகிய நாடாகும். இந்த நாட்டை உலகில் கீர்த்தி மிக்க நாடாக மாற்றுவதற்கான சவாலையும் பொறுப்பையும் தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ள தயார்.

Kandy-Public-Rally

பிரஜைக்கு சட்டத்தின் முன் தனக்கு நியாயம் கிடைக்கின்றதென்ற உணர்வு இல்லாவிட்டால் அந்த சமூகம் அநாகரிகமான சமூகமாக மாறிவிடும். மீண்டும் சட்டத்தின் ஆட்சியை பலம் பொருந்திய வகையில் உறுதிப்படுத்துகின்ற நாடாக இலங்கை மாற்றப்படல் வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றினால் மாத்திரமே அவ்வாறு சாதிக்க முடியும். இந்த சமூகத்தில் குற்றச்செயல்களின் அலை, போதைப்பொருட்களின் அலை நிலவுகின்றது. இவற்றிலிருந்து எமது நாட்டை மீட்டெடுக்க வேண்டும். இந்த குற்றச் செயல்களை நிர்மாணித்ததும் பாதுகாப்பதும் அரசியல்வாதிகளே. இந்த அரசியல்வாதிகளும் குற்றச் செயல் புரிபவர்களும் ஒன்றாகவே இருக்கிறார்கள். குற்றச் செயல் புரிபவர்கள் பாதாள உலகத்தை சோ்ந்தவர்கள் மாத்திரமல்ல அரசியல்வாதிகளும் குற்றச் செயல் புரிகிறார்கள். கெஹெலியவும் மஹிந்தானந்தவும் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டார்கள். உடதலவின்னவில் சுட்டுக்கொண்டார்கள். றகர் விளையாட்டு வீரனை படுகொலை செய்தார்கள். இன்று தொழில் முயற்சியொன்றை நடாத்த பஸ் ஒன்றை வீதியில் இறக்க கப்பம் வழங்க வேண்டும். எங்களுடைய நாட்டை கட்டுப்படுத்துவது மேலே தெரிகின்ற அரசாங்கத்தை விட கீழே இருக்கின்ற உலகமாகும். இந்த நாடு குற்றச் செயல் புரிபவர்களின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. ஒவ்வொரு பிரஜைக்கும் தனது பிள்ளைகளின் வாழ்க்கை பற்றியும் தனது உயிர் பற்றியும் நம்பிக்கை உறுதிப்படுத்தப்படுகின்ற நாடொன்று தேவை. அந்த நாட்டை உருவாக்குவது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமாகும். நாங்கள் ஏற்படுத்துகின்ற மாற்றம் அதுவாகும்.

அதைபோலவே நாங்கள் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். நீண்ட காலமாக எமது நாட்டை ஆட்சி செய்தது. இனவாதமாகும். எமது நாட்டில் நிலவியது மற்றவருக்கு எதிராக சந்தேகம், அவநம்பிக்கை, பகைமை, வன்மத்தை பரப்புகின்ற அரசியலாகும். வடக்கிலுள்ள மக்களுக்கு எதிராக தெற்கில் எதிரியொருவரை சுட்டிக்காட்டினார்கள். தெற்கிலுள்ள மக்களுக்கு எதிராக வடக்கில் எதிரி ஒருவரை காட்டினார்கள். கிழக்கிற்கு எதிராக தெற்கில் எதிரியொருவரை காட்டினார்கள். எதிரியை உருவாக்குவதும் எதிரிக்கு எதிராக வீரர்களை உருவாக்குவதும் ஊடகமாகும். 2019 இல் ஒட்டுமொத்த தோ்தல் இயக்கமும் அந்த விதத்தில் தான் ஊசலாடியது. அதன் பெறுபேறு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையில் அவநம்பிக்கை அதிகரித்தாகும். நாங்கள் ஒருவரையொருவர் சகித்துக் கொள்ளாத இனமாக மாறினோம். எங்களுக்கு மாற்றமொன்று அவசியமாகும். பிறருக்கு எதிராக புரிந்த அரசியலுக்கு, கருத்தியலுக்கு பதிலாக எமக்கு மாற்றமொன்று அவசியமாகும். சிங்கள, தமிழ், முஸ்லிம்களுக்கிடையில் ஒற்றுமையான அரசியல் அவசியமாகும். அது தான் தேசிய மக்கள் சக்தியின் அரசியல். இந்த அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ள அணைத்து மக்கள் சமுதாயங்களினதும் நம்பிக்கையை வென்றெடுத்த அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். அந்த அடிப்படைத்தான் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான அத்திவாரத்தை இடுகின்றது. இந்த அரசாங்கம் உருவாவதே தேசிய ஒற்றுமையின் அடிப்படையில் தான். அது தான் தேசிய மறுமலர்ச்சி. நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து தேசிய ஒற்றுமையுடன் அரசாங்கமொன்றை அமைத்திடுவோம் என நான் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

Kandy-Public-Rally

இந்த நாட்டை கட்டியெழுப்பிட புதிய பொருளாதார பயணமொன்றுக்கு மாற்றியமைக்க வேண்டும். இந்த வழிமுறை சரியானதென்றால் நாடு முன்னேறியிருக்கவேண்டும். அவர்கள் வந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புவார்களாம். பல தசாப்பதங்களாக அமைக்கமுடியாமல் போய்விட்டது. அவர்கள் தான் இந்த நாட்டை அனர்த்தத்தில் தள்ளிவிட்டார்கள். இந்த நாட்டை கட்டியெழுப்ப உலகின் புதிய தொழில்நுட்பத்தை உறிஞ்சி எடுத்து தொழில்நுட்ப மாற்றங்களின் அடிப்படையில் உற்பத்தி பொருளாதாரமொன்றுக்கு செல்ல வேண்டும். உலகின் சுகாதாரத்துறையில், ஔடத துறையில், விதையினங்கள் உற்பத்தியில் ஏற்படுகின்ற தொழில்நுட்ப மாற்றங்களை பயன்படுத்தி உற்பத்தியை மேற்கொள்கின்ற ஒரு நாடாக மாற எம்மால் முடியவில்லை. நாங்கள் உலகின் புதிய உற்பத்திகளை நுகர்பவர்களாக மாறினோம். நாங்கள் ஒரு நுகர்வு நாடாக மாறினோம். இந்தியா அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முட்டைக்கான உற்பத்திச் செலவினை குறைத்துக் கொள்வதில் வெற்றிபெற்றது. இந்தியாவில் உற்பத்தி செய்கின்ற ஔடதங்கள் மோட்டார் வாகனங்களை நுகர்கின்றவர்களாக நாங்கள் மாறினோம். எங்களுடைய வைத்தியசாலைகளில் இருக்கின்ற பாரிய மருத்துவ உபகரணங்கள் இஸ்ரேயலிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. நாட்டுக்கு புதிய பொருளாதார மாற்றமொன்று தேவை. தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார உபாய மார்க்கம் உலகில் இடம்பெறுகின்ற தொழில்நுட்பம் மூலமாக உற்பத்தியை முன்னேற்றுகின்ற ஒரு தேசமாக இலங்கையை மாற்றுவதாகும்.

எங்களுடைய நாட்டிலே காபன் சதவீதம் அதிகமான பெறுமதியான காரீய வளங்கள், புல்மோட்டை கனிய வளங்கள், புத்தளத்தில் பெறுமதிமிக்க சிலிக்கா வளம் இருக்கின்றது. நாங்கள் விஞ்ஞானிகளை சந்தித்தோம். இந்த வளங்களைக் கொண்டு பெறுமதிமிக்க பண்டங்களை எவ்வாறு உற்பத்தி செய்வது எனக்கேட்டோம். அது தொடர்பில் அறிவுபடைத்த விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். நாங்கள் முதலீட்டாளர்களுடன் தொழில் முயற்சியாளர்களுடன் உரையாடினோம். அவர்கள் அதனைச் சார்ந்த தொழிற்சாலைகளை இலங்கையில் ஆரம்பிக்க தயார். எங்களுக்கு தொழில்நுட்பம், மூலதனம், சந்தையில்லாவிட்டால் அதற்கு அவசியமான தொழில்நுட்பம் நிலவுகின்ற, மூலதனம் இருக்கின்ற, சந்தை இருக்கின்ற முதலீட்டாளர்களை நாங்கள் வருமாறு அழைக்கவேண்டும். 1978 இலிருந்து 44 வருடங்களுக்கு 23 பில்லியன் டொலர் நேரடி வெளிநாட்டு மூலதனமே கிடைத்துள்ளது. வியட்நாமிற்கு கடந்த வருடத்தில் மாத்திரம் 22 பில்லியன் டொலர் கிடைத்தது. இந்த நாட்டை புதிய உற்பத்திக்கு மாற்றியமைக்க முடியும். அதைப்போலவே உலகில் விரிவடைந்து வருகின்ற சேவைகள் சந்தையின் ஒரு பங்கினை நாங்கள் கைப்பற்றிக் கொள்ள வேண்டும். அவற்றுக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

Kandy-Public-Rally

பொருளாதாரம் வளரும்வரை தொழில்கள் கிடைக்கும் வரை மக்களால் காத்திருக்க முடியாது. ஊரிலுள்ள சாதாரண மக்களுக்கு உணவுக்கான உத்தரவாதத்தை கொடுக்க வேண்டும். மக்களில் 68 வீதத்திற்கு உணவு கிடையாதென மத்திய வங்கி அறிக்கை கூறுகிறது. பொருளாதாரம் நல்ல நிலைக்கு வரும்வரை மக்களுக்கு உணவு, கல்வி, சுகாதாரம் என்பவற்றை உத்தரவாதப்படுத்துகின்ற அரசாங்கம் தான் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம். வருமான வழிவகை இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும். நாட்டு மக்களை பார்த்துக் கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். பொதுமக்களின் பணத்தை திருடுகிறார்கள். விரயமாக்குகிறார்கள். அவற்றுக்கு சட்டம் அமுலாக்கப்படுவதில்லை. அப்போது சிரித்துக்கொண்டு போய் மீண்டும் திருடுகிறார்கள். சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்கிறார்கள். இந்த பொருளாதாரப் பயணம் எமது நாட்டை பாரிய கடன் பொறிக்குள் சிறைப்படுத்தி வைத்துள்ளதென்பதை நாங்கள் பாராளுமன்றத்தில் கூறுகிறோம். அவ்வாறு கூறினாலும் மென்மேலும் கடன் எடுக்கிறோம். நாங்கள் இதனை எவ்வளவோ கத்திக் கத்திக்கூறியிருக்கிறோம். எந்த பிரயோசனமும் கிடையாது. இனி கூறுவதற்கு பதிலாக அதிகாரத்தை எடுத்துக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படியானால் எதிர்வரும் ஜனாதிபதி தோ்தல் ஒரு தீர்மானகரமான தோ்தலாகும். இங்கே இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான நீங்கள் உங்களுடைய நண்பர்களிடமும் அன்பர்களிடமும் உறவினர்களிடமும் உரையாடுங்கள். எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் வெற்றியைப் பெற்றுக்கொடுங்கள் நாங்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து நாட்டை மாற்றியமைப்போம். அதற்காக அனைவரையும் ஒன்று சேருமாறு அழைப்புவிடுக்கிறோம்.

Kandy-Public-Rally
Kandy-Public-Rally
Show More

வங்குரோத்து அடைந்த நாட்டில் கரைசேர்த்த கூட்டுறவுச் சங்கத்தினால் 17 கோடி ரூபா செலவில் வைத்தியசாலையொன்று – அக்குரெஸ்ஸ கூட்டுறவுச் சங்கத்தின் வியத்தகு அரும்பணி!

(-Colombo, July 17, 2024-) 2005 ஆம் ஆண்டிலிருந்து மக்கள் விடுதலை முன்னணியால் அதிகாரம் வகிக்கப்படுகின்ற அக்குரெஸ்ஸ கூட்டுறவுச் சங்கத்தினால் 17 கோடி ரூபா செலவில் 05 மாடிகளைக்கொண்ட வைத்தியசாலையொன்றின் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அக்குரெஸ்ஸ நகரின் மத்தியில் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த கூட்டுறவு வைத்தியசாலைக்காக கடந்த 17 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் அடிக்கல் நாட்டினார். சரியான தலைமைத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் கூட்டுணர்வுடன் எழுச்சிபெற்றால் வங்குரோத்து அடைந்த ஒரு நாட்டில் […]

(-Colombo, July 17, 2024-)

npp-coop-akurassa

2005 ஆம் ஆண்டிலிருந்து மக்கள் விடுதலை முன்னணியால் அதிகாரம் வகிக்கப்படுகின்ற அக்குரெஸ்ஸ கூட்டுறவுச் சங்கத்தினால் 17 கோடி ரூபா செலவில் 05 மாடிகளைக்கொண்ட வைத்தியசாலையொன்றின் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அக்குரெஸ்ஸ நகரின் மத்தியில் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த கூட்டுறவு வைத்தியசாலைக்காக கடந்த 17 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் அடிக்கல் நாட்டினார்.

சரியான தலைமைத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் கூட்டுணர்வுடன் எழுச்சிபெற்றால் வங்குரோத்து அடைந்த ஒரு நாட்டில் கூட இலாபம் ஈட்டி உயர் மட்டத்திலான சேவையை வழங்க முடியுமென்ற இந்த எடுத்துக்காட்டினை அக்குரெஸ்ஸ கூட்டுறவுச் சங்கம் சமூகத்திற்கு வழங்கிக்கொண்டிருக்கிறதென்பதையும் இதன்போது கருத்துரைத்த விஜித ஹேரத் தெரிவித்தார். இவ்விதமாக ஆற்றல், திறமை மற்றும் அர்ப்பணிப்புடன் நாட்டை கட்டியெழுப்புவதற்கான உண்மையான தேவைகொண்ட பிரஜைகளின் கூட்டமைவான தேசிய மக்கள் சக்தியால் நாட்டை கட்யெழுப்பும் சவாலையும் பொறுப்பேற்க முடியுமென விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

2005 ஆம் ஆண்டில் “இணக்கப்பாட்டின் எடுத்துக்காட்டு நாளையதினத்தில் நாட்டுக்கு” எனும் தொனிப்பொருளின் எதிர்பார்ப்புடன் கூட்டுறவினை பாதுகாப்பதற்கான அமைப்பு பயணித்துள்ளமை மிகவும் பாராட்டத்தக்கதெனவும் கூட்டுறவுச்சங்கம் பெற்ற இலாபத்தில் 17 கோடி ரூபாவை செலவழித்து ஐந்து மாடிகளைக் கொண்ட நவீன வசதிகளுடனான முழு நிறைவான வைத்தியசாலையொன்றை நிறுவி மக்களுக்கு சாதகமான சுகாதாரச் சேவையொன்றை வழங்க கூட்டுறவுப் பணிப்பாளர் சபை எடுத்த தீர்மானம் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக உறுப்பினர் தெரிவித்தார்.

அக்குரெஸ்ஸ பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் அழைப்பின் பேரில் இத்தருணத்திற்கு தென் மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் கே.பி.ஜி. சுமித் சாந்தவை முதன்மையாகக் கொண்ட கூட்டுறவுத் திணைக்கள உத்தியோகத்தர்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நரம்பியல்துறை மருத்துவ நிபுணர் சஞ்ஜீவ குருசிங்க, அக்குரெஸ்ஸ மாவட்ட வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் மானக்க விதான பத்திரணவை உள்ளிட்ட மருத்துவர்கள், அக்குரெஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட பிரதேச செயலாளர்கள், வர்த்தக சமுதாயம், கூட்டுறவு பணியாட்தொகுதி, அங்கத்தவர்கள் மற்றும் நலன் விரும்பிகளை உள்ளிட்ட பெருந்தொகையான பிரதேசவாசிகள் பங்கேற்றனர்.

ஏறக்குறைய 20 வருடங்கள் சங்கத்தின் தவிசாளராக செயலாற்றி வருகின்ற டபிள்யூ.ரி.கே. ராஜபக்ஷ உள்ளிட்ட பணிப்பாளர் சபையின் அர்ப்பணிப்பு காரணமாக இன்றவில் தென்மாகாணத்தில் முதன்மைத்தானம் வகிக்கின்ற கூட்டுறவுச் சங்கமாக அக்குரெஸ்ஸ பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் மாறியுள்ளது. ஈட்டப்பட்ட 2000 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட சொத்துக்களிலிருந்து பெற்ற இலாபத்தைக் கொண்டு இவ்விதமான நவீன முழு நிறைவான வைத்தியசாலையொன்றை அக்குரெஸ்ஸ கூட்டுறவுச் சங்கத்தினால் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கிறது.

Show More

“சமூக மாற்றத்திற்காக புரிந்த போராட்டத்தை பூர்த்தி செய்து கொள்ள ஜனாதிபதி தோ்தலை ஒரு வாய்ப்பாக அமைத்துக்கொள்ளுங்கள்.” -மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா-

(-தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024-07-17-) இன்றைய தினம் எமது நாட்டுக்கு ஒரு முக்கியமான நாளாகும். ஜனாதிபதி தோ்தலை நடத்துவதற்காக தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு திகதியை விதிப்பதற்கான அதிகாரம் 17 ஆம் திகதியாகிய இன்றைய தினமே கிடைக்கிறது. தோ்தல்கள் ஆணைக்குழு தனக்கு கிடைக்கின்ற சட்ட ஏற்பாடுகளுக்கு இணங்க தோ்தலை நடத்துவதற்காக அண்மித்த தினமொன்றை பிரகடனம் செய்யுமென நாங்கள் நினைக்கிறோம். அதிகாரத்தில் இருக்கின்ற குழுக்களால் தோ்தல் பற்றிய சந்தேகமொன்று கிளப்பப்பட்டுள்ளது. ஆணைக்குழுவும் கால அவகாசம் எடுத்துக்கொள்ளுமா என்றே […]

(-தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024-07-17-)

npp-press-presidential-election

இன்றைய தினம் எமது நாட்டுக்கு ஒரு முக்கியமான நாளாகும். ஜனாதிபதி தோ்தலை நடத்துவதற்காக தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு திகதியை விதிப்பதற்கான அதிகாரம் 17 ஆம் திகதியாகிய இன்றைய தினமே கிடைக்கிறது. தோ்தல்கள் ஆணைக்குழு தனக்கு கிடைக்கின்ற சட்ட ஏற்பாடுகளுக்கு இணங்க தோ்தலை நடத்துவதற்காக அண்மித்த தினமொன்றை பிரகடனம் செய்யுமென நாங்கள் நினைக்கிறோம். அதிகாரத்தில் இருக்கின்ற குழுக்களால் தோ்தல் பற்றிய சந்தேகமொன்று கிளப்பப்பட்டுள்ளது. ஆணைக்குழுவும் கால அவகாசம் எடுத்துக்கொள்ளுமா என்றே மக்களும் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆணைக்குழு சீக்கிரமாக ஒரு தினத்தை பிரகடனம் செய்து இந்த சந்தேகத்தை போக்குமென்று நாங்கள் நினைக்கிறோம்.

1982 இலிருந்து பல ஜனாதிபதி தோ்தல்கள் நடாத்தப்பட்டுள்ளன. அந்த அனைத்து ஜனாதிபதி தோ்தல்களையும் விட இந்த தோ்தல் தனித்துவம் பெறுகின்றது. எமது நாட்டில் ஜனாதிபதி ஒருவர் தனது பதவியை கைவிட்டுச் சென்று அந்த வெற்றிடத்தை நிரப்ப வேறொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது அதன் பின்னர் நடாத்தப்படுகின்ற ஜனாதிபதி தோ்தலாகும். கடந்த காலத்தில் பாரிய மக்கள் போராட்டமொன்று நிலவியது. கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் நாடு அராஜகம் அடைந்து, மக்கள் வரிசைகளில் மடிந்து, மக்கள் பாதிக்கப்பட்டிருந்த தருணத்தில், மக்கள் வீதியில் இறங்கி பிரமாண்டமான போராட்டத்தை நடத்தினார்கள். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியையும் மகிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியையும், பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ அமைச்சர் பதவிகளையும் கைவிட்ட நிலையிலேயே போராட்டம் முற்றுப்பெற்றது. அவர்கள் அமைச்சுப் பதவிகளை கைவிட்டு மக்கள் ஆணையற்ற ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி ஆக்கினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை மக்கள் ராஜபக்ஷ ஆட்சியை இல்லாதொழித்து புதிய மாற்றமொன்றையே எதிர்பார்த்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் நோக்கங்கள் ஈடேறவில்லை. அந்த மக்களின் எதிர்பார்ப்புகளை ஈடேற்றுவதற்காக கிடைக்கின்ற முதலாவது வாய்ப்பு தான் இந்த ஜனாதிபதி தோ்தல். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அந்த போராட்டத்தின் முடிவினை காணவேண்டிய தேவையுடையவர்களாக இருக்கிறார்கள். இங்கே இருக்கின்ற மூர்க்கமான ஆட்சியாளர்களை மாற்றியமைத்து தமக்கு மிகவும் சிறந்த ஆட்சியொன்றை அமைத்துக்கொள்வதற்கான தேவை நிலவுகின்றது.

மறுபுறத்தில் பார்த்தால் எமது நாட்டை ஆள்பவர் மக்கள் ஆணையற்ற ஒருவராவர். அவரை ராஜபக்ஷாக்களின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் வாக்குகளால் ஜனாதிபதியாக நியமித்துக் கொண்டார்கள். மக்கள் போராடியது ராஜபக்ஷாக்களை ரணில் விக்கிரமசிங்காகக்களை தோற்கடிப்பதற்காகும். 2019 இல் ரணிலை தோற்கடிப்பதற்காகவே மக்கள் வாக்குகளை அளித்தார்கள். அந்த வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்த ராஜபக்ஷாக்கள் எஞ்சிய காலத்திற்காக ரணிலை ஜனாதிபதியாக்கிக் கொள்கிறார்கள். தற்போதுள்ள பாராளுமன்றம் மக்களின் ஆணை பிரதிநித்துவம்படுத்தப்படாத திரிபு நிலையடைந்த ஒரு பாராளுமன்றமாகும். ரணில் விக்கிரமசிங்க மக்கள் ஆணையை பிரதிநிதித்துவம் செய்வதில்லை. அதனால் மக்களுக்கு மக்கள் ஆணையால் நியமித்துக் கொள்ளப்படுகின்ற ஒரு ஜனாதிபதி தேவை. அதனால் ஜனாதிபதி தோ்தல் மிகவும் தனித்துவமான ஓர் இடத்தை வகிக்கிறது. புதிய பயணப்பாதையில் பிரவேசிக்க, புதிய ஆட்சிப் பொறிமுறையொன்றை கட்டியெழுப்பிக்கொள்ள இந்த ஜனாதிபதி தோ்தல் மூலமாகவே வாய்ப்பு கிடைக்கின்றது. அதனால் மக்கள் தமது கருத்தினை வெளிப்படுத்த தோ்தல் வரும்வரை பொறுமையை இழந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதாவது தமது எதிர்ப்பினை வெளிக்காட்டுவதற்காகவே.

எமது மக்கள் பெருந்தொகையினராக வீதியில் இறங்கி பிரமாண்டமான அமைதிவழிப் போராட்டமொன்றை நடாத்தி சமூக மாற்றமொன்றுக்கான போராட்டமொன்றை முழுநிறைவு செய்வதற்கான, புதிய ஆட்சியொன்றை கட்டியெழுப்புவதற்காக கிடைக்கின்ற வாய்ப்பே இந்த ஜனாதிபதி தோ்தலாகும். அதனால் எல்லா கோணங்களிலும் தனித்துவமும் முக்கியத்துவமும் வகிக்கின்ற ஒரு தோ்தலாகும். மற்றைய தனித்தன்மை என்னவென்றால் இந்த நாட்டிலே மிக அதிகமான இடையூறுகள் நிலவிய தோ்தலாகும். இதற்கு முன்னர் மக்கள் தோ்தலை விரும்பாத தருணங்களில் ஆட்சியாளர்கள் மிகுந்த ஆசையுடன் தோ்தலை நடத்தினார்கள். எனினும் இத்தடவை மக்கள் தோ்தல் வரும்வரை ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் ஆட்சியாளர்களோ தோ்தலைக் கண்டு பயந்துபோயிருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க வந்து கடனை மீளச்செலுத்தாதிருந்து கடனை மீளச்செலுத்தாத அனுகூலத்தைக் கொண்டு வரிசைகளை குறைத்த பின்னர் அவரே தன்னை நாட்டைக் கட்டியெழுப்பிய நாயகனாக வர்ணித்துக்கொண்டார். ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொறுப்பேற்ற வேளையில் இலங்கையின் ஒட்டுமொத்த அரச படுகடன் 83 தொடக்கம் 84 பில்லியன் டொலர் வரை இருந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைகளில் குறிப்பிடப்படுகின்றது. எனினும் இந்த வருடத்தின் மார்ச் மாதமளவில் ஒட்டுமொத்த அரச படுகடன் 100.2 பில்லியன் டொலர்கள் என மத்திய வங்கி அறிக்கைகளில் கூறப்படுகின்றது. எமது மக்கள் மீது கட்டுக்கடங்காத வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வருமானம் பெறுகின்ற தொழில் புரிகின்றவர்கள் மீது மட்டற்ற வரி விதிக்கப்பட்டது. இந்த நிலைமையை அவ்விதமாக மக்களின் கழுத்தை நெரித்தே அமைத்துக் கொண்டார்கள். ரணில் விக்கிரமசிங்க நாட்டை கரைசோ்க்கவில்லை. அவரால் வெற்றிபெற முடியுமென அவர் நினைத்தாலும் கால ஓட்டத்தில் வெற்றிபெற முடியாதென்பதை அவர் விளங்கிக் கொண்டார். அதனால் ஜனாதிபதி தோ்தலை தவிர்த்துச் செல்ல முயற்சி செய்தார். அதனால் முதலில் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஒழித்துக்கட்ட முயற்சி செய்தாலும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதி தோ்தலுக்கு அஞ்சுபவர் என்பதால் மகிந்த ராஜபக்ஷாக்கள் ஜனாதிபதி தோ்தலுக்கு முன்னர் பொதுத்தோ்தலை நடாத்த முயற்சி செய்தார்கள். அந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை. அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க தனது கையாட்களைக் கொண்டு ரணில் விக்கிரமசிங்கவிற்கு மேலும் சில வருடங்கள் பதவியிலிருக்க வாய்ப்பினைக் கொடுப்போம் என முன்மொழிந்தார்கள். ரங்கே பண்டார மக்கள் தீர்ப்பொன்று மூலமாக மேலும் இரண்டு வருடங்கள் இடமளிக்கவேண்டுமென ஒரு முன்மொழிவினை கொண்டுவந்தார். அந்த முன்மொழிவு மீது பாரிய தாக்குதல் இடம்பெற்றது. தோ்தலுக்குச் செல்லாமல் ரணில் விக்கிரமசிங்கவை தொடர்ந்தும் பதவியில் வைத்துக்கொள்வதற்காக அதன் பின்னரும் பல்வேறு முன்மொழிவுகள் கொண்டுவரப்பட்டன.

npp-press-presidential-election

ஜனாதிபதி தோ்தலை நடத்தி தோல்வி கண்ட பின்னர் ரணில் வீட்டுக்கு செல்லவேண்டும். ஜனாதிபதி பதவியின் அதிகாரம் காரணமாக அவரை சுற்றியிருந்து கொண்டு பலவிதமான சிறப்புரிமைகளையும் பதவிகளையும் எடுத்துக் கொண்டு வசிக்கின்ற ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து விடுவார்கள். ஆலோசகர் பதவிகள் பறிபோய்விடும். அவர்களிடம் பாரிய அச்ச உணர்வு தோன்றியுள்ளது. பொதுப்பணத்தில் மேலும் ஓரிருவருடங்கள் உயிர்வாழ அவர்கள் விரும்புகிறார்கள். அதன் பின்னர் அரசியலமைப்பின் ஓட்டைகளில் நுழைந்து செல்ல முடியுமா என முயற்சி செய்தார்கள். அதற்கான தான் 05 வருட காலப்பகுதியை 06 வருடங்கள் வரை நீடித்துக்கொள்ள முடியுமா என்பதை பார்க்க பல்வேறு முயற்சிகளை செய்தார்கள். அதில் ஒன்றுதான் லேனவ என்பவரால் உயர் நீதிமன்றத்திற்கு தாக்கல் செய்த மனு. அதன் பெறுபேறு யாதெனில் மனு தள்ளுபடி செய்யப்பட்டு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டமையாகும். மற்றுமொரு சட்டத்தரணி அரசியலமைப்புக்கான 19 வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட விதம் தவறானதென சுட்டிக்காட்டி தோ்தலை நிறுத்துவதற்கான மனுவொன்றை சமர்ப்பித்தார். உயர்நீதிமன்றம் அந்த மனுவையும் தள்ளுபடி செய்து ஐந்து இலட்சம் ரூபா அபராதம் விதித்தது. இந்த ஆட்சிக்குழு ரணில் விக்கிரமசிங்காக்கள் மகிந்த ராஜபக்ஷாக்கள் எதிர்நோக்குகின்ற மிகவும் வெறுக்கின்ற தோ்தல் தான் ஜனாதிபதி தோ்தல். இது தோ்தலை தடுக்க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் தோற்கடித்து நடத்தப்படுகின்ற விசேடமான தோ்தலாகும். இன்னமும் மக்கள் மத்தியில் ஒரு ஐயப்பாடு நிலவுகின்றது. இன்னமும் அமைச்சரவை அங்கீகரித்த அரசியலமைப்பு திருத்தமொன்று இருக்கிறது. அது பயனுள்ளதாக அமையாவிட்டாலும் இன்னமும் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். நிலவுகின்ற சட்டத்திற்கிணங்க அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி தோ்தலை நடத்துவதைத் தவிர வேறு மாற்றுவழி கிடையாதென்பது எங்களுக்கு தெரியும்.

இன்று முதல் ஜனாதிபதி தோ்தலை நடத்துவதற்கான பொறுப்பு இருப்பது ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அரசாங்கத்திற்கோ அல்ல; தோ்தல்கள் ஆணைக்குவிற்காகும். ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி தோ்தலை அறிவிப்பதற்கும் தோ்தலை நடாத்துவதற்குமான அதிகாரம் கையளிக்கப்படுகின்றது. எம்மைப்போன்ற ஒரு நாட்டில் மக்கள் தோ்தல் மீது நம்பிக்கை வைப்பதாயின், ஜனநாயக ரீதியாக ஆட்சிகளை மாற்ற முடியுமென்ற கருத்து சமூகத்தில் நிலவ வேண்டுமானால் இவர்கள் புரிகின்ற அசிங்கமான வேலைகளை நிறுத்தவேண்டும். இந்த ஐயப்பாட்டு நிலையை ஒழித்துக்கட்டவேண்டும். தோ்தல் நடைபெறமாட்டாது எனும் கருத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தற்போது தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இருக்கிறது. நாங்கள் தோ்தல்கள் ஆணைக்குழுவிடம் தமது அதிகாரத்திற்கிணங்க தினத்தை பிரகடனப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். தோ்தல்கள் ஆணைக்குழு பற்றியும் சமூகத்திலே ஒரு சந்தேக நிலை நிலவுகின்றது. அது தான் ரணில் விக்கிரமசிங்காக்கள் உள்ளூர் அதிகார சபை தோ்தலை பிற்போட்டதும் அதனை நடாத்த ஆணைக்குழுவிற்கு இயலாமல் போயிற்று. ஆணைக்குழு ஒரு விதத்திலான முயற்சியை எடுத்தது. எனினும் உச்சளவிலான முயற்சியை எடுக்கவில்லை. சமூகத்திலே ஆணைக்குழு பற்றி நிலவுகின்ற கருத்தினை மாற்றிக்கொள்ளவில்லை. ஆணைக்குழு மக்களுக்காகவும் சனநாயகத்திற்காகவுமே தோற்றுகிறது. தோ்தல்கள் ஆணைக்குழு தோ்தலை பிற்போடுகின்ற ஓர் ஆணைக்குழுவல்ல. தோ்தலை நடாத்துகின்ற ஆணைக்குழுவாகும். எனவே “தோ்தலை நடாத்த நாங்கள் தயார். எங்களுக்கு எந்தவிதமான அழுத்தமும் கிடையாது” என்று சுயாதீனமாக செயலாற்றுகின்ற ஓர்ஆணைக்குழுவாக செயற்பட்டு தோ்தலுக்கான தினத்தை அறிவிக்கவேண்டுமென நாங்கள் நினைக்கிறோம். தோ்தல்கள் ஆணைக்குழு இந்த நாட்டின் அரசியல் அமைப்பிற்கு, நாட்டு மக்களுக்கே பொறுப்புக்கூறவேண்டும். ரணில் விக்கிரமசிங்கவுக்கு, மகிந்த ராஜபக்ஷாவிற்கு, சஜித் பிரேமதாசவிற்கு அல்லது எமக்குக்கூட பொறுப்புக்கூறவேண்டியதில்லை.

ரணில் விக்கிரமசிங்க “ஒரு கேம் அடித்து இந்த தோ்தலை நடத்தாதிருப்பார்” என்கின்ற கேலிக்கூத்தான கருத்தியலை தொடர்ச்சியாக சமூகத்தில் பேணிவந்தார்கள். ரணில் சரியாக முடிச்சு போடுபவர் என்றால் இதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே தோ்தலை நிறுத்தியிருக்க வேண்டும். அவர் தோ்தலை நிறுத்துவதற்கான எல்லா தில்லுமுல்லுகளையும் செய்து விட்டு தோல்வி கண்டிருக்கிறார். இது ஒரு யுக மாற்றமாகும். நாங்கள் ஒரு யுகத்திலிருந்து அதை விடச்சிறந்த முறைமையொன்றுக்கு மாறப்போகின்ற தருணமாகும். ஆளுங்குழுக்கள் சதாகாலமும் தோ்தலை நடத்தாதிருக்க முயற்சி செய்கின்றன. மறுபுறத்திலே அச்சுறுத்தல்களையும் மேற்கொள்கிறார்கள். வீம்பு வார்த்தைகள் பேசுகிறார்கள். நிஸ்ஸங்க சேனாதிபதி அநுரவை தோல்வியடைச் செய்விப்பதற்காக கோடிக்கணக்கில் செலவிட தயார் எனக்கூறினார். இப்போது அவர் இருக்குமிடம் தெரியவில்லை. லொஹான் ரத்வத்தே உயிருடன் இருக்கும்வரை “அநுரவை ஜனாதிபதியாக்க இடமளிக்க மாட்டேன்” எனக்கூறுகிறார். மக்களின் விருப்பத்தையும் மக்களின் பலத்தையும் மாற்றியமைக்க வீண் வார்த்தை பேசுபவர்களால் முடியாது. இப்பொழுது மலர்ந்து வருவது மக்களின் விருப்பமாகும். 76 வருடகால மூர்க்கத்தனமான அயோக்கியத்தனமான ஆட்சியை வெறுத்து, அல்லற்பட்ட மக்கள் மாற்றமொன்றை எதிர்பார்த்து இருக்கிறார்கள். அந்த மாற்றத்தை பெற்றக்கொள்வதற்கான மிகச்சிறந்த இடம் தேசிய மக்கள் சக்தியே என மக்கள் நினைக்கிறார்கள். எம்மோடு மக்கள் இணைகிறார்கள். அச்சுறுத்தல்விடுத்து பொய்கூறி பணத்தை செலவிட்டு அதனை நிறுத்திவிட முடியாது. இறுதியிலாவது தாம் சனநாயக ரீதியாகிவிட்டோம் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதற்காக அந்த அபிப்பிராயத்திற்கு தலைசாய்த்து ஜனாதிபதி தோ்தலை நடாத்தி மக்களின் விருப்பத்துடனான ஒருவரை நியமித்துக்கொள்வதே தற்போது இடம்பெறவேண்டும். கட்டாயமாக இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தோ்தல் நடாத்தப்பட்டே ஆகவேண்டும்.

நாங்கள் மக்களுக்கு கூறுவது ஜனாதிபதி தோ்தல் கட்டாயமாக நடாத்தப்படும். நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த ஜனாதிபதி தோ்தலை நாட்டுக்கு புதிய யுகமொன்றை, மக்களுக்கிடையில் ஒற்றுமையை கட்டியெழுப்புகின்ற, வீழ்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புகின்ற, வறுமையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கின்ற, மறுமலர்ச்சியை உருவாக்குகின்ற ஆட்சியொன்றுக்கான அடித்தளமிடுகின்ற தோ்தலாக அமைத்துக்கொள்ள வேண்டும். இதுவரை இருந்த கனவினை நனவாக்கிக் கொள்ள முன்வாருங்கள். நிலவுகின்ற இந்த விசேட நிலைமைகளை சரிவர விளங்கிக் கொண்டு தமது பொறுப்பினை வெகுவிரைவில் ஈடேற்றுமாறு தோ்தல்கள் ஆணைக்குழுவிடம் நாங்கள் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

npp-press-presidential-election

“ஆணைக்குழு தொடர்பிலான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்வதற்கான இயலுமை தோ்தல்கள் ஆணைக்குழுவிடமே இருக்கின்றது.”
-தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டாக்டர் நிஹால் அபேசிங்க-

இன்று எமது நாட்டுக்கு மிகவும் முக்கியமான ஒரு நாளாகும். ஜனாதிபதி தோ்தலை நடாத்துதல் பற்றிய திகதியை பிரகடனம் செய்து அதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் இன்று தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கிறது. தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு அது பற்றி ஞாபகப்படுத்தவும் தோ்தல்கள் ஆணைக்குழு பற்றிய மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்குமான இயலுமை தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கே இருக்கின்றது. தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கின்ற அதிகாரத்துடன் ஜனாதிபதி தோ்தல் நடாத்தப்படுகின்ற தினத்தை விரைவில் அறிவிக்குமென நாங்கள் நினைக்கிறோம். ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஆட்சியாளர்கள் மிகவும் நிர்க்கதிநிலையுற்று, அச்சமடைந்து, பதற்றமடைந்துள்ளார்கள். ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் எனவும் தோ்தலை விரைவாக நடத்தவேண்டுமெனவும் நீதிமன்றம் திட்டவட்டமான தீர்மானத்துடன் இருக்கின்றதென்பது தோ்தலை நடத்துவதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை மூலமாக தெளிவாகிவருகின்றது. சீக்கிரமாக தோ்தலை நடாத்துவதற்கான தினத்தை பிரகடனம் செய்யுமாறு நாங்கள் தோ்தல்கள் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கிறோம்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தோ்தலை இலக்காகக் கொண்டு அஸ்வெசுமவை பெற்றுக்கொடுக்க, இளைப்பாறிய இராணுவ அங்கத்தவர்களுக்கு புதிய கவனிப்புகளை கொடுக்க, புலமைப்பரிசில்களை உருவாக்கிட ஜனாதிபதி நிதியத்திலிருந்து பல்வேறு நோய்களுக்கு நிதியுதவி வழங்க முயற்சி செய்கிறார். இதுவரை ஆளும் வர்க்கங்கள் அனைத்தும் தோ்தல்களை இலக்காகக்கொண்டு புரிந்த செயற்பாங்கினையே அவரும் செய்கிறார். இவை மூலமாக மக்களை ஏமாற்ற முடியுமென ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். இந்த நேரத்திலேயே மக்களை தவறாக வழிநடத்துகின்ற மக்கள் கருத்துக்கணிப்பு, ஊடக களியாட்டங்கள், நாளுக்குநாள் புதிய செய்தியொன்றை கொண்டுவந்து மக்களின் மனதை குழப்பியடித்து வழமைப்போல மக்களின் அபிப்பிராயத்தை மாற்றியமைத்து அதிகாரத்தை தம்வசம் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாங்கில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் சரியாக நாட்டை ஆட்சி செய்திருப்பின் இந்த நாடு வங்குரோத்து அடைந்திருக்கமாட்டாது. இவர்கள் அதிகாரத்தின் மீதுள்ள பேராசையையே வெளிக்காட்டுகிறார்கள். இதுவரை புரிந்த திருட்டுக்கள் ஊழல்கள் அம்பலமாவதை தடுக்கும் நோக்கத்துடன்தான் மக்கள் மனதை திரிபுபடுத்தி தோ்தல் பெறுபேறுகளை மாற்றியமைக்க முயற்சி செய்கிறார்கள். எமது நாட்டை வங்குரோத்து அடையச் செய்விக்க காரணமாக அமைந்த அனைவரும் ஒன்று சோ்ந்து தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்புகின்ற அரசியல் இயக்கம் அதிகாரத்திற்கு வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மக்கள் விவேகமான தீர்மானமொன்றை மேற்கொள்ள தயார். ஜனாதிபதி தோ்தலின் போது மக்கள் இந்த ஊழல் போ்வழிகளுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள். கிடைக்கின்ற முதலாவது வாய்ப்பிலேயே இந்த ஆட்சியாளர்களை விரட்டியடிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். 2022 இல் மேற்கொண்ட போராட்டத்தின் எஞ்சிய பகுதியை பூர்த்தி செய்ய மக்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். இந்த நாட்டு மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலின் போது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்கவை வெற்றியீட்டச் செய்வித்து நாட்டை சாதகமான திசைக்கு நகர்த்திச் செல்ல தயாராக இருக்கிறார்கள் என நாங்கள் நம்புகிறோம்.

npp-press-presidential-election

“ஜனாதிபதி தோ்தல் தொடர்பிலான மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளமை ஆட்சியாளர்கள் சீக்கிரமாக வீட்டுக்குப் போக வேண்டி நேரிடும் என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.”
-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி ஹர்ஷண நானாயக்கார-

தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி தோ்தலுக்கான திகதியை அறிவிக்கவும் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரம் கிடைத்திருக்கிறது. நடைமுறையில் இயலுமானவரை சீக்கிரமாக அதனை செய்யுமாறு நாங்கள் தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு நினைவுறுத்தல் செய்கிறோம். வேறு சந்தர்ப்பத்தில் போலன்றி மக்கள் ஜனாதிபதி தோ்தல் வரும்வரை எதிர்பார்ப்பினை சுமந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் தோ்தல் பற்றி கேட்கின்ற அளவு அதிகரிப்பதன் மூலமாக ஆட்சியாளர்கள் வெகுவிரைவில் வீடு செல்ல வேண்டி நேரிடும் என்ற விடயமே சுட்டிக்காட்டப்படுகிறது. வீட்டுக்குச் செல்லவேண்டி நேரிடும் என்பதை அறிந்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மக்களின் மனதில் சந்தேகத்தையும் ஐயப்பாட்டினையும் ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இந்த ஜனாதிபதி தோ்தலை பிற்போடுவதற்கு எந்த விதமான வழிமுறையும் கிடையாதென்பதை நான் ஒரு சட்டத்தரணி என்ற வகையிலே கூறுகிறேன். ரணில் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்துமே தோல்வி கண்டுள்ளன. ரணில் என்னதான் முயற்சிகளை எடுத்தாலும் எங்கள் நாட்டின் தோ்தல்கள் சட்டங்களின்படி இந்த ஜனாதிபதி தோ்தலை பிற்போட முடியாது. அதனால் அனைவரும் அந்த ஐயப்பாட்டினை மனதிலிருந்து அகற்றிக்கொள்ள வேண்டும்.

அதைப்போலவே சட்டமும் அரசியலும் என்பது இரண்டாகுமென நான் கூறுகிறேன். எல்லாமே சட்டத்தின்படி இடம்பெறுவதில்லை. சட்டத்தின் இலக்கண வழுக்களை பிடித்துக்கொண்டு ஆட்டம் போட்டாலும் அரசியலின் போக்கு இருப்பது வேறொரு இடத்தில் என்றால் அதுவொரு வித்தியாசமான நிலைமையாகும். இந்த மாத இறுதிக்குள் தோ்தல் திகதி தெளிவாகவே அறிவிக்கப்பட்டுவிட்டால் ரணில் விக்கிரமசிங்க ஒரு ஜனாதிபதி வேட்பாளராவார். அவர் வேட்பாளராகி தனது அதிகாரத்தை பாவித்து அவர் போட்டியிடுகின்ற தோ்தலுக்கு அழுத்தம் ஏற்படுத்துகின்ற வேலைகளை செய்வாராயின் அது எந்தளவிற்கு அரசியல் அமைப்புடன் அமைந்தொழுகுகின்றது, சட்டவிரோதமானது என்பதை நாங்கள் கேள்விக்குட்படுத்த நேரிடும். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளரான பின்னர் தோ்தலுக்கு அழுத்தம் கொடுத்து எதையாவது செய்ய முற்படுவாராயின் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கவும் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் தயார். தெளிவாகக்கூறுவதானால் ரணிலும் முழுமையாகவே பெயில். அவர் வீட்டுக்கு போவார். அது தொடர்பில் சிக்கல் கிடையாது. தேசிய மக்கள் சக்தியின் அடிமட்டத்திலான தோழர்கள் ஐயப்பாடு கொள்ளவேண்டாம். ஜனாதிபதி தோ்தல் வரும். தத்தமது வேலைகளை உச்சமட்டத்தில் செய்யுமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.

Show More