Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்திற்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பு

(-Colombo, July 08, 2024-) ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) இலங்கைப் பிரதிநிதி திரு. Christian Skoog மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (08) முற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. எதிர்காலத்தில் நடாத்தப்படவுள்ள தேர்தல் காலப்பகுதிக்குள் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்துக்கொள்ளல் மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல் சம்பந்தமாக அரசியல் கட்சிகளுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கான UNICEF நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு […]

(-Colombo, July 08, 2024-)

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) இலங்கைப் பிரதிநிதி திரு. Christian Skoog மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (08) முற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

எதிர்காலத்தில் நடாத்தப்படவுள்ள தேர்தல் காலப்பகுதிக்குள் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்துக்கொள்ளல் மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல் சம்பந்தமாக அரசியல் கட்சிகளுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கான UNICEF நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு படிமுறையாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றது. தேர்தல் காலத்தில் சிறுவர்களின் உரிமைகள் மீறப்படாதிருப்பதற்காக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பிற்கான தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் பற்றி இதன்போது UNICEF பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதோடு எதிர்கால இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகின்ற சமூகமொன்றை தாபித்தல் தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் UNICEF இலங்கை அலுவலகத்தின் தொடர்பாடல் பிரதானி திரு. Bismarck Swangin அவர்களும் இணைந்திருந்ததோடு UNICEF இலங்கை அமைப்பினால் சிறுவர்களின் பாதுகாப்பிற்காக தயாரிக்கப்பட்ட கொள்கைச் சட்டகம் இதன்போது தேசிய மக்கள் சக்தியிடம் கையளிக்கப்பட்டது.

Unisef-to-npp-sri-lanka
Show More

“புதிய அரசியல் கலாச்சாரத்தினால் மாத்திரமே பொருளாதார தீர்வினை அடையமுடியும்.” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(-கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை வளங்கள் தொழில்வாண்மையாளர்களின்தேசிய மாநாடு – 2024 – 07- 06-) அரசியல் நிலைமாற்றமொன்றை மேற்கொள்ள அண்மித்துள்ள நேரத்திலேயே நாங்கள் இந்த உரையாடலை மேற்கொள்கிறோம். இந்த மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி தோ்தலை நடாத்துவதற்கான அதிகாரம் தோ்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கின்றது. எனினும் தோ்தல் நடாத்தப்படுமா இல்லையா என்கின்ற ஐயப்பாடு சமூகத்தில் நிலவுகிறது. எமது அரசியலமைப்பின் 19 வது திருத்தம் மூலமாக ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ள காலம் ஐந்து வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசியல் அமைப்பு […]

(-கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை வளங்கள் தொழில்வாண்மையாளர்களின்
தேசிய மாநாடு – 2024 – 07- 06-)

Vet-Summit

அரசியல் நிலைமாற்றமொன்றை மேற்கொள்ள அண்மித்துள்ள நேரத்திலேயே நாங்கள் இந்த உரையாடலை மேற்கொள்கிறோம். இந்த மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி தோ்தலை நடாத்துவதற்கான அதிகாரம் தோ்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கின்றது. எனினும் தோ்தல் நடாத்தப்படுமா இல்லையா என்கின்ற ஐயப்பாடு சமூகத்தில் நிலவுகிறது. எமது அரசியலமைப்பின் 19 வது திருத்தம் மூலமாக ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ள காலம் ஐந்து வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசியல் அமைப்பு பற்றிய பொருள்கோடலை வழங்குகின்ற உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மேற்படி பதவிக்காலம் ஐந்து வருடங்களென ஊகித்துள்ளனர். அரசியலமைப்பில் இருக்கின்ற சிறிய துவாரங்களை பயன்படுத்திக்கொண்டு விடாப்பிடியாக அதிகாரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான முயற்சியை மேற்கொண்டு வருபவர் மக்கள் ஆணை மூலமாக அதிகாரத்திற்கு வந்த ஒரு தலைவரல்ல. மக்கள் அவருக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யக்கூட அதிகாரத்தை கொடுக்கவில்லை. பாராளுமன்றத்தினூடாக பெற்றுக்கொள்கின்ற அதிகாரத்தின் மூலமாக பலவந்தமாக அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து முயற்சிகளையும் தோற்கடிப்போம் என்பதை நாங்கள் உங்கள் முன்னிலையில் உறுதியாகக்கூறுகிறோம்.

இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வாக அமைவது பொருளாதாரத் தீர்வேயன்றி அரசியல் தீர்வுகளல்லவென அவர் கூறினார். எங்களுடைய இந்த நெருக்கடியை தீர்த்துவைக்க ஆரம்பிக்கமுடிவது அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க ஆரம்பித்தால் மாத்திரமே என நாங்கள் நம்புகிறோம். எந்தவொரு நாட்டையும் கட்டியெழுப்புவதற்காக மக்கள் ஆணையைக் கொண்ட ஆட்சியொன்று அவசியம். பொருளாதாரம் சீரழிந்துள்ள ஒரு நேரத்தில் அத்தியாவசியமான காரணியாக அமைவது அது சம்பந்தமாக மேற்கொள்ளப்படுகின்ற தீர்வுச் செயற்பாடுகள் கட்டாயமாக மக்களின் ஆணையிலிருந்து பிறப்பதாக அமையவேண்டும். இரண்டாவது விடயம் தான் நெருக்கடிக்கான தீர்வுகளை நெருக்கடியின் சிருஷ்டிக் கர்த்தாக்களால் கண்டுபிடிக்க முடியாதென்பது. பொதுமக்கள் அது தொடர்பில் நம்பிக்கை வைப்பதும் கிடையாது. இந்த நெருக்கடியின் பெரும் பங்கினை வகிப்பது இந்த அரசியல் கலாச்சாரமாகும். எமது நாட்டுக்கும் அத்தியாவசியமான பெருந்தொகையான கருத்திட்டங்கள் பின்நோக்கி நகர்ந்துள்ளன. அநாவசியமான கருத்திட்டங்கள் அமுலாக்கப்பட்டு வருகின்றன. உங்கள் திணைக்களத்தினால் விஞ்ஞான ரீதியான அடிப்படையின் பேரில் முன்வைக்கப்படுகின்ற விடயங்களை நிராகரித்து விலங்குகளை இறக்குமதி செய்தார்கள். அத்தியாவசிய கருத்திட்டங்களுக்கு பணத்தை ஒதுக்காமல் வேறுவேறு விடங்களுக்காக பணத்தை ஒதுக்குகிறார்கள். அங்கு இயங்கிவருவது மறைமுகமான அரசியல் கரமாகும். பொருளாதார தீர்வுக்கான பாதையை புதிய அரசியல் கலாச்சாரம் மூலமாக மாத்திரமே உருவாக்க முடியும். அரசியல் கலாச்சாரத்தின் நிலைமாற்றம் பாரியளவில் எமது கைகளிலேயே பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

Vet-Summit

பகிரங்க சேவையும் பகிரங்க ஊழியர்களின் கணிசமான எண்ணிக்கையும் இந்த மறைமுகமான அரசியல் கரத்தினால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. கால்நடை வளங்கள் பற்றி என்னிடமிருப்பது மோப்பமாகும். உங்களிடமிருப்பது அறிவாகும். எந்தவொரு துறையையும் அபிவிருத்தி செய்கையில் அந்த தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள சிறப்பறிஞர்கள் பொறுப்பினை திட்டவட்டமாக குறிப்பிட்டு செயலாற்றத் தொடங்குவோம். அரசியல்வாதிக்கும் தொழில்வாண்மையாளருக்குமிடையில் வைத்துக்கொள்ளப்படவேண்டிய வரையறைகளை பிரித்தொதுக்கியிராமையால் பேரழிவுக்கு அது வழிசமைக்கின்றது. கொள்வனவு செய்வதற்கான ஒழுங்கமைந்த நடைமுறையை கடைப்பிடிப்பதன் மூலமாக தொழில்வாண்மையாளர் டென்டர் சபையில் கொள்வனவுகள் பற்றி தீர்மானிக்கவேண்டியுள்ளது. அரசியல்வாதி தொழில்வாண்மையாளரின் செயற்பொறுப்பினை ஒரு புறம் ஒதுக்கிவைத்துவிட்டு தான் தெரிவு செய்கின்ற ஒருவரிடம் கையளிக்க முயற்சி செய்கிறார். கரிம உரத்தை சீனாவிலிருந்து இறக்குமதி செய்கின்ற தருணத்தில் பாரிய சச்சரவு ஏற்பட்டது. இந்த உரத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்வதானால் எமது நாட்டில் விரிவடையாத நுண்ணங்கிகள் பிரவேசிப்பதால் எமது நாட்டுக்கு ஆபத்து விளையுமென்று அந்த துறையிலிருந்த விவசாய மற்றும் மண்ணியல் நிபுணர்கள் கூறினார்கள். அரசியல்வாதி ஆராய்ச்சி செய்கின்ற உத்தியோகத்தர்கள் ஒரு இன்ஜெக்ஷன் மூலமாக இவற்றில் நுண்ணங்கிகளை உட்புகுத்தியதாக கூறுகிறார். தமது பணியை முறைப்படி ஈடேற்றிய தொழில்வாண்மையாளர்களுக்கு சமூகத்தின் முன்னிலையில் அச்சுறுத்தலையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்தினார்கள். அந்த தொழில்வாண்மையாளர்கள் தமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளாமல் எமது நாட்டின் சுற்றாடல் முறைமையை பாதுகாப்பதற்காக மேற்கொள்கின்ற முயற்சிகள் தொடர்பில் நாங்கள் நன்றிக்கூற கடமைப்பட்டிருக்கிறோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இந்த சம்பந்தப்பட்ட விடயத்தை முறைப்படியே பிரித்தொதுக்களுக்கு இலக்காக்குவோம். கால்நடை வளங்கள் பற்றிய அபிவிருத்தித் தொடர்பான திட்டங்களை வகுக்க, அமுலாக்க, வழிகாட்டல்களை வழங்கவேண்டியது அமைச்சரல்ல. அதனை செய்யவேண்டியவர்கள் அது பற்றிய முறைமைச் சார்ந்த கல்வியறிவு பெற்றுள்ள அனுபவம்வாய்ந்த நீங்களேயாவீர்கள்.

நாட்டு மக்களின் போஷாக்கிற்கு அவசியமான பால், இறைச்சி, முட்டை, மீன் மற்றும் விவசாய உற்பத்திகளை கால்நடை வளங்கள் துறைமூலமாகவே பூர்த்தி செய்து கொள்கிறோம். நாங்கள் போஷாக்கு தேவை தொடர்பான பாரிய நெருக்கடியிலேயே இருக்கிறோம். வயது 5 வருடங்களுக்கு குறைவாக பிள்ளைகளின் 19% போஷாக்கின்மைக்கு இறையாகியுள்ளார்கள். கர்ப்பிணித் தாய்மார்களில் ஏறக்குறைய 22% வீதத்திற்கு கிட்டிய எண்ணிக்கை கொண்டோர் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எடைகுறைந்த பிள்ளைகளின் பிறப்பு எண்ணிக்கை துரிதமாக அதிகரித்து வருகிறது. பிரஜை ஒருவரின் நாளாந்த பால் தேவை 200 மில்லிமீற்றராகும். ஒருவருடத்திற்கு 1600 மில்லியன் லீற்றர் பால் அவசியம். 2022 இல் சமர்ப்பித்த அறிக்கைக்கிணங்க 380 மில்லியன் இருந்தாலும் 2023 இல் 345 மில்லியன் லீற்றரே இருந்தது. ஒரு சிலர் பால் நுகரப்படுகின்ற அளவின்படியே கணிப்பிடுகிறார்கள். அதன்படி நாங்கள் 40% வீதத்தை உற்பத்தி செய்துள்ளதாக கூறுகிறார்கள். அது சரியான கணிப்பீடு அல்ல. எதிர்காலத்தில் நுகரப்படுகின்ற பாலின் அளவு மேலும் குறைவடையும். அதிலிருந்து கோரமுடியாது. பால் உற்பத்தி அதிகரித்துவிட்டதென எம்மால் கூறமுடியாது. நுகரப்படுகின்ற அளவு போதுமானதா என்பதைத்தான் நாங்கள் பார்க்கவேண்டும். அதற்கிணங்க நாங்கள் பாலில் தண்ணீரைவு கண்டுவிட்டோம் என எம்மால் கூறிவிட இயலாது. மக்களின் போஷாக்கு தேவையை நிறைவு செய்வதற்காக எமக்கு கால்நடை வளங்கள்துறை மிகவும் முக்கியமானது.

Vet-Summit

எமது நாட்டின் பால் உற்பத்தியில் 90% வீதத்திற்கு கிட்டிய அளவினை சிறிய உற்பத்தியாளர்களே வழங்குகிறார்கள். அந்த உற்பத்தியாளர்களின் ஏறக்குறைய 80% வீதமானவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள். அது அவர்களின் பொருளாதாரத் தரத்தை பலப்படுத்த போதுமானதாக அமையவில்லை. எமது நாடு எதிர்நோக்கியுள்ள பிரதானமான பிரச்சினை வறுமையாகும். பாரம்பரிய ரீதியான வறுமை, ஏதேனும் அனர்த்தம் காரணமாக ஏற்படுகின்ற வறுமை, எதிர்பாராத நிலைமைகள் காரணமாக ஏற்படுகின்ற வறுமை, தொலைதூர கிராமிய குடியேற்றங்களில் பிறந்தமை காரணமாக பொருளாதார வாய்ப்புகளை இழந்துள்ளமையால் ஏற்பட்டுள்ள வறுமை என்பன அவையாகும். இந்த வறுமையை சமூகத்திலிருந்து ஒழித்துக்கட்டுவது எவ்வாறு என்பது நாங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினையாகும். வறுமை நிலைக்குள்ளான மக்களை பொருளாதாரச் செயற்பாடுக்குள் அழைக்கவேண்டுமானால் அவர்களுக்கு தான் ஈடுபடுகின்ற பொருளாதார சாத்திய வளம் தமக்கு பலம்பொருந்திய வருமானத்தை பெற்றுக்கொடுக்கின்ற சாத்தியவளமாக விருத்தி செய்யப்படல் வேண்டும். வறுமையை ஒழித்துக் கட்டுவதற்காக பொருளாதார வாய்ப்புக்கள் அற்ற குழுக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை விலங்கு வேளாண்மை கால்நடை வளங்கள் துறைமூலமாக உருவாக்கிக் கொடுக்கலாம். அதற்கான சாத்தியவளம் அதில் நிலவுகின்றது. கிராமிய வறுமைநிலையை ஒழித்துக்கட்டுவதற்காக கால்நடை வளத்துறைக்கு பாரிய பொறுப்பு கையளிக்கப்படுகின்றது. ஒரு காலகட்டத்தில் அரசாங்கத்தினால் இறக்குமதி செய்த ஒரு பசுவின் பெறுமதி நாலரை இலட்சமாக அமைந்தது. அரசாங்கம் இரண்டரை இலட்சம் மானியத்தை விவசாயி ஒருவருக்கு வழங்க தீர்மானித்தது. மிகவும் அதிகமான மானியத்தை இரண்டு அமைச்சர்களே பெற்றுக்கொண்டார்கள். அந்த அமைச்சர்களே வறுமையை ஒழித்துக்கொண்டார்கள். வறுமையை ஒழிப்பதற்காக அந்தந்த பொருளாதார சாத்தியவளங்கள் இலக்குகளைக் கொண்டதாக மக்களுடன் பயணிக்கவேண்டும்.

தமக்கு அவசியமான உணவு பொருட்களை அந்தந்த நாடுகள் உற்பத்தி செய்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை எமக்கு கொவிட்டுக்கு பிற்பட்ட நிலைமையினால் நிரூபிக்கப்பட்டுள்ளது. தேசிய பொருளாதாரத்திட்டமொன்றில் தமது அத்தியாவசியமான உணவுகளை தாம் உற்பத்தி செய்து கொள்ளவேண்டும் என்கின்ற எண்ணக்கரு முழுஉலகிலும் பேசப்பட்டு வருகின்றது. அதனால் புதிய பொருளாதாரத் திட்டமொன்றுக்கு நாங்கள் செல்லவேண்டும். எமது பொருளாதார நெருக்கடியின் இரண்டு தோற்றுவாய்கள் இருக்கின்றன. ஒன்று திறைசேரி வருடமொன்றுக்கு தேவையான அளவிலான ரூபாவை ஈட்டுவதில்லை. எமது வருமானம் ஆண்டொன்றுக்கு 4168 பில்லியன் ரூபாவாகும். கடன் செலுத்துதல், கடன் தவணை செலுத்துதல், அரசாங்க செலவினம் அனைத்தினதும் கூட்டுத்தொகை 11,277 பில்லியன் ரூபாவாகும். நாங்கள் திறைசேரிக்கு அவசியமான ரூபாவின் அளவினைப்போன்றே நாட்டுக்கு அவசியமான டொலர் அளவினையும் ஈட்டுவதில்லை. இதுவரை கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கையின் பெறுபேறுதான் இது அரசாங்கம் செல்வத்தை ஈட்டுவது கிடையாது. வெளியில் உற்பத்தி செய்யப்படுகின்ற செல்வத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் எடுத்து செலவிட்டு வருகின்றது. கம்பெனிகளிடமிருந்து அதன் இலாபம் மீது வரி விதித்து ஒரு பகுதியை எடுத்துக்கொள்கிறது. வெளியிலுள்ள பொருளாதாரத்தை விருத்தி செய்து விரிவடையச் செய்விப்பதன் மூலமாக மாத்திரமே நெருக்கடிக்கு தீர்வினை கண்டறிய முடியும். வெளியிலுள்ள பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியது எமது திட்டமாக அமையவேண்டும். வெளியிலுள்ள பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்வது எப்படி? வெளியிலுள்ள பொருளாதாரத்தின் சாத்திய வளம் நிலவுகின்ற ஒரு இடம் தான் கால்நடை வளங்கள் துறை. அதனைச் சார்ந்த வகையில் பல கைத்தொழில்களை ஆரம்பிக்க முடியும். அந்தக் கைத்தொழில்களிலிருந்து தேசிய செல்வத்தை பிறப்பித்தவிடத்து அதில் ஒரு பங்கினை அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ள முடியும். பால் மற்றும் பால்சார்ந்த உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்காக 2022 ஆம் ஆண்டில் 68 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. (6,800 கோடி) இந்த உற்பத்தியை நாங்கள் அதிகரித்துக்கொண்டால் 200 மில்லியன் டொலருக்கு கிட்டியளவினை சேமித்துக்கொள்ள முடியும்.

Vet-Summit

15 ஆம் நூற்றாண்டிலிருந்து 19 ஆம் நூற்றாண்டுவரை கலைஞர்கள், விஞ்ஞானிகள், அரசியல் சிந்தனையாளர்கள் போன்றவர்கள் எதிர்கால உலகம் பற்றி சிந்தித்துப் பார்த்தார்கள். அவ்வாறு சிந்தித்துப் பார்த்த எதிர்காலம் இருபதாம் நூற்றாண்டிலே பௌதீக ரீதியாக கட்டியெழுப்பப்பட்டது. தொழிநுட்பத்தின் விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தினால் மனிதர்களுக்கு உண்ணக்கொடுக்க முடியுமென்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டது. அதைப்போலவே விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்துறைகளில் பாரிய மாற்றங்கள் இ்டம்பெற்றன. அந்த மாற்றத்திற்கு நோரொத்த வகையில் உலகின் பெரும்பாலான நாடுகள் தனது பொருளதாரத்தை வகுத்துக்கொண்டன. எமது பொருளாதாரத்தையும் அதற்கிணங்க வகுத்துக் கொள்வதற்கு பதிலாக நாங்கள் அவற்றின் நுகர்வோர்களாக மாறினோம். பாரிய ஔடத முன்னேற்றமொன்று இடம்பெற்றது. சுகாதாரம் பற்றி கண்டறிவதற்காக நவீன உபகரணங்கள் உருவாகின. எனினும் நாங்கள் செய்ததோ அவற்றை கொண்டு வந்து நுகர்ந்தது மாத்திரமே. விஞ்ஞானத்தில், தொழிநுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தை எங்களுடைய பொருளாதார அபிவிருத்திக்கான உபாகமார்க்கமாக எடுத்துக்கொள்வதில் நாங்கள் தோல்வியடைந்தோம்.

உற்பத்திக் கிரயத்தை குறைத்துக் கொள்ளவும், தரத்தை அதிகரித்துக்கொள்ளவும், உற்பத்தியிலும் இடையறாத தன்மையை பாதுகாத்துக்கொள்ளவும் தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் இடம்பெற்ற மாற்றத்தை நாங்கள் இணைத்துக்கொள்ள வேண்டும். போஷாக்கு தேவையை நிவர்த்தி செய்தல், வறுமையை ஒழித்துக்கட்டுதல் தேசிய பொருளாதாரம் எதிர்நோக்கியுள்ள சிக்கல்களை தீர்த்துக்கொள்வதற்காக கால்நடை வளங்கள் துறையை முக்கியமாக கருதுகிறோம். செல்லப்பிராணிகளின் பாதுகாப்பு மூலமாக தொழில்வாய்ப்புகளை பிறப்பிப்பதற்காகவும் கால்நடை வளங்கள் துறை முக்கியமானதாக அமைகின்றது. வெளியில் பொருளாதாரமொன்று கட்டியெழுப்பப்பட்டால் மாத்திரமே தொழில்வாய்ப்புகள் பிறக்கும். அதைப்போலவே நிகழ்கால இளைஞர் தலைமுறையினரின் உளப்பாங்குகள் சுதந்திரமான தொழில்களையே நோக்கியதாக இருக்கிறது. புதிய இளைஞனின் உளப்பாங்குகளுக்கு ஒத்துவரக்கூடிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதில் நாங்கள் தோல்வியடைந்திருக்கிறோம். எமது தேசிய பொருளாதாரத்திட்டத்தின் முக்கியமான ஒரு துறையாக கால்நடை வளங்கள்துறை வழங்கப்படுகிறது. எவ்வாறு நாங்கள் கால்நடை வளங்கள் துறையை அபிவிருத்தி செய்வது? உங்களை அதன் தொழில்நுட்ப வினைஞர்களாக, விஞ்ஞானிகளாக, ஆராய்ச்சியாளர்களாக இனங்கண்டுள்ள சரியானவற்றை அமுலாக்குவதற்கு அவசியமான அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதுதான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைச் சோ்ந்த எங்களின் பொறுப்பு. இந்த தொழிற்றுறையை விருத்தி செய்வதற்காக ஏற்கெனவே திட்டமொன்றை நாங்கள் வகுத்துள்ளோம்.

இந்த இடத்தில் மிகவும் முக்கியமானதாக அமைவது மனித வளமாகும். எமது உழைப்பு படையணியின் தொழில்வாண்மைத்துறையில் 15% வீதமானவர்களே இருக்கிறார்கள். தொழில்சார் உழைப்பு மூலமாகத்தான் ஏனைய உழைப்புகள் உற்பத்தித்திறன் மிக்கதாக அமையும். தொழில்சார் உழைப்புகளை நிர்மாணித்துக்கொள்வதற்காக நீண்ட நேரத்தையும் பாரிய செலவுச் சுமையையும் நாங்கள் வகிப்போம். பயிற்றப்பட்ட இந்த தொழில்சார் துறையை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அரசியல்வாதியினதும் கொள்கைவகுப்போரதும் பொறுப்பாகும். தொழில்வாண்மையாளர்களின் உரிமைகளை நாங்கள் பாதுகாக்க வேண்டும். துறைசார்ந்த பாரிய அனுபவம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்களான நீங்கள் எமக்கு ஒரு திட்டத்தை தயாரித்துக் கொடுங்கள். நாங்கள் அவசியமான தலைமைத்துவத்தை வழங்குகிறோம். ஒரு இடத்தில் நாங்கள் முடிச்சுப்போட்டுக்கொள்ளுவோம். இந்த நாட்டை கட்டியெழுப்ப அனைவருக்கும் உண்மையான தேவை இருக்க வேண்டும். தோன்றியுள்ள இந்த அனர்த்தத்திலிருந்து இந்த தாய் நாட்டையும் எமது நாட்டு மக்களையும் மீடெடுக்க வேண்டு மென்ற ஒரே நூலினால் நாங்கள் முடிச்சுப்போட்டுக்கொள்வோம். நாங்கள் அனைவரும் ஒரே இணக்கப்பாட்டில் இருந்துகொண்டு நாட்டை புதிய திசைக்கு நிலைநாட்டுவோம். அதற்கான அனைவரையும் ஒன்றுசேருமாறு அழைப்பு விடுக்கிறோம்.

Vet-Summit
Show More

“கிராமத்து இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றுவதற்கும் கிராமத்தை முன்னேற்றவும் எம்மிடம் சிறந்த பொருளாதாரத்திட்டம் ஒன்று இருக்கிறது. கமக்காரர்களுக்கு மன நிம்மதி நிறைந்த உண்மையான வாழ்க்கையை பெற்றுக்கொடுப்பது எமது நோக்கமாகும்…” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திசாநாயக்க-

(-திசைகாட்டியின் சூரியவெவ கமக்காரர் பேரணி – 2024-07-02-) இங்கு குழுமியுள்ள கமக்காரர்கள் ஆர்ப்பாட்டங்களை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷ முட்டாள்த்தனமான தீர்மானமொன்றை எடுத்தார். கமத்தொழிலுக்காக வழங்குகின்ற இரசாயனப் பசளையை நிறுத்த தீர்மானித்தார். அந்த தீர்மானத்தை எடுக்கும்போது மகிந்த அமரவீர, நாமல் ராஜபக்ஷ அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களாவர். மகிந்த ராஜபக்ஷ பிரதமர். “உரத்தை பெற்றுக்கொடு” என ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய நிலை கமக்காரர்களுக்கு ஏற்பட்டது. அதுமாத்திரமல்ல, சந்திரிக்கா வெவவிலிருந்து நீரை விடுவிப்பதை நிறுத்தினார்கள். […]

(-திசைகாட்டியின் சூரியவெவ கமக்காரர் பேரணி – 2024-07-02-)

Govi-Rally-Sooriyawewa

இங்கு குழுமியுள்ள கமக்காரர்கள் ஆர்ப்பாட்டங்களை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷ முட்டாள்த்தனமான தீர்மானமொன்றை எடுத்தார். கமத்தொழிலுக்காக வழங்குகின்ற இரசாயனப் பசளையை நிறுத்த தீர்மானித்தார். அந்த தீர்மானத்தை எடுக்கும்போது மகிந்த அமரவீர, நாமல் ராஜபக்ஷ அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களாவர். மகிந்த ராஜபக்ஷ பிரதமர். “உரத்தை பெற்றுக்கொடு” என ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய நிலை கமக்காரர்களுக்கு ஏற்பட்டது. அதுமாத்திரமல்ல, சந்திரிக்கா வெவவிலிருந்து நீரை விடுவிப்பதை நிறுத்தினார்கள். கமநிலங்கள் நாசமடைய இடமளித்தார்கள். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு நீரைப்பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை கமக்காரர்களுக்கு ஏற்பட்டது. யானைகள் ஊர்களுக்குள் வருவதை தடுக்குமாறு கோரி சூரியவெவ மயுரபுர பிரதேச மக்களுக்கு நீண்டகால உண்ணாவிரதத்தில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்பட்டது. தமது கமத்தொழில், ஆதனங்கள், வீடுகள் அழிவடைகையில் மக்கள் அவற்றுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்குமாறு கோரி வீதியில் இறங்கினார்கள். நெல்லுக்கு நியாயமான விலையை கோரி வீதியில் இறங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் இந்த கமக்கார தாய்மார்களையும் தந்தையர்களையும் தமது தேவைகளை பெற்றுக்கொடுக்குமாறு வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கின்ற யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்து கமக்காரர்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற புதிய அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்வோம் என அழைப்பு விடுப்பதற்காகவே வந்திருக்கிறோம். கிராமத்து மக்களின் பிரச்சினைகள் பற்றி, பொருளாதாரம் பற்றி, விவசாயம் பற்றி சிந்திக்கின்ற புதிய அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்ள வேண்டிய தேவை நிலவுகின்றது. அந்த அரசாங்கத்தை அமைத்துக்கொள்வதற்கான மிகச் சிறந்த வாய்ப்பு தற்போது உருவாகியிருக்கிறது. நாங்கள் இந்த தடவை வந்தது பாராளுமன்றத்தின் எங்களுடைய எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளுமாறு கோருவதற்காக அல்ல. 76 வருடங்களுக்கு பின்னர் மக்களின் அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்வதற்காக ஒன்றுசேருவோம் என அழைப்பு விடுக்கவே நாங்கள் வந்திருக்கிறோம்.

இதற்கு முன்னர் நாங்கள் பல்வேறு கட்சிகளாக பிரிந்திருக்கலாம். அது வரலாறு: நாங்கள் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகையில் யூ.என்.பி., ஸ்ரீ லங்கா, ஜே.வி.பி. என்ற பேதம் கிடையாது. அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கிறோம். அரசாங்கம் எம்மை கட்சி ரீதியாக பிரிக்கின்றது. ஊர்களில் அவ்விதமாக பிளவுப்பட்டிருந்த யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நாங்கள் புதிய அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்வதற்காக ஒன்று சோ்வோம். நாட்டின் சாதாரண குடிமக்கள் புதிய எதிர்பார்ப்புடன் அணிதிரண்டிருக்கிறார்கள். மக்கள் மரபு ரீதியான யூ.என்.பி. ஸ்ரீ லங்கா, கட்சி நிறபேதங்களை கைவிட்டு திசைகாட்டியை தெரிவு செய்கையில் அவர்களும் மேல்மட்டத்தில் ஒன்றுசோ்கிறார்கள். மஹிந்த அமரவீரவும், ரணில் விக்கிரமசிங்கவும் ஒரே மேடையில் சந்திப்பார்கள் என்று எப்போதாவது சிந்துத்து பார்த்தீர்களா? அவர்கள் ஒன்று சேர்வார்கள். இங்கே இருக்கின்ற தாய்மார்களும் தந்தையர்களும் ரணில் விக்கிரமசிங்க கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணவீர, ரணிலை சிறைக்கு அனுப்பும் வரை நித்திரை வரமாட்டாது எனக்கூறிய முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, லக்ஷமன் யாப்பா, மஹிந்த அமரவீர, நாமல் ராஜபக்ஷ ஒரே மேடையில் ஒரே அரசாங்கத்தில் இருப்பார்களென நினைத்துப் பார்த்தார்களா? ஊர் மக்கள் திசைகாட்டியை சுற்றி ஒன்று சோ்கையில் அவர்கள் திசைகாட்டியை எதிர்கொள்வதற்காக மேல்மட்டத்தில் ஒன்றுசோ்கிறார்கள். கடந்த தினமொன்றில் அம்பலாந்தோட்டையில் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டமொன்று நடைபெற்றது; மொட்டுக்கட்சியில் அரைவாசிக்குமேல் அந்த மேடையில். மஹிந்த அமரவீர, சுசில் பிரேமஜயந்த, நிமல் லன்சா அந்த மேடையில். இற்றைக்கு மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் கூறினார்கள் “சரிவராது, அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்றவர் ரணில். நாட்டை நாசமாக்குபவர் ரணிலே. ரணிலிடமிருந்து நாட்டை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என்றாகும். அவ்வாறு கூறியவர்கள் “நாட்டை கட்டியெழுப்பக்கூடியவர் ரணிலே” என இன்று கூறுகிறார்கள். அது ஏன்? அவர்கள் தப்பித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

76 வருடங்களுக்கு பின்னர் இலங்கையில் முதல் தடவையாக பொதுமக்களின் அரசியல் இயக்கமொன்று அதிகாரத்தை பெறமுயற்சி செய்கின்றது. அவர்கள் பயந்துவிட்டார்கள். அவர்களின் அனைத்துவிதமான பகைமைகள், பழைய கோபதாபங்கள், கருத்தியல்கள் அனைத்தையும் ஒரு புறம் வைத்துவிட்டு ஒன்றுசோ்ந்துள்ளார்கள். அவர்களின் கையிலுள்ள அதிகாரம் பொதுமக்களின் கைக்கு மாறுவதை தடுக்கவேண்டுமாயின் அவர்கள் ஒன்று சேரவேண்டும். இப்போது ஐ.ம.ச. ராஜித சேனாரத்ன உள்ளிட்ட 15 போ்களை கொண்ட ஒரு குழுவும் அண்மையில் கபீர் ஹஷிமின் வீட்டில் ஓர் உரையரடலை நடத்தியது. இது பற்றி ராஜித தொலைக்காட்சி நோ்காணல் ஒன்றில் குறிப்பிட்டார். ஐ.ம.ச. ரணிலுடன் ஒன்று சேராவிட்டால் ஜே.வி.பி. அதிகாரத்திற்கு வந்துவிடுமென பேசப்படுகிறது. ஜே.வி.பி. அதிகாரத்திற்கு வருவதை தடுப்பதற்காகவே இவர்கள் ஒன்றுசோ்கிறார்கள். ரணிலாயினும் சரி சஜித்தாயினும் சரி வெற்றிபெறுவார்களானால் அவர்கள் ஒன்றுசேர வேண்டிய தேவை கிடையாது. இந்த அனைவரையும் ஒன்று சேருமாறு ஏன் அழுத்தம் கொடுக்கிறார்கள்? திசைகாட்டியின் வெற்றி கண்ணுக்கெட்டியதூரத்தில் இருப்பதாலாகும். மேலே இருக்கின்ற ஊழல் மிக்க பிரபுக்கள் வகுப்பைச் சோ்ந்தவர்களின் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக ஒன்று சோ்கிறார்கள்.

Govi-Rally-Sooriyawewa

அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும்; அதற்கு முகங்கொடுக்க ஊர்களிலுள்ள நாங்களும் பழைய கோபதாபங்களையும் வித்தியாசங்களையும் மறந்து ஒன்று சேரவேண்டும். இந்த சூரியவெவவில் பாரிய வெற்றியை பெறவேண்டும். நான் உங்களிடம் கேட்கிறேன். “வாழ்க்கை போதுமென்று ஆகிவிடவில்லையா?” இப்போது “நன்றாகவே போதும்” என்று எவ்வளவுதான் சிந்தித்திருப்பீர்கள்? நஞ்சு அருந்தவேண்டுமென எத்தனை தடவைகள் நினைத்திருப்பீர்கள்? வாழ்க்கை மீது விரக்தி ஏற்பட்டு வெறுப்பில் இருக்கிறீர்கள். நாம் செய்த கர்மம் என எத்தனை தடவை நினைத்திருப்பீர்கள்? அவர்கள் அப்படி நினைக்கிறார்களா? மேலும் ஒருவருடமாவது இருக்கத்தான் எத்தனிக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கையை கைவிடுமளவிற்கு பிரச்சினை கிடையாது. நாட்டு மக்களுக்கு எண்ணெய், மின்சாரம், கேஸ், தொழில் இல்லாமல் போகும்போதும் அவர்களுக்கு எல்லாமே இருக்கிறது. அவர்களுக்கு வாகனங்கள், காணிகள் இருக்கின்றன. அவர்களின் பிள்ளைகளுக்கு அமைச்சர் பதவிகள் இருக்கின்றன. ஊர் மக்களுக்கு வீடுகள் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு ஏழு எட்டு வீடுகள் இருக்கின்றன. அவர்களுக்கு மென்மேலும் வாழ்க்கை மீது இருக்கின்ற ஈடுபாடு அதிகமாகும். கிராமத்து மக்களுக்கு ஒரு வீட்டினை அமைத்துக்கொள்ள, பிள்ளைகளுக்கு கற்பிக்க, தொழில் ஒன்றை தேடிக்கொள்வது மிகவும் சிரமமானது. கமத்தொழில் புரிந்து அறுவடை செய்கின்ற விளைச்சலிலிருந்து வாழ்க்கையை ஓட்டிக்கொள்வது மிகவும் சிரமமாகும். ஊர் மக்கள் அல்லற்படுகிறார்கள். ஏன் இவ்வாறு நடந்தது?

எமது நாட்டை மேலே இருக்கின்ற ஊழல் மிக்க பிரபுக்கள் கும்பலொன்றின் சோ்க்கையே ஆட்சி செய்தது. தொடர்ந்தும் நாட்டை ஆட்சி செய்ய முனைவதும் அவர்களே. டி.எஸ். சேனாநாயக்க அவருக்கு பின் அவருடைய மகன், பண்டாரநாயக்க குடும்பம், ஜே.ஆரின் பரம்பரை, மகிந்தவின் பரம்பரை, பிரேமதாஸ இறந்த காலத்தில் நாட்டை ஆட்சி செய்தார். எதிர்காலத்திலும் நாட்டை ஆட்சி செய்ய எத்தனிப்பது அவர்களின் பரம்பரையாகும். 76 வருடங்களாக இந்த ஒரு சில குடும்பங்களின் கைகளில் தான் அதிகாரம் குவிந்திருந்தது. அவர்களின் உறவினர்களுக்கு, கொள்ளைக்கார வியாபாரிகளுக்கு, பாதாள உலகத்திற்கு கவனிப்பு கிடைக்கிறது. ஊர் மக்கள் சதாகாலமும் ஏக்கப்பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு இப்பொழுது ஒரு வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இந்த ஊழல் மிக்க கொள்ளைக்கார பிரபுக்கள் கும்பலிடமிருந்து பொதுமக்களின் கைகளுக்கு அதிகாரத்தை மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பே அது. திசைகாட்டி ஜனாதிபதி தோ்தலில் வெற்றிபெற்றதும் உடனடியாக பாராளுமன்றம் கலைக்கப்படும். பாராளுமன்றத்தில் இருக்கின்ற ஊழல் மிக்க நாசகார கும்பலை விரட்டியடிப்போம். அடுத்ததாக மாகாண சபை, பிரதேச சபை தோ்தல்களில் புதிய குழுவொன்றின் கைகளுக்கு நாட்டின் அதிகாரம் கைமாறும்.

எமக்கு ஏன் அதிகாரம் தேவைப்படுகிறது? எமக்கு தனிப்பட்ட தேவை கிடையாது. தேசிய மக்கள் சக்தியின் உயர்பீடத்தைச் சோ்ந்த எவருமே காணிகளை கைப்பற்றிக் கொள்ள, ஹோட்டல்களை பெற்றுக்கொள்ள, கல் ஆலைகளை அமைக்க, மணல் அகழ்வதற்காக, பன்னாட் கலங்களை ஈடுபடுத்த, மதுபானசாலைகளை திறக்க, பெற்றோல் ஷெட் போட வரமாட்டார்கள். ஹோட்டல் கைத்தொழில் ஈடுபடுபவர்கள் தான் ஹோட்டங்களை போடவேண்டும். கமத்தொழில் புரிபவர்கள்தான் பயிர் செய்ய வேண்டும். வியாபாரிகள் தான் பெற்றோல் ஷெட் போடவேண்டும், இரத்தினக்கல் தொழிற்துறையில் ஈடுபடுவர்கள் தான் சுரங்கம் வெட்டவேண்டும். நாங்கள் பார் திறக்கவேண்டியதில்லை. நாட்டை மீடெடுக்க நாங்கள் நல்ல திட்டமொன்றை ஆக்குவோம். அதைபோலவே நாங்கள் முதமையுற்று கைத்தடியை ஊன்றிச் செல்லும் வரை காத்திருக்க மாட்டோம். நாங்கள் உரிய காலத்தில் எமது கையிலுள்ள அதிகாரத்தை புதிய இளைஞர் தலைமுறையினரின் கைகளில் ஒப்படைத்து அவர்கள் நாட்டை ஆளுகின்ற விதத்தை பார்த்துக்கொண்டிருப்போம். எனினும் அவர்கள் இதனை கைவிட்டுச் செல்ல விரும்புவதில்லை. நடக்கக்கூட முடியாத நிலையில் இருந்து கொண்டு குடும்பத்தின் கையில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார். பிரபுக்கள் ஆட்சியின் கையில் இருந்து பொதுமக்களின் கைகளுக்கு அதிகாரத்தை எடுப்பதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. இந்த வாய்ப்பினை கைவிடவேண்டாம். ஊரின் வாக்குப்பெட்டியை திசைகாட்டிக்காக புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களினால் நிரப்ப வேண்டியதையே நீங்கள் செய்யவேண்டும்.

Govi-Rally-Sooriyawewa

நாங்கள் நாட்டின் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக தீர்த்துவைப்போம். நாட்டை கட்டியெழுப்பி பிரச்சினைகளை தீர்த்து வைக்கும்வரை ஒவ்வொரு பிரஜையினதும் உணவு, சுகாதாரம், கல்வியை உறுதி செய்வோம். உலகத்தின் ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதாரத்திலிருந்து ஓரங்கட்டப்படுகின்ற மக்கள் இருக்கிறார்கள். அதோ அந்த உயிர்வாழ துடிக்கின்ற மக்கட் பிரிவுகளை பாதுகாத்துக் கொள்வதுதான் அரசாங்கம் ஒன்றின் பொறுப்பு. மக்களுக்கு உண்ண உணவில்லாவிட்டால், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வசதிகள் இல்லாவிட்டால் மானியம் வழங்கப்படவேண்டும். வைத்தியசாலையில் மருந்துகள் இல்லாவிட்டால் வைத்தியசாலைக்கு மருந்துகளை அனுப்பிவைக்கவேண்டும். உணவு, சுகாதாரம், கல்வி மக்களின் அடிப்படை தேவைகளாகும். பணம் கிடையாது எனக்கூறுவது பொய்யாகும். ரணில் விக்கிரமசிங்க அண்மையில் 875 கோடியை ஒதுக்கிக் கொண்டார். இவர் இரண்டே மாதங்களில் வீட்டுக்கு போக இருக்கின்றவர். ஐ.ம.ச விலிருந்து அரசாங்கத்திற்கு எடுக்கக்கூடியவர்கள் என கருதப்படுபவர்களுக்கு 120 கோடியை பகிர்ந்தளித்தார். இதற்கு முன்னர் வெளிநாடு செல்வதற்கு பணம் போதாதெனக்கூறி மேலும் 2000 இலட்சம் ரூபாவை ஒதுக்கிக் கொண்டார். எனினும் வைத்தியசாலைகளுக்கு மருந்து வாங்க பணம் கிடையாதெனக் கூறுகிறார்.

அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு அவுஸ்ரேலிய கம்பெனி ஒன்று மருத்துவ உபகரணங்களை வழங்குகின்றது. அந்த நாட்டின் ஊடகவியலாளர் குழுவொன்று அதுபற்றிய விசாரணையொன்றை மேற்கொண்டது. அவுஸ்ரேலிய கம்பெனி அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு உபகரணங்களை வழங்கும்போது இலஞ்சம் கொடுத்துள்ளமை அதன்போது அம்பலமாகியது. இலஞ்சம் வழங்கியவர் சிறைக்கூடத்தில் இருக்கிறார். இங்கே இருக்கின்ற இலஞ்சம் பெற்றவர் பாராளுமன்றத்தில் இருக்கிறார். அந்த கொடுக்கல் வாங்கலை தீர்த்துவைக்க திசைகாட்டி அரசாங்கமொன்றினால் மாத்திரமே முடியும். அதனால் திருடிய, இலஞ்சம் வாங்கிய பொதுமக்களின் வரிப்பணத்தை மீளப்பெறுவதற்கான வேலைத்திட்டத்தை நாங்கள் அமுலாக்குவோம்.

கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் உலகில் ஒவ்வொரு நாடும் விவசாயம் மீது அதிக கவனம் செலுத்துகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான வேலைகளில் ஒன்றுதான் நாட்டுக்கு அவசியமான உணவை உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை அமுலாக்குவது. விவசாய உற்பத்திகள், பால் உற்பத்திகள், இறைச்சி உற்பத்திகள், மீன் உற்பத்திகள் அனைத்திலுமே நாங்கள் தன்னிறைவு அடையவேண்டும். நாட்டைச் சுற்றி எட்டு மடங்கு கடல்; அதைபோலவே நாட்டின் மத்தியில் கடல் போன்ற பாரிய குளங்கள். எம்மால் மிகச்சிறந்த மீன் அறுவடையை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மீன் உற்பத்தி கைத்தொழிலை விருத்தி செய்ய முடியும். அந்த துறையில் புதிய தொழிநுட்பத்தை சோ்த்துக் கொள்ளவேண்டும். இன்று மீன்கள் இந்த பக்கத்தில் அதிகமாக இருக்கின்றன எனும் தகவல் இந்திய மீனவனின் கையடக்கத் தொலைபேசிக்கு வருகின்றது. செய்மதி தொழில்நுட்பத்தினூடாக மீன்கள் அதிகமாக சஞ்சரிக்கின்ற பிரதேசங்களை இனங்காண்பதற்காக தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நாங்கள் எல்லை காணமுடியாத கடலில் விருப்பப்படி சஞ்சரிக்கிறோம். அவ்வாறு மீன் பிடிப்பது இலாபகரமானதாக அமைய மாட்டாது.

Govi-Rally-Sooriyawewa

எமது நாட்டில் பிள்ளைகளின் போஷாக்கு தட்டுப்பாடு ஒரு பிரதான பிரச்சினையாகும். அவசியமான புரதச்சத்துக்கள் கிடைப்பதில்லை. மீன்பிடி தொழிலை விருத்தி செய்தால் புரதச்சத்து பற்றாக்குறைய நிவர்த்தி செய்ய முடியும். இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்ற முட்டைகளை விட குளியாபிட்டியவிலிருந்து அம்பாந்தோட்டைக்கு வருகின்ற முட்டைகளின் விலை அதிகம். அது எப்படி நடக்க முடியும்? எமது உற்பத்தி செலவு அதிகம். அவர்கள் கோழிகளுக்கு கொடுப்பது அவர்கள் உற்பத்தி செய்கின்ற சோளத்தையாகும். கோழிக்கூடுகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்த வலைகளையே அடிக்கிறார்கள். கூரைக்கு வேய்வது அவர்கள் தயாரிக்கின்ற தகடுகளேயாகும். கோழிகளுக்கு ஏற்றுவது அங்கே தயாரிக்கின்ற இன்ஜெக்க்ஷன் தான். நாங்கள் கோழிகளுக்கு அவசியமான எல்லாவற்றையும் இந்தியாவிலிருந்து கொண்டு வருகிறோம். அதனால் முட்டை விலை உயர்வானது. அப்படியானால் நாங்கள் அந்த கைத்தொழிலை முன்னேற்ற வேண்டும். முட்டை, இறைச்சி உற்பத்தியாளர்களின் கிரயங்களை குறைத்துக் கொள்ளவேண்டும். அந்த தொழிற்துறையில் சோ்ந்து கொள்ளுமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கவேண்டும். ஊரிலே புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க முடியும். அப்போது ஊரிலே மென்மேலும் கைத்தொழில்கள், புதிய தொழில்வாய்ப்புகள் உருவாகும். இந்தியாலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதால் இந்தியாவின் பொருளாதாரமே முன்னேற்றமடையும். எங்கள் ஊரின் பொருளாதாரம் முன்னேற்றமடையமாட்டது.

பால் உற்பத்தியை மிகவும் நன்றாக முன்னேற்ற முடியும். எமது நாட்டின் எந்தவொரு வலயத்திலும் விலங்குகளை வளர்க்கலாம். அம்பாந்தோட்டை, அம்பாறை, மொணராகலையில் இந்தியாவில் பாகிஸ்தானில் இருக்கின்ற மூறா வகையைச் சோ்ந்த மாடுகளை வளர்க்கலாம். நாரம்மல, நாஉல, மாத்தளை பிரதேசங்களில் நடுத்தர வலயத்திற்கு ஒத்துவரக்கூடிய விலங்குகளை வளர்க்கலாம். நுவரெலியா, பண்டாரவள பிரதேசங்களில் நியூசிலாந்திலும் அவுஸ்ரேலியாவிலும் வளர்கின்ற பேஃர்ஸியன் வகையைச் சோ்ந்த மாடுகளை வளர்க்கலாம். எமது நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டமொன்றை அமைக்கவேண்டும். நல்ல கறவைப் பசுவிடமிருந்து நாளொன்றுக்கு 20 தொடக்கம் 30 லீற்றர் பாலை ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் கறக்கலாம். பால் உற்பத்தியிலிருந்து யோகற், ஐஸ்கிறீம் உற்பத்தி செய்ய முடியும். கிராமிய பொருளாதாரத்தை அவ்விதமாக விருத்தி செய்ய முடியும். கிராமத்து விவசாயத்தை விருத்தி செய்ய புதிய தொழிநுட்பம், அதிக விளைச்சலைத் தருகின்ற விதை இனங்களை கொண்டுவர வேண்டும். விவசாய உற்பத்திக்கான சிறந்த திட்டம் நிலவ வேண்டும். விவசாயத்தை கௌரவமான தொழிற்துறையாக மாற்றவேண்டும். கடன் இல்லாத, வருமான வழிவகை இருக்கின்ற, மகிழ்ச்சி நிலவுகின்ற வாழ்க்கை உள்ளவனாக கமக்காரன் மாற்றப்படவேண்டும். தகப்பன் விவசாயி மகனும் விவசாயி மகனின் மகனும் விவசாயியாக அமையவேண்டியதில்லை. எமது பிள்ளைகளுக்கு பரம்பரை வழியாக மரபுரிமையாகின்ற தொழிலிலிருந்து அவர்களை வெளியில் எடுக்கவேண்டும். எமது கமக்காரன் கடன் பொறியில் சிக்கியுள்ளான். அந்த கடன் பொறியிலிருந்து மீட்டெடுப்பதற்காக நாங்கள் ஒரு வேலைத்திட்டத்தை வகுப்போம். கிராமங்களில் புதிய தலைமுறையினருக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகின்ற பொருளாதாரமொன்றை அமைத்திடுவோம்.

கிராமத்தில் உள்ள பிள்ளைகளுக்கு இந்த நச்சு வட்டத்திலிருந்து வெளியே வருவதற்கு இருக்கின்ற ஒரே பாதை கல்வியாகும். இந்த பாடசாலைகளின் வசதிகளை முன்னேற்றவேண்டும். பாடசாலை பாடங்களை மாற்றத்திற்குள்ளாக்க வேண்டும். உலகின் எந்தவொரு தொழிலுக்கும் ஒத்துவரக்கூடிய புதிய கல்வித் திட்டமொன்றை நாட்டின் ஒவ்வொரு பாடசாலைக்கும் நாங்கள் உருவாக்கிக் கொடுப்போம். அப்போது பிள்ளை தகப்பன் இருந்த உலகத்திலிருந்து வெளியில் வர முடியும். இவ்விதமாக பல வருடங்கள் செயலாற்றினால் எமக்கு உண்மையான வாழ்க்கையை பெற்றுக்கொள்கின்ற பொருளாதாரமொன்றை, சமூகமொன்றை உருவாக்கிக் கொள்ள முடியும். குடும்ப அங்கத்தவர்கள் கூடி மகிழ்கின்ற ஒரு வாழ்க்கை தற்போது எமக்கு கிடையாது. எந்நேரமும் வேலையில் சிறைப்பட்டு அழுத்தம் அதிகரித்துவிட்டது. எமது ஊர்களின் வாழ்க்கை அப்படித்தான். ஆனால் அவர்களின் வாழ்க்கை அப்படியல்ல. அவர்கள் வித்தியாசமான வாழ்க்கையையே கழிக்கிறார்கள்.

எங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறந்த வருமான வழிவகையைக் கொண்ட பொருளாதாரம், பிள்ளைக்கு சிறந்த கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிறந்த சுகாதார சேவை, நனைந்திராமல் இருக்கக்கூடிய சிறந்த காற்றோற்றம் நிறைந்த வீடு, மன நிம்மதி அவசியமாகின்றது. அந்த மனிதர்கள் இன்று பாரிய மன அழுத்தத்துடனே வாழ்கிறார்கள். பகல் சாப்பிட்டால் இரவில் என்ன சாப்பிடுவது என சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்தோம். ஆனால் தொழில் இல்லையே என சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பிள்ளை ஒரு பயணம் சென்றால் வீட்டுக்கு வரும் வரை சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா இடத்திலும் போதைத்தூள் பையன் அதற்கு அடிமையாகி விடுவானா என சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். 76 வருடங்களாக எங்கள் வாழ்க்கையை இழக்கச் செய்வித்துள்ளார்கள். மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை பெற்றுக்கொடுப்பதற்காக நாங்கள் மக்கள் அரசாங்கமொன்றை அமைத்திட வேண்டும். எமது எதிர்பார்ப்பு பொதுமக்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கையை உருவாக்கிக் கொடுப்பதாகும். நாங்கள் புதிய அரசாங்கமொன்றை நிறுவுவோம். உங்களின் ஊக்கம் உங்களின் புத்துணர்ச்சி எமக்கு தெம்பூட்டுகின்றது. நிச்சயமாக இந்த போராட்டத்தை பெரு வெற்றியில் முடிக்கமுடியுமென நாங்கள் திடமாக நம்புகிறோம்.

Show More

“நிதிசார் ஒழுக்கம் பற்றி பேசிவருகின்ற ரணில், 875 கோடி ரூபா பொதுப்பணத்தை ஜனாதிபதி தோ்தலில் பிரச்சாரத்திற்காக ஒதுக்கிக் கொண்டார். இந்த ஊழல்மிக்க முறையை தொடர்ந்தும் பேணிவரவேண்டுமா?” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திசாநாயக்க-

(-மறுமலர்ச்சிக்காக முழு நாடுமே ஒன்றாக – தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை பொதுக்கூட்டம் – 2024-06-29-) ஜனாதிபதித் தோ்தல் தொடர்பில் நிச்சயமற்ற தன்மை, தயக்கம், சந்தேகம் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஜனாதிபதி தோ்தலுக்கு முன்னராகவே அது நடத்தப்பட்டிருக்கிறது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் அரசாங்கமொன்றுக்காக பொதுமக்கள் ஒன்று சோ்ந்திருக்கிறார்கள். அது தொடர்பில் ஆளுங்குழு பதற்றம் அடைந்துள்ளது. ஜனாதிபதி தோ்தலை நடத்தாதிருக்க மேற்கொண்ட படிமுறைகள் உரையாடல்கள் தற்போது முற்றுப்பெற்றுள்ளன. ஜுலை மாதம் 17 ஆம் திகதியாகும்போது […]

(-மறுமலர்ச்சிக்காக முழு நாடுமே ஒன்றாக – தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை பொதுக்கூட்டம் – 2024-06-29-)

Kaluthara-Public-Rally

ஜனாதிபதித் தோ்தல் தொடர்பில் நிச்சயமற்ற தன்மை, தயக்கம், சந்தேகம் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஜனாதிபதி தோ்தலுக்கு முன்னராகவே அது நடத்தப்பட்டிருக்கிறது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் அரசாங்கமொன்றுக்காக பொதுமக்கள் ஒன்று சோ்ந்திருக்கிறார்கள். அது தொடர்பில் ஆளுங்குழு பதற்றம் அடைந்துள்ளது. ஜனாதிபதி தோ்தலை நடத்தாதிருக்க மேற்கொண்ட படிமுறைகள் உரையாடல்கள் தற்போது முற்றுப்பெற்றுள்ளன. ஜுலை மாதம் 17 ஆம் திகதியாகும்போது ஜனாதிபதி தோ்தலை பிரகடனம் செய்வதற்கான, வேட்பு மனுக்களை கோருவதற்கான, தோ்தல் தினத்தை தீர்மானிப்பதற்கான அதிகாரம் தோ்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கின்றது. தோ்தலை தடுப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வி கண்டுள்ளன.

தற்போது அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கையாக அமைந்திருப்பது தோ்தலை எதிர்கொண்டு வெற்றிபெறுவதற்கான சதிவேலைகளை மேற்கொள்வதாகும். மக்களை ஒன்றுதிரட்டி மக்கள் முன் உரையாற்றி தோ்தல் இயக்கமொன்றை முன்னெடுப்பதில் ரணில் தற்போது தோல்வி கண்டுள்ளார். அதனால் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழு தற்போது மாளிகைக்குள்ளே சதிவேலைகளை புரிந்துந்து வருகின்றது. நாங்கள் ஹொரண பொது விளையாட்டரங்கில் மக்கள் முன் உரையாற்றிக்கொண்டிருக்கிறோம். ரணில் விக்கிரமசிங்க மாளிகைக்குள் ஹர்ஷ த சில்வா, கபீர் ஹஷீம், மயந்த, காவிந்தவுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார். ஆங்காங்கே இருக்கின்ற குழுக்களை ஒரே இடத்திற்கு கொண்டு வந்து தோ்தலை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறார். மேலிடத்திருந்து புரிகின்ற மாளிகை சூழ்ச்சிகளால் மக்களின் எழுச்சியை மீளத்திருப்ப முடியாதென்பதைத்தான் ஹொரணவில் குவிந்துள்ள மக்கள் வெளிக்காட்டுகிறார்கள். இப்போது ரணில் விக்கிரமசிங்க பாசறை, சஜித் பிரேமதாஸ பாசறை, தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்கின்ற பாசறை என்ற வகையில் மூன்று பாசறைகள் ஜனாதிபதி தோ்தலுக்கு முகம் கொடுப்பதற்காக அணிதிரண்டுள்ளன.

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுவதற்கு உள்ள ஒரே தகைமை அவரே கூறுகின்ற விதத்தில் பிரேமதாஸவின் மகனாக அமைந்துள்ளமை மாத்திரமேயாகும். சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி பிரேமதாஸவின் மகனாக அமைந்திராவிட்டால் என்ன நடக்கும்? அவர் ஹொரண நகரசபையின் உறுப்பினர் பதவிக்குக்கூட பொருத்தமான ஒருவரல்ல. இப்பொழுது சஜித்தைப் பற்றி அவருடைய கட்சியைச் சோ்ந்த சரத் பொன்சேகாவே பேசி வருகிறார். அவர்களுடைய அரசாங்கத்தில் திருட்டுக்களை அம்பலப்படுத்துகின்ற பொறுப்பினை சரத் பொன்சேகாவிடம் கையளிப்பதாக சஜித் கூறினார். இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னரே சரத் பொன்சேகா ஒரு திருடனை பிடித்துள்ளார். கெஷினோ பணம் வருகின்ற விதம் பற்றி கூறினார். எனவே சஜித்தின் பாசறையைப் பற்றி இனிமேலும் பேசுவதில் பயனில்லை.

Kaluthara-Public-Rally

எனினும் ரணிலின் பாசறையைப் பற்றி பேசியேயாகவேண்டும். மக்களின் எழுச்சியை முழுமையாகவே காட்டிக்கொடுத்து மக்கள் எதிர்பார்ப்புக்களை முற்றாகவே அழித்து பழைய நாசகார பயணத்திலேயே நாட்டை இழுத்துச் செல்ல முயற்சித்து வருவது ரணில் விக்கிரமசிங்கவின் பாசறையாகும். கடந்த தினமொன்றில் பாராளுமன்றத்திற்கு குறைநிரப்பு மதிப்பீடொன்றை கொண்டு வந்து தனக்கு வரவு செலவில் ஒதுக்கிய பணத்திற்கு மேலதிகமாக 875 கோடியை ஒதுக்கிக் கொள்கிறார். காலமோ இன்னும் இரண்டு மாதங்கள் தான். (அணையப்போகின்ற ஒரு மின்குமிழ்.) இந்த பொதுச் செல்வத்தை முற்றாகவே தனது தோ்தல் இயக்கத்திற்காக ஈடுபடுத்த ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார். தெற்கின் ஆளுநர் பல புதிய நியமனங்களை கொடுத்துள்ளார். முன்னாள் பிரதேச சபையின் தலைவர்களுக்கு ஆளுநரின் ஒருங்கணைப்பாளர் பதவி. பெரும்பாலான தலைவர்கள் உள்ளூர் அதிகார சபை தோ்தலில் அபேட்சகர்கள் ஆவர். தோ்தலின்போது அவர்கள் எவ்வாறு அரசாங்கத்தின் பணத்தை செலவிடுவது? கருத்திட்டங்களுக்காக எவ்வாறு பிரயோகிப்பது? அந்த கருத்திட்டத்தை எவ்வாறு வகுப்பது? அவற்றில் எவ்வாறு இடையீடு செய்வது? யாருக்கு ஒப்பந்தம் வழங்கப்படும்? தான் ஒரு தொகை பணத்தை எவ்வாறு சுருட்டிக்கொள்வது? அதற்காக தற்போது லக்ஷ்மன் யாப்பா முன்னாள் தலைவர்களை நியமித்துள்ளார். பொதுப்பணத்தை தமது அடிவருடிகளை தோ்தல் இயக்கத்திற்காக ஈடுபடுத்த ரணில் செயலாற்றிக்கொண்டிருக்கிறார்.

பொதுப்பணத்தை பயன்படுத்திக் கொண்டு ரணில் கட்சிக்குழுக்களுக்கு விசேட நிதியேற்பாடுகளை ஒதுக்கி அவர்களை தமது பக்கம் தூண்டிலிட்டு எடுக்க ரணில் முயற்சி செய்கிறார். பன்முகப்படுத்தப்பட்ட நிதிகளிலிருந்து 120 கோடி ரூபாவை எதிர்கட்சியை பிரதிநிதித்துவம் செய்கின்ற 19 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுத்தார். றிசாட் பதுர்தீன், சன்பிக ரணவக்க, ஹர்ஷ த சில்வா, மான்னப்பெரும, மயந்த திசாநாயக்க, காவிந்த ஜயவர்த்தன, அலவத்துவல ஆகியோருக்கு கொடுத்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க பொதுப்பணத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறார். ரணிலுக்கு ஊரிலே ஐக்கிய தேசிய கட்சியின் கிளைச்சங்கங்கள் கிடையாது. தொகுதி அமைப்பாளர் ஒருவர் கிடையாது. அதனால் ரணில் ஆளுங்கட்சியில் இருக்கின்றவர்களுக்கும் ஆளுங்கட்சியை சாராத தான் தெரிவு செய்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பார் லைசன் வழங்கி, பெற்றோல் ஷெட்களில் லைசன் வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார். “அண்மைக்காலத்தில் வழங்கப்பட்ட பார் லைசன் எல்லாவற்றையும் கென்சல் பண்ணுவதாக” சஜித் அண்மையில் கூறினார். நான் சஜித்திடம் கேட்கிறேன் “உங்களால் கூறமுடியுமா உங்கள் கட்சியைச் சோ்ந்த எவருமே பார் லைசன் பெறவில்லையென்று.” ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்திற்கு, நாட்டின் நிதி நிறுவனங்களுக்கு நிதி ஒழுகலாறு பற்றி உபதேசம் செய்கிறார். நிதி ஒழுகலாறு பற்றி பேசுகின்ற ரணில் விக்கிரமசிங்க மக்கள் மீது வரி விதித்து மிகவும் கஷ்டமான நிலைமையில் மக்கள் அவற்றைத் தாங்கிக்கொண்டு சேமித்த பணத்தை தனது தோ்தல் இயக்கத்திற்காக செலவிடுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளார். இத்தருணத்தில் ரணில் கூறுகின்றவற்றை பார்த்தால் ரணில் விக்கிரமசிங்க கட்டாயமாக தோற்கடிக்கப்பட்டேயாக வேண்டும்.

மக்களின் பிரார்த்தனை “மாற்றமொன்று அவசியம் என்பதாகும்.” வடக்கின் தமிழ் மக்களும் கிழக்கின் முஸ்லிம் மக்களும் தெற்கின் சிங்கள மக்களும் மாற்றமொன்று அவசியமெனக் கூறுகிறார்கள். கமக்காரர்கள், மீனவர்கள், தொழிற்முயற்சியாளர் சமூகம், முச்சக்கரவண்டி சாரதிகளை சந்தித்தால் ”தொடர்ந்தும் இவ்வாறு பயணிக்கமுடியாது. மாற்றமொன்று அவசியம். என்றே கூறுகிறார்கள். “மாற்றம்” பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பாகும் எவ்வாறான மாற்றம் ஒன்று தேவை? ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? மொட்டுக்கட்சியைச் சோ்ந்தவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உத்தியோகபூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆனால் மொட்டுக் கட்சியை சோ்ந்த சிலர் ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறியுள்ளார்கள். அவர்கள் யார்? பாராளுமன்றத்திற்கு மிளகாய் தூள் கொண்டுவந்த, எயார் போர்ட்டில் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய, துர்ப்பிரயோக செயல்களுடன் தொடர்புடைய கம்பஹா பிரசன்ன ரணவீர, கப்பம் வாங்கியமை காரணமாக மேல் நீதிமன்றத்தினால் நான்கு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள கம்பஹா பிரசன்ன ரணதுங்க, சிறைச்சாலைக்குள் நள்ளிரவில் புகுந்து சிறைக்கைதிகளை முற்றத்திற்கு கொண்டு வந்து கைத்துப்பாக்கியை தலையில் வைத்து மண்டியிடச் செய்வித்து அச்சுறுத்திய கண்டி லோஹான் ரத்வத்த அமைச்சர், நீங்கள் அறிந்த நீர்கொழும்பின் நிமல் லன்சா, கிழக்கின் கருணா, கிழக்கின் பிள்ளையான் புதிய மாற்றத்திற்காக ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். இந்த குழுவில் உள்ளவர்கள் யார்? நாட்டை மாற்றியமைப்பதற்காக ரணில் விக்கிரமசிங்கவும் அவரைச் சூழவுள்ளவர்களும் அயோக்கியத்தனமிக்க குழுவினரிடமும் கையளிக்கமுடியுமா? ஏற்கெனவே இருக்கின்ற வஜிர அபேவர்தன போன்றவர்கள் பழைய தோல்வி கண்ட பயணத்தில் தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்லவே தயாராகி வருகிறார்கள். இந்த அயோக்கியத்தனமான குழுவின் கைகளில் அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க முடியாது என்ற திடசங்கற்பத்திற்கு மக்கள் வரவேண்டும். அப்படியானால் சஜித்தின் குழுவிற்கு கொடுக்கவே வேண்டுமா? பாவம், அது பற்றி அதிகமாக கூறவேண்டியதில்லை.

Kaluthara-Public-Rally

ஜே.ஆர் ஜயவர்தன நாட்டை ஆட்சி செய்த பின்னர் மருமகன் அதிகாரத்தை கோரி நிற்கிறார். பிரேமதாஸ நாட்டை ஆட்சி செய்தார். இப்போது அவருடைய மகன் அதிகாரத்தை கோருகிறார். மகிந்த ராஜபக்ஷ நாட்டை ஆட்சி செய்தார். இப்போது மகன் அதிகாரத்தை கோரத் தயாராகி வருகிறார். எமது நாட்டில் அரசியல் பலத்தின் சுக்கான் ஒரு சில குடும்பங்களில் கைகளிலேயே சுழன்றது. பழைய அழிவுமிக்க ஊழல் புரிந்த பிரபுக்கள் வர்க்கத்தின் கைகளுக்கே மீண்டும் அதிகாரத்தை கோரி வருகிறார்கள். அவர்கள் எவராலும் இந்த நாட்டுக்கு எந்த விதமான மாற்றத்தையும் செய்துவிட முடியாது. ஹொரண பொது விளையாட்டரங்கிற்கு இத்தருணத்தில் குழுமியுள்ள உங்களைப் போன்ற நாடு பூராவும் பரந்துள்ள மக்களாலேயே அதனை சாதிக்க முடியும். ஒருபோதுமே அரசியல் மேடையில் ஏற நினைக்கவில்லையென்றே அமைச்சு செயலாளர் ஒருவராக பணியாற்றிய திரு. ஏ.பி.ஏ. குணசேகர இந்த மேடையில் கூறினார். ரவி செனெவிரத்ன அவர்கள், சம்பத் துய்யகொந்தா அவர்கள், பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி தோழர் போன்ற பலர் இன்று அந்த கதையைக் கூற காரணம் எம்மனைவருக்கும் நாட்டை மாற்றியமைப்பதற்காக இந்த மேடைக்கு வருமாறு வலியுறுத்தியுள்ளதால் ஆகும். இந்த எவருமே பழைய தோல்வி கண்ட அரசியல் பயணத்திற்கு துணைநின்று அந்த பயணத்திற்கு தோள்கொடுத்து சென்றவர்களல்ல. புதிய குழுவினரை சோ்த்துக் கொண்டு இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான பாரிய மக்கள் சக்தியை கட்டியெழுப்பியிருப்பது தேசிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும்.

மல்வத்த மகாநாயக்க தேரரை சந்தித்த வேளையில் அவர் கூறிய கதையொன்று எனக்கு ஞாபகம் வருகிறது. 1970 மற்றும் 1980 சதாப்தங்களில் அவர் இந்தியாவுக்கு சென்ற வேளையில் ஒரு குடையை பிடித்துக்கொண்டு சென்றால் இந்தியர்கள் வந்து குடையை தடவிப்பார்த்து அபகரித்துக்கொள்ள முயற்சி செய்வார்களாம். அதைப்போலவே இந்தியாவுக்கு காற்சட்டை துணியை எடுத்துச் சென்றால் எயார் போர்ட்டிலிருந்து வெளியில் சென்றதுமே விற்றுவிட முடியுமென ஒரு வியாபாரி கூறினார். அப்படிப்பட்ட இந்தியா இந்த பிராந்தியத்திற்கு அவசியமான ஔடதங்கள், மோட்டார் வாகனங்கள், உணவுகளை உற்பத்தி செய்வதைப்போன்றே தொழிநுட்பத்தை உற்பத்தி செய்கின்றது. சந்திரனுக்கு செல்கின்றது. எமது ஆட்சியாளர்கள் நாட்டில் இருந்த கைத்தொழில் முறைமையை முற்றாகவே நாசமாக்கி எஞ்சியிருந்த நிறுவனங்களையும் விற்றுவிட முயற்சி செய்கிறார்கள். ரணிலின் பொருளாதார பயணம் அதுவாகும்.

எங்கள் நாட்டில் இருக்கின்ற வளங்களை நன்றாக பயன்படுத்தி புதிய பயணம் ஒன்றுக்கு புதிய மாற்றமொன்றுக்கு கொண்டு செல்வதற்கான நிலைமாற்றத்தை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதற்காக உலகம் பூராவிலும் இருக்கின்ற இலங்கை விஞ்ஞானிகள் ஒன்றுக்கூடி எங்களுடைய விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப கொள்கைத் தொடரின் அடிப்படை வரைவினை சமர்ப்பித்தார்கள். தனது பிள்ளை எந்த நேரத்தில் போதைப் பொருளுக்கு இறையாகிவிடும் என்ற பயத்துடன் இருக்கின்ற சமூகத்தை முற்றாகவே மாற்றியமைத்து விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்தின் ஒரு புதிய மலர்ச்சியை அந்த பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். இதுவரை எம்மீது நம்பிக்கை வைத்திராத மக்களில் ஏறக்குறைய 90% எம்மைச் சுற்றி குழுமியிருப்பது நாட்டை கட்டியெழுப்புவதற்கான பயணத்தின் முதலாவது படிமுறையாகும். மக்கள் மாற்றமடைந்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியும். தமக்குள் ஏற்படுத்திக்கொண்ட மாற்றத்தை நாட்டின் வெற்றிவரை பிரயோகித்து ஜனாதிபதி தோ்தலின்போது திசைகாட்டியை வெற்றியீட்ட செய்விக்க வேண்டும். இன்றளவில் தாமும் மாற்றமடைந்து அவ்விதமாக மாற்றிக் கொண்ட விடயங்களை பற்றி மற்றவர்களுடன் கலந்துரையாடுகின்ற பெருந்தொகையானோர் எமது நாட்டில் இருக்கிறார்கள். இலட்சக்கணக்கான மக்கள் தொடர்ச்சியாக சமூகத்துடன் உரையாடலில் ஈடுபட்டுள்ளார்கள். அவ்வாறு ஒன்று சோ்வதிலான வெற்றியை நாட்டுக்கும் எதிர்கால தலைமுறையினருக்கும் பெற்றுக்கொடுப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Kaluthara-Public-Rally

“சேறு பூசி குறை கூறி எங்கள் இயக்கத்தின் வெற்றியை தடுக்க இயலாது”
-மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா-

இந்த மைதானம் பூராவிலும் நிறைந்துள்ள திடசங்கற்பமிக்க மக்களை பார்க்கும்போது ஜனாதிபதி தோ்தலின் வெற்றிக்காக தமது பங்கினை சோ்ப்பதற்காக ஹொரண தொகுதியின் மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதே தெளிவாகின்றது. இன்றவில் ஜனாதிபதி போராட்டம் தொடங்கியிருக்கிறது. ஒரு புறத்தில் சஜித் பிரேமதாஸ அவர்கள் எவரிடமிருந்தாவது சிறிது பணத்தை பெற்று பாடசாலைக்கு ஒரு பஸ் வண்டியையோ வகுப்பறையையோ வழங்கி பிள்ளைகளை சோ்த்துக்கொண்டு “நண்பர்களே” என அரசியல் உரைகளை ஆற்றுகிறார். திருவாளர் பொன்சேகா அவரை நிலத்தில் விழக்கூடிய வகையில் தாக்கியதால் இந்நாட்களில் சற்று பேச்சினை குறைத்துக்கொண்டுள்ளார். மறுபுறத்தில் ரணில் விக்கிரமசிங்க அரச பலத்தை பிரயோகித்து மாவட்ட அபிவிருத்தி சபைக் குழுக்களுக்கு அழைப்பு விடுத்து மறுபுறத்தில் இலஞ்சம் வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க நடவடிக்கை எடுத்து மக்களுக்கு பண்டங்களையும் காணி உறுதிகளையும் வழங்கி வருகிறார்.

ரணில் விக்கிரமசிங்க சதாகாலமும் எதிர்காலம் பற்றிய மக்களுக்கு கூறிக்கொண்டிருக்கிறார். அவர் எதிர்காலத்திற்காக சதாகாலமும் கூறிய எதுவுமே ஈடேற்றப்படவில்லை. இற்றைக்கு சில காலத்திற்கு முன்னர் எமது நாட்டின் இளைஞர்களுக்கு தங்க பிறேஸ்லற் அணியக்கூடிய நிலைமையை உருவாக்குவதாக கூறினார். எனினும் இறுதியில் வீட்டிலுள்ள தாய்மார்களினதும் சகோதர சகோதரிகளினதும் தங்கச் சாமான்கள் வங்கிகளுக்கு சொந்தமாகிவிட்டன. அதன் பின்னர் நாடு பூராவிலும் wifi வலயங்களை உருவாக்குவதாக கூறினார். இறுதியில் ரூபா 100 டேட்டா காட் ஒன்றைக்கூட போட்டுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2020 அளவில் இலங்கையை கடன் சுமையிலிருந்து விடுவிப்பதாக முன்னர் கூறினார். மேலும் நான்கு வருடங்களில் கடன் செலுத்த ஆரம்பிப்பதாக இப்போது கூறுகிறார். முன்னர் வானொலியில் பாட்டுக்கு பாட்டு என ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது போல் ரணில் விக்கிரமசிங்க இப்போது கூறுவது பொய்க்கு பொய். ஒரு பொய்யை கூறி அது மறந்து போகும்போது மற்றுமொரு பொய்யை கூறி முதலாவது பொய்யை மக்களுக்கு மறக்கச் செய்கிறார். பொய்க்கூறிக் கொண்டே பயணிக்கிறார். அவர்கள் ஏதாவது செய்வார்கள் என நம்பிய காலத்தில் மக்கள் அந்த பொய்யை நம்பினார்கள். எங்கள் நாட்டு மக்களை இவ்வாறான பொய்களால் ஏமாற்ற முடியாததென்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. பொய் வேலை செய்த, பொய்க்கூறிய அனைவரையும் தமக்கு கிடைக்கின்ற முதலாவது சந்தர்ப்பத்திலே தோற்கடிக்க மக்கள் தயார்.

எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி தொடர்பில் எவருமே சந்தேகம் கொள்ளவேண்டாம். நாங்கள் எவருமே திடீரென ஒரு தோ்தலில் குதித்தவர்களல்ல. ரணில் விக்கிரமசிங்க பொறுக்கிக் கொள்ளும் முறைக்கிணங்க ஒரு கும்பலை கழற்றி எடுப்பதே செய்து வருகிறார். மொட்டிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து போல் ஆங்காங்கே ஆட்களை சோ்த்து அமைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார். மகிந்த ராஜபக்ஷாக்களுக்கு அப்படியொன்றுக்கூட கிடையாது. சஜித் பிரேமதாஸவும் தனது கும்பலை பாதுகாத்துக் கொண்டு முன்னேறிச் செல்ல முயற்சி செய்கிறார். தேசிய மக்கள் சக்தியை சோ்ந்த நாங்கள் கொழும்பில் தேசிய மாநாட்டினை நடாத்தி, அதன் பின்னர் மாவட்ட மாநாடுகளை நடாத்தி, தொகுதி மாநாடுகளை நடாத்தி, நிறைவேற்று குழுக்கள் மற்றும் ஏற்பாட்டு சபைகளை நிறுவி இயங்கினோம். இறுதியாக கிராம சேவைகள் பிரிவு மட்டத்தில் வட்டார சபைகளை தாபித்தோம். இவ்விதமாக பிரமாண்டமான அமைப்பாண்மை வலையமைப்பை சுற்றி இந்த நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற தயாராகிய ஐக்கிய தேசிய கட்சியினதும் மொட்டுக்கட்சியினதும் அனைவரையும் சோ்த்துக் கொண்டோம். அத்துடன் நின்று விடாமல் பெண்களை சோ்த்துக் கொண்டு “பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன்” அமைப்பினை கட்டியெழுப்பினோம். பல்லாயிரக்கணக்கான பெண்கள் அமைப்புக்களை அரசியலில் சோ்த்துக்கொண்டோம். முப்படைகளைச் சோ்ந்த இளைப்பாறியோர் கூட்டமைப்பு, இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒன்றியம், சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு, மருத்துவர்களின் கூட்டமைப்பு, பொறியியலாளர்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து சக்திகளையும் மேல் மட்டத்தைப்போன்றே அடிமட்டம்வரை சோ்த்துக் கொண்டு நாட்டை மாற்றியமைக்கக்கூடிய பாரிய மக்கள் சக்தியொன்றை கட்டியெழுப்பினோம். எங்கள் நாட்டின் பொதுமக்கள் திசைகாட்டியை வெற்றிபெற செய்விப்போம் என்ற நம்பிகையுடன் இயங்கி வருகிறார்கள்.

எமக்கு மாத்திரமன்றி திசைகாட்டி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை ரணிலுக்கும் உண்டு. ரணிலால் இந்த ஜனாதிபதி தோ்தலை எளிதாக வெற்றி கொள்ள முடியுமானால் ஜனாதிபதி தோ்தலை பிற்போடுவதற்கான வழிமுறைகளை தேடிக்கொண்டிருக்கமாட்டார். அவர்கள் ஜனாதிபதி தோ்தலிலிருந்து தப்பியோட முயற்சி செய்வதன் மூலமாக திசைகாட்டியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது உறுதியாகின்றது. நாங்கள் திசைகாட்டியை வெற்றிபெற செய்விப்பது நிலவுகின்ற இந்த அரசாங்கங்களுக்கு பதிலாக புதிய அரசாங்கமொன்றை அமைக்கவோ அல்லது தற்போது இருக்கின்ற ஜனாதிபதிக்கு பதிலாக வேறொரு ஜனாதிபதியை நியமிக்கவோ மாத்திரமல்ல. நாங்கள் கட்டியெழுப்புகின்ற அரசாங்கத்தால் மாத்திரம் சாதிக்கமுடியாத நாம் அனைவரும் ஒன்றுசோ்ந்து ஆழமான சமூக மாற்றத்தை மேற்கொண்டு நாட்டை கட்டியெழுப்புகின்ற சவால் எம்மெதிரில் இருக்கின்றது.

Kaluthara-Public-Rally

தேசிய மறுமலர்ச்சி யுகமொன்றை நாங்கள் உருவாக்கவேண்டும் உலக நாடுகள் வேகமாக முன்னோக்கி நகர்ந்தாலும் இருந்த ஆட்சியாளர்கள் கடந்த நூற்றாண்டில் எமது நாட்டை பின்னோக்கியே எடுத்துச் சென்றார்கள். சுதந்திரம் பெற்றவேளையில் ஆசியாவின் பலம் பொருந்திய இரண்டாவது பொருளாதாரம் நிலவிய இலங்கை இன்று ஆசிய பொருளாதாரத்தில் கடைசி நாடாகும். சுதந்திரம் பெறுகின்ற வேளையில் வெளிநாடுகளுக்கு கடன்பட்டிராத இலங்கை தற்போது கடனை மீளச்செலுத்த முடியாமல் வங்ரோத்து அடைந்து சர்வதேச நாணய நிதியத்திற்கு பின்னால் போய் முனங்கிக்கொண்டு கடனை மீளச்செலுத்துதலை பிற்போட்டுக்கொண்டிருக்கிறது. எமக்கு முற்காலத்தில் பாரிய மகிமை இருந்ததென்பதை நாம் அனைவரும் அறிவோம். புதிய ஆட்சியாளர்கள் மீண்டும் பராக்கிரமபாகு யுகமொன்றை உருவாக்குமெனக்கூறி ஒரு மாயையை முன்வைத்தார்கள். மகிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக்காலத்தில் துட்டுகெமுனு பற்றிய திரைப்படமொன்றை திரையிட்டு இறந்தகாலத்திற்கு கொண்டு செல்ல எத்தனித்தார்கள்.

மலேசியா விவசாயத்தில் புதிய விதையினங்களை கண்டுபிடித்து முன்னேறிச் செல்கையில் எமது நாடு மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்தவற்றை தெருவோரங்களில் விற்கின்ற நிலைக்கு மாறியது. மலேசியாவின் புளியம் பழமும் இங்கு இருக்கிறது. ஏனைய நாடுகள் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பதுறையில் பாய்ச்சலுடன் முன்னேறுகையில் ஆட்சியாளர்கள் எமது நாட்டை இருபதாம் நூற்றாண்டிலிருந்து கைவிட்டார்கள். அதனால் இருபத்தோராம் நூற்றாண்டுக்காக எமது நாட்டுக்கு மறுமலர்ச்சி யுகத்திற்கான பாச்சலொன்று அவசியமாகியிருக்கிறது. அதனால் இது ஜனாதிபதி தோ்தலை வென்றெடுக்கின்ற அல்லது பாராளுமன்ற தோ்தலை வென்றெடுக்கின்ற ஒரு தோ்தல் அல்ல. முழுநாடுமே ஒரு பாச்சலுக்காக அனைத்து சக்திகளையும் சோ்த்துக்கொள்கின்ற தருணமாகும். அதற்காக ஒட்டுமொத்த மக்களையும் இணைத்துக்கொண்ட மக்கள் பங்கேற்பு உற்பத்திப் பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவோம். சியம்பலாண்டுவவிற்கு, வவுனியாவிற்கு, கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டிராத அபிவிருத்தியை அங்குள்ள மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். கீழிலிருந்து மேல்நோக்கி அதைபோலவே மையத்திலிருந்து பரிதிவரை மக்களுக்கு நியாயமான வகையில் பொறியமைப்பொன்று கட்டியெழுப்பப்படல் வேண்டும். நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும்வரை நிவாரணங்களை வழங்கி நிவாரணங்கள் இன்றி சொந்தக்கால்களால் நிற்கக்கூடிய மக்களை இந்நாட்டில் உருவாக்குவோம். இந்த பணியில் ஈடுபடுகின்றபோது எம்மிடம் அடிக்கடி கேட்கின்ற ஒரு சில கேள்விகள் இருக்கின்றன.

ஜே.வி.பி. மற்றும் என்.பி.பி. பற்றி கேள்வி கேட்கின்ற பலருக்கு இந்த மக்கள் இயக்கம் பற்றி விளங்கிக்கொள்ள முடியாது. இதற்கு முன்னர் தோ்தல் ஒன்று நெருங்குகையில் கூட்டணிகளை நிறுவிக்கொண்டு உறுப்பினர் பதவிகள், தேசிய பட்டியல் உறுப்பினர்கள் போன்றே அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்கின்ற அரசியலே காணப்பட்டது. எங்களுக்கு என்ன கொடுப்பீர்கள்? எனக் கேட்கின்ற எவருமே என்.பி.பி. மேடைகளில் இல்லை. நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து நாட்டுக்காக எவ்வாறு சேவையாற்றுவது எனும் திடசங்கற்பம் கொண்ட குழுவினரே எம்மைச் சுற்றியிருக்கிறார்கள். மறுமலர்ச்சி யுகத்தின் பிரதான பணியாக இலங்கை தேசத்தவரை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. இலங்கை தேசம் கட்டியெழுப்பப்பட்டதும் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைவரதும் அடையாளம் அதற்குள்ளே பாதுகாக்கப்படும். திசைகாட்டி உருவாகியுள்ள பல்வேறு அமைப்புக்களின் அடையாளம் தனித்தனியாக இருக்கின்ற அதேவேளையில் சீரழித்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான மறுமலர்ச்சி யுகத்தின் செயற்பொறுப்புக்காக நாம் அனைவரும் எம்மை அர்ப்பணித்துள்ளோம். இவ்வாறான ஒரு சக்தி வேறு எவருக்குமே கிடையாது. ரோஹித அபேகுணவர்தன போன்ற ஒருவருக்கு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் பதவியை கொடுத்தவர்கள் எமது அரசாங்கத்தில் அமைச்சரவைக்கு நியமிக்கப்படுகின்றவர்களின் தகைமைகளைப் பற்றி கேட்கிறார்கள். மஹிந்தானந்த அளுத்கமகே கமத்தொழில் அமைச்சராக இருந்த வேளையில் நுண்ணங்கிகள் இல்லாத கரிம உரத்தை சீனாவிலிருந்து கொண்டு வருவதாகக் கூறினார். எனினும் திசைகாட்டியைச் சுற்றி ஒவ்வொரு துறையையும் சார்ந்த உயர் மட்ட ஆற்றல் படைத்த தொழில்வாண்மையானவர்கள் அணிதிரண்டு இருக்கிறார்கள்.

எம்மை கண்டு பதற்றம் அடைந்துள்ள எதிரிகள் எமது உரைகளை திரிபுபடுத்தி மக்களை அச்சுறுத்துகின்ற பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். எம்மீது கல்லெறிந்து சேறு பூசி வீழ்த்த முடியாதென்பதை எதிரிகளுக்கு ஞாபகப்படுத்துகிறேன். நாங்கள் கூறும் கதைகளை திரிபடுத்தி பிரச்சாரம் செய்வதால் பதற்றமடைபவர்களுக்கு நாங்கள் முழு உரையையுமே கேட்குமாறு கூறியதும் எங்களுடைய உரைகள் அடங்கிய வீடியோவை முழுமையாக கேட்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனூடாக மிகவும் நன்றாக உண்மையை விளங்கிக்கொள்கின்ற மக்கள் அவர்களிடமிருந்து விலகி எங்களுடன் சோ்ந்துகொள்வார்கள். எமக்கு சேறு பூசுகின்ற தொலைக்காட்சி அலைவரிசைகளை வேகமாக நிராகரிப்பார்கள். எம்மீது சேறு பூசுகின்ற யூ ரியுப் அலைவரிசைகள் மக்களால் வேகமாக நிராகரிக்கப்பட்டு வருகிறது. சேறு பூசல்களால் இந்த மக்கள் வெள்ளத்தை அணைபோட்டு தடுக்கமுடியாது. “முன்னணியின் தடைகளை கண்டு – எந்த ஆற்றின் ஓட்டம் தடைப்பட்டது” என கூறுவார்கள். ஆற்றின் ஓட்டம் தடைகளால் நின்றுவிடமாட்டாது. திசைகாட்டி அனைத்து தடைகளையும் தாண்டி முன்னோக்கி நகரும். நாங்கள் அனைவரும் ஜனாதிபதி தோ்தல் வரை ஒன்றாக சோ்ந்து எவராலும் தோற்கடிக்க முடியாத மக்கள் பிரவாகமாக கட்டியெழுப்பி முன்னோக்கி நகரவேண்டும். வெற்றி எங்கள் கைகளில் தான் இருக்கிறது. இறந்தகாலம் எதிரிகளுக்கு சொந்தமானதாகும். எதிர்காலம் மக்களுக்கு சொந்தமானதாகும். நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து பொதுமக்களுக்கு வெற்றியை பெற்றுக்கொடுப்போம். ஜனாதிபதி ஒருவரை நியமித்துக்கொண்டு மக்கள் நேயமுள்ள ஆட்சியை நிறுவி நாட்டை வெற்றிபெறச் செய்விப்போம்.

Kaluthara-Public-Rally

“மறுமலர்ச்சி யுகத்தில் பிரஜைகளின் வரலாற்றினை எழுதுவதற்கான உரிமை பிரஜைகளுக்கே கிடைக்கும்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய-

நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் எங்களுடைய கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் நாசமாக்கினார்கள் என நாங்கள் அன்று நினைத்தோம். இன்று அது மாறிவிட்டது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் நீங்களே. எனினும் நாட்டின் ஆட்சியாளர்கள் மாறவில்லை. அந்த ஊழல்மிக்க அயோக்கியமான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் என்ற வகையில் ஒரே நோக்கத்துடன் கூட்டாக ஒன்றுசோ்ந்து நாம் அனைவரும் மீண்டும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம்; கனவு காண்கின்ற வாய்ப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. புதிய எதிர்பார்ப்புகளை கொண்டதாக இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக எம்மால் ஒன்றுசேர முடிந்துள்ளது.

எங்களுடைய எதிர்பார்ப்புக்கள் என்ன? இந்த மூர்க்கத்தனமான ஆட்சியை மாற்றியமைத்து இந்த நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி தோழர் ஒருவரை நியமித்துக்கொள்ள எமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தோழர் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு 24 மணித்தியாலங்கள் கழியமுன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதாக கூறியிருக்கிறார். அதன்போது ஊழல் மிக்க பாராளுமன்றத்தை சுத்தம் செய்து எமக்கு அவசியமான வகையில், மக்கள் நேயமுள்ள, மக்களைப் பற்றி சிந்திக்கின்ற புதிய மக்கள் பிரதிநிதிகளை நியமித்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இந்த இரண்டு விடயங்களை நிறைவு செய்து கொண்ட பின்னர் நாட்டை கட்டியெழுப்புகின்ற வேலையை தொடங்க எமக்கு இயலுமானதாக அமையும்.

முதலாவது நாளிலிருந்தே எமது செயற்பாடுகளில் எமது பாவனைகள் மூலமாக புதிய அரசியல் கலாச்சாரமொன்றை நிறுவிக்கொள்வோம். அரசியல்வாதியின் எல்லையை விளங்கிக் கொள்ள தரவு விஞ்ஞானத்தின் பேரில் மக்களை முதன்மையாகக் கொண்ட மக்களை மையப்படுத்திய கொள்கைகளை வகிக்கின்ற அரசியல் கலாச்சாரமொன்றை நாங்கள் ஆரம்பிப்போம். அரசியல் என்பது சிறப்புரிமைகளுக்காக பேராசையுடன் இருக்கின்ற தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக உழைப்பதற்கு பதிலாக மக்களுக்கு நோ்மையாக சேவையாற்றுகின்ற மக்களுக்கு பொறுப்புக்கூறுகின்ற அரச பொறியமைப்பொன்றினை நாங்கள் நியமிப்போம். அந்த பொறியமைப்பூடாக புதிதாக உருவாக்கப்படுகின்ற புதிய எதிர்பார்ப்புக்களுடன் கூட்டான கொள்கைகளுக்கு அமைவாக பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுடன் அரசியல் தலைமைத்துவத்தை ஒருங்கிணைத்து இந்த நாட்டை படிப்படியாக கட்டியெழுப்புகின்ற மறுமலர்ச்சியுகத்தை நாங்கள் தொடங்குவோம்.

புதிய பொருளாதார முறையியலொன்று எமக்கு தேவை. மக்களை மையமாகக் கொண்ட, மக்கள் பங்கேற்பினை பெற்றுக்கொள்வதற்காக உற்பத்தி அதிகரிக்கின்ற பொருளாதாரமொன்று எமக்கு தேவை. அதற்காக அவசியமான தரவுகள், கொள்கைகள், விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஆரம்பிக்கவேண்டும். இந்த தேவையை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் முதல் தடவையாக பெருந்தொகையான விஞ்ஞானிகள் ஒன்றுசோ்ந்து நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமான ஆராய்ச்சிகள் என்ன என்பதை கலந்துரையாடுவதற்கான எமது ஆராய்ச்சிக் கொள்கையை நாங்கள் களமிறக்கினோம். அத்தகைய பொருளாதாரமொன்றில் எம்மனைவரினதும் ஒத்துழைப்பினை பெற்றுக்கொண்டு பலம் பொருந்திய பொருளாதாரமொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம். இந்த நாட்டில் 52% ஆக அமைகின்ற பெண்களுக்கு தமது பராமரிப்பு வேலைகளுக்கு பெறுமதியொன்றைக் கொடுக்கின்ற, சமூக பொறுப்பை எடுத்துக்கொண்டு தமது தொழில்களை சுதந்திரமாக புரியக்கூடிய வகையிலான அரச இடையீடுகள் மூலமாக அந்த பராமரிப்பு வேலைகளில் சுமையை குறைத்துக் கொண்டு அவ்வாறு அமைக்கின்ற கட்டமைப்புக்குள் பெண்களுக்கு இந்த பொருளாதாரத்தின் சம பங்காளிகளாக மாறக்கூடிய பொருளாதாரமொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம். அந்த பொருளாதாரத்தின் நன்மைகளை நாம் அனைவரும் நியாயமான வகையில் அனுபவிக்கக்கூடிய முறையியலொன்றை நாங்கள் தயாரிப்போம். அவை அனைத்தையும் செய்ய எங்களுடைய மனித வளத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மக்கள் சேவைகளூடாக மக்களுக்கு சேவையாக அமைகின்ற மக்களுக்கு நம்பிக்கை உருவாக்கக்கூடிய வகையிலான மக்கள் சேவைகள் கிடைக்கத்தக்க வகையிலான நிலைமாற்றமொன்றை நாங்கள் வகுத்துக்கொள்ள வேண்டும்.

Kaluthara-Public-Rally

கல்வி கற்கின்ற ஒரு பிள்ளையை முன்பள்ளியில் இருந்து உயர் கல்வி வரை ஒரு நோக்கத்தைக் கொண்டதாக பாதுகாத்து, சமூகப் பொறுப்பு கிடைக்கின்ற, சமூகத்திலிருந்து தமக்கு கிடைக்கின்ற பொறுப்பு பற்றிய மனோபாவங்களை உருவாக்குகின்ற, சமூக அபிவிருத்தியில் பங்கேற்றக்கூடிய நிலைமையொன்று கட்டியெழுப்பப்படும். சமூகத்திற்கு தலைமைத்துவத்தைக் கொடுக்கக்கூடிய பிரஜையொருவரை உருவாக்குகின்ற கல்வியை நாங்கள் படிப்படியாக வழங்குவோம். ஆரோக்கியமான பிரஜையை உருவாக்குகின்ற, பாதுகாக்கின்ற சுகாதார சேவையொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம். பொதுமக்களின் தேவைகளுக்கிணங்க மக்கள்மீது கூருணர்வுபடைத்த பொதுப் போக்குவரத்துச் சேவையொன்றினை நாங்கள் உருவாக்குவோம்.

எமது பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக அமைந்துவிட்ட உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எவரையும் பசியுடன் இருக்க இடமளிக்க மாட்டோம் என்பதோடு , போசாக்கினால் நிறைவடைந்த, உணவின் தரம் பற்றிய சந்தேகத்துடன் வாழ இடமளிக்க மாட்டோம். அதைப்போலவே எமக்கு பலம்பொருந்திய சமூகப் பாதுகாப்பு அவசியமாகும். சமூகத்தின் அனைத்துப் பாகங்களையும் ஊனமுற்றவர்கள், விசேட தேவை கொண்ட பெண்கள், பிள்ளைகள், மூத்த பிரஜைகள் அனைவருமே பாதுகாக்கப்படுகின்ற நிறுவன முறைமையொன்று எமக்கு அவசியமாகின்றது. எவருமே நிர்க்கதிநிலையுறத் தேவையில்லை. அனைவர் சார்பிலும் பொறுப்புக்கூறுகின்ற, அனைவரையும் பாதுகாக்கின்ற, சமூகப் பாதுகாப்பினை நாங்கள் கட்டியெழுப்புவோம். அதைப்போலவே இந்த நாட்டுக்கு சட்டத்தின் ஆட்சி அவசியமாகின்றது. எவருக்கும் பாரபட்சம்காட்டாத, சட்டத்தின் ஆட்சி, நீதி, நியாயம் உறுதிப்படுத்தப்படுகின்ற சட்ட முறைமையொன்றை, நீதிமன்ற செயற்பாங்கினை நாங்கள் அமைத்துத் தருவோம்.இவையனைத்தையும் சாதித்துக்கொள்ள எமக்கு பலம்பொருந்திய அரசியலமைப்பொன்று தேவை. அந்த அரசியலமைப்பு மக்கள் இறைமைக்கு முதன்மைத்தானம் வழங்குகின்றவகையில், சனநாயகத்திற்கான அகல்விரிவான அர்த்தத்தைத் தருகின்றவகையில் தயாரிக்கப்படும். இலங்கைப் பிரஜை தேர்தலின்போது புள்ளடி இடுகின்ற நிலைக்கு அப்பால் பயணிக்கின்ற, தான் நிருவாகத்துடன் நேரடியாக தொடர்புபடக்கூடிய, தனது இறைமையை அமுலாக்கக்கூடிய, தனது உரிமைகள் உறுதிசெய்யப்படுகின்ற, பாதுகாக்கப்படுகின்ற புதிய அரசியலமைப்பினை வகுக்கின்ற செயற்பாங்கினை நாங்கள் தொடங்குவோம்.

நாங்கள் பல வருடங்களாக இரத்தம்சிந்திய ஒரு நாட்டைச் சேர்ந்தவர்களாவோம். அதற்கு மூலகாரணமாக அமைந்த தேசிய ஒற்றுமையை நாங்கள் நிலைநாட்டுவோம். எந்தவொரு பிரஜைக்கும் பாரபட்சம் காட்டாத, இரண்டந்தர பிரஜையாக கருதாத, அனைவரும் இலங்கையர் எனும் அடையாளத்தைக்கொண்டதாக தனது கலாச்சார உரிமைகளை, மொழி, மதம் என்பவற்றை அபிமானத்தை பாதுகாக்கக்கூடிய சமூகமொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம். அனைவரும் ஏற்றுக்கொள்கின்ற, சமூகத்தில் நிலவுகின்ற பன்வகைமைக்கு மதிப்பளிக்கக்கூடிய, தேசிய ஒற்றுமையுடனான ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம்.

நாங்கள் எதிர்பார்க்கின்ற மறுமலர்ச்சி, ஆழமான சமூக நிலைமாற்றம் என்பது மக்களின் யுகம் ஆரம்பிக்கின்ற காலப்பகுதியாகும். நாங்கள் 2500 வருடகால வரலாறு பற்றியும் 75 வருடகால வரலாறு பற்றியும் பேசினோம். எமக்கு வாசிக்க, கேட்க கிடைப்பது ஆட்சியாளர்களின் பக்கத்திலிருந்து எழுதப்பட்ட வரலாறாகும். அந்த வரலாற்றின் வீரர்களாகவும் வீராங்கனைகளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் ஆட்சியாளர்கள் அல்லது பிரபுக்கள் வர்க்கத்தைச் சோ்ந்தவர்களாவர். மன்னர்களின் கோமகன்களின் ஜனாதிபதிகளின் கதைகளை கேட்கிறோம். பிரதமர்கள் அமைச்சர்கள் பற்றி தெரியும். இந்த நாட்டின் உண்மையான வீரர்களாகவும் வீராங்கனைகளாகவும் அமைவது இந்நாட்டு மக்களே. அனைத்துவிதமான நெருக்கடிக்களையும் தாங்கிக் கொண்டு, அவற்றுக்கு முகங்கொடுத்து, நாட்டை வீழ்ந்திடச் செய்யாமல் இந்த நாட்டு மக்களே, இந்த நாட்டு பிரஜைகளே தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்தார்கள். எனினும் பிரஜைகளின் வரலாறு பற்றி கேட்க கிடைப்பதில்லை. எனினும் இந்த மறுமலர்ச்சி யுகத்தில் நாங்கள் எழுதப்போவது பிரஜைகளின் வரலாற்றினையாகும். அதனை எழுதுகின்ற உரிமையை பிரஜைகள் பெற்றுக்கொள்வார்கள். 2024 பின்னர் நாங்கள் ஆரம்பிப்பது பிரஜைகள் பொறுப்பேற்கின்ற, பிரஜைகள் எழுதுகின்ற, பிரஜைகள் நிர்மாணிக்கின்ற ஒரு வரலாற்றினையாகும். அதனை எழுதுவதற்கான உரிமையை பிரஜைகள் பெற்றுக்கொள்வார்கள். அது தான் மறுமலர்ச்சி யுகத்தில் இடம்பெறுகின்ற தனித்துவமான விடயம். பிரபுக்கள் வர்க்கத்திலிருந்து விடுபட்ட பிரஜைகள் யுகமொன்றை நாங்கள் தொடங்குவோம். அதற்காகத்தான் அதன் பங்காளிகளான நீங்கள் அனைவரும் இந்த இடத்திற்கு குழுமியிருக்கிறீர்கள். அந்த மறுமலர்ச்சி யுகத்தை அடைவது ஒரு கனவு, எதிர்பார்ப்பு மாத்திரமன்றி அதனை யதார்த்தமாக அனுபவமாக எமது வாழ்க்கையாக மாற்றிக் கொள்வோம்.

Kaluthara-Public-Rally

“இலங்கையை மறுமலர்ச்சியை நோக்கி கொண்டு செல்வதற்கும் அதற்கு தலைமைத்துவம் வழங்குவதற்குமான ஆற்றலை திசைகாட்டி கொண்டுள்ளது” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி-

தோழர் நிலந்தி ‘உபுன்டு’ எனும் வார்த்தையை கூறும்போது எனது செவிகளுக்கு இசை போன்றதாகும். தென்னாபிரிக்க ஜனநாயக உரையாடலில் ‘உபுன்டு’ எனும் வார்த்தை முன்னேற்றமடையாத பழங்குடியினரின் வார்த்தையொன்றல்ல. மானிட சகோதரத்துவம் பற்றிய உன்னதமான வார்த்தையாகும். இவர் தான் எங்கள் ‘உபுன்டு’. இதுதான் எமது சகோதரத்துவம். இதுதான் பிறர் பற்றிய எமது அர்ப்பணிப்பு, கரிசனை.

இன்று நான் இங்கு பேசுவது சுயநலம் கலந்த ஒரு ஆசையுடனாகும். நான் முதிய வயதில் இருப்பவன். எனக்கு ஏற்பட்ட ஒரு தொல்லையிலிருந்து விடுபட நான் விரும்புகிறேன். அது எனது சுயநலம் கலந்த ஆசையாகும். தொலைக்காட்சியை பார்க்கையில், செய்தித்தாள் ஒன்றை வாசிக்கையில் எனது வயது முதிர்ந்த வாழ்க்கைபூராவிலும் இரண்டு கண்களுக்கும் தொல்லையாக அமைந்த ஒரு சிக்கலிருந்து நான் விடுபட விரும்புகிறேன். செய்திகளை கேட்கும்போது செவிகளுக்கு ஏற்படுகின்ற இரைச்சலிருந்து விடுபட நான் விரும்புகிறேன். எனது செவிகள் இரண்டையும் வேதனைக்கு இலக்காக்குகின்ற அந்த தொந்தரவு என்ன? இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் பிரதான அரசியல் கட்சிகளில் இருந்து கொண்டு இந்த நாட்டை ஆட்சி செய்கின்ற மனிதர்களின் முகங்களும் குரல்களும் வியத்தகு துன்புறுத்தலாகும். ஒக்டோபர் மாதத்தில் அந்த அரியாசனத்திலிருந்து விடுபட நான் விரும்புகிறேன். இது சுயநலம் கலந்த ஆசையாகும். உங்கள் அனைவருக்கும் அவ்வாறான ஆசைகள் கிடையாதா? அது தான் எங்கள் ‘உபுன்டு’. அது தான் சகோதரத்துவம். அதுதான் நாடு பற்றிய கரிசனை. அது தான் பிறர் மீதான கரிசனை. அது ஒரு கூட்டான ஆசையாகும். கூட்டான பிரார்த்தனையாகும். கூட்டான கனவாகும். அநுர என்றால் எமது கூட்டான கனவின் பிரதிபிம்பம். எங்களுடைய கூட்டான ஆசையின் இதய கீதம். எங்களுடைய கூட்டான ஆசையின் பிரதிபலிப்பு.

இலங்கையின் அரசியல் துறையின் இந்த நேரத்திலே இருக்கின்ற மிகவும் பரிபூரணமான, தூரநோக்குடைய அரசியல்வாதி அவராவார். அவர் எங்கள் இதயக்கனி. எதிர்வரும் சில மாதங்களில் அந்த பிரதிபிம்பத்தை பின்தொடர்ந்து செல்வோம். புதிய இலங்கையொன்று பற்றி கனவு காண்கின்ற ஆசையுடன் இயலுமைகளையும், அறிவையும் சோ்த்திடுவோம். எங்கள் கனவுடன் விவேகத்தை சோ்த்திடுவதற்கான புலனுணர்வினை சோ்த்திடுவதற்கான ஆசைதான் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியும் தோழர் அநுரவின் வெற்றியுமாகும். இந்த நாட்டின் கீர்த்திமிக்க எதிர்காலத்தை பார்த்துக்கொண்டிருப்போம். அந்த எதிர்காலம் நிகழ்காலமாக மாறுகின்ற நாள் அண்மித்துவிட்டது. தேசிய மக்கள் சக்தியின் ஒரு பலம் தான் விவேகத்தின் மூலாதாரங்கள் எங்கே இருக்கின்றனவோ அதனை ஈர்த்துக்கொள்வதற்கான திறந்த மனதும் நலமான நெகிழ்ச்சித்தன்மையும் எம்மிடமிருக்கிறது. அதுவொரு வலிமையாகும். இலங்கைக்கு மறுமலர்ச்சியொன்று அவசியமாகும். இலங்கையை மறுமலர்ச்சியை நோக்கி எடுத்துச் செல்வதற்கான ஆற்றலும் தலைமைத்துவம் வழங்குவதற்கான ஆற்றலும் எமக்கிருக்கின்றது.

மறுமலர்ச்சியை நோக்கிச் செல்வதற்கு மனிதத்திற்கு எதிரான 11 பாவங்களை தோற்கடிக்கவேண்டியது அவசியமாகும். நீதியை அடிப்படையாகக் கொண்ட கொள்கை சார்ந்த கோட்பாடுகள் இல்லாத அரசியலை நாங்கள் தோற்கடிக்கவேண்டும். அது கொள்கைசார் அத்திவாரமற்ற அரசியல் பாவமாகும். அந்த பாவம் எம்மிடம் கிடையாது. இரண்டாவது பாவம் களியாட்டமாகும். எங்கள் நாட்டின் அரசியல்வாதிகள், ஜனாதிபதி மைந்தர்கள் கொவிட் 19 க்குள்ளே பஞ்சத்திற்குள்ளே கடல் சார் விளையாட்டுகளுக்காக சென்றிருந்தார்கள். அந்த பொழுதுபோக்கு ஒரு பாவமாகும். அரசியல்வாதிகளின் இரவு நேர வாழ்க்கையை அலசிப்பார்த்தால் மனசாட்சியற்ற பொழுதுபோக்கு நிறைந்த வாழ்க்கையாகும். உழைப்பற்ற செல்வம் ஒரு பாவமாகும். தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கான காரணம் இந்த நாட்டின் அரசியல் வர்க்கத்தின் கொள்ளைக்கார வளையம் பற்றிய தோழர் அநுரவின் அம்பலப்படுத்தல். அந்த பாவத்தை தோற்கடிப்பதற்கான பலமும் ஆற்றலும் இருப்பது தேசிய மக்கள் சக்தியிடமாகும். குணநலனற்ற அறிவு நான்காவது பாவமாகும். மக்களுடன் கூட்டான விடுதலையின் பக்கத்தில் நிற்பதற்கான குணநலன் இல்லாவிட்டால் அது அறிவல்ல. அது குணநலனற்ற அறிவாகும். ஐந்தாவது பாவம் விழுமியங்களற்ற தொழில் முயற்சி. எங்களுடைய சாதாரண பொதுமகன் பசியால் இறக்கையில், நோய் காரணமாக இறக்கையில் அவர்களுக்குக்காக கொண்டுவரப்படுகின்ற அன்டிஜன்களிலிருந்து திருடுகின்ற வியாபாரி ஒழுக்கநெறிகளற்ற நல்லவை கெட்டவைப்பற்றிய தர்க்கரீதியான சிந்தனையற்ற வியாபாரியாவான். ஆறாவது பாவம் மனிதபிமானமற்ற விஞ்ஞானம். அது மனிதத்துவத்திற்கு பொதுவான சகோதரத்திற்கு சேவையாற்றாவிட்டால் அந்த விஞ்ஞானத்தில் பலனொன்று இருக்கிறதா? அதுதான் இன்றைய விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப கொள்கையை வெளியிடுகின்ற தருணத்தில் விஞ்ஞானிகள் கேட்டது. பரிவிரக்கமற்ற மதம் ஏழாவது பாவமாகும். புத்த மதமோ வேறொரு மதமாகவோ அமையலாம். பொறுப்பற்ற உரிமை ஒரு பாவமாகும். எமது பொறுப்புக்கள் பற்றி உணர்வுமற்ற உரிமைகளை பின்தொடர்ந்து செல்வது ஒரு பாவமாகும். தேசிய மக்கள் சக்தியின் மறுமலர்ச்சி யுகத்தை நோக்கிச் செல்ல அவ்வாறான பாவங்களுக்கு பங்களிப்புச் செய்யாத மக்களே சோ்த்துக்கொள்ளப்படுவார்கள். அடுத்த பாவம் பொறுப்புக்கூறலற்ற அதிகாரம். இந்த நாட்டில் அனைத்து அதிகாரங்களும் பொருளாதார, நிதிசார், ஆயுத, கலாச்சார, அதிகாரத்தை ஒப்படைக்கையில் அதுவொரு பொறுப்புக்கூறலாகும். ஒக்டோபர் மாதத்தில் தமது கைக்கு வருகின்ற இந்த மட்டற்ற அதிகாரத்தை பாவிப்பவர் ஜனாதிபதி தோழர் அநுர குமார ஆவார். நீண்ட காலம் நிலைத்திராத அபிவிருத்தி ஒரு பாவமாகும். எமது சூழற்றொகுதி, விலங்கினங்கள், எமது தாவரங்கள், எமது மதனிதர்களை நாசமாக்குகின்ற அபிவிருத்தியல்ல எமது மறுமலர்ச்சியின் அபிவிருத்தி. அடுத்த பாவம் நியாயமற்ற சட்டம். தற்போது இருக்கின்ற ஜனாதிபதி அரசியலமைப்பில் சிறிய ஓட்டையை எதற்காக தேடிக்கொண்டிருக்கிறார்? நுழைந்து செல்வதற்கான சட்ட இடைவெளி. அதாவது விடுபட்டு செல்வதேயன்றி நீதியை தேடுவதில்லை. எமது கூட்டங்களில் குழுமியுள்ள மக்கள் நீதியின் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கையில் சட்டத்தில் எவ்வளவுதான் ஓட்டைகள் இருந்தாலும் நாங்கள் அவற்றை தோற்கடிப்போம்.

நான் இங்கு முன்வைத்த 11 பாவங்களை தோற்கடித்த செல்வம் கொழிக்கும் சமூகமொன்றை சகவாழ்வு கொண்ட சமூகமொன்றை உருவாக்கக்கூடிய அரசியல் சக்தியொன்று இருக்குமேயானால் அது தேசிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும். அதற்கு தலைமைத்துவம் வழங்கக்கூடிய எங்கள் கனவின் இதயகீதம் அநுர குமார திசாநாயக்க ஆவார். எதிர்வருகின்ற ஒரு சில வாரங்களில் இந்த மாற்றத்திற்கான பயணத்தில் நாங்கள் கூட்டாக பயணிப்போம். மென்மேலும் சோ்த்துக் கொள்வோம். எங்கள் அனைவரதும் முகங்களில் மகிழ்ச்சிக் கண்ணீர் ததும்புகின்ற நாளை நோக்கி பயணிப்போம்.

Show More

“திசைகாட்டியின் அரசியல் பற்றி கொள்கைரீதியான உரையாடல் இல்லாத குழுக்கள் குறைகூறல், பொய் கூறல் மற்றும் திரிபுபடுத்தலை மேற்கொண்டு வருகின்றன.” -மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா-

(-தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.06.23-) தேர்தல் நெருங்கும்போது இதுவரை அதிகாரத்தில் இருந்த குழுக்கள் பலவிதமான பொய்யான, திரிபுபடுத்திய தகவல்களைப் போன்றே சேறுபூசுதல்களையும் விடுவித்து வருகின்றது. மறுபுறத்தில் மக்கள் மத்தியில் தேர்தல் நடாத்தப்படுமா என்ற ஐயப்பாடு உருவாக்கப்பட்டு வருகின்றது. ரணில் விக்கிரமசிங்கவை உள்ளிட்ட தேர்தலுக்கு அஞ்சிய அனைவரும் சனாதிபதி தேர்தலை தவிர்த்துச்செல்ல பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மதலில் பொதுத்தேர்தலை நடாத்துங்கள், ரணிலுக்கு மேலும் இரண்டு வருடங்களை கொடுங்கள், அரசியலமைப்பின் வாசகங்களில் நுழைந்து செல்லுங்கள் […]

(-தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.06.23-)

NPPTILVINPRESS

தேர்தல் நெருங்கும்போது இதுவரை அதிகாரத்தில் இருந்த குழுக்கள் பலவிதமான பொய்யான, திரிபுபடுத்திய தகவல்களைப் போன்றே சேறுபூசுதல்களையும் விடுவித்து வருகின்றது. மறுபுறத்தில் மக்கள் மத்தியில் தேர்தல் நடாத்தப்படுமா என்ற ஐயப்பாடு உருவாக்கப்பட்டு வருகின்றது. ரணில் விக்கிரமசிங்கவை உள்ளிட்ட தேர்தலுக்கு அஞ்சிய அனைவரும் சனாதிபதி தேர்தலை தவிர்த்துச்செல்ல பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மதலில் பொதுத்தேர்தலை நடாத்துங்கள், ரணிலுக்கு மேலும் இரண்டு வருடங்களை கொடுங்கள், அரசியலமைப்பின் வாசகங்களில் நுழைந்து செல்லுங்கள் என்றவகையில் பலவற்றை சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்னர் அவர்களின் தரப்பில் தேர்தலொன்றை தவிர்த்துச்செல்ல இவ்விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச தேர்தலை தவிர்த்துச்செல்ல எந்தவிதமான வாய்ப்பும் இல்லையென்பதால் தேசிய மக்கள் சக்தி மீது குறைகூறி வருகிறார்கள். அறுபத்தொன்பது இலட்சம் வாக்குகளைப்பெற்று அதிகாரத்திற்கு வந்த ராஜபக்ஷாக்களின் குழு சிதறிப்போயுள்ளது. சனாதிபதி தேர்தல் கைக்கெட்டிய தூரத்தில் இருக்கையில் அதில் போட்டியிடுவதா இல்லையா என்பதை திட்டவட்டமாக கூறமுடியாத அளவுக்கு அது சிதைந்துபோய் விட்டது. மொட்டின் ஒருசில தலைவர்கள் ரணிலுடன், மற்றுமொரு பிரிவினர் மகிந்தவுடன் இருக்கையில் மேலும் சில குழுக்கள் நாலாபக்கங்களிலும் அலைந்துகொண்டிருக்கிறார்கள். ராஜபக்ஷாக்களின் பெரும்பாலானோர் ரணில் சரணம்நாட தூண்டப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் மற்றுமொரு பிரிவினர் இறுதித் தருணத்தில் சிறிது பணத்தை தேடிக்கொள்ள எத்தனிக்கிறார்கள்.

ரணில் விக்கிரமசிங்க சனாதிபதி அதிகாரத்தைப் பிரயோகித்து பொதுப்பணத்தை செலவிட்டு நெறிமுறைகளுக்குப் புறம்பாகவும் தேர்தல் சட்டங்களுக்கு எதிராகவும் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோடிக்கணக்கில் நிதியேற்பாடுகளை ஒதுக்கி மக்களுக்கு பத்து கிலோ அரிசியைக் கொண்டுத்துக் கொண்டிருக்கிறார். இத்தருணத்திலும் எமது நாட்டில் தேர்தல் சட்டங்கள் அமுலாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற உள்ளுரதிகார சபைத் தேர்தலுக்கு ஏற்புடைய நிலைமையே இருக்கின்றது. அதைப்போலவே கட்சியின் பெயர் ஐக்கிய மக்கள் சக்தியாக விளங்கியபோதிலும் எந்தவிதமான ஒற்றுமையும் கிடையாதென்பது திரு. பொன்சேகாவின் பாராளுமன்ற உரைமூலமாக உறுதிப்படுத்தப்பட்டது. பொருட்களை பங்கிடுவதற்காக கொமிஸ் பெறுகின்ற விதத்தை வெளிப்படுத்தினார். மேலும் சிலர் இரவிரவாக உரையாடல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஹர்ஷ த சில்வாவை உள்ளிட்ட பலம்பொருந்திய பொருளாதார குழுவொன்று இருப்பதாகக் கூறினாலும் சஜித் பிரேமதாச பொருளாதார ஆலோசகர்களை நியமித்துக் கொண்டுள்ளார். சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜபக்ஷாக்களால் மக்களின் ஆதரவினை சேரத்துக்’கொளள் முடியாதிருப்பதோடு தேசிய மக்கள் சக்தி நாட்டுக்குள் போன்றே சர்வதேசரீதியாகவும் பாரிய ஒத்துழைப்பினைப் பெற்று முன்நோக்கி நகர்கின்றது. அனைத்து சக்திகளும் திசைகாட்டியுடன் ஒன்றுசேர்ந்து முன்நோக்கிச் செல்கின்றவேளையில் ராஜபக்ஷ, ரணில், சஜித் அனைவரும் கூட்டாக தேசிய மக்கள் சக்தியை குறிவைத்து அசிங்கமான சேறுபூசுதல்களையும் திரிபுபடுத்தல் இயக்கமொன்றையும் முன்னெடுத்து வருகிறார்கள்.

அவதூறாக பேசினாலும் சேறு பூசினாலும் பதலளிப்பது இலகுவானதாக அமைந்தாலும் திரிபுபடுத்துதலை பாரதூரமான மட்டத்தில் மேற்கொண்டு வருகிறார்கள். 76 வருடங்களாக தம்மை துன்புறுத்திய முறைமைக்கு எதிராக மக்கள் அணிதிரள்வதை தடுப்பதற்காக அவதூறுகள், சேறுபூசுதல் மற்றும் உண்மையைத் திரிபுபடுத்துதல் என்பவற்றை முழுமையாக தோற்கடிக்க மக்கள் புரிந்துணர்வுடன் அணிதிரள வேண்டும். திசைகாட்டிக்கும் ரணிலுக்கும் இடையில் ஒரு டீல் இருப்பதாக பொய்ப்பிரசாரமொன்றை மேற்கொண்டு வருகிறார்கள். ரணிலுடன் டீல்போட்டு காப்பாற்றிக்கொள்ள எமக்கு என்ன இருக்கிறது? திசைகாட்டி வெற்றிபெறும் என்பதற்காகவே உள்ளுரதிகார சபைகள் தேர்தல் பிற்போடப்பட்டது. கூட்டுறவுச் சங்கத் தேர்தலைக்கூட பிற்போட்டு எமது பயணத்தை தடுக்க முயற்சி செய்கிறார்கள். எனினும் உண்மையான டீல் ராஜபக்ஷாக்களுக்கும் ரணிலுக்கும் இடையிலேயே நிலவுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் ரணிலுடன் பேச்சுவாரத்தைகளை நடாத்துகிறார்கள். இரவில் ரணிலுடன் எதிர்கால அரசியல் பற்றித் திட்டமிடுகின்ற இவர்கள் ஊடகங்களுக்கு முன்னால் வந்து திசைகாட்டிக்கு ரணிலுடன் டீல் இருப்பதாக கூறுகிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் பலம்பொருந்தியவர்கள் 19 பேர் ஏற்கெனவே ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பன்முகப்படுத்திய நிதிகளைப் பெற்றுள்ளார்கள். எமது எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வழங்காத பன்முகப்படுத்திய நிதியை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு வழங்கி உள்ளார்கள். அதுமாத்திரமல்ல வயின் ஸ்டோர்ஸ் உரிமங்கள் போன்றே பணத்தையும் பெற்றுக்கொண்டு அவர்கள் எல்லோருமே ஒன்றாக இருந்துகொண்டு தேசிய மக்கள் சக்தியின் பயணத்தை தடுத்துநிறுத்த அசுத்தமான கூட்டமைப்பினைக் கட்டியெழுப்பி தேசிய மக்கள் சக்திக்கு எதிராக தாக்குதல் நடாத்துகிறார்கள். திசைகாட்டி பெறுகின்ற வெற்றி காரணமாக பகிரங்கமாகவே பொய்கூறத் தொடங்கி இருக்கிறார்கள்.

தேசிய மக்கள் சக்தி வெற்றிகரமான ஒரு வேலையைச்செய்தால் அதனைக் காப்பியடிக்க முயற்சி செய்கிறார்கள். முடியாமல்போனால் சேறு பூச தொடங்குகிறார்கள். தோழர் அநுரவின் வெற்றிகரமான லண்டன் பயணம் சம்பந்தமாக படைக்குந்திறன்மிக்க பிரச்சார நிகழ்ச்சியொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. டபள் டெக்கர் பஸ், கட்டிடங்களை பயன்படுத்தி படைப்பாற்றல்மிக்கதாக செய்யப்பட்டிருந்த பிரச்சார வேலைகளுக்கு பணம் எங்கிருந்து என்று அவர்கள் பதற்றமடைந்திருந்தார்கள். அந்த நாட்டின் பஸ்களில் அதுபோன்ற பிரச்சார அலுவல்களை மேற்கொள்ள முடியாதெனக்கூட அறிந்திராதவர்கள்தான் அதிகாரத்தை வேண்டிநிற்கிறார்கள். மேதினத்தை நடாத்த டிக்கெற் அச்சிட்டு பணம் தேடிக்கொண்டதாக மகிந்தானந்த அழுத்கமகே பாராளுமன்றத்தில் கூறினார். மே தினத்திற்கான செலவுகளை ஈடுசெய்துகொள்ள மக்களிடமிருந்து பணத்தை சேகரிப்பதற்கான டிக்கெற்றுகளை நாங்கள் அச்சிடுவது 1978 இல் இருந்தாகும். மற்றுமொரு பிரச்சாரத்தைக் கொண்டுசென்றார்கள் கணடாவில் கூட்டங்களுக்கு சோற்றுப்பொதிகளைக்கொடுத்து வரவழைத்துக்கொண்டதாக. எமது வெளிநாடு சென்றுள்ள தோழர்கள் திசைகாட்டியை வெற்றியீட்டச் செய்விப்பதற்காக கூட்டாக பல்வேறு பொருளாதார வேலைத்திட்டங்களை செய்கிறார்கள். வெளிநாடுகளில் இருக்கின்ற எமது தோழர்கள் இலங்கையின் உணவுவகைகளை தயாரித்து விற்பனை செய்வதன் மூலமாக தேரத்தல் நிதியைத்தை பலப்படுத்திக்கொள்வது அவர்கள் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டமாகும். கணடா, பிரான்ஸ், இத்தாலி போன்ற பல நாடுகளில் எமது தோழர்கள் புரிகின்ற வேலைகள் பற்றி அவர்களால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. எமது அரசியல் சம்பந்தமாக கொள்கைசார் உரையாடலொன்றுகூட இல்லாமல் அவர்கள் குறைகூறல், பொய்புனைதல் மற்றும் திரிபுபடுத்துதலை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களின் செயற்பாடுகளைப் பார்த்தால் எமக்கு உண்மையாகவே கவலையாக இருக்கின்றது.

NPPTILVINPRESS

தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்து தனியார் ஆதனங்களை கையகப்படுத்திக் கொள்வதாகவும் பிரச்சாரமொன்றை மேற்கொண்டு வந்தார்கள். உண்மையாகவே நாங்கள் செய்வது எமது உற்பத்திகளை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதையாகும். இன்றளவில் ஆதனங்கள் இல்லாதவர்களும் வாழக்கூடியவகையில் ஆதனமுள்ளவர்களாக மாற்றியமைப்பதாகும். “சரதியலின்” செயற்பாங்கு எமது கொள்கையல்ல. உண்மையாகக் கூறப்போனால் அவர்களே ஆதனங்களை இழக்கச் செய்விக்கிறார்கள். இலட்சக்கணக்கான கைத்தொழில்கள் மூடப்பட்டுவிட்டன, ஆதனங்கள் வங்கிகளுக்கு சொந்தமாகி விட்டன, தாங்கிக்கொள்ள முடியாத வரிச்சுமை சுமத்தப்பட்டு தற்போது புதிதாக ஆதன வரியொன்றையும் விதித்துள்ளார்கள். அவ்வாறு செய்துகொண்டும் அவர்கள் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாகவும் திசைகாட்டி ஆதனங்களை கையகப்படுத்திக் கொள்வதாகவும் இன்னமும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். நாட்டை நாசமாக்கி, மக்களை பிச்சையேந்த வைத்து, அவர்கள் வந்ததும் நாட்டைக் கட்டியெழுப்புவதாக இன்னமும் கூறுகிறார்கள். குறிப்பாக தோழர் அநுர குமார திசாநாயக்கவை உள்ளிட்ட தலைவர்களை குறிவைத்து கீழ்த்தரமான சேறுபூசுகின்ற பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு கூறுவதற்கு ஒன்றுமே கிடையாதென்பதால் கடந்தகாலத்தில் ஐ.ம.ச. குழுவொன்று தோழர் ஹந்துன்னெத்தியை குறிவைத்து விசேட தாக்குலொன்றை நடாத்தியது. மத்திய வங்கி மோசடியை அவர்கள் மூடிமறைக்க முற்பட்டவேளையில் அதற்க இடமளிக்காமல் கோப் குழுவின் தவிசாளர் என்றவகையில் தோழர் ஹந்துன்னெத்தி செயலாற்றினார். தற்போது ஐ.ம.ச. இல் இருக்கின்ற அப்போது யு.என்.பி.இல் இருந்த பலர் கோப் குழு அறிக்கைக்கு “புஃட் நோற்” போட்டு ரணிலைப் பாதுகாக்க முயற்சி செய்தவர்களாவர். தோழர் ஹந்துன் சம்பந்தமாக அவர்களுக்கு பழைய பகையும் இருக்கின்றது. நாங்கள் உங்கள் அனைவருக்கும் வலியுறுத்துவது ” ஐயாமார்களே உங்களின் கட்சிகளைப்போலல்ல தேசிய மக்கள் சக்தி. எமது எவரையும் தனிக்கவிட்டு தாக்குதல் நடாத்தி வீழ்த்த முடியாது. நாங்கள் அனைத்திற்கும் கூட்டாக முகங்கொடுப்போம்.” என்று. எந்தவொரு சவாலையும் கூட்டாக எதிர்கொண்டு வெற்றிகொள்ளக்கூடிய சக்தி எம்மிடம் இருக்கிறது.

குறிப்பாக தோழர் ஹந்துன்னெத்தி இற்றைக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் “நெத் எஃப் எம்” கலந்துரையாடலில் அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்ற பொருளாதார செயற்பாடுகள் பற்றி விபரித்த ஒரு விடயத்தை துண்டுகளாக வெட்டிஎடுத்து வகுத்துதொகுத்து செய்தியொன்றை புனைந்துள்ளார்கள். முதலில் லேக்ஹவுஸ் செய்தித்தாள்களில் இதனைப் பிரசுரிக்க விரும்பவில்லை. பின்னர் தேசிய ரூபவாஹிணியில் திரிபுத்தப்பட்ட அந்த செய்தியை ஒளிபரப்பிய பின்னர் திணமின செய்தித்தாளில் பிரசுரித்தார்கள். காலையில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் அந்த செய்தியை மேற்கோள் காட்டினார்கள். சனாதிபதியிடம் இருக்கின்றவர்கள் இந்த செய்தியை திரிபுபடுத்தி உள்ளார்கள். ஒரு சட்டப் பிரச்சினை நிலவுவதாலேயே அதனை லேக்ஹவுஸ் பிரசுரிக்கத் தயங்கியது. நாங்கள் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதைப்போலவே “எம்மால் பொருளாதாரத்தை சீராக்க முடியாது” என தோழர் ஹந்துன்னெத்தி கூறியதாக பிரச்சாரம் செய்துள்ளார்கள். அது ஒரு திரிபுபடுத்தலாகும். எமது ஆட்சியில் ஒரே இரவில் பொருளாதாரத்தை சீராக்க முடியாது எனக்கூறியதை வெட்டி இவ்வாறு பிரச்சாரம் செய்துள்ளார்கள். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இவ்வாறு வெட்டிஎடுத்து திரிபுபடுத்திய செய்திகளின் மூல நிகழ்ச்சியை ஆராய்ந்து பாரக்குமாறு நாங்கள் மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். முழுக் கதையையும் கேளுங்கள். அப்போது உண்மையை உணரலாம்.

தோழர் லால்காந்த சம்பந்தமாகவும் அவ்வாறான திரிபுபடுத்தலை செய்தார்கள். “ஒருசிலர் கூறுகிறார்கள் நாங்கள் வந்தால் தொழில்முயற்சிகளை கையகப்படுத்துவோம் என”. அந்த தலைப்பை திரிபுபடுத்தி “ஒரு சிலர் கூறுகிறார்கள்” எனும் பகுதியையும் “என” என்கின்ற பகுதியையும் வெட்டிவிட்டு “நாங்கள் வந்தால் தொழில்முயற்சிகளை கையகப்படுத்துவோம்” எனும் வாக்கியப் பகுதியை போடுகிறார்கள். இந்த அசிங்கமான, கீழ்த்தரமான, அருவருப்பான வேலையையே தற்போது செய்துவருகின்றனர். அவர்களால் அதைத்தவிர வேறு ஒன்றையுமே செய்ய முடியாது. இந்த விளையாட்டு மூலமாக திசைகாட்டியின் பயணத்தை நிறுத்திவிட முடியாது. தமது தோல்வியால் வெறிபிடித்துள்ளவர்கள் முன்னெடுத்து வருகின்ற திரிபுபடுத்துதல் சம்பந்தமாக நாங்கள் அவதானத்துடன் இருந்து எமது உத்தியோகபூர்வ ஊடகங்கள் வாயிலாகவும் எம்மிடமிருந்தும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம். மக்கள் மத்தியில் அவ்விதமாக கீழ்த்தரமாக நடந்துகொள்ளவேண்டாமென எதிரிகளை வலியுறுத்துகிறோம். சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய இடங்களில் அதனைச் செய்வோம். தேவையான இடங்களில் மாத்திரம் தெளிவுபடுத்துவோம். பொருட்படுத்தாமல் விடக்கூடிய இடங்களில் பொருட்படுத்தாமல் விடுவோம். மக்களின் நம்பிக்கையுடன் பரிசுத்தமான நோக்கத்திற்காக நாங்கள் தொடர்ச்சியாக உழைப்போம்.

இந்த ஊடக சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர்களான சுனில் ஹந்துன்னெத்தி, டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரும் பங்கேற்றனர்

NPPTILVINPRESS

NPPTILVINPRESS
Show More