| TELECHARGER torrent |
Windows 11 Pro + Office 2021 pour VMware
– Les fenêtres
Version 11 Pro (KB5005635) – Canal BÊTA
Architecture : x64
Sortie : 16 septembre 2021
Clavier de langue : en-US
– Mises à jour (19 septembre 2021)
Mise à jour cumulative 2021-08 pour .NET Framework et Windows 11 pour x64 (KB5004342)
2021-02 Aperçu de la mise à jour cumulative pour .NET Framework et Windows 10 Version Next et Windows Server Version Next pour x64 (KB5001030)
Mise à jour des informations de sécurité pour Microsoft Defender Antivirus – KB2267602 (version)
Outil de suppression de logiciels malveillants pour Windows x64 – (KB890830)
Windows est activé, il n’y a pas de mot de passe utilisateur
Il s’agit d’une version complète de Windows 11 qui inclut toutes les fonctionnalités.
– Le bureau
Version : Office 2021 ProPlus VL LTSC
Architecture : x64
Langue : en-US
Applications : Word, Excel, Powerpoint, Publisher, Access, Teams, Outlook, OneNote, OneDrive, Skype Entreprise, Project Pro, Visio Pro
Le bureau est activé
-VMware
Compatibilité : VMware Workstation / Lecteur
Mémoire : 4 Go (allouer plus de mémoire si possible)
Cœurs CPU : 4 (augmentez le nombre de cœurs si possible)
VMware Tools : version installée
Utilisation : extrayez Windows 11 Pro + Office vers votre emplacement
Démarrez VMware Workstation et ouvrez le fichier Windows 11 Pro + Office dans ce dossier
Extrait de : Go
En savoir plus sur la création d’un Insider Preview pour Windows 11
En savoir plus sur Office 2021 LTSC
Windows 11 Pro + Office 2021 pour VMware
Il s’agit d’une version complète de Windows 11 qui inclut toutes les fonctionnalités.
– Les fenêtres
Version 11 Pro
Architecture : amd x64
Sortie : 8 février 2022
Clavier de langue : en-US
Windows est activé et peut être mis à jour sans mot de passe utilisateur
– Le bureau
Version : Office LTSC Professional Plus 2021 Version 2108 (Cliquez pour exécuter)
Architecture : x64
Langue : en-US
Office est activé et peut être mis à jour
– Mises à jour (8 février 2022)
Mise à jour des informations de sécurité pour Microsoft Defender Antivirus – KB2267602 (version)
Mise à jour cumulative 2022-02 pour .NET Framework et Windows 11 pour x64 (KB5009469)
Outil de suppression de logiciels malveillants pour Windows x64 – (KB890830)
Mise à jour cumulative 2021-11 pour Windows 11 pour les systèmes x64 (KB5007215)
– Ajustements
Microsoft OneDrive a été supprimé
.NET Core installé (requis pour Power Toys)
PowerToys installés (démarrage automatique désactivé)
Système : suppression de la sauvegarde Windows WinSxs, du programme d’installation téléchargé par Windows, du cache de base du programme d’installation Windows
Registre : entrées obsolètes nettoyées .Net framework /
-VMware
Compatibilité : VMware Workstation / Lecteur
Mémoire : 4 Go (allouer plus de mémoire si possible)
Cœurs CPU : 4 (augmentez le nombre de cœurs si possible)
VMware Tools : version installée
Utilisation : décompressez Windows 11 Pro avec Office à votre emplacement
Démarrez VMware Workstation et ouvrez Windows 11 Pro avec le fichier Office dans ce dossier
Extrait de : Go
En savoir plus sur la version Windows 11
En savoir plus sur Office 2021 LTSC
c445d
| TELECHARGER torrent |
Windows 11 Pro + Office 2021 pour VMware
– Les fenêtres
Version 11 Pro (KB5005635) – Canal BÊTA
Architecture : x64
Sortie : 16 septembre 2021
Clavier de langue : en-US
– Mises à jour (19 septembre 2021)
Mise à jour cumulative 2021-08 pour .NET Framework et Windows 11 pour x64 (KB5004342)
2021-02 Aperçu de la mise à jour cumulative pour .NET Framework et Windows 10 Version Next et Windows Server Version Next pour x64 (KB5001030)
Mise à jour des informations de sécurité pour Microsoft Defender Antivirus – KB2267602 (version)
Outil de suppression de logiciels malveillants pour Windows x64 – (KB890830)
Windows est activé, il n’y a pas de mot de passe utilisateur
Il s’agit d’une version complète de Windows 11 qui inclut toutes les fonctionnalités.
– Le bureau
Version : Office 2021 ProPlus VL LTSC
Architecture : x64
Langue : en-US
Applications : Word, Excel, Powerpoint, Publisher, Access, Teams, Outlook, OneNote, OneDrive, Skype Entreprise, Project Pro, Visio Pro
Le bureau est activé
-VMware
Compatibilité : VMware Workstation / Lecteur
Mémoire : 4 Go (allouer plus de mémoire si possible)
Cœurs CPU : 4 (augmentez le nombre de cœurs si possible)
VMware Tools : version installée
Utilisation : extrayez Windows 11 Pro + Office vers votre emplacement
Démarrez VMware Workstation et ouvrez le fichier Windows 11 Pro + Office dans ce dossier
Extrait de : Go
En savoir plus sur la création d’un Insider Preview pour Windows 11
En savoir plus sur Office 2021 LTSC
Windows 11 Pro + Office 2021 pour VMware
Il s’agit d’une version complète de Windows 11 qui inclut toutes les fonctionnalités.
– Les fenêtres
Version 11 Pro
Architecture : amd x64
Sortie : 8 février 2022
Clavier de langue : en-US
Windows est activé et peut être mis à jour sans mot de passe utilisateur
– Le bureau
Version : Office LTSC Professional Plus 2021 Version 2108 (Cliquez pour exécuter)
Architecture : x64
Langue : en-US
Office est activé et peut être mis à jour
– Mises à jour (8 février 2022)
Mise à jour des informations de sécurité pour Microsoft Defender Antivirus – KB2267602 (version)
Mise à jour cumulative 2022-02 pour .NET Framework et Windows 11 pour x64 (KB5009469)
Outil de suppression de logiciels malveillants pour Windows x64 – (KB890830)
Mise à jour cumulative 2021-11 pour Windows 11 pour les systèmes x64 (KB5007215)
– Ajustements
Microsoft OneDrive a été supprimé
.NET Core installé (requis pour Power Toys)
PowerToys installés (démarrage automatique désactivé)
Système : suppression de la sauvegarde Windows WinSxs, du programme d’installation téléchargé par Windows, du cache de base du programme d’installation Windows
Registre : entrées obsolètes nettoyées .Net framework /
-VMware
Compatibilité : VMware Workstation / Lecteur
Mémoire : 4 Go (allouer plus de mémoire si possible)
Cœurs CPU : 4 (augmentez le nombre de cœurs si possible)
VMware Tools : version installée
Utilisation : décompressez Windows 11 Pro avec Office à votre emplacement
Démarrez VMware Workstation et ouvrez Windows 11 Pro avec le fichier Office dans ce dossier
Extrait de : Go
En savoir plus sur la version Windows 11
En savoir plus sur Office 2021 LTSC
மக்கள் போராட்டம் இன்னமும் ஓயவில்லை என்றும் மக்களுடைய கோரிக்கைகள் அவ்வாறே உள்ளன என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் கொத்மலை தேர்தல் தொகுதியின் மக்கள் சந்திப்பு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கொள்ளையர்கள், பொருளாதாரத்தை நாசமாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் ,கொள்ளையடிக்கப்பட்ட வளங்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என மக்கள் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றனர். இதையும் பஸில் உள்ளிட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, ஹிட்லர் […]
மக்கள் போராட்டம் இன்னமும் ஓயவில்லை என்றும் மக்களுடைய கோரிக்கைகள் அவ்வாறே உள்ளன என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் கொத்மலை தேர்தல் தொகுதியின் மக்கள் சந்திப்பு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொள்ளையர்கள், பொருளாதாரத்தை நாசமாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் ,கொள்ளையடிக்கப்பட்ட வளங்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என மக்கள் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றனர். இதையும் பஸில் உள்ளிட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஹிட்லர் பற்றி கதைப்பதற்கு முன்னர் ´காற்சட்டை´யை எப்படி சரியாக அணிவது என்பதை ரணில் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த பர்னாந்து எமது நாட்டை ஆள்பவர்களும் வரவு செலவினைத் தயாரிப்பவர்களும் மிகவும் ஊழில்நிறைந்த குழுவினரே என்பதை நீங்கள் ஏற்கெனவே அறிவீர்கள். ஊழல் கும்பலொன்றினால் தயாரிக்கப்படுகின்ற வரவுசெலவொன்றின் தொழில்நுட்ப விடயங்கள் வரவுசெலவுக்கு எவ்வாறு பயனுறுதிமிக்கதாக அமையுமென்பது பற்றி ஆராய்வது அவ்வளவுக்கு வெற்றிகரமானதாக அமையமாட்டாது. ஏனெனில் அவர்கள் இந்த வரவுசெலவினைத் தயாரிப்பது ஊழல்மிக்க முறைமையைப் பேணிவருவதற்காகவேயன்றி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காகவல்ல. எனினும் ஊழலற்ற உண்மையான தேவை நிலவுகின்ற குழுவினர் […]
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த பர்னாந்து
எமது நாட்டை ஆள்பவர்களும் வரவு செலவினைத் தயாரிப்பவர்களும் மிகவும் ஊழில்நிறைந்த குழுவினரே என்பதை நீங்கள் ஏற்கெனவே அறிவீர்கள். ஊழல் கும்பலொன்றினால் தயாரிக்கப்படுகின்ற வரவுசெலவொன்றின் தொழில்நுட்ப விடயங்கள் வரவுசெலவுக்கு எவ்வாறு பயனுறுதிமிக்கதாக அமையுமென்பது பற்றி ஆராய்வது அவ்வளவுக்கு வெற்றிகரமானதாக அமையமாட்டாது. ஏனெனில் அவர்கள் இந்த வரவுசெலவினைத் தயாரிப்பது ஊழல்மிக்க முறைமையைப் பேணிவருவதற்காகவேயன்றி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காகவல்ல. எனினும் ஊழலற்ற உண்மையான தேவை நிலவுகின்ற குழுவினர் தயாரிக்கின்ற வரவுசெலவு என நாங்கள் நினைப்போம். அதிலும் ஒருசில குறைபாடுகள் நிலவக்கூடும். எனினும் அத்தகைய வரவுசெலவினைப் பற்றி ஆராய்வதும் முக்கியமானதாக அமையும். அதனையும் நாங்கள் அறிந்திருக்க வேண்டும்.
இந்த வரவுசெலவு எவருக்காக? இரண்டு கோடி மக்களுக்கான இந்த வரவுசெலவினை தயாரிப்பவர்கள் மிகவும் சிறிய குழுவினரே. அதனால் நலன்களுக்கிடையிலான முரண்பாடு தோன்றுகின்றது. ஊழல்மிக்க குழுவினர் அந்த தீர்மானங்களை எடுக்கும்போது இந்த நலன்கள் பற்றிய பிரச்சினை பல மடங்காகும். அதனால் இந்த வரவுசெலவினை எடுத்துக்கொண்டால் வெறுமனே மக்களுக்காகவன்றி அரசாங்கப் பலத்தை தக்கவைத்துக் கொள்கின்ற நோக்கத்திற்காக மாத்திரமே தயாரிக்கப்பட்ட வரவுசெலவாகும். அது நன்றாகத் தெளிவாகின்றது. ஏனெனில் இந்த வரவுசெலவு முன்மொழிவுகள் ஐஎம்எப் முன்மொழிவுளின்படியே தயாரிக்கப்பட்டுள்ளன. 2025 ஆம் அண்டளவில் அரசாங்கம் வரவுசெலவு மீதி 2.3 நேர்க்கணியம் எனக் காட்டவேண்டும். முதனிலை மீதியை 5.4 எதிர்க்கணிய மீதியிலிருந்து 2.3 நேர்க்கணிய மீதி வரை எடுத்துச் செல்வது இலகுவான கருமமல்ல. வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். வட்டி தவிர்ந்த ஏனைய செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அதைப்போலவே மொத்த தேசிய உற்பத்தியும் இதில் தாக்கமேற்படுத்துகின்றது. அதனால் இந்த புள்ளிவிபரங்களில் இருக்கின்ற விடயங்கள் யதார்த்தமானவையாக அமையப்போவதில்லை. பொருளாதாரம் வரவர சுருங்குகின்றது.
ஒட்டுமொத்த வரவுசெலவுப் பற்றாக்குறை 2400 பில்லியன் கணக்கில் அமைகின்றது. தற்போதைய நிலைமையின்படி வெளிநாட்டுப் பிரிவில் இருந்து கடன்பெறுவது சிரமமானதாகும். ஆனால் கடன் எடுப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அவ்விதமாக எடுக்கின்ற கடன்பற்றியும் எந்தவிதமான தெளிவும் கிடையாது. எனினும் உள்நாட்டுக்கடன் பெறுவதற்கான தூண்டுதல் அதிகமானதாகும். அவ்வாறு இடம்பெற்றால் வட்டிவீதம் மிகவும் உயர்வடையும். அதன் மூலமாக பொதுமக்களுக்கு உணர நேரிடுகின்ற சுமை பற்றி அவர்கள் பேசுவதில்லை.
பெற்ற கடனை மீளச்செலுத்துவதற்காக கடன்பெறவேண்டிய நிலையேற்படுகின்றது. அதற்கிணங்க 5 ரில்லியன் ரூபாவுக்கு கிட்டிய கடன்பெற எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்மூலமாக தொடர்ந்தும் கடன்பொறிக்குள் சிக்குவதே இடம்பெறும். எனவே வரியை அதிகரிக்கவேண்டியது கட்டாயமானதாகும். மற்றைய விடயம்தான் நீண்டகாலத் திட்டங்கள் இல்லாத அரசாங்கம் குறுங்காலரீதியாக செய்கின்ற ஒரேவிடயம் கடன்பெறுவதாகும். அதனால்த்தான் இலாபமீட்டுகின்ற அரச நிறுவனங்களைக்கூட விற்கப் போகிறார்கள். விற்றுப்பெறுகின்ற பணத்தைக்கொண்டு அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாகக்கூறி பொருளாதாரத்தை விருத்திசெய்வதாகவும் கூறுவதில்லை. செய்யப்போவதோ வெளிநாட்டு ஒதுக்கங்களை அதிகரிப்பதையாகும். அது ஐஎம்எப் நிபந்தனையாகும்.
வரவுசெலவில் ஓர் அடிப்படை இல்லாவிட்டாலும் பல அழகான கூற்றுகள் இருக்கின்றன. ஒவ்வோராண்டிலும் ஏற்றுமதி வருமானத்தை 03 பில்லியன் டொலர்களால் விருத்தி செய்யப் போகிறார்களாம். ஆனால் எவ்வாறு செய்வது எனக் கூறவில்லை. இந்த எணிக்கையை 4 பில்லியன் டொலர்கள் எனவும் கூறியிருக்கலாம். 05 எனவும் கூறியிருக்கலாம். எனவே புத்திசாதுரியமான குழுக்கள் இவற்றைக் கேள்விக்குட்படுத்த வேண்டும். இலங்கையில் நிதிசார் அறிவு மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே நிலவுகின்றது. அது அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் இந்த மக்களை தவறாக வழிநடாத்துகின்ற முன்மொழிவுகள் முன்வைக்கப்படுகின்றன. மற்றுமொரு முன்மொழிவாக அமைவது எதிர்வரும் 10 வருடங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஆண்டுக்கு 03 பில்லியன் வீதம் அதிகரிக்கப் போகிறார்களாம். அவ்வாறு நோக்கினால் 10 வருடங்களுக்கு 30 பில்லியனாக அமையும். ஆனால் பழைய புள்ளிவிபரங்களைப் பார்த்தால் 40 வருடங்களுக்கான வெளிநாட்டு முதலீடுகள் 13 பில்லியன் டொலர்களாகும். எனவே எவ்வளவு திரிபுபடுத்தப்பட்ட புள்ளிவிபரங்களே இருக்கின்றதென்பது தெளிவாகின்றது. ஆனால் இவற்றைக் கூறி ஐஎம்எப் ஐ ஏமாற்ற முடியாது. அதனால் மக்களை ஏமாற்றுகின்ற வேலைகள் ஒருபுறம் இருக்கின்றன. ஐஎம்எப் இற்கு தேவையான புள்ளிவிபரங்கள் தனிவேறாக இருக்கின்றன. ஆனால் ஐஎம்எப் 2.9 பில்லியன் டொலர்களை வழங்கினாலும் இந்தப் பிரச்சினையை மீட்டெடுக்க முடியாதென்பதை நன்றாக ஞாபகத்திற் கொள்ளவும்.
அதன் பின்னர் சுற்றாடல் நேயமுள்ள பொருளாதாரமொன்றை அமைப்பதாகக் கூறுகிறார்கள். அது நல்லதல்லவா. டிஜிட்டல் பொருளாதாரம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் 2019 அரசாங்கம் இதைவிட டிஜிட்டல் பொருளாதாரம் பற்றிப்பேசியது. ஆனால் அவை உப்புச்சப்பற்ற கதைகள் மாத்திரமே. மேலும் 2025 அளவில் பொருளாதார வளர்ச்சி வேகத்தை 7 இற்கு 8 இற்கு கொண்டுவருவதாக கூறுகிறார்கள். இருக்கின்ற நிலைமையின்படி அதனை எவ்வாறு சாதிப்பது. இவை வெற்றுப் பேச்சுகள் மாத்திரமே. இந்த நிலைமையில் இதற்கு துதி பாடுபவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு செய்கின்ற புத்திஜீவிகள் குழுவொன்றும் இருக்கின்றது. ஒருசிலர் அறிந்தே செய்கிறார்கள். மேலும் சிலர் அறியாமலேயே செய்கிறார்கள். அதனால் மக்களை வதைக்கின்ற ஊழல் பேர்வழிகள் கும்பல் தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள செய்கின்ற முயற்சிக்கு உதவிபுரிய வேண்டாமென்று நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அதனால்த்தான் இந்த அரசாங்கம் மக்களுக்காகவன்றி மிகவும் ஊழில்நிறைந்த பேர்வழிகளைக் கொண்ட கும்பலுக்காகவே என நாங்கள் கூறுகிறோம். அதனால் நாங்கள் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை என்றவகையில் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட முன்வந்தோம். முழுநாடுமே சத்திரசிகிச்சைக் கூடத்தைப் போன்றது எனக்கூறி இந்த நோயாளியை மீட்டெடுக்கப் போவதாகவே இவர்கள் எமக்கு காட்டுகிறார்கள். ஆனால் இங்கே இருக்கின்ற திருட்டு மருத்துவர் கும்பல் மக்களின் கைகால்களை கழற்றுகின்ற சித்திரவதைக் கூடமே என நாங்கள் கூறுகிறோம். நோயாளி தப்பப்போவதில்லை. நோயாளி மடியப் போகிறான். அதிலிருந்து காப்பாற்றுவதற்காக நாங்கள் இடையீடு செய்கிறோம்.
இது நோயாளி இறந்தாலும் வயிறு சுத்தமான வரவுசெலவு…..தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார பேரவை உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி எமது தலைப்பு வரிச்சுமை விண்ணை நோக்கி வரவுசெலவு எவருக்காக? என இருந்தாலும் வரவுசெலவு விண்ணை நோக்கி வரிச்சுமை எவர் மீது? எனக் கூறினாலும் வித்தியாசமில்லை என்றே நான் நினைக்கிறேன். இது பெருநிலத்தின் வரவுசெலவுத் திட்டமன்று. ஆனால் மண்ணில் கால்பதித்துள்ள மக்கள்மீது ஏற்றப்பட்ட வரிச்சுமையாகும். ரனிலின் கதை முழுமையாக வானத்திலேயே இருக்கின்றது. மண்ணில் நிலவுகின்ற யதார்த்தத்தை பிரச்சினையை உரசிக்கூட பார்க்காத […]
இது நோயாளி இறந்தாலும் வயிறு சுத்தமான வரவுசெலவு…..
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார பேரவை உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி
எமது தலைப்பு வரிச்சுமை விண்ணை நோக்கி வரவுசெலவு எவருக்காக? என இருந்தாலும் வரவுசெலவு விண்ணை நோக்கி வரிச்சுமை எவர் மீது? எனக் கூறினாலும் வித்தியாசமில்லை என்றே நான் நினைக்கிறேன். இது பெருநிலத்தின் வரவுசெலவுத் திட்டமன்று. ஆனால் மண்ணில் கால்பதித்துள்ள மக்கள்மீது ஏற்றப்பட்ட வரிச்சுமையாகும். ரனிலின் கதை முழுமையாக வானத்திலேயே இருக்கின்றது. மண்ணில் நிலவுகின்ற யதார்த்தத்தை பிரச்சினையை உரசிக்கூட பார்க்காத ஒரு வரவுசெலவே இது. 74 வருடகால சாபக்கேட்டினை குற்றஒப்புதலாக்கிய வரவுசெலவுதான் 77 வது வரவுசெலவு. இதில் ஒருவிதமான விதியின் விளையாட்டு நிலவுகின்றது. ஏனெனில் 74 வருடகால சாபக்கேட்டுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களில் ஒருவரான ரனில் விக்கிரமசிங்கவினாலேயே இந்த வரவு செலவு சமர்பிக்கப்பட்டமை ஒருவகையில் விதியின் விளையாட்டாகும். ரனில் வரவுசெலவு உரையில் முதற்பக்கத்தில் கூறுகிறார் 75 வருடங்கள் கழிகின்ற எமது நாடு அடைந்துள்ள நிலைமை பற்றி எம்மால் திருப்தியடைய முடியுமா? நாங்கள் எங்கே தவறிழைத்தோம்? இதனைக் கூறுகின்றவர் யார்? முதலாவது இளைஞர் அலுவல்கள் அமைச்சர், இளம் அமைச்சர், கைத்தொழில் அமைச்சர், ஆறு தடவைகள் பிரதம அமைச்சர், தற்போது புண்ணியத்திற்காக கிடைத்த சனாதிபதி பதவி வகிப்பவர். ரனில் மக்களிடம் கேட்கிறார் என்ன நேர்ந்ததென. ரனில் வாழ்நாளில் மிகவும் அதிகமாக பாராளுமன்றத்திலேயே உணவு உட்கொண்டிருப்பார். பொதுப்பணத்திலேயே வாழ்ந்திருப்பார். இந்த அளவுக்கு பாராளுமன்றத்தில் இருந்தார். இந்தப் பாராளுமன்றத்தின் பெரும்பாலானவர்கள் அத்தகையவர்களே. எவருக்கு தவறு ஏற்பட்டதென்று அவர்கள் எங்களிடம் கேட்கிறார்கள்.
அதன் பின்னர் மக்கள் விரும்புகின்ற தீர்மானங்களையன்றி சரியான தீர்மானங்களையே எடுக்கவேண்டுமெனக் கூறுகிறார். யார் வேண்டாமென்று கூறினார்கள். மக்கள் விரும்புகின்ற தீர்மானங்களன்றி சரியான தீர்மானத்தை எடுக்குமாறு கூறிய ரனில் அல்லவா பிறேஸ்லற் கொடுக்க அழைத்தவர். பிரதமர் என்றவகையில் வொக்ஸ்வெகன் தொழிற்சாலையொன்றைக் கொண்டு வருவதாகக்கூறி தெங்கு மரங்களை வெட்டிச்சாய்த்தார். வொக்ஸ்வெகனும் கிடையாது: தெங்கு மரமும் கிடையாது. குடையின் நிழலில் செல்பவர்களுக்கு வாகனம் தருவதாகக் கூறினார். அவ்வாறு செய்தவர்கள் சரியான தீர்மானங்களை எடுக்குமாறு இன்று கூறுகிறார்கள். பிறரிடம் கடன் வாங்கிச் செல்வதில் பயனில்லை என்று, அவ்வாறு கூறுபவர் நாட்டை படுகுழிக்குள் வீழ்த்தி பளிங்குமெணிக்கே சூரசேன கொண்டுவந்த அரசாங்கமே தற்போது இருக்கின்றது. அரசாங்கத்திற்கு அரசாங்கம் தமக்கு ஏனையவரைவிட அதிகமாக கடன் கிடைப்பதாக தம்பட்டம் அடிக்கவிலலையா? கடன்பெறுவதை பெருமையாகக் கருதியவர்கள் தான் இன்று இந்த கதையைக் கூறுகிறார்கள். ரனில் இவற்றைக் கூறுவதில் பயனில்லை. ஏனென்றால் ரனிலையும் ரனிலின் கொள்கையையும் விரட்டியடிக்க மக்கள் தீர்மானித்து விட்டார்கள். ரனில் தலைகீழாக நின்றுகொண்டு கூறினாலும் பிரயோசனமில்லை. மக்கள் முடிவுகட்டிவிட்டார்கள் தருணம் வரும்வரை காத்திருக்கிறார்கள்.
வரவுசெலவு உரையை தொடக்கத்தில் இருந்து முடிவுவரை வாசித்துப் பாருங்கள். மக்களுக்கு விருப்பமான தீர்மானங்களின்றி எத்தகைய சரியான தீர்மானங்கள் இருக்கின்றதென. இந்த வரவுசெலவில் இந்த நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கான சரியான தீர்வுகள் உள்ளனவா? பழைய பட்டோலைதான் இதில் இருக்கின்றது. இந்த வரவுசெலவில் கூறுவதற்கு ஏதாவது இருக்கின்றதா? எதிர்வரும் 04 மாதங்களுக்குள் தேர்தலொன்று வருமென்று. ஏன் சமுர்த்தி கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு என்பவற்றுக்காக 20 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றை மீண்டும் மக்களிடமிருந்தே அறவிடுவார்கள். அண்மையில் மீண்டும் 130 பில்லியன் ரூபா பணம் அச்சடிக்கப்பட்டுள்ளது. வரி விதித்தார்கள். ஏதாவது சம்பளம் பெறுகின்ற அனைவராலும் இந்த வரிச்சுமையைத் தாங்கிக்கொள்ள முடியாது. தற்போது ஏதேனும் உயர் தொழில் புரிந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கிவிட்டார்கள். நாட்டில் இருக்கின்ற கல்விமான்களை விரட்டியடிக்கின்ற பொருளாதாரமே இது.
இந்த வரவுசெலவுதான் இவ்வளவுக்கு வருமானம் செலவுகளை விரிவாக்கிய வரவுசெலவாக அமைந்துள்ளது. 7.5 ரில்லியன் வரை செலவுகள் விரிவாக்கப்பட்டுள்ளன. அது கடன்வாங்கவேண்டிய தேவை காரணமாகவே. கடன் எல்லையை அதிகரிப்பதற்காக புரிந்த வேலையாகும். ஆனால் வரவுசெலவுப் பற்றாக்குறையை நிவர்த்திசெய்வதற்காக அரசாங்கம் எவ்வாறு கடன்பெறுவது, ஏனெனில் தற்போது கடன் செலுத்துவதில்லை. எனினும் 2.3 பில்லியன் டொலரைக் வெளிநாட்டுக் கடனாகப்பெற எதிர்பார்க்கப்படுகின்றது. ரனில் வரவுசெலவு முடிவடைவதைற்கு முன்னர் எந்தெந்த நாடுகளிடமிருந்து கடன்பெறுவது என்பதைக் கூறவேண்டும். வரவு செலவு என்பது ஓர் ஊகமாகும். அது யாதார்த்த பூர்வமானதாக அமையவேண்டும். மக்களால் தாங்கக்கூடியதாக அமைதல் வேண்டும். இப்போது இந்த வரவுசெலவு பற்றாக்குறையை தீர்த்துக்கொள்ள முடியாமல் போனால் என்ன நேரிடும்? கடன்பெற முடியாவிட்டால் மக்களிடமிருந்து அறவிட்டுக்கொள்ள வேண்டும். அதாவது அரச வங்கி முறைமையிடமிருந்து. இதற்கு முன்னரும் அரசியல் தீர்மானங்களுக்காக உள்நாட்டு வங்கி முறைமையிடமிருந்து கடன்பெற்று வங்கி முறைமையை நாசமாக்கினார்கள். இப்போதும் அதைத்தான் செய்யப்போகிறார்கள். இவ்வாறு நடந்துகொண்டால் 2008 இல் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட கதியும் கிரேக்கத்திற்கு ஏற்பட்ட கதியும் இலங்கைக்கு ஏற்படுவதை தடுக்க இயலாதென தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை என்றவகையில் நாங்கள் கூறிவைக்க வேண்டும். ஏனெனில் பொருளாதாரத்தின் முதுகெழும்பு எனப்படுவது வங்கி முறைமையாகும். அதனால் எமது பேராசிரியர் கூறினார் வரவுசெலவில் மெச் அடிக்கக்கூடியவகையில் மைதானத்தை அமைத்துக்கொள்ள வேண்டுமென்று. ஆனால் மைதானத்தை அமைத்துக்கொண்டாலும் மெச் அடிக்க ஆட்கள் இருக்கிறார்களா? ரனிலுடன் மகிந்தவுடன் சஜித்துடன் இந்த மெச் அடிக்க முடியாது. அதனால் மெச் அடிக்க மிகவும் பொருத்தமான அணியினைத் தெரிவுசெய்துகொள்ளுமாறு எமது நாட்டு மக்களுக்கு கூறுகிறோம்.
நாங்கள் வந்ததும் எம்மால் செய்யக்கூடியவற்றை 06 மாதங்களில் சாதித்துக் காட்டுவோம். ஆனால் 74 வருடங்களான தின்று நாசமாக்கிய நாட்டை 06 மாதங்களில் உருப்படியாக்க முடியுமா என்று எங்களிடம் கேட்கவேண்டாம். ஆனால் 06 மாதங்களுக்குள் ஊழல், மோசடி, விரயத்தை நிறுத்திக் காட்டுவோம். சரியான தீர்மானத்தை எடுக்குமாறு கூறிய ரனில் சனாதிபதி செலவுத் தலைப்பினைக் குறைத்தாரா? அவ்வாறு செய்யவில்லை. சனாதிபதி செலவுத் தலைப்பினை 50% ஆல் குறைத்துக் காட்டியிருந்தால் அது ஒரு சரியான தீர்மானமாகும். அமைச்சரவையின் செலவுகளைக் குறைத்துக் காட்டுவோம். உத்தியோகபூர்வ இல்லங்களின் செலவுகளைக் குறைத்துக் காட்டுவோம். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழித்துக் காட்டுவோம். அவ்வாறு கூறியிருந்தால் விண்ணுக்கு உயர்ந்த வரவுசெலவினை சற்று மண்ணுக்கு தாழ்த்தி இருக்கலாம். பாதுகாப்புச் செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் செலவழிக்க பணம் இருக்கிறதா என்று தெரியவில்லை.
அதன் பின்னர் ரனில் கூறுகிறார் ஊழல் பேர்வழிகளை சிறையில் போடுவதென்பது பேச்சு வழக்கு மாத்திரமே என்றாகும். ரனில் அவ்வாறு கூறாமல் அதனை யாதார்த்தமெனக் கூறுவதா? மத்திய வங்கியை உடைத்து நாசமாக்கியவர் வேறு என்ன கூறுவது? ஓர் ஊழில்பேர்வழி மற்றுமோர் ஊழல்பேர்வழிக்கு தண்டனை வழங்கமாட்டாரென தோழர் அநுர அடிக்கடி கூறுவார். அதனைத் தற்போது ரனில் கூறுகிறார் ஊழல்பேர்வழிகளைப் பற்றி என்னோடு பேசவேண்டாமென. நாங்கள் திருடர்கள் தண்டிக்கப்படுவதை ரனிலிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை. அதன் பின்னர் கூறகிறார் இந்த பொருளாதார முறைமையின் மாற்றமொன்றைப் பற்றி. சமூக சந்தைப் பொருளாதாரம் அல்லது சமூகப் பாதுகாப்பு திறந்த பொருளாதார முறைமையொன்றை அமைப்பாராம். அவர் என்ன கூறுகிறார்? திக்குமுக்காடிப் போயிருக்கிறார். தவறிவிட்டோம் என்பது விளங்குகின்றது. அதனை ஏற்றுக்கொள்ளாமல் பயிலா பாடுகிறார். இந்த நாட்டு மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது. தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள். இந்த பொருளாதாரத்தின்கீழ் எவருக்கு பாதுகாப்பு கிடைத்தது. தமது பிள்ளைகளைப் பாதுகாத்துத் தருமாறு தாய்தந்தையர் பாடசாலைக்கு அருகில். போதைத்தூள், ஐஸ் முதலியவற்றிலிருந்து தமது பிள்ளைகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை. தற்போது “த்ரைலோக்க விஜய பத்ரய” மூவுலகையும் வென்றெத்த இலை (கஞ்சா) பற்றிப் பேசுகிறார்கள். அது வந்தால் அரசியல்வாதிகள் பிஸ்னஸ் தொடங்குவார்கள். மிகச்சிறந்த உதாரணம் இந்த நாட்டில் மிக அதிகமான பார் பேர்மிற் அரசியல்வாதிகளுக்கே இருக்கின்றன.
மற்றுமொரு பக்கத்தில் விற்பது பற்றிப் பேசுகிறார்கள். ஒர கட்டத்தில் நட்டமடைகின்ற நிறுவனங்களை விற்று இலாபமீட்ட முடியுமெனக் கூறினார்கள். தற்போது வெளிநாட்டு ஒதுக்கத்தை அதிகரிக்க இலாபமீட்டுகின்ற நிறுவனங்களை விற்பனை செய்யவேண்டுமென்று கூறுகிறார்கள். மனச்சாட்சியுடன் இணங்காவிட்டாலும் வரவுசெலவுக்கு வாக்களிக்க நேரிடுமென ஆளுங்கட்சி உறுப்பினரொருவர் கூறுகிறார். அவர்களின் வரவுசெலவு குறுக்காகவே வேலை செய்யும் போல். இப்படிப்பட்டவர்கள்தான் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். ரனில் அடுத்த வருடத்திற்காக சமர்ப்பிக்கின்ற வரவுசெலவில் கூறுவது 2048 இல் கூறுகின்றவையாகும். அடுத்த ஆண்டில் செய்கின்றவை பற்றி எந்தவிதமான கதையும் கிடையாது. செய்யவேண்டியது ஒன்றில் கடன்பெறுவது இல்லாவிட்டால் பணம் அச்சடிப்பது. அப்படியும் இல்லாவிட்டால் உள்நாட்டு வங்கிகளிடமிருக்கின்ற பணத்தை எடுப்பது. நோயாளி இறந்தாலும் வயிறு சுத்தமானது என இருக்கிறார்கள்.
அதனால் இதனை மாற்றிமைக்க வேண்டும். இந்த ஊழில்மிக்க அரசியல் முறையை மாற்றியமைக்கவேண்டும். தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை என்ற வகையில் நாங்கள் பேசுவது இந்த வரவுசெலவினைப் பற்றி மாத்திரமல்ல. மக்களுடன் இந்த பொருளாதார உரையாடலை நாங்கள் ஆரம்பிப்போம். மக்களுடன் இந்த பயணத்தை மாற்றியமைக்கின்ற வலிமையுடன் நாங்கள் ஒருங்கிணைவோம்.
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் ஜனக் குமாரசிங்க பொதுவாக இத்தகைய மேடைகளில் ஏறும்போது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியும் வலிமையும் ஏற்படுகின்றது. ஆனால் தற்போது அவ்வாறான மகிழ்ச்சி வலிமை ஏற்படுவதில்லை என்பதைக் கவலையுடன் கூறவேண்டி உள்ளது. இன்று பிறந்த மண்ணில் அநாதையாக விடப்பட்ட ஒருவனாகவே நான் என்னை உணர்கிறேன். நான் இந்த மேடைக்கு ஏறுவதற்கான காரணமும் அதுவே. 1948 இல் ஆசியாவில் மிகவும் பலம்பொருந்திய பொருளாதாரத்திற்கு உரிமை பாராட்டிய நாங்கள் , தலாவருமானத்தில் ஜப்பானைவிட […]
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் ஜனக் குமாரசிங்க
பொதுவாக இத்தகைய மேடைகளில் ஏறும்போது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியும் வலிமையும் ஏற்படுகின்றது. ஆனால் தற்போது அவ்வாறான மகிழ்ச்சி வலிமை ஏற்படுவதில்லை என்பதைக் கவலையுடன் கூறவேண்டி உள்ளது. இன்று பிறந்த மண்ணில் அநாதையாக விடப்பட்ட ஒருவனாகவே நான் என்னை உணர்கிறேன். நான் இந்த மேடைக்கு ஏறுவதற்கான காரணமும் அதுவே.
1948 இல் ஆசியாவில் மிகவும் பலம்பொருந்திய பொருளாதாரத்திற்கு உரிமை பாராட்டிய நாங்கள் , தலாவருமானத்தில் ஜப்பானைவிட ஒரு டொலர் மாத்திரம் பின்னால் இருந்த நாங்கள் இன்று ஆசியாவில் மாத்திமல்ல முழு உலகிற்குமே சிக்கலாக அமைந்த பொருளாதாரமாக மாறியிருக்கிறோம். 1948 இல் இருந்து இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுகளை நீங்கள் வாசித்துப் பார்த்தால், நீங்கள் இலங்கையைப் பற்றி சரியான விளக்கமற்ற ஒருவராக இருப்பின் நீங்கள் இதனை ஒரு கேதுமதீ இராச்சியம் (செல்வச் செழிப்புமிக்க தேசம்) என நினைப்பீர்கள். அத்தனை அழகான முன்மொழிவுகள் வரவுசெலவு அறிக்கையில் அடங்கி இருந்தன. அதனால் எமக்கு இப்போது தேவை அழகான கருத்துக்கள் நிறைந்த சிறிய புத்தகமல்ல. இது மிகவும் தீர்வுக்கட்டமான தருணமாகும். எதிர்காலத்தில் பிறக்கின்ற பிள்ளைகளுக்கும் தீர்வுக்கட்டமானது. எங்கள் தகப்பன்மார்கள் சிறுபராயத்தில் கூறிய இந்த நாடு அபிவிருத்தி அடைந்து வருகின்ற ஒரு நாடு எனும் விடயத்தை நாங்கள் இன்று எமத பிள்ளைகளுக்கும் கூறிக்கொண்டு இருக்கிறோம்.
இந்த வரவுசெலவு சமர்ப்பிக்கப்படுகின்ற சுற்றுச்சூழலைப் பார்த்தால் நீண்ட இறந்தகாலத்திற்குச் செல்லாமல் 2019 இல் வளர்ச்சி வேகம் 2.3 ஆகும். 2021 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் 3.7 கேம். 2022 இல் 7.8 எதிர்க்கணியமாகும். ஆனால் அழகான விடயம் வரவுசெலவு அறிக்கையில் எதிர்வரும் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வேகத்தை நூற்றுக்கு 03, 04 வரை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் உலக வங்கி, ஐ.எம்.எப். போன்ற அமைப்புகள் கொண்டுள்ள அபிப்பிராயம் போய்க்கொண்டிருக்கின்ற இந்த பயணத்தின்படி அடுத்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் 3.7 எதிர்க்கணியமாக அமையுமென்பதாகும்.
அடுத்த வருடத்தில் அபிவிருத்தி நோக்கங்கள் மற்றும் வறுமையை ஒழிப்பதற்காக எம்மைப் போன்ற நாடுகளில் பொதுப்பணத்தை எவ்வாறு சேகரிப்பது மற்றும் உற்பத்திக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், சேவைகளுக்காக பணத்தை ஒதுக்குதல் பற்றிய ஏதேனும் மதிப்பீட்டினை சமர்ப்பித்தலே வரவுசெலவின் பிரதான நோக்கமாகும். ஆனால் இன்று எமது நாட்டின் நிலைமைக்கிணங்க வரவுசெலவில் அதற்கு அப்பால்சென்ற குறிக்கோளை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. இன்று எமது நாட்டில் இரண்டு பிரதான பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்றுதான் உற்பத்தி சீரழிகின்றமை. மற்றையது டொலர் தட்டுப்பாடு. அதனூடாக பணவீக்கம் அதிகரிக்கின்றது. மேலும் பல விடயங்கள் இடம்பெற்று வருகின்றன. எமது வெளிநாட்டு ஒதுக்கம் எதிர்க்கணியமாகி விட்டது. இந்த வரவுசெலவில் இவற்றுக்கான தீர்வுகள் இருக்கின்றனவா? அத்தகைய எந்தவொரு முயற்சியும் தென்படுவதில்லை. அவற்றை முகாமை செய்வதாயின் வரவுசெலவில் காணக்கூடிய இரண்டு பிரதான விடயங்கள் இருக்கின்றன. ஒன்றுதான் நாணயக்கொள்கை. அடுத்தது வருமான செலவினக் (பிஸ்கல்) கொள்கை. வரி வருமானத்தைப் பெற்றுக்கொண்டு அவற்றை அவசியமான இடங்களுக்கு ஈடுபடுத்துதல் பற்றித் தெளிவாக குறிப்பிடப்படல் வேண்டும். அப்படிப்பட்டவை இந்த வவுசெலவில் கிடையாது. மரபு ரீதியாக வந்த பாதையில் முன்நோக்கிச் செல்வதே எமக்குப் புலப்படுகின்றது. மேலும் ஒருவருடத்திற்காக பயணிக்க சிறிது பணத்தை தேடிக்கொள்ள எதையாவது புரிவதைத்தான் காணக்கூடியதாக இருக்கின்றது. அதற்காகத்தான் வேறுவேறு வார்த்தைகளைப் பாவித்து அரச நிறுவனங்களை விற்க முனைகிறார்கள்.
2020 சனாதிபதியின் செலவு 2292 மில்லியன். 2021 இல் 2598 மில்லியன். 2022 இல் 2315 மில்லியன். 2023 இல் உத்தேச செலவு 2610 மில்லியன். மாற்றம் இருக்கின்றதா? அதனால்த்தான் பழைய பயணப்பாதையே என்று நாங்கள் கூறுகிறோம். எந்தவிதமான வித்தியாசமும் கிடையாது. இந்த பொருளாதாரம் சீரழிந்தாலும் வேண்டுமென்றே சீரழிக்கப்பட்ட ஒன்றாகும். உலகின் எந்தவொரு நாட்டிலும் பொருளாதாரத்தை நாசமாக்கியர்வர்கள் அந்த நாட்டைக் கட்டியெழுப்பியதில்லை. பேரரசனே இரண்டாம் உலகமகா யுத்தத்திற்கு ஜப்பானை இழுத்துச் செல்கிறான். 1948 அளவில் ஜப்பான் முற்றாகவே அழிந்துவிட்டது. ஆனால் பேரரசனை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு கல்விகற்ற புத்திஜீவிகளான நாட்டை நேசிக்கின்ற பிரிவினரே அந்த நாட்டைக் கட்டியெழுப்பினார்கள். ஆட்சி அதிகாரத்தில் கைவைக்க பேரரசனுக்கு இடமளிக்கவில்லை. நாசமாக்கியவர்களாலேயே கட்டியெழுப்ப முடியுமென இன்றும் ஒருசிலர் நம்புகிறார்கள். அதனால்த்தான் இந்த மேடையில் ஏறும்போது எனக்கு மகிழ்ச்சியாக இல்லை.
அவசியமான களத்தை அமைத்துக் கொடுப்பதையே மத்திய வங்கியிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது. உறுதியான விலைமட்டங்கள். உறுதியான பணவீக்கத்ததைக் கொண்டதாக முதலீட்டாளர்களால் நம்பிக்கை வைக்கக்கூடிய களமாக அமையவேண்டும். தற்போது நூற்றுக்கு இருபது, முப்பது சதவீதங்களிலேயே வட்டி நிலவுகின்றது. நீங்கள் வங்கியிடமிருந்து ரூபா நூறு கடன்பெற்றால் ரூ. 25, ரூ.26 வட்டியைச் செலுத்தவேண்டும். எந்தவொரு நாட்டிலும் அப்படி இருக்கின்றதென நான் நினைக்கவில்லை. ஆனால் ஒருசில கடன்களில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். ஜப்பானில் உற்பத்திச் செயற்பாடுகளுக்காக எடுக்கின்ற கடன்களுக்கான வட்டி வீதம் 0.1% ஆகும். ஆனால் இலங்கையில் கடன்பெற்றால் என்ன கதி நேரிடும்? அதனால் மத்திய வங்கி மெச்சில் விளையாடுவதற்கான அழகான மைதானத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும். அத்தகைய நோக்கினைக் கொண்டதாக நாட்டை அபிவிருத்தி செய்தலே வரவு செலவில் ஈடேற்றப்படவேண்டும். அத்தகைய ஒரு நோக்கு இந்த வரவுசெலவில் இருக்கின்றதா? உதாரணமாக எடுத்துக்கொண்டால் நன்னீர் மீன்பிடித் தொழிற்றுறையை முன்னேற்ற 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுகிறதாம். சற்று நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் எமது நாட்டில் எத்தனை குளங்கள் உள்ளனவென்று? குளங்களின் எண்ணிக்கையால் வகுத்துப் பார்த்தால் இந்த முன்மொழிவுகளின் பெறுமதி உங்களுக்குத் தெரியும். கழுத்தை நெரித்தேனும் வரியை அறவிடுவதேயன்றி பொருளாதாரத்தை திசைதிருப்புவதற்கான முன்மொழிவுகள் கிடையாது. முச்சுத் திணறிக்கொண்டு நோய்ப்படுக்கையில் இருக்கின்ற ஒரு முதலீட்டாளரேனும் இருப்பாராயின் அவரையும் விரட்டியத்தே எதிர்வரும் ஆண்டினைக் கழிக்கப் போகிறார்கள். காய்ச்சல் ஏற்பட்டதும் பத்திய உணவு உட்கொண்டாலும் காய்ச்சலிலிருந்து மீட்புப்பெற ஊட்டச்சத்துமிக்க உணவினை நோயாளிக்கு கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒன்று இந்த வரவுசெலவில் கிடையாது. நாம் மகிழ்ச்சியாக இல்லை: எமது அறிவினை இந்த நாட்டுக்காக பயன்படுத்த வாய்ப்பு கிடையாது. ஆனால் அத்தகைய மேடையொன்றில் எமது அறிவினைப் பகிர்ந்துகொள்ளக் கிடைத்தமை ஓரளவு மகிழ்ச்சியைத் தருகின்றது.
சட்டத்தரணி ஹேமக்க சேனாநாயக்க பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் எனக் கூறிக்கொண்டு போராட்டத்துடன் தொடர்புகொண்டவர்களை கைதுசெய்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கு மேலதிகமாக பொலிஸ் கட்டளைச்சட்டத்தின் 77 வது பிரிவினை பலிகடாவாக்கிக்கொண்டு ஆட்களை பொலீசுக்கு அழைப்பிக்க செயலாற்றியுள்ளார்கள். பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு ஆட்களை அழைப்பித்த பல பதிவேடுகள் எம்மிடம் இருக்கின்றன. இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் எதிரரானவர் என்பவர் யாரென பொருள்கோடல் வழங்கப்படவில்லை. அதனால் சாதாரண மக்கள் வாழ்க்கைக்கு கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. உலக வரலாற்றில் முதல்த்தடவையாக அன்பாக மேற்கொண்டுவந்த […]

சட்டத்தரணி ஹேமக்க சேனாநாயக்க
பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் எனக் கூறிக்கொண்டு போராட்டத்துடன் தொடர்புகொண்டவர்களை கைதுசெய்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கு மேலதிகமாக பொலிஸ் கட்டளைச்சட்டத்தின் 77 வது பிரிவினை பலிகடாவாக்கிக்கொண்டு ஆட்களை பொலீசுக்கு அழைப்பிக்க செயலாற்றியுள்ளார்கள். பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு ஆட்களை அழைப்பித்த பல பதிவேடுகள் எம்மிடம் இருக்கின்றன. இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் எதிரரானவர் என்பவர் யாரென பொருள்கோடல் வழங்கப்படவில்லை. அதனால் சாதாரண மக்கள் வாழ்க்கைக்கு கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. உலக வரலாற்றில் முதல்த்தடவையாக அன்பாக மேற்கொண்டுவந்த போராட்டம் காரணமாக அப்போது இருந்த சனாதிபதிக்கு தப்பியோட நேரிட்டது. அதன் பின்னர் மக்கள் இறைமைத் தத்துவத்திற்கு எதிராக செயலாற்றி மொட்டு உறுப்பினர்களால் ரனில் விக்கிரமசிங்க சனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டார். வரம்புமீறி மேலெழுகின்ற மக்கள் எதிர்ப்பின் மத்தியில் எத்தகைய தந்திரோபாயத்தைக் கையாண்டேனும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஆற்றலைப் பாதுகாத்துக்கொள்ள ரனில் விக்கிரமசிங்கவினால் இயலாமல் போயுள்ளது. அந்த அச்சம் காரணமாக பயங்கரவாத தடைச்சட்டத்தை முறையற்றவகையில் பாவித்து மக்களை அச்சுறுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.
பங்கரவாத புலனாய்வுப் பிரிவு கொழும்பில் பேணிவரப்படுவதோடு மக்களை அம்பாறை, மொனறாகல, கெபித்திகொல்லேவ போன்ற பிரதேசங்களிலிருந்து அச்சத்துடனும் சந்தேகத்துடனும் அழைப்பித்தலை மேற்கொண்டு வருகிறார்கள். மொட்டின் முந்திய நிலைமையின்படி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக செயலாற்றி வந்தது. குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் தமது பிறந்த மண்ணிலேயே பயங்கரவாதிகளென பெயர் குறிக்கப்படுவார்களா எனும் சந்தேகம் தோன்றுகின்றது. தற்போது இருப்பவர் 2015 – 2019 காலத்தில் இருந்த ரனில் விக்கிரமசிங்க அல்ல. மகிந்த ராஜபக்ஷவினால் பெயர்குறிக்கப்பட்டு நாமல் ராஜபக்ஷவினால் வழிமொழியப்பட்ட ராஜபக்ஷ குடும்பத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஒரு ரனில் விக்கிரமசிங்கவே இன்று இருக்கிறார். பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் அதனாலேயே சட்டவிரோதமாக கைதுசெய்யப்படுகிறார்கள். விவியன் குணவர்தன வழக்கில் மதிப்பிற்குரிய உயர்நீதிமன்றம் கூறிய விதத்தில் நாட்டின் அடிப்படைச் சட்டத்தை மீறி தற்போது செயலாற்றி வருகிறார்கள். மதிப்பிற்குரிய உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை எவ்விதத்திலும் பொருட்படுத்தாமல் பொலீஸ் உத்தியோகத்தர்களை நெறிப்படுத்த ரனில் – ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கம் செயலாற்றி வருகின்றது. இன்றளவில் வசந்த முதலிகேவும் சிறிதம்ம தேரரும் 70 நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டிருந்தபோதிலும் அவர்களுக்கு எதிராக பயங்கரவாதி என்கின்ற பொருள்கோடலில் உள்ளடக்கப்படக்கூடிய எதுவுமே இனங்காணப்பட முடியாமல் போயுள்ளது. இத்தகைய நிலைமையில் மக்களுக்கு ஏற்படுகின்ற பாதகநிலைமை தொடர்பில் தோற்ற தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த பிரதிநிதிகள் என்றவகையில் நாங்கள் செயலாற்றுவோம். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முரணாகச்சென்று பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தொல்பொருளியல் சட்டம், பொதுத் தொல்லைச் சட்டம் போன்ற சட்டங்களை பயன்படுத்தி மக்களைப் பயமுறுத்தி வருகின்ற செயற்பாடுகளை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். பாதிக்கப்படுகின்றவர்களுக்காக எந்தவொரு தருணத்திலும் நாங்கள் தோற்றுவோம் என்பதை வலியுறுத்துகிறோம்.

தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் உப தலைவர் – சட்டத்தரணி சுனில் வட்டகல
கிருளப்பனையில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு தீவின் பல்வேறு திசைகளிலுமிருந்து ஆட்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. தாம் வதிகின்ற பிரதேசத்தில் உள்ள பொலீஸ் நிலையத்திற்கு அழைத்தல் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்தல் மூலமாக உளரீதியான மட்டமும் சம்பந்தப்பட்ட சட்டமும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானது. அரசாங்கத்தின் நோக்கத்தை எமக்கு மறைக்க முடியாது. உண்மையான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்காததால் சமூகம் பற்றி பொதுவில் சிந்திக்கின்ற மக்கள் , சிவில் அமைப்பு செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்கள் எதிர்ப்பார்கள். நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத நிலைமையில் மக்கள் வீதியில் இறங்குவதைவிட செய்வதற்கு வேறு ஒன்றுமே கிடையாது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருள் என்பவற்றை தாக்குப்பிடிக்கக்கூடிய விலையில் வழங்குவதற்குப் பதிலாக பிணைவழங்க முடியாத வகையிலான வழிமுறைகளை அரசாங்கம் தெரிவுசெய்துள்ளது. பொது ஆதனங்கள் சட்டம், தொல்பொருளியல் சட்டம் என்பவற்றை பரீட்சித்துப்பார்த்து தோல்விகண்டவிடத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் 90 நாட்கள் தடுத்துவைத்து செயலாற்றுவதில் வெற்றிபெற முயற்சி செய்கிறார்கள். மாணவர் தலைவர் வசந்த முதலிகே எத்தகைய பயங்கரவாத செயலைப் புரிந்தார் என நாங்கள் அரசாங்கத்திடம் கேட்கிறோம். அரசாங்கத்தின் பயங்கரவாதம் மிகவும் நன்றாக தெளிவாகிய அனுபவமொன்று எனக்கு இருக்கின்றது. வசந்த முதலிகேவை நேர்காண சட்டத்தரணிகளுக்கு மாத்திரமே முடியுமென பிரச்சாரம் செய்திருந்தார்கள்.
அதற்கிணங்க 28 ஆந் திகதி நான் தோழர் வசந்த முதலிகேவை 29 ஆந் திகதி சந்திக்க இடமளிக்குமாறு எழுத்தில் அறிவித்தேன். அடுத்த நாள் நானும் சோஷலிஸ இளைஞர் சங்கத்தின் எரங்க குணசேகரவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றோம். ஆனால் முறையான அனுமதி இன்னமும் கிடைக்கவில்லை என்றுதான் அறிவித்தார்கள். ஆனால் நான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை பதில் வழங்கவில்லை. அதன் பின்னர் 011 233 5930 மற்றும் 071 840 1291 ஆகிய பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் தொலைபேசி இலக்கங்களுக்கு நாள் முழுவதும் அழைப்பினை எடுத்தேன். 52 தடவைகள் கையடக்கத் தொலைபேசிக்கு எடுத்தாலும் ஒருவருமே பதில் அளிக்கவில்லை. ஒரு சட்டத்தரணி கைதில் இருக்கின்ற சந்தேகநபரை சந்திக்க முடியாவிட்டால் இந்த நாட்டில் இருக்கின்ற சனநாயகம் என்ன? மூவரைக் கைதுசெய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைத்து ஒருவரை சான்றுகள் கிடையாதெனக்கூறி விடுதலை செய்தார்கள். விசாரணை நியாயமாக நடைபெறுகின்றதென்பதை நிரூபிக்க அந்த ஆளை விடுதலை செய்தார்கள். செத்தெம்பர் 24 ஆந் திகதி சோஷலிச இளைஞர் சங்கம் நடாத்திய அமைதிவழி எதிர்ப்பு பேரணிமீது மேற்கொண்ட சட்டவிரோத தாக்குதல் சம்பந்தமாக அதனோடு தொடர்புடைய ஒவ்வொரு பொலீஸ் உத்தியோகத்தருக்கும் எதிராக உயர்நீதிமன்றத்தில் மாத்திரம் மூன்று வழக்குகளைப் போட்டிருக்கிறோம். அதற்கு மேலதிகமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்வதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதனால் அரசாங்கத்தின் பொலீஸ் சற்று பயந்துள்ளது.
நாங்கள் ஒரு விடயத்தை பொலீசுக்கு வலியுறுத்துகிறோம். இப்படிப்பட்ட வெட்கத்தனமான கொந்துராத்து வேலைகளைச் செய்யவேண்டாமென்று. தமக்கு இறுதியில் எஞ்சுவது வீட்டிலுள்ள மனைவி மாத்திரமே. கட்டளையிடுகின்ற அரசியல்வாதிகள் காணாமல் போய்விடுவார்கள். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் உள்ளவர்களுக்கு நாங்கள் அதனை வலியுறுத்துகிறோம். சட்டத்தரணிகளுக்கும் பார்வையிட இடமளிக்காமல் சிறைப்படுத்து வைத்துள்ள வசந்த முதலிகேவின் உயிருக்கு உத்தரவாதமளிப்பது யார்? ரனில் ராஜபக்ஷவின் கொந்துராத்து வேலையை ஜாக்கிரதையாக புரியுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். அரசாங்கம் தொடர்ச்சியாக பெயிலாகின்ற சட்டங்களைக்கொண்டுவந்து முடியாதகட்டத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தைக் கொண்டுவந்து புரிகின்ற வேலைகளுக்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். சோஷலிஸ இளைஞர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்மீது நடாத்தப்பட்ட கீழ்த்தரமான தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக நாங்கள் இந்த இடத்திலேயே ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்திக் கூறினோம். அதனை அவ்வண்ணமே செய்தோம். உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி அறிவித்தலைக் கொண்டுவரும்போதே உயர்நீதிமன்றத்தின் முன்னிலையில் நாங்கள் அதனை ஆட்சேபனைக்கு இலக்காகினோம். 26 ஆந் திகதி வழக்கினை பயில் பண்ணியதும் ஒற்றோபர் 01 ஆந் திகதி அரசாங்கம் உயர்பாதுகாப்பு வலய வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்றுக்கொண்டது. ஒற்றோபர் 28 ஆந் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவானது பொலீஸ் கட்டளைச் சட்டத்தின் 77/1 பிரிவின்கீழ் புரியப்படுகின்ற செயல்கள் சட்டவிரோதமானவை எனக் கூறியுள்ளது. பொலீஸ் கட்டளைச் சட்டம் அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டதாகவே இருக்கின்றது என்பதை பொலீஸார் அறிந்துகொள்ள வேண்டும். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலுமிருந்து ஆட்களுக்கு அழைப்பு விடு்கின்ற உத்தியோகத்தர்களை ஜாக்கிரதையாக செயலாற்றுமாறும் அவ்விதமாக செயலாற்றாவிட்டால் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நிறுத்துவோம் என்பதையும் வலியுறுத்துகிறோம்.
இந்த ஊடக சந்திப்பின்போது தேசிய மக்கள் சக்தியின் கொழும்புச் செயலாளர் சட்டத்தரணி தனுஷ்கி லியனபட்டபெந்தியும் பங்கேற்றார்.
கேள்வி :– தடுத்துவைத்துள்ள வசந்த முதலிகேவின் மாணவர்நிலைக்கு என்ன நேரிடும்?
பதில்:– பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அல்லது தண்டனைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்க இடமில்லாத அரசியலமைப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ள எதிர்ப்புகளிலேயே அவர் ஈடுபட்டிருந்தார். அவரது மாணவர்நிலை தொடர்பில் நிருவாகச் சிக்கல்கள் ஏற்படக்கூடும். ஆனால் விடுதலை பெறுகின்ற தினத்தில் அவருக்கு கல்விக்கான வாய்ப்பினை வழங்கவேண்டி ஏற்படும். பாரதூரமான பிரச்சினை அதுவன்று. எந்தவொரு சமூகத் தொடர்புமற்று சிறைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த இளைஞனின் உயிருக்கு சம்பந்தப்பட்ட காலம் தொடர்பில் யார் பொறுப்புக் கூறுவது? அந்த காலத்தை அரசாங்கத்தினால் வழங்க முடியாது. அந்த அநியாயத்தைச் செய்யவேண்டாமென நாங்கள் நாங்கள் வலியுறுத்துகிறோம். தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்றவகையில் சனநாயகக் கட்டமைப்பிற்குள் செயலாற்றி வருகின்றவர்கள் சம்பந்தமாக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் தோற்றுவார்கள்.
கேள்வி :– யாலவில் வெறியாட்டம் ஆடியவர்கள் பற்றிய நிலைப்பாடு என்ன?
பதில்:- ஒரு நாடு ஒரே சட்டம் எனும் எண்ணக்கருவினை எடுத்துக்கொண்டே கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார். எனினும் இன்றளவில் “நீங்கள் எங்களுடன் இருப்பீர்களாயின் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும். ஆனால் நீங்கள் எம்மை எதிர்த்த முதலாவது நொடியிலேயே நாங்களை உங்களைப் பழிவாங்க நடவடிக்கை எடுப்போம். தேசத்துரோகிகளாக மாற்றிடுவோம்” என்ற செய்தியைக் கொடுத்துள்ளார். யால சம்பவத்துடன் தொடர்படையதாக அமுலாக்குவது அதன் நீடிப்பையாகும். அமைச்சர்களின் மைந்தர்களுக்கும் அவர்களின் மருமக்களுக்கும் சகபாடிகளுக்கும் நாட்டின் சட்டம் வலுவில் இல்லாதவகையிலேயே செயலாற்றுகிறார்கள். வாகனங்கள் பிரவேசிப்பதைத் தடைசெய்து, அந்த ஆட்களுக்கு ஏற்புடையதாக்கிக் கொள்வதில்லை. அவர்களின் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு ஒருவிதமாகவும் வறியவர்களுக்கு உச்ச தண்டனை வழங்கி வருவதும் அதன் மூலமாகத் தெளிவாகின்றது.