-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் – ஊடக சந்திப்பு – 2024.01.11- நேற்று (10 ஆந் திகதி) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தில் பல திருத்தங்களை உள்ளிடக்கியதாக நீதி அமைச்சர் எடுத்தியம்ப முற்பட்டார். எனினும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்த சட்டமூலத்துடன் தொடர்புடைய 2023 செத்தெம்பர் 15 ஆந் திகதிய வர்த்தமானி அறிவித்தலில் பாகம் இரண்டுக்கான குறைநிரப்பி என்றே இருக்கின்றது. அமைச்சர் சபாபீடத்தில் சமர்ப்பித்தது பழைய தட்டினையாகும். இதற்கு முன்னர் இந்த வர்த்தமானப் பத்திரிகை பாராளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் […]
-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் – ஊடக சந்திப்பு – 2024.01.11-
நேற்று (10 ஆந் திகதி) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தில் பல திருத்தங்களை உள்ளிடக்கியதாக நீதி அமைச்சர் எடுத்தியம்ப முற்பட்டார். எனினும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்த சட்டமூலத்துடன் தொடர்புடைய 2023 செத்தெம்பர் 15 ஆந் திகதிய வர்த்தமானி அறிவித்தலில் பாகம் இரண்டுக்கான குறைநிரப்பி என்றே இருக்கின்றது. அமைச்சர் சபாபீடத்தில் சமர்ப்பித்தது பழைய தட்டினையாகும். இதற்கு முன்னர் இந்த வர்த்தமானப் பத்திரிகை பாராளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ‘ஒன்லயின்’ சட்டமூலமும் அதனோடு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பற்றிய எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கான எதிர்பார்ப்பு அரசாங்கத்திற்கு கிடையாதென நாங்கள் அது சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவின்போது சட்டத்துறை தலைமை அதிபதி அறிவித்தார். நாட்டின் ஒட்டுமொத்த மக்களினதும் பிரமாண்டமான எதிர்ப்பு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு தோன்றியதால் அரசாங்கத்தின் சார்பில் சட்டத்துறை தலைமை அதிபதி உயர்நீதிமன்றத்திற்கு அதனை அறிவித்தார்.
இதே சட்டம் கடந்த ஏப்பிறல் மாதத்தில் கசெற்றில் வெளியிடப்பட்டு, மீண்டும் திருத்தப்பட்டு, செத்தெம்பர் மாதத்தில் கொண்டுவரப்பட்டது. அது தற்போது மூன்றாவது தடவையாகவும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஓர் எழுத்தையேனும் திருத்தாமல் செத்தெம்பர் மாதத்தில் சமர்ப்பித்த சட்டமூலத்தையே மீண்டும் கொண்டுவந்திருக்கிறார்கள். அதனால் மக்களை தவறாக வழிநடாத்த செயலாற்ற வேண்டாமென நாங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்கிறோம். இந்த சட்டம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்திற்கு முரணானது. அரசியலமைப்பின் மூன்றாவது மற்றும் நான்காவது உறுப்புரைகளில் உறுதிசெய்யப்பட்டுள்ள மக்களின் இறைமைத் தத்துவத்திற்கு முரணானது. இந்த சட்டத்தின் உள்ளடக்கம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்திற்கும் மக்களின் இறைமைத் தத்துவத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற இரண்டு உறுப்புரைகளின் ஒவ்வோர் எழுத்திற்கும் முரணானதாகும். அதைப்போலவே சமர்ப்பித்துள்ள பிரிவுகளுக்குள்ளே பயங்கரவாதம் என்பதற்கான பொருள்கோடல் வழங்கப்படவில்லை. எனினும் பயங்கரவாத தவறுகள் பற்றி பல உதாரணங்கள் தரப்பட்டுள்ளன. பயங்கரவாத தவறு என்பதற்கான பல விரிவான தெளிவுபடுத்தல்கள் தரப்பட்டுள்ளன. உதாரணமாக பயங்கரவாதத்தை தூண்டுதலுடன் தொடர்பாகவும், 11 வது பிரிவில் இருந்து சம்பந்தப்பட்ட கூற்றுகளை வெளியிடுதல் பற்றியும், 12 வது பிரிவில் பயங்கரவாதம் பற்றியும், ஏனைய பிரிவுகளில் தகவல்களை வழங்குதல் மற்றும் தவறவிடுதல் என்றவகையிலும் பல உதாரணங்கள் தரப்பட்டுள்ளன. எனினும் இங்கு குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பிரிவும் உள்ளடங்குகின்ற விதத்தில் குற்றவியல் சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை நாங்கள் மிகுந்த பொறுப்புடன் கூறுகிறோம். அதபை்போலவே தண்டனைச் சட்டக்கோவை மற்றும் குற்றங்கள் சம்பந்தமான சட்டங்களுடனும் தொடர்புடைய பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 19 வது பிரிவின் பொருள்கோடல் மூலமாக பிடியாணையின்றி கைதுசெய்வதற்கான அதிகாரம் எந்தவொரு பொலீஸ் உத்தியோகத்தருக்கும் எந்தவொரு முப்படை உத்தியோகத்தருக்கும் கரையோரப் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக மின்சாரசபை ஊழியர்கள் அண்மையில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்கள் போன்ற வேலைத்தளங்களில்கூட முன்னெடுக்கின்ற நியாயமான ஆர்ப்பாட்டங்களுக்கும் இடமளிக்காதிருக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அரசாங்கத்திற்கு எதிராக குரல்கொடுப்பவர்களைக் கைதுசெய்து தடுத்துவைத்தலுடன் ஏற்புடைய ஏற்பாடுகள் இதில் இருக்கின்றன. நாட்டின் சனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தடுத்துவைப்பதற்கான கட்டளையை விடுக்கின்ற வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவேண்டுமென எந்தவோர் இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
புனர்வாழ்வு அதிகரசபை சட்டம், சமூக வலைத்தளங்களை அடக்குவதற்கான சட்டம், ஒளிபரப்பு அதிகாரசபை சட்டம் போன்ற சட்டங்களைக் கொண்டுவர செயலாற்றுகின்ற அரசாங்கம் அந்த சட்டத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைச் செய்கின்ற, நியாயமான மக்கள் எதிர்ப்புகள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவதற்காக இந்த சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. ரணில் ராஜபக்ஷ ஜுன்டா இந்த தேர்தல் வருடத்தில் மேலும் ஒருநாளாவது அதிகாரத்தில் இருப்பதற்காக இந்த சட்டங்களை ஆக்கி வருகின்றது. தேசிய மக்கள் சக்தி என்றவகையில் இந்த பயணத்தைத் தொடர நாங்கள் இடமளிக்கமாட்டோம். இந்த சட்டங்களை அங்கீகரித்துக்கொண்டால் நோயாளர்களின் உயிர்களை ஆபத்தில் வீழ்த்திய கெஹெலிய ரம்புக்வெல்ல அப்பாவி எனக் கூறுவதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்படுகின்றது. இந்த ஈனியா சட்டத்திற்கு எதிராக நாங்கள் உயர்நீதிமன்றத்திற்கு பல மனுக்களை சமர்ப்பிப்போம். இந்த படுமோசமான சட்டத்தை தோற்கடிப்பதற்காக நாங்கள் நாட்டின் எல்லா இடங்களிலம் முனைந்து செயலாற்றுவோம்.
“அநீதியான சட்டங்கள் எனும் இரும்புச் சப்பாத்தினை பாவித்து மக்களின் மூச்சினை இறுக்க முடியுமானால் இந்த அரசாங்கம் அதனையும் செய்ய முனைகிறது.”
-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி சமிலா குலசேகர-
மாத்தறை பெண்களின் பலம், காலி பெண்களின் பலம் மற்றும் கம்பறா நைவலவில் நடைபெற்ற இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவின் பலத்தை அரசாங்கம் கண்டது. அரசாங்கம் அதனாலேயே பதற்றமடைந்தள்ளது. வருங்காலத்தில் கம்பஹாவை உள்ளிட்ட மேலும் பல மாவட்டங்களில் பெண்களின் பலத்தை அரசாங்கம் கண்டுகொள்ள முடியும். தேசிய மக்கள் சக்தியுடன் பொதுமக்கள் ஒன்றுசேர்கின்ற விதத்தைக் காண்கின்ற அரசாங்கத்திற்குள்ள ஒரே மாற்றுவழி ஈனியா பங்கரவாத எதிர்ப்புச் சட்டம் போன்ற சட்டங்களை அங்கீகரித்துக் கொள்வதே என அவர்கள் சிந்தித்து வருகிறார்கள். மனிதர்கள் என்றவகையில் எமக்கு தற்போது எஞ்சியுள்ளது சுதந்திரமாக மூச்செடுப்பது மாத்திரமே. அநீதியான சட்டங்கள் எனும் இரும்புச் சப்பாத்தினை பாவித்து மக்களின் மூச்சினை இறுக்க முடியுமானால் இந்த அரசாங்கம் அதனையும் செய்ய முனைகிறது.
பயங்கரவாதத்தை தடுப்பதாகக் கூறிக்கொள்கின்ற சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமானால் பயங்கரவாதம் நிலவவேண்டும். தேசிய மக்கள் சக்தியுடன் எழுச்சிபெறுகின்ற மக்களே இந்த அரசாங்கத்திற்கு பயங்கரவாதிகள்போல தெரிகின்றது. இந்த சட்டமூலத்தின் 62 வது பிரிவிற்கிணங்க வழக்கு விசாரணை நிறைவடையும்வரை பாதுகாப்பு அமைச்சு செயலாளரின் அனுமதியுடன் தடுத்து வைக்கலாம். அவசியமெனில் தடுத்துவைத்தல் சட்டத்தை அமுலாக்குகின்ற அதிகாரத்துடன் நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் சேர்க்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான ஈனியா சட்டங்கள் தொடர்பாக நாங்கள் குறைவாக மதிப்பிடலாகாது. நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் பெற்றுக்கொள்ளவே இந்த சட்டங்கள் மூலமாக எதிர்பார்க்கிறார்கள். இந்த சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கக்கூடியவர்களை தீர்மானிக்கும் அதிகாரத்தை 81,82 பிரிவுகளின்கீழ் சனாதிபதிக்கும் வழங்கத் தயாராகி வருகிறார்கள்.
அதைப்போலவே மனிதர்கள் இருக்கவேண்டிய இடத்தை தீர்மானிக்கின்ற அதிகாரத்தையும் சனாதிபதி பெற்றுக்கொள்ள தயாராகி வருகிறார். “எவ்விதத்திலேனும் வதிகின்ற இடத்திற்கு வெளியில் நடமாடித் திரிவதையும் சனாதிபதியால் கட்டுப்படுத்த முடியும்.” அதைப்போலவே வெளிநாடு செல்வதை மட்டுப்படுத்தவும், கைது செய்யவும், இடம்பெயர்வதை மட்டுப்படுத்தவும், வதிகின்ற இடத்திலும் தொழில்புரிகின்ற இடத்திலும் இருந்து வெளியில் செல்வதை மட்டுப்படுத்தவும், குறித்துரைத்த ஆட்களுடன் தொடர்பாடல் தொடர்புகளை பேணிவருவதை மட்டுப்படுத்தவும் அதிகாரங்களை சனாதிபதிக்கு பெற்றுக்கொடுக்க தயாராகி வருகிறார்கள். இந்த நாட்டு மக்கள் நடமாடுகின்ற இடங்கள், உண்கின்ற இடங்களை மட்டுப்படுத்துவதைத் தவிர நிறைவேற்று சனாதிபதிக்கு வேறுவேலை கிடையாதா?
இந்த ஈனியா சட்டங்களின் ஒரே நோக்கம் சனநாயகரீதியாக எழுச்சிபெறுகின்ற மக்களின் குரலை அடக்குவதாகும். தொழிற்சங்க செயற்பாடுகளை இல்லாதொழிப்பதும் ஒரே குறிக்கோளாகும். இவ்வாறான அநீதியான சட்டங்களுக்கெதிராக குரல்கொடுக்க தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் எந்நேரத்திலும் தயாராக இருக்கிறார்கள் என்பதை வலியுறுத்துகிறோம். ஒரு நாட்டில் வசிக்கின்ற மக்களுக்கான சனநாயகரீதியான இடவசதியை சுருட்டுவதாயின் அந்த இடத்தில்தான் அரசாங்கமொன்றின் சரிவு இருக்கின்றது. எனினும் அபிவிருத்தி நலிவடைவதை தடுப்பதற்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பிரயோகிப்பதாகவே அவர்கள் இந்த சட்டம் மூலமாகக் கூறுகிறார்கள். தேசிய அபிவிருத்தியை நலிவடையச்செய்த பொருளாதாரக் கொலைஞர்கள் யாரென உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. நாங்கள் நேர்மையாக. சனநாயகரீதியாக இந்த அநீதியான சட்டங்களைத் தோற்கடித்திட முன்வருவோமென்பதை வலியுறுத்துகிறோம்.
“ஆபத்தினை முன்கூட்டியே கண்டு அதற்கெதிராக மக்களை அணிதிரட்டுவதே எமது பொறுப்பாகும்…”
-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார-
இந்த பயங்கரவாத சட்டம் பற்றி பல சந்தர்ப்பங்களில் நாங்கள் மக்களுக்கு விழிப்புணர்வூட்டினோம். சட்டத்தின் ஆட்சி பற்றி நாங்கள் பேசும்போது “அவற்றை நாங்கள் தின்னப்போகிறோமா?” என ஒருசிலர் கேட்டார்கள். எனினும் அவர்கள் சங்கடத்தில் மாட்டிக்கொண்ட வேளையில் தான் அவர்களுக்கு சனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் ஞாபகத்திற்கு வரும். மக்களுக்கு வரப்போகின்றஆபத்தினை முன்கூட்டியே கண்டு அதற்கெதிராக மக்களை அணிதிரட்டுவதே எமது அரசியல் மற்றும் சமூகப் பொறுப்பாகும்.
இலங்கையில் சாதாரணமாக குற்றவியல் சட்டத்தின்கீழ் தண்டனை வழங்கக்கூடிய பல தவறுகள் பயங்கரவாத தடுப்பு எனும் பெயரில் வருகின்ற இந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்திடமிருந்து அதிகளாவிலான தத்துவங்கள் அதன்மூலமாக நீக்கப்பட்டு நிறைவேற்று சனாதிபதியிடம் எடுத்துக்கொள்ள அல்லது அவருக்கு உடைமையாக்கிக்கொள்ள தயாராவதே அதற்கான அடிப்படைக் காரணம். சரவ்தேசரீதியாக எடுத்துக்கொண்டால் இரண்டு அடிப்படை நோக்கங்களை நிறைவுசெய்த பின்னரே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். மரணத்திற்கு காரணமாக அமைகின்ற கடுமையான சேதங்கள் அல்லது பணயக் கைதியாக எடுத்தலே அத்தகைய நோக்கங்களாகும். அடுத்தது அரசாங்கத்தை அல்லது மக்களை திகிலடையச் செய்விப்பது, பயமுறுத்துவது, சர்வதேச நிறுவனங்களுக்கு எதையேனும் புரியுமாறு அல்லது புரியாதிருக்குமாறு நிர்ப்பந்தித்தல் அதில் இரண்டாவது செயலாகும். பயங்கரவாதச் செயல் என்பது இந்த இரண்டு நோக்கங்களையும் நிறைவுசெய்வதாகும்.
எனினும் இதில் உள்ளடக்கியுள்ள விரிவான வரைவிலக்கணங்கள் மூலமாக அரசாங்கம் எதிர்பார்ப்பது மக்கள் அபிப்பிராயமற்ற அரசாங்கத்திற்கெதிராக சிவிலியன்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை அடக்கவும் பயமுறுத்தவும் முயற்சிசெய்வதாகும். தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் ஊடக சந்திப்பினை நடாத்துதல், போஸ்ற் ஒன்றைப் போடுதல், துண்டுப்பிரசுத்தை விநியோகித்தல் முதலியவற்றையும் பயங்கரவாத வெளியீடுகளாக பெயர்குறித்து பணிப்புரை வழங்கவும் முடியும். “நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம்” மற்றும் “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்” ஆகிய இரண்டு சட்டங்களையும் ஒன்றாக நிறைவேற்றிக் கொள்வதன் நோக்கமாக அமைவது தும்மினாலும்கூட அரசுக்கெதிரான பயங்கரவாதச் செயலென குறிப்பிட இயலும். யுத்தம் முற்றுப்பெற்று பயங்கரவாதம் இல்லாத காலத்தில் இந்த சட்டம் கொண்டுவரப்படுவது ஏன் என சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியின் அரசியலுக்கு தடையேற்படுத்துகின்ற நோக்கத்துடனேயே இவ்வாறான சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. நீதின்றத்தினால் குற்றத்தீர்ப்பளிக்ப்பட்ட தேசபந்து தென்னக்கோன் போன்ற ஒருவரை பதில் பொலீஸ் மா அதிபராக பெயர்குறித்தல் போன்ற விடயங்களுடன் சட்டத்தை கருத்திற்கொள்ள வேண்டும். ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடனும் அநீதியான செயற்பாடுகளுடனும் இணங்குகின்ற ஒருசில உத்தியோகத்தர்கள் இருப்பார்களாயின் “நீங்கள்தான் பயங்கரவாதிகள்” எனஎம்மால் அவர்களுக்கு கூறமுடியும். பயங்கரவாதியாக மாற அரசாங்கத்திற்கு லயிஷன் கொடுக்க முனைகின்ற சட்டமாவே நாங்கள் இதனைக் காண்கிறோம். அதனைத் தோற்கடிப்பதற்காக பாராளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும், வீதியிலும் நாங்கள் போராடுவோம். அதனைச் சுற்றி ஒன்றுசேருமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறோம்.
-Colombo, January 05, 2024- இன்றளவில் எமது நாட்டு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரதானமான பிரச்சினை தாங்கமுடியாத வகையில் பொருட்களின் விலை அதிகரித்தலாகும். குடும்பப் பெண்கள், எமது தாய்மார்கள் பொருட்களின் விலையேற்றத்தை அதிகமாக உணர்கிறார்கள். முழு நாட்டிலும் இருக்கின்ற பெண்களைச் சுற்றி பற்றியெரிகின்ற குடும்பங்களின் தீயினை ஆட்சியாளர்கள் கடுகளவேனும் உணரவில்லை. 2024 ஆம் ஆண்டு பிறக்கையில் மாபெரும் பொருளாதார வீழ்ச்சியின் சாயலையே ஒவ்வொருவரும் உணர்ந்தார்கள். நாளைய தினத்தில் வாழ்வது எவ்வாறு, வற் வரிக்கு தாக்குப் பிடிப்பது எவ்வாறு எனும் […]
-Colombo, January 05, 2024-
இன்றளவில் எமது நாட்டு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரதானமான பிரச்சினை தாங்கமுடியாத வகையில் பொருட்களின் விலை அதிகரித்தலாகும். குடும்பப் பெண்கள், எமது தாய்மார்கள் பொருட்களின் விலையேற்றத்தை அதிகமாக உணர்கிறார்கள். முழு நாட்டிலும் இருக்கின்ற பெண்களைச் சுற்றி பற்றியெரிகின்ற குடும்பங்களின் தீயினை ஆட்சியாளர்கள் கடுகளவேனும் உணரவில்லை. 2024 ஆம் ஆண்டு பிறக்கையில் மாபெரும் பொருளாதார வீழ்ச்சியின் சாயலையே ஒவ்வொருவரும் உணர்ந்தார்கள். நாளைய தினத்தில் வாழ்வது எவ்வாறு, வற் வரிக்கு தாக்குப் பிடிப்பது எவ்வாறு எனும் பாரிய அதிர்ச்சி அனைவருக்குமே இருந்தது. செய்தித்தாளில் ஒருபக்கத்தில் புதுவருட நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் மறு பக்கத்தில் சனவரி மதலாந் திகதியன்றே வற் வரி விதிக்கப்படுகின்ற விதமும் இருந்தது. ” 97 வகையான பண்டங்களுக்கு புதிதாக வற் வரி விதிக்கப்படுகின்றது, டீசல், பெற்றோல், எரிவாயுவுக்கும் வற் விதிக்கப்படுகின்றது, அதனால் பணவீக்கம் அதிகரிக்கின்றது” போன்ற பல்வேறு தலைப்புகளில் செய்திகள் வெளியாகி இருந்தன. தாய்மார்கள் பட்டினியுடன் இருந்து பிள்ளைகளுக்கு ஒன்றுவிட்டு ஒருவேளையேனும் உணவு கொடுக்கத் தூண்டப்படுகின்ற அளவுக்கு துன்பந்தருகின்ற பணவீக்கமே நிலவுகின்றது. பிள்ளைகளின் துயரங்கள், பெண்களின் துயரங்கள் , வாழ்க்கைச் சுமையை அரசாங்கத்தினால் அமைச்சர்களால் உணரமுடியாது.
மக்களின் வருமானம் ஒரு ரூபாவினால்கூட உயரவில்லை. அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை ரூபா 10,000/- அதிகரிப்பதாகக் கூறினாலும் ஏனைய மக்கள் அனைவர்மீதும் சுமத்தப்படுகின்ற வற் வரிச் சுமையை எவ்வாறு தாங்கிக்கொள்வது? 2024 வரவு செலவினை நிறைவேற்றிக்கொள்ள வாக்குகளை அளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தவளைகள்போல் தாவத்தொடங்கி உள்ளார்கள். எனினும் அவர்கள் அங்கீகரித்துக்கொடுத்த வரவுசெலவின்படி பண்டங்கள் மற்றும் சேவைகள்மீது இவ்வருடத்தில் 2235 பில்லியன் ரூபாவை அறவிட்டுக்கொள்ள தயாராகி வருகிறார்கள். இதுவரை 15% ஆக நிலவிய வற் வரியை 18% வரை அதிகரித்து மேலும் 97 வகையான பண்டங்கள் மற்றும் சேவைகளை புதிதாக சேர்த்து ஒரேயடியாக 18% வரியை விதித்ததன் மூலமாக இந்த 2235 பில்லியன் ரூபாவை அறவிட்டுக்கொள்ள எதிர்பார்க்கிறார்கள். இந்த வரி விதிக்கப்படுவது நாட்டின் அபிவிருத்திக்காகவல்ல.
சனவரி மாதத்தில் இருந்து ஒருவர் மாதத்திற்கு 38,000 ரூபா கடன் வட்டியை செலுத்தவேண்டி நேரிட்டுள்ளதென பேராதனை பல்கலைக்கழக பொருளியல் கற்கைப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டி உள்ளார். அபிவிருத்தியின் மறைவில் இருந்துகொண்டு கடன்வாங்கி கொள்ளையடித்தமையாலேயே நாங்கள் செலுத்துகின்ற வரியிலிருந்து இவ்வளவு பெருந்தொகையான கடன்வட்டியை செலுத்தவேண்டி நேரிட்டுள்ளது. அரசாங்க வருமானத்தின் 93% ஐ வரி ஊடாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் செயலாற்றி உள்ளது.
இவ்விதமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய நுகர்வுப் பண்டங்கள் மீது வரி விதித்து மக்களுக்கு புல்லை சாப்பிடுமாறா கூறுகிறார்கள்? எமது நாட்டு மக்கள்மீது வரிவிதித்து களைத்துப்போகச் செய்வித்து, துன்புறுத்தி, மௌனிகளாக்கி வைக்க அரசாங்கம் தயாராகி வந்தாலும் மக்கள் அதற்குத் தயாரில்லை. தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் என்றவகையில் ஊர்ஊராகச் சென்று பொருளாதார கொலைஞர்கள் யாரென மக்களுக்கு தெளிவுபடுத்துகிறோம். இந்த வரியை சேகரித்ததும் எமது நாட்டின் போசாக்கின்மைக்கு கர்ப்பிணித் தாய்மார்களின் இரத்தச்சோகைக்கு என்ன நேரிடும்? பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றது. எமது தாய்மார்களின் வயிற்றைக் கட்டிக்கொள்ளுமாறு கூறுகின்ற ஆட்சியாளர்கள் அனைத்துவிதமான சுகபோகங்களையும் அனுபவித்து வருகிறார்கள். அந்த முறையியலை மாற்றியமைத்து பொருளாதாரக் கொலைஞர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான காலம் தற்போது எமக்கு பிறந்துள்ளது. பொருளாதாரக் கொலைஞர்கள் கட்சி தாவிக்கொண்டு ஆடைகளை மாற்றிக்கொண்டு ஆட்சிக்குவர தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிலைமையை மாற்றியமைத்திட பெண்களாகிய எம்மிடம் துணிச்சல் மாத்திரமே எஞ்சியுள்ளது. இந்த துணிச்சலுடன் புதிய தேசமொன்றைக் கட்டியெழுப்பிட தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றுசேருமாறு நாங்கள் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
“ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் எம்மீது தொடர்ச்சியாக சுமத்துகின்ற இந்த சுமையை தொடர்ந்தும் மௌனமாக தாங்கிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.”
–தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விராய் கெலீ பல்தசார்–
புதுவருட நல்வாழ்த்து அனுப்பிவைக்கப்படுகின்ற காலத்தில் எமக்கு குறுந்தகவலாக கிடைத்ததோ பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு பற்றிய செய்தியாகும். அதனூடாக இந்த வருடத்தை நலமானதாக அமைத்துக்கொள்ள எவ்வாறு அணிதிரள்வது என்பதைத்தான் நாங்கள் கலந்துரையாட வேண்டியுள்ளது. வற் வரி அதிகரிக்கப்பட முன்னர் குடித்தொகை, புள்ளிவிபரவியல் திணைக்களம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் பெறுபேறு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் 60.5% வீடுகளின் மாதாந்த வருமானம் வீழ்ச்சியடைந்து எமது 91% வீடுகளின் மாதாந்த செலவுகள் அதிகரித்துவிட்டன. இந்த புள்ளிவிபரத் தரவுகளில் 91% எனக் கூறினாலும் நூற்றுக்கு நூறுவீதமான வீடுகளிலும் இவ்வாறான நிலைமையே காணப்படுகின்றது. 03 – 21 வருட வயதிற்கிடைப்பட்ட எமது பிள்ளைகளின் கல்வி 54.9% ஆல் வீழ்ச்சியடைய பொருளாதார நெருக்கடி ஏதுவாக அமைந்துள்ளதென மேற்படி ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. அன்றாட கூலியைப் பெறுகின்றவர்கள் இன்றும் ரூபா 1500/- – 2000/- இற்கு இடையிலான வருமானத்தையே பெறுகிறார்கள். மேலும் சிலர் நாளொன்றுக்கு ரூபா 1000/- இற்கும் குறைவான வேலையையே செய்துவருகிறார்கள். நூளொன்றில் ரூபா 2000/- வீதம் பெற்றாலும் முழுமாதத்திற்குமே கிடைப்பது ரூபா 60,000/- மாத்திரமே. லயிற் பில், தண்ணீர் பில் போக்குவரத்து பில் என்பவற்றைத் தாங்கிக்கொண்டு எவ்வாறு உணவைக்கூட எவ்வாறு பெற்றுக்கொள்வது? பிள்ளைகளும் பெற்றோர்களும் இருக்கின்ற குடும்பங்களில் இந்த ரூபா 60,000/- உயிர்வாழப் போதாதென்பதால் பாட்டிமார்களும்கூட வேலைதேடிச் செல்கிறார்கள்.
எமது மனைப்பெண்கள், பெண்கள், குடும்ப அமைப்பு அத்தகைய நெருக்கடிக்குள் இருப்பதோடு திடீரென நோயுற்றால் அரசாங்க வைத்தியசாலையில்கூட செய்துகொள்ள முடியாத பரிசோதனைகளை தனியார் துறையில் செய்துகொள்ள வேண்டும். மருந்துகளை விலைக்குவாங்க வேண்டும். இதனால் வருடத்தின் பின்னரைப்பகுதியில் தங்க ஆபரணங்களை அடகுவைத்து கடன்பெறுதல் பெருமளவில் அதிகரித்துள்ளது. முன்னர் தங்க நகைகளை அடகுவைத்து கடன்பெற்றது அவசரத் தேவைகளுக்காகவே. ஆனால் தற்போது அன்றாட உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக, லயிற் பில் கட்டுவதற்காக அடகுக்கடன் பெறவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
பாடசாலைத் தவணையை புதிதாக தொடங்கும்போது புதிய புத்தகப் பட்டியலுக்கு ரூபா இருபதாயிரம் தொடக்கம் இருபத்தையாயிரம்வரை பணத்தை செலவிட நேர்ந்துள்ளது. இரண்டு மூன்று பிள்ளைகள் இருக்கின்ற குடும்பங்கள் இந்த சுமையை எவ்வாறு தாங்கிக்கொள்வது? எமது குடும்பங்களில் உடல்ரீதியான அழுத்தத்திற்கு, உளரீதியான அழுத்தத்திற்கு இலக்காகி குடும்ப உறவுகளைப் பேணிவருவதும் சிக்கலாக மாறியுள்ளது. சமூக உறவுகள் முற்றாகவே சிதைவடைந்துவிட்டன. சேகரிக்கப்படவேண்டியபோதிலும் சேகரித்துக் கொள்ளப்படாத வரி 900 பில்லியன் ரூபாவை விஞ்சியுள்ளதென ஒருசில அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன. சாதாரண பொதுமக்கள் மீது புதிதாக வற் வரி விதிப்பது இதோ இந்த விதத்தில் ஊழல், திருட்டு, மோசடிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள இடமளித்துள்ள பின்னணியிலேயே ஆகும். தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் என்றவகையில் முழுநாட்டினதும் பெண்களாகிய நாங்கள் நாட்டின் பெண்களை உள்ளிட்ட அனைவருக்கும் விழிப்புணர்வூட்டி முன்நோக்கி நகர்கின்றோம். தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக அச்சமின்றி இந்த பயணத்தை தொடர வருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். மகிழ்ச்சி என்பது எமது உரிமையாகும். ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் எம்மீது தொடர்ச்சியாக சுமத்துகின்ற இந்த வரிகளை மௌனமாக இனிமேலும் தாங்கவேண்டியதில்லை.
“சர்வதேசத்திற்கு ஐ.எம்.எஃப். இற்கு மெஜிக் காட்டி மகிழ்விக்கின்ற அடிப்படையில் அரசாங்கம் செயலாற்றி வருகின்றது.“
–தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய–
ஒரு நாட்டின் வரிக்கொள்கையை நடைமுறைப்படுத்துகையில் கவனத்திற் கொள்ளவேண்டிய சில அடிப்படை விடயங்கள் உள்ளன. நியாயமானதாக அமைதல், ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக அமைதல், வெளிப்படைத்தன்மை கொண்டதாக அமுலாக்குதல், முறைகேடுகள் குறைவடையத்தக்கதாக அமுலாக்குதல் மற்றும் வரி செலுத்துபவர்களுக்கு நன்மைகள் கிடைக்கின்றவகையில் அமைதல் வேண்டும். இந்த எந்தவிதமான கோட்பாடும் இன்றளவில் எமது நாட்டில் அமுலில் இல்லை. இன்றளவில் மிகவும் அநீதியானவகையில் அமுலாக்கப்பட்டுள்ள வரிக்கொள்கையின் அடிப்படையில் வற்வரி விதிக்கப்பட்டுள்ளது. இற்றைக்கு இரண்டு வருடங்களாக அமுலில் உள்ள பொருளாதாரத்தைச் சுருக்குகின்ற கொள்கைக்குள் மக்களின் கொள்வனவு ஆற்றல் முற்றாகவே அழிக்கப்பட்டுவிட்டது. பொருளாதாரத்தில் பங்கேற்பதற்கான ஆற்றல் மக்களுக்கு முடக்கப்பட்டு பயணிக்கின்ற இந்த பயணம் மக்களின் பக்கத்தில் அல்ல. இன்றளவில் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இந்த அரசாங்கம் வரி மற்றும் பொருளாதாரம் பற்றி சிந்திப்பது கணக்குகளை இணக்கஞ்செய்யும் பக்கத்தில் இருந்து மாத்திரம்தான். பொருளாதாரம் இறுதியாக தாக்கமேற்படுத்துகின்ற மனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த பிரசைகள் பற்றி எந்தவிதமான கரிசனையும் கிடையாது. மனிதர்களும் வெறுமனே புள்ளிவிபரங்கள் மாத்திரமே என ஆட்சியாளர்கள் நினைப்பார்களாயின் அத்தகைய ஆட்சியாளர்கள் இவ்விதமான பொருளாதார தீர்மானங்களைத்தான் எடுப்பார்கள். இந்த அரசாங்கத்திற்கு மனிதர்கள் அல்லது மனிதர்கள் உயிர்வாழ்வது பற்றி எந்தவிதமான ஏற்புடைமையும் கிடையாது. சர்வதேசத்திற்கு ஐ.எம்.எஃப். இற்கு மெஜிக்காட்டி மகிழ்விக்கின்ற அடிப்படையில் அரசாங்கம் செயலாற்றி வருகின்றது.
புதிதாக விதித்த வரி காரணமாக மக்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதைப்போலவே ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் பாரிய தாக்கம் ஏற்படுகின்றது. எல்லாவற்றையும் வெட்டிவிட்டு ஆகக்குறைந்ததில் சீவிப்பது பற்றியே எல்லோரும் சிந்திக்கிறார்கள். தேங்காய் சம்பலுக்ககு வெங்காயம் போடுவது எப்படியென மனைப்பெண்கள் சிந்திப்பது போன்றே பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலதிபர்களும் சிந்திக்கிறார்கள். இதுவரை பெற்றோர்கள் “என்ன செய்யாவிட்டாலும் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும்” என நினைத்தார்கள். ஆனால் இன்றளவில் பிள்ளைகளை கல்வியில் இருந்து வெளியேற்றுகிறார்கள். எப்படியாவது வருமானத்தை தேடிக்கொள்ளும் இடத்திற்கு 15 – 16 வயதுடைய பிள்ளைகள் வழிப்படுத்தப்பட்டுள்ளார்கள். மக்களின் அன்றாட அழுத்தங்கள் பற்றி எந்தவிதமாக கூருணர்வுமற்றவர்கள் என்பது அவர்கள் சொல்கின்ற செய்கின்றவற்றிலிருந்து தெளிவாகின்றது.
மாற்றீடு கிடையாதென சனாதிபதி கூறுகின்ற கதை அயோக்கியத்தனமான கதையாகும். எந்தவொரு பிரச்சினைக்கும் மாற்றீடு இருக்கின்றது, பதில் கிடைக்கின்றது. எந்த மாற்றீட்டினை தெரிவுசெய்வது என்பது தீர்மானிக்கப்படுவது நாங்கள் வகிக்கின்ற கருத்தியல் மற்றும் மக்களுடன் நிலவுகின்ற தொடர்பின் அடிப்படையிலாகும். மக்கள் மீது சுமையேற்ற வேண்டுமென்ற முடிவினை ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றின்கீழ் நியாயமான வரித்திட்டமொன்றை உருவாக்குதல், வரி காரணமாக பொருளாதாரம் சுருங்காமை மற்றும் வரிமுறைமையை வெளிப்படைத்தன்மை கொண்டதாக அமுலாக்குவதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பாவனையாளரிடமிருந்து அறவிடப்படுகின்ற வற் வரி அதேவிதத்தில் திறைசேரியை சென்றடைகின்றதா என்பதை ஆராய்வதற்கான முறையியல்கள் இருக்கின்றனவா? மக்களை வரிச்சுமையால் பிழிந்தெடுத்தபோதிலும் அந்த வரியை திறைசேரிக்கு எடுப்பதற்கான தொழில்நுட்பம் அமுலாக்கப்படவில்லை. தொடர்ந்தும் தமது அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்வது பற்றி மாத்திரமே அவர்கள் சிந்திக்கிறார்கள். இந்த நாட்டுப் பெண்கள் துணிச்சல்மிக்க, திராணியுள்ளவர்கள் என்பதை வரலாற்றுக்காலம் பூராவிலும் நிரூபித்துள்ளார்கள். எமது நாடு அபாயநேர்வினை சந்தித்த எல்லாவேளைகளிலும் பெண்கள் முன்னணிக்கு வந்துள்ளார்கள். மீண்டும் அத்தகைய தருணமொன்று வந்துள்ளது. பெண்களாகி நாங்கள் தலைமைத்துவம் பெறவேண்டும். மேலும் ஒழுங்கமைந்து இந்த வருடத்தில் மூர்க்கத்தனமான ஆட்சியை முடிவுறுத்துவதற்காக முனைப்பாக முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளக்கான பதில்கள்…
கேள்வி: வற்வரியை சில காலத்திற்காக விதித்துள்ளதாக சனாதிபதியை உள்ளிட்ட அரசாங்கம் கூறுகின்றது. அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா?
பதில்: எமது நாட்டில் வரிக்கொள்கை குறைந்த இடைவெளியில் மாற்றப்படுகின்றது. அவ்வாறு மாற்றுவதே ஒரு பிரச்சினையாகும். நிலையான வரிக்கொள்கையொன்று இல்லாமை பாரிய பிரச்சினையாகும். மறுபுறத்தில் வரி அறவிட்டு பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது. வரி என்பது ஒட்டுமொத்த பொருளாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். வருமானத்தை சேகரிக்கின்ற ஒரே மார்க்கம் வரியெனில் அந்த பொருளாதாரத்தினால் கரைசேர முடியாது. கடன் சுமை மற்றும் பொருளாதாரம் சுருங்குதல் ஆகிய இரண்டு பிரதான சிக்கல்களை நாங்கள் எதிர்நோக்கிஇருக்கிறோம். வருமானத்தை தேடுகின்ற ஒரே மார்க்கம் வரி என நினைப்பதாயின் அதைப்போன்ற முட்டாள்த்தனமான சிந்தனை வேறோன்றும் கிடையாது.
கேள்வி: வயது 18 வருடங்களுக்கு மேற்பட்டவர்களுக்கு வரி அறவிடுவதற்கான பின் இலக்கமொன்று வழங்கப்பட வேண்டுமென விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படுகின்ற பிரதிவிளைவுகள் என்ன?
பதில்: பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு இலக்காகியுள்ள வேளையில் மக்கள் ஒரு திட்டத்திற்குள் சேர்த்துக்கொள்ளவேண்டிய திட்டமொன்று அரசாங்கத்திற்கு இருக்கின்றது. தொடர்ச்சியாக தலைக்கனத்தை வெளிக்காட்டுகின்ற அரசாங்கத்தினால் மக்களை ஒன்றுசேர்த்துக்கொண்டு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது. ஒட்டுமொத்தமாக டெக்ஸ் பைஃல் ஒன்று இருப்பதை ஏற்றுக்கொள்ளமுடிந்தபோதிலும் எமது நாட்டுக்கு அதனை அறிமுகஞ் செய்வது மனிதர்களின் வாழ்க்கையை மிகவும் குழப்பியடித்து துன்பத்தில் ஆழ்த்தியுள்ள பின்னணியிலாகும்.
-Colombo, January 04, 2024- தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்றவகையில் நிகழ்காலத்தில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் பற்றியும் வெலிகமவில் இடம்பெற்ற பொலீஸ் உத்தியோகத்தரின் படுகொலை சம்பந்தமாகவும் விழிப்புணர்வூட்டுவதற்காகவே இந்த ஊடக சந்திப்பு நடைபெறுகின்றது. தேசிய மக்கள் சக்தி கொள்கையென்றவகையில் ஊழல், மோசடி, குற்றச்செயல்களை கண்டிக்கின்ற ஓர் இயக்கமாகும். பாதாள உலகிற்கு, போதைத் தூளுக்கு, போதைப் பொருட்களுக்கு எதிராக பொலீஸாரினால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு சட்டத்தரணிகள் என்றவகையிலும் தேசிய மக்கள் சக்தி என்றவகையிலும் எமது ஒத்துழைப்பு கிடைக்கின்றது. எமது அரசாங்கத்தின் […]
-Colombo, January 04, 2024-
தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்றவகையில் நிகழ்காலத்தில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் பற்றியும் வெலிகமவில் இடம்பெற்ற பொலீஸ் உத்தியோகத்தரின் படுகொலை சம்பந்தமாகவும் விழிப்புணர்வூட்டுவதற்காகவே இந்த ஊடக சந்திப்பு நடைபெறுகின்றது. தேசிய மக்கள் சக்தி கொள்கையென்றவகையில் ஊழல், மோசடி, குற்றச்செயல்களை கண்டிக்கின்ற ஓர் இயக்கமாகும். பாதாள உலகிற்கு, போதைத் தூளுக்கு, போதைப் பொருட்களுக்கு எதிராக பொலீஸாரினால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு சட்டத்தரணிகள் என்றவகையிலும் தேசிய மக்கள் சக்தி என்றவகையிலும் எமது ஒத்துழைப்பு கிடைக்கின்றது. எமது அரசாங்கத்தின் கீழும் இந்த பாதாள உலகத்தை அடக்குவதற்காக சரிவர முன்நோக்கிச்செல்லத் தயார்.
இலங்கை பொலீஸார் மிகவும் திறமையான ஒரு குழுவென்பதோடு எந்தவொரு குற்றச்செயலையும் கண்டுபிடிக்கவல்ல ஆற்றல் படைத்ததாகும். அதைப்போலவே அவசியமான உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றன. எனினும் பொலீஸாரால் கண்டுபிடிக்க இயலாமல் போன ஒவ்வொரு குற்றச்செயலின் பின்னாலும் அரசியவாதியொருவர் இருக்கிறார். நாங்கள் இந்த இடத்தில் போதைப்பொருள் தலைப்பினை சுருக்கி எடுத்துக்கொள்கிறோம். லங்காதீப செய்தித்தாளில் அண்மையில் வெலிகம சம்பவம் தொடர்பாக தலைப்புச் செய்தியில் ” “பொலீஸாரால் பொலீஸாருக்கு” துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நாங்கள் இதுவரை வரலாற்றில் இராணுவத்தினால் இராணுவத்திற்கு துப்பாக்கிப் பிரயோகம்செய்து அல்லது பொலீஸாரால் பொலீஸார்மீது துப்பாக்கிப் பிரயோகம்செய்து மனிதப்படுகொலை செய்யப்பட்டமையைக் கேள்விப்படவில்லை. பொலீஸிற்குப் பொறுப்பான அமைச்சர் இந்த செயல் சம்பந்தமாக நட்டஈடு வழங்குவதாகவும் அமைச்சரும்கூட உயிரைத் தியாகம்செய்து செயலாற்றத் தயார் எனவும் நாங்கள் தொலைக்காட்சி செய்திகள் மூகமாகக் கண்டோம். பொலீஸிற்கப் பொறுப்பான அமைச்சரின் ஒரு யுனிற் மற்றுமொரு யுனிற்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தமையே இந்த சம்பவம். அதாவது வலது கையால் இடது கைமீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தமையாகும். இந்த சம்பவத்தின்போது அமைச்சர் மார்தட்டிக்கொள்ளலோ அல்லது உயிர்த்தியாகத்துடன் செயலாற்றுகிறார் என்றோ கூறிவிட இயலாது. இத்தகைய பாரதூரமான குற்றச் சம்பவமொன்று எவ்வாறு இடம்பெற்றதென்பது பற்றி தெளிவான விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டே ஆகவேண்டும்.
இறந்த பொலீஸ் உத்தியோகத்தரின் குடும்பத்தவர்களுக்கு இறப்பு சம்பந்தமாக நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்தால் இந்த நட்டஈட்டு வழக்கின் பிரதிவாதிகளாக மாறப்போவது யார்? இவ்விதமாக சட்டத்தைக் கையிலெடுத்து, சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி, அரசியல்வாதிகளுக்கு தேவையானவகையில் “யுக்திய” (நீதி) தொழிற்பாட்டின் நடவடிக்கைகளை அமுலாக்கி மேற்கொள்கின்ற குற்றச்செயல்களுக்கு எமது எதிர்ப்பினையும் விமர்சனத்தையும் முன்வைக்கிறோம். இந்த செயல்களை இடைநிறுத்துதல் மேற்கொள்ளப்படல் வேண்டும். நாட்டு மக்களை அச்சுறுத்துவதற்காக ஆயுதங்களை கொண்டு வருதல், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளல், நீதித்துறை சாராத இறப்புகளுக்காக செயலாற்றுதல் போன்ற அரச பயங்கரவாதம் அமுலாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற இந்த செயற்பாட்டினை தேசிய மக்கள் சக்தி வன்மையாக கண்டிக்கின்றது. போதைப்பொருட்களையும் குற்றச்செயல்களையும் நிறுத்துவதற்காக நீங்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரே குழு தேசிய மக்கள் சக்தியுடன் மாத்திரமே இருக்கின்றது என்பதைக் கூறவேண்டியுள்ளது.
“நீதியின் பெயரால் அநீதி இடம்பெற இடமளித்தலாகாது. இந்த மண்ணில் நீதியை நிலைநாட்டுவது நீதிமன்றமேயொழிய பொலீஸ் அல்ல.“
–சட்டத்தரணி அகலங்க உக்வத்த–
தொழில்சார் சட்டத்தரணிகள் என்றவகையிலும் தேசிய மக்கள் சக்தி என்றவகையில் எமது கூட்டமைவும் நீதி பரிபாலனத்திற்காக மோசடிகள், ஊழல்கள், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகம் போன்ற ஒட்டுமொத்த குற்றச் செயல்களையும் தடுப்பதற்காக மேற்கொள்கின்ற செயல்களுக்கு எமது பாராட்டுக்களையும் அதற்கான எமது ஒத்துழைப்பினையும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நீதிக்குள் பதில் பொலீஸ் மா அதிபரின் பதிற்கடமைக்குள் நீதிக்காக அநீதி ஏற்படுமாயின் அதற்காக குரல்கொடுப்பதற்கான உரிமை சட்டத்தரணிகள் என்றவகையில் எமக்கு இருக்கின்றது. “ஏதேனுமிடத்தில் இடம்பெறுகின்ற அநீதி எல்லாவேளையிலும் நீதிக்கு எதிராக இடம்பெறுவதாகும்” என மார்டின் லூதர் கிங் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு விடயங்களை நான் கேள்விக்குறியாக சுருக்கமாகக் காட்டுகிறேன். அமைச்சரினதும் பதிற்கடமையாற்றுகின்ற பொலீஸ் மா அதிபரினதும் 2006 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதிக்குள் அவர் மிரிஹானையின் எஸ்.எஸ்.பி. அவர் நுகேகொட டிவிஷனில் இருந்து தென்மாகாண நடவடிக்கைக்காக சென்று அதைப்போலவே இருவரோ அல்லது ஒருவரோ படுகொலை செய்யப்பட்டார். அவ்வேளையில் 2006 தொடக்கம் 2009 வரை இருந்த ஐ.ஜீ. தான் திரு. இலங்கக்கோன். “ஏதேனும் சந்தர்ப்பத்தில் தனது பொலீஸ் ஆளுகைப் பிரதேசத்திற்கு வெளியில் சென்று சுற்றிவளைப்பொன்றை மேற்கொள்வதாயின் கட்டாயமாக பிரதேச பொலீஸ் ஆளுகை எல்லைக்குள் இருக்கின்ற பொலீஸ் நிலையத்திற்கு விழிப்புணர்வூட்டுதல் வேண்டும்” என அன்று புரிந்த அந்த தவறுக்காக திரு. இலங்கக்கோன் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டார். தற்போது தேசபந்து தென்னக்கோன் பதிற்கடமையாற்றுகின்ற பொலீஸ் மா அதிபரென்றவகையில் இருக்கின்றவேளையில் தனக்கு அன்று இடம்பெற்ற தவறுடன் தொடர்புடைய சுற்றிக்கையை மீண்டும் அவராலேயே மீறப்பட்டுள்ளது. அவர் பொலீஸின் மிகவும் உயர்ந்த அதிகாரியாவார். பொலீஸ் மா அதிபர் விடுத்துள்ள கட்டளைச்சட்டத்திற்கு ஐ.ஜீ. மாத்திரமன்றி பதில் ஐ.ஜீ. உம் கடப்பாடு கொண்டுள்ளார்கள். டீ.ஐ.ஜீ., ஏ.எஸ்.பி. போன்ற கீழ் மட்டத்திலுள்ள உத்தியோகத்தர்கள் அனைவரும் கடப்பாடு கொண்டவர்களாவர். ஐ.ஜீ. இற்கு எந்தவிதமான சிறப்புரிமையும் கிடையாது. விடுபாட்டுரிமையும் கிடையாது.
வெலிகம சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றவியல் பிரிவின் கே.டி.எச் வாகனமொன்றில் வந்த சம்பந்தப்பட்ட டபிள்யு ஃபிப்டீன் எனும் ஹோட்டலில் சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொள்கின்ற தருணம்பற்றி வெலிகம பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை. ஊடகப் பேச்சாளரின் முதலாவது நிலைப்பாடாக அமைந்தது சம்பந்தப்பட்ட போதைத்தூள் வியாபாரியின் கையாட்களும் அவருடன் தொடர்பினை பேணிவந்த ஒருவரும் மாத்தறை தெற்கு பிரதேசத்தைச்சேர்ந்த இருவரில் ஒருவர் அந்த இடத்தில் தங்கி இருந்தார். அதனால் 2023 திசெம்பர் 31 அந் திகதி இரவில் அதிகாலையில் அங்கு சென்றார். அந்த ஹோட்டல் திசையில் இருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு அவர்கள் பிரதிபலிப்புச் செய்தார்கள். எனினும் இந்த புலன்விசாரணையின்போது ஹோட்டல் திசையிலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை என்பது வெளியாகியது. ஹேட்டலில் தங்கி இருந்தவர்கள் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் பற்றிய பிரச்சினை வந்ததும் 119 இற்கு அழைத்துள்ளார்கள். 119 இல் வெலிகம பொலீஸுடன் தொடர்புகொண்ட பின்னர் வெலிகம பொலீஸார் அத்தருணமாகும்வேளையிலும் யுக்திய நடவடிக்கைக்கு இராணுவ உத்தியோகத்தர்களை இணைத்துள்ளார்கள். அவர்கள் வந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டிருந்த வேன்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்கள். இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர்கள் தப்பியோடுகிறார்கள். இறுதியாக இமதூவவில் அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலில் பிரவேசித்தவேளையில் அந்த இடத்தில் இருந்த உத்தியோகத்தர் இந்த வாகனத்தை நிறுத்துகிறார். வாகனத்தின் பின்புறத்தில் இரத்தம் பெருக்கெடுத்த ஒருவரையும் உயிருடன் போராடிக்கொண்டிருந்த ஒருவரையும் கண்டுள்ளார். அந்த உத்தியோகத்தர் வாகனத்தைச் செல்லவிடாமல் அம்பியுலன்ஸ் வண்டியொன்றை அழைப்பித்து காயமுற்றவர்களை வைத்தியசாலைக்கு அனுப்புகிறார். வாகனத்தை விடுவித்தல் சம்பந்தமாக சீ.சீ.ரீ.வீ. இன் பிரதான பணிப்பாளரின் அழைப்பொன்று கிடைத்தமைக்கான தகவல்கள் இருக்கின்றன.
இந்த இடத்தில் கேள்வியொன்று இருக்கிறது. கராபிட்டிய வைத்தியசாலைக்குச் செல்ல ஏன் இமதூவவிற்கு போட்டார்கள்? மனிதனொருவன் உயிருக்காக பேராடிக்கொண்டிருக்கையில் வைத்தியசாலைக்கு அனுப்புவதென்றால் அருகில் உள்ள வைத்தியசாலைக்கா அனுப்பவேண்டும், அல்லது தொலைவில் உள்ள வைத்தியசாலைக்கா? அருகிலேயே மாத்தறை மற்றும் வெலிகம வைத்தியசாலைகள் இருக்கின்றன. இமதூவ வரை வருகின்றமை எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. எமக்கு இருக்கின்ற பிரச்சினை என்னவென்றால் (யுக்திய) நீதியின் மறைவில் மேற்கொள்ளப்படுகின்ற (அயுக்திய) அநீதியாகும். கிடைத்துள்ள தகவல்களின்படி கே.டீ.எச். இல் உள்ள நம்பர் பிளேற் கூட போலியானதாகும். இமதூவவில் நிறுத்தியிராவிட்டால் இந்த சம்பவம் முற்றாகவே மூடிமறைக்கப்பட்டிருக்கும். வெலிகம பொலீஸார் வந்திராவிட்டால், பொலீஸாருக்கும் பொலீஸாருக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றிராவிட்டால், ஹோட்டலில் எவராவது இறந்திருப்பின், அந்த பொறுப்பினை ஏற்பது யார்? அது களத்திற்கு வரமாட்டாது. இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க ஊடகப் பேச்சாளருக்குத் தெரியாது.
எஸ்.சீ.எஃப்.ஆர். அடிப்படை உரிமை வழக்கில் 107/2011 இன் கீழ் பதில் பொலீஸ் மா அதிபருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் கட்டளையொன்று பிறப்பிக்கப்பட்டது. சொந்தப்பணத்தில் ஐந்துஇலட்சம் ரூபா செலுத்துமாறு கூறப்பட்டது. மிகவும் கொடூரமாகவும் மனிதாபிமானமற்றவகையிலும் நடத்தியதாக அந்த மனுதாரர்கள் கூறினார்கள். அப்படிப்பட்ட ஒருவரை பொலீஸ் அமைச்சரால் பாதுகாக்க முடியுமா?
தேசபந்து தென்னக்கோன் மேல்மாகாண வடக்குப் பிரிவுக்குப் பொறுப்பாக 2015 இல் நியமிக்கப்பட்டார். தற்போது 09 வருடங்களாகின்றன. இந்த போதைப்பொருள் நடவடிக்கையை மேற்கொள்ள பொலீஸ் மா அதிபராகவே வேண்டுமா? இந்த பதில் பொலீஸ் மா அதிபரை எந்தகைய நிலைமையிலும் நீக்க இடமளிக்கமாட்டேன் என பொலீஸிற்குப் பொறுப்பான அமைச்சர் பகிரங்கமாகவே கூறினார். எனினும் உயர்நீதிமன்றம் SCFR/107/2011 இலக்கமுடைய அடிப்படை உரிமைகள் வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம் தேசபந்து தென்னக்கோனுக்கு குற்றத்தீர்ப்பளித்து கொடூரமாகவும் நிந்திக்கத்தக்கவகையிலும் செயலாற்றியுள்ளதாக தீர்ப்பளித்தது. முறைப்பாட்டாளருக்கு சொந்தப்பணத்தில் ஐந்து இலட்சம் ரூபா நட்டஈட்டினை செலுத்தி அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தினால் இத்தகைய தீர்ப்பளிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரை பொலீஸில் வைத்துக்கொள்ளலாமா? அவ்வாறான தீர்ப்பு வேறோருவருக்கு வந்திருந்தால் பதவியிறக்கம் செய்வார்கள். அதைப்போலத்தான் மே 09 ஆந் திகதி போராட்டம்மீது தாக்குதல் நடாத்தியமை போன்றே சனாதிபதி மாளிகையில் இருந்து கண்டெடுத்த பணத்தை முறையான செயற்பாங்கின் மூலமாக கையளிக்காமையுடன் தொடர்புடைய இரண்டு வழக்குகள் அவருக்கு எதிராக நிலவுகின்றன.
இவ்வாறான ஒருவரை பதில் பொலீஸ் மா அதிபராக நியமித்து எந்தவொரு நிலைமையின்கீழும் அந்த பதவியில் இருந்து நீக்கமாட்டேன் என அரசியல் தலைமை கூறுகின்றது. அப்படிப்பட்ட ஒரு நாட்டுக்கு நீதிமன்றம் எதற்காக? நாட்டின் தலைவர் பிணைமுறி சம்பந்தமான குற்றச்சாட்டுக்கு இலக்காகி, அரசாங்கக்கட்சி முதற்கோலாசான் கப்பம் வாங்கியமைக்காக குற்றவாளியாகி, மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பயங்கரவாத அமைப்பொன்றுக்கு நிதி வழங்கி இருக்கையில், பொலீஸ் மா அதிபர் அடிப்படை உரிமைகளை மீறியிருக்கையில் தொடர்ந்தும் அவர்கள் நாட்டை ஆட்சிசெய்வதனால் குடிமகனுக்கு நீதி கிடைக்குமா? பொலீஸாரால் நீதியை நிலைநாட்ட முடியாது, அதற்காகவே நீதிமன்றம் இருக்கின்றது. சம்பந்தப்பட்ட புலன்விசாரணைகளை முறைப்படி மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவே பொலீஸ் இருக்கின்றது. இந்த மண்ணில் நீதியை நிலைநாட்டுவது நீதிமன்றமேயன்றி பொலீஸ் அல்ல. யுக்திய (நீதி) நடவடிக்கை எனும் பெயரால் கைதுசெய்யப்படுகின்ற ஒவ்வோர் ஆளும் சந்தேகிக்கப்படுகின்ற ஒருவரேயன்றி குற்றவாளியல்ல. எப்படிப்பட்ட கூத்தினை நடாத்தியேனும் பதில் பொலீஸ் மா அதிபர் பொலீஸ் மா அதிபராவது பெரியதொரு செயலா? வெலிகமவில் சூடுபட்டு பொலீஸ் உத்தியோகத்தர் உபுல் சமிந்தவின் பிள்ளைகளுக்கு தந்தையை இழக்கச்செய்வித்து தேசபந்து தென்னக்கோன் பொலீஸ் மா அதிபராகவேண்டியது பெரிய விடயமா? அந்த மனைவிக்கு கணவனை இழக்கச்செய்வித்து தேசபந்து பொலீஸ் மா அதிபராவது பெரிய விடயமா? எமது கேள்வி அதுதான்.
“மனித உயிர்களை புழுதியாக மாற்றுகின்ற போதைப்பொருள் தொல்லையில் இருந்து நாட்டைக் காப்பாற்றவேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டுதான் நாங்கள் இங்கு பேசுகிறோம்.“
–தேசிய மக்கள் சக்தி சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி சுனில் வட்டகல–
வெலிகம சம்பவம் தொடர்பாகவும் சர்ச்சைக்குரிய நடவடிக்கை சம்பந்தமாகவும் நிலவுகின்ற சட்டரீதியான கோட்பாடு என்ன? வெலிகம துப்பாக்கிச் சூட்டின் மறைவில் இருக்கின்ற கதையைப் பற்றி பிரதான ஊடகத்தில் போலவே சமூக வலைத்தளங்களிலும் பாரிய கதைகள் அடிபடுகின்றன. இந்த ஊடகங்களில் தோன்றியுள்ள உரையாடல்களில் வெளியாகின்ற விடயங்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்படுகின்ற விசாரணை என்ன?
வெலிகம துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் தெகிவல ஹோட்டலொன்றை இடித்து அகற்றுகின்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. அந்த ஹோட்டல் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் பொலீஸ் அமைச்சர் சரத் வீரசேகர, மதுர விதானகே, ஜயந்த கெட்டகொட, ஏ.எம்.எஃப். பௌஸி போன்ற முன்னாள் அமைச்சர்களின் பங்கேற்புடன் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. ஹோட்டல் சம்பந்தமாக பெறப்படவேண்டிய அனைத்து அனுமதிப் பத்திரங்களையும் பெற்றுள்ளதாக ஹோட்டல் தொடர்பில் விடயங்களை முன்வைக்கின்ற தரப்பினர்கள் கூறுகிறார்கள்.
அதைப்போலவே மேலும் மூன்றாவது சம்பவமொன்றும் இருக்கின்றது. அந்த சம்பவம் நாட்டு மக்களில் மிகஅதிகமானோரைப் பாதிக்கின்றது. மனித உயிர்களை புழுதியாக மாற்றுகின்ற போதைப்பொருள் தொல்லையில் இருந்து நாட்டைக் காப்பாற்றவேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டுதான் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகளாகிய நாங்கள் இங்கு பேசுகிறோம். ஆனால் தற்போது இடம்பெறுவதோ போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பற்ற ஆட்களைக்கூட பொலீஸ் நிலையங்களில் தடுத்துவைத்தலாகும். தாம் வசிக்கின்ற பிரதேசத்தில் பொதுமக்களுக்காக மனுக்களில் கையொப்பம்பெற்ற பெண்களைக்கூட போதைப்பொருள் குற்றச்சாட்டின்பேரில் பொலீ்ஸ் நிலையங்களில் தடுத்து வைத்திருக்கிறார்கள். இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற பாரிய அரசாங்க எதிர்ப்பினைச் சுற்றிக் குழுமிவருகின்ற மக்களை பயமுறுத்துகின்ற கதவினைத்தான் இவர்கள் தட்டிவருகிறார்கள்.
மின்சார சபையை துண்டாடி விற்பனை செய்வதற்கு எதிராக பாரிய எதிர்ப்பு இயக்கமொன்று நடாத்தப்பட்டு வருகின்றது. அவர்களை பயமுறுத்த பொய்யான சுற்றறிக்கைகளை வெளியிடுகிறார்கள். போதைப்பொருள் நடவடிக்கையின் நாமத்தால் அவ்வாறான நடவடிக்கையைத்தான் இவர்கள் புரிந்து வருகிறார்களா எனும் பாரிய சந்தேகம் எமக்கு நிலவுகின்றது. மனிதர்களை பாரியளவில் பயமுறுத்தி வைக்க முன்னெடுத்து வருகின்ற முயற்சியா எனும் சந்தேகம் எம்மிடம் நிலவுகின்றது.
வெலிகம நடவடிக்கையை உள்ளிட்ட நடவடிக்கைகளின்போது இந்துருவே ஆச்சாரிக்கு நேர்ந்த சம்பவத்தைப்போன்ற ஒன்றுதான் நேர்ந்துள்ளது. நீதிமன்றத்திடமிருந்து பெற்ற “A” அறிக்கையொன்றைக்கூட பெறாமலேயே வெலிகம நடவடிக்கைக்கு வெளியிடத்திலிருந்து பொலீஸ் உத்தியோகத்தர்கள் அனுப்பப்படுகிறார்கள். ஹோட்டலை இடித்து தகர்ப்பதற்காக பெறப்பட்ட நீதிமன்றக் கட்டளை இருக்கவில்லை. யுக்திய (நீதி) எனும் பதத்தை முன்னால் போட்டுக்கொண்டு வேறு நடவடிக்கைகள், குறுகிய தனிப்பட்ட நோக்கங்களை ஈடேற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார்களா எனும் சந்தேகத்தை தேசிய மக்கள் சக்தி கிளப்புகின்றது. முன்னெடுத்து வருகின்ற இந்த செயற்பாடுகள் ஊடாக சனநாயகத்தை சட்டத்தின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துகிறார்களா எனும் பாரிய சந்தேகம் எம்மிடம் நிலவுகின்றது.
-Colombo, January 03, 2024- கிளிநொச்சி வலைபாடு பகுதியில் பொன்னாவேலி கிராமத்தில் அத்துமீறிய சுண்ணாம்புக்கல் அகழ்வுக்கு எதிராக போராடும் “அனைத்து மக்கள் ஒன்றியத்தின்” தலைவர் உள்ளிட்டோர் இன்று(03) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அனுர திசாநாயக்கவை சந்தித்தனர். தொடர்ந்தும் 150 நாட்களுக்கு மேலாக பொன்னாவெளி உள்ளிட்ட 05 கிராமத்து மக்கள் அக்கிராமங்களையும் சூழலையும் பாதுகாத்துக் கொள்வதற்காக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்…
-Colombo, January 03, 2024-
கிளிநொச்சி வலைபாடு பகுதியில் பொன்னாவேலி கிராமத்தில் அத்துமீறிய சுண்ணாம்புக்கல் அகழ்வுக்கு எதிராக போராடும் “அனைத்து மக்கள் ஒன்றியத்தின்” தலைவர் உள்ளிட்டோர் இன்று(03) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அனுர திசாநாயக்கவை சந்தித்தனர். தொடர்ந்தும் 150 நாட்களுக்கு மேலாக பொன்னாவெளி உள்ளிட்ட 05 கிராமத்து மக்கள் அக்கிராமங்களையும் சூழலையும் பாதுகாத்துக் கொள்வதற்காக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்…
-Colombo, January 02, 2024- ‘நாட்டுக்கு கூறாமல் மறைக்கின்ற விற்றுத் தீர்ப்பதன் உண்மைநிலை’- கருத்தரங்கு , கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரி இந்த வருடம் எமது நாடடு மக்களுக்கு மிகவும் தீர்வுக்கட்டமான வருடமாகும். இதுவரை முன்னெடுத்துவந்த பயணத்தை துரிதப்படுத்தி எமது நாட்டின் தேசிய சொத்துக்களை அழிவின் விளிம்பிற்கு எடுத்துச்செல்ல அரசாங்கம் தயாராகி வருகின்றது. சனவரி மாதத்திற்குள் மின்சார சபையை துண்டாடி விற்பனை செய்வதற்கு அவசியமான சட்டம், காப்புறுதிக்கூட்டுத்தாபனம், ரெலிகொம் நிறுவனம் போன்ற நிறுவனங்களை விற்பனை செய்வதற்கான செயற்பாங்கினை […]
-Colombo, January 02, 2024-
‘நாட்டுக்கு கூறாமல் மறைக்கின்ற விற்றுத் தீர்ப்பதன் உண்மைநிலை’- கருத்தரங்கு , கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரி
இந்த வருடம் எமது நாடடு மக்களுக்கு மிகவும் தீர்வுக்கட்டமான வருடமாகும். இதுவரை முன்னெடுத்துவந்த பயணத்தை துரிதப்படுத்தி எமது நாட்டின் தேசிய சொத்துக்களை அழிவின் விளிம்பிற்கு எடுத்துச்செல்ல அரசாங்கம் தயாராகி வருகின்றது. சனவரி மாதத்திற்குள் மின்சார சபையை துண்டாடி விற்பனை செய்வதற்கு அவசியமான சட்டம், காப்புறுதிக்கூட்டுத்தாபனம், ரெலிகொம் நிறுவனம் போன்ற நிறுவனங்களை விற்பனை செய்வதற்கான செயற்பாங்கினை மேற்கொள்ள உள்ளது. அதற்கு எதிராகத் தோன்றுகின்ற மக்கள் ஆர்ப்பாட்டங்களை அடக்கியாள்வதற்கான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், சமூக வலைத்தளங்களை அடக்கியாள்வதற்கான சட்டம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த நாட்டை மீளத்திருப்ப முடியாத விதத்திலான பாரிய பல செயற்பாடுகளை வேகமாக மேற்கொள்ள அரசாங்கம் தயாராகி வருவதோடு ஓர் அரசியல் இயக்கமென்றவகையில் நாங்கள் எமது நாட்டில் ஒரு புத்தெழுச்சியை ஏற்படுத்தி உற்பத்திப் பொருளாதாரமொன்றை கட்டியெழுப்பி மக்களை அதனோடு இணைத்துக்கொண்டு அவர்களுக்கு நன்மைகளை வழங்குகின்ற புதிய பொருளாதாரப் பயணமொன்றில் பிரவேசிப்பதற்கான கருத்தியலை சமூகமயப்படுத்தி வருகிறோம். குற்றச்செயல்களைத் தடுப்பதற்காக சட்டத்தின் ஆட்சியை எவ்வாறு நிலைநாட்டுவது என நாங்கள் திட்டங்களை வகுத்து வருகிறோம். எமது மக்களையும் நாட்டையும் அழிவில் தள்ளிவிட்ட பாரியளவிலான மோசடிகள், ஊழல்கள் மலிந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்து புதிய பயணத்தில் பிரவேசிப்பதற்கான உரையாடல்களை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இலங்கை வரலாற்றின் அரசியல் கட்டமைப்பின் கடுமையான மோதல் எதிர்வரும் ஏழுஎட்டு மாதங்களுக்குள் உருவாகும். Do or Die பாணியிலான போராட்டமாகும்.
இந்த போராட்டத்தில் நாங்கள் தோல்வியுற்றால் எமது நாடும் மக்களும் அவமதிப்பினதும் நிர்க்கதிநிலைமையினதும் அடிமட்டத்திற்கே வீழ்ந்துவிடும். நாங்கள் இந்த போராட்டத்தில் வெற்றிபெற்றால் புதிய எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் சகிதம் இந்த நாட்டை புதிய திசையில் வழிப்படுத்த முடியும். அதனால் வளர்ந்துவருகின்ற இந்த அரசியல் சாதாரண அரசியலைப் போன்றதன்று. இலங்கை வரலாற்றின் தீர்வுக்கட்டமான பிரிகையிடலின்போது தேசிய மக்கள் சக்தியாகிய நாங்கள் மக்களுடன் எத்தகைய பொது உடன்பாட்டுக்கு வரவேண்டுமென விரிவாக உரையாடி வருகிறோம். உழைக்கும் மக்கள், தொழிலதிபர்கள், கைத்தொழில் உரிமையாளர்கள், மதத் தலைவர்கள், புலமைசாலிகள் என்றவகையிலான நாமனைவரும் இந்த நாட்டை மீட்டெடுப்பதற்கான பொது இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான உரையாடலில் பிரவேசித்துள்ளோம். அதேவேளையில் ஏனைய பாசறைகள் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருக்கின்றன. தீர்வுக்கட்டமான பெருவெற்றியுடன் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவோம் எனும் திடசங்கற்பத்துடனேயே நாங்கள் இந்த வருடத்தில் காலடி எடுத்து வைத்துள்ளோம். அதனால் எம்மனைவருக்கும் ஓய்வுநேரமின்றி மாற்றத்திற்காக பாடுபடவேண்டியுள்ளது. நிலவுகின்ற நெருக்கடியின் காரணமாகவே அவர்கள் விற்றுத் தீர்ப்பதை மேற்கொண்டு வருகிறார்கள். வந்துள்ள பொருளாதார பயணத்தினால் உருவாக்கப்பட்ட நெருக்கடியின் விளைவுதான் விற்றுத் தீர்த்தல். மறுபுறத்தில் விற்றுத் தீர்ப்பதும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகும். இந்த விற்றுத் தீர்த்தல் ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. இதுவரை கடைப்பிடித்த பொருளாதாரச் செயற்பாங்கின் பெறுபேறாகும்.
இதுவரை வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்த பல துறைகள் இந்த நெருக்கடியினாலேயே வற் வரியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. எரிபொருள் விலையேற்றம் ஒட்டுமொத்த பொருளாதாரம் மீதும் தாக்கமேற்படுத்தி உள்ளமையால் இதுவரை வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது. எண்ணெய் விலையேற்றம் எண்ணெய் பாவனையாளர்களுக்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த பொருளாதார தேகத்திற்கும் தாக்கமேற்படுத்துகின்ற கூருணர்வுமிக்க விடயமாகும். பாடசாலை உபகரணங்களின் விலைஅதிகரிப்பு காரணமாக பிள்ளைகளின் கல்வித்துறைமீது கூருணர்வுமிக்க பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. சுகாதார உபகரணங்கள், ஔடத உற்பத்தி மூலப்பொருட்கள், சுகாதார சேவை வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தமைக்கான காரணம் அவை மக்கள் வாழ்க்கையை நெருக்கமாக பாதிப்பதாலாகும். எனினும் நெருக்கடியினால் இந்த அனைத்து துறைகளுக்கும் புதிதாக வற் வரி விதிக்கப்பட்டுள்ளது. அரச செலவினங்கள், கடன் செலுத்துதல் மற்றும் வட்டித் தவணைகளை செலுத்துதல் என்பவற்றுக்காக இந்த வருடத்தில் பதினோராயிரத்து ஐநூற்று பதினான்கு பில்லியன் செலவாகின்றது. எனினும் வற் வரியை உள்ளிட்ட இந்த அனைத்துவிதமான பாதிப்புகளையும் மக்கள் மீது சுமத்தி பெற்றுக்கொள்ளக்கூடிய மொத்த வருமானம் நாலாயிரத்து நூற்றி அறுபத்தி நான்கு பில்லியன் ரூபா மாத்திரமேயாகும். கடன் தவணை செலுத்துவதை ஒருபுறம் வைத்தாலும் ஏழாயிரத்து எண்ணூற்றி இருபத்தாறு பில்லியன் இந்த வருடத்தின் செலவுக்காக தேவைப்படுகின்றது. 3000 பில்லியனுக்கு மேற்பட்ட தொகையைக் கடனாகப் பெறவேண்டி நேரிடுகின்றது. இந்த நெருக்கடி நிலவுவது தரவுகளுக்குள்ளே மாத்திரமன்றி சமூக வாழ்க்கைக்குள்ளேயும் நிலவுகின்றது. சென்மதி நிலுவைப் பற்றாக்குறை, வரவுசெலவுப் பற்றாக்குறை போன்ற பாரிய பொருளியல் பதங்களில் மறைந்துள்ள நெருக்கடி சமூக வாழ்க்கைக்கு தாக்கமேற்படுத்தி வருகின்றது. அண்மையில் வெளியிட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களுக்கு அமைவாக பாடசாலைப் பிள்ளைகளில் 57% புத்தகங்களை உள்ளிட்ட கல்விச் சாதனங்களை கொள்வனவுசெய்வதை நிறுத்தியோ அல்லது குறைத்தோ இருக்கிறார்கள். மேலும் 19% ஐ அண்மித்தோர் பிரத்தியேக போதனா வகுப்புகளுக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்கள். பொருளாதார நெருக்கடியினால் சமூகம்மீது எற்படுத்துகின்ற தாக்கம் பிள்ளைகளின் கல்விச் சீரழிவுவரை பயணித்துள்ளது.
அதைப்போலவே குடிமக்களின் வாழ்க்கை பாதுகாப்பற்ற நிலைமைக்கு வீழ்ந்து முறைப்படி சிகிச்சை பெறுவதை தவிர்த்து வருகிறார்கள். பாரியளவில் தொழில்களை இழக்கச் செய்வித்தல், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களின் சீரழிவு போன்ற துறைகளில் நெருக்கடி தாக்கமேற்படுத்தி உள்ளது. பராட்டே சட்டத்திற்கிணங்க சிறிய மற்றும் நடுத்தர அளவிலான 1183 தொழில்முயற்சியாளர்களின் ஆதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தொழில்முயற்சிகள் பல்வேறு சிரமங்களின் மத்தியில் சிலவேளைகளில் பல பரம்பரையினரின் அர்ப்பணிப்பினால் கட்டியெழுப்பப்பட்டவையாகும். சரியான பொருளாதார நோக்கு, அரச இடையீட்டின் கீழ் இந்த தொழில்முயற்சிகள் கட்டியெழுப்பப்பட்டிருக்கவில்லை. அவர்களின் தனிப்பட்ட அர்ப்பணிப்பு மற்றும் பெருமுயற்சியின் அடிப்படையில் அவை கட்டியெழுப்பப்பட்டிருந்தன. இந்த நெருக்கடியினால் மக்கள் வாழ்க்கை சீரழிதல் இத்தகைய பல்வேறு துறைகள்மீது தாக்கமேற்படுத்தி இருக்கின்றது. விற்றுத் தீர்த்தல் மிகச்சிறந்த பொருளாதார உபாயமார்க்கத் திட்டமென அரசாங்கம் கூறுகின்றது. உண்மை அதுவல்ல. விற்றுத் தீர்த்தலும் இதே பொருளாதார நெருக்கடியின் பெறுபேறாகும். ஔடதங்களை கொண்டுவருகையில், வரி அறவிடுகையில் திருடுவதைப்போன்றே விற்பனைசெய்கின்ற வேளையிலும் ஊழல் மோசடிகளின் சொர்க்கபுரியாக மாறியுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக விற்றுத் தீர்ப்பதைப்போலவே கள்ளத்தனமான கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் அவர்கள் விற்றுத்தீர்ப்பதை பயன்படுத்தி வருகிறார்கள். விற்பனை செய்வதன் மறைவில் இருக்கின்ற உண்மையான தேவை இதுவாகும்.
வரவுசெலவுப் பற்றாக்குறையினால், வெளிநாட்டுக் கடன்களை செலுத்தமுடியாததால், தொழில்வாண்மையாளர்களை உள்ளிட்ட குழுவினர் நாட்டைவிட்டு வெளியேறி வருவதன் மூலமாக பொருளாதார நெருக்கடியின் ஆழமே வெளிக்காட்டப்படுகின்றது. பொருளாதார நெருக்கடியின் ஆழம் காட்டப்படுவது தரவுகளுக்குள்ளே மாத்திரமல்ல. ரணில் விக்கிரமசிங்கவிற்கு பொருளாதார நெருக்கடி என்பது தரவுகள் மாத்திரமே என்பதால் அவருடைய தீர்வு கணக்குகளை இணக்கஞ் செய்வதாகும். எனினும் தேசிய மக்கள் சக்திக்கு இந்த நெருக்கடி என்பது தரவுகளில் காட்டப்படுவதற்குப் பதிலாக சமூக மக்கள் வாழ்க்கையின் வேதனைகள் பற்றி அனுபவவாயிலாக கூறப்படுவதாகும். தரவுகளுக்குள்ளே போன்று மக்களின் வாழ்க்கைக்குள்ளேயும் நாங்கள் நெருக்கடியைக் காண்கிறோம். ரணில் விக்கிரமசிங்க மக்கள் வாழ்க்கையில் நெருக்கடியைக் காண்பாராயின் ஔடதங்களுக்கு பாடசாலை உபகரணங்களுக்கு வரி விதிக்கமாட்டார். வற் வரி மூலமாக மக்கள் வாழ்க்கைக்கு ஏற்பட்டுள்ள மரணம்விளைவிக்கின்ற தன்மையை நாங்கள் எடுத்துக்கூற வேண்டியதில்லை. அவர்கள் அதனை அனுபவித்து வருகிறார்கள். நாங்கள் நெருக்கடியைக் காண்பது மாத்திரமல்ல அதற்கான தீர்வினைக் காணவும் பிரயத்தனம் செய்கின்ற இயக்கமாவோம்.
விற்றுத் தீர்ப்பதற்கான காரணங் காட்டுகின்ற ஐயாமார்கள் எமக்கு ஒருசில விடயங்களைக் கூறிவருகிறார்கள். மக்களிடமிருந்து சேகரித்துக்கொள்கின்ற வரி வருமானத்தை நட்டத்தில் இயங்குகின்ற அரச நிறுவனங்களை பராமரிக்க செலவிடுவதில்லையாயின் சுகாதார வசதிகள், கல்வி வசதிகளை வழங்க ஈடுபடுத்த முடியுமெனக் கூறுகிறார்கள். இதனைப்போன்ற கதைகளைக்கூறுவது இன்று மாத்திரமல்ல. யுத்தம் நிலவிய காலத்திலும் இவ்வாறான கதைகளைக் கூறினார்கள். யுத்தத்தின்போது 24 நாட்கள் பல்குழல் தோட்டாக்களுக்காக உறப்படுகின்ற செலவுகளை நிறுத்தினால் இரண்டு வைத்தியசாலைகளை நிர்மாணிக்க முடியுமென மைத்திரிபால சிறிசேன கூறினார். எனினும் அவ்வாறு நேர்ந்ததா? நட்டமடைகின்ற நிறுவனங்கள் பற்றியும் இன்று கூறுவது அதே கதையைத்தான். யுத்தம் முற்றுப்பெற்றதும் செல்வம் நிறையுமெனக் கூறிய அவர்கள் அரச நிறுவனங்களை விற்றுத் தீர்ப்பதன் மூலமாக செல்வம் செழிக்குமென இன்று கூறுகிறார்கள். எனினும் அது பொய்யானதாகும். எமது நாட்டின் அரச பெருந்தோட்டங்களை 21 தனியார் கம்பெனிகளுக்கு விற்பனை செய்தார்கள். அதில் 18 கம்பெனிகள் நட்டத்தில் இயங்குகின்றன: வங்கிகளுக்கு பொல்லு வைத்துவிட்டன. அதைப்போலவே வேலைசெய்கின்ற ஊழியர்களுக்கு 1000 ரூபா சம்பளம் செலுத்த முடியாவிட்டால் அந்த தனியார்மயமாக்கலில் உள்ள பிரயோசனம் என்ன? அதைப்போலவே இன்று எமது நாட்டின் தேயிலைத் தொழிற்றுறை தாழ்நில சிற்றுடைமையாளர்களின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது. விற்றுத் தீர்ப்பதன் மூலமாக வெற்றி கிடைக்குமாயின் ஏன் இவ்வாறு நடைபெறுகின்றது?
ஏழு நிதிக் கம்பெனிகள், 41 கைத்தொழில்கள், 21 பெருந்தோட்டங்கள், எனைய 23 நிறுவனங்கள் என்றவகையில் இன்றளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விற்பதற்கு உள்ள எண்ணிக்கையைப் பார்க்கிலும் விற்பனை செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமானதாகும். விற்பனை செய்யப்பட்ட சிலோன் ஒக்சிஜன், தோற்பொருள் கூட்டுத்தாபனம், லக்ஸ்பிறே நிறுவனம், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமானதாக இருந்த நைலொன் கம்பெனி, மத்தேகொட நெசவாலை, எண்ணெய் மற்றும் கொழுப்புக் கூட்டுத்தாபனம், மகாவலி மெரீன் கம்பெனி, ஹிங்குரான சீனி, கடதாசிக் கூட்டுத்தாபனம் போன்ற பல நிறுவனங்கள் விற்கப்பட்டன. இன்று அவற்றில் எதாவது இருக்கின்றதா?
திறைசேரிக்கு மிகையான செலவுச்சுமையை ஏற்க நேரிட்டுள்ள நிறுவனங்களை விற்றதாகவே அவர்கள் கூறினார்கள். எனினும் அதுவும் பொய்க் கதையாகும். அதேவேளையில் கடந்த வருடத்தில் பன்னிரண்டாயிரம் மில்லியன் இலாபமீட்டிய காப்புறுதிக் கூட்டுத்தாபனம், தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானதாக அமைகின்ற ரெலிகொம் நிறுவனம் 10,000 மில்லியன் ரூபா இலாபமீட்டியது. இந்த நிறுவனங்களையும் விற்பனைக்காக போட்டுள்ளார்கள். போட்டித்தன்மைமிக்கதெனக் கூறுகின்ற இரண்டு கேஸ் கம்பெனிகளில் அரசாங்கத்திற்குச் சொந்தமான கம்பெனி சனவரி 01 ஆந் திகதி தொடக்கம் 685 ரூபாவினால் விலையை அதிகரித்தது. தனியார் கம்பெனி 755 ரூபாவினால் அதிகரித்தது. 2023 செத்தெம்பர் வரை அரசாங்க கேஸ் கம்பெனி 5639 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளது. அரசாங்கத்தற்கு கேஸ் கம்பெனி இருந்திராவிட்டால் என்ன நடந்திருக்கும்? தற்போது அரசாங்கம் இரண்டு பிரதான வங்கிகளையும் விற்பனைசெய்ய தயாராகி வருகின்றது. இலங்கை வங்கிக்கும் மக்கள் வங்கிக்கும் இலங்கை பூராவிலும் ஏறக்குறைய 300 கிளைகள் இருக்கின்றன. அவை மத்தியில் ஏறக்குறைய 100 கிளைகள் நட்டத்தில் இயங்குகின்றன. வங்கிச் சேவையை வழங்குவதற்கான பொறுப்பு அரசாங்கத்தைச் சார்ந்ததாகும். தனியார்துறை செய்வதோ ஈடுபடுத்துகின்ற பணத்திற்கு இலாபத்தை பிறப்பித்துக் கொள்வதாகும். நகரத்தில் வங்கித் தொழிற்பாட்டினால் கிடைக்கின்ற இலாபம் கிராமங்களில் கிடைப்பதில்லை. கிராந்துருகோட்டே இலங்கை வங்கிக் கிளை நட்டமடைகின்றது. எனினும் அந்தப் பிரதேச மக்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்கவேண்டும். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் பதவியா போகஸ்சந்தியின் இலங்கை வங்கிக்கிளை ஒரு கொள்கலனுக்குள்ளேயே தொடங்கப்பட்டது. குடிமக்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்க வேண்டுமென்பதற்காகவே அவ்வாறு செய்தார்கள். தனியார் துறையின் வங்கிக்கிளை அதற்குப் பின்னரே வருகின்றது. அரசாங்க கணக்குகளைப் பேணிவருகின்ற இலங்கை வங்கியினதும் மக்கள் வங்கியினதும் இரண்டு கணக்குகளின் மேலதிகப்பற்று 7000 பில்லியன் ரூபாவாக அமைகின்றது. திறைசேரியில் பணமும் இல்லாத நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எண்ணெய் வழங்குவதில் இரண்டு அரச வங்கிகள் இடையீடு செய்தன. சுகாதார அமைச்சிற்கும் அப்படித்தான். எம்மைப்போன்ற சிறிய பொருளாதாரத்தின் அரச பிரிவில் இந்த வங்கி முறைமையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். 2022 இலங்கை வங்கியின் வரி செலுத்திய பின்னர் இலாபம் 32 பில்லியன் ரூபாவாகும். அரசாங்கத்திற்கு 13 பில்லியன் ரூபா வரி செலுத்தியுள்ளது. மக்கள் வங்கி 14 பில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளது. 08 பில்லியன் ரூபா வரி செலுத்தி உள்ளது.
அதைப்போலவே இலங்கை வங்கியின் செயலற்ற கடன் 325 பில்லியன் ரூபா மற்றும் மக்கள் வங்கியில் 300 பில்லியன் ரூபா என்றவகையில் இரண்டு வங்கிகளிலும் 625 பில்லியன் ரூபா நிலவுகின்றது. 62,500 கோடி ரூபா செயலற்ற கடனாக நிலவுவதோடு அதில் அரைவாசியை அறவிட்டுக்கொண்டால் இந்த இரண்டு வங்கிகளையும் பலப்படுத்த முடியும். தயா கமகேவின் கம்பெனி மக்கள் வங்கிக்கு மாத்திரம் 160 கோடி ரூபா செயலற்ற கடன் செலுத்தவேண்டி உள்ளது இவர் சம்பத் வங்கிக்கும் மூன்று பில்லியன் பொல்லு வைத்துள்ளார். மென்டிஸ் சாராயக் கம்பெனி மக்கள் வங்கிக்கு 350 கோடி ரூபாவுக்கு பொல்லு வைத்துள்ளது. அரசாங்கத்தின் அன்பர்களுக்கு இவ்விதமாக கடன்களை வழங்கியதன் மூலமாக அந்த செயலற்ற கடன் அளவு சேர்ந்துள்ளது. அதைப்போலவே தனியார்மயமாக்கலின் மறைவில் தவறான வெளியுறவுக் கொள்கையொன்று நிலவுகின்றது. இந்தியாவுக்கு ஓரளவு முதலீட்டுப்பகுதி வரும்போது சீனாவுக்கும் கொடுக்கவேண்டும். கொழும்புத் துறைமுகத்தின் இறங்குதுறைகளை விற்றது ஓர் உதாரணமாகும். செழிப்பான 28,000 எக்கர் காணி கால்நடை வளங்கள் சபையிடம் இருக்கின்றது. இந்த நிறுவனங்களை சீரழித்து “அமூல்” கம்பெனிக்கு விற்கத் தயாராகி வருகிறார்கள். இவ்விதமாக நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்தால் நாங்கள் அதிகாரத்தைப் பெறுவதில் பிரயோசனமில்லைதானே என ஒருசிலர் கேள்வி கேட்கிறார்கள். அதனால் இந்த விற்பனை செயற்பாங்கினை தடுத்துநிறுத்த போராடுவதைப்போலவே அதற்கு இணையாக தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியொன்றை அமைத்திடவும் போராட வேண்டியுள்ளது. இந்த நாட்டைக் கட்டியெழுப்புவது எளிதானல்ல என்பது உண்மையாகும். மிகவும் அடிமட்டத்திற்கே வீழ்ந்துள்ள படுகுழிக்குள் இருக்கின்ற ஒரு நாடே எமக்கு கிடைக்கும். இதிலிருந்து வசதியான வாழ்க்கை மூலமாக எம்மால் கரைசேர முடியாது. எமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனிடமும் புத்தெழுச்சியொன்றின் அவசியப்பாடு நிலவுகின்றது. நாட்டைக் கட்டியெழுப்புகின்ற திடசங்கற்பத்துடனான புதிய தேசிய எழுச்சியொன்று அவசியமாகும்.
எமக்கு இருப்பது தேசிய புத்தெழுச்சியால் நிர்மாணிக்கப்பட்ட ஒரு நாடு அல்ல. இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக நேரு, மகாத்மா காந்தி, பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் முன்னெடுத்துவந்த ஒருங்கிணைந்த தேசிய போராட்டமொன்று இருந்தது. இந்தியாவைக் கட்டியெழுப்புகின்ற எழுச்சியாக அமைந்தது அந்த தேசிய இயக்கமாகும். இரண்டாம் உலகமகா யுத்தத்தின்போது குண்டுத்தாக்குதலால் அழிக்கப்பட்ட ஜப்பானை கட்டியெழுப்பவதற்கான உறுதியான திடசங்கற்பம் அவர்களிடம் இருந்தது. சிலகாலம் ஜப்பானிய பேரரசின் காலனித்துவமாக மாறி அரச பரம்பரையினால் பாதிக்கப்பட்ட சீனா புதிய தேசிய உணர்வுடன் போராடியது. இன்று சீனா உலகின் மிகப்பிரமாண்டமான பொருளாதாரப் பலத்தைக் கைப்பற்றியுள்ளது. பிரித்தானியாவிற்கு எதிராக ஐக்கிய அமெரிக்காவில் தேசிய போராட்டமொன்று நிலவியது. வியட்நாமில் ஐக்கிய அமெரிக்காவிற்கு எதிரான தேசிய போராட்டமொன்று நிலவியது. ரஷ்யாவில் சார் ஆட்சிக்கு எதிராக போராட்டமொன்று நிலவியது. உலகம் பூராவிலும் மக்களுக்கு புதிய தேசிய எழுச்சியை ஏற்படுத்துகின்ற சுதந்திரப் போரட்டங்கள் இருந்தன. அந்த தேசிய எழுச்சியால் நாடுகள் அபிவிருத்தியில் முன்நோக்கி நகர்ந்தன. எனினும் எமது நாட்டில் 1848 இல் இருந்து 1948 வரை வெள்ளைக்காரன் ஆட்சிசெய்’த காலத்தில் எந்தவிதமாக எழுச்சியும் இடம்பெறவில்லை. அதனால் எமக்கு தேசிய புத்துணர்ச்சி இருக்கவில்லை. இந்தியாவில் நேரு இருந்தவேளையில் எமக்கு ஜுனியஸ் றிச்சர்ட் இருந்தார். இந்தியாவில் பட்டேல் இருக்கையில் எமக்கு சொலமன் டயஸ் இருந்தார். எமக்கு அத்தகைய அடிமைத்தனமான தலைவர்களே இருந்தார்கள்.
கமக்காரர், மீனவர், மருத்துவர், பொறியியலாளர் தம்மைப்பற்றி மாத்திரமே சிந்தித்து செயலாற்றுவதற்குப் பதிலாக புதிய தேசிய எழுச்சியுடன் செயலாற்றவேண்டி உள்ளது. 2024 என்பது தேசிய உணர்வுகொண்ட மக்கள் அதற்கு ஏற்புடைய அரசியல் தலைமைத்துவம்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் கையில் சுக்கானைக் கொடுக்கின்ற வருடமாகும். இந்த வருடத்தில் தேசிய உணர்வுடன் புத்தெழுச்சிபெற்று நாமனைவரும் கூட்டு முயற்சியுடன் செயலாற்றுவோமென கேட்டுக்கொள்கிறோம்.
“சட்டவிரோதமான அரசாங்கம் மனிதத்திற்கு எதிரான குற்றச்செயல்களைப் புரிந்துகொண்டிருக்கின்றது…“
–தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த–
பொருளாதார, சமூக ரீதியாக மிகவும் முக்கியமான பல வெளிப்படுத்தல்களை செய்வதற்காகவே இந்த கருத்தரங்கு நடைபெறுகின்றது. இது வெறுமனே தகவல்களை வெளிப்படுத்துவதைவிட முன்நோக்கிச் செல்கின்ற ஒன்றாகும். பொதுமக்களுக்குச் சொந்தமான சொத்துக்களை தெரிவுசெய்த ஆட்கள் குழுமமொன்றுக்கு வழங்குதல் வெறுமனே ஒரு பொருளாதாரக் கொடுக்கல் வாங்கலாக அமையமாட்டாது. அதனாலேயே அந்த கதையின் உண்மையை வெளிப்படுத்திக்கொண்டு நாங்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் என்னவென்பது பற்றி உரையாட வேண்டும். பலவிதமான தொழில்நுட்ப வரைவிலக்கணங்களின் ஊடாக தனியார்மயமாக்கல் எனும் பொருளாதார செயற்பாங்கினை முற்றாகவே தனியார் துறையிடம் கையளிக்க வேண்டுமென்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறார்கள். உண்மையிலேயே தனியார் துறையிடம் பொருளாதாரத்தின் பாரிய செயற்பொறுப்பு நிலவுகின்றதென்பது உண்மையாகும். அந்த உண்மைக்குப் பின்னால் மறைந்திருந்து பொதுமக்களுக்குச் சொந்தமான பாரிய சொத்துக்களை சொச்சத்தொகைக்கு விற்றுத் தீர்க்கின்ற தீத்தொழிலில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. விற்றுத் தீர்ப்பதற்காக அவர்கள் அரசதுறை வினைத்திறனற்றது எனவும் தனியார்துறை வினைத்திறனுடையதெனவும் கூறிவருகிறார்கள். குறிப்பாக அரசதுறை அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளமையால் வினைத்திறமையின் சிக்கல்கள் நிலவக்கூடும். மறுபுறத்தில் தனியார்துறையினரிம் கையளித்தால் போட்டித்தன்மை அதிகரித்து புதிய பிறப்பாக்கங்கள் உருவாகி சமூகத்திற்கு சாதகமான பெறுபேறுகள் கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது.
மறுபுறத்தில் எடுத்துக்கொண்டால் பொதுமக்களின் பலத்துடன் அரசாங்கமொன்றை அமைத்துக்கொண்டு பொருளாதார, அரசியல் அலுவல்கள் நெறிப்படுத்தப்படுவதோடு ஒருசில தனித்துவமான பிரிவுகளை மிகுந்த பொறுப்புடன் அரச சொத்தாண்மையுடன் நெறிப்படுத்துதல் வேண்டும். இத்தகைய பிரிவுகளின் குறிக்கோள் இலாபத்தை விஞ்சிச்சென்ற நோக்கங்களாகும். பொருளாதாரத்தை சரியான திசைக்கு கொண்டுவருதல், பொறுளாதாரத்தை உறுநிலைப்படுத்துதல் மற்றும் பொருளாதாரச் செயற்பாங்கிற்கு அத்தியாவசியமான உட்டகட்டமைப்பு வசதிகளை வழங்குதல் போன்ற அலுவல்கள் இலாபத்தை நோக்கமாகக் கொள்ளாமல் அரச துறையால் பேணிவரப்படல் வேண்டும். இற்றைவரை மேற்கொண்ட விற்பனைகள் மற்றும் மீள அரசாங்கத்திற்கு கையகப்படுத்திக் கொள்ளலானது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துகின்ற நோக்கத்துடன் செய்யப்படவில்லை: நிலவுகின்ற அரசாங்கத்திற்கு எதாவதொரு தொகையைப் பெற்றுக்கொண்டு கொள்ளைக்கார வளையத்திற்கு அதிகமான அநுகூலங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காகும். தேசியமயமாக்கல் அல்லது தனியார்மயமாக்கல் ஆகிய இரண்டுமே அந்த குறுகிய நோக்கத்துடனேயே நடைமுறைப்படுத்தப்பட்டன. நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து மக்களை மீட்டெடுப்பதன்றி அதிகாரத்தில் இருக்கின்ற குழு தொடர்ந்தும் அதிகாரத்தைப் பேணிவருவது எவ்வாறு எனும் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிப்பதற்காக ஐ.எம்.எஃப். பணிப்புரைக்கிணங்க அவர்கள் செயலாற்றி வருகிறார்கள். ஒரே பதில் ஐ.எம்.எஃப். மாத்திரமே என்பதை மக்கள்மயப்படுத்த முயற்சி செய்கிறார்கள். வேறு மாற்றுவழிகள் கிடையாது, வேறுவிதமாக செயலாற்ற முடியாது எனும் கருத்தியலை உருவாக்குவதே சனநாயக விரோதமான செயலாகும். அவர்கள் மூடநம்பிக்கையை சமூகமயப்படுத்தி மறைத்துவைத்துள்ள பல பிரதான விடயங்கள் ஐ.எம்.எஃப். அறிக்கையில் இருக்கின்றன.
வருமானக் கட்டுப்பாட்டினையும் செலவு முகாமைத்துவத்தையும் மேற்கொள்ளவேண்டுமென ஐ.எம்.எஃப். பணிப்புரை விடுத்துள்ளது. பொருளாதாரம் பயணிக்கின்ற திசை, மக்களின் வாழ்க்கைத்தரம் சீரழிதல், தொழில்முயற்சிகள் சீர்குலைதல் போன்ற விடயங்கள் அவர்களுக்கு ஏற்புடையதல்ல. விவேகமின்றி வற் வரி போன்ற வரிகள் அதனாலேயே விதிக்கப்படுகின்றன. நிலவுகின்ற ஊழல்மிக்க பொருளாதார முறைமைக்குள்ளே அவர்களின் மதிப்பீடுசெய்யப்பட்ட இலக்குகளைக்கூட நெருங்க முடியாது. நேரில் வரிகளை நூற்றுக்கு நூறு வீதம்வரை அதிகரித்து வருமானத்தை உயர்த்திக்கொள்வதற்காக அவர்கள் மேற்கொள்கின்ற முயற்சி வெற்றியளிக்கமாட்டாது. மறுபுறத்தில் செலவு முகாமைத்துவத்துடன் தொடர்புடையதாக வினைதிறனின்மையையும் விரயத்தையும் குறைத்துக்கொள்ள அவர்கள் முயற்சி செய்வதில்லை. வருமானத்தை அதிகரித்துக் கொள்ளல் மற்றும் செலவுகளைக் குறைத்துக்கொள்ளல் தொடர்பான தந்திரோபாயங்கள் இரண்டில் ஒன்றையேனும் இந்த அரசாங்கத்தால் இலகுவாக சாதித்துக்கொள்ள முடிவதில்லை. ஐ.எம்.எஃப். மூன்று பிரதான அளவுகோல்களை அரசாங்கத்திற்கு கொடுத்துள்ளது. முதலாவதாக 2025 ஆண்டளவில் முதனிலைக் கணக்கின் மீதி 2.3 நேர்க்கணியமாக வளர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக 2032 இற்கு முன்னர் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த கடன்சுமையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமென்றவகையில் 95% குறைத்துக்கொள்ளவும் வருடாந்த கடனெடுத்தல் அவசியப்பாட்டினை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 14% வீதம் வரை 2030 ஆம் ஆண்டளவில் குறைத்துக்கொள்ளவும் வேண்டும்.
அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவு முகாமைத்துவத்தினால் இந்த இலக்கினை நிறைவுசெய்ய முடியாது. அதனால் கட்டாயமாக எமது கடல், நிலம் உள்ளிட்ட எதனையும் விற்பனைசெய்ய முயற்சிசெய்கிறார்கள். இந்த விற்பனையினால் இரண்டு நோக்கங்களை ஈடேற்றிக்கொள்கிறார்கள். ஐ.எம்.எஃப். இன் மூன்று அளவுகோல்களை நிறைவுசெய்கின்ற அதேவேளையில் டொலர்களுக்காக விற்பனை செய்வதன் மூலமாக அரசாங்கத்தின் செலவுகளுக்கான பணத்தை தேடிக்கொள்வதைப்போலவே வெளிநாட்டு ஒதுக்கங்களை கட்டியெழுப்பவும் தூண்டப்படுகின்றது. நெருக்கடி நிலவுகின்றவேளையில் ஒரு நாட்டுக்கு முதலீடுகள் வரமாட்டாது. வருவதாயின் வருவது அரசியல் இடையீடுகள் சம்பந்தமான ஆர்வம் காட்டுகின்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாத்திரமே. விற்பனை செய்யப்போகின்ற அரசாங்க நிறுவனங்கள் சம்பந்தமான ஓர் உதாரணமாக ஸ்ரீலங்கன் எயார் லயின் கம்பெனியை எடுத்துக்கொண்டால் 2023 இல் 40 பில்லியன் ரூபா தொழிற்பாட்டு இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற தவறான தீர்மானங்கள் மற்றும் அரசியல் தீர்மானங்கள் காரணமாகவே நட்டமடைகின்றது. இந்த நிறுவனம் ஊழியர்களின் பிரச்சினைகள் காரணமாக நட்டமடைவதில்லை. ஊழியர் குழாத்தினை எடுத்துக்கொண்டால் இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்தச் செலவில் 6% ஆகும். பலவருடங்களில் இந்த நிறுவனத்தின் நட்டம் 612 பில்லியன் ரூபாவாக சேர்ந்துள்ளது. முதலாவது தருணத்தில் இருந்தே முகாமைத்துவம் அது சம்பந்தமாக தீர்மானங்களை மேற்கொண்டிருப்பின் இவ்வாறான நிலைமைக்கு வீழ்ந்திருக்கமாட்டாது. மறைந்துள்ள கதைக்குப் பின்னால் இது போன்ற பல விடயங்கள் இருக்கின்றன.
அதன் மறைவில் இருப்பது பொருளாதாரகக் குற்றச்செயல்களாகும். அதேவேளையில் மேலும் பல அயோக்கியத்தனமான வேலைகளைச்செய்ய தயாராகி வருகிறார்கள். கணக்கியல் வித்தைகள் மூலமாக 102 பில்லியனை திறைசேரியிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு முதலீடு செய்வதற்கான தயார்நிலை காணப்படுகின்றது. பொதுப்பணத்தை தாம்விரும்பியவாறு ஈடுபடுத்துகின்ற இவ்வாறான குற்றம்நிறைந்த பல செயல்கள் மலிந்து காணப்படுகின்றன. இந்த உதாரணத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டால் பொருளாதாரம் வீழ்ந்துள்ள படுகுழியில் இருந்து மீட்டெடுத்து மக்களின்வாழ்க்கையை உயர் மட்டத்திற்கு மாற்றமாட்டார்கள் என்பது உறுதியாகின்றது. அநாவசியமான தனியார்மயமாக்கலை மேற்கொள்வதன் மூலமாக பாரிய சீர்குலைவுகள் ஏற்பட்டுள்ளமை உலகளாவிய உதாரணங்கள் மூலமாக தெளிவாகின்றது. குறிப்பாக வலுச்சக்தி, நிதி போன்ற துறைகளில் அரச பிரிவின் இடையீடு மிகவும் முக்கியமானது. ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் மக்களின் வாழ்க்கைக்கும் இந்த துறையானது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஐ.எம்.எஃப். இல் இறுகிய கிறீஸ் அவர்கள் வசமிருந்த புகையிரதம், துறைமுகம் போன்ற நிறுவனங்களை விற்று பதில்தேட முயற்சி செய்தது. எனினும் பாரிய மக்கள் எதிர்ப்பு அந்நாடுகளில் தோன்றியுள்ளது. இந்த ஊழல்மிக்க குழுக்கள் எப்படியாவது விற்பதற்காக மேற்கொள்கின்ற முயற்சிகளை எப்படியாவது தோற்கடித்திடவே நாங்கள் முயற்சிசெய்ய வேண்டும். சட்டரீதியான அல்லது நெறிமுறைசார்ந்த எந்தவிதத்திலும் அதிகாரத்தில் இருக்க உரிமையற்ற அரசாங்கங்கள் மனித்திற்கு எதிரான குற்றச்செயல்களை புரிந்து வருகின்றன. இந்த அனைத்துச் செயற்பாடுகளினதும் இறுதிமுடிவாக அமைந்துள்ளது அவர்கள் மனிதத்திற்கு எதிரான குற்றச்செயல்களைப் புரிவதாகும். இந்த நிலைமையிலிருந்து விடுபடுவதற்கான கூட்டு நடவடிக்கையை நாமனைவரும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
-Colombo, December 25, 2023- இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை நிமித்தமாகக்கொண்டு டிசம்பர் 25 உலகம் பூராவிலும் கிறிஸ்தவ அடியார்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகின்ற வனப்புமிகு நத்தார் தினத்திற்காக நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். உலகிற்கு சமாதானச் செய்தியைக் கொண்டுவந்த தினமாக பொதுவாக கருதப்படுகின்ற நத்தாரின் முக்கியத்துவமாக அமைவது இயேசு கிறிஸ்துவின் போதனைகளின் பிரதானமான பகுதியான சகோதரத்துவத்தையும் சகவாழ்வையும் மனித மனங்களில் விதைப்பதற்கான பிரதான காரணம் அதுவாக அமைந்தமையாகும். அதைப்போலவே நத்தார் தினம் சமாதானத்தினதும் சகோதரத்துவத்தினதும் செய்தியை சமூகத்திற்கு பகிர்ந்தளிக்க […]
-Colombo, December 25, 2023-
இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை நிமித்தமாகக்கொண்டு டிசம்பர் 25 உலகம் பூராவிலும் கிறிஸ்தவ அடியார்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகின்ற வனப்புமிகு நத்தார் தினத்திற்காக நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
உலகிற்கு சமாதானச் செய்தியைக் கொண்டுவந்த தினமாக பொதுவாக கருதப்படுகின்ற நத்தாரின் முக்கியத்துவமாக அமைவது இயேசு கிறிஸ்துவின் போதனைகளின் பிரதானமான பகுதியான சகோதரத்துவத்தையும் சகவாழ்வையும் மனித மனங்களில் விதைப்பதற்கான பிரதான காரணம் அதுவாக அமைந்தமையாகும். அதைப்போலவே நத்தார் தினம் சமாதானத்தினதும் சகோதரத்துவத்தினதும் செய்தியை சமூகத்திற்கு பகிர்ந்தளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக்கொள்வதற்கான பெறுமதிமிக்க தருணமாகும்.
சனத்தொகையில் அரைவாசிக்கு அதிகமானோர் பசியுடன் படுக்கைக்குப் போகின்ற நிலைமை ஏற்பட்டுள்ள ஒரு நாட்டில் நத்தாரை விமரிசையாக கொண்டாடுவதற்கான இயலுமை கிடையாது. எனினும் நத்தாரினால் வெளிப்படுத்தப்படுகின்ற அன்பு, சகோதரத்துவம், சகவாழ்வு போன்ற மானிடப் பண்புகளைக் கொண்டதாக அயலவர்களை நோக்குவதற்கு அந்த நிலைமை தடையாக அமையமாட்டாது.
மக்களை வதைக்கின்ற ஆட்சிக்கு எதிராக மக்களின் தரப்பில் இருந்து போராடிய மதத்தலைவரான இயேசு கிறிஸ்துவினால் வெளிப்படுத்தப்பட்ட மானிடப் பண்புகள் நிறைந்த, நிலவுகின்ற அநீதியைக் கேள்விக்குட்படுத்துகின்ற மற்றும் அர்ப்பணிப்புகளுக்கு முன்வருகின்ற மனிதர்கள் எமக்கு மென்மேலும் அவசியமாகின்றனர்; அத்தகைய மனிதர்களைக்கொண்ட சமூகமும் எமக்குத் தேவையாகும். அதற்கான திடசங்கற்பத்தை பலப்படுத்திக்கொள்கின்ற தினமாகவும் நத்தார் தினத்தை மாற்றிக்கொள்ளுமாறும் அனைத்து இலங்கைவாழ் கிறிஸ்தவ அடியார்களிடம் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
அநுர குமார திசாநாயக்க
தலைவர்
மக்கள் விடுதலை முன்னணி /தேசிய மக்கள் சக்தி