தேசிய மக்கள் சக்தியின் ஹற்றன் பிரகடனத்தை மக்கள்மயப்படுத்தும் மலையக மக்கள் சபை மாநாடு தெனியாயவில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்களான தோழர் சுனில் அந்துன்நெத்தி, தோழர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், தோழர் சமந்த வித்தியாரத்ன, தெனியாய தொகுதியின் அமைப்பாளர் தோழர் கதிரேசன் கண்ணன் மற்றும் தெனியாய தொகுதி உறுப்பினர் தோழர் லிஸ்றா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன், தென் மாகாணத்தைச் சேர்ந்த பெருந்திரளான மலையகத் தமிழர்கள் இந்நிகழ்வில் […]
தேசிய மக்கள் சக்தியின் ஹற்றன் பிரகடனத்தை மக்கள்மயப்படுத்தும் மலையக மக்கள் சபை மாநாடு தெனியாயவில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்களான தோழர் சுனில் அந்துன்நெத்தி, தோழர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், தோழர் சமந்த வித்தியாரத்ன, தெனியாய தொகுதியின் அமைப்பாளர் தோழர் கதிரேசன் கண்ணன் மற்றும் தெனியாய தொகுதி உறுப்பினர் தோழர் லிஸ்றா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன், தென் மாகாணத்தைச் சேர்ந்த பெருந்திரளான மலையகத் தமிழர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
தாயகத்திற்கு வலிமை… கெளரவமான பிரஜை என்ற கருப்பொருளில் நாடு முழுவதும் ஹற்றன் பிரகடனத்தை மக்கள்மயப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.02.27) மின்சாரக் கட்டணங்களில் திருத்தம் செய்கையில் அரசாங்கம் மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் செயலாற்ற தயாராகிய வேளையில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்களும் மேலும் சில அமைப்புகளும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் விடயங்களை எடுத்துரைப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டோம். மின்சார சபையின் உத்தியோகத்தர்கள் ஏறக்குறை 3.34% ஆல் பில்லைக் குறைக்க முடியுமென முதலில் கூறினார்கள். 2023 ஒக்டோபர் மாதத்தில் சட்டவிரோதமாக 18% ஆல் மின்சார பில் அதிகரிக்கப்பட்டது. வருடத்திற்கு […]
(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.02.27)

மின்சாரக் கட்டணங்களில் திருத்தம் செய்கையில் அரசாங்கம் மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் செயலாற்ற தயாராகிய வேளையில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்களும் மேலும் சில அமைப்புகளும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் விடயங்களை எடுத்துரைப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டோம். மின்சார சபையின் உத்தியோகத்தர்கள் ஏறக்குறை 3.34% ஆல் பில்லைக் குறைக்க முடியுமென முதலில் கூறினார்கள். 2023 ஒக்டோபர் மாதத்தில் சட்டவிரோதமாக 18% ஆல் மின்சார பில் அதிகரிக்கப்பட்டது. வருடத்திற்கு இருதடவைகள் திருத்தப்பட வேண்டியபோதிலும் எதிர்காலத்திலும் தாக்கமேற்படுத்தக்கூடியவகையில் மூன்று தடவைகள் திருத்தம் செய்யப்பட்டது. ஒக்டோபர் மாதத்தில் நிலவிய விலைமட்டங்களுக்கே மீண்டும் கொண்டுவருவதாக மின்சக்தி அமைச்சர் தற்போது கூறுகிறார். அவர்கள் கூறுகின்ற விடயங்களின்படி மின்சார சபையின் மொத்த வருமானம் 710 பில்லியன் ரூபாவாக அமையுமிடத்து மொத்தச் செலவு 688 பில்லியன் ரூபாவாகும். அனைத்துச் செலவுகளையம் தீர்த்தபின்னர் 23 பில்லியன் ரூபா மிகைநிலை காணப்படுவதாகவும் அதற்கமைவாக 3.34% ஆல் பில்லைக் குறைக்கமுடியுமெனவும் கூறினார்கள். எனினும் நாங்கள் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் விடயங்களை எடுத்துரைத்து மின்சாரக் கொள்ளளவின் கிரயம் 50 பில்லியனில் இருந்து 133 பில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் விநியோக கிரயம் ஏறக்குறைய 150%ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளதெனவும் சுட்டிக்காட்டினோம். வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன் வட்டியாக 53 பில்லியன் ரூபா செலுத்தப்பட வேண்டுமென சபை கூறியுள்ளது. ஆனால் நிகழ்கால வட்டியாக 45 பில்லியன் மாத்திரமே செலுத்தப்பட வேண்டும்.
பாவனையாளர்களை சுரண்டி தீத்தொழில் புரிகின்றவர்களின் கீழ்த்தரமான நோக்கங்களுக்காக அமைச்சரும் உத்தியோதகத்தர்களும் செயலாற்றி வருகிறார்கள் என்பதை நாங்கள் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டினோம். 2023 மின்சார சபையின் இலாபம் 48 பில்லியன் என அவர்கள் கூறினார்கள். மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிதாக சமர்ப்பித்துள்ள தரவுகளின்படி செலவினை 93 பில்லியனால் குறைக்க முடியுமென கூறியுள்ளது. கணக்கீட்டுக் கொள்கைகளின் பிரகாரம் மின்சார சபையின் விலைகள் இலாபமீட்டுகின்ற நோக்கத்தின் அடிப்படையிலன்றி செலவுகளை தீர்த்துக்கொள்கின்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படல் வேண்டும். ஆசியாவின் ஏனைய நாடுகளைவிட எமது நாட்டின் மின்சார பில் 50% அதிகமானதாகும். அதனாலேயே கைத்தொழில்கள் சீரழிந்துள்ளன. நாட்டின் அபிவிருத்தியில் நேரடியாகவே மின்சார பில் தாக்கமேற்படுத்துவதாலேயே மின்சார பில்லைக் குறைத்தல் சம்பந்தமாக நாங்கள் விடயங்களை முன்வைக்கிறோம். இப்போது 93 பில்லியனால் செலவினைக் குறைக்க முடியுமென கூறுகின்ற அமைச்சரும் உத்தியோகத்தர்களும் ஏன் ஆரம்பத் தருணத்தில் அதனை மறைத்து வைத்தார்கள்? 2023 இல் மின்சார சபையின் இலாபம் 62 பில்லியன் என இன்றளவில் வெளிப்பட்டுள்ளது. மேலும் 14 பில்லியனால் இலாபம் அதிகரித்துள்ளது. வட்டிக்காக அதிகமாக உள்ளடக்கப்பட்டிருந்த 08 பில்லியன் இலாபத்துடன் சேர்ந்து 70 பில்லியன் ரூபா மேலதிக இலாபத்திற்கு மின்சார பிறப்பாக்க மற்றும் விநியோகச் செலவு என்றவகையில் அதிகமாக சேர்க்கப்பட்டிருந்த 140 பில்லியன் இருக்கின்றது. இதன்படி மின்சார சபையின் 210 பில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட மேலதிக தொகை கணக்குகளுக்கிடையில் மறைத்துவைக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது. மொத்தச் செலவு 680 பில்லியன் என முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அந்த செலவில் 210 பில்லியன் குறைந்ததும் 470 பில்லியன் வரை செலவுகள் குறைவடைகின்றன. அதன்படி மின்சார பில்லை 37%ஆல் குறைக்கமுடியும்.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவானது கஞ்சன விஜேசேகர அமைச்சருடையதன்று: அது நாட்டு மக்களின் ஆணைக்குழுவென்பதை நாங்கள் அந்த உத்தியோகத்தர்களிடம் கூறினோம். அமைச்சரின் மன ஆசைகளை நிறைவுசெய்தல், உயரதிகாரிகளின் தீத்தொழிலைப் பாதுகாத்தல் ஆணைக்குழுவின் செயற்பொறுப்பு அல்லவென்பதை தெளிவுபடுத்திக் கூறினோம். இந்த விலையைக் குறைக்காமல் தொடர்ந்தும் கேம் அடிக்க தயாராக வேண்டாமென அமைச்சரை வலியுறுத்துகிறோம். நாங்கள் முன்வைத்த விடயங்களை செவிமடுத்தமைக்காக நாங்கள் பொதுப்பயன்பாடுகள் ஆணக்குழுவிற்கு நன்றி கூறிக்கொள்கிறோம். இதற்கு முன்னர் நடந்துகொண்ட விதத்திற்கிணங்க நடந்துகொள்ளாமல் மக்களிடமிருந்து கருத்துக்களைப்பெற்று, மீண்டும் மின்சார சபையிடமிருந்து தரவுகளைப் பெற்று செயலாற்றியமைக்காக நன்றி கூறுகிறோம். மீண்டும் கூடி மின்சார பில் திருத்தம் சம்பந்தமாக மக்களின் பக்கத்தில் நின்று தீர்மானத்தை வழங்குமாறு ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கிறோம். மின்சாரசபையின் செலவுகளை 210 பில்லியனால் குறைக்க முடியுனெ நாங்கள் சுட்டிக்காட்டியது குறைந்தபட்ச மட்டமாகும். தொடர்ந்தும் மக்களை துன்புறுத்தி சுரண்டுகின்ற தீத்தொழிலுக்கு துணைபோகவேண்டமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கிறோம். அதைப்போலவே அமைச்சரும் சபையின் உயரதிகாரிகளும் தான்தோன்றித்தனமாக மறைக்க முயற்சிசெய்த செலவுகள் அம்பலமாகி உள்ளதென்பதையும் வலியுறுத்துகிறோம். கடந்த 15 ஆந் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் வரலாற்றில் முதல்த்தடவையாக நாங்கள் விடயங்களை முன்வைத்த பின்னர் அது பற்றிக் கலந்துரையாடப்பட்டுள்ளது. மீண்டும் அமைச்சர் கஞ்சனவின் பிடிக்கு கட்டுப்படாமல் உண்மையாகவே 37%ஆல் குறைக்க இயலுமான மின்சார பில் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக்கூடிய வாய்ப்பினை தட்டிக்கழிக்க வேண்டாமென வலியுறுத்துகிறோம்.

“மக்கள் சம்பாதிப்பது லயிற் பில் கட்டுவதற்காக மாத்திரமல்ல என்பதை அரசாங்கம் அறிந்துகொள்ள வேண்டும்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ-
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த நாட்டுப் பிரஜைகளினதும் பாவனையாளர்களினதும் சார்பாக நியாயத்தை ஈடேற்றுவதற்காகவே தாபிக்கப்பட்டுள்ளது. 2002 இல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டம் நிறைவேற்றப்பட்டு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தாபிக்கப்பட்டுள்ளது மின்சாரக் கட்டணத் திருத்தத்தின்போது பொதுமக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பதற்காகவேயாகும். மின்சாரசபையின் நிருவாகம் இவ்வாணைக்குழுவிற்கு சமர்ப்பித்திருந்த 3.34% மின்சார பில்லைக் குறைத்தலை அவ்வண்ணமே ஆணைக்குழுவிற்கு ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளமைக்கான காரணம் தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்களும் ஏனைய தரப்பினர்களும் முன்வைத்த விடயங்களாகும். மின்சார சபை சட்டத்தின் 30 வது பிரிவில் மின் பிறப்பாக்கத்தின்போதும் விநியோகத்தின்போதும் உறப்படுகின்ற நியாயமான செலவினை அறவிட்டுக்கொள்வதேயன்றி அனைத்துச் செலவுகளையும் அறவிட்டுக்கொள்வதல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொகைமதிப்பு, புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரியதர்ஷன தர்மவர்தன ஊடகக் கலந்துரையாடலில் வெளியிட்ட தகவல்களை நான் உங்களிடம் முன்வைக்கிறேன். கைத்தொழில் பிரிவின் நடுத்தர அளவிலான 1100 நிறுவனங்களும் சிறிய அளவிலான 6900 நிறுவனங்களும் நுண் அளவிலான 254,000 நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. உள்நாட்டைப் போன்றே வெளிநாட்டுச் சந்தைக்கு பண்டங்களை உற்பத்தி செய்கின்ற இலட்சக்கணக்கான கைத்தொழில்கள் மூடப்பட்டுள்ளன. மறுபக்கத்தில் பராட்டே சட்டத்தின்படி உயர்மட்ட வைத்தியசாலைகள்கூட வங்கிகளுக்கு சொந்தமாகிவிட்டன. மறுபுறத்தில் மின்சார பில்லைச் செலுத்த முடியாமல் போனமையால் ஏறக்குறைய 10 இலட்சம் சாதாரண பாவனையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிலைமையில் மின்சார சபையின் நிருவாகத்திற்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் நியாயமான செலவுகள் பற்றி மறுபரிசீலனை செய்யவேண்டிய பொறுப்பு நிலவுகின்றது. மின்சாரத்தை வழங்குபவர் நியாயமாக செயலாற்றாவிட்டால் மக்களுக்கு நியாயத்தை நிலைநாட்டுவது ஆணைக்குழுவின் செயற்பொறுப்பாகும். கடந்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்தில் 18% ஆல் மின்சார பில்லை அதிகரிப்பதற்காக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கிய புள்ளிவிபரங்கள் வழுக்கள் நிறைந்தவையாகும். கடந்த வருடத்தின் செத்தெம்பர் மாதத்தில் மின்சார சபையின் நட்டம் 51 பில்லியன் என அவர்கள் கூறினார்கள். ஒரு மாதத்திற்குள் நட்டத்தை 18 பில்லியன்வரை குறைத்துக்கொண்டதாக அவர்கள் கூறினார்கள். மின்சாரசபை முன்வைக்கின்ற தகவல்களை அவ்வண்ணமே ஏற்றுக்கொள்வது நியாயமானதல்ல. இத்தடவையும் எதிர்பார்த்த இலாபம் 23 பில்லியன் என தொடக்கத்தில் கூறினாலும் தொழிற்சங்கங்கள் அறிவித்த பின்னர் அதனை 94 பில்லியன் வரை மாற்றியமைத்துள்ளார்கள்.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் மின்சார பில்லை அதிகரிக்கையில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு 13 நிபந்தனைகளை முன்வைத்தது. 2023 டிசம்பர் தொடக்கம் 2024 மார்ச் வரையான காலப்பகுதிக்குள் இந்த நிபந்தனைகள் ஈடேற்றப்படவேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் மின்சார பில்லை அதிகரித்தலுடன் தொடர்புடைய ஒரு நிபந்தனையேனும் இதுவரை ஈடேற்றப்படவில்லை. அமைச்சரின் பிரதிபிம்பத்தை பெரிதாக்கிக் காட்டவும் அரசாங்கத்தின் அவசியப்பாட்டுக்கு அமைவாகவும் சபை செயற்பட்டு வருகின்றமை நன்றாகவே தெளிவாகின்றது. எமக்கு கிடைக்கின்ற தகவல்களின்படி குறைந்தபட்சம் 37%ஆல் மின்சார பில்லைக் குறைப்பதற்கான இயலுமை இன்றளவில் நிலவுகின்றது. மக்களும், கைத்தொழிலதிபர்களும் சம்பாதிப்பது லயிற் பில் செலுத்துவதற்காக மாத்திரமல்ல என்பதை ஜனாதிபதியை உள்ளிட்ட அரசாங்கம் அறிந்துகொள்ள வேண்டும். மின்சார விலையக் குறைப்பதன் மூலமாக அரசாங்கத்திற்கு பாரிய நன்மைகள் கிட்டும். குறைக்கக்கூடிய உச்ச அளவில் மின்சார பில்லைக் குறைக்குமாறே நாங்கள் வலியுறுத்துகிறோம்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கான பதில்கள்
கேள்வி:- உங்களின் ஆட்சியின்கீழ் கூறுகின்ற இதேமாதிரி மின்சார பில்லைக் குறைத்த நிவாரணம் வழங்குவீர்களா?
பதில் :- சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் எமது பொருளாதாரக் கொள்கையின் இயக்க விசையாக மாற்றப்படுவார்கள். மறுபுறத்தில் பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலைகளை இயலுமானவரை குறைத்து மக்களின் கொள்வனவு ஆற்றலை அதிகரிப்போம். இந்த ஒட்டுமொத்த பொருளாதார செயற்பாங்கிற்குள் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கக்கூடிய துறைகளில் நிவாரணங்களை வழங்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதுவரை மேற்கொண்ட பொருளாதாரப் பயணத்தை இனிமேலும் தொடரமுடியாது. ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் அந்த தவறான பாதையிலேயே தொடர்ந்தும் வேகமாக பயணிக்க முயற்சி செய்கின்றது. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் கைத்தொழிலதிபர்களுக்கும் பொதுமக்களுக்கும் பொருளாதாரத்தின் பங்காளிகளாக செயலாற்றுவதற்கான இடவசதிகள் அனைத்தையும் வழங்குவோம். மின்சார சபையே சமர்ப்பித்த கணக்குகளில் நிலவுகின்ற மோசடியான மற்றும் தவறான செயற்பாடுகளின் தரவுகளைத்தான் நாங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தோம். 37 வீதத்திற்கு கிட்டிய அளவினால் மின்சார பில்லைக் குறைத்து சபைக்கு நட்டமேற்படாதவகையில் பேணிவர முடியுமென்பதை அதற்கிணங்கவே நாங்கள் தெளிவுபடுத்தினோம். பூநகரியில் சூரிய சக்தி வலு பிறப்பாக்கத்தின் மூலமாக ஓர் அலகிளை ரூபா 52 இற்கே கொள்வனவுசெய்ய தயாராகி வருகிறார்கள். எனினும் நிலக்கரியால் உற்பத்தி செய்யப்படுகின்ற ஓர் அலகு மின்சாரத்திற்காக ரூபா 22 மாத்திரமே செலவாகின்றது. இந்த சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் மூலமாக நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தயாரில்லை என்பது அதன்மூலமாகவே தெளிவாகின்றது.
கேள்வி:- தற்போது இருக்கின்ற உத்தியோகத்தர்கள்தான் உங்களுடைய அரசாங்கம் வந்தாலும் இருப்பார்கள். ஒரு தடவை அமைச்சருக்கும் தவறாக தகவல்களைக் கொடுத்திருந்தார்கள். அது சம்பந்தமான சிக்கலை எவ்வாறு தீர்த்துக்கொள்ளப் போகிறீர்கள்?
பதில் :- மின்சக்தி அமைச்சருக்கு வழங்கிய தகவல்களில் கொள்திறன் கிரயம் அதிகரித்தமை பற்றிக் கேள்வியெழுப்பக் கூடாதா? விநியோக செலவுகள் அதிகரித்த விதம் பற்றிக் கேள்வியெழுப்பக் கூடாதா? கடன்வட்டிவீதம் குறைவடைந்திருக்கையிலும் வட்டி செலுத்துவதற்காக பெருமளவிலான பணத்தொகை செலவாகின்றவிதம் பற்றிக் கேள்வியெழுப்பக் கூடாதா? ஊழல்நிறைந்த உத்தியோகத்தர்கள் அமைச்சருடன் கூட்டுச்சேர்ந்து திருட்டில் ஈடுபட்டால் நீங்கள் கூறுகின்ற பிரச்சினை உருவாகும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் அவ்வாறு இடம்பெற மாட்டாதென்பதை அனைவரும் அறிவார்கள்.
கேள்வி:- சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவரத் தயாராகி இருக்கிறார்கள். அது சம்பந்தமாக உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில் :- சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுவது ஏனோதானோ என்றல்ல. தெளிவாக அரசியலமைப்புச்சார்ந்த விடயமொன்றுக்காகவே. ஒன்லயின் சேஃப்டி பில் தொடர்பாக சட்டத்துறை தலைமை அதிபதியாலேயே சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்கள் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறுகையில் உள்ளடக்கப்படாமை காரணமாகவே. இது மிகவும் தவறான ஒரு முன்னுதாரணமாகும். சமர்ப்பிக்கப்படுகின்ற சட்டமூலம் மீதான விவாதம் நடாத்தப்பட்டு சம்பந்தப்பட்ட திருத்தங்கள் பிரிவுவாரியாக அதே தருணத்தில் ஆராய்ந்து பார்ப்பதற்கான காலம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைப்பதில்லை. சபாநாயகர் தனது பணியாட்டொகுதியுடன் இணைந்து அந்த பிரிவுகளைச் சேர்த்துள்ளதாக நம்பப்படுகின்றது. எனினும் இங்கு பாராளுமன்ற மரபுகள், நீதித்துறையின் உன்னதநிலை மற்றும் நம்பிக்கை மீறப்படுகின்றவகையில் சபாநாயகர் நடந்துள்ளமையே நேர்ந்துள்ளது. அதனால் தேசிய மக்கள் சக்தி சபநாயகருக்கு எதிராக செயலாற்றும்.
கேள்வி:- புதிய பொலீஸ் மா அதிபர் நியமனம் பற்றிய உங்களின் அபிப்பிராயமென்ன?
பதில் :- பொலீஸ் மா அதிபர் நியமனம் பெரிதும் சிக்கல் நிறைந்ததாகும். ஒருசில விடயங்கள் சரச்சைக்குரியனவாகும். 2023.12.14 ஆந் திகதி S.C.S.R./2011 இலக்கமுடைய வழக்கு சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதியரசர் குழாத்தின் தீர்ப்பு மூலமாக நியமிக்கப்பட்ட இந்த பொலீஸ் மா அதிபருக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் பற்றிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு சித்திரவதை கொடுத்தமை தொடர்பாக சர்வதேச சமவாயத்தை மீறியதாக, நாட்டின் அரசியலமைப்பினை மீறியதாக உயர்நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக இன்றளவிலும் மனித உரிமைகள் மீறப்பட்டமை சம்பந்தமாக பொலீஸ் மா அதிபருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் சில வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. உயிர்த்தஞாயிறு தாக்குதலைத் தடுக்காமை பற்றி பல தரப்பினர் அவருக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்கள்.
அதைப்போலவே பொலீஸ் மா அதிபர் நியமனத்தின்போது அரசியமைப்புப் பேரவையின் அங்கீகாரம் பெறுதல் பற்றிய மற்றுமொரு பிரச்சினை நிலவுகின்றது. அரசியலமைப்புப் பேரவையின் அங்கீகாரத்திற்கு கட்டுப்பட்டதாகவே பொலீஸ் மா அதிபரை நியமிப்பதற்கான அதிகாரம் சனாதிபதிக்கு கிடைகின்றது. இத்தகைய நியமனங்களின்போது அரசியலமைப்புப் பேரவையின் அங்கீகாரம் பெறப்படவேண்டியது எவ்வாறு என்பது 41E (7 ) எனும் உறுப்புரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தீர்மானம் தொடர்பிலும் அரசியலமைப்புப் பேரவையின் ஏகோபித்த அங்கீகாரம் பெறப்பட முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. எனினும் அத்தகைய ஏகோபித்த தன்மை இங்கு கிடையாது. அடுத்ததாக ஏகோபித்த தன்மை இல்லாத சந்தர்ப்பத்தில் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் ஐவருக்கு குறையாத எண்ணிக்கையுடையோரால் அங்கீகரிக்கப்படல் வேண்டும். சபாநாயகரை உள்ளிடக்கியதாக அரசியலமைப்பு பேரவையில் ஒன்பதுபேர் இருக்கிறார்கள். ஏதேனும் விதத்தில் 4:4 என பிரிந்த தீர்ப்பு வந்தால் மாத்திரம் சபாநாயகருக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்கும். 41E (5) உறுப்புரையில் அது காட்டப்பட்டுள்ளது. எமக்கு கிடைத்த தகவல்களின்படி சார்பாக நால்வரே இருந்துள்ளார்கள். இருவர் எதிராகவும் இருவர் வாக்களிப்பதை தவிர்த்தும் இருந்துள்ளார்கள். அதன்படி இந்த பொலீஸ் மா அதிபர் அரசியலமைப்புப் பேரவையின் தத்துவங்கள் மீறப்பட்டே நியமிக்கப்பட்டுள்ளார். அவ்வாறான அனைத்து விடயங்களையும் கவனத்திற்கொண்டால் இந்த பொலீஸ் மா அதிபர் பல்வேறு சிக்கல்களை எஞ்சவைத்தே நியமிக்கப்பட்டுள்ளார். உள்நாட்டுரீதியாகவும் சர்வதேசரீதியாகவும் எமது நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டம் பற்றிய பல்வேறு சிக்கல்களை எஞ்சவைத்தே நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
(தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் மாநாடு – கம்பஹா மாவட்டம் – 2024.02.25) இங்கு குழுமியுள்ள பெண்கள் பொருளாதாரச் சீரழிவினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்களாவர். நாட்டின் குற்றச்செயல்களை தாங்கிக்கொண்டு தமது பிள்ளைகளைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்தார்கள். தமது நகைநட்டுகளை அடகுவைத்து பிள்ளைகளுக்கு கல்விபுகட்டி இறுதியில் தம்மைக் கைவிட்டு வெளிநாடு செல்ல எத்தனிக்கையில் கண்ணீர் வடித்துக்கொண்டு பொறுத்திருந்தார்கள். பொறுத்தது போதும். தற்போது எழுச்சிபெறுவது பெண்களின் வெறும் மண்டைகள் மாத்திரமல்ல. பொறுமையின் எல்லையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற திடசங்கற்பத்துடன் ஆயிரக்கணக்கான பெண்கள் […]
(தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் மாநாடு – கம்பஹா மாவட்டம் – 2024.02.25)

இங்கு குழுமியுள்ள பெண்கள் பொருளாதாரச் சீரழிவினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்களாவர். நாட்டின் குற்றச்செயல்களை தாங்கிக்கொண்டு தமது பிள்ளைகளைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்தார்கள். தமது நகைநட்டுகளை அடகுவைத்து பிள்ளைகளுக்கு கல்விபுகட்டி இறுதியில் தம்மைக் கைவிட்டு வெளிநாடு செல்ல எத்தனிக்கையில் கண்ணீர் வடித்துக்கொண்டு பொறுத்திருந்தார்கள். பொறுத்தது போதும். தற்போது எழுச்சிபெறுவது பெண்களின் வெறும் மண்டைகள் மாத்திரமல்ல. பொறுமையின் எல்லையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற திடசங்கற்பத்துடன் ஆயிரக்கணக்கான பெண்கள் எழுச்சியடைந்துள்ளார்கள். இங்கு பங்கேற்றுள்ளவர்கள் வேதனைகளால் பிறந்த உணர்வு, திடசங்கற்பம், நோக்கம் மற்றும் கனவு கலந்த பெண்களாவர். உங்களின் இந்த எழுச்சி நிச்சயமாக எமது நாட்டுக்கு வெற்றியைப் பெற்றுத்தருவது திண்ணமே. மாத்தறையில் இருந்து தொடங்கிய பெண்களின் சேர்க்கை நிச்சயமாக வெற்றியடைய முடியுமென்பது மீண்டும்மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அசைகின்ற பல்லைப்போன்ற ஒரு அரசாங்கத்தை நாங்கள் கட்டியெழுப்பிவிடலாகாது. மக்களின் கடப்பாடுகளுடனான பலம்பொருந்திய ஆட்சியையே கட்டியெழுப்பவேண்டும். இந்த 07 மாதங்களில் உச்ச அளவிலான அர்ப்பணிப்புடன் செயலாற்றி பலம்பொருந்திய வெற்றியை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.
அத்தனகல்ல தலைவியில் தொடங்கி மேலும் பலருக்கு செவிசாய்த்த பெருந்தொகையானவர்களே இங்கு குழுமியுள்ளார்கள். அந்த தலைவர்களும் தலைவிகளும் வெற்றியீட்டிய பின்னர் அவர்களிடம் நிலவிய நலமான பிரார்த்தனைகள் அவர்களின் கண்ணெதிரில் சிதைக்கப்பட்டன. அண்மைக்காலத்தில் மிகவும் அதிகமான நல்ல பிரார்த்தனைகளுடன் கட்டியெழுப்பியது கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியாகும். கோட்டாபய ராஜபக்ஷவுடன் மகிந்த ராஜபக்ஷவிற்குகூட விளையாட்டுக்காட்ட முடியாதென அவர்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கை சிதைக்கப்பட்டதுமே மக்கள் எழுச்சிபெற்று அவரை விரட்டியடித்தார்கள். வெகுவிரைவில் அவர்களின் அனைத்துக் குழுக்களும் ஒரே மேடையில் தோன்றுவார்கள். 94 இல் சனாதிபதியான சந்திரிக்கா, 2005 இல் சனாதிபதியான மகிந்த ராஜபக்ஷ, 2015 இல் சனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, 2019 இல் சனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் 2022 இல் சனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க வெகுவிரைவில் ஒரே மேடைக்கு ஏறுவார்கள். எதிர்வருகின்ற தேர்தலில் அவர்களின் மேடை இலங்கையின் பலவர்ண மேடையாக அமையும். அது நன்மைக்காக அல்ல. புதுவருடப் பிறப்பின்போது வினோதஉடை போட்டியைப்போல் கட்டியெழுப்பப்பட்டு வருகின்ற மக்கள் வெற்றிக்கு எதிராகவே அவர்கள் வருகிறார்கள். சஜித்திற்கும் ரணிலுக்கும் இடையில் தனிப்பட்ட முரண்பாடு இல்லாவிட்டால் அவர்கள் இருவரும் ஒரே மேடைக்கு வருவார்கள். எனினும் நாங்கள் ஒன்றை அறிவோம். அவர்கள் ஊழல்மிக்க பிரபுக்கள் பொறியமைப்பாவர். ஊழல்மிக்க பிரபுக்கள் பொறியமைப்பினை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரே மூச்சுடன் ஒன்றுசேர்வதே அவர்களின் நோக்கமாகும். மக்களின் அபிப்பிராயத்தை மாற்றியமைப்பதற்காக ஊடகப் பலத்தை உள்ளிட்ட பலவிதமான சாதனங்கள் அவர்களிடம் உண்டு. தேசிய மக்கள் சக்தியிடம் இருப்பது மக்களின் எழுச்சி மாத்திரமேயாகும். சுயாதீனமான நடுநிலை அவதானிப்பாளர்கள் போன்ற எவராலுமே நிலவ முடியாது. ஒன்றில் ஊழல்மிக்க பிரபுக்கள் அமைப்பின் பாதுகாவலர்கள் அல்லது பொதுமக்களின் அவசியப்பாடுகளுக்காக செயலாற்றுபவர்கள்.

மோசடியும் ஊழலுமற்ற அரசியல், சட்டம் அனைவருக்கும் அமுலாக்கப்படுகின்ற அரசியல், தேசிய வளங்களை விற்றுத்தீர்ப்பதற்கு எதிரான அரசியல் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக செயலாற்றுகின்ற அரசியல் பொதுமக்களின் அவசியப்பாடாக நிலவியது. மே 09 ஆந் திகதி கோல்பேஸ் போராட்டம்மீது தாக்குதல் நடாத்தியவேளையில் துறைமுகத்தில், தேசிய வைத்தியசாலையில் மற்றும் வேறு இடங்களிலிருந்து மக்கள் ஓரேயடியாக கோல்பேஸ் நோக்கி ஓடினார்கள். தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்மாணிப்பதற்காக அணிதிரண்டார்கள். அதனால் பொதுமக்களின் தேவையும் ஊழல்மிக்க பிரபுக்கள் தலைமுறையின் தேவையும் தெளிவான பிரிகைக்கோடு மூலமாக பிரிக்கப்படுகின்ற தருணத்தில் நடுநிலையாக எவராலுமே இருக்க முடியாது. கம்பஹா மாவட்டத்தின் பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஒன்றுசேர்வதன் மூலமாக சுட்டிக்காட்டுவது அதனையே. 76 வருடங்களாக பாதிக்கப்பட்ட மக்கள் இருண்டதெல்லாம் பேய் என்ற பயத்துடனேயே இருக்கிறார்கள். பசில் ராஜபக்ஷ அமைச்சர் பதவியில் நீங்கியதும் ஊடக சந்திப்பில் வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக கூறினார்கள். கோட்டாபய ராஜபக்ஷ சனாதிபதியானதும் உடனடியாக சனாதிபதிக்கு எதிராக வழக்கு விசாரணை மேற்கொள்ள இயலாதென்பதால் எல்லாவற்றையும் வாபஸ் பெற்றுக்கொண்டார்கள். இவ்விதமாக எல்லாவற்றினாலும் பாதிக்கப்பட்ட மக்களே இருக்கிறார்கள். அதனால் எம்மை எவ்வாறு நம்புவதென எங்களிடம் கேட்கிறார்கள். நாங்கள் உங்களுக்கு ஓர் உத்தரவாதம் அளிக்கிறோம். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை கடுகளவேனும் பங்கமேற்பட இடமளிக்க மாட்டோம் என்பதை உறுதியாகக் கூறுகிறோம். வரலாற்றில் அவர்களின் தேவைகள் – மக்களின் தேவைகள் என இருவிதமான தேவைகள் நிலவின. இலங்கையில் முதல்த்தடவையாக நாங்கள் ஒன்றுசேர்ந்து ஆளுகையின் தேவைகள் மற்றும் மக்களின் தேவைகள் சமச்சீராக அமையத்தக்க அரசாங்கமொன்றை அமைத்திடுவோம்.
பொருளாதாரத்தின் வீழ்ச்சி நாட்டையும் மக்களையும் பாதிக்கின்றது. அரசாங்கத்திற்கு செலவுசெய்ய திறைசேரியில் பணம் இல்லாமை நாட்டைப் பாதித்துள்ளது. இந்த வருடத்தில் மதிப்பீடுசெய்யப்பட்ட அரசாங்கத்தின் வருமானம் 4164 பில்லியன் ரூபாவாகும். இந்த தடவை கடன் தவணை செலுத்துதல், வட்டித் தவணை செலுத்துதல் மற்றும் அரசாங்க செலவினங்களுக்காக 11,277 பில்லியன் ரூபா செலவாகின்றது. பொருளாதாரமொன்று வீழ்ச்சியடைந்ததும் உள்நாட்டைப் போன்றே நாட்டுக்கு இறக்குமதி செய்யவேண்டிய பண்டங்களுக்கான டொலர் இல்லாமல் போகின்றது. இன்றளவில் பாடசாலை உபகரணங்களை உள்ளிட்ட கல்விமீதும் வற் வரி விதிக்கப்படு்டுள்ளது. அதைப்போலவே ஓளடத உற்பத்திக்கு அவசியமான மூலப்பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதும் வரி விதிக்கப்பட்டுள்ளது. பாரிய வரி வலையமைப்பில் மக்களை சிறைப்படுத்தி மின்சாரத்தை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 10 இலட்சம் பேர்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் சீரழிந்ததும் தொழில்கள் உருவாக மாட்டாது. நாங்கள் கட்டியெழுப்புகின்ற பொருளாதாரத்தில் அத்தியாவசிய பண்டங்களினதும் சேவைகளினதும் விலைகள் குறைவடைகின்ற, உற்பத்தி அதிகரிக்கின்ற, பிள்ளைகளுக்கான தொழில்கள் பிறக்கின்ற புதிய பொருளாதார திட்டமொன்றை அமுலாக்குவோம். மின்சாரத்திற்கான செலவினை இரண்டு வருடங்களில் 2/3 ஆல் குறைக்கமுடியும். அதைப்போலவே சரியான பெறுகை செயற்பாங்கினை கடைப்பிடியாமையால் அரசாங்கம் 30,000 கோடி ரூபாவினை இழக்கின்றது. மறுபுறத்தில் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வரிவலையிலிருந்து வெளியேற, வங்கிகளுக்கு பொல்லுவைத்திட இடமளித்துள்ளார்கள். அதனை நிறுத்தி மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ள சுமையை பாரியளவில் குறைக்க முடியும்.

புதிய தலைமுறையினர் எட்டு மணித்தியால வேலையை செய்வதற்குப் பதிலாக சுதந்திரமாக தொழிலில் ஈடுபட எதிர்பார்க்கிறார்கள். அதற்காக எமது பொருளாதாரத் திட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி வர்க்கமொன்று உருவாகும். ஆபிரிக்க பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்துவருகின்ற சந்தைக்காக இப்போதிருந்தே திட்டங்களை வகுத்திடவேண்டும். சர்வதேசரீதியாக புதிய சந்தையை உருவாக்கிடாமல் அந்த சந்தைக்கு அவசியமான பண்டங்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்யாமல் முன்நோக்கி நகரமுடியாது. தேசிய மக்கள் சக்தியால் அதற்கான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்ற செயற்பாங்கு ஆரம்பிக்கப்படும். அதைப்போலவே குற்றச்செயல் புரிபவர்கள் பாதுகாக்கப்படுகின்ற நிலைமைக்கு முற்றுப்புள்ளிவைத்து சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்திடுவோம். கள்ளத்தனமாக உருவாக்கிய ஒரு நாடு உலகில் எங்குமே கிடையாது. பொதுமக்களிடமிருந்து திருடிய செல்வத்தை மீளவும் கையகப்படுத்துகின்ற ஆட்சியொன்றை கட்டியெழுப்புவோம். தற்போது அமுலில் இருப்பது ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்ற கல்வியாகும். முதலாவது வருடத்தில் சேர்கின்ற ஒவ்வொரு பிள்ளையையும் மருத்துவராக மாற்றுகின்ற நேர்கோட்டுப் பாதையை முன்னெடுத்து வருவதற்குப் பதிலாக பிள்ளைகளின் பரந்துவிரிந்த திறன்களை வளர்த்தெடுக்கின்ற விரிவான பாதையொன்றை அமுலாக்கவேண்டியது அவசியமாகும். சமூகமொன்று நிலவவேண்டுமாயின் சமூக கௌரவத்தைக்கொண்ட தொழில்சார் திறன்களைக்கொண்ட பலவிதமான தொழில்கள் நிலவவேண்டும். எமது கல்வியை அதற்கேற்ற நவீனமயமாக்கிய நிலைமைகளுடன் ஒத்திசைவு செய்யவேண்டும். ஜப்பானின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தாலும் பிரஜைகள் ஆணிமுறிச்சிகளாக மாறியுள்ளார்கள். அத்தகைய ஒரு நிலைமை எமக்கு பயனுறுதியானதல்ல. ஒத்துணர்வுகொண்ட சமூகமொன்றைக் கட்டியெழுப்பவேண்டியது அவசியமாகும். கலை, இலக்கியத்தை இரசிக்கின்ற, புதிய மனோபாவரீதியான மாற்றத்தை ஏற்படுத்துகின்ற ஆட்சியொன்றைக் கட்டியெழுப்பவேண்டியது அவசியமாகும்.
அனைத்துப் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காக பொலீஸ், இராணுவம் ஈடுபடுத்தப்படவேண்டும். சமூகப் பாதுகாப்பு அவசியமாகும். புதிய எதிர்பார்ப்பினைக்கொண்ட சமூகமொன்றை நாங்கள் உருவாக்குவோம். அதற்காக பெரும்பான்மையான மக்களின் எழுச்சி அவசியமாகும். 1948 இல் வெள்ளைக்காரனிடமிருந்து விடுதலைபெற்றவேளையில் பாரிய மகிழ்ச்சியுணர்வு ஏற்பட்டிருக்கக்கூடும். 450 வருடங்களாக பல மேலைத்தேய நாடுகளுக்கு கட்டுப்பட்டு இருந்து 133 வருடங்கள் முற்றாகவே வெள்ளைக்காரனுக்கு கட்டுப்பட்டிருந்து சுதந்திரம் பெற்றது எத்தகைய தேசிய புத்துணர்ச்சியை எற்படுத்தியிருக்க வேண்டும்? இத்தடவை சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் சுற்றிக்கைகள் மூலமாக அரசாங்க நிறுவனங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. ஆனால் எம்மோடு இணையாக சுதந்திரம்பெற்ற இந்தியாவில் மொழி பேதங்கள், பிரதேச வேறுபாடுகள், சமய வேறுபாடுகள் அனைத்துமே ஒருபுறம் தள்ளிவைக்கப்பட்டு ஒருகொடியின் நிழலில் ஒன்றுதிரண்டது. இறுதியில் அப்துல் கலாம் சனாதிபதியானார். மன்மோகன் சிங் பிரதமரானார். தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவரென அங்கீகரிக்கப்பட்ட ஒரு பெண் சனாதிபதியானர். அதற்காக எவ்வளவு முன்னேற்றமடைந்த நோக்கு இருக்கவேண்டும்? எனினும் எமது நாட்டில் 1949 இல் மலையக மக்களின் பிரஜாவுரிமை ஒழிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் செல்வநாயகம் தமிழ் அரசுக் கட்சியை நிறுவினார். 1956 இல் மொழிப் பிரச்சினை. 1958 இல் தமிழ்- சிங்கள கலவரம். 1965 அளவில் “டட்லியின் வயிற்றில் மசாலை வடை” எனக்கூறி ஊர்வலமாக சென்றார்கள். 1976 அளவில் வடக்கில் ஆயுதமேந்திய போராட்டம் தோன்றியது. 1981 இல் யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. 1983 இல் செட்டியார் தெருவை தீக்கிரையாக்கினார்கள். இறுதியாக 2019 இல் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் 2015 இல் மலட்டுக்கொத்து, மலட்டு உடைகள் வந்து 2019 இல் உயிர்த்தஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எமக்கு எமது நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டினை ஏற்படுத்துவதற்கான திட்டமொன்று இருக்கவில்லை.
உலகம் பாய்ச்சலுடன் முன்நோக்கி நகரும்போது எமது ஆட்சியாளர்கள் எம்மை வரலாற்று மோகத்தில் சிறைவைத்தார்கள். உலகத்தில் மாறிவருகின்ற நவீனத்துவத்தை உறிஞ்சிக்கொள்ள எமக்கு இயலாமல் போயிற்று. உலகில் வேகமாக ஓடுகின்ற தொடர் ஊர்தியை கண்டுபிடிக்கையில் இரவு 10 மணிக்குப் பின்னர் ஊருக்குப்போக எமக்கு பேருந்து கிடையாது. வெள்ளைக்காரனுக்கு இரண்டாம்பட்சமாக அமையாத ஒரு நாட்டை உருவாக்குவதற்கான நோக்கு எம்மிடம் இருக்கவில்லை. தற்போது 76 வருடகால ஊழல்மிக்க அரசியலை தோற்கடித்து அந்த நுகத்தடியில் இருந்து விடுபட்டு நாட்டு மக்கள் புதிய தேசிய உணர்வுடன் முன்நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். 76 வருடகால ஊழல்மிக்க ஆட்சியிலிருந்து விடுபட்டமை வெள்ளைக்காரனிடமிருந்து எமது நாடு சுதந்திமடைந்ததைவிட மிகப்பெரிய உணர்வினை எமக்கு உணர்த்தும். எமது வாழ்நாளில் கிடைக்கின்ற மிகப்பெரிய மகிழ்ச்சியை இந்த தேசிய புத்தெழுச்சி, மலர்ச்சி ஊடாக எமது நாட்டுக்கு புதிய பாதையொன்றைத் திறந்துவிடுவதன் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும். அதற்காக நாமனைவரும் எழுந்திடுவோம். நாமனைவரும் அதற்காக மல்லுக்கட்டுவோம். அதற்காக நாமனைவரும் ஒன்றுசேர்வோமென உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

(தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதிசார் ஒன்றியத்தின் கொழும்பு மாவட்ட மாநாடு-கொழும்பு சினமன் கிறேன்ட் ஹோட்டலில் -2024.02.25) நாங்கள் இரண்டு பிரதான சவால்களை எதிர்நோக்கி இருக்கிறோம். முதலாவது அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது. இரண்டாவது அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் நாட்டைக் கட்டியெழுப்புவது. இது இரண்டு சவால்களாக விளங்கியபோதிலும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கின்ற பாதையிலேதான் நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பாதையும் உள்ளது. கடந்த காலங்களில் எமது நாட்டில் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மற்றுமொரு பாதையும் தெரிவுசெய்யப்பட்டது. பொதுவாக எமது நாட்டின் அதிகாரம் கைமாறியது மற்றவருக்கு […]
(தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதிசார் ஒன்றியத்தின் கொழும்பு மாவட்ட மாநாடு-கொழும்பு சினமன் கிறேன்ட் ஹோட்டலில் -2024.02.25)

நாங்கள் இரண்டு பிரதான சவால்களை எதிர்நோக்கி இருக்கிறோம். முதலாவது அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது. இரண்டாவது அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் நாட்டைக் கட்டியெழுப்புவது. இது இரண்டு சவால்களாக விளங்கியபோதிலும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கின்ற பாதையிலேதான் நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பாதையும் உள்ளது. கடந்த காலங்களில் எமது நாட்டில் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மற்றுமொரு பாதையும் தெரிவுசெய்யப்பட்டது. பொதுவாக எமது நாட்டின் அதிகாரம் கைமாறியது மற்றவருக்கு எதிராகவே. 2005 அரசாங்கம் வடக்கின் தமிழ் மக்களுக்கு எதிராகவே கட்டியெழுப்பப்பட்டது. 2010 இன் யுத்த வெற்றி மற்றவருக்கு எதிராகவும் 2019 முஸ்லீம் மக்களுக்கு எதிராகவும் கட்டியெழுப்பப்பட்டது. எனினும் அது வெற்றிகரமான பாதையல்ல. மக்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்துகின்ற பாதையில் இந்த நாட்டை மாற்றியமைத்திட வேண்டும்.
நாங்கள் மக்களை ஒழுங்கமைக்கையில் சவால்களை எதிர்நோக்குகின்ற இரண்டு இடங்கள் இருக்கின்றன. ஒன்றுதான் கிராமியரீதியாக அடிமட்டத்தில் வசிக்கின்ற கிராமிய மக்கள். ஏனையோரது கூட்டங்களில் அப்படிப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம் ஓரளவு அதிகமென்பது புலனாகின்றது. அவர்களை நிர்க்கதிநிலைக்கு உள்ளாக்கி, பொருளாதாரீதியாக வீழ்ச்சியடையச் செய்வித்து, அவர்களின் பிள்ளைகளுக்கு புத்தகங்கள் அல்லது சுப்பர் மார்கெற்றில் இருந்து பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான கூப்பன் அட்டையைக் கொடுக்க வாக்குறுதியளித்து இந்த அழைப்பினை விடுக்கிறார்கள். இந்த அடிமட்டத்திலேயே இருக்கின்ற மக்களை இந்த பணிக்காக எவ்வாறு ஈடுபடுத்துவது எனும் சவால் எம்மெதிரில் இருக்கின்றது. சமூகத்தில் ஒருவிதமான உயர்ந்த அடுக்கில் இருப்பவர்கள் எம்முடன் நெருக்கமாக இல்லை. அவர்களால் எமது கதைகளை உணரமுடியாது. அதனால் அவர்கள் நூறு தடவைகளுக்கு மேல் பதிலளித்துள்ள கேள்விகள் மீண்டும் அவர்களின் கேள்விகளாக மாறியுள்ளன. எம்முடன் முட்டிமோதாத கவனத்திற்கு இலக்காகாத குழுவொன்று இருக்கின்றது. இந்த குழுவினர் மத்தியில் எமது அபிப்பிராயத்தைக் கொண்டுசெல்வது எவ்வாறு என்பது தொடர்பில் எமது கவனஞ் செலுத்தப்பட வேண்டியுள்ளது. அது எமது இரண்டாவது சவாலாகும். அந்த குழுவினர்மீது எமது கவனத்தைச் செலுத்த நான் முயற்சி செய்கிறேன்.

நாங்கள் பொருளாதாரத்துறை, சட்டத்தின் ஆட்சி, வினைத்திறனற்ற அரச ஆளுகை, குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றமை என்றவகையில் அரசின் அனைத்து முறைமைகளும் சீரழிந்துள்ள ஒரு தேசமாகும். எம்முடன் நெருக்கமான துறைகளை நாங்கள் அதிகமாக உணர்கிறோம். எமக்கு ஒட்டுமொத்த முறைமையினதும் மாற்றமொன்று தேவை. கடந்த நூற்றாண்டு உலகிற்கு பாரிய வெற்றிகளைப் பெற்றுத்தந்த நூற்றாண்டாகும். உலகின் பெரும்பாலான நாடுகள் நிகழ்கால அபிவிருத்தி மட்டத்தை அடைவதற்கான அத்திவாரத்தை இருபதாம் நூற்றாண்டிலேயே அமைத்துக்கொண்டன. நாங்கள் இருபதாம் நூற்றாண்டினை கைவிட்ட மனிதர்களாவோம். நாங்கள் ஏறக்குறைய 450 வருடங்களாக ஏதேனுமோர் ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டிருந்த நாடாவோம். 133 வருடங்கள் முழுமையாகவே வெள்ளைக்கார ஏகாதிபத்தியவாதிகளுக்கு கட்டுப்பட்டிருந்து 1948 இல் சுதந்திரம் அடைகிறோம். பல்வேறு மொழிகள், சாதிப் பிரிவினைகள், கிராமிய வறுமைநிலை பலவிதமாக பரந்துகாணப்பட்ட இந்தியா 1947 இல் சுதந்திரம் அடைகையில் நேரு, காந்தி, பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் இந்திய தேசியக் கொடியின்கீழ் அனைத்து மக்களையும் ஒருங்கிணைப்பதில் வெற்றிபெற்றார்கள். சுதந்திரம் பெறும்போது நிலவிய கருத்தியல் இன்று சந்திரனுக்குச் செல்கின்ற இந்தியாவை உருவாக்கி இருக்கின்றது. இந்த கருத்தியல்தான் அப்துல் கலாம் போன்ற ஒருவரை சனாதிபதியாக்கியது. சீக்கியர் ஒருவரை பிரதமராக்கியது. தாழ்ந்த குலத்தை சேர்ந்தவரெனக் கருதப்பட்ட ஒரு பெண்ணை சனாதிபதியாக்கியது. அந்த நோக்குதான் இன்று பிரமாண்டமான அபிவிருத்திப் பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது. வியட்நாம், சீனா, தென் கொரியா போன்ற நாடுகளுக்கு அந்த நோக்கு இருந்தது.
133 வருடங்களாக வெள்ளைக்கார ஏகாதிபத்தியவாதிகளுக்கு அடிமைப்பட்டிருந்த எமக்கு 1948 இல் சுதந்திரம் கிடைத்தவேளையில் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான மாபெரும் புத்துணர்ச்சியைக் கட்டியெழுப்பவேண்டி இருந்தது. இன்று நாங்கள் சுதந்திரத்தைக் கொண்டாடுகையில் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டே தேசிய கொடியை ஏற்றிவைக்க வேண்டியுள்ளது. நாம் பெற்றுக்கொள்கின்ற சுதந்திரமானது மக்களின் ஆன்மீகத்தை தட்டியெழுப்புகின்ற, நாட்டுக்கு தேசத்திற்குப் புதிய விழித்தெழலை ஏற்படுத்துதல்வரை கொண்டுசெல்கின்ற பயணமென்பதை எவருக்கும் உணர்த்தப்படவில்லை. நாங்கள் சுதந்திரம் அடைகையில் எமது நாட்டை இட்டுச்செல்லவேண்டிய திசைபற்றிய பொருளாதார நோக்கு, திட்டம் எமக்கு இருக்கவில்லை. எமது கொள்கை பிறரை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதாகும். இந்தியாவின் பயணப்பாதை ஒன்றுசேர்க்கின்ற வரலாற்றினைக் கட்டியெழுப்புகையில் எம்மவர்கள் அடிபட்டுக் கொண்டார்கள்.

எமது நாட்டின் திசை பற்றி வெளியில் தனிவேறான உரையாடலொன்று நிலவியது. அதில் பலம்பொருந்தியவராக விளங்கியவர் பொறியியலாளர் திரு. விமல சுரேந்திர. ஆங்கிலேய பொறியிலாளர்களின் ஆதிகத்திற்கு எதிராக திரு. விமல சுரேந்திர ” இலங்கை மின்னியல்மயப்படுத்தலை நோக்கிச் செல்லவேண்டும்” எனக் கூறுகிறார். அவர் 1919 இல் லக்ஷபான மின்நிலையத்தை முன்மொழிகிறார். ” லக்ஷபான மின்நிலையத்திலிருந்து பிறப்பிக்கப்படுகின்ற மிகையான மின்சாரத்தைக்கொண்டு மின்சார ரயில் இயக்கப்பட வேண்டும்” என அவர் கூறுகிறார். 2030 அளவில் தமது புகையிரதங்கள் அனைத்தும் மின்சாரத்தில் இயங்குபவையாக மாற்றப்படவேண்டுமென இந்தியா ஒரு தேசிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது. நாங்கள் என்ன செய்கிறோம். இந்தியா ஒதுக்குகின்ற ரயில் பெட்டிகளை இங்கே கொண்டுவருகிறோம். பேராசிரியர் சேனக்க பிபிலே எமது ஓளடதக் கொள்கை எவ்வாறானதாக அமையவேண்டுமென கொள்கையொன்றை முன்வைத்தார். அவுஸ்திரேலிய விஞ்ஞானியொருவர் ” இலங்கை என்பது சமவெளயில் அமைந்துள்ள ஒரு மலையுச்சியாகும். அந்த மலையுச்சியில் ஒளிர்கின்ற தீபம் சேனக்க பிபிலே ஆவார்” என்று கூறினார். பெரும்பாலான நாடுகளில் ஓளடதக் கொள்கை பற்றிய அளவுகோல்களுக்கு வழிகாட்டியவர் சேனக்க பிபிலே ஆவார். அவரை இழுத்து வெளியில் போட்டார்கள். மார்ட்டின் விக்கிரமசிங்க, சரத்சந்திராக்களின் உரையாடலொன்று வெளியில் நிலவியது. அவையனைத்தையும் கீழடக்கிய அரசியல் அதிகாரம் கட்டியெழுப்பப்பட்டது. அரசியல் அதிகாரசபை உலகில் இடம்பெறுகின்ற புதிய மாற்றங்கள் பற்றி சிந்திக்கவில்லை. அவர்கள் வரலாற்றில் நிலவிய மகிமையை திரும்பத்திரும்ப உச்சரித்துக்கொண்டு எம்மை அதற்குள்ளே சிறைப்படுத்தி அதன்மீது அவர்களின் அரசியல் கருத்திட்டதை விரித்தார்கள்.
இந்த ஆட்சியாளர்கள் எமது கருத்தியலை வரலாற்று மோகத்தில் சிறைப்படுத்தி வைத்தார்கள். முற்காலத்தில் நிலவிய தொழில்நுட்பம், கட்டிடக்கலை, சமூக அமைப்புகள் பற்றி நாங்கள் ஆய்வுசெய்ய வேண்டும். எதிர்காலப் பயணத்திற்கு அவற்றை ஆதாரமாகக்கொள்ள வேண்டும். இறந்தகால கருத்தியலுக்குள் சிறைப்பட்டுள்ள எமது அரசியல்வாதியின் பிரதான உடையாக “கபடமான சூற்” அமைந்துள்ளது. அது முற்கால கருத்தியல்மீது விரிக்கப்பட்டுள்ள கருத்திட்டத்தின் ஒரு கட்டமாகும். இந்த கருத்திட்டத்திற்குள் எமது நாடு இறுகிப்போனது. அதனாலேயே உலகில் இடம்பெற்ற பாரிய மாற்றங்களை உறிஞ்சிக்கொள்ளக்கூடிய நாடாக, தேசமாக எமது நாடு மாறவில்லை. இந்தியா கலாசாரத்தை பலப்படுத்திக் கொள்வதைப்போன்றே உலகிற்கு மாபெரும் பொருளாதாரத்தை நிர்மாணித்து வருகின்றது. அதன் காரணமாகவே ஐ.ரீ. தொழில்நுட்பத்தில் மிகவும் பலம்பொருந்திய நாடாக இந்தியா மாறியுள்ளது. மோட்டார் வாகன உற்பத்தி, விதைதயினங்களின் உற்பத்தி, ஓளடதங்கள் உற்பத்தி, பால் உற்பத்தி ஆகிய உற்பத்திகளில் முன்னணியில் நிற்கின்ற நாடாக இந்தியா மாறியுள்ளது. அதன் காரணமாகவே சந்திரனுக்குச் செல்கின்ற தேசமாக உலகில் பிரவேசித்துள்ளது. மரபுவழியான, ஆண்டான் அடிமை, பழங்குடி மரபு நிறைந்த கும்பலொன்றின் கைகளில் எமது நாடு சிக்கியது.

மனிதத் தேவைகள் என்பது ஐம்புலன்களை திருப்திப்படுத்துவதாகும். இந்த தேவைகளை நிவர்த்திசெய்கின்ற பாணி முற்காலத்தில் இருந்ததைப் பார்க்கிலும் வித்தியாசமானது. இந்த பாணிதான் புதிய சந்தையை உருவாக்குகின்றது. உதாரணமாக மேனிவனப்பக் கலையை எடுத்துக்கொள்வோம். முற்காலத்தில் உடல் வனப்பிற்காக மஞ்சள், வெள்ளைச் சந்தனம், சிவப்புச் சந்தனம் என்பவை மார்க்கெற்றில் இருந்தன. தற்போது மேனிவனப்பு மார்க்கெற் கொஸ்மெட்டிக் கைத்தொழிலாக மாறிவிட்டது. அந்த சந்தைக்கு அவசியமான பண்டங்களை உற்பத்தி செய்வதில் ஆட்சியாளன் வெற்றியடையவேண்டும். இன்று உலகின் கொஸ்மெட்டிக் கைத்தொழிலில் உயர்வான இடத்தை வகிப்பது தென்கொரியாவாகும். ஸ்மார்ற் போன் உற்பத்தியிலும் முன்னணி வகிப்பது தென் கொரியாவாகும்.
நாங்கள் ஏன் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மக்களை அழைக்கிறோம்? தற்போது பயணித்துக் கொண்டிருக்கின்ற திசைக்குப் பதிலாக புதிய திசையை நோக்கி பெறுமதிமிக்க கருத்தியலை நோக்கி எமது நாட்டை வழிப்படுத்தவேண்டும். அதுவே நவீன உலகத்துடனான எமது உறவுகளை கட்டியெழுப்பும். இது ஒரு தேசிய இயக்கமாகும். இந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஒரு தேசிய புத்துணர்ச்சி அவசியமாகும். எதிர்வரும் தேர்தலில் 76 வருடங்களாக ஆட்சிசெய்த ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதே மக்கள் மத்தியில் பாரிய மலர்ச்சியை, எழுச்சியை, எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துமென நாங்கள் நம்புகிறோம். வெளிநாடுகளிலுள்ள எமது ஆராய்ச்சியாளர்கள், ஆதன உரிமையாளர்கள், கல்வியாற்றல்களும் அனுபவமும் வாய்ந்த இலங்கையர்கள் திரும்பிவரத் தயாராக இருக்கிறார்கள். அந்த நம்பிக்கை எம்மிடம் இருக்கின்றது. மக்களைத் தட்டியெழுப்புவதே இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான அத்திவாரமாகும். பொருளாதாரப் பக்கத்தில் மாத்திரமன்றி நாங்கள் பொறுப்புவாய்ந்த பிரஜைகளைக்கொண்ட சமூகமொன்றை உருவாக்க வேண்டும். அரசியல்வாதி பொறுப்புக்கூறலுக்கு கட்டுப்படல் வேண்டும். எமக்கு ஒரு புதிய நாகரிகம் அவசியமாகும். அரசியலில், பொருளாதாரத்தில், சமூகத்தில் ஒரு புதிய மாற்றத்தையே நாங்கள் முன்மொழிகின்றோம். ஒட்டுமொத்த முறைமையினதும் மாற்றமாகும். அதன்போது அரசியல்வாதிக்கும் ஒரு பங்கு இருக்கின்றது. நாங்கள் அரசியல்வாதியின் பங்கினை யதார்த்தத்தில் நிரூபித்துக் காட்டுகின்றவர்கள் என்பதை உங்களிடம் உறுதியாகக் கூறுகிறோம்.

நிறுவனங்களை வகைப்படுத்தும்போது மக்களுக்கு சேவைகளை வழங்குகின்ற நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குகையில் குறைவான முக்கியத்துவம் வகிக்கின்ற நிறுவனங்கள் என்றவகையிலேயே வகைப்படுத்தப்பட வேண்டும். ஒருசில அவசியப்பாடுகள் அரசாங்கத்தினால் கட்டாயமாக நிறைவுசெய்யப்படல் வேண்டும். பொருளாதாரத்தில் முன்நோக்கிய பாய்ச்சலை எடுக்கக்கூடிய ஐ.ரீ. கைத்தொழில் பற்றிய திட்டமொன்றை நாங்கள் வகுத்துள்ளோம். ரெலிகொம்தான் ஐ.ரீ. கைத்தொழிலுக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கிவருகின்றது. ரெலிகொம்மை வளர்த்தெடுக்காவிட்டால் ஐ.ரீ. தொழில்நுட்பத்திற்கு முன்நோக்கி நகரமுடியாது. அதனை எமது வருங்கால அபிவிருத்தியுடன் தொடர்புபடுத்தியே ரெலிகொம் நிறுவனத்தை நோக்கவேண்டும். ரெலிகொம் நிறுவனம் அரசாங்கத்திற்குச் சொந்தமானதாக இருக்கவேண்டும். அம்பாந்தோட்டை துறைமுகத்தை கொள்வனவுசெய்து ஏழு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. 1.1 பில்லியன் டொலரைச் செலுத்தியே கொள்வனவு செய்தார்கள். எனினும் ஒரு கப்பல்கூட வருவதற்கான கருத்திட்டத்தை வகுக்கவில்லை. துறைமுகத்துடன் கட்டியெழுப்பப்படுகின்ற பொருளாதாரம் எங்கே?
1977 இற்கு முன்னர் நாங்கள் பாலுக்கான எமது தேவையில் 50% ஐ உற்பத்தி செய்தோம். தற்போது உற்பத்தி செய்யப்படுவது 35% ஆகும். ஒரு வருடத்திற்காக பால் மா இறக்குமதி செய்வதற்காக 225 மில்லியன் டொலர் செலவாகின்றது. பாலில் தன்னிறைவு காண்பதற்காக அவசியமான சுற்றாடல் நிலைமைகளும் இருக்கின்றன. கிராமிய வறுமைநிலையை ஒழித்துக்கட்டுவதுடன் இணைந்து பாலில் தன்னிறைவு காண முடியும். பிரதானமான ஐந்து அரிசியாலை உரிமையாளர்களே எமது அரிசி விலையைத் தீர்மானிக்கிறார்கள். இந்த தனியுரிமையை தகர்த்திட வேண்டும். டயில்களில் தனியுரிமையொன்று தோன்றிவருவதை நாங்கள் கண்டோம். டயில் இறக்குமதி செய்கையில் எமது நாட்டில் மூன்று டயில் கம்பெனிகளே இருந்தன. டயில் தடை செய்யப்பட்டது. தனியுரிமை உருவாகியது. அரச மற்றும் தனியார் சந்தையை ஒழுங்குறுத்துவது எவ்வாறு என்பது பற்றிய தெளிவான நோக்குடன் செயலாற்றுவோம்.

இந்த பொருளாதர நெருக்கடிக்குள் இருப்பது பொது திறைசேரியிடம் ரூபா இல்லாமை, நாட்டுக்கு டொலர் இல்லாமையாகும். மக்களின் நெருக்கடியை மூன்று விடயங்களாக எடுத்துக்காட்டலாம். தாங்கிக்கொள்ள முடியாத வரிச்சுமை, எண்ணெய் – மின்சாரத்தை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளின் மிகையான விலை, புதிதாக உருவாகி வருகின்ற இளைய தலைமுறையினருக்கு தொழில்கள் இல்லாமை என்பவையாகும். அப்படியானால் எமது பொருளாதார திட்டம் எவ்வாறு வகுக்கப்படல் வேண்டும்? திறைசேரியின் வருமானத்தை எவ்வாறு அதிகரித்துக்கொள்வது? நான்கு பிரதான வருமானத் தோற்றுவாய்கள் இருக்கின்றன. உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம் அவையாகும். இந்த நிறுவனங்களை முகாமைசெய்து வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியுமென்ற நம்பிக்கை எம்மிடம் நிலவுகின்றது. டொலர் ஈட்டிக்கொள்வதற்காக வெளிநாட்டுப் பணமனுப்பல்களை பெற்றுக்கொள்வதற்காக பாடுபடுதலும் சுற்றுலாக் கைத்தொழிலை முன்னேற்றுதலும், நீண்டகால ரீதியாக உலகச்சந்தையின் பங்கினை கையகப்படுத்திக்கொள்ளல், இறக்குமதிசெய்கின்ற ஒருசில பண்டங்களை எமது நாட்டுக்குள் உற்பத்தி செய்தல் போன்ற துறைகளில் இருந்து எம்மால் டொலர்களை சேமித்துக்கொள்ள முடியும்.
எமது நாட்டின் வரி விதித்தலால் எமது பொருளாதாரம் சிறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பொருளாதாரம் விரிவடைவதில்லை. தளர்வான ஒரு வரிக்கொள்கையே எமக்குத் தேவை. எமது மத்திய வங்கி ஆளுனர் பொருளாதாரத்தை சுருக்கி வைத்துள்ளார். வட்டி வீதத்தை அதிகரித்தல், பாரியளவில் வரி விதித்தல், இறக்குமதியைக் கட்டுப்படுத்துதல் முதலியவற்றைச் செய்தார். எட்டு எனும் எதிர்க்கணியப் பெறுமதியால் பொருளாதாரத்தைச் சுருக்கினார். எமது திட்டம் பொருளாதாரத்தை விரிவாக்குவதாகும். பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும். எம்மிடம் இருப்பது கொழும்பினை மையப்படுத்திய பொருளாதாரமாகும். நாங்கள் அதனை கிராமிய மக்களுக்கு விரிவுபடுத்த வேண்டும். புதிய பொருளாதார தோற்றுவாய்களை கிராமத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும். அதற்கான வரிக் கொள்கையொன்று அவசியமாகும். பிரஜைகள்மீது சுமத்தப்பட்டுள்ள உழைக்கும்போதே செலுத்துகின்ற வரி பொருளாதாரத்தை சுருக்குகின்ற உபாயமார்க்கமாகும். பண்ட உற்பத்திகளை அதிகரித்து பணவீக்கத்தைக் குறைத்திட வேண்டும். உற்பத்தியை வீழ்ச்சியடைச் செய்விப்பதன் மூலமாகவும் உற்பத்தியை வீழ்ச்சியடையச் செய்விப்பதைப் பார்க்கிலும் அதிகமான வேகத்தில் கொள்வனவு செய்வதற்கான ஆற்றலை வீழ்ச்சியடையச் செய்விப்பதன் மூலமாகவும் பணவீக்கத்தைக் குறைத்துக்கொள்ள முடியும். பண்டங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஆற்றல் பலவீனமடைந்தால் பண்டங்களைக் கொள்வனவு செய்வதற்கான அழுத்தம் குறைவடையும். அதன்போது பணவீக்கம் குறைவடையும். மனிதர்களை பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபடுத்தியே பொருளாதாரத்தை மேலோங்கச் செய்விக்கவேண்டும். பொருளாதாரத்தை சுழற்றவேண்டும். அதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வரிக்கொள்கையில் மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டும். விலங்கிடப்பட்டுள்ள பொருளாதாரத்தை சுதந்திரமான அசைவிற்கு, பொருளாதார மாற்றநிலைக்கு கொண்டுவர வேண்டும்.

(தேசிய மக்கள் சக்தியின் முப்படைக் கூட்டமைவு “அதிட்டன” கண்டி மாவட்ட மாநாடு – 2024.02.24) பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தொழில்முனைவோர், சட்டத்தரணிகள் என்ற வகையில் செயலாற்றி வருவதோடு இங்கே இருப்பவர்கள் பாரிய யுத்தம் நிலவுகையில் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் தனித்துவமான தொழிலொன்றைத் தெரிவுசெய்த குழுவினவாவர். அதனால் நீங்கள் தனித்துவமான மனிதக் குழுமத்தைச் சேர்ந்தவர்கள். நீங்கள் உங்களின் தொழில்சார் செயற்பொறுப்பினை முறைப்படி ஈடேற்றினாலும் தற்போது எஞ்சியிருப்பதோ சீரழிந்த தேசமாகும். அதனால் எம்மெதிரில் இருப்பது கிரிஎல்லவிற்குப் பதிலாக கிரிஎல்லவின் மகளைக் கொண்டுவருவது போன்ற […]
(தேசிய மக்கள் சக்தியின் முப்படைக் கூட்டமைவு “அதிட்டன” கண்டி மாவட்ட மாநாடு – 2024.02.24)

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தொழில்முனைவோர், சட்டத்தரணிகள் என்ற வகையில் செயலாற்றி வருவதோடு இங்கே இருப்பவர்கள் பாரிய யுத்தம் நிலவுகையில் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் தனித்துவமான தொழிலொன்றைத் தெரிவுசெய்த குழுவினவாவர். அதனால் நீங்கள் தனித்துவமான மனிதக் குழுமத்தைச் சேர்ந்தவர்கள். நீங்கள் உங்களின் தொழில்சார் செயற்பொறுப்பினை முறைப்படி ஈடேற்றினாலும் தற்போது எஞ்சியிருப்பதோ சீரழிந்த தேசமாகும். அதனால் எம்மெதிரில் இருப்பது கிரிஎல்லவிற்குப் பதிலாக கிரிஎல்லவின் மகளைக் கொண்டுவருவது போன்ற வேலையல்ல. ராஜபக்ஷவிற்குப் பதிலாக ராஜபக்ஷவின் தம்பியொருவரை அல்லது புதல்வனொருவனைக் கொண்டுவருவது போன்ற வேலையல்ல. இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக நல்லெண்ணத்துடன் இடையீடுசெய்கின்ற மனிதக் குழுமமொன்றின் செயற்பாடொன்று அவசியமாகி இருக்கின்றது. ஒரு நாடு என்றவகையில் நாங்கள் பல இடங்களில் தவறிழைத்துள்ளோம். இந்தியா சுதந்திரம் பெறும்போது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அந்த தேசிய இயக்கத்திற்கான முன்னேற்றகரமான ஒரு நோக்கு இருந்தது. மதங்களென்றவகையில் சமயங்களென்றவகையில் பிளவுபட்ட மக்களுடன் ஒரே இந்தியக் கொடியின்கீழ் கொண்டுவருவதற்கான பாரிய நோக்கு இருந்தது. அந்த நோக்கிற்கிணங்க கட்டியெழுப்பப்பட்ட இந்திய தேசம் சந்திரன்மீது விண்கலமொன்றை தரையிறக்கும்போது எமது நாடு எந்த இடத்தில் இருக்கின்றது? அவர்கள் பாரிய இலக்கியகலைகள், கலாசார எழுச்சியை கட்டியெழுப்பி உள்ளார்கள். சீனாவை எடுத்துக்கொண்டாலும் அப்படித்தான். விளையாட்டுச் சாமான்களின் தயாரிப்பில் இருந்து பாரிய தொழில்நுட்ப சாதனங்களை உற்பத்திசெய்து உலக சந்தையில் பாரிய பலத்தைக் கையகப்படுத்திக் கொண்டது. பிரான்ஸ் தேசத்திற்கு கட்டுப்பட்டிருந்த, அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு இலக்காகிய வியட்நாம் அண்மைக்காலமாக ஆசியாவில் வேகமாக வளர்ந்து வருகின்ற நாடாக மாறியுள்ளது. எனினும் எமது நாடு இருப்பது உலகின் முன்னிலையில் வங்குரோத்துநிலைக்கு உள்ளாக்கப்பட்ட வெட்கித்தலைகுனிகின்ற நாடாகவே விளங்குகின்றது. இருபதாம் நூற்றாண்டில் தொழில்நுட்பத்தில், கல்வியில் பாரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டாலும் எமது நாட்டுக்கு என்ன நேர்ந்துள்ளது?
இந்தியாவைப்போல் தேசத்தை ஒரு கொடியின்கீழ் கொண்டு வருகின்ற வெள்ளைக்காரனுக்குப் பின்னர் சுதந்திரம் கிடைத்துவிட்டது எனும் பாரிய உணர்வு மக்களிடம் இருந்திருக்கக்கூடும். ஆனால் இந்தியாவைக் கொண்டு செல்கின்ற திசை பற்றி நேருவிற்கும், சீனாவைக் கொண்டுசெல்கின்ற திசை பற்றி மாவோசேதுங்கிற்கும், வியட்நாமைக் கொண்டுசெல்கின்ற திசைபற்றி ஹோசிமிங்கிற்கும், ஐக்கிய அமெரிக்காவைக் கொண்டுசெல்கின்ற திசை பற்றி லிங்கனுக்கும் இருந்த பாரிய நோக்கு எமது ஆட்சியாளர்களிடம் இருக்கவில்லை. ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டில் சுதந்திரம் கிடைத்ததும் உடனடியாக பெருந்தோட்டத் தமிழ் மக்களுக்கு இருந்த பிரஜா உரிமையை இல்லாதொழித்தார்கள். வடக்கில் செல்வநாயகம் இடையீடுசெய்து இந்த பிரஜா உரிமைச் சட்டத்தை அமுலாக்கிய பின்னரே தமிழ் அரசுக் கட்சியை நிறுவினார். எமது தலைவர்களுக்கு மக்களைப் பிரிக்கின்ற நோக்கேயன்றி ஒரு கொடியின்கீழ் ஒருங்கிணைப்பதற்கான நோக்கு இருக்கவில்லை. 1956 இல் மொழிப் பிரச்சினையொன்றை பற்றவைத்தார்கள். 1958 சிங்கள – தமிழ் கலவரமொன்றை பற்றவைத்தார்கள். 1965 அளவில் “டட்லியின் வயிற்றில் மசாலை வடை” என ஊர்வலமாகச் செல்லத் தொடங்கினார்கள். ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தாறாகும்வேளையில் வடக்கில் பிரிவினைவாத இயக்கமொன்று உருவாகத் தொடங்கியது. 1981 இல் யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. 1983 இல் நாடு பூராவிலும் இனவாத முரண்பாட்டினைத் தொடங்கிவைத்து பாரிய யுத்தம்வரை இட்டுச்சென்றார்கள். 2009 இல் அந்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எனினும் 2015 அளவில் மலட்டுக்கொத்து, மலட்டு உடைகளில் ஆரம்பித்து 2019 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அந்த காலத்திலும் பல்வேறு பலம்பொருந்திய அமைப்புகள் எமது நாட்டைக் கொண்டுசெல்லவேண்டிய திசைபற்றி இலக்கியம், கலைகள், கலாசாரம் கொண்டுசெல்லப்படவேண்டிய திசை பற்றிய ஆழமான உரையாடல்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. நாட்டின் எதிர்காலம் தங்கியிருக்கின்ற, நாட்டை மின்னியல்மயப்படுத்துதல் பற்றி 1919 இல் திரு. விமலசுரேந்திர ஒரு நோக்குடன் விடயங்களை முன்வைத்தார். 1918 இல் ஊடகவியலாளரொருவர் லெனினிடம் “சோஷலிஸத்தை நிறைவுசெய்வது எப்போது” எனக் கேட்கிறார். ”சோவியத்தேசத்தை மின்னியல்மயப்படுத்தி நிறைவுசெய்கின்ற நாளிலேயே” என லெனின் பதிலளிக்கிறார். திரு. விமலசுரேந்திர 1919 இல் லக்ஷபான மின்நிலையம் தொடர்பாக சமர்ப்பித்த பத்திரத்தில் அந்த மேலதிகமான மின்சாரத்தை மின்சார ரயில் ஓட்டுவதற்காக பயன்படுத்த வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார். எமது எதிர்காலம் பயணிக்கவேண்டிய திசைபற்றிய கருத்து அவரிடம் இருந்தது. விமலசுரேந்திரவிற்கு, மார்டின் விக்கிரமசிங்கவிற்கு, சரத்சந்திரவிற்கு, எமது நாட்டை இட்டுச்செல்லவேண்டிய திசை பற்றிய நோக்கு இருந்தது. சேனக்க பிபிலேவிற்கு எமது நாட்டை இட்டுச்செல்லவேண்டிய திசை பற்றிய நோக்கு இருந்தது. ஓளடதக் கூட்டுத்தாபனத்தின் தலைவரான சேனக்க பிபிலேவின் நோக்கின்படி அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தமது தேசிய ஓளடதக் கொள்கையை அமைத்துக்கொண்டன. எனினும் எமது நாட்டில் சேனக்க பிபிலேவை ஓளடதக் கூட்டுத்தாபனத்தில் இருந்து வெளியே போட்டார்கள். வெளியில் உருவாகிக்கொண்டிருந்த புதிய சிந்தனை ஓட்டத்தை ஒருபுறம் ஒதுக்கிவைத்த ஆட்சியாளர்கள் கடந்தகாலப் பெருமைபற்றி பிரலாபித்துக் கொண்டிருந்தார்கள்.
எமது ஒட்டுமொத்த சமூகமும் சிந்தனையும் கடந்தகாலமோகத்தின் சிறைக்குள் சிறைப்படுத்தப்பட்டது. ஆட்சியாளர்கள் நாட்டின் அபிவிருத்தி அளவுகோல்களை வரலாற்றின்பேரில் அளவிடத் தொடங்கினார்கள். எனினும் உலகமானது பாரிய பாய்ச்சலுடன் முன்நோக்கி நகர்ந்தது. எமது நாட்டை பராக்கிரமபாகு யுகத்திற்கு கொண்டுசெல்வதாக 2005 இல் ரணில் விக்கிரமசிங்க கூறினார். உலகம் பலநூற்றாண்டுகளாக முன்நோக்கிப் பயணிக்கையில் எமது நாட்டுத் தலைவர்கள் வரலாற்று மகிமைபற்றி பிரலாபித்துக் கொண்டிருந்தார்கள்.
கொரியா கொஸ்மெடிக் கைத்தொழில் மூலமாக பொழுதுபோக்கினை வழங்குவதன் மூலமாக உலகத்திற்கு திறந்துவிடப்பட்டது. பீட்டில்ஸ் இசைக்குழுவின் ஒருசில பாடல்களை ஆயிரத்துஎண்ணூறு மில்லியன் பேர் கண்டுகளித்திருக்கிறார்கள். நாட்டில் இருப்பவர்கள் ஐம்பது மில்லியன் மக்களே. முன்னர் எமது குடிசைக் கவிதைகள், வண்டிப் பாடல்கள் எல்லைக்கு அப்பால்சென்று பாரிய வணிக எல்லைகளை அடைவதில் வெற்றிபெறவில்லை. அவர்கள் உலகத்திற்காக இசையை உருவாக்குகையில் எம்மை வரலாற்று மோகத்தில் சிறைப்படுத்தி 20 வது நூற்றாண்டினை மிஸ்பண்ணிய ஆட்சியாளர்கள் முழு நாட்டையுமே சிறைப்படுத்தினார்கள். அதனாலேயே எமது நாட்டுக்கு புதிய மறுமலர்ச்சி யுகமொன்று அவசியமாகின்றது. அதனால் கிரிஎல்லவிற்குப் பதிலாக மகள், பிரேமதாசவிற்கப் பதிலாக மகன், ராஜபக்ஷவிற்குப் பதிலாக ராஜபக்ஷ மகன் அல்லது தம்பியைக் கொண்டுவந்து அதனை மாற்றியமைத்திட முடியாது. அவர்கள் ஏறுவது மாட்டு வண்டியிலேயே. நாங்கள் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் மின்சார ரயிலில் எற்றுகின்ற யுகமொன்றை உருவாக்கிடுவோம். ஜப்பானின் பொருளாதாரத்தை இலக்காகக்கொண்ட அபிவிருத்தியின்போது மனித உறவுகள் சிதைக்கப்பட்டுள்ளன. விவாகம் செய்துகொள்கின்ற சதவீதம் வீழ்சியடைந்து தற்கொலை புரிந்துகொள்கின்ற சதவீதம் அதிகரித்து வருகின்றது. பொருளாதாரம் பாய்ச்சலுடன் முன்னேறி வந்தாலும் சமூக உறவுகளை சிதைத்தால் பலனில்லை. எமக்கு அவசியமாவது பண்டைய நுகத்தடியிலிருந்து பொருளாதார பயணப்பாதையில் இருந்து விடுபட்டு புதிய திசையை நோக்கி சமூகத்தை மாற்றிக்கொள்வதே எமது தேவைப்பாடாகும்.
அமைச்சரவைக்கு யாரை நியமிப்பீர்கள் என ஒருசிலர் எம்மிடம் கேட்கிறார்கள். நியமிக்கப்படுகின்ற அமைச்சருக்கு அனைத்தையும் முடிச்சுப்போட்டுக்கொண்டு செல்வதே பண்டைய யுகத்தில் இருந்தது. எனினும் அமைச்சரொருவரை அரசியலமைப்பின்படி நியமித்தாலும் கூட்டாக ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்ற விவசாயத்துடன் தொடர்புடைய அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய சபையைக்கொண்ட கூட்டான தீர்மானத்தை மேற்கொள்கின்ற அலகு ஒன்றை நியமிப்பதே எமது தேவையாகும். பாதுகாப்பும் அவ்வாறானதே. நாங்கள் தேசிய பாதுகாப்பு பற்றிய எக்ஸ்பர்ற்ஸ் அல்ல. ஆனால் அது பற்றிய சிறப்பறிஞர்கள் இந்த மேடையில் இருக்கிறார்கள். அவர்கள்தான் அது பற்றிய முடிவுகளை எடுப்பார்கள். மறுபுறத்தில் தேசிய பாதுகாப்பு என்பது பைனேற்றினை கையில் ஏந்திய சிப்பாய் ஒருவரை சந்தியில் நிறுத்திவைப்பதில்லை. அதனைச் சூழவுள்ள ஒட்டுமொத்த பிரஜைகளின் உயிர்களால் பிரதிபலிக்கப்படுகின்றது. அதனால் பண்டைய முறைமையை மனதில் வைத்துக்கொண்டு எம்மிடம் கேள்விகேட்பதற்குப் பதிலாக புதிய மாற்றம் பற்றிய சித்திரமொன்றை மனதில் வடித்துக்கொண்டு கேள்விகளைக் கேட்குமாறு ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் முன்மொழிவது நவீன இலங்கையொன்றைக் கட்டியெழுப்பகின்ற நடுநிலையத்தையாகும். நாங்கள் முன்மொழிவது வெறுமனே பொருளாதாரப் பயணம் மாத்திரமல்ல. மனித சிந்தனையின் புதிய மாற்றமொன்று பற்றியதாகும்.
நிலவுகின்ற அரச சேவை சம்பந்தமாக நாங்கள் முன்மொழிவது சிந்தனைரீதியாக மாற்றமடைந்த ஒரு அரச சேவை பற்றியதாகும். பழைய இடத்தில் இருந்த தலைவர்கள் எவ்வளவுதான் பல்டி அடித்தார்கள்? அந்த தோல்விநிலைக்குப் பதிலாக நாங்கள் முன்மொழிவது புதிய எழுச்சியொன்றையாகும்! அந்த புதிய இடமென்பது அரசியல்வாதி மக்களுக்கு எதிராக மறைந்திருக்கின்ற இடமல்ல, அரசியல்வாதிக்கும்’ மக்களுக்கும் இடையில் நெருக்கமான உறவு நிலவுகின்ற இடமாகும். இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் அவர்கள் பிரம்மாவின் நெற்றியில் இருந்து படைக்கப்பட்டவர்களெனவும் குடிமக்கள் பாதத்தால் படைக்கப்பட்டவர்கள் எனவும் நினைக்கிறார்கள். நாங்கள் முன்மொழிவது பிரஜையின் வேதனையை தனது வேதனையாக உணர்கின்ற புதிய அரசியலாகும். கூட்டுமனப்பான்மை, மானிட ஈடுபாடுகள், ஆன்மீக ஈடுபாடுகள், பிறர்மீது ஒத்துணர்வுடன் நோக்குகின்ற மனித சமூகமொன்றின் புதிய பொருளாதாரப் பாதையொன்றை நாங்கள் முன்மொழிகிறோம். எமது மகள்மார்களுக்கு பெண்களுக்கு பாதுகாப்பு நிறைந்த சமூகமொன்று. சீருடையைப் பார்த்தால் பயமாக எமது தோழர் அமரகீர்த்தி கூறினார். எனினும் எமது பிள்ளைகளுக்கு சகோதரிகளுக்கு பயமேற்படுவது சீருடையைப் பார்த்தால் மாத்திரமா? இல்லை. சமூகத்திற்பகும் பயம். நட்புறவுமிக்க பொலீஸ் மற்றும் முப்படையினர் போன்றே ஒத்துணர்வுகொண்ட சமூகமொன்றும் தேவை. சுகாதார அமைச்சர் மருத்துகளில் இருந்து திருடுகின்ற, பிரதமர் மத்திய வங்கியில் கைவைக்கின்ற ஒரு நாடு எமக்கு அவசியமாகும்? இந்த சீரழிவிற்குப் பதிலாக புதிய மறுமலர்ச்சி எமக்கு அவசியமாகும்.
வெள்ளைக்காரன் வெளியேறியதும் அன்று இருந்த எமது மூத்தவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்? இந்த ஆட்சிமுறைமையைக் கவிழ்த்துவிட்டால் அந்த உணர்வே மக்களுக்கு பாரிய மலர்ச்சியையும் எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்திவிடும். வெள்ளைக்காரன் 133 வருடங்கள். இந்த ஆட்சியாளர்கள் 76 வருடங்கள். வெள்ளைக்காரனின் அழுத்தத்தை நாங்கள் உணரவில்லை. இந்த ஆட்சியாளர்களின் அழுத்தத்தை நாங்கள் அனுபவித்தோம். ஒற்றோபர் மாதமளவில் விடுதலை பெற்றமைக்கான மகிழ்ச்சியை நாங்கள் அனுபவிப்போம். இந்த ஆட்சியாளர்களை விரட்டியடித்து ஆட்சி முறைமையை மாற்றிவிட்டாலேயே மக்கள் பாரிய எழுச்சிபெற்று நாட்டைக் கட்டியெழுப்பிட முன்வருவார்கள். எமக்கு எமது பெருநிலத்தில் பிறந்த விஞ்ஞானிகளிடமிருந்து, ஆட்சியாளர்களிடமிருந்து பயன்பெற முடியாவிட்டாலும் உலகிற்கு முக்கியமான எம்மவர்கள் பெருந்தொகையினராக உலகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் திரும்பிவரத் தயாராக இருக்கிறார்கள். புற்றுநோய்க்கு புதிய ஓளடதமொன்றை கண்டுபிடித்தல் தொடர்பான ஆராய்ச்சியொன்றை மேற்கொண்டு வருகின்றவர் அமெரிக்காவின் ஹுஸ்டன் பிரதேசத்தில் இருக்கின்ற எமது கட்சியின் அமைப்பாளராவார். அவர் ஐக்கிய அமெரிக்காவின் ஆராய்ச்சிகளுக்கான பிரதானமான சபையின் அங்கத்தவராவார். அவர்கள் முண்டியடித்துக்கொண்டு இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வரத்தயாராக உள்ளார்கள். அந்த அனைவரதும் நம்பிக்கைக்கு கடுகளவேனும் பங்கமேற்படாதவகையில் செயலாற்றுவதே அரசியல்வாதிகள் என்றவகையில் எமக்கு இருக்கின்ற அடிப்படைப் பொறுப்பு. தேர்தலின்போது எம்மீது நம்பிக்கை வைக்காத குழுக்களும் அதன்பின்னர் எம்மை நம்புமளவிலான மாற்றமொன்றை நாங்கள் மேற்கொள்வோம். இங்கு குழுமியுள்ள நீங்கள் திடசங்கற்பமுள்ளவர்களாக செயலாற்றி சவால்களை வென்றெடுப்பதைப்போன்றே கண்டி மாவட்டத்தை வெற்றியீட்டச் செய்விக்கின்ற கொடியை கையில் ஏந்துங்கள். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முப்பது வருடங்களுக்கு மேல் காலம் கழிந்தது. இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரமேலும் ஆறுமாதங்களே இருக்கின்றன. அந்த காலத்திற்குள் வெற்றியைப் பெறுகின்ற உறுதியான திடசங்கற்பத்துடன் முன்னணிக்கு வந்து செயலாற்றுமாறு அழைப்பு விடுக்கிறோம்.

-Colombo, February 21, 2024- இந்நிகழ்வு இன்று (21) மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது. அயர்லாந்தில் வாழும் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் தோழர் ருவன் அவர்களின் ஒத்துழைப்புடன் யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களால் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
-Colombo, February 21, 2024-
இந்நிகழ்வு இன்று (21) மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது.
அயர்லாந்தில் வாழும் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் தோழர் ருவன் அவர்களின் ஒத்துழைப்புடன் யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களால் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.




