Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் மல்வத்து அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்தனர்…

-Colombo, January 19, 2024- தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று (19) மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா பீடாதிபதிகளை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பிலும், தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு குறித்தும் விளக்கமளித்திருந்தனர். இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் லால்காந்த ஆகியோர் கலந்துகொண்டனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இலங்கை அரசியலின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அவர்களுடன் மேலும் கலந்துரையாடப்பட்டது.

-Colombo, January 19, 2024-

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று (19) மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா பீடாதிபதிகளை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பிலும், தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு குறித்தும் விளக்கமளித்திருந்தனர்.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் லால்காந்த ஆகியோர் கலந்துகொண்டனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இலங்கை அரசியலின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அவர்களுடன் மேலும் கலந்துரையாடப்பட்டது.

Show More

“ஒருபுறம் கலைநிகழ்ச்சிகளை காண்பித்தவாறு மறுபுறம் திருகோணமலையின் சொத்துக்களை விற்கிறார்கள்…” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் மற்றும் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் தோழர் அருண் ஹேமச்சந்திரா-

(18 சதவீத வற் வரிக்கு எதிராக மூதூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது – 18.01.2024) ஒருபுறம் பொங்கல் பண்டிகை, கலை நிகழ்ச்சிகள் என்று வெளி உலகுக்கு காண்பித்துக் கொண்டு மறுபுறத்தில் திருகோணமலையின் வளங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தில் இறங்கியிருக்கிறது. இலங்கையில் பெறுமதிமிக்க வளங்களை கொண்ட மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் இருக்கிறது. ஆனால், இங்குள்ள சொத்துக்கள் குறைந்த விலைக்கு அந்நியர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதை திசைதிருப்பும் முகமாக பல்வேறு கொண்டாட்ட வைபவங்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. […]

(18 சதவீத வற் வரிக்கு எதிராக மூதூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது – 18.01.2024)

ஒருபுறம் பொங்கல் பண்டிகை, கலை நிகழ்ச்சிகள் என்று வெளி உலகுக்கு காண்பித்துக் கொண்டு மறுபுறத்தில் திருகோணமலையின் வளங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தில் இறங்கியிருக்கிறது.

இலங்கையில் பெறுமதிமிக்க வளங்களை கொண்ட மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் இருக்கிறது. ஆனால், இங்குள்ள சொத்துக்கள் குறைந்த விலைக்கு அந்நியர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதை திசைதிருப்பும் முகமாக பல்வேறு கொண்டாட்ட வைபவங்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. ஆக, இவ்வாறு எமது வளங்களை அந்நியருக்கு தாரைவார்ப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.

Show More

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் NPP இற்கும் இடையிலான சந்திப்பு!

-Colombo, January 18, 2024- சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தொழிற்பாட்டுப் பிரதானி பீற்றர் புறூவர் (Peter Breuer) உள்ளிட்ட குழுவினருக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று இன்று (18) மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடாத்தப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவம் செய்து திரு. பீற்றர் புறூவருக்கு மேலதிகமாக நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி திருமதி சர்வத் ஜஹான் மற்றும் மானவீ அபேவிக்ரம ஆகியோர் கலந்துகொண்டனர். இத்தருணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி […]

-Colombo, January 18, 2024-

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தொழிற்பாட்டுப் பிரதானி பீற்றர் புறூவர் (Peter Breuer) உள்ளிட்ட குழுவினருக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று இன்று (18) மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடாத்தப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவம் செய்து திரு. பீற்றர் புறூவருக்கு மேலதிகமாக நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி திருமதி சர்வத் ஜஹான் மற்றும் மானவீ அபேவிக்ரம ஆகியோர் கலந்துகொண்டனர்.

இத்தருணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய, தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவையை பிரதிநிதித்துவம்செய்து சுனில் ஹந்துன்னெத்தி, பேராசிரியர் அனில் ஜயந்த, பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி ஹர்ஷ சூரியப்பெரும மற்றும் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் முதித்த நாணாயக்கார ஆகியோர் பங்கேற்றனர்.

Show More

“உணவுக்கு செலவழித்தால் கட்டணங்களை செலுத்த முடியாது. கட்டணங்களை செலுத்தினால் உணவுக்கு எதுவும் மிஞ்சாது.” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் விராய் கெலி பல்தஸார்-

(பெண்களாகிய நாம் ஒரே மூச்சுடன் திசைகாட்டிக்கு – ஹம்பாந்தோட்டை பெண்கள் மாநாடு – 14.01.2024) இன்று நாம் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாட்டிலேயே வாழ்கிறோம். இறந்த பெண்மணிக்கு கல்லறையில் கூட பாதுகாப்பில்லாத நிலை உருவாகியிருக்கிறது. பெண்களின் வாழ்க்கை போராட்டக்களமாக மாறியிருக்கிறது. தினமும் பெண்கள் எதிர்கொள்ளும் பெரும் போராட்டம்தான் சமையலறை போராட்டம். விலைவாசியை தாங்கிக்கொள்ள முடியாமல் பெண்கள் கஸ்டப்படுகிறோம். இன்று ஒரு கிலோ கிராம் கரட் 1100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 400 கிராம் பால்மா பக்கற் ஒன்று 30 ரூபாவால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் […]

(பெண்களாகிய நாம் ஒரே மூச்சுடன் திசைகாட்டிக்கு – ஹம்பாந்தோட்டை பெண்கள் மாநாடு – 14.01.2024)

இன்று நாம் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாட்டிலேயே வாழ்கிறோம். இறந்த பெண்மணிக்கு கல்லறையில் கூட பாதுகாப்பில்லாத நிலை உருவாகியிருக்கிறது. பெண்களின் வாழ்க்கை போராட்டக்களமாக மாறியிருக்கிறது. தினமும் பெண்கள் எதிர்கொள்ளும் பெரும் போராட்டம்தான் சமையலறை போராட்டம். விலைவாசியை தாங்கிக்கொள்ள முடியாமல் பெண்கள் கஸ்டப்படுகிறோம். இன்று ஒரு கிலோ கிராம் கரட் 1100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 400 கிராம் பால்மா பக்கற் ஒன்று 30 ரூபாவால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. தாய்மார்கள் தமது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாத நெருக்கடி நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

உணவுக்கு செலவழித்தால் கட்டணங்களை செலுத்த முடியாது. கட்டணங்களை செலுத்தினால் உணவுக்கு எதுவும் மிஞ்சாது. சாதாரண தாயொருவர் தனது பிள்ளையை வாரத்தில் 2 அல்லது 3 நாட்களுக்கே பாடசாலைக்கு அனுப்புகிறார். நாட்டை போலவே பெண்களும் கடன்காரர்களாக மாறியிருக்கிறோம். அனேகமான பெண்களின் தங்க நகைகள் அடகு கடைகளில்தான் உள்ளன. கடந்த 2023 ஆம் வருடமென்பது தங்கக் கடன் அதிகம் பெற்ற வருடமாக மாறியிருக்கிறது. 2024 இல் வரிச்சுமை மேலும் அதிகரித்திருக்கிறது. ஆனால், எமது வரியில் இந்நாட்டில் நெருக்கடியை உருவாக்கிய, கொள்ளையடித்த, மோசடி புரிந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ராஜபக்ஸர்களின் அரசாங்கத்தை நாம் பேணிவருகிறோம். ஆனால், பெண்களாகிய எமக்கு எவ்வித விமோட்சனமும் கிடைக்காமல் இருக்கிறது.

Show More

“பகிர்ந்தளிக்கின்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளிவைத்து நாட்டை உருப்படியாக்குகின்ற அரசியலை நிலைநாட்டுவோம்” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

-2014.01.14 – “பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன்” தேசிய மக்கள் சக்தி, அம்பாந்தோட்டை பெண்கள் மாநாடு- பகிர்ந்தளிக்கின்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளிவைத்து நாட்டை உருப்படியாக்குகின்ற அரசியலை நிலைநாட்டுவோம்தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கமுட்டிமோதுவதற்காக மாத்திரமல்ல ஆட்சியாளர்களைத் தோற்கடித்திடவும் தயார் என்பதையே இங்கு குழுமியுள்ள சகோதரிகள் கூறுகிறார்கள். ஆட்சியாளன் மக்களை வதைத்து, ஏமாற்றி வருகிறான். மறுபுறத்தில் அவர்கள் குடும்பம், குடும்பத்தைச் சுற்றியுள்ள வளையத்தைக் கட்டிவளர்க்கின்ற அரசியலில் ஈடுபட்டார்கள். அதற்கான உதாரணங்கள் இந்த அம்பாந்தோட்டை பெருநிலத்தில் இருக்கின்றன. லுணுகம்வெஹெர, […]

-2014.01.14 – “பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன்” தேசிய மக்கள் சக்தி, அம்பாந்தோட்டை பெண்கள் மாநாடு-

பகிர்ந்தளிக்கின்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளிவைத்து நாட்டை உருப்படியாக்குகின்ற அரசியலை நிலைநாட்டுவோம்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க
முட்டிமோதுவதற்காக மாத்திரமல்ல ஆட்சியாளர்களைத் தோற்கடித்திடவும் தயார் என்பதையே இங்கு குழுமியுள்ள சகோதரிகள் கூறுகிறார்கள். ஆட்சியாளன் மக்களை வதைத்து, ஏமாற்றி வருகிறான். மறுபுறத்தில் அவர்கள் குடும்பம், குடும்பத்தைச் சுற்றியுள்ள வளையத்தைக் கட்டிவளர்க்கின்ற அரசியலில் ஈடுபட்டார்கள். அதற்கான உதாரணங்கள் இந்த அம்பாந்தோட்டை பெருநிலத்தில் இருக்கின்றன. லுணுகம்வெஹெர, அங்குணுகொலபெலெஸ்ஸ, சூரியவெவவில் அம்மாவும் அப்பாவும் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள்? ஆற நிரல்கள் உள்ள வீதியில் பிள்ளை எலுமிச்சம்பழத்தை, மாங்காயை வைத்துக்கொண்டு துன்பகரமாக வாழும்நிலைக்கு எவ்வாறு மாறியது? இந்த அம்பாந்தோட்டையில் எமது நாட்டையும் மக்களையும் வதைக்கின்ற குழுவின் பிரதிநிதித்துவமும் மறுபுறத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவமும் இருக்கின்றது. 2024இன் தீர்வுக்கட்டமான போராட்டம் இந்த இரண்டு பாசறைகளுக்கிடையிலேயே நிலவுகின்றது. நாங்கள் இந்த போராட்டத்தை வெற்றியுடன் நிறைவுசெய்வோம். தேர்தல் காலத்தில் சேலையொன்றை பகிர்ந்தளிக்கின்ற அரசியலே அவர்களிடம் இருந்தது. அந்த பகிர்ந்தளித்தல் புதுமையானது. ஊபாசகைகளுக்கு சீலம் அனுட்டிப்பதற்கான புடவை, அப்பாவுக்கு ஒரு போத்தல் சாராயம் பகிரப்பட்டது. யானை அடையாளத்திற்குப் பதிலாக அமரவீர அடையாளம் பொறித்த தீப்பெட்டிகளும் பகிரப்பட்டன.

எமது நாட்டுக்கு அவசியமாவது ஒரு புதிய அரசியலாகும். பகிர்ந்தளிக்கின்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளிவைத்த நாட்டை உருப்படியாக்குகின்ற அரசியலாகும். இந்த அம்பாந்தோட்டை மாவட்டத்தில் டிக்கிரி கணக்குகள், தையல் மெஷின்கள், பிரித் நூல்கள், மைய வீடு என்றால் அரசி மூடையை அனுப்பிவைக்கின்ற பெரியவர் ஒருவர் இருந்தார். இந்த பகிர்ந்தளிக்கும் அரசியலை நிறுத்தவேண்டும். எமது நாட்டு மக்களை பிச்சையேந்துகின்ற நிலைக்கு உள்ளாக்கி, தமது வாழ்க்கையைக் கொண்டுநடாத்த அவசியமான வருமானமற்ற, வீட்டினை கட்டிக்கொள்ள, பிள்ளைக்கு தொழிலொன்றைப் பெற்றுக்கொள்ள, வருமான வழியொன்றை தேடிக்கொள்ள முடியாத நிலையை உருவாக்கி, அவர்கள் மேலிடத்தில் இருந்து பகிர்ந்தளிக்கின்ற “கோமகன்களாக” மாறியுள்ளார்கள். அந்த அரசியல் எமது நாட்டில் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இப்போது பகிர்ந்தளிக்க வருகையில் “ஊ” சத்தம் போடுகின்ற நிலைமை உருவாகியுள்ளது. அநுராதபுரத்தில் ஓர் அமைச்சர் ஃபில்டர்களை பகிர்ந்தளிக்கச் சென்றார். மக்கள் “ஊ” சத்தம்போடத் தொடங்கினார்கள். இங்கும் தென்னம்பிள்ளைகளை பகிர்ந்தளிக்கையில் ஊரின் பிக்கு கூறினாராம் ” பகிர வேண்டுமானால் பன்சலையில் வைத்துவிட்டுப் போங்கள். நான் பகிர்ந்தளிக்கிறேன்” என்று. பகிர்ந்தளிக்கின்ற அரசியல் நாட்டுக்கோ அல்லது மக்களுக்கோ நன்மை பயப்பதாக அமையவில்லை. குடிமக்களை பிச்சைக்காரர்களாக மாற்றி , அவர்கள் கோமான்களாக மாறி அவர்களுக்கு அடிபணிந்து எதையாவது பெற்றுக்கொள்வதற்காக இருகரம் ஏந்திக்கொண்டு இருக்கின்ற அரசியலா இன்று எமக்குத் தேவை? இந்த அரசியலின் பெறுபேறாகவே இறுதியில் எமது நாடும் மக்களும் பாரிய பாதிப்பிற்கு இலக்காகி உள்ளார்கள். கட்டாயமாக 2024 இல் பகிர்ந்தளிக்கின்ற அரசியலை முடிவுக்குக்கொண்டுவந்து நாட்டில் உருப்படியாக்குகின்ற அரசியலை நிலைநாட்டுவோம். அதற்கான மிகப்பெரிய சாத்தியவளம் எமது அக்காமார்கள், தாய்மார்கள், மகள்மார்களிடமே நிலவுகின்றது. அது ஏன்? தற்போது ஊரில் முனைப்பான ஒரு சங்கம் நிலவுமாயின் அது மகளிர் சங்கமாகும். முனைப்பான செயற்பொறுப்பனை ஆற்றுபவர்கள் பெண்களாவர். அவர்களை கிளறிவிட்டால் நிறுத்த முடியாது. அவ்வாறான அரசியலுக்கு மிகச்சிறந்த பாடம் புகட்டுவதற்கான ஆற்றல் நிலவுவதும் இந்நாட்டின் பெண்களிடமே. இந்த அழிவுமிக்க அரசியலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஆற்றல் உங்களிடமே இருக்கின்றது. பெண்களுக்குள்ளே இருக்கின்ற ஈரம், உணர்வுகள், பாசம், கடமையை ஈடேற்றுவதற்கான பொறுப்பு போன்ற உன்னதமான எண்ணக்கருக்களை அவர்கள் காட்சிப்படுத்தி மேடையில் விற்றார்கள்.

திருவாளர் மகிந்த கட்டுநாயக்கவில் நிலத்தை முத்தமிடுகையில் “நெஞ்சு பதறியது” எனக் கூறினார்கள். இந்த மனிதர் இந்த நாட்டை, தாயகத்தை எவ்வளவு நேசிக்கிறார்? என நினைத்தார்கள். பெண்களிடம் குடிகொண்டுள்ள அந்த உணர்வுகளை அவர்கள் தட்டியெழுப்புகிறார்கள். பிள்ளையைத் தூக்கினால்” பாருங்களே தந்தையின் பாசம் பொங்கி வழிகின்றது, இப்படிப்பட்ட தலைவர்தான் எமக்குத் தேவை” என நினைத்தார்கள். ஒரு புறத்தில் பிள்ளையைத் தூக்கிக்கொண்டிருக்கின்ற அதேவேளையில் மறுபுறத்தில் பிள்ளையின் எதிர்காலத்தை நாசமாக்கினார்கள். பிள்ளைகளின் கல்வி, சுகாதாரத்தை சீரழித்தார்கள். பிள்ளைக்கு தொழில் இல்லாத நாடு, கடனை மீளச்சலுத்த முடியாத நாடு உருவாக்கப்பட்டது. மக்களின் மனதை கவரக்கூடிய வார்த்தையான “அப்பச்சி” எனும் போஸ்டரை ஒட்டினார்கள். இன்று நாங்கள் ஏமாந்தோம். “அப்பச்சி” ஆடிய ஆட்டம் இப்போது தெரிகிறது. அவர் அவருடைய பிள்ளைகளுக்கும் அயோக்கியத்தனமான அரசியலுக்கும் அவரைச் சுற்றியுள்ள ககொள்ளைக்காரக் கும்பலுக்குமே “அப்பச்சியாகத்” திகழ்ந்தார். குடிமக்களுக்கு “அப்பச்சியாக’ அமையவில்லை. இன்று தள்ளாடித்தள்ளாடி மேடையில் ஏறுகிறார். எவருக்காக? மகனுக்காக. பிரசைகளுக்காகவல்ல. 20 மீற்றர் தூரம் கண்ணுக்குப் புலப்படாத அவர் இரவில் அவதானிப்புச் சுற்றுப்பயணம் போகிறார்.
உங்களிடம் இருக்கின்ற ஈரம், உணர்வுகளை நாங்கள் நன்றாகவே அறிவோம். பொதுவாகக் கூறினால் எமது நாடு சீரழிந்து பொருளாதாரம் அழிந்துவிட்டது. பொதுவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக குரல்கொடுக்கப் போகின்றவர்கள் பெண்களே.

கொச்சப்படுத்தப்படுபவர், சிரமங்களை எதிர்நோக்குபவர்கள் பெண்களே. சமைத்த உணவில் எஞ்சுகின்ற சிறுபகுதியை உண்பவள் அவளே. பெண்களே அல்லற்படுகிறார்கள். இந்த ஒவ்வொருவரும் தனது பிள்ளைக்கு கல்விபுகட்ட எவ்வளவு பாடுபடுகிறார்கள்? தமது வாழ்க்கையில் பெரும்பங்கினை பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுவதற்காகவே செலிவிடுகிறார்கள். தற்போது பாடசாலை முறைமை சீரழிந்துவிட்டது, பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவுசெய்ய முடியாமல் போயுள்ளது. முன்பு பாடசாலை உணவுவேளையொன்று கிடைத்திருப்பினும் தற்போது அது கிடையாது. சீருடைகளை வாங்க, சப்பாத்துகளை வாங்க முடியாது. பாடசாலை செல்கின்ற பிள்ளைகளில் 54% புத்தகங்கள் வாங்குவதை அல்லது உபகரணங்களை வாங்குவதை நிறுத்தியுள்ளதாக அரசாங்கத்தின் அறிக்கைகள் கூறகின்றன. ஐந்து நாட்கள் பாடசாலைக்கு அனுப்புகின்ற ஆற்றல் இல்லாமல் போய்விட்டது. அம்பாந்தோட்டை, சூரியவெவ பிரதேசங்களைச்சேர்ந்த தாய்மார்கள் தமது அனைத்து உறவுகளையும் கைவிட்டு மாத்தறை பிரதேசத்தில் வீடுகளை வாடகைக்கு எடுத்து பிள்ளைகளுக்கு கல்விபுகட்ட பெரும்பிரயத்தனம் செய்கிறார்கள். பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுவதற்காக. வீட்டினை கட்டிக்கொள்வதற்காகவே, வாகனமொன்றை வாங்குவதற்காகவே பெண்கள் வெளிநாடு செல்கிறார்கள். அம்மா தூரவிலகி பிள்ளைகள் தனித்துப்போன இடங்களில் பிள்ளைகளின் கல்வி வெற்றியளிக்கவில்லை. பிள்ளைகளின் கல்வி வெற்றியடையாத இடங்களில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் பெண்களே.
மகிந்த ராஜபக்ஷ கப்பல்கள் வராத துறைமுகம், மெச் அடிக்காத மைதானம், மாநாடு நடைபெறாத மாநாட்டு மண்டபம் அமைத்தார். சிறைச்சாலை அமைத்தார் சனம் நிரம்பி வழிகின்றது. பொதுப்போக்குவரத்தில் பயணிக்கின்ற 72% பெண்கள் ஏதேனும்விதத்திலான பாலியல் தொல்லைளுக்கு இலக்காகிறார்கள். இந்த பேரிடர்களின் இறுதி இரையாக மாறியிருப்பது நீங்கள்தான். சமூகத்தை மாற்றியமைக்கின்ற பயணத்தில் முனைப்புடன் முன்வரவேண்டியது நீங்கள்தான். இந்த துன்பங்களிலிருந்து விடுபட முதலில் இந்த அரசியலை மாற்றியமைத்திட வேண்டும். அரசியல் மாற்றமே அவசியமாக செய்யப்படவேண்டும். அரசியலை மாற்றியமைத்திட நாங்கள் அதிகாரத்தைப் பெற்றிடவேண்டும்.

எமக்கு புதிய தேசிய எழுச்சி, ஒருமைப்பாடு அவசியம். உலகநாடுகள் வெற்றிபெற்று எழுச்சியடைந்துள்ளன. இந்தியா 1948 இல் போராடி, ஆர்ப்பாட்டம்செய்து, உண்ணாவிரதமிருந்து வெள்ளையர்களை விரட்டியடித்தது. அந்த வெற்றியால் எழுச்சிபெற்றது. பல்வேறு கலாசார பிரிவினைகள், பலவிதமான மொழி வேறுபாடுகள், பலவிதமான சாதி பேதங்கள், பல்வேறு சமயங்களைப் பின்பற்றுகின்ற இந்தியா ஒரு பாரிய நாடு. அனைவருமே ஒன்றுசேர்ந்து வெள்ளையர்களை விரட்டியடித்தார்கள். சுபாஷ் சந்திரபோஸ், பட்டேல், காந்தியின் தலைமையில் ஒரு தேசமென்றவகையில் மக்களை ஒன்றிணைத்தார்கள். அந்த வெற்றியின் இறுதிப்பெறுபேறாக அவர்கள் தற்போது சந்திரனுக்குச் செல்கிறார்கள். எனினும் ஆறுமணிக்குப் பின்னர் எம்மால் சூரியவெவவிற்குப் போகமுடியாது.

ஒருசில நாடுகள் தோல்விக்குப் பின்னர் எழுச்சிபெற்றன. ஜப்பான் இரண்டாம் உலகமகா யுத்தத்தின்போது ஜேர்மனியின் பக்கமே இருந்தது. ஜேர்மனி தோல்வியடைந்தது. ஜப்பான் தோல்வியின் விளிம்பில் இருந்தது. அமெரிக்காவினால் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாக்கி மீது அணுக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மனித நாகரிகத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரமாண்டமான பேரவலம் அதுவாகும். இன்றும் அதன் திரிபடைந்த பெறுபேற்றினை அனுபவித்து வருகிறார்கள். ஜப்பான் தோல்வி கண்டது. எனினும் அந்த தோல்வியை அவர்கள் வெற்றியின் பாதையாக மாற்றிக்கொண்டார்கள். ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நாடாக மாற்ற அந்நாட்டின் தலைவர்களால் இயலுமாயிற்று.

எமக்கு அத்தகைய வெற்றிகரமான வரலாறு கிடையாது. 1818 இல் ஊவா வெல்லஸ்ஸ எழுச்சி, 1848 மாத்தளை எழுச்சி இடம்பெற்றது. மாத்தளை எழுச்சியின்போது புரன்அப்புவிற்கு பாதுகாப்பு வழங்கியது பன்சலவாகும். உணவு வழங்கியவர்கள் குடிமக்களே. வெற்றியை அடையமுடியவில்லை. இந்த எழுச்சியில் முன்னணி வகித்தவர்கள் நிலச்சுவாந்தர்களே. அதிகாரம் முதலிகளுக்கே கைமாறியது. கொழும்பு நகரத்தில் வீதிகளையும் கட்டிடங்களையும் நிர்மாணிக்கையில் அவற்றுக்கான மூலப்பொருட்களை வழங்கியதால் முன்னேற்றமடைந்தவர்களே முதலிமார். இந்த முதலிகளிடம் ஒரு நோக்கு இருக்கவில்லை. அதனால் எமக்கு புதிய தேசிய எழுச்சியொன்று இருக்கவில்லை. 1505 தொடக்கம் 1948 வரையான காலப்பபகுதிக்குள் எமது நாடு ஏதேனுமொரு மேலைத்தேய நாட்டுக்கு அடிமைப்பட்டிருந்தது. 1796 இல் இருந்து ஆங்கிலேயருக்கு கட்டுப்பட்ட நாடாக விளங்கியது. 1815 இல் இருந்து இங்கிலாந்திற்கு நேரடியாகவே கட்டுப்பட்ட நாடாக விளங்கியது. 1948 இல் எமக்கு சுதந்திரம் கிடைத்தது. எனினும் நாட்டில் தேசிய எழுச்சி இடம்பெறவில்லை. வெள்ளைக்காரனின் ஆட்சியிலிருந்து விடுபட்டோம். எனினும் நாட்டை உருப்படியாக்குவதற்கான எழுச்சி ஆட்சியாளர்களிடம் இருக்கவில்லை. 1949 குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்து பெருந்தோட்டத் தமிழ் மக்களை விரட்டியடித்தார்கள். 1956 இல் மொழியைக் குழப்பியடித்துக்கொண்டார்கள். 1958 இல் சிங்கள – முஸ்லீம் கலவரம் தோன்றியது. 1958 இறுதியளவில் ஸ்ரீ எழுத்தில் கறுப்பெண்ணெய் பூசத்தொடங்கினார்கள். 1970 இறுதியளவில் வடக்கில் ஆயுதமேந்திய இயக்கமொன்று உருவாகியது. 2009 வரை வடக்கில் ஆயதமேந்திய இயக்கம் தொடர்ந்தது. 2019 இல் குண்டு வெடித்தது. ஒரு தேசமென்றவகையில் எழுச்சிபெறுவதற்குப் பதிலாக இந்த தாய்நாட்டில் ஒரே இனக்குழுக்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். ஆட்சியாளன் தேசத்தினதும் மதத்தினதும் பாதுகாவலன் ஆகிறான். மக்கள் சண்டைபோட்டுக் கொள்கிறார்கள். தமிழ் மனிதனையும் முஸ்லீம் மனிதனையும் எமது பகைவனாக்கிக் கொண்டோம். இறுதியில் வடக்கிற்கும் தெற்கிற்கும் தோல்வியே. அதனால் நாங்கள் அடிமைப்பட்ட பெருமிதமற்ற தேசமாக மாறினோம். நாங்கள் அனைத்துப் பிரிவினைகளையும் ஒருபுறம் வைத்திடுவோம். நீங்கள் கட்சி, நிறங்களாகப் பிரிந்து மல்லுக்கட்டிக்கொண்டீர்கள். ஆட்சியாளன் சதாகாலமும் ஒன்றாக விருந்துபசாரங்கைளை நடாத்தினான். சாதி, கட்சி, இனத்தை ஒருபுறம் வைத்திடுவோம். ஊர்களை ஒன்றாக இணைத்திடுவோம். அது எதற்காக? திசைகாட்டியை வெற்றிபெறச் செய்வித்து அரசியல் மாற்றமொன்றை செய்வதற்காகவே.

” உணவில் நஞ்சு கலப்பது நல்லதல்ல” என எமது ஊர்களில் ஓர் அபிப்பிராயம் நிலவுகின்றது. எனினும் சுகாதார அமைச்சர்கள் மருந்தில் நஞ்சு கலக்கிறார்கள். ஒருசில வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இன்ஜெக்ஷனில் தண்ணீர் உள்ளதென்பது தற்போது வெளிப்பட்டுள்ளது. இன்ஜெக்ஷனில் மற்றுமொரு வகையான பங்கசு இருப்பதாக பிறிதொரு ஆராய்ச்சியில் தகவல்கள் வெளிப்பட்டுள்ளது. நாங்கள் வாங்குகின்ற மருந்துகளிலிருந்து நாங்கள் நோய்களை பெற்றுக்கொள்கிறோம். அப்படிப்பட்ட ஆட்சியாளர்கள் இலங்கையில் எமக்கு கிடைப்பார்களென நீங்கள் நினைத்தீர்களா? மருந்துமாத்திரையில் இருந்தும் திருடுகின்ற ஆட்சியாளர்கள். இந்த ஆட்சியாளர்களை விரட்டியடித்து அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்வதுடன் நின்றுவிட மாட்டாது. இது மாற்றியமைப்பதற்கான ஆரம்பமே. ஆட்சியாளர்களை விரட்டியடித்து அதிகாரத்தைக் கையகப்படுத்திக்கொள்ளும் ஆரம்பத்துடனேயே வேலையைத் தொடங்கவேண்டும். இரண்டாவதாக இருப்பது இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதாகும்.

முதலில் நாங்கள் குடிமக்களுக்கு அவசியமானவற்றுக்கு உத்தரவாதமளிப்போம். உணவு பானவகைகள், கல்வி, சுகாதார வசதிகளை நாங்கள் கொடுப்போம். நீங்களும் நாங்களும் சேர்ந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம். கமக்காரன் வயலுக்குச் செல்வதும் மீனவன் கடலுக்குச் செல்வதும் தமக்கு மாத்திரம் தனிப்பட்டமுறையில் எதையேனும் எதிர்பார்த்தல்ல: நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற நோக்கத்துடனாகும். ஒரு பிள்ளை கல்வி கற்பது தனக்கு மாத்திரம் தனிப்பட்டமுறையில் எதையேனும் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரமல்ல: ஒரு நாடு என்றவகையில் முன்நோக்கி நகரும் நோக்கத்துடனாகும். விளையாட்டு வீரன் கிரிக்கெற் அடிப்பது ஐ.பி.எல். அடிப்பதை மாத்திரம் பார்த்துக்கொண்டல்ல. நாட்டுக்கு புகழையும் பெருமையையும் கொண்டுவருவேன் எனும் நோக்கத்துடனேயே. இளைஞன் புதிய கண்டுபிடிப்பில் ஈடுபடுவது தனக்கு புகழ் தேடுவதற்காக மத்திரமல்ல: தேசத்தைக் கட்டியெழுப்புகின்ற நோக்கத்துடனேயே. அரசியல்வாதி நாட்டை ஆட்சிசெய்வது தமக்கு எதையேனும் ஈட்டிக்கொள்ளும் நோக்கத்துடனல்ல: இந்த நாட்டைக் கீர்த்திமிக்க நாடாக மாற்றுகின்ற நோக்கத்துடனாகும். நாங்கள் அனைவரும் ஒரே நோக்கத்துடன் மல்லுக்கட்டினால் இந்த நாட்டைக் கட்டியெழுப்பமுடியும். “கடலில் விரிக்கின்ற மீன் வலையைப்போல் ஒரே தெம்புடன் இழுத்து பாரிய அறுவடையை கரைக்கு இழுப்பதைப்போல்” நாமனைவரும் ஒரே மூச்சில் உழைத்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம்.
சனாதிபதிக்கு ஆயிரக்கணக்கில் பாதுகாவலர்கள் இருக்கிறார்கள். கிராமத்துப் பொலீஸில் பத்து பொலீஸ்காரர்கள் இல்லை. சனாதிபதியின் பாதுகாப்புச் சேவையைக் கலைத்து கிராமத்தில் இருக்கின்ற பொலீஸுக்க அனுப்பிவையுங்கள். சனாதிபதியை உள்ளிட்ட கொள்ளைக்கார வளையத்திடம் இருப்பது இந்த நாட்டுக்கு கட்டுப்படியாகாத, ஒரு லீற்றர் பெற்றோலுக்கு மூன்று கிலோமீற்றர் ஓடுகின்ற வாகனங்களாகும். ரணில் விக்கிரமசிங்க பாவிக்கின்ற வாகனம் 3000 இலட்சமாகும். நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற நிர்மாணிப்புகள் வெளிப்படைத்தன்மை கொண்டவையாக இடம்பெறுவதை நாங்கள் வெளிக்காட்டுவோம். மக்களின் பணம் ஒருசதம்கூட திருடப்படமாட்டாதென்பதை நாங்கள் நிரூபித்துக்காட்டுவோம். மக்கள் வெளிக்காட்டுகின்ற அந்த எடுத்துக்காட்டுடன் வேலைசெய்ய முன்வரவேண்டும். எமது வாழ்க்கைக்கு கொடுத்திருப்பது மூர்க்கத்தனமானதும் அழிவுமிக்கதுமான அனுபவங்களாகும். நாங்கள் இவற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வோம். தாய்மார்கள், அக்காமார்கள், தங்கைமார்கள், மகள்மார்கள் ஆகிய உங்களால் இந்த சமூகத்தை உறங்குநிலைக்கு கொண்டுசெல்ல முடியும். இந்த சமூகத்தை தட்டி விழித்தெழச் செய்விக்கவும் முடியும். நாங்கள் திசெம்பரில் பெண்களின் பாரிய மாநாடுகளை நடாத்தத் தொடங்கினோம். அதன் பெறுபேறாக கட்சிக்கும் புதிய வலிமை கொண்டுவரப்பட்டது. சமூகத்திற்கும் புதிய எதிர்பார்ப்பு கொண்டுவரப்பட்டது. அந்த தட்டியெழுப்புவதை செய்தவர்கள் நீங்களே. இந்த நாட்டை விழித்தெழச் செய்விக்கின்ற புதிய மறுமலர்ச்சி யுகத்தின் ஆரம்பத்திற்காக முன்னணிக்கு வருவோம்.

Show More

“கொள்ளைக்கார வளையத்திற்கு எதிரான புதிய தேசிய எழுச்சியொன்று அவசியமாகும்” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

-தேசிய மக்கள் சக்தி கண்டி தொகுதி மாநாடு – 2024.01.13- இந்த கண்டி மாவட்டம் சிலகாலமாக எங்களுக்க நல்ல மாவட்டமாக அமையவில்லை. கண்டி மாவட்டத்தில் நிலவிய பின்னடைவினை நாங்கள் எவ்வாறு மாற்றியமைப்பது எனும் உரையாடல் எமது கட்சிக்குள் நிலவியது. அந்த நேரத்தில் தோழர் லால் அப்படியானால் நான் கண்டிக்குப் போகிறேன் எனக் கூறினார். தோழர் லால்காந்தவும் எமது நிறைவேற்றுப் பேரவையைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற தோழர்களும் ஒன்றுசேர்ந்து தேசிய மக்கள் சக்தியின் வெற்றிகரமான மாவட்டமாக கண்டி மாவட்டத்தை மாற்றியமைத்துள்ளார்கள். […]

-தேசிய மக்கள் சக்தி கண்டி தொகுதி மாநாடு – 2024.01.13-

இந்த கண்டி மாவட்டம் சிலகாலமாக எங்களுக்க நல்ல மாவட்டமாக அமையவில்லை. கண்டி மாவட்டத்தில் நிலவிய பின்னடைவினை நாங்கள் எவ்வாறு மாற்றியமைப்பது எனும் உரையாடல் எமது கட்சிக்குள் நிலவியது. அந்த நேரத்தில் தோழர் லால் அப்படியானால் நான் கண்டிக்குப் போகிறேன் எனக் கூறினார். தோழர் லால்காந்தவும் எமது நிறைவேற்றுப் பேரவையைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற தோழர்களும் ஒன்றுசேர்ந்து தேசிய மக்கள் சக்தியின் வெற்றிகரமான மாவட்டமாக கண்டி மாவட்டத்தை மாற்றியமைத்துள்ளார்கள். இன்று நாங்கள் நடாத்துவது கண்டி மாவட்டத்தின் தொகுதி மாநாட்டினை ஆகும். அதற்கு முன்னர் நாங்கள் இந்த இடத்தில் கண்டி மாவட்டக் கூட்டத்தை நடாத்தினோம். அண்மைக்கால வரலாற்றில் கண்டியில் நாம் நடாத்திய பிரதானமான கூட்டமாக இது மாறியுள்ளது. முன்னர் எமது மன்னர்கள் மக்களின்மனக்குறைகளைக் கண்டறிய மாறுவேடம் தரித்து வருவார்களாம். அண்மைக்காலத்தில் இருந்த எமது மன்னர்கள் சுகம்தேடி மாறுவேடம் தரித்து கப்பலில் ஏறியவிதம் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது.

எமது நாடு படுமோசமான பேரிடரைச் சந்தித்துள்ளது. நாங்கள் பொருளாதாரத்தின் வீழ்ச்சி பற்றியே பெரும்பாலும் கலந்துரையாடுகிறோம். நீண்டகாலமாக எமது நாட்டை ஆட்சிசெய்த ஆட்சியாளர்களுக்கு நாடு பற்றிய நோக்கு இருக்கவில்லை. நாடு இருப்பது எங்கே? நாட்டில் நிலவுகின்ற சாத்தியவளங்கள் யாவை? உலகில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்கள் என்ன? அதற்கு நேரொத்தாக அமையத்தக்கவகையில் எமது சிந்தனை, நோக்கு எவ்வாறானதாக அமையவேண்டுமென்பது பற்றிய நோக்கு எமது ஆட்சியாளர்களுக்கு இருக்கவில்லை. அதன் விளைவாக இன்று பொருளாதாரத்தின் அடித்தளத்திற்கே வீழ்ந்துவிட்ட நாடாக மாறியுள்ளது.

வரவு செலவு ஆவணத்தைப் பார்த்தால் அரசாங்கம் எதிர்பார்க்கின்ற வருமானம் 4164 பில்லியன் ரூபாவாகும். 2023 ஆம் ஆண்டைப் பார்க்கிலும் மேலதிகமாக ஏறக்குறைய 1300 பில்லியன் ரூபாவை அரசாங்கம் தேடிக்கொள்ள வேண்டும். பொருளாதாரம் வளர்ச்சியடைந்தாலேயே அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கும். அதில் ஒரு பகுதி அரசாங்கத்திற்கு வருகின்றது. இந்த அரசாங்கம் புதிதாக 1300 பில்லியன் ரூபாவை தேடிக்கொள்ள முயற்சி செய்வது பொருளாதாரத்தைப் பெருப்பித்தா? இல்லை. 2019 ஆம் ஆண்டின் பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கு இணையான பண்டங்களினதும் சேவைகளினதும் உற்பத்தி 2029 ஆம் ஆண்டிலேயே கிடைக்குமென ரணில் விக்கிரமசிங்க கூறினார். எனினும் 2023 இல் இருந்த வரி அளவு 25% ஐ விட அதிகரிக்கப்பட்டுள்ளது. எமது நாட்டுக்கு வற் வரி அறிமுகஞ் செய்யப்பட்டு 21 வருடங்களாகின்றது. இதுவரை காலமும் பல்வேறு துறைகளுக்கு (138 பண்டங்கள்) வற் வரி விலக்களிக்கப்பட்டிருந்தது. அந்த துறைகள் மக்கள் வாழ்க்கையுடன் மிகவும் நெருங்கிய, பொருளாதாரத்துடன் மிகவும் நெருக்கமான துறைகளாகும். உதாரணமாக பாடசாலைப் புத்தகங்களுக்கும் உபகரணங்களுக்கும் வற் வரி விதிக்கப்படவில்லை. பிள்ளைக்கு கற்பிப்பதும் பாடசாலைப் புத்தகம், உபகரணங்கள் கொன்வனவு செய்வதும் வற் வரிக்கு இலக்காக்கப்பட வேண்டுமா? சனவரி மாதத்தில் இருந்து அந்த பொருட்களுக்கும் வற் வரி சேர்கின்றது. வரி விலக்களிக்கப்பட்டிருந்த சுகாதார சாதனங்கள், மருந்து உற்பத்திக்காக பயன்படுத்துகின்ற மூலப்பொருட்கள், அரசி, அரிசி மா, பால், யோகற் போன்ற உணவுப் பொருட்கள், டீசல் என்பவற்றின் விலைகள் அதிகரித்து பொருளாரத்தில் பாதக விளைவுகள் ஏற்படும். இந்த வற் வரியை உள்ளிட்ட வருமானத்தில் இருந்து 4164 பில்லியன் ரூபாவை எதிர்பார்க்கிறார்கள். எனினும் அரசாங்கம் எடுத்துள்ள கடன்களின் தவணைகள், அவ்வாறு பெறப்பட்டுள்ள கடன்களுக்கான வட்டி இவையனைத்தையும் சேர்த்தால் அரசாங்கத்தின் செலவினம் 11,277 பில்லியன் ரூபாவாகும். திறைசேரிக்கு வருவதோ 4164 பில்லியன் ரூபாவாகும். வீழச்சியடைந்த, வங்குரோத்து நிலையுற்ற நாடே இதன்மூலமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த பொருளாதார நெருக்கடி சமூக வாழ்க்கைக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. வாழ்க்கையை சீரழிக்கின்றது. அண்மையில் மத்திய வங்கியிடமிருந்து அறிக்கையொன்று வந்தது. சனத்தொகையில் 68% ஒன்றில் உணவு வேளைகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறார்கள் அல்லது மூன்றுவேளையும் உணவின் அளவைக் குறைத்துள்ளார்கள் என அந்த அறிக்கையில் கூறப்படுகின்றது. இல்லாவிட்டால் மூன்றுவேளையும் விருப்பமற்ற உணவினை உண்கிறார்கள். புள்ளிவிபரவியல் திணைக்களம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் பிள்ளைகளில் 54% பாடசலைப் பத்தகங்களையும் உபகரணங்களையும் கொள்வனவு செய்வதை நிறுத்திவிட்டார்கள். அல்லது குறைத்துவிட்டார்கள். உயிர்கள் மடிய இடமளிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளில் 19% பிரத்தியேக போதனா வகுப்புகளுக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்கள்.
தேசிய கல்வி, சுகாதாரம், உணவு போன்றவற்றைச் சீரழித்து மக்களின் வாழக்கைத்தரத்தை தவிடுபொடியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து அரசாங்க நிறுவனங்களும் நிருவாகக் கட்டமைப்புகளும் அழிந்துவிட்டன.ஒருவருடகாலமாக நிரந்தர பொலீஸ் மா அதிபரொருவர் இல்லை. பொலீஸின் மிகவும் உயர்ந்த மட்டத்தில் இருக்கின்ற ஐவருக்கும் எதிராக வழக்குகள். எமது அமைதியைப் பாதுகாத்திட இருப்பவர்கள்மீது வழக்கு. இந்த நிறுவனங்கள் சீரழிந்துவிட்டன. ” எம்மிடமுள்ள வளம் வெளிநாட்டு ஒதுக்கங்களும் பலம்பொருந்திய பகிரங்க சேவையுமே” என அண்மையில் சிங்கப்பூர் பிரதமர் கூறினார். எமது நிறுவனங்கள் அனைத்துமே முறைப்படி இயங்காத நிலைமைக்கு அரச நிறுவன முறைமை சீரழிந்துள்ளது.

உலகம் ஏற்றுக்கொள்ளாத நாடாக எமது நாடு மாறியுள்ளது. நாடு வங்குரோத்து அடைந்துவிட்டது. அவ்வாறான தருணத்தில் சனாதிபதி மிகநீண்ட வெளிநாட்டு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த வருடத்தின் ஒற்றோபர் மாதத்தில் இந்நாட்டு இதனை மக்கள் சனாதிபதியின் இறுதி விஜயமாக மாற்றுவார்கள். உலகின் அபகீர்த்திக்குள்ளான நாடாக எமது நாடு மாற்றப்பட்டுவிட்டது. கொரியா தூதரகத்திற்கு வீசா அப்ளிகேஷனை ஒப்படைக்க ஆறுமாதங்கள் எடுக்கின்றது. உலகின் முன்னால் சீரழிந்த நாடாக மாறிவிட்டது. அதுமாத்திரமல்ல அரசியலும் முற்றாகவே சீரழிந்துவிட்டது. அயோக்கியர்கள், திருடர்கள், ஊழல்பேர்வழிகள் நாட்டை ஆட்சிசெய்துகொண்டிருக்கிறார்கள். நாட்டின் சமூகத்தில் மனிதம் சீரழிந்துள்ளது. கண்டி சந்தையில் தான் கொடுத்த பணத்திற்கான வட்டியை செலுத்தாமையால் ஒருவரின் இரண்டு கைகளையும் வெட்டிச்சென்றார்கள். அவர் தேர்தலில் போட்டியிட்டார். கண்டி மக்கள் அவரை நகரசபை உறுப்பினராக்கினார்கள். 2020 ஒற்றோபர் மாதத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஒற்றோபர் 01 ஆந் திகதி சொக்கா மல்லீ 202 ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்தமைக்காக மேல்நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர். 05 ஆந் திகதி நடைபெற்ற தேர்தலில் அவர் வாக்குகளில் முதலிடம் பெற்றார். இந்த சமூகம் எங்கே இருக்கின்றது? இது ஒரு பிரச்சினையில்லையா? கண்டி உடதலவின்ன மனிதப்படுகொலையுடன் தொடர்புபட்டவரென, மேல்நீதிமன்றத்தில் பல வருடங்களாக வழக்கு விசாரிக்கப்பட்டுவந்த, விளக்கமறியலில் இருந்தவர் பாராளுமன்ற உறுப்பினராகிறார். அமைச்சர் பதவியை வகிக்கிறார், இரவில் கைத்துப்பாக்கிகளை சுழற்றிக்கொண்டு சிறைக்கைதிகளின் மண்டையில் வைக்கிறார்.

நெருக்கடி நிலவுவது பொருளாதாரத்தில், அரசியலில், மக்கள் வாழ்க்கையில் மாத்திரமல்ல. மக்களின் சிந்தனைப்போக்கிலும் பிரச்சினையொன்று சமூகத்தில் நிலவுகின்றது. கடந்த காலத்தில் பாராளுமன்றத்திற்கு வெற்றிக்கிண்ணம் ஏந்தி வந்தவர்கள் யார்? குருநாகலில் இருந்து ஜோன்ஸ்ரன், கண்டியில் இருந்து மகிந்தானந்த, இரத்தினபுரியில் இருந்து சொக்கா மல்லி, களுத்துறையில் இருந்து றோஹித அபொகுணவர்தன, கம்பறாவில் இருந்து பிரசன்ன ரணதுங்க, அநுராதபுரத்தில் இருந்து எஸ்.எம். சந்திரசேன. இவர்கள் மக்களின் வாக்குகள் மூலமாகவே வந்தார்கள். இந்த நாட்டு மக்களின் சிந்தனைப் போக்குகள் சீரழிந்துள்ளன. அழிவடைந்த பெருநகரமாக மாறிய ஒரு நாடே எம் கண்ணெதிரில் இருக்கின்றது. நாம் தெரிவுசெய்யவேண்டிய இரண்டு பாதைகள் இருக்கின்றன. இந்த பயணப்பாதையில் பயணித்து நாங்கள் ஒன்றாக மடிவதா? அல்லது ஒன்றாக எழுச்சி பெறுவதா?

நாங்கள் ஒன்றாக எழுச்சி பெறுவோம் என்கின்ற பிரேரணையை முன்வைக்கவே நாங்கள் கண்டிக்கு வந்தோம். இந்தியா ஒருகாலத்தில் பிரித்தானிய ஏகாதிபதியவாதிகளுக்கு கட்டுப்பட்டு, பாரிய சாதிவேற்றுமைகள், பல்வேறு கலாசாரங்கள் நிலவிய, பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற, பாரிய நிலப்பரப்பு காணப்பட்ட நாடு. ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக ஒன்றுசேர அதன் தேசிய தலைவர்களால் இயலுமாயிற்று. நேரு. பட்டேல், காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் ஒன்றுசேர்ந்து தேசிய இயக்கமொன்றைக் கட்டியெழுப்பினார்கள். அந்த தேசிய இயக்கம் ஆரம்பத் தருணத்திலேயே இந்தியா எந்த திசையை நோக்கிப் பயணிக்கவேண்டுமென்ற திட்டத்தை முன்வைத்தார்கள். அவர்களிடம் சுதந்திரப் போராட்டமொன்று, சிந்தனையொன்று மற்றும் நோக்கு இருந்தது. பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் போன பின்னர் பெற்றுக்கொண்ட அந்த வெற்றியின் பாய்ச்சல் எத்தகையது எனக்கூறுவதாயின் இன்று இந்தியாவினால் சந்திரனுக்குச்செல்ல இயலுமாயிற்று. உலகின் ஐந்தாவது பொருளாதாரத்திற்கு உரிமை பாராட்டுகின்றது. அங்கு ஆட்சியில் பிரச்சினையொன்று இருக்கின்றது. ஆனால் அனைத்துப் பேதங்களையும் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு தேசத்தை ஒன்றாக மலரச்செய்விக்க இயலுமாயிற்று.

ஜப்பான் இரண்டாவது உலகமகா யுத்தத்தின்போது பகைவர் தரப்பினரையே பிரதிநிதித்துவம் செய்தது. 1945 இல் ஹிட்லர் தற்கொலை செய்துகொள்கிறார். ஜேர்மனி அடிபணிகின்றது. இரண்டாவது உலகமகா யுத்தம் முடிவடைந்து வந்துகொண்டிருந்தது. அமெரிக்கா கண்டுபிடித்திருந்த அணுக்குண்டினை ஜப்பான்மீது போட்டு ஹிரோஷிமா மற்றும் நாகசாக்கியில் பாரிய மனிதப்படுகொலையைச் செய்தது. உலகில் இடம்பெற்ற மிகப்பெரிய மனிதப்படுகொலை. பேரழிவுக்கு இலக்காகிய நாடாக்கப்பட்டது. அந்த சீரழிவினை ஜப்பான் மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டுவந்தது. ஆசியாவில் உள்ள தொழில்நுட்பம்நிறைந்த பிரமாண்டமான நாடாக மாற்றுவதற்கான நோக்கு அந்நாட்டின் தலைவர்களிடம் இருந்தது.

ஐக்கிய அமெரிக்காவிற்கும் அவ்வாறான சுதந்திரப் போராட்டமொன்று இருந்தது. ஆயிரத்து எழுநூற்றி எழுபதுகளில் பிரித்தானியாவிற்கு எதிரான போராட்டமொன்று நிலவியது. அந்த சுதந்திரப் போராட்டத்தின் மலர்ச்சி காரணமாக இன்று ஐக்கிய அமெரிக்கா பிரமாண்டமான பொருளாதாரம் உரித்தான நாடாக மாறியுள்ளது. வியட்நாமிற்கு சீனாவிற்கு சுதந்திரப் போராட்டமொன்று இருந்தது. உலகின் பெரும்பாலான நாடுகள் மக்களின் ஒருங்கிணைப்புடன் ஒரு கருத்தின்பால் கொண்டுவந்து புதிய மலர்ச்சியை எற்படுத்திக்கொண்டன.
நாங்கள் 450 வருடங்களாக மேழைத்தேய நாடுகளின் நேரடியான தாக்கத்திற்கு கட்டுப்பட்டிருந்தோம். 150 வருடங்கள் வெள்ளைக்காரர்களுக்கு கட்டுப்பட்டிருந்தோம். 133 வருடங்கள் வெள்ளைக்காரனின் நேரடியான ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டிருந்தோம். 1818 இலும் 1848 இலும் இரண்டு சுதந்திரப் போராட்டங்கள் உருவாகின. 1815 இல் இருந்து 1948 வரை வெள்ளைக்காரர்கள் எம்மை ஆட்சிசெய்தார்கள். எமக்கு தேசிய இயக்கமொன்று இருக்கவில்லை. தேசிய இணக்கப்பாட்டுக்கு கொண்டுவருவதில் ஆட்சியாளர்கள் வெற்றிபெறவில்லை. எமது தலைவர்கள் அவர்களில் தங்கிவாழும் தலைவர்களாக மாறினார்கள். 1949 இல் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்து பெருந்தோட்ட மக்களை விரட்டினார்கள். அவ்வேளையிலேயே செல்வநாயகம் தமிழ் அரசுக் கட்சியை அமைக்கிறார். அந்த சிந்தனை பாரிய பிரிவினைவாதம் வரை வளர்ச்சியடைகின்றது. 1956 இல் மொழிப் பிரச்சினையொன்றை குழப்பியடித்துக் கொள்கிறார்கள். 1958 இல் சிங்கள – முஸ்லீம் கலவரம் ஏற்படுகின்றது. பிரித்தானியர்கள் சென்றபின்னர்கூட எம்மால் தேசிய ஒருமைப்பாட்டினை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. நாட்டை முன்நோக்கி நகர்த்துவதற்கான நோக்கிற்கு கொண்டுவரமுடியவில்லை. எமது தலைவர்கள் வரலாற்று மகிமையின் இடிபாடுகளில் தங்கிவாழத் தொடங்கினார்கள். இருபதாம் நூற்றாண்டில் வரலாற்றினை மீள்உச்சரித்துக்கொண்டு வசித்தார்கள். இருபதாம் நூற்றாண்டு உலகில் பிரமாண்டமான மாற்றங்கள் இடம்பெற்ற காலப்பகுதியாகும்.
மனிதத் தேவைகள் பிரமாண்டமாக மாறப்போவதில்லை. அன்றும் உண்டோம், இன்றும் உண்கிறோம். அன்றும் வேட்டையாடி மாமிசம் புசித்தோம், இன்று சுப்பர் மார்க்கெற்றிலிருந்து கொண்டுவந்து இறைச்சி சாப்பிடுகிறோம். அன்று புறா மூலமாக செய்திகளை அனுப்பினோம். இன்று செய்திகளை ஸ்மார்ட் போன் மூலமாக அனுப்புகிறோம். அன்று மாட்டு வண்டியில் சென்ற பயணத்தை இன்று சிறந்த வாகனத்தில் செல்கிறோம். அன்றுபோல் இன்றும் அவசியப்பாடுகளை ஈடேற்றிக்கொள்கிறோம். மக்கள் தமது அவசியப்பாடுகளை மாற்றியமைத்துக் கொள்கின்ற விதத்திற்கிணங்கவே உலகில் புதிய சந்தைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. உலகில் மனித அவசியப்பாடுகளின் பாணி மாற்றமடைகையில் அதற்கு அவசியமானவகையில் பண்டங்களினதும் சேவைகளினதும் சந்தையை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும்.
இன்று கொரியா அழகுசாதனக்கலையில், பிரமாண்டமான சம்சுங் ஸ்மார்ற் போன் உற்பத்தியில், இரசனையைத் தேடுபவர்களுக்கு புதுவிதத்திலான கே பொப் இசையில், திரைப்படக் கைத்தொழிலில் ஜாம்பவானாக மாறியுள்ளது. வருடமொன்றிற்கான கொரியாவின் ஏற்றுமதி வருமானம் 685 பில்லியன் டொலராக மாறியுள்ளது.

1918 இல் திரு. விமலசுரேந்திர லக்ஷபான மின்நிலையத்தை முன்மொழிகிறார். லக்ஷபான மின்நிலயத்தின் மேலதிக மின்சாரத்தைக்கொண்டு மின்சார ரயிலை ஓடச்செய்விப்பதே அவரது முன்மொழிவில் இருந்தது. அந்த பாரிய உரையாடல் கீழடக்கப்பட்டு பழைய, நோக்கற்ற அரசியல் அதிகாரிகள் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள். அன்றும் இன்றும் எமது நாட்டின் பொருளாதாரம் தேயிலை, இரப்பர், தெங்கிலேயே தங்கியுள்ளது. எமது தலைவர்களின் நோக்கும் தேயிலை, இரப்பர், தெங்கு அளவிற்கே பழைமை வாயந்தது. அதனால் எமது ஆட்சியாளர்கள் இருபதாம் நூற்றாண்டினை கைவிட்டார்கள். அதைப்போலவே சாதிபேதம், இனவாதத்தை இன்னமும் தூண்டுகிறார்கள். உலகம் பாய்ச்சலுடன் முன்நோக்கி நகர்கின்றது. புதிய சிந்தனையின்பால் புதிய நோக்கின்பால் இலங்கையை அழைத்துச்செல்ல வேண்டும். பழைய, தோல்விகண்ட, பழங்குடித்தன்மைகொண்ட இந்த தலைவர்கள் பரம்பரையிலிருந்து நாட்டை விடுவித்துக்கொள்ள வேண்டும். எமது நாட்டில் புதிய யுகமாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டும். இந்த கொள்ளைக்கார கும்பலுக்கு எதிராக புதிய தேசிய எழுச்சியொன்று எமக்குத் தேவை.

இந்த தேசிய எழுச்சியுடன் ஒன்றுசேருமாறு நாங்கள் யாழ்ப்பாண பிரசைகளையும் அழைக்கிறோம். நாங்கள் கட்சிகளாக, சாதிகளாக, இனங்களாக பிரிந்து இருப்பதால் பலனில்லை. பிள்ளைக்கு சாப்பாடு இல்லாவிட்டால் வைத்தியசாலையில் மருந்து இல்லாவிட்டால், மருத்துவர் கைவிட்டுச்செல்வாராயின், கைத்தொழில் முறைமை சீரழியுமாயின், வரிமேல் வரி விதிக்கப்படுமாயின் கட்சிகளாக, சாதிகளாக, இனங்களாக பிரிந்திருப்பதில் என்ன பயன்? தேசிய மக்கள் சக்தி ஊடாக இந்த நாட்டில் புதிய மலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். பாரிய படுகுழிக்குள் வீழ்ந்துள்ள நாட்டை மீட்டெடுத்திட பிரயத்தனம்செய்கின்ற தேசிய மலர்ச்சியை நாங்கள் ஏற்படுத்துவோம்.
முதலிடம் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதாகும். அதற்கான வாய்ப்புதான் விரைவில் வரப்போகின்ற சனாதிபதி தேர்தல். அதனை வெற்றிகொள்வதுதான் எமது கண்ணெதிரில் இருக்கின்றது. அருகில் வருகின்ற தேர்தல். அந்த வெற்றிதான் எமது அத்தியாவசியமான ஆரம்பம். பிரசைக்கு உணவு, பிள்ளைகளுக்கு கல்வி, பிரசைகளுக்கு சுகாதாரம் என்பவற்றை நாங்கள் தொடக்கநிலையென்பதை உறுதிப்படுத்துகிறோம். பின்னர் நீண்ட அரசியல், பொருளாதார மாற்றத்திற்கு இந்த நாட்டை மாற்றியமைத்திட வேண்டும். எம்மிடமுள்ள சாத்தியவளங்கள் யாவை? உலகில் உள்ள மாற்றங்கள் என்ன? அதற்கு நேரொத்தாக அமையத்தக்கவகைகயில் புதிய சிந்தனையொன்றை புதிய நோக்கினை நிர்மாணிக்க வேண்டும். விமலசுரேந்திர போன்ற மாபெரும் ஆராய்ச்சியாளர்கள், மாபெரும் விஞ்ஞானிகள் நமது நாட்டில் இருக்கிறார்கள். புதிய சாதனங்களைக் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த ஆட்சியாளர்களுக்கு அவை பலனற்றவை. இந்த விஞ்ஞானிகளை ஆராய்ச்சியாளர்களை பாரிய முன்னணிக்கு கொண்டுவருவதற்கான அடிப்படைத் திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம். சிந்தனைகளைத் தட்டியெழுப்பிட லியனகே அமரகீர்த்தி போன்ற இலக்கியவாதிகள், ரொட்னி வர்ணகுலசேகர போன்ற கலைஞர்கள் இந்த புத்தெழுச்சிக்கு அவசியமானவற்றை எழுத, கூற, பாட வேண்டியுள்ளது. எமது ஆராய்ச்சியாளர்கள் புதிய திசைக்கு அவசியமான ஆராய்ச்சிகளை மெற்கொள்ள வேண்டும். பன்னாட்கலங்களை கடலுக்கு அனுப்பிவைக்க அவசியமான திட்டங்களை வகுத்திட வேண்டும். 1183 கைத்தொழில்கள் சீரழிந்தள்ள நிலையில் சிறிய மற்றும் நடுத்தரஅளவிலான தொழில்முனைவோருக்கு புத்துயிரளிக்கவேண்டும். எமது இளைஞர் தலைமுறையினர் உலகின் புதிய அறிவினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தற்போதுள்ள எமது ஆரம்பக் கல்வியில் மாற்றமேற்பட வேண்டும். எமது ஆரம்பப் பட்டம் வரையுள்ள கல்வியை அடுத்த பட்டம் வரை விருத்திசெய்ய வேண்டும். அந்த இடத்தில்தான் ஆராய்ச்சிகள் இருக்கவேண்டும். உலகம் ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே முன்நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஐக்கிய அமெரிக்கா 2023 ஆம் ஆண்டில் தனது ஆராய்ச்சிகளுக்காக (ஆர்.என்.டீ) 523 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. எமது விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சு கவனியாமல் விடப்பட்ட அமைச்சாக மாறியுள்ளது. எமது ஆராய்ச்சிகளுக்காக 0.001 வீதமான பணத்தொகையே ஒதுக்கப்படுகின்றது. கல்வியில், விவசாயத்தில், இலக்கியக் கலையில், விஞ்ஞானத்தில் , தொழில்நுட்பத்தில் புதிய கட்டமொன்றை உள்ளிட்டதாக இவையனைத்தையும் சேர்த்துக்கொண்ட புதிய யுகமொன்று மறுமலர்ச்சியொன்று இலங்கையில் உருவாக்கப்படல் வேண்டும். எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது அரசியல் பணியல்ல: யுகப்பணியாகும். புதிய மறுமலர்ச்சியின் ஆரம்பம் ஈரமுள்ள, ஆன்மீகமுள்ள, ஒத்துணர்வுள்ள சமூகமாக மாற்றவேண்டும். இந்த அடிமைத்தனமான, அழிவுமிக்க யுகத்திற்கப் பதிலாக புதிய மறுமலர்ச்சி யுகமொன்றுக்கான தொடக்கத்தைப் பெற்றுக்கொள்ள இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். யுகமாற்றத்திற்கான அவசியமான வீறுநடை போடுவோம். தேசமொன்றின் ஒருமித்த தன்மை, தேசிய எழுச்சி, பிரமாண்டமான தேசிய இயக்கம், புதிய மறுமலர்ச்சி யுகம் என்பவற்றுக்காக நாமனைவரும் ஒருங்கிணைவோம்.

Show More