-Colombo, January 03, 2024- கிளிநொச்சி வலைபாடு பகுதியில் பொன்னாவேலி கிராமத்தில் அத்துமீறிய சுண்ணாம்புக்கல் அகழ்வுக்கு எதிராக போராடும் “அனைத்து மக்கள் ஒன்றியத்தின்” தலைவர் உள்ளிட்டோர் இன்று(03) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அனுர திசாநாயக்கவை சந்தித்தனர். தொடர்ந்தும் 150 நாட்களுக்கு மேலாக பொன்னாவெளி உள்ளிட்ட 05 கிராமத்து மக்கள் அக்கிராமங்களையும் சூழலையும் பாதுகாத்துக் கொள்வதற்காக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்…
-Colombo, January 03, 2024-
கிளிநொச்சி வலைபாடு பகுதியில் பொன்னாவேலி கிராமத்தில் அத்துமீறிய சுண்ணாம்புக்கல் அகழ்வுக்கு எதிராக போராடும் “அனைத்து மக்கள் ஒன்றியத்தின்” தலைவர் உள்ளிட்டோர் இன்று(03) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அனுர திசாநாயக்கவை சந்தித்தனர். தொடர்ந்தும் 150 நாட்களுக்கு மேலாக பொன்னாவெளி உள்ளிட்ட 05 கிராமத்து மக்கள் அக்கிராமங்களையும் சூழலையும் பாதுகாத்துக் கொள்வதற்காக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்…

-Colombo, January 02, 2024- ‘நாட்டுக்கு கூறாமல் மறைக்கின்ற விற்றுத் தீர்ப்பதன் உண்மைநிலை’- கருத்தரங்கு , கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரி இந்த வருடம் எமது நாடடு மக்களுக்கு மிகவும் தீர்வுக்கட்டமான வருடமாகும். இதுவரை முன்னெடுத்துவந்த பயணத்தை துரிதப்படுத்தி எமது நாட்டின் தேசிய சொத்துக்களை அழிவின் விளிம்பிற்கு எடுத்துச்செல்ல அரசாங்கம் தயாராகி வருகின்றது. சனவரி மாதத்திற்குள் மின்சார சபையை துண்டாடி விற்பனை செய்வதற்கு அவசியமான சட்டம், காப்புறுதிக்கூட்டுத்தாபனம், ரெலிகொம் நிறுவனம் போன்ற நிறுவனங்களை விற்பனை செய்வதற்கான செயற்பாங்கினை […]
-Colombo, January 02, 2024-


‘நாட்டுக்கு கூறாமல் மறைக்கின்ற விற்றுத் தீர்ப்பதன் உண்மைநிலை’- கருத்தரங்கு , கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரி
இந்த வருடம் எமது நாடடு மக்களுக்கு மிகவும் தீர்வுக்கட்டமான வருடமாகும். இதுவரை முன்னெடுத்துவந்த பயணத்தை துரிதப்படுத்தி எமது நாட்டின் தேசிய சொத்துக்களை அழிவின் விளிம்பிற்கு எடுத்துச்செல்ல அரசாங்கம் தயாராகி வருகின்றது. சனவரி மாதத்திற்குள் மின்சார சபையை துண்டாடி விற்பனை செய்வதற்கு அவசியமான சட்டம், காப்புறுதிக்கூட்டுத்தாபனம், ரெலிகொம் நிறுவனம் போன்ற நிறுவனங்களை விற்பனை செய்வதற்கான செயற்பாங்கினை மேற்கொள்ள உள்ளது. அதற்கு எதிராகத் தோன்றுகின்ற மக்கள் ஆர்ப்பாட்டங்களை அடக்கியாள்வதற்கான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், சமூக வலைத்தளங்களை அடக்கியாள்வதற்கான சட்டம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த நாட்டை மீளத்திருப்ப முடியாத விதத்திலான பாரிய பல செயற்பாடுகளை வேகமாக மேற்கொள்ள அரசாங்கம் தயாராகி வருவதோடு ஓர் அரசியல் இயக்கமென்றவகையில் நாங்கள் எமது நாட்டில் ஒரு புத்தெழுச்சியை ஏற்படுத்தி உற்பத்திப் பொருளாதாரமொன்றை கட்டியெழுப்பி மக்களை அதனோடு இணைத்துக்கொண்டு அவர்களுக்கு நன்மைகளை வழங்குகின்ற புதிய பொருளாதாரப் பயணமொன்றில் பிரவேசிப்பதற்கான கருத்தியலை சமூகமயப்படுத்தி வருகிறோம். குற்றச்செயல்களைத் தடுப்பதற்காக சட்டத்தின் ஆட்சியை எவ்வாறு நிலைநாட்டுவது என நாங்கள் திட்டங்களை வகுத்து வருகிறோம். எமது மக்களையும் நாட்டையும் அழிவில் தள்ளிவிட்ட பாரியளவிலான மோசடிகள், ஊழல்கள் மலிந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்து புதிய பயணத்தில் பிரவேசிப்பதற்கான உரையாடல்களை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இலங்கை வரலாற்றின் அரசியல் கட்டமைப்பின் கடுமையான மோதல் எதிர்வரும் ஏழுஎட்டு மாதங்களுக்குள் உருவாகும். Do or Die பாணியிலான போராட்டமாகும்.
இந்த போராட்டத்தில் நாங்கள் தோல்வியுற்றால் எமது நாடும் மக்களும் அவமதிப்பினதும் நிர்க்கதிநிலைமையினதும் அடிமட்டத்திற்கே வீழ்ந்துவிடும். நாங்கள் இந்த போராட்டத்தில் வெற்றிபெற்றால் புதிய எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் சகிதம் இந்த நாட்டை புதிய திசையில் வழிப்படுத்த முடியும். அதனால் வளர்ந்துவருகின்ற இந்த அரசியல் சாதாரண அரசியலைப் போன்றதன்று. இலங்கை வரலாற்றின் தீர்வுக்கட்டமான பிரிகையிடலின்போது தேசிய மக்கள் சக்தியாகிய நாங்கள் மக்களுடன் எத்தகைய பொது உடன்பாட்டுக்கு வரவேண்டுமென விரிவாக உரையாடி வருகிறோம். உழைக்கும் மக்கள், தொழிலதிபர்கள், கைத்தொழில் உரிமையாளர்கள், மதத் தலைவர்கள், புலமைசாலிகள் என்றவகையிலான நாமனைவரும் இந்த நாட்டை மீட்டெடுப்பதற்கான பொது இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான உரையாடலில் பிரவேசித்துள்ளோம். அதேவேளையில் ஏனைய பாசறைகள் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருக்கின்றன. தீர்வுக்கட்டமான பெருவெற்றியுடன் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவோம் எனும் திடசங்கற்பத்துடனேயே நாங்கள் இந்த வருடத்தில் காலடி எடுத்து வைத்துள்ளோம். அதனால் எம்மனைவருக்கும் ஓய்வுநேரமின்றி மாற்றத்திற்காக பாடுபடவேண்டியுள்ளது. நிலவுகின்ற நெருக்கடியின் காரணமாகவே அவர்கள் விற்றுத் தீர்ப்பதை மேற்கொண்டு வருகிறார்கள். வந்துள்ள பொருளாதார பயணத்தினால் உருவாக்கப்பட்ட நெருக்கடியின் விளைவுதான் விற்றுத் தீர்த்தல். மறுபுறத்தில் விற்றுத் தீர்ப்பதும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகும். இந்த விற்றுத் தீர்த்தல் ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. இதுவரை கடைப்பிடித்த பொருளாதாரச் செயற்பாங்கின் பெறுபேறாகும்.
இதுவரை வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்த பல துறைகள் இந்த நெருக்கடியினாலேயே வற் வரியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. எரிபொருள் விலையேற்றம் ஒட்டுமொத்த பொருளாதாரம் மீதும் தாக்கமேற்படுத்தி உள்ளமையால் இதுவரை வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது. எண்ணெய் விலையேற்றம் எண்ணெய் பாவனையாளர்களுக்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த பொருளாதார தேகத்திற்கும் தாக்கமேற்படுத்துகின்ற கூருணர்வுமிக்க விடயமாகும். பாடசாலை உபகரணங்களின் விலைஅதிகரிப்பு காரணமாக பிள்ளைகளின் கல்வித்துறைமீது கூருணர்வுமிக்க பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. சுகாதார உபகரணங்கள், ஔடத உற்பத்தி மூலப்பொருட்கள், சுகாதார சேவை வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தமைக்கான காரணம் அவை மக்கள் வாழ்க்கையை நெருக்கமாக பாதிப்பதாலாகும். எனினும் நெருக்கடியினால் இந்த அனைத்து துறைகளுக்கும் புதிதாக வற் வரி விதிக்கப்பட்டுள்ளது. அரச செலவினங்கள், கடன் செலுத்துதல் மற்றும் வட்டித் தவணைகளை செலுத்துதல் என்பவற்றுக்காக இந்த வருடத்தில் பதினோராயிரத்து ஐநூற்று பதினான்கு பில்லியன் செலவாகின்றது. எனினும் வற் வரியை உள்ளிட்ட இந்த அனைத்துவிதமான பாதிப்புகளையும் மக்கள் மீது சுமத்தி பெற்றுக்கொள்ளக்கூடிய மொத்த வருமானம் நாலாயிரத்து நூற்றி அறுபத்தி நான்கு பில்லியன் ரூபா மாத்திரமேயாகும். கடன் தவணை செலுத்துவதை ஒருபுறம் வைத்தாலும் ஏழாயிரத்து எண்ணூற்றி இருபத்தாறு பில்லியன் இந்த வருடத்தின் செலவுக்காக தேவைப்படுகின்றது. 3000 பில்லியனுக்கு மேற்பட்ட தொகையைக் கடனாகப் பெறவேண்டி நேரிடுகின்றது. இந்த நெருக்கடி நிலவுவது தரவுகளுக்குள்ளே மாத்திரமன்றி சமூக வாழ்க்கைக்குள்ளேயும் நிலவுகின்றது. சென்மதி நிலுவைப் பற்றாக்குறை, வரவுசெலவுப் பற்றாக்குறை போன்ற பாரிய பொருளியல் பதங்களில் மறைந்துள்ள நெருக்கடி சமூக வாழ்க்கைக்கு தாக்கமேற்படுத்தி வருகின்றது. அண்மையில் வெளியிட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களுக்கு அமைவாக பாடசாலைப் பிள்ளைகளில் 57% புத்தகங்களை உள்ளிட்ட கல்விச் சாதனங்களை கொள்வனவுசெய்வதை நிறுத்தியோ அல்லது குறைத்தோ இருக்கிறார்கள். மேலும் 19% ஐ அண்மித்தோர் பிரத்தியேக போதனா வகுப்புகளுக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்கள். பொருளாதார நெருக்கடியினால் சமூகம்மீது எற்படுத்துகின்ற தாக்கம் பிள்ளைகளின் கல்விச் சீரழிவுவரை பயணித்துள்ளது.
அதைப்போலவே குடிமக்களின் வாழ்க்கை பாதுகாப்பற்ற நிலைமைக்கு வீழ்ந்து முறைப்படி சிகிச்சை பெறுவதை தவிர்த்து வருகிறார்கள். பாரியளவில் தொழில்களை இழக்கச் செய்வித்தல், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களின் சீரழிவு போன்ற துறைகளில் நெருக்கடி தாக்கமேற்படுத்தி உள்ளது. பராட்டே சட்டத்திற்கிணங்க சிறிய மற்றும் நடுத்தர அளவிலான 1183 தொழில்முயற்சியாளர்களின் ஆதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தொழில்முயற்சிகள் பல்வேறு சிரமங்களின் மத்தியில் சிலவேளைகளில் பல பரம்பரையினரின் அர்ப்பணிப்பினால் கட்டியெழுப்பப்பட்டவையாகும். சரியான பொருளாதார நோக்கு, அரச இடையீட்டின் கீழ் இந்த தொழில்முயற்சிகள் கட்டியெழுப்பப்பட்டிருக்கவில்லை. அவர்களின் தனிப்பட்ட அர்ப்பணிப்பு மற்றும் பெருமுயற்சியின் அடிப்படையில் அவை கட்டியெழுப்பப்பட்டிருந்தன. இந்த நெருக்கடியினால் மக்கள் வாழ்க்கை சீரழிதல் இத்தகைய பல்வேறு துறைகள்மீது தாக்கமேற்படுத்தி இருக்கின்றது. விற்றுத் தீர்த்தல் மிகச்சிறந்த பொருளாதார உபாயமார்க்கத் திட்டமென அரசாங்கம் கூறுகின்றது. உண்மை அதுவல்ல. விற்றுத் தீர்த்தலும் இதே பொருளாதார நெருக்கடியின் பெறுபேறாகும். ஔடதங்களை கொண்டுவருகையில், வரி அறவிடுகையில் திருடுவதைப்போன்றே விற்பனைசெய்கின்ற வேளையிலும் ஊழல் மோசடிகளின் சொர்க்கபுரியாக மாறியுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக விற்றுத் தீர்ப்பதைப்போலவே கள்ளத்தனமான கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் அவர்கள் விற்றுத்தீர்ப்பதை பயன்படுத்தி வருகிறார்கள். விற்பனை செய்வதன் மறைவில் இருக்கின்ற உண்மையான தேவை இதுவாகும்.
வரவுசெலவுப் பற்றாக்குறையினால், வெளிநாட்டுக் கடன்களை செலுத்தமுடியாததால், தொழில்வாண்மையாளர்களை உள்ளிட்ட குழுவினர் நாட்டைவிட்டு வெளியேறி வருவதன் மூலமாக பொருளாதார நெருக்கடியின் ஆழமே வெளிக்காட்டப்படுகின்றது. பொருளாதார நெருக்கடியின் ஆழம் காட்டப்படுவது தரவுகளுக்குள்ளே மாத்திரமல்ல. ரணில் விக்கிரமசிங்கவிற்கு பொருளாதார நெருக்கடி என்பது தரவுகள் மாத்திரமே என்பதால் அவருடைய தீர்வு கணக்குகளை இணக்கஞ் செய்வதாகும். எனினும் தேசிய மக்கள் சக்திக்கு இந்த நெருக்கடி என்பது தரவுகளில் காட்டப்படுவதற்குப் பதிலாக சமூக மக்கள் வாழ்க்கையின் வேதனைகள் பற்றி அனுபவவாயிலாக கூறப்படுவதாகும். தரவுகளுக்குள்ளே போன்று மக்களின் வாழ்க்கைக்குள்ளேயும் நாங்கள் நெருக்கடியைக் காண்கிறோம். ரணில் விக்கிரமசிங்க மக்கள் வாழ்க்கையில் நெருக்கடியைக் காண்பாராயின் ஔடதங்களுக்கு பாடசாலை உபகரணங்களுக்கு வரி விதிக்கமாட்டார். வற் வரி மூலமாக மக்கள் வாழ்க்கைக்கு ஏற்பட்டுள்ள மரணம்விளைவிக்கின்ற தன்மையை நாங்கள் எடுத்துக்கூற வேண்டியதில்லை. அவர்கள் அதனை அனுபவித்து வருகிறார்கள். நாங்கள் நெருக்கடியைக் காண்பது மாத்திரமல்ல அதற்கான தீர்வினைக் காணவும் பிரயத்தனம் செய்கின்ற இயக்கமாவோம்.
விற்றுத் தீர்ப்பதற்கான காரணங் காட்டுகின்ற ஐயாமார்கள் எமக்கு ஒருசில விடயங்களைக் கூறிவருகிறார்கள். மக்களிடமிருந்து சேகரித்துக்கொள்கின்ற வரி வருமானத்தை நட்டத்தில் இயங்குகின்ற அரச நிறுவனங்களை பராமரிக்க செலவிடுவதில்லையாயின் சுகாதார வசதிகள், கல்வி வசதிகளை வழங்க ஈடுபடுத்த முடியுமெனக் கூறுகிறார்கள். இதனைப்போன்ற கதைகளைக்கூறுவது இன்று மாத்திரமல்ல. யுத்தம் நிலவிய காலத்திலும் இவ்வாறான கதைகளைக் கூறினார்கள். யுத்தத்தின்போது 24 நாட்கள் பல்குழல் தோட்டாக்களுக்காக உறப்படுகின்ற செலவுகளை நிறுத்தினால் இரண்டு வைத்தியசாலைகளை நிர்மாணிக்க முடியுமென மைத்திரிபால சிறிசேன கூறினார். எனினும் அவ்வாறு நேர்ந்ததா? நட்டமடைகின்ற நிறுவனங்கள் பற்றியும் இன்று கூறுவது அதே கதையைத்தான். யுத்தம் முற்றுப்பெற்றதும் செல்வம் நிறையுமெனக் கூறிய அவர்கள் அரச நிறுவனங்களை விற்றுத் தீர்ப்பதன் மூலமாக செல்வம் செழிக்குமென இன்று கூறுகிறார்கள். எனினும் அது பொய்யானதாகும். எமது நாட்டின் அரச பெருந்தோட்டங்களை 21 தனியார் கம்பெனிகளுக்கு விற்பனை செய்தார்கள். அதில் 18 கம்பெனிகள் நட்டத்தில் இயங்குகின்றன: வங்கிகளுக்கு பொல்லு வைத்துவிட்டன. அதைப்போலவே வேலைசெய்கின்ற ஊழியர்களுக்கு 1000 ரூபா சம்பளம் செலுத்த முடியாவிட்டால் அந்த தனியார்மயமாக்கலில் உள்ள பிரயோசனம் என்ன? அதைப்போலவே இன்று எமது நாட்டின் தேயிலைத் தொழிற்றுறை தாழ்நில சிற்றுடைமையாளர்களின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது. விற்றுத் தீர்ப்பதன் மூலமாக வெற்றி கிடைக்குமாயின் ஏன் இவ்வாறு நடைபெறுகின்றது?
ஏழு நிதிக் கம்பெனிகள், 41 கைத்தொழில்கள், 21 பெருந்தோட்டங்கள், எனைய 23 நிறுவனங்கள் என்றவகையில் இன்றளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விற்பதற்கு உள்ள எண்ணிக்கையைப் பார்க்கிலும் விற்பனை செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமானதாகும். விற்பனை செய்யப்பட்ட சிலோன் ஒக்சிஜன், தோற்பொருள் கூட்டுத்தாபனம், லக்ஸ்பிறே நிறுவனம், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமானதாக இருந்த நைலொன் கம்பெனி, மத்தேகொட நெசவாலை, எண்ணெய் மற்றும் கொழுப்புக் கூட்டுத்தாபனம், மகாவலி மெரீன் கம்பெனி, ஹிங்குரான சீனி, கடதாசிக் கூட்டுத்தாபனம் போன்ற பல நிறுவனங்கள் விற்கப்பட்டன. இன்று அவற்றில் எதாவது இருக்கின்றதா?
திறைசேரிக்கு மிகையான செலவுச்சுமையை ஏற்க நேரிட்டுள்ள நிறுவனங்களை விற்றதாகவே அவர்கள் கூறினார்கள். எனினும் அதுவும் பொய்க் கதையாகும். அதேவேளையில் கடந்த வருடத்தில் பன்னிரண்டாயிரம் மில்லியன் இலாபமீட்டிய காப்புறுதிக் கூட்டுத்தாபனம், தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானதாக அமைகின்ற ரெலிகொம் நிறுவனம் 10,000 மில்லியன் ரூபா இலாபமீட்டியது. இந்த நிறுவனங்களையும் விற்பனைக்காக போட்டுள்ளார்கள். போட்டித்தன்மைமிக்கதெனக் கூறுகின்ற இரண்டு கேஸ் கம்பெனிகளில் அரசாங்கத்திற்குச் சொந்தமான கம்பெனி சனவரி 01 ஆந் திகதி தொடக்கம் 685 ரூபாவினால் விலையை அதிகரித்தது. தனியார் கம்பெனி 755 ரூபாவினால் அதிகரித்தது. 2023 செத்தெம்பர் வரை அரசாங்க கேஸ் கம்பெனி 5639 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளது. அரசாங்கத்தற்கு கேஸ் கம்பெனி இருந்திராவிட்டால் என்ன நடந்திருக்கும்? தற்போது அரசாங்கம் இரண்டு பிரதான வங்கிகளையும் விற்பனைசெய்ய தயாராகி வருகின்றது. இலங்கை வங்கிக்கும் மக்கள் வங்கிக்கும் இலங்கை பூராவிலும் ஏறக்குறைய 300 கிளைகள் இருக்கின்றன. அவை மத்தியில் ஏறக்குறைய 100 கிளைகள் நட்டத்தில் இயங்குகின்றன. வங்கிச் சேவையை வழங்குவதற்கான பொறுப்பு அரசாங்கத்தைச் சார்ந்ததாகும். தனியார்துறை செய்வதோ ஈடுபடுத்துகின்ற பணத்திற்கு இலாபத்தை பிறப்பித்துக் கொள்வதாகும். நகரத்தில் வங்கித் தொழிற்பாட்டினால் கிடைக்கின்ற இலாபம் கிராமங்களில் கிடைப்பதில்லை. கிராந்துருகோட்டே இலங்கை வங்கிக் கிளை நட்டமடைகின்றது. எனினும் அந்தப் பிரதேச மக்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்கவேண்டும். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் பதவியா போகஸ்சந்தியின் இலங்கை வங்கிக்கிளை ஒரு கொள்கலனுக்குள்ளேயே தொடங்கப்பட்டது. குடிமக்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்க வேண்டுமென்பதற்காகவே அவ்வாறு செய்தார்கள். தனியார் துறையின் வங்கிக்கிளை அதற்குப் பின்னரே வருகின்றது. அரசாங்க கணக்குகளைப் பேணிவருகின்ற இலங்கை வங்கியினதும் மக்கள் வங்கியினதும் இரண்டு கணக்குகளின் மேலதிகப்பற்று 7000 பில்லியன் ரூபாவாக அமைகின்றது. திறைசேரியில் பணமும் இல்லாத நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எண்ணெய் வழங்குவதில் இரண்டு அரச வங்கிகள் இடையீடு செய்தன. சுகாதார அமைச்சிற்கும் அப்படித்தான். எம்மைப்போன்ற சிறிய பொருளாதாரத்தின் அரச பிரிவில் இந்த வங்கி முறைமையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். 2022 இலங்கை வங்கியின் வரி செலுத்திய பின்னர் இலாபம் 32 பில்லியன் ரூபாவாகும். அரசாங்கத்திற்கு 13 பில்லியன் ரூபா வரி செலுத்தியுள்ளது. மக்கள் வங்கி 14 பில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளது. 08 பில்லியன் ரூபா வரி செலுத்தி உள்ளது.
அதைப்போலவே இலங்கை வங்கியின் செயலற்ற கடன் 325 பில்லியன் ரூபா மற்றும் மக்கள் வங்கியில் 300 பில்லியன் ரூபா என்றவகையில் இரண்டு வங்கிகளிலும் 625 பில்லியன் ரூபா நிலவுகின்றது. 62,500 கோடி ரூபா செயலற்ற கடனாக நிலவுவதோடு அதில் அரைவாசியை அறவிட்டுக்கொண்டால் இந்த இரண்டு வங்கிகளையும் பலப்படுத்த முடியும். தயா கமகேவின் கம்பெனி மக்கள் வங்கிக்கு மாத்திரம் 160 கோடி ரூபா செயலற்ற கடன் செலுத்தவேண்டி உள்ளது இவர் சம்பத் வங்கிக்கும் மூன்று பில்லியன் பொல்லு வைத்துள்ளார். மென்டிஸ் சாராயக் கம்பெனி மக்கள் வங்கிக்கு 350 கோடி ரூபாவுக்கு பொல்லு வைத்துள்ளது. அரசாங்கத்தின் அன்பர்களுக்கு இவ்விதமாக கடன்களை வழங்கியதன் மூலமாக அந்த செயலற்ற கடன் அளவு சேர்ந்துள்ளது. அதைப்போலவே தனியார்மயமாக்கலின் மறைவில் தவறான வெளியுறவுக் கொள்கையொன்று நிலவுகின்றது. இந்தியாவுக்கு ஓரளவு முதலீட்டுப்பகுதி வரும்போது சீனாவுக்கும் கொடுக்கவேண்டும். கொழும்புத் துறைமுகத்தின் இறங்குதுறைகளை விற்றது ஓர் உதாரணமாகும். செழிப்பான 28,000 எக்கர் காணி கால்நடை வளங்கள் சபையிடம் இருக்கின்றது. இந்த நிறுவனங்களை சீரழித்து “அமூல்” கம்பெனிக்கு விற்கத் தயாராகி வருகிறார்கள். இவ்விதமாக நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்தால் நாங்கள் அதிகாரத்தைப் பெறுவதில் பிரயோசனமில்லைதானே என ஒருசிலர் கேள்வி கேட்கிறார்கள். அதனால் இந்த விற்பனை செயற்பாங்கினை தடுத்துநிறுத்த போராடுவதைப்போலவே அதற்கு இணையாக தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியொன்றை அமைத்திடவும் போராட வேண்டியுள்ளது. இந்த நாட்டைக் கட்டியெழுப்புவது எளிதானல்ல என்பது உண்மையாகும். மிகவும் அடிமட்டத்திற்கே வீழ்ந்துள்ள படுகுழிக்குள் இருக்கின்ற ஒரு நாடே எமக்கு கிடைக்கும். இதிலிருந்து வசதியான வாழ்க்கை மூலமாக எம்மால் கரைசேர முடியாது. எமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனிடமும் புத்தெழுச்சியொன்றின் அவசியப்பாடு நிலவுகின்றது. நாட்டைக் கட்டியெழுப்புகின்ற திடசங்கற்பத்துடனான புதிய தேசிய எழுச்சியொன்று அவசியமாகும்.
எமக்கு இருப்பது தேசிய புத்தெழுச்சியால் நிர்மாணிக்கப்பட்ட ஒரு நாடு அல்ல. இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக நேரு, மகாத்மா காந்தி, பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் முன்னெடுத்துவந்த ஒருங்கிணைந்த தேசிய போராட்டமொன்று இருந்தது. இந்தியாவைக் கட்டியெழுப்புகின்ற எழுச்சியாக அமைந்தது அந்த தேசிய இயக்கமாகும். இரண்டாம் உலகமகா யுத்தத்தின்போது குண்டுத்தாக்குதலால் அழிக்கப்பட்ட ஜப்பானை கட்டியெழுப்பவதற்கான உறுதியான திடசங்கற்பம் அவர்களிடம் இருந்தது. சிலகாலம் ஜப்பானிய பேரரசின் காலனித்துவமாக மாறி அரச பரம்பரையினால் பாதிக்கப்பட்ட சீனா புதிய தேசிய உணர்வுடன் போராடியது. இன்று சீனா உலகின் மிகப்பிரமாண்டமான பொருளாதாரப் பலத்தைக் கைப்பற்றியுள்ளது. பிரித்தானியாவிற்கு எதிராக ஐக்கிய அமெரிக்காவில் தேசிய போராட்டமொன்று நிலவியது. வியட்நாமில் ஐக்கிய அமெரிக்காவிற்கு எதிரான தேசிய போராட்டமொன்று நிலவியது. ரஷ்யாவில் சார் ஆட்சிக்கு எதிராக போராட்டமொன்று நிலவியது. உலகம் பூராவிலும் மக்களுக்கு புதிய தேசிய எழுச்சியை ஏற்படுத்துகின்ற சுதந்திரப் போரட்டங்கள் இருந்தன. அந்த தேசிய எழுச்சியால் நாடுகள் அபிவிருத்தியில் முன்நோக்கி நகர்ந்தன. எனினும் எமது நாட்டில் 1848 இல் இருந்து 1948 வரை வெள்ளைக்காரன் ஆட்சிசெய்’த காலத்தில் எந்தவிதமாக எழுச்சியும் இடம்பெறவில்லை. அதனால் எமக்கு தேசிய புத்துணர்ச்சி இருக்கவில்லை. இந்தியாவில் நேரு இருந்தவேளையில் எமக்கு ஜுனியஸ் றிச்சர்ட் இருந்தார். இந்தியாவில் பட்டேல் இருக்கையில் எமக்கு சொலமன் டயஸ் இருந்தார். எமக்கு அத்தகைய அடிமைத்தனமான தலைவர்களே இருந்தார்கள்.
கமக்காரர், மீனவர், மருத்துவர், பொறியியலாளர் தம்மைப்பற்றி மாத்திரமே சிந்தித்து செயலாற்றுவதற்குப் பதிலாக புதிய தேசிய எழுச்சியுடன் செயலாற்றவேண்டி உள்ளது. 2024 என்பது தேசிய உணர்வுகொண்ட மக்கள் அதற்கு ஏற்புடைய அரசியல் தலைமைத்துவம்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் கையில் சுக்கானைக் கொடுக்கின்ற வருடமாகும். இந்த வருடத்தில் தேசிய உணர்வுடன் புத்தெழுச்சிபெற்று நாமனைவரும் கூட்டு முயற்சியுடன் செயலாற்றுவோமென கேட்டுக்கொள்கிறோம்.

“சட்டவிரோதமான அரசாங்கம் மனிதத்திற்கு எதிரான குற்றச்செயல்களைப் புரிந்துகொண்டிருக்கின்றது…“
–தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த–
பொருளாதார, சமூக ரீதியாக மிகவும் முக்கியமான பல வெளிப்படுத்தல்களை செய்வதற்காகவே இந்த கருத்தரங்கு நடைபெறுகின்றது. இது வெறுமனே தகவல்களை வெளிப்படுத்துவதைவிட முன்நோக்கிச் செல்கின்ற ஒன்றாகும். பொதுமக்களுக்குச் சொந்தமான சொத்துக்களை தெரிவுசெய்த ஆட்கள் குழுமமொன்றுக்கு வழங்குதல் வெறுமனே ஒரு பொருளாதாரக் கொடுக்கல் வாங்கலாக அமையமாட்டாது. அதனாலேயே அந்த கதையின் உண்மையை வெளிப்படுத்திக்கொண்டு நாங்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் என்னவென்பது பற்றி உரையாட வேண்டும். பலவிதமான தொழில்நுட்ப வரைவிலக்கணங்களின் ஊடாக தனியார்மயமாக்கல் எனும் பொருளாதார செயற்பாங்கினை முற்றாகவே தனியார் துறையிடம் கையளிக்க வேண்டுமென்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறார்கள். உண்மையிலேயே தனியார் துறையிடம் பொருளாதாரத்தின் பாரிய செயற்பொறுப்பு நிலவுகின்றதென்பது உண்மையாகும். அந்த உண்மைக்குப் பின்னால் மறைந்திருந்து பொதுமக்களுக்குச் சொந்தமான பாரிய சொத்துக்களை சொச்சத்தொகைக்கு விற்றுத் தீர்க்கின்ற தீத்தொழிலில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. விற்றுத் தீர்ப்பதற்காக அவர்கள் அரசதுறை வினைத்திறனற்றது எனவும் தனியார்துறை வினைத்திறனுடையதெனவும் கூறிவருகிறார்கள். குறிப்பாக அரசதுறை அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளமையால் வினைத்திறமையின் சிக்கல்கள் நிலவக்கூடும். மறுபுறத்தில் தனியார்துறையினரிம் கையளித்தால் போட்டித்தன்மை அதிகரித்து புதிய பிறப்பாக்கங்கள் உருவாகி சமூகத்திற்கு சாதகமான பெறுபேறுகள் கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது.
மறுபுறத்தில் எடுத்துக்கொண்டால் பொதுமக்களின் பலத்துடன் அரசாங்கமொன்றை அமைத்துக்கொண்டு பொருளாதார, அரசியல் அலுவல்கள் நெறிப்படுத்தப்படுவதோடு ஒருசில தனித்துவமான பிரிவுகளை மிகுந்த பொறுப்புடன் அரச சொத்தாண்மையுடன் நெறிப்படுத்துதல் வேண்டும். இத்தகைய பிரிவுகளின் குறிக்கோள் இலாபத்தை விஞ்சிச்சென்ற நோக்கங்களாகும். பொருளாதாரத்தை சரியான திசைக்கு கொண்டுவருதல், பொறுளாதாரத்தை உறுநிலைப்படுத்துதல் மற்றும் பொருளாதாரச் செயற்பாங்கிற்கு அத்தியாவசியமான உட்டகட்டமைப்பு வசதிகளை வழங்குதல் போன்ற அலுவல்கள் இலாபத்தை நோக்கமாகக் கொள்ளாமல் அரச துறையால் பேணிவரப்படல் வேண்டும். இற்றைவரை மேற்கொண்ட விற்பனைகள் மற்றும் மீள அரசாங்கத்திற்கு கையகப்படுத்திக் கொள்ளலானது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துகின்ற நோக்கத்துடன் செய்யப்படவில்லை: நிலவுகின்ற அரசாங்கத்திற்கு எதாவதொரு தொகையைப் பெற்றுக்கொண்டு கொள்ளைக்கார வளையத்திற்கு அதிகமான அநுகூலங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காகும். தேசியமயமாக்கல் அல்லது தனியார்மயமாக்கல் ஆகிய இரண்டுமே அந்த குறுகிய நோக்கத்துடனேயே நடைமுறைப்படுத்தப்பட்டன. நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து மக்களை மீட்டெடுப்பதன்றி அதிகாரத்தில் இருக்கின்ற குழு தொடர்ந்தும் அதிகாரத்தைப் பேணிவருவது எவ்வாறு எனும் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிப்பதற்காக ஐ.எம்.எஃப். பணிப்புரைக்கிணங்க அவர்கள் செயலாற்றி வருகிறார்கள். ஒரே பதில் ஐ.எம்.எஃப். மாத்திரமே என்பதை மக்கள்மயப்படுத்த முயற்சி செய்கிறார்கள். வேறு மாற்றுவழிகள் கிடையாது, வேறுவிதமாக செயலாற்ற முடியாது எனும் கருத்தியலை உருவாக்குவதே சனநாயக விரோதமான செயலாகும். அவர்கள் மூடநம்பிக்கையை சமூகமயப்படுத்தி மறைத்துவைத்துள்ள பல பிரதான விடயங்கள் ஐ.எம்.எஃப். அறிக்கையில் இருக்கின்றன.
வருமானக் கட்டுப்பாட்டினையும் செலவு முகாமைத்துவத்தையும் மேற்கொள்ளவேண்டுமென ஐ.எம்.எஃப். பணிப்புரை விடுத்துள்ளது. பொருளாதாரம் பயணிக்கின்ற திசை, மக்களின் வாழ்க்கைத்தரம் சீரழிதல், தொழில்முயற்சிகள் சீர்குலைதல் போன்ற விடயங்கள் அவர்களுக்கு ஏற்புடையதல்ல. விவேகமின்றி வற் வரி போன்ற வரிகள் அதனாலேயே விதிக்கப்படுகின்றன. நிலவுகின்ற ஊழல்மிக்க பொருளாதார முறைமைக்குள்ளே அவர்களின் மதிப்பீடுசெய்யப்பட்ட இலக்குகளைக்கூட நெருங்க முடியாது. நேரில் வரிகளை நூற்றுக்கு நூறு வீதம்வரை அதிகரித்து வருமானத்தை உயர்த்திக்கொள்வதற்காக அவர்கள் மேற்கொள்கின்ற முயற்சி வெற்றியளிக்கமாட்டாது. மறுபுறத்தில் செலவு முகாமைத்துவத்துடன் தொடர்புடையதாக வினைதிறனின்மையையும் விரயத்தையும் குறைத்துக்கொள்ள அவர்கள் முயற்சி செய்வதில்லை. வருமானத்தை அதிகரித்துக் கொள்ளல் மற்றும் செலவுகளைக் குறைத்துக்கொள்ளல் தொடர்பான தந்திரோபாயங்கள் இரண்டில் ஒன்றையேனும் இந்த அரசாங்கத்தால் இலகுவாக சாதித்துக்கொள்ள முடிவதில்லை. ஐ.எம்.எஃப். மூன்று பிரதான அளவுகோல்களை அரசாங்கத்திற்கு கொடுத்துள்ளது. முதலாவதாக 2025 ஆண்டளவில் முதனிலைக் கணக்கின் மீதி 2.3 நேர்க்கணியமாக வளர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக 2032 இற்கு முன்னர் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த கடன்சுமையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமென்றவகையில் 95% குறைத்துக்கொள்ளவும் வருடாந்த கடனெடுத்தல் அவசியப்பாட்டினை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 14% வீதம் வரை 2030 ஆம் ஆண்டளவில் குறைத்துக்கொள்ளவும் வேண்டும்.
அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவு முகாமைத்துவத்தினால் இந்த இலக்கினை நிறைவுசெய்ய முடியாது. அதனால் கட்டாயமாக எமது கடல், நிலம் உள்ளிட்ட எதனையும் விற்பனைசெய்ய முயற்சிசெய்கிறார்கள். இந்த விற்பனையினால் இரண்டு நோக்கங்களை ஈடேற்றிக்கொள்கிறார்கள். ஐ.எம்.எஃப். இன் மூன்று அளவுகோல்களை நிறைவுசெய்கின்ற அதேவேளையில் டொலர்களுக்காக விற்பனை செய்வதன் மூலமாக அரசாங்கத்தின் செலவுகளுக்கான பணத்தை தேடிக்கொள்வதைப்போலவே வெளிநாட்டு ஒதுக்கங்களை கட்டியெழுப்பவும் தூண்டப்படுகின்றது. நெருக்கடி நிலவுகின்றவேளையில் ஒரு நாட்டுக்கு முதலீடுகள் வரமாட்டாது. வருவதாயின் வருவது அரசியல் இடையீடுகள் சம்பந்தமான ஆர்வம் காட்டுகின்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாத்திரமே. விற்பனை செய்யப்போகின்ற அரசாங்க நிறுவனங்கள் சம்பந்தமான ஓர் உதாரணமாக ஸ்ரீலங்கன் எயார் லயின் கம்பெனியை எடுத்துக்கொண்டால் 2023 இல் 40 பில்லியன் ரூபா தொழிற்பாட்டு இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற தவறான தீர்மானங்கள் மற்றும் அரசியல் தீர்மானங்கள் காரணமாகவே நட்டமடைகின்றது. இந்த நிறுவனம் ஊழியர்களின் பிரச்சினைகள் காரணமாக நட்டமடைவதில்லை. ஊழியர் குழாத்தினை எடுத்துக்கொண்டால் இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்தச் செலவில் 6% ஆகும். பலவருடங்களில் இந்த நிறுவனத்தின் நட்டம் 612 பில்லியன் ரூபாவாக சேர்ந்துள்ளது. முதலாவது தருணத்தில் இருந்தே முகாமைத்துவம் அது சம்பந்தமாக தீர்மானங்களை மேற்கொண்டிருப்பின் இவ்வாறான நிலைமைக்கு வீழ்ந்திருக்கமாட்டாது. மறைந்துள்ள கதைக்குப் பின்னால் இது போன்ற பல விடயங்கள் இருக்கின்றன.
அதன் மறைவில் இருப்பது பொருளாதாரகக் குற்றச்செயல்களாகும். அதேவேளையில் மேலும் பல அயோக்கியத்தனமான வேலைகளைச்செய்ய தயாராகி வருகிறார்கள். கணக்கியல் வித்தைகள் மூலமாக 102 பில்லியனை திறைசேரியிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு முதலீடு செய்வதற்கான தயார்நிலை காணப்படுகின்றது. பொதுப்பணத்தை தாம்விரும்பியவாறு ஈடுபடுத்துகின்ற இவ்வாறான குற்றம்நிறைந்த பல செயல்கள் மலிந்து காணப்படுகின்றன. இந்த உதாரணத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டால் பொருளாதாரம் வீழ்ந்துள்ள படுகுழியில் இருந்து மீட்டெடுத்து மக்களின்வாழ்க்கையை உயர் மட்டத்திற்கு மாற்றமாட்டார்கள் என்பது உறுதியாகின்றது. அநாவசியமான தனியார்மயமாக்கலை மேற்கொள்வதன் மூலமாக பாரிய சீர்குலைவுகள் ஏற்பட்டுள்ளமை உலகளாவிய உதாரணங்கள் மூலமாக தெளிவாகின்றது. குறிப்பாக வலுச்சக்தி, நிதி போன்ற துறைகளில் அரச பிரிவின் இடையீடு மிகவும் முக்கியமானது. ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் மக்களின் வாழ்க்கைக்கும் இந்த துறையானது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஐ.எம்.எஃப். இல் இறுகிய கிறீஸ் அவர்கள் வசமிருந்த புகையிரதம், துறைமுகம் போன்ற நிறுவனங்களை விற்று பதில்தேட முயற்சி செய்தது. எனினும் பாரிய மக்கள் எதிர்ப்பு அந்நாடுகளில் தோன்றியுள்ளது. இந்த ஊழல்மிக்க குழுக்கள் எப்படியாவது விற்பதற்காக மேற்கொள்கின்ற முயற்சிகளை எப்படியாவது தோற்கடித்திடவே நாங்கள் முயற்சிசெய்ய வேண்டும். சட்டரீதியான அல்லது நெறிமுறைசார்ந்த எந்தவிதத்திலும் அதிகாரத்தில் இருக்க உரிமையற்ற அரசாங்கங்கள் மனித்திற்கு எதிரான குற்றச்செயல்களை புரிந்து வருகின்றன. இந்த அனைத்துச் செயற்பாடுகளினதும் இறுதிமுடிவாக அமைந்துள்ளது அவர்கள் மனிதத்திற்கு எதிரான குற்றச்செயல்களைப் புரிவதாகும். இந்த நிலைமையிலிருந்து விடுபடுவதற்கான கூட்டு நடவடிக்கையை நாமனைவரும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.


-Colombo, December 25, 2023- இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை நிமித்தமாகக்கொண்டு டிசம்பர் 25 உலகம் பூராவிலும் கிறிஸ்தவ அடியார்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகின்ற வனப்புமிகு நத்தார் தினத்திற்காக நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். உலகிற்கு சமாதானச் செய்தியைக் கொண்டுவந்த தினமாக பொதுவாக கருதப்படுகின்ற நத்தாரின் முக்கியத்துவமாக அமைவது இயேசு கிறிஸ்துவின் போதனைகளின் பிரதானமான பகுதியான சகோதரத்துவத்தையும் சகவாழ்வையும் மனித மனங்களில் விதைப்பதற்கான பிரதான காரணம் அதுவாக அமைந்தமையாகும். அதைப்போலவே நத்தார் தினம் சமாதானத்தினதும் சகோதரத்துவத்தினதும் செய்தியை சமூகத்திற்கு பகிர்ந்தளிக்க […]
-Colombo, December 25, 2023-

இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை நிமித்தமாகக்கொண்டு டிசம்பர் 25 உலகம் பூராவிலும் கிறிஸ்தவ அடியார்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகின்ற வனப்புமிகு நத்தார் தினத்திற்காக நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
உலகிற்கு சமாதானச் செய்தியைக் கொண்டுவந்த தினமாக பொதுவாக கருதப்படுகின்ற நத்தாரின் முக்கியத்துவமாக அமைவது இயேசு கிறிஸ்துவின் போதனைகளின் பிரதானமான பகுதியான சகோதரத்துவத்தையும் சகவாழ்வையும் மனித மனங்களில் விதைப்பதற்கான பிரதான காரணம் அதுவாக அமைந்தமையாகும். அதைப்போலவே நத்தார் தினம் சமாதானத்தினதும் சகோதரத்துவத்தினதும் செய்தியை சமூகத்திற்கு பகிர்ந்தளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக்கொள்வதற்கான பெறுமதிமிக்க தருணமாகும்.
சனத்தொகையில் அரைவாசிக்கு அதிகமானோர் பசியுடன் படுக்கைக்குப் போகின்ற நிலைமை ஏற்பட்டுள்ள ஒரு நாட்டில் நத்தாரை விமரிசையாக கொண்டாடுவதற்கான இயலுமை கிடையாது. எனினும் நத்தாரினால் வெளிப்படுத்தப்படுகின்ற அன்பு, சகோதரத்துவம், சகவாழ்வு போன்ற மானிடப் பண்புகளைக் கொண்டதாக அயலவர்களை நோக்குவதற்கு அந்த நிலைமை தடையாக அமையமாட்டாது.
மக்களை வதைக்கின்ற ஆட்சிக்கு எதிராக மக்களின் தரப்பில் இருந்து போராடிய மதத்தலைவரான இயேசு கிறிஸ்துவினால் வெளிப்படுத்தப்பட்ட மானிடப் பண்புகள் நிறைந்த, நிலவுகின்ற அநீதியைக் கேள்விக்குட்படுத்துகின்ற மற்றும் அர்ப்பணிப்புகளுக்கு முன்வருகின்ற மனிதர்கள் எமக்கு மென்மேலும் அவசியமாகின்றனர்; அத்தகைய மனிதர்களைக்கொண்ட சமூகமும் எமக்குத் தேவையாகும். அதற்கான திடசங்கற்பத்தை பலப்படுத்திக்கொள்கின்ற தினமாகவும் நத்தார் தினத்தை மாற்றிக்கொள்ளுமாறும் அனைத்து இலங்கைவாழ் கிறிஸ்தவ அடியார்களிடம் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
அநுர குமார திசாநாயக்க
தலைவர்
மக்கள் விடுதலை முன்னணி /தேசிய மக்கள் சக்தி
-Colombo, December 17, 2023- தேசிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி மாநாடு கல்முனை திகதிக்கு முன்னராக சனாதிபதி தேர்தல் நடைபெறும். யூலை இறுதியளவில் தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கும். நாங்கள் இற்றைவரை ஆட்சியாளர்களை மாற்றினோம். அரசாங்கங்களை மாற்றினோம். நாங்கள் கடந்தகாலம்போல் சிந்திக்காமல் புதிதாக சிந்தித்து அரசியலில் மாற்றமொன்றை ஏற்படுத்துவோம். தெற்கில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மதிப்பாய்வுகளில் தேசிய மக்கள் சக்தி மேலாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தெற்கில் உள்ளவர்கள் கேட்கிறார்கள், தென்னிலங்கை தயார். வடக்கு கிழக்கு எப்படி? என. தெற்கில் […]
-Colombo, December 17, 2023-
தேசிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி மாநாடு கல்முனை

திகதிக்கு முன்னராக சனாதிபதி தேர்தல் நடைபெறும். யூலை இறுதியளவில் தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கும். நாங்கள் இற்றைவரை ஆட்சியாளர்களை மாற்றினோம். அரசாங்கங்களை மாற்றினோம். நாங்கள் கடந்தகாலம்போல் சிந்திக்காமல் புதிதாக சிந்தித்து அரசியலில் மாற்றமொன்றை ஏற்படுத்துவோம். தெற்கில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மதிப்பாய்வுகளில் தேசிய மக்கள் சக்தி மேலாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தெற்கில் உள்ளவர்கள் கேட்கிறார்கள், தென்னிலங்கை தயார். வடக்கு கிழக்கு எப்படி? என. தெற்கில் உள்ள மக்கள் எடுக்கின்ற தீர்மானங்களுக்கு பாரிய பங்களிப்பினை கிழக்கில் உள்ள முஸ்லீம் மக்கள் வழங்கத் தயார் என கல்முனை மேடையில் இருந்துகொண்டு தெற்கில் உள்ளவர்களுக்கு கூறுகிறோம்.
எமது நாடு பாரிய படுகுழிக்குள் விழுந்தது. கடனைச் செலுத்த முடியாத, மக்களால் உண்டுவாழ முடியாத, மீன்பிடிப் படகுகளை கடலுக்கு அனுப்ப முடியாத, வைத்தியசாலையில் மருந்துகள் இல்லாத, பிள்ளைகளுக்கு சரியான கல்வி கிடைக்காத, பிள்ளைகளுக்கு தொழில் கிடைக்காத, சூழல்தொகுதி நாசமாக்கப்பட்ட, யானை – மனிதன் மோதல் காரணமாக நூற்றுக்கணக்கான யானைகள் இறந்த, உலகத்தார் முன்னிலையில் வெட்கித் தலைகுனிகின்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்ட, உலகம் ஏற்றுக்கொள்ளாத நாடாக தற்போது இந்த நாடு மாற்றப்பட்டுள்ளது. இதனை மாற்றியமைக்க வேண்டாமா? நாங்கள் இதனை மாற்றியமைப்போம் எனும் பிரேரணையை முன்வைக்கவே நாங்கள் உங்கள் முன்னிலைக்கு வந்திருக்கிறோம். வடக்கின் தமிழ் மக்களும் கிழக்கின் முஸ்லீம் மக்களும் தெற்கின் சிங்கள மக்களும் அனைவருமே ஒன்று சேர்ந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம். இனவாதமற்ற, தேசிய ஒற்றுமையை பாதுகாக்கின்ற பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் அமைப்போம்.
கடந்த வருடத்தின் யூன் மாதத்தில் இந்நாட்டு மக்களால் விரட்டியக்கப்பட்ட தலைவர்கள், இந்த நாட்டை ஆபத்தில் தள்ளிய தலைவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வரத் துடிக்கிறார்கள். மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஒருவருக்கொருவர் எதிராக போராடுபவர்கள் என்றே எமக்கு புலப்பட்டது. மகிந்த சரியில்லை என நினைக்கும்போது ரணிலை நியமித்தார்கள். ரணில் சரியில்லை என நினைக்கும்போது மகிந்தவை நியமித்தார்கள். எனினும் தற்போது இருசாராரும் ஒன்றாகவே இருக்கிறார்கள். அன்றும் அப்படித்தான் இருந்தார்கள். அவர்கள் ஒருபோதுமே சண்டையிடவில்லை. எனினும் அவர்கள் எம்மை பிளவுபடுத்தினார்கள். சிங்கள, தமிழ் முஸ்லீம் மக்களிடையே முரண்பாட்டினை ஏற்படுத்தினார்கள். ரஊப் ஹக்கீம் பிளவுபடவில்லை. கூகலில் அவர்களின் ஹிஸ்டரியைத் தேடும்போது சந்திரிக்கா அரசாங்கத்தில் குழுக்களின் பிரதித் தவிசாளர், தபால் அமைச்சர், ரணிலின் அரசாங்கத்திலும் தபால் அமைச்சர், மீண்டும் மகிந்தவின் அரசாங்கத்தில் துறைமுகங்கள் அமைச்சர். 2000 சனாதிபதி தேர்தலில் பொன்சேகாவின் மேடையில். தேர்தல் முடிவடைந்ததும் மகிந்தவின் அரசாங்கத்தில். 2015 இல் மைத்திரியின் அரசாங்கத்தில். இந்த மூன்று வருடங்களில்தான் ஒன்றுமே கிடையாது.
19 வது திருத்தத்தில் சனாதிபதியின் சிறகுகள் வெட்டப்பட்டிருந்தன. கோட்டாபயவின் அதிகாரத்தை அதிகரித்துக் கொள்வதற்காக, சிறகுகளை பொருத்திக்கொள்ள, 2020 இல் இருபதாம் திருத்தம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது. எனினும் பையிசர் காசிம், ஹாரிஸ், பெளசிக் என்ன செய்தார்கள்? கோட்டாபய இனவாதி, அவர் வந்தால் எமது பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் எனக்கூறி உங்கள் முன்வந்து வாக்குகளைக் கோரினார்கள். கோட்டாபயவிடமிருந்து தப்பித்துக்கொள்ள, கோட்டாபயவை தோற்கடிப்பதற்காக பையிசர் காசிம், ஹாரிஸ், பெளசிக்கிற்கு வாக்குகளை அளிக்குமாறு கூறினார்கள். நீங்கள் கோட்டாபயவிற்கு எதிராக வாக்குகளை அளித்தீர்கள். அவர்கள் பாராளுமன்றம்சென்று கோட்டாபயவின் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக வாக்குகளை அளித்தார்கள். இது அசிங்கமான அரசியலல்லவா? இந்த அரசியலை நிறுத்தவேண்டுமல்லவா? முஸ்லீம் மக்களுக்காக அமைச்சர் பதிவியை வகிக்கின்ற ஒருவர் அரசாங்கத்தில் இருக்கவேண்டுமென ஒருசிலர் கூறுகிறார்கள். 1994 இல் இருந்து ஒவ்வோர் அரசாங்கத்திலும் முஸ்லீம் காங்கிரஸ் இருந்தது. அரசாங்கத்தில் இருக்கவேண்டியது முக்கியமானதெனில் முஸ்லீம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். எனினும் தீர்க்கவில்லை. மகிந்த ராஜபக்ஷ ஊழல், மோசடியில் ஈடுபட்ட வேளையிலும் ரணில் விக்கிரமசிங்க மத்தியவங்கி கொள்ளையில் ஈடுபட்டவேளையிலும் முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்தது. அவர்களும் இந்த நாட்டை வீழ்த்தியதன் பங்காளிகளே. கல்முனை நகரசபை முதல்வர் உங்கள் பணத்தின் 25 மில்லியன் ரூபாவை தனது சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டார். இவர்கள் அத்தகைய ஆட்சியாளர்களே. பொதுவாக பாராளுமன்றத்திற்கு வருவது குறைவு, பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பொன்று நடைபெற்றால் கட்டாயமாக வருகின்ற அதாவுல்லா, எதிர்க்கட்சியில் எனக்குப் பின்னால் அமர்ந்திருந்து அரசாங்கத்திற்கு சார்பாக வாக்களிக்கிறார். இதென்ன அரசியல்? இதனை மாற்றயமைக்கக்கூடாதா? நாங்கள் முடிவினை எடுப்போம். இந்த தோல்விகண்ட ஆட்சிக்கு முற்றுப்புள்ளிவைக்க நாமனைவரும் ஒன்றிணைவோம். புதிய அரசாங்கமொன்றை அமைத்துவிட்டால் மாத்திரம் போதாது, நாமனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த நாட்டை சரிக்கட்டவும் வேண்டும். நாம் படுகின்ற துன்பதுயரங்களை எமது பிள்ளைகள் அனுபவிக்காத , உலகின் முன்னிலையில் நற்பெயருக்கு இலக்காகின்ற, அனைத்து இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழ்கின்ற ஒரு நாட்டை உருவாக்குவோம்.
2002 தொட்டு ஆட்சிகள் தவறுகளைப் புரிந்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் கூறினார். நாங்கள் கடந்தகாலத்தை மறந்து புதிய பாதையில் பிரவேசிப்போமென நிமல் சிறிபால கூறினார். அவர்கள் இறந்தகாலத்தை மறந்துவிடுமாறு அடிக்கடி கூறிவருகிறார்கள். அவர்கள் பாரதூரமான தவறுகளைப் புரிந்துள்ளார்கள். பொது ஆதனங்களை திருடியுள்ளார்கள். எவர் மறந்தாலும் தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் மறக்கமாட்டோம். பொதுச் சொத்துக்களைத் திருடியவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்குவோம். எமக்கு சரியான அதிகாரம் இருக்குமாயின் பாராளுமன்றத்தில் இருக்கின்ற பெரும்பாலானவர்கள் உள்ளேதான் இருப்பார்களென கல்முனையில் மாத்திரமல்ல பாராளுமன்றத்திலும் நான் கூறினேன். அதனைச் செய்யவேண்டும். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் மாத்திரமே அதனைச்செய்யும். மகிந்த திருடன் என பாராளுமன்றத்தில் இந்தப் பக்கத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள், கிரிக்கெற் போர்ட்டின் திருடன் என, நாமல் திருடியுள்ளார் என. மறுபக்கத்தில் கூறுகிறார்கள் சஜித் பிரேமதாச கலாசார நிதியத்தை சுருட்டிக்கொண்டார் என, வீடமைப்பு அதிகாரசபையை நாசமாக்கினார் என, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களை பாரியாரின் செலூனுக்கு வேலைக்காக அனுப்பினார், அரசாங்கம் சம்பளம் செலுத்துகிறது வேலை செலூனில் என. இந்த இரு தரப்பிலும் தவறு புரிந்த அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துகின்ற ஓர் அரசாங்கத்தை நாங்கள் அமைக்கவேண்டும். அந்த அரசாங்கத்தை நாங்கள் அமைப்போம். சட்டத்தின் ஆட்சி முறைப்படி அனைவருக்கும் அமுலாக்கப்படுகின்ற ஓர் அரசாங்கம் எமக்குத் தேவை. அரசாங்கத்தின் சட்டம் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை கிடையாது. பொலீசுக்குச் சென்றால் நீதி கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறதா? பொலீஸில் அரசியல் தலையீடு நிலவுகின்றது. சாதாரண மனிதர் ஒருவருக்கு அமுலாக்கப்படுகின்ற சட்டம் அமைச்சரின் கையாளுக்கு அமுலாவதில்லை. உலகின் முன்னேற்றமடைந்த ஒவ்வொரு நாட்டிலும் சட்டம் நியாயமாக அமுலாக்கப்படுகின்றது.
பதில் பொலீஸ் மா அதிபருக்கு உயர்நீதிமன்றம் ரூபா ஐந்து இலட்சம் அபராதம் விதித்தது. முன்னாள் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது. முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, முன்னாள் சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பொருளாதாரத்தை சீரழித்ததாக நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்க கட்சி முதற்கோலாசான் பிரசன்ன ரணதுங்க நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன மகேந்திரனுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் றஹீம் தங்கம் கொண்டுவருகையில் சுங்கத்தில் அகப்படுகிறார். காட்டுச்சட்டம் தலைவிரித்தாடுகின்ற நாடாக எமது நாடு மாறிவிட்டது. இது குற்றச்செயல் புரிபவர்களால் ஆளப்படுகின்ற நாடாகும். மத்திய வங்கியை பதம்பார்க்க பங்களிப்புச் செய்ததாக ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பிரதான குற்றச்சாட்டு நிலவுகின்றது. அர்ஜுன் மகேந்திரன் வாக்குமூலம் அளிக்கையில் “நிதி அமைச்சர் கூறியவாறு வேலைசெய்தேன்” எனக் கூறினார். அது சனாதிபதி ஆணைக்குழுவில் குறிப்பு பதியப்பட்டு இருக்கின்றது. உளவுத்துறை பிரதானிக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய குற்றச்சாட்டு இருக்கின்றது. நாட்டின் உயர் அடுக்குகளில் இருப்பவர்கள்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்டவர்களால் ஆளப்படுவதற்காக மக்கள் வெட்கப்பட வேண்டும். உங்களால் உலக நாடுகளுக்குச் சென்று எமது நாட்டுத் தலைவர்கள் பற்றிக்கூற முடியுமா? கூகலில் துலாவிப்பார்த்தால் நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட சனாதிபதிமார்கள், நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுனர்கள் எமது நாட்டை ஆள்கிறார்கள். பக்காத் திருடர்களே எமது நாட்டை ஆட்சிசெய்துள்ளார்கள். ஆட்சியாளர்கள் அப்படிப்பட்டவர்களெனில் நீங்கள் எப்படிப்பவர்களாக இருப்பீர்கள் என அவர்கள் நினைக்கிறார்கள். கல்முனை நகரசபைத் தலைவரை கூகல்பண்ணிப் பார்த்தால் அவரும் அப்படித்தான். காசுக்காக அமைச்சர் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்குமிங்கும் தாவுகிறார்கள். நசீர் அஹமட்டுக்கு என்றால் நீதிமன்றம் சரியான தீர்ப்பினை வழங்கியது. அந்த தீர்ப்பிற்கு நாங்கள் மதிப்பளிக்கவேண்டும். இந்த தீர்ப்பு இதற்கு முன்னரே வழங்கப்பட்டிருப்பின் பந்துல, விஜேதாச, ஹரீன், மனுஷ பாராளுமன்றத்தில் இல்லை. சட்டம் சரிவர அமுலாக்கப்பட்டால் இன்றும் பாராளுமன்றத்தில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் வெளியிலேயே. சட்டம் இல்லாத நாட்டை ஒருபோதுமே முன்னேற்ற முடியாது.
இனம் என்ன? அதிகாரம் இருக்கிறதா? வறியவரா – பணக்காரனா? என்ற பேதமின்றி அனைவருக்கும் நீதி கிடைக்கின்ற நாட்டை நாங்கள் உருவாக்கிட வேண்டும். நாங்களும் நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்த தேசிய மக்கள் சக்தி உருவாக்குகின்ற நாடு அப்படிப்பட்ட ஒன்றாகும். இந்த பிரதேசத்தில் மீனவர்கள் இருக்கிறார்கள், ஏறக்குறைய 500 பன்னாட் கலங்கள் இருக்கின்றன, 800 – 900 சிறிய படகுகள் உள்ளன. இவர்களின் பிரதான வாழ்வாதாரம் மீன்படித் தொழிலாகும். கடலரிப்பு ஏற்படுகின்றது, படகுகளை நிறுத்திவைப்பதற்கான மீன்பிடித் துறைமுகம் கிடையாது. எனினும் மத்தலவில் விமான நிலையமொன்று இருக்கின்றது. ஈடேற்றப்படுவதோ மக்களின் தேவைகள் அல்ல. அவருக்கு கொமிஸ் வரும் விதத்தில்தான் வேலை செய்கிறார்கள். பொருளாதாரத்தை சரிக்கட்ட பெருங்கடலில் இருக்கின்ற மீன் அறுவடையைப் பெறவேண்டும். அதற்காக மீனவர்களுக்கு வசதிகளை வழங்குதல் வேண்டும். தற்போது அரைவாசிக்கு மேற்பட்ட பன்னாட் கலங்கள் கடலுக்குச் செல்வதில்லை. எண்ணெய் அடித்துக்கொண்டு, இரண்டுமூன்று வாரங்களுக்கான பொருட்களை எடுத்துக்கொண்டு, கடலுக்குச்சென்று மீன்பிடித்துக்கொண்டு வந்தால் நட்டம். கடன். அதனால் படகுகள் கடலுக்குச் செல்வதில்லை. படகுகளைக் கடலுக்கு அனுப்புவதாயின் டீசல் மானியம், நல்ல இறங்குதுறை, பனிக்கட்டிக் களஞ்சியம் அமைத்துக்கொடுக்கப்படல் வேண்டும். வலைகள் முதலிய சாதனங்கள் நியாயமான விலைக்கு வழங்கப்படல் வேண்டும். இப்போது மக்கள் கடலுக்குச்சென்று மீன் அறுவடையை கரைக்கு கொண்டுவருவார்கள். நாட்டின் விளைச்சல் அதிகரிக்கும். நாடு வளம்பெறும். இந்த ஆட்சியாளர்கள் சனவரி மாதம் முதலாந் திகதியில் இருந்து மீண்டும் டீசலுக்கு வற் விதித்துள்ளார்கள். கடலுக்குச்சென்ற கலங்களையும் கரைக்கு கொண்டுவர நேரிடும். நாட்டை உருப்படியாக்க உற்பத்திகளை மேம்படுத்தவேண்டும். அதில் இடையீடுசெய்ய நாங்கள் தயார்.
அம்பாறை மாவட்டத்தில்தான் அதிகமாக நெல் செய்கைபண்ணப்படுகின்றது. செழிப்பான வயல்வெளிகள் இருக்கின்றன. வசதிகள் கிடையாது. சிறந்த விதையினங்கள், நல்ல உரம், களை கொல்லிகள் கிடையாது. குறைந்த விலைக்கே நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது. கமக்காரர் அநாதரவாகிவிட்டான். நாடும் அநாதரவாகிவிட்டது. பல்லாயிரக்கணக்கான வயல்நிலங்கள் இருக்கின்றன. புதிய விதையினங்களைப்போட்டு, புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டுவந்து, சிறந்த பசளைகளை இட்டு, விளைச்சலை அதிகரித்து, முன்னேற்றமடைந்த தொழில்நுட்பத்துடனான ஆலைகளை அமைத்து அரிசியை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும். வயல்கள் பாழடைந்தால் நாடே பாழடைந்துவிடும். வயல் விளைச்சலை அதிகரிக்கும் இடத்திற்கு எமது நாட்டை மாற்றியமைத்திட வேண்டும். எமது இளைஞர் தலைமுறையினருக்கு புதிய தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். இன்றைய உலகில் முதன்மைத் தொழில்த்துறையாக ஐ.ரீ. தொழில்த்துறையே மாறியுள்ளது. அறிவுபடைத்த எமது இளைஞர் தலைமுறையினருக்கு உலகின் முன்னேற்றமடைந்த உழைப்பினைக் கையகப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்திடவேண்டும். ஐ.ரீ. தொழில்நுட்பத்தை விருத்திசெய்ய வேண்டும். இன்று எமது இளைஞர்களுக்கு அவர்களின் வாழ்க்கை இழக்கச்செய்விக்கப்பட்டுள்ளது. விவாகம் செய்துகொள்கின்ற இளைஞர்களுக்கு கூடி வாழ்வதற்கான வாய்ப்பு இழக்கச்செய்விக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களும் அவர்களின் விவாகம்செய்த பிள்ளைகளும் ஒருநாள்கூட விலகி இருக்கமாட்டார்கள். எனினும் எங்கள் பிள்ளைகள் விவாகம்செய்து ஒருமாதம்கூட ஒன்றாக வாழ வாய்ப்பில்லை. கணவன் வெளிநாட்டில், மனைவி இலங்கையில். அத்தகைய வாழ்க்கை எமக்கு வேண்டுமா? அமைச்சர்களின் பிள்ளைகள் தொழில் புரிவதைக் கண்டிருக்கிறீர்களா? பாடசாலையில் போதிப்பது, தொழிற்சாலையில் வேலைசெய்வது அவ்வாறான தொழில்களை அவர்கள் புரிவதில்லை. அவர்களின் பிள்ளைகள் அரசாங்கத்துடன் பிஸ்னஸ். அரசாங்கத்தின் கொந்துராத்து வேலைகளை அவர்கள் செய்கிறார்கள். எங்கள் பிள்ளைகள் பிள்ளைகள் இல்லையா? எமது பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் அவசியமில்லையா? எமது பிள்ளைகளுக்கும் சிறந்த எதிர்காலத்தை அமைத்துக்கொடுப்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை நாங்கள் அமைத்திடுவோம்.
இந்த ஆட்சியாளர்கள் எப்போதுமே அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இனவாதத்தை விதைக்கிறார்கள். இரு அணிகளும் இனவாதத்தை விதைத்தே அதிகாரத்தைப் பெறுகின்றன. அண்மையில் இனவாதத்தை விதைத்திட முயற்சி செய்தார்கள். எனினும் இப்போது இனவாதத்தின் தீச்சுடர் பற்றியெரிவதில்லை. குருந்தி விகாரையை மையமாகக்கொண்டு இனவாதத்தை தூண்டிவிட எத்தனித்தார்கள். திருகோணமலையில் இனவாதத்தை தூண்டிவிட முயற்சி செய்தார்கள். பொன்னம்பலத்தின் வீட்டைச் சுற்றிவளைத்து இனவாதத்தை தூண்டிவிட முயற்சி செய்தார்கள். இனிமேலும் இந்நாட்டு மக்கள் இனவாதத்திற்கு இரையாக மாட்டார்கள். எமது நாட்டை தீக்கிரையாக்கிய, மோதல்களை உருவாக்கிய, உயிர்த்தஞாயிறு தாக்குதலை உருவாக்கிய இந்த ஆட்சியாளர்களின் இனவாத அரசியலை தோற்கடித்திட வேண்டும்.
இந்த நாடு ஒரு இனக்குழுவின் நாடு மாத்திரமல்ல. நாங்கள் பிறப்பது, இறப்பது, உரமாவது இந்த நாட்டிலேயே. இது எமது நாடு. நாம் அனைவரும் ஒற்றுமை நிறைந்த ஒரு தேசத்தை உருவாக்கிடுவோம். கிழக்கிலங்கை மக்களும் தென்னிலங்கை மக்களும் இந்த நாட்டை உருப்படியாக்க எழுச்சிபெற வேண்டும். இந்த ஆட்சியார்களை விரட்டியடித்திட வடக்கின் தெற்கின் கிழக்கின் மக்கள் அனைவரும் ஒருவர்போல் கைகோர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நாட்டைக் கட்டியழுப்ப புதிய தேசிய எழுச்சியொன்று எமக்குத் தேவை. நாங்கள் எழுச்சிபெற வேண்டியது ஒருவருக்கொருவர் எதிராக அல்ல. சாதிபேதம், இனபேதம், மதபேதமற்றதாக இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக்கொண்ட எழுச்சியொன்று தேவை. நாங்கள் ஒன்றுசேரும்போது அவர்கள் கூறுகிறார்கள் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்தால் மதங்களைக் கடைப்பிடிக்க இடமளிக்க மாட்டார்களென்று. மதம் என்றால் என்ன? மதம் என்பது அதனைப் பின்பற்றுகின்ற மக்களின் நம்பிக்கையாகும். முஸ்லீம் மக்கள் அல்குர்ஆனையும், நபிகள் நாயகம் அவர்களின் உபதேசங்களையும், சிங்கள பௌத்தர்கள் திரிபீடகத்தையும் புத்தபெருமானையும், கத்தேலிக்கர்கள் விவிலியத்தையும் இயேசு கிறிஸ்துவையும். தமிழ் மக்கள் பகவத் கீதையையும் சிவபெருமானையும் நம்புகிறார்கள். எமது அனைத்து மக்கட் சமூகத்திற்கும் தமது நம்பிக்கைக்கிணங்க தாம் விரும்புகின்ற மதத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் உச்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய ஓர் அரசாங்கமே தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம். நாங்கள் எமது அரசியலுடன் மதத்தை தொடர்புபடுத்திக் கொள்ளமாட்டோம். மதம் என்பது மக்களின் நம்பிக்கையாகும். அரசியல் என்பது மக்கள் எவ்வாறு ஆளப்படுவது என்பதாகும்.
அவர்கள் மற்றுமொரு அபிப்பிராயத்தையும் ஏற்படுத்துகிறார்கள், என்.பி.பி. அரசாங்கமொன்று வந்தால் தொழில்முயற்சிகளை அரசாங்கம் சுவீகரித்துக்கொள்ளுமாம். எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச டுவிட்டர் செய்தியொன்று மூலமாக என்.பி.பி. அரசாங்கமொன்று வந்தால் ஆதனங்களை சுவீகரித்துக்கொள்ளுமென கூறினார். சஜித் கூறியதால் எவருமே ஏற்றுக்கொள்வதில்லை. இந்த வருடத்தின் சனவரி தொடக்கம் நவெம்பர் வரை எமது நாட்டில் 1183 தொழில்முயற்சிகள் வங்கிகளால் சுவீகரிக்கப்பட்டு ஏலவிற்பனை செய்யப்பட்டுள்ளன. மிகவும் சிரமமப்பட்டு கட்டியெழுப்பிய பிஸ்னஸ். உயிர்த்தஞாயிறு தாக்குதல் வந்தது, கொவிட் வந்தது, மக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன, பொருளாதாரம் சீரழிந்தது, தொழில்முயற்சிகள் மூடப்பட்டன. சிறப்பாக இயங்கிய தொழில் முயற்சிகளை சீரழித்தவர்கள் யார்? இந்த ஆட்சியாளர்கள் தான். இப்போது என்ன நடந்துள்ளது. நாங்கள் அரசாங்கமொன்றை அமைப்பது பிரசையின் தொழில்முயற்சிகளை சுவீகரித்துக்கொள்வதற்காக அல்ல. அவர்களின் தொழில் முயற்சிகளை முன்னேற்றுவதற்காகவே. நீங்கள் சப்பாத்துக் கைத்தொழிலைப் புரிந்தால், அதற்கான தொழில்நுட்பத்தை வழங்கி, வங்கிக் கடன் வழங்கி, அந்த தொழிற்றுறைக்கு உலகின் சந்தையைத் தேடிக்கொடுத்து முன்னேற்றகரமான தொழிற்றுறையாக மாற்றுவதே எமது திட்டம். நீங்கள் சாகுபடிசெய்கின்ற நெல்வயல்கள் கல்முனை மக்களுக்கு சோறு போடுவதற்காக மாத்திரமல்ல, உலக மக்களுக்கே உணவளிக்கும் நிலைக்கு மாற்றிடவேண்டும். நாங்கள் உருவாக்கும் பொருளாதாரம் அதுவே. புதிய தொழில்முயற்சிகளை உருவாக்குகின்ற அவற்றை முன்னேற்ற ஒத்துழைப்பு வழங்குவதுதான் எமது பொருளாதாரக் கொள்கை. சுங்கத்திற்கு கட்டுப்படவோ அல்லது வருமான வரிக்கோப்புகளை மறைத்துவைக்கவோ அவசியமேற்படாத நியாயமான வரியொன்று, நியாயமான சட்டமொன்று, சாதகமான தொழில்முயற்சியை நாங்கள் உருவாக்கிடுவோம். வீழ்ந்த கைத்தொழில்களை மீட்டெடுக்கின்ற, தொழில் முயற்சிகளை முன்னேற்றுகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் அமைப்போம். தொழில்முயற்சிகளுக்கு உலக சந்தையில் உரிய இடத்தைக் கைப்பற்றிக்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.
அதைப்போலவே உலகிற்கு சமாதானம் அவசியம். இன்று பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் பிள்ளைகள் படுகின்ற வேதனை தொடர்பில் குரலொன்று தேவையில்லையா? தேசிய மக்கள் சக்தி என்பது அதோ அந்த குரலை எழுப்புகின்ற இயக்கமாகும். உலகில் அநீதியும் அநியாயமும் எங்கெல்லாம் நிலவுகின்றதோ அவற்றுக்கு எதிராக குரலெழுப்பிட நாங்கள் தயார். அத்தகைய அரசாங்கமொன்றை நாங்கள் அமைத்திடுவோம். இந்த நாட்டை மாற்றியமைக்கின்ற பாதையொன்று எமக்கு அவசியமாகும். தோழர் ஆதம்பாவா நீண்டகாலமாக இந்த கல்முனை பிரதேசத்தில் எம்மோடு செயலாற்றி வருகிறார். ரமேஸ், நளின் தோழர்கள் மிகுந்த பலம்பொருந்தியவர்களாக எம்முடன் உழைத்து வருகிறார்கள். அவர்கள் இந்த இடத்திற்கு வந்திருப்பது தமக்காக தனிப்பட்டவகையில் எதையாவது பெற்றுக்கொள்வதற்காக அல்ல. அரசாங்கத்திற்கு வருகின்ற ஒவ்வொரு சதமும் மீண்டும் மக்களைச் சென்றடைகின்ற அரசாங்கமொன்றை அமைத்திட வேண்டும். எம்முடன் இணைந்துகொள்ளுமாறு நான் இளைஞர் தலைமுறையினருக்கு அழைப்பு விடுக்கிறேன். வருங்காலத்தில் வரப்போகின்ற இயக்கம் தேசிய மக்கள் சக்தியாகும். ஆகஸ்ற் மாதத்தில் சனாதிபதி தேர்தல் பிரடனஞ் செய்யப்படும். எமக்கு எட்டு மாதங்களே இருக்கின்றன. ஒவ்வொரு வீட்டுக்கும் நாங்கள் போவோம். அனைவரையும் சந்திப்போம். நாட்டை ஆரத்தழுவியுள்ள அழிவு பற்றிப் பேசுவோம். இதனை மாற்றியமைத்திட என்.பி.பி. உடன் இணைந்துகொள்ளுமாறு அழைத்திடுவோம். இதற்கு முன்னர் எவருக்கு வாக்களித்திருந்தாலும் அந்த அனைவருக்கும் அழைப்பு விடுப்போம். இந்த நாட்டை மாற்றியமைக்கின்ற புதிய பயணத்தை நாங்கள் மேற்கொள்வோம். நாட்டைக் கட்டியெழுப்புகின்ற புதிய பயணத்தை தொடங்குவோம். வடக்கு தெற்கு கிழக்கில் உள்ள நாமனைவரும் ஒரு தாய் மக்கள்போல் சகோதரத்துவத்துடன் வாழும் நாட்டை நாங்கள் உருவாக்கிடுவோம். உலகில் ஒரு நாட்டுக்குச்சென்று நான் இலங்கையன் என பெருமிதமாக கூறக்கூடிய ஒரு நாட்டை உருவாக்கிக் கொடுப்போம். அதற்காக அனைவரும் ஒன்றுசேர்வோமென அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். இந்த நாட்டுக்கு விளைவித்துள்ள அழிவினை ஒற்றோபர் முடிவடைவதற்கு முன்னர் முடிவுறுத்துவோம்.

-Colombo, December 16, 2023- பெண்கள் மற்றும் சிறுவர் அமைச்சிற்கான வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டை குறைத்ததிற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினர் பாராளுமன்ற சுற்று வட்டத்திற்கு அருகில் 04ம் திகதி நடாத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியதால் தமது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டதை உறுதிப்படுத்துமாறு கோரி அடிப்படை மனித உரிமை மனு டிசம்பர் 15 மு.ப. 11.30க்கு பா.உ. கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் உச்ச நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டது. இதற்காக தேசிய மக்கள் சக்தியின் […]
-Colombo, December 16, 2023-

பெண்கள் மற்றும் சிறுவர் அமைச்சிற்கான வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டை குறைத்ததிற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினர் பாராளுமன்ற சுற்று வட்டத்திற்கு அருகில் 04ம் திகதி நடாத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியதால் தமது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டதை உறுதிப்படுத்துமாறு கோரி அடிப்படை மனித உரிமை மனு டிசம்பர் 15 மு.ப. 11.30க்கு பா.உ. கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் உச்ச நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டது.
இதற்காக தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சமன்மலி குணசிங்க, சட்டத்தரணி நிமலா சிறிவர்தன, சட்டத்தரணி சமிலா குலசேகர, சட்டத்தரணி மது கல்பனா உள்ளிட்டோர் ஒன்றிணைந்தனர்.
-Colombo, December 06, 2023- கடந்த 04 ஆந் திகதி சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்கள் அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதம் நடைபெற்றது. அடுத்த வருடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை இந்த வருடத்தைப் பார்க்கிலும் 51%ஆல் வெட்டிவிடுதலுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் பத்தரமுல்ல, தியத்த உயனவிற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இந்த ஆர்ப்பாட்டம்மீது மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான மிருகத்தனமாக நீர்த்தாரை தாக்குதலைக் கண்டித்து இந்த ஊடக சந்திப்பு நடைபெறுகின்றது. மிகையான மழைக்கு மத்தியில் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான […]
-Colombo, December 06, 2023-

கடந்த 04 ஆந் திகதி சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்கள் அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதம் நடைபெற்றது. அடுத்த வருடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை இந்த வருடத்தைப் பார்க்கிலும் 51%ஆல் வெட்டிவிடுதலுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் பத்தரமுல்ல, தியத்த உயனவிற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இந்த ஆர்ப்பாட்டம்மீது மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான மிருகத்தனமாக நீர்த்தாரை தாக்குதலைக் கண்டித்து இந்த ஊடக சந்திப்பு நடைபெறுகின்றது. மிகையான மழைக்கு மத்தியில் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான பெண்கள் பங்கேற்றார்கள். எனினும் அவர்கள் வருவதற்கு முன்னராகவே பொலீஸ் கிளர்ச்சி அடக்குதல் கூறு அந்த இடத்தில் தண்ணீர் பௌசர்களுடன் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. மக்கள் வாழ்க்கைச் சுமையை தாங்கிக்கொள்ள முடியாத நிலையை அடைந்தமையால் நாட்டின் ஒட்டுமொத்த பெண்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவுமே நாங்கள் நேற்று வீதியில் இறங்கினோம். கடுமையான எதிர்ப்பினை இந்த பெண்கள் வெளிக்காட்டினாலும் எவ்விதத்திலும் அமைதியான நிலைமைக்கு தடையேற்படவில்லை. பொலீஸாருக்கு நீர்த்தாரைத் தாக்குதலை மேற்கொள்ளவேண்டிய அவசியமிருப்பின் அந்த தாக்குதல் நடாத்தப்பட்ட தருணத்தைப் பார்க்கிலும் தீவிரமான பல தருணங்கள் நிலவின. எனினும் இறுதியாக ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பெண்கள் கலைந்துசெல்ல அண்மித்தவேளையில்தான் தாக்குதல் நடாத்தப்பட்டது. இறுதி மூச்சினை இழுத்துக்கொண்டிருக்கின்ற அரசாங்கத்தின் கோழைத்தனமான தாக்குதலாகவே நாங்கள் இந்த தாக்குதலைக் காண்கிறோம்.
இன்னும் 05 நாட்களில் மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக சமவாயத்தில் கைச்சாத்திட்டு 75 வருடங்கள் நிறைவடைகின்றன. ஒரு நாடு என்றவகையில் இலங்கையின் அரசாங்கமும் மேலும் பல அரசாங்கங்களுடன் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. எமது நாட்டு மக்கள் அபிமானத்துடன் உயிர்வாழ்வதற்கான நன்மதிப்பினை இல்லாதொழித்த இந்த அரசாங்கம் மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக சமவாயத்தின் வாசகங்களை முழுமையாகவே மீறியுள்ளது. உலகில் நிலையான மற்றும் நீண்டகாலம் நிலைத்திருக்கவல்ல பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கு நாட்டின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது அத்தியாவசியமான காரணியென்பது இந்த அனைத்துலக பிரகடனத்தின் முகவுரையில் மிகச்சிறப்பாக குறிப்பிடப்படுகின்றது. இந்த அடிப்படை மனித உரிமைகள் பற்றி பாடசாலைகளில் கற்பிக்கப்படல் வேண்டுமென குறிப்பிடப்படுகின்றது. தட்டுப்பாடுகளின்றி வாழ்வதற்கான உரிமை, மனித உரிமைகளைப் பாதுகாத்தல், தனக்கும் தனது குடும்பத்திற்கும் மனித மாண்பு பாதுகாக்கப்படத்தக்கவகையில் உயிர்வாழ அவசியமான நியாயமான சம்பளம் பெறுவதற்கான உரிமை, உணவு, உடை, உறையுள் மற்றும் சுகாதார சேவைகளைப் பெற்று சாதகமான வாழ்க்கைத்தரத்தை அனுபவிப்பதற்கான உரிமையைப்போன்றே தாய்மார்களுக்கும் பிள்ளைகளுக்கும் விசேட பாதுகாப்பு கிடைப்பதற்கான உரிமை போன்ற அடிப்படை விடயங்கள் பல வலியுறுத்தப்பட்டுள்ளன. அரசாங்கமொன்று இந்த அடிப்படை உரிமைகளை மீறுகின்றவேளைகளில் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் பிரச்சினைகளுக்காக குரலெழுப்புகின்ற மற்றும் பெண்களுக்காக குரல்கொடுப்பதற்கான விசேட தொழில்சார் உரிமை சட்டத்தரணிகள் என்றவகையில் எமக்கு இருக்கின்றது. மக்களின் பிரச்சினைகளுக்காக மிகுந்த கூருணர்வு கொண்டதாக எம்முடன் கைகோர்த்து செயற்படுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.
“எமது பிள்ளைகளின் உளச் சுகாதாரம், கல்வி மற்றும் சுகாதாரம் வீழ்ச்சியடைவதை இனிமேலும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.“
-சட்டத்தரணி திஸ்னி சமந்திகா லியனஆரச்சி–
இலங்கையின் சனத்தொகையில் 52% பெண்களாவர். கடந்த ஆண்டில் ஊழல்மிக்க ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் பிரதான பங்கினை ஆற்றியவர்கள் பெண்களே. நிலவுகின்ற ஊழல்மிக்க முறைமை பெண்கள்மீது கொடுக்கின்ற அழுத்தத்தை மாற்றியமைப்பதற்காக அமைதிவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள்மீது நிந்திக்கத்தக்க நீர்த்தாரைப் பிரயோகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டுகின்ற பாரிய வகிபாகத்தை ஈடேற்றுகின்ற பெண்கள்மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சர்வதேசரீதியாகவும் தாக்கமேற்படுத்துகின்றது. தாம் எதிர்நோக்குகின்ற சிக்கல்கள் சம்பந்தமாக பெண்கள் வீதியில் இறங்கிய ஒரு தருணமே அது. எனினும் சிறுவர் மற்றும் பெண்களின் பாதுகாப்பு சம்பந்தமாக உச்சஅளவிலான சட்டங்களும் விதிகளும் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு இருக்கையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை பெண்கள் என்றவகையிலும் சட்டத்தரணிகள் என்றவகையிலும் கடுமையாக கண்டிக்கிறோம். அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமையொன்றைப் பாவிக்கையில் அநாகரிகமான முறையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பாரிய கவனம் ஈர்க்கப்படுகின்றது.
எங்கள் பிள்ளைகளின் உளச் சுகாதாரம், கல்வி மற்றும் உடல்நலம் சீரழிவதை இனிமேலும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அதற்காக குரல் எழுப்புகின்ற பெண்களுக்கு செவிமடுக்கால் அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கு எதிராக அனைவரும் அணிதிரளவேண்டும். பெண்கள் மீது மாத்திரமல்ல வேறு அனைத்துவிதமான அமைதிவழி ஆர்ப்பாட்டங்கள்மீதும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது அரசாங்கத்தின் ஒரே பதிலடியாக அமைந்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பில் சட்டத்தரணிகள் என்றவகையில் நாமனைவரும் ஒன்றுசேர்ந்து எதிர்கால நடவடிக்கை எடுப்போம்.
“உங்களின் அடக்குமுறை எம்மை பலமடையச் செய்கிறது…”
-சட்டத்தரணி சமிலா குலசேகர-
இலங்கையில் ஒட்டுமொத்த பெண்களுக்காக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்மீது நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பதற்காக ஒட்டுமொத்த பெண்களையும் பிரதிநிதித்துவம்செய்து நாங்கள் இந்த ஊடக சந்திப்பினை நடாத்துகிறோம். பெண்கள் மட்டற்ற பொறுமைக்குணம் பொருந்தியவர்கள். எனினும் அந்த பொறுமை எல்லைமீறிவிட்டால் எவ்விதத்திலும் கட்டுப்படுத்த இயலாதென்பதை ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும். மகப்பேற்றின்போது பெண்கள் உணர்கின்ற பிரசவ வேதனையை தாங்கிக்கொள்ள முடியுமானால் நீர்த்தாரைப் பிரயோகத்தை தாங்கிக்கொள்வது பெரிய விடயமல்ல. தற்போது அனுபவிக்க நேர்ந்துள்ள மட்டற்ற அழுத்தம் காரணமாகவே இந்த சர்வாதிகார வெறிக்கு எதிராக பெண்கள் விதியில் இறங்கினார்கள். பிள்ளைக்கு ஒருவேளை உணவினைக் கொடுக்கும்போது தாய் எந்தளவு நிர்க்கதிநிலையடைகிறாள் என்பதை பெண்கள் அறிவார்கள். அத்தியாவசியமான உடை, மருந்துகள், கல்விக்கான புத்தகங்களை வாங்கிக்கொடுக்க முடியாத வேளைகளில் மட்டற்றவகையில் நிர்க்கதியடைகிறாள். நாடு பொருளாதாரரீதியாக வீழ்த்தப்பட்டமையால் பெண்கள் தற்போது பரம ஏழ்மை நிலையை அடைந்துள்ளார்கள். இற்றைவரை ஆட்சியதிகாரத்தை வகித்த அரசாங்கங்களில் இருந்த மக்கள் பிரதிநிதிகள் எமது குரல்களுக்கு செவிசாய்க்கவில்லை: தமது வேலைகளைச் செய்துகொண்டார்கள் மாத்திரமே.
நாட்டில் 52% ஆக அமைகின்ற பெண்களுக்காக அவர்கள் ஒருபோதுமே செயலாற்றவில்லை. எனவே எமக்காக நாங்கள் நிற்கவேண்டிய இடத்திற்கே இன்று நாங்கள் வந்திருக்கிறோம். அதோ அதற்காகத்தான் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்தோம். ஒரு துண்டு கல்லைக்கூட கையில் ஏந்தாமல் நாட்டின் ஒட்டுமொத்த பிரசைகளுக்காக குரலெழுப்பிய பெண்களுக்கு தலைசாய்த்து வணக்கம் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தாக்குதல்களுக்காக பெண் பொலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். பெண்ணின் வயிற்றில் சுமந்து பிறந்த பொலீஸ் உத்தியோகத்தர்கள் தான் இருந்தார்கள். நாங்கள் உணர்கின்ற வேதனைகளை இந்த உத்தியோகத்தர்கள் உணரமாட்டார்களா? ஆட்சியாளர்களின் அவசியப்பாடுகளுக்கு தலைவணங்க பொலீஸார் ஈடுபடுத்தப்பட்டுளார்கள்.
தற்போது இருப்பவர் பதில்கடமையாற்றுகின்ற பொலீஸ் மா அதிபராவார். அந்த பதவியையும் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆட்சியாளர்களின் அவசியப்பாட்டுக்கு அமைவாக பொலீஸாரை நெறிப்படுத்த அவர் தயாராகி வருகிறார். எனினும் நாங்கள் இந்த ரணில் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு ஒரு விடயத்தை உறுதியாக கூறுகிறோம். ” உங்களின் அடக்குமுறை எங்களை பலமடைச்செய்கிறது.” பெண்களை இதைவிட ஊக்கத்துடனும் வலிமையுடனும் முன்நோக்கி வருவார்கள் என்பதை வலியுறுத்துகிறோம். நீர்த்தாரை தாக்குதலுக்கு அஞ்சி புறமுதுகு காட்டி ஓடுபவர்களல்ல பெண்கள். நாங்கள் ஊழலற்ற இயக்கமொன்றின் முன்னோடிகள் என்பதை பெருமிதத்துடன் கூறுகிறோம். பண்புடைய அரசியல் இயக்கமொன்றின் முன்னோடிகளே நாங்கள். சனநாயகரீதியாக பண்பானவர்களாக எதிர்ப்பினை வெளிப்படுத்த நாங்கள் தயார். வன்முறைசார்ந்த தாக்குதல்களுக்கு நாங்கள் சனநாயகரீதியாக மாத்திரமே பதிலளிக்கிறோம். இங்கே முன்வருபவர்கள் சாதகமான எதிர்காலமொன்றின் நல்ல கனவினைக் காண்பவர்களே. சர்வாதிகார வெறியைத் தோற்கடித்திட நாமனைவரும் அணிதிரள்கிறோம் எனும் செய்தியை அரசாங்கத்திற்கு கொடுக்கிறோம்.
“தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்றவகையில் வெகுவிரைவில் இந்த தாக்குதலுக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை தாக்கல் செய்வோம்.”
-சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி-
எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்ற ஒருவர் என்றவகையில் பெற்ற அனுபவத்தை முதன்முதலில் கூறவேண்டும். நாமனைவரும் அமைதியாக ஒன்றுகூடி போராட்டக் கோஷங்களை எழுப்பி மக்களுக்குப் போன்றே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்நாட்டுப் பெண்களின் கவலைக்கிடமான நிலைமை பற்றி கவனத்திற்கு கொண்டுவந்தோம். அமைதிவழி எதிர்ப்பின் முடிவினைக் குறித்து தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சகோதரி ஹரினி, சமன்மலீ சகோதரி மற்றும் சரோஜா போல்ராஜ் சகோதரியை முதன்மையாகக்கொண்ட பெண்கள் உரைநிகழ்த்த தயாராகியதும் நீர்த்தாரை தாக்குதலைத் தொடங்கினார்கள். மிகவும் பிரயத்தனப்பட்டே தாக்குதலின் மத்தியில் உடைகளை பாதுகாத்துக் கொண்டார்கள். பெண்கள் நாட்டின் தலைமுறையினரை முன்னெடுத்துச் செல்பவர்கள். அதைப்போலவே நாட்டின் உற்பத்திச் செயற்பாங்கில் மிகப்பெரிய பங்களிப்பினைச் செய்பவர்கள் பெண்களே. நாமனைவரும் பெண்கள் என்றவகையில் அழுத்தத்திற்கு இலக்காகியவர்கள் என்றவகையிலேயே எதிர்ப்பில் பங்கேற்றோம். குடும்பத்தைப் பராமரித்து பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பவது தாங்கிக்கொள்ளமுடியாத அழுத்தமாக மாறியுள்ளது. பெருந்தோட்டக் கைத்தொழில், ஆடைக் கைத்தொழில் மற்றும் வெளிநாட்டுத் தொழில்களில் பெண்கள் முனைப்பாக பாரிய பங்களிப்பினை நல்கிவருகிறார்கள். பாராளுமன்றத்தில் 5.3% ஆக அமைந்த பெண் பிரதிநிதித்துவத்தினால் இந்நாட்டின் பெண்களின் குரல் அவசியமான அளவில் மேலோங்குவதில்லை. 1948 இன் பின்னர் சமர்ப்பித்துள்ள வரவுசெலவுகளில் மரபார்ந்தவகையிலும் பழங்குடிக்கொள்கை அடிப்படையிலுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்களுக்கு மிகவும் சிறிய பங்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பு நடைபெற்றவேளையில் நாட்டின் உற்பத்திச் செயற்பாங்கினை நலிவடையச் செய்விக்கவோ பொதுமக்களின் போக்குவரத்திற்கு சிறிதளவிலேனும் இடையூறு விளைவிக்கவோ நாங்கள் செயற்படவில்லை. பாராளுமன்ற அலுவல்களுக்கு தடையேற்படுத்தும் எந்தவிதமான எதிர்பார்ப்பும் எங்களுக்கு இருக்கவில்லை. எனினும் பதிற்கடமையாற்றும் பொலீஸ் மா அதிபரின் நடவடிக்கை மிகவும் நித்திக்கத்தக்கது. அனைத்துப் பிரசைகளினதும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் இருந்தாலும் இந்த அரசாங்கம் அதற்கு இடமளிப்பதில்லை. அதனால்த்தான் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அரச கொள்கைகளில் அடிப்படை சித்தாந்தமென்றவகையில் குடும்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் அந்த முக்கியமான அலகினை மறந்து செயலாற்றிய விதம், சிறுவர் மற்றும் பெண்கள் மீது காட்டுகின்ற மனோபாவம் சர்வதேசரீதியாகவும் தெளிவாகியது. இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு மாத்திரம் தேசிய மக்கள் சக்தி நின்றுவிடப்போவதில்லை. தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்றவகையில் வெகுவிரைவில் இந்த தாக்குதலக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை தாக்கல் செய்யும். அதைப்போலவே அரசியலமைப்பு மற்றும் பொலீஸ் கட்டளைச்சட்டம் சம்பந்தமாக அடிப்படை வழிகாட்டலை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுப்போம். சட்டத்தை அமுலாக்குபவர்களுக்கும் அதன் மூலமாக சட்டத்தை விளக்கிக்கூறவும் எதிர்பார்க்கிறோம். நேற்று நடாத்திய குற்றம்சார்ந்த நீர்த்தாரைப் பிரயோகம் மூலமாக இலங்கை இனிமேலும் நீதியை மதிக்கின்ற தேசமல்ல என்பதாகும். இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க தகைமை கொண்டதல்ல. இந்த நாட்டு மக்களின் அரசாங்கமொன்றை நிறுவி பெண்களின் பலத்திற்கு முறையான மதிப்பளித்தலை வழங்க நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
“அரசாங்கத்தில் எல்லையற்ற அழுத்தத்திற்கு எதிராக எதிர்ப்பினைக் காட்டினோம்…”
-சட்டத்தரணி நிமலா சிறிவர்தன-
கழிந்த 2023 ஆம் ஆண்டில் மகளிர், சிறுவர் மற்றும் சமுர்த்தி பிரிவுக்கு 152 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் வருகின்ற 2024 ஆம் ஆண்டுக்காக 75 பில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த எற்பாடு 50% மேலாக வெட்டிவிடப்பட்டுள்ளது. முன்னாள் சனாதிபதிமார்கள் நால்வர் மற்றும் சனாதிபதி பாரியார் ஒருவரைப் பராமரிப்பதற்காக 2023 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டிருந்த 84 மில்லியன் ரூபா அடுத்த ஆண்டுக்காக 110 மில்லியன் ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சனாதிபதிகளுக்கும் தப்பியோடிய சனாதிபதிக்கும் ஒதுக்கப்படுகின்ற நிதி அதிகரிக்கப்படுகின்றவேளையில் இந்நாட்டின் உயிர்நாடியான சிறுவர் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி 50% ஆல் வெட்டப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கல்வி சம்பந்தமாக நிலவுகின்ற அழுத்தம் அதிகமாக பெண்களாலேயே உணரப்படுகின்றது. நிலவிய ஏற்பாடுகளை வெட்டிவிட்டதன் மூலமாக பெண்கள் மீதான அழுத்தம் மேலும் உயர்த்தப்படுகின்றது. இதற்கு எதிராக நிலவுகின்ற அரசாங்கத்தை வலியுறுத்துவதற்கான உரிமை எமக்கு இருக்கின்றது. அரசாங்கம் முன்னெடுத்துவருகின்ற தவறான வெட்டிவிடல்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதையே நாங்கள் மேற்கொண்டோம்.