Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

“பொருளாதாரம், அரசியல், சமூகம் அனைத்தையுமே புதிய மாற்றத்திற்கு இலக்காக்குகின்ற அரசியல் அவசியமாகும் ” -அநுர குமார திசாநாயக்க-

-Colombo, January 27, 2024- வெறுமனே ஆட்சி மாற்றத்தினால் எந்தவிதமான பயனும் கிடையாதென்பதும், இந்த நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகம் ஆகிய அனைத்துப் பிரிவுகளையும் ஒரே பிடியில் எடுத்து மாற்றத்திற்கு இலக்காக்குகின்ற புதிய அரசியல் இயக்கமொன்று அவசியமெனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கூறினார். கடந்த 27 ஆந் திகதி மாத்தறையில் நடாத்தப்பட்ட மேற்படி மாவட்டத்தின் அதிட்டன (திடசங்கற்பம்) முப்படக் கூட்டமைவின் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அந்த மாநாட்டில் […]

-Colombo, January 27, 2024-

வெறுமனே ஆட்சி மாற்றத்தினால் எந்தவிதமான பயனும் கிடையாதென்பதும், இந்த நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகம் ஆகிய அனைத்துப் பிரிவுகளையும் ஒரே பிடியில் எடுத்து மாற்றத்திற்கு இலக்காக்குகின்ற புதிய அரசியல் இயக்கமொன்று அவசியமெனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கூறினார்.

கடந்த 27 ஆந் திகதி மாத்தறையில் நடாத்தப்பட்ட மேற்படி மாவட்டத்தின் அதிட்டன (திடசங்கற்பம்) முப்படக் கூட்டமைவின் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அந்த மாநாட்டில் அவர் தெரிவித்த கருத்துக்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

அரசியல் சூடுபிடித்துள்ளது. தேர்தல் அண்மித்திராதநிலையில் அரசியல் இவ்விதமாக சூடுபிடித்தமை இலங்கையில் ஒருபோதுமே நிலவவில்லை. அண்மைக்காலமாக இலங்கை மக்கள் அரசியல்ரீதியாக மிகவும் அதிகமாக விழிப்படைந்து வருகிறார்கள். விழிப்புணர்வடைந்த அரசியல் முனைப்புநிலையை அடைந்துவருகிறார்கள். இந்த வருடத்தின் ஒக்டோபர் மாதம் இறுதியளவில் எமது நாட்டில் இருப்பது புதிய அரசாங்கமாகும், புதிய ஆட்சியாகும். அந்த புதிய அரசாங்கத்தை, புதிய ஆட்சியை தேசிய மக்கள் சக்தியினுடையதாக மாற்றிக்கொள்ள நாமனைவரும் முனைப்பாக பங்களித்துள்ளோம். எமது நாடு பயங்கரமான யுத்தத்தில் ஈடுபட்டிருந்தவேளையில் தமது உயிரை உள்ளிட்ட அனைத்தையுமே அர்ப்பணித்து யுத்த முரண்பாட்டினை முடிவுக்கு கொண்டுவந்தாலும் அன்று நீங்கள் எதிர்பார்த்த சாதகமான நாடொன்றில் நன்றாக வசிக்கின்ற மக்கள் பற்றிய எதிர்பார்ப்பு முழுமையகவே சிதைக்கப்பட்டுவிட்டது. யுத்தம் நிலவிய காலத்தைப் பார்க்கிலும் சீர்குலைந்த, உயிர்வாழ்வது மிகவும் கடினமான மற்றும் உலகின் முன்னிலையில் அபகீர்த்திக்குள்ளான நாடாக விளங்குகின்றது. அந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவேண்டியது எம்மைால் கைவிடமுடியாத பொறுப்பாகும். இந்த நெருக்கடிகளை மட்டுப்படுத்தப்பட்ட ஒருசில விடயங்களுக்குள் முடக்கிவிட ஒருசிலர் எதிர்பார்க்கிறார்கள். பொருளாதாரரீதியாக வங்குரோத்து அடைந்துள்ளமை உண்மைதான். மக்களின் அத்தியாவசிய பண்டங்கள்மீது வரிவிதிக்கப்படுவது, தொழிலொன்றைத் தேடிக்கொள்ள இயலாதென்பது, கிடைக்கின்ற சம்பளத்தில் சீவிப்பது சிரமமமென்பது, நாட்டைவிட்டுச் செல்கின்ற நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதென்பது, பொருளாதாரரீதியாக வங்குரோத்து நிலையடைந்து உள்ளதென்பது போன்ற விடயங்கள் உண்மையே. எனினும் மறுபுறத்தில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து, குற்றச்செயல்கள் மலிந்து நிலவுகின்றன.

அண்மையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்து வெலிகம பொலீஸ் ஆளுகைப் பிரிவுக்கு வருகை தந்த ஒரு குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தர்கள். அவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர்கள்மீது வெலிகம பொலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். ஒரு பொலீஸ் உத்தியோகத்தர் இறந்து மற்றுமொருவர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். இறுதியில் கொழும்பு பொலீஸாரும் வெலிகம பொலீஸாரும் ஒருவர்மீது ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டார்கள். வழிப்பறிக்கொள்ளைக்காரன்போல் வீதியில் வாகனத்தை நிறுத்துமாறு கூறியவேளையில் நிறுத்தாமையால் நாரம்மல சாரதியை சுட்டுக்கொன்றார்கள். மதியபோசனம் உண்டுகொண்டிருந்த பிக்குவை சுட்டுக்கொன்றார்கள். பெலிஅத்தையில் ஐவரைக் கொலைசெய்தவர்கள் யாரென இன்னமும் தெரியாது. அனைவரதும் உயிர்கள் பாதுகாப்பற்ற அராஜகநிலை உருவாகி உள்ளது. 1993 காலத்திலும் இவ்வாறான நிலைமை காணப்பட்டு ஜனாதிபதி பிரேமதாசவின் படுகொலைக்குப் பின்னர் சற்று தணிந்தது. உங்களதும் எனதும் எம்மனைவரதும் உயிர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. பொருளாதாரம் சீரழிந்தது மாத்திரமல்ல மக்களின் உயிர்கள் பற்றிய பாதுகாப்பற்ற நிலைமையின்பேரில் ஆட்சிக்குவர சிலவேளைகளில் திட்டமிடுவதாகவும் இருக்கக்கூடும். இது அதிகாரத்திற்காக உயிர்த்தஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட ஒரு நாடு என்பதை மறந்துவிடலாகாது. எந்தவொரு பிரஜைக்கும் அரசாங்க அலுவலகமொன்றில் இருந்து பணிகளை மேற்கொள்ளமுடியாத சீரழிந்த அரச சேவையே காணப்படுகின்றது.
பொலீஸ் மா அதிபரொருவரை நியமித்துக்கொள்ள முடியாமல் பதிற்கடமையாற்றுவதற்காக நியமித்த கெரட் கிழங்கினைக் காட்டிக்காட்டி தமக்குத் தேவையாக நடவடிக்கைகளை ஈடேற்றிக்கொள்கிறார்கள். நீதிபரிபாலனம் தொடர்பில் சந்தேகம் குவிந்துள்ளது. குற்றச்செயல் புரிபவர்கள், மோசடிப் பேர்வழிகள், ஊழல்பேர்வழிகள் ஒன்றுசேர்ந்த குடும்பங்களின் அருவருப்பான, அழுகிப்போன அரசியலே நிலவுகின்றது. இரும்பு மூட்டைக்கே கரையான் அரித்துவிட்டால் ஏனையவை பற்றிப் பேசுவதில் பிரயோசனமில்லை. உலகின் ஒருசில நாடுகளில் பொருளாதாரம் சீரழிந்தாலும் ஏனைய முறைமைகள் வழமைபோல் நிலவும். எமது நாட்டில் சீரழிந்த இந்த முறைமைக்குப் பதிலாக புதிய முறைமையொன்றை நிலைநாட்டுவதை விடுத்து ஆட்சிமாற்றம் அல்லது தலைமைத்துவ மாற்றம் பயன்தர மாட்டாது. மனிதர்கள் சிந்திக்கின்றவிதத்தைக்கூட மாற்றியமைக்கத்தக்க முறைமையொன்று தேவை. இந்த சமூகத்துடன் எம்மால் முன்நோக்கி நகர முடியாது. பொருளாதாரம், அரசியல், சமூகம் அனைத்தையுமே புதிய மாற்றத்திற்கு இலக்காக்கின்ற அரசியலொன்று தேவை. அண்மைக்காலமாக பல வாய்ப்புகள் உருவாகியபோதிலும் நாட்டை மேம்படுத்துகின்ற நோக்கு ஆட்சியாளர்களிடம் இருக்கவில்லை. மேலைத்தேய ஆதிக்கத்திற்கு 133 வருடங்கள் அகப்பட்டிருந்த ஒரு நாடு சுதேசிகளின் கைகளுக்கு கிடைத்ததும் வெள்ளைக்காரனுக்கு இரண்டாம்பட்சமாகாத அளவுக்கு நாட்டைக் கட்டியெழுப்ப எந்தளவு ஆழமான உணர்வு ஏற்படவேண்டும்? எம்மிடம் உருவாகாத இந்த நோக்கு இந்தியாவின் காந்தி, நேரு, பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தேசிய இயக்தைச்சேர்ந்த தலைவர்களிடம் இருந்தது. இந்த நோக்கு இன்று சந்திரனுக்குப் போகின்ற ஒரு இந்தியாவை உருவாக்கி இருக்கின்றது. தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என எற்றுக்கொள்ளப்பட்டிருந்த ஒரு பெண் சனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்தியர் எனும் கொடியின்கீழ் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டார்கள்.

குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்து மலையக மக்களை நாடற்ற நிலைமைக்கு மாற்றியதும் தமிழ் அரசுக் கட்சியை உருவாக்க திருவாளர் செல்வநாயகம் முன்வந்தார். 1956 இல் இருந்து மொழிப் பிரச்சினையொன்றை இழுத்துப்போட்டுக் கொண்டதால் 58 அளவில் சிங்கள – தமிழ் கலவரம் உருவாகியது. ஸ்ரீ எழுத்தில் கறுப்பெண்ணெய் பூசத் தொடங்கினார்கள். 1970 நடுப்பகுதியில் வடக்கில் ஆயுத இயக்கமொன்று உருவாகின்றது. 2009 இல் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் 2019 இல் உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெறுகின்றது. எமது ஆட்சியாளர்கள் உருவாக்கியது முரண்பாட்டு வரலாறாக அமைந்தபோதிலும் இந்திய ஆட்சியாளர்கள் உருவாக்கியதோ ஒருமைப்பாட்டினையாகும். தேசம் ஒன்றாக எழுச்சிபெறுகின்ற வரலாற்றினை அவர்கள் எழுதும்போது முரண்பாடுநிறைந்த வரலாற்றினை எழுதவேண்டியநிலை எமக்கு எற்படுகின்றது.

உலக நாடுகள் இருபதாம் நூற்றாண்டில் பிரமாண்டமான முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கையில் நாங்கள் அந்த நூற்றாண்டினைக் கைவிட்டுவிடுகிறோம். உலகில் உருவாகியுள்ள நவீனத்துவத்திற்கு ஒத்திசைவு செய்யத்தக்க இலங்கையொன்று எமக்குத் தேவை. எனவே எம்மெதிரில் இருப்பது வெறுமனே ஆட்சிமாற்றத்திற்குப் பதிலாக புதிய மாற்றத்திற்கான யுகத்தை நோக்கி நாட்டைக்கொண்டுசெல்கின்ற புதிய ஆட்சியாகும். அதற்காக நாட்டை மீண்டும் விழித்தெழச் செய்வித்து தேசத்தை ஒருமைப்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும். நாங்கள் வடக்கு மக்களை அழைக்கவேண்டியது 13 ஐ தருகிறோம் என்றல்ல: பெடரல் தருகிறோம் என்றல்ல. இந்த அனர்த்தத்தில் இருந்து விடுபடுவதற்காக நாங்கள் ஒன்றுசேர்ந்து போராடுவோம் என்றே கூறவேண்டும். கப்பம் கொடுத்து வாக்குகளைப் பெறுகின்ற கலாசாரத்திற்குப் பதிலாக புதிய மறுமலர்ச்சி யுகத்துடன் ஒன்றுசேருங்கள் எனக்கூறி அதிகாரத்தின் சுக்கானை தேசிய மக்கள் சக்தியின் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் அதிகாரத்தை எடுப்பதென்பது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆரம்பமேயன்றி இறுதிக்கட்டமல்ல. எமக்கு எதிராக ஒன்றுசேரக்கூடிய அனைத்துச் சக்திகளும் ஒரே மேடைக்கு வருகின்றன. திடீர் விபத்து காரணமாக ஒருவர் இறந்தாலும் என்பிபி ஐ பிடித்துக்கொள்கிறார்கள். அவர்கள் அந்த அளவுக்கு திகைப்படைந்துள்ளார்கள். அவர்களின் அசிங்கமான, காடைத்தனமான, கீழ்த்தரமான அரசியலை சதாகாலமும் முன்னெடுத்துச்செல்ல முடியுமென்று அவர்கள் நினைத்தார்கள். பல தசாப்தங்களாக அவர்களின் குற்றச்செயல்களையும், ஊழல்களையும் வெளியில் வர இடமளிக்காமல் பிரதான ஊடகங்களில் தணிக்கை செய்திருந்தார்கள். இப்போது சமூகவலைத்தலங்களை தடைசெய்யப்போகின்ற ஐயாமார்களுக்கு நாங்கள் கூறுவது ” இப்போது குதிரை தப்பியோடிவிட்டது, லாயத்தை மூடுவதில் பலனில்லை” என்றாகும். இப்போது அவதூறு, அவமதிப்பு, பயமுறுத்தல், அச்சுறுத்தல்களை முன்வைத்து வருகிறார்கள். தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்பப்பட்டுள்ளது அவதூறு, அவமதிப்பு, பயமுறுத்தல், அச்சுறுத்தல்களுக்கு கட்டுப்படுவதற்காக அல்லவென்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். பலதசாப்தங்களாக பெரிகோட்டின் இருபுறத்திலும் வைத்திருந்த பாதுகாப்புப் பிரிவின் இளைப்பாறியவர்களும் நாங்கள் அனைவரும் இந்த பக்கத்தில் ஒன்றுசேர்ந்திருக்கிறோம். பெரிகோட்டின் அந்தப் பக்கத்தில் அவர்கள் தனித்துப்போய் இருக்கிறார்கள். ஜெனரல்மார்கள், அட்மிஜரால்மார்கள், எயார் மார்ஷல்கள், மேஜர் ஜெனரல்கள், நாமனைவரும் ஒன்றுசேர்ந்து இப்படி ஒன்றாக இருந்தாலும் அவர்கள் சதாகாலமும் அவர்களின் பைக்குள்ளே அனைவரையும் வைத்துக்கொள்ளவே நினைத்தார்கள். இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவினைக்கண்டு அச்சமடைந்தவர்கள் சிறுபிள்ளைத்தனமானவற்றை அமைத்திட முயற்சிசெய்கிறார்கள். ஆனால் நாங்கள் எப்போதுமே கூறுவதைப்போல் கொப்பி பண்ணமுடியும், ஆனால் இணையானதாக்கிட முடியாது. இந்த ஒவ்வொருவரும் மக்களுக்கு நல்ல வாழ்க்கை, நல்ல நாட்டை எதிர்பார்த்து வந்தவர்களேயன்றி அவர்களிடம் தனிப்பட்ட தேவைகள் கிடையாது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், உளவுத்துறைப் பிரதானி போன்றவர்கள் பதற்றமடைந்துள்ளார்கள். எனினும் நாங்கள் பதற்றமடையவில்லை.

தம்மை இந்த பேரழிவிலிருந்து விடுவித்துக்கொள்வார்கள் என்ற பாரிய எதிர்பார்ப்பு எம்மீது மக்களுக்கு இருகின்றது. கலவரமடைந்து, பொய்க்கிடங்குகளில் விழுந்து அந்த மக்களின் எதிர்பார்ப்பினை நாங்கள் சிதைக்கப்போவதில்லை. புயலில் சிக்கியுள்ள இந்த படகினை மிகச்சிறந்த தந்திரோபாயத்தை தெரிவுசெய்து வெற்றியை நோக்கி வழிப்படுத்துவோம் என்பதை உறுதியாகக் கூறுகிறோம். நாங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஒரு வார்த்தைகூட பிசகக்கூடாது. ஐ.ரீ.என் தலைவர் சுதர்ஷன குணவர்தன “சமபிம” என பாரிய லிபரலுக்காக தோற்றியவர்கள் அவற்றைப் பிடித்துக்கொண்டு அடிக்கிறார்கள். நடவடிக்கைகளை மேற்கொண்டதும் வெற்று ஆசாமிகள். அதனால் ஒருசொல்கூட பிசகுவதற்கு எமக்கு உரிமை கிடையாது. நாங்கள் எந்நேரத்திலும் மனதால் அல்லது மூளையால் முடிவுகளை எடுக்கவேண்டும். அதனால் நாங்கள் பொறுமையுடனும் கவனமாகவும் இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்காக அசிங்கமான, அழுகிப்போன, துர்நாற்றம் வீசுகின்ற அரசியலை சுத்தஞ்செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு ஒரு சட்டமும் அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமும் இருக்கின்ற நிலைமையை நாங்கள் மாற்றியமைத்திடவேண்டும். அனைத்து அதிகாரங்களும் ஒரே வளையத்தின் கைகளிலேயே இருக்கின்றன. அவையனைத்தையும் மாற்றியமைத்து பொருளாதார ஜனநாயகத்தை நிலைநாட்டவேண்டும். எமது கல்வியை பாரிய மாற்றத்திற்கு இலக்காக்கிட வேண்டும். ஒவ்வொரு பிரஜைக்கும் உணவுவேளையொன்றை வழங்குவதற்கான வழிமுறையை உறுதிப்படுத்திட வேண்டும். நாங்கள் தொடக்கத்திலேயே பிரஜைகளுக்கு உணவு, சுகாதாரம், கல்விக்கு உத்தரவாதம் அளிப்போம். நெருக்கடியை முகாமை செய்வதற்காகவே சர்வதேச நாணய நிதியம் இடையீடு செய்துள்ளது. எமது ஆட்சியின்கீழ் நெருக்கடியை முகாமைசெய்து மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படாதிருக்க புதிய அணுகுமுறைக்குள் நாட்டைக் கொண்டுசெல்வோம். குற்றச்செயல்களிலிருந்தும் போதைப்பொருள்களிலிருந்தும் இந்த நாட்டை மீட்டுப்பதற்கான திட்டம் எம்மிடம் இருக்கின்றது. ஊர்களில் இருந்தவர்களை அரசியல்வாதிகளின் குற்றச்செயல்களுக்கு ஈடுபடுத்தி எமது நாட்டின் பாதாளக்கோஷ்டியை பாரியளவில் வளர்த்தெடுத்தார்கள். ஜே.ஆர். ஜயவர்தன கோனவல சுனிலுக்கு மன்னிப்பு வழங்கினார். ஆர். பிரேமதாச சொத்தி உபாலியை நிறைவேற்றுச் சபைக்கு எடுத்தார். சந்திரிக்கா குமாரதுங்க பெத்தெகான சஞ்சீவவை தனது பாதுகாப்பு பிரதானியாக நியமித்துக்கொண்டார். நாமல் ராஜபக்ஷவிற்கு பாதுகாப்பு வழங்குபவர் ஜுலம்பிட்டியெ அமரே. இந்த ஆட்சியாளர்களுக்கு பாதுகாப்புப் பிரிவுகளின் ஜெனரல்மார்களின் பாதுகாப்பு போதாதென பாதாளக்கோஷ்டியிடம் ஒப்படைத்தார்கள். இந்த நிலைமையை மாற்றியமைத்திட புதிய எழுச்சி, உஒருமைப்பாடு, புதிய மலர்ச்சி எமது நாட்டுக்கு அவசியமாகும். அந்த மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதில் பாரிய செயற்பொறுப்பு இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவிடம் கையளிக்கப்படுகின்றது. அதனை சிறப்பாக ஈடேற்றுவீர்கள் என்பது எம்மனைவருக்கும் உறுதியானதே.

Show More

“நாட்டைச் சூழவும் கடலை வைத்துக்கொண்டு நாங்கள் வெளிநாட்டிலிருந்து மீனைக் கொண்டுவருகிறோம்… டொலரை ஈட்டுகின்ற வளங்கள் பயன்படுத்தப்படாமல் வீணாகிப்போகின்றன…” -மவிமு பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா-

(கழுத்துறை மாவட்ட மீனவர் மாநாடுஅகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் – 2024.01.25) தற்போது மீன்பிடிக் கைத்தொழில், விவசாயம் உள்ளிட்ட அனைத்துக் கைத்தொழில்களும் தொழில்முயற்சிகளும் போன்றே நாட்டின் பொருளாதாரமும் முழுமையாகவே சீரழிக்கப்பட்டுள்ளது. இந்த பேருவளை நகரம் இரத்தினக்கல் கைத்தொழிலைப்போன்றே சுற்றுலாக் கைத்தொழிலுக்கும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அவையனைத்தும் தற்போது சீரழிக்கப்பட்டுள்ளன. எமது ஒட்டுமொத்த பொருளாதாரமுமே சீரழிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வங்குரோத்து அடைந்த ஒரு நாட்டிலேயே வசிக்கிறோம். மத்திய வங்கி பிரதானிகன் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்கள் “எமது நாடு வங்குரோத்து” நாங்கள் […]

(கழுத்துறை மாவட்ட மீனவர் மாநாடு
அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் – 2024.01.25)

தற்போது மீன்பிடிக் கைத்தொழில், விவசாயம் உள்ளிட்ட அனைத்துக் கைத்தொழில்களும் தொழில்முயற்சிகளும் போன்றே நாட்டின் பொருளாதாரமும் முழுமையாகவே சீரழிக்கப்பட்டுள்ளது. இந்த பேருவளை நகரம் இரத்தினக்கல் கைத்தொழிலைப்போன்றே சுற்றுலாக் கைத்தொழிலுக்கும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அவையனைத்தும் தற்போது சீரழிக்கப்பட்டுள்ளன. எமது ஒட்டுமொத்த பொருளாதாரமுமே சீரழிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வங்குரோத்து அடைந்த ஒரு நாட்டிலேயே வசிக்கிறோம். மத்திய வங்கி பிரதானிகன் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்கள் “எமது நாடு வங்குரோத்து” நாங்கள் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாது. இந்த ஆட்சியாளர்கள் பெப்புருவரி 04 ஆந் திகதி 76 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகி வருகிறார்கள். அத்தினத்தன்று கடலுக்கு துப்பாக்கிப் பிரயோகம்செய்து, களியாட்டங்களை நடாத்தி, ஜனாதிபதி, பிரதமர் நாட்டின் அபிவிருத்தி பற்றி, சுதந்திரத்தினால் எமக்கு கிடைத்தவை பற்றி, எதிர்காலத்தை நாட்டை உருப்படியாக்குவது எப்படியென தம்பட்டம் அடிப்பார்கள். இதுவரை காலமும் சுதந்திர தின வைபவங்களில் நாட்டை உருப்படியாக்குகின்ற விதம் பற்றியே பேசினார்கள். எவ்வாறு உருப்படியாக்கினோம் என்பது பற்றிப் பேசவில்லை.

எனினும் 76 வருடங்கள் கழிந்தவிடத்து மீனவனால் அந்த கைத்தொழிலில் வாழமுடியாதநிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்களால் ஏதெனுமொரு உற்பத்தி வழிமுறையால் வாழமுடியாதநிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கழுத்துறை மாவட்டத்தில் தேயிலை, இறப்பர் கைத்தொழில்கள் சீரழிந்துவிட்டன. இந்த சீரழிவு தற்செயலாக ஏற்பட்டதொன்றல்ல. குறிப்பாக கடந்த 45 வருட காலத்தினால் எமது நாட்டின் அனைத்து உற்பத்திகளும் சீரழிக்கப்பட்டுள்ளன. எமது ஆட்டசியாளர்கள் கடன் பெற்றார்கள், திருடித் தின்றார்கள், உற்பத்தி வழிமுறைகளை விருத்திசெய்யவில்லை. வாங்கிய கடனைச் செலுத்தமுடியாமல் நாங்கள் வங்குரோத்து அடைந்துள்ளோம். எம்மிடம் வெளிநாட்டு ஒதுக்கங்கள் கிடையாது. எமக்கு எண்ணெய் வரிசைகளில் கேஸ் வரிசைகளில் காத்திருக்க நேரிட்டது. எமக்கு அவற்றுக்காக செலுத்த டொலர் இன்மையாகும். நாங்கள் டொலரைப் பிறப்பிக்கவில்லை. இருந்த டொலரைக் கொண்டுதான் எமக்கு அவசியமானவற்றைக் கொண்டுவரவும் கடனைச் செலுத்தவும் நேரிட்டது. இந்த இரண்டையும் புரிய முடியாதென்பதால் இரண்டு வருடங்களாக நாங்கள் கடன் செலுத்துவதில்லை. அதனால் இருந்த டொலர்களைக்கொண்டு சிறிது பொருட்களைக் கொண்டுவர இயலுமை கிடைத்தது. நாங்கள் இருப்பது வெளிநாட்டுச் சொத்துக்கள் இல்லாத ஒரு நாட்டிலாகும். எமக்கு வெளிநாட்டுச் சொத்துக்களை ஈட்டக்கூடிய பெருமளவிலான வளங்கள் இருந்தபோதிலும் அவை பயன்படுத்தப்படாமல் விரயமாகி வருகின்றன. ஒரு நாடு இப்படிப்பட்ட நிலைமைக்கு ஆளாகவேண்டுமா?

மீன்பிடித்தொழில் பற்றி அறிந்த, திறமையான மீனவர்கள் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கு விளைச்சலைப் பெறுவதற்கான வாய்ப்பு வசதிகளை அரசாங்கம் பெற்றுக்கொடுத்தால் டொலர்களை உழைக்க முடியும். உலகில் கடல் இருக்கின்ற ஒவ்வொரு நாட்டினதும் மிகப்பெரிய கைத்தொழில் மீன்பிடித் தொழிலாகும். ஜப்பான், தென்கொரியா, சீனா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் மீன்பிடி ஒரு பாரிய கைத்தொழிலாகும். நாட்டைச் சூழவுள்ள கடலில் எம்மால் பல கைத்தொழில்களை புரியமுடியும். மீன்பிடிக் கைத்தொழில், சுற்றுலாக் கைத்தொழில், காற்றுவிசை மின்சாரத்தைப் பிறப்பிக்கமுடியும். அவற்றைப் புரிவதில் அரசாங்கங்கள் வெற்றியடையவில்லை. எம்மால் வருமானம் பெறக்கூடிய துறைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. விவசாயத்திற்குப் பொருத்தமான மண், காலநிலை உள்ளது. எனினும் கமக்காரனுக்கு தேவையான ஒத்துழைப்பினை அரசாங்கம் கொடுக்காமையால் விவசாயம் சீரழிந்து விட்டது. நாட்டை வங்குரோத்து அடையச்செய்வித்த ஐயாமார்கள் மீண்டும் அவர்களால் நாட்டைச் சீரமைக்க முடியுமெனக் கூறுகிறார்கள். வங்குரோத்து அடையச் செய்வித்தவர்களால் மீண்டும் உருப்படியாக்கிட முடியாது. அதுதான் உண்மை. உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்கவில்லை. கடன்வாங்கித் தின்கின்ற பொருளாதாரத்தை உருவாக்கினார்கள். அதன் பெறுபேறுகளை நாங்கள் அனுபவித்து வருகிறோம். தொழில்முயற்சிகள் சீரழிந்து வங்கிகளுக்கு சொந்தமாகி விடுகின்றன. ஒருசிலர் விற்றுத்தீர்த்துப் போகிறார்கள். அழிவடைந்த நாட்டில் மக்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் நெருக்கடியை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த நெருக்கடிக்குள்ளேயே நல்லதொரு விடயம் மேலோங்கி வருகின்றது. இந்த பேரழிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் வரலாற்று அனுபவங்கள் மூலமாக ஒரு முடிவினை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 76 வருடகாலமாக பேணிவந்த தவறான பொருளாதாரத்தையும் தவறான அரசியலையும் அதற்கு தலைமைவகித்த அனைத்து ஆட்சிக்குழுக்களையும் விரட்டியடித்து மக்களின் அரசாங்கமொன்றை அமைக்கத் தயாராகி இருக்கிறார்கள். “ஒவ்வொரு கறுப்பு மேகத்திலும் வெள்ளிக் கோடு இருப்பதுபோல்” திசைகாட்டியை சூழத் தயார் எனும் செய்தியை அனைத்துச் சக்திகளும் சுட்டிக்காட்டி வருகின்றன. நாங்கள் உங்கள் அனைவரையும் சேர்த்தக்கொண்டிருப்பது வாக்குகளைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்குச் செல்வதற்காக அல்ல. நாங்கள் இந்த நாட்டின் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும். எமது நாட்டின் உற்பத்திக்கு பங்களிப்புச் செய்கின்ற சக்திகள் அனைத்தையும் ஒன்றுதிரட்ட வேண்டும். நாங்கள் அமைக்கின்ற புதிய அரசாங்கத்தில் பெருங்கடலை வெற்றிகொள்ள மீன்பிடித்தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர் சமுதாயத்தை ஒன்றுதிரட்ட வேண்டும். எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு மீன்பிடித்தொழிலில் இருந்து பெரும்பங்கினைச் சேர்ப்பதற்கான திடசங்கற்பத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காகவே இந்த மாநாடு நடாத்தப்படுகின்றது.

நாங்கள் கேட்கின்றவற்றைக் கொடுக்கவும் அதற்கு செவிசாய்த்திடவும் இந்த அரசாங்கம் தயாரில்லை. பேசவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ இடமளிப்பதில்லை. நாங்கள் என்ன செய்வது? அதற்காக எமது நாட்டின் அனைத்துச் சக்திகளையும், மீனவர், கமக்காரர், உழைக்கும் மக்கள், தொழில்முனைவோர் அனைவரும் எமது பணிகளை மேற்கொள்ளக்கூடிய, எமது வியர்வைக்கும் முயற்சிக்கும் பெறுமதி கிடைக்கின்ற, எமது பணிகளால் நாட்டுக்கு எதையாவது சேர்க்கக்கூடிய புதிய நாட்டை உருவாக்கிட வேண்டும். புதிய உற்பத்திப் பொருளாதாரமொன்றை உருவாக்கிட வேண்டும். நாங்கள் புதிய அரசாங்கமொன்றை அமைத்திட வேண்டும். இந்நாட்களில் மேற்கொண்ட அனைத்து மதிப்பாய்வு அறிக்கைகளிலும் தேசிய மக்கள் சக்தி முன்னணியில் இருக்கின்றது. பெரும்பான்மை மக்களின் தெரிவு மாத்திரமல்ல. உளவுப் பிரிவு அறிக்கைகளிலும் கூட நாங்கள் முன்னணியில் இருக்கின்றமையே வெளிப்பட்டுள்ளது. இப்போது நாட்டை ஆட்சிசெய்கின்ற ஐயாமார்கள் பயந்துபோயுள்ளார்கள். அவர்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய சவாலாக தேசிய மக்கள் சக்தி மாறியுள்ளமையே அதற்கான காரணமாகும். தற்போது அவர்கள் பேசுவது எமது கொள்கைகளைப் பற்றியல்ல. சேறு பூசுதல்களும் அவதூறாக பேசுவதுமாகும். நாங்கள் ஒரு சக்தி என்றவகையில் எவ்வளவு பலம்பொருந்தியவர்கள் என்பதே அதன்மூலமாக புலப்படுகின்றது.

இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம்சென்று எம்மீது வரி விதிக்கிறார்கள். அவர்கள் எந்தவிதமான அர்ப்பணிப்பையும் செய்யாமல் எம்மை அர்ப்பணிப்புச் செய்யுமாறு கோருகிறார்கள். உழைக்கும்போதே செலுத்துகின்ற வரியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மருத்துவர்கள் நாட்டை விட்டுச் சென்றார்கள். வரவுசெலவுக்கு முன்னராக பாராளுமன்ற பிரேரணை நிறைவேற்றம் மூலமாக வற் வரியை அதிகரித்தார்கள். 15% இல் இருந்ததை 18% வரை அதிகரித்தார்கள். வற் வரிக்கு ஏற்புடையதாக இருந்திராத 94 பண்டங்களுக்கு வற் வரி விதித்தார்கள். அந்த பண்டங்கள் மத்தியில் பாடசாலை உபகரணங்கள், எண்ணெய், பசளை, விவசாய உபகரணங்கள் பொதுவான வாழ்க்கைக்கு அத்தியாவசியமான அனைத்துப் பண்டங்களுக்கும் வற் வரி விதிக்கப்பட்டுள்ளது. முன்னர் வருமானம் பெறுகின்றவர்களிடமிருந்து வரி அறவிடப்பட்டது. தற்போது எந்தவிதமான வருமானம் இல்லாதவர்களும் வரி செலுத்தவேண்டி ஏற்பட்டுள்ளது. அனைவரும் வரி செலுத்துவதற்கான டின் இலக்கமொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வேறு நாடுகளில் வரி அறவிட்டு கல்விக்காக, சுகாதாரத்திற்காக, நலனோம்பலுக்காக வசதிகள் வழங்கப்படுகின்றன. எமது நாட்டில் வரி அறவிடுகிறார்கள்: கல்விக்கு சுகாதாரத்திற்கான செலவுகளைக் குறைக்கிறார்கள்.

எங்கள் தாய் தந்தையருக்கு பணம் கிடையாதென்பதால் பிள்ளைக்கு கல்வி புகட்ட முடியாத நிலையேற்படுகின்றது. நோய்க்கு மருந்து வாங்க வழியில்லை. ரணில் விக்கிரமசிங்க செலவுத் தலைப்பு மூலமாக வரவுசெலவில் இருந்து பணத்தை ஒதுக்கிக்கொண்டு ஒருமாதம்தான் ஆகிறது. மீண்டும் வெளிநாட்டு விஜயங்களுக்கும் வாகனப் பராமரிப்பிற்கும் குறைநிரப்பு மதிப்பீடுமூலமாக பணத்தைக் கோருகிறார். சனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டு ஒருவருடத்தில் பதினான்கு தடவைகள் வெளிநாடு சென்றுள்ளார். அவர் ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு சுகபோகம் அனுபவிக்கிறார். உங்கள்மீதும் எம்மீதும் வரிவிதித்து பெறுகின்ற பணத்தையே இவ்வாறு செலவு செய்கிறார்கள்.

உற்பத்தி வழிமுறைகளை வீழ்ச்சியடைச்செய்து, வருமான வழிவகைகளை இல்லாதொழித்து, எம்மீது வரிவிதித்து, கழுத்தை நெரித்து சுரண்டி கொள்ளைக்கார கும்பலொன்று சுகமாகவும் சந்தோசமாகவும் வாழ்கிறது. எங்கள் முன்னிலையிலும் உங்கள் முன்னிலையிலும் பாரிய பொறுப்பு இருக்கின்றது. வீழ்த்திய மீன்பிடித் தொழிலை, இரத்தினக்கல் தொழிலை, விவசாயத்தை, தேயிலைத் தொழில்த்துறையை மீட்டெடுத்திட வேண்டும். அதற்கு உதவுவதற்காக, பிரமாண்டமான உற்பத்திப் பொருளாதாரத்திற்கு கைகொடுத்து உதவுகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான கொள்கைகளைக்கொண்ட, ஆற்றல் படைத்த அரசாங்கமொன்றை நாங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும். இந்த அரசாங்கம் எமது அபிமானத்தை வீழ்த்தியுள்ளது. உலகில் எந்தவொரு நாடும் எமக்கு வீசா வழங்குவதில்லை. எமது நாட்டில் நிதிக் கொள்கையைத் தீர்மானிப்பது சர்வதேச நாணய நிதியமாகும். பொருளாதாரப் பலத்தையும் பொருளாதார சுதந்திரத்தையும் நாங்கள் இழந்துள்ளோம். உற்பத்திப் பொருளாதாரமொன்றையும் உறுதியான பொருளாதாரமொன்றையும் நாங்கள் உருவாக்கிட வேண்டும். உற்பத்திப் பொருளாதாரத்தையும் அந்த உற்பத்தி அனைவருக்கும் நியாயமானவகையில் பகிரப்படுகின்ற பொருளாதாரத்தையும் உருவாக்கிட வேண்டும். எமது நாடு கலாசாரரீதியாக நாசமாக்கப்பட்டுள்ளது. ஊழலும் மோசடியும் தாண்டவமாடுகின்றன. சட்டத்தின் ஆட்சி கிடையாது. பாதாள உலகக் கோஷ்டியும் பொலீஸின் ஒருசில உத்தியோகத்தர்களும் கொலை செய்கிறார்கள். சீருடைதரித்து கௌரவமாக தொழில்புரிய பொலீஸாருக்கு இடமளிக்கவில்லை. பொலீஸாரை அரசியலுக்கு கட்டுப்படுத்தினார்கள். அதனால் சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்படல் வேண்டும்.

ஒத்துணர்வுகொண்ட, சகோதரத்துவத்துடன் சீவிக்கின்ற மக்களை உருவாக்க வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லீம் இனங்களுக்கிடையில் தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும். நாட்டை நேசிக்கின்ற அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டும். நாட்டை மீட்டெடுத்தால் தொழில்முயற்சிகள் பலமடையும். விவசாயம் விருத்தியடையும். எமது கைக்கு காசு வரும். எம்மால் சிறந்த வாழ்க்கையைக் கழிக்க முடியும். சேர்கின்ற வரித் தொகை அதிகரிக்கும். தற்போது மக்களின் கொள்வனவுகள் குறைந்துவிட்டன. பொருளாதாரம் சுருங்கினால் அரசாங்கம் எதிர்பார்க்கின்ற வரி சேரமாட்டாது. பலம்பொருந்திய பொருளாதாரத்தை அமைத்தால் சமூகம் சிறந்ததாக அமையும். கல்விக்கு பிரச்சினை ஏற்பட மாட்டாது. பலம்பொருந்திய பொருளாதாரத்தை அமைத்தால் அதன் நன்மைகள் மக்களுக்கு கிடைக்கும். பணத்தை பகிர்ந்தளிப்பது பற்றியா? இல்லை. சீனக் கூற்று ஒன்று இருக்கின்றது “நான் உங்களுக்கு ஒரு மீனைக் கொடுத்தால் உங்களின் ஒருவேளை பசியைப் போக்கலாம். நான் உங்களுக்கு மீன்பிடிக்கின்ற வழிமுறையைக் கற்றுக்கொடுத்தால் உங்கள் பசியை சதாகாலமும் போக்கலாம்.” நாங்கள் செய்யவேண்டியது மக்களுக்கு மூன்றுவேளை உண்ணக்கூடிய பொருளாதாரமொன்றை அமைத்துக்கொடுக்க வேண்டும். எமக்குத்தேவை பிறரில் தங்கிவாழும் மக்களல்ல. தமது முயற்சியால் எழுந்து நிற்கையில் அதற்கு கைகொடுத்து உதவுகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும்.

நன்மைகளை நியாயமாக பகிர்ந்தளிக்கின்ற பலம்பொருந்திய பொருளாதாரமொன்றை நாங்கள் உருவாக்கிட வேண்டும். எவ்வாறு நன்மைகளைப் பகிர்வது. நன்மைகள் அதிகரிப்பதன் மூலமாக கல்விக்காக ஒதுக்குகின்ற பணத்தின் அளவு அதிகரிக்கும். நீங்கள் பிள்ளைகளின் கல்விக்காக பணம் செலவிட வேண்டியதில்லை. பாடசாலைக் கல்வி சிறப்பாக ஈடேறுமாயின் ரியுஷன் அனுப்பத் தேவையில்லை. அருகிலுள்ள பாடசாலையை சிறந்த பாடசாலையாக மாற்றினால், அனைத்து வசதிகளையும் கொண்டதாக அமைத்தால் எமது பிள்ளை ஊரிலுள்ள பாடசாலைக்குச் செல்லும். செலவு குறையும். பாதுகாப்பு சம்பந்தமான சிக்கல் கிடையாது. பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் சுதந்திரம் கிடைக்கும். சுகாதார சேவைக்கு அதிகமான பணத்தை ஒதுக்கினால் எமக்கு மருந்து இலவசமாக கிடைக்கும். பரிசோதனை வசதிகள் அமைக்கப்படும். அதுதான் தேசிய மக்கள் சக்தியின் கொள்கை. தற்போது மக்களை நோயாளிகளாக மாறஇடமளித்து நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பது ஒரு தீத்தொழிலாக மாறிவிட்டது. நாங்கள் வீழ்த்திய நாட்டை மீட்டெடுத்திட வேண்டும். எமக்கு இருக்கின்ற மிகப்பெரிய செல்வம் கடலாகும். அதில் கைவைக்கவில்லை. எமரது நாட்டுக்கு மீன்பிடிக்கின்ற ட்ரோலர் கலமொன்று, கப்பலொன்று கிடையாது. மீன்பிடிக் கைத்தொழிலை நாட்டுக்கு வருமானம் கொண்டுவருகின்ற கைத்தொழிலாக மாற்றிடவேண்டும். பலம்பொருந்திய பொருளாதாரத்தை உருவாக்குகின்ற மக்களின் அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள வேண்டும். தேசிய மலர்ச்சியை ஏற்படுத்துகின்ற அரசாங்கமொன்றை அமைத்திட வேண்டும். நாமனைவரும் தெரிவுசெய்ய வேண்டிய ஒரே சக்தி தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. அதனால் வங்குரோத்து அடைந்த அரசியலை ஒருபுறம் வைத்துவிட்டு எமது வலிமைகள் மீது, எமது வளங்கள் மீது நம்பிக்கை வைப்போம். தேசிய ஒற்றுமையை உருவாக்கிடுவோம். புதிய நாட்டை, புதிய சமூகத்தை, அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய சமூகமென்றை அமைத்திடுவோம்.

Show More

தேசிய மக்கள் சக்திக்கும் புதிய இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு

-Colombo, January 23, 2024- தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று (23) பிற்பகல் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் திரு. Santosh Jha அவர்களை சந்தித்தனர். புதிய இந்திய உயர்ஸ்தானிகர் திரு. Santosh Jha அவர்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கையில் தனது கடமைகளை ஆரம்பித்த பின்னர், முதற் தடவையாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவரை சந்தித்தார். இதன்போது இலங்கையின் நடப்பு அரசியல் நிலவரங்கள் […]

-Colombo, January 23, 2024-

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று (23) பிற்பகல் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் திரு. Santosh Jha அவர்களை சந்தித்தனர்.

புதிய இந்திய உயர்ஸ்தானிகர் திரு. Santosh Jha அவர்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கையில் தனது கடமைகளை ஆரம்பித்த பின்னர், முதற் தடவையாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவரை சந்தித்தார்.

இதன்போது இலங்கையின் நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்தும் பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும் தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

Show More

“சீரழித்த நாட்டை நாகரிகமடைந்த நிலைக்கு கொண்டுவருகின்ற புதிய அரசியல் மாற்றமொன்று அவசியமாகும்” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

-Colombo, January 21, 2024- எமது நாட்டுப் பெண்களின் மாபெரும் எழுச்சி இன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தியாகிய எமக்கு எதிராக இந்நாட்களில் எழுகின்ற அவதூறுகூறல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கழுத்துறை பக்கத்தில் தங்கத்துடன் தொடர்புடைய ஒருவர், கம்பஹா பக்கத்தில் கப்பம் பெற்ற ஒருவர், நீர்கொழும்பு பக்கத்தில் போதைத்தூளுடன் தொடர்புடைய ஒருவர், குருநாகல் பக்கத்தில் வரிமோசடி செய்த ஒருவர், அதைப்போலவே அலோசியஸை நியாயப்படுத்துவதற்காக புத்தகங்களை எழுதி பணம் வாங்கிய ஒருவர் மறுபக்கத்தில் என்றவகையில் அவதூறாக பேசுதல் பாரியளவில் […]

-Colombo, January 21, 2024-

எமது நாட்டுப் பெண்களின் மாபெரும் எழுச்சி இன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தியாகிய எமக்கு எதிராக இந்நாட்களில் எழுகின்ற அவதூறுகூறல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கழுத்துறை பக்கத்தில் தங்கத்துடன் தொடர்புடைய ஒருவர், கம்பஹா பக்கத்தில் கப்பம் பெற்ற ஒருவர், நீர்கொழும்பு பக்கத்தில் போதைத்தூளுடன் தொடர்புடைய ஒருவர், குருநாகல் பக்கத்தில் வரிமோசடி செய்த ஒருவர், அதைப்போலவே அலோசியஸை நியாயப்படுத்துவதற்காக புத்தகங்களை எழுதி பணம் வாங்கிய ஒருவர் மறுபக்கத்தில் என்றவகையில் அவதூறாக பேசுதல் பாரியளவில் அதிகரித்துள்ளது. எமது நாட்டின் சகோதரிகள், தாய்மார்கள், தகப்பன்மார்களை ஏமாற்றமுடியுமென அவர்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலைமையை மாற்றியமைத்து மாத்தறையில் தொடங்கிய பெண்களின் சுனாமி பகைவர்களை பதற்றமடையச் செய்வித்து நாடுபூராவிலும் வீசிவருகின்றமையே இவ்விதமாக அதிகரிக்க காரணமாகியுள்ளது. இன்று பதுளையைக் கண்டதும் மேலும் பதற்றமடைவார்கள். ஊர்களில் இருக்கின்ற பலவிதமான சங்கங்களில் பெண்கள் முனைப்பாக செயலாற்றினாலும் அதனை கணவனிடம் ஒப்படைத்து வாழ்ந்தார்கள். இன்று அந்த அரணை, மூடநம்பிக்கையை சிதைத்து தேசிய மக்கள் சக்தியின்கீழ் இலங்கையின் மிகவும் பலம்பொருந்திய பெண்கள் எழுச்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. சகோதரிகளும் பெண்களும் விழிப்படைந்தார்கள் என்பது அவர்களின் அரசியல் பயணத்தின் சாவுமணியே என்பது தெளிவாகின்றது.

பெண்கள் தலைமுறையினர் இலங்கையில் முன்னணிக்கு வரவேண்டுமென நாங்களும் நினைக்கிறோம். பொருளாதாரரீதியாக சீரழிந்த, குற்றச்செயல்கள் மலிந்த, போதைப்போருட்கள் நிறைந்த, சுகாதாரமும் கல்வியும் சீரழிந்த, கிராமிய மக்கள் பாரிய கடன்பொறிக்குள் இறுகிப்போன சோகக் கதையே எமது நாட்டில் நிலவுகின்றது. உலக நாடுகளுக்கு வீசா வழங்கப்படாத நிலைமை உருவாகி இருக்கின்றது. பயிற்சிக்காக இங்கிலாந்துசென்ற பொலீஸ் உத்தியோகத்தர்களும் தலைமறைவாகிவிட்டார்கள். எனவே வீசா வழங்குவதில்லை. உலகின் முன்னிலையில் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் கதை மாத்திரமல்ல மக்களின்கதையும் சோகமயமானதே. நாட்டின் கதையையும் மக்களின் பொதுவான கதையையும்விட அதிகமாக சோகமயமானதாகி இருப்பது நாட்டுப் பெண்களின் கதையாகும். கர்ப்பிணித் தாய்மார்களில் 20% இற்கு கிட்டியோர் இரத்தக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சரியான உணவுவேளையொன்று கிடையாது. பிள்ளைகளின் கல்வி சீரழிந்ததும் அதிகமாக கவலைப்படுபவர்கள் தாய்மார்களே. பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றி பகலிரவு பாராமல் சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் தாய்மார்களே. எனினும் பிள்ளைகளில் 54% கல்வி உபகரணங்களை கொள்வனவு செய்வதைக் குறைத்தோ அல்லது நிறுத்தியோ உள்ளார்கள். பிள்ளைகளில் 19% பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்வதை நிறுத்தி உள்ளார்கள். பொருளாதாரச் சீர்குலைவின் பெறுபேறு பேரிடிபோல் பிள்ளைகள்மீது வீழ்ந்தமையால் அல்லற்படுபவர்கள் தாய்மார்களே. போதைப்பொருள் பாவனை காரணமாக அதிகமாக வேதனைப்படுபவர்கள் தாய்மார்களே. சிறைச்சாலைகளுக்கு அருகில் ஏளனத்திற்கு இலக்காகி வேதனைகளை அனுபவிப்பவர்கள் பெண்களே. குற்றச்செயல்கள் நிரம்பிவழிகின்ற ஒரு நாட்டில் பெண்களுக்கு சுதந்திரம் கிடையாது. எமது நாட்டுச் சிறுமிகளில் பெருந்தொகையானோர் ஏதாவொரு வகையிலான பாலியல் தொல்லைகளுக்கு இலக்காவதால் வேதனையை அனுபவிப்பவர்கள் தாய்மார்களே.

பாதுகாப்பு இல்லாத இந்த நாடு நல்லதா?பெண்கள் இவ்வாறுதான் வாழவேண்டுமா? நகரங்களில் பாதுகாப்பாக செல்லக்கூடிய பெண்களுக்கான கழிப்பறைகள் கிடையாது. இதனால் பெருமளவில் நோய்களுக்கு இலக்காகிறார்கள். இவ்விதமாக வேதனைகளை அனுபவிக்கின்ற மகிழ்ச்சி இல்லாமல் சந்தோசமில்லாமல் எமது தாய்மார்கள் அக்காமார்கள் செத்து மடிகிறார்கள். எங்கள் ஊர்களில் அம்மாமார்களுக்கு அக்காமார்களுக்கு மகிழ்ச்சியே இல்லாத காய்ந்துபோன விறகுக்கட்டைகளைப்போன்ற வாழ்க்கை உரித்தாக்கிக் கொடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு அப்படியில்லை. ஷிரந்தி சீமாட்டி நடக்கும்போதும் ஏழுஎட்டுபேர் சூழ்ந்து செல்கிறார்கள். ஆட்சியார்கள் ஏற்படுத்திய அனர்த்தத்திற்கு பிரதானமாக இரையாகியுள்ளவர்கள் பெண்களாவர். இந்த நிலைமையை மாற்றியமைத்திட உறுதியுடன் எழுச்சிபெறவேண்டியவர்கள் எமது நாட்டின் பெண்களே. வெளிநாடு சென்றுள்ள உழைப்பாளிகளிடமிருந்து ஏறக்குறைய 6 பில்லியன் டொலர் மிகஅதிகமாக அந்நியசெலாவணித் தொகையை ஈட்டித்தந்துள்ளவர்கள் பெண்களே. ஆடைத்தொழில்த்துறையில் ஈடுபட்டுள்ளவர்களும் எமது சகோதரிகளே. அடுத்ததாக மிக அதிகமாக அந்நிய செலாவணியை ஈட்டித்தருகின்ற தேயிலைத் தொழில்த்துறையில் ஈடுபட்டுள்ள பெரும்பகுதியினர் தாய்மார்களும் சகோதரிகளுமாவர். இந்நாட்டின் பொருளாதாரம் பெண்களின் கைகளிலேயே இருக்கின்றது. மறுபுறத்தில் பாடசாலைகளில் அதிகமாக இருப்பவர்களும் ஆசிரியைகளே. இவ்விதமாக பெருமளவிலான செயற்பொறுப்பினை ஈடேற்றி செயலாற்றிக் கொண்டிருந்தாலும் மிகஅதிகமாக அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்ற பெண்களின் நிலைமையை மாற்றியமைத்திடவேண்டும். இந்த இடத்தில் குழுமியுள்ள நீங்கள் அனைவரும் முன்னொருபோதும் இருந்திராதவகையில் அதிக வேகத்தில் முன்னணிக்குவந்து இந்த நிலைமையை மாற்றியமைத்திட வேண்டும்.

முன்பெல்லாம் சனாதிபதி தேர்தலை நடாத்தினால் அவர்கள் வெற்றிபெறுவார்கள். பொதுத்தேர்தலை நடாத்தினாலும் அவர்கள் வெற்றிபெறுவார்கள். எனினும் தற்போது சனாதிபதி தேர்தலை முதலில் நடாத்துவதா, பொதுத்தேர்தலை முதலில் நடாத்துவதா என அவர்கள் இரண்டும்கெட்ட நிலைக்கு வருமளவுக்கு என்பிபி பலமடைந்துள்ளது. தமக்கு சாதமான நிலைமை இருக்கும்போது தொடர்ச்சியாக தேர்தல்களை நடாத்தினர்கள். தற்போது களத்தில் கால்வைக்க முடியாதநிலை உருவாகி உள்ளது. இதனை மாற்றியமைத்திட மிகச்சிறந்த சந்தர்ப்பம் உருவாகி இருகின்றது. எல்லாளன் – துட்டுகெமுணுவின் இருபக்கத்தில் இருந்த ரணில் – மகிந்த மேடையில் கடதாசி வாளேந்தி யுத்தம் புரிகையில் ஊரிலுள்ள எம்மவர்கள் பொல்லேந்தி தாக்குதல் நடாத்தினார்கள். எனினும் இன்றளவில் இந்த இருசாராரும் ஒரே கும்பல் என்பதை நன்றாகவே நிரூபித்துள்ளார்கள். ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு சவாரி செல்லும்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை மக்களின் பணத்தைச் செலவிட்டு அழைத்துச் செல்கிறார். உகண்டாவிற்குப் போகும்போது பொலநறுவையின் ஐக்கிய மக்கள் சக்தி கிங்ஸ்லி நெல்சன். பதுளையில் சாமர சம்பத்தையும் கூட்டிக்கொண்டு போகிறார். அங்கே தங்கவைத்துவிட்டே வருவாரா தெரியவில்லை. இந்த இருசாராருமே 75 வடருடங்களுக்கு மேலாக நாட்டை ஆட்சிசெய்து பொருளாதாரத்தை சீரழித்து பிச்சைக்கார நாடாக மாற்றியுள்ளார்கள். நாட்டின் கைத்தொழில்களை சீரழித்தார்கள். ஊர்களிலுள்ள நாங்கள் ஏதேனும் விலங்குகள் சாப்பிடுகின்றவற்றில்கூட நஞ்சு கலப்பதில்லை. எனினும் சுகாதார அமைச்சில் இன்ஜெக்ஷன் என வாங்கி இருப்பது பங்கசு இருந்த தண்ணீரையாகும். பங்கசு நிறைந்த தண்ணீரை இன்ஜெக்ஷன் என நோயாளிகளுக்கு வழங்கிய சுகாதார அமைச்சர் இன்றும் சுதந்திரமாக இருக்கிறார். எல்லாவிதத்திலும் சீரழித்த ஒரு நாடுதான் எமக்கு இருக்கின்றது. இலங்கையின் அரசசேவை சீரழிக்கப்பட்டுவிட்டது. நிரந்தர பொலீஸ் மா அதிபர் இல்லாத இடத்திற்கு வங்குரோத்து செய்யப்பட்டுவிட்டது.

எமது நாட்டின் சமூக அமைப்புகள் அனைத்துமே சீரழிக்கப்பட்டுவிட்டன. அப்படிப்பட்ட நாட்டில் பன்சல மாத்திரம் தப்பிவிடமாட்டாது. பற்பல வகையிலான கூத்துக்கார போதிசத்துவர்கள் வந்திறங்குகிறார்கள். அனைத்துமே சீரழிந்த நிலையில் மனித சமூகமும் சீரழிந்துவிட்டது. இரத்தினபுரியின் பிரேமலால் ஜயசேகர என்பவர் மனிதப்படுகொலை தவறுக்காக மேல்நீதிமன்றத்தினால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர். அந்த பிரேமலால் ஜயசேகரவிற்கு இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து மக்கள் அதிகமான விருப்புவாக்குகளை அளித்தார்கள். கண்டியில் வட்டிமுதலாளி ஒருவரிடமிருந்து பணத்தைக் கடன்வாங்கிய ஒருவர் கடனை மீளச்செலுத்த தாமதித்தமையால் அந்த முதலாளி இரண்டு கைகளையும் வெட்டியெடுத்து மோட்டார் சைக்கிளில் பொலீஸுக்குச் சென்றார். மக்கள் அவரை கண்டி நகரசபைக்கு அனுப்பிவைத்தார்கள். கழுத்துறையிலிருந்து றோஹிதவை, கண்டியிலிருந்து மகிந்தானந்தவை, குருநாகலில் இருந்து ஜோன்ஸ்ரனை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கின்ற அளவுக்கு மனித சமூகம் சீரழிந்துவிட்டது. எதையாவது பெற்றுக்கொள்வதற்காக தமது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அடகுவைக்கின்ற மக்களே இருக்கிறார்கள். இந்த நாட்டில் எந்தவொரு இடமும் எஞ்சவில்லை. வீதியில் விற்கின்ற மாங்காயை வாங்கினாலும் நம்பிக்கையுடன் சாப்பிடமுடியாது. முழுமையான மனித நாகரிகமுமே சீரழிந்துள்ளது. சீரழித்த இந்த நாட்டை நாகரிமான நிலைக்குகொண்டுவர புதிய அரசியல் மாற்றமொன்று நாட்டுக்கு அவசியமாகும். ஒத்துணர்வுமிக்க மனித சமூகமொன்று அவசியமாகும். பருத்தித்துறையில் இருந்து தெவுந்தர முனைவரை கழுத்தில் தங்கத்தை அணிந்துகொண்ட ஒரு பெண்ணால் பாதுகாப்பாக பயணிக்கக்கூடிய நிலைமை இன்று இருந்தது. இன்று சீரழிந்துள்ள ஒட்டுமொத்த சமூக அமைப்பையுமே மீட்டெடுக்கின்ற சமூக மாற்றமொன்று அவசியமாகும். இலக்கியம், பாடல்களை இரசிக்கின்ற, திரைப்படமொன்றை, நாடகமொன்றை பார்த்து இரசிக்கின்ற குடும்பங்களைப்போன்றே ஒரே மேசையில் அமர்ந்து குடும்பத்தவர்கள் அனைவரும் உணவு புசிக்கின்ற சமூகமொன்றே எமக்குத் தேவை.

அதனால் வெறுமனே தலைவர்களை மாற்றுகின்ற, அரசாங்கத்தை மாற்றுகின்ற நிலைக்குப் பதிலாக ஒட்டுமொத்த சமூக முறைமையையுமே மீளக் கட்டியெழுப்புகின்ற புதிய தேசிய எழுச்சிக்காகவே நாங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். புதிய தேசிய மலர்ச்சி அவசியமாகும். புதிய தேசிய ஒருமைப்பாடு அவசியமாகும். எமது தேவை வெறுமனே ஓர் அரசியல் இயக்கம் மட்டுமல்ல: அனைவரையும் ஒன்றுசேர்த்து தேசத்தைக் கட்டியெழுப்புகின்ற நோக்கினைக்கொண்ட இயக்கமாகும். இந்தியாவில் நேரு, பட்டேல், காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற அனைவரும் இந்தியாவை ஐக்கியப்படுத்தி தேசிய அபிமானத்துடன் தட்டியெழுப்பி பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக போராடினார்கள். அந்த வெற்றிகளின் பாய்ச்சலை தேசிய நிகழ்ச்சி நிரலுக்கிணங்க நெறிப்படுத்துகின்ற இந்தியா தற்போது சந்திரனுக்குச் செல்கின்றது. ஆனால் எமது நாட்டில் மாலை ஆறுமணிக்குப் பிறகு ரிதீமாலியத்தவிற்குச் செல்ல பஸ்வண்டி கிடையாது. வீதியில் போனால் யானை தாக்குகின்றது. இந்தியாவின் அப்துல் கலாம் மாத்திமன்றி தாழ்ந்த சாதியைச்சேர்ந்த ஒரு பெண்ணும் சனாதிபதியானர். உலக நாடுகள் வெற்றிகளால் மாத்திரம் எழுச்சிபெறவில்லை.

தோல்விகளின்போதும் எழுச்சிபெற்றன. அணுக்குண்டுகளால் அழிவடைந்த ஜப்பான் ஆசியாவின் பிரமாண்டமான தொழில்நுட்ப அரசாக எழுச்சிபெற்றது.
எமது நாட்டுத்தலைவர்கள் 1948 இல் சுதந்திரம் கிடைத்ததும் உடனடியாக குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்து தமிழ் மக்களை விரட்டியடித்தார்கள். 1956 இல் மொழியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்து கலவரங்களை உருவாக்கினார்கள். 2019 இல் உயிர்த்தஞாயிறு தாக்குதல்வரை இவ்விதமாக பயணித்தார்கள். ஏனைய நாடுகளில் எழுச்சிபெறுகின்ற வரலாறு நிலவுகையில் எமது நாட்டில் சண்டைபோட்டுக்கொள்கின்ற வரலாறே நிலவுகின்றது. தலைவர்களிடம் தேசிய நோக்கு இருக்கவில்லை. விமலசுரேந்திர போன்ற பொறியியலாளர்கள் பாரிய நோக்குடன் 1917 அளவில் நீர்மின்நிலையங்களை திட்டமிட்டார்கள். எனினும் எமது தலைவர்கள் அந்த முன்னேற்றகரமான சிந்தனைக்கு இடமளிக்கவில்லை. வரலாற்றில் நிலவியவை பற்றி மார்தட்டிப் பேசுகின்ற தலைவர்களே இருந்தார்கள். அதிலிருந்து நாட்டை மீட்டெடுக்கின்ற புதிய மலர்ச்சியொன்று எமக்குத் தேவை. இந்த அழிவுமிக்க கொள்ளைக்கார கும்பல் இருபக்கத்திற்கும் மாறிமாறிப் பாய்ந்து பேயாட்டம் ஆடுகின்ற கும்பலாக இற்றைவரை வந்துள்ளார்கள். அந்த பேயாட்டம் ஆடுகின்ற கும்பலிலிருந்து விடுபடுவதற்காக தெம்புடனும் அர்ப்பணிப்புடனும் நாங்கள் உழைப்போம் எனும் உணர்வு தோன்றியமையே பாரிய மனநிறைவு அல்லவா? இந்த சாபக்கேட்டிலிருந்து விடுபட்டதும் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்? அதோ அத்தகைய எழுச்சி தேவை. ஊரில் கட்சி பேதங்களை வைத்துக்கொள்ள வேண்டாம். மேலே இருக்கின்ற தலைவர்களுடன் அந்த பேதங்களை வைத்துக்கொள்ளுங்கள். ஐதேக ஆதரவாளர், ஸ்ரீலசுக ஆதரவாளர் போன்ற பேதங்களை ஒருபுறம் வைத்துவிட்டு இன, சாதி பேதங்களை ஒதுக்கிவிட்டு இந்த பேயாட்டம் ஆடுகின்ற ஆட்சியாளர்களிடமிருந்து இந்த நாட்டையும் சமூகத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக புதிய மலர்ச்சியுடன் முன்நோக்கி வாருங்கள்.

இந்த வருடத்தில் வரப்போகின்ற எந்தவொரு தேர்தலிலும் இந்த புதிய மலர்ச்சிக்காக நாமனைவரும் ஒன்றுசேர்ந்து உழைப்போம். எமது பிள்ளைகளுக்கு புதிய கல்வியைப் பெற்றுக்கொடுத்து, கைத்தொழிலதிபர்கள், மீனவர்கள், கமக்காரர்களை மேம்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப ஒருங்கிணைவோம். குடிமக்களுக்கு சுகாதாரம் தொடர்பான விஞ்ஞானரீதியான கல்வியை வழங்கவேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்கும் போஷாக்கான உணவுவேளை வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். குற்றச்செயல் புரிபவர்களற்ற ஒரு நாட்டை உருவாக்கிடவேண்டும். ஊழலில் மோசடியில் ஈடுபர்களைத் தண்டிக்கவேண்டும். இதுவரை இந்நாட்டு மக்கள் அனுபவித்த துன்பதுயரங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்து இந்த நாட்டை நல்லதொரு தேசமாக மாற்றுகின்ற பொதுவான கனவின் பங்காளிகளாக மாறவேண்டும். நாட்டைக் கட்டியழுப்புகின்ற புதிய மறுமலர்ச்சி யுகத்தின் முனைப்பான பங்காளிகளாக மாறவேண்டும். நாங்கள் தொடக்கத்தை ஏற்படுத்துவோம். எமது பிள்ளைகள் மிகச்சிறந்த பெறுபேறுகளை அனுபவிப்பார்கள். நாங்கள் தேர்தலில் வெற்றிபெறுவதென்பது இந்த வேலையின் முடிவு அல்ல, தொடக்கமாகும். நாமனைவரும் ஊக்கத்துடன் இந்த பணியில் இடையீடுசெய்வொம் என அழைப்பு விடுக்கிறோம்.

Show More

“நாட்டுக்கு மீண்டும் புத்தெழுச்சி தருகின்ற புதிய அரசியல் பயணத்திற்கு தலைமைத்துவம் வழங்குவது தேசிய மக்கள் சக்தியே” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க-

-Colombo, January 20, 2024- மனச்சாட்சிகொண்ட, நாட்டுக்காக சட்டத்தையும் ஒழுக்கத்தையம் எதிர்பார்க்கின்ற மக்கள் இத்தடவை தெளிவாகவே எம்மைச் சூழ்ந்துள்ளார்கள். புத்தளம் மாவட்டத்தின் மூஸ்லீம் தோழர்கள் தமது பிரதநிதியாக அலி சப்றி றஹீமை பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்து அனுப்பினார்கள். அப்படிப்பட்ட ஒருவரை புத்தளம் மாவட்டத்தில் இருந்து அனுப்பிவைக்க வாக்குகளை அளித்த நீங்கள் உங்களின் வாக்குகளை நினைத்து பெருமிதம் அடைகிறீர்களா? முஸ்லீம் சகோதர மக்கள் தமது உறுப்பினர் என நினைத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்த அலி சப்றி றஹீம் தனது உறுப்பினர் சிறப்புரிமையைப் […]

-Colombo, January 20, 2024-

மனச்சாட்சிகொண்ட, நாட்டுக்காக சட்டத்தையும் ஒழுக்கத்தையம் எதிர்பார்க்கின்ற மக்கள் இத்தடவை தெளிவாகவே எம்மைச் சூழ்ந்துள்ளார்கள். புத்தளம் மாவட்டத்தின் மூஸ்லீம் தோழர்கள் தமது பிரதநிதியாக அலி சப்றி றஹீமை பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்து அனுப்பினார்கள். அப்படிப்பட்ட ஒருவரை புத்தளம் மாவட்டத்தில் இருந்து அனுப்பிவைக்க வாக்குகளை அளித்த நீங்கள் உங்களின் வாக்குகளை நினைத்து பெருமிதம் அடைகிறீர்களா? முஸ்லீம் சகோதர மக்கள் தமது உறுப்பினர் என நினைத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்த அலி சப்றி றஹீம் தனது உறுப்பினர் சிறப்புரிமையைப் பயன்படுத்தி தங்கக் கடத்தல் புரிந்து மாட்டிக்கொண்டார். எனினும் அடுத்த நாள் பாராளுமன்றத்திற்கு வந்து சட்டவாக்கத்திற்கும் கையை உயர்த்தினார். நேற்று சட்டதை மீறி எயார்போர்ட்டில் மாட்டிக்கொண்டவர் இன்று சட்டங்களை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றத்தில் கையை உயர்த்துகிறார். இந்த சமூகம், பொருளாதாரம், சட்டம் மாத்திரம் சீரழியவில்லை. மனிதர்களின் விருப்புவெறுப்புகள், மனோபாவங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமூக அமைப்புமே சீரழிந்துவிட்டது. ஆட்கொலை தொடர்பில் நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகரவை இரத்தினபுரியில் முதலாமிடத்தில் அனுப்பி வைக்கிறார்கள். கம்பஹாவில் இருந்து பிரசன்ன ரணதுங்கவை அனுப்பி வைக்கிறார்கள். களுத்துறையில் இருந்து ரோஹித அபேகுணவர்தனவை அனுப்பி வைக்கிறார்கள். கண்டியில் இருந்து மகிந்தானந்தவை அனுப்பி வைக்கிறார்கள். குருநாகலில் இருந்து ஜோன்ஸ்ரனை அனுப்பி வைக்கிறார்கள். அநுராதபுரத்தில் இருந்து மாவிலாறு எஸ்.எம். சந்திரசேனவை அனுப்பி வைக்கிறார்கள். மனிதர்களின் சிந்தனைப்போக்குகள் சிதைவடைந்துள்ள விதமே அதிலிருந்து தெளிவாகின்றது. “திருடனாக இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு எவ்வளவாவது தருவாரென்றால்” என மக்கள் சிந்தித்தார்கள்.

அவ்வாறு சிந்தித்து ஒரு நாட்டை உருப்படியாக்கிட முடியாது. அதனால் அரசசேவையை மக்களுக்கு கௌரவமான சேவையை வழங்குகின்ற இடத்திற்கு மாற்றியமைக்க வேண்டும். அரசியல் பரிசுத்தமாகி மக்கள் இதைவிட பண்புள்ளவர்களாக பிறரைப் பற்றிக் கரிசனை கொண்டவர்களாக மாறவேண்டும். புத்த தர்மம், கிறிஸ்தவ தர்மம், நபிகள் நாயகத்தின் தர்மம், இந்து தர்மம் ஆகிய நான்கு பிரதான சமயங்கள் இந்த சமூகத்திற்கு வழிகாட்டி வருகின்றன. இந்த அனைத்து சமயங்களும் பிறர்மீது கருணை காட்டவும், அன்பு செலுத்தவும், சகோதரத்துவத்தைக் வெளிக்காட்டவும் அருளுரை போதித்தபோதிலும் அந்த சமயங்களைக் கடைப்பிடிக்கின்ற குடிமக்கள் திருடர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கிறார்கள். அதனால் இப்போது அரசியலில் மாத்திரமல்ல சமூகத்திலும் பிரச்சினை நிலவுகின்றது. நாரம்மலவில் சாரதியொருவரை துப்பாக்கியால் சுட்ட பொலீஸ் உத்தியோகத்தர் “இவன் செத்துப்போய்விட்டானா தெரியவில்லை” எனக் கூறுகிறார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியவர் மனிதன் இல்லையா? அதிர்ச்சி இருக்கின்றதா? ஒரு நாட்டுக்கு இவ்விதமாக முன்நோக்கி நகரமுடியாது. குறிப்பாக 1978 இன் பின்னர் கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையின் இறுதிப்பெறுபேறாக மாறியிருப்பது எமது கண்ணெதிரில் ஒட்மொத்த சமூகமுமே சீரழிந்துள்ளமையாகும். மிக அதிகமான சிறுமிகள் தமது நெருங்கிய உறவினர்களாலேயே பாலியல் தொல்லைகளுக்கு இலக்காகி உள்’ளார்கள். எம்மெதிரில் இருப்பது அவ்வாறான சமூகமாகும். பொருளாதாரம் உருப்படியாவிட்டது என்பதற்காக இந்த சமூகம் கரைசேர மாட்டாது. சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டுவிட்டால் மாத்திரம் கரைசேர மாட்டாது. ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்புமே புதிய மாற்றத்திற்கு இலக்காகக்கப்படல் வேண்டும். தேசிய மக்கள் சக்தி பாடுபடுவது அதற்காகவே. மனிதநேயமுள்ள சமூகமொன்றிற்காக அனைத்துப் பிரிவுகளையும் மாற்றியமைத்திடாமல் எமது நாட்டுக்கு முன்நோக்கி நகர இயலாது. அந்த சமூக மாற்றத்திற்கு அவசியமான அதிகாரத்தைப் பெற்றுத்தருமாறே நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.

புதிய மாற்றமொன்று பற்றிய எந்தவிதமான உணர்வும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கிடையாது. மக்களுக்கு உண்ண உணவு இல்லாவிட்டாலும் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளதென அவரும் அவருடைய சீடர்களும் கூறுகிறார்கள். மருந்துகள் இல்லாத, கல்விபெற முடியாத, மக்களுக்கு நன்மைகள் கிடைக்காத பொருளாதாரத்தில் உள்ள பிரயோசனம் என்ன? அவர்கள் பொருளாதாரத் தரவுகளைப் பார்க்கிறார்களேயொழிய மக்களின் வாழ்க்கையை அல்ல. பகிர்ந்தளிப்பதே அரசியலென ஒருசிலர் நினைக்கிறார்கள். எவ்வளவுதான் பகிர்ந்தளித்தார்கள்? ஓர் அரசியல் இயக்கமென்றால் மக்களை அனர்த்தங்களிலிருந்து மீட்டெக்க ஆவனசெய்ய வேண்டும். நாங்கள் முன்வருவது அத்தகைய விரிவான சமூக, பொருளாதார, அரசியல் இடையீட்டுக்காகவே. அந்த மாற்றத்திற்காக மக்களை விழிப்படையச் செய்விக்கின்ற மக்களை அணிதிரட்டுகின்ற தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பாசறை ஒரு பக்கத்தில் இருக்கின்றது. மறுபக்கத்தில் மக்களை பாதிப்பிற்கு இலக்காக்கிய, வாழமுடியாத நிலையை உருவாக்கிய, மக்களை பிச்சைக்காரர்களாக்கிய, பகிர்ந்தளிக்கின்ற அரசியலை அமுலாக்குகின்ற, மக்களின் செல்வத்தை திருடுகின்ற அரசியல் இருக்கின்றது. இந்த நாட்டுக்கு மீண்டும் புத்தெழுச்சி தருகின்ற புதிய அரசியல் பயணத்திற்கு தலைமைத்துவம் வழங்குவது தேசிய மக்கள் சக்தியாகும்.

இந்தியாவில் வெள்ளைக்காரனை விரட்டியடிக்கின்ற தேசிய இயக்கம் வெள்ளைக்காரனை விரட்டியடித்த பின்னர் இந்தியாவை சந்திரனுக்கு கொண்டுசெல்லும்வரை இயங்கியுள்ளது. இந்த நூற்றாண்’டில் உலகம் பற்றி எதிர்வுகூறி அதற்கு ஒத்துவரத்தக்க பொருளாதார, அரசியல், சமூக மாற்றத்தை அந்நாட்டின் சமூகத்தில் மேற்கொண்டது. அப்துல் கலாம் சனாதிபதியானமை, தாழ்ந்த சாதிப் பெண் சனாதிபதியானமை வரை மாற்றத்தை ஏற்படுத்தி உலகின் ஐந்தாவது பலம்பொருந்திய பொருளாதாரமாக கட்டியெழுப்பியுள்ளார்கள். ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்களுக்கு அணுக்குண்டுத் தாக்குதல் நடாத்தியதால் தவிடுபொடியாக்கப்பட்டது. இலட்சக்கணக்கானோர் மடிந்தார்கள். தோல்வியை வெற்றிக்கான அடியெடுப்பாக மாற்றி ஜப்பான் எழுச்சிபெற்றது. எமது தலைவர்கள் அவ்வாறான நோக்கு இல்லாமல் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தார்கள். வெள்ளைக்காரனை எதிர்த்து நின்றாலும் ஒரு தேசமென்றவகையில் பிரிந்து நின்றது. வெள்ளைக்காரன் போனபின்னர் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்து மலையக மக்களை ஒதுக்கிவைத்தார்கள். 1956 இல் மொழிச் சட்டத்தைக் கொண்டுவந்து 1958 இல் கலவரம் உருவாக்கப்பட்டது. 70 இன் இறுதியில் வடக்கில் ஆயுதமேந்திய எழுச்சி தோன்றியது. 2019 இல் உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. வெள்ளைக்காரனின் கையிலிருந்து ஆட்சியதிகாரத்தை எடுத்த நாளில் இருந்து நாங்கள் பிரச்சினைபட்டுக்கொண்டோம். இறுதியில் உலகில் பிச்சையேந்துகின்ற நாடாக மாற்றப்பட்டு அழிவின் அடித்தளத்திற்கே அமிழ்த்தப்பட்டது. இந்த நிலைமையை மாற்றியமைக்கின்ற புதிய தேசிய எழுச்சி, புதிய தேசிய ஒருமைப்பாடு அவசியமாகும். சிங்கள, தமிழ், முஸ்லீம் நாமனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த கொள்ளைக்கார ஆட்சியை விரட்டியத்திட வேண்டும். இந்தியா வெள்ளைக்காரர்களுக்கு எதிராக ஒருகொடியின்கீழ் ஒன்றுசேர்ந்ததைப்போல் இந்த நாட்டை நாசமாக்கிய ஆட்சியாளர்களுக்கு எதிராக நாமனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாமனைவரும் ஒன்றுசேர்ந்து தெம்புடையவர்களாக முன்வரவேண்டுமென குறிப்பாக புத்தளம் மாவட்டத்தின் சகோதர முஸ்லீம் மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

ஒவ்வொரு பிரசைக்கும் சமயத்தைப் பின்பற்றுவதற்கான உரிமையை, தனது மொழியில் அரசுடன் செயலாற்றுவதற்கான உரிமையை, தமது கலாசார அடையாளத்துடன் தேசத்தை ஒருங்கிணைப்பதற்கான உரிமையை ஏற்றுக்கொள்கின்ற அரசியல் இயக்கமே தேசிய மக்கள் சக்தி. இங்கிலாந்தில் கறுப்பர் – வெள்ளையர் அனைவருமே, அமெரிக்காவில் கறுப்பர் – வெள்ளையர் அனைவருமே அதைப்போலவே பிரான்ஸிற்கு ஜேர்மனிக்குச் சென்றால் அவர்கள் நாட்டுடன் அடையாளப்படுத்தப்பட்ட இனத்தவர்களாக அழைக்கப்படுகிறார்கள். எனினும் இலங்கையில் இலங்கையர்களை சந்திக்காமல் தம்பியா, தமிழன், சிங்களவன் என்றவகையிலேயே இருக்கிறார்கள். உலகில் பிரிந்த எந்தவொரு நாடும் முன்நோக்கி நகரவில்லை. இந்த அழிவுக்கு எதிராக முதலில் நாங்கள் ஒன்றிணைவோம். இந்த ஆளும் வர்க்கத்தினரை விரட்டியடிப்பதற்கான முதலாவது அடியெடுப்பு அதுதான். அவ்விதம் விரட்டியடிப்பதன் மூலமாக உருவாகின்ற உணர்வினை, வலிமையை இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக நீண்டகாலரீதியில் பேணிவரவேண்டும். இலங்கை வரலாற்றில் அண்மைக்காலத்தில் புரியப்பட்ட நித்திக்கத்தக்க சதித்திட்டமான உயிர்த்தஞாயிறு தாக்குதல் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட சதிகாரர்களை நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டும். திருடிய ஆதனங்களை கையகப்படுத்தி திருடர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும். அரசியல்வாதிக்கு வழங்கியுள்ள அநாவசியமான சிறப்புரிமைகள் அனைத்தையும் நீக்கிடவேண்டும். ஏனைய பிரசைகளுக்கு சமமாகவே அரசியல்வாதிகளும் செயலாற்றவேண்டும். பொலீஸார், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் அரசாங்க சேவையில் ஈடுபட்டுள்ள அனைவரையும்போல் அரசியல்வாதிகளும் தமது செயற்பொறுப்பினை சரிவர ஈடேற்றுகின்ற புதிய மாற்றத்திற்கு இட்டுச்செல்கின்ற மறுமலர்ச்சி யுகமொன்றை ஆரம்பிக்கவேண்டும். பல தசாப்தங்களாக நாசமாக்கிய நாடடடை ஓரிரு வருடங்களில் மீட்டெடுக்க முடுடியுமென நினைக்க வேண்டாம். எனினும் ஆரம்பகட்டமாக உணவு, கல்வி, சுகாதாரம் தொடர்பில் உடனடி இடையீடு அவசியமாகும். எனினும் வாழ்க்கை என்பது உணவு, மருந்து வாங்குதல், பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுதல் மாத்திரமல்ல. எமது நாட்டு வளங்களை சிறப்பாக முகாமைசெய்து புத்தாக்க யுகமொன்றை உருவாக்குதல் மறுமலர்ச்சியின் ஒரு பகுதியாகும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களுக்கு புத்துயிரளிக்கவேண்டும். புதிய மறுமலர்ச்சி யுகத்தை நோக்கிச் செல்வதற்கான தொடக்கநிலை தேசிய மக்கள் சக்தியின் கைகளுக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதாகும். கட்டம்கட்டமாக மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்புவதை திட்டமிட்டமிட்ட அடிப்படையில் அமுலாக்குவோம். அதற்காக இற்றைவரை பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அரசியல் தலைவர்களுக்கு வாக்குகளை அளித்த அனைவரையும் ஒன்றுசேர்த்திடுவோம். பொதுத்தேர்தலாகவிருப்பினும் சனாதிபதி தேர்தலாகவிருப்பினும் முதலில் வருகின்ற எந்தவொரு தேர்தலின்போதும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியதிகாரத்திற்காக அனைத்து மக்களையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கிறோம்.

Show More

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் மல்வத்து அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்தனர்…

-Colombo, January 19, 2024- தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று (19) மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா பீடாதிபதிகளை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பிலும், தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு குறித்தும் விளக்கமளித்திருந்தனர். இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் லால்காந்த ஆகியோர் கலந்துகொண்டனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இலங்கை அரசியலின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அவர்களுடன் மேலும் கலந்துரையாடப்பட்டது.

-Colombo, January 19, 2024-

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று (19) மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா பீடாதிபதிகளை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பிலும், தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு குறித்தும் விளக்கமளித்திருந்தனர்.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் லால்காந்த ஆகியோர் கலந்துகொண்டனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இலங்கை அரசியலின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அவர்களுடன் மேலும் கலந்துரையாடப்பட்டது.

Show More