(இரத்தினபுரி மாவட்ட பெண்கள் மாநாடு – 2024.03.03) எங்களுக்கு தற்போது இரண்டு பிரதான பணிகள் இருக்கின்றன. ஒன்று அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது. இரண்டாவது இந்த நாட்டை சீர்செய்வது. நீண்டகாலமாக இந்த நாட்டின் ஆட்சியாளர்கள், அரசியல் அதிகாரிகள் இந்த நாட்டுக்கு அழிவுமிக்க நிலைமையையே உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள். அவர்கள் அதிகாரத்தில் இருந்தால் எமக்கு அழிவுமிக்க எதிர்காலத்தையே எஞ்சவைப்பார்கள். அதனை இனிமேலும் பரீட்சித்துப் பார்க்கவேண்டிய அவசியம் கிடையாது. நலமான எதிர்காலத்திற்காகவே நாங்கள் அனைவரும் மல்லுக்கட்டவேண்டும். அதற்காக இதுவரை பயணித்த அரசியல் பாதைக்குப் பதிலாக […]
(இரத்தினபுரி மாவட்ட பெண்கள் மாநாடு – 2024.03.03)

எங்களுக்கு தற்போது இரண்டு பிரதான பணிகள் இருக்கின்றன. ஒன்று அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது. இரண்டாவது இந்த நாட்டை சீர்செய்வது. நீண்டகாலமாக இந்த நாட்டின் ஆட்சியாளர்கள், அரசியல் அதிகாரிகள் இந்த நாட்டுக்கு அழிவுமிக்க நிலைமையையே உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள். அவர்கள் அதிகாரத்தில் இருந்தால் எமக்கு அழிவுமிக்க எதிர்காலத்தையே எஞ்சவைப்பார்கள். அதனை இனிமேலும் பரீட்சித்துப் பார்க்கவேண்டிய அவசியம் கிடையாது. நலமான எதிர்காலத்திற்காகவே நாங்கள் அனைவரும் மல்லுக்கட்டவேண்டும். அதற்காக இதுவரை பயணித்த அரசியல் பாதைக்குப் பதிலாக புதிய அரசியல் பயணப்பாதையில் பிரவேசித்தே ஆகவேண்டும். நாங்கள் அதிகாரத்தை பெற்றேதீரவேண்டும். இந்த வருடத்தின் ஒற்றோபர் இறுதியளவில் இந்த நாட்டில் ஓர் புதிய அரசாங்கமே நிலவும். இப்போது தேர்தலை நடாத்துவது பற்றி ஐயப்பாட்டுடன் ஏன் சிந்திக்கிறீர்கள்? முதல்த்தடவையாக நாட்டின் “அதிகாரம்” மேலே இருக்கின்ற ஊழல்மிக்க பிரபுக்கள் அமைப்பிடமிருந்து பொதுமக்களின் கைகளுக்கு மாறஇருப்பதாலாகும். அவர்கள் இதுவரை தேர்தலை பிற்போட்டது அதிகாரத்தை இழக்கவேண்டி நேரிடுமென்ற அச்சம் காரணமாகவே. இங்கே குழுமியுள்ள பெண்களைப் பார்க்கும்போது இப்போது தேர்தலை பிற்போட எப்படியும் அஞ்சுவார்கள்.
தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றுசேர்கின்ற மக்களின் அலை மிகப்பெரியது. அதன் காரணமாக பாம்பும் கீரியும் ஒன்றுசேர்ந்திருக்கின்றது’ அனைவரும் கூட்டாக அவதூறு கற்பித்தலில் ஈடுபட்டுள்ளார்கள். ரணில் விக்கிரமசிங்க அவருடைய பிரச்சார வேலைத்திட்டத்தை வடிவமைத்துள்ளார். அந்த வடிவமைத்தலுக்கான இலங்கையில் இருக்கின்ற மூன்று பிரச்சார நிறுவனங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. அந்த பிரச்சாரத் திட்டத்தில் எம்மைப்பற்றிக் கூறவே வேண்டும். எம்மைப்புறிக் கூறவேண்டிய பகுதியை எமது ஒருவரிடமே கொடுத்துள்ளார்கள். ரணில் விக்கிரமசிங்க உருவாக்குகின்ற பிரச்சார அறிவித்தல்களில் மூன்று விடயங்கள் இருக்கின்றன. ஒன்று 88 – 89 மற்றும் மே மாதம் 09 ஆந் திகதி சம்பவங்களில் மக்கள் விடுதலை முன்னணி தமது வன்முறைசார்ந்த வரலாற்றினைக் கைவிடவில்லை என்பதற்கான பிரச்சாரம் வழங்குவதாகும். மே மாதம் 09 ஆந் திகதிய தீமூட்டல்களுடன் தொடர்புடையவர்களின் பெயர்ப்பட்டியல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருக்கின்றது. அதில் பங்கேற்றவர்களின் அரசியல் தொடர்புகள் அந்த பெயர்ப்பட்டியலில் இருக்கிறன. அதிகூடிய தொடர்பு மொட்டுக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே உண்டு. இவர்களின் இந்த முயற்சி மீண்டும் இறந்தகாலத்தை கிளறியெடுத்து மவிமு பற்றிய பீதிநிறைந்த புலக்காட்சியொன்றை உருவாக்குவதாகும்.

அதைப்போலவே இவர்கள் சனநாயகம் பற்றிப் பேசுகிறார்கள். தற்போது உயிருடன் இருக்கின்ற முன்னாள் சனாதிபதிகள் ஐவரும் சனநாயகத்திற்கு சட்டத்திற்கு எதிராக இயங்கியவர்கள். ஐவருமே நீதிமன்றத்தில் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள். பாராளுமன்றத்திற்கு அருகில் இருக்கின்ற காணிகளை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையகப்படுத்தி தனது நண்பரொருவருக்கு வழங்கியமைக்காக நீதிமன்றத்தில் குற்றவாளியாகியமையால் சந்திரிக்காவிற்கு அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொருளாதாரத்தை வங்குரோத்து அடையச் செய்வித்த தவறுக்காக “பொருளாதாரப் படுகொலையாளிகள்” என உயர்நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவராவார். முன்னாள் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு மூலமாக அவருக்கு அதிகாரமின்றி பாராளுமன்றத்தைக் கலைத்தார். உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஏழு பேர் அது அரசியலமைப்பிற்கு முரணானதென தீர்ப்பளித்தார்கள். அடுத்ததாக உயிர்த்தஞாயிறு தாக்குதலின்போது சனாதிபதி என்றவகையில் தனக்கு கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பினை ஈடேற்றத் தவறியமையால் அந்த தவறுக்காக நூறு மில்லியன் (10 கோடி) நட்டஈடு விதிக்கப்பட்டது. மைத்திரிபால சிறிசேன தான் அமைச்சரவையில் இருக்கின்றவேளையில் தான் இளைப்பாறுகின்றவேளையில் தனக்கு தேவையான இல்லத்தை அமைச்சரவையில் தான் அமர்ந்திருந்தே அங்கீகரித்துக் கொண்டார். அவற்றுக்கு ரணில் விக்கிரமசிங்க கையை உயர்த்தினார். சஜித் கையை உயர்த்தினார். மைத்திரிபால சிறிசேன இளைப்பாறியபின்னர் இருப்பதற்காக கொழும்பில் பெறுமதிமிக்க பாரிய வீடு கொடுக்கப்பட்டது. அந்த வீடு அவருக்குச் சொந்தமானதல்ல என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வீட்டிலிருந்து வெளியே இழுத்துப்போடப்பட்டார். இவர்களுக்கு வெட்கமில்லை. அண்மையில் ரணில் விக்கிரமசிங்க பொலீஸ் மா அதிபரை நியமித்தார். அந்த நியமனம் அரசியல் அமைப்பிற்கு முரணானதாகும். அரசியலமைப்புப் பேரவையின் ஐவர் அங்கீகரிக்க வேண்டும். அரசியலமைப்புப் பேரவையின் நால்வர் அங்கீகரித்தார்கள். இருவர் எதிர்த்தார்கள். இருவர் அமைதியாக இருந்தார்கள். வாக்குகளின் எண்ணிக்கை சமமானதாக அமையின் சபாநாயகர் தனது அறுதியிடும் வாக்கினைப் பாவிக்கலாம். இந்த இடத்தில் வாக்குகள் சமமானதாக இல்லை. எனினும் சபாநாயகர் ஆதரவாக வாக்கினை அளித்து பொலீஸ் மா அதிபரை நியமித்தார். அந்த நியமனம் அரசியல் அமைப்பிற்கு முரணானதாகும். பட்டப்பகலில் இவ்வாறு அப்பட்டமாகவே சட்டத்தை மீறுகின்ற, அரசியலமைப்பிற்கு முரணாக செயலாற்றுகின்றவர்கள் ” தேசிய மக்கள் சக்தி வந்தால் சனநாயகம் இல்லாதொழியும்” என கூறுகிறார்கள். சனநாயகத்தை மீறுபவர்கள், பாரியளவிலான குற்றச்செயல் புரிபவர்கள், ஊழில்பேர்வழிகளை பாதுகாப்பவர்கள் அவர்களே. தேசிய மக்கள் சக்தி மக்களை பயமுறுத்துதல் பற்றி ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரத் திட்டத்தில் இருக்கின்றது.
அவர்களின் திட்டத்தில் இரண்டாவதாக இருப்பது மக்களை ஏமாற்றுவதற்காக எடுக்கின்ற முயற்சியாகும். ” இது நாடு சிதைவடைந்துள்ள ஒரு தருணமாகும். இது புதியவர்களைக் கொண்டுவந்து பரீட்சித்துப்பார்க்க உகந்த தருணமல்ல. கடினமான நேரமாகும்” அதாவது பழக்கப்பட்டவர்களான ரணிலுக்கே கொடுங்கள் என்பதற்கான அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்புவதாகும். அவர்கள் யார்? இந்த பொருளாதாரத்தை வீழ்த்தியவர்கள். எமது நாட்டில் டொலர் தட்டுப்பாட்டினை ஏற்படுத்தியவர்கள், உற்பத்தியை வீழ்த்தியவர்கள். எம்பிலியிட்டியவில் பல தசாப்தங்கள் பழைய கடதாசி ஆலைக்கு சிறந்த சந்தையை அமைத்திருந்தால் இன்று உலகில் மிகவும் முன்னேற்றகரமான தொழிற்சாலையாக அமைந்திருக்கக்கூடும். ரணில் விக்கிரமசிங்கவின் பியகம தொகுதியில் உரத் தொழிற்சாலையொன்று இருந்தது. 1982 இல் 50,000 மெட்றிக் தொன் யூரியா பாகிஸ்தானுக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது பயிர்ச்செய்கைக்கு இந்த உரப் பிரச்சினை எவ்ளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது? அந்த தொழிற்சாலையை இந்த ரணில் விக்கிரமசிங்கவே நாசமாக்கினார். ஹிங்குரான, கந்தளாய் சீனித் தொழிற்சாலைகள் இருந்தன. துல்ஹிரிய, மத்தேகொட, பூகொட புடவைத் தொழிற்சாலைகள் இருந்தன. அவற்றை விற்று மூடிவிட்டார்கள். அவர்கள் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியவர்கள் அல்ல. பொருளாதாரத்தை நாசமாக்கியவர்கள். உலகில் எங்கேயும் ஒரு நாட்டை வீழ்த்தியவர்கள் அதனை மீட்டெடுத்ததில்லை. நாட்டை வீழ்த்தியவர்களை விரட்டியத்து புதிய குழுவொன்று அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டே நாடுகளைக் கட்டியெழுப்பியுள்ளன.
ரணிலின் யூரியா கெம்பேனின் அடுத்த வாதம்தான் 3% எப்படி 51% ஆக அமையுமெனும் கணிதமாகும். கணிதத்தின்படி நினைத்துப்பார்க்க முடியாததுதான். எனினும் அரசியல் என்பது கணிதமல்ல. கணிதத்தின்படி அறுபத்தொன்பது இலட்சம் எடுத்த கோட்டாபய இன்னமும் சனாதிபதியாக இருக்கவேண்டுமல்லவா. அரசியல் என்பது சமூகவியலாகும். மக்கள் எவ்வாறு எழுச்சி பெறுவார்கள்? பிரச்சினைகள் எவ்வாறு தோன்றும்? பிரச்சினைகளை தாங்கிக்கொள்வது எவ்வாறு? அந்த பிரச்சினைகளுக்கு பிரதிபலிப்புச் செய்வது எவ்வாறு? இன்று நாடு முழுவதிலும் ஒலிக்கின்ற குரல் ” இந்த நாட்டை நாசமாக்கியவர்களை விரட்டியடித்திட வேண்டும்” என்பதாகும்: அது கணிதமல்ல. சமூகவியல். மக்கள் சிந்திக்கின்ற விதம் மாற்றமடைந்துள்ளது. எதிர்வரும் தேர்தலின்போது கணிதவியலில் மாத்திரமல்ல, சமூகவியலிலும் வெற்றிபெறுவது தேசிய மக்கள் சக்தியே என்பது தெளி்வானதாகும்.

அவர்கள் எமக்கு எதிராக ஒன்றுசேர்வார்கள். அவர்களின் பணத்தைப் பிரயோகித்து, தொலைக்காட்சிகளில், செய்தித்தாள்களில் விளப்பரங்களைப் போட்டு நான் கூறியவகையிலான பிரச்சாரத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதைப்போலவே பல்வேறு பாணியிலான குறைகூறல்கள் எழுகின்றன. அத்தகைய அவதூறுகளுக்கு பதிலளித்திட நாங்கள் நேரத்தை செலவிடப்போவதில்லை. குறைகூறல்கள், சேறுபூசுதல்கள் மூலமாக தேசிய மக்கள் சக்தி்யை பலவீனப்படுத்த நிலவிய காலம் கடந்துவிட்டது. எமக்கு எதிராக அனைத்துமே திட்டமிடப்பட்டுள்ளன. எனினும் தோல்விகண்டுள்ளன. நாங்கள் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான எமது பயணத்தை தொடர்வோம். அதன் பிரதானமான பங்குதான், எமது நாட்டின் பொருளாதாரத்தின் திரும்பற்புள்ளியான பெண்களின் விழித்தெழல். திசெம்பர் 30 ஆந் திகதி அதுவரை இலங்கை வரலாற்றில் பிரமாண்டமான பெண்கள் எழுச்சியை மாத்தறையில் வெளிக்காட்டினோம். அவர்கள் அதற்காகவே அதிகம் பதற்றமடைந்தார்கள். அவர்கள் நினைத்தார்கள் அரசியல் ஆண்களின் வேலையென்று. பெண்கள் முனைப்பான அரசியலில் பிரவேசிக்க மாட்டார்களென, அரசியல் தமது வகிபாகமென விளங்கிக்கொள்ள மாட்டார்களென அவர்கள் நினைத்தார்கள். பெண்கள் சதாகாலமும் ஆண்கள் தரப்பினரை அரசியலில் வைத்துவிட்டு பெண்கள் மௌனமாக இருந்தார்கள். எமது பெண்களை துன்பங்களுக்கு இலக்காக்கி, நிர்க்கதி நிலைக்கு உள்ளாக்கி, அந்த நிர்க்கதியில் இருந்து விடுபட எதையாவது கொடுத்து தமது பக்கத்திற்கு தி்ருப்பிக்கொள்ள முடியுமென நினைத்தார்கள்.
ரணில் விக்கிரமசிங்கவின் புதிய வேலைத்திட்டம்தான் அஸ்வெசும, 20 கிலோ அரிசி, காணி உறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுதல். பழைய மக்கள் என நினைத்தே அவர்கள் கணிக்கிறார்கள். இப்போது இருப்பவர்கள் புதிய மக்கள். உலக வரலாற்றில் அண்மைக்காலத்தில் மக்கள் வீதிக்கு வந்து ஏழு மாதங்களுக்கு மேற்பட்ட காலமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு, இரத்தினபுரி, மாத்தறை, அநுராதபுரம் , காலிமுகத்திடலில் நாடுபூராவிலும் மக்கள் வெளியில் இறங்கி ஆட்சியாளனை விட்டியடித்தார்கள். இப்போது இருப்பவர்கள் உலக வரலாற்றில் சாதனை படைத்த மக்களாவர். அன்று இருந்த மக்களல்ல இன்று இருப்பவர்கள் என்பதை ரணில் விக்கிரசிங்காக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
நீங்கள் எந்த அளவுக்கு பொறுமையாக இருந்தீர்கள்? இனிமேலும் எமது நாட்டுப் பெண் இந்த அநீதியை, அநியாயத்தை பொறுத்திருக்க வேண்டியதில்லை. ஏழ்மையைப் பொறுத்துக்கொள்ளக் கூடாது. பொறுமையின் எல்லை கடந்துள்ளது. இந்த பாதிக்கப்பட்ட பெண்களை ஒன்றாக ஒருங்கிணைத்து எமது நாட்டை புதிய திசையை நோக்கி வழிப்படுத்த தேசிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. இதன் பிரதான பங்காளிகள் நீங்கள்தான். இலங்கையின் பெண்கள் முனைப்பான அரசியலில் பிரவேசித்துள்ளார்கள். அது தேசிய மக்கள் சக்தியுடனாகும்.
இன்னும் ஏழு மாதங்களே இருக்கின்றனள. சந்திக்கின்ற அனைவருடனும் பேசுங்கள். விழிப்புணர்வூட்டுங்கள். நீங்கள் எந்த அளவுக்கு ஊரில் முனைப்பானவர்களாக இருக்கிறீர்கள்? நீங்கள் மற்றொருவரை வென்றெடுக்க முயற்சி செய்கிறீர்களா? அந்த அளவுக்கே நாங்கள் வெற்றியை நெருங்குகிறோம். தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கான மிகஅதிகமான பங்கு உங்களின் இடையீடு மற்றும் உங்களின் முனைப்பான பங்களிப்பிலேயே தங்கியுள்ளது. பெருமைமிக்க பங்காளி, வீறுகொண்ட பெண், விடாமுயற்சியுள்ள ஒருவராக மாறுங்கள். எம்மால் இந்த வெற்றியை அடைய முடியும். நீங்கள் இடையீடு செய்கின்ற அளவுக்கு ஒற்றோபர் மாதத்தில் நிலவுவது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமாகும்.
அதன் பின்னர் இந்த நாட்டை சீர்செய்ய வேண்டும். முதலில் பிரஜைகளின் உணவுப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க வேண்டும். மக்களின் உணவுத் தேவைக்கு தீர்வுவழங்க வேண்டும். அப்போது மானியம் பற்றிக் கேட்கிறார்கள். மானியம் என்பது தீயதென ஓர் அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறார்கள். உலகின் எல்லா நாடுகளிலும் மானியம் வழங்கப்படுகின்றது. பிரான்சில் இங்கிலாந்தில் எம்மைவிட மானியம் வழங்கப்படுகின்றது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதாரத்துடன் பின்னிப்பிணைந்திராத வறிய சமுதாயமொன்று இருக்கின்றது. அவர்களுக்கு மானியம் வழங்கப்படவேண்டும். எனினும் மானியத்தில் சிறைவைக்கப்படலாகாது.

நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்றதுமே பிள்ளையின் கல்வியை உறுதிசெய்திடுவோம். கல்வியை வழங்குவதை தொடக்கத்தில் இருந்தே ஆசிரியர்கள், பாடசாலை உபகரணங்கள், அப்பியாசப் புத்தகங்கள், வறிய பாடசாலைகளுக்கு மதியஉணவு வழங்குவதை நாங்கள் திட்டமிடுவோம். ரணில் கூறுவதன்படி 2015 இல் பிறந்த பிள்ளைக்கு முதலாம் வருடத்தில் சேர்வதற்காக 2048 வரை காத்திருக்க வேண்டுமா? அதைப்போலவே சுகாதார வசதிகளை வழங்கவேண்டியது அவசியமாகும். ஒபரேஷன் செய்துகொள்ள எதிர்பார்த்துள்ள நோயாளிக்கு 2048 வரை காத்திருக்குமாறு கூறமுடியுமா? ரணில் அப்படித்தான் சிந்திக்கிறார். உணவுபானங்கள், கல்வி, சுகாதாரம் என்பவை எமது ஆட்சியில் துரித நிவாரணங்களாக வழங்கப்படுமென்பதை உறுதிசெய்கிறோம். இந்த அவசியப்பாடுகளை நிவர்த்திசெய்யாமல் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. ரணில் பொருளாதாரத்தை சீர்செய்ததாக கூறுகிறார். உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றி, பிள்ளைக்கு கல்வியின்றி கரைசேரத்த பொருளாதாரம் என்ன? இவற்றுக்கு எவ்வாறு பணம் தேடிக்கொள்வது எனும் பிரச்சினை இருக்கலாம். பணத்தை தேடிக்கொள்ளும் விதத்தை நாங்கள் கூறுகிறோம். நாங்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதனோடு சம்பந்தப்பட்ட குழுவுடன் கலந்துரையாடினோம். அதன் சட்டங்களில், பணியாட்டொகுதியில், தொழில்நுட்பத்தில் மாற்றங்களைச் செய்யவேண்டியுள்ளது. இந்த மாற்றங்களைச் செய்தால் தற்போது கிடைக்கின்ற வருமானத்தை இருமடங்குகளால் அதிகரிக்க முடியும். சுங்கத்தின், மதுவரியின் வருமானத்தை அதிகரிக்கமுடியும். ஜோன்ஸ்டன், தயா கமகே, அலோசியஸ் மத்திய வங்கிக்கு பொல்லுவைத்தவர்கள். இந்த செல்வத்தை சேகரித்துக்கொள்ள முடியும். இந்த வருமானத்தின் ஊடாக பிரஜைகளின் உணவு, கல்வி, சுகாதாரத்தை நாங்கள் உறுதிசெய்வோம்.
உணவு, சுகாதாரம், கல்வி மாத்திரமல்ல சமூகப் பாதுகாப்பு, உள அமைதி, இரசனை மக்களுக்கு அவசியமாகும். வீட்டில் உள்ளவர்கள் ஒன்றாக அமர்ந்து ஒருநாளில் ஒருவேளை உணவையாவது சுவைக்கக்கூடாதா? அவ்விதமாக மகிழ்ச்சியுடன் இருக்கின்ற மக்களையும் நாட்டையும் கட்டியெழுப்ப எமக்கு புதிய பொருளாதாரத் திட்டமொன்று அவசியமாகும். எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வளமான பெருநிலம் இருக்கின்றது. விவசாயத்தினால் கட்டிவளர்க்கக்கூடிய பிரதேசமாகும். நாங்கள் கமக்காரனின் வாழ்க்கையை உயர்த்தவல்ல எட்டுஅம்ச விவசாயக் கொள்கையை வகுத்துள்ளோம். இரத்தினபுரியின் செல்வமான இரத்தினக் கற்களுக்கு பெறுமதியைச் சேர்த்து பெறுமதியை அதிகரிப்பதற்கான திட்டங்களை நாங்கள் அமைத்துள்ளோம். பாரியளவில் உள்ள தேயிலைச் செய்கை அதனோடு வாழ்கின்ற மக்கட் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டமொன்றை வகுத்துள்ளோம். சுற்றுலாத் தொழில்த்துறை, கப்பற்றொழில், கப்பற்றொழிற்றுறையுடன் கட்டியெழுப்பப்படுகின்ற மெராயன் சேர்விஸை விருத்திசெய்வதற்கான திட்டங்கள் எம்மிடம் இருக்கின்றன.
இந்த சமூகத்தையும் பொருளாதாரத்தையும் புதிய மாற்றத்திற்கு இலக்காக்குவதற்கான புதிய பொருளாதார வேலைத்திட்டத்தில் நாங்கள் பிரவேசிக்க வேண்டும். எம்மிடம் அதற்கான இரண்டு படிமுறைகள் இருக்கின்றன. முதலாவது அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது. அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவது. ஊர்களில் சிங்கள, முஸ்லீம், தமிழ் பிரிவினைகளை வைத்துக்கொள்ள வேண்டாம். ஒட்டுமொத்த சமுதாயத்தையும் ஒன்றுசேர்த்து புதிய மாற்றத்திற்கு தோள்கொடுப்போம். அதற்காக நீங்கள் இடையீடுசெய்க.

“ஆட்சியாளர்கள் சொர்க்கசுகத்தை அனுபவிக்கின்ற அரசியலில் ஈடுபட மக்கள் தயாரில்லை”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்-
தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பக்கூடிய, சிங்கள, தமிழ், முஸ்லீம் அனைவருக்கும் நியாயமான சமூகத்தைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே மேடை தேசிய மக்கள் சக்தியின் மேடையாகும். எமது நாடு பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியாக பாரிய சீரழிவிற்கு உள்ளாக்கி எமது வாழ்க்கையை தவிடுபொடியாக்கிவிட கடந்த 76 வருடங்களாக நாட்டை ஆட்சிசெய்தவர்கள் செயலாற்றி இருக்கிறார்கள். தவிடுபொடியாக்கப்பட்ட, எதிர்பார்ப்புகள் சிதைக்கப்பட்ட எமது வாழக்கையைத் தொடர்ந்தும் அவ்வாறே நீடிக்க இடமளிக்க முடியாதென திடசங்கற்பம் கொண்ட நாங்கள் ஊர்ஊராகச்சென்று வீடுகள்தோறும் சென்று பெண்கள் சபைகளை நிறுவி புதிய மறுமலர்ச்சிக்காக பெண்களை அணிதிரட்டினோம். அவர்கள் இங்கு ஒன்றுசேர்ந்திரப்பது வேறு அரசியல் கட்சிகளைப்போல் அதிகாரத்திற்காக, பதவிகளுக்காக, சிறப்புரிமைகளுக்காக அல்லது அன்றைய வேளைக்காக கிடைக்கின்ற பணத்திற்காக அல்ல. எமது பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியாக, சிறப்பாக வாழக்கூடிய நாடொன்றை நிறுவுவதற்காக ஒன்றுசேர்ந்த ஒரு சக்தியே இங்கு இருக்கின்றது. நாமனைவரும் ஒருவர்போல் சிரித்துமகிழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்பி வெற்றிகரமான நாளைய தினத்தை பெற்றுக்கொடுப்போமென்ற நம்பிக்கையை கட்டியெழுப்பி முடித்துவிட்டோம். இதுவரை நாட்டை ஆட்சிசெய்த பாசறைகள் கலக்கமடையத்தக்க வகையிலான அணிதிரளல் எம்மைச் சுற்றி இருக்கின்றது. இந்த மக்கள் சக்தியைக் கண்டே எம்மைக் குறைகூறுகிறார்கள், அவதூறாக பேசுகிறார்கள்.
எமது நாட்டில் சனநாயகத்திற்கு முடிவுகட்டி உயர்நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட ஒருவரை பொலீஸ் மா அதிபராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய பொலீஸ் மா அதிபரொருவரின்கீழ் சட்டமும் அமைதியும் அமுலாகையில் எமது நாட்டின் பிள்ளைகளுக்கும் மக்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட மாட்டாது. சட்டத்தை மதிக்கின்ற தேசமொன்றை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் மாத்திரமே நிர்மாணிக்க முடியுமென்பது தெளிவாகி உள்ளது. இந்த நாட்டு மக்களை விவேகமுள்ள அரசியலின்பால் வழிப்படுத்துவது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. சமூகத்தில் போன்றே தேசிய அரசியல் கட்சியிலும் தலைவர் தொடக்கம் அடிமட்டம்வரை சமூக கலாசார ஒழுக்கம் நிலவவேண்டும். நெறிமுறைகொண்ட இலங்கையைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. பெருந்தோட்டங்களை எடுத்துக்கொண்டாலும் வடக்கு கிழக்கினை எடுத்துக்கொண்டாலும் கொழும்பு, திஹாரிய, அம்பாந்தோட்டையை எடுத்துக்கொண்டாலும் எந்தவொரு பிரதேசத்திலும் வசிக்கின்ற மக்களுக்கு சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய உரிமை இருக்கவேண்டும். அதற்காக அடிமைத்தனமற்ற இலங்கையைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும்.

புதிய சூரியன் உதிக்கின்ற தேசமொன்றை எதிர்வரும் சனாதிபதி தேர்தலின்பின்னர் நாங்கள் கூட்டாக ஒன்றுசேர்ந்து கட்டியெழுப்புவோம் என்பதை உறுதியாகக் கூறுகிறோம். கடந்த வருடத்தைப் பார்க்கிலும் இந்த வருடத்தில் வறுமை 27% ஆல் அதிகரித்துள்ளது. இலங்கையின் ஒவ்வொரு குடும்பத்திலும் 2/3 கடந்த வருடத்தைப் பார்க்கிலும் இந்த வருடத்திலும் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு பதிலளிக்க ஆட்சியாளர்களால் முடியாது. ஆற்றாமையை நிரூபித்தே 16 இலட்சமாக விளங்கிய சமுர்த்தி பயன்பெறுனர்கள் 24 இலட்சமாக அதிகரித்திருக்கிறார்கள். மானியம் பெறவேண்டிய மட்டத்திற்கு மக்களின் வருமானத்தை வீழ்த்தி, வரிச்சுமையை ஏற்றிய ஆட்சியாளர்கள் சொர்க்க சுகம் அனுபவிக்கின்ற அரசியல் பாசறையை பாதுகாத்திட தயாரில்லை என்பதை மக்கள் நிரூபித்துள்ளார்கள். நாங்கள் அனைவரும் சிங்கள, தமிழ், முஸ்லீம் பேதமின்றி ஒருவர்போல் வாழக்கூடிய இலங்கையைக் கட்டியெழுப்பிட ஒன்றுசேர்வோமாக.









                    (மாத்தறை மாவட்ட சட்டத்தரணி மாநாடு – 2024.03.01)
(மாத்தறை மாவட்ட சட்டத்தரணி மாநாடு – 2024.03.01)












                    (மாத்தறை மாவட்ட மீனவர் மாநாடு – 2024.02.25) இந்த நாடு பல பிரமாண்டமான நெருக்கடிகளுக்கு இரையாகியதாம், அந்த நெருக்கடிகளிலிருந்து மீட்டெடுத்தவர்கள் ரணில் ராஜபக்ஷவே என தற்போது ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். வரிசைகள் கிடையாதாம். எண்ணெய் தேவையான அளவில் கிடைக்கிறதாம். 2019 இல் அரசாங்கத்தை நிறுவுகையில் ஒரு லீற்றர் டீசல் 110/= இற்கே இருந்தது. தற்போது ஒரு லீற்றர் டீசல் 363/=. ஒரு லீற்றர் பெற்றொல் 136/= இற்கே இருந்தது. தற்போது ஒரு லீற்றர் பெற்றோல் 371/=. எனினும் அந்தக் […]
(மாத்தறை மாவட்ட மீனவர் மாநாடு – 2024.02.25)

இந்த நாடு பல பிரமாண்டமான நெருக்கடிகளுக்கு இரையாகியதாம், அந்த நெருக்கடிகளிலிருந்து மீட்டெடுத்தவர்கள் ரணில் ராஜபக்ஷவே என தற்போது ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். வரிசைகள் கிடையாதாம். எண்ணெய் தேவையான அளவில் கிடைக்கிறதாம். 2019 இல் அரசாங்கத்தை நிறுவுகையில் ஒரு லீற்றர் டீசல் 110/= இற்கே இருந்தது. தற்போது ஒரு லீற்றர் டீசல் 363/=. ஒரு லீற்றர் பெற்றொல் 136/= இற்கே இருந்தது. தற்போது ஒரு லீற்றர் பெற்றோல் 371/=. எனினும் அந்தக் காலத்திலும் இந்தக் காலத்திலும் ஒரு கிலோ மாசி மீன் விலை ஒரே மட்டத்திலேயே நிலவுகின்றது. அதில் மாற்றமேற்படவில்லை. அந்தக் காலத்தில் நிலவிய அரிசி, சீனி விலை தற்போது அதிகரித்துவிட்டது. பிரச்சினையைத் தீர்த்திருந்தால் வைத்தியசாலையில் மருந்து இருக்கவேண்டுமே. ஆனால் ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். பொறியிலாளர்கள், மருத்துவர்கள் நாட்டைவிட்டுச் செல்லாதிருக்கவேண்டும். தொழில்முயற்சிகள், கைத்தொழில்கள் மூடப்படாதிருத்தல் வேண்டும். மின்சார சபையினால் பத்திலட்சத்து அறுபத்தொன்பதாயிரத்து ஐநூற்று அறுபத்திமூன்று வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் கூறகின்றவிதத்தில் பிரச்சினை தீர்ந்துவிட்டதா? பொருளாதார நெருக்கடி உச்சத்தை அடைந்து அதற்கு அப்பாலும் பயணித்து சமூக நெருக்கடி உருவாகிவிட்டது.
அந்த நெருக்கடிகளுக்கு பதில்தேட ஒவ்வொரு கருத்திட்டத்தை அமைத்துக்கொண்டுள்ளார்கள். “யுக்தியே மெஹெயும” எனும் பெயரில் போதைத்தூள் பிடிக்கின்ற நடவடிக்கையொன்று அமுலாக்கப்பட்டுள்ளது. நாற்பது நாட்களுக்குள் 59,000 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தம்பட்டம் அடிக்கிறார்கள். இந்த ஆட்சியாளர்கள் 76 வருடங்களுக்குள் உருவாக்கிய நாட்டின் நிலை அதுதான். பேருந்துகளில் புகையிரதங்களில் பயணிக்கின்ற பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்களை பிடிப்பதற்காக மற்றுமொரு கருத்திட்டத்தை அமுலாக்கினார்கள். அத்தகைய கூறுகள் அமைக்கப்படக் காரணம் பொருளாதார நெருக்கடிக்கு அப்பால் பயணித்த சமூக, கலாசார நெருக்கடிகளாகும். பிள்ளைகளால் கல்விகற்ற முடியாத, மூன்றுவேளை உண்ணக் கிடைக்காத, சுகாதாரரீதியாக சீரழிகின்ற நிலை உருவாகியுள்ளது. நெருக்கடிகள் முற்றுப்பெறவில்லை. நெருக்கடிகளை வார்த்தைகளுக்குள்ளே மறைக்கப் பார்க்கிறார்கள். இந்த ஆட்சியாளர்கள் இருக்கும்வரை நெருக்கடிகள் தீரப்போவதில்லை.
இந்நாட்டில் மூன்றுஇலட்சத்து பதினையாயிரம் மீனவர்கள் நன்னீர் மற்றும் உவர்நீர் மீன்பிடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஜொப் அரசாங்கம் கொடுத்ததல்ல. கடல் வழங்கிய தொழில்களாகும். கடல் வழங்கிய தொழில்களுக்கு அரசாங்கத்தினால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. மீன்பிடித்தொழிலுடன் இணைந்த பனிக்கட்டி தயாரித்தல், மீன் விற்பனையாளர்கள், வாகனங்களை கொண்டுசெல்பவர்கள், வலைகளை வழங்குபவர்கள் என்றவகையில் ஏறக்குறைய இருபத்தொரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர்வரை மீன்பிடித்துறையில் பராமரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மீன்பிடித்துறை தனித்துவமான ஒரு துறையாகும். இந்த துறையின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க ஆட்சியாளர்களுக்கு அவசியமில்லையா? மீனவர்களே இலங்கையின் பிரதானமான புரதச்சத்து வழங்குபவர்களாவர். இந்நாட்டின் பிள்ளைகளுக்கு, எமக்கு அவசியமான புரதச்சத்தினை வழங்குபவர்கள் நீங்களே. பல்லாயிரக்கணக்கான வருடங்களாக புரியப்பட்டு வருகின்ற ஒரு தொழிலே இது. விருத்தியடைந்த நாடுகளில் புதிய தொழில்நுட்பத்துடன் இணைத்து ஸ்மார்ட் பண்ணி விருத்திசெய்த கைத்தொழிலாக மாற்றியிருக்கிறார்கள். ஆனால் எமது மீன்பிடித் தொழிலுக்கு தொழில்நுட்பத்திலிருந்து விவேகத்திலிருந்து பயன்பெறுவது கிடையாது. நோர்வே , ஜப்பான், மலேசியா, சீனா இதனை விருத்தியடைந்த கைத்தொழிலாக மாற்றிக்கொண்டுள்ளன.

சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய உங்களுக்கு பொருளாதார சுதந்திரம், கல்விச் சுதந்திரம் உள்ளிட்ட உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை. திசைகாட்டியை முதன்மையாகக்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தேசிய அரசாங்கமொன்று தோன்றிய நாளில்தான் உங்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும். அன்றைய தினத்தில் உண்மையாக சுதந்திரம் கிடைக்கும். அது நாங்கள் பெறப்படவேண்டிய சுதந்திரமாகும். அதற்கான ஒரு தேசிய இயக்கத்தை நாங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும். தேசிய இயக்கத்தை அதிகாரத்தைப் பெற்ற பின்னர் பாரிய தேசிய மறுமலர்ச்சியை நோக்கித் தள்ளவேண்டும்.
இந்த நாட்டில் அதிகாரத்தைப் பெறுவதற்காக பஞ்சமகா சக்திகளை ஒன்று சேர்த்தது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும். பிக்குமார்கள், வைத்தியர்கள், ஆசிரியர்கள், கமக்காரர்கள், தொழிலாளர்கள் அந்த பஞ்சமகா சக்தி தற்போது இருக்கின்றதா? தற்போது அவர்களிடம் இருக்கின்ற சக்தியைத் தெரியுமா? பாதாளச் சக்தி, போதைத்தூள் சக்தி, திருடர்களை உள்ளிட்ட ஊழல்மிக்க சக்தி, இனவாத – மதவாத சக்தி. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டே அறுபத்தொன்பது இலட்சம் வாக்குகள் பெறப்பட்டன என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த நீலப்பச்சை ஆட்சியாளர்களின் அரவணைப்பில் பாதாள உலகம் கொஞ்சிவிளையாடுவதால் பாதாள உலகத்தை அழித்துவிட இயலாது. போதைப்பொருட்களை கொண்டுவருகின்ற பெரிய புள்ளிகள் பாராளுமன்றத்திலேயே இருக்கிறார்கள். அவர்களைப் பிடிப்பதில்லை.
பஞ்சமகா சக்திகளுடன் மேலும் பல சக்திகளை ஒன்றுசேர்த்து உலகில் பெருமைமிக்க தேசமொன்றை உருவாக்குவதற்காக அனைத்துச் சக்திகளையும் ஒரே பிடிக்குள் கொண்டுவந்த சக்திதான் தேசிய மக்கள் சக்தி. நாட்டை நேசிக்கின்ற மகாசங்கைக்குரியவர்கள் எம்முடன் இணைந்துள்ளார்கள். மருத்துவர்களின் மாநாட்டினை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். ஆசிரியர் சங்கக் கூட்டங்களை நடாத்தி தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி சேர்த்திருக்கிறோம். அகில இலங்கை கமக்காரர் சம்மேளனங்களை நாடு பூராவிலும் நடாத்தி ஒரே பாசறைக்குள் கொண்டுவந்திருக்கிறோம். அரச மற்றும் தனியார் பிரிவில் பல்வேறு துறைகளில் இருக்கின்ற அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றுசேர்த்த பிரமாண்டமான தொழிற்சங்கங்களைக் கட்டியெழுப்பி தேசிய மக்கள் சக்தியுடன் இணைத்திருக்கிறோம். பஞ்சமகா சக்தியை விஞ்சியதாக மற்றுமொரு பிரமாண்டமான சக்தியாக அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தையும் நாங்கள் ஒன்றுசேர்த்திருக்கிறோம். இற்றைவரை இந்த நாட்டைக் கட்டியெழுப்பிட ஒரு சக்தியென்றவகையில் பாவித்திராத இளைப்பாறிய முப்படையினரும் ஒரு சக்தியென்றவகையில் எம்மைச்சுற்றி குழுமியிருக்கிறார்கள். 56% வாக்குப்பலம் கொண்டவர்களாக விளங்கிய அரசியலில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த பெண்களை நாங்கள் ஒரு சக்தியாக சேர்த்திருக்கிறோம். நாட்டைக் கட்டியெழுப்ப நாட்டை நேசிக்கின்ற பொறியிலாளர்களின் ஒன்றியம், நிதிசார் துறையைச்சேர்ந்த உத்தியோகத்தர்களை சேர்த்துக்கொண்டிருக்கிறோம். இலட்சக் கணக்கில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளும் ஒரு சக்தியாவர். இலங்கையின் முதலாவது முச்சகரவண்டி மாநாட்டினை எம்பிலிபிட்டியவில் நடாத்தினோம். சட்டத்தரணிகள் சங்கங்களை நாங்கள் அமைத்தோம். அந்த ஒவ்வொரு சக்தியையும் நாங்கள் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி ஒன்று சேர்த்து வருகிறோம்.
இலங்கையில் 29 கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல்கள் இடம்பெற்றன. 29 இலும் வெற்றிபெற்றோம். எம்மால் ஒன்றின் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயிற்று. சஜித்தின் கும்பலும் ராஜபக்ஷவின் கும்பலும் ஒன்றுசேர்ந்து அதிகாரத்தை நிலைநாட்டினார்கள். ஏனைய அனைத்திலுமே திசைகாட்டி அதிகாரத்தை நிலைநாட்டியது. இவற்றை அவர்கள் உணர்கிறார்கள். காண்கிறார்கள். கடந்த நாட்களில் இந்தியா ஒரு ராஜதந்திர அழைப்பினை விடுத்தது. இந்திய உளவுத்துறை அறிக்கைகளின்படி இலங்கையில் வருங்கால தலைமைத்துவம் இனங்காணப்பட்டுள்ளது. உயிர்த்தஞாயிறு தாக்குதல் பற்றி முன்கூட்டிய திகதியையும் நேரங்களையும் இந்திய ரோ உளவுச்சேவை அறிவித்திருந்தது. அவ்வாறான நுணுக்கமான உளவுச்சேவையொன்றின் அறிக்கையின்படி இலங்கையின் தேர்தல்கள் பற்றிக் கூறமுடியாதா? அதற்கமைவாகவே அழைப்பு கிடைக்கின்றது. இந்த நாட்டில் அடுத்த அதிகாரம் தேசிய மக்கள் சக்தியினுடையதாக மாறுவது நிச்சயம் என்பதை பெருமிதத்துடனும் அபிமானத்துடனும் கூறிக்கொள்கிறேன்.

கடந்த நவெம்பர் மாதத்தில் இலங்கை வரலாற்றில் தலைசிறந்த வழக்குத் தீர்ப்பொன்று வழங்கப்பட்டது. இந்த நாடு வங்குரோத்து அடைய, பொருளாதாரம் வீழச்சியடைய, காரணமாக அமைந்த பிரதிவாதிகள் பெயர்குறிக்கப்பட்டார்கள். மகிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர்களான அஜித் நிவாட் கப்ரால், டபின்யு. டீ. லக்ஷமன், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர்களான ரீ.பீ. ஜயசுந்தர, ஆட்டிகலவை உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டார்கள். உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினைக்கூட ஏற்றுக்கொள்ளாதவர்கள்.
வரிசைகளில் மடிந்தார்கள், முச்சக்கர வண்டியில் இறந்தார்கள், கமத்தொழிலை நாசமாக்கினார்கள், மீன்பிடித்தொழிலை அழித்தார்கள், பிள்ளையின் கல்வியை இல்லாதொழித்தார்கள் , தரங்குன்றிய மருந்துகளைக் கொண்டுவந்து மக்களைக் கொன்றார்கள், அவர்களைத் தண்டிக்கவேண்டும். நீங்கள் தற்போது அனுபவித்துக் கொண்டிருப்பது அநாவசியமான துன்பத்தையாகும். மத்திய வங்கி மோசடி இடம்பெற்றிராவிட்டால், நாட்டுக்கு நான்கு வருடங்களுக்கு மருந்து கொண்டுவர அவசியமான பணம்: பதினேழாயிரம் மில்லியன் சீனி வரி மோசடி இடம்பெற்றிராவிட்டால், மூன்று நான்கு போகங்களுக்கு உரம் கொண்டுவந்து கொடுத்திருக்கலாம்.
கடந்த 2021 இல் 2188 மெட்றிக்தொன் மாசிக்கருவாடு கொண்டுவரப்பட்டது. 1453 மில்லியன் ரூபா செலவாகி இருக்கின்றது. இதனை இங்கே தயாரிக்க முடியாதா? 32,585 மெட்றிக்தொன் கருவாடு கொண்டுவந்திருக்கிறார்கள். 13,990 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 8758 மெட்றிக்தொன் ரீன்மீன் கொண்டுவந்திருக்கிறார்கள். 4,891 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அவற்றுக்கு செலவாகியது டொலர்கள். இந்த நாட்டின் மீனவர்களை எவ்வாறு மீட்டெடுப்பது? மீனவர் மீது வற் விதிக்கப்படுகின்றது. அவர்களின் நண்பர்கள் கபடத்தனமான வியாபாரிகள் வகுப்பினர் வெளிநாடுகளிலிருந்து செமன், கருவாடு, மாசிக் கருவாடு கொண்டுவருகிறார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐந்தே வருடங்களில் நாட்டின் மீன்பிடிக் கைத்தொழிலை பிரதான கைத்தொழிலாக உயர்த்திவைக்கும் என சபதமிடுகிறோம். மீனவர் பிடிக்கின்ற மீன்களுக்கு பெறுமதி சேர்த்து அதற்கான பெறுமதியை உருவாக்குவோம். மீனவனுக்கு அவசியமான சாதனங்களை இங்கே தயாரிக்கமுடியும். விவசாயத்திற்கு அவசியமான விதையினங்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும். கமக்காரனுக்கு அவசியமான கைத்தொழில்களை உருவாக்கிட முடியும்.
தொழில்முனைவோருக்கு பெண்களுக்கு புதிய கைத்தொழில்களும் புதிய வாய்ப்புகளும் உருவாக்கப்படும். கடலில் இருந்து மீன் அறுவடை மாத்திரமல்ல பெறக்கூடிய அனைத்துவிதமான பயனையும் பெறுவோம். கடல் தாவரப் பூண்டுகள் தற்போது உலகில் மிகவும் பிரபல்யமடைந்து வருகின்றன. அவற்றில் நாங்கள் கைவைக்கவில்லை. பெருநிலத்தையும் பெருங்கடலையும் ஒன்றாக எடுத்து உற்பத்திப் பொருளாதாரமொன்றை உருவாக்கி இந்நாட்டு மக்களின் பொருளாதாரத்தை செழிப்படையச் செய்விப்பதற்கான வேலைத்திட்டமொன்று, கொள்கையொன்று இருக்கின்ற ஒரு கட்சி இருக்குமாயின் அது தேசிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும்.
2004 சுனாமியின்போது முழுஉலகினதும் உதவிகள் பாய்ந்துவந்தன. அந்த நேரத்தில் ” இந்த பாரிய அனர்த்தத்தின்போது நாங்கள் ஒற்றுமைப்படுவோம், முழு உலகத்திலிருந்தும் பாய்ந்துவந்த உதவிகளைப் பாவித்து நாட்டை சீர்செய்வோம்.” என ஆட்சியாளர்கள் கூறினார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் சடலங்களின்மீது வந்த சுனாமி நிவாரணங்களை கணக்குகளுக்கு பாய்ச்சினார்கள். சிறிலிய கணக்கிற்குச் சென்றது. அப்படிப்பட்ட கொடிய ஆட்சியாளர்கள் இருக்கின்ற ஒரு நாடாகும். முப்பது வருடகால யுத்தத்தை பிணங்கள் மீது முடிவுக்கு கொண்டுவந்தார்கள். முழுநாட்டு மக்களையும் ஒருங்கிணைத்து நாட்டை சீராக்கியிருக்கலாம். எனினும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து சூறையாடத் தொடங்கினார்கள். குடும்பத்திடம் அதிகாரங்களைக் குவிக்கத் தொடங்கினார்கள். நாட்டைக் கட்டியெழுப்பிட இளைஞர்கள் பாழடைந்த வயல்களை சாகுபடிசெய்யத் தொடங்கினார்கள். மதில்களில் ஓவியங்கள் தீட்டத் தொடங்கினார்கள். தேசிய மறுமலர்ச்சிக்குச்செல்ல மக்கள் நடுவீதிக்கு இறங்கினார்கள். ஆட்சியாளர்கள் மக்களை வதைக்கத் தொடங்கினார்கள். பல வாய்ப்புகளைத் தவறவிட்டார்கள். நாட்டை வங்குரோத்து அடையச் செய்வித்தார்கள். இலங்கை மண்ணுக்கு இறுதி வாய்ப்பு வந்திருக்கிறது. அந்த வாய்ப்பினை தவறவிடவேண்டாம். “இவ்வளவு அனர்த்தம் நேர்ந்தும் ஏன் சந்தர்ப்பத்தை தவறவிட்டீர்கள்?” என்று பிள்ளைகள் ஒருநாள் கேட்பாளர்கள். அனைத்துச் சக்திகளையும் ஒன்றுசேர்த்து மறுமலர்ச்சி யுகமொன்றை உருவாக்கிட தயாராகிவருகின்ற உன்னதமான வாய்ப்பு, திசைகாட்டியை வெற்றிபெறச்செய்விக்க ஊக்கத்துடன் செயலாற்றுக. மக்கள் ” விடுகின்ற பெருமூச்சு புயல்காற்றாக மாறிவரட்டும் – வடிக்கின்ற கண்ணீர் வெள்ளப்பெருக்காக மாறிவரட்டும் – வயிற்றுப்பசி பெருநெருப்பாக மாறிவரட்டும் – நாட்டைத் தின்றவர்கள் தொலைந்தே போகட்டும்.”

                    (தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.02.29) இவ்வருடத்தின் செத்தெம்பர் இறுதியில் அல்லது ஒற்றோபர் தொடக்கத்தில் சனாதிபதி தேர்தலை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்தலொன்று நெருங்கும்போது எமது நாட்டு மக்கள் இந்த கொடிய ஆட்சியை மாற்றியமைப்பதற்கான பாரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். பொருட்களின் விலைகள் அதிகரித்தல், மூன்றுவேளை உணவு பெற்றுக்கொள்ள முடியாமை, போசாக்கின்மை அதிகரித்தல் போன்றே அரசாங்கம் கடந்தகாலத்தில் அமுலாக்கிய வரிக்கொள்கைகள் காரணமாக சிறிய, நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் பாரியளவில் சீரழிந்துவிட்டன. அவையனைத்தும் காரணமாக […]
(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.02.29)

இவ்வருடத்தின் செத்தெம்பர் இறுதியில் அல்லது ஒற்றோபர் தொடக்கத்தில் சனாதிபதி தேர்தலை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்தலொன்று நெருங்கும்போது எமது நாட்டு மக்கள் இந்த கொடிய ஆட்சியை மாற்றியமைப்பதற்கான பாரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். பொருட்களின் விலைகள் அதிகரித்தல், மூன்றுவேளை உணவு பெற்றுக்கொள்ள முடியாமை, போசாக்கின்மை அதிகரித்தல் போன்றே அரசாங்கம் கடந்தகாலத்தில் அமுலாக்கிய வரிக்கொள்கைகள் காரணமாக சிறிய, நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் பாரியளவில் சீரழிந்துவிட்டன. அவையனைத்தும் காரணமாக மக்களில் பெருந்தொகையானோர் மிகுந்த துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். மருந்துகள் இன்மை, தரங்குறைந்த மருந்துப் பிரச்சினை போன்றே கல்விச் சிக்கல்கள், பிரமாண்டமான வரிச்சுமை முதலியவற்றை மாற்றியமைத்து மக்களுக்கு உயிர்வாழக்கூடிய ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்காக அனைவருமே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும்சிலர் இந்த துன்பங்கள் காரணமாக நாட்டைவிட்டுச் செல்கிறார்கள்.
மக்கள் நினைப்பதும் எளிமையான மாற்றங்களுக்காக அரசாங்கமொன்றை அமைப்பது பற்றியல்ல. கடந்த 76 வருடகாலமாக எளிமையான போராட்டக் கோஷங்களுக்காக அரசாங்கங்களை அமைத்துள்ளார்கள். ரூ. 3.50 இற்கு பாண், எட்டு இறாத்தல் கொட்டைகள், சந்திரனில் இருந்து அரிசி கொண்டுவந்து தருதல் போன்ற நிலைமைகளல்ல தற்போது இருப்பது. பொருளாதாரத்தை அடிமட்டத்திற்கே வீழ்த்தி, தாங்கமுடியாத கடன்சுமையை ஏற்றி, நாடு வங்குரோத்து அடைந்துவிட்டதென்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்கள். மறுபுறத்தில் சமூகச் சீரழிவு, சட்டத்தின் ஆட்சியின்மை, அரசாங்கமே அரசியலமைப்பினை மீறுதல் போன்ற நிலைமைகளால் மிகவும் பாரதூரமான சமூக, பொருளாதார, அரசியல், கலாசார பிரச்சினைகளே நிலவுகின்றன. இந்த பிரச்சினைகளுக்கான தீர்வினைக் கண்டறிய நாட்டில் ஆழமான மாற்றமொன்று அவசியமாகும். மக்களும் ஊழல்நிறைந்த ஆட்சியை மாற்றியமைப்பதற்காக அணிதிரண்டு உள்ளார்கள். பொருளாதார அபிவிருத்தி நிலவுகின்ற, நியாயம் நிலவுகின்ற சுமூகமொன்று பற்றிய எதிர்பார்ப்பினைக் கொண்டவர்களாக மக்கள் இருக்கிறார்கள். தமக்கு கிடைக்கின்ற சிறிய அநுகூலங்களை ஒருபுறம் வைத்துவிட்டு சமூகத்தின் ஆழமான மாற்றத்திற்காக திசைகட்டியுடன் கைகோர்த்து மக்கள் முன்நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலைமைக்குள் தோல்வி பற்றி உணர்ந்த, அதிகாரத்தைக் கைவிடுவதுபற்றி நினைத்துப்பார்க்கக்கூட முடியாத ஊழல்மிக்க ஆட்சிக் கும்பல்கள் பலவிதமான தந்திரோபாயங்களை பிரயோகித்து பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு இந்த நிலைமையை தட்டிக்கழித்துச்செல்ல முயற்சிசெய்கிறார்கள். திரிபடைந்த தோற்றமுடைய அரசியல் நாடகங்களை உள்ளடக்கிய கூட்டணிகளை கட்டியெழுப்பி வருகிறார்கள். புதிய தோற்றத்தைக்காட்டி பழைய மக்களை மீண்டும் ஏமாற்ற முயற்சிசெய்து வருகிறார்கள். நாட்டை வங்குரோத்து அடையச் செய்தவர்களே வனப்புமிகு நாட்டை உருவாக்குவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்துக்கொண்டுஇருக்கிறார்கள். நீண்டகாலமாக ஒன்றாக அரசாங்கத்தில் இருந்தவர்களும் வேலைத்திட்டங்களை முன்வைத்து, வேறு உரையாடல்களை உருவாக்கி, மக்களை தவறாக வழிநடாத்த முயற்சிசெய்து வருகிறார்கள். மக்கள் அவர்களை பார்ப்பதே கிடையாது. அதனாலேயே தேர்தலை தவிர்த்துச்செல்ல நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழித்தல் போன்ற கதைகளைக் கூறிவருகிறார்கள். மக்களின் பாரிய எதிர்ப்பு அரசாங்கத்திற்கு எதிராக வந்தவேளையில் நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழித்தல் பற்றி அவர்களுக்கு ஞாபகம் வரவில்லை. அடுத்த தேர்தலில் அவர்களுக்கு வெற்றிபெற முடியாதென்பது உறுதியானதால் அவசரஅவசரமாக நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழித்தல் ஞாபகத்திற்கு வருகின்றது. நாங்கள் நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழித்துக்கட்டுவதற்காக தொடர்ச்சியாக போராடி பலவற்றை அர்ப்பணித்தவர்கள். அவர்கள் தொடர்ச்சியாக பொய் வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்று சனாதிபதி முறையைப் பேணி வந்தவர்களாவர். நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழித்துக்கட்டி மக்களின் இறைமையை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியால் மாத்திரமே உறுதிப்படுத்த முடியும். சனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று, பொதுத்தேர்தலில் பலம்பொருந்திய அரசாங்கமொன்றை நிறுவி புதிய அரசியலமைப்பொன்றினை அறிமுகஞ்செய்து சனநாயகத்தை நிலைநாட்டி நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
சனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட முன்வருவதில் நிலவுகின்ற அச்சம் காரணமாக திடீர் பொதுத் தேர்தல் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். பொதுத் தேர்தல் வந்தால் ஊழல்மிக்க திருட்டுக் கும்பலை அகற்றி, புதிய ஆட்சியொன்றை அமைக்க மக்கள் தீர்மானித்து விட்டார்கள். தேர்தல் காலம் நெருங்கும்போது வழமையாக செய்வதுபோல் பொருட்களை பகிர்ந்தளிக்கத் தொடங்கியுள்ளார்கள். திருடிய பொதுப்பணம், வரிச்சுமையை ஏற்றி மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணம், அமைச்சுக்களுக்கு ஒதுக்கிய பணத்தொகைகளைப் பாவித்து தேர்தல் இயக்கங்களுக்காக பொருட்களைப் பகிர்ந்தளிக்கத் தொடங்கியுள்ளார்கள். இறையிலி உறுதிகளை வழங்குவதாகக்கூறி எமது நாட்டின் சனாதிபதி மக்களை தம்புல்லைக்கு திரட்டினார். உறுதிகளை வழங்கவேண்டியது சனாதிபதியல்ல, சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களே. நாடு பூராவிலும் இருக்கின்ற மக்களை பல்வேறு பொருட்களை வழங்குவதாக ஒர் இடத்தில் ஒன்றுசேர்த்து தேர்தல் கெம்பேன் புரிகிறார்கள். அதைப்போலவே 20 கிலோ அரிசியையும் பகிரத் தொடங்கியுள்ளார்கள். கடந்தகாலத்திலும் தீப்பெட்டியில் தொடங்கி பலபொருட்களை பகிர்ந்தார்கள். சவப்பெட்டிகளை மாத்திரமே பகிரவில்லை. இந்த வாக்குகளைப் பெற்றுக்கொண்டே ரணில் நாட்டைத் திருடினார். நாட்டைக் கடனாளியாக்கினார். மக்களால் உயிர்வாழ முடியாத நிலைக்கு வீழ்த்தினார். அந்த விளையாட்டுக்கு இனிமேலும் இடமளிக்கவேண்டாமென நாங்கள் மக்களை வலியுறுத்துகிறோம். பகிர்ந்தளிக்கின்றவற்றை வாங்கிக்கொண்டு நாட்டின் எதிர்காலத்தை காட்டிக்கொடுக்காதிருப்பதற்கான தீர்மானத்தை எடுக்கவேண்டியுள்ளது.
தமது ஒரே எதிராளி தேசிய மக்கள் சக்தி என்பதால் புதியதொரு சுற்றில் அவதூறாக பேசவும் தொடங்கி உள்ளார்கள். மொட்டு, ஐக்கிய தேசிய கட்சி அதிலிருந்து கழன்றுசென்ற ஐக்கிய மக்கள் சக்தி அல்லது வேறு கும்பல்களும் மேடைகளில் நூறு வார்த்தைகளைப் பேசினால் அதில் தொண்ணூறு வார்த்தைகள் “திசைகாட்டி, தேசிய மக்கள் சக்தி, அநுர திசாநாயக்க” என்பதாகும். தமது கொள்கைகளைக் கூறுவதில்லை. தேசிய மக்கள் சக்தியே இந்த அனைவருக்கும் சவாலாக அமைந்துள்ளதென்பது அதன் மூலமாக மேலும்மேலும் உறுதிசெய்யப்படுகின்றது. அதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். புதிய கூட்டணிகளை அமைத்தாலும், புதிய பெயர்களை சூட்டினாலும் இருக்கின்றவர்கள் பழைய மனிதர்களே. அவர்கள் புதிதாக கூறிவருவது ” இது புதிய பரீட்சித்துப் பார்த்தலுக்கான நேரமல்ல” என்பதாகும். பழையவர்களையே வைத்துக்கொள்ளுமாறே அதன்மூலமாக கூறுகிறார்கள். மகிந்த ராஜபக்ஷவை, ரணில் விக்கிரமசிங்கவை, சஜித் பிரேமதாசவை போதுமான அளவுக்கு பரீட்சித்துப் பார்த்துள்ளார்கள். அவர்கள் பெயிலானவர்கள், நாட்டை நாசமாக்கியவர்கள் என்பதை எவரும் அறிவார்கள். புதிதாக பரீட்சித்துப்பார்க்க ஒன்றுமே கிடையாது. மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியுமென நன்றாகவே தெரிந்திருந்தும் ரணில் விக்கிரமசிங்காக்கள் முன்னெடுத்துவருகின்ற தந்திரோபாயங்கள் பற்றி தோழர் நளிந்த ஜயதிஸ்ஸவும் தோழர் வசந்த சமரசிங்கவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டினார்கள். வரிச்சுமையை ஏற்றி மக்களை வதைத்து பெற்றுக்காண்ட அரசாங்க வருமானத்தைக்கொண்டே ரணில் விக்கிரமசிங்க சனாதிபதியாகி கழிந்த 19 மாதங்களில் 19 தடவைகள் வெளிநாடு சென்றுள்ளார். வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் போகவேண்டிய வைபவங்களுக்கு ரணில் விக்கிரமசிங்க தான் வென்றெடுக்கவேண்டிய கும்பல்கள் புடைசூழ போகிறார். அவர்கள் தொடர்ந்தும் நாட்டை நாசமாக்கி பழைய பாதையிலேயே பயணிக்கிறார்களேயொழிய புதிய பாதையில் பயணிக்க தயாரில்லை என்பதை தற்போதும் உறுதிசெய்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்த திசெம்பர் 15 ஆந் திகதி மொட்டுக் கட்சியின் மாநாடு ஒன்றை நடாத்தி 16 ஆந் திகதியன்றே அமெரிக்காவுக்குச் சென்ற பசில் ராஜபக்ஷ அடுத்த மாதம் 05 ஆந் திகதி இலங்கைக்க வருவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களின் உண்மையான வீட்டுக்குச்சென்று கொந்துராத்து வாங்கிக்கொண்டு இங்கே வருகிறார். பொது வேட்பாளராக அமைவதற்காக கனவுகண்டுகொண்டிருக்கின்ற அனைவரும் அரசாங்கங்களில் இருந்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு உள்ளாக்கிய அழிவுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களாவர். இவர்கள் அனைவரும் பழைய பாதையில் பயணித்தவர்களாவர். அவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாட்டுக்கு அவசியமான ஆழமான மாற்றங்களைச் செய்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இருப்பவர்கள், புதிய அரசியல் கலாசாரமொன்றைக் கொண்ட அர்ப்பணிப்புச் செய்யக்கூடிய ஒரு நோக்கினைக்கொண்ட திசைகாட்டியைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே. அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட அனைத்துவிதமான மக்கள் கருத்தறிதல் மதிப்பாய்வுகளால் நிரூபிக்கப்பட்டு பதற்றமடைந்துள்ளார். நாங்கள் புரிகின்றவற்றை காப்பியடிக்க முனைகிறார்கள். சஜித் பிரேமதாசவின் கட்சி அண்மைக்காலமாக அரசாங்கத்தை விமர்சிப்பதற்குப் பதிலாக தேசிய மக்கள் சக்தியை தாக்கி வருகின்றது. ஏனைய சிறிய கும்பல்களும் அப்படித்தான். பிரபுக்கள் வர்க்கத்தின் கையில் இருந்த அதிகாரம் பொதுமக்களிடம் கைமாறப் போவதை அவர்கள் தெளிவாக உணர்ந்துள்ளார்கள். அதனால் ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பினை மீறி பல்வேறு தருணங்களில் செயலாற்றி உள்ளார். பொலீஸ் மா அதிபரை நியமிக்கையில் சபாநாயகர் நடந்துகொண்டவிதம் அரசியலமைப்பிற்கு முரணானதென்பது வெளிப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும்போது மென்மேலும் சதிவேலைகள், பலவிதமான தந்திரோபாங்களை பாவிப்பதைப்போலவே திருடிய பணத்தைப் பாவித்து எமக்கெதிராக பல்வேறு குறைகூறல்களை மேற்கொள்ளத் தயாராகி வருகிறார்கள். அந்த எவருக்கும் கட்டுப்படாமல் உலகத்தார் முன்னிலையில் எமது நாட்டை கௌரவமான இடத்திற்கு உயர்த்திவைக்க பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்ற புதிய தேசிய மலர்ச்சியை நாட்டில் உருவாக்கிட செயலாற்றுவோமென மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

“எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் தேசிய மக்கள் வெற்றியீட்டச் செய்விக்க அணிதிரள்வீராக”
-தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிபுணத்துவ மருத்துவர் நிஹால் அபேசிங்க-
ஒரே அரசியலுக்காக தோற்றுபவர்கள் பலவிதமான பிரிவினைகளுடன் மக்கள் முன்னிலையில் தோற்றினார்கள். இதுவரை நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச்சென்ற அந்த அனைவரிடமும் இருந்து விடுபட்டு நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய தேசிய மக்களின் சக்தியிடம் அதிகாரத்தைக் கையளிப்பதற்கான தனித்துவமான வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளது. இந்நாட்டின் முற்போக்கான, இடதுசாரி அரசியலில் 50 வருடங்களுக்கு மேலாக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய மக்கள் விடுதலை முன்னணி, தேசிய மக்கள் சக்திக்குள் இயங்கிவருவதோடு தேசிய புத்திஜீவிகள் அமைப்பு போன்ற வெகுசன அமைப்புகள், மாற்றுக் கமியுனிஸ்ட் கட்சிக் குழுக்கள், ஐக்கிய இடதுசாரி சக்தி போன்ற கட்சிகளின் ஊழலற்ற தலைவர்கள் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றிக் குழுமியுள்ளார்கள். பிரபுக்கள் வர்க்கமல்லாத தமக்கே சொந்தமான அரசியல் இயக்கமொன்றை தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு இத்தடவை சனாதிபதி தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்களின்போது மக்களுக்கு கிடைத்துள்ளது. நாட்டில் மோசடிகள், ஊழல்கள், விரயங்கள், குடும்ப ஆட்சி, பலவீனமான முகாமைத்துவத்தைப் பேணிவந்த பின்னணியை மாற்றியமைப்பதற்காக இருப்பது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே.
மக்கள் மிகுந்த துன்பங்களுக்கு இலக்காகியுள்ளபோதிலும் உயர்ந்த மட்டத்திற்கே வந்துள்ள பொருட்களின் விலைகள் அதேவிதத்தில் நிலவுகின்ற வேளையிலேயே பணவீக்கம் குறைவடைந்துள்ளதாக காட்டப்படுகின்றது. மக்கள் அனைவருக்கும் அழுத்தத்தை தாங்கிக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சுகாதாரத்துறை பாரதூரமான பல்வேறு சீரழிவுகளுக்கு இலக்காக்கப்பட்டுள்ளது. ஓளடதத் தட்டுப்பாடு, ஓளடத விலையேற்றம், தரமற்ற மருந்துவகைகள், பரிசோதனைக் கட்டணங்கள் அதிகரித்துள்ளமை, பிரத்தியேக சேவையில் பல்வேறு கட்டணங்கள் அறவிடப்படல் போன்ற பல சிக்கல்கள் நிலவுகின்றன. மருத்துவர்கள் தொட்டு அனைத்து சுகாதார பணியாளர்களும் நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் போசாக்கின்மை, தொற்றுநோய்கள் அதிகரித்தல், தொற்றுநோய்கள் பரவுதல் போன்ற அனைத்தையுமே சுகாதாரத்துறையில் தாங்கிக்கொண்டே மக்கள் வாழ்கிறார்கள். அதைப்போலவே ஏறக்குறைய 3% பிள்ளைகள் பாடசாலை செல்வதை கைவிட்டுள்ளார்கள். பாடசாலைக் கல்வி சீரழிந்துள்ளதைப்போன்றே பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியும் பாரியளவில் சிதைவடைந்து வருகின்றது. இதனால் எதிர்காலத்தில் நாட்டில் உழைப்புப் பங்களிப்பில் பிரவேசிக்கின்ற இளைஞர்கள் துறைசார்ந்த அறிவு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது. குடும்பத்தில் மனஅழுத்தம் அதிகரித்துள்ளது. இவையனைத்தையும் நோக்கினால் பொருளாதாரமானது மீண்டும்மீண்டும் வீழ்ச்சியடைகின்ற வட்டத்திற்குள்ளேயே நிலவுகின்றது. இதன்காரணமாக எதிர்வருகின்ற எந்தவொரு தேர்தலிலும் விவேகமான தீர்மானத்தை மேற்கொண்டு தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விக்க அணிதிரளுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

                    நேற்று (27.02.2024) ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு. மாவை சேனாதிராஜா அவர்களை தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழ உறுப்பினரான தோழர் பிமல் ரத்நாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தனர் தற்போது நாட்டில் தோன்றியுள்ள அரசியல் நிலமைகள், பொருளாதார நெருக்கடி, மற்றும் ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் ஒரு நீண்ட கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றதுடன் சுமுகமான உரையாடாலாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தகக்தாகும். இதன்போது […]
நேற்று (27.02.2024) ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு. மாவை சேனாதிராஜா அவர்களை தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழ உறுப்பினரான தோழர் பிமல் ரத்நாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தனர்
தற்போது நாட்டில் தோன்றியுள்ள அரசியல் நிலமைகள், பொருளாதார நெருக்கடி, மற்றும் ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் ஒரு நீண்ட கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றதுடன் சுமுகமான உரையாடாலாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தகக்தாகும்.
இதன்போது இருசாராருக்குமிடையில் ஒரு நெருக்கமான பரிந்துணர்வு ஏற்பட்டதுடன் எதிர்காலத்திலும் இந்த உரையாடலை தொடர வேண்டுமென இணக்கப்பாட்டுடன் சுமுகமான கலந்துரையாடலாக அமைந்திருந்தமை குறப்பிடத்தக்க விடயமாகும்.

                    புளொட் தலைவர் திரு. சித்தார்த்தன் எம்.பி.யை அவரது இல்லத்தில் வைத்து (14.02.2024) கட்சியின் இரண்டு முக்கிய பிரமுகர்களுடன் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான தோழர் பிமல் ரத்நாயக்க, தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் சந்தித்தனர். தற்போதைய அரசியல் நிலமைகள் குறித்தும், தேர்தல்கள், பொருளாதார நெருக்கடி மற்றும் வடக்கு மற்றும் தெற்கின் மக்கள் இயக்கங்களின் வரலாறு குறித்தும் விவாதித்தனர். இது இரண்டு பிரதிநிதிகளுக்கு இடையே ஒரு சுமுகமான மற்றும் புரிதலுடனான உரையாடலாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புளொட் தலைவர் திரு. சித்தார்த்தன் எம்.பி.யை அவரது இல்லத்தில் வைத்து (14.02.2024) கட்சியின் இரண்டு முக்கிய பிரமுகர்களுடன் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான தோழர் பிமல் ரத்நாயக்க, தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் சந்தித்தனர். தற்போதைய அரசியல் நிலமைகள் குறித்தும், தேர்தல்கள், பொருளாதார நெருக்கடி மற்றும் வடக்கு மற்றும் தெற்கின் மக்கள் இயக்கங்களின் வரலாறு குறித்தும் விவாதித்தனர். இது இரண்டு பிரதிநிதிகளுக்கு இடையே ஒரு சுமுகமான மற்றும் புரிதலுடனான உரையாடலாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
