113 ஆவது சர்வதேச மகளிர் தினம் சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் திகதியில் வருகிறது. பெண்களுக்கென ஒரு நாள் அவசியம் எனும் விடயம் 1910 இல் கம்யூனிஸ்ட் அகிலத்தில் முன்மொழியப்பட்டது. பெண்களை சமூகத்தின் சக்தியாக அணிதிரட்டும் மற்றும் அவர்களின் வலிமையை வெளிப்படுத்தும் நாளாக இடதுசாரிய அர்த்தத்தில் இத்தினத்தின் செயற்பாடுகள் சீரமைக்கப்பட்டன. இம்முறை சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இலங்கையில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன், தேசிய மக்கள் சக்தியின் தலைமையில் பெண்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் […]
113 ஆவது சர்வதேச மகளிர் தினம்
சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் திகதியில் வருகிறது. பெண்களுக்கென ஒரு நாள் அவசியம் எனும் விடயம் 1910 இல் கம்யூனிஸ்ட் அகிலத்தில் முன்மொழியப்பட்டது. பெண்களை சமூகத்தின் சக்தியாக அணிதிரட்டும் மற்றும் அவர்களின் வலிமையை வெளிப்படுத்தும் நாளாக இடதுசாரிய அர்த்தத்தில் இத்தினத்தின் செயற்பாடுகள் சீரமைக்கப்பட்டன.
இம்முறை சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இலங்கையில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன், தேசிய மக்கள் சக்தியின் தலைமையில் பெண்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் அதைப்போலவே மக்களின் வாழ்வில் சிக்கல்களை தோற்றுவித்துள்ளவர்களுக்கும், அநீதியான நடப்பு அரசியல் முறைக்கும் எதிராக பெண்களை ஸ்தாபனமயப்படுத்தும் நோக்குடன் நாடு முழுவதும் பிரமாண்டமான ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்ததுடன், பெருந்தொகையான பெண்களின் பங்களிப்புடன் இச்செயற்பாடு வெற்றிகரமாக இடம்பெற்றது.
~களுத்துறை~

~பதுளை~

~கண்டி~

~அனுராதபுரம்~

                    சிவபெருமானுக்கு நன்றிதெரிவிப்பதற்காக நலமான எதிர்பார்ப்புகளை மனதிலேந்தி இராப்பொழுதில் விரதமிருக்கின்ற இலங்கைவாழ் சிவனடியார்களுக்கு எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.!
சிவபெருமானுக்கு நன்றிதெரிவிப்பதற்காக நலமான எதிர்பார்ப்புகளை மனதிலேந்தி இராப்பொழுதில் விரதமிருக்கின்ற இலங்கைவாழ் சிவனடியார்களுக்கு எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.!

                    (-Colombo, March 07, 2024-) எமது நாட்டின் பொருளாதார நெருக்கடியானது நீண்டகாலமாக சீரழிந்து கொண்டிருந்த செயற்பாங்கின் பெறுபேறாகும். ஏதோ தற்செயல் நிகழ்வு காரணமாக இவ்விதம் வங்குரோத்து அடையவில்லை. பலதசாப்தங்களாக படிப்படியாக வீழ்த்தப்பட்ட பொருளாதாரத்தின், சமூகத்தின் மற்றும் அரசியல் கலாசாரத்தின் இறுதிவிளைவுதான் இது. இந்த நெருக்கடியான நிலைமையை போன்றே புதிய திசையை நோக்கி நாட்டை வழிப்படுத்தவும், புதிய வரலாற்றினைத் தொடங்கவும் எமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தகைய நெருக்கடிகள் ஊடாக மக்களுக்கு கிடைக்கின்ற அனுபவங்களிலிருந்து புதியதொரு சமூகத்தைக் கட்டியெழுப்பக்கூடியதாக அமைகின்றது. […]
(-Colombo, March 07, 2024-)

எமது நாட்டின் பொருளாதார நெருக்கடியானது நீண்டகாலமாக சீரழிந்து கொண்டிருந்த செயற்பாங்கின் பெறுபேறாகும். ஏதோ தற்செயல் நிகழ்வு காரணமாக இவ்விதம் வங்குரோத்து அடையவில்லை. பலதசாப்தங்களாக படிப்படியாக வீழ்த்தப்பட்ட பொருளாதாரத்தின், சமூகத்தின் மற்றும் அரசியல் கலாசாரத்தின் இறுதிவிளைவுதான் இது. இந்த நெருக்கடியான நிலைமையை போன்றே புதிய திசையை நோக்கி நாட்டை வழிப்படுத்தவும், புதிய வரலாற்றினைத் தொடங்கவும் எமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தகைய நெருக்கடிகள் ஊடாக மக்களுக்கு கிடைக்கின்ற அனுபவங்களிலிருந்து புதியதொரு சமூகத்தைக் கட்டியெழுப்பக்கூடியதாக அமைகின்றது. சிதைவுற்ற பயணப்பாதை பற்றி நன்றாக சிந்தித்துப் பார்த்து புதிதாக அமைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நாட்டுப் பிரஜைகளின் இடையீட்டினால் நாட்டை வித்தியாசமான பாதையில் வழிப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
அவ்விதமாக நோக்கினால் நாங்கள் தற்போது இரண்டு பொருளாதார முறைமைகளுக்குள் ஒரு தெரிவினை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எமது வாழ்க்கையை ஓரளவுக்கு முடிச்சுபோட்டுக்கொண்டு செல்வதற்கான இயலுமை இருக்கமாயின் என்ன ஆனாலும் பரவாயில்லை போன்ற கருத்தினைக் கொண்டவர்களாக நடுநிலையில் இருக்கமுடியாது. தெளிவாகவே ஒரு தெரிவினை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு சனநாயக நாட்டில் முன்னேறவேண்டுமாயின் ஆட்சியாளர்களுக்கும் பிரஜைகளுக்கும் இடையில் சமூக இணக்கப்பாடொன்று அவசியமாகின்றது. நாங்கள் ஓர் எதிர்பார்ப்புடனேயே மக்கள் பிரதிநிதிகளை நியமிக்கிறோம். இந்த எதிர்பார்ப்பனை ஈடேற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடனேயே. ஆனால் அந்த இணக்கப்பாடு முற்றாகவே சிதைவடைந்துவிட்டது. ஆட்சியாளர்களை, அரச பொறியமைப்பினை, அரசியலை மக்கள் அவநம்பிக்கையுடனேயே நோக்குகிறார்கள். அதன்மூலமாக இடம்பெறுவது மற்றுமொரு மனிதனை சந்தேகத்துடன் நோக்குகின்றநிலை அதிகரிப்பதாகும். மனித உறவுகள் மிகவும் பலவீனமான கட்டத்தை அடைந்துவிட்டன. அரசியல், பொருளாதாரம் மாத்திரமன்றி சமூக வழியுரிமைக்கு அவசியமான அனைத்து துறைகள்மீதும் இது பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கல்வியை அது கடுமையாக பாதித்துள்ளது.
இந்த கல்வியிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடியவை பற்றிப் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நம்பிக்கையில்லாத மற்றுமொரு துறையாக மாத்திரமே அமைந்துள்ளது. கல்வி சம்பந்தமாக பாரிய நோக்கோ நம்பிக்கையோ கிடையாது. நிலவிய அரசியலால் உருவாக்கப்பட்ட நிலைமையே இது. கல்வியை இந்த இடத்திலிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டுமாயின் நிலவுகின்ற அரசியல் கலாசாரத்தையும் பொருளாதாரத்தையும் இதிலிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும். அந்த மாற்றம் உலக வரலாற்றில் புரட்சிகள், தேர்தல்கள், சுதந்திரப் போராட்டங்கள் ஊடாக பல்வேறு விதமாக இடம்பெற்றுள்ளன. தேர்தலால் தெரிவுசெய்யப்படுகின்ற அரசாங்கத்தினூடாக இந்த மாற்றத்தைசெய்ய நாங்கள் தெரிவுசெய்துள்ளோம். அதனால் தற்போது கழிந்துகொண்டிருப்பது ஒரு தனித்துவமான தருணமாகும். தேர்தல் மூலமாக மாத்திரம் அந்த மாற்றத்தை எற்படுத்திக் கொள்வது மிகவும் அரிதானதாகும். எனினும் 2024 என்பது இலங்கைக்கு ஒரு தனித்துவமான தருணமாகும். 2022 இல் மக்கள் மத்தியில் உருவாகிய போராட்டத்தின் பின்னர் விழித்தெழலுடன் மாற்றமடைந்த மற்றும் மாற்றமடைந்து வருகின்ற பல்வேறு அரசியல் அனுபவங்களையும் புரிந்துணர்வினையும் பெற்றுக்கொண்ட பிரஜைகளின் சக்தியானது ஒழுங்கமைகின்ற வாக்காளர்களுடன் இந்த தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.
பாராளுமன்றத்திற்குள்ளேயும் அதற்கு வெளியிலும் அரசியல்வாதிகளின் பாவனை பற்றி மக்கள் பகிரங்கமாகவே விமர்சிக்கத்தொடங்கி உள்ளார்கள். அவர்களை எதிர்க்க இனிமேலும் பயப்படவேண்டியதில்லை. முன்னேற்றமடைந்த பிரஜைகளும் அதனை விளங்கிக்கொள்ளாமல் பழைய அமைப்பினையே பேணிவர முயற்சிசெய்கின்ற குழுவினைப்போன்றே மக்களின் அபிலாஷைகளுடன் செயலாற்றுகின்ற அரசியல் இயக்கமொன்றினை சந்திக்கின்ற தனித்துமான தருணமே இது. புதிய அரசியல் கலாசாரத்தைக் கொண்டிருப்பதாலேயே பாரியளவிலான மக்களின் கவர்ச்சி திசைகாட்டி தொடர்பில் நிலவுகின்றது.
ஐந்தாந்திகதி பசில் ராஜபக்ஷ இலங்கைக்கு வந்தமை பற்றி பிரதான ஊடகங்களில் பிரதான செய்தியாக கூறப்பட்டிருந்தது. மீண்டுமொருதடவை நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள ஏழு மூளைகள் படைத்த ஒருவரின் மீள்வருகையை வரவேற்க, பசில் ராஜபக்ஷவை தோள்மீது சுமந்து வருவதைப்போல்தான் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அப்படியொன்றுமே இடம்பெறவில்லை. பசில் ராஜபக்ஷ பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியல் மக்களுடன் ஏற்புடையதல்ல என்பதை விளங்கிக்கொள்ள இந்த சம்பவமே போதும். மக்கள் வெறுக்கின்ற அரசியலைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைவருக்காகவும் அந்த கருத்திட்டத்தை முன்னெடுத்துவருகின்ற மல்லுக்கட்டுகின்ற ஒருசிலர் பசில் ராஜபக்ஷவை வரவேற்கச் சென்றிருந்தார்கள். பிரஜைகள் அங்கே இருக்கவில்லை.
மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் சனாதிபதியாகி நாட்டை மீட்டெடுக்கின்ற வீரன் எனக் கூறிக்கொள்கிறார். கொவிட், தவாறான விவாசாயக் கொள்கை என்பவை கோட்டாபயவின் காலத்தில் இருந்திராவிட்டால் நாடு சீரழிந்திருக்க மாட்டாதென அவர்கள் கூறுகிறார்கள். இந்த சீரழிந்தவேளையில் தீயிலிருந்து தோன்றி வீரனைப்போல ரணில் விக்கிரமசிங்க வந்ததாக கூறுகிறார். சர்வதேச உறவுகள் இருக்கின்ற, பொருளாதாரம் பற்றிய பரந்த அறிவுபடைத்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு மாற்றுவழி கிடையாதெனவும் கூறுகிறார். ஆனால் உண்மைநிலை அதைவிட முற்றிலும் வேறுபட்டது. பொருளாதாரம் சிதைவடைந்ததன் பாரதூரமான நி்லைமை இப்போதுதான் மக்களை நெருங்கியுள்ளது. கல்வித்துறையில் உயர்தர வகுப்புகளில் குறிப்பாக மாணவர்கள் இன்மை பிரதானமான சிக்கலாகும். அவர்களிடம் உள்ள ஒரே நோக்கம் இந்த நாட்டைவிட்டுச் செல்வதாகும். எமது இளமைக்காலத்தில் எண்பத்திமூன்றில் கறுப்பு ஜுலை, யு.என்.பி. பீதிநிலை, யுத்தத்தின் மத்தியிலேயே நாங்கள் இருந்தோம். அன்றைய இளைஞர் தலைமுறையின் பலம்பொருந்திய அபிப்பிராயம் நாட்டைவிட்டுச் செல்வதல்ல. போராடி நாட்டை சீராக்க முடியுமென்ற உணர்வு எங்கள் தலைமுறைக்கு இருந்தது. தற்போது எமது இளைஞர் தலைமுறையினருக்கு அவ்வாறான ஓர் உணர்வுகூட எஞ்சுகின்ற சமூகமொன்று, நாடு தற்போது கிடையாது. ரணில் விக்கிரமசிங்கவின்கீழ் நாடு உறுதிநிலையடைகின்றது எனும் கேலிக்கூத்து இத்தகைய நிலையிலேயே இடம்பெறுகின்றது.
மற்றுமொரு பக்கத்தில் உணவுப்பாதுகாப்பின்மையும் சுகாதாரப் பாதுகாப்பின்மையும் மக்கள் வாழ்க்கையை நேரடியாகவே பாதித்துள்ளது. பொருளாதாரம் பற்றி தரவுகளில் பேசுவதைவிட மக்களின் வாழ்க்கைபற்றி யதார்த்தமாக நோக்கவேண்டும். அவ்வாறு நோக்கும்போது இந்த பொருளாதாரம் உறுதியானதல்ல. முன்னேறுகின்ற பாதையில் இல்லை. மக்களின் நல்வழியுரிமை பாதுகாப்பான மட்டத்தில் இல்லை. மிகவும் நிலைதளர்ந்து எந்த நேரத்தில் சீரழிந்துவிடுமோ, மேலும் துன்பம்நிறைந்த தருணம் எப்போது ஏற்படுமோ என்ற சுற்றுச்சூழலே இருக்கின்றது. தேசிய மக்கள் சக்தி அத்தகைய சுற்றுச்சூழலில் இடையீடுசெய்வது ஒவ்வொரு துறையையும் எடுத்து தனித்தனியாக மீட்டெடுப்பதற்காக அல்ல. ஒரு நாட்டுக்கு முதலில் நோக்கும் தேசிய திட்டமும் அவசியமாகும். ஒரு நாடு என்றவகையில், சமூகமென்றவகையில் எந்த இடத்திற்குச் செல்லவேண்டும், அந்த இடத்திற்குச்செல்ல என்ன செய்யவேண்டும்? அந்த பயணத்தின்போது கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் சம்பந்தமாக தனியாகவும் விரிவான ஒருங்கிணைந்த வழிமுறைகளும் இருக்கவேண்டும். அதற்காக விழிப்புணர்வினைக்கொண்ட பிரஜைகளை நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டியதும் முதன்மைப் பணியாகும்.
மக்களை பங்கேற்கச்செய்வித்த கூட்டான இலக்கினைநோக்கிப் பயணிக்கவேண்டிய பாதையை தெரிவுசெய்துகொண்டு நாமனைவரும் தத்தமது வகிபாகத்தை ஈடேற்றவேண்டுமென்பதாலேயே தேசிய மக்கள் சக்தி புதிய மறுமலர்ச்சியை, தேசிய வேலைத்திட்டமொன்றை பற்றிப் பேசுகிறது. எம்மனைவருக்கும் கையளிக்கப்பட்டுள்ள அந்த பணியைத் திட்டமிட்டு சமூகமயப்படுத்தி நடைமுறைப்படுத்துவதே ஒர் அரசியல் இயக்கமென்றவகையில் எமது பொறுப்பாகும். ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்வாண்மையாளர்களாகிய உங்களிடமும் கையளிக்கப்பட்டுள்ள பிரதான பகுதியொன்று இருக்கின்றது. இந்த மாற்றத்திற்கு அவசியமான பிரஜையை உருவாக்குகின்ற பிரதன நிறுவனம் கல்வியாகும். இந்த கல்வித்திட்டம் உருவாக்குவது நாட்டுக்கு அவசியமான பிரஜையை அல்ல. நாட்டின் அபிவிருத்தியுடனும் சமூக அபிலாஷையுடனும் பிணைந்த மனிதநேயமும் கருணையும் படைத்த கூருணர்வுமிக்க சமூகத்திற்கான விரிவான மனித வளத்தை உருவாக்குவதை கல்வியின் பிரதான செயற்பொறுப்பாகக் கொள்ளவேண்டும். பரீட்சையை மையமாகக்கொண்ட, மனப்பாடம் செய்கின்ற இந்த கல்வியில் இருந்து நாங்கள் எதிர்பார்க்கின்ற முன்னேற்றமடைந்த பிரஜைகளை உருவாக்க முடியாது. அதற்குப் புறம்பாக முன்னேற்றமடைந்த பிரஜைகளை உருவாக்குகின்ற கல்வியைத் திட்டமிட்டு அமுலாக்குவது மாத்திரமன்றி கல்வியானது நாட்டின் அபிவிருத்தி மற்றும் சமூக மாற்றத்தின் ஊடாக புதிய மறுமலர்ச்சி யுகத்தை உருவாக்குதிலும் முனைப்பாக இடையீடுசெய்ய வேண்டும். இதற்காக நாங்கள் மென்மேலும் உரையாடலில் ஈடுபட்டு புரிந்துணர்வுடன் உங்களிடம் கையளிக்கப்பட்டுள்ள பங்கினை ஈடேற்றுவதற்காக அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
                    (-Colombo, March 06, 2024-) இன்று (06) பிற்பகலில் ம.வி.மு. தலைமையகத்தில் 06 நாடுகளின் தூதுவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்கள். பாலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி திரு. Zuhair M.H. Dar Zaid, துருக்கி குடியரசின் தூதுவர் திருமதி R. Demet Sekercioglu, பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர் திரு. Tareq M.D. Ariful Islam, இந்தோனேசிய குடியரசின் தூதுவர் திருமதி Dewi Gustina Tobing, மேற்படி தூதரகத்தின் பிரதம கொன்சல் […]
(-Colombo, March 06, 2024-)
இன்று (06) பிற்பகலில் ம.வி.மு. தலைமையகத்தில் 06 நாடுகளின் தூதுவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்கள்.
பாலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி திரு. Zuhair M.H. Dar Zaid, துருக்கி குடியரசின் தூதுவர் திருமதி R. Demet Sekercioglu, பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர் திரு. Tareq M.D. Ariful Islam, இந்தோனேசிய குடியரசின் தூதுவர் திருமதி Dewi Gustina Tobing, மேற்படி தூதரகத்தின் பிரதம கொன்சல் திரு. Heru Prayitno, மலேசிய உயர்ஸ்தானிகர் திரு. Badli Hisham Bin Adam மற்றும் மாலைதீவு குடியரசின் பதில் தூதுவர் திருமதி Fathimath Ghina ஆகிய இராஜதந்திரிகள் அந்நாடுகளைப் பிரதிநிதித்துவம்செய்து இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் டாக்டர் றிஷ்வி சாலி மற்றும் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் முதித்த நாணாயக்கார ஆகிய தோழர்கள் இதில் பங்கேற்றனர்.
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் இராஜதந்திரிகள் விழிப்புணர்வூட்டப்பட்டதோடு நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் பற்றியும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் நாடுகளுடன் பரஸ்பர நன்மதிப்பு மற்றும் ஒத்துழைப்பினை அடிப்படையாகக்கொண்டு செயலாற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் தயார்நிலை பற்றியும் இந்த சந்திப்பின்போது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைத்தார்கள்.



                    (ஊடக சந்திப்பு – 2024.03.06 – தேசிய மக்கள் சக்தி) மார்ச்சு 08 ஆந் திகதி சர்வதேச மகளிர் தினமாகும். அந்த தனித்துவமான தினம் பற்றி தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் என்றவகையில் நாங்கள் ஒரு கருத்தினைக் கூறவேண்டியுள்ளது. 1910 எனும் வரலாற்றில் அமெரிக்கா வரையான நீண்ட வரலாறு மகளிர் தினத்திற்கு உள்ளது. பெண்களின் வாக்குரிமைக்காக போராட்டம் நடாத்தியதன் விளைவாக விரிவடைந்ததன் மூலமாக சர்வதேச மகளிர் தினம் பிற்காலத்தில் பிரகடனஞ் செய்யப்படுகின்றது. பெண்களின் போராட்ட வரலாறு, பெண்களின் […]
(ஊடக சந்திப்பு – 2024.03.06 – தேசிய மக்கள் சக்தி)

மார்ச்சு 08 ஆந் திகதி சர்வதேச மகளிர் தினமாகும். அந்த தனித்துவமான தினம் பற்றி தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் என்றவகையில் நாங்கள் ஒரு கருத்தினைக் கூறவேண்டியுள்ளது. 1910 எனும் வரலாற்றில் அமெரிக்கா வரையான நீண்ட வரலாறு மகளிர் தினத்திற்கு உள்ளது. பெண்களின் வாக்குரிமைக்காக போராட்டம் நடாத்தியதன் விளைவாக விரிவடைந்ததன் மூலமாக சர்வதேச மகளிர் தினம் பிற்காலத்தில் பிரகடனஞ் செய்யப்படுகின்றது. பெண்களின் போராட்ட வரலாறு, பெண்களின் தனித்துவமான சிக்கல்கள் முதலியவை தொடர்பில் அதன்போது விசேட கவனஞ் செலுத்தப்படுகின்றது. இலங்கைப் பெண்கள் இன்றளவில் எதையேனும் வென்றெடுத்திருப்பார்களாயின் அவை வரலாற்றில் புரிந்த போராட்டங்களின் பெறுபேறு காரணமாகவே கிடைத்தன. 1931 இல் சர்வசன வாக்குரிமையைப் பெற்றுக்கொள்ளும்போதுகூட அக்காலத்தில் இருந்த பெண்கள் போராட்டம் நடாத்தியுள்ளார்கள். குறிப்பாக இடதுசாரி வரலாற்றில் பெண்கள் முன்னணிக்கு வந்து புரிந்த போராட்டம் காரணமாகவே. நாட்டைக் கட்டியெழுப்ப தொடர்ந்தும் பெண்கள் பங்களிப்புச் செய்யவேண்டுமென சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். எனினும் மிகுந்த சிரமத்துடன் வாழ்கின்ற இலங்கைப் பெண்களிடம் இனிமேலும் கொடுப்பதற்கு எதுவுமே எஞ்சவில்லை.
வரவுசெலவில் பெண்களுக்கு பிள்ளைகளுக்காக ஒதுக்கப்படுகின்ற பணத்தொகை 50% ஆல் வெட்டிவிடப்பட்டது. அதற்கெதிராக தேசிய மக்கள் சக்தியின் பெண்களாகிய நாங்கள் பொல்தூவ சந்தியில் போராட்டம் நடாத்தினோம். அமைதிவழிப் போராட்டம்மீது கோழைத்தனமான தலைவர்கள் நீர்த்தாரைப் பிரயோகம் செய்து மனிதாபிமானமற்றவகையில் தாக்குலை மேற்கொண்டார்கள். பல வருடங்களாக வீடுகளில் அடைபட்டிருந்த பெண்கள் இன்றளவில் அடக்குமுறைக்கு அடிபணியாமல் துணிச்சலுடன் போராட்டங்களில் பங்கேற்பது மூர்க்கத்தனமான ஆட்சியாளர்கள் காரணமாகவே. குறிப்பாக நாளுக்கு நாள் தீவிரமடைகின்ற கடன் சுமையின் மத்தியில் நுண்நிதிக் கடன்களுக்கு இலங்கையின் பெரும்பாலான பெண்கள் இரையாகி உள்ளார்கள். நாங்கள் இனிமேலும் இவ்வாறு வாழவேண்டிய அவசியம் கிடையாது. எமது நாட்டுப் பெண்கள் வீடுகளுக்குள்ளேயும் அதற்கு வெளியிலும் மட்டற்றவகையில் களைத்து வேலைசெய்தாலும் வரிச்சுமையைத் தாங்கமுடியாததாலேயே உயிர்வாழ்வதற்கான சிரமம் நிலவுகின்றது. தமது சுகாதாரம் பற்றிச் சிந்திக்காமல் பிள்ளைகளின் கல்விக்காக செலவுசெய்துகொண்டு தொடர்ந்தும் மௌனிகளாக இருக்க பெண்கள் தயாரில்லை. பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன் என தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி பெருந்திரளான பெண்கள் நாளுக்குநாள் ஒன்றுசேர்ந்து இந்த படுமோசமான அரசியலை முடிவுக்குகொண்டுவர புத்துணர்வுடன் முன்வந்துகொண்டிருக்கிறார்கள். நிலவுகின்ற அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்காகவே மார்ச்சு 08 ஆந் திகதிய மகளிர் தினத்தை நாங்கள் 10 ஆந் திகதி அணிதிரண்டு கொண்டாடுகிறோம்.

“தமது மகத்துவமும் நன்மதிப்பும் பாதுகாக்கப்படுகின்ற ஒரே மேடை திசைகாட்டியே என்பதை பெண்கள் உணர்ந்துள்ளார்கள்”
-தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய-
இந்த வருடத்தின் சர்வதேச மகளிர் தினம் இலங்கைப் பெண்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தினமாக மாறுவதில் சந்தேகம் கிடையாது. பெண்கள் அனைவருமே உழைக்கும் பெண்களாவர். வரலாற்றுக்காலம் பூராவிலும் போராடிய அந்த பெண்களை நினைவுகூர்ந்ததைப்போன்றே இந்த மார்ச்சு 08 ஆந் திகதி இலங்கைக்கு தனித்துவமானதாக அமையக்காரணம் எமது வரலாற்றில் முதல்த்தடவையாக ஒழுங்கமைந்தவகையில் அரசியல்ரீதியாக குழுமி எதிர்காலம் பற்றிய தீர்மானங்களை மேற்கொள்வதற்கான அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக முன்வருகின்ற போக்காகும். மாத்தறையில் இருந்து தொடங்கிய “பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன்” எனப்படுகின்ற மாநாட்டுக்கு வருகைதருகின்ற பெண்கள் தொடர்ந்தும் இந்த அரசியல் கலாசாரத்தையும் பொருளாதார அழுத்தத்தையும் பொறுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்பதை விளங்கிக்கொண்டுள்ளார்கள். கௌரவத்துடன் தமது பெருமையைப் பாதுகாத்துக்கொண்டு பலம்பொருந்தியவகையில் பெண்கள் என்றவகையில் கூட்டாக கொண்டுவருகின்ற மேடை அமைக்கப்படும்வரை அவர்கள் காத்திருந்தார்கள் என்பது எமக்கு உறுதியாகின்றது. தேசிய மக்கள் சக்தி என்றவகையில் பெண்களுக்கு தலைமைத்துவம் வழங்கி அவர்களிடம் மறைந்திருந்த திறமைகள், அரசியல் தேவைகள் மற்றும் தலைமைத்துவத்திற்கான மேடையை அமைத்துக்கொடுக்க இயலுமானமை பற்றி நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். தமது வகிபாகம் மற்றும் எதிர்காலம் பற்றிய விழிப்புணர்வு கொண்டவர்களாகவே இவர்கள் இத்தடவை மகளிர் தினத்திற்காக முன்வருகிறார்கள்.
யு.என்.பி. அரசாங்கம் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் மகளிர் தினத்தை தடைசெய்து மகளிர் தினத்தைக் கொண்டாடவந்த பெண்கள்மீது தாக்குதல் நடாத்தி கைதுசெய்த யுகமொன்று இருந்தது. மகளிர் தினத்தின் உண்மையான நோக்கங்களை திரிபுபடுத்தி, வணிக நோக்கங்களுக்காக ஈடுபடுத்திய யுகமொன்றே எமக்கு இருக்கின்றது. எனினும் 2024 மகளிர் தினத்தை மீண்டுமொருதடவை அர்த்தமுள்ளதாக ஏற்பாடுசெய்வதற்கான இயலுமையை பெற்றுக்கொண்டமை தொடர்பாக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இலங்கைப் பெண்கள் பற்றி மாத்திரமல்ல, எமது சகோதரத்துவம், ஈடுபாடுகள், கூட்டுமனப்பான்மையை உலகம் பூராவிலும் இருக்கின்ற பெண்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அத்தகைய சந்தர்ப்பத்தில் காசா துண்டுநிலத்தில் மிகவும் கொடூரமான மனிதாபிமானமற்ற வகையில் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான பெண்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் நாங்கள் தோற்றுகிறோம். இந்த கொடூரத்தை நிறுத்துவதற்கான அதிகாரம்கொண்டுள்ள நாடுகள் மௌனம் சாதிக்கின்ற வேளையிலேயே நாங்கள் அவர்களின் உரிமைகளுக்காக தோற்றுகிறோம். யுத்தமென்பது மனிதன் எனப்படுகின்ற விலங்கிடம் பொதிந்துள்ள மிகுந்த கொடூரமும் மூர்க்கத்தனமும் வெளிப்படுகின்ற ஒரு தருணமாகும். யுத்தமில்லா அமைதியான ஓர் உலகிற்காகவே நாங்கள் தோற்றுகிறோம். காசா துண்டுநிலத்தில் உள்ள சகோதரிகளுக்கும் பிள்ளைகளுக்கும் நேரிடுகின்ற சேதத்தை குறைத்துக்கொள்வதற்காக உடனடியாக இடையீடுசெய்யுமாறு உலகத்தாரிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

“நாட்டை ஆட்சிசெய்கின்ற திருடர்களை ஒரேகட்டாக வைத்து தோற்கடித்திட பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன் தயார்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் சமன்மலீ குணசிங்க-
எமது நாட்டிலுள்ள பெண்களுக்கும் உலகில் இருக்கின்ற அனைத்துப் பெண்களுக்கும் கொடுப்பதற்கான ஒரு செய்தி எம்மிடம் இருக்கின்றது. நாங்கள் வசிக்கின்ற உலகம் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் சொந்தமானதல்ல. பொருளாதார, சமூக மற்றும் கலாசாரரீதியான உலகத்தை நாங்கள் இழந்துள்ளோம். இழந்த அந்த உலகத்தை பெண்களுக்கு வென்றெடுத்துக் கொடுப்பதற்காக முழு உலகத்திலுமுள்ள பெண்கள் ஒன்றுசேர்ந்து புரியவேண்டிய போராட்டமொன்று இருக்கின்றது. போராட்டப் பாதையில் மாத்திரமே எமது நாட்டிலும் உலகத்திலும் பெண்கள் உரிமைகளை வென்றெடுத்திருக்கிறார்கள். 1910 இல் கோப்பன்ஹெகன் நகரத்தில் நடைபெற்ற உலக சோஷலிஸ தலைவிகளின் இரண்டாவது அகிலத்தில் உரையாற்றுகையில் தோழர் கிளாறா செட்னிக் மகளிருக்காக ஒதுக்கப்பட்ட தினமொன்றை முன்மொழிந்தார். அந்த தினத்தை மார்ச்சு 08 இந் திகதியென பிரகடனஞ் செய்யுமாறும் முன்வைத்த மேலதிக முன்மொழிவினை அன்று குழுமியிருந்த அனைத்து சோஷலிஸ தலைவிகளும் அங்கீகரித்தனர். 1911 இல் இருந்து இற்றைவரை 113 வருடங்களாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவ்வாறு கூறிக்கொண்டு மலர்மாலை அணிந்து விருந்துபசாரம் நடாத்தவேண்டிய தினமல்ல. நாங்கள் பாரிய போராட்டமொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக 2024 இல் அரசியல் மாற்றமொன்றை ஏற்படுத்தி, நாங்கள் புதிய யுகமொன்றை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அதன் பெரும்பங்கு சனத்தொகையில் 52% ஆக அமைந்த பெண்களுக்கே இருக்கின்றது.
இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்கான போராட்டத்தின்போது எமக்குள்ள இறைமைத் தத்துவத்தை பாவிப்பதற்கான விழிப்புணர்வு அவசியமாகும். பெண்களின் இறைமைத் தத்துவத்தை இலாபமாகப் பெற்றுக்கொள்ள முடியுமென இதுவரைகாலமும் இருந்த ஆட்சியாளர்கள் நினைத்தார்கள். அரசியல்ரீதியாக ஏமாற்றி, பொய்கூறி, இதுவரை அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டார்கள். அத்தகைய பெண்களுக்கு அரசியல் புரிந்துணர்வினைப் பெற்றுக்கொடுத்து பெருந்தொகையான பெண்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம். எமது நாட்டின் பெண்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி போராடி சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடவேண்டி நேர்ந்துள்ளது. பெண்களை ஒருபோதுமே ஏமாற்றாத, பெண்களின் ஆற்றல்கள் மற்றும் சக்தி பற்றிய புரிந்துணர்வுடன் அரசியல் பெண்ணாக மாற்றிய தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி இந்த நாட்டின் பெண்கள் அனைவரையும் ஒன்றுசேருமாறு அழைப்பு விடுக்கிறோம்.
மத்திய வங்கியை வெறுமையாக்குகின்ற தலைவர்கள் தொடக்கம் கிராமிய வங்கிகளிலுள்ள பணத்தை திருகின்ற கிராமிய மட்டத்திலான அடிவருடிகள் வரை களவும் ஊழலும் வியாபித்துள்ளது. பொருளாதார கொலைகாரர்களென நீதிமன்றத்தினால் பெயர்குறிக்கப்பட்டுள்ள ராஜபக்ஷாக்கள் ஒரு தருணத்தில் நுண்நிதிக் கடனை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தார்கள். அவர்கள் அதனை மீறினார்கள். அதன்பின்னர் 2023 வரவுசெலவினை சமர்ப்பித்து சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதே வாக்குறுதியை அளித்து மீறியுள்ளார். அதன் காரணமாக நுண்நிதிக் கடனுக்காக தற்கொலை புரிந்துகொள்ளவேண்டிய நிலை எமது நாட்டுப் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. நுண்நிதிக் கடனை இல்லாதொழிப்பதற்குப் பதிலாக கிராமிய வங்கிகளில் எமது பெண்கள் வைப்புச் செய்திருந்த பணத்தைக் கொள்ளையடிப்பதுவரை பயணித்துள்ளார்கள்.
இந்த கள்வர்களை ஒரே கட்டாக வைத்து தோற்கடிப்பதே எமது தேவையாகும். அதற்காக எமது நாட்டுப்பெண்கள் கூட்டாக எழுச்சிபெற வேண்டும். லயிற் பில் 400% ஆல் அதிகரிக்கப்பட்டமையால் ஏறக்குறைய பத்திலட்சம் வீடுகள் லயிற் பில் செலுத்தமுடியாமல் மின்சார துண்டிப்பிற்கு இலக்காகின. அத்தகைய தகப்பனொருவர் தனது பிள்ளை பாடம் படிப்பதற்காக அயல்வீட்டிலிருந்து மின்சாரத்தைப் பெற முயற்சிசெய்கையில் விபத்து மரணத்தை சந்தித்தார். மின்சார சபையினால் புரியப்படுகின்ற மாஃபியா சம்பந்தமாக சனாதிபதியை மற்றும் பிரதமரை உள்ளிட்ட ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூற வேண்டும். பெண்களை இருளில் தள்ளிவிட்ட மின்சார மாஃபியாவை இல்லாதொழித்திட செயலாற்றுவதேயன்றி இனிமேலும் நிவாரணங்களை எதிர்பார்க்க வேண்டியதில்லை. தேர்தல் காலத்தில் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதென்பது ஏமாற்றுவேலையாகும். அதற்கெதிராக வெளிச்சத்தை, வாழ்க்கையை, புதிய தேசத்தைக் கட்டியெழுப்ப தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து முன்வருமாறு அழைப்பு விடுக்கிறோம். பெருநிலத்தில் இருக்கின்ற மக்கள் இந்நாட்டு வரலாற்றில் முதல்த்தடவையாக நடுவீதியில் போராட்டம் நடாத்துகின்ற விதத்தை எதிர்காலத்தில் பார்க்கமுடியும். தருகின்ற நிவாரணங்களை உடனடியாக வழங்கி நீங்கிச்செல்லுமாறு நாங்கள் ஆட்சியாளர்களை வலியுறுத்துகிறோம்.

“இதுவரை அரசாங்கங்கள் முன்னெடுத்துவந்த ஊழல்மிக்க பயணத்திற்குப் பதிலாக புதிய பாதையொன்றை தேர்ந்தெடுப்பதற்காக பெண்கள் அணிதிரண்டுள்ளார்கள்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்-
பொருளாதார நெருக்கடி ஒருபுறத்தில் இருக்கையில் ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் சனநாயகத்திற்கு எதிரான பாதையில் ஈடுபட்டுள்ளவேளையில் 113 வது சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. இந்நாட்டின் பெண்களையும் பிள்ளைகளையும் தேர்தல் கருத்திட்டத்தில் ஈடுபடுத்தி முன்நோக்கிநகர ரணில் – ராஜபக்ஷ அரசாங்கம் எத்தனிக்கின்றது. எனினும் இதுவரை பயணித்த ஊழல்மிக்க பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க பெண்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக புதிய அரசியல் முறைமையொன்று மற்றும் புதிய அரசியல் போக்குமீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது. வீடுமீது சுமத்தப்பட்டுள்ள வரம்பற்ற ஏழ்மைநிலை காரணமாக எமது நாட்டின் 43 இலட்சமாக அமைகின்ற பாடசாலைப் பிள்ளைகளில் 54% கல்விச்சாதனங்களை பெற்றுக்கொள்வதற்கான சிரமங்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள். உணவு, ஓளடங்கள், பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் சாதனங்கள் மீது எல்லையற்ற வரி விதித்துள்ள அரசாங்கத்திற்கு எதிராக முழு நாட்டினதும் பெண்களை ஒன்றுதிரட்டி மார்ச்சு 08 ஆந் திகதி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டத் தொடரொன்றை நடாத்த நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த அரசாங்கத்திற்கெதிராக பிரமாண்டமான மக்கள் எழுச்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. அதைப்போலவே எதிர்வரும் 10 ஆந் திகதி கொழும்பில் நடாத்தப்படுகின்ற பெண்கள் மாநாட்டினை 76 வருடகால ஆட்சியை மாற்றுவதற்கான வாய்ப்பாகவும் ஈடுபடுத்துவோம்.
அதைப்போலவே இன்னமும் இந்நாட்டில் தேசிய ஒற்றுமை கட்டியழுப்பப்படவில்லை. சனநாயகமும் பொருளாதார நியாயத்தன்மையும் ஏற்படுத்தப்படவில்லை. அளப்பரிய செயற்பாறுப்பினை ஈடேற்றுகின்ற பெண்களில் 30% தான் உழைப்புப் படைக்கு பங்களிக்கிறார்கள். சம உழைப்பிற்கான சம சம்பள உரிமையினை நாங்கள் நீண்டகாலமாக கோரியபோதிலும் இன்னமும் கிடைக்கவில்லை. கர்ப்பிணித் தாய்மார்களில் 33% உம் 10 இலட்சத்திற்கு கிட்டிய பெண்களும் பிள்ளைகளும் போசாக்கின்மையால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை பேணிவந்த போசாக்குப் பொதியை வழங்குவதைக்கூட முறைப்படி செய்யமுடியாத அரசாங்கம் பெண்களின் பொருளாதாரத்தையும் சனநாயக உரிமைகளையும் சுருட்டி வருகிறார்கள். உயர்நீதிமன்றத்தினால் தவறாளியாக்கப்பட்ட ஒருவரை பொலீஸ் மா அதிபராக நியமித்து ஒன்லயின் சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் போன்றே ஊடக நிறுவனங்களை ஒழுங்குறுத்துகின்ற சட்டம்போன்ற சட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளவும் முயற்சிசெய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அரசியல் அதிகாரத்தைப் பேணிவருவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற இந்த முயற்சிகளின் மத்தியில் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு இருக்கின்றதா என நாங்கள் கேட்கிறோம். சமூக வலைத்தளங்களிலும் பிரதான ஊடகங்களிலும் பெண்களை இலக்காகக்கொண்ட துன்புறுத்தல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இந்த நிலைமைக்குள் பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பொருளாதார சனநாயக உரிமை மற்றும் அடிப்படை மனித உரிமைகளை வென்றெடுப்பதற்காக தேசிய மக்கள் சக்தி தலைமைத்துவம் வழங்குகின்றது. மக்களுக்காக செயற்படாத அரசாங்கத்திடம், வரியை அறவிட்டுக்கொள்வதற்காக மாத்திரம் வரையறையற்று செயற்படுகின்ற அரசாங்கத்திடம் மக்கள் தொடர்ந்தும் ஏமாறப் போவதில்லை என்பதை வலியுறுத்துகிறோம். இந்த நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு பெண்ணுடைய வீட்டுப் பிரச்சினைக்கும் தட்டுமாறி முறையினால் தீர்வு கிடைக்கப்போவதில்லை. இந்நாட்டுக்கு புதியதொரு யுகத்தை உருவாக்குவதற்காக செயலாற்றுவோமென்பதை 113 வது சர்வதேச மகளிர் தினத்தன்று வலியுறுத்துகிறோம்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய பதிலளிக்கையில்
கேள்வி: தீயில் வெந்துகொண்டிருந்த தேசத்தை மீட்டெடுத்தவர் சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே என்பதை சற்று நேரத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் கூறினார். அதனை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகவும் கூறினார். அது பற்றி என்ன கூறுகிறீர்கள்?
பதில் : சிரிப்பது மாத்திரமே எங்களுக்கு இருக்கின்றது. தேர்தல் இயக்கத்திற்கு தயாராகவே அவர் அந்த கதைகளைக் கூறுகிறார். மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டதாக அவரால் கூறமுடியாது என்பதால் பல பொய்களைக் கூறுகிறார். 2022 மே 09 ஆந் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இராஜிநாமா செய்ததும் நாங்கள் பிரதிபலிப்புச்செய்யவேண்டிய விதம் பற்றி நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கையில் ரணில் விக்கிரமசிங்கவை கோட்டாபய ராஜபக்ஷ பிரதமராக நியமித்தார். அதன் பின்னர் சனாதிபதியை பாராளுமன்றத்தில் தெரிவுசெய்கையில் போட்டியிட முன்வந்தவர் அவர் மாத்திரமல்ல. மேலும் இருவர் முன்வந்திருந்தார்கள். எமது தலைவர் அநுர திசாநாயக்கவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் டலஸ் அழகப்பெருமவும் முன்வந்திருந்தார்கள். மொட்டில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிகப்படியான வாக்குகளால் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். அவர் மாத்திரமே முன்வந்தார் என்பது அப்பட்டமான பொய்யாகும். மொட்டின் பாதுகாப்பு கருதியே அவர் நியமிக்கப்பட்டாரேயன்றி நாட்டை மீட்டெடுப்பதற்காக அல்ல. அந்த தீயில் இருந்து காப்பாற்றியதாக கூறுவது பொய்யாகும்.
நாட்டை மீட்டெடுத்ததாகக் கூறினாலும் உண்மையிலேயே புரிந்திருப்பது பொருளாதாரத்தை மேலும் சுருக்கியமையாகும். கடன்பொறியின் பெறுபேறு காரணமாக நாடு வங்குரோத்து அடைந்தது. தற்போது பொருளாதார ஆற்றாமை காரணமாக மக்களின் வாழ்க்கை வீழ்ச்சியடைந்துள்ளது. 10 இலட்சம் வீடுகளின் மின்சாரத் துண்டிப்பு அவருக்குத் தென்படவில்லையா? பிள்ளைகள் பாடசாலை செல்வதிலான வீழ்ச்சி அவருக்கு தென்படவில்லையா? பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துவைப்பதாகக்கூறி மக்களின் வாழ்க்கையை எம்மால் மறந்துவிட முடியாது. இந்த நாட்டின் மிகவும் வறுமைப்பட்ட அத்துடன் எந்தவிதமான அதிகாரமுமற்ற பிரஜைகளே பொருளாதாரத்தைப் பலப்படுத்த மிகுந்த அர்ப்பணிப்பைச் செய்துள்ளார்கள். குறைந்தபட்சம் அவர் அந்த அர்ப்பணிபினைப் பாராட்ட வேண்டும். மின்சாரசபை பாரிய இலாபத்தை ஈட்டியுள்ளது ஊழல் மற்றும் மோசடியை நிறுத்தியதால் அல்ல. மக்கள் மின்சாரத்திற்காக செலுத்துகின்ற கட்டணங்களை அதிகளவில் அதிகரித்தமையாலாகும். மண்ணில் கால் பதித்திராத அவருக்கு கூறுவதற்கு பல கதைகள் தேவை. அவருடைய தேர்தல் இயக்கத்திற்காக கூறுகின்ற அவ்வாறான கதைகளை நாங்களும் மக்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
கேள்வி : பசில் ராஜபக்ஷ மீண்டும் திரும்பிவந்ததால் மொட்டு மலர்ந்துவிட்டதாக ஒரு கதை அடிபடுகின்றது. உங்களுக்கு சவாலாக அமைந்துவிடுமா?
பதில் : ஐயோ கிடையாது. ஒருபோதுமே சவாலாக அமையமாட்டாது. நாங்கள் எந்தவிதமான மலர்ச்சியையும் காணவில்லை. வருவதற்கு முன்னர் ஊர்வலமாக அழைத்து வருவதாக கூறினார்கள் அல்லவா? அந்த ஊர்வலத்திற்கு என்ன நடந்ததென தெரியவில்லை. நாங்களென்றால் ஊர்வலமொன்றைக் காணவில்லை. வெளியில்கூட மிகவும் கஷ்டப்பட்டே இறங்கினார். பொருளாதார கொலைகாரர்களுக்கு இந்நாட்டு மக்களிடமிருந்து அடுத்த தேர்தலில் சரியான பதிலடி கிடைக்கும். நீங்கள் கூறிக்கொள்கின்ற எந்தவோர் அரசியல்வாதியும் மக்களுடன் இருக்கவும் இல்லை. இன்றும் இல்லை. அவர்களின் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்காக மேல்மட்டத்தில் அரசியல் டீல் போடுவதே ஒரே உபாயமார்க்கமாகும். மக்களுடன் உண்மையான அரசியலில் ஈடுபடுவதற்கான ஆற்றலும் அவர்களுக்கு கிடையாது, விளங்கவும் மாட்டாது. இவர்கள் இன்னமும் நினைத்துக்கொண்டிப்பது மேல்மட்டத்தில் டீல் போடவும் மக்களை ஏமாற்றுவதையும்தான். இத்தடவை வித்தியாசம் மக்கள் ஏமாற மாட்டார்கள். அவர்கள் அனைவரும் ஒரே மேடைக்கு வந்தாலும் பலனில்லை. அந்த அரசியல் கலாசாரம் இந்த வருடத்தில் முடிவுக்கு வரும். அதனை செய்பவர்கள் இந்நாட்டு மக்களே.
கேள்வி: இந்த அரசியல் கட்சிகள் எல்லாமே ஒன்றுசேர்ந்து தேசிய மக்கள் சக்தி தனித்துவிடுமென்பது தென்படுகின்றது. அவ்வாறு இடம்பெற்றால் வெற்றிபெற முடியுமா?
பதில் : அவ்வாறு இடம்பெற்றால் மேலும் எளிதானதாக அமைந்துவிடும். ஒன்று சேர்ந்தால் எமக்கு மிகவும் இலகுவானது. மக்களுக்கு மிகவும் வசதியாக அமையும். பழைய, துர்நாற்றம் வீசுகின்ற, ஊழில்மிக்க அரசியலுக்குப் பதிலாக மக்களும் பங்கேற்கின்ற புதிய அரசியலை நோக்கி நாட்டை கொண்டுசெல்கின்ற யுகமொன்றை நாங்கள் தொடங்குவோம். இரண்டு குழுக்களும் சரியாக பிரிந்துவிட்டால் மக்களுக்கும் எமக்கும் மிகவும் இலகுவானதாக அமைந்துவிடும்.
                    (தேசிய மக்கள் சக்தி ஊடக சந்திப்பு – 2024.03.04) அரச வளங்களை விற்பனைசெய்து மிகப்பெரிய தேசிய அனர்த்தத்தை புரிய சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முதன்மையாகக்கொண்ட அரசாங்கம் முனைந்து செயலாற்றிவருகின்றது. பகிரங்க தொழில்முயற்சிகள் சம்பந்தமாக மாத்திரமன்றி வெளிநாட்டு முதலீடுகள் சம்பந்தமாகவும் நாங்கள் கடைப்பித்தது சாதகமான கொள்கைகளையல்ல என கடந்த வரவுசெலவினை சமர்ப்பித்து சனாதிபதி கூறினார். அவர் இங்கு “நாங்கள்” என்றே கூறுகிறார். சுதந்திர இலங்கையில் 76 வருடங்களில் 47 வருடங்களாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, பிரதமராக […]
(தேசிய மக்கள் சக்தி ஊடக சந்திப்பு – 2024.03.04)

அரச வளங்களை விற்பனைசெய்து மிகப்பெரிய தேசிய அனர்த்தத்தை புரிய சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முதன்மையாகக்கொண்ட அரசாங்கம் முனைந்து செயலாற்றிவருகின்றது. பகிரங்க தொழில்முயற்சிகள் சம்பந்தமாக மாத்திரமன்றி வெளிநாட்டு முதலீடுகள் சம்பந்தமாகவும் நாங்கள் கடைப்பித்தது சாதகமான கொள்கைகளையல்ல என கடந்த வரவுசெலவினை சமர்ப்பித்து சனாதிபதி கூறினார். அவர் இங்கு “நாங்கள்” என்றே கூறுகிறார். சுதந்திர இலங்கையில் 76 வருடங்களில் 47 வருடங்களாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, பிரதமராக மற்றும் சனாதிபதியாகவும் செயலாற்றியுள்ளார். அவரின்றி 30 வருடங்களே இருக்கின்றது. அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஐக்கிய தேசிய கட்சியில் 77 இல் இருந்து பிரதான தலைமைத்துவச் சபையிலும் செயலாற்றியுள்ளார். அவ்வாறு செயலாற்றிய அவர் பகிரங்கத் தொழில்முயற்சிகள் சம்பந்தமாக மாத்திரமன்றி வெளிநாட்டு முதலீடுகள் சம்பந்தமாகவும் சாதகமான செயற்பாடுகளைக் கடைப்பிடிக்கவில்லை எனக் கூறுகிறார். அவர் தொடர்புபட்ட 47 வருடங்களில் பகிரங்கத் தொழில்முயற்சிகளைப் போன்றே நாட்டின் வளங்களை நாசமாக்கி எந்தவிதமான அருவருப்பிமின்றி இவ்வாறான கூற்றுகளை வெளியிடுகிறார். தம்மால் புரியப்பட்ட குற்றங்களை மக்கள்மீது திணிக்காமல் தாமே ஏற்றுக்கொள்ளவேண்டுமென ரணில் விக்கிரமசிங்கவை உள்ளிட்ட கும்பலுக்கு நாங்கள் வலியுறுத்திக் கூறுகிறோம். இந்த ஆட்சியாளர்களில் மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் குற்றம்புரிந்தவர்களென நீதிமன்றம்கூட தீர்மானித்துள்ளது.
ஸ்ரீ லங்கன் விமானக் கம்பெனி, ரெலிகொம் நிறுவனம், கொழும்பு ஹில்டன் ஹோட்டல், வோட்டர்ஸ் எஜ் நிறுவனம், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், மின்சார சபை, மில்கோ கம்பெனியை உள்ளிட்ட தேசிய கால்நடைவளங்கள் கம்பெனியின் நிறுவனங்களில் ஒருசில இலாபமீட்டிக் கொண்டிருக்கையில்கூட பொறுப்பின்றி சொச்சத்தொகைக்கு விற்றுத்தீர்க்க ரணில் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். நாட்டில் புதிய மூர்க்கத்தனமான அரசியல் கலையொன்றினை அமுலாக்கி பொருளாதாரக் குற்றச்செயல்களைப் புரிந்து அதன் பாதகவிளைவுகளை அயோக்கியத்தனமாக மக்கள்மீது திணிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
எமது நாடு இன்றளவில் வெளிநாட்டுத் தனியார் நிதிநிறுவனங்களுக்கு அண்ணளவாக 30 பில்லியன் டொலர்கள் கடன்பட்டுள்ளது. கடன் மீளச்செலுத்துவதை இடைநிறுத்துதல் மற்றும் வட்டி சேர்தலுடன் வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு செலுத்தவேண்டிய கடன் அளவு 30 பில்லியன் டொலர்வரை அதிகரித்துள்ளது. ஐ.எம்.எஃப். உடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடும்போது 28.5 பில்லியன் டொலரே இருந்தது. இந்த 30 பில்லியன் டொலரில் 12.5 பில்லியன் டொலர்களை ரணில் பிரதமராக இருந்த 4 1/2 வருடங்களிலேயே பெற்றுக்கொண்டார். இந்த பொருளாதார குற்றச்செயலின் பிரதானமான பிரதிவாதிகள் அவர்களே. அவர்கள் தற்போது கடன்செலுத்த முடியாமையால் வளங்களை விற்பதாக மக்களிடம் கூறுகிறார்கள். இந்த நாட்டு மக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் ராஜபக்ஷாக்களின் தோட்டத்தில் இருப்பவர்களெனில் அவ்வாறு கூறமுடியும். நாட்டின் சொத்துக்கள் ரணில் விக்கிரமசிங்கவினதோ அல்லது ராஜபக்ஷ கும்பலினதோ அல்ல. தம்மால் புரியப்பட்ட குற்றச்செயல்களின் தவறினை மக்கள் மீது திணிப்பதை நாங்கள் முற்றாகவே கண்டிக்கிறோம். கண்டனம் தெரிவிப்பது மாத்திரமல்ல இதற்கெதிராக தொழிற்சங்க மட்டத்திலும் பொதுமக்கள் என்றவகையிலும் எதிர்த்துநிற்க வேண்டும்.
அரச நிறுவனங்கள் அழிவினை நோக்கிப் பயணிப்பது காலங்கடந்துள்ளமையால் அல்ல. ரணில் விக்கிரமசிங்காக்கள், பண்டாரநாயக்கமார்கள், ராஜபக்ஷாக்கள், ஜே. ஆர். போன்றோர் அரசியல் அடிவருடிகளை இந்த நிறுவனங்களுக்கு நியமித்தமையாலேயே இந்த அழிவு ஏற்பட்டது. ஸ்ரீ லங்கன் விமானக் கம்பெனி நட்டமடைவது அங்கே பணியாற்றுகின்ற ஊழியர்களின் தவறு காரணமாகவல்ல. நிமல் சிறிபால விமான சேவைகள் அமைச்சராக இருக்கையில் ஜப்பான் கடனின் பேரில் அமுலாக்க முனைந்த கருத்திட்டமொன்றை முற்றாகவே அந்நாடு நிறுத்தியமைக்கான காரணம் அமைச்சரின் ஊழல் – மோசடி காரணமாகவே என்பது தெளிவான விடயமாகும். எனினும் திரிபுநிலையடைந்த குழுவொன்றினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். விமானமொன்றுக்குள் ஓர் எலி நுழைந்ததன் காரணமாக விமானம் தாமதித்தமையால் இந்த நிறுவனத்தை விற்பனைசெய்யவும் முடியாதென அந்த அமைச்சர் கடந்த தினமொன்றில் கூறினார். ஸ்ரீ லங்கன் விமானக் கம்பெனிக்கு விமானக் கொள்வனவின்போது மாத்திரமன்றி அவ்வாறான கொள்வனவு உடன்படிக்கைகளை இரத்துச் செய்கையிலும்கூட இலஞ்சம் பெறப்பட்டுள்ளது.
அடுத்தாக நாடு பிரவேசிப்பது டிஜிட்டல் பொருளாதாரத்திலாயின் ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனம் மிகவும் முக்கியமானது. இலங்கையின் எதிர்காலப் பொருளாதாரத்தின் முதுகெலும்மபு ரெலிகொம் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தை விற்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற முயற்சியின்போதும் மோசடி இடம்பெற்றதாக ஒரு கேள்விப்பத்திரதாரர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். பொருளாதார நிபுணர்கள் எனக் குறிப்பிட்டுக்கொள்கின்ற “கிளிகள்” குழுவொன்று வழங்கிய ஆலோசனையின் காரணமாக இந்த நாடு வங்குரோத்து அடைந்தது. அரசாங்கத்திற்குச் சொந்தமாக கால்நடை வளங்கள் சபை போன்ற நிறுவனங்கள் விஞ்ஞானரீதியான திட்டமொன்றுக்கு அமைவாக கட்டியெழுப்பப்பட்டவையாகும். தரமிக்க பாலுணவினை உற்பத்திசெய்ய மில்கோ நிறுவனமும் அதற்கு கால்நடை வளங்கள் சபைக்குச் சொந்தமான ஏறக்குறைய 31 தோட்டங்களும் இருக்கின்றன. எனினும் இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான அமூல் எனப்படுகின்ற கூட்டுறவுக் கம்பெனிக்கு இந்த நிறுவனத்தை விற்கவே தயாராகி வருகிறார்கள். எமது நாட்டின் அரச பிரிவிற்கு தொழில்முயற்சிகளை மேற்கொள்ள முடியாதெனக்கூறி விற்பனைக்காக போடுகையில் இந்தியாவின் ஐ.ஓ.சீ. கம்பெனி, சீனாவின் சினோபெக் நிறுவனம் போன்ற அரச நிறுவனங்கள் இந்நாட்டு நிறுவனங்களை கொள்வனவு செய்கின்றன. இலங்கை மக்களின் பணத்தைக்கொண்டு அரசாங்கம் பேணிவந்த நிறுவனங்களை விற்பனை செய்வதன் பிரதான நோக்கம் கொள்ளையடித்தலாகும்.
வெளிப்படைத்தன்மை கொண்டதாக எங்கள் நாட்டுக்கு முதலீடுகளை வரவழைப்பதற்கு நாங்கள் உடன்படுகிறோம். முதலீடுகளை வரவழைப்பித்தல் மற்றும் நிலவுகின்ற அரச நிறுவனங்களை விற்பனை செய்தல் என்பது இரண்டு விடயங்களாகும். 1977 இல் இருந்து 2017 வரை 40 வருடகாலமாக இலங்கை கடைப்பிடித்தது உள்நாட்டுத் தொழில்முயற்சிகள் அல்லது கைத்தொழில்களை கட்டியெழுப்புகின்ற கொள்கையையல்ல. 40 வருடங்களாக இலங்கைக்கு வந்த நேரடியான வெளிநாட்டு முதலீடுகளின் அளவு 40 பில்லியன் டொலராகும். அடிமட்டத்தில் இருந்தே இலஞ்சம் கொடுக்கவேண்டியது அவசியமென்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள். இலங்கை மக்களால் கட்டியழுப்பி பேணிவரப்பட்ட நிறுவனங்களை எடுக்க வருகிறார்களேயொழிய புதிய கைத்தொழில்கள் மற்றும் சேவைகளை ஆரம்பிக்க வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவதில்லை. குறைந்தபட்சம் சில தொழில்வாய்ப்புகளை வழங்கக்ககூடிய முதலீடுகள் இலங்கைக்கு வருவதில்லை. ரெலிகொம் நிறுவனம், துறைமுகங்கள், பெற்றோலியம், மின்சார சபை போன்ற நிறுவனங்கள் இந்நாட்டின் பொதுப்பணத்தினால் கட்டியெழுப்பப்பட்டு பேணிவரப்பட்ட நிறுவனங்களாகும். குறைந்த பட்சம் பாடசாலைப் பிள்ளைகளுக்கு பென்சில், பேனை உற்பத்திசெய்யக்கூட முதலீட்டாளர்கள் வருவதில்லை.
மக்களால் ஒதுக்கப்பட்ட ஊழில்மிக்க ஆட்சியாளர்களிடமிருந்து விற்பனைசெய்யப்படுகின்ற ஆதனங்களைக் கொள்வனவுசெய்ய உலகில் இருக்கின்ற ஊழல்மிக்க தொழில்முனைவோர் வருவார்கள். எமது ஆட்சியின்கீழ் நாட்டைக் கட்டியெழுப்ப கால்நடைகள் துறையை உள்ளிட்ட தேசிய வளங்கள் அத்தியாவசியமானவையாகும். இலங்கையின் எதிர்காலத்தை முடக்கிவிடுகின்ற விற்றொழித்தலுக்குப் பதிலாக உண்மையான முதலீட்டாளர்களை வரவழைக்குமாறு நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சவால் விடுக்கிறோம். வளங்களை விற்று தோல்விகண்டமை தொடர்பிலான மிகச்சிறந்த உதாரணம் பெரிய பிரித்தானியாவாகும். நாட்டின் நீர்வளங்களை விற்பனைசெய்த பின்னர் மக்களுக்கு அவசியமான நீரைப் பெற்றுக்கொள்ள முடியாதநிலையில் பிரித்தானிய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். அதே நாட்டில் புகையிரதங்களை விற்றதன் பின்னர் விமானப் பயணத்தைப் பார்க்கிலும் அதிகமான தொகையை புகையிரதத்தில் பயணிப்பதற்காக செலவிட வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இப்போது மீண்டும் கையகப்படுத்திக்கொள்ளவும் முடியாமல் இருக்கிறார்கள். நாற்பத வருடங்களாக நாடு இந்து சமுத்திரத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள மீதி வளங்களையும் பாதுகாத்துக்கொள்ள மகாநாயக்க தேரர்களும் தொழிற் சங்கங்களும் முன்னெடுத்துவருகின்ற செயற்பாடுகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கான பதில்கள்
கேள்வி: மத்தியவங்கி உத்தியோகத்தர்கள் பாராளுமன்றக் குழுவின் முன் தோற்றுமாறு அழைக்கப்பட்டுள்ளார்கள். அது பற்றிய உங்களின் கருத்து என்ன?
பதில் : மத்திய வங்கியிலோ வேறு எந்த நிறுவனத்திலோ ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுவதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. எனினும் மத்திய வங்கிதான் நாட்டின் பணவீக்கம் பற்றிய அளவுகோல்களை வகுக்கின்றது. பணவீக்கம் காரணமாகவே சம்பளம் அதிகரிக்கப்பட்டதென அவர்கள் கூறுகிறார்கள். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர்களான அர்ஜுன் மகேந்திரன், கப்ரால், குமாரசுவாமி, லக்ஷ்மன் மற்றும் தற்போதுள்ள நந்தலால் போன்ற அனைவரும் மத்திய வங்கிக்கு மாத்திரமல்ல பொருளாதாரம் மூழ்கடிக்கப்படவும் பொறுப்புக்கூற வேண்டும். அவர்களை உள்ளிட்ட மற்றுமொரு குழு முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகள் காரணமாக பணவீக்கம் தோன்றியதும் அவர்களின் சம்பளத்தை அதிகரித்துக்கொள்வது இலங்கையின் பணவீக்கத்தைப் பார்க்கிலும் அமெரிக்காவின் அல்லது பிறிதொரு நாட்டின் பணவீக்கத்திற்கு ஏற்றவகையிலேயே என்பது எமக்குப் பலப்படுகின்றது. இந்த இடத்தில் நெறிமுறைசார்ந்த ஒரு பிரச்சினையும் நிலவுகின்றது. பணிவீக்கம் மாத்திரமன்று நாட்டின் கைத்தொழில் முறைமையையும் நாசமாக்குவதற்கான தீர்மானங்களை எடுத்தவர்கள் மத்திய வங்கி உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரித்துக் கொள்கின்ற நெறிமுறைகளுக்குப் புறம்பான புலமைசார்ந்த மோசடியையும் புரிந்துள்ளார்கள். உலகில் இருக்கின்ற நயவஞ்சகமான நிதிசார் தீத்தொழில் புரிபவர்கள் எமது பொருளாதாரத்தை நெறிப்படுத்துவதற்கான இயலுமை நிலவுகின்றது. இந்த சம்பள அதிகரிப்பு அத்தகைய ஒரு செயற்பாடு என்பது தெளிவாகின்றது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி இப்போது அரசியல் புரியத் தொடங்கி உள்ளார். அவர் மத்திய வங்கி ஆளுனராக பதவிவகித்த காலத்தில் மத்தியவங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னவென நாங்கள் கேள்வி கேட்கிறோம். ரணில் விக்கிரமசிங்கவின் கடன் முகாமைத்துவக் குழுவின் ஆலோசகராக விளங்குகின்ற அவர் அரசியல் பூச்சாண்டிகளை படைக்க ஆரம்பித்துள்ளமையை நாங்கள் காண்கிறோம். அவர் ஆளுனர் பதவியை வகித்த காலத்திலேயே உயர்வான வட்டிக்கு வெளிநாட்டுத் தனியார் நிதிக் கம்பெனிகளிடமிருந்து மிக அதிகமான கடனைப் பெற்றுள்ளார். நந்தலால் வீரசிங்க அவரின்கீழ் பிரதிஆளுனராகப் பணியாற்றினார் என்பதையும் ஞாபகப்படுத்துகிறோம். இந்த வங்குரோத்துநிலைமைக்குப் பொறுப்புக்கூறவேண்டிய பல்வேறு தராதரங்களைச்சேர்ந்த ஆட்களே மிகப்பெரிய அளவில் சம்பளத்தை அதிகரித்துக்கொண்டமை பற்றிக் கவலைப்படுகிறோம்.
கேள்வி : விற்பனைசெய்த அரச நிறுவனங்கள் தொடர்பில் உங்கள் ஆட்சியின்கீழ் கடைப்பிடிக்கின்ற செயற்பாடுகள் என்ன?
பதில் : எமது ஆட்சியின்கீழ் அரச நிறுவனங்களை எவ்விதத்திலும் தனியார்மயப்படுத்தமாட்டோம். அவசியமானவகையில் முகாமைத்துவத்தை மறுசீரமைப்போம். அதாவது உள்நாட்டு அல்லது வெளிநாட்டுப் பிரிவுக்கு விற்பனை செய்வதல்ல. மிகவும் பழைய நிருவாகங்கள் இருக்கின்ற நி்றுவனங்களை நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக்கூறுகின்ற வகையில் கட்டியெழுப்புவோம். அதன்பின்னர் தற்போது விற்பனை செய்கின்ற அரச நிறுவனங்கள் தொடர்பில் பலவீனமான உடன்படிக்கைகளின்கீழ் மோசடியானவகையில் விற்பனை செய்யப்படுகின்ற நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு மீளாய்வு செய்வோம். அதைப்போலவே தேசிய பொருளாதாரத்துடனும் தேசிய பாதுகாப்புடனும் நேரடியான தொடர்பினைக் கொண்டுள்ள நிறுவனங்கள் பற்றி விசேட இடையீடு செய்யப்படும். ஒரேயடியாக கையேற்றல் சிக்கலானதாக அமையும். விரிவான புலனாய்வின்பின்னர் இனங்காணப்படுகின்ற நிறுவனத்தை அதன்மூலமாக ஓரளவுக்கேனும் இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி அதற்கு நேரோத்ததாக அமையத்தக்கவாறு மீளக்கையேற்க முயற்சி செய்யப்படும். தற்போது எஞ்சியுள்ள நிறுவனங்களை பாதுகாப்பதற்காக முதன்மைக் கவனத்துடன் செயலாற்றுவோம்.