(-Colombo, June 17, 2024-) ‘புதிய தேசிய மறுமலச்சிக்காக இலங்கையர் அனைவரும் அணிதிரளுகின்ற தருணத்தில் தோழமையின் பெயரால் இலங்கை வாழ் இஸ்லாமிய மக்களுக்கு ஈகைத் திருநாள் உறுதுணையாக அமையட்டுமென பிரார்த்திக்கிறோம்…” அநுர குமார திசாநாயக்க
(-Colombo, June 17, 2024-)
‘புதிய தேசிய மறுமலச்சிக்காக இலங்கையர் அனைவரும் அணிதிரளுகின்ற தருணத்தில்
தோழமையின் பெயரால் இலங்கை வாழ் இஸ்லாமிய மக்களுக்கு ஈகைத் திருநாள்
உறுதுணையாக அமையட்டுமென பிரார்த்திக்கிறோம்…”
அநுர குமார திசாநாயக்க
(-London, June 15, 2024-) கேள்வி: வினைத்திறனின்மை மற்றும் உத்தியோகத்தர் மனநிலை (பணிக்குழு ஆட்சிமுறை) நிறைந்த அரச சேவையை வினைத்திறன் கொண்ட மக்கள் நட்புமிக்க அரச சேவையாக மாற்றுவதற்கான சவாலை தேசிய மக்கள் சக்தி எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறது? பதில் : அரசசேவை எமது நாட்டுக்கு அத்’தியாவசியமானதாகும். எமது அரசசேவை முற்றாகவே சீரழிந்துள்ளது. அரச சேவையை வழங்குவதற்காக உறப்படுகின்ற செலவுகளே சுமை. கல்வி, சுகாதாரம் சுமையல்ல. அந்த சேவையை வழங்குவதற்கான கிரயமே சுமையாக அமைகின்றது. அரசியல் இடையீடுகள் […]
(-London, June 15, 2024-)
கேள்வி: வினைத்திறனின்மை மற்றும் உத்தியோகத்தர் மனநிலை (பணிக்குழு ஆட்சிமுறை) நிறைந்த அரச சேவையை வினைத்திறன் கொண்ட மக்கள் நட்புமிக்க அரச சேவையாக மாற்றுவதற்கான சவாலை தேசிய மக்கள் சக்தி எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறது?
பதில் : அரசசேவை எமது நாட்டுக்கு அத்’தியாவசியமானதாகும். எமது அரசசேவை முற்றாகவே சீரழிந்துள்ளது. அரச சேவையை வழங்குவதற்காக உறப்படுகின்ற செலவுகளே சுமை. கல்வி, சுகாதாரம் சுமையல்ல. அந்த சேவையை வழங்குவதற்கான கிரயமே சுமையாக அமைகின்றது. அரசியல் இடையீடுகள் காரணமாக நிறுவனங்கள் ஊழியர்களால் நிரப்பப்பட்டு சீர்குலைக்கப்பட்டுள்ளன. நாங்கள் ஒருபோதுமே உறவுமுறைத் தொடர்புகளின்பேரில், அரசசேவையை நெறிப்படுத்த மாட்டோம் என்பதற்கு உத்தரவாதமளிக்கிறோம். துறைசார் அனுபவங்கள் வாய்ந்த, திறன்கொண்ட துறைசாரந்த நிபுணர்களே அவற்றை நெறிப்படுத்த வேண்டும். ஒவ்வோர் அரச நிறுவனத்திற்கும் அந்த துறைசார் திறன்களும் ஆற்றல்களும் நிறைந்த குழுவினர் மாத்திரமே நியமிக்கப்படுவர்.
ஆட்சேர்ப்பு, பதவியர்வு, இடமாற்றம் அரசியலின்பேரில் இடம்பெறமாட்டாது. நாங்கள் எந்தவோர் அரசியல் கட்சிக்கும் பகிரங்க கூட்டத்தில் “எங்களின் இந்த கூட்டத்தில் பங்கேற்பது அரசாங்க சேவையில் தொழிலொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான தகைமையாக மாட்டாது” எனக் கூறுமாறு சவால் விடுக்கிறோம். நாங்கள் அதனைக் கூறுகிறோம். விஷமத்தனமான செயல்களைப் புரிவதற்கான கும்பல்கள் இருக்கலாம். அதனைத் தடுப்பதற்காகத்தான் அதிகாரம் இருக்கின்றது. அதிகாரம் பிறப்பது அரசியலமைப்பில் அல்ல. அதிகாரம் பிறப்பது மக்களிடமிருந்தாகும். மக்கள் எமக்கு வினைத்திறன்மிக்க அரசசேவைக்காக அதிகாரத்தை தருகிறார்கள். அரசியலமைப்பினால் அதிகாரத்தை பிரயோகிப்பதற்கான எல்லைகளே தரப்படுகின்றது. மக்களிடமிருந்து எமக்கு கிடைத்துள்ள அதிகாரத்தை மக்களின் எதிர்பார்ப்புகளை ஈடேற்றுவதற்காக பிரயோகிக்க அஞ்சமாட்டோம். அரசசேவையை வினைத்திறன் கொண்டதாக்கிட பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் போன்றவற்றை அமுலாக்கவேண்டும்.
கேள்வி: NPP அரசாங்கமொன்றின் கீழ் புத்த சமயத்திற்கு கவனிப்பு குறைவடையுமென பரவிச் செல்கின்ற வதந்திகள் சம்பந்தமாக உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில் : எமக்கு எதிரான குழுக்கள் எமக்கு எதிராக உண்மையற்ற, குறைகூறல் மட்டத்திலான தகவல்களை வெளியிடுவதை அவர்களின் தொழிலாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மதத்திற்கு அமைவாக வாழ்வது தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்களே. அவர்களின் கூற்று பொய்யானதாகும். அரசியலமைப்பின் 9 வது உறுப்புரையில் பௌத்த மதத்திற்காக வழங்கப்பட்டுள்ள முதன்மைத்தானம் எவ்விதத்திலும் இல்லாதொழிக்கப்பட மாட்டாது. 2015 தொடக்கம் 2019 வரை இலங்கைக்கு அரசியலமைப்பொன்றினை ஆக்குவதற்கான உரையாடலொன்று நிலவியது. அந்த உரையாடலில் 9 வது உறுப்புரையை மாற்றியமைப்பது பற்றி பேசப்படவே இல்லை. அனைவரும் 9 வது உறுப்புரையை ஏற்றுக்கொண்டு கலந்துரையாடலை மேற்கோண்டார்கள். அதனால் இனந்தெரியாத அச்சத்தை ஏற்படுத்த முற்படுகிறார்கள். 9 வது உறுப்புரையில் கைவைக்க மாட்டோம். அதில் கைவைக்கவேண்டிய அவசியம் தமிழ் தலைமைகளுக்கும் கிடையாது.
கேள்வி: தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு சமவுரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டமென்ன?
பதில்: நாங்கள் எந்த நோக்கத்திற்காக அதிகாரத்தை எடுக்கிறோம்? தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராகவா அதிகாரத்தை எடுக்கிறோம்? நாங்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுசேர்ந்து தேசிய ஒற்றுமையை உருவாக்கிக் கொள்வதற்காகவே அதிகாரத்தை எடுக்கிறோம். நாங்கள் அதிகாரத்திற்கு வருகிறோம் என்ற செய்தியே பெரும்பாலும் இனவாதத்தை தோற்றிகடித்திடும். இனவாதம் அவ்வாறே நிலவினால் நாங்கள் அதிகாரத்திற்கு வரமாட்டோம். அதற்கு அப்பால் இருக்கின்ற மறுசீரமைப்பு செயற்பாங்கு என்ன? தமிழ்பேசுகின்ற மக்களும் பொதுவில் மக்கள் எதிர்நோக்குகின்ற சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதை நாங்கள் எற்றுக்கொள்கிறோம். தமிழ் மொழியைப் பேசுகின்றதாலேயே அவர்களுக்கே தனித்துவமான பல சிக்கல்களும் இருக்கின்றன. பொதுப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான திட்டமொன்று எம்மிடம் இருக்கவேண்டும். கல்வி, சுகாதாரம், விவசாயத்திற்காக உறப்பட நேரிடுகின்ற செலவானது வடக்கு, தெற்கு, கிழக்கினை உள்ளிட்ட அனைவருக்குமே பொதுவான பிரச்சினையாகும். அவை தீர்க்கப்படல் வேண்டும்.
அத்துடன் தமிழ் மக்களுக்கு தமது தாய்மொழியில் அரசாங்கத்துடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா? ஒவ்வொரு பிரஜைக்கும் தனது மொழியில் அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதற்கான உரிமை உறுதிசெய்யப்படல் வேண்டும். அரசியலமைப்பில் அது இருந்தாலும் நடைமுறையில் அமுலாக்கப்படுதில்லை. நாங்கள் அந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்போம். ஒவ்வொரு பிரஜைக்கும் தனது மதத்தை பின்பற்ற அவசியமான சுற்றுச்சூழல் உருவாக்கிக் கொடுக்கப்படும். மதம் என்பது தமது நம்பிக்கையாகும். அதைப்போலவே பல்வேறு கலாசார அடையாளங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரினதும் கலாசார அடையாளங்களை கௌரவத்தினை ஏற்றுக்கொள்கின்ற ஒரு நாட்டை நாங்கள் உருவாக்குவோம். பொதுமக்கள் ஒன்றாக கொண்டாடக்கூடிய வைபவ வாய்ப்பகளை நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
பிரதானமான பிரச்சினை அதிகாரப் பகிர்வுடனேயே பின்னிப்பிணைகின்றது. மாகாண சபைகளை நிலவுகின்ற இந்த விதத்திலேயே பேணி வருவோம். நாங்கள் அரசியல் தீர்வு என்றவகையில் மாகாண சபைகளை ஏற்றுக்கொள்வதில்லை. தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் மாகாண சபைகள் தாம் வென்றெடுத்த உரிமை என நினைக்கிறார்கள். மாகாண சபைகளை ஒழித்துக்கட்டுவதானால் அவர்கள் வென்றெடுத்த உரிமைகளை பறித்தெடுப்பதாகவே அவர்கள் கருதுகிறார்கள். அப்போது மீண்டும் அநாவசியமான முரண்பாடொன்று உருவாக்கப்படும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை உருவாகும்வரை, இலங்கையரை உருவாக்கி புதிய கட்டமைப்புகளை இனங்காணும்வரை மாகாண சபைகள் இவ்வண்ணமே இயங்கும். எனினும் நிரந்தர தீர்வு இந்த இடத்தில் கிடையாதென நாங்கள் நம்புகிறோம்.
குறிப்பாக மலையகத்தில் வசிக்கின்ற மக்கள்மீது கவனஞ் செலுத்தப்படுகின்றது. கடந்த காலத்தில் மலையக மக்கள் பற்றிய பிரகடனமொன்றை நாங்கள் வெளியிட்டோம். அவர்களின் வீடமைப்புப் பிரச்சினை, கல்விப் பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகள் அவர்களுக்கு இருக்கின்றன. அவர்களுக்கே தனித்துவமான பிரச்சினைகள் இருக்கின்றன. இலங்கையர்களான மக்களை உருவாக்குவதென்பது அவர்களின் அடையாளத்தை ஒழித்துக்கட்டுவதையல்ல. அவர்களின் அடையாளத்தி-ற்கு மதிப்பளித்து, ஏற்றுக்கொண்டு ஒன்றுசேர்வதாகும். வடக்கிலுள்ள மக்கள் சனாதிபதி தேர்தலில் தெற்கின் தலைவரொருவரை தெரிவுசெய்வதாயின் என்.பி.பி. இன் தலைமைத்துவத்தை தெரிவுசெய்வார்களென நாங்கள் நம்புகிறோம். நாங்கள் கட்டியெழுப்பப்போகின்ற அரசு அனைவருக்கும் நிழல் தருகின்ற குடையாக மாறும். தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவையை அமைக்கையில் வடக்கு, கிழக்கு, தெற்கில் உள்ள அனைவரையுமே பிரதிநிதித்துவம் செய்கின்ற அமைச்சரவையாக அமையும். நாங்கள் வடக்கில் உள்ள மக்களிடம் கேட்கிறோம் வடக்கிற்கு தனிவேறான ஆட்சியொன்று அவசியமா, நாட்டின் நிருவாகத்தின் பங்காளிகளா மாறுவதா அவசியமென்று. தேசிய சிக்கலைக் குறைத்துக்கொண்டு தேசிய ஒற்றுமையை நிர்மாணிக்க அவசியமான ஆரம்பகட்ட நடவடிக்கைளை நாங்கள் மேற்கொள்வோம்.
கேள்வி: ஒருசில வாக்காளர்கள் தோ்தலை பகிஷ்கரிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக ஆய்வுகள் வெளிக்காட்டுகின்றன. அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான உங்களின் வேலைத்திட்டமென்ன?
பதில்: மிதக்கின்ற வாக்காளர்கள் வெற்றிபெறுகின்ற பக்கத்தைநோக்கி மிதக்கிறார்கள். சமுதாயத்திற்குள்ளே நாங்கள் வெற்றிபெறுவோமென்ற விடயத்தை எம்மால் பலம்பொருந்தியவகையில் உறுதிசெய்ய முடியுமா? அந்த அளவுக்கே மக்கள் எம்மை நோக்கி வருவார்கள். அதைப்போலவே அனைவருமே எம்மை நோக்கி வருவார்களென நம்பிக்கைவைக்க முடியாது. எந்தவொரு மனித சமூகத்திலும் வித்தியாசமான கண்ணேட்டத்தில் பார்ப்பவர்கள் இருக்கக்கூடும். எனினும் காற்று இந்த பக்கத்திற்கு திரும்பினால் இது வெற்றிவரை பயணிக்கும்.
கேள்வி: உயர்கல்வி தொடர்பாக இருக்கின்ற உங்களின் எண்ணக்கரு யாது? வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கைக்கு வர முயற்சி செய்த வேளையில் அவை நிறுத்தப்பட்டன. அதனால் நாங்கள் பாரிய வருமானத்தை இழந்தோம். பலர் இலங்கையில் கல்வி கற்கமுடியாமல் வெளிநாடு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. அவற்றை நிறுத்தி நாங்கள் எவ்வாறு ஒரு தேசம் என்ற வகையில் வேறு நாடுகளிலுள்ளவர்களை இலங்கைக்கு வரவழைத்து கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கு உள்ள வேலைத்திட்டமென்ன?
பதில்: எமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகையில் தனியார் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை அழைப்பித்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமென்ற மூடநம்பிக்கையில் இல்லை. இந்தியாவில் பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. 2022 இல் 71.000 பேர் உயர் கல்விக்காக இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து 11 இலட்சம் பேர் வெளியில் சென்றுள்ளார்கள். பிரித்தானியாவில் கல்விக்காக 82% வருவது இங்கு தங்குவதற்காகவே. இங்கு வருவதற்குள்ள பாதைதான் கல்வி பயில்வது. எந்தவொரு பிள்ளையையும் பாதுகாப்பற்ற நாட்டுக்கு கல்விக்காக அனுப்ப மாட்டார்கள்.
கல்வியில் புதிய அறிவு மேற்கிலேயே உருவாகின்றது. அதனால் புதிய அறிவினைத் தேடிக்கொண்டு மேற்கிற்கே செல்லவேண்.டி இருக்கின்றது. அதனால் மேற்கிற்குச் செல்கின்ற போக்கு அதிகமானதாகும். தனியார் கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்வதாயின் இதனைவிட எமது நாடு பாதுகாப்பானதாக அமையவேண்டும். எமது நாடு பாதுகாப்பற்ற நாடாக இருக்கையில் வெளிநாட்டு மாணவர்கள் வரமாட்டார்கள்.
கல்வி என்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எமது ஆட்சியில் அரச கல்வி நிலவும். ஒழுங்குறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட உயர்கல்வி நிலவும். வெளிநாட்டுக் கல்வியும் நிலவும். ஒரு பிள்ளைக்கு தனியார் கல்வியைப் பயிலவேண்டுமானால் அதற்காக ஒழுங்குறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியும். ஒரு பிள்ளை வெளிநாடுசென்று கல்வி பயிலவேண்டுமானால் அதற்கான வாய்ப்பு உரித்தாகும்.
கேள்வி: இலங்கையிலிருக்கின்ற அடிப்படை பிரச்சினையாக நோ்மையும் பொறுப்புக்கூறலும் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறது. இலங்கையில் சட்டத்தின் ஆட்சி சிதைந்து விட்டதாக நீங்கள் தெளிவுபடுத்தினீர்கள். அதனை கட்டியெழுப்புவதற்காக நீங்கள் நம்பிக்கையை உறுதிசெய்வதை ஆரம்பித்தால் நல்லது. அதற்காக சட்டவிரோதமாக பெறப்பட்ட வாகன அனுமதிப்பத்திரங்களையும் எங்களின் வரித்தொகையையும் எங்களுக்கு மீண்டும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்தது அதிகாரப் பகிர்வின் கீழ் உங்களுடைய கொள்கைப் பிரகடனத்தை தாமதிப்பதன் மூலமாக கொள்கையற்றவர்கள் என வெளிப்படுத்தப்படுகிறது. அதற்கான உங்களுடைய தீர்வு என்ன?
பதில்: எமது அரசநிருவாகத்தில் பிரதானமான பிரச்சினையொன்று நிலவுகின்றது. அரச நிரவாகத்தில் பொறுப்புக்கூறல் கிடையாது. மக்களுக்கும் எமக்கும் இடையிலான உடன்பாடு என்ன? நாங்கள் மக்களிடம் கூறுகிறோம் இந்தஇந்த விடயங்களை செய்வோமென. அதற்காக நீங்கள் எங்களுக்கு வாக்குகளை அளியுங்கள் எனக் கூறுவோம். அதுதான் எமக்கிடையில் நிலவுகின்ற சமூக உடன்படிக்கை. தேர்தல் என்பது அரசியல் இயக்கத்திற்கும் பிரஜைக்கும் இடையில் நிலவுகின்ற தேர்தல் உடன்படிக்கையாகும். வாக்காளனின் பொறுப்ப புள்ளடி இடுவதுடன் முடிவடைகின்றது. கொடுத்த வாக்குறுதிகளுக்கு பொறுப்பக்கூறவேண்டியது அரசாங்கத் தரப்பினரின் பொறுப்பாகும். அரசியல்வாதியிடமும் மக்களிடமும் அவ்வாறான பொறுப்குக்கூறல் பற்றிய குறிப்பு கிடையாது. “தேர்தல் பிரகடனம் என்பது அந்த காலத்தில் கூறுகின்றவை அல்லவா” என சனாதிபதிமார்களே கூறியிருக்கிறார்கள். அதாவது பொறுப்புக்கூறல் கிடையாது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி பொறுப்புக்கூறுவது யார்? உயர்நீதிமன்றம் வழக்குத் தீர்ப்பொன்றினை வழங்கியது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்காக அந்த நேரத்தில் சேனாதிபதி என்றவகையில் பாதுகாப்பிற்கு பொறுப்பான அமைச்சரென்றவகையில் தனது பொறுப்பினை சரிவர ஈடேற்றாமைக்காக 100 மில்லியன் நட்டஈடு செலுத்தவேண்டியநிலை முன்னாள் சனாதிபதிக்கு ஏற்பட்டது.
மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, பி.பீ. ஜயசுந்தர, அஜித் நிவாட் கப்ரால் குழுவினரக்கு எதிராக மற்றுமொரு வழக்குத் தீர்ப்பு கிடைத்தது. மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். பொருளாதாரத்தை முறைப்படி முகாமைசெய்து முன்நோக்கி எடுத்துச்செல்வதற்கான பொறுப்புக்கூறல் நிலவவேண்டும். அவர்கள் பொறுப்பினை ஈடேற்றவில்லையென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து அவர்களை தவறாளியாக்கியது. அரசியல்வாதி பொதுமக்களுக்கு எந்தளவிற்கு பொறுப்புக்கூற வேண்டுமென்பது பற்றி இரண்டு வழக்குத் தீர்ப்புகளில் சுட்டிக்காட்டப்படுள்ளது. பொதுக்களின் பாதுகாப்பு பற்றிய பொறுப்பு சனாதிபதிக்கு உண்டு. பொருளாதாரத்தை சீரழிய இடமளியாமல் பேணிவரவேண்டிய பொறுப்பு இருக்கின்றது. உயர்நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகள் கிடைத்திராவிட்டால் எவருமே அரசியல்வாதி மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டுமென நினைக்கமாட்டார்கள். எமது ஆட்சியில் நிலவுகின்ற கட்டமைப்பிற்குள் பொறுப்புக்கூற வேண்டியவர் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். பொறுப்புக்கூறாவிட்டால் அதற்கெதிராக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் நிறுவனங்களின் ஒழுங்குவிதிகளில் குறிப்பிடப்படுகின்றன. அதற்கமைவாக நாங்கள் செயலாற்றுவோம்.
அண்மையில் நாங்கள் பொறியியலாளர் மாநாட்டினை நடாத்தினோம். அதன்போது ஐந்து பொறியியல்துறைகள் பற்றிய கொள்கைகளை நாங்கள் முன்வைத்தோம். அதற்கு முன்னர் சுற்றுலாத் தொழிற்றுறை பற்றிய கொள்கைகளை சமர்ப்பித்தோம். இந்த 29 ஆந் திகதி இலங்கையில் இற்றைவரை மேற்கொண்டிராத ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மாநாட்டினை எற்பாடு செய்திருக்கிறோம். ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி செயற்பாங்கினூடாகவே உலகம் முன்நோக்கி நகர்கின்றது. ஒரு காலத்தில் மிகவும் அதிகமான பீரங்கிகளின் சொந்தக்காரரரே உலகத்தை ஆட்சிசெய்தார்கள். அதன் பின்னர் உலகத்தை ஆட்சிசெய்தவர்கள் மிகவும் அதிகமான நிதிப் பலத்தைக் கொண்டவர்களாவர். வருங்காலத்தில் உலகத்தை ஆளப்போகின்றவர்கள் மிகஅதிகமான தொழில்நுட்பத்தின் உரிமையாளர்களே. ஐக்கிய அமெரிக்கா தனது வரவுசெலவின் அதிகமான பங்கினை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக ஒதுக்கி உள்ளது. 533 பில்லியன் டொலர்களாகும். எமது மொத்த ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்களாகும்.
ஜுன் 29 ஆந் திகதி நடாத்தப்படுகின்ற மாநாட்டில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கையை பகிரங்கப்படுத்துவோம். தேர்தல் நெருங்கும்போது எமது ஒட்டுமொத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைக்க எதிர்பார்க்கிறோம்.
கேள்வி: எமது நாட்டின் சிறுவர் பாதுகாப்பு பாரிய பிரச்சினையாகி இருக்கிறது. அது பல வருடங்களாக வளர்ச்சியடைந்து வருகின்றது. இலங்கை பொலிஸின் கடுமையான குற்றச்செயல்கள் பற்றிய வருடாந்த அறிக்கைகளின்படி சிறுவர் துர்ப்பிரயோகம் அதிகரித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின்கீழ் இலங்கை சிறார்களுக்கு நியதிச்சட்டமுறையான தனித்துவம் வழங்கப்படுகின்றதா?
ஜப்பான், செம்பியா போன்ற நாடுகள் தேசிய பாதுகாப்பின் மையப்பொருளாக சிறுவர் பாதுகாப்பினை மாற்றியுள்ளது. சிறுவர் பாதுகாப்பு என்பது உடல்ரீதியான பாதுகாப்பு மாத்திரமல்ல. கல்வி, சுகாதாரம், வறுமையொழிப்பு ஆகிய அனைத்தினதும் சேர்க்கையாகும். அதன்படி தேசிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றின்கீழ் இலங்கையின் தேசிய பாதுகாப்பின் மையப்பொருளாக சிறுவர் பாதுகாப்பு மாற்றப்படுமா?
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அடுத்த சனாதிபதி என்றவகையில் அநுர குமார திசாநாயக்க நியமிக்கப்பட்டால் நீங்கள் எமது பிள்ளைகளின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக எடுக்கின்ற ஆரம்பகட்ட நடவடிக்கைகள் என்ன? தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் எடுக்கின்ற ஆரம்பகட்ட நடவடிக்கைகள் என்ன?
பதில்: அரசியலமைப்பினால் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும். அவையிரண்டையும் சேர்த்துக்கொள்ள நாங்கள் எதிர்பார்க்கிறோம். தேசிய பாதுகாப்பின் மையப்பொருளாக பிள்ளைகள் மாறுவதற்குப் பதிலாக பிரஜைகளின் பாதுகாப்பின் மையப்பொருளாக பிள்ளைகள் மாறுவார்கள். பிரஜைகளின் ஒட்டுமொத்த பாதுகாப்பில் முதன்மையானதாக கருதப்படுவது பிள்ளைகளின் பாதுகாப்பாகும். அதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் தயார்.
எங்கள் முதற்கட்ட நடவடிக்கைதான் ஒவ்வொரு பிள்ளைக்கும் உணவு கொடுப்பது. எமது நாட்டில் ஐந்து வயதிற்கு குறைவான பிள்ளைகளின் போசாக்கின்மை ஏறக்குறைய 21% ஆகின்றது. ஐந்து வயதினைவிடக் குறைந்த பிள்ளைகள் ஐவரை எடுத்துக்கொண்டால் ஒரு பிள்ளை போசாக்கின்மையால் பாதிக்கப்படுகின்றது. அந்த பிள்ளைகளின் உரிமைகள், பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளைவிட “உணவு” முதன்மை இடம் வகிக்கின்றது. எனவே எமது கொள்கைப் பிரகடனத்தில் பிரஜைகளின் உணவு, சுகாதாரம், கல்வியை நாங்கள் தெளிவாக உறுதிசெய்திருக்கிறோம்.
இரண்டாம்கட்ட நடவடிக்கையாக பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக இருக்கின்ற நிறுவனங்களில் மறுசீரமைப்பினை எற்படுத்த வேண்டும். இந்த லேபளை ஒட்டிக்கொள்வதற்காக ஒருசில நிறுவனங்கள் இருக்கின்றன. அந்த நிறுவனங்களை வினைத்திறன் கொண்டவையாக மாற்றி நெறிப்படுத்தவேண்டும்.
மூன்றாவது விடயம் பொலிஸில் சிறுவர் குற்றச்செயல்கள் பற்றி கண்டறிவதற்காக விசேட கூறு ஒன்று தாபிக்கப்படல் வேண்டும். வயது ஐந்து வருடங்களில், ஏழு வயதில் துர்ப்பிரயோகத்திற்கு இலக்காகின்ற பிள்ளைகளின் வழக்குகள் 22,23 வயதிலேயே விசாரிக்கப்படுகின்றது. அது எவ்விதத்திலும் நியாயமானதல்ல. இந்த குற்றச்செயல்கள் தொடர்பில் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுவதற்காக துரிதமான பொறியமைப்பொன்று நிறுவப்படும்.
கேள்வி: அரசியல்வாதிகள் இடைக்கிடையே அங்குமிங்கும் விற்பனையாகிறார்கள். உங்களுடைய அரசாங்கமொன்றின் கீழ் இதனை நிறுத்துவீர்களா? திரிபு நிலை ஏற்படவும் இதுதான் காரணம்.
பதில்: அரசியலமைப்பிற்கான 19 வது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகையில் அதனை ஆக்குவதற்கான முன்மொழிவுகளை நாங்கள் சமர்ப்பித்தோம். அதில் ஒரு முன்மொழிவுதான் பாராளுமன்றத்தில் கட்சி மாறினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாகும் என்கின்ற வாசகமாகும். பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த மூலத் திருத்தத்தில் அந்த வாசகம் இருந்தது. பாராளுமன்றத்தில் சட்டமொன்று ஆக்கப்படுகையில் குழுநிலை எனும் கட்டம் வருகின்றது. குழுநிலைக் கட்டத்தில் தினேஷ் குணவர்தன எழுந்து அதனை நீக்கிவிடுமாறு கூறினார். அந்த நேரத்தில் நீதி அமைச்சர் என்றவகையில் இதனை சமர்ப்பித்தவர் விஜேதாச ராஜபக்ஷ ஆவார். விஜேதாச ராஜபக்ஷ இணங்கினார். அந்த வாசகம் இருந்திருந்தால் விஜேதாச ராஜபக்ஷவிற்கும் பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாகிப் போயிருக்கும்.
அரசியல்வாதியின் கட்சிதாவல் பற்றி நாங்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்கிறோம். அது அரசியலை தெருச்சுற்றிமயமாக்கி விட்டது. அண்மையில் வழக்குத் தீர்ப்பொன்று வந்தது. முஸ்லீம் காங்கிரஸின் நசீர் அஹமட் கட்சி தாவியமை காரணமாக உறுப்பினர் பதவி வறிதாகியது. எனினும் ஹரீன் பர்னாந்துவினதும் மனுஷ நாணாயக்காரவினதும் வழக்குகள் விசாரிக்கப்பட்டுவிட்டன. தீர்ப்பு வழங்குவது தாமதித்துள்ளது.
எவர் சனாதிபதியானாலும் பாராளுமன்றம் கலைக்கப்படும். கட்சிதாவல் தொடர்பான வழக்குத் தீர்ப்பு வழங்குதல் இதற்கு முன்னரும் நேர்ந்துள்ளது. 1993 அளவில் லலித், காமிணீ நீங்கிய தருணத்தில் எட்டு உறுப்பினர்கள் நீங்கினார்கள். பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாகியது. அரசியலமைப்பிற்கு மேலும் வாசகங்கள் தேவையெனில் அதனைச் சேர்த்திடுவோம். கட்சி தாவினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாகுமென எற்கெனவே வழக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கேள்வி: உங்களுடைய உயிர் பாதுகாப்பு?
பதில்: நாங்கள் மக்களுடனேயே செயலாற்றவேண்டும். பாதுகாப்பு தொடர்பிலும் அக்கறை செலுத்தவேண்டும். உயிரை நயமாக விற்றுவிட முடியாது. அதற்கு அவசியமான வேலைத்திட்டத்தில் இருந்துகொண்டு நாங்கள் செயலாற்றி வருகிறோம்.
கேள்வி: தூதரக சேவையை தூதரக உத்தியோகத்தர்களை கொண்டு மாத்திரம் பேணிவர எதிர்பார்க்கிறீர்களா? அவ்வாறின்றே தூதரக சேவைக்கு அரசியல் உத்தியோகத்தர்களை நியமிக்க எதிர்பார்க்கிறீர்களா?
பதில்: வெளியுறவுச் சேவை பற்றிய விடயத்தில் அதற்கான கல்வியைப் பயின்ற, அதற்காகவே பயிற்றப்பட்ட குழுவொன்று இருக்கின்றது. அவர்கள் தொடர்பில் நாங்கள் அதிக அக்கறையைக் காட்டுவோம். சமூகஞ்சார் அனுபவம் உள்ளவர்களை அனுப்பிவைப்பதில் தவறுகிடையாது. இங்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது. நாவலகே பெனற் குறே எவ்வாறு உரோமிற்கு செல்வது? ஜாலிய விக்கிரமசூரிய எவ்வாறு அமெரிக்க தூதுவரானது? ஷிரந்தியின் தம்பி எவ்வாறு சீசெல்ஸிற்குச் செல்வது? ரஷ்யாவிற்கு உதயங்க வீரதுங்க எவ்வாறு செல்வது? அத்தகைய அரசியல் நியமனங்கள் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றில் இடம்பெறமாட்டாது. எமது தூதரக சேவையை நாங்கள் புதிய சந்தைகளை தேடுகின்ற திசையைநோக்கி ஆற்றுப்படுத்த எதிர்பார்க்கிறோம். அத்தருணத்தில் வணிகரீதியான ஆற்றல்களைக்கொண்ட குழுக்கள் தூதரக சேவையில் ஈடுபடுத்தப்படுவது வெற்றிகரமானதாக அமையுமென நாங்கள் நினைக்கிறோம். நாட்டின் அவசியப்பாட்டுடன் தொடர்புபடுத்திக் கொண்டுதான் நாங்கள் தூதரக சேவையில் அமர்த்துவோம்.
கேள்வி: எம்மைப்போன்ற சிறிய நாடுகள் முன்னேற்றமடைந்திருப்பது உற்பத்திப் பொருளாதாரமொன்றின் கீழ் அல்ல. சேவைகள் பொருளாதாரத்தினூடாகவே. கல்வி, நிதிசார் சேவைகளை, விற்பனை செய்யவும் முடியாவிட்டால் சேவைகளின் உற்பத்திக்காக உங்களிடமிருக்கின்ற வேலைத்திட்டமென்ன?
பதில்: நீங்கள் கூறுகின்ற சேவைப் பொருளாதாரம் நிலவுகின்ற ஒவ்வோர் இராச்சியத்திலும் உற்பத்திப் பங்கொன்று இருக்கின்றது. நாங்கள் ஒரு சிறிய நாடாவோம். சேவைகள் பொருளாதாரத்தில் ஒரு பங்கு இருக்கின்றது. எமது நாட்டில் IT துறையில் பாரிய சேவை வாய்ப்பினை உருவாக்கிக்கொள்ள முடியும். கப்பற்பயணத்துறையின் சேவை வாய்ப்புகளின் பெரும்பங்கினை கைப்பற்றிக்கொள்ள முடியும். நிதிசார் சந்தையில் ஒரு மையநிலையமாக எம்மை மாற்றிக்கொள்ள முடியும்.
எனினும் அவசியமான முட்டைகளை இறக்குமதி செய்யாமல் உற்பத்தி செய்துகொள்ள முடியும். கொவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் குறைந்தபட்சம் தமக்கு அவசியமான அடிப்படை பண்டங்களை தாமே உற்பத்தி செய்துகொள்ள வேண்டுமென்ற புதிய எண்ணக்கருவொன்று கட்டியெழுப்பப்படவேண்டுமென்ற அழுத்தம் எங்களுக்கு கொடுக்கப்பட்டது. அங்கு விவசாயத்தை நவீனமயமாக்குகின்ற திசைக்கு நாங்கள் செல்லவேண்டி ஏற்படும். அந்த இடத்திற்கு நாங்கள் பயணிக்கவேண்டும். எமது கனியவளங்களின் அடிப்படையில் எமக்கு பொருளாதார வாய்ப்புவளங்கள் இருக்கின்றன. நாங்கள் அந்த இடத்திற்குச் செல்லவேண்டும். அத்தகைய பல துறைகளை நாங்கள் தெரிவுசெய்திருக்கிறோம்.. நாங்கள் உற்பத்தியில் எந்த இடத்திற்குச் செல்லவேண்டும் என இனங்கண்டு கைத்தொழில் துறை தொடர்பான புதிய மாற்றத்தை ஏற்படுத்துதல் மற்’றும் சேவைகள் பங்கினை உருவாக்குவது எமது எதிர்பார்ப்பாகும்.
கேள்வி: அரசியலமைப்பிலே ஒரு பிரிவு இருப்பதாக கூறப்படுகிறது. ஐந்து வருடங்களை ஆறு வருடங்களாக நீடித்துக்கொண்டு இருக்கமுடியுமா? வடக்கு கிழக்கின் சிறுபான்மை வாக்குகளை வென்றெடுப்பதற்கான உங்களுடைய வேலைத்திட்டம் என்ன?
பதில்: சனாதிபதியீன் பதவிக்காலம் ஆறு வருடங்களை விஞ்சுவதாயின் மக்கள் தீர்ப்பினாலன்றி மாற்றியமைத்திட முடியாதென 83 வது உறுப்புரையில் இருக்கின்றது. அரசியலமைப்பிற்கான 19 வது திருத்தத்தில் இந்த உறுப்புரை திருத்தப்படவில்லை. எனினும் சனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உறுப்புரையை எவ்விதத்திலும் ரணில் விக்கிரமசிங்கவினால் பயன்படுத்திக்கொள்ள முடியாது. இப்போது சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டு அடுத்ததாக வருகின்ற சனாதிபதியால் மாத்திரமே அவ்வாறு செய்யமுடியும். அதனால் 83 வது உறுப்புரைக்குள்ளே நுழைந்துசெல்வதற்கான எந்தவிதமான வாய்ப்பும் கிடையாது.
அடுத்ததாக வடக்கு சம்பந்தமான பிரச்சினையில் நாங்கள் காண்பது வெற்றிக்காக தமிழ் வாக்குகள் தேவையென்ற அடிப்டையில் அல்ல. வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய அனைத்து மக்களினதம் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நாங்கள் அரசாங்கமொன்றை அமைக்கவேண்டும். நாங்கள் தெற்கில் மாத்திரம் வெற்றிபெற்றால் அதன்மூலமாக வெளிக்காட்டப்படுவது வடக்கின் மக்கள் எம்மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதாகும். இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் கிழக்கு, வடக்கு, தெற்கு, மலையக மக்கட் சமுதாயத்தின் ஒத்துழைப்பு எமக்குத் தேவை. நாங்கள் வடக்கில் ஒருபகுதி பணியை ஆற்றிவருகிறோம். இளைஞர் தலைமுறையினரின் எழுச்சியொன்று இருக்கின்றது. கிழக்கின் முஸ்லிம் மக்களின் பாரிய போக்கு நிலவுகின்றது. வடக்கும், தெற்கும், கிழக்கும், அனைத்து மக்களினதும் நம்பிக்கையை வென்றெடுத்த அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்வதே எமது எதிர்பார்ப்பு. அதனை மையமாகக்கொண்டு நாங்கள் அந்த பிரதேசங்களில் விரிவான பல வேலைத்திட்டங்களை தொடங்கி இருக்கிறோம்.
கேள்வி: உங்களின் அரசாங்கமொன்றின் கீழ் விவசாயக் கொள்கை எவ்வாறு அமுலாக்கப்படும்? கமக்காரர்களின் சிக்கல்களிலிருந்து அவர்களை மீட்டெடுத்து ஏதேனும் மட்டத்திற்கு கொண்டுவருவதற்காகவுள்ள கொள்கை என்ன?
பதில்: எமது விவசாயத்தில் இருக்கின்ற பிரதானமான சிக்கல் திட்டமிடப்பட்ட விவசாய உற்பத்தியொன்று இல்லாமையாகும். உலகின் எந்தவோர் உற்பத்தியும் சந்தைக்கு வருவது தரவுகள், தகவல்களின் அடிப்படையிலாகும். எமது விவசாயம் இருப்பது தரவுகள், தகவல்களின் அடிப்படையில் அல்ல. மோப்பத்தின் அடிப்படையிலாகும். திட்டமிடப்பட் விவசாயமொன்று எம்மிடம் இல்லை. எமது முதலாவது முயற்சி ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தி சந்தைக்கு வரத்தக்கவகையில் ஒழுங்கமைவதாகும். பலம்பொருந்திய பயிர்ச்செய்கைத் திட்டமொன்றுக்குள் விதையினங்கள், உள்ளீடுகள், தொழில்நுட்பம், பொதிசெய்தல், களஞ்சியப்படுத்துதல், சந்தை, அறுவடைக்குப் பிந்திய விரயத்தை தடுத்துக்கொள்ளல், புதிய விதையினங்களை அறிமுகஞ் செய்தல் போன்ற பல துறைகளில் புதிய ஆராய்ச்சிகள், புதிய துறைகள் அவசியமாகும். அவை பற்றி கருத்திற்கொண்டு எமது விவசாயக் கொள்கையை வகுத்திருக்கிறோம்.
(-தேசிய மக்கள் சக்தியின் லண்டன் மக்கள் சந்திப்பு – 2024.06.15-) நீங்கள் எம்மீது நம்பிக்கை வைத்தே இத்தருணத்தில் பங்கேற்றுள்ளீர்கள். நீங்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை துளியேனும் நாங்கள் சிதைக்க மாட்டோம் என்பதை உறுதியாக கூறுகிறோம். நீங்கள் எமக்காக தோற்றுவீர்களாயின் உங்களின் நன்மதிப்பினை பாதுகாக்க நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம். உங்களுக்கும் எம்மனைவருக்கும் இருப்பது கூட்டான தேவையாகும். ஆட்சியில் மாற்றமொன்றைக் கொண்டுவருவதற்காக நீங்கள் தோற்றுகிறீர்கள். நீங்களும் நாங்களும் ஒரே நோக்கத்தில் பயணிக்கின்ற கூட்டான மனித சமுதாயமாகும். உங்கள் மனதில் இந்த […]
(-தேசிய மக்கள் சக்தியின் லண்டன் மக்கள் சந்திப்பு – 2024.06.15-)
நீங்கள் எம்மீது நம்பிக்கை வைத்தே இத்தருணத்தில் பங்கேற்றுள்ளீர்கள். நீங்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை துளியேனும் நாங்கள் சிதைக்க மாட்டோம் என்பதை உறுதியாக கூறுகிறோம். நீங்கள் எமக்காக தோற்றுவீர்களாயின் உங்களின் நன்மதிப்பினை பாதுகாக்க நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம். உங்களுக்கும் எம்மனைவருக்கும் இருப்பது கூட்டான தேவையாகும். ஆட்சியில் மாற்றமொன்றைக் கொண்டுவருவதற்காக நீங்கள் தோற்றுகிறீர்கள். நீங்களும் நாங்களும் ஒரே நோக்கத்தில் பயணிக்கின்ற கூட்டான மனித சமுதாயமாகும். உங்கள் மனதில் இந்த நாட்டை மாற்றியமைப்பதற்காக இருக்கின்ற தேவையை அதற்கு இணையாக விளங்கிக்கொண்டவர்களே நாங்கள்.
அண்மைக்கால உலக வரலாற்றில் 2022 இல் மிகவும் பலம்பொருந்திய மக்கள் எழுச்சி இடம்பெற்றது. மக்கள் தன்னிச்சையாக வீதியில் இறங்கத் தொடங்கினார்கள். இளைஞர் மாதக்கணக்கில் ஆட்சியாளனுக்கு எதிராகப் போராடினார்கள். வெளிநாடுகளிலுள்ள நீங்கள் அதற்கான உதவிகளை புரிந்தீர்கள். வெற்றியைப் பிரார்த்தித்தீர்கள். கோட்டாபய வீட்டுக்குச் சென்றார். போராட்டத்தின் இறுதியில் அரைவாசி எஞ்சியிருக்கிறது. பாராளுமன்றமும் கலைக்கப்பட வேண்டுமென்பது எமது நிலைப்பாடாக அமைந்தது. மக்களின் எதிர்ப்பு காரணமாக கோட்டாபய வீடு செல்கிறார். உலக வரலாற்றில் ஒருபோதுமே இடம்பெற்றிராதவாறு கோட்டாபயவை விரட்டியடிப்பதற்காக வந்த மக்கள் ஆணையிலேயே ரணில் விக்கிரமசிங்க சனாதிபதியாகிறார். இன்று எமது நாட்டின் ஆட்சியென்பது திரிபடைந்த ஓர் ஆட்சியதிகாரமாகும். அன்று இலட்சக்கணக்கில் மக்கள் ஆட்சியாளனுக்கு எதிராக எழுச்சிபெற்றனர். அதனை வெற்றியில் நிறைவுசெய்ய இயலாமல் போயுள்ளது. எனினும் தற்போது வாய்ப்பு வந்துள்ளது. இன்று மக்கள் தேர்தல் வாய்ப்பு வரும்வரை அனைத்து துன்பதுயரங்களையும் பொறுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்கவோ அவருடைய கும்பலைச்சேர்ந்த எவருமோ தேர்தலை நடத்தாமல் அதிகாரத்தில் இருக்க தயாராகினால் உலக வரலாற்றில் இடம்பெறுகின்ற மிகப்பெரிய மக்கள் எழுச்சியைத் தடுக்க ரணில் விக்கிரசிங்கவிற்கு முடியாமல்போய்விடும். ஆட்சியாளன் தேர்தல் தொடர்பில் பதற்றமடைந்திருப்பது வேறு காரணத்தினால் அல்ல, வரலாற்றில் இற்றைவரை அதிகாரம் கைமாறிய விதம் மாற்றமடைந்து பொதுமக்களின் இயக்கமான தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் கைமாறி வருவதாலாகும். ஒன்றுசேரக்கூடிய அனைவருமே தற்போது ஒன்றிணைந்து வருகிறார்கள். இரண்டு கோப்பைகளில் உள்ள புறூட்செலட்டை ஒரே கோப்பையில் போட்டுக்கொள்ள தற்போது பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்கள். இற்றைக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் கபீர் ஹசீமின் வீட்டில் ராஜித சேனாரத்னவுடன் ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர்கள் பதினைந்துபேர் கலந்துரையாடலை மேற்கொண்டார்கள். இரண்டாகப் பிரிந்து போட்டியிட்டால் என்.பி.பி. வெற்றிபெறும். அது அபாயமாம். முகத்துவார மீன்பிடித் துறைமுகம் 25 வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்படுகின்றது. அரசாங்க மதிப்பீட்டுத் தொகையைவிடக் குறைவான தொகைக்கே குத்தகைக்கு விடப்பட்டது. புலனாய்வு அறிக்கைகள் அனைத்துமே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் இருக்கின்றன. விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டும் இருக்கின்றன. சட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களத்திடம் வழக்கு அறிக்கைகளும் இருக்கின்றன. அதனால் மக்களின் மாற்றம் ராஜித சேனாரத்னவிற்கு அபாயகரமானதென்பது உண்மையாகும். ஊழல் பேர்வழிகளுக்கு குற்றச்செயல் புரிந்தவர்களுக்கு என்.பி.பி. ஆட்சிக்கு வருவது ஆபத்தானதாகும். அதனால் இரகசிய பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது. இந்த தரப்புகள் இரண்டும் இரண்டாக முன்வருவது பயங்கரமானது, அதனால் ஒன்றாக ஒன்றுசேர்ந்து உரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கீரியும் பாம்பும் அடித்துச் செல்லப்படும். ஒரு துண்டு மரக்கட்டை அகப்பட்டால் கிரியும் பாம்பும் அதில் ஏறும். ரணிலும் மகிந்தவும் ஒரே கட்டைத்துண்டில் ஏறியிருக்கிறார்கள். இந்த வெள்ளம் என்ன? தேசிய மக்கள் சக்தியுடன் அணிதிரண்ட மாபெரும் மக்கள் வெள்ளம் இருக்கிறது. அவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏறுமளவுக்கு நிர்ப்பந்தித்துள்ளது. இலங்கை வரலாற்றில் எல்லா சனாதிபதிகளும் ஒன்றாக ஏறுகின்ற மேடையை நாங்கள் சந்திக்கிறோம். சந்திரிக்கா, மகிந்த, மைத்திரி, கோட்டாபய , ரணில் ஆகியோரை எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் ஒரே மேடையில் சந்திக்கலாம். அவர்கள் 1994 இல் இருந்து 2024 வரை 30 வருடங்களாக பிரிந்து இருந்த குழுவினராவர்: ஒருவருக்கொருவர் எதிராக ஆயுதம் தரித்து நின்றவர்களாவர். ஆனால் இன்று ஒரே மேடைக்கு ஏறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளக்கூடிய அனைத்துவிதமான வழிமுறைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். ஊடக அலைவரிசைகளின் நடத்தைகள் சாதாரணமான காலங்களை விட அப்பால் சென்றுள்ளன. செய்தித்தாள்களை வாசிக்கும்போது அதில் உள்ளவற்றைவிட அதிகமாக வாசிக்கின்ற நிலைமை அதிகரித்துள்ளது. மென்மேலும் மக்களின் நம்பிக்கை ஈடுபாடுகளை உறுதிசெய்து கொள்வதுதான் வெற்றிக்காக எமக்கிருக்கின்ற ஒரே பாதை. ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சந்திப்பிற்கு வந்திருப்பதன் மூலமாக அந்த ஈடுபாட்டினை நம்பிக்கையை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கத்தயார் என்பதையே பறைசாற்றுகின்றது. அதற்காக இடையீடு செய்வோம் என உங்களுக்கு அழைப்புவிடுக்கவே நாங்கள் வந்திருக்கிறோம்.
எங்கள் நாட்டுக்கு என்ன நோ்ந்துள்ளது? பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடைந்த, பாரிய குற்றச்செயல்கள் நிறைந்த, சட்டத்தின் ஆட்சி முற்றாகவே சீரழிந்த, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே அச்சம், அவநம்பிக்கை, குரோதம் வளர்ச்சியடைந்த அடிமட்டத்திலேயே இருக்கின்ற மக்களுக்கு முறையான உணவை பெற்றுக்கொள்ள முடியாது, வைத்தியசாலையில் மருந்து மாத்திரைகள் இல்லாத, இளைஞர்களின் எதிர்காலம் முற்றாகவே, அழிக்கப்பட்ட கல்வி நாசமாக்கப்பட்ட, போதைப்பொருட்கள் நிறைந்த ஒரு தேசம் எம்மெதிரில் உருவாக்கப்பட்டுள்ளது. எமது நாட்டு மக்களும் தாய்நாடும் அனுபவிக்கின்ற கவலைக்கிடமான நிலைமை எமது இதயங்களால் உணரப்படுமாயின், எமது பிரஜைகளின் வேதனைகள் எமது செவிகளுக்கு கேட்குமானால், இதயம் படைத்த மனிதர்களாயின் எம்மெவருக்கும் இந்த நிலைமையின் மத்தியில் பாராமுகமாக இருக்கின்ற தார்மீக உரிமை கிடையாது. நாம் அனைவரும் செய்யக்கூடிய அனைத்தையுமே புரிந்து இந்த மாற்றத்தை அடைவதற்கான முன்னோடி செயற்பொறுப்பின் பங்காளிகளாக மாற வேண்டும் அதற்காக உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
எங்களுடைய தாய் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். எமது நாட்டின் பழைய, தோல்விகண்ட அரசியல் பயணப்பாதையை மாற்றயமைக்க வேண்டும். இந்த நெருக்கடியை அரசியலே நிர்மாணித்தது. ஐக்கிய இராச்சியத்தில் உள்ள எவரேனும் சிந்திப்பாரெனில் ஒரு பாடசாலைக்கு ஏதேனும் ஒரு உதவியை செய்ய, கல்விப்பிரச்சினையை தீர்க்கமுடியுமென அப்படி தீர்க்க முடியாது. எனினும் நீங்கள் சில பிள்ளைகளுக்காவது உதவி செய்வது பெறுமதியானது. நீங்கள் நினைப்பீர்களானால் ஒன்றுசோ்ந்து வீடற்ற ஒருவருக்கு வீட்டை அமைத்து கொடுத்து உதவவேண்டுமென்றால் அந்த உதவியைச் செய்யுங்கள். எனினும் அதன் மூலமாக இலங்கையின் வீடமைப்பு பிரச்சினை தீரமாட்டாது. உங்களுடைய அன்பருக்கு, உறவினருக்கு மருந்துகளை அனுப்பிவைக்கலாம். ஆனால் அதன் மூலமாக இலங்கையின் சுகாதாரப் பிரச்சினை தீரமாட்டாது. இந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக நீங்களும் நாங்களும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கட்டாயமாக ஆற்றவேண்டிய செயற்பொறுப்புதான் எமது நாட்டின் இந்த அரசியல் பயணப்பாதையை மாற்றியமைப்பதாகும். எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலை தீர்மானகரமான திருப்புமுனையாக மாற்றுவோம். இதுவரை பாய்ந்து சென்ற அரசியல் பயணப்பாதையை மாற்றியமைக்க திடசங்கற்பத்துடன் செயலாற்றுவோம். தோ்தல் பெரும்பாலும் செப்டெம்பர் 28 அல்லது ஒக்டோபர் 5 ஆம் திகதி நடைபெறும். இந்த அரசியல் மாற்றத்தை நாங்கள் செய்வோம். அதன்போது எம்மிடம் கையளிக்கப்படுகின்ற பொறுப்பினை நாங்கள் ஆற்றுவோம்.
எமது நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் வரலாறுமே பிறருக்கு எதிரான அரசியலாகவே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. தெற்கின் சிங்கள வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக அந்த இயக்கமானது மற்றவருக்கு எதிரானதாகவே செயற்படுகின்றது. 2005 எனில் வடக்குக்கு எதிராக. 2010 எனில் தமிழனுக்கு எதிராக. 2019 எனில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக. அரசாங்கங்கள் அவ்வாறே அமைக்கப்பட்டன. தெற்கிலுள்ள கட்சிகள் வடற்கிற்கு எதிராகவும் வடக்கின் கட்சிகள் தெற்கிற்கு எதிராகவும் கட்டியெழுப்பப்படுகின்றன. கிழக்கின் கட்சிகள் தெற்கிற்கு எதிராக கட்டியெழுப்பப்படுகின்றன. ஆனால் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற நீங்கள் மற்றவருக்கு எதிரான அரசியலொன்றை காண்கிறீர்களா? மற்றவருக்கு எதிரான அரசியல் கட்டியெழுப்பப்படுவதன் மூலமாக எக்கச்சக்கமாக யுத்தங்களும், முரண்பாடுகளும் நிர்மாணிக்கப்பட்டன. இலங்கை மண் நனையும்வரை இரத்தம் பெருக்கெடுத்தோடியது. ஆறுகள் நிரம்பி வழியும்வரை வடக்கிலும், தெற்கிலும் தாய்மார்களின் கண்ணீர் வழிந்தோடியது. இந்த ஒருவருக்கொருவர் எதிரான அரசியல் எமது நாட்டை ஓர் அங்குலமேனும் முன்னோக்கி நகர்த்தமாட்டாது. தேசிய மக்கள் சக்தி பிரதிநிதித்துவம் செய்வது தேசிய ஒற்றுமைக்கான அரசியலையாகும். அதனை நாங்கள் வெற்றிக்கொள்ள வேண்டும்.
1948 இல் நாங்கள் சுதந்திரம் பெற்றோம். 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றது. பிரமாண்டமான நாடான இந்தியாவில் பல்வேறு மொழிகளை பேசுகின்ற, பல்வேறு மதங்களை பின்பற்றுகின்ற, பிரதேச ரீதியான பிளவுகள் நிலவின. இந்தியாவின் தேசிய தலைவர்கள் மக்களை ஒரு கொடியின் கீழ் கொண்டுவர முயற்சி செய்தார்கள். அதன் பெறுபேறாக அப்துல் கலாம் போன்ற ஒருவர் இந்தியாவின் குடியரசு தலைவரானார். அதன் பெறுபேறாக மன்மோகன் சிங் போன்ற ஒருவர் பிரமராகிறார். அதன் பெறுபேறாக சாதியில் குறைந்தவரென கருதப்பட்ட ஒரு பெண் இந்தியாவின் ஜனாதிபதி பதவியை வகிக்கிறார். ஐக்கிய இராச்சியத்தின் குடியேற்ற நாடாக விளங்கிய காலத்திலும் 1948 ன் பின்னரும் எமது நாட்டில் நிலவியது பிளவுபடுத்தும் அரசியலாகும். அதிலிருந்து எமக்கு என்ன கிடைத்தது? முப்பதுவருடகால யுத்தம் உருவாகியது. பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் மாண்டார்கள். உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெறுகிறது. அதுதான் பிளவுபடுத்துகின்ற அரசியல். நாங்கள் இலங்கையில் புதிய அரசியல் ஒன்றை உருவாக்குவோம். இனவாதத்திற்கு பதிலாக தேசிய ஒற்றுமைக்கான கொடியை ஏந்திய புதிய அரசியலை இலங்கையில் நிலைநாட்டுவோம்.
அதைப்போலவே எமது நாட்டின் அரசியல் சில சிறிய குடும்பங்களின் கைகளில் குவிந்துள்ளன. பண்டாரநாயக்க, ஜயவர்த்தன, விக்கிரமசிங்க, ராஜபக்க்ஷ, சேனாநாயக்க. நாட்டின் ஆட்சிக்கான சுக்கான் சில குடும்பங்களின் கைகளிலேயே தேங்கியிருந்தன. பிரதேச அரசியல், மாவட்ட அரசியல், ஒரு சில குடும்பங்களின் கைகளில் குவிந்திருக்கின்றன. சஜித் பிரேமதாஸ ஒரு கட்சியின் தலைவராக மாறியமைக்கான ஒரே காரணி அவர் ஒரு ஜனாதிபதியின் மைந்தனாக அமைந்தது மாத்திரமே. உயர்மட்ட அரசியலும் கீழ்மட்ட அரசியலும் ஒரு சில குடும்பங்களின் கைகளை மையமாகக் கொண்டிருக்கின்றன. எமது அரசியலுக்கு புதிய மரபணுக்கள் சோ்க்கப்பட வேண்டும். அண்மையில் நாமல் ராஜபக்க்ஷ அவர்களின் குடும்ப அரசியலுக்கு 98 வருடங்கள் ஆகின்றன எனக்கூறினார். புதிய இளைஞர் தலைமுறையின் கைகளுக்கு, புதிய கருத்துக்களால் கட்டி வளர்க்கப்படுகின்ற மனிதர்களின் கைகளில் எமது அரசியலை நெறிப்படுத்துவதற்கான சுக்கான் ஒப்படைக்கப்படல் வேண்டும். இந்த அரச அதிகாரத்தின் சுக்கானை தேசிய மக்கள் சக்தியாகிய நாங்கள் எடுப்பது பல பரம்பரையாக இதனை வைத்துக்கொள்வதற்காக அல்ல. எமக்கு மிகவும் சுருக்கமான அத்தியாயம் ஒன்றே இருக்கிறது. அவர்களின் கையில் இருக்கின்ற பெட்டனை நாங்கள் எடுத்து புதிய பரம்பரையின் கையில் ஒப்படைப்பதுதான் தேசிய மக்கள் சக்தியாகிய எங்களிடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பு. இசெட் தலைமுறையின், அல்பா தலைமுறையின் பிள்ளைகளாகிய எமது அறிவு, மனோபாவம், விருப்புவெறுப்புக்கள் பழையவையாகும். நவீன இளைஞன் வித்தியாசமானவன். ஆனால் நவீன நிலைமையின் நோக்கங்கள் எமது நாட்டின் அரசியல் அதிகாரத்துடன் ஒத்துவருவதாக அமைவதில்லை. இந்த பழங்குடித்தன்மையிலான அரசியல் அதிகாரநிலை புதிய இளைமைக்கு அவசியமான வாய்ப்புகளை உருவாக்குவதில்லை. இளைமையின் விருப்புவெறுப்புகளை விளங்கிக்கொள்ளக்கூடிய ஆட்சியாளர்கள் இருந்திருப்பார்களெனின் அந்த இளைமைக்காக கட்டியெழுப்பப்படுகின்ற உழைப்புச் சந்தையை கையகப்படுத்த அவசியமான திட்டமொன்றை வகுப்பார்கள். ஒரு தேசம் என்ற வகையில் நாங்கள் புதிய உலகத்துடன் ஒன்றிணைவதில் தோள்வி கண்டுள்ளோம்.
எமது நாட்டில் சட்டத்தின் ஆதிக்கம் உறுதி செய்யப்படுகின்ற ஆட்சியொன்று அவசியமாகும். நீங்கள் வீசாக்காலப்பகுதி முடிவடையும்போது எவ்வளவு சிந்திப்பீர்கள்? எனினும் உங்களுக்கு தெரியும் டயனா குடியுரிமை இன்றி, வீசாக்காலம் கடந்து இருந்த நிலையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்து இராஜாங்க அமைச்சர் பதவியொன்றைக்கூட வகித்தார். அவ்வாறு அமையக்காரணம் சட்டம் அரசியல் அதிகாரநிலைக்கு கட்டுப்பட்டிருப்பதாலாகும். டயனாவுக்கு குடியுரிமை கிடையாதென்பதை முதலில் அறிந்தவர் டயனா ஆவார். இரண்டாவது ரணில். தனக்கு உரித்தாகாத சிறப்புரிமைகளை அறிந்திருந்து அனுபவிக்கிறார். அது எளிமையானதல்ல. பிரசன்ன ரணவீர இராஜங்க அமைச்சர் எயார் போர்ட்டில் ஒருவரை தாக்குகிறார். சட்டம் அமுலாகவில்லை. ஒட்டுமொத்த கட்டுப்பாடும் குற்றச்செயல் புரிபவர்களின் பிடிக்குள் அகப்பட்ட இலங்கை தான் இருக்கிறது. பாரியளவிலான நிதிசார் குற்றச்செயல் புரிந்தவர்கள், மனித படுகொலைகளுடன் தொடர்புப்பட்டவர்கள் நாட்டை ஆட்சி செய்கிறார்கள். நூரித் தோட்டத்தின் தோட்டத்துரை படுகொலை வழக்கில் 13 பேருக்கு மரணதண்டனை உரித்தானது. ஹோகந்தர குடும்பத்தில் ஐவரின் படுகொலை சம்பந்தமான விசாரணைகளுக்கு பின்னர் அவர்களுக்கு மரண தண்டனை கிடைத்தது. எனினும் லசந்த படுகொலை, தாஜுடீன் படுகொலை, எக்நெலிகொட கடத்திச் சென்றமை, கீத்நொயார், உபாலி தென்னகோன், போத்தல ஜயந்த தாக்குதல் தொடர்பான புலன் விசாரணைகள் இன்றும் கிடையாது. பரபரப்பினை ஏற்படுத்திய ஒவ்வொரு குற்றச்செயலையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கண்டுபிடித்தது. கண்டுபிடிக்க முடியாமல் போன ஒவ்வொரு குற்றச்செயலினதும் ஒவ்வொரு படுகொலையினதும் பின்னால் அரசியல் இருக்கின்றது. எமது நாட்டில் சட்டத்தின் ஆட்சியை மீண்டும் உறுதி செய்கின்ற நெறிமுறைகள் நிறைந்த சட்டத்தை மதிக்கின்ற ஆட்சியை நாங்கள் உருவாக்கவேண்டும்.
சீரழிந்த ஒரு பொருளாதாரமே எமக்கிருக்கிறது. நாங்கள் 20 ஆம் நூற்றாண்டை கைவிட்ட ஒரு தேசமாவோம். மனித நாகரிகத்தின் முக்கியமான காலகட்டம் தான் 20 ஆம் நூற்றாண்டு. தொழிநுட்பத்தின் பாரிய மாற்றங்கள் இடம்பெற்ற நூற்றாண்டாகும். நாங்கள் ஒரு தேசம் என்ற வகையில் பாரிய தொழிநுட்பத்தின் தொடர்பாடலின் மாற்றங்களை இலங்கைக்கு கொண்டு வந்து பொருளாதாரத்தை புதிய பாய்ச்சலுக்கு கொண்டுவருவதில் தோல்வி கண்டோம். எமக்கு பழைய பெருமைமிக்க வரலாறொன்று இருந்தது. மிகவும் முன்னேற்றகரமான நீர்பாசனத் தொழிநுட்பம், கட்டிடக்கலை, சீகிரியாவின் நகரநிர்மாண திட்டமிடல், மீகிந்தலையில் மருத்துவ அறுவைச்சிகிச்சை மேற்கொண்டமைக்கான கத்தரிக்கோல் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்தகைய பெருமைமிக்க வரலாற்றுக்கு உரிமை பாராட்டிய நாங்கள் இன்று உலகில் மிகவும் வறுமையான நாடுகள் தொகுதிக்குள் வீழ்ந்துள்ளோம். பெருமைமிக்க வரலாற்றினை நவீனத்துவத்துடன் சீராக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. 76 வருடகால ஆட்சியாளர்களுக்கு தூரநோக்கொன்று இருக்கவில்லை. பொருளாதார நச்சுவட்டத்தில் நாங்கள் இறுகிப்போனோம். இந்த வட்டத்திலிருந்து நாங்கள் விடுபடவேண்டும்.
உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய பொருளாதாரத்தில் நாங்கள் பிரவேசிக்க வேண்டும். IT தொழிற்துறை மிகமுக்கியமானதாகும். மிகவும் குறுகிய காலத்தில் 5 பில்லியன் பொருளாதாரத்திற்கு செல்ல நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். அதற்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை ரெலிகொம் நிறுவனம் அமைத்துக் கொடுக்கவேண்டும். ஆனால் அதனை விற்பதற்காக ரணில் விக்கிரமசிங்க திட்டவரைப்படத்தை தயாரித்துக்கொண்டிருக்கிறார். நாங்கள் அதற்கு இடமளிக்கவேண்டுமா? எங்களுடைய நிதி நிறுவனங்களில் அரசாங்கத்திற்கு உரிமையானதாக இருப்பது ஒன்றுதான். அது தான் காப்புறுதிச் சந்தையை நெறிப்படுத்துகின்றது. அதனையும் விற்பதற்கு ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார். அரசாங்கத்திற்கு சொந்தமான வளங்களிலிருந்துதான் தொலைத்தூர கிராமங்களுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன. வலுச்சக்திக்காக சிறந்த சாத்தியவளம் எம்மிடம் இருக்கிறது. 2030 அளவில் உலகின் எரிபொருளுக்கான கேள்வி உச்சக்கட்டத்தை அடையும். 2050 அளவில் உலகின் வலுச்சக்தி தேவை 65% – 85% இடைப்பட்ட அளவினை மீளப்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி மூலங்களே உற்பத்தி செய்யும். எமக்கு மன்னார் வடிநிலத்தில் மிகச் சிறந்த காற்றுக்கொள்திறன் இருக்கிறது. அது 45 கிகாவொற் கொள்ளலவாகும். தற்போது எமக்கு அவசியமாவது 4 கிகவொற் ஆகும். 2040 இல் 8 கிகாவொற் அவசியமாகின்றது. மிகச் சிறந்த சூரிய சக்தி சாத்தியவளம் நிலவுகின்றது. இவை அனைத்தையும் தற்போது சொச்சத் தொகைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். டெண்டர் கோராமல் காற்றாலை மின்சாரத்திற்கான அனுமதி அதானிக்கு வழங்கப்பட்டது. அவர்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள். அவ்வாறு உற்பத்தி செய்கின்ற மின்சாரத்தை அரசாங்கம் கொள்வனவு செய்ய வேண்டும். 20 வருடங்களுக்கான அக்ரீமண்ட் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. அதானியிடமிருந்து 8.26 சதம் டொலருக்கு வாங்குவார்கள். அதானி இந்தியாவுக்கு கொடுப்பது 3.5 சதம் டொலருக்காகும். அதானிக்கு இந்தியா கொடுப்பதும் டெண்டர் கோரியே. எம்மிடம் 31 விவசாய பண்ணைகள் இருக்கின்றன. 28,000 ஏக்கர்கள் இருக்கின்றன. இந்த 28,000 ஏக்கர்களை விற்க திட்டமிடப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தனது இறுதிக்காலத்தில் அனைத்து வளங்களையும் விற்று தனது அமைச்சர்களுக்கு இயலுமானவரை திருட இடமளித்து செல்கின்ற பயணமொன்றை நிர்மாணித்துள்ளார். இந்த பயணத்தை தடுத்து நிறுத்தவேண்டும். எமது நாட்டின் இடஅமைவின் பேரில், கனிய வளங்களின் பேரில், சுற்றுலா கைத்தொழிலின் பேரில், வரலாற்றின் பேரில் எம்மால் புதிய பொருளாதார பயணத்தில் பிரவேசிக்க முடியும். தேசிய மக்கள் சக்தியைச் சோ்ந்த நாங்கள் இழந்த மறுமலர்ச்சியை கைப்பற்றிக்கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு பல்வேறு பக்கங்களிலிருந்து அதிகாரம் கிடைக்கின்றது. எமக்கிருக்கின்ற ஒரே சக்தி உங்களின் ஒத்துழைப்பாகும்: பொதுமக்களின் சக்தியாகும். உங்களின் ஒத்துழைப்பு முன்னொருபோதும் இருந்திராதவகையில் இன்று அவசியமாகின்றது. உங்களுடைய பலம் கிடைக்காவிட்டால் இந்த பல்லாயிரக்கணக்கானோர் குழுமியுள்ள கூட்டத்தை எம்மால் நடத்த முடியாது. உங்களின் ஊக்கத்திற்கும் அர்ப்பணிப்புக்கும் நாங்கள் பெரிதும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம். உங்களின் இடையீடு, உங்களின் பங்களிப்பு, உங்களின் உழைப்பின் பெறுபேறு இன்று கிடைத்துள்ளது. இது முடிவு அல்ல. இது லண்டனில் புதியதொரு ஆரம்பம். எம்மெதிரில் இருக்கின்ற மூன்றரை மாதக்காலப்பகுதி மிகவும் முக்கியமான காலப்பகுதியாகும். உங்களின் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் மீண்டும் மீண்டும் உரையாடுங்கள் நாங்கள் தொடர்ந்து உரையாடுவோம்: எழுதுவோம்: தோற்றுவோம். நீங்கள் முன்வைக்கின்ற பிரேரணைகளையும் விமர்சனங்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயார். நாங்கள் ஒரே கூட்டு இயக்கத்தின் பங்காளிகள் என்ற வகையில் ஒன்று சேர்வோம்.
(-Colombo, June 13, 2024-) ஐக்கிய இராச்சியத்தில் லண்டன் நகரின் Heathrow விமானநிலையத்தை தோழர் அநுர குமார திசாநாயக்க சென்றடைந்தபோது இலங்கையர்கள் வரவேற்ற தருணத்தில்… இன்று (ஜூன் 15) பிற்பகல் Crystal Grand, 3 Bath Rd இல் நடைபெறவிருக்கும் இலங்கைர்களுனான சந்திப்பில் உரையாற்றவுள்ளார்.
(-Colombo, June 13, 2024-)
ஐக்கிய இராச்சியத்தில் லண்டன் நகரின் Heathrow விமானநிலையத்தை தோழர் அநுர குமார திசாநாயக்க சென்றடைந்தபோது இலங்கையர்கள் வரவேற்ற தருணத்தில்…
இன்று (ஜூன் 15) பிற்பகல் Crystal Grand, 3 Bath Rd இல் நடைபெறவிருக்கும் இலங்கைர்களுனான சந்திப்பில் உரையாற்றவுள்ளார்.
(-ஊடக சந்திப்பு – 2024.06.12-) இன்று இந்த ஊடக சந்திப்பில் ரெசாங்கம் தொடரந்தும் கடனெடுத்து நாட்டைக் கடன் நெருக்கடிக்குள் அமிழத்’திவிடுதல் பற்றி கருத்துரைக்க எதிர்பார்க்கிறேன். 2022 ஏப்பிறல் 12 ஆந் திகதி இலங்கை பொருளாதாரரீதியாக வங்குரோத்து நிலையுற்ற நாடாக மத்திய வங்கி ஆளுனரால் உத்தியோகபூர்வமாக பிரகடனஞ் செய்யப்பட்டது. இந்த வங்ரோத்து நிலையை அடைய பிரதான காரணம் நாங்கள் வாங்கிய கடனை செலுத்து முடியாத நிலைக்கு நாடு வங்குரோத்து அடைந்தமையாகும். அரசாங்கம் கூறியவகையில் நெருக்கடி தோன்றுகின்ற வேளையில் எமது […]
(-ஊடக சந்திப்பு – 2024.06.12-)
இன்று இந்த ஊடக சந்திப்பில் ரெசாங்கம் தொடரந்தும் கடனெடுத்து நாட்டைக் கடன் நெருக்கடிக்குள் அமிழத்’திவிடுதல் பற்றி கருத்துரைக்க எதிர்பார்க்கிறேன். 2022 ஏப்பிறல் 12 ஆந் திகதி இலங்கை பொருளாதாரரீதியாக வங்குரோத்து நிலையுற்ற நாடாக மத்திய வங்கி ஆளுனரால் உத்தியோகபூர்வமாக பிரகடனஞ் செய்யப்பட்டது. இந்த வங்ரோத்து நிலையை அடைய பிரதான காரணம் நாங்கள் வாங்கிய கடனை செலுத்து முடியாத நிலைக்கு நாடு வங்குரோத்து அடைந்தமையாகும். அரசாங்கம் கூறியவகையில் நெருக்கடி தோன்றுகின்ற வேளையில் எமது ஒட்டுமொத்த கடன்சுமை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுரீதியாக 83 பில்லியன் டொலர்களாக அமைந்திருந்தது. (83,000 மில்லியன் டொலர்) இந்த கடள் நெருக்கடி நாட்டை தொடர்ச்சியாக பொருளாதாரப் படுகுழிக்குள் வீழ்த்தியது.
இந்த கடன் நெருக்கடியைத் தீர்த்துக்கொள்ள சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்றார்கள். சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்றமைக்கான பிரதான நோக்கம் நாங்கள் பெற்றுக்கொண்ட வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைத்துக்கொள்ள உதவி பெறுவதாகும். அதற்காக ஐஎம்ஃப் இலங்கை அரசாங்கத்துடன் ஓர் உடன்படிக்கையை செய்துகொண்டது. இந்த உடன்படிக்கை மூலமாக பல்வேறு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. அரசாங்கம் ஐஎம்எஃப் முன்மொழிவுகளை அமுலாக்கியது. அதற்கிணங்க மக்கள்மீத வரிச்சுமையை அதிகரித்தல், வலுச்சக்தி விலையை அதிகரித்தல், மின்சாரம், எரிபொருள், எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. மக்கள்மீத வரிச்சுமை அதிகரிக்கப்பட்டு, சேவைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டு மக்கள்மீதான அழுத்தம் அதிகரிக்கப்பட்டது. வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு ஒருபுறமிருக்க உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. ஈபிஎஃப் நிதியத்தின் பெரும்பகுதி வெட்டிவிடப்பட்டது. சர்வதேசரீதியாக பெறப்பட்ட டொலர்கடன்களில் ஒன்றுகூட வெட்டிவிடப்படவில்லை. அன்று நிலவிய 83 பில்லியன் டொலர் கடன்நெருக்கடியைத் தீர்த்துவைக்க வந்த ரணில் விக்கிரமசிங்க கடந்த இரண்ட வருடங்களக்குள் அந்த கடன் அளவினை மேலும் அதிகரித்து கடன் நெருக்கடிக்குள் சிறைப்படுத்தி இருக்கிறார். இந்த வருடத்தின் மார்ச்சு மாதத்தில் முடிவடைகின்ற கடன் அறிக்கைக்கிணங்க எமது கடன் அளவு 100 பில்லியன் டொலர் (100,000 மில்லியன்) வரை அதிகரித்துள்ளது.
பெறப்பட்ட கடன் அளவினை அதிகரித்துக்கொள்ள அரசாங்கள் உள்நாட்டக் கடனை அதிகரித்துள்ளது. அவர்களின் அறிக்கைகளின்படி உள்நாட்டக் கடன் அதிகரிக்கையில் திறைசேரி முறிகள் 37,182 மில்லியன் டொலர்களிலிருந்து 41,522 மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டப்படுகின்றது. கடந்த திசெம்பர் மாதமளவில் எமது கடன் 96 பில்லியன் டொலர்களாகும். அந்த கடன் அளவு இந்த வருடத்தின் மதல் மூன்று மாதங்களில் 04 பில்லியன் டொலர்களால் அதிகரிக்கின்றது. 2024 முதலாவது காலாண்டில் 4300 மில்லியன் டொலர் கடன் பெறப்படுகின்றது. இலங்கையில் திறைசேரி முறிகளை விநியோகிப்பதன் மூலமாக புதிதாக 4.3 பில்லியன் டொலர் கடன் பெறப்பட்டுள்ளது. முன்று மாதங்களுக்கான கடன் இப்படியென்றால் 12 மாதங்கள் நிறைவடைகையில் 16 பில்லியன் டொலர் அளவிலாக கடன் கடன்பெறவேண்டியநிலை அரசாங்கத்திற்கு ஏற்படும். இவ்விதமாகத்தான் கடன் நெருக்கடியை அதிகரித்துள்ளார்கள்.
அஸ்வெசும திட்டத்தை அமுலாக்க உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடன்பெறப்பட்டது. அதைப்போலவே எரிவாயுவின் விலையை ஒரு மட்டத்தில் பேணிவரவதற்காக 70 மில்லியன் டொலர்களை உலக வங்கியிடமிருந்து கடனாகப் பெற்றார்கள். அதனால் கடன் நெருக்கடி அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டை பொருளாதாரரீதியில் கட்டியெழுப்புவதாகக்கூறி ஆட்சிக்க வந்த ரணில் ராஜபக்ஷ இந்த குறுகிய காலத்தில் செய்திருப்பதோ மேன்மேலும் கடன் சுமையை அதிகரிப்பதையாகும். பெற்ற அந்த கடன்களை இந்த காலத்தில் செலுத்தவும் போவதில்லை. அதனால் கடனுக்காக செலுத்தவேண்டிய வட்டியின் அளவும் செலுத்து வேண்டிய கடன் அளவும் அதிகரிக்கும். அவர்களின் அறிக்கைகளின்படி செலுத்தவேண்டியுள்ள வட்டி அளவு 6.4 பில்லியன் டொலர்வரை அதிகரித்துள்ளது. இந்த நெருக்கடி மிகவும் பாரதூரமானது. ரூபா உறுதியடைந்துவிட்டது: பணவீக்கம் குறைந்தவிட்டது என அவர்கள் மேலெழுந்தவாரியாக கூறுகிறார்கள். எனினும் உண்மையிலேயே ரணில் ராஜபக்ஷ இந்த குறுகிய காலத்தில் முன்பு இருந்ததைப் பார்க்கிலும் பாரிய கடன் நெருக்கடிக்குள் எம்மை வீழ்த்தி இருக்கிறார்கள்.
நாட்டு மக்களின் கடன்சுமை, வரிச் சமையை அதிகரித்து, பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலைகளை அதிகரித்து, மக்களை நாளுக்குநான் பிரச்சினையில் போட்டு, ரணில் விக்கிரமசிங்கவின் செலவுத் தலைப்பினை மேலும் 875 கோடியால் அதிகரித்துக்கொள்ள குறைநிரப்பு மதிப்பீட்டினைக் கொண்டுவருகிறார்கள். 2023 இல் சமர்ப்பித்த வரவுசெலவில் 600 கோடி ரூபா சனாதிபதியின் செலவுத் தலைப்பிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கு மேலதிகமாக இந்த குறைநிரப்பு மதிப்பீட்டினை எதிர்வரும் 18 ஆந் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக ஒழுங்குப் பத்திரத்திற்கு ஆற்றுப்படுத்தி இருக்கிறார்கள். ஓர் இராஜாங்க அமைச்சர் சனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்களுக்காக நிதியை ஒதுக்கீடு செய்வதாகக் கூறினார். கடந்த 24 மாதங்களில் சனாதிபதி 25 தடவைகள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டார். இந்த விரயமான செலவுகள் நாட்டை மென்மேலும் நெருக்டிக்குள் தள்ளுகின்றன. நாட்டில் பாரிய நெருக்கடி நிலவுகையில் இருக்கின்ற சனாதிபதிக்கு பெருந்தொகையான நிதி ஒதுக்கப்படுகின்றது. அதைப்போலவே முன்னாள் சனாதிபதிமார்களை பராமரிப்பதற்காகவும் கோடிக்கணக்கில் பணத்தை ஒதுக்கீடு செய்கிறார்கள்.
முன்னாள் சனாதிபதிமார்களின் வேதனாதிகள், படிகள் யாவையென வினவியவேளையில் அளித்த பதிலில் சந்திரிக்கா குமாரதுங்க அம்மையாரின் ஓய்வூதியம் 97,500 ரூபா. செயலாளர் கொடுப்பனவு 100,000 ரூபா. மாதாந்த எரிபொருள் படி 500,000 ரூபா. இது பாதுகாப்பு மற்றும் வீட்டுவதிகளை உள்ளடக்கவில்லை. மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஓய்வூதியம் ரூபா 97,500. செயலாளர் கொடுப்பனவு ரூபா 50,000. மாதாந்த எரிபொருள் படி ரூபா 704,100. மைத்திரபால சிறிசேன அவர்களுக்கு ஓய்வூதியம் ரூபா 97,500. செயலாளர் கொடுப்பனவு ரூபா 100,000. மாதாந்த எரிபொருள் படி ரூபா 704,100. பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு ஓய்வூதியம் ரூபா 97,500. செயலாளர் கொடுப்பனவு ரூபா 100,000. விரட்டியடிக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பொதுப் பணத்தில் மாதாந்த எரிபொருள் படி ரூபா 704,100. இந்த ஆட்சியாளர்கள் பொதுமக்களின் பணத்தை இவ்வாறுதான் விரயமாக்குகிறார்கள்.
ஐந்த வருடங்களைவி-ட ஒருநாள்கூட பதவியில் இருக்க முடியாதென உயர்நீதிமன்றம் பொருள்கோடல் வழங்கியது. ஆறு வருடங்களுக்கு நியமிக்கப்பட்ட ஒருவரும் அதற்கு மேலாக இருக்கமுடியாதென தீர்ப்பளித்தது. அவ்வாறு இருக்கையில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எப்படியும் இருக்க முடியாது. 30: 2 பிரிவின்படி இருக்ககூடிய காலம் ஐந்து வருடங்களாகும். இந்த காலப்பகுதியாக அமைவது இந்த வருடத்தின் நவெம்பர் 17 ஆந் திகதியாகும். அதற்கப்பால் ஒருநாள்கூட இருக்கமுடியாது. நாங்கள் நாட்ட மக்குளக்கு கூறுவது இந்த
(-Colombo, June 11, 2024-) யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க இன்று (11) முற்கபல் இலங்கை தமிழ் அரசு கட்சியின் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். அதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடுவதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தக் கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய […]
(-Colombo, June 11, 2024-)
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க இன்று (11) முற்கபல் இலங்கை தமிழ் அரசு கட்சியின் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
அதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடுவதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
இந்தக் கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட தோழர்கள் இணைந்துகொண்டிருந்தனர்.
நாட்டின் நிகழ்கால பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பாக மக்கள் முகம்கொடுத்து வருகின்ற சிக்கல்கள் குறித்தும் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதன் தேவை குறித்தும் இதன்போது ஆழமாக கலந்துரையாடப்பட்டது.