(தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதிசார் ஒன்றியத்தின் கொழும்பு மாவட்ட மாநாடு-கொழும்பு சினமன் கிறேன்ட் ஹோட்டலில் -2024.02.25) நாங்கள் இரண்டு பிரதான சவால்களை எதிர்நோக்கி இருக்கிறோம். முதலாவது அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது. இரண்டாவது அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் நாட்டைக் கட்டியெழுப்புவது. இது இரண்டு சவால்களாக விளங்கியபோதிலும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கின்ற பாதையிலேதான் நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பாதையும் உள்ளது. கடந்த காலங்களில் எமது நாட்டில் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மற்றுமொரு பாதையும் தெரிவுசெய்யப்பட்டது. பொதுவாக எமது நாட்டின் அதிகாரம் கைமாறியது மற்றவருக்கு […]
(தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதிசார் ஒன்றியத்தின் கொழும்பு மாவட்ட மாநாடு-கொழும்பு சினமன் கிறேன்ட் ஹோட்டலில் -2024.02.25)
நாங்கள் இரண்டு பிரதான சவால்களை எதிர்நோக்கி இருக்கிறோம். முதலாவது அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது. இரண்டாவது அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் நாட்டைக் கட்டியெழுப்புவது. இது இரண்டு சவால்களாக விளங்கியபோதிலும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கின்ற பாதையிலேதான் நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பாதையும் உள்ளது. கடந்த காலங்களில் எமது நாட்டில் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மற்றுமொரு பாதையும் தெரிவுசெய்யப்பட்டது. பொதுவாக எமது நாட்டின் அதிகாரம் கைமாறியது மற்றவருக்கு எதிராகவே. 2005 அரசாங்கம் வடக்கின் தமிழ் மக்களுக்கு எதிராகவே கட்டியெழுப்பப்பட்டது. 2010 இன் யுத்த வெற்றி மற்றவருக்கு எதிராகவும் 2019 முஸ்லீம் மக்களுக்கு எதிராகவும் கட்டியெழுப்பப்பட்டது. எனினும் அது வெற்றிகரமான பாதையல்ல. மக்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்துகின்ற பாதையில் இந்த நாட்டை மாற்றியமைத்திட வேண்டும்.
நாங்கள் மக்களை ஒழுங்கமைக்கையில் சவால்களை எதிர்நோக்குகின்ற இரண்டு இடங்கள் இருக்கின்றன. ஒன்றுதான் கிராமியரீதியாக அடிமட்டத்தில் வசிக்கின்ற கிராமிய மக்கள். ஏனையோரது கூட்டங்களில் அப்படிப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம் ஓரளவு அதிகமென்பது புலனாகின்றது. அவர்களை நிர்க்கதிநிலைக்கு உள்ளாக்கி, பொருளாதாரீதியாக வீழ்ச்சியடையச் செய்வித்து, அவர்களின் பிள்ளைகளுக்கு புத்தகங்கள் அல்லது சுப்பர் மார்கெற்றில் இருந்து பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான கூப்பன் அட்டையைக் கொடுக்க வாக்குறுதியளித்து இந்த அழைப்பினை விடுக்கிறார்கள். இந்த அடிமட்டத்திலேயே இருக்கின்ற மக்களை இந்த பணிக்காக எவ்வாறு ஈடுபடுத்துவது எனும் சவால் எம்மெதிரில் இருக்கின்றது. சமூகத்தில் ஒருவிதமான உயர்ந்த அடுக்கில் இருப்பவர்கள் எம்முடன் நெருக்கமாக இல்லை. அவர்களால் எமது கதைகளை உணரமுடியாது. அதனால் அவர்கள் நூறு தடவைகளுக்கு மேல் பதிலளித்துள்ள கேள்விகள் மீண்டும் அவர்களின் கேள்விகளாக மாறியுள்ளன. எம்முடன் முட்டிமோதாத கவனத்திற்கு இலக்காகாத குழுவொன்று இருக்கின்றது. இந்த குழுவினர் மத்தியில் எமது அபிப்பிராயத்தைக் கொண்டுசெல்வது எவ்வாறு என்பது தொடர்பில் எமது கவனஞ் செலுத்தப்பட வேண்டியுள்ளது. அது எமது இரண்டாவது சவாலாகும். அந்த குழுவினர்மீது எமது கவனத்தைச் செலுத்த நான் முயற்சி செய்கிறேன்.
நாங்கள் பொருளாதாரத்துறை, சட்டத்தின் ஆட்சி, வினைத்திறனற்ற அரச ஆளுகை, குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றமை என்றவகையில் அரசின் அனைத்து முறைமைகளும் சீரழிந்துள்ள ஒரு தேசமாகும். எம்முடன் நெருக்கமான துறைகளை நாங்கள் அதிகமாக உணர்கிறோம். எமக்கு ஒட்டுமொத்த முறைமையினதும் மாற்றமொன்று தேவை. கடந்த நூற்றாண்டு உலகிற்கு பாரிய வெற்றிகளைப் பெற்றுத்தந்த நூற்றாண்டாகும். உலகின் பெரும்பாலான நாடுகள் நிகழ்கால அபிவிருத்தி மட்டத்தை அடைவதற்கான அத்திவாரத்தை இருபதாம் நூற்றாண்டிலேயே அமைத்துக்கொண்டன. நாங்கள் இருபதாம் நூற்றாண்டினை கைவிட்ட மனிதர்களாவோம். நாங்கள் ஏறக்குறைய 450 வருடங்களாக ஏதேனுமோர் ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டிருந்த நாடாவோம். 133 வருடங்கள் முழுமையாகவே வெள்ளைக்கார ஏகாதிபத்தியவாதிகளுக்கு கட்டுப்பட்டிருந்து 1948 இல் சுதந்திரம் அடைகிறோம். பல்வேறு மொழிகள், சாதிப் பிரிவினைகள், கிராமிய வறுமைநிலை பலவிதமாக பரந்துகாணப்பட்ட இந்தியா 1947 இல் சுதந்திரம் அடைகையில் நேரு, காந்தி, பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் இந்திய தேசியக் கொடியின்கீழ் அனைத்து மக்களையும் ஒருங்கிணைப்பதில் வெற்றிபெற்றார்கள். சுதந்திரம் பெறும்போது நிலவிய கருத்தியல் இன்று சந்திரனுக்குச் செல்கின்ற இந்தியாவை உருவாக்கி இருக்கின்றது. இந்த கருத்தியல்தான் அப்துல் கலாம் போன்ற ஒருவரை சனாதிபதியாக்கியது. சீக்கியர் ஒருவரை பிரதமராக்கியது. தாழ்ந்த குலத்தை சேர்ந்தவரெனக் கருதப்பட்ட ஒரு பெண்ணை சனாதிபதியாக்கியது. அந்த நோக்குதான் இன்று பிரமாண்டமான அபிவிருத்திப் பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது. வியட்நாம், சீனா, தென் கொரியா போன்ற நாடுகளுக்கு அந்த நோக்கு இருந்தது.
133 வருடங்களாக வெள்ளைக்கார ஏகாதிபத்தியவாதிகளுக்கு அடிமைப்பட்டிருந்த எமக்கு 1948 இல் சுதந்திரம் கிடைத்தவேளையில் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான மாபெரும் புத்துணர்ச்சியைக் கட்டியெழுப்பவேண்டி இருந்தது. இன்று நாங்கள் சுதந்திரத்தைக் கொண்டாடுகையில் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டே தேசிய கொடியை ஏற்றிவைக்க வேண்டியுள்ளது. நாம் பெற்றுக்கொள்கின்ற சுதந்திரமானது மக்களின் ஆன்மீகத்தை தட்டியெழுப்புகின்ற, நாட்டுக்கு தேசத்திற்குப் புதிய விழித்தெழலை ஏற்படுத்துதல்வரை கொண்டுசெல்கின்ற பயணமென்பதை எவருக்கும் உணர்த்தப்படவில்லை. நாங்கள் சுதந்திரம் அடைகையில் எமது நாட்டை இட்டுச்செல்லவேண்டிய திசைபற்றிய பொருளாதார நோக்கு, திட்டம் எமக்கு இருக்கவில்லை. எமது கொள்கை பிறரை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதாகும். இந்தியாவின் பயணப்பாதை ஒன்றுசேர்க்கின்ற வரலாற்றினைக் கட்டியெழுப்புகையில் எம்மவர்கள் அடிபட்டுக் கொண்டார்கள்.
எமது நாட்டின் திசை பற்றி வெளியில் தனிவேறான உரையாடலொன்று நிலவியது. அதில் பலம்பொருந்தியவராக விளங்கியவர் பொறியியலாளர் திரு. விமல சுரேந்திர. ஆங்கிலேய பொறியிலாளர்களின் ஆதிகத்திற்கு எதிராக திரு. விமல சுரேந்திர ” இலங்கை மின்னியல்மயப்படுத்தலை நோக்கிச் செல்லவேண்டும்” எனக் கூறுகிறார். அவர் 1919 இல் லக்ஷபான மின்நிலையத்தை முன்மொழிகிறார். ” லக்ஷபான மின்நிலையத்திலிருந்து பிறப்பிக்கப்படுகின்ற மிகையான மின்சாரத்தைக்கொண்டு மின்சார ரயில் இயக்கப்பட வேண்டும்” என அவர் கூறுகிறார். 2030 அளவில் தமது புகையிரதங்கள் அனைத்தும் மின்சாரத்தில் இயங்குபவையாக மாற்றப்படவேண்டுமென இந்தியா ஒரு தேசிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது. நாங்கள் என்ன செய்கிறோம். இந்தியா ஒதுக்குகின்ற ரயில் பெட்டிகளை இங்கே கொண்டுவருகிறோம். பேராசிரியர் சேனக்க பிபிலே எமது ஓளடதக் கொள்கை எவ்வாறானதாக அமையவேண்டுமென கொள்கையொன்றை முன்வைத்தார். அவுஸ்திரேலிய விஞ்ஞானியொருவர் ” இலங்கை என்பது சமவெளயில் அமைந்துள்ள ஒரு மலையுச்சியாகும். அந்த மலையுச்சியில் ஒளிர்கின்ற தீபம் சேனக்க பிபிலே ஆவார்” என்று கூறினார். பெரும்பாலான நாடுகளில் ஓளடதக் கொள்கை பற்றிய அளவுகோல்களுக்கு வழிகாட்டியவர் சேனக்க பிபிலே ஆவார். அவரை இழுத்து வெளியில் போட்டார்கள். மார்ட்டின் விக்கிரமசிங்க, சரத்சந்திராக்களின் உரையாடலொன்று வெளியில் நிலவியது. அவையனைத்தையும் கீழடக்கிய அரசியல் அதிகாரம் கட்டியெழுப்பப்பட்டது. அரசியல் அதிகாரசபை உலகில் இடம்பெறுகின்ற புதிய மாற்றங்கள் பற்றி சிந்திக்கவில்லை. அவர்கள் வரலாற்றில் நிலவிய மகிமையை திரும்பத்திரும்ப உச்சரித்துக்கொண்டு எம்மை அதற்குள்ளே சிறைப்படுத்தி அதன்மீது அவர்களின் அரசியல் கருத்திட்டதை விரித்தார்கள்.
இந்த ஆட்சியாளர்கள் எமது கருத்தியலை வரலாற்று மோகத்தில் சிறைப்படுத்தி வைத்தார்கள். முற்காலத்தில் நிலவிய தொழில்நுட்பம், கட்டிடக்கலை, சமூக அமைப்புகள் பற்றி நாங்கள் ஆய்வுசெய்ய வேண்டும். எதிர்காலப் பயணத்திற்கு அவற்றை ஆதாரமாகக்கொள்ள வேண்டும். இறந்தகால கருத்தியலுக்குள் சிறைப்பட்டுள்ள எமது அரசியல்வாதியின் பிரதான உடையாக “கபடமான சூற்” அமைந்துள்ளது. அது முற்கால கருத்தியல்மீது விரிக்கப்பட்டுள்ள கருத்திட்டத்தின் ஒரு கட்டமாகும். இந்த கருத்திட்டத்திற்குள் எமது நாடு இறுகிப்போனது. அதனாலேயே உலகில் இடம்பெற்ற பாரிய மாற்றங்களை உறிஞ்சிக்கொள்ளக்கூடிய நாடாக, தேசமாக எமது நாடு மாறவில்லை. இந்தியா கலாசாரத்தை பலப்படுத்திக் கொள்வதைப்போன்றே உலகிற்கு மாபெரும் பொருளாதாரத்தை நிர்மாணித்து வருகின்றது. அதன் காரணமாகவே ஐ.ரீ. தொழில்நுட்பத்தில் மிகவும் பலம்பொருந்திய நாடாக இந்தியா மாறியுள்ளது. மோட்டார் வாகன உற்பத்தி, விதைதயினங்களின் உற்பத்தி, ஓளடதங்கள் உற்பத்தி, பால் உற்பத்தி ஆகிய உற்பத்திகளில் முன்னணியில் நிற்கின்ற நாடாக இந்தியா மாறியுள்ளது. அதன் காரணமாகவே சந்திரனுக்குச் செல்கின்ற தேசமாக உலகில் பிரவேசித்துள்ளது. மரபுவழியான, ஆண்டான் அடிமை, பழங்குடி மரபு நிறைந்த கும்பலொன்றின் கைகளில் எமது நாடு சிக்கியது.
மனிதத் தேவைகள் என்பது ஐம்புலன்களை திருப்திப்படுத்துவதாகும். இந்த தேவைகளை நிவர்த்திசெய்கின்ற பாணி முற்காலத்தில் இருந்ததைப் பார்க்கிலும் வித்தியாசமானது. இந்த பாணிதான் புதிய சந்தையை உருவாக்குகின்றது. உதாரணமாக மேனிவனப்பக் கலையை எடுத்துக்கொள்வோம். முற்காலத்தில் உடல் வனப்பிற்காக மஞ்சள், வெள்ளைச் சந்தனம், சிவப்புச் சந்தனம் என்பவை மார்க்கெற்றில் இருந்தன. தற்போது மேனிவனப்பு மார்க்கெற் கொஸ்மெட்டிக் கைத்தொழிலாக மாறிவிட்டது. அந்த சந்தைக்கு அவசியமான பண்டங்களை உற்பத்தி செய்வதில் ஆட்சியாளன் வெற்றியடையவேண்டும். இன்று உலகின் கொஸ்மெட்டிக் கைத்தொழிலில் உயர்வான இடத்தை வகிப்பது தென்கொரியாவாகும். ஸ்மார்ற் போன் உற்பத்தியிலும் முன்னணி வகிப்பது தென் கொரியாவாகும்.
நாங்கள் ஏன் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மக்களை அழைக்கிறோம்? தற்போது பயணித்துக் கொண்டிருக்கின்ற திசைக்குப் பதிலாக புதிய திசையை நோக்கி பெறுமதிமிக்க கருத்தியலை நோக்கி எமது நாட்டை வழிப்படுத்தவேண்டும். அதுவே நவீன உலகத்துடனான எமது உறவுகளை கட்டியெழுப்பும். இது ஒரு தேசிய இயக்கமாகும். இந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஒரு தேசிய புத்துணர்ச்சி அவசியமாகும். எதிர்வரும் தேர்தலில் 76 வருடங்களாக ஆட்சிசெய்த ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதே மக்கள் மத்தியில் பாரிய மலர்ச்சியை, எழுச்சியை, எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துமென நாங்கள் நம்புகிறோம். வெளிநாடுகளிலுள்ள எமது ஆராய்ச்சியாளர்கள், ஆதன உரிமையாளர்கள், கல்வியாற்றல்களும் அனுபவமும் வாய்ந்த இலங்கையர்கள் திரும்பிவரத் தயாராக இருக்கிறார்கள். அந்த நம்பிக்கை எம்மிடம் இருக்கின்றது. மக்களைத் தட்டியெழுப்புவதே இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான அத்திவாரமாகும். பொருளாதாரப் பக்கத்தில் மாத்திரமன்றி நாங்கள் பொறுப்புவாய்ந்த பிரஜைகளைக்கொண்ட சமூகமொன்றை உருவாக்க வேண்டும். அரசியல்வாதி பொறுப்புக்கூறலுக்கு கட்டுப்படல் வேண்டும். எமக்கு ஒரு புதிய நாகரிகம் அவசியமாகும். அரசியலில், பொருளாதாரத்தில், சமூகத்தில் ஒரு புதிய மாற்றத்தையே நாங்கள் முன்மொழிகின்றோம். ஒட்டுமொத்த முறைமையினதும் மாற்றமாகும். அதன்போது அரசியல்வாதிக்கும் ஒரு பங்கு இருக்கின்றது. நாங்கள் அரசியல்வாதியின் பங்கினை யதார்த்தத்தில் நிரூபித்துக் காட்டுகின்றவர்கள் என்பதை உங்களிடம் உறுதியாகக் கூறுகிறோம்.
நிறுவனங்களை வகைப்படுத்தும்போது மக்களுக்கு சேவைகளை வழங்குகின்ற நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குகையில் குறைவான முக்கியத்துவம் வகிக்கின்ற நிறுவனங்கள் என்றவகையிலேயே வகைப்படுத்தப்பட வேண்டும். ஒருசில அவசியப்பாடுகள் அரசாங்கத்தினால் கட்டாயமாக நிறைவுசெய்யப்படல் வேண்டும். பொருளாதாரத்தில் முன்நோக்கிய பாய்ச்சலை எடுக்கக்கூடிய ஐ.ரீ. கைத்தொழில் பற்றிய திட்டமொன்றை நாங்கள் வகுத்துள்ளோம். ரெலிகொம்தான் ஐ.ரீ. கைத்தொழிலுக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கிவருகின்றது. ரெலிகொம்மை வளர்த்தெடுக்காவிட்டால் ஐ.ரீ. தொழில்நுட்பத்திற்கு முன்நோக்கி நகரமுடியாது. அதனை எமது வருங்கால அபிவிருத்தியுடன் தொடர்புபடுத்தியே ரெலிகொம் நிறுவனத்தை நோக்கவேண்டும். ரெலிகொம் நிறுவனம் அரசாங்கத்திற்குச் சொந்தமானதாக இருக்கவேண்டும். அம்பாந்தோட்டை துறைமுகத்தை கொள்வனவுசெய்து ஏழு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. 1.1 பில்லியன் டொலரைச் செலுத்தியே கொள்வனவு செய்தார்கள். எனினும் ஒரு கப்பல்கூட வருவதற்கான கருத்திட்டத்தை வகுக்கவில்லை. துறைமுகத்துடன் கட்டியெழுப்பப்படுகின்ற பொருளாதாரம் எங்கே?
1977 இற்கு முன்னர் நாங்கள் பாலுக்கான எமது தேவையில் 50% ஐ உற்பத்தி செய்தோம். தற்போது உற்பத்தி செய்யப்படுவது 35% ஆகும். ஒரு வருடத்திற்காக பால் மா இறக்குமதி செய்வதற்காக 225 மில்லியன் டொலர் செலவாகின்றது. பாலில் தன்னிறைவு காண்பதற்காக அவசியமான சுற்றாடல் நிலைமைகளும் இருக்கின்றன. கிராமிய வறுமைநிலையை ஒழித்துக்கட்டுவதுடன் இணைந்து பாலில் தன்னிறைவு காண முடியும். பிரதானமான ஐந்து அரிசியாலை உரிமையாளர்களே எமது அரிசி விலையைத் தீர்மானிக்கிறார்கள். இந்த தனியுரிமையை தகர்த்திட வேண்டும். டயில்களில் தனியுரிமையொன்று தோன்றிவருவதை நாங்கள் கண்டோம். டயில் இறக்குமதி செய்கையில் எமது நாட்டில் மூன்று டயில் கம்பெனிகளே இருந்தன. டயில் தடை செய்யப்பட்டது. தனியுரிமை உருவாகியது. அரச மற்றும் தனியார் சந்தையை ஒழுங்குறுத்துவது எவ்வாறு என்பது பற்றிய தெளிவான நோக்குடன் செயலாற்றுவோம்.
இந்த பொருளாதர நெருக்கடிக்குள் இருப்பது பொது திறைசேரியிடம் ரூபா இல்லாமை, நாட்டுக்கு டொலர் இல்லாமையாகும். மக்களின் நெருக்கடியை மூன்று விடயங்களாக எடுத்துக்காட்டலாம். தாங்கிக்கொள்ள முடியாத வரிச்சுமை, எண்ணெய் – மின்சாரத்தை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளின் மிகையான விலை, புதிதாக உருவாகி வருகின்ற இளைய தலைமுறையினருக்கு தொழில்கள் இல்லாமை என்பவையாகும். அப்படியானால் எமது பொருளாதார திட்டம் எவ்வாறு வகுக்கப்படல் வேண்டும்? திறைசேரியின் வருமானத்தை எவ்வாறு அதிகரித்துக்கொள்வது? நான்கு பிரதான வருமானத் தோற்றுவாய்கள் இருக்கின்றன. உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம் அவையாகும். இந்த நிறுவனங்களை முகாமைசெய்து வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியுமென்ற நம்பிக்கை எம்மிடம் நிலவுகின்றது. டொலர் ஈட்டிக்கொள்வதற்காக வெளிநாட்டுப் பணமனுப்பல்களை பெற்றுக்கொள்வதற்காக பாடுபடுதலும் சுற்றுலாக் கைத்தொழிலை முன்னேற்றுதலும், நீண்டகால ரீதியாக உலகச்சந்தையின் பங்கினை கையகப்படுத்திக்கொள்ளல், இறக்குமதிசெய்கின்ற ஒருசில பண்டங்களை எமது நாட்டுக்குள் உற்பத்தி செய்தல் போன்ற துறைகளில் இருந்து எம்மால் டொலர்களை சேமித்துக்கொள்ள முடியும்.
எமது நாட்டின் வரி விதித்தலால் எமது பொருளாதாரம் சிறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பொருளாதாரம் விரிவடைவதில்லை. தளர்வான ஒரு வரிக்கொள்கையே எமக்குத் தேவை. எமது மத்திய வங்கி ஆளுனர் பொருளாதாரத்தை சுருக்கி வைத்துள்ளார். வட்டி வீதத்தை அதிகரித்தல், பாரியளவில் வரி விதித்தல், இறக்குமதியைக் கட்டுப்படுத்துதல் முதலியவற்றைச் செய்தார். எட்டு எனும் எதிர்க்கணியப் பெறுமதியால் பொருளாதாரத்தைச் சுருக்கினார். எமது திட்டம் பொருளாதாரத்தை விரிவாக்குவதாகும். பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும். எம்மிடம் இருப்பது கொழும்பினை மையப்படுத்திய பொருளாதாரமாகும். நாங்கள் அதனை கிராமிய மக்களுக்கு விரிவுபடுத்த வேண்டும். புதிய பொருளாதார தோற்றுவாய்களை கிராமத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும். அதற்கான வரிக் கொள்கையொன்று அவசியமாகும். பிரஜைகள்மீது சுமத்தப்பட்டுள்ள உழைக்கும்போதே செலுத்துகின்ற வரி பொருளாதாரத்தை சுருக்குகின்ற உபாயமார்க்கமாகும். பண்ட உற்பத்திகளை அதிகரித்து பணவீக்கத்தைக் குறைத்திட வேண்டும். உற்பத்தியை வீழ்ச்சியடைச் செய்விப்பதன் மூலமாகவும் உற்பத்தியை வீழ்ச்சியடையச் செய்விப்பதைப் பார்க்கிலும் அதிகமான வேகத்தில் கொள்வனவு செய்வதற்கான ஆற்றலை வீழ்ச்சியடையச் செய்விப்பதன் மூலமாகவும் பணவீக்கத்தைக் குறைத்துக்கொள்ள முடியும். பண்டங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஆற்றல் பலவீனமடைந்தால் பண்டங்களைக் கொள்வனவு செய்வதற்கான அழுத்தம் குறைவடையும். அதன்போது பணவீக்கம் குறைவடையும். மனிதர்களை பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபடுத்தியே பொருளாதாரத்தை மேலோங்கச் செய்விக்கவேண்டும். பொருளாதாரத்தை சுழற்றவேண்டும். அதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வரிக்கொள்கையில் மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டும். விலங்கிடப்பட்டுள்ள பொருளாதாரத்தை சுதந்திரமான அசைவிற்கு, பொருளாதார மாற்றநிலைக்கு கொண்டுவர வேண்டும்.
(தேசிய மக்கள் சக்தியின் முப்படைக் கூட்டமைவு “அதிட்டன” கண்டி மாவட்ட மாநாடு – 2024.02.24) பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தொழில்முனைவோர், சட்டத்தரணிகள் என்ற வகையில் செயலாற்றி வருவதோடு இங்கே இருப்பவர்கள் பாரிய யுத்தம் நிலவுகையில் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் தனித்துவமான தொழிலொன்றைத் தெரிவுசெய்த குழுவினவாவர். அதனால் நீங்கள் தனித்துவமான மனிதக் குழுமத்தைச் சேர்ந்தவர்கள். நீங்கள் உங்களின் தொழில்சார் செயற்பொறுப்பினை முறைப்படி ஈடேற்றினாலும் தற்போது எஞ்சியிருப்பதோ சீரழிந்த தேசமாகும். அதனால் எம்மெதிரில் இருப்பது கிரிஎல்லவிற்குப் பதிலாக கிரிஎல்லவின் மகளைக் கொண்டுவருவது போன்ற […]
(தேசிய மக்கள் சக்தியின் முப்படைக் கூட்டமைவு “அதிட்டன” கண்டி மாவட்ட மாநாடு – 2024.02.24)
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தொழில்முனைவோர், சட்டத்தரணிகள் என்ற வகையில் செயலாற்றி வருவதோடு இங்கே இருப்பவர்கள் பாரிய யுத்தம் நிலவுகையில் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் தனித்துவமான தொழிலொன்றைத் தெரிவுசெய்த குழுவினவாவர். அதனால் நீங்கள் தனித்துவமான மனிதக் குழுமத்தைச் சேர்ந்தவர்கள். நீங்கள் உங்களின் தொழில்சார் செயற்பொறுப்பினை முறைப்படி ஈடேற்றினாலும் தற்போது எஞ்சியிருப்பதோ சீரழிந்த தேசமாகும். அதனால் எம்மெதிரில் இருப்பது கிரிஎல்லவிற்குப் பதிலாக கிரிஎல்லவின் மகளைக் கொண்டுவருவது போன்ற வேலையல்ல. ராஜபக்ஷவிற்குப் பதிலாக ராஜபக்ஷவின் தம்பியொருவரை அல்லது புதல்வனொருவனைக் கொண்டுவருவது போன்ற வேலையல்ல. இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக நல்லெண்ணத்துடன் இடையீடுசெய்கின்ற மனிதக் குழுமமொன்றின் செயற்பாடொன்று அவசியமாகி இருக்கின்றது. ஒரு நாடு என்றவகையில் நாங்கள் பல இடங்களில் தவறிழைத்துள்ளோம். இந்தியா சுதந்திரம் பெறும்போது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அந்த தேசிய இயக்கத்திற்கான முன்னேற்றகரமான ஒரு நோக்கு இருந்தது. மதங்களென்றவகையில் சமயங்களென்றவகையில் பிளவுபட்ட மக்களுடன் ஒரே இந்தியக் கொடியின்கீழ் கொண்டுவருவதற்கான பாரிய நோக்கு இருந்தது. அந்த நோக்கிற்கிணங்க கட்டியெழுப்பப்பட்ட இந்திய தேசம் சந்திரன்மீது விண்கலமொன்றை தரையிறக்கும்போது எமது நாடு எந்த இடத்தில் இருக்கின்றது? அவர்கள் பாரிய இலக்கியகலைகள், கலாசார எழுச்சியை கட்டியெழுப்பி உள்ளார்கள். சீனாவை எடுத்துக்கொண்டாலும் அப்படித்தான். விளையாட்டுச் சாமான்களின் தயாரிப்பில் இருந்து பாரிய தொழில்நுட்ப சாதனங்களை உற்பத்திசெய்து உலக சந்தையில் பாரிய பலத்தைக் கையகப்படுத்திக் கொண்டது. பிரான்ஸ் தேசத்திற்கு கட்டுப்பட்டிருந்த, அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு இலக்காகிய வியட்நாம் அண்மைக்காலமாக ஆசியாவில் வேகமாக வளர்ந்து வருகின்ற நாடாக மாறியுள்ளது. எனினும் எமது நாடு இருப்பது உலகின் முன்னிலையில் வங்குரோத்துநிலைக்கு உள்ளாக்கப்பட்ட வெட்கித்தலைகுனிகின்ற நாடாகவே விளங்குகின்றது. இருபதாம் நூற்றாண்டில் தொழில்நுட்பத்தில், கல்வியில் பாரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டாலும் எமது நாட்டுக்கு என்ன நேர்ந்துள்ளது?
இந்தியாவைப்போல் தேசத்தை ஒரு கொடியின்கீழ் கொண்டு வருகின்ற வெள்ளைக்காரனுக்குப் பின்னர் சுதந்திரம் கிடைத்துவிட்டது எனும் பாரிய உணர்வு மக்களிடம் இருந்திருக்கக்கூடும். ஆனால் இந்தியாவைக் கொண்டு செல்கின்ற திசை பற்றி நேருவிற்கும், சீனாவைக் கொண்டுசெல்கின்ற திசை பற்றி மாவோசேதுங்கிற்கும், வியட்நாமைக் கொண்டுசெல்கின்ற திசைபற்றி ஹோசிமிங்கிற்கும், ஐக்கிய அமெரிக்காவைக் கொண்டுசெல்கின்ற திசை பற்றி லிங்கனுக்கும் இருந்த பாரிய நோக்கு எமது ஆட்சியாளர்களிடம் இருக்கவில்லை. ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டில் சுதந்திரம் கிடைத்ததும் உடனடியாக பெருந்தோட்டத் தமிழ் மக்களுக்கு இருந்த பிரஜா உரிமையை இல்லாதொழித்தார்கள். வடக்கில் செல்வநாயகம் இடையீடுசெய்து இந்த பிரஜா உரிமைச் சட்டத்தை அமுலாக்கிய பின்னரே தமிழ் அரசுக் கட்சியை நிறுவினார். எமது தலைவர்களுக்கு மக்களைப் பிரிக்கின்ற நோக்கேயன்றி ஒரு கொடியின்கீழ் ஒருங்கிணைப்பதற்கான நோக்கு இருக்கவில்லை. 1956 இல் மொழிப் பிரச்சினையொன்றை பற்றவைத்தார்கள். 1958 சிங்கள – தமிழ் கலவரமொன்றை பற்றவைத்தார்கள். 1965 அளவில் “டட்லியின் வயிற்றில் மசாலை வடை” என ஊர்வலமாகச் செல்லத் தொடங்கினார்கள். ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தாறாகும்வேளையில் வடக்கில் பிரிவினைவாத இயக்கமொன்று உருவாகத் தொடங்கியது. 1981 இல் யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. 1983 இல் நாடு பூராவிலும் இனவாத முரண்பாட்டினைத் தொடங்கிவைத்து பாரிய யுத்தம்வரை இட்டுச்சென்றார்கள். 2009 இல் அந்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எனினும் 2015 அளவில் மலட்டுக்கொத்து, மலட்டு உடைகளில் ஆரம்பித்து 2019 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அந்த காலத்திலும் பல்வேறு பலம்பொருந்திய அமைப்புகள் எமது நாட்டைக் கொண்டுசெல்லவேண்டிய திசைபற்றி இலக்கியம், கலைகள், கலாசாரம் கொண்டுசெல்லப்படவேண்டிய திசை பற்றிய ஆழமான உரையாடல்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. நாட்டின் எதிர்காலம் தங்கியிருக்கின்ற, நாட்டை மின்னியல்மயப்படுத்துதல் பற்றி 1919 இல் திரு. விமலசுரேந்திர ஒரு நோக்குடன் விடயங்களை முன்வைத்தார். 1918 இல் ஊடகவியலாளரொருவர் லெனினிடம் “சோஷலிஸத்தை நிறைவுசெய்வது எப்போது” எனக் கேட்கிறார். ”சோவியத்தேசத்தை மின்னியல்மயப்படுத்தி நிறைவுசெய்கின்ற நாளிலேயே” என லெனின் பதிலளிக்கிறார். திரு. விமலசுரேந்திர 1919 இல் லக்ஷபான மின்நிலையம் தொடர்பாக சமர்ப்பித்த பத்திரத்தில் அந்த மேலதிகமான மின்சாரத்தை மின்சார ரயில் ஓட்டுவதற்காக பயன்படுத்த வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார். எமது எதிர்காலம் பயணிக்கவேண்டிய திசைபற்றிய கருத்து அவரிடம் இருந்தது. விமலசுரேந்திரவிற்கு, மார்டின் விக்கிரமசிங்கவிற்கு, சரத்சந்திரவிற்கு, எமது நாட்டை இட்டுச்செல்லவேண்டிய திசை பற்றிய நோக்கு இருந்தது. சேனக்க பிபிலேவிற்கு எமது நாட்டை இட்டுச்செல்லவேண்டிய திசை பற்றிய நோக்கு இருந்தது. ஓளடதக் கூட்டுத்தாபனத்தின் தலைவரான சேனக்க பிபிலேவின் நோக்கின்படி அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தமது தேசிய ஓளடதக் கொள்கையை அமைத்துக்கொண்டன. எனினும் எமது நாட்டில் சேனக்க பிபிலேவை ஓளடதக் கூட்டுத்தாபனத்தில் இருந்து வெளியே போட்டார்கள். வெளியில் உருவாகிக்கொண்டிருந்த புதிய சிந்தனை ஓட்டத்தை ஒருபுறம் ஒதுக்கிவைத்த ஆட்சியாளர்கள் கடந்தகாலப் பெருமைபற்றி பிரலாபித்துக் கொண்டிருந்தார்கள்.
எமது ஒட்டுமொத்த சமூகமும் சிந்தனையும் கடந்தகாலமோகத்தின் சிறைக்குள் சிறைப்படுத்தப்பட்டது. ஆட்சியாளர்கள் நாட்டின் அபிவிருத்தி அளவுகோல்களை வரலாற்றின்பேரில் அளவிடத் தொடங்கினார்கள். எனினும் உலகமானது பாரிய பாய்ச்சலுடன் முன்நோக்கி நகர்ந்தது. எமது நாட்டை பராக்கிரமபாகு யுகத்திற்கு கொண்டுசெல்வதாக 2005 இல் ரணில் விக்கிரமசிங்க கூறினார். உலகம் பலநூற்றாண்டுகளாக முன்நோக்கிப் பயணிக்கையில் எமது நாட்டுத் தலைவர்கள் வரலாற்று மகிமைபற்றி பிரலாபித்துக் கொண்டிருந்தார்கள்.
கொரியா கொஸ்மெடிக் கைத்தொழில் மூலமாக பொழுதுபோக்கினை வழங்குவதன் மூலமாக உலகத்திற்கு திறந்துவிடப்பட்டது. பீட்டில்ஸ் இசைக்குழுவின் ஒருசில பாடல்களை ஆயிரத்துஎண்ணூறு மில்லியன் பேர் கண்டுகளித்திருக்கிறார்கள். நாட்டில் இருப்பவர்கள் ஐம்பது மில்லியன் மக்களே. முன்னர் எமது குடிசைக் கவிதைகள், வண்டிப் பாடல்கள் எல்லைக்கு அப்பால்சென்று பாரிய வணிக எல்லைகளை அடைவதில் வெற்றிபெறவில்லை. அவர்கள் உலகத்திற்காக இசையை உருவாக்குகையில் எம்மை வரலாற்று மோகத்தில் சிறைப்படுத்தி 20 வது நூற்றாண்டினை மிஸ்பண்ணிய ஆட்சியாளர்கள் முழு நாட்டையுமே சிறைப்படுத்தினார்கள். அதனாலேயே எமது நாட்டுக்கு புதிய மறுமலர்ச்சி யுகமொன்று அவசியமாகின்றது. அதனால் கிரிஎல்லவிற்குப் பதிலாக மகள், பிரேமதாசவிற்கப் பதிலாக மகன், ராஜபக்ஷவிற்குப் பதிலாக ராஜபக்ஷ மகன் அல்லது தம்பியைக் கொண்டுவந்து அதனை மாற்றியமைத்திட முடியாது. அவர்கள் ஏறுவது மாட்டு வண்டியிலேயே. நாங்கள் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் மின்சார ரயிலில் எற்றுகின்ற யுகமொன்றை உருவாக்கிடுவோம். ஜப்பானின் பொருளாதாரத்தை இலக்காகக்கொண்ட அபிவிருத்தியின்போது மனித உறவுகள் சிதைக்கப்பட்டுள்ளன. விவாகம் செய்துகொள்கின்ற சதவீதம் வீழ்சியடைந்து தற்கொலை புரிந்துகொள்கின்ற சதவீதம் அதிகரித்து வருகின்றது. பொருளாதாரம் பாய்ச்சலுடன் முன்னேறி வந்தாலும் சமூக உறவுகளை சிதைத்தால் பலனில்லை. எமக்கு அவசியமாவது பண்டைய நுகத்தடியிலிருந்து பொருளாதார பயணப்பாதையில் இருந்து விடுபட்டு புதிய திசையை நோக்கி சமூகத்தை மாற்றிக்கொள்வதே எமது தேவைப்பாடாகும்.
அமைச்சரவைக்கு யாரை நியமிப்பீர்கள் என ஒருசிலர் எம்மிடம் கேட்கிறார்கள். நியமிக்கப்படுகின்ற அமைச்சருக்கு அனைத்தையும் முடிச்சுப்போட்டுக்கொண்டு செல்வதே பண்டைய யுகத்தில் இருந்தது. எனினும் அமைச்சரொருவரை அரசியலமைப்பின்படி நியமித்தாலும் கூட்டாக ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்ற விவசாயத்துடன் தொடர்புடைய அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய சபையைக்கொண்ட கூட்டான தீர்மானத்தை மேற்கொள்கின்ற அலகு ஒன்றை நியமிப்பதே எமது தேவையாகும். பாதுகாப்பும் அவ்வாறானதே. நாங்கள் தேசிய பாதுகாப்பு பற்றிய எக்ஸ்பர்ற்ஸ் அல்ல. ஆனால் அது பற்றிய சிறப்பறிஞர்கள் இந்த மேடையில் இருக்கிறார்கள். அவர்கள்தான் அது பற்றிய முடிவுகளை எடுப்பார்கள். மறுபுறத்தில் தேசிய பாதுகாப்பு என்பது பைனேற்றினை கையில் ஏந்திய சிப்பாய் ஒருவரை சந்தியில் நிறுத்திவைப்பதில்லை. அதனைச் சூழவுள்ள ஒட்டுமொத்த பிரஜைகளின் உயிர்களால் பிரதிபலிக்கப்படுகின்றது. அதனால் பண்டைய முறைமையை மனதில் வைத்துக்கொண்டு எம்மிடம் கேள்விகேட்பதற்குப் பதிலாக புதிய மாற்றம் பற்றிய சித்திரமொன்றை மனதில் வடித்துக்கொண்டு கேள்விகளைக் கேட்குமாறு ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் முன்மொழிவது நவீன இலங்கையொன்றைக் கட்டியெழுப்பகின்ற நடுநிலையத்தையாகும். நாங்கள் முன்மொழிவது வெறுமனே பொருளாதாரப் பயணம் மாத்திரமல்ல. மனித சிந்தனையின் புதிய மாற்றமொன்று பற்றியதாகும்.
நிலவுகின்ற அரச சேவை சம்பந்தமாக நாங்கள் முன்மொழிவது சிந்தனைரீதியாக மாற்றமடைந்த ஒரு அரச சேவை பற்றியதாகும். பழைய இடத்தில் இருந்த தலைவர்கள் எவ்வளவுதான் பல்டி அடித்தார்கள்? அந்த தோல்விநிலைக்குப் பதிலாக நாங்கள் முன்மொழிவது புதிய எழுச்சியொன்றையாகும்! அந்த புதிய இடமென்பது அரசியல்வாதி மக்களுக்கு எதிராக மறைந்திருக்கின்ற இடமல்ல, அரசியல்வாதிக்கும்’ மக்களுக்கும் இடையில் நெருக்கமான உறவு நிலவுகின்ற இடமாகும். இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் அவர்கள் பிரம்மாவின் நெற்றியில் இருந்து படைக்கப்பட்டவர்களெனவும் குடிமக்கள் பாதத்தால் படைக்கப்பட்டவர்கள் எனவும் நினைக்கிறார்கள். நாங்கள் முன்மொழிவது பிரஜையின் வேதனையை தனது வேதனையாக உணர்கின்ற புதிய அரசியலாகும். கூட்டுமனப்பான்மை, மானிட ஈடுபாடுகள், ஆன்மீக ஈடுபாடுகள், பிறர்மீது ஒத்துணர்வுடன் நோக்குகின்ற மனித சமூகமொன்றின் புதிய பொருளாதாரப் பாதையொன்றை நாங்கள் முன்மொழிகிறோம். எமது மகள்மார்களுக்கு பெண்களுக்கு பாதுகாப்பு நிறைந்த சமூகமொன்று. சீருடையைப் பார்த்தால் பயமாக எமது தோழர் அமரகீர்த்தி கூறினார். எனினும் எமது பிள்ளைகளுக்கு சகோதரிகளுக்கு பயமேற்படுவது சீருடையைப் பார்த்தால் மாத்திரமா? இல்லை. சமூகத்திற்பகும் பயம். நட்புறவுமிக்க பொலீஸ் மற்றும் முப்படையினர் போன்றே ஒத்துணர்வுகொண்ட சமூகமொன்றும் தேவை. சுகாதார அமைச்சர் மருத்துகளில் இருந்து திருடுகின்ற, பிரதமர் மத்திய வங்கியில் கைவைக்கின்ற ஒரு நாடு எமக்கு அவசியமாகும்? இந்த சீரழிவிற்குப் பதிலாக புதிய மறுமலர்ச்சி எமக்கு அவசியமாகும்.
வெள்ளைக்காரன் வெளியேறியதும் அன்று இருந்த எமது மூத்தவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்? இந்த ஆட்சிமுறைமையைக் கவிழ்த்துவிட்டால் அந்த உணர்வே மக்களுக்கு பாரிய மலர்ச்சியையும் எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்திவிடும். வெள்ளைக்காரன் 133 வருடங்கள். இந்த ஆட்சியாளர்கள் 76 வருடங்கள். வெள்ளைக்காரனின் அழுத்தத்தை நாங்கள் உணரவில்லை. இந்த ஆட்சியாளர்களின் அழுத்தத்தை நாங்கள் அனுபவித்தோம். ஒற்றோபர் மாதமளவில் விடுதலை பெற்றமைக்கான மகிழ்ச்சியை நாங்கள் அனுபவிப்போம். இந்த ஆட்சியாளர்களை விரட்டியடித்து ஆட்சி முறைமையை மாற்றிவிட்டாலேயே மக்கள் பாரிய எழுச்சிபெற்று நாட்டைக் கட்டியெழுப்பிட முன்வருவார்கள். எமக்கு எமது பெருநிலத்தில் பிறந்த விஞ்ஞானிகளிடமிருந்து, ஆட்சியாளர்களிடமிருந்து பயன்பெற முடியாவிட்டாலும் உலகிற்கு முக்கியமான எம்மவர்கள் பெருந்தொகையினராக உலகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் திரும்பிவரத் தயாராக இருக்கிறார்கள். புற்றுநோய்க்கு புதிய ஓளடதமொன்றை கண்டுபிடித்தல் தொடர்பான ஆராய்ச்சியொன்றை மேற்கொண்டு வருகின்றவர் அமெரிக்காவின் ஹுஸ்டன் பிரதேசத்தில் இருக்கின்ற எமது கட்சியின் அமைப்பாளராவார். அவர் ஐக்கிய அமெரிக்காவின் ஆராய்ச்சிகளுக்கான பிரதானமான சபையின் அங்கத்தவராவார். அவர்கள் முண்டியடித்துக்கொண்டு இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வரத்தயாராக உள்ளார்கள். அந்த அனைவரதும் நம்பிக்கைக்கு கடுகளவேனும் பங்கமேற்படாதவகையில் செயலாற்றுவதே அரசியல்வாதிகள் என்றவகையில் எமக்கு இருக்கின்ற அடிப்படைப் பொறுப்பு. தேர்தலின்போது எம்மீது நம்பிக்கை வைக்காத குழுக்களும் அதன்பின்னர் எம்மை நம்புமளவிலான மாற்றமொன்றை நாங்கள் மேற்கொள்வோம். இங்கு குழுமியுள்ள நீங்கள் திடசங்கற்பமுள்ளவர்களாக செயலாற்றி சவால்களை வென்றெடுப்பதைப்போன்றே கண்டி மாவட்டத்தை வெற்றியீட்டச் செய்விக்கின்ற கொடியை கையில் ஏந்துங்கள். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முப்பது வருடங்களுக்கு மேல் காலம் கழிந்தது. இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரமேலும் ஆறுமாதங்களே இருக்கின்றன. அந்த காலத்திற்குள் வெற்றியைப் பெறுகின்ற உறுதியான திடசங்கற்பத்துடன் முன்னணிக்கு வந்து செயலாற்றுமாறு அழைப்பு விடுக்கிறோம்.
-Colombo, February 21, 2024- இந்நிகழ்வு இன்று (21) மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது. அயர்லாந்தில் வாழும் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் தோழர் ருவன் அவர்களின் ஒத்துழைப்புடன் யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களால் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
-Colombo, February 21, 2024-
இந்நிகழ்வு இன்று (21) மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது.
அயர்லாந்தில் வாழும் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் தோழர் ருவன் அவர்களின் ஒத்துழைப்புடன் யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களால் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் பிமல் ரத்நாயக்க- -Colombo, February 21, 2024- இந்த நாட்டில் தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருவதை நாங்கள் அவதானிக்கின்றோம். எனவே, எமக்கு எதிரான பாசறையினர் எம்மீது ஆதாரமற்ற, அடிப்படையற்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக தோழர் அநுர குமார திசாநாயக்கவை உள்ளிட்டவர்கள் இந்தியாவின் அழைப்பின் பேரில் இந்திய விஜயத்தை மேற்கொண்டு வந்ததன் பின்னர் […]
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் பிமல் ரத்நாயக்க-
-Colombo, February 21, 2024-
இந்த நாட்டில் தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருவதை நாங்கள் அவதானிக்கின்றோம். எனவே, எமக்கு எதிரான பாசறையினர் எம்மீது ஆதாரமற்ற, அடிப்படையற்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக தோழர் அநுர குமார திசாநாயக்கவை உள்ளிட்டவர்கள் இந்தியாவின் அழைப்பின் பேரில் இந்திய விஜயத்தை மேற்கொண்டு வந்ததன் பின்னர் இந்நாட்டு தமிழ் மக்கள் மத்தியில் எம்மீதான மிகப் பெரிய ஆர்வமும் கவனமும் அதிகரித்து வருகின்றது. எனவே, தமிழ் மக்கள் எம்மோடு இணைவதைத் தடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புள்ள பல்வேறு குழுக்கள் மிகவும் தவறான ஒரு செய்தியை புனைந்து வருகின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் இடையீட்டுடன்தான் 83 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரம் மேற்கொள்ளப்பட்டதென பொய்யான பிரச்சாரத்தை இவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் செய்து வருகின்றனர். இது அப்பட்டமான பொய்யாகும்.
83 கறுப்பு ஜுலைக் குற்றச் செயல்கள் ஜே.ஆர். ஜெயவர்தன, ஆர்.பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையின் கீழ் இயங்கிய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் தலைமைத்துவத்தின் இடையீட்டின் பேரில்தான் மேற்கொள்ளப்பட்டன. அதுபற்றிய எழுத்திலான குறிப்புகள் எங்களிடம் இருக்கின்றன. அவற்றை எங்களால் சமர்ப்பிக்க முடியும். 83 கறுப்பு ஜுலை கலவரத்துக்கு முன்னர் யாழ். நூலகத்தை தீக்கிரையாக்குவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அந்தஸ்த்துடைய அமைச்சர்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்றார்கள். அவர்கள் பற்றிய எல்லா விடயங்களையும் எங்களால் சமர்ப்பிக்க முடியும்.
ஆனால், இந்த கலவரத்தின் பின்புலத்தை நாம் ஆராய்ந்தால் 1983 கறுப்பு ஜுலை என்பது குறிப்பாக இலங்கையில் வடக்கு மாகாணங்களை தவிர்ந்த ஏனைய எல்லா மாகாணங்களிலும் வசித்த தமிழ் மக்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்ட அடிப்படையில் கட்டவிழ்த்துவிட்ட கடுமையான ஒரு இனவாத செயற்பாடாகும். குறிப்பாக ஜே.ஆரின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தேர்தலை பிற்போட்டு ஜனநாயகத்தின் மீது அடக்குமுறையைப் பிரயோகித்து படுமோசமான ஆட்சியைத்தான் செய்து வந்தது. அவர்கள் தொழிற்சங்கங்களை தடை செய்தார்கள். ஒரு இலட்சம் பேருக்கு தொழிலை இழக்கச் செய்தார்கள். வளர்ந்து வந்துகொண்டிருந்த தேசிய ஒற்றுமை ஒரு மட்டத்தை அப்போது அடைந்திருந்தது. இந்த தேசிய ஒற்றுமையை சிதைப்பதற்காக ஜே.ஆரும், ரணில் விக்ரமசிங்கவும் தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலையையும் அடக்குமுறையையும் பாவித்தார்கள்.
1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் 1977 அம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தன, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அரசாங்கத்தை அமைக்கும்போது இந்நாட்டில் யுத்தம் இருக்கவில்லையே? ஜே.ஆர் மற்றும் ரணிலின் தவறான இனவாத அரசியலின் காரணமாகத்தான் 81, 82 இல் முரண்பாட்டு நிலைமையொன்று இலங்கையில் உருவாகியிருந்தது. 83 ஆம் ஆண்டிலே முரண்பாடு உச்சம் கண்டிருந்தது. அதன் விளைவாக இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களை அவர்களின் வீடுகளில் ஒப்படைப்பதுதான் அப்போது அமுலில் இருந்த நடைமுறை. ஆனால், ஜே.ஆர். ஜெயவர்தன, ரணில் உள்ளிட்ட கும்பல் அந்தச் சிப்பாய்களின் பூதவுடல்களை கொழும்புக்கு கொண்டுவந்து திட்டமிட்ட அடிப்படையில் மிகப்பெரிய ஒரு தாக்குதலை கொழும்பில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டனர். அத்தாக்குதல் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச தலைவர்களால் இலங்கை முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டது. சப்பாத்து தைக்கின்ற வறிய மனிதர் முதற்கொண்டு பெரிய தொழிலதிபர்கள் வரை இதனால் பாதிப்புற்றார்கள். இலங்கையில் எத்தனையோ சினிமா தியட்டர்கள் அழிக்கப்பட்டன. கொழும்பில் ரணிலின் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த காமிணீ மண்டபம் இப்போது இல்லையே! யார் தீக்கிரையாக்கியது? ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் காடையர் கும்பல்கள்தான் அழித்தன.
எனவே, 83 கறுப்பு ஜுலையை உருவாக்கியதும் அமுலாக்கியதும் ஐக்கிய தேசியக் கட்சிதான். ஜே.ஆர்.தான் அதன் முக்கியஸ்தர். அதேப்போல அப்போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழர்களின் வீடுகள் அழிக்கப்பட்டன. அவர்களின் ஆதனங்கள் அழிக்கப்பட்டன. அதனையடுத்து ஜே.ஆர். ஜெயவர்தன ஒருவாரகாலம் சட்டத்தை அமுலாக்கவில்லை. பொலிசாருக்கு கட்டளையை பிறப்பிக்கவில்லை. பொலிஸ்மா அதிபர்கள் ஜே.ஆரிடம் சென்று அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரினார்கள். ஆனால், அவர் அதனைச் செய்யவில்லை. எனவே, இந்தக் கறுப்பு ஜுலையைத் தொடர்ந்து ஜே.ஆர். என்ன செய்தார்? மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜ கட்சி ஆகிய மூன்று இடதுசாரி கட்சிகளை தடைசெய்தார். தடைசெய்து சில மாதங்களுக்குப் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜ கட்சியின் தடைகளை நீக்கினார். ஆனால், மக்கள் விடுதலை முன்னணியின் தடையை நீக்கவில்லை. அதற்கான காரணம் என்னவென்றால், மக்கள் விடுதலை முன்னணி 1980களில் மிகவும் பலம்பொருந்திய வகையில் வளர்ந்து வந்தது. அதாவது, இடதுசாரியின் மிகவும் பலம்பொருந்திய மக்கள் இயக்கமாக வளர்ந்து வந்துகொண்டிருந்தது. மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் தோழர் விஜேவீரவை உள்ளிட்டவர்கள் பாராளுமன்றத்திற்கு வந்து இந்த நாட்டின் அதிகாரத்தை இடதுசாரிகளின் கைகளுக்கு கொண்டுபோய் விடுவார்களென ஜே.ஆர். பயந்தார். எனவே, அதனை தடுப்பதற்காக ஜே.ஆர் இந்த இனவாதத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களை படுகொலை செய்து, அதனை பயன்படுத்தி மக்கள் விடுதலை முன்னணியை தடை செய்தார். ஹிட்லரும் இதைத்தானே செய்தார். ஹிட்லரின் நாசிக்கட்சி ஜேர்மன் பாராளுமன்றத்தை தீக்கிரையாக்கினார்கள். அவ்வாறு செய்துவிட்டு ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி மீது குற்றத்தை சுமத்தினார்கள். அதன் பின்னர் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை தடைசெய்து அடக்கினார்கள். ஜே.ஆரும் 83 இல் இதைத்தான் செய்தார். பின்னர் கறுப்பு ஜுலை தொடர்பாக ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்தக் கலவரத்திற்குக் காரணம் ஐக்கிய தேசியக் கட்சிதான் என்று அதில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இற்றைவரை அக்குற்றச் செயல்களுக்காக ரணில் விக்ரமசிங்க இந்த தேசத்திடம் மன்னிப்புக் கோரவில்லை. ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பாக புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவைதான் நடந்த உண்மை.
பெரும்பாலான தமிழ் மக்களுக்கு இந்த விடயம் தெரியும். ஆனால், அக்காலப்பகுதியில் இலங்கையில் சமூக வலைத்தளங்கள் இருக்கவில்லை. சுயாதீன ஊடகங்கள் இருக்கவில்லை. ஓரிரண்டு செய்தித்தாள்கள் இருந்தன. ஐ.டி.என், தேசிய ருபவாஹிணி என்ற இரு இலத்திரனியல் ஊடகங்கள் அரசாங்கத்தின் கைகளில் இருந்தன. எனவே, அந்தநேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் காடையர்கள், அயோக்கியர்கள் புரிந்த ஆட்கொலைகளை ஜே.வி.பி. அல்லது வேறு நபர்கள் மீது சுமத்துவதற்கு வசதியாக இருந்தது. அண்மைக் காலத்தில் மக்கள் எழுச்சியின் போது அரசாங்கத்தின் காடையர்கள் கோல்ஃபேஸ் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை நடத்திவிட்டு அப்பலியை மற்றவர்கள் மீது சுமத்த முயற்சித்தனர். ஆனால், சமூக வலைத்தளங்கள் இருந்ததனால் ராஜபக்ஸர்களால் அதனைச் செய்ய முடியவில்லை. ஆனால், 83 யுகம் அப்படிப்பட்டதல்ல. எனவே, 83 கறுப்பு ஜூலை இலங்கை வரலாற்றை முற்றாகவே மாற்றியமைத்தது என்பதை தெட்டத்தெளிவாகக் கூறுகிறோம். இது ஆயுதமேந்திய பிரிவினைவாதத்திற்காக இளைஞர்களை வழிப்படுத்தியது. இது முட்டாள்த்தனமான கறுப்பு ஜுலையாகும். அந்தக் கலவரத்தில் உடைமைகளை இழந்த, உறவுகளை இழந்த, கைகால் முறிந்த தோழர்கள் இன்னமும் இருக்கிறார்கள். இன்று மக்கள் விடுதலை முன்னணியுடன் அவர்கள் இணைந்தே இருக்கிறார்கள். சரோஜா போல்ராஜ், இராமலிங்கம் சந்திரசேகர், மோகன் போன்ற தோழர்கள் அப்படிபட்டவர்கள்தான். ஜே.வி.பி. தமிழர்களை தாக்கியிருந்தால் அவர்கள் ஏன் ஜே.வி.பியுடன் இணைந்துகொள்ள வேண்டும்? அந்தக் காலப்பகுதியில் ஜே.வி.பி. இனவாத ரீதியாக செயற்படவில்லை என்பதை மக்களிடம் தெரிவித்துக்கொள்கின்றோம். அப்போது நாங்கள் தமிழ் சகோதர சகோதரிகளை இயலுமான நேரங்களில் காப்பாற்றினோம். அவர்களை பாதுகாத்தோம். எனவே, வங்குரோத்து அடைந்துள்ள இந்த ராஜபக்ஸர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் சேறுபூசும் இயக்கங்களிடம் அகப்படாமல் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காக எம்மோடு இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-Colombo, February 19, 2024- இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பொருளாதார மற்றும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (19) பெலவத்த ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது இலங்கை எதர்நோக்கிவருகின்ற சமூக பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இலங்கையின் தொழில்முயற்சித்துறை முகங்கொடுத்துள்ள சிக்கல்கள் மற்றும் மக்கள் சந்தித்துள்ள பொருளாதார சிரமங்கள் பற்றி விரிவாக உரையாடலுக்கு இலக்காக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியை தீர்த்தல் சம்பந்தமான தேசிய மக்கள் சக்தியின் […]
-Colombo, February 19, 2024-
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பொருளாதார மற்றும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (19) பெலவத்த ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது இலங்கை எதர்நோக்கிவருகின்ற சமூக பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இலங்கையின் தொழில்முயற்சித்துறை முகங்கொடுத்துள்ள சிக்கல்கள் மற்றும் மக்கள் சந்தித்துள்ள பொருளாதார சிரமங்கள் பற்றி விரிவாக உரையாடலுக்கு இலக்காக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியை தீர்த்தல் சம்பந்தமான தேசிய மக்கள் சக்தியின் கொள்கைசார் அணுகுமுறைகள் பற்றியும் கவனஞ் செலுத்தப்பட்டது.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பொருளாதார அலுவல்கள் பற்றிய முதலாவது செயலாளர் மத்தியு வர்டின்ஹம் (Matthew Wordinghem), அரசியல் அலுவல்கள் பற்றிய இரண்டாவது செயலாளர் அலெக்ஸ் ஸ்மித் (Alex Smith) மற்றும் அரசியல் ஆலோசகர் நெலுனி திலகரத்ன (Neluni Thilakaratne) ஆகியோரும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார பேரவையின் சார்பில் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த, கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் முதித்த நாணாயக்கார ஆகியோரும் கலந்துகொண்டனர்.
(தேசிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பெண்கள் மாநாடு – 2024.02.17) எமது நாட்டின் 76 வருடகால சாபக்கேட்டுக்கு முற்றுப்பள்ளி வைப்பதற்காக ஒட்டுமொத்த சக்திகளையும் ஒன்றுசேர்த்து வருகின்றவேளையில் தேசிய மக்கள் சக்தி வரலாற்றுரீதியாக பெண்களை ஒரு சக்தியாக சேர்த்துக்கொண்டது. பெண்கள் வெறுமனே வாக்குகளை அளிக்கின்ற ஒரு பிரிவினர் அல்ல, அரசாங்கங்களை அமைக்கின்ற, அந்த அரசாங்கங்களுடன் ஒன்றுசேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புகின்ற கௌரவமான ஒரு குழுவாகவே ஒன்றுசேர்ந்து வருகின்றனர். அவர்கள் தற்போது ஒரு வரலாற்றுரீதியான சக்தியாக இயங்கி வருகிறார்கள். இன்னும் […]
(தேசிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பெண்கள் மாநாடு – 2024.02.17)
எமது நாட்டின் 76 வருடகால சாபக்கேட்டுக்கு முற்றுப்பள்ளி வைப்பதற்காக ஒட்டுமொத்த சக்திகளையும் ஒன்றுசேர்த்து வருகின்றவேளையில் தேசிய மக்கள் சக்தி வரலாற்றுரீதியாக பெண்களை ஒரு சக்தியாக சேர்த்துக்கொண்டது. பெண்கள் வெறுமனே வாக்குகளை அளிக்கின்ற ஒரு பிரிவினர் அல்ல, அரசாங்கங்களை அமைக்கின்ற, அந்த அரசாங்கங்களுடன் ஒன்றுசேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புகின்ற கௌரவமான ஒரு குழுவாகவே ஒன்றுசேர்ந்து வருகின்றனர். அவர்கள் தற்போது ஒரு வரலாற்றுரீதியான சக்தியாக இயங்கி வருகிறார்கள். இன்னும் ஏறக்குறைய எட்டு மாதங்களில் எமது யுகம் நிர்மாணிக்கப்படுகின்ற தொடக்கநிலையாக சனாதிபதி தேர்தல் வருகின்றது. சனாதிபதி தேர்தலை பிற்போடவோ தவிர்த்துப் பயணிக்கவோ முடியாது. அவ்வாறு தவிர்த்துப் பயணிக்க எவர் இடமளித்தாலும் நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்பதை உறுதியாகக் கூறுகிறோம். தவிர்த்துப் பயணிக்க முயற்சிசெய்தால் வீதியில் இறங்கி அவர்களை விரட்டியத்திட பெண்கள் ஒரே மூச்சுடன் முன்னணி வகிப்பர் என்பது திண்ணம்.
இயலாதநிலையிலும் ரணில் விக்கிரமசிங்கவும் சனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருவது புலனாகின்றது. பாராளுமன்ற அமர்வு நிறுத்தத்திற்குப் பின்னர் சபாநாயகரின் அக்கிராசனத்தில் அமர்ந்து உரை நிகழ்த்துவதை ரணில் விக்கிரமசிங்க விரும்புகிறார். பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்துகையில் 2048 இல் நாட்டைக் கட்டியெழுப்ப வாய்ப்பளிக்குமாறு கோரினார். ரணில் விக்கிரமசிங்கவின் பிரதம சீடரான வஜிர அபேவர்தன 2048 இல் நாடு சீரடைந்து, ஐரோப்பாவின் வெள்ளைக்காரப் பெண்கள் இங்கு மனைப்பெண்களாக சேவையாற்ற வருவார்களெனக் கூறினார். காணி உறுதிகளை வழங்குவதாகக் கூறி சனாதிபதி தேர்தலுக்கு வருவதற்காகவே நாடு பூராவிலும் உள்ளவர்களை தம்புல்லைக்கு திரட்டினார். மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் இங்கு ஆயிரக்கணக்கில் குழுமியிருப்பது உறுதிகளை பெற்றுக்கொள்வதற்காக அல்ல. நாட்டை வீழ்த்தியவர்களை விரட்டியடித்து நாட்டைக் கட்டியெழுப்ப தயாராகுங்கள் எனும் செய்தியைக் கொடுப்பதற்காகவே இங்கு வந்துள்ளார்கள். ஒரு பை அரிசியைக்கொடுத்தும் வாக்குகளை சேகரிக்க ரணில் முயற்சி செய்கிறார். அரிசிப் பைக்காக, தகரத் தகட்டுக்காக வாக்குகளை அளித்து அரசாங்கங்களை அமைத்த யுகம் முற்றுப்பெற்று விட்டதென்பதை நாங்கள் அவருக்கு கூறவேண்டும். இது ஒரு புது யுகம், திசைகாட்டியின் யுகம். அரிசியல்ல தங்கத்தை பகிர்ந்தளித்தாலும் இந்த நாட்டின் பெண்கள் திசைகாட்டியை வெற்றிபெறச் செய்விக்க தயார் எனும் முடிவினை எடுத்துவிட்டார்கள்.
எம்மெதிரில் நிலவுகின்ற சவால் கொஞ்சநஞ்சமல்ல. நல்லதொன்று இருக்கின்ற இடத்திற்கு நல்லதொன்றைக் கொடுப்பது சிரமமான வேலையல்ல. தீய ஒன்று இருக்கின்ற இடத்திற்கு ஊக்கமுள்ள மனிதர்களால் மாத்திரமே நல்லதொன்றைக் கொடுக்கமுடியும். மிகவும் கெட்ட ஒரு நாட்டுக்குப் பதிலாக நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக பெண்கள் முண்டியத்துக் கொண்டிருக்கிறார்கள். உற்பத்தி வழிவகைகளை சீரழித்து, தொழில்முயற்சிகளை சீரழித்து, எமக்கு உயிர்வாழ்வதற்கான வருமான வழிவகைகளை ஈட்டிக்கொள்ளமுடியாத வங்குரோத்து அடையச்செய்வித்த ஒரு நாடுதான் இருக்கின்றது. கடன் வாங்கி, திருடித் தின்று, கடன் செலுத்த முடியாதென்பதை உலகம் கூறிய ஒரு நாட்டிலேயே நாங்கள் வசிக்கிறோம். 1948 இல் சுதந்திரம் பெறும்போது ஆசியாவின் இரண்டாவது பலம்பொருந்திய பொருளாதாரம் நிலவிய நாட்டைத்தான் கடைசி இடத்திற்கு தள்ளியுள்ளார்கள். பலம்பொருந்திய உற்பத்திப் பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்புவதற்காக ஒட்டுமொத்த மக்களையும் தொடர்புபடுத்திக்கொண்ட பாரிய செயற்பொறுப்பு இருக்கின்றது. இன்றும்கூட ஏற்றுமதி பொருளாதாரத்தின் பெரும்பங்கினை வகிப்பது தேயி்லை மற்றும் ஆடைத்தொழிற்றுறையைச் சேர்ந்த பெண்களாவர். வெளிநாட்டுத் தொழில்களிலிருந்து அதிகளவான டொலர்களை அனுப்பிவைப்பவர்கள் பெண்களே. எனினும் எவருமே பெண்களை பொருட்படுத்துவதில்லை. பலம்பொருந்திய உற்பத்திப் பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்பி ஒட்டுமொத்த மக்களுக்கும் நன்மைகளை வழங்குகின்ற வேலைத்திட்டமொன்றை நாங்கள் அமுலாக்குவோம். அதனூடக கல்விக்கு, சுகாதாரத்திற்கு போதியளவிலான பணத்தை ஒதுக்கி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவேண்டும். அதைப்போலவே அழுகிப்போன ஒரு சமூகத்திற்குப் பதி்லாக மனிதம் நிலவுகின்ற சமூகமொன்றை உருவாக்கிட வேண்டும். அதற்காக மக்களின் செல்வத்தை மோசடியால் ஊழலால் திருடித் தின்றவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்குவோம்.
காசுக்காக பிள்ளைகளுக்கு போதைப்பொருள் விற்கின்ற ஒரு சமூகத்திலேயே நாங்கள் சீவிக்கிறோம். பெண்களை மதிக்காமல் அநியாயம் செய்கின்ற ஒரு நாடுதான் இருக்கின்றது. ஒருவரையொருவர் மதிக்காத எம்மெவருக்கும் உயிர்வாழ முடியாத ஒரு சமூகமே இருக்கின்றது. மொழிகளுக்கிடையில் முரண்பாடுகள், மதங்களுக்கிடையில் முரண்பாடுகள், உடுக்கின்ற உடைகளுக்கிடையில் நிலவுகின்ற முரண்பாடுகளுக்குப் பதிலாக ஒத்துணர்வும் மனிதமும் நிலவுகின்ற ஒரு நாடுதான் எமக்குத்தேவை. அன்பு நிலவுகின்ற ஒரு நாடுதான் எமக்குத் தேவை. பிள்ளைகள்மீது அன்பு செலுத்துகின்ற, பெண்களை மதிக்கின்ற, ஒத்துணர்வுள்ள சமூகமொன்றை நாங்கள் உருவாக்கிடவேண்டும். மிகவும் சாதகமான சமூகமொன்றை அமைத்திட நாங்கள் அனைவரும் கைகோர்த்துக்கொள்ள வேண்டும்.
சுதந்திரம் எனக்கூறி கடலுக்கு பீரங்கி வேட்டுகளைத் தீர்த்து மீன்களை அச்சுறுத்தி தேசிய கோடியை ஏற்றிவிட்டோம் என்பதற்காக சுதந்திரம் இருக்கின்றதா? எமது நாட்டின் நிதிக்கொள்கையைத் தீர்மானிப்பது சர்வதேச நாணய நிதியமாகும். எமது நாட்டின் சுயாதீனத்தன்மை, எமது நாட்டின் உரிமை எமக்கில்லை. நாட்டு மக்களுக்கு காணி உறுதிகளை வழங்குவதாகக்கூறி தம்புல்லைக்கு வரவழைப்பிக்கின்ற அதேவேளையில் அரசாங்கத்திற்குச் சொந்தமாக பாற்பண்ணைகளை அமூல் கம்பெனிக்கு விற்கிறார்கள். அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்புத் துறைமுகத்தின் முனையங்கள், எண்ணெய்க் குதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எனவே நாடு சுதந்திரமானதா? இந்த நிலைமைக்கு எதிராக உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள புதிய பாணியிலான சுதந்திரப் போராட்டமொன்று எமக்குத் தேவை. ஏதேனும் வசதிபடைத்த, நாட்டைவிட்டுச் செல்லக்கூடிய அனைவருமே நாட்டைவிட்டுச் செல்கிறார்கள். அதற்குப் பதிலாக நாட்டைக் கட்டியெழுப்புவோம் எனும் ஊக்கமுள்ள மனிதர்களை நாங்கள் விழித்தெழச் செய்விக்கவேண்டும். அதேவேளையில் திராணியுள்ள பெண்கள் ஒருமூச்சுடன் ஒன்றுசேர்ந்து நாட்டை சீராக்குவோம் என்ற செய்தியைக் கொடுக்கவே நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். தேசிய மக்கள் சக்தி தேசிய மறுமலர்ச்சி யுகமொன்றை உருவாக்கி கைத்தொழில்களை கட்டியெழுப்பி, தொழில்முயற்சிகளைக் கட்டியெழுப்பி உண்மையான சுதந்திரத்தை வென்றெடுத்து நாட்டைக் கட்டியெழுப்புதலை மேற்கொள்கின்றது. அதைப்போலவே சிங்கள, தமிழ், முஸ்லீம் நாமனைவரும் ஒரு தேசிய நோக்கத்திற்காக உழைக்க வேண்டும். அதிகாரத்திற்காக இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் மக்களை மதரீதியாக , இனத்துவரீதியாக பிரித்தாண்ட யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். முன்னேற்றமடைந்த கலாசார சமூகமொன்றைக்கொண்ட மனிதர்களைக் கட்டியெழுப்பவேண்டியது அவசியமாகும். எல்லாவற்றினதும் விலையை அறிந்த ஆனால் பெறுமதியை அறியாத நிலையிலுள்ள இந்த முறைமையை மாற்றியமைப்பதன் மூலமாகவே இந்த படுமோசமான சமூகத்தை மாற்றியமைக்க முடியும்.
எம்மெதிரில் இருப்பது பாரிய பணியாகும். அனைத்தையும் மீள் உருவாக்குவதற்காகவே தேசிய மக்கள் சக்தி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தமக்கு தனிப்பட்டமுறையில் எதனையும் எதிர்பார்க்காமல் தொண்டு அடிப்படையில் பணிபுரிகின்ற பிரமாண்டமான இயக்கமொன்று கட்டிவளர்க்கப்பட்டுள்ளது. இதுவரை அதிகாரத்தில் இருந்தவர்கள் வாக்குகளைப் பெற்றதும் மற்றைய பக்கத்திற்கு தாவியதும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவேயாகும். இந்த நிலைமையை மாற்றியமைத்திட பெண்கள் ஒரே மூச்சில் அதிகாரத்தைப் பெறுவதற்கு முன்னர் ஒன்றுசேர்ந்து இவ்விதமாக ஒழுங்கமைவார்களாயின் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு நாட்டை சீராக்க தலைமைத்துவம் வழங்குகின்ற பெரும்பாலானோர் இந்த மேடையில் இருக்கிறார்கள். இதுவரை அதிகாரத்தைப் பெற்ற குழுக்கள் மக்களை அர்ப்பணிக்குமாறு கூறிக்கொண்டு அவர்கள் திருடி வந்தார்கள். அந்த பழைய அரசியலை முற்றாகவே மாற்றியமைத்திட இந்த அனைவரும் தயார். ஆசிரியைகளால் பிள்ளைகளுக்கும் கிராமத்தில் உள்ள பெண்களால் சமூகத்திற்கும் இதுவரை பயணித்த தவறான, அழிவுமிக்க பாதை பற்றிய விடயங்களைத் தெளிவுபடுத்திக் கொடுக்கமுடியும். 76 வருடகால வரலாற்றினை மாற்றியமைத்து இந்த வருடத்திலேயே புதிதாக எழுதத் தொடங்குகிறோம். பெண்களை சீக்கிரமாக ஏமாற்ற முடியுமென ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். அரிசிப் பையைக் கொடுத்து வென்றெடுக்க முடியுமென நினைக்கிறார்கள். இந்த அவமானத்தில் இருந்து பெண்களை உங்கள் அனைவராலுமே விடுவித்துக்கொள்ள முடியும். அரிசிப் பைக்காக , வாக்குறுதிக்காக மாறிவிடாமல் மக்களின் ஆட்சிக்காக நின்றுவிடாமல் பயணிக்கின்ற சக்தி பெண்களே என்பதை நிரூபிக்கவேண்டும். நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பணியின் பிரதான பங்காளிகள் பெண்களே என்பதை நிரூபிக்கவேண்டும். எவரும் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய சமூகமொன்றைக் கட்டியெழுப்புகின்ற பிரதான பங்காளிகளாக மாறுகின்ற மகிழ்ச்சி உங்கள் அனைவரிடமும் இருக்கின்றது. சனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் ஆகிய எந்த தேர்தலைக் கொண்டுவந்தாலும் அவர்களை அரியாசனத்திலிருந்து இறக்கி புதிய நாட்டை உருவாக்கத் தயார் எனும் செய்தியைத்தான் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
அன்புக்குரிய சகோதரிகளே, எமது பிள்ளைகளுக்கு எதிர்காலத்தை இல்லாதொழித்த, பொருளாதாரத்தை நாசமாக்கிய, எமது மகிழ்ச்சியை இல்லாதொழித்த 76 வருடகால சாபக்கேட்டுக்கு முற்றுப்புள்ளிவைக்க பெண்கள் தயார் என்பதை ஊர்ஊராகச் சென்று கூறுங்கள். மீண்டும் எவராலும் பெண்களை ஏமாற்ற முடியாதென்பதை வீடுவீடாகச் சென்று பெண்களுக்கு விளக்கிக்கூறுங்கள். கிடைக்கின்ற முதலாவது வாய்ப்பிலேயே கொடிய ஆட்சிக்கு முடிவுகட்டி வெற்றியை அடையும்வரை நின்றுவிடாமல் முன்நோக்கி நர்வோம் என்பதை உறுதிப்படுத்துங்கள். எதிரிகளை விரட்டியடித்து மக்களின் வெற்றி, தாய்நாட்டின் வெற்றி, பிள்ளைகளின் எதிர்கால வெற்றியை பெற்றுக்கொள்ளாமல் நின்றுவிடப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்துங்கள். புதிய சுதந்திரப் போராட்டம் மூலமாக தாய்நாட்டைக் கட்டியெழுப்புதல்வரை ஒட்டுமொத்த மக்களுடன் அணிதிரண்டு வெற்றியடைவோம் என்பதை வரலாற்றில் குறிப்புப் பதிவீராக.
“பிள்ளைகளுக்கான கனவினை நனவாக்கிக்கொள்ளக்கூடிய சமூகமொன்றை உருவாக்கவேண்டியது எமக்கு அவசியமாகும்”
-தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாந்தி ஹரினி அமரசூரிய-
நாடு முழுவதிலுமுள்ள பெண்கள் விழிப்படைவதையும் ஒழுங்கமைவதையும் நாங்கள் காண்கிறோம். அது உன்னதமானது. பல வாரங்களாக பல மாதங்களாக நாங்கள் வீடுவீடாகச் சென்று உங்கள் அனைவருடனும் உரையாடியதால் தோன்றிய மலர்ச்சியும் ஒழுங்கமைதலும் நாடுபூராவிலும் காணப்படுகின்றது. “பெண்களாகிய நாங்கள் ஓரே மூச்சுடன்” எனும் தொனிப்பொருளின்கீழ் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி ஒருங்கிணைவதே அதிலுள்ள உன்னதமான நிலைமையாகும். இந்த நாட்டுக்கு அவசியமான மாற்றத்திற்கான தலைமைத்துவத்தை நீங்கள் அனைவரும் எடுத்துக்கொள்வதே இதன் மூலமாக சுட்டிக்காட்டப்படுகின்றது. மேடையில் இருக்கும்போது கிடைத்த ஒருசில செய்திகள் தொடர்பில் கவனத்தை ஈர்க்கச்செய்வித்து உரையாற்றலாமென்று நான் நினைக்கிறேன். இனங்காணப்படாத போதை மாத்திரைகளை பருகியதால் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றின் ஆண்டு ஐந்து மாணவர்கள் நால்வர் மயங்கிவிழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். எமது ஆசிரியர்கள் பற்றியும் அதிபர்கள் பற்றியும் பாடசாலைகள் பற்றியும் எம்மனைவருக்கும் பெருமைமிக்க நம்பிக்கை இருந்தது. பிள்ளையின் பாதுகாப்பு தொடர்பில் நிலவிய நம்பிக்கை சிதைக்கப்பட்டு வருகின்றது. பாடசாலை மதில் சிதைந்து பிள்ளைகள் மடிகிறார்கள். பாடசாலைக்குள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு நிலவுகின்றது எனும் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியாதுள்ளது. வீட்டில் அமைதி இல்லாத அளவுக்கு குடும்பக் கட்டமைப்பு சீரழிந்துவிட்டது. உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி ஆகிய அனைத்தையுமே நாங்கள் இழந்துள்ளோம். வைத்தியசாலையில் முறைப்படி மருந்து கிடைத்து குணமடைவது ஒரு அதிசயமாக மாறியுள்ளது. இந்த சமூக பொருளாதார நி்லைமைக்குள் எமது மனிதாபிமானமும் அன்பான கடப்பாடுகளும் பேரவலமாக மாறிவிட்டது.
இந்த சமூக பொருளாதார நி்லைமைக்குள் பெண்கள் – ஆண்கள் ஆகிய நாங்கள் அனைவருமே இறுகிப் போயுள்ளோம். அன்றாட விலைச் சிட்டைகளை செலுத்தி, பிள்ளையைப் பாடசாலைக்கு அனுப்பி, ஏதோசில மருந்துகளை வாங்கி, மூச்செடுத்து உயிர்வாழவே காலை தொடக்கம் இரவு வரை போராடிக் கொண்டிருக்கிறோம். அதற்காக வீடுக்குள்ளே எவ்வளவுதான் யுத்தம் நடைபெறுகின்றது? குறைந்தபட்சம் நிம்மதியான உறக்கம்கூட கிடையாது. தமது பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க, மருந்து கொடுக்க மிகவும் கடினமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவள் மீதுள்ள பெறுமதியும் , அபிமானமும் இல்லாமல் போகின்ற தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தாய் தந்தையருக்கு நாட்டைக் கைவிட்டுத் தொழில்தேடி செல்லவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. பிள்ளைகளுடன் உரையாட எமக்கு நேரமில்லை. பிள்ளை சிறு தவறு புரிந்தாலும் பெற்றோர் ஆத்திரமடைகிறார்கள். பசிக்கு உண்ண, மருந்து வாங்க, ஓரளவுக்கு கல்வியை வழங்க மற்றும் பில்களைச் செலுத்த பெரும்போராட்டத்தில் ஈடுபட வேண்டியுள்ளது. அதற்கு அப்பால் ஒரு வாழ்க்கையைப் பற்றி எவ்விதத்திலும் சிந்திக்க முடியாது. இந்த சமூக பொருளாதார முறைமை நாசமாக்கியுள்ளது எமது வாழ்க்கையை மாத்திரமல்ல, எமது மனிதாபிமானத்தையும் ஆகும். எமது ஈடுபாடுகள், உயிர்களுக்கு அர்த்தம் தருகின்ற உறவுகளின் தரம் ஒழிக்கப்பட்டு, பெற்றோர்கள் பிள்ளைகளை வெறுத்துவிட்டார்கள். பிள்ளைகள் பெற்றோர்களை வெறுத்துவிட்டார்கள். ஒருவரையொருவர் வெறுத்துவிட்டார்கள்.
மனிதாபிமான உறவுகளை இந்த அளவுக்கு நாசமாக்கிய ஒரு சமூகத்தை முன்னேற்றமானதெனக் கூறமுடியுமா? இந்த சமூகத்தில் பாதுகாத்துக்கொள்ள ஏதாவது எஞ்சியுள்ளதெனக் கூறமுடியுமா? நாங்கள் இருப்பது ஒரு பொருளாதாரச் சீரழிவில் மாத்திரமல்ல, ஒட்டுமொத்த பேரவலத்தையே எதிர்நோக்கியுள்ளோம். அதனை விளங்கிக்கொண்ட பெண்கள் பொறுத்தது போதும், இப்போது நீங்கள் மாறவேண்டுமென தீர்மானித்து விட்டீர்கள். இத்தகைய சமூகமொன்றை நாங்கள் இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது எனும் திடசங்கற்பம் எம்மனைவரிடமும் இருக்கின்றது. இந்த நிலைமையை மாற்றியமைத்திடவே நாங்கள் அனைவரும் இணைந்திருகிறோம். மற்றுமொரு அரசாங்க மாற்றத்திற்கன்றி பாரதூரமான சமூக மாற்றமொன்று மூலமாக எமது மனிதாபிமானத்தை மீண்டும் கண்டுபிடிக்கவே அனைவரும் முன்வந்திருக்கிறோம். எமது மானிட உறவுகளுக்கு புதிய தரமான அர்த்தமொன்றைக் கொடுக்க, மனிதப் பண்புகளுக்கு முன்னுரிமை அளிக்கவே நாங்கள் அணிதிரள்கிறோம். பெண்களாகிய எமக்குள் பத்தினிமார்கள் மாத்திரமல்ல காளியம்மனும் இருக்கிறார்கள். எமது பொறுமை எல்லை கடந்துவிட்டால் காளியம்மனும் வெளியே வரக்கூடும். இந்த முறைமைக்குள் இனிமேலும் எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பினை வைத்துக்கொள்ள முடியாது.
எமது பிள்ளைகளுக்காக கனவு காணவும் இந்த கனவினை நனவாக்கவும்கூடிய சமூகமொன்றை உருவாக்கவேண்டிய அவசியம் எமக்கு உண்டு. அந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரலாற்றுரீதியான மாற்றத்திற்காக நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இருக்கிறோம். பெண்களிடம் பொதிந்துள்ள தலைமைத்துவம், திறமைகள், துணிச்சல் என்பவற்றை நாட்டுக்காக அர்ப்பணித்திடவே இந்த பெண்கள் ஒழுங்கமைந்து வருகிறார்கள். பெண்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்கின்ற மேடையொன்று எமது சமூகத்திற்கு அவசியம். அவற்றுக்கு செவிசாய்க்கின்ற சமூகமொன்று, அரசியல் தலைமைத்துவம் எமக்கு அவசியமாகும். அதற்காக கட்டியெழுப்பப்பட்டுள்ள மேடைதான் திசைகாட்டி. எமது பெறுமதி, எமது மகிழ்ச்சிக்கு இடமுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டுமாயின் எமக்கு அதிகாரம் அவசியமாகின்றது. அடுத்த சனாதிபதியாகப் போகின்றவர் தோழர் அநுர திசாநாயக்க என்பதை சமூகம் எற்றுக்கொண்டுள்ளது. அதற்கு அப்பால் சுதந்திரமான சமூகமொன்றை, பெண்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நாடொன்றை உருவாக்கவேண்டிய பொறுப்பு எம்மனைவருக்கும் உண்டு. மகிழ்ச்சியால், அமைதியால், அன்பால் நிரம்பிவழிகின்ற சமூகமொன்றைக் கட்டியெழுப்ப நாமனைவரும் ஒன்றுசேர்வோம்.