Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

“சீரழித்த நாட்டை நாகரிகமடைந்த நிலைக்கு கொண்டுவருகின்ற புதிய அரசியல் மாற்றமொன்று அவசியமாகும்” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

-Colombo, January 21, 2024- எமது நாட்டுப் பெண்களின் மாபெரும் எழுச்சி இன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தியாகிய எமக்கு எதிராக இந்நாட்களில் எழுகின்ற அவதூறுகூறல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கழுத்துறை பக்கத்தில் தங்கத்துடன் தொடர்புடைய ஒருவர், கம்பஹா பக்கத்தில் கப்பம் பெற்ற ஒருவர், நீர்கொழும்பு பக்கத்தில் போதைத்தூளுடன் தொடர்புடைய ஒருவர், குருநாகல் பக்கத்தில் வரிமோசடி செய்த ஒருவர், அதைப்போலவே அலோசியஸை நியாயப்படுத்துவதற்காக புத்தகங்களை எழுதி பணம் வாங்கிய ஒருவர் மறுபக்கத்தில் என்றவகையில் அவதூறாக பேசுதல் பாரியளவில் […]

-Colombo, January 21, 2024-

எமது நாட்டுப் பெண்களின் மாபெரும் எழுச்சி இன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தியாகிய எமக்கு எதிராக இந்நாட்களில் எழுகின்ற அவதூறுகூறல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கழுத்துறை பக்கத்தில் தங்கத்துடன் தொடர்புடைய ஒருவர், கம்பஹா பக்கத்தில் கப்பம் பெற்ற ஒருவர், நீர்கொழும்பு பக்கத்தில் போதைத்தூளுடன் தொடர்புடைய ஒருவர், குருநாகல் பக்கத்தில் வரிமோசடி செய்த ஒருவர், அதைப்போலவே அலோசியஸை நியாயப்படுத்துவதற்காக புத்தகங்களை எழுதி பணம் வாங்கிய ஒருவர் மறுபக்கத்தில் என்றவகையில் அவதூறாக பேசுதல் பாரியளவில் அதிகரித்துள்ளது. எமது நாட்டின் சகோதரிகள், தாய்மார்கள், தகப்பன்மார்களை ஏமாற்றமுடியுமென அவர்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலைமையை மாற்றியமைத்து மாத்தறையில் தொடங்கிய பெண்களின் சுனாமி பகைவர்களை பதற்றமடையச் செய்வித்து நாடுபூராவிலும் வீசிவருகின்றமையே இவ்விதமாக அதிகரிக்க காரணமாகியுள்ளது. இன்று பதுளையைக் கண்டதும் மேலும் பதற்றமடைவார்கள். ஊர்களில் இருக்கின்ற பலவிதமான சங்கங்களில் பெண்கள் முனைப்பாக செயலாற்றினாலும் அதனை கணவனிடம் ஒப்படைத்து வாழ்ந்தார்கள். இன்று அந்த அரணை, மூடநம்பிக்கையை சிதைத்து தேசிய மக்கள் சக்தியின்கீழ் இலங்கையின் மிகவும் பலம்பொருந்திய பெண்கள் எழுச்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. சகோதரிகளும் பெண்களும் விழிப்படைந்தார்கள் என்பது அவர்களின் அரசியல் பயணத்தின் சாவுமணியே என்பது தெளிவாகின்றது.

பெண்கள் தலைமுறையினர் இலங்கையில் முன்னணிக்கு வரவேண்டுமென நாங்களும் நினைக்கிறோம். பொருளாதாரரீதியாக சீரழிந்த, குற்றச்செயல்கள் மலிந்த, போதைப்போருட்கள் நிறைந்த, சுகாதாரமும் கல்வியும் சீரழிந்த, கிராமிய மக்கள் பாரிய கடன்பொறிக்குள் இறுகிப்போன சோகக் கதையே எமது நாட்டில் நிலவுகின்றது. உலக நாடுகளுக்கு வீசா வழங்கப்படாத நிலைமை உருவாகி இருக்கின்றது. பயிற்சிக்காக இங்கிலாந்துசென்ற பொலீஸ் உத்தியோகத்தர்களும் தலைமறைவாகிவிட்டார்கள். எனவே வீசா வழங்குவதில்லை. உலகின் முன்னிலையில் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் கதை மாத்திரமல்ல மக்களின்கதையும் சோகமயமானதே. நாட்டின் கதையையும் மக்களின் பொதுவான கதையையும்விட அதிகமாக சோகமயமானதாகி இருப்பது நாட்டுப் பெண்களின் கதையாகும். கர்ப்பிணித் தாய்மார்களில் 20% இற்கு கிட்டியோர் இரத்தக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சரியான உணவுவேளையொன்று கிடையாது. பிள்ளைகளின் கல்வி சீரழிந்ததும் அதிகமாக கவலைப்படுபவர்கள் தாய்மார்களே. பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றி பகலிரவு பாராமல் சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் தாய்மார்களே. எனினும் பிள்ளைகளில் 54% கல்வி உபகரணங்களை கொள்வனவு செய்வதைக் குறைத்தோ அல்லது நிறுத்தியோ உள்ளார்கள். பிள்ளைகளில் 19% பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்வதை நிறுத்தி உள்ளார்கள். பொருளாதாரச் சீர்குலைவின் பெறுபேறு பேரிடிபோல் பிள்ளைகள்மீது வீழ்ந்தமையால் அல்லற்படுபவர்கள் தாய்மார்களே. போதைப்பொருள் பாவனை காரணமாக அதிகமாக வேதனைப்படுபவர்கள் தாய்மார்களே. சிறைச்சாலைகளுக்கு அருகில் ஏளனத்திற்கு இலக்காகி வேதனைகளை அனுபவிப்பவர்கள் பெண்களே. குற்றச்செயல்கள் நிரம்பிவழிகின்ற ஒரு நாட்டில் பெண்களுக்கு சுதந்திரம் கிடையாது. எமது நாட்டுச் சிறுமிகளில் பெருந்தொகையானோர் ஏதாவொரு வகையிலான பாலியல் தொல்லைகளுக்கு இலக்காவதால் வேதனையை அனுபவிப்பவர்கள் தாய்மார்களே.

பாதுகாப்பு இல்லாத இந்த நாடு நல்லதா?பெண்கள் இவ்வாறுதான் வாழவேண்டுமா? நகரங்களில் பாதுகாப்பாக செல்லக்கூடிய பெண்களுக்கான கழிப்பறைகள் கிடையாது. இதனால் பெருமளவில் நோய்களுக்கு இலக்காகிறார்கள். இவ்விதமாக வேதனைகளை அனுபவிக்கின்ற மகிழ்ச்சி இல்லாமல் சந்தோசமில்லாமல் எமது தாய்மார்கள் அக்காமார்கள் செத்து மடிகிறார்கள். எங்கள் ஊர்களில் அம்மாமார்களுக்கு அக்காமார்களுக்கு மகிழ்ச்சியே இல்லாத காய்ந்துபோன விறகுக்கட்டைகளைப்போன்ற வாழ்க்கை உரித்தாக்கிக் கொடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு அப்படியில்லை. ஷிரந்தி சீமாட்டி நடக்கும்போதும் ஏழுஎட்டுபேர் சூழ்ந்து செல்கிறார்கள். ஆட்சியார்கள் ஏற்படுத்திய அனர்த்தத்திற்கு பிரதானமாக இரையாகியுள்ளவர்கள் பெண்களாவர். இந்த நிலைமையை மாற்றியமைத்திட உறுதியுடன் எழுச்சிபெறவேண்டியவர்கள் எமது நாட்டின் பெண்களே. வெளிநாடு சென்றுள்ள உழைப்பாளிகளிடமிருந்து ஏறக்குறைய 6 பில்லியன் டொலர் மிகஅதிகமாக அந்நியசெலாவணித் தொகையை ஈட்டித்தந்துள்ளவர்கள் பெண்களே. ஆடைத்தொழில்த்துறையில் ஈடுபட்டுள்ளவர்களும் எமது சகோதரிகளே. அடுத்ததாக மிக அதிகமாக அந்நிய செலாவணியை ஈட்டித்தருகின்ற தேயிலைத் தொழில்த்துறையில் ஈடுபட்டுள்ள பெரும்பகுதியினர் தாய்மார்களும் சகோதரிகளுமாவர். இந்நாட்டின் பொருளாதாரம் பெண்களின் கைகளிலேயே இருக்கின்றது. மறுபுறத்தில் பாடசாலைகளில் அதிகமாக இருப்பவர்களும் ஆசிரியைகளே. இவ்விதமாக பெருமளவிலான செயற்பொறுப்பினை ஈடேற்றி செயலாற்றிக் கொண்டிருந்தாலும் மிகஅதிகமாக அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்ற பெண்களின் நிலைமையை மாற்றியமைத்திடவேண்டும். இந்த இடத்தில் குழுமியுள்ள நீங்கள் அனைவரும் முன்னொருபோதும் இருந்திராதவகையில் அதிக வேகத்தில் முன்னணிக்குவந்து இந்த நிலைமையை மாற்றியமைத்திட வேண்டும்.

முன்பெல்லாம் சனாதிபதி தேர்தலை நடாத்தினால் அவர்கள் வெற்றிபெறுவார்கள். பொதுத்தேர்தலை நடாத்தினாலும் அவர்கள் வெற்றிபெறுவார்கள். எனினும் தற்போது சனாதிபதி தேர்தலை முதலில் நடாத்துவதா, பொதுத்தேர்தலை முதலில் நடாத்துவதா என அவர்கள் இரண்டும்கெட்ட நிலைக்கு வருமளவுக்கு என்பிபி பலமடைந்துள்ளது. தமக்கு சாதமான நிலைமை இருக்கும்போது தொடர்ச்சியாக தேர்தல்களை நடாத்தினர்கள். தற்போது களத்தில் கால்வைக்க முடியாதநிலை உருவாகி உள்ளது. இதனை மாற்றியமைத்திட மிகச்சிறந்த சந்தர்ப்பம் உருவாகி இருகின்றது. எல்லாளன் – துட்டுகெமுணுவின் இருபக்கத்தில் இருந்த ரணில் – மகிந்த மேடையில் கடதாசி வாளேந்தி யுத்தம் புரிகையில் ஊரிலுள்ள எம்மவர்கள் பொல்லேந்தி தாக்குதல் நடாத்தினார்கள். எனினும் இன்றளவில் இந்த இருசாராரும் ஒரே கும்பல் என்பதை நன்றாகவே நிரூபித்துள்ளார்கள். ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு சவாரி செல்லும்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை மக்களின் பணத்தைச் செலவிட்டு அழைத்துச் செல்கிறார். உகண்டாவிற்குப் போகும்போது பொலநறுவையின் ஐக்கிய மக்கள் சக்தி கிங்ஸ்லி நெல்சன். பதுளையில் சாமர சம்பத்தையும் கூட்டிக்கொண்டு போகிறார். அங்கே தங்கவைத்துவிட்டே வருவாரா தெரியவில்லை. இந்த இருசாராருமே 75 வடருடங்களுக்கு மேலாக நாட்டை ஆட்சிசெய்து பொருளாதாரத்தை சீரழித்து பிச்சைக்கார நாடாக மாற்றியுள்ளார்கள். நாட்டின் கைத்தொழில்களை சீரழித்தார்கள். ஊர்களிலுள்ள நாங்கள் ஏதேனும் விலங்குகள் சாப்பிடுகின்றவற்றில்கூட நஞ்சு கலப்பதில்லை. எனினும் சுகாதார அமைச்சில் இன்ஜெக்ஷன் என வாங்கி இருப்பது பங்கசு இருந்த தண்ணீரையாகும். பங்கசு நிறைந்த தண்ணீரை இன்ஜெக்ஷன் என நோயாளிகளுக்கு வழங்கிய சுகாதார அமைச்சர் இன்றும் சுதந்திரமாக இருக்கிறார். எல்லாவிதத்திலும் சீரழித்த ஒரு நாடுதான் எமக்கு இருக்கின்றது. இலங்கையின் அரசசேவை சீரழிக்கப்பட்டுவிட்டது. நிரந்தர பொலீஸ் மா அதிபர் இல்லாத இடத்திற்கு வங்குரோத்து செய்யப்பட்டுவிட்டது.

எமது நாட்டின் சமூக அமைப்புகள் அனைத்துமே சீரழிக்கப்பட்டுவிட்டன. அப்படிப்பட்ட நாட்டில் பன்சல மாத்திரம் தப்பிவிடமாட்டாது. பற்பல வகையிலான கூத்துக்கார போதிசத்துவர்கள் வந்திறங்குகிறார்கள். அனைத்துமே சீரழிந்த நிலையில் மனித சமூகமும் சீரழிந்துவிட்டது. இரத்தினபுரியின் பிரேமலால் ஜயசேகர என்பவர் மனிதப்படுகொலை தவறுக்காக மேல்நீதிமன்றத்தினால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர். அந்த பிரேமலால் ஜயசேகரவிற்கு இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து மக்கள் அதிகமான விருப்புவாக்குகளை அளித்தார்கள். கண்டியில் வட்டிமுதலாளி ஒருவரிடமிருந்து பணத்தைக் கடன்வாங்கிய ஒருவர் கடனை மீளச்செலுத்த தாமதித்தமையால் அந்த முதலாளி இரண்டு கைகளையும் வெட்டியெடுத்து மோட்டார் சைக்கிளில் பொலீஸுக்குச் சென்றார். மக்கள் அவரை கண்டி நகரசபைக்கு அனுப்பிவைத்தார்கள். கழுத்துறையிலிருந்து றோஹிதவை, கண்டியிலிருந்து மகிந்தானந்தவை, குருநாகலில் இருந்து ஜோன்ஸ்ரனை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கின்ற அளவுக்கு மனித சமூகம் சீரழிந்துவிட்டது. எதையாவது பெற்றுக்கொள்வதற்காக தமது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அடகுவைக்கின்ற மக்களே இருக்கிறார்கள். இந்த நாட்டில் எந்தவொரு இடமும் எஞ்சவில்லை. வீதியில் விற்கின்ற மாங்காயை வாங்கினாலும் நம்பிக்கையுடன் சாப்பிடமுடியாது. முழுமையான மனித நாகரிகமுமே சீரழிந்துள்ளது. சீரழித்த இந்த நாட்டை நாகரிமான நிலைக்குகொண்டுவர புதிய அரசியல் மாற்றமொன்று நாட்டுக்கு அவசியமாகும். ஒத்துணர்வுமிக்க மனித சமூகமொன்று அவசியமாகும். பருத்தித்துறையில் இருந்து தெவுந்தர முனைவரை கழுத்தில் தங்கத்தை அணிந்துகொண்ட ஒரு பெண்ணால் பாதுகாப்பாக பயணிக்கக்கூடிய நிலைமை இன்று இருந்தது. இன்று சீரழிந்துள்ள ஒட்டுமொத்த சமூக அமைப்பையுமே மீட்டெடுக்கின்ற சமூக மாற்றமொன்று அவசியமாகும். இலக்கியம், பாடல்களை இரசிக்கின்ற, திரைப்படமொன்றை, நாடகமொன்றை பார்த்து இரசிக்கின்ற குடும்பங்களைப்போன்றே ஒரே மேசையில் அமர்ந்து குடும்பத்தவர்கள் அனைவரும் உணவு புசிக்கின்ற சமூகமொன்றே எமக்குத் தேவை.

அதனால் வெறுமனே தலைவர்களை மாற்றுகின்ற, அரசாங்கத்தை மாற்றுகின்ற நிலைக்குப் பதிலாக ஒட்டுமொத்த சமூக முறைமையையுமே மீளக் கட்டியெழுப்புகின்ற புதிய தேசிய எழுச்சிக்காகவே நாங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். புதிய தேசிய மலர்ச்சி அவசியமாகும். புதிய தேசிய ஒருமைப்பாடு அவசியமாகும். எமது தேவை வெறுமனே ஓர் அரசியல் இயக்கம் மட்டுமல்ல: அனைவரையும் ஒன்றுசேர்த்து தேசத்தைக் கட்டியெழுப்புகின்ற நோக்கினைக்கொண்ட இயக்கமாகும். இந்தியாவில் நேரு, பட்டேல், காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற அனைவரும் இந்தியாவை ஐக்கியப்படுத்தி தேசிய அபிமானத்துடன் தட்டியெழுப்பி பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக போராடினார்கள். அந்த வெற்றிகளின் பாய்ச்சலை தேசிய நிகழ்ச்சி நிரலுக்கிணங்க நெறிப்படுத்துகின்ற இந்தியா தற்போது சந்திரனுக்குச் செல்கின்றது. ஆனால் எமது நாட்டில் மாலை ஆறுமணிக்குப் பிறகு ரிதீமாலியத்தவிற்குச் செல்ல பஸ்வண்டி கிடையாது. வீதியில் போனால் யானை தாக்குகின்றது. இந்தியாவின் அப்துல் கலாம் மாத்திமன்றி தாழ்ந்த சாதியைச்சேர்ந்த ஒரு பெண்ணும் சனாதிபதியானர். உலக நாடுகள் வெற்றிகளால் மாத்திரம் எழுச்சிபெறவில்லை.

தோல்விகளின்போதும் எழுச்சிபெற்றன. அணுக்குண்டுகளால் அழிவடைந்த ஜப்பான் ஆசியாவின் பிரமாண்டமான தொழில்நுட்ப அரசாக எழுச்சிபெற்றது.
எமது நாட்டுத்தலைவர்கள் 1948 இல் சுதந்திரம் கிடைத்ததும் உடனடியாக குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்து தமிழ் மக்களை விரட்டியடித்தார்கள். 1956 இல் மொழியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்து கலவரங்களை உருவாக்கினார்கள். 2019 இல் உயிர்த்தஞாயிறு தாக்குதல்வரை இவ்விதமாக பயணித்தார்கள். ஏனைய நாடுகளில் எழுச்சிபெறுகின்ற வரலாறு நிலவுகையில் எமது நாட்டில் சண்டைபோட்டுக்கொள்கின்ற வரலாறே நிலவுகின்றது. தலைவர்களிடம் தேசிய நோக்கு இருக்கவில்லை. விமலசுரேந்திர போன்ற பொறியியலாளர்கள் பாரிய நோக்குடன் 1917 அளவில் நீர்மின்நிலையங்களை திட்டமிட்டார்கள். எனினும் எமது தலைவர்கள் அந்த முன்னேற்றகரமான சிந்தனைக்கு இடமளிக்கவில்லை. வரலாற்றில் நிலவியவை பற்றி மார்தட்டிப் பேசுகின்ற தலைவர்களே இருந்தார்கள். அதிலிருந்து நாட்டை மீட்டெடுக்கின்ற புதிய மலர்ச்சியொன்று எமக்குத் தேவை. இந்த அழிவுமிக்க கொள்ளைக்கார கும்பல் இருபக்கத்திற்கும் மாறிமாறிப் பாய்ந்து பேயாட்டம் ஆடுகின்ற கும்பலாக இற்றைவரை வந்துள்ளார்கள். அந்த பேயாட்டம் ஆடுகின்ற கும்பலிலிருந்து விடுபடுவதற்காக தெம்புடனும் அர்ப்பணிப்புடனும் நாங்கள் உழைப்போம் எனும் உணர்வு தோன்றியமையே பாரிய மனநிறைவு அல்லவா? இந்த சாபக்கேட்டிலிருந்து விடுபட்டதும் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்? அதோ அத்தகைய எழுச்சி தேவை. ஊரில் கட்சி பேதங்களை வைத்துக்கொள்ள வேண்டாம். மேலே இருக்கின்ற தலைவர்களுடன் அந்த பேதங்களை வைத்துக்கொள்ளுங்கள். ஐதேக ஆதரவாளர், ஸ்ரீலசுக ஆதரவாளர் போன்ற பேதங்களை ஒருபுறம் வைத்துவிட்டு இன, சாதி பேதங்களை ஒதுக்கிவிட்டு இந்த பேயாட்டம் ஆடுகின்ற ஆட்சியாளர்களிடமிருந்து இந்த நாட்டையும் சமூகத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக புதிய மலர்ச்சியுடன் முன்நோக்கி வாருங்கள்.

இந்த வருடத்தில் வரப்போகின்ற எந்தவொரு தேர்தலிலும் இந்த புதிய மலர்ச்சிக்காக நாமனைவரும் ஒன்றுசேர்ந்து உழைப்போம். எமது பிள்ளைகளுக்கு புதிய கல்வியைப் பெற்றுக்கொடுத்து, கைத்தொழிலதிபர்கள், மீனவர்கள், கமக்காரர்களை மேம்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப ஒருங்கிணைவோம். குடிமக்களுக்கு சுகாதாரம் தொடர்பான விஞ்ஞானரீதியான கல்வியை வழங்கவேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்கும் போஷாக்கான உணவுவேளை வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். குற்றச்செயல் புரிபவர்களற்ற ஒரு நாட்டை உருவாக்கிடவேண்டும். ஊழலில் மோசடியில் ஈடுபர்களைத் தண்டிக்கவேண்டும். இதுவரை இந்நாட்டு மக்கள் அனுபவித்த துன்பதுயரங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்து இந்த நாட்டை நல்லதொரு தேசமாக மாற்றுகின்ற பொதுவான கனவின் பங்காளிகளாக மாறவேண்டும். நாட்டைக் கட்டியழுப்புகின்ற புதிய மறுமலர்ச்சி யுகத்தின் முனைப்பான பங்காளிகளாக மாறவேண்டும். நாங்கள் தொடக்கத்தை ஏற்படுத்துவோம். எமது பிள்ளைகள் மிகச்சிறந்த பெறுபேறுகளை அனுபவிப்பார்கள். நாங்கள் தேர்தலில் வெற்றிபெறுவதென்பது இந்த வேலையின் முடிவு அல்ல, தொடக்கமாகும். நாமனைவரும் ஊக்கத்துடன் இந்த பணியில் இடையீடுசெய்வொம் என அழைப்பு விடுக்கிறோம்.

Show More

“நாட்டுக்கு மீண்டும் புத்தெழுச்சி தருகின்ற புதிய அரசியல் பயணத்திற்கு தலைமைத்துவம் வழங்குவது தேசிய மக்கள் சக்தியே” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க-

-Colombo, January 20, 2024- மனச்சாட்சிகொண்ட, நாட்டுக்காக சட்டத்தையும் ஒழுக்கத்தையம் எதிர்பார்க்கின்ற மக்கள் இத்தடவை தெளிவாகவே எம்மைச் சூழ்ந்துள்ளார்கள். புத்தளம் மாவட்டத்தின் மூஸ்லீம் தோழர்கள் தமது பிரதநிதியாக அலி சப்றி றஹீமை பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்து அனுப்பினார்கள். அப்படிப்பட்ட ஒருவரை புத்தளம் மாவட்டத்தில் இருந்து அனுப்பிவைக்க வாக்குகளை அளித்த நீங்கள் உங்களின் வாக்குகளை நினைத்து பெருமிதம் அடைகிறீர்களா? முஸ்லீம் சகோதர மக்கள் தமது உறுப்பினர் என நினைத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்த அலி சப்றி றஹீம் தனது உறுப்பினர் சிறப்புரிமையைப் […]

-Colombo, January 20, 2024-

மனச்சாட்சிகொண்ட, நாட்டுக்காக சட்டத்தையும் ஒழுக்கத்தையம் எதிர்பார்க்கின்ற மக்கள் இத்தடவை தெளிவாகவே எம்மைச் சூழ்ந்துள்ளார்கள். புத்தளம் மாவட்டத்தின் மூஸ்லீம் தோழர்கள் தமது பிரதநிதியாக அலி சப்றி றஹீமை பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்து அனுப்பினார்கள். அப்படிப்பட்ட ஒருவரை புத்தளம் மாவட்டத்தில் இருந்து அனுப்பிவைக்க வாக்குகளை அளித்த நீங்கள் உங்களின் வாக்குகளை நினைத்து பெருமிதம் அடைகிறீர்களா? முஸ்லீம் சகோதர மக்கள் தமது உறுப்பினர் என நினைத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்த அலி சப்றி றஹீம் தனது உறுப்பினர் சிறப்புரிமையைப் பயன்படுத்தி தங்கக் கடத்தல் புரிந்து மாட்டிக்கொண்டார். எனினும் அடுத்த நாள் பாராளுமன்றத்திற்கு வந்து சட்டவாக்கத்திற்கும் கையை உயர்த்தினார். நேற்று சட்டதை மீறி எயார்போர்ட்டில் மாட்டிக்கொண்டவர் இன்று சட்டங்களை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றத்தில் கையை உயர்த்துகிறார். இந்த சமூகம், பொருளாதாரம், சட்டம் மாத்திரம் சீரழியவில்லை. மனிதர்களின் விருப்புவெறுப்புகள், மனோபாவங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமூக அமைப்புமே சீரழிந்துவிட்டது. ஆட்கொலை தொடர்பில் நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகரவை இரத்தினபுரியில் முதலாமிடத்தில் அனுப்பி வைக்கிறார்கள். கம்பஹாவில் இருந்து பிரசன்ன ரணதுங்கவை அனுப்பி வைக்கிறார்கள். களுத்துறையில் இருந்து ரோஹித அபேகுணவர்தனவை அனுப்பி வைக்கிறார்கள். கண்டியில் இருந்து மகிந்தானந்தவை அனுப்பி வைக்கிறார்கள். குருநாகலில் இருந்து ஜோன்ஸ்ரனை அனுப்பி வைக்கிறார்கள். அநுராதபுரத்தில் இருந்து மாவிலாறு எஸ்.எம். சந்திரசேனவை அனுப்பி வைக்கிறார்கள். மனிதர்களின் சிந்தனைப்போக்குகள் சிதைவடைந்துள்ள விதமே அதிலிருந்து தெளிவாகின்றது. “திருடனாக இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு எவ்வளவாவது தருவாரென்றால்” என மக்கள் சிந்தித்தார்கள்.

அவ்வாறு சிந்தித்து ஒரு நாட்டை உருப்படியாக்கிட முடியாது. அதனால் அரசசேவையை மக்களுக்கு கௌரவமான சேவையை வழங்குகின்ற இடத்திற்கு மாற்றியமைக்க வேண்டும். அரசியல் பரிசுத்தமாகி மக்கள் இதைவிட பண்புள்ளவர்களாக பிறரைப் பற்றிக் கரிசனை கொண்டவர்களாக மாறவேண்டும். புத்த தர்மம், கிறிஸ்தவ தர்மம், நபிகள் நாயகத்தின் தர்மம், இந்து தர்மம் ஆகிய நான்கு பிரதான சமயங்கள் இந்த சமூகத்திற்கு வழிகாட்டி வருகின்றன. இந்த அனைத்து சமயங்களும் பிறர்மீது கருணை காட்டவும், அன்பு செலுத்தவும், சகோதரத்துவத்தைக் வெளிக்காட்டவும் அருளுரை போதித்தபோதிலும் அந்த சமயங்களைக் கடைப்பிடிக்கின்ற குடிமக்கள் திருடர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கிறார்கள். அதனால் இப்போது அரசியலில் மாத்திரமல்ல சமூகத்திலும் பிரச்சினை நிலவுகின்றது. நாரம்மலவில் சாரதியொருவரை துப்பாக்கியால் சுட்ட பொலீஸ் உத்தியோகத்தர் “இவன் செத்துப்போய்விட்டானா தெரியவில்லை” எனக் கூறுகிறார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியவர் மனிதன் இல்லையா? அதிர்ச்சி இருக்கின்றதா? ஒரு நாட்டுக்கு இவ்விதமாக முன்நோக்கி நகரமுடியாது. குறிப்பாக 1978 இன் பின்னர் கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையின் இறுதிப்பெறுபேறாக மாறியிருப்பது எமது கண்ணெதிரில் ஒட்மொத்த சமூகமுமே சீரழிந்துள்ளமையாகும். மிக அதிகமான சிறுமிகள் தமது நெருங்கிய உறவினர்களாலேயே பாலியல் தொல்லைகளுக்கு இலக்காகி உள்’ளார்கள். எம்மெதிரில் இருப்பது அவ்வாறான சமூகமாகும். பொருளாதாரம் உருப்படியாவிட்டது என்பதற்காக இந்த சமூகம் கரைசேர மாட்டாது. சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டுவிட்டால் மாத்திரம் கரைசேர மாட்டாது. ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்புமே புதிய மாற்றத்திற்கு இலக்காகக்கப்படல் வேண்டும். தேசிய மக்கள் சக்தி பாடுபடுவது அதற்காகவே. மனிதநேயமுள்ள சமூகமொன்றிற்காக அனைத்துப் பிரிவுகளையும் மாற்றியமைத்திடாமல் எமது நாட்டுக்கு முன்நோக்கி நகர இயலாது. அந்த சமூக மாற்றத்திற்கு அவசியமான அதிகாரத்தைப் பெற்றுத்தருமாறே நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.

புதிய மாற்றமொன்று பற்றிய எந்தவிதமான உணர்வும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கிடையாது. மக்களுக்கு உண்ண உணவு இல்லாவிட்டாலும் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளதென அவரும் அவருடைய சீடர்களும் கூறுகிறார்கள். மருந்துகள் இல்லாத, கல்விபெற முடியாத, மக்களுக்கு நன்மைகள் கிடைக்காத பொருளாதாரத்தில் உள்ள பிரயோசனம் என்ன? அவர்கள் பொருளாதாரத் தரவுகளைப் பார்க்கிறார்களேயொழிய மக்களின் வாழ்க்கையை அல்ல. பகிர்ந்தளிப்பதே அரசியலென ஒருசிலர் நினைக்கிறார்கள். எவ்வளவுதான் பகிர்ந்தளித்தார்கள்? ஓர் அரசியல் இயக்கமென்றால் மக்களை அனர்த்தங்களிலிருந்து மீட்டெக்க ஆவனசெய்ய வேண்டும். நாங்கள் முன்வருவது அத்தகைய விரிவான சமூக, பொருளாதார, அரசியல் இடையீட்டுக்காகவே. அந்த மாற்றத்திற்காக மக்களை விழிப்படையச் செய்விக்கின்ற மக்களை அணிதிரட்டுகின்ற தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பாசறை ஒரு பக்கத்தில் இருக்கின்றது. மறுபக்கத்தில் மக்களை பாதிப்பிற்கு இலக்காக்கிய, வாழமுடியாத நிலையை உருவாக்கிய, மக்களை பிச்சைக்காரர்களாக்கிய, பகிர்ந்தளிக்கின்ற அரசியலை அமுலாக்குகின்ற, மக்களின் செல்வத்தை திருடுகின்ற அரசியல் இருக்கின்றது. இந்த நாட்டுக்கு மீண்டும் புத்தெழுச்சி தருகின்ற புதிய அரசியல் பயணத்திற்கு தலைமைத்துவம் வழங்குவது தேசிய மக்கள் சக்தியாகும்.

இந்தியாவில் வெள்ளைக்காரனை விரட்டியடிக்கின்ற தேசிய இயக்கம் வெள்ளைக்காரனை விரட்டியடித்த பின்னர் இந்தியாவை சந்திரனுக்கு கொண்டுசெல்லும்வரை இயங்கியுள்ளது. இந்த நூற்றாண்’டில் உலகம் பற்றி எதிர்வுகூறி அதற்கு ஒத்துவரத்தக்க பொருளாதார, அரசியல், சமூக மாற்றத்தை அந்நாட்டின் சமூகத்தில் மேற்கொண்டது. அப்துல் கலாம் சனாதிபதியானமை, தாழ்ந்த சாதிப் பெண் சனாதிபதியானமை வரை மாற்றத்தை ஏற்படுத்தி உலகின் ஐந்தாவது பலம்பொருந்திய பொருளாதாரமாக கட்டியெழுப்பியுள்ளார்கள். ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்களுக்கு அணுக்குண்டுத் தாக்குதல் நடாத்தியதால் தவிடுபொடியாக்கப்பட்டது. இலட்சக்கணக்கானோர் மடிந்தார்கள். தோல்வியை வெற்றிக்கான அடியெடுப்பாக மாற்றி ஜப்பான் எழுச்சிபெற்றது. எமது தலைவர்கள் அவ்வாறான நோக்கு இல்லாமல் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தார்கள். வெள்ளைக்காரனை எதிர்த்து நின்றாலும் ஒரு தேசமென்றவகையில் பிரிந்து நின்றது. வெள்ளைக்காரன் போனபின்னர் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்து மலையக மக்களை ஒதுக்கிவைத்தார்கள். 1956 இல் மொழிச் சட்டத்தைக் கொண்டுவந்து 1958 இல் கலவரம் உருவாக்கப்பட்டது. 70 இன் இறுதியில் வடக்கில் ஆயுதமேந்திய எழுச்சி தோன்றியது. 2019 இல் உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. வெள்ளைக்காரனின் கையிலிருந்து ஆட்சியதிகாரத்தை எடுத்த நாளில் இருந்து நாங்கள் பிரச்சினைபட்டுக்கொண்டோம். இறுதியில் உலகில் பிச்சையேந்துகின்ற நாடாக மாற்றப்பட்டு அழிவின் அடித்தளத்திற்கே அமிழ்த்தப்பட்டது. இந்த நிலைமையை மாற்றியமைக்கின்ற புதிய தேசிய எழுச்சி, புதிய தேசிய ஒருமைப்பாடு அவசியமாகும். சிங்கள, தமிழ், முஸ்லீம் நாமனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த கொள்ளைக்கார ஆட்சியை விரட்டியத்திட வேண்டும். இந்தியா வெள்ளைக்காரர்களுக்கு எதிராக ஒருகொடியின்கீழ் ஒன்றுசேர்ந்ததைப்போல் இந்த நாட்டை நாசமாக்கிய ஆட்சியாளர்களுக்கு எதிராக நாமனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாமனைவரும் ஒன்றுசேர்ந்து தெம்புடையவர்களாக முன்வரவேண்டுமென குறிப்பாக புத்தளம் மாவட்டத்தின் சகோதர முஸ்லீம் மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

ஒவ்வொரு பிரசைக்கும் சமயத்தைப் பின்பற்றுவதற்கான உரிமையை, தனது மொழியில் அரசுடன் செயலாற்றுவதற்கான உரிமையை, தமது கலாசார அடையாளத்துடன் தேசத்தை ஒருங்கிணைப்பதற்கான உரிமையை ஏற்றுக்கொள்கின்ற அரசியல் இயக்கமே தேசிய மக்கள் சக்தி. இங்கிலாந்தில் கறுப்பர் – வெள்ளையர் அனைவருமே, அமெரிக்காவில் கறுப்பர் – வெள்ளையர் அனைவருமே அதைப்போலவே பிரான்ஸிற்கு ஜேர்மனிக்குச் சென்றால் அவர்கள் நாட்டுடன் அடையாளப்படுத்தப்பட்ட இனத்தவர்களாக அழைக்கப்படுகிறார்கள். எனினும் இலங்கையில் இலங்கையர்களை சந்திக்காமல் தம்பியா, தமிழன், சிங்களவன் என்றவகையிலேயே இருக்கிறார்கள். உலகில் பிரிந்த எந்தவொரு நாடும் முன்நோக்கி நகரவில்லை. இந்த அழிவுக்கு எதிராக முதலில் நாங்கள் ஒன்றிணைவோம். இந்த ஆளும் வர்க்கத்தினரை விரட்டியடிப்பதற்கான முதலாவது அடியெடுப்பு அதுதான். அவ்விதம் விரட்டியடிப்பதன் மூலமாக உருவாகின்ற உணர்வினை, வலிமையை இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக நீண்டகாலரீதியில் பேணிவரவேண்டும். இலங்கை வரலாற்றில் அண்மைக்காலத்தில் புரியப்பட்ட நித்திக்கத்தக்க சதித்திட்டமான உயிர்த்தஞாயிறு தாக்குதல் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட சதிகாரர்களை நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டும். திருடிய ஆதனங்களை கையகப்படுத்தி திருடர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும். அரசியல்வாதிக்கு வழங்கியுள்ள அநாவசியமான சிறப்புரிமைகள் அனைத்தையும் நீக்கிடவேண்டும். ஏனைய பிரசைகளுக்கு சமமாகவே அரசியல்வாதிகளும் செயலாற்றவேண்டும். பொலீஸார், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் அரசாங்க சேவையில் ஈடுபட்டுள்ள அனைவரையும்போல் அரசியல்வாதிகளும் தமது செயற்பொறுப்பினை சரிவர ஈடேற்றுகின்ற புதிய மாற்றத்திற்கு இட்டுச்செல்கின்ற மறுமலர்ச்சி யுகமொன்றை ஆரம்பிக்கவேண்டும். பல தசாப்தங்களாக நாசமாக்கிய நாடடடை ஓரிரு வருடங்களில் மீட்டெடுக்க முடுடியுமென நினைக்க வேண்டாம். எனினும் ஆரம்பகட்டமாக உணவு, கல்வி, சுகாதாரம் தொடர்பில் உடனடி இடையீடு அவசியமாகும். எனினும் வாழ்க்கை என்பது உணவு, மருந்து வாங்குதல், பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுதல் மாத்திரமல்ல. எமது நாட்டு வளங்களை சிறப்பாக முகாமைசெய்து புத்தாக்க யுகமொன்றை உருவாக்குதல் மறுமலர்ச்சியின் ஒரு பகுதியாகும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களுக்கு புத்துயிரளிக்கவேண்டும். புதிய மறுமலர்ச்சி யுகத்தை நோக்கிச் செல்வதற்கான தொடக்கநிலை தேசிய மக்கள் சக்தியின் கைகளுக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதாகும். கட்டம்கட்டமாக மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்புவதை திட்டமிட்டமிட்ட அடிப்படையில் அமுலாக்குவோம். அதற்காக இற்றைவரை பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அரசியல் தலைவர்களுக்கு வாக்குகளை அளித்த அனைவரையும் ஒன்றுசேர்த்திடுவோம். பொதுத்தேர்தலாகவிருப்பினும் சனாதிபதி தேர்தலாகவிருப்பினும் முதலில் வருகின்ற எந்தவொரு தேர்தலின்போதும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியதிகாரத்திற்காக அனைத்து மக்களையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கிறோம்.

Show More

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் மல்வத்து அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்தனர்…

-Colombo, January 19, 2024- தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று (19) மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா பீடாதிபதிகளை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பிலும், தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு குறித்தும் விளக்கமளித்திருந்தனர். இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் லால்காந்த ஆகியோர் கலந்துகொண்டனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இலங்கை அரசியலின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அவர்களுடன் மேலும் கலந்துரையாடப்பட்டது.

-Colombo, January 19, 2024-

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று (19) மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா பீடாதிபதிகளை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பிலும், தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு குறித்தும் விளக்கமளித்திருந்தனர்.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் லால்காந்த ஆகியோர் கலந்துகொண்டனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இலங்கை அரசியலின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அவர்களுடன் மேலும் கலந்துரையாடப்பட்டது.

Show More

“ஒருபுறம் கலைநிகழ்ச்சிகளை காண்பித்தவாறு மறுபுறம் திருகோணமலையின் சொத்துக்களை விற்கிறார்கள்…” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் மற்றும் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் தோழர் அருண் ஹேமச்சந்திரா-

(18 சதவீத வற் வரிக்கு எதிராக மூதூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது – 18.01.2024) ஒருபுறம் பொங்கல் பண்டிகை, கலை நிகழ்ச்சிகள் என்று வெளி உலகுக்கு காண்பித்துக் கொண்டு மறுபுறத்தில் திருகோணமலையின் வளங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தில் இறங்கியிருக்கிறது. இலங்கையில் பெறுமதிமிக்க வளங்களை கொண்ட மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் இருக்கிறது. ஆனால், இங்குள்ள சொத்துக்கள் குறைந்த விலைக்கு அந்நியர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதை திசைதிருப்பும் முகமாக பல்வேறு கொண்டாட்ட வைபவங்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. […]

(18 சதவீத வற் வரிக்கு எதிராக மூதூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது – 18.01.2024)

ஒருபுறம் பொங்கல் பண்டிகை, கலை நிகழ்ச்சிகள் என்று வெளி உலகுக்கு காண்பித்துக் கொண்டு மறுபுறத்தில் திருகோணமலையின் வளங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தில் இறங்கியிருக்கிறது.

இலங்கையில் பெறுமதிமிக்க வளங்களை கொண்ட மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் இருக்கிறது. ஆனால், இங்குள்ள சொத்துக்கள் குறைந்த விலைக்கு அந்நியர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதை திசைதிருப்பும் முகமாக பல்வேறு கொண்டாட்ட வைபவங்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. ஆக, இவ்வாறு எமது வளங்களை அந்நியருக்கு தாரைவார்ப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.

Show More

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் NPP இற்கும் இடையிலான சந்திப்பு!

-Colombo, January 18, 2024- சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தொழிற்பாட்டுப் பிரதானி பீற்றர் புறூவர் (Peter Breuer) உள்ளிட்ட குழுவினருக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று இன்று (18) மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடாத்தப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவம் செய்து திரு. பீற்றர் புறூவருக்கு மேலதிகமாக நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி திருமதி சர்வத் ஜஹான் மற்றும் மானவீ அபேவிக்ரம ஆகியோர் கலந்துகொண்டனர். இத்தருணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி […]

-Colombo, January 18, 2024-

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தொழிற்பாட்டுப் பிரதானி பீற்றர் புறூவர் (Peter Breuer) உள்ளிட்ட குழுவினருக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று இன்று (18) மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடாத்தப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவம் செய்து திரு. பீற்றர் புறூவருக்கு மேலதிகமாக நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி திருமதி சர்வத் ஜஹான் மற்றும் மானவீ அபேவிக்ரம ஆகியோர் கலந்துகொண்டனர்.

இத்தருணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய, தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவையை பிரதிநிதித்துவம்செய்து சுனில் ஹந்துன்னெத்தி, பேராசிரியர் அனில் ஜயந்த, பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி ஹர்ஷ சூரியப்பெரும மற்றும் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் முதித்த நாணாயக்கார ஆகியோர் பங்கேற்றனர்.

Show More

“உணவுக்கு செலவழித்தால் கட்டணங்களை செலுத்த முடியாது. கட்டணங்களை செலுத்தினால் உணவுக்கு எதுவும் மிஞ்சாது.” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் விராய் கெலி பல்தஸார்-

(பெண்களாகிய நாம் ஒரே மூச்சுடன் திசைகாட்டிக்கு – ஹம்பாந்தோட்டை பெண்கள் மாநாடு – 14.01.2024) இன்று நாம் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாட்டிலேயே வாழ்கிறோம். இறந்த பெண்மணிக்கு கல்லறையில் கூட பாதுகாப்பில்லாத நிலை உருவாகியிருக்கிறது. பெண்களின் வாழ்க்கை போராட்டக்களமாக மாறியிருக்கிறது. தினமும் பெண்கள் எதிர்கொள்ளும் பெரும் போராட்டம்தான் சமையலறை போராட்டம். விலைவாசியை தாங்கிக்கொள்ள முடியாமல் பெண்கள் கஸ்டப்படுகிறோம். இன்று ஒரு கிலோ கிராம் கரட் 1100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 400 கிராம் பால்மா பக்கற் ஒன்று 30 ரூபாவால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் […]

(பெண்களாகிய நாம் ஒரே மூச்சுடன் திசைகாட்டிக்கு – ஹம்பாந்தோட்டை பெண்கள் மாநாடு – 14.01.2024)

இன்று நாம் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாட்டிலேயே வாழ்கிறோம். இறந்த பெண்மணிக்கு கல்லறையில் கூட பாதுகாப்பில்லாத நிலை உருவாகியிருக்கிறது. பெண்களின் வாழ்க்கை போராட்டக்களமாக மாறியிருக்கிறது. தினமும் பெண்கள் எதிர்கொள்ளும் பெரும் போராட்டம்தான் சமையலறை போராட்டம். விலைவாசியை தாங்கிக்கொள்ள முடியாமல் பெண்கள் கஸ்டப்படுகிறோம். இன்று ஒரு கிலோ கிராம் கரட் 1100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 400 கிராம் பால்மா பக்கற் ஒன்று 30 ரூபாவால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. தாய்மார்கள் தமது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாத நெருக்கடி நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

உணவுக்கு செலவழித்தால் கட்டணங்களை செலுத்த முடியாது. கட்டணங்களை செலுத்தினால் உணவுக்கு எதுவும் மிஞ்சாது. சாதாரண தாயொருவர் தனது பிள்ளையை வாரத்தில் 2 அல்லது 3 நாட்களுக்கே பாடசாலைக்கு அனுப்புகிறார். நாட்டை போலவே பெண்களும் கடன்காரர்களாக மாறியிருக்கிறோம். அனேகமான பெண்களின் தங்க நகைகள் அடகு கடைகளில்தான் உள்ளன. கடந்த 2023 ஆம் வருடமென்பது தங்கக் கடன் அதிகம் பெற்ற வருடமாக மாறியிருக்கிறது. 2024 இல் வரிச்சுமை மேலும் அதிகரித்திருக்கிறது. ஆனால், எமது வரியில் இந்நாட்டில் நெருக்கடியை உருவாக்கிய, கொள்ளையடித்த, மோசடி புரிந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ராஜபக்ஸர்களின் அரசாங்கத்தை நாம் பேணிவருகிறோம். ஆனால், பெண்களாகிய எமக்கு எவ்வித விமோட்சனமும் கிடைக்காமல் இருக்கிறது.

Show More