Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

இலங்கை வணிகப் பேரவைக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பு

-Colombo, January 31, 2024- இன்று (31) முற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இலங்கை வணிகப் பேரவையின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவை உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையின் வணிகத்துறை எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துவைத்தல் சம்பந்தமான தேசிய மக்கள் சக்தியின் கொள்கைரீதியான அணுகுமுறைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது. இலங்கை […]

-Colombo, January 31, 2024-

இன்று (31) முற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இலங்கை வணிகப் பேரவையின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவை உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையின் வணிகத்துறை எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துவைத்தல் சம்பந்தமான தேசிய மக்கள் சக்தியின் கொள்கைரீதியான அணுகுமுறைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இலங்கை வணிகப் பேரவையின் சார்பாக இந்த சந்திப்பில் அதன் தவிசாளர் ஏர்னஸ்ற் அன்ட் யங் நிறுவனத்தின் உள்நாட்டு முகாமைத்துவ பங்காளி துமிந்த ஹுலங்கமுவ, ஸ்டேன்டர்ட் அன்ட் சார்ட்டட் வங்கியின் பிங்குமால் தெவரதன்திரீ, டயலொக் ஆசியாட்டாவின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் சுபுன் வீரசிங்க, அட்வகாட்டா நிறுவனத்தின் தலைவர் முட்டாசா ஜெபர்ஜி ஆகியோரை உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டதோடு தேசிய மக்கள் சக்தியின் சார்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கே.டி. லால்காந்த, தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி ஆகிய தோழர்களை உள்ளிட்ட குழுவினரும் பங்கேற்றிருந்தனர்.

Show More

“தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பில் சேமிக்கப்பட்ட தேயிலைச் சபையின் நிதியத்தை அரசாங்கம் கொள்ளையடிக்கப் பார்க்கிறது.” -அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ்-

(ஊடகச் சந்திப்பு – பதுளை – 30.01.2024) தேயிலைச் சபையில் உள்ள நிதியத்தை பயன்படுத்தி உர மானியமாக 2000 ரூபாவை வழங்கவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருக்கிறார். இவ்வாறு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற உர மானியத் திட்டமானது சிறுதோட்ட உரிமையாளர்களையும், பெரிய பணக்காரர்களையும், குறிப்பாக தென்னிலங்கையில் உள்ள செல்வந்தர்களையும் போசிக்கும் நடவடிக்கையாகும். இது ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரமும் அதற்கான வியூகமும் ஆகும். தேயிலைச் சபையில் உள்ள நிதியம் ஒட்டுமொத்த தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பினால் சேமிக்கப்பட்டதாகும். இந்த […]

(ஊடகச் சந்திப்பு – பதுளை – 30.01.2024)

தேயிலைச் சபையில் உள்ள நிதியத்தை பயன்படுத்தி உர மானியமாக 2000 ரூபாவை வழங்கவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருக்கிறார். இவ்வாறு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற உர மானியத் திட்டமானது சிறுதோட்ட உரிமையாளர்களையும், பெரிய பணக்காரர்களையும், குறிப்பாக தென்னிலங்கையில் உள்ள செல்வந்தர்களையும் போசிக்கும் நடவடிக்கையாகும். இது ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரமும் அதற்கான வியூகமும் ஆகும்.

தேயிலைச் சபையில் உள்ள நிதியம் ஒட்டுமொத்த தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பினால் சேமிக்கப்பட்டதாகும். இந்த நிதியத்தை தமக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி கொள்ளையடிக்க எடுக்கப்படுகின்ற அரசாங்கத்தின் நடவடிக்கை பிற்போக்குத்தனமானதாகும். ஆகவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிதியத்தை பயன்படுத்தி நியாயமான வகையில் உர மானியத்தை வழங்குவதோடு, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூபா. 2000 ஆக அதிகரிக்கவும் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Show More

“எதிர்காலம் பற்றிய நலமான கனவினைக் கொண்டுவருகின்ற புதிய மக்கள் எழுச்சியொன்று அவசியம்” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(தேசிய மக்கள் சக்தியின் கழுத்துறை மாவட்ட பெண்கள் மாநாடு – 2024.01.28) செய்திகளைப் பார்த்தால் அவர்கள் எம்மைப்பற்றி கூறுகின்ற கதைகளையே காண்கிறோம். எமது ஆட்சியின்கீழ் நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதைக் கூறுபவர்களும் அவர்களே. சர்வதேச நாணய நிதியத்திலிருந்து வந்து எம்முடன் பேசிய விடயங்கள் பற்றிக் கூறுவதும் அவர்களே. அவர்களின் திகைப்பும் அச்சமும் இவை மூலமாக தெளிவாகின்றது. அதற்கு மேலதிகமாக அவதூறுகள், பொய்யான தகவல்கள், ஒருசிலரது அச்சுறுத்தல்கள் போன்ற பலவிடயங்கள் இருக்கின்றன. இன்று முதல் அவை மேலும் அதிகரிக்கும். […]

(தேசிய மக்கள் சக்தியின் கழுத்துறை மாவட்ட பெண்கள் மாநாடு – 2024.01.28)

செய்திகளைப் பார்த்தால் அவர்கள் எம்மைப்பற்றி கூறுகின்ற கதைகளையே காண்கிறோம். எமது ஆட்சியின்கீழ் நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதைக் கூறுபவர்களும் அவர்களே. சர்வதேச நாணய நிதியத்திலிருந்து வந்து எம்முடன் பேசிய விடயங்கள் பற்றிக் கூறுவதும் அவர்களே. அவர்களின் திகைப்பும் அச்சமும் இவை மூலமாக தெளிவாகின்றது. அதற்கு மேலதிகமாக அவதூறுகள், பொய்யான தகவல்கள், ஒருசிலரது அச்சுறுத்தல்கள் போன்ற பலவிடயங்கள் இருக்கின்றன. இன்று முதல் அவை மேலும் அதிகரிக்கும். கழுத்துறை மாவட்டத்தில் குழுமியுள்ள பெண்களின் பெருவெள்ளத்தை பார்க்கும்போது அவர்கள் மேலும் பீதியடைவார்கள், அவதூறாக பேசுவார்கள். எமது நாட்டில் மோசடியின் உச்சத்தை எட்டிப்பிடித்த, குற்றச்செயல்களின் பாதுகாவலர்களாக விளங்கிய, மக்களின் செல்வத்தை கோடிக்கணக்கில் சூறையாடிய, அதனோடு பின்னிப்பிணைந்த பாதாள உலகத்தை நிர்மாணித்த, அதனோடு ஒட்டிஉறவாடிய கொள்ளைக்கார வளையத்தை நிர்மாணித்த எமது நாட்டின் மூர்க்கத்தனமான பாசறைக்கு எதிராகவே நாங்கள் இந்த அரசியல் அணிதிரலை உருவாக்கி இருக்கிறோம். நாட்டை நாசமாக்கிய, மக்களை துன்பக் கடலில் அமிழ்த்திய, நாசகார பாசறைக்கு எதிராக நாங்கள் இந்த பாசறையை உருவாக்கி இருக்கிறோம். அதனால் அவர்கள் தாமாகவே அதிகாரத்தைக் கைவிடப்போவதில்லை. நாங்கள் தோல்வியடைந்த சந்தர்ப்பங்களில் அடுத்த நாளில் இருந்தே அரசியலில் ஈடுபட்டு வந்திருக்கிறோம். அவர்கள் தோல்வியுற்றால் அவர்கள் அனைத்தையுமே இழந்துவிடுவார்கள்.

அதனால் இறுதிவரை எமது முயற்சியை தோற்கடிக்க அவர்கள் செயலாற்றுவார்கள். சேரக்கூடிய எந்தவொரு வகையையும்சேர்ந்த அணியுடன் ஒன்றாக மேடையில் ஏறுவார்கள். ரணில் – மைத்திரி – சந்திரிக்கா கூட்டு வெகுவிரைவில் வெளிவரும். ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக குறைகூறியவர்கள்கூட அந்த அணியில் இணைந்துகொள்வார்கள். எழுந்துவருகின்ற முற்போக்கு மக்கள் இயக்கத்தை தோற்கடித்திட மேலும் சிலர் ஒரே மேடையில் இல்லாவிட்டாலும் இரண்டு மேடைகளில் இருந்துகொண்டு ஒரே வேலையை செய்யத் தொடங்குவார்கள். மக்களின், தாய்நாட்டின் பகைவர்கள் தமது ஒரேயொரு எதிரியாக தேசிய மக்கள் சக்தியை தெரிவுசெய்துள்ளார்கள். அந்த அனைத்துவிதமான அச்சுறுத்தல், குறைகூறல், பகைவனின் செயல்கள் எமக்கு மேலும் பலத்தையும் தெம்பினையும் நம்பிக்கையையும் தருகின்றது. இந்த வருடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் தயார். அதனைச் சாதிக்க முடியும். எமது நாட்டின் பெண்களை அரசியல்ரீதியில் முனைப்பற்றவர்களாக வைத்திருக்கவேண்டுமென அவர்கள் சதாகாலமும் சிந்தித்தார்கள். அதைப்போலவே பெண்களை ஏமாற்ற இயலுமென அவர்கள் நினைத்தார்கள். பெண்களை அரசியலில் செயலற்றவர்களாக்கி, பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு, பெருநிலத்தில் இருந்துகொண்டு பெண்களை ஏமாற்றமுடியுமென அவர்கள் நினைத்தார்கள். எனினும் தற்போது இலங்கை வரலாற்றிலும் தேர்தல் வரலாற்றிலும் பலம்பொருந்திய பெண்கள் எழுச்சி தேசிய மக்கள் சக்தி ஊடாக உருவாக்கப்பட்டுள்ளது.

விடாமுயற்சியுடன் வெற்றிவரை தமது செயற்பொறுப்பிற்கு தோள்கொடுப்போம் என்பதே எதிர்பார்ப்பினை சுமந்த இந்த முகங்களில் வெளிப்படுகின்றன. அதிகாரத்தை பரிமாற்றிக்கொள்ளும் தேர்தலொன்று இந்த வருடத்தில் கட்டாயமாக வரும். ஏழு எட்டு மாதங்களுக்கு கிட்டிய காலத்தில் கழிகின்ற மிகமுக்கியமான காலப்பகுதி பிறந்துள்ளது. முன்னொருபோதும் இருந்திராதவகையில் நாமனைவரும் செவிசாய்ப்போம். விழிப்படைவோம். முனைந்து செயலாற்றுவோம். உறுதியாகவே இந்த இந்த பணியை வெற்றியில் முடிக்க இயலும். நாங்கள் அரசியல் பலத்தைக் கைப்பற்றுவது இறுதியானதல்ல. இது நாட்டை மாற்றியமைப்பதன் தொடக்கமாகும். ஒட்டுமொத்த முறைமையும் சீர்குலைந்த ஒரு நாட்டில் ஓரிரு விடயங்களுக்கு தீர்வுகாண முடியாது. அனைத்து துறைகளையும் புதிய நோக்கங்களால் நிரப்பி மாற்றியமைத்திட வேண்டும். புதிய சமூக மாற்றமொன்று தேவை. அந்த மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வது ஒரு தனிமனிதனின் அல்லது அரசியல் கட்சியின் செயற்பொறுப்பு மாத்திரமல்ல. மக்கள் அனைவரும் ஒருவராக ஒரே மூச்சில் எழுந்துநின்று உறுதியான திடசங்கற்பத்துடன் செயலாற்ற வேண்டும். அதனால் மீளக் கட்டியெழுப்புதல் ஒட்டுமொத்த மக்களினதும் பணியாகும். அதற்காக அனைவரையும் விழிப்படையச்செய்து அனைவரும் செயற்படவேண்டும். முதலில் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு இரண்டாவதாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இடையீடுசெய்ய வேண்டும். அதற்கான புதிய தேசிய எழுச்சி எமக்குத் தேவை. எதிர்காலம் பற்றிய நலமான கனவைக் கொண்டுவருகின்ற புதிய மக்கள் எழுச்சியொன்று அவசியமாகும்.

மனிதர்களின் ஒத்துணர்வினை பிறருக்கு அறிவிக்கக்கூடிய கலைஞன், இலக்கியவாதி, பொறியியலாளன், கல்விமான், கமக்காரன், மீனவன் உள்ளிட்ட அனைவரதும் பிரதான பங்குதாரராக எமது நாட்டின் பெண்கள் மாறியுள்ளார்கள். சமூகத்தில் அனைவருமே பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்த அனைவரையும்விட பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த மாற்றத்தை ஏற்படுத்த நீங்கள் விழித்தெழுங்கள் என அழைப்புவிடுக்கவே நாங்கள் வந்திருக்கிறோம். சாதகமான எதிர்பார்ப்புக்களுடனேயே இதற்கு முன்னர் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்தீர்கள். எனினும் மேற்படி எதிர்பார்ப்புகளை முழுமையாகவே சிதைத்துவிட்ட ஆட்சியாளர்கள் அவர்களைச் சுற்றிக் குழுமியுள்ள சிறிய வளையத்திடம் அனைத்துச் செல்வங்கனையும் ஒன்றுதிரட்டி அவர்களின் எதிர்காலத்தை அமைத்துக் கொண்டார்கள். பொதுமக்களை ஏமாற்றி அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட அவர்கள் சதாகாலமும் சமூகத்தில் அனைத்துச் சிறப்புரிமைகளையும் அனுபவிக்கின்ற ஆட்சியைக் கட்டியெழுப்பினார்கள். பொதுமக்களின் ஆட்சியொன்றை நிறுவி அனைவரதும் இடையீட்டுடன் நாட்டைக் கட்டியழுப்பிடவே நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது எமது தொடக்கநிலையே என்பதை விளங்கிக்கொண்டு அனைவரும் முனைப்பாக செயலாற்ற ஒன்றுசேர்வோமாக.

Show More

“பொருளாதாரம், அரசியல், சமூகம் அனைத்தையுமே புதிய மாற்றத்திற்கு இலக்காக்குகின்ற அரசியல் அவசியமாகும் ” -அநுர குமார திசாநாயக்க-

-Colombo, January 27, 2024- வெறுமனே ஆட்சி மாற்றத்தினால் எந்தவிதமான பயனும் கிடையாதென்பதும், இந்த நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகம் ஆகிய அனைத்துப் பிரிவுகளையும் ஒரே பிடியில் எடுத்து மாற்றத்திற்கு இலக்காக்குகின்ற புதிய அரசியல் இயக்கமொன்று அவசியமெனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கூறினார். கடந்த 27 ஆந் திகதி மாத்தறையில் நடாத்தப்பட்ட மேற்படி மாவட்டத்தின் அதிட்டன (திடசங்கற்பம்) முப்படக் கூட்டமைவின் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அந்த மாநாட்டில் […]

-Colombo, January 27, 2024-

வெறுமனே ஆட்சி மாற்றத்தினால் எந்தவிதமான பயனும் கிடையாதென்பதும், இந்த நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகம் ஆகிய அனைத்துப் பிரிவுகளையும் ஒரே பிடியில் எடுத்து மாற்றத்திற்கு இலக்காக்குகின்ற புதிய அரசியல் இயக்கமொன்று அவசியமெனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கூறினார்.

கடந்த 27 ஆந் திகதி மாத்தறையில் நடாத்தப்பட்ட மேற்படி மாவட்டத்தின் அதிட்டன (திடசங்கற்பம்) முப்படக் கூட்டமைவின் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அந்த மாநாட்டில் அவர் தெரிவித்த கருத்துக்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

அரசியல் சூடுபிடித்துள்ளது. தேர்தல் அண்மித்திராதநிலையில் அரசியல் இவ்விதமாக சூடுபிடித்தமை இலங்கையில் ஒருபோதுமே நிலவவில்லை. அண்மைக்காலமாக இலங்கை மக்கள் அரசியல்ரீதியாக மிகவும் அதிகமாக விழிப்படைந்து வருகிறார்கள். விழிப்புணர்வடைந்த அரசியல் முனைப்புநிலையை அடைந்துவருகிறார்கள். இந்த வருடத்தின் ஒக்டோபர் மாதம் இறுதியளவில் எமது நாட்டில் இருப்பது புதிய அரசாங்கமாகும், புதிய ஆட்சியாகும். அந்த புதிய அரசாங்கத்தை, புதிய ஆட்சியை தேசிய மக்கள் சக்தியினுடையதாக மாற்றிக்கொள்ள நாமனைவரும் முனைப்பாக பங்களித்துள்ளோம். எமது நாடு பயங்கரமான யுத்தத்தில் ஈடுபட்டிருந்தவேளையில் தமது உயிரை உள்ளிட்ட அனைத்தையுமே அர்ப்பணித்து யுத்த முரண்பாட்டினை முடிவுக்கு கொண்டுவந்தாலும் அன்று நீங்கள் எதிர்பார்த்த சாதகமான நாடொன்றில் நன்றாக வசிக்கின்ற மக்கள் பற்றிய எதிர்பார்ப்பு முழுமையகவே சிதைக்கப்பட்டுவிட்டது. யுத்தம் நிலவிய காலத்தைப் பார்க்கிலும் சீர்குலைந்த, உயிர்வாழ்வது மிகவும் கடினமான மற்றும் உலகின் முன்னிலையில் அபகீர்த்திக்குள்ளான நாடாக விளங்குகின்றது. அந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவேண்டியது எம்மைால் கைவிடமுடியாத பொறுப்பாகும். இந்த நெருக்கடிகளை மட்டுப்படுத்தப்பட்ட ஒருசில விடயங்களுக்குள் முடக்கிவிட ஒருசிலர் எதிர்பார்க்கிறார்கள். பொருளாதாரரீதியாக வங்குரோத்து அடைந்துள்ளமை உண்மைதான். மக்களின் அத்தியாவசிய பண்டங்கள்மீது வரிவிதிக்கப்படுவது, தொழிலொன்றைத் தேடிக்கொள்ள இயலாதென்பது, கிடைக்கின்ற சம்பளத்தில் சீவிப்பது சிரமமமென்பது, நாட்டைவிட்டுச் செல்கின்ற நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதென்பது, பொருளாதாரரீதியாக வங்குரோத்து நிலையடைந்து உள்ளதென்பது போன்ற விடயங்கள் உண்மையே. எனினும் மறுபுறத்தில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து, குற்றச்செயல்கள் மலிந்து நிலவுகின்றன.

அண்மையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்து வெலிகம பொலீஸ் ஆளுகைப் பிரிவுக்கு வருகை தந்த ஒரு குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தர்கள். அவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர்கள்மீது வெலிகம பொலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். ஒரு பொலீஸ் உத்தியோகத்தர் இறந்து மற்றுமொருவர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். இறுதியில் கொழும்பு பொலீஸாரும் வெலிகம பொலீஸாரும் ஒருவர்மீது ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டார்கள். வழிப்பறிக்கொள்ளைக்காரன்போல் வீதியில் வாகனத்தை நிறுத்துமாறு கூறியவேளையில் நிறுத்தாமையால் நாரம்மல சாரதியை சுட்டுக்கொன்றார்கள். மதியபோசனம் உண்டுகொண்டிருந்த பிக்குவை சுட்டுக்கொன்றார்கள். பெலிஅத்தையில் ஐவரைக் கொலைசெய்தவர்கள் யாரென இன்னமும் தெரியாது. அனைவரதும் உயிர்கள் பாதுகாப்பற்ற அராஜகநிலை உருவாகி உள்ளது. 1993 காலத்திலும் இவ்வாறான நிலைமை காணப்பட்டு ஜனாதிபதி பிரேமதாசவின் படுகொலைக்குப் பின்னர் சற்று தணிந்தது. உங்களதும் எனதும் எம்மனைவரதும் உயிர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. பொருளாதாரம் சீரழிந்தது மாத்திரமல்ல மக்களின் உயிர்கள் பற்றிய பாதுகாப்பற்ற நிலைமையின்பேரில் ஆட்சிக்குவர சிலவேளைகளில் திட்டமிடுவதாகவும் இருக்கக்கூடும். இது அதிகாரத்திற்காக உயிர்த்தஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட ஒரு நாடு என்பதை மறந்துவிடலாகாது. எந்தவொரு பிரஜைக்கும் அரசாங்க அலுவலகமொன்றில் இருந்து பணிகளை மேற்கொள்ளமுடியாத சீரழிந்த அரச சேவையே காணப்படுகின்றது.
பொலீஸ் மா அதிபரொருவரை நியமித்துக்கொள்ள முடியாமல் பதிற்கடமையாற்றுவதற்காக நியமித்த கெரட் கிழங்கினைக் காட்டிக்காட்டி தமக்குத் தேவையாக நடவடிக்கைகளை ஈடேற்றிக்கொள்கிறார்கள். நீதிபரிபாலனம் தொடர்பில் சந்தேகம் குவிந்துள்ளது. குற்றச்செயல் புரிபவர்கள், மோசடிப் பேர்வழிகள், ஊழல்பேர்வழிகள் ஒன்றுசேர்ந்த குடும்பங்களின் அருவருப்பான, அழுகிப்போன அரசியலே நிலவுகின்றது. இரும்பு மூட்டைக்கே கரையான் அரித்துவிட்டால் ஏனையவை பற்றிப் பேசுவதில் பிரயோசனமில்லை. உலகின் ஒருசில நாடுகளில் பொருளாதாரம் சீரழிந்தாலும் ஏனைய முறைமைகள் வழமைபோல் நிலவும். எமது நாட்டில் சீரழிந்த இந்த முறைமைக்குப் பதிலாக புதிய முறைமையொன்றை நிலைநாட்டுவதை விடுத்து ஆட்சிமாற்றம் அல்லது தலைமைத்துவ மாற்றம் பயன்தர மாட்டாது. மனிதர்கள் சிந்திக்கின்றவிதத்தைக்கூட மாற்றியமைக்கத்தக்க முறைமையொன்று தேவை. இந்த சமூகத்துடன் எம்மால் முன்நோக்கி நகர முடியாது. பொருளாதாரம், அரசியல், சமூகம் அனைத்தையுமே புதிய மாற்றத்திற்கு இலக்காக்கின்ற அரசியலொன்று தேவை. அண்மைக்காலமாக பல வாய்ப்புகள் உருவாகியபோதிலும் நாட்டை மேம்படுத்துகின்ற நோக்கு ஆட்சியாளர்களிடம் இருக்கவில்லை. மேலைத்தேய ஆதிக்கத்திற்கு 133 வருடங்கள் அகப்பட்டிருந்த ஒரு நாடு சுதேசிகளின் கைகளுக்கு கிடைத்ததும் வெள்ளைக்காரனுக்கு இரண்டாம்பட்சமாகாத அளவுக்கு நாட்டைக் கட்டியெழுப்ப எந்தளவு ஆழமான உணர்வு ஏற்படவேண்டும்? எம்மிடம் உருவாகாத இந்த நோக்கு இந்தியாவின் காந்தி, நேரு, பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தேசிய இயக்தைச்சேர்ந்த தலைவர்களிடம் இருந்தது. இந்த நோக்கு இன்று சந்திரனுக்குப் போகின்ற ஒரு இந்தியாவை உருவாக்கி இருக்கின்றது. தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என எற்றுக்கொள்ளப்பட்டிருந்த ஒரு பெண் சனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்தியர் எனும் கொடியின்கீழ் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டார்கள்.

குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்து மலையக மக்களை நாடற்ற நிலைமைக்கு மாற்றியதும் தமிழ் அரசுக் கட்சியை உருவாக்க திருவாளர் செல்வநாயகம் முன்வந்தார். 1956 இல் இருந்து மொழிப் பிரச்சினையொன்றை இழுத்துப்போட்டுக் கொண்டதால் 58 அளவில் சிங்கள – தமிழ் கலவரம் உருவாகியது. ஸ்ரீ எழுத்தில் கறுப்பெண்ணெய் பூசத் தொடங்கினார்கள். 1970 நடுப்பகுதியில் வடக்கில் ஆயுத இயக்கமொன்று உருவாகின்றது. 2009 இல் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் 2019 இல் உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெறுகின்றது. எமது ஆட்சியாளர்கள் உருவாக்கியது முரண்பாட்டு வரலாறாக அமைந்தபோதிலும் இந்திய ஆட்சியாளர்கள் உருவாக்கியதோ ஒருமைப்பாட்டினையாகும். தேசம் ஒன்றாக எழுச்சிபெறுகின்ற வரலாற்றினை அவர்கள் எழுதும்போது முரண்பாடுநிறைந்த வரலாற்றினை எழுதவேண்டியநிலை எமக்கு எற்படுகின்றது.

உலக நாடுகள் இருபதாம் நூற்றாண்டில் பிரமாண்டமான முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கையில் நாங்கள் அந்த நூற்றாண்டினைக் கைவிட்டுவிடுகிறோம். உலகில் உருவாகியுள்ள நவீனத்துவத்திற்கு ஒத்திசைவு செய்யத்தக்க இலங்கையொன்று எமக்குத் தேவை. எனவே எம்மெதிரில் இருப்பது வெறுமனே ஆட்சிமாற்றத்திற்குப் பதிலாக புதிய மாற்றத்திற்கான யுகத்தை நோக்கி நாட்டைக்கொண்டுசெல்கின்ற புதிய ஆட்சியாகும். அதற்காக நாட்டை மீண்டும் விழித்தெழச் செய்வித்து தேசத்தை ஒருமைப்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும். நாங்கள் வடக்கு மக்களை அழைக்கவேண்டியது 13 ஐ தருகிறோம் என்றல்ல: பெடரல் தருகிறோம் என்றல்ல. இந்த அனர்த்தத்தில் இருந்து விடுபடுவதற்காக நாங்கள் ஒன்றுசேர்ந்து போராடுவோம் என்றே கூறவேண்டும். கப்பம் கொடுத்து வாக்குகளைப் பெறுகின்ற கலாசாரத்திற்குப் பதிலாக புதிய மறுமலர்ச்சி யுகத்துடன் ஒன்றுசேருங்கள் எனக்கூறி அதிகாரத்தின் சுக்கானை தேசிய மக்கள் சக்தியின் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் அதிகாரத்தை எடுப்பதென்பது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆரம்பமேயன்றி இறுதிக்கட்டமல்ல. எமக்கு எதிராக ஒன்றுசேரக்கூடிய அனைத்துச் சக்திகளும் ஒரே மேடைக்கு வருகின்றன. திடீர் விபத்து காரணமாக ஒருவர் இறந்தாலும் என்பிபி ஐ பிடித்துக்கொள்கிறார்கள். அவர்கள் அந்த அளவுக்கு திகைப்படைந்துள்ளார்கள். அவர்களின் அசிங்கமான, காடைத்தனமான, கீழ்த்தரமான அரசியலை சதாகாலமும் முன்னெடுத்துச்செல்ல முடியுமென்று அவர்கள் நினைத்தார்கள். பல தசாப்தங்களாக அவர்களின் குற்றச்செயல்களையும், ஊழல்களையும் வெளியில் வர இடமளிக்காமல் பிரதான ஊடகங்களில் தணிக்கை செய்திருந்தார்கள். இப்போது சமூகவலைத்தலங்களை தடைசெய்யப்போகின்ற ஐயாமார்களுக்கு நாங்கள் கூறுவது ” இப்போது குதிரை தப்பியோடிவிட்டது, லாயத்தை மூடுவதில் பலனில்லை” என்றாகும். இப்போது அவதூறு, அவமதிப்பு, பயமுறுத்தல், அச்சுறுத்தல்களை முன்வைத்து வருகிறார்கள். தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்பப்பட்டுள்ளது அவதூறு, அவமதிப்பு, பயமுறுத்தல், அச்சுறுத்தல்களுக்கு கட்டுப்படுவதற்காக அல்லவென்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். பலதசாப்தங்களாக பெரிகோட்டின் இருபுறத்திலும் வைத்திருந்த பாதுகாப்புப் பிரிவின் இளைப்பாறியவர்களும் நாங்கள் அனைவரும் இந்த பக்கத்தில் ஒன்றுசேர்ந்திருக்கிறோம். பெரிகோட்டின் அந்தப் பக்கத்தில் அவர்கள் தனித்துப்போய் இருக்கிறார்கள். ஜெனரல்மார்கள், அட்மிஜரால்மார்கள், எயார் மார்ஷல்கள், மேஜர் ஜெனரல்கள், நாமனைவரும் ஒன்றுசேர்ந்து இப்படி ஒன்றாக இருந்தாலும் அவர்கள் சதாகாலமும் அவர்களின் பைக்குள்ளே அனைவரையும் வைத்துக்கொள்ளவே நினைத்தார்கள். இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவினைக்கண்டு அச்சமடைந்தவர்கள் சிறுபிள்ளைத்தனமானவற்றை அமைத்திட முயற்சிசெய்கிறார்கள். ஆனால் நாங்கள் எப்போதுமே கூறுவதைப்போல் கொப்பி பண்ணமுடியும், ஆனால் இணையானதாக்கிட முடியாது. இந்த ஒவ்வொருவரும் மக்களுக்கு நல்ல வாழ்க்கை, நல்ல நாட்டை எதிர்பார்த்து வந்தவர்களேயன்றி அவர்களிடம் தனிப்பட்ட தேவைகள் கிடையாது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், உளவுத்துறைப் பிரதானி போன்றவர்கள் பதற்றமடைந்துள்ளார்கள். எனினும் நாங்கள் பதற்றமடையவில்லை.

தம்மை இந்த பேரழிவிலிருந்து விடுவித்துக்கொள்வார்கள் என்ற பாரிய எதிர்பார்ப்பு எம்மீது மக்களுக்கு இருகின்றது. கலவரமடைந்து, பொய்க்கிடங்குகளில் விழுந்து அந்த மக்களின் எதிர்பார்ப்பினை நாங்கள் சிதைக்கப்போவதில்லை. புயலில் சிக்கியுள்ள இந்த படகினை மிகச்சிறந்த தந்திரோபாயத்தை தெரிவுசெய்து வெற்றியை நோக்கி வழிப்படுத்துவோம் என்பதை உறுதியாகக் கூறுகிறோம். நாங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஒரு வார்த்தைகூட பிசகக்கூடாது. ஐ.ரீ.என் தலைவர் சுதர்ஷன குணவர்தன “சமபிம” என பாரிய லிபரலுக்காக தோற்றியவர்கள் அவற்றைப் பிடித்துக்கொண்டு அடிக்கிறார்கள். நடவடிக்கைகளை மேற்கொண்டதும் வெற்று ஆசாமிகள். அதனால் ஒருசொல்கூட பிசகுவதற்கு எமக்கு உரிமை கிடையாது. நாங்கள் எந்நேரத்திலும் மனதால் அல்லது மூளையால் முடிவுகளை எடுக்கவேண்டும். அதனால் நாங்கள் பொறுமையுடனும் கவனமாகவும் இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்காக அசிங்கமான, அழுகிப்போன, துர்நாற்றம் வீசுகின்ற அரசியலை சுத்தஞ்செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு ஒரு சட்டமும் அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமும் இருக்கின்ற நிலைமையை நாங்கள் மாற்றியமைத்திடவேண்டும். அனைத்து அதிகாரங்களும் ஒரே வளையத்தின் கைகளிலேயே இருக்கின்றன. அவையனைத்தையும் மாற்றியமைத்து பொருளாதார ஜனநாயகத்தை நிலைநாட்டவேண்டும். எமது கல்வியை பாரிய மாற்றத்திற்கு இலக்காக்கிட வேண்டும். ஒவ்வொரு பிரஜைக்கும் உணவுவேளையொன்றை வழங்குவதற்கான வழிமுறையை உறுதிப்படுத்திட வேண்டும். நாங்கள் தொடக்கத்திலேயே பிரஜைகளுக்கு உணவு, சுகாதாரம், கல்விக்கு உத்தரவாதம் அளிப்போம். நெருக்கடியை முகாமை செய்வதற்காகவே சர்வதேச நாணய நிதியம் இடையீடு செய்துள்ளது. எமது ஆட்சியின்கீழ் நெருக்கடியை முகாமைசெய்து மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படாதிருக்க புதிய அணுகுமுறைக்குள் நாட்டைக் கொண்டுசெல்வோம். குற்றச்செயல்களிலிருந்தும் போதைப்பொருள்களிலிருந்தும் இந்த நாட்டை மீட்டுப்பதற்கான திட்டம் எம்மிடம் இருக்கின்றது. ஊர்களில் இருந்தவர்களை அரசியல்வாதிகளின் குற்றச்செயல்களுக்கு ஈடுபடுத்தி எமது நாட்டின் பாதாளக்கோஷ்டியை பாரியளவில் வளர்த்தெடுத்தார்கள். ஜே.ஆர். ஜயவர்தன கோனவல சுனிலுக்கு மன்னிப்பு வழங்கினார். ஆர். பிரேமதாச சொத்தி உபாலியை நிறைவேற்றுச் சபைக்கு எடுத்தார். சந்திரிக்கா குமாரதுங்க பெத்தெகான சஞ்சீவவை தனது பாதுகாப்பு பிரதானியாக நியமித்துக்கொண்டார். நாமல் ராஜபக்ஷவிற்கு பாதுகாப்பு வழங்குபவர் ஜுலம்பிட்டியெ அமரே. இந்த ஆட்சியாளர்களுக்கு பாதுகாப்புப் பிரிவுகளின் ஜெனரல்மார்களின் பாதுகாப்பு போதாதென பாதாளக்கோஷ்டியிடம் ஒப்படைத்தார்கள். இந்த நிலைமையை மாற்றியமைத்திட புதிய எழுச்சி, உஒருமைப்பாடு, புதிய மலர்ச்சி எமது நாட்டுக்கு அவசியமாகும். அந்த மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதில் பாரிய செயற்பொறுப்பு இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவிடம் கையளிக்கப்படுகின்றது. அதனை சிறப்பாக ஈடேற்றுவீர்கள் என்பது எம்மனைவருக்கும் உறுதியானதே.

Show More

“நாட்டைச் சூழவும் கடலை வைத்துக்கொண்டு நாங்கள் வெளிநாட்டிலிருந்து மீனைக் கொண்டுவருகிறோம்… டொலரை ஈட்டுகின்ற வளங்கள் பயன்படுத்தப்படாமல் வீணாகிப்போகின்றன…” -மவிமு பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா-

(கழுத்துறை மாவட்ட மீனவர் மாநாடுஅகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் – 2024.01.25) தற்போது மீன்பிடிக் கைத்தொழில், விவசாயம் உள்ளிட்ட அனைத்துக் கைத்தொழில்களும் தொழில்முயற்சிகளும் போன்றே நாட்டின் பொருளாதாரமும் முழுமையாகவே சீரழிக்கப்பட்டுள்ளது. இந்த பேருவளை நகரம் இரத்தினக்கல் கைத்தொழிலைப்போன்றே சுற்றுலாக் கைத்தொழிலுக்கும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அவையனைத்தும் தற்போது சீரழிக்கப்பட்டுள்ளன. எமது ஒட்டுமொத்த பொருளாதாரமுமே சீரழிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வங்குரோத்து அடைந்த ஒரு நாட்டிலேயே வசிக்கிறோம். மத்திய வங்கி பிரதானிகன் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்கள் “எமது நாடு வங்குரோத்து” நாங்கள் […]

(கழுத்துறை மாவட்ட மீனவர் மாநாடு
அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் – 2024.01.25)

தற்போது மீன்பிடிக் கைத்தொழில், விவசாயம் உள்ளிட்ட அனைத்துக் கைத்தொழில்களும் தொழில்முயற்சிகளும் போன்றே நாட்டின் பொருளாதாரமும் முழுமையாகவே சீரழிக்கப்பட்டுள்ளது. இந்த பேருவளை நகரம் இரத்தினக்கல் கைத்தொழிலைப்போன்றே சுற்றுலாக் கைத்தொழிலுக்கும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அவையனைத்தும் தற்போது சீரழிக்கப்பட்டுள்ளன. எமது ஒட்டுமொத்த பொருளாதாரமுமே சீரழிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வங்குரோத்து அடைந்த ஒரு நாட்டிலேயே வசிக்கிறோம். மத்திய வங்கி பிரதானிகன் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்கள் “எமது நாடு வங்குரோத்து” நாங்கள் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாது. இந்த ஆட்சியாளர்கள் பெப்புருவரி 04 ஆந் திகதி 76 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகி வருகிறார்கள். அத்தினத்தன்று கடலுக்கு துப்பாக்கிப் பிரயோகம்செய்து, களியாட்டங்களை நடாத்தி, ஜனாதிபதி, பிரதமர் நாட்டின் அபிவிருத்தி பற்றி, சுதந்திரத்தினால் எமக்கு கிடைத்தவை பற்றி, எதிர்காலத்தை நாட்டை உருப்படியாக்குவது எப்படியென தம்பட்டம் அடிப்பார்கள். இதுவரை காலமும் சுதந்திர தின வைபவங்களில் நாட்டை உருப்படியாக்குகின்ற விதம் பற்றியே பேசினார்கள். எவ்வாறு உருப்படியாக்கினோம் என்பது பற்றிப் பேசவில்லை.

எனினும் 76 வருடங்கள் கழிந்தவிடத்து மீனவனால் அந்த கைத்தொழிலில் வாழமுடியாதநிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்களால் ஏதெனுமொரு உற்பத்தி வழிமுறையால் வாழமுடியாதநிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கழுத்துறை மாவட்டத்தில் தேயிலை, இறப்பர் கைத்தொழில்கள் சீரழிந்துவிட்டன. இந்த சீரழிவு தற்செயலாக ஏற்பட்டதொன்றல்ல. குறிப்பாக கடந்த 45 வருட காலத்தினால் எமது நாட்டின் அனைத்து உற்பத்திகளும் சீரழிக்கப்பட்டுள்ளன. எமது ஆட்டசியாளர்கள் கடன் பெற்றார்கள், திருடித் தின்றார்கள், உற்பத்தி வழிமுறைகளை விருத்திசெய்யவில்லை. வாங்கிய கடனைச் செலுத்தமுடியாமல் நாங்கள் வங்குரோத்து அடைந்துள்ளோம். எம்மிடம் வெளிநாட்டு ஒதுக்கங்கள் கிடையாது. எமக்கு எண்ணெய் வரிசைகளில் கேஸ் வரிசைகளில் காத்திருக்க நேரிட்டது. எமக்கு அவற்றுக்காக செலுத்த டொலர் இன்மையாகும். நாங்கள் டொலரைப் பிறப்பிக்கவில்லை. இருந்த டொலரைக் கொண்டுதான் எமக்கு அவசியமானவற்றைக் கொண்டுவரவும் கடனைச் செலுத்தவும் நேரிட்டது. இந்த இரண்டையும் புரிய முடியாதென்பதால் இரண்டு வருடங்களாக நாங்கள் கடன் செலுத்துவதில்லை. அதனால் இருந்த டொலர்களைக்கொண்டு சிறிது பொருட்களைக் கொண்டுவர இயலுமை கிடைத்தது. நாங்கள் இருப்பது வெளிநாட்டுச் சொத்துக்கள் இல்லாத ஒரு நாட்டிலாகும். எமக்கு வெளிநாட்டுச் சொத்துக்களை ஈட்டக்கூடிய பெருமளவிலான வளங்கள் இருந்தபோதிலும் அவை பயன்படுத்தப்படாமல் விரயமாகி வருகின்றன. ஒரு நாடு இப்படிப்பட்ட நிலைமைக்கு ஆளாகவேண்டுமா?

மீன்பிடித்தொழில் பற்றி அறிந்த, திறமையான மீனவர்கள் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கு விளைச்சலைப் பெறுவதற்கான வாய்ப்பு வசதிகளை அரசாங்கம் பெற்றுக்கொடுத்தால் டொலர்களை உழைக்க முடியும். உலகில் கடல் இருக்கின்ற ஒவ்வொரு நாட்டினதும் மிகப்பெரிய கைத்தொழில் மீன்பிடித் தொழிலாகும். ஜப்பான், தென்கொரியா, சீனா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் மீன்பிடி ஒரு பாரிய கைத்தொழிலாகும். நாட்டைச் சூழவுள்ள கடலில் எம்மால் பல கைத்தொழில்களை புரியமுடியும். மீன்பிடிக் கைத்தொழில், சுற்றுலாக் கைத்தொழில், காற்றுவிசை மின்சாரத்தைப் பிறப்பிக்கமுடியும். அவற்றைப் புரிவதில் அரசாங்கங்கள் வெற்றியடையவில்லை. எம்மால் வருமானம் பெறக்கூடிய துறைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. விவசாயத்திற்குப் பொருத்தமான மண், காலநிலை உள்ளது. எனினும் கமக்காரனுக்கு தேவையான ஒத்துழைப்பினை அரசாங்கம் கொடுக்காமையால் விவசாயம் சீரழிந்து விட்டது. நாட்டை வங்குரோத்து அடையச்செய்வித்த ஐயாமார்கள் மீண்டும் அவர்களால் நாட்டைச் சீரமைக்க முடியுமெனக் கூறுகிறார்கள். வங்குரோத்து அடையச் செய்வித்தவர்களால் மீண்டும் உருப்படியாக்கிட முடியாது. அதுதான் உண்மை. உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்கவில்லை. கடன்வாங்கித் தின்கின்ற பொருளாதாரத்தை உருவாக்கினார்கள். அதன் பெறுபேறுகளை நாங்கள் அனுபவித்து வருகிறோம். தொழில்முயற்சிகள் சீரழிந்து வங்கிகளுக்கு சொந்தமாகி விடுகின்றன. ஒருசிலர் விற்றுத்தீர்த்துப் போகிறார்கள். அழிவடைந்த நாட்டில் மக்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் நெருக்கடியை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த நெருக்கடிக்குள்ளேயே நல்லதொரு விடயம் மேலோங்கி வருகின்றது. இந்த பேரழிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் வரலாற்று அனுபவங்கள் மூலமாக ஒரு முடிவினை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 76 வருடகாலமாக பேணிவந்த தவறான பொருளாதாரத்தையும் தவறான அரசியலையும் அதற்கு தலைமைவகித்த அனைத்து ஆட்சிக்குழுக்களையும் விரட்டியடித்து மக்களின் அரசாங்கமொன்றை அமைக்கத் தயாராகி இருக்கிறார்கள். “ஒவ்வொரு கறுப்பு மேகத்திலும் வெள்ளிக் கோடு இருப்பதுபோல்” திசைகாட்டியை சூழத் தயார் எனும் செய்தியை அனைத்துச் சக்திகளும் சுட்டிக்காட்டி வருகின்றன. நாங்கள் உங்கள் அனைவரையும் சேர்த்தக்கொண்டிருப்பது வாக்குகளைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்குச் செல்வதற்காக அல்ல. நாங்கள் இந்த நாட்டின் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும். எமது நாட்டின் உற்பத்திக்கு பங்களிப்புச் செய்கின்ற சக்திகள் அனைத்தையும் ஒன்றுதிரட்ட வேண்டும். நாங்கள் அமைக்கின்ற புதிய அரசாங்கத்தில் பெருங்கடலை வெற்றிகொள்ள மீன்பிடித்தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர் சமுதாயத்தை ஒன்றுதிரட்ட வேண்டும். எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு மீன்பிடித்தொழிலில் இருந்து பெரும்பங்கினைச் சேர்ப்பதற்கான திடசங்கற்பத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காகவே இந்த மாநாடு நடாத்தப்படுகின்றது.

நாங்கள் கேட்கின்றவற்றைக் கொடுக்கவும் அதற்கு செவிசாய்த்திடவும் இந்த அரசாங்கம் தயாரில்லை. பேசவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ இடமளிப்பதில்லை. நாங்கள் என்ன செய்வது? அதற்காக எமது நாட்டின் அனைத்துச் சக்திகளையும், மீனவர், கமக்காரர், உழைக்கும் மக்கள், தொழில்முனைவோர் அனைவரும் எமது பணிகளை மேற்கொள்ளக்கூடிய, எமது வியர்வைக்கும் முயற்சிக்கும் பெறுமதி கிடைக்கின்ற, எமது பணிகளால் நாட்டுக்கு எதையாவது சேர்க்கக்கூடிய புதிய நாட்டை உருவாக்கிட வேண்டும். புதிய உற்பத்திப் பொருளாதாரமொன்றை உருவாக்கிட வேண்டும். நாங்கள் புதிய அரசாங்கமொன்றை அமைத்திட வேண்டும். இந்நாட்களில் மேற்கொண்ட அனைத்து மதிப்பாய்வு அறிக்கைகளிலும் தேசிய மக்கள் சக்தி முன்னணியில் இருக்கின்றது. பெரும்பான்மை மக்களின் தெரிவு மாத்திரமல்ல. உளவுப் பிரிவு அறிக்கைகளிலும் கூட நாங்கள் முன்னணியில் இருக்கின்றமையே வெளிப்பட்டுள்ளது. இப்போது நாட்டை ஆட்சிசெய்கின்ற ஐயாமார்கள் பயந்துபோயுள்ளார்கள். அவர்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய சவாலாக தேசிய மக்கள் சக்தி மாறியுள்ளமையே அதற்கான காரணமாகும். தற்போது அவர்கள் பேசுவது எமது கொள்கைகளைப் பற்றியல்ல. சேறு பூசுதல்களும் அவதூறாக பேசுவதுமாகும். நாங்கள் ஒரு சக்தி என்றவகையில் எவ்வளவு பலம்பொருந்தியவர்கள் என்பதே அதன்மூலமாக புலப்படுகின்றது.

இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம்சென்று எம்மீது வரி விதிக்கிறார்கள். அவர்கள் எந்தவிதமான அர்ப்பணிப்பையும் செய்யாமல் எம்மை அர்ப்பணிப்புச் செய்யுமாறு கோருகிறார்கள். உழைக்கும்போதே செலுத்துகின்ற வரியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மருத்துவர்கள் நாட்டை விட்டுச் சென்றார்கள். வரவுசெலவுக்கு முன்னராக பாராளுமன்ற பிரேரணை நிறைவேற்றம் மூலமாக வற் வரியை அதிகரித்தார்கள். 15% இல் இருந்ததை 18% வரை அதிகரித்தார்கள். வற் வரிக்கு ஏற்புடையதாக இருந்திராத 94 பண்டங்களுக்கு வற் வரி விதித்தார்கள். அந்த பண்டங்கள் மத்தியில் பாடசாலை உபகரணங்கள், எண்ணெய், பசளை, விவசாய உபகரணங்கள் பொதுவான வாழ்க்கைக்கு அத்தியாவசியமான அனைத்துப் பண்டங்களுக்கும் வற் வரி விதிக்கப்பட்டுள்ளது. முன்னர் வருமானம் பெறுகின்றவர்களிடமிருந்து வரி அறவிடப்பட்டது. தற்போது எந்தவிதமான வருமானம் இல்லாதவர்களும் வரி செலுத்தவேண்டி ஏற்பட்டுள்ளது. அனைவரும் வரி செலுத்துவதற்கான டின் இலக்கமொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வேறு நாடுகளில் வரி அறவிட்டு கல்விக்காக, சுகாதாரத்திற்காக, நலனோம்பலுக்காக வசதிகள் வழங்கப்படுகின்றன. எமது நாட்டில் வரி அறவிடுகிறார்கள்: கல்விக்கு சுகாதாரத்திற்கான செலவுகளைக் குறைக்கிறார்கள்.

எங்கள் தாய் தந்தையருக்கு பணம் கிடையாதென்பதால் பிள்ளைக்கு கல்வி புகட்ட முடியாத நிலையேற்படுகின்றது. நோய்க்கு மருந்து வாங்க வழியில்லை. ரணில் விக்கிரமசிங்க செலவுத் தலைப்பு மூலமாக வரவுசெலவில் இருந்து பணத்தை ஒதுக்கிக்கொண்டு ஒருமாதம்தான் ஆகிறது. மீண்டும் வெளிநாட்டு விஜயங்களுக்கும் வாகனப் பராமரிப்பிற்கும் குறைநிரப்பு மதிப்பீடுமூலமாக பணத்தைக் கோருகிறார். சனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டு ஒருவருடத்தில் பதினான்கு தடவைகள் வெளிநாடு சென்றுள்ளார். அவர் ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு சுகபோகம் அனுபவிக்கிறார். உங்கள்மீதும் எம்மீதும் வரிவிதித்து பெறுகின்ற பணத்தையே இவ்வாறு செலவு செய்கிறார்கள்.

உற்பத்தி வழிமுறைகளை வீழ்ச்சியடைச்செய்து, வருமான வழிவகைகளை இல்லாதொழித்து, எம்மீது வரிவிதித்து, கழுத்தை நெரித்து சுரண்டி கொள்ளைக்கார கும்பலொன்று சுகமாகவும் சந்தோசமாகவும் வாழ்கிறது. எங்கள் முன்னிலையிலும் உங்கள் முன்னிலையிலும் பாரிய பொறுப்பு இருக்கின்றது. வீழ்த்திய மீன்பிடித் தொழிலை, இரத்தினக்கல் தொழிலை, விவசாயத்தை, தேயிலைத் தொழில்த்துறையை மீட்டெடுத்திட வேண்டும். அதற்கு உதவுவதற்காக, பிரமாண்டமான உற்பத்திப் பொருளாதாரத்திற்கு கைகொடுத்து உதவுகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான கொள்கைகளைக்கொண்ட, ஆற்றல் படைத்த அரசாங்கமொன்றை நாங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும். இந்த அரசாங்கம் எமது அபிமானத்தை வீழ்த்தியுள்ளது. உலகில் எந்தவொரு நாடும் எமக்கு வீசா வழங்குவதில்லை. எமது நாட்டில் நிதிக் கொள்கையைத் தீர்மானிப்பது சர்வதேச நாணய நிதியமாகும். பொருளாதாரப் பலத்தையும் பொருளாதார சுதந்திரத்தையும் நாங்கள் இழந்துள்ளோம். உற்பத்திப் பொருளாதாரமொன்றையும் உறுதியான பொருளாதாரமொன்றையும் நாங்கள் உருவாக்கிட வேண்டும். உற்பத்திப் பொருளாதாரத்தையும் அந்த உற்பத்தி அனைவருக்கும் நியாயமானவகையில் பகிரப்படுகின்ற பொருளாதாரத்தையும் உருவாக்கிட வேண்டும். எமது நாடு கலாசாரரீதியாக நாசமாக்கப்பட்டுள்ளது. ஊழலும் மோசடியும் தாண்டவமாடுகின்றன. சட்டத்தின் ஆட்சி கிடையாது. பாதாள உலகக் கோஷ்டியும் பொலீஸின் ஒருசில உத்தியோகத்தர்களும் கொலை செய்கிறார்கள். சீருடைதரித்து கௌரவமாக தொழில்புரிய பொலீஸாருக்கு இடமளிக்கவில்லை. பொலீஸாரை அரசியலுக்கு கட்டுப்படுத்தினார்கள். அதனால் சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்படல் வேண்டும்.

ஒத்துணர்வுகொண்ட, சகோதரத்துவத்துடன் சீவிக்கின்ற மக்களை உருவாக்க வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லீம் இனங்களுக்கிடையில் தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும். நாட்டை நேசிக்கின்ற அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டும். நாட்டை மீட்டெடுத்தால் தொழில்முயற்சிகள் பலமடையும். விவசாயம் விருத்தியடையும். எமது கைக்கு காசு வரும். எம்மால் சிறந்த வாழ்க்கையைக் கழிக்க முடியும். சேர்கின்ற வரித் தொகை அதிகரிக்கும். தற்போது மக்களின் கொள்வனவுகள் குறைந்துவிட்டன. பொருளாதாரம் சுருங்கினால் அரசாங்கம் எதிர்பார்க்கின்ற வரி சேரமாட்டாது. பலம்பொருந்திய பொருளாதாரத்தை அமைத்தால் சமூகம் சிறந்ததாக அமையும். கல்விக்கு பிரச்சினை ஏற்பட மாட்டாது. பலம்பொருந்திய பொருளாதாரத்தை அமைத்தால் அதன் நன்மைகள் மக்களுக்கு கிடைக்கும். பணத்தை பகிர்ந்தளிப்பது பற்றியா? இல்லை. சீனக் கூற்று ஒன்று இருக்கின்றது “நான் உங்களுக்கு ஒரு மீனைக் கொடுத்தால் உங்களின் ஒருவேளை பசியைப் போக்கலாம். நான் உங்களுக்கு மீன்பிடிக்கின்ற வழிமுறையைக் கற்றுக்கொடுத்தால் உங்கள் பசியை சதாகாலமும் போக்கலாம்.” நாங்கள் செய்யவேண்டியது மக்களுக்கு மூன்றுவேளை உண்ணக்கூடிய பொருளாதாரமொன்றை அமைத்துக்கொடுக்க வேண்டும். எமக்குத்தேவை பிறரில் தங்கிவாழும் மக்களல்ல. தமது முயற்சியால் எழுந்து நிற்கையில் அதற்கு கைகொடுத்து உதவுகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும்.

நன்மைகளை நியாயமாக பகிர்ந்தளிக்கின்ற பலம்பொருந்திய பொருளாதாரமொன்றை நாங்கள் உருவாக்கிட வேண்டும். எவ்வாறு நன்மைகளைப் பகிர்வது. நன்மைகள் அதிகரிப்பதன் மூலமாக கல்விக்காக ஒதுக்குகின்ற பணத்தின் அளவு அதிகரிக்கும். நீங்கள் பிள்ளைகளின் கல்விக்காக பணம் செலவிட வேண்டியதில்லை. பாடசாலைக் கல்வி சிறப்பாக ஈடேறுமாயின் ரியுஷன் அனுப்பத் தேவையில்லை. அருகிலுள்ள பாடசாலையை சிறந்த பாடசாலையாக மாற்றினால், அனைத்து வசதிகளையும் கொண்டதாக அமைத்தால் எமது பிள்ளை ஊரிலுள்ள பாடசாலைக்குச் செல்லும். செலவு குறையும். பாதுகாப்பு சம்பந்தமான சிக்கல் கிடையாது. பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் சுதந்திரம் கிடைக்கும். சுகாதார சேவைக்கு அதிகமான பணத்தை ஒதுக்கினால் எமக்கு மருந்து இலவசமாக கிடைக்கும். பரிசோதனை வசதிகள் அமைக்கப்படும். அதுதான் தேசிய மக்கள் சக்தியின் கொள்கை. தற்போது மக்களை நோயாளிகளாக மாறஇடமளித்து நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பது ஒரு தீத்தொழிலாக மாறிவிட்டது. நாங்கள் வீழ்த்திய நாட்டை மீட்டெடுத்திட வேண்டும். எமக்கு இருக்கின்ற மிகப்பெரிய செல்வம் கடலாகும். அதில் கைவைக்கவில்லை. எமரது நாட்டுக்கு மீன்பிடிக்கின்ற ட்ரோலர் கலமொன்று, கப்பலொன்று கிடையாது. மீன்பிடிக் கைத்தொழிலை நாட்டுக்கு வருமானம் கொண்டுவருகின்ற கைத்தொழிலாக மாற்றிடவேண்டும். பலம்பொருந்திய பொருளாதாரத்தை உருவாக்குகின்ற மக்களின் அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள வேண்டும். தேசிய மலர்ச்சியை ஏற்படுத்துகின்ற அரசாங்கமொன்றை அமைத்திட வேண்டும். நாமனைவரும் தெரிவுசெய்ய வேண்டிய ஒரே சக்தி தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. அதனால் வங்குரோத்து அடைந்த அரசியலை ஒருபுறம் வைத்துவிட்டு எமது வலிமைகள் மீது, எமது வளங்கள் மீது நம்பிக்கை வைப்போம். தேசிய ஒற்றுமையை உருவாக்கிடுவோம். புதிய நாட்டை, புதிய சமூகத்தை, அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய சமூகமென்றை அமைத்திடுவோம்.

Show More

தேசிய மக்கள் சக்திக்கும் புதிய இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு

-Colombo, January 23, 2024- தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று (23) பிற்பகல் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் திரு. Santosh Jha அவர்களை சந்தித்தனர். புதிய இந்திய உயர்ஸ்தானிகர் திரு. Santosh Jha அவர்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கையில் தனது கடமைகளை ஆரம்பித்த பின்னர், முதற் தடவையாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவரை சந்தித்தார். இதன்போது இலங்கையின் நடப்பு அரசியல் நிலவரங்கள் […]

-Colombo, January 23, 2024-

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று (23) பிற்பகல் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் திரு. Santosh Jha அவர்களை சந்தித்தனர்.

புதிய இந்திய உயர்ஸ்தானிகர் திரு. Santosh Jha அவர்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கையில் தனது கடமைகளை ஆரம்பித்த பின்னர், முதற் தடவையாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவரை சந்தித்தார்.

இதன்போது இலங்கையின் நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்தும் பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும் தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

Show More