Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

“நாங்கள் ஒன்றிணைந்து தேசிய ஒற்றுமையை பாதுகாக்கின்ற, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்ற அரசாங்கமொன்றை அமைப்போம்” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

-Colombo, December 17, 2023- தேசிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி மாநாடு கல்முனை திகதிக்கு முன்னராக சனாதிபதி தேர்தல் நடைபெறும். யூலை இறுதியளவில் தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கும். நாங்கள் இற்றைவரை ஆட்சியாளர்களை மாற்றினோம். அரசாங்கங்களை மாற்றினோம். நாங்கள் கடந்தகாலம்போல் சிந்திக்காமல் புதிதாக சிந்தித்து அரசியலில் மாற்றமொன்றை ஏற்படுத்துவோம். தெற்கில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மதிப்பாய்வுகளில் தேசிய மக்கள் சக்தி மேலாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தெற்கில் உள்ளவர்கள் கேட்கிறார்கள், தென்னிலங்கை தயார். வடக்கு கிழக்கு எப்படி? என. தெற்கில் […]

-Colombo, December 17, 2023-

தேசிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி மாநாடு கல்முனை

திகதிக்கு முன்னராக சனாதிபதி தேர்தல் நடைபெறும். யூலை இறுதியளவில் தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கும். நாங்கள் இற்றைவரை ஆட்சியாளர்களை மாற்றினோம். அரசாங்கங்களை மாற்றினோம். நாங்கள் கடந்தகாலம்போல் சிந்திக்காமல் புதிதாக சிந்தித்து அரசியலில் மாற்றமொன்றை ஏற்படுத்துவோம். தெற்கில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மதிப்பாய்வுகளில் தேசிய மக்கள் சக்தி மேலாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தெற்கில் உள்ளவர்கள் கேட்கிறார்கள், தென்னிலங்கை தயார். வடக்கு கிழக்கு எப்படி? என. தெற்கில் உள்ள மக்கள் எடுக்கின்ற தீர்மானங்களுக்கு பாரிய பங்களிப்பினை கிழக்கில் உள்ள முஸ்லீம் மக்கள் வழங்கத் தயார் என கல்முனை மேடையில் இருந்துகொண்டு தெற்கில் உள்ளவர்களுக்கு கூறுகிறோம்.

எமது நாடு பாரிய படுகுழிக்குள் விழுந்தது. கடனைச் செலுத்த முடியாத, மக்களால் உண்டுவாழ முடியாத, மீன்பிடிப் படகுகளை கடலுக்கு அனுப்ப முடியாத, வைத்தியசாலையில் மருந்துகள் இல்லாத, பிள்ளைகளுக்கு சரியான கல்வி கிடைக்காத, பிள்ளைகளுக்கு தொழில் கிடைக்காத, சூழல்தொகுதி நாசமாக்கப்பட்ட, யானை – மனிதன் மோதல் காரணமாக நூற்றுக்கணக்கான யானைகள் இறந்த, உலகத்தார் முன்னிலையில் வெட்கித் தலைகுனிகின்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்ட, உலகம் ஏற்றுக்கொள்ளாத நாடாக தற்போது இந்த நாடு மாற்றப்பட்டுள்ளது. இதனை மாற்றியமைக்க வேண்டாமா? நாங்கள் இதனை மாற்றியமைப்போம் எனும் பிரேரணையை முன்வைக்கவே நாங்கள் உங்கள் முன்னிலைக்கு வந்திருக்கிறோம். வடக்கின் தமிழ் மக்களும் கிழக்கின் முஸ்லீம் மக்களும் தெற்கின் சிங்கள மக்களும் அனைவருமே ஒன்று சேர்ந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம். இனவாதமற்ற, தேசிய ஒற்றுமையை பாதுகாக்கின்ற பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் அமைப்போம்.

கடந்த வருடத்தின் யூன் மாதத்தில் இந்நாட்டு மக்களால் விரட்டியக்கப்பட்ட தலைவர்கள், இந்த நாட்டை ஆபத்தில் தள்ளிய தலைவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வரத் துடிக்கிறார்கள். மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஒருவருக்கொருவர் எதிராக போராடுபவர்கள் என்றே எமக்கு புலப்பட்டது. மகிந்த சரியில்லை என நினைக்கும்போது ரணிலை நியமித்தார்கள். ரணில் சரியில்லை என நினைக்கும்போது மகிந்தவை நியமித்தார்கள். எனினும் தற்போது இருசாராரும் ஒன்றாகவே இருக்கிறார்கள். அன்றும் அப்படித்தான் இருந்தார்கள். அவர்கள் ஒருபோதுமே சண்டையிடவில்லை. எனினும் அவர்கள் எம்மை பிளவுபடுத்தினார்கள். சிங்கள, தமிழ் முஸ்லீம் மக்களிடையே முரண்பாட்டினை ஏற்படுத்தினார்கள். ரஊப் ஹக்கீம் பிளவுபடவில்லை. கூகலில் அவர்களின் ஹிஸ்டரியைத் தேடும்போது சந்திரிக்கா அரசாங்கத்தில் குழுக்களின் பிரதித் தவிசாளர், தபால் அமைச்சர், ரணிலின் அரசாங்கத்திலும் தபால் அமைச்சர், மீண்டும் மகிந்தவின் அரசாங்கத்தில் துறைமுகங்கள் அமைச்சர். 2000 சனாதிபதி தேர்தலில் பொன்சேகாவின் மேடையில். தேர்தல் முடிவடைந்ததும் மகிந்தவின் அரசாங்கத்தில். 2015 இல் மைத்திரியின் அரசாங்கத்தில். இந்த மூன்று வருடங்களில்தான் ஒன்றுமே கிடையாது.

19 வது திருத்தத்தில் சனாதிபதியின் சிறகுகள் வெட்டப்பட்டிருந்தன. கோட்டாபயவின் அதிகாரத்தை அதிகரித்துக் கொள்வதற்காக, சிறகுகளை பொருத்திக்கொள்ள, 2020 இல் இருபதாம் திருத்தம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது. எனினும் பையிசர் காசிம், ஹாரிஸ், பெளசிக் என்ன செய்தார்கள்? கோட்டாபய இனவாதி, அவர் வந்தால் எமது பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் எனக்கூறி உங்கள் முன்வந்து வாக்குகளைக் கோரினார்கள். கோட்டாபயவிடமிருந்து தப்பித்துக்கொள்ள, கோட்டாபயவை தோற்கடிப்பதற்காக பையிசர் காசிம், ஹாரிஸ், பெளசிக்கிற்கு வாக்குகளை அளிக்குமாறு கூறினார்கள். நீங்கள் கோட்டாபயவிற்கு எதிராக வாக்குகளை அளித்தீர்கள். அவர்கள் பாராளுமன்றம்சென்று கோட்டாபயவின் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக வாக்குகளை அளித்தார்கள். இது அசிங்கமான அரசியலல்லவா? இந்த அரசியலை நிறுத்தவேண்டுமல்லவா? முஸ்லீம் மக்களுக்காக அமைச்சர் பதிவியை வகிக்கின்ற ஒருவர் அரசாங்கத்தில் இருக்கவேண்டுமென ஒருசிலர் கூறுகிறார்கள். 1994 இல் இருந்து ஒவ்வோர் அரசாங்கத்திலும் முஸ்லீம் காங்கிரஸ் இருந்தது. அரசாங்கத்தில் இருக்கவேண்டியது முக்கியமானதெனில் முஸ்லீம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். எனினும் தீர்க்கவில்லை. மகிந்த ராஜபக்ஷ ஊழல், மோசடியில் ஈடுபட்ட வேளையிலும் ரணில் விக்கிரமசிங்க மத்தியவங்கி கொள்ளையில் ஈடுபட்டவேளையிலும் முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்தது. அவர்களும் இந்த நாட்டை வீழ்த்தியதன் பங்காளிகளே. கல்முனை நகரசபை முதல்வர் உங்கள் பணத்தின் 25 மில்லியன் ரூபாவை தனது சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டார். இவர்கள் அத்தகைய ஆட்சியாளர்களே. பொதுவாக பாராளுமன்றத்திற்கு வருவது குறைவு, பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பொன்று நடைபெற்றால் கட்டாயமாக வருகின்ற அதாவுல்லா, எதிர்க்கட்சியில் எனக்குப் பின்னால் அமர்ந்திருந்து அரசாங்கத்திற்கு சார்பாக வாக்களிக்கிறார். இதென்ன அரசியல்? இதனை மாற்றயமைக்கக்கூடாதா? நாங்கள் முடிவினை எடுப்போம். இந்த தோல்விகண்ட ஆட்சிக்கு முற்றுப்புள்ளிவைக்க நாமனைவரும் ஒன்றிணைவோம். புதிய அரசாங்கமொன்றை அமைத்துவிட்டால் மாத்திரம் போதாது, நாமனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த நாட்டை சரிக்கட்டவும் வேண்டும். நாம் படுகின்ற துன்பதுயரங்களை எமது பிள்ளைகள் அனுபவிக்காத , உலகின் முன்னிலையில் நற்பெயருக்கு இலக்காகின்ற, அனைத்து இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழ்கின்ற ஒரு நாட்டை உருவாக்குவோம்.

2002 தொட்டு ஆட்சிகள் தவறுகளைப் புரிந்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் கூறினார். நாங்கள் கடந்தகாலத்தை மறந்து புதிய பாதையில் பிரவேசிப்போமென நிமல் சிறிபால கூறினார். அவர்கள் இறந்தகாலத்தை மறந்துவிடுமாறு அடிக்கடி கூறிவருகிறார்கள். அவர்கள் பாரதூரமான தவறுகளைப் புரிந்துள்ளார்கள். பொது ஆதனங்களை திருடியுள்ளார்கள். எவர் மறந்தாலும் தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் மறக்கமாட்டோம். பொதுச் சொத்துக்களைத் திருடியவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்குவோம். எமக்கு சரியான அதிகாரம் இருக்குமாயின் பாராளுமன்றத்தில் இருக்கின்ற பெரும்பாலானவர்கள் உள்ளேதான் இருப்பார்களென கல்முனையில் மாத்திரமல்ல பாராளுமன்றத்திலும் நான் கூறினேன். அதனைச் செய்யவேண்டும். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் மாத்திரமே அதனைச்செய்யும். மகிந்த திருடன் என பாராளுமன்றத்தில் இந்தப் பக்கத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள், கிரிக்கெற் போர்ட்டின் திருடன் என, நாமல் திருடியுள்ளார் என. மறுபக்கத்தில் கூறுகிறார்கள் சஜித் பிரேமதாச கலாசார நிதியத்தை சுருட்டிக்கொண்டார் என, வீடமைப்பு அதிகாரசபையை நாசமாக்கினார் என, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களை பாரியாரின் செலூனுக்கு வேலைக்காக அனுப்பினார், அரசாங்கம் சம்பளம் செலுத்துகிறது வேலை செலூனில் என. இந்த இரு தரப்பிலும் தவறு புரிந்த அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துகின்ற ஓர் அரசாங்கத்தை நாங்கள் அமைக்கவேண்டும். அந்த அரசாங்கத்தை நாங்கள் அமைப்போம். சட்டத்தின் ஆட்சி முறைப்படி அனைவருக்கும் அமுலாக்கப்படுகின்ற ஓர் அரசாங்கம் எமக்குத் தேவை. அரசாங்கத்தின் சட்டம் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை கிடையாது. பொலீசுக்குச் சென்றால் நீதி கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறதா? பொலீஸில் அரசியல் தலையீடு நிலவுகின்றது. சாதாரண மனிதர் ஒருவருக்கு அமுலாக்கப்படுகின்ற சட்டம் அமைச்சரின் கையாளுக்கு அமுலாவதில்லை. உலகின் முன்னேற்றமடைந்த ஒவ்வொரு நாட்டிலும் சட்டம் நியாயமாக அமுலாக்கப்படுகின்றது.

பதில் பொலீஸ் மா அதிபருக்கு உயர்நீதிமன்றம் ரூபா ஐந்து இலட்சம் அபராதம் விதித்தது. முன்னாள் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது. முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, முன்னாள் சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பொருளாதாரத்தை சீரழித்ததாக நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்க கட்சி முதற்கோலாசான் பிரசன்ன ரணதுங்க நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன மகேந்திரனுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் றஹீம் தங்கம் கொண்டுவருகையில் சுங்கத்தில் அகப்படுகிறார். காட்டுச்சட்டம் தலைவிரித்தாடுகின்ற நாடாக எமது நாடு மாறிவிட்டது. இது குற்றச்செயல் புரிபவர்களால் ஆளப்படுகின்ற நாடாகும். மத்திய வங்கியை பதம்பார்க்க பங்களிப்புச் செய்ததாக ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பிரதான குற்றச்சாட்டு நிலவுகின்றது. அர்ஜுன் மகேந்திரன் வாக்குமூலம் அளிக்கையில் “நிதி அமைச்சர் கூறியவாறு வேலைசெய்தேன்” எனக் கூறினார். அது சனாதிபதி ஆணைக்குழுவில் குறிப்பு பதியப்பட்டு இருக்கின்றது. உளவுத்துறை பிரதானிக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய குற்றச்சாட்டு இருக்கின்றது. நாட்டின் உயர் அடுக்குகளில் இருப்பவர்கள்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்டவர்களால் ஆளப்படுவதற்காக மக்கள் வெட்கப்பட வேண்டும். உங்களால் உலக நாடுகளுக்குச் சென்று எமது நாட்டுத் தலைவர்கள் பற்றிக்கூற முடியுமா? கூகலில் துலாவிப்பார்த்தால் நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட சனாதிபதிமார்கள், நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுனர்கள் எமது நாட்டை ஆள்கிறார்கள். பக்காத் திருடர்களே எமது நாட்டை ஆட்சிசெய்துள்ளார்கள். ஆட்சியாளர்கள் அப்படிப்பட்டவர்களெனில் நீங்கள் எப்படிப்பவர்களாக இருப்பீர்கள் என அவர்கள் நினைக்கிறார்கள். கல்முனை நகரசபைத் தலைவரை கூகல்பண்ணிப் பார்த்தால் அவரும் அப்படித்தான். காசுக்காக அமைச்சர் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்குமிங்கும் தாவுகிறார்கள். நசீர் அஹமட்டுக்கு என்றால் நீதிமன்றம் சரியான தீர்ப்பினை வழங்கியது. அந்த தீர்ப்பிற்கு நாங்கள் மதிப்பளிக்கவேண்டும். இந்த தீர்ப்பு இதற்கு முன்னரே வழங்கப்பட்டிருப்பின் பந்துல, விஜேதாச, ஹரீன், மனுஷ பாராளுமன்றத்தில் இல்லை. சட்டம் சரிவர அமுலாக்கப்பட்டால் இன்றும் பாராளுமன்றத்தில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் வெளியிலேயே. சட்டம் இல்லாத நாட்டை ஒருபோதுமே முன்னேற்ற முடியாது.

இனம் என்ன? அதிகாரம் இருக்கிறதா? வறியவரா – பணக்காரனா? என்ற பேதமின்றி அனைவருக்கும் நீதி கிடைக்கின்ற நாட்டை நாங்கள் உருவாக்கிட வேண்டும். நாங்களும் நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்த தேசிய மக்கள் சக்தி உருவாக்குகின்ற நாடு அப்படிப்பட்ட ஒன்றாகும். இந்த பிரதேசத்தில் மீனவர்கள் இருக்கிறார்கள், ஏறக்குறைய 500 பன்னாட் கலங்கள் இருக்கின்றன, 800 – 900 சிறிய படகுகள் உள்ளன. இவர்களின் பிரதான வாழ்வாதாரம் மீன்படித் தொழிலாகும். கடலரிப்பு ஏற்படுகின்றது, படகுகளை நிறுத்திவைப்பதற்கான மீன்பிடித் துறைமுகம் கிடையாது. எனினும் மத்தலவில் விமான நிலையமொன்று இருக்கின்றது. ஈடேற்றப்படுவதோ மக்களின் தேவைகள் அல்ல. அவருக்கு கொமிஸ் வரும் விதத்தில்தான் வேலை செய்கிறார்கள். பொருளாதாரத்தை சரிக்கட்ட பெருங்கடலில் இருக்கின்ற மீன் அறுவடையைப் பெறவேண்டும். அதற்காக மீனவர்களுக்கு வசதிகளை வழங்குதல் வேண்டும். தற்போது அரைவாசிக்கு மேற்பட்ட பன்னாட் கலங்கள் கடலுக்குச் செல்வதில்லை. எண்ணெய் அடித்துக்கொண்டு, இரண்டுமூன்று வாரங்களுக்கான பொருட்களை எடுத்துக்கொண்டு, கடலுக்குச்சென்று மீன்பிடித்துக்கொண்டு வந்தால் நட்டம். கடன். அதனால் படகுகள் கடலுக்குச் செல்வதில்லை. படகுகளைக் கடலுக்கு அனுப்புவதாயின் டீசல் மானியம், நல்ல இறங்குதுறை, பனிக்கட்டிக் களஞ்சியம் அமைத்துக்கொடுக்கப்படல் வேண்டும். வலைகள் முதலிய சாதனங்கள் நியாயமான விலைக்கு வழங்கப்படல் வேண்டும். இப்போது மக்கள் கடலுக்குச்சென்று மீன் அறுவடையை கரைக்கு கொண்டுவருவார்கள். நாட்டின் விளைச்சல் அதிகரிக்கும். நாடு வளம்பெறும். இந்த ஆட்சியாளர்கள் சனவரி மாதம் முதலாந் திகதியில் இருந்து மீண்டும் டீசலுக்கு வற் விதித்துள்ளார்கள். கடலுக்குச்சென்ற கலங்களையும் கரைக்கு கொண்டுவர நேரிடும். நாட்டை உருப்படியாக்க உற்பத்திகளை மேம்படுத்தவேண்டும். அதில் இடையீடுசெய்ய நாங்கள் தயார்.

அம்பாறை மாவட்டத்தில்தான் அதிகமாக நெல் செய்கைபண்ணப்படுகின்றது. செழிப்பான வயல்வெளிகள் இருக்கின்றன. வசதிகள் கிடையாது. சிறந்த விதையினங்கள், நல்ல உரம், களை கொல்லிகள் கிடையாது. குறைந்த விலைக்கே நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது. கமக்காரர் அநாதரவாகிவிட்டான். நாடும் அநாதரவாகிவிட்டது. பல்லாயிரக்கணக்கான வயல்நிலங்கள் இருக்கின்றன. புதிய விதையினங்களைப்போட்டு, புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டுவந்து, சிறந்த பசளைகளை இட்டு, விளைச்சலை அதிகரித்து, முன்னேற்றமடைந்த தொழில்நுட்பத்துடனான ஆலைகளை அமைத்து அரிசியை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும். வயல்கள் பாழடைந்தால் நாடே பாழடைந்துவிடும். வயல் விளைச்சலை அதிகரிக்கும் இடத்திற்கு எமது நாட்டை மாற்றியமைத்திட வேண்டும். எமது இளைஞர் தலைமுறையினருக்கு புதிய தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். இன்றைய உலகில் முதன்மைத் தொழில்த்துறையாக ஐ.ரீ. தொழில்த்துறையே மாறியுள்ளது. அறிவுபடைத்த எமது இளைஞர் தலைமுறையினருக்கு உலகின் முன்னேற்றமடைந்த உழைப்பினைக் கையகப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்திடவேண்டும். ஐ.ரீ. தொழில்நுட்பத்தை விருத்திசெய்ய வேண்டும். இன்று எமது இளைஞர்களுக்கு அவர்களின் வாழ்க்கை இழக்கச்செய்விக்கப்பட்டுள்ளது. விவாகம் செய்துகொள்கின்ற இளைஞர்களுக்கு கூடி வாழ்வதற்கான வாய்ப்பு இழக்கச்செய்விக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களும் அவர்களின் விவாகம்செய்த பிள்ளைகளும் ஒருநாள்கூட விலகி இருக்கமாட்டார்கள். எனினும் எங்கள் பிள்ளைகள் விவாகம்செய்து ஒருமாதம்கூட ஒன்றாக வாழ வாய்ப்பில்லை. கணவன் வெளிநாட்டில், மனைவி இலங்கையில். அத்தகைய வாழ்க்கை எமக்கு வேண்டுமா? அமைச்சர்களின் பிள்ளைகள் தொழில் புரிவதைக் கண்டிருக்கிறீர்களா? பாடசாலையில் போதிப்பது, தொழிற்சாலையில் வேலைசெய்வது அவ்வாறான தொழில்களை அவர்கள் புரிவதில்லை. அவர்களின் பிள்ளைகள் அரசாங்கத்துடன் பிஸ்னஸ். அரசாங்கத்தின் கொந்துராத்து வேலைகளை அவர்கள் செய்கிறார்கள். எங்கள் பிள்ளைகள் பிள்ளைகள் இல்லையா? எமது பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் அவசியமில்லையா? எமது பிள்ளைகளுக்கும் சிறந்த எதிர்காலத்தை அமைத்துக்கொடுப்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை நாங்கள் அமைத்திடுவோம்.

இந்த ஆட்சியாளர்கள் எப்போதுமே அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இனவாதத்தை விதைக்கிறார்கள். இரு அணிகளும் இனவாதத்தை விதைத்தே அதிகாரத்தைப் பெறுகின்றன. அண்மையில் இனவாதத்தை விதைத்திட முயற்சி செய்தார்கள். எனினும் இப்போது இனவாதத்தின் தீச்சுடர் பற்றியெரிவதில்லை. குருந்தி விகாரையை மையமாகக்கொண்டு இனவாதத்தை தூண்டிவிட எத்தனித்தார்கள். திருகோணமலையில் இனவாதத்தை தூண்டிவிட முயற்சி செய்தார்கள். பொன்னம்பலத்தின் வீட்டைச் சுற்றிவளைத்து இனவாதத்தை தூண்டிவிட முயற்சி செய்தார்கள். இனிமேலும் இந்நாட்டு மக்கள் இனவாதத்திற்கு இரையாக மாட்டார்கள். எமது நாட்டை தீக்கிரையாக்கிய, மோதல்களை உருவாக்கிய, உயிர்த்தஞாயிறு தாக்குதலை உருவாக்கிய இந்த ஆட்சியாளர்களின் இனவாத அரசியலை தோற்கடித்திட வேண்டும்.

இந்த நாடு ஒரு இனக்குழுவின் நாடு மாத்திரமல்ல. நாங்கள் பிறப்பது, இறப்பது, உரமாவது இந்த நாட்டிலேயே. இது எமது நாடு. நாம் அனைவரும் ஒற்றுமை நிறைந்த ஒரு தேசத்தை உருவாக்கிடுவோம். கிழக்கிலங்கை மக்களும் தென்னிலங்கை மக்களும் இந்த நாட்டை உருப்படியாக்க எழுச்சிபெற வேண்டும். இந்த ஆட்சியார்களை விரட்டியடித்திட வடக்கின் தெற்கின் கிழக்கின் மக்கள் அனைவரும் ஒருவர்போல் கைகோர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நாட்டைக் கட்டியழுப்ப புதிய தேசிய எழுச்சியொன்று எமக்குத் தேவை. நாங்கள் எழுச்சிபெற வேண்டியது ஒருவருக்கொருவர் எதிராக அல்ல. சாதிபேதம், இனபேதம், மதபேதமற்றதாக இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக்கொண்ட எழுச்சியொன்று தேவை. நாங்கள் ஒன்றுசேரும்போது அவர்கள் கூறுகிறார்கள் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்தால் மதங்களைக் கடைப்பிடிக்க இடமளிக்க மாட்டார்களென்று. மதம் என்றால் என்ன? மதம் என்பது அதனைப் பின்பற்றுகின்ற மக்களின் நம்பிக்கையாகும். முஸ்லீம் மக்கள் அல்குர்ஆனையும், நபிகள் நாயகம் அவர்களின் உபதேசங்களையும், சிங்கள பௌத்தர்கள் திரிபீடகத்தையும் புத்தபெருமானையும், கத்தேலிக்கர்கள் விவிலியத்தையும் இயேசு கிறிஸ்துவையும். தமிழ் மக்கள் பகவத் கீதையையும் சிவபெருமானையும் நம்புகிறார்கள். எமது அனைத்து மக்கட் சமூகத்திற்கும் தமது நம்பிக்கைக்கிணங்க தாம் விரும்புகின்ற மதத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் உச்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய ஓர் அரசாங்கமே தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம். நாங்கள் எமது அரசியலுடன் மதத்தை தொடர்புபடுத்திக் கொள்ளமாட்டோம். மதம் என்பது மக்களின் நம்பிக்கையாகும். அரசியல் என்பது மக்கள் எவ்வாறு ஆளப்படுவது என்பதாகும்.

அவர்கள் மற்றுமொரு அபிப்பிராயத்தையும் ஏற்படுத்துகிறார்கள், என்.பி.பி. அரசாங்கமொன்று வந்தால் தொழில்முயற்சிகளை அரசாங்கம் சுவீகரித்துக்கொள்ளுமாம். எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச டுவிட்டர் செய்தியொன்று மூலமாக என்.பி.பி. அரசாங்கமொன்று வந்தால் ஆதனங்களை சுவீகரித்துக்கொள்ளுமென கூறினார். சஜித் கூறியதால் எவருமே ஏற்றுக்கொள்வதில்லை. இந்த வருடத்தின் சனவரி தொடக்கம் நவெம்பர் வரை எமது நாட்டில் 1183 தொழில்முயற்சிகள் வங்கிகளால் சுவீகரிக்கப்பட்டு ஏலவிற்பனை செய்யப்பட்டுள்ளன. மிகவும் சிரமமப்பட்டு கட்டியெழுப்பிய பிஸ்னஸ். உயிர்த்தஞாயிறு தாக்குதல் வந்தது, கொவிட் வந்தது, மக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன, பொருளாதாரம் சீரழிந்தது, தொழில்முயற்சிகள் மூடப்பட்டன. சிறப்பாக இயங்கிய தொழில் முயற்சிகளை சீரழித்தவர்கள் யார்? இந்த ஆட்சியாளர்கள் தான். இப்போது என்ன நடந்துள்ளது. நாங்கள் அரசாங்கமொன்றை அமைப்பது பிரசையின் தொழில்முயற்சிகளை சுவீகரித்துக்கொள்வதற்காக அல்ல. அவர்களின் தொழில் முயற்சிகளை முன்னேற்றுவதற்காகவே. நீங்கள் சப்பாத்துக் கைத்தொழிலைப் புரிந்தால், அதற்கான தொழில்நுட்பத்தை வழங்கி, வங்கிக் கடன் வழங்கி, அந்த தொழிற்றுறைக்கு உலகின் சந்தையைத் தேடிக்கொடுத்து முன்னேற்றகரமான தொழிற்றுறையாக மாற்றுவதே எமது திட்டம். நீங்கள் சாகுபடிசெய்கின்ற நெல்வயல்கள் கல்முனை மக்களுக்கு சோறு போடுவதற்காக மாத்திரமல்ல, உலக மக்களுக்கே உணவளிக்கும் நிலைக்கு மாற்றிடவேண்டும். நாங்கள் உருவாக்கும் பொருளாதாரம் அதுவே. புதிய தொழில்முயற்சிகளை உருவாக்குகின்ற அவற்றை முன்னேற்ற ஒத்துழைப்பு வழங்குவதுதான் எமது பொருளாதாரக் கொள்கை. சுங்கத்திற்கு கட்டுப்படவோ அல்லது வருமான வரிக்கோப்புகளை மறைத்துவைக்கவோ அவசியமேற்படாத நியாயமான வரியொன்று, நியாயமான சட்டமொன்று, சாதகமான தொழில்முயற்சியை நாங்கள் உருவாக்கிடுவோம். வீழ்ந்த கைத்தொழில்களை மீட்டெடுக்கின்ற, தொழில் முயற்சிகளை முன்னேற்றுகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் அமைப்போம். தொழில்முயற்சிகளுக்கு உலக சந்தையில் உரிய இடத்தைக் கைப்பற்றிக்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.

அதைப்போலவே உலகிற்கு சமாதானம் அவசியம். இன்று பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் பிள்ளைகள் படுகின்ற வேதனை தொடர்பில் குரலொன்று தேவையில்லையா? தேசிய மக்கள் சக்தி என்பது அதோ அந்த குரலை எழுப்புகின்ற இயக்கமாகும். உலகில் அநீதியும் அநியாயமும் எங்கெல்லாம் நிலவுகின்றதோ அவற்றுக்கு எதிராக குரலெழுப்பிட நாங்கள் தயார். அத்தகைய அரசாங்கமொன்றை நாங்கள் அமைத்திடுவோம். இந்த நாட்டை மாற்றியமைக்கின்ற பாதையொன்று எமக்கு அவசியமாகும். தோழர் ஆதம்பாவா நீண்டகாலமாக இந்த கல்முனை பிரதேசத்தில் எம்மோடு செயலாற்றி வருகிறார். ரமேஸ், நளின் தோழர்கள் மிகுந்த பலம்பொருந்தியவர்களாக எம்முடன் உழைத்து வருகிறார்கள். அவர்கள் இந்த இடத்திற்கு வந்திருப்பது தமக்காக தனிப்பட்டவகையில் எதையாவது பெற்றுக்கொள்வதற்காக அல்ல. அரசாங்கத்திற்கு வருகின்ற ஒவ்வொரு சதமும் மீண்டும் மக்களைச் சென்றடைகின்ற அரசாங்கமொன்றை அமைத்திட வேண்டும். எம்முடன் இணைந்துகொள்ளுமாறு நான் இளைஞர் தலைமுறையினருக்கு அழைப்பு விடுக்கிறேன். வருங்காலத்தில் வரப்போகின்ற இயக்கம் தேசிய மக்கள் சக்தியாகும். ஆகஸ்ற் மாதத்தில் சனாதிபதி தேர்தல் பிரடனஞ் செய்யப்படும். எமக்கு எட்டு மாதங்களே இருக்கின்றன. ஒவ்வொரு வீட்டுக்கும் நாங்கள் போவோம். அனைவரையும் சந்திப்போம். நாட்டை ஆரத்தழுவியுள்ள அழிவு பற்றிப் பேசுவோம். இதனை மாற்றியமைத்திட என்.பி.பி. உடன் இணைந்துகொள்ளுமாறு அழைத்திடுவோம். இதற்கு முன்னர் எவருக்கு வாக்களித்திருந்தாலும் அந்த அனைவருக்கும் அழைப்பு விடுப்போம். இந்த நாட்டை மாற்றியமைக்கின்ற புதிய பயணத்தை நாங்கள் மேற்கொள்வோம். நாட்டைக் கட்டியெழுப்புகின்ற புதிய பயணத்தை தொடங்குவோம். வடக்கு தெற்கு கிழக்கில் உள்ள நாமனைவரும் ஒரு தாய் மக்கள்போல் சகோதரத்துவத்துடன் வாழும் நாட்டை நாங்கள் உருவாக்கிடுவோம். உலகில் ஒரு நாட்டுக்குச்சென்று நான் இலங்கையன் என பெருமிதமாக கூறக்கூடிய ஒரு நாட்டை உருவாக்கிக் கொடுப்போம். அதற்காக அனைவரும் ஒன்றுசேர்வோமென அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். இந்த நாட்டுக்கு விளைவித்துள்ள அழிவினை ஒற்றோபர் முடிவடைவதற்கு முன்னர் முடிவுறுத்துவோம்.

Show More

பெண்கள் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக திசைகாட்டியினர்(NPP) உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மனு

-Colombo, December 16, 2023- பெண்கள் மற்றும் சிறுவர் அமைச்சிற்கான வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டை குறைத்ததிற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினர் பாராளுமன்ற சுற்று வட்டத்திற்கு அருகில் 04ம் திகதி நடாத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியதால் தமது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டதை உறுதிப்படுத்துமாறு கோரி அடிப்படை மனித உரிமை மனு டிசம்பர் 15 மு.ப. 11.30க்கு பா.உ. கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் உச்ச நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டது. இதற்காக தேசிய மக்கள் சக்தியின் […]

-Colombo, December 16, 2023-

பெண்கள் மற்றும் சிறுவர் அமைச்சிற்கான வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டை குறைத்ததிற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினர் பாராளுமன்ற சுற்று வட்டத்திற்கு அருகில் 04ம் திகதி நடாத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியதால் தமது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டதை உறுதிப்படுத்துமாறு கோரி அடிப்படை மனித உரிமை மனு டிசம்பர் 15 மு.ப. 11.30க்கு பா.உ. கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் உச்ச நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டது.

இதற்காக தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சமன்மலி குணசிங்க, சட்டத்தரணி நிமலா சிறிவர்தன, சட்டத்தரணி சமிலா குலசேகர, சட்டத்தரணி மது கல்பனா உள்ளிட்டோர் ஒன்றிணைந்தனர்.

Show More

“தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் ஆர்ப்பாட்டம்மீது நீர்த்தாரைத் தாக்குதல் மேற்கொண்டமை இறுதிமூச்சு இழுத்துக்கொண்டிருக்கின்ற அரசாங்கத்தின் கோழைத்தனமான செயலாகும்…” -சட்டத்தரணி தனுஷ்கி லியனபட்டபெந்தி-

-Colombo, December 06, 2023- கடந்த 04 ஆந் திகதி சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்கள் அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதம் நடைபெற்றது. அடுத்த வருடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை இந்த வருடத்தைப் பார்க்கிலும் 51%ஆல் வெட்டிவிடுதலுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் பத்தரமுல்ல, தியத்த உயனவிற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இந்த ஆர்ப்பாட்டம்மீது மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான மிருகத்தனமாக நீர்த்தாரை தாக்குதலைக் கண்டித்து இந்த ஊடக சந்திப்பு நடைபெறுகின்றது. மிகையான மழைக்கு மத்தியில் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான […]

-Colombo, December 06, 2023-

கடந்த 04 ஆந் திகதி சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்கள் அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதம் நடைபெற்றது. அடுத்த வருடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை இந்த வருடத்தைப் பார்க்கிலும் 51%ஆல் வெட்டிவிடுதலுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் பத்தரமுல்ல, தியத்த உயனவிற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இந்த ஆர்ப்பாட்டம்மீது மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான மிருகத்தனமாக நீர்த்தாரை தாக்குதலைக் கண்டித்து இந்த ஊடக சந்திப்பு நடைபெறுகின்றது. மிகையான மழைக்கு மத்தியில் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான பெண்கள் பங்கேற்றார்கள். எனினும் அவர்கள் வருவதற்கு முன்னராகவே பொலீஸ் கிளர்ச்சி அடக்குதல் கூறு அந்த இடத்தில் தண்ணீர் பௌசர்களுடன் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. மக்கள் வாழ்க்கைச் சுமையை தாங்கிக்கொள்ள முடியாத நிலையை அடைந்தமையால் நாட்டின் ஒட்டுமொத்த பெண்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவுமே நாங்கள் நேற்று வீதியில் இறங்கினோம். கடுமையான எதிர்ப்பினை இந்த பெண்கள் வெளிக்காட்டினாலும் எவ்விதத்திலும் அமைதியான நிலைமைக்கு தடையேற்படவில்லை. பொலீஸாருக்கு நீர்த்தாரைத் தாக்குதலை மேற்கொள்ளவேண்டிய அவசியமிருப்பின் அந்த தாக்குதல் நடாத்தப்பட்ட தருணத்தைப் பார்க்கிலும் தீவிரமான பல தருணங்கள் நிலவின. எனினும் இறுதியாக ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பெண்கள் கலைந்துசெல்ல அண்மித்தவேளையில்தான் தாக்குதல் நடாத்தப்பட்டது. இறுதி மூச்சினை இழுத்துக்கொண்டிருக்கின்ற அரசாங்கத்தின் கோழைத்தனமான தாக்குதலாகவே நாங்கள் இந்த தாக்குதலைக் காண்கிறோம்.

இன்னும் 05 நாட்களில் மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக சமவாயத்தில் கைச்சாத்திட்டு 75 வருடங்கள் நிறைவடைகின்றன. ஒரு நாடு என்றவகையில் இலங்கையின் அரசாங்கமும் மேலும் பல அரசாங்கங்களுடன் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. எமது நாட்டு மக்கள் அபிமானத்துடன் உயிர்வாழ்வதற்கான நன்மதிப்பினை இல்லாதொழித்த இந்த அரசாங்கம் மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக சமவாயத்தின் வாசகங்களை முழுமையாகவே மீறியுள்ளது. உலகில் நிலையான மற்றும் நீண்டகாலம் நிலைத்திருக்கவல்ல பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கு நாட்டின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது அத்தியாவசியமான காரணியென்பது இந்த அனைத்துலக பிரகடனத்தின் முகவுரையில் மிகச்சிறப்பாக குறிப்பிடப்படுகின்றது. இந்த அடிப்படை மனித உரிமைகள் பற்றி பாடசாலைகளில் கற்பிக்கப்படல் வேண்டுமென குறிப்பிடப்படுகின்றது. தட்டுப்பாடுகளின்றி வாழ்வதற்கான உரிமை, மனித உரிமைகளைப் பாதுகாத்தல், தனக்கும் தனது குடும்பத்திற்கும் மனித மாண்பு பாதுகாக்கப்படத்தக்கவகையில் உயிர்வாழ அவசியமான நியாயமான சம்பளம் பெறுவதற்கான உரிமை, உணவு, உடை, உறையுள் மற்றும் சுகாதார சேவைகளைப் பெற்று சாதகமான வாழ்க்கைத்தரத்தை அனுபவிப்பதற்கான உரிமையைப்போன்றே தாய்மார்களுக்கும் பிள்ளைகளுக்கும் விசேட பாதுகாப்பு கிடைப்பதற்கான உரிமை போன்ற அடிப்படை விடயங்கள் பல வலியுறுத்தப்பட்டுள்ளன. அரசாங்கமொன்று இந்த அடிப்படை உரிமைகளை மீறுகின்றவேளைகளில் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் பிரச்சினைகளுக்காக குரலெழுப்புகின்ற மற்றும் பெண்களுக்காக குரல்கொடுப்பதற்கான விசேட தொழில்சார் உரிமை சட்டத்தரணிகள் என்றவகையில் எமக்கு இருக்கின்றது. மக்களின் பிரச்சினைகளுக்காக மிகுந்த கூருணர்வு கொண்டதாக எம்முடன் கைகோர்த்து செயற்படுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

எமது பிள்ளைகளின் உளச் சுகாதாரம், கல்வி மற்றும் சுகாதாரம் வீழ்ச்சியடைவதை இனிமேலும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
-சட்டத்தரணி திஸ்னி சமந்திகா லியனஆரச்சி

இலங்கையின் சனத்தொகையில் 52% பெண்களாவர். கடந்த ஆண்டில் ஊழல்மிக்க ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் பிரதான பங்கினை ஆற்றியவர்கள் பெண்களே. நிலவுகின்ற ஊழல்மிக்க முறைமை பெண்கள்மீது கொடுக்கின்ற அழுத்தத்தை மாற்றியமைப்பதற்காக அமைதிவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள்மீது நிந்திக்கத்தக்க நீர்த்தாரைப் பிரயோகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டுகின்ற பாரிய வகிபாகத்தை ஈடேற்றுகின்ற பெண்கள்மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சர்வதேசரீதியாகவும் தாக்கமேற்படுத்துகின்றது. தாம் எதிர்நோக்குகின்ற சிக்கல்கள் சம்பந்தமாக பெண்கள் வீதியில் இறங்கிய ஒரு தருணமே அது. எனினும் சிறுவர் மற்றும் பெண்களின் பாதுகாப்பு சம்பந்தமாக உச்சஅளவிலான சட்டங்களும் விதிகளும் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு இருக்கையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை பெண்கள் என்றவகையிலும் சட்டத்தரணிகள் என்றவகையிலும் கடுமையாக கண்டிக்கிறோம். அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமையொன்றைப் பாவிக்கையில் அநாகரிகமான முறையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பாரிய கவனம் ஈர்க்கப்படுகின்றது.

எங்கள் பிள்ளைகளின் உளச் சுகாதாரம், கல்வி மற்றும் உடல்நலம் சீரழிவதை இனிமேலும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அதற்காக குரல் எழுப்புகின்ற பெண்களுக்கு செவிமடுக்கால் அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கு எதிராக அனைவரும் அணிதிரளவேண்டும். பெண்கள் மீது மாத்திரமல்ல வேறு அனைத்துவிதமான அமைதிவழி ஆர்ப்பாட்டங்கள்மீதும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது அரசாங்கத்தின் ஒரே பதிலடியாக அமைந்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பில் சட்டத்தரணிகள் என்றவகையில் நாமனைவரும் ஒன்றுசேர்ந்து எதிர்கால நடவடிக்கை எடுப்போம்.

“உங்களின் அடக்குமுறை எம்மை பலமடையச் செய்கிறது…”
-சட்டத்தரணி சமிலா குலசேகர-

இலங்கையில் ஒட்டுமொத்த பெண்களுக்காக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்மீது நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பதற்காக ஒட்டுமொத்த பெண்களையும் பிரதிநிதித்துவம்செய்து நாங்கள் இந்த ஊடக சந்திப்பினை நடாத்துகிறோம். பெண்கள் மட்டற்ற பொறுமைக்குணம் பொருந்தியவர்கள். எனினும் அந்த பொறுமை எல்லைமீறிவிட்டால் எவ்விதத்திலும் கட்டுப்படுத்த இயலாதென்பதை ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும். மகப்பேற்றின்போது பெண்கள் உணர்கின்ற பிரசவ வேதனையை தாங்கிக்கொள்ள முடியுமானால் நீர்த்தாரைப் பிரயோகத்தை தாங்கிக்கொள்வது பெரிய விடயமல்ல. தற்போது அனுபவிக்க நேர்ந்துள்ள மட்டற்ற அழுத்தம் காரணமாகவே இந்த சர்வாதிகார வெறிக்கு எதிராக பெண்கள் விதியில் இறங்கினார்கள். பிள்ளைக்கு ஒருவேளை உணவினைக் கொடுக்கும்போது தாய் எந்தளவு நிர்க்கதிநிலையடைகிறாள் என்பதை பெண்கள் அறிவார்கள். அத்தியாவசியமான உடை, மருந்துகள், கல்விக்கான புத்தகங்களை வாங்கிக்கொடுக்க முடியாத வேளைகளில் மட்டற்றவகையில் நிர்க்கதியடைகிறாள். நாடு பொருளாதாரரீதியாக வீழ்த்தப்பட்டமையால் பெண்கள் தற்போது பரம ஏழ்மை நிலையை அடைந்துள்ளார்கள். இற்றைவரை ஆட்சியதிகாரத்தை வகித்த அரசாங்கங்களில் இருந்த மக்கள் பிரதிநிதிகள் எமது குரல்களுக்கு செவிசாய்க்கவில்லை: தமது வேலைகளைச் செய்துகொண்டார்கள் மாத்திரமே.

நாட்டில் 52% ஆக அமைகின்ற பெண்களுக்காக அவர்கள் ஒருபோதுமே செயலாற்றவில்லை. எனவே எமக்காக நாங்கள் நிற்கவேண்டிய இடத்திற்கே இன்று நாங்கள் வந்திருக்கிறோம். அதோ அதற்காகத்தான் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்தோம். ஒரு துண்டு கல்லைக்கூட கையில் ஏந்தாமல் நாட்டின் ஒட்டுமொத்த பிரசைகளுக்காக குரலெழுப்பிய பெண்களுக்கு தலைசாய்த்து வணக்கம் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தாக்குதல்களுக்காக பெண் பொலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். பெண்ணின் வயிற்றில் சுமந்து பிறந்த பொலீஸ் உத்தியோகத்தர்கள் தான் இருந்தார்கள். நாங்கள் உணர்கின்ற வேதனைகளை இந்த உத்தியோகத்தர்கள் உணரமாட்டார்களா? ஆட்சியாளர்களின் அவசியப்பாடுகளுக்கு தலைவணங்க பொலீஸார் ஈடுபடுத்தப்பட்டுளார்கள்.
தற்போது இருப்பவர் பதில்கடமையாற்றுகின்ற பொலீஸ் மா அதிபராவார். அந்த பதவியையும் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆட்சியாளர்களின் அவசியப்பாட்டுக்கு அமைவாக பொலீஸாரை நெறிப்படுத்த அவர் தயாராகி வருகிறார். எனினும் நாங்கள் இந்த ரணில் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு ஒரு விடயத்தை உறுதியாக கூறுகிறோம். ” உங்களின் அடக்குமுறை எங்களை பலமடைச்செய்கிறது.” பெண்களை இதைவிட ஊக்கத்துடனும் வலிமையுடனும் முன்நோக்கி வருவார்கள் என்பதை வலியுறுத்துகிறோம். நீர்த்தாரை தாக்குதலுக்கு அஞ்சி புறமுதுகு காட்டி ஓடுபவர்களல்ல பெண்கள். நாங்கள் ஊழலற்ற இயக்கமொன்றின் முன்னோடிகள் என்பதை பெருமிதத்துடன் கூறுகிறோம். பண்புடைய அரசியல் இயக்கமொன்றின் முன்னோடிகளே நாங்கள். சனநாயகரீதியாக பண்பானவர்களாக எதிர்ப்பினை வெளிப்படுத்த நாங்கள் தயார். வன்முறைசார்ந்த தாக்குதல்களுக்கு நாங்கள் சனநாயகரீதியாக மாத்திரமே பதிலளிக்கிறோம். இங்கே முன்வருபவர்கள் சாதகமான எதிர்காலமொன்றின் நல்ல கனவினைக் காண்பவர்களே. சர்வாதிகார வெறியைத் தோற்கடித்திட நாமனைவரும் அணிதிரள்கிறோம் எனும் செய்தியை அரசாங்கத்திற்கு கொடுக்கிறோம்.

“தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்றவகையில் வெகுவிரைவில் இந்த தாக்குதலுக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை தாக்கல் செய்வோம்.”
-சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி-

எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்ற ஒருவர் என்றவகையில் பெற்ற அனுபவத்தை முதன்முதலில் கூறவேண்டும். நாமனைவரும் அமைதியாக ஒன்றுகூடி போராட்டக் கோஷங்களை எழுப்பி மக்களுக்குப் போன்றே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்நாட்டுப் பெண்களின் கவலைக்கிடமான நிலைமை பற்றி கவனத்திற்கு கொண்டுவந்தோம். அமைதிவழி எதிர்ப்பின் முடிவினைக் குறித்து தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சகோதரி ஹரினி, சமன்மலீ சகோதரி மற்றும் சரோஜா போல்ராஜ் சகோதரியை முதன்மையாகக்கொண்ட பெண்கள் உரைநிகழ்த்த தயாராகியதும் நீர்த்தாரை தாக்குதலைத் தொடங்கினார்கள். மிகவும் பிரயத்தனப்பட்டே தாக்குதலின் மத்தியில் உடைகளை பாதுகாத்துக் கொண்டார்கள். பெண்கள் நாட்டின் தலைமுறையினரை முன்னெடுத்துச் செல்பவர்கள். அதைப்போலவே நாட்டின் உற்பத்திச் செயற்பாங்கில் மிகப்பெரிய பங்களிப்பினைச் செய்பவர்கள் பெண்களே. நாமனைவரும் பெண்கள் என்றவகையில் அழுத்தத்திற்கு இலக்காகியவர்கள் என்றவகையிலேயே எதிர்ப்பில் பங்கேற்றோம். குடும்பத்தைப் பராமரித்து பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பவது தாங்கிக்கொள்ளமுடியாத அழுத்தமாக மாறியுள்ளது. பெருந்தோட்டக் கைத்தொழில், ஆடைக் கைத்தொழில் மற்றும் வெளிநாட்டுத் தொழில்களில் பெண்கள் முனைப்பாக பாரிய பங்களிப்பினை நல்கிவருகிறார்கள். பாராளுமன்றத்தில் 5.3% ஆக அமைந்த பெண் பிரதிநிதித்துவத்தினால் இந்நாட்டின் பெண்களின் குரல் அவசியமான அளவில் மேலோங்குவதில்லை. 1948 இன் பின்னர் சமர்ப்பித்துள்ள வரவுசெலவுகளில் மரபார்ந்தவகையிலும் பழங்குடிக்கொள்கை அடிப்படையிலுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்களுக்கு மிகவும் சிறிய பங்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு நடைபெற்றவேளையில் நாட்டின் உற்பத்திச் செயற்பாங்கினை நலிவடையச் செய்விக்கவோ பொதுமக்களின் போக்குவரத்திற்கு சிறிதளவிலேனும் இடையூறு விளைவிக்கவோ நாங்கள் செயற்படவில்லை. பாராளுமன்ற அலுவல்களுக்கு தடையேற்படுத்தும் எந்தவிதமான எதிர்பார்ப்பும் எங்களுக்கு இருக்கவில்லை. எனினும் பதிற்கடமையாற்றும் பொலீஸ் மா அதிபரின் நடவடிக்கை மிகவும் நித்திக்கத்தக்கது. அனைத்துப் பிரசைகளினதும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் இருந்தாலும் இந்த அரசாங்கம் அதற்கு இடமளிப்பதில்லை. அதனால்த்தான் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அரச கொள்கைகளில் அடிப்படை சித்தாந்தமென்றவகையில் குடும்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் அந்த முக்கியமான அலகினை மறந்து செயலாற்றிய விதம், சிறுவர் மற்றும் பெண்கள் மீது காட்டுகின்ற மனோபாவம் சர்வதேசரீதியாகவும் தெளிவாகியது. இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு மாத்திரம் தேசிய மக்கள் சக்தி நின்றுவிடப்போவதில்லை. தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்றவகையில் வெகுவிரைவில் இந்த தாக்குதலக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை தாக்கல் செய்யும். அதைப்போலவே அரசியலமைப்பு மற்றும் பொலீஸ் கட்டளைச்சட்டம் சம்பந்தமாக அடிப்படை வழிகாட்டலை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுப்போம். சட்டத்தை அமுலாக்குபவர்களுக்கும் அதன் மூலமாக சட்டத்தை விளக்கிக்கூறவும் எதிர்பார்க்கிறோம். நேற்று நடாத்திய குற்றம்சார்ந்த நீர்த்தாரைப் பிரயோகம் மூலமாக இலங்கை இனிமேலும் நீதியை மதிக்கின்ற தேசமல்ல என்பதாகும். இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க தகைமை கொண்டதல்ல. இந்த நாட்டு மக்களின் அரசாங்கமொன்றை நிறுவி பெண்களின் பலத்திற்கு முறையான மதிப்பளித்தலை வழங்க நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

“அரசாங்கத்தில் எல்லையற்ற அழுத்தத்திற்கு எதிராக எதிர்ப்பினைக் காட்டினோம்…”
-சட்டத்தரணி நிமலா சிறிவர்தன-

கழிந்த 2023 ஆம் ஆண்டில் மகளிர், சிறுவர் மற்றும் சமுர்த்தி பிரிவுக்கு 152 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் வருகின்ற 2024 ஆம் ஆண்டுக்காக 75 பில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த எற்பாடு 50% மேலாக வெட்டிவிடப்பட்டுள்ளது. முன்னாள் சனாதிபதிமார்கள் நால்வர் மற்றும் சனாதிபதி பாரியார் ஒருவரைப் பராமரிப்பதற்காக 2023 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டிருந்த 84 மில்லியன் ரூபா அடுத்த ஆண்டுக்காக 110 மில்லியன் ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சனாதிபதிகளுக்கும் தப்பியோடிய சனாதிபதிக்கும் ஒதுக்கப்படுகின்ற நிதி அதிகரிக்கப்படுகின்றவேளையில் இந்நாட்டின் உயிர்நாடியான சிறுவர் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி 50% ஆல் வெட்டப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கல்வி சம்பந்தமாக நிலவுகின்ற அழுத்தம் அதிகமாக பெண்களாலேயே உணரப்படுகின்றது. நிலவிய ஏற்பாடுகளை வெட்டிவிட்டதன் மூலமாக பெண்கள் மீதான அழுத்தம் மேலும் உயர்த்தப்படுகின்றது. இதற்கு எதிராக நிலவுகின்ற அரசாங்கத்தை வலியுறுத்துவதற்கான உரிமை எமக்கு இருக்கின்றது. அரசாங்கம் முன்னெடுத்துவருகின்ற தவறான வெட்டிவிடல்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதையே நாங்கள் மேற்கொண்டோம்.

Show More

“பிள்ளைகள்கூட வெறுத்துள்ள அரசாங்கத்தை விரட்டியக்க ஒன்றுசேருங்கள்!” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் சமன்மலீ குணசிங்க-

தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2023.12.03 குறிப்பாக நாடு பொருளாதாரரீதியான வீழ்ச்சிக்கு இலக்காக்கப்பட்டுள்ள பின்னணியில் அடுத்த 2024 ஆம் ஆண்டுக்காக சமர்ப்பித்துள்ள வரவுசெலவு எமது குடும்ப வாழ்க்கைக்கு எவ்வளவு தாக்கம் ஏற்படுத்துகின்றதென்பதை நாங்கள் மீளாய்வுசெய்து வருகிறோம். எமது பிள்ளைகளின் உணவு, கல்வி, சுகாதாரம் ஆகிய பிரதானமான அத்தியாவசிய பிரிவுகளின் செலவுகள்கூட எவ்வளவுக்கு கத்தரிக்கப்பட நேர்ந்துள்ளதெனும் அழுத்தம் நன்றாக உணரப்பட்டு வருகின்றது. இரண்டாயிரத்து இருபத்திநான்கு வரவுசெலவில் ஏதேனுமொரு நிவாரணம் கிடைக்குமென முழுநாடுமே பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் சதாகாலம்போல் […]

தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2023.12.03

குறிப்பாக நாடு பொருளாதாரரீதியான வீழ்ச்சிக்கு இலக்காக்கப்பட்டுள்ள பின்னணியில் அடுத்த 2024 ஆம் ஆண்டுக்காக சமர்ப்பித்துள்ள வரவுசெலவு எமது குடும்ப வாழ்க்கைக்கு எவ்வளவு தாக்கம் ஏற்படுத்துகின்றதென்பதை நாங்கள் மீளாய்வுசெய்து வருகிறோம். எமது பிள்ளைகளின் உணவு, கல்வி, சுகாதாரம் ஆகிய பிரதானமான அத்தியாவசிய பிரிவுகளின் செலவுகள்கூட எவ்வளவுக்கு கத்தரிக்கப்பட நேர்ந்துள்ளதெனும் அழுத்தம் நன்றாக உணரப்பட்டு வருகின்றது. இரண்டாயிரத்து இருபத்திநான்கு வரவுசெலவில் ஏதேனுமொரு நிவாரணம் கிடைக்குமென முழுநாடுமே பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் சதாகாலம்போல் அந்த எதிர்பார்ப்பும் ஒரு கனவு மாத்திரமேயாகும். ஐ.எம்.எஃப். உடன் ஒன்றுசேர்ந்து தயாரித்த பொருளாதார நிகழ்ச்சிநிரலை அடுத்தவருடத்திற்கும் நன்றாகவே இணக்கஞ் செய்துள்ளார்கள். தற்போது வரையறையற்று பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் தரைமட்டமாக்கிச் செல்வதற்காக வரி அறவிடுகின்ற ஒரு வரவுசெலவுத் திட்டமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக அடுத்த வருடத்தின் மதிப்பீடுசெய்யப்பட்ட வருமானம் நான்காயிரத்து நூற்றி இருபத்தொன்பது பில்லியன் ரூபாவாக அமைவதோடு வரி வருமானம் என்றவகையில் மூவாயிரத்து எண்ணூற்று இருபத்தாறு பில்லியன் ரூபாவை ஈட்டிக்கொள்ள மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த வருமானத்தின் சதவீதமாக நூற்றுக்கு தொண்ணூற்றிமூன்று சதவீதத்தை வரியாக பெற்றுக்கொள்ள மதிப்பீடு செய்துள்ளார்கள். இதனால் வருடாந்த தனிநபர் வரிச்சுமை ஒரு இலட்சத்து எழுபத்து மூவாயிரத்து அறுநூற்றி முப்பத்தாறு ரூபாவாக அமைகின்றது. நாளொன்றில் ஒரு நபர்மீது நானூற்றி எழுபத்தைந்து ரூபாவிற்கு மேற்பட்ட வரிச் சுமை ஏற்றப்படுகின்றது.

நாளொன்றில் ஒருவருக்கு எவ்வளவுதான் வருமானம் கிடைத்தாலும் ஒரு நபர் என்றவகையில் நானூற்றி எழுபத்தைந்து ரூபா வரிச்சுமையை ஏற்க வேண்டும். இவ்விதமாக பெறப்படுகின்ற வருமானத்தை செலவிடுகையில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சிடமிருந்து பாரிய தொகை கத்தரிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, பாலூட்டுகின்ற தாய்மார்களுக்கு, பிள்ளைகளுக்கு போசாக்குக் குறைபாடு நிலவுகையில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகின்ற நிலையில் இரண்டாயிரத்து இருபத்திமூன்றுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நூற்றி ஐம்பத்திரண்டு பில்லியன் ரூபாவானது இரண்டாயிரத்தி இருபத்திநான்கில் எழுபத்தைந்து பில்லியன் ரூபா வரை கத்தரிக்கப்பட்டுள்ளது. இந்த வெட்டிவிடல் காரணமாக விசேட தேவைகள் நிலவுகின்ற குழுவினர் மத்தியில் சிறுவர் மற்றும் பெண்கள் மீது பாரிய அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. பிரதேச செயலாளர் அலுவலகங்களால் பேணிவரப்படுகின்ற சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு நிலையங்களிலிருந்து அவர்களை அகற்றி தத்தமது வீடுகளுக்கு கொண்டுசெல்லுமாறு நிரப்பந்திக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கம் பெற்றுக்கொள்கின்ற வரி வருமானத்தில் மிகவும் குறைந்த பகுதி அதற்காக கடந்த காலத்தில் ஒதுக்கப்பட்டிருந்தபோதிலும் அது தற்போது வெட்டிவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவர்களின் குடும்பங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமை அதனால் மேலும் அதிகரிக்கின்றது. எனினும் இளைப்பாறிய சனாதிபதிமார்கள் மற்றும் பாரியார்களை பராமரிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை இரண்டாயிரத்து இருபத்திமூன்றில் எண்பத்திநான்கு மில்லியன் ரூபாவில் இருந்து அடுத்த வருடத்தில் நூற்றிப்பத்து மில்லியன் ரூபாவரை அதிகரித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கான பணத்தை கத்தரித்து முன்னாள் சனாதிபதிமார்களின் செலவுகள் உயர்த்தப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவுவது தொடர்ந்தும் தீத்தொழில் புரிந்து மேற்கொள்ளப்படுகின்ற பொருளாதாரமாகும். இன்று அரசாங்கத்தின் செய்தித்தாளே மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு எமது பிள்ளைகளை விற்பனைசெய்கின்ற தீத்தொழில் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. ஜே.ஆர். ஜயவர்தனவினால் இந்த நாட்டுக்கு நவலிபரல்வாதம் அறிமுகஞ் செய்யப்பட்டதுமே இந்த தீத்தொழில் தொடங்கப்பட்டது. பேபி பாஃம் எனக்கூறி எமது பிள்ளைகளை விற்பனைசெய்த இறந்தகாலமே இன்று ரணில் விக்கிரமசிங்கவின்கீழும் அவ்விதத்திலேயே அமுலாக்கப்பட்டு வருகின்றது. மறுபுறத்தில் மதுபானசாலைகள் திறந்துவைக்கப்பட்டிருக்கின்ற காலத்தை நீடித்து தகப்பன்மார்களுக்கு குடிக்கக்கொடுக்கிறார்கள். தாய்மார்களை வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள். இந்த நிலைமைக்குள் பாதுகாப்பற்றதன்மைக்கு இலக்காக்கப்பட்டுள்ள பிள்ளைகள் தொடர்பான குற்றச்செய்லகள் அதிகரித்து வருகின்றன. இன்று நிலவுவது பிள்ளைகள்கூட வெறுக்கின்ற அரசாங்கமாகும். எனவே இன்று எஞ்சியிருப்பது அரசாங்கத்தை விரட்டியடித்து பதில் தேடுவது மாத்திரமாகும். அதற்காக திசெம்பர் நான்காம் திகதி சிறுவர் மற்றும் மகளிர் செலவுத்தலைப்பு அங்கீகரிக்கப்படவுள்ள தினத்தன்று பாரிய ஆர்ப்பாட்டத்தை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். அதற்கான அனைத்துப் பெண்களையும் பாராளுமன்றத்திற்கு அருகில் வருமாறு அழைப்பு விடுகிறோம்.

கெரற் கிழங்கு அரசியலை முன்னெடுத்துச் செல்கின்ற அழகான சொற்றொடர்களே வரவுசெலவில் இருக்கின்றன.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்துடன் எமது நாட்டின் பெண்களும் பிள்ளைகளும் பெருமளவிலான சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். அதைப்போலவே அரச பிரிவிலும் தனியார் பிரிவிலும் தொழில்புரிகின்ற பெண்களும் பெருந்தோட்டத் துறையைச்சேர்ந்த பெண்களும் புதிதாக பாரிய சிக்கல்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது. கடந்த காலத்தில் ஆடைக் கைத்தொழில், ஏனைய குடிசைக் கைத்தொழில்கள் மூடப்படுகின்ற தருணத்தில் கொண்டுவரப்பட்ட வரவுசெலவினால் வீழ்ச்சியடைந்த பொருளாதரத்தைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தைப் போலவே தமது குடும்பம் பற்றி நலமான ஒரு கனவினைக்காண மக்கள் எதிர்பார்த்தார்கள். மேற்படி எந்தவொரு விடயத்தையும் கருத்திற்கொள்ளாமல் தேர்தலை இலக்காகக்கொண்ட கெரற் கிழங்கு அரசியலை முன்னடுத்துச் செல்கின்ற பண்புகள், சில அழகான சொற்றொடர்கள் இந்த வரவுசெலவில் அடங்கியுள்ளன. மக்களின் பற்றியெரிகின்ற பிரச்சினைகளுக்கு அத்தருணத்தில் வழங்கப்படவேண்டிய குறைந்தபட்ச தீர்வுகளைக்கொண்டதாக எதிர்காலத்தில் நாட்டை உயர்த்திவைப்பது எந்த இடத்திற்கு என்பதை எதிர்வுகூறக்கூடிய விடயங்கள் வரவுசெலவில் உள்ளடங்க வேண்டும். எனினும் எழுபத்தைந்து வருடங்கள் பூராவிலும் சனாதிபதி தொடக்கம் அமைச்சர்கள் பிரமுகர்கள் வரை அவர்களின் சுகபோகத்திற்காகவும் சட்டைப்பைகளை நிரப்பிக்கொள்வதற்காகவும் கீழ்த்தரமான தேவைகளுக்காகவும் நிதியை முகாமைசெய்ததாலேயே இந்த நிலைமை ஏற்பட்டது. எனினும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திவைக்கின்ற எந்தவிதமான இலக்குகளும் இந்த வரவுசெலவில் உள்ளடக்கப்படவில்லை.

புள்ளிவிபரங்கள் என்றவகையில் எடுத்துக்கொண்டால் ஒற்றோபர் மாதமளவில் ஐந்துஇலட்சம் மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் கிடைத்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் பொருளாதாரரீதியில் தாழ்ந்த மட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். மறுபுறத்தில் மனைசார் மட்டத்தில் அல்லது சிறிய அளவிலான மட்டத்தில் மேற்கொண்டு வருகின்ற ஏதேனும் கைத்தொழில் இருப்பின் அதற்காக பாவித்த மின்கட்டணத்தைக்கூட இவ்விதமாக செலுத்தமுடியாத மட்டம் நிலவுகின்றது. எமது ஊர்களில்கூட சிறுகைத்தொழில்களில் ஈடுபட்ட பெருந்தொகையான சகோதரிகள் தொழில்களை இழந்து மேலும் பலர் தொழில்களை இழக்கின்ற அபாயமும் மின்கட்டணம் காரணமாகத் தோன்றியுள்ளது. மாத வருமானத்துடன் மின்கட்டணத்தை தாங்கிக்கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளது. வியாபார நிலையங்களில் போன்றே வீடுகளிலும் இரவுவேளைகளில் குளிர்சாதனப்பெட்டிகளில் மின்சார இணைப்பை துண்டித்துவைக்க பெரும்பாலானோர் தூண்டப்பட்டமையால் பிள்ளைகளின் உணவுப்பாதுகாப்புகூட ஆபத்திற்கு இலக்காகி உள்ளது. மின்கட்டண அதிகரிப்பு மனைசார் மட்டம் தொட்டு கைத்தொழில்கள் வரை மிகவும் மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. வரவுசெலவில் மக்கள் அதற்காக ஏதேனுமொரு விதத்திலான நிவாரணத்தை எதிர்பார்த்தாலும் நூற்றுக்கு பதினைந்தாக நிலவிய வற் வரி நூற்றுக்கு பதினெட்டு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மூலப்பொருட்கள் மீது தாக்கமேற்படுவதைப்போலவே முடிவுப்பொருளாக மாறும்போது பண்டங்களின் விலை அதிகரிக்கின்றமையை பாவனையாளர்களால் தாங்கிக்கொள்ள முடியாத நிலையேற்பட்டுள்ளது. மூலப்பொருட்கள் மீதான வரிகளின் தாக்கம் காரணமாக மேலுமொரு வருடத்திற்குள் மேலும்பல கைத்தொழில்கள் சீரழியக் காரணமாக அமையும்.

அரச மற்றும் தனியார்துறை ஊழியர்கள் நியாயமான சம்பள அதிகரிப்பினை எதிர்பார்த்தாலும் அதனை வழங்காமல் ரூபா பத்தாயிரத்தை அடுத்த ஏப்பிறல் மாதம் தொடக்கம் வழங்குவதாக ஏமாற்றுத் தேர்தல் வாக்குறுதியாயொன்று கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் கோரிநின்றதோ ரூபா இருபதாயிரம் சம்பள அதிகரிப்பையாகும். அரசாங்கம் வழங்குவதாகக்கூறிய ரூபா பத்தாயிரம் சம்பள அதிகரிப்பு தொடர்பில்கூட ஒழுங்கான முறையியலொன்று முன்மொழியப்படவில்லை. தற்போது முன்மொழியப்பட்டுள்ள வற் வரியில்இருந்து மேலும் பெருமளவிலான வருமானத்தை அரசாங்கம் பெற்றுக்கொள்கின்ற அதேவேளையில் சமூகப் பாதுகாப்பு வரியை உள்ளிட்ட மேலும் பல விதமான வரிகளை உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. மறுபுறத்தில் ஐ.எம்.எஃப். முன்மொழிவுத் திட்டம் ஊடாக ஓய்வூதியம்பெறுனர்கள்கூட வரி செலுத்துபவர்களாக மற்றுமொரு விதத்தில் மறைமுகமாக இரையாக்கப்படுகிறார்கள். ரூபா பத்தாயிரம் சம்பள அதிகரிப்பினை அரச ஊழியர்களுக்கு வழங்குவதாகக் கூறினாலும் வரி அதிகரிப்பு காரணமாக உண்மையாகவே இடம்பெறுவது சம்பளக் கத்தரிப்பாகும். வழங்குவதாகக் கூறுகின்ற ரூபா பத்தாயிரம் கொடுப்பனவு ஒரு தில்லுமுல்லு என்பது தொடர்பில் அரச ஊழியர்கள் சிறந்த புரிந்துணர்வுடனேயே இருக்கிறார்கள். ஆசிரியர்களுக்கு ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றேழாம் ஆண்டில் இருந்தே வழங்கவேண்டிய சம்பள ஏற்றங்களில் இற்றைவரை செலுத்தப்படாத மூன்றிலிரண்டு பகுதியை வழங்குதலை இரண்டாயிரத்து இருபத்திநான்காம் ஆண்டுக்கான வரவுசெலவிலும் புஸ்வானமாக மாற்றியுள்ளார்கள். இதனால் ஏறக்குறைய இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர்களாக அமைந்த ஆசிரியர்களும் அதிபர்களும் போலியான வாக்குறுதிகளை வழங்குகின்ற ஊழல்மிக்க அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வற் வரி அதிகரிப்பு மூலமாக அடுத்த ஆண்டில் ஆயிரத்து நானூறு பில்லியன் ரூபாவை அதிகரித்துக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்தாலும் தொள்ளாயிரத்து பதினெட்டு பில்லியன் ரூபாவையே பெற்றுக்கொள்ள முடியுமென பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளார்கள். இதனால் அடுத்த வருடத்தின் நடுப்பகுதியளவில் வற் வரியை நூற்றுக்கு இருபத்திநான்கு வீதம்வரை அதிகரிப்பதற்கான அபாயநேர்வு நிலவுவதாக பொருளியல் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். நுண் நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், விவசாயக் கடன்களை செலுத்த முடியாதுள்ள மக்கள், வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அனர்த்தங்களால் பாதிப்புற்றுள்ள மக்கள் மற்றும் குறிப்பாக தோட்டப்புற மக்கள் பற்றி இந்த வரவுசெலவில் எந்தவிதமான குறிப்பும் கிடையாது. இந்த நிலைமையில் மீண்டும் பணவீக்கம் உயர்வடைந்து அரசாங்கம் வழங்குவதாகக் கூறுகின்ற நிவாரணங்கள்கூட புஸ்வானமாக மாற்றமடையும்.

இந்த நாட்டில் உற்பத்தியையும் அரசாங்க வருமானத்தையும் அதிகரித்துக்கொள்ளக்கூடிய எந்தவிதமான கருத்திட்டமும் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் கிடையாது. அடுத்த வருடத்திற்குள் மாத்திரமன்றி எதிர்கால நோக்கங்களைக்கொண்ட தொலைநோக்கு எதுவுமற்ற வரவுசெலவே காணப்படுகின்றது. கொள்ளைக்கார பொருளாதாரத்தையும் ஊழில்மிக்க அரசியல் கலாசாரத்தையும் பேணிவருகின்ற இந்த முறைமைக்கு இனிமேலும் இடமளிக்கக்கூடாது. இந்த வரவுசெலவில் நூற்றுக்கு எழுபத்தொன்பது வீதமுமே சனாதிபதி மற்றும் பிரதமரின் கீழேயே நிலவுகின்றது. எஞ்சிய இருபத்தேழு அமைச்சுக்களுக்கும் ஒட்டுமொத்த வரவுசெலவில் நூற்றுக்கு இருபத்தொன்று மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. சனாதிபதி மொத்த செலவில் நூற்றுக்கு அறுபத்தாறு வீதத்தை தனக்குக்கீழ் வைத்துள்ளார். இந்த ஊழல் மிக்க அரசியல் எப்படிப்பட்டதென்பது இதன்மூலமாக தெளிவாகின்றது. தமது வாழ்க்கையின் சுகபோகத்திற்காக மக்களின் கழுத்தை நெரிக்கின்ற இந்த அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நாங்கள் பிரமாண்டமான ஆர்ப்பாட்டமொன்றை செய்வோம். தொடர்ந்தும் மக்களை ஏமாற்றவேண்டாமென அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.

Show More

“அரசாங்கத்தின் கீழ்த்தரமான நடவடிக்கைகளுக்கு தேசிய மக்கள் சக்தி பயப்படமாட்டாது” -தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி சுனில் வட்டகல-

-2023.11.22 – தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பும் அதிட்டன இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவினதும் ஒருங்கிணைந்த ஊடக சந்திப்பு- தேசிய மக்கள் சக்தி கடந்த காலம் பூராவிலும் கணிசமான மக்கள் வெற்றியைப்பெற்று முன்னேறி வந்துகொண்டிருக்கிறது.  இந்த சாக்கடை அரசியலில் இருந்து விடுபட்டு இந்த கேடுகெட்ட ஆட்சியை மாற்றியமைப்பதற்கான எதிர்ப்புக் கூட்டமொன்று கடந்த 18 ஆந் திகதி எதிர்ப்புப் பேரணியின் பின்னர் நடாத்தப்பட்டது. மக்கள் ஆணையற்ற ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் தேசிய மக்கள் சக்தியின் பயணத்தை நலிவடையச் செய்விக்க […]

-2023.11.22 – தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பும் அதிட்டன இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவினதும் ஒருங்கிணைந்த ஊடக சந்திப்பு-

தேசிய மக்கள் சக்தி கடந்த காலம் பூராவிலும் கணிசமான மக்கள் வெற்றியைப்பெற்று முன்னேறி வந்துகொண்டிருக்கிறது.  இந்த சாக்கடை அரசியலில் இருந்து விடுபட்டு இந்த கேடுகெட்ட ஆட்சியை மாற்றியமைப்பதற்கான எதிர்ப்புக் கூட்டமொன்று கடந்த 18 ஆந் திகதி எதிர்ப்புப் பேரணியின் பின்னர் நடாத்தப்பட்டது. மக்கள் ஆணையற்ற ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் தேசிய மக்கள் சக்தியின் பயணத்தை நலிவடையச் செய்விக்க அரசியலல்லாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஒருசில தருணங்களில் அவை மிகவும் கீழ்த்தரமான செயற்பாடுகளாகும். தேசிய மக்கள் சக்தி எனும் அரசியல் இயக்கத்தைக் கட்டிவளர்க்க ஒன்றுசேர்ந்துள்ள ஏனைய அமைப்புகள் மத்தியில் “தேசிய மக்கள் சக்தியின் இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவு” மிகப்பெரிய பணியை ஆற்றிவருகின்றது. தேசிய மக்கள் சக்தியின்  சட்டத்தரணிகள் அமைப்பானது நாடுபூராவிலும் வியாபித்துள்ள ஓர் இயக்கமாகும். தேசிய மக்கள் சக்தியின் இளைப்பாறிய முப்படைக் கூட்டமைப்பிற்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்துவருகின்ற அருவருக்கத்தக்க நடவடிக்கைகள் பற்றி தெளிவுபடுத்தவே நாங்கள் இந்த ஒருங்கிணைந்த ஊடக சந்திப்பினை நடாத்துகிறோம்.

அரசாங்கம் தத்தமக்கு பக்கச்சார்பான  பிரிவுகளைப் பயன்படுத்தி ஒருசில அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது. இவ்விதமாக அழுத்தம் கொடுப்பவர்களுக்கு நாங்கள் ஒரு விடயத்தைக் கூற விரும்புகிறோம். தேசிய மக்கள் சக்தியின் இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைப்பிற்கு எதிராக புரியப்படுகின்ற அழுத்தங்கள் பற்றிய பிரச்சினையை நாங்கள் உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துரைத்தோம். எனினும் எங்கள் இளைப்பாறிய முப்படை அங்கத்தவர்களுக்கு முகாம்களுக்குள் பிரவேசித்தல், வருடாந்த ஒன்றுகூடல்களில் பங்கேற்ற தடைவிதித்தல்,  மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்ள தடையேற்படுத்துதல் போன்ற செயற்பாடுகளை வாய்மொழிரீதியாக மேற்கொண்டு வருகிறார்கள்.  ஊடக சந்திப்பில் பங்கேற்கின்ற திரு. சம்பத் துய்யகொன்தாவை விமானப்படையில் வாய்மொழிரீதியாக கறைநிரலில் சேர்த்தார்கள். இது  சம்பந்தமாக நாங்கள் உயர்நீதிமன்’றத்திற்கு FCR 132/2023 எனும் வழக்கினைத் தாக்கல் செய்தோம்.  தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடுசெய்யப்பட்ட கம்பஹா மாவட்டக் கூட்டமொன்றில் ஆற்றிய உரையை அடிப்படையாகக்கொண்டு கறைநிரலில் சேர்த்திருந்தார்கள். இந்த ஒட்டுமொத்த உரையையும் நாங்கள் உயர்நீதிமன்ற நீதியரசர் குழாத்திற்கு செவிமடுக்கச் செய்வித்தோம். கோட்டாபய ராஜபக்ஷ, சரத் பொன்சேகா, சரத் வீரசேகர, கமல் குணரத்ன போன்ற  இளைப்பாறிய இராணுவ உத்தியோகத்தர்களுக்கு அரசியலில் ஈடுபடுவதற்குள்ள உரிமை ஏன் திரு. சம்பத் துய்யகொன்தாவிற்கு கிடையாதெனும் பிரச்சினையை நாங்கள் உய்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். விமானப் படையின்சார்பில் தோற்றிய சட்டத்துறை தலைமைஅதிபதி திணைக்கள சட்டத்தரணியால் தனது தரப்பு தவறிழைத்துள்ளதென்பதை ஏற்றுக்கொள்ளவேண்டி நேரிட்டது.  அடுத்த வழக்கு விசாரணை 2024 சனவரி 10 ஆந் திகதியளவில் சம்பந்தப்பட்ட தடையை நீக்கி அதுபற்றி உயர்நீதிமன்றத்திற்கு எழுத்தில் அறிவிக்கவேண்டி உள்ளது. திரு. சம்பத் துய்யகொன்தாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது.

அத்துடன் நின்றுவிடாமல் இந்த கூட்டமைவிற்கு ஒருசில அழுத்தங்களைப் பிரயோகித்து வருகிறார்கள். இந்த நாட்டின் பொருளாதாரப் படுகொலைக்கு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சரவை, பொதுதிறைசேரியின் செயலாளர்,  மத்திய வங்கி ஆளுனர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பொறுப்புக்கூற வேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதைப்போலவே உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் முன்னாள் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவில் இருந்து கீழ்மட்டம் வரையானவர்களுக்கு குற்றத் தீர்ப்பளித்து நட்டஈடு செலுத்துமாறும் பணிப்புரை விடுத்துள்ளது.  இத்தகைய பின்னணியில் திரு. சம்பத் துய்யகொன்தாவின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக  பிரதிவாதிகள் ஏற்றுக்கொண்டுள்ளபோதிலும் தொடரந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. நாங்கள் அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டே அரசியலில் ஈடுபட்டு வருகிறோம். அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் 14 (1) இன் கீழ்  வழங்கப்பட்டுள்ள உரிமையை அடிப்படையாகக்கொண்டே தேசிய மக்கள் சக்தியின் அதிட்டன இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவு அரசியலில் ஈடுபட்டு வருகின்றது. அந்த உரிமைமீது  சட்டரீதியாக ஆட்சேபனை விடுக்க எவருக்குமே முடியாது. 

ரணில் விக்கிரமசிங்க  நீதிமன்றம்மீது குற்றஞ்சுமத்தி தொடங்கியவிதம் எமக்கு ஞாபகம் இருக்கின்றது. ஈ.பி.எஃப் மற்றும் ஈ.ரீ.எஃப்.  வழக்குகள் சம்பந்தமாக பாராளுமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க நீதிமன்றத்திற்கு முடியாதென ரணில் விக்கிரமசிங்க கூறினார். அதன்பின்னர் சபாநாயகரும் அதுபற்றிக் கூறினார். மூன்று கோபுரங்களில் ஒன்றுக்கு அச்சுறுத்தல்விடுத்த அவர்கள் மேற்கொண்டுவருகின்ற இந்த பயணம் அடுத்த வருடம் ஓகத்து மாதத்தில் முற்றுப்பெறும். அதற்காக பயப்பட்ட இந்த கீழ்த்தரமான அரசாங்கம் தமது பொலீஸாரைப் பயன்படுத்தி வளர்ந்துவருகின்ற எதிர்ப்பினை அடக்கியாள முற்படுகின்றது. இளைப்பாறியோர் கூட்டமைவின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு  அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடன் பலவிதமான தடைகளை ஏற்படுத்துகிறார்கள்.  அரசாங்கத்தின் இந்த கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கு தேசிய மக்கள் சக்தி பயப்படமாட்டாது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த கூட்டமைவிற்கு எதிராகப் புரிகின்ற அனைத்துவிதமான தொந்தரவுகள் தொடர்பிலும்  தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் தோற்றுவார்கள். இலங்கையின் எந்தப் பிரதேசத்திலிருந்தும் இந்த கூட்டமைவிற்கு தொல்லைகள் புரிந்தாலும் நாங்கள் அத்தகைய எந்தவோர் இடத்திலும் தோற்றுவோம்.  இந்த அங்கத்தவர்களின் உரிமைகளை அரசாங்கத்தின் கோழைத்தனமான, கீழ்த்தரமான வேலைகளால்  அடக்கமுடியாதென்பதையும்  அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறும் வலியுறுத்துகிறோம். நாங்கள் சனநாயக சட்டகத்திற்குள்ளேயும் சட்டக் கட்டமைப்பிற்குள்ளேயும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதோடு அதற்குப் புறம்பாக எவரேனும் புரிகின்ற அழுத்தங்களுக்கு கட்டுப்படப்போவதில்லை என்பதையும் வலியுறுத்துகிறோம்.

“எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் எமது நாட்டுக்காக வருங்காலத்திலும் செயலாற்றுவோம்”
-இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவின்  பிரதான ஒருங்கிணைப்பாளர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர-

தேசிய மக்கள் சக்தியின் அதிட்டன இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவு தறபோது பாரிய விருட்சமாக கட்டிவளர்க்கப்பட்டுள்ளது.  இந்த வருடம் பெப்புருவரி மாதம் 11 ஆந் திகதியன்று மகரகம இளைஞர் சேவைகள் மன்ற  மண்டபத்திலேயே “அதிட்டன” எனும் பெயரில் இந்த இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவு தாபிக்கப்பட்டது. நாட்டுக்கு விளைவித்துள்ள அநியாயத்தின் மத்தியில் இளைப்பாறியவர்கள் என்ற வகையில் எம்மால் பாராமுகமாக இருந்துவிட முடியாது. நாடு வீழ்த்தப்பட்டுள்ள நிலையிலிருந்து மீட்டெடுக்க இந்நாட்டின் பிள்ளைகளுக்காக நல்லதொரு நாட்டை நல்லதொரு நாளைய தினத்தை உருவாக்குவதற்காக நாங்கள் இந்த கூட்டமைவினை நிறுவிக்கொண்டோம். இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவில் இருக்கின்ற  அனைத்து அங்கத்தவர்களும்  இராணுவ, விமான, கடற்படையினர் ஆகிய முப்படையினரதும் நன்மதிப்பினை பாதுகாத்திட செயலாற்றி வருகிறார்கள். தொழில்வாண்மை மட்டத்தில் உயர்ந்த பங்களிப்பினை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குவதற்காகவே நாங்கள் இந்த கூட்டமைவினை அமைத்துக்கொண்டோம்.   நாங்கள் சட்டபூர்வமாக செயலாற்றி வருவதோடு இந்த கூட்டமைவின் அங்கத்தவர்களுக்கு பலவிதமான வாய்மொழிரீதியான தடைகளை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களின் எத்தகைய தடைகள் தோன்றினாலும் எமது அதிட்டன கூட்டமைவின் அனைத்து அங்கத்தவர்களும் மென்மேலும் முன்னணிக்கு வந்து செயலாற்றுவார்கள் என்பதை உறுதியாகக் கூறுகிறோம். தேசிய மக்கள் சக்தி கொண்டுள்ள ஊழலற்ற, தன்னிச்சையாக அரப்பணிக்கின்ற ஆற்றலை இனங்கண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக நாங்கள் இந்த கட்சியுடன் இணைந்து செயலாற்றிவருகிறோம். எமக்கு எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் எமது நாட்டுக்காக தொடரந்தும் செயலாற்றுவோம் என்பதை  உறுதியாகக் கூறுகிறோம்.

“‘அதிட்டனஅங்கத்தவர்கள் வாழ்க்கையால் அல்லது மனச்சாட்சியால் ஓய்வுபெறவில்லை
-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி ஹர்ஷண நாணாயக்கார –

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி அடுத்த ஆண்டில் உருவாவது பெருநிலத்தின் யதார்த்தமாக மாறியுள்ளது. அதற்காக தேர்தலைப் பிற்போட்ட அரசாங்கம் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளுக்கு எல்லாவிதத்திலும் தடைகளை ஏற்படுத்த பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு  வருகின்றது. அத்தகைய எதனாலும் எம்மைத் தோற்கடிக்க முடியாது. தொழில்வாண்மையாளர்களை ஒழுங்கமைத்து, மக்களை ஒழுங்கமைத்து, வட்டார சபைகளை நிறுவி பாரிய சக்தியாக முன்னேறிவருகிறோம். அதேவேளையில் இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவு கிராமங்கள்தோறும் வேகமாக வியாபித்து ஒன்றரை வருடங்களுக்குள்  பெருந்தொகையான அங்கத்தவர்களை சேர்த்துக்கொண்டு பலமடைந்துள்ளது. “அதிட்டன” அமைப்பினைக்கண்டு அரசாங்கம் எந்தளவிற்கு எஞ்சுகின்றது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகின்றது. அவர்கள் தொழிலில் இருந்து மாத்திரமே  இளைப்பாறியுள்ளார்கள் என்பதை அரசாங்கம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் வாழ்க்கையால் அல்லது  மனச்சாட்சியால் ஓய்வுபெறவில்லை. அரசியல்ரீதியாக அவர்கள் ஓய்வுபெறவில்லை. இந்த சமூகத்தை ஒழுங்கமைத்து குணப்படுத்துவதற்கான பாரிய செயற்பொறுப்பினை ஈடேற்ற அவர்கள் முன்வந்துள்ளார்கள். கடமைப் பருவத்தில் நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்  இவ்விதமாக தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி குழுமியுள்ளார்கள். அவர்களுக்கு எதிராக சட்டரீதியற்றமுறையில் கொண்டுவரப்படுகின்ற எந்தவொரு  தடைக்கும் நாம் எவருமே அஞ்சப்போவதில்லை.  அரசாங்கத்தின் தேவைக்கிணங்க ஒருசில உத்தியோகத்தர்கள் வாய்மொழிரீதியான பணிப்புரைகளை ஏற்றுநடக்க வேண்டாமென நான் அனைவருக்கும் ஞாபகப்படுத்துகிறேன்.  இவ்விதமாக அழுத்தம் கொடுக்கின்ற அதிகாரிகளுக்கும் குறிப்பாக ஒன்றைக் கூறிக்கொள்ள நான் விரும்புகிறேன்.  உங்களின் மூப்புநிலை, உங்களின் பதவி, உங்களின் கட்டளைகள் முகாமிற்குள் பலம்பொருந்தியதாக இருந்தாலும் நீதிமன்றத்தின் முன்னிலையில் நாமனைவரும் சமமான பிரஜைகளே. சமமான உரிமைகளே இருக்கின்றன.  நீங்கள் தோற்றவேண்டியது  அரசியல் பலத்தினால் வருகின்ற போகின்ற அரசாங்கங்களுக்கல்ல, அரசுக்கும் மக்களுக்காகவுமே.

அடுத்த ஒற்றோபர் மாதத்தின் பின்னர் ரணில் விக்கிரமசிங்காக்கள், ராஜபக்ஷாக்கள் எவருமே அதிகாரத்தில் இல்லை. அடுத்ததாக நியமிக்கப்படுகின்ற அரசாங்கம்  சட்டத்தின் ஆட்சியை சரிவர அமுலாக்கும்.  தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின்கீழ் அந்த பணிகள் முறைப்படி ஈடேற்றப்படுமென்பதை அந்த உயரதிகாரிகளுக்கு வினயமாக ஞாபகப்படுத்துகிறேன். சட்டமுறையற்ற  கட்டளைகளுக்கு அடிபணிந்து அரசி்யல்வாதிகளுக்கு வக்காலத்துவாங்கி ஒட்டுமொத்த தொழில்சார் வாழ்க்கையையுமே இருள்மயமாக்கி்க்கொள்ள வேண்டாமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  சட்டமுறையாக சனநாயகரீதியாக  அரசியலில் ஈடுபடுதல் சம்பந்தமாக விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்கள் அல்லது பொய்யான எமாற்றுவேலைகளுக்கு இளைப்பாறிய முப்படையினர் எவரையும் அகப்பட்டுவிட வேண்டாமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.  தேசிய மக்கள் சக்தியிலிருந்து விலகினால் சிறப்புரிமைகளைத் தருவதாக கடிதங்களை அனுப்பிவைக்கவும் ஒருசிலர் நடவடிக்கை எடுத்துவருகின்றமை வெளிப்பட்டுள்ளது. எனது இந்த தயவான நினைவுறுத்தல் சட்டரீதியற்றவகையில் செயலாற்றுகின்ற உயரதிகாரிகளுக்கே.

Show More

“கோப் குழுத் தவிசாளரின் போலியான சிங்கத்தோல் கழன்றது…  உண்மையான ஹந்துன்னெத்திகளை திசைகாட்டியால் மாத்திரமே உருவாக்கிட முடியும்…” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனெவி-

–2023.11.18 – தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி – நுகேகொட– இந்த மாநாட்டின் உட்பொருள் இன்றேல் வழங்குகின்ற மிகவும் குறுகிய செய்தியாக அமைவது “ரணில் முடிந்துவிட்டார்” என்பதாகும். எனினும் இலங்கை முடிவடையவில்லை என்பதாகும். தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த நாங்கள் தொடங்கியது மாத்திரமே. அனைவரையும் படுகுழிக்குள் இழுத்துப்போட்ட மிருகத்தனமான பொருளாதாரக் கொலைஞர்களின் பட்டியல் நாட்டின் மீயுயர் நீதிமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.  அப்படியானால் எமது வாழ்க்கையை இந்த அனர்த்தத்திற்கு இலக்காக்கியமைக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் பற்றி எமக்கு எந்தவிதமான சந்தேகமும் நிலவ […]

2023.11.18 – தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி – நுகேகொட

இந்த மாநாட்டின் உட்பொருள் இன்றேல் வழங்குகின்ற மிகவும் குறுகிய செய்தியாக அமைவது “ரணில் முடிந்துவிட்டார்” என்பதாகும். எனினும் இலங்கை முடிவடையவில்லை என்பதாகும். தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த நாங்கள் தொடங்கியது மாத்திரமே. அனைவரையும் படுகுழிக்குள் இழுத்துப்போட்ட மிருகத்தனமான பொருளாதாரக் கொலைஞர்களின் பட்டியல் நாட்டின் மீயுயர் நீதிமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.  அப்படியானால் எமது வாழ்க்கையை இந்த அனர்த்தத்திற்கு இலக்காக்கியமைக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் பற்றி எமக்கு எந்தவிதமான சந்தேகமும் நிலவ முடியாது. சிறியதொரு குறைபாடு லிஸ்ற் இன்னமும் நிறைவுசெய்யப்படவில்லை. ரணில் விக்கிரமசிங்காக்கள், அர்ஜுன மகேந்திரன்களின் பெயர்களையும் சேர்த்து அந்த லிஸ்ற்றை நிறைவுசெய்ய தேசிய மக்கள் சக்தி தயார்.

இவர்கள் நாசமாக்கி இருப்பது இரண்டரைகோடி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் கனவுகளையாகும்: வாழ்க்கையையாகும்.  அவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறுகிறது. முறைப்படி பார்த்தால் இத்தரணமாகும்போது இரண்டரைகோடி மக்கள் மனுக்களை தாக்கல் செய்திருக்கவேண்டும். எங்கள் ஒவ்வொருவரினதும் வாழ்க்கை பாரிய அழிவுக்கு தள்ளப்பட்டு விட்டது. நாங்கள் நிச்சயமாக இரண்டரை கோடி மக்கள் சக்தியாக முகாமைத்துவம் செய்வோம். அதற்காகத்தான் தூரநோக்குடைய, தேசிய தலைமையைக்கொண்ட, தேசிய கொள்கைத் திரட்சியைக்கொண்ட தேசிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது.  

கலை, கலாசாரம், கல்வித்துறையை உள்ளிட்ட எமது நாட்டின் அனைத்து மக்கள் நிரல்களிலுள்ள புத்திஜீவிகள்,  பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியிலாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்களை உள்ளிட்ட அனைவரும் இந்த தருணத்தை விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் மனிதர்கள் என்றவகையில் எடுக்ககூடிய உன்னதமானதும் சரியானதும் அரசியல் கணப்பொழுதே தற்போது உருவாகி இருக்கின்றது. இதுவரை இந்த நாட்டின் அரசியல் பெருநிலம், இந்த மக்கள் பிரமிட்டின் உச்சியும் அடித்தளமும் இவ்விதமாக தயாரிக்கப்படவில்லை. அழுத்தம் எங்கள் வாழ்க்கையின் உச்சிக்கே வந்துவிட்டது. இந்த அழுத்தத்தை உருவாக்கிய அரசியல் அதிகாரக் கூட்டமைப்புகள் பலதிசைகளில் பரந்துள்ளன. தேசிய மக்கள் சக்தி மக்களை ஒழுங்கமையச் செய்விக்கின்றது.  அதைவிட சிறப்பான தருணம் உருவாகப் போவதில்லை. சிசேரியன் அறுவைசிகிச்சைக்காக வைத்தியசாலையில் தனது மனைவியை அனுமதித்த கணவனுக்கு  அந்த மனைவியின் அறுவைசிகிச்சைக்காக அவசியமான நூலை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.  எமது பல்கலைக்கழகங்கள் சீரழிந்துவிட்டன. எனது பல்கலைக்கழகத்தில் 650 பேர் இருக்கவேண்டிய கல்விசாரா  பணியாட்டொகுதியில் தற்போது இருப்பவர்களின் எண்ணிக்கை 300 பேர் மாத்திரமே. ரணில் விக்கிரமசிங்க டெம்பரியொன்றை இழுத்துச்சென்றாலும் பல்கலைக்கழகங்களை அவ்விதமாக ஓட்டிச்செல்ல முடியாது. எமது பிரவாகத்தில் சேர்ந்துகொண்ட புத்திஜீவிகளிடமும் கலைஞர்களிடமும் எம்முடன் ஒன்றிணையுமாறும் கூருணர்வுகொண்டவர்களாகவும் மாறுங்கள் என மிகவும் வினயமாக கேட்டுக்கொள்கிறோம்.

மின்சாரம் இல்லாத கிராமத்தில் விளக்கு வெளிச்சத்தில் உயர்தரம் கற்றவன் நான். இன்று இலங்கையின் ஒரு பல்கலைக்கழக பேராசிரியர்.  2023 ஆம் ஆண்டில்  பத்து மாதங்களாக நான்பெற்ற சம்பளத்தில் மாதத்திற்கு எழுபதாயிரம் வீதம் வரியாக மாத்திரம் ஏழு இலட்சத்தை வெட்டியுள்ளார்கள். இந்த ஏழு இலட்சம் என்னிடம் இருந்திருப்பின் எனது விருப்பத்தின்படி பிள்ளைகளுக்கு புலமைப்பரிசிலொன்றை வழங்க, நிர்க்கதியுற்ற புற்றுநோயாளிகளுக்கு உதவக்கூடியதாக இருந்திருக்கும். எனினும் அந்த பணத்தில் ஒரு ரூபாவையேனும் இந்த கல்வர்கள் கும்பலை, கொள்ளையடித்த நாட்டை, பொருளாதாரக் கொலைஞர்கள் என நீதிமன்றத்தினால்  பெயர்குறித்த நாட்டை ஆட்சிசெய்கின்ற அரசாங்கத்திற்கு கொடுக்க நான் விரும்பமாட்டேன்.

தேசிய ஒற்றுமைக்காக, பெண்கள்,  பிள்ளைகளுக்காக முழு வாழ்நாளையும் அர்ப்பணித்த நான் அறிந்த தலைசிறந்த பெண் கலைஞர் ஒருவர் வெகுசனஊடக கலைஞரொருவர் தற்போது புற்றுநோயுடன் போராடிக்கொண்டு இருக்கிறார். இறந்த நோயாளர்களிடம் எஞ்சியிருந்த மருந்துகளிலிருந்தே அவருக்கு அவசியமான ஊசி மருந்து கடந்த இரண்டு மூன்று மாதங்களாக தேடிக்கொள்ளப்பட்டது. ஒரு மாதம் அவருக்கு காலாவதியான ஊசி மருந்தினையே ஏற்ற நேரிட்டது.  75 வருடங்களாக உருவாக்கிய இந்த நாடு இந்த நிலைமையை அடைவதை நீங்கள் விரும்புகிறீர்களா?  சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பேராசிரியர் கூறினைக்  கோருவதற்காக கொழும்புக்கு வந்து உயிரியல் பயின்று மூன்று “ஏ” சித்திகளைப்பெற்ற பிள்ளைகள்மீது இந்த அரசாங்கம் தாக்குதல் நடாத்தியது.   அவர்களை கைது செய்தது.  ஏறக்குறைய 35 பிள்ளைகள் அடுத்த நாளன்று பிணை அனுமதிக்கப்பட்டு என்னுடன் பேசினார்கள். அவர்கள் பெலிஹுல்ஓயாவிற்குப் போகவேண்டும். பெலிஹுல் ஓயாவிற்கான அவர்களின் பஸ் கட்டணம் 30,000/-. பேராசிரியர் கூறு ஒன்றினை கோர வந்தவர்கள் எந்தவிதமான தவறினையும்  புரியாத பிள்ளைகளாவர்.  இந்த வரலாற்றினை நாங்கள் மாற்றியமைத்திட வேண்டும்.

அண்மையில் ரணில் விக்கிரமசிங்கவின் கோப் குழுவினால் ராஜபக்ஷாக்களின் காலத்தின் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். கோப் குழுவின் தலைவர்களின் போலியான சிங்கத்தோல் கழன்று குள்ளநரி வெளிப்பட்டது. அண்மையில் கோப் குழுவிற்கு சுனில் ஹந்துன்னெத்தி தோழர் கொடுத்த எடுத்துக்காட்டினைக் கடைப்பிடிப்பதை மாத்திரமே செய்யவேண்டி ஏற்பட்டது.   தலைசிறந்த அரசியல் நோக்கினைக்கொண்ட மனிதனொருவன் பிறரது கட்டமைப்பிற்குள்ளே தற்காலிகமாகவேனும் வேலைசெய்யவேண்டி கிடைத்த தருணமென்றில் அந்த ஒட்டுமொத்த கட்டமைப்பு மீதும் தாக்கமேற்படுத்தத்தக்கவகையில் சுற்றுச்சூழலை மாற்றியமைத்திடுவான். உண்மையான ஒரு ஹந்துன்னெத்தியை உருவாக்க எந்தவொரு காலத்திலும்  இந்த அரசாங்கங்களால் முடியாது.  இத்தகைய ஓர் இயக்கத்தினால் மாத்திரமே அதனை சாதிக்கமுடியும்.  ஊழல்பேர்வழிகள் ஒருபோதுமே ஊழல் புரிந்தவர்களைத் தண்டிக்கமாட்டார்கள். ராஜபக்ஷாக்களின் வழக்குகளை ரணில் தற்காலிகமாக விசாரிக்கட்டும். இந்த இருசாராரினதும் வழக்குகளை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றின்கீழ் குறுகிய எதிர்காலத்தில் நாங்கள்  விசாரிப்போம்.  இந்த இனிமையான கனவுக்கான பலமும் விவேகமும் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டுமாக! புத்திஜீவிகளே, மக்களே தேசிய மக்கள் சக்தியின் உன்னதமான வேலைத்திட்டத்துடன் ஒருங்கிணையுங்கள். இந்த நாட்டின் வரலாற்றினைப் புதுப்பிப்போம்.

Show More