Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

தேசிய மக்கள் சக்தியின் கெஸ்பேவ தொகுதி மாநாடு

நாட்டைக் கட்டியெழுப்புகின்ற உண்மையான தேவை உள்ளவர்கள் தேசிய மக்கள் சக்தியை சுற்றி ஒருங்கிணைந்து வருகிறார்கள். இன்றளவில் அதிகாரத்தில் இருக்கின்ற ரனில் விக்கிரமசிங்கவிற்கு இந்நாட்டின் சுதேச பிள்ளைகள் பிரபாகரனைப் போலவே புலப்படுகிறார்கள்.  நாட்டை இந்த நிலைமைக்கு இழுத்துப்போட்டு போசாக்கின்மையால் அவதிப்படுகின்ற பிள்ளைகளின் வயிறுகள் முன்நோக்கி தள்ளப்படிருப்பது  ரனில் விக்கிரமசிங்கவிற்கு குண்டுகளை வயிற்றில் கட்டிக்கொண்டிருப்பது போலவே தெரிகின்றது. போர்த்துக்கேயர்கள் இந்த நாட்டுக்கு வரும்போது இருந்த குடிமக்கள் போன்றவர்களே ரனில் விக்கிரமசிங்கவிற்குத் தேவை. நாட்டு மக்கள் நாட்டின் குடிமக்களாக மாறுவதை ரனில் […]

நாட்டைக் கட்டியெழுப்புகின்ற உண்மையான தேவை உள்ளவர்கள் தேசிய மக்கள் சக்தியை சுற்றி ஒருங்கிணைந்து வருகிறார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவையின் உறுப்பினர் தோழர் லக்ஷ்மன் நிபுண ஆரச்சி

இன்றளவில் அதிகாரத்தில் இருக்கின்ற ரனில் விக்கிரமசிங்கவிற்கு இந்நாட்டின் சுதேச பிள்ளைகள் பிரபாகரனைப் போலவே புலப்படுகிறார்கள்.  நாட்டை இந்த நிலைமைக்கு இழுத்துப்போட்டு போசாக்கின்மையால் அவதிப்படுகின்ற பிள்ளைகளின் வயிறுகள் முன்நோக்கி தள்ளப்படிருப்பது  ரனில் விக்கிரமசிங்கவிற்கு குண்டுகளை வயிற்றில் கட்டிக்கொண்டிருப்பது போலவே தெரிகின்றது. போர்த்துக்கேயர்கள் இந்த நாட்டுக்கு வரும்போது இருந்த குடிமக்கள் போன்றவர்களே ரனில் விக்கிரமசிங்கவிற்குத் தேவை. நாட்டு மக்கள் நாட்டின் குடிமக்களாக மாறுவதை ரனில் விரும்புவதில்லை. அன்று வெள்ளைக்காரன் இலங்கைக்கு வந்து  நிறைவேற்றிக்கொண்ட சட்டதிட்டங்களில் ரனில் விக்கிரமசிங்கவும் ராஜபக்ஷாக்களும்   மறைந்துகொண்டிருப்பது அதனாலாகும்.  ஆனால் தற்போது இருப்பது தேசிய மக்கள் சக்தியின் இடையீட்டினால் குடிமக்களாக மக்கள் மாற்றப்பட்டுள்ள நிலைமையாகும். ராஜபக்ஷாக்கள் நாட்டை உருப்படியாக்குவார்களென  ஒருகாலத்தில் மக்கள் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.  ஆனால் எழுபத்துநான்கு வருட ஆட்சியில் ரனில்  விக்கரமசிங்காக்கள், ராஜபக்ஷாக்கள் இறுதியாக மக்களைக் கொண்டுவந்திருப்பது மக்களுக்குப் பதிலாக குடிமக்களை வலுவூட்டுகின்ற தீர்வுக்கட்டமான  ஒரு யுகத்திற்காகும். 

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் மக்கள் வதைக்கப்படுவதை நிறுத்தி திருட்டுகள், மோசடிகள், ஊழல்களை நிறுத்தி புதிதாக சிந்திக்கின்ற மக்கள் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றுசேர்கிறார்கள். இந்த நாட்டு மக்கள்  நாட்டைக் கட்டியெழுப்பி முன்நோக்கி நகர்வதை எவராலும் தடுக்க இயலாது. தற்போது எஞ்சியுள்ளது மிகவும் சிறிய ஒரு பகுதியே என ஒருசிலர் கூறுகிறார்கள். ஆனால் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி இணைந்திருப்பவர்கள்  எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய குழுவினராவார்.  பல்வேறு தொழில்வாண்மையாளர்கள், தொண்டர் ஊழியர்கள் உண்மையான அதிர்வுடன் தொடர்ந்தும் எம்மைச்சுற்றி இருக்கிறார்கள். நாங்கள் கட்டியெழுப்புவது மகாராஜாக்களை அல்ல. நாட்டைக் கட்டியெழுப்புகின்ற உண்மையான தேவைக்காக கலைஞர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், மருத்துவர்கள் போன்ற எந்தவிதமான பேதமுமமின்றி தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி இருக்கிறார்கள்.

இந்த நாட்டைக் கட்டியெழுப்பி பிள்ளைகளின் எதிர்காலத்தை நலமானதாக்க எம்மை அர்ப்பணிப்போம்.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவையின்  உறுப்பினர் சகோதரி விறோய்  கெலீ பல்தசார்

நாம் அனைவருமே களைத்துப் போயுள்ளோம். இந்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கெஸ்பேவ தொகுதி மாநாட்டுக்கு வருகை தந்துள்ள பொருந்திரளான மக்கள் இந்த நாட்டுக்கு ஒரு செய்தியைக் கொடுக்கிறார்கள்.  அதுதான் எந்தவொரு சவாலின் மத்தியிலும் முன்நோக்கி நகருகின்ற மக்கள் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி ஒருங்கிணைந்துள்ளார்கள் என்பதாகும். இந்த மாநாட்டுக்காக பெருமளவிலான பெண்கள் வந்திருப்பது மகிழ்ச்சி தருகின்றது.  பொருளாதாரச் சீரழிவின் மத்தியில் எமது குடும்பங்களின் உணவுப் பாங்கு நூற்றுக்கு எழுபது சதவீதத்தால் மாறியுள்ளமை மதிப்பாய்வுகள் மூலமாக வெளியாகி உள்ளது.

பிள்ளைகளுக்கு அவசியமான முறையான போசாக்கினைப் போன்றே முதியவர்களுக்கு அவசியமான உணவினை பெற்றுக்கொடுக்கவும் முடியாதுள்ளது. உட்கொள்கின்ற உணவிலிருந்து முறையான போசாக்கு கிடைப்பதல்லை. உணவுவேளைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகின்றது. போசாக்கின்மை பற்றி பலவிதமான புள்ளிவிபரத் தரவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  கர்ப்பிணித் தாய்மார்களின் போஷாக்கின்மை நிலைமை வேகமாக அதிகரித்து வருவது எம்மனைவருக்கும் தெளிவாகி வருகின்றது. இவையனைத்தும் இடம்பெறுவது எமது கருமபலன் அல்லது ஆண்டவரின் சித்தப்படியே என சிலகாலம் நாங்கள்  நினைத்துக் கொண்டிருந்தோம்.  எமது மனதைத் தேற்றிக்கொள்ள நாங்கள் பலவற்றை பிரயோகித்தோம். ஆனால் இந்த பேரழிவு எழுபத்திநான்கு வருடங்களாக இந்த நாட்டை ஆட்சிசெய்த அரசியல்வாதிகளாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதென்பது தற்போது எமக்குத் தெளிவாகி உள்ளது.  இந்த நிலைமையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வீதியில் இறங்குகின்ற தாய்மார்கள், தகப்பன்மார்கள் பற்றி ரனில் விக்கிரமசிங்க வித்தியாசமான ஒரு கதையையே கூறுகிறார். பிள்ளைகளை கூட்டிக்கொண்டு வீதிக்கு வருபவர்கள் பயங்கரவாதிகள் என ரனில் விக்கிரமசிங்க கூறுகிறார்.

அரசியல் என்பது எம்மிடமிருந்து ஒதுக்கப்பட்டுள்ள ஒன்றல்ல.  எமது வாழ்க்கை அரசியல்மயமானதே. நாங்கள் உண்கின்ற உணவுகள், நாங்கள் வீடுகளில் வசிக்கின்றவிதம், பஸ் ஒன்றில் சீட் கிடைக்காமல் போவது, தொழிலை இழத்தல் இவை அனைத்துமே அரசியலாகும். எமது வாழ்க்கை அரசியலாகுமென்பதை விளங்கிக்கொண்ட பெற்றோர்கள்  குடும்பத்தாருடன் ஆர்பாட்டங்களுக்காக வீதியில் இறங்குகிறார்கள்.  அரசியல் என்பது அரசியல்வாதிகளுக்கு மாத்திரமல்ல.  எமது பிள்ளைகளை இப்படிப்பட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு கொண்டுவரக்கூடிய நிலைமை இருக்கவேண்டும். நான் குறிப்பாக பெண்களிடம் கூறிக்கொள்வது அரசியல் தேவையற்றதாக்கபட்ட ஒன்றல்ல. வாக்காளர்களில் பெரும்பகுதியினர் பெண்களே என்பதை நாமனைவரும் அறிவோம். வாக்குகளை பாவிக்கின்றவர்கள் மத்தியில் 56% பெண்களாவர். அதிகாரத்திற்கு வருகின்ற அரசாங்கங்களால் பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து சம்பந்தமாக   பல்வேறு தீர்மானங்களை மேற்கொள்ளப்பட்டாலும்  எமக்கு எந்தவிதமாக பெறுபேறும் கிடைக்கமாட்டாது.  தேசிய பாதுகாப்பிற்கு வரவு செலவில் 15%  ஒதுக்கப்பட்டாலும்  எமக்கு எந்தவிதமான பாதுகாப்பும் கிடைப்பதில்லை. பிள்ளைகள் என்றவகையில், பெண்கள் என்றவகையில் பெரிதாகக் கூறுகின்ற தேசிய பாதுகாப்பில் இருந்து எமக்கு என்ன கிடைக்கின்றது? கல்விக்ககாக வரவுசெலவில் 3%  இற்கு குறைவாகவே ஒதுக்கப்படுகின்றது. இவையனைத்திலும் நிலவுகின்ற பிரச்சினை எமக்குத் தெளிவாகின்றது. அப்படியானால் தீர்வு என்ன? தீர்வு எமது கைகளிலேயே இருக்கின்றது. அதைவிட சுதந்திரமான, அன்பான வாழ்க்கையைக் கட்டியெழுப்பிட நாமனைவரும் ஒன்றுசேர வேண்டும். நாங்கள் முனைப்பானவர்களாக மாறவேண்டும்.  சுயநலவாதிகளை உருவாக்குகின்ற இந்த சிஸ்டத்திற்குப் பதிலாக தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனைவரும் கூட்டாக ஒருங்கிணைந்து  இந்த நாட்டைக் கட்டியெழுப்பி பிள்ளைகளின் எதிர்காலத்தை நலமானதாக்கிட அர்ப்பணிப்போமென அழைப்பு விடுக்கிறோம்.  நாங்கள்தான் இந்த நாட்டைப் பொறுப்பேற்க வேண்டும்.

வன்முறைக்குத் தூபமிடுவது ரனில்….. தேர்தல் வரைபடத்தை சுருட்டிக்கொள்ள நாங்கள் இடமளிக்கமாட்டோம்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க

எமது நாட்டில் நீண்டகாலமாக பலவிதமான அரசியல் மாற்றங்களை மேற்கொள்ள சாதகமான எதிர்பார்ப்புடனேயே மக்கள் இடையீடு செய்தார்கள்.  எமது பிரச்சினகளைத் தீர்த்துக்கொள்ள அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டதையிட்டு மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் குறுகிய காலத்தில் ஏமாற்றத்திற்கு இலக்காகினார்கள். ஏன் இப்படி நடந்தது? மக்களின் எதிர்பார்ப்புக்களைவிட வித்தியாசமான எதிர்பார்ப்புகளே ஆட்சியார்களிடம் நிலவியது. இந்த நிலைமையின் கீழேயே மக்கள் மீண்டும்மீண்டும் ஏமாற்றத்திற்கு இலக்காகினார்கள்.

ஏமாற்றத்திற்கு இலக்காகிய  இந்த நிலைமையை தீர்வுக்கட்டமான வகையில் நாங்கள் மாற்றியமைத்திட வேண்டும். இந்த பணியைக் கட்டாயமாக ஈடேற்றுகின்ற நோக்கத்திற்காகவே  தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்பப்பட்டுள்ளது.  இலங்கை ஒரு வறிய நாடு என்பதை உறுதிப்படுத்தவதற்காக அமைச்சரவைப் பத்திரத்தைப் போடுகிறார்கள். பாடசாலைக்குச் செல்கின்ற பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. பாடசாலைப் பிள்ளைகள் மயக்கமுற்று வீழ்கிறார்கள். வைத்தியசாலைகளில் மருந்து கிடையாது. நோயாளிகள் இறக்கிறார்கள். கைத்தொழில்கள் சீரழிகின்றன. இவ்வாறான துன்பங்கள் ஒரு நாட்டுக்கு  மேலும் அவசியமா? நாங்களும் எமது பிள்ளைகளும் இந்த கவலைக்கிடமான நிலைமைக்கு இரையாகிவிட்டோம். இந்த நிலைமையை மாற்றியமைத்திட நிர்ப்பந்திக்கின்ற அனுபவங்கள் தராளமாக எமக்கு இருக்கின்றன. 

சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நாட்டைவிட்டுச் செல்லவேண்டிய நிலையேற்பட்டது. மகிந்த ராஜபக்ஷவிற்கு அலரி மாளிகையிலிருந்து கள்ளத்தனமாக வெளியேறி கடற்படை முகாமொன்றில் தங்கவேண்டிய நிலையேற்பட்டது. பசில் ராஜபக்ஷவிற்கு வெளிநாடுசெல்ல பிளையிற் ஒன்றைத் தேடிக்கொள்ள முடியாமல் போயிற்று. பாரிய பர்வதம்போல் இருப்பதாக இருப்பதாக கூறிய பாசறை எமது கண்ணைதிரிலேயே சிதைவடைந்துள்ளது. அப்படியானால் மக்களிடமே பலம் இருக்கின்றதென்பது தெளிவாகின்றது. எனினும் இந்த மக்கள் சரிவர ஒழுங்கமையவில்லை. அந்த மக்களை ஒழுங்கமைத்தே தேசிய மக்கள் சக்தி தொகுதிக்கிளைகளை அமைத்து வருகின்றது. தொகுதிக்கிளைகளிடம் மூன்று பிரதான விடயங்கள் கைளிக்கப்பட்டுள்ளன. மீண்டுமொரு மக்கள் எழுச்சியின்போது அது தேசிய மக்கள்  சக்தியின் கீழேயே இடம்பெறவேண்டும்.  இல்லாவிட்டால் மக்கள் எழுச்சி விரயமாகிவிடும். அதைப்போலவே ஊர்மட்டத்தில் மக்களை ஒழுங்கமைவு செய்விக்கின்ற பொறுப்பு எம்மீது சுமத்தப்பட்டுள்ளது. நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ள  நிலைமையின் மத்தியில் மக்களை பாதுகாத்துக்கொள்வதும் அதன் மத்தியில் இருக்கின்ற முதன்மைப்பணியாகும். நாட்டின் உற்பத்தி சீரழிந்து. பணவீக்கம் பாரியளவில் உயர்வடைந்துள்ளது. தொழில்கள் அற்றுப்போய் வருகின்றன. மாதாந்த சம்பளம் பெறுகின்ற மக்களால் கடனை மீளச்செலுத்த முடியாது. இந்த அழுத்தத்திற்கு எதிராக மக்கள் கொதித்தெழுவார்கள்.  அத்தகைய எழுச்சியை வன்முறையின்பால் தள்ளிவிட அரசாங்கம் முயற்சிசெய்து வருகின்றது. அதனால் மிகவும் ஒழுங்கமைந்தவகையில் எழுச்சியடைகின்ற மக்கட் குழுக்களுக்கு எமது தொகுதிக் கிளைகள் தலைமைத்துவம் வழங்கவேண்டும். எதிரிக்கு சாதகமானதாக அமைகின்ற எதனையும் செய்யாதவிதத்தில் ஒழுங்கமைந்தவகையிலான தலைமைத்துவம் அளிக்க தொகுதிக்கிளை செயலாற்றவேண்டும். 

தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தேர்தல்களுக்குத் தயாராகி வருகின்றது. எனினும் அரசாங்கம் தேர்தல்களைக்கண்டு அஞ்சுகின்றது. உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பலவிதமாக தந்திரோபாயங்களைக் கையாளுகின்றது. ஒரு பாராளுமன்ற உறுப்பினராகக்கூட மக்கள் ஆணையற்ற ரனில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தலில் அடைகின்ற தோல்வியின் மத்தியில் தொடர்ந்தும் சனாதிபதி கதிரையில் அமர்ந்திருக்கமுடியாது.  அதைப்போலவே தேர்தலில் நியமித்துக்கொள்ளப்பட்ட  மகிந்த ராஜபக்ஷவை முதன்மையாகக்கொண்ட அரசாங்கம் மக்களால் விரட்டியடிக்கப்பட்டது.  இப்படியானால் நிகழ்கால அரசாங்கத்திற்கும் மக்கள் ஆணை கிடையாது. அதனால் அவர்கள் தேர்தலுக்குச் செல்லப்போவதில்லை. தேர்தலுக்குச் சென்றால்  அவர்களுக்கு கிடைத்த அறுபத்தொன்பது இலட்சம் மக்கள் ஆணை தற்போது எங்கே இருக்கின்றது என்பது தெளிவாகும். ரனிலும் ராஜபக்ஷவிற்கும் ஒன்றுசேர்ந்து தேர்தலுக்குச்செல்ல முடியாது. ஊர்மட்டத்தில் இந்த இருசாராரையும் ஒன்றுசேர்க்க முடியாது.  இத்தகைய நிலைமையில் தேர்தலை ஒத்திவைக்க இருதரப்பினரும் விரும்புகிறார்கள்.

அதிகாரமற்ற அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க பலவிதமான வியூகங்களை அமைத்துவருகின்றது. எனினும் தேசிய மக்கள் சக்தியின் தொகுதிக் கிளைகள் விசேட பொறுப்பினை ஏற்று போராட்டத்திற்கு தயாராவதைப்போன்றே தேர்தலுக்குத் தயாராகவும் வேண்டும். எனினும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஒருவரையொருவர் பின்தொடர்ந்துசென்று  தோற்கடிக்கின்ற மனோபாவத்திற்குப் பதிலாக நாட்டைக் கட்டியெழுப்புகின்ற கூட்டான உணர்வுடன் ஒருங்கிணைய வேண்டும். பிறரது வேதனையைத் தனது வேதனையாக எவ்வாறு மாற்றிக்கொள்வது எனும் கூட்டான உணர்வு எமக்குத் தேவை. அவ்வாறின்றி மேலிருந்து ஓர் அரசாங்கத்தை அமைத்துக்கொண்டோம் என்பதற்காக நாட்டை உருப்படியாக்கிவிட  இயலாது. சமூகத்தில் மாற்றமொன்று அவசியமாகும்.

ஒரு நாட்டுக்கு நேரிடக்கூடிய அனைத்துவிதமான அழிவுகளையும் இந்த நாட்டுக்கு கொடுத்துவிட்டார்கள். ரனில் விக்கிரமசிங்க திருகோணமலைக்குச் சென்று க அன்று தாங்கிகளை விற்றிருந்தால் இன்று எண்ணெய் இருந்திருக்கும் எனக் கூறுகிறார். எமது நாட்டுக்கு எண்ணெய் கிடைக்காமல் போனது தாங்கிகள் காரணமாக அல்ல: டொலர் இன்மை காரணமாகவே. ஐ.ஓ.சீ. கம்பெனிக்கு எட்டு தாங்கிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எட்டு தாங்கிகளும் நிரப்பப்பட்டிருக்கவில்லை. அவசியமாகி உள்ளது இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான புதிய பொருளாதார திட்டமாகும், அரசியல் மாற்றமொன்றும்   அதற்காக அணிதிரட்டப்பட்ட மக்களின் தயார்நிலையுமாகும். நிலக்கரி கொண்டுவந்ததால் ஐநூறு மில்லியன் டொலருக்கு மேலாக இழந்துள்ளதாக கணக்காய்வாளர் தலைமை அதிபதி அறிக்கையிலிருந்து வெளியாகி உள்ளது.  உரத்தைக் கொண்டுவருகயைில் எட்டு மில்லியன் டொலரை இழந்துள்ளதாகவும், எண்ணெய் கொண்டுவருதல், உரம் கொண்டு வருதல், சீனி கொண்டுவருதல் போன்ற அனைத்து துறைகளிலும் புரிந்துள்ள நிதிசார் குற்றச்செயல்கள் பற்றி கணக்காய்வாளர் தலைமை அதிபதி அறிக்கைகளில் விடயங்கள் வெளிப்பட்டுள்ளன.  இவற்றுக்குப் பொறுப்புற்கூற வேண்டியவர்களுடன் ஒரு நாட்டை உருப்படியாக்கிட முடியாது.

பாடலொன்றை இரசிக்கின்ற, புத்தகமொன்றை வாசிக்கின்ற, திரைப்படமொன்றைப் பார்க்கின்ற, ஆரோக்கியமான வாழ்க்கையொன்றைப் பற்றிச் சிந்திக்கின்ற  கூட்டான கலாசாரமொன்றை உருவாக்கிட வேண்டும்.  அத்தகைய மக்களைக்கொண்ட தொகுதிக்கிளையின் மூன்று அடிப்படைப் பணிகள் இருக்கின்றன. மக்களின் எழுச்சிக்குத் தலைமைத்துவம் வழங்குதல், எதிர்வரும் தேர்தலில் தொகுதியை வெற்றிபெறச் செய்வித்தல்  தொகுதிக்குள்ளே மக்கள் மத்தியில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக  மேற்கொள்ளப்படுகின்ற உரையாடலொன்றை நடாத்துதல் என்பவையே அத்தகைய செயற்பொறுப்புகளாகும். இந்த பணிகளை வெற்றிபெறச் செய்வித்தால் எம்மால் வெற்றியை அடையமுடியும்.

நாம் எவருமே அரசாங்கத்தைப் பொறுப்பேற்பது காலத்தைக் கழிப்பதற்காக அல்ல. நாட்டை உருப்படியாகிடவே.  இவர்கள் ஒருவரையொருவர் பாதுகாத்து ஊழல்பேர்வழிகளை பாதுகாக்கிறார்கள். ஆனால் நாங்கள் இந்த ஊழல்பேர்வழிகளைத் தண்டித்து அவர்கள் கொள்ளையடித்த பொதுச் செல்வத்தை மீண்டும் அறவிட்டுக்கொள்வோம். அரச நிறுவனங்கள் பாரிய நட்டத்துடன் இயங்கிவருவது அரசாங்கத்திற்குச் சுமையாகுமென்ற பாரிய உரையாடலொன்று தற்போது நிலவுகின்றது. இந்த நிறுவனங்களில் அரசியல் நியமனங்கள் மூலமாக ஊழியர்களை நிரப்பி, அரச நிறுவனங்களை சிதைத்தார்கள். பொருளாதாரத்தின் புதிய வாய்ப்புகளை உருவாக்கி புதிய தொழில்முயற்சியாளர்களை அறிமுகஞ்செய்து தொழில்களை பிற்பிப்பதற்குப் பதிலாக தேர்தலை நோக்கமாகக்கொண்டு  அரச நிறுவனங்களில் தொழில்களை வழங்கினார்கள். எனினும் தேசிய மக்கள் சக்தி வெற்றிடங்கள் நிலவாத எந்தவோர் அரசாங்க நிறுவனத்திற்கும்  தொழில்களை வழங்க மாட்டாது. சுற்றுலாத்துறை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித்துறை, கப்பற்றுறை  உள்ளிட்ட பலதுறைகள் பொருளாதாரத்தின் முதன்மைப் பிரிவுகளாக அபிவிருத்தி செய்யப்படும். இவ்விதமாக பொருளாதாரத்தை விரிவுபடுத்தியே எமது ஆட்சியின்கீழ் தொழில்கள் வழங்கப்படும்.

இதுவரை ஆட்சியாளர்கள் நாட்டை பின்நோக்கி இழுக்கின்ற பொருளாதார முறையினைக் கடைப்பிடிப்பதையே செய்துவந்தார்கள். நாங்கள் நாட்டை முன்நோக்கி நகர்த்துகின்ற பொருளாதாரத் திட்டங்களை அமுலாக்குவோம். புதிய இளைஞர் தலைமுறையினருக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை  உருவாக்குவது எமது முதன்மை செயற்பொறுப்பாகும்.   நிகழ்கால இளைஞர்கள் காலை எட்டு மணியிலிருந்து  மாலை ஐந்து மணிவரை தொழில் புரிவதைவிட சுதந்திரமான  சந்தர்ப்பங்கள் பற்றிச் சிந்திக்கிறார்கள். அதற்கான ஊக்குவிப்புகளைக்கொண்ட இணைந்த, வினைத்திறன்மிக்க அரச சேவையொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம். வெள்ளையர்கள் வெளியெறி எழுபத்திநான்கு ஆண்டுகளை விஞ்சிவிட்டபோதிலும் இன்னமும் வெள்ளைக்காரன் அறிமுகஞ்செய்த அரசசேவையே அமுலில் இருக்கின்றது. அதனை வினைத்திறன்மிக்க மக்கள் சேவையாக நாங்கள் மாற்றியமைப்போம்.    

கல்வியைப் பெறுகின்ற இளைஞர்கள் தொழிலொன்றில் ஈடுபடுதல் இன்றைய உலகில் இடம்பெறுகின்ற ஒன்றாகும்.  ஆனால் எமது நாட்டில் இருப்பது பொலநறுவையில் கல்வி பயில்கின்ற பிள்ளை தொழிலொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக கொழும்பை பார்த்துக்கொண்டு இருப்பதாகும். ஆனால் புத்தாக்கப் பொருளாதாரமொன்று மூலமாக அந்த பிள்ளைகளுக்கு பொலநறுவை பிரதேசத்திலேயே தொழில் வழங்கப்படவேண்டும். பொருளாதார வளர்ச்சியும் பொருளாதார அபிவிருத்தியும்  இவ்விதமாக புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி உலகின் புதிய சந்தைகளை நோக்கிப் பிரவேசிப்பதன் மூலமாக மாத்திரமே உருவாகும். 

இந்த நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஊழலற்ற,  நேர்மையான குழுவினர் தேசிய மக்கள் சக்தியில் மாத்திரமே இருக்கிறார்கள். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்ற பணிக்காக நாங்கள் பொருளாதாரப் பேரவையொன்றை நிறுவியுள்ளோம். பேராசிரியர் அனில் ஜயந்த, பேராசிரியர் ஜனத் குமாரசிங்க, கலாநிதி சாந்த ஜயரத்ன, பேராசிரியர் தயானந்த  மற்றும் எமது தோழர் சுனில் ஹந்துன்னெத்தி  இந்த பேரவையில் செயலாற்றி வருகிறார்கள். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான  கைத்தொழிலாளர்களின் துறை தோழர் சத்துரங்கவின் தலைமையில் நிறுவப்பட்டுள்ளது. எமது பாதுகாப்புப் பேரவை பற்றி ஒருசிலர் கேட்கிறார்கள் முன்னாள் ஜெனரல்மார்களை உள்ளடக்கிய பாதுகாப்புப் பேரவையொன்றை நாங்கள் இந்த முப்பதாந் திகதி நிறுவுவோம்.  அதைப்போலவே வெளிநாட்டு உறவுகள் பற்றியும் நாங்கள் கவனஞ்செலுத்தியுள்ளோம்.  இன்றைய உலகில் எம்மைப் பற்றிய மிகவும் அவலட்சணமான பிரதிபிம்பமே நிலவுகின்றது. நாம் இழந்துள்ள சர்வதேச பிரதிபிம்பத்தை மிகவும் பலம்பொருந்தியவகையில் உலகின் முன்னிலையில் மிளிரச் செய்விக்கின்ற வெளியுறவுக் கொள்கையொன்றை நாங்கள் அமுலாக்குவோம்.

இணைத்தளத்தை வருடினால் பிரசன்ன ரணதுங்க பற்றி நீதிமன்றத்தினால் இரண்டரைகோடி தண்டனை வழங்கப்பட்ட கப்பம்பெறுனர் என்றே இருக்கின்றது. சொக்கா மல்லீ பற்றித் தேடினால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவராவார்.  மகிந்த ராஜபக்ஷவின் பெயரை இணையத்தளத்தில் தேடினால் “நிவ்யோர்க் டைம்ஸ்”  செய்தித்தாளில் வெளியிட்ட சீனக் கம்பெனியொன்றிடமிருந்து இலஞ்சம் பெற்றார் என்ற தகவல் வெளியே வரும். நாமலின் பெயரை அடித்தால் “கிறிஸ் கொடுக்கல்வாங்கல்” பற்றி அவுஸ்திரேலியாவின் ஊடகவியலாளர் வெளியிட்ட தகவல் தொடரொன்று வெளியில் வருகின்றது.  உலகத்தார் முன்னிலையில் நாட்டின் நற்பெயரை கறைபடியச் செய்வித்த இவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. மனித உரிமைகள், சட்டம், மகளிர் உரிமைகள், முதியோர்களின் உரிமை போன்ற உலகத்தை வென்றெடுக்கின்ற  அளவுகோல்கள் இருக்கின்றன.  அவற்றுக்கிணங்க எமது சமூகத்தை முன்னேற்றவேண்டும்.  சமூகப் பாதுகாப்புமிக்க நாடாக கட்டியெழுப்பவேண்டும். அத்தகைய நாட்டுக்குத்தான் சுற்றுலாத்தொழிற்றுறையை விருத்திசெய்ய முடியும். இத்தகைய நாடுகளுக்கே வெளிநாட்டு முதலீடுகள் வரும்.   அதற்கான நேர்மையான ஊழலற்ற குழுவொன்று தேசிய மக்கள் சக்தியிடம் இருக்கின்றது.

தேசிய மக்கள் சக்தியின் பொறுப்பினை வகிக்க தெரிவுசெய்யப்பட்ட எவருமே தமக்கு தனிப்பட்டவகையில் எதனையும் பெற்றுக்கொள்வதற்காக வந்தவர்கள் அல்ல. முன்னரைவிட அதிகமாக எம்மைப் பார்க்கின்ற, விருப்பம் தெரிவிக்கின்ற மக்களே இன்று இருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை உறுதிசெய்துகொண்டு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில்  பெருவெற்றியை அடையவேண்டும். அடுத்த பொதுத் தேர்தலில் எமது அரசாங்கமொன்றை நிறுவுதல் பற்றிய சமிக்ஞை அந்த உள்ளூராட்சி தேர்தலில் வழங்கப்படல் வேண்டும். உள்ளூராட்சித் தேர்தலில் இந்த சமிக்ஞை சரிவர வழங்கப்பட்டால் மிகவும் குறுகிய காலத்தில் நிச்சயமாக பொதுத்தேர்தலில் எம்மால் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். நாங்கள் இந்த வேலையில் பிரவேசித்தது பகுதியளவிலான வெற்றியைப் பெறுவதற்காக அல்ல.  இந்த நாட்டை பேரழிவுக்கு உள்ளாக்கிய  இந்த நிலைமையிலிருந்து மீட்டெடுக்க வேறு எவருக்குமே முடியாது. நாமலின் மாமாவின் ஹோட்டலில் ஓர் இரவுக்கான அறை வாடகை “எயார் லங்கா” கம்பெனியின் விமானச்சீட்டு ஒன்றைவிட பல மடங்கு அதிகமானதாகும்.  விமானமொன்று தாமதித்தால் நாமலின் மாமாவின் ஹோட்டலிலேயே அறை வழங்கப்படுகின்றது. இவ்விதமாகத்தான் பிஸ்னஸ் நடைபெறுகின்றது. அப்படிப்பட்டவர்களால் இந்த நாட்டை மீட்டெடுக்க முடியுமா?

அமைச்சர்கள் செலுத்தியிராத லயிற் பில் பற்றி இந்நாட்களில் பேசப்படுகின்றது. அமைச்சர்களின் உத்தியோகபூர்வ வீடுகளின் பில் அமைச்சினால் செலுத்தப்படுகின்றது. அப்படியானால் எப்படி நிலுவை இருக்கலாம்? ஒருசிலர் அமைச்சர் பதவி இல்லாவிட்டாலும் உத்தியோகபூர்வ இல்லங்களிலேயே வசிக்கிறார்கள். எனினும் பில் அமைச்சினால் செலுத்தப்படுவதில்லை. அப்போதுதான் பற்றாக்குறை ஏற்படும். லயிற் பில் செலுத்தாதிருப்பது மாத்திரமல்ல. அவர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களிலும் பலவந்தமாகவே இருக்கிறார்கள். ஒருசிலர் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களில் இருப்பதற்காகவே அமைச்சர் பதவிகளை ஏற்கிறார்கள். நாமல் ராஜபக்ஷ தொப்புள் கொடியை அறுத்த நாளில் இருந்தே அரசாங்க இல்லங்களிலேயே வசிக்கிறார்.  மகிந்த கோட்டா தற்போது அரசாங்க இல்லங்களிலேயே  இருக்கிறார்கள். நிலக்கரி கொண்டுவர, எரிவாயு கொண்டுவர  இந்த சிரமமான தருணத்தில் வழங்கப்படுகின்ற உதவிகளிலிருந்தும் சூறையாடுகிறார்கள். இவர்கள் எத்தகைய ஆட்சியாளர்கள்? அதனால் அவர்களிடமிருந்து எமது நாட்டுக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ எந்தவிதமான எதிர்காலமும் கிடைக்கப்போவதில்லை. அதனால் இந்த கேடுகெட்ட கும்பலைத் தோற்கடித்து தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியொன்றை நிறுவ  நாமனைவருமே அணிதிரள்வோம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

Show More

கடன் மறுசீரமைப்பு என்பது பொருளாதாரப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பது என்பதல்ல…..

2022.09.29 – தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவையின் ஊடக சந்திப்பு தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைகள் குழுவின் தலைவர், பட்டயக் கணக்காளர், ஸ்ரீ ஜயவர்தனபுர  பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் அனில் ஜயந்த தேசிய மக்கள் சக்தியின்  பொருளாதாரப் பேரவை என்றவகையில் ஒரு நாடு அபிவிருத்தியை நோக்கி  பயணிக்கின்றமை, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைதல் போன்ற விடயங்கள் சம்பந்தமாக  விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரம் என்பது ஒரு நாட்டின் பண்டங்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி […]

2022.09.29 – தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவையின் ஊடக சந்திப்பு

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைகள் குழுவின் தலைவர், பட்டயக் கணக்காளர், ஸ்ரீ ஜயவர்தனபுர  பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் அனில் ஜயந்த

தேசிய மக்கள் சக்தியின்  பொருளாதாரப் பேரவை என்றவகையில் ஒரு நாடு அபிவிருத்தியை நோக்கி  பயணிக்கின்றமை, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைதல் போன்ற விடயங்கள் சம்பந்தமாக  விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரம் என்பது ஒரு நாட்டின் பண்டங்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்வதும், அதிலிருந்து பிறப்பிக்கப்படுகின்ற செல்வத்தை பகிர்ந்தளிப்பதும், தொழிவாய்ப்பினை உருவாக்குதல், வட்டி மற்றும் அந்நிய செலாவணி வீதத்தை தீர்மானித்தல், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு ஒதுக்கங்களை பேணிவருதல் போன்ற பல்வேறு விடயங்கள் ஒன்றடனொன்று இணைவதாகும். பொருளாதாரத்தில் நிலவுகின்ற உண்மையான பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடி சரியான திசையை நோக்கி  கொண்டுசெல்ல முயற்சி செய்வதற்குப் பதிலாக ஆட்சியாளர்கள் இற்றைவரை தரவுகளை திரிபுபடுத்தி  பிரதான பொருளாதாரப் பிரச்சினைகளை மூடிமறைப்பதையே செய்துவந்தார்கள்.  தேசிய மக்கள் சக்தி இயலுமான எல்லாவேளைகளிலும் நிலவுகின்ற யதார்த்தத்தை சுட்டிக்காட்ட நடவடிக்கை எடுத்தது. அதனாலேயே தற்போது நாட்டில் கூட்டாக நாமனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டுமென்ற புரிந்துணர்விற்கு வந்துள்ளோம்.  

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவையில் அந்தந்த உபதுறைகள் பற்றி அளவுசார்ரீதியான அறிவினைப் படைத்த புத்திஜீவிகள் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பொருளாதாரம் சம்பந்தமான ஏதேனும் முற்றாய்வுசார்ந்த   புலனாய்வினை மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக விஞ்ஞானரீதியான தகவல்களைக் கொண்டதாக விடயங்களை முன்வைக்கிறோம். நடப்பு நிலைமை பற்றி பகுப்பாய்வு செய்வதன் மூலமாக பெற்றுக்கொள்கின்ற விடயங்களுக்கிணங்க நாட்டில் நிலவுகின்ற மட்டுப்படுத்தப்பட்ட  வளங்களை முறைப்படி முகாமைசெய்து பொதுத்தேவைகளை நிவர்த்திசெய்தல் பற்றி பொதுமக்களுக்ககு விழிப்பூட்டி வருகிறோம்.  அதன் தொடக்கப் படிமுறையாக தெரிவு செய்யப்பட்ட துரிதமாக சமூகத்தின் கவனத்திற்கு இலக்காகவேண்டிய ஒருசில விடயஙகளை முன்வைக்கிறோம். இத்தருணமாகும்வேளையில் அரசாங்கம் தனது அதிகாரத்தை பேணிவரும் நோக்கத்துடன் தவிர்த்து வருகின்ற பொதுமக்களின் வாழ்க்கைக்கு தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடியின் பயங்கரமானதன்மை பற்றி  நாங்கள் வெளிப்படுத்த  தயார். பொருளாதார நெருக்கடிக்கு இந்த அரசாங்கம் அடிப்படையில் பொறுப்புக்கூற வேண்டியபோதிலும்  எவராலும் இந்த நெருக்கடியை தவிர்த்துச் செல்ல முடியாது.

அடிப்படையில் எடுத்துக்கொண்டால் நிலவுகின்ற கடன் சுமையை ஒரு நாடு என்றவகையில் தாங்கிக்கொள்ள முடியாது. வெளிநாட்டுக் கடன் பங்கு மிகவும் பெரிய அளவில் அதிகரித்துள்ளமை அதில் தாக்கமேற்படுத்தி உள்ளது. அதனால் கடன் மறுசீரமைத்தல் பற்றிய   பாரிய உரையாடல் தோன்றியுள்ளது. அரசாங்க அதிகாரத்தை எவர் வகித்தாலும், வகிக்க எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் அந்த எவருமே கடன் மறுசீரமைப்பினை செய்தே ஆகவேண்டும். கடன் மறுசீரமைப்பு செய்வதென்பது நாட்டின் அனைத்துப் பொருளாதார பிரச்சினைகளையும் தீர்த்துவைப்பது என்பதல்ல.  நாடு அபிவிருத்தியை நோக்கிச் செல்கிறது என்பதல்ல.  அடிப்படை அத்திவாரத்தை இட்டுக்கொள்ள,  மூச்செடுத்திட வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்வது என்பதாகும். இந்த உரையாடலில் சர்வதேச நாணய நிதியம் இடையீடு செய்துள்ளது. 1959 இல் இருந்தே நாங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் அங்கத்தவ நாடாவோம். அதன் அங்கத்தவர்களுக்கு கிடைக்கின்ற அனைத்துவிதமான சிறப்புரிமைகளும் எமக்கும் உரித்தானது. அவர்கள் தமது அங்கத்தவ நாடுகளுக்கு சென்மதி நிலுவை நெருக்கடியில் இருந்து விடுபட ஆலோசனை வழங்குதலையும் இடையீடு செய்தலையும் மேற்கொண்டு வருகிறார்கள். கடன் மறுசீரமைப்பு செய்வதற்கான நாணய நிதியம் இடையீடுசெய்து பேச்சுவார்த்தைகளை நடாத்துவது நல்லது.  ஆனால் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம்  அல்லது அதன் பயணப்பாதையை நாணய நிதியம் வழங்குவதில்லை. அது அவர்களின் செயற்பொறுப்பன்று. எமது நாட்டை முன்னேற்றியும் அதன் திசையை தீர்மானிப்பதையும் நாங்கள்தான் செய்யவேண்டும். ஆனால் இதுவரை அரசாங்கம் அதற்கான திட்டங்களை வகுக்கவில்லை.

கடன் மறுசீரமைப்பினை மேற்கொள்ள இலங்கைக்காக கிளிபட் சான்ஸ் மற்றும் லசாட் எனப்படுகின்ற  இரண்ட சர்வதேச நிறுவனங்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. கிளிபட் சான்ஸ் இடையீடுசெய்து  பூர்வாங்க பேச்சுவார்த்தையொன்றையும் நடாத்தியது.  அதன்போது தோன்றிய பல அடிப்படை விடயங்கள் மீது எமது கவனம் செலுத்தப்படல் வேண்டும். முதலில் அரசாங்க வருமானம் மற்றும் செலவினங்களுக்கிடையில் நிலவுகின்ற முதனிலை மீதி 2.3 நேர்க்கணியப் பெறுமதிவரை   2025 அளவில் கொண்டுசெல்ல முடியுமென அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் நிலவுகின்ற தகவல்களையும் தரவுகளையும் பகுப்பாய்வு செய்தவிடத்து அது இலகுவான கருமமல்லவென்பது எமக்கு விளங்குகின்றது.  இந்த நிலைமையை அடைந்தால் மாத்திரம் கடன்  நிலைபெறுதகு நிலைமையை அடையமுடியும். அதாவது செலுத்தவேண்டியுள்ள அளவினை தாக்குப்பிடிக்கக்கூடிய விதத்தில் அமைத்துக்கொள்வதாகும். நிலவுகின்ற நிலைமையின்கீழ் நாடுகளுக்கிணங்க கடன் பற்றிய சிக்கல் மாற்றமடைகின்றது. ஜப்பான் போன்ற நாட்டில் கடன்சுமை 250% ஆக அமைகின்றது.  ஆனால் அது அந்த நாட்டுக்கு தாக்குப்பிடிக்கக்கூடிய, செலுத்தக்கூடிய நிலைமையாகும்.  ஆனால் எமது போதியளவிலான வருமானம் ஈட்டப்படுதல் இல்லாமையால்  எமது கடன் நிலைபெறுதகுநிலை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100% விட குறைவானதாக இருக்கவேண்டும்.   அப்படியானால்  எவ்வாறு கடன் நிலைபெறுதகுநிலையை ஏற்படுத்திக்கொள்வது  என்பதற்கான திட்டத்தை தயாரித்துக்கொள்ள வேண்டும்.   அரசாங்கத்தின் பக்கத்தில் முதனிலை வரவசெலவு மீதி 2.3 நேர்க்கணியத்திற்கு செல்கின்ற விதம் தெளிவுபடுத்தப்படுவதில்லை.

இந்த நிலைமையில் அரசாங்கம் அரசாங்க வருமானத்தில் கடன்வட்டியை செலுத்துவதை நீக்கி ஏனைய செலவுகளுடன் மொத்த தேசிய உற்பத்தியுடன் இணக்கஞ்செய்து நேர்க்கணியப் பெறுமானத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்து வருவதாக எமக்கு சந்தேகம் தோன்றியுள்ளது. இந்த மீதி 2021 இல் 6%  எதிர்க்கணியமாகும். 2020 இல் 4.6 எதிர்க்கணியமாக இருந்தது. இன்னும் இரண்டு வருடங்களில் 2025 அளவில் எப்படி 2.3 நேர்கணியமாக மாறுவது? மத்திய வங்கிக்கிணங்க 2023 இல்  பற்றாக்குறை 8% எதிர்க்கணியமாக இருந்து   2024 இல் நேர்க்கணியமாக மாறி 2025 இல் கூறுகின்ற இந்த இலக்கிற்குச் செல்வதாக குறிப்பிட்டுள்ளது. இந்த நிலைமையில் எமக்கு தெளிவாவது வட்டி தவிர்ந்ததாக அரசாங்கத்தின் பாரிய செலவுச்சுமை வகிக்கப்படுகின்ற  அரச சம்பளம் செலுத்துதலை மக்களை துன்புறுத்தலுக்கு இலக்காகி வெட்டிவிடுவதற்கான வாய்ப்பு  நிலவுகின்றதென்பதாகும். செலவுகளை வெட்டிவிடுவது எனக்கூறி அந்த இடத்திற்கே வருவதாக நாங்கள் நினைக்கிறோம். எனினும் செலவுகளுக்குள்ளே மோசடிகள், ஊழல்கள், விரயம் அனைத்துமே இருக்கின்றன. செய்யவேண்டியது மோசடி, ஊழல், விரயத்தை  நீக்குவதேயொழிய சம்பளத்தைக் குறைப்பதல்ல.  இவர்கள் கூறகின்ற 2.3 நேர்க்கணிய இலக்கிற்குச் செல்லவேண்டுமாயின் வருமானத்தை அதிகரித்துக்கொண்டு செலவுகளை வெட்டிவிட வேண்டும். நிலவுகின்ற கட்டமைப்பிற்குள்ளே வருமானத்தை அதிகரித்துக் கொள்வதாயின் பொருளாதாரத்தை விரிவாக்க வேண்டும். நிலவுகின்ற சொச்சத் தேசிய செல்வத்தில் அதிகமாக ஈட்டிக்கொள்ள அரசாங்கம் செயலாற்றினால் பொதுமக்கள் மிகுந்த அழுத்தத்தை சந்திப்பார்கள். அதன் மூலமாக இடம்பெறுவது பொதுமக்களின் நன்மையன்றி அரசாங்கம் தப்பித்துக் கொள்வதாகும். அதற்காக வரிமேல் வரி வரவுள்ளது.  நிவாரணங்களை வெட்டிவிடுதல் மற்றும் மின்சாரக் கட்டணப் பட்டியல் , நீர்க் கட்டணப் பட்டியல் போன்ற அனைத்துவிதமான செலவுகளும் அதிகரிக்கப்பட உள்ளன.

 இந்த ஆபத்தினை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். விளங்கிக்கொள்வதன் மூலமாக நிலைவமையைத் தோற்கடித்திட வேண்டும். எந்தவோர் அரசாங்கத்திற்கும் அழிவுமிக்கவகையில் தேசிய வளங்களை விற்றொழித்திட முடியும். இன்றளவிலும் அதற்காக செயற்பாட்டுத் திட்டமொ்னறை அமுலாக்கியுள்ளது.   நாணய நிதியம் முன்வைத்துள்ள மற்றுமொரு நிபந்தனையாக அமைவது மின்சாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் சேவைகளின் கிரயத்தை உள்ளடக்கத்தக்கவகையில் விலைகள் நிர்ணயிக்கப்பட வேண்டுமென்பதாகும். ஆனால் இதன்மூலமாக  ஏதேனும் அழுத்தத்திற்கு இலக்காகின்ற குழுக்களுக்கு நிவாரணம் வழங்கவும் நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது. எனினும் கேஸ் விலை, எரிபொருள் மற்றும் மின்சார விலை என்பவற்றில்  அவற்றின் உண்மையான உற்பத்திக் கிரயத்திற்கு மேலதிகமாக மோசடிகள், ஊழல்களில் ஒரு பகுதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைகையில் ஐ.ஓ.சீ. கம்பெனி இவ்வருடத்தின் இரண்டாவது காலாண்டில் பத்து பில்லியன் ரூபா நிகர இலாபத்தை வெளிக்காட்டி இருப்பது இதனால்த்தான். மற்றுமொரு பக்கத்தில் மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை மற்றும் நிதிசார் உறுதிநிலைக்காக இடமளித்திட வேண்டும். தொழில்வாண்மைரீதியான பணிகளை மேற்கொள்ள மத்திய வங்கிக்கு ஏற்புடைய சுயாதீனத்தன்மை வழங்கப்பட வேண்டும். ஒரே நோக்கத்தில்   இருந்துகொண்டு  அரசாங்கத்தின் வரிக்கொள்கையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் இடமளி்க்க வேண்டும்.  ஆனால் அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ள அல்லது பெற்றுக்கொள்வதற்காக வரிக்கொள்கையைக் கூட்டிக்குறைத்து நிதிசார் கொள்கையை பலிகொடுக்கின்ற நிலைமையை நாங்கள் காண்கிறோம். இன்றைய நிலைமையின்படி மத்திய வங்கி அமுல்படுத்துகின்ற நிதிசார் தந்திரோபாயங்களுக்கு அரசாங்கம்  ஒத்துழைப்பு வழங்காத முரண்பாடு உருவாகக்கூடும். 

ஏற்கெனவே நாங்கள் நாணய நிதியத்திடமிருந்து பதினாறு தடவைகள் விரிவான நிதி வசதிகளைப் பெற்றுக்கொண்டு சென்மதி நிலுவையை சமப்படுத்தல் பற்றிய சிக்கல்களைத் தவிர்த்துக்கொண்டுள்ளோம். ஆனால் சிறியசிறிய திருத்தங்களை செய்தோமேயொழிய எமது நாடு முறையான பாதையில் அபிவிருத்தியை நோக்கிச் செல்லவில்லை.  இத்தடவை 290 கோடி டொலர் நான்கு வருடங்களுக்குள் கிடைக்கின்றது. பயணிக்கின்ற இந்த பயனப்பாதையின்பேரில் இந்த கடன் தொகையின் பேரில் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கமுடியுமென்ற முட்டாள்த்தனமான கருத்திற்குச் செல்லலாகாது. இந்த கடனை வழங்குகின்ற போது மேலோட்டமாக புலப்படாத அறவிடல்கள் இருக்கின்றன. வட்டி குறைவானதென்பது உண்மை. எனினும் தற்கோது வாக்குறுதி அளித்துள்ள 290 கோடிக்காக அதற்கு குறைவான தொகையை அரசாங்கம் அவர்களின் நிபந்தனைகளை ஈடேற்றுவதின்பேரில் பெற்றுக்கொடுத்தால் மொத்த கடன்தொகைக்குமே வட்டி அறவிடப்படும். அதைப்போலவே மறைவான சேவைகள் கட்டணமும் நிலவுகின்றது. நாங்கள் முதலாவது கடன் தவணையைப் பெற்றுக்கொண்ட  1964 இல் இருந்து கவனத்திற்கொண்டால் 1984 தொடக்கம் இற்றைவரை ஏறக்குறைய 350 கோடி கடன் தொகையே  வழங்கப்பட்டுள்ளது.   ஆனால் நாங்கள் அந்த காலப்பகுதிக்குள் செலுத்தியுள்ள மற்றும் வருங்காலத்தில் செலுத்தவுள்ள சேவைகள் கட்டணத்தையும் வட்டியையும் கணிப்பிட்டால் நூறு கோடி டொலருக்கு கிட்டிய அளவினை செலுத்த நேரிட்டுள்ளது.  நாணய நிதியம் எமது நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமையின்பேரில் ஊழலைக் குறைத்தல் சம்பந்தமாகவும் விடயங்களை சுட்டிக்காட்டி உள்ளது. கடன் நிலைபெறுதகு திட்டம் பற்றி இற்றைவரை அரசாங்கம் திட்டமொன்றை சமர்ப்பிக்காவிட்டாலும்  வெகுவிரைவில் திட்டமொன்றை சமர்ப்பிப்பதாக புலனாகவில்லை. இந்த நிலைமையின்கீழ் நெருக்கடியிலிருந்து  கரைசேர்வதைப் பார்க்கிலும் மென்மேலும் ஆழமாகி வருகின்றமை தெளிவாகின்றது. எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை நிலவுகின்ற நிலைமை பற்றி மக்களுக்கு விடயங்களை எடுத்துரைக்கும். அதனூடாக நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி பற்றி சிறந்த உரையாடலொன்றை உருவாக்கிகொள்ள நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

வரியை அதிகரிக்கச் சென்றால் பொருளாதாரம் மென்மேலும் சுருங்கும்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வியாபார கற்கைகள் பிரிவின் தலைவர் பேராசிரியர் ஜகத் குமாரசிங்க

இலவசக் கல்வி மூலமாக இந்த இடத்திற்கு வந்த எமக்கு நாட்டு மக்களுடன் சம்பந்தப்பட்ட அன்றாட சிக்கல்களின்போது ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் ஏற்படுகின்ற சிக்கல்களுடன் தொடர்புபடுவதற்கான பொறுப்பு இருக்கின்றது. பொருளாதாரம் தொடர்பான ஆராய்ச்சிகளிலிருந்து பெறப்படுகின்ற தரவுகள், அறிவு, தகவல்கள் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக  செயலமர்வுகளை நடாத்துதல் மற்றும் இத்தகைய ஊடக சந்திப்புகளின்போது விழிப்புணர்வூட்டுவது  அத்தகைய பொறுப்பின் ஒரு பகுதியாகும். மக்களின் அன்றாடப் பொருளாதாரம் போன்றே நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம்  பற்றி தொடர்ச்சியாக மக்களுக்கு விழிப்புணர்வூட்ட இந்த பொருளாதாரப் பேரவை மூலமாக நாங்கள் எதி்ர்பார்க்கிறோம். ஒருசில தரவுகள் கூருணர்வு மிக்கவையாகும். பொருளாதாரத்தை நெறிப்படுத்துபவர்கள் எவராக இருந்தாலும் பொருளாதாரத்தை நெறிப்படுத்துவதன் மூலமாக கிடைக்கின்ற நேர்க்கணிய அல்லது எதிர்க்கணிய பெறுபேறுகளை இறுதியாக அனுபவிப்பவர்கள் இந்நாட்டு மக்களாவர். பொருளாதாரம் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்ற, கருத்துக்களை வெளியிடுகின்ற, செயலமர்வுகளை நடாத்துகின்ற அனைவரைரயும் இந்த மேடைக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறோம்.  அரசாங்கத்திற்குக்கூட அவசியமான சந்தர்ப்பங்களில் நாங்கள் தரவுகள், ஊகங்களை வழங்கி  நிலவுகின்ற நெருக்கடியிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க எம்மை அர்ப்பணித்துள்ளோம்.  

நாணய நிதியத்திடமிருந்து ஏதேனும் நிவாரணத்தை நாங்கள் எதிர்பார்த்திருப்பின்  ஈடேற்றவேண்டிய அடிப்படை நிபந்தனைகள் மத்தியில் முதனிலை கணக்கின் நேர்க்கணிய மீதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த நிலைமையை எற்படுத்திக்கொள்ள வேண்டுமாயின் வருமானத்தை அதிகரித்துக்கொண்டு செலவினங்களை குறைத்துக்கொள்ள வேண்டிய விதம் பற்றி பேராசிரியர் அனில் ஜயந்த தெளிவுபடுத்தினார்.  எந்தவொரு நாட்டிலும் அரச வருமானத்தின் பிரதான தோற்றுவாய் நேர் மற்றும் மறைமுக வரியாகும். தற்போதும் எமது நாடு  பாரிய வரிச் சதவீதத்தைக்கொண்ட நாடாகும். சாதாரண ஆளொருவர் தனது  வருமானத்தில் ஏறக்குறைய 40% ஐ வரியாகச் செலுத்துகின்ற நிலைமையே காணப்படுகின்றது.  அரசாங்கத்தின் வரிகள் அதிகரிக்கப்பட முனைகின்றவேளையில் பொரளாதாரத்தின் ஏனைய பேரண்ட பொருளாதார விடயங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் பேரண்ட மாறிகள்  என அழைக்கப்படுகின்ற கடன் வட்டி வீதம், பணவீக்கம், அந்நிய செலாவணி விகிதம், தொழிலின்மை வீதம் போன்ற அனைத்துமே ஒன்றுடனொன்று தொடர்புபட்டவையாகும். இந்த ஒவ்வொரு மாறி மீதும் ஏற்படுத்தபடுத்தப்படுகின்ற  தாக்கம் அல்லது மாற்றம் எனைய பொருளாதார மாறிகள் மீது  கட்டாயமாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.  வரியை அதிகரிக்க முயற்சி செய்தால் அது நாட்டின் ஒட்டுமொத்த மக்களின்  வாழ்க்கையை நேரடியாகவே பாதிக்கின்றது.   அதைப்போலவே வட்டி வீதத்தை அதிகரிப்பதன் மூலமாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யப்பட்டு வருகின்றது. அது மத்திய வங்கியால் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கையாக அமைந்தது. அதன் மூலமாக பொருளாதாரத்திற்கு அதிர்ச்சியொன்று ஏற்படுத்தப்படுகின்றது.

அதன் மூலமாக பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அதிர்ச்சிகளால் ஏனைய மாறிகளுக்கு தாக்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.   பிரதானமான அதிர்ச்சி வணிகத் தொழில் முயற்சியாளர்களுக்கு ஏற்பட்டதாகும்.  வங்கிக்கடன் பெறுவதன் மூலமாகவே அவர்களின் மூலதனம் உருவாக்கப்படுகின்றது.   அதற்கான கிரயமொன்றை ஏற்க நேரிடும்.  அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடொன்றில் தொழில்முயற்சி  முதலீடுகளில்  இருந்து கிடைகின்ற நன்மைகளுக்குள்ளே அடங்கியுள்ள இலாபம்  மொத்தக் கிரயத்தில் 10% -15% இற்கு இடைப்பட்ட அளவிலாகும். ஆனால் இன்றளவில் வட்டி வீதம் 25% ஐ கடந்துவிட்டது. இந்த நிலைமையின்கீழ் வங்கிகளிடமிருந்து கடன்பெற்று  முதலீடு செய்து பெறப்படுகின்ற நன்மைகளின் இலாபம்  அவரது வங்கிக் கடனைச் செலுத்தக்கூட போதுமானதாக அமையமாட்டாது.  இதனால் தொழில் முயற்சிகள் அனைத்துமே உறுதியற்ற நிலைமைக்கு மாறியுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மாத்திரமன்றி பாரிய  அளவிலான தொழில் முயற்சிகள்கூட நிலைதடுமாறி உள்ளன.  புதியதாக தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பது நலிவடையச் செய்யப்பட்டுள்ளது. இதனால் எமது பொருளாதாரம் சுருங்கி வருகின்றது.  உலக வங்கி இது சம்பந்தமாக   செய்துள்ள எதிர்வுகூறலின்படி எதிர்வரும் ஆண்டில் 10 பில்லியன் டொலர்களை விஞ்சிய அளவில் இலங்கைப் பொருளாதாரம் சுருங்கக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  2023 ஆம் ஆண்டில் எமது பொருளாதாரம் 2011 இல் நிலவிய நிலைமைக்கு சரிந்துவிழுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசாங்கம் வரிகளை அதிகரித்துக்கொள்ள முயற்சி செய்வதன் மூலமாக  பொருளாதாரம் சுருங்குகின்ற வேகம் மேன்மேலும் துரிதமடையும். இதனால் எப்படியாவது தாக்குப்பிடித்துள்ள தொழில்முயற்சிகளுக்குக்கூட அச்சுறுத்தல் தோன்றக்கூடும். நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஒன்றுடனொன்று தொடர்புபட்ட பேரண்டப் பொருளாதார விடங்களுக்கிணங்க தொழில்முயற்சியாளர்கள் பெற்றுள்ள கடன்களுக்கான வட்டியைச் செலுத்துவதிலான பிரச்சினைகூட தோன்றக்கூடும். 

நாணய நிதியம் கடன் மறுசீரமைப்பிற்குச் செல்லுமாறு ஆலோசனை வழங்கவும் தற்போது கடன்தவணை மற்றும் வட்டியை செலுத்தமுடியாத நிலைமைக்கு  சரிந்து விழவும் வாய்ப்பு உண்டு. அத்தகைய நிலைமையில் பொருளாதாரத்தைக் மீட்டெடுக்கின்ற மற்றும்  பொருளாதாரத்தை முன்நோக்கிக் தள்ளுகின்ற வங்கிகளை உள்ளிட்ட நிதிமுறைமை போன்றே அதனோடு சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களும் பாரிய அபாயநேர்வுக்கு பயணிக்கக்கூடும்.   அதனால் இச்சந்தர்ப்பத்தில் மிகவும்  கவனமாக அபாயநேர்வு முகாமைத்துவத்தை மேற்கொள்வதில் அரசாங்கம் கவனஞ் செலுத்துதல் வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் எமது ஒட்டுமொத்த நிதி முறைமையும் கடுமையான அபாயநேர்வுக்கு இலக்காகக்கூடும். அத்தகைய நிலைமையானது மீண்டும் சரிசெய்துகொள்ள முடியாத பாதகவிளைவுகளைக் கொண்டுவரும்.  பொருளாதாரமொன்றின் நிதியாக்க வழிவகைகள் இவ்விதமாக  அபாயநேர்வுக்கு இலக்காகி உள்ளதைப்போலவே  வலுச்சக்தி பிறப்பாக்கமும் பாரிய ஆபத்தினை எதிர்நோக்கி உள்ளது. வலுச்சக்தி நாட்டின் தொழில்முயற்சிகளுக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் அத்தியாவசியமானதாகும்.  இன்றளவில் வலுச்கக்தி   வழங்கல் பாரதூரமான நெருக்கடியைச் சந்தித்துள்ளது.  பொருளாதாரத்திற்குள் மேலும் பல பிரதான விடயங்கள் பற்றி பேசக்கூடியபோதிலும் நிதி முறைமை மற்றும் வலுச்சக்தி வழங்கல் ஆகிய இரண்டு அடிப்படை விடயங்களுக்குள் பொருளாதாரம் மென்மேலும் படுகுழிக்குள் விழுகின்றதென்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். அதற்கான சரியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். வலுச்சக்தி வழங்கலில் உறுதிநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடன் பெறுவதில் பிரச்சினை கிடையாது. கடனை முதலீடுசெய்து பெற்றுக்கொண்ட நன்மைகள் யாவை, கடனை சரியாக முகாமைசெய்து  முதலீடு செய்தார்களா எனும் கேள்வி எழுகின்றது. கடனை முறைப்படி முதலீடு செய்திருப்பின்  கடன் மீளச்செலுத்துதல் பற்றிய பிரச்சினை தற்போது எழுந்திருக்கமாட்டாது. கடன்களிலிருந்து கிடைக்கின்ற நன்மைகள் பொருளாதாரத்தை நோக்கிப் பாய்ந்துவராமை அடிப்படை பிரச்சினையாகும். நிதி முறைமையின் பாதுகாப்பு சம்பந்தமாக அது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அது சம்பந்தமாக மிகவும் கவனமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. வலுச்சக்தி வழங்கலிலும் அப்படித்தான். இந்த இரண்டு பிரதான விடயங்களையும் முறைப்படி நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் நிலவுகின்ற மாறிகளை முறைப்படி முகாமை செய்யாவிட்டால்  எமது பொருளாதாரம் ஒரே இடத்தில் உக்கிப்போகின்றவேளையில் ஏனைய நாடுகளின் பொருளாதாரங்கள்  எம்மைக் கடந்து வேகமாக முன்நோக்கி நகரும்.  வியட்நாம்,  பங்களாதேஷ், இந்தியா என்பவை தக்க உதாரணங்களாகும்.  இந்த நிலைமையில் சந்தேகமின்றி எமது பொருளாதாரம் வீழ்ச்சியடைவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். அதன்போது நிதி முறைமைக்கும் வலுச்சக்தி வழங்கலுக்கும்  தனித்துவமான கவனத்தைச் செலுத்தவேண்டும்.

பொருளாதாரமொன்றின் பிரதாபன என்ஜின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் தொகுதியாகும். சுதேச உற்பத்திகளை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்லல், பெருந்தொகையான தொழில்வாய்ப்புகளை உருவாக்குதல் இந்த துறைகளிலேயே இடம்பெறுகின்றது. எனினும் நிதி முறைமையும் எரிபொருள் வழங்கலும் நலிவடைந்தால் எமது பொருளாதாரம் இதைவிட இருள்மயமான நிலைமையை அடையும். தற்போது உள்ள சமிக்ஞைகள் எவ்விதத்திலும் நலமானவை அல்ல. தொழிலின்மை வேகமாக அதிகரித்து வருகின்றது. இத்தகைய பொருளாதார நெருக்கடியின்போது ஏனைய உலக நாடுகள் முன்னுரிமை அளிக்கவேண்டிய வரிசைக்கிரமத்தை தயாரிக்கின்றன. இன்று எமது நாட்டில் பிரதானமானதாக அமைவது அரசியல் உறுதிநிலையை ஏற்படுத்துவதாகும்.  அரசியல் ஸ்திரத்தன்மை நிலவாத இடத்தில் பொருளாதார உறுதிநிலை தாக்குப்பிடிக்க மாட்டாது.  பொருளாதாரத்தை மீட்டெக்க  அரசியல் உறுதிநிலை மிகவும் விரைவாக ஏற்படுத்தப்படல் வேண்டும். பொருளாதாரம் முன்நோக்கி பயணிக்கையில் வலுச்சக்திக்கும் பொருளாதாரத்திற்கும் இடையில் நேரக்கணியத் தொடர்பு நிலவும். அதைப்போலவே மூலதனவாக்கத்தின் கிரயத்திற்கும் பொருளாதாரம் முன்நோக்கி நகர்வதற்கும் இடையில் தொடர்பு நிலவுகின்றது.  இந்த  மாறிகளுக்கிடையிலான தொடர்புகள் மீது தீவிர கவனஞ்செலுத்தி முதன்மைத்தானத்திற்கு அமைவாக  பொருளாதாரத்தை சரியான இடத்தைநோக்கி நகர்த்த வேண்டிய பொறுப்பு நிலவுகின்றது.  ஒரு நாடு என்றவகையில் நாங்கள் பொறுப்பினை ஏற்கத் தயார். அது சம்பந்தமாக தொடர்ச்சியாக விழிப்புணர்வூட்டுதலை மக்கள் மத்தியில் மேற்கொள்வதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். 

இந்த ஊடக சந்திப்பிற்காக இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தின் முன்னாள் முதநிலை ஆலோசகரும் இங்கிலாந்து றெடிங் பல்கலைக் கழகத்தின் முதுநிலை விரிவுரையாளருமான சாந்த ஜயரத்ன மற்றும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சுனில் ஹந்துன்னெத்தியும் பங்கேற்றனர். முதுநிலை விரிவுரையாளர் சாந்த ஜயரத்ன ஆங்கில மொழியில் விடயங்களை எடுத்துரைத்தார். 

Show More

நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெக்க நாமனைவரும் அணிதிரள வேண்டும்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திசாநாயக்க கோட்டாபய ராஜபக்ஷ மிகவும் பலம்வாய்ந்த தலைவரென எமக்கு எடுத்துக்காட்டி இருந்தார்கள். வெள்ளை வேன் கலாசாரம்,  ஊடகவியலாளர்களை கடத்திச் சென்ற, ஊடகவியலாளர்களை படுகொலைசெய்த ஒருவர் என்றவகையில் கோட்டாபய ராஜபக்ஷ சமூகமயப்படுத்தப்பட்டிருந்தார். ஆனால் என்ன நடந்தது? எமது வாழ்நாளில் கண்ட மிகப்பெரிய மக்கள் எழுச்சியின் மத்தியில் கள்ளத்தனமாக தப்பியோடவேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.  அவரிடம் சனாதிபதி அதிகாரம், பொலீஸாரை நெறிப்படுத்துகின்ற அதிகாரம், அமைச்சரவை, பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்தது. அவரது […]

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திசாநாயக்க

கோட்டாபய ராஜபக்ஷ மிகவும் பலம்வாய்ந்த தலைவரென எமக்கு எடுத்துக்காட்டி இருந்தார்கள். வெள்ளை வேன் கலாசாரம்,  ஊடகவியலாளர்களை கடத்திச் சென்ற, ஊடகவியலாளர்களை படுகொலைசெய்த ஒருவர் என்றவகையில் கோட்டாபய ராஜபக்ஷ சமூகமயப்படுத்தப்பட்டிருந்தார். ஆனால் என்ன நடந்தது? எமது வாழ்நாளில் கண்ட மிகப்பெரிய மக்கள் எழுச்சியின் மத்தியில் கள்ளத்தனமாக தப்பியோடவேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.  அவரிடம் சனாதிபதி அதிகாரம், பொலீஸாரை நெறிப்படுத்துகின்ற அதிகாரம், அமைச்சரவை, பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்தது. அவரது அண்ணன் பிரதமராகி இருந்தார். ஏனைய அண்ணன்மார்கள் அமைச்சர்களாகி இருந்தார்கள். இரண்டு மகன்மார்கள் அமைச்சர்களாகி இருந்தார்கள். அவையனைத்துமே இருந்தும் மக்களின் சக்தியின் மத்தியில் தப்பியோடவேண்டி நேரிட்டது.  இலங்கையில் முதல்த்தடவையாக  மக்களின் கண்ணெதிரில் அதிகாரம் தம்மிடமே இருக்கின்றதென்பதை காட்டியுள்ளார்கள். ஆனால் நீண்டகாலமாக ஆட்சியாளர்கள் மக்களின் அந்த பலத்தை வெளியே வரவிடாமல் அடக்கி வைத்திருந்தார்கள். அமைச்சருக்கு பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினருக்கு மாத்திரமன்றி பிரதேச சபை உறுப்பினருக்கும்  பயந்து வாழ்கின்ற மக்களை உருவாக்கி வைத்திருந்தார்கள். ஆனால் மக்களின் எழுச்சியின் மத்தியில் உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம் சாவு வீடொன்றுக்கு வரமுடியாத நிலை உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் மக்களால் அவர்களிடம் செல்ல முடியாது.  தற்போது அவர்களால் மக்களிடம் செல்ல முடியாது.

 பரந்துள்ள பலத்தை ஒழுங்கமைந்தவகையில் ஒருங்கிணைக்கவேண்டிய நிலையே எங்களுக்கு இருக்கின்றது. போராட்டம் பாரிய ஒரு அனுபவமாகும். மக்களின் பாரிய எழுச்சி இடம்பெற்றது. எனினும் பெறுபேறு பகுதியளவானதே.  பாராளுமன்றத்திற்கு வரக்கூட வாக்குகளைப் பெறமுடியாத ரனில் விக்கிரமசிங்க சனாதிபதியானார். அதனால் எவருக்கும் சிறியதோர் எதிர்பார்ப்புச் சிதைவு இருக்கின்றது. உச்ச வெற்றியை நோக்கிச் செல்லமுடியாமை  பற்றிய கவலை இருக்கின்றது. ஆனால் இரண்டாவது எழுச்சி தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்துடனும் நெறிப்படுத்தலுடனுமே இடம்பெறும். அதனாலேயே நாங்கள் ஒழுங்கமைய வேண்டும். பரவலாக ஆர்ப்பாட்டம் செய்து கூக்குரலிட்டு தமது வேதனையையும் கோபத்தையும் வெளிப்படுத்த மாத்திரமே முடியும்: பிரச்சினை தீர மாட்டாது. ஒழுங்கமைந்த சக்தியொன்றைக் கட்டியெழுப்புவதன் மூலமாக மாத்திரமே உண்மையான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்.  பெரும்பாலானவர்கள் பதற்றமடைந்தாலும்  நாங்கள் பதற்றமடையப் போவதில்லை. இலங்கையில் உள்ள அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் நாங்கள் தொகுதி அமைப்புகளை நிறுவுவோம்.

ஒழுங்கமைந்தவகையில், முறையான தலைமைத்துவத்துடன், சரியான நோக்கத்துடன்  இலக்கினை நோக்கி மக்கள் எழுச்சிபெற்றால்  உண்மையான வெற்றியை பெற்றுக்கொள்ள முடியும். பொதுவான தேர்தல் தேசப்படத்தைப் பார்த்தால் இந்த சனாதிபதிக்கு மேலும் இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட காலம் இருக்கின்றது. பாராளுமன்றம் மூன்று வருடங்களுக்கு சற்று குறைந்த காலத்திற்கு செல்லுபடியாகும். ஆனால் எம்மால் இனிமேலும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஆட்சிக் குழுக்கள் எமது நாட்டை முற்றாகவே நாசமாக்கி விட்டன. கடந்த ஏப்பிறல் 12 ஆந் திகதி  எமது நாட்டின் கறுப்புத் தினமாகும். நாங்கள் பெற்றுள்ள வெளிநாட்டுக் கடன்களை  இனிமேலும் செலுத்த முடியாதென மத்திய வங்கி ஆளுனர் தீர்மானமொன்றை வெளியிட்டார்.  அதாவது எமது நாடு வங்குரோத்து நிலையடைந்து விட்டதென்பதை உத்தியோகபூர்வரீதியாக அறிவிப்பதாகும். இலங்கை தற்போது உலகத்திற்கே கடனாளியாகி விட்டது. நிலைமை எளிமையானதல்ல. இந்த பயணப்பாதையின் இறுதிப் பாதகவிளை எமது நாடு வங்குரோத்து நிலையடைவதே என நாங்கள் நீண்டகாலமாக மக்களுக்கு கூறிவந்தோம். தற்போது ஒரு நாடு என்றவகையில் உத்தியோகபூர்வரீதியாக  கடனிறுக்க வகையற்றுப் போயுள்ளதென்பது வெளிப்படுத்தப்பட்டுவிட்டது.  இதனால் எந்தவொரு நாடும் எமக்கு கடன் தரமாட்டாது. சிறியசிறிய உதவிகளை வழங்குவது மாத்திரமே. தமிழ்நாட்டின் பிச்சைக்காரர்கள்கூட சேகரித்துக்கொண்ட பணத்தை எங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். புள்ளிவிபரங்களுக்குள்ளே மறைந்துள்ள நிலைமை மிகவும் பயங்கரமானது. எண்ணெய் வந்துவிட்டது என்பதற்காக பிரச்சினைகள் தீரவில்லை. ஏப்பிறல் மாதத்தில் இருந்து செலுத்தவேண்டியுள்ள வெளிநாட்டுக் கடனின் அளவு 2490 மில்லியன் டொலர்களாகும். மார்ச்சு மாதமளவில் கடனையும் செலுத்தி சிறிதளவு எண்ணெயையும் கொண்டு வந்தார்கள். செத்தெம்பர் மாதத்தில் கடனைச் செலுத்தாமல் எண்ணெய் சற்று அதிகமாக இருக்கிறது மாத்திரமே.  உண்மைநிலை எமது பொருளாதாரம் மார்ச்சு மாதத்தைவிட பயங்கரமானது. உலகின் எல்லா அமைப்புகளும் இது சம்பந்தமாக எச்சரிக்கை விடுத்திருந்தன.   

மத்தியவங்கி ஆளுனர் அண்மையில் மக்களின் முதலாவது எழுச்சியைப் பார்க்கிலும் இரண்டாவது எழுச்சி பயங்கரமானது எனக் கூறியிருந்தார். உணவு இன்மையால் இரண்டாவது எழுச்சி இடம்பெறுமெனவும் நாட்டில் பாரிய இரத்தவெள்ளம் பாயக்கூடுமெனவும்  மத்திய வங்கி ஆளுனர் நாட்டுக்கு கூறியுள்ளார். இந்த நிலைமையின்கீழ் தேர்தலுக்காக மேலும் மூன்று வருடங்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டுமா?   இந்த ஆட்சியாளர்கள்  பிரச்சினைகளை தீர்த்துவிடுவார்களென எவராலும் கூறமுடியுமா? பிள்ளை மயக்கமுற்று பாடசாலையில் விழுமாயின், புற்றுநோய்க்கு மருந்து இல்லாவிட்டால், உழவனுக்கு உரம் இல்லாவிட்டால் என்ன நேரும்? நிர்மாணத்துறையில் மாத்திரம் ஆறு இலட்சம் பேருக்கு தொழில்கள் அற்றுப்போய்விட்டன.  திறைசேரியில் பணம் இல்லாவிட்டாலும் மென்மேலும் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்செய்து  மக்களின் பணத்தை நாசமாக்குகிறார்கள். இந்த நிலைமையில் இருந்து நாட்டை மாற்றியமைக்க வேண்டியது நாம் அனைவருமே. மக்களுடன் உரையாடலை மேற்கொண்டு அவர்களுடன் கலை, இலக்கிய படைப்புகளை இரசித்திடக்கூடிய   மனித வாழ்க்கையை நாங்கள் உருவாக்கிட வேண்டும். அதற்காக தேசிய மக்கள் சக்தியின் கொடியை ஊரிலும் நாட்டிலும் வெற்றியீட்டச் செய்விக்க அனைவரும் ஒன்றுசேர்வோம்.  

தேர்தலை நடாத்துங்கள், இன்றேல் முழுநாட்டையுமே சிறைச்சாலையாக மாற்றிவிடுங்கள்

தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட நிறைவேற்றுச்சபை உறுப்பினர் சட்டத்தரணி தாரக்க நாணாயக்கார

முதலில் அழைப்புவிடுக்கப்படுகின்ற  எந்தவொரு தேர்தலிலும் அக்குரெஸ்ஸ தொகுதியை அமோக வெற்றியீட்டச் செய்விக்க தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாமனைவருமே எம்மை அர்ப்பணிக்கிறோம். ரனில் ராஜபக்ஷவை முதன்மையாகக்கொண்ட அரசாங்கம் அடக்கியாள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு  வருகையில் நாங்கள் சனநாயக வழியிலேயே இந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். அரச இரகசியங்கள் சட்டத்தின்படி எனக் கூறிக்கொண்டு வர்த்தமானி அறிவித்தல்களை பிரசுரித்து பலத்த பாதுகாப்பு வலயங்களை பிரகடனஞ் செய்துள்ளார்கள்.  சோஷலிஸ இளைஞர் சங்கத்தின் ஆர்ப்பாட்டப் பேரணி பலத்த பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசிக்காமல்  கறுவாத்தோட்ட பொலீஸாருக்கு முன்னறிவித்தல் வழங்கியிருந்த வேளையில் மிலேச்சத்தன்மான தாக்குதலை நடாத்தி  பெருந்தொகையானோரைக் கைதுசெய்தார்கள். கைதுசெய்யப்பட்ட அனைவருக்கும் நீதிமன்றம் ஏற்கெனவே பிணை வழங்கியுள்ளது. தோன்றுகின்ற மக்கள் ஆர்பாட்டங்களை நிறுத்துவதற்கான இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று புதிய ஆட்சியொன்றை அமைத்துக்கொள்ள மக்களுக்கு வாய்ப்பளிப்பதாகும். அப்படியில்லாவிட்டால் அங்குமிங்கும் பலத்தபாதுகாப்பு வலயங்களை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்குப் பதி்லாக முழு நாட்டையும் சிறைச்சாலையாக மாற்றி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதாகும்.  மக்கள் அந்த அளவிலான அழுத்தத்துடன்  தொடர்ந்தும் தாங்கிக்கொண்டு இருக்காமல் வீதியில் இறங்குவார்கள்.

பிள்ளை இழக்கின்ற சோற்றுப்பொதியின் உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டமொன்று இருக்கின்றது.

   

தேசிய மக்கள் சக்தியின் தேசிய  நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

பெண்கள் என்ற வகையிலும் ஒரு தாய் என்றவகையிலும் நான் பெருந்தொகையானோருடன் உரையாடி இருக்கிறேன். பாடசாலை ஆசிரியை என்றவகையில் அந்த பிள்ளைகளின் உண்மையான நிலைமை எனக்குத் தெரியும். பாடசாலையில் 15 நிமிட காலைவேளைக் கூட்டத்தை நடாத்த முடிவதில்லை. மயக்கமுற்று பிள்ளைகள் விழத்தொடங்குகிறார்கள்.  முன்னர் நாங்கள் அந்தப் பிள்ளைகளிடம் காலை உணவு உண்டீர்களா எனக் கேட்டோம்.  தற்போது பெருந்தொகையானோருக்கு காலையில் மாத்திரமல்ல இரவு உணவும் கிடையாது.  அதைப்போலவே ஐந்து நாட்களும் பாடசாலைக்குவர பஸ் கட்டணங்களை தாங்கிக்கொள்ள பெற்றோர்களால் முடியாதுள்ளது. உங்கள் பிள்ளை இழக்கின்ற சோற்றுப்பொதியின் உரிமை,   கல்விக்கான உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்காக நாங்கள் அனைவரும் குழுமியுள்ளோம். அது தனிப்பட்ட சிறப்புரிமைகள் அல்லது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டமல்ல. தற்போது இருப்பவர்கள் ஒரு நாடு என்றவகையில் அழுத்தத்திற்கு இலக்காகியுள்ள மக்களுக்கு உண்மையாகவே தீர்வுகளைக் கண்டறிவதற்காக புரிந்துணர்வுடன் ஒன்றுசேர்ந்துள்ள மக்களாவர். அதனால் சனநாயகரீதியாக மக்களுக்கு ஆட்சியை அமைத்துக்கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குமாறு அழுத்தம் கொடுக்கிறோம்.  அவ்வாறு இடம்பெறாவிட்டால் வீதியில் இறங்கி எமது உரிமையை வென்றெடுப்பதற்காக வீதிக்கு வருவோம் என்பதை வலியுறுத்துகிறோம்.

 அனைத்து விருதுகளையும் விட மக்களிடமிருந்து கிடைக்கின்ற  அன்பின் விருதிற்கு மதிப்பளிக்கிறோம்

பழம்பெரும் நடிகர் கலாநிதி பிரசன்னஜித்  அபேசூரிய

அதிகாரத்திற்கு வருகின்ற அரசியல் கட்சியால்  எமது வாழ்க்கை, எமது எதிர்காலம், எமது கல்வி மற்றும் எமது கலாசாரம் ஆகிய அனைத்துமே தீர்மானிக்கப்படுகின்றது. இற்றைவரை அதிகாரத்திற்கு வந்த எந்தவோர் அரசியல் கட்சியும் இந்த நாட்டையும் மக்களையும் நேசித்தவை அல்ல. அதனால்த்தான் இந்த நாடு இத்தகைய கவலைக்கிடமான நிலைமைக்கு வீழ்ந்துள்ளது. இந்த  நிலைமையின்கீழ் நாங்கள் எமது படைப்புக்களால் மாத்திரம்  மக்கள் முன் செல்வதில் பலனில்லை என்பதை விளங்கிகொண்டோம்.  இந்த நாடு மீது அன்பு செலுத்துகின்ற, இந்த நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய தெளிவான அரசியல் இயக்கத்திற்கு நாங்கள் எமது ஒத்துழைப்பினை வழங்கியே ஆகவேண்டுமென்பதை நாங்கள் விளங்கிக்கொண்டோம். அதனால் பயமின்றி, வெட்கமின்றி, வீதியில் இறங்கி பயணிக்கக் கூடியவகையில்  தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்தோம். இறுதித் தருணத்தில் நாங்கள் தவறிழைத்துவிட்டோம் என்ற பச்சாதாபமற்ற தீர்மனமொன்றை நான் தனிப்பட்டவகையில் எடுத்தேன். பல கலைஞர்கள் இந்த முடிவினை எடுத்துள்ளார்கள். நாம் பெற்றுள்ள ஏனைய விருதுகளைப் பார்க்கிலும்   தனிப்பட்ட வகையில் நான் தற்போது எமது அரசியல் காரணமாக மக்களிடமிருந்து கிடைக்கின்ற விருதினை பெரிதும் மதிக்கிறோம். மக்களிடமிருந்து கிடைக்கின்ற அந்த அன்பு  ஏனைய அனைத்து விருதுகளையும் பார்க்கிலும் என்றுமே கிடைத்திராத வகையில் தற்போது எமக்கு கிடைத்து வருகின்றது.  நான்பெற்ற மிகப்பெரிய விருது மக்களின் இந்த விருதாகும்.

 தேர்தல் தொகுதி மட்டத்தில் நாட்டை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை நாங்கள் தயாரிப்போம்

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி

இந்த நாட்டைப் பொறுப்பேற்று திருட்டுகள், மோசடிகள், ஊழல்களின்றி  தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென தற்போது பொதுமக்கள் அறிவார்கள். எமது வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, வெளிநாட்டுக் கடன் தொடர்பான சிக்கல் போன்றவை பற்றி எம்மிடம் கேட்கிறார்கள். மக்கள் எம்மீது அவ்வளவு நம்பிக்கையை வெளிப்படுத்தி நாடுபூராவிலும் எம்முடன் இணைந்து வருகிறார்கள்.   ஐக்கிய தேசிய கட்சியின் ரனில் விக்கிரமசிங்க, அந்த கட்சியில் இருந்து பிரிந்துசென்ற சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மைத்திரிபால சிறிசேன போன்ற பல்வேறு தலைவர்கள் இருக்கிறார்கள். எம்மிடம் இதற்கு முன்னர் புதிய கட்சிகளின் தலைவர்களைப்போல் எமது கட்சியின் தலைவர் யாரென எம்மிடம் கேட்டார்கள். இப்போது அநுர குமார திசாநாயக்கவிற்கு கூறுகிறார்கள் “இந்த நாட்டை சீக்கிரமாக ஒப்படைக்க நாங்கள் தயார். சீக்கிரமாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று. தேர்தலின்போது கிராம மட்டத்தில் எவருக்கு வாக்களிப்பது எனும் கேள்வியும் மக்களுக்கு இருக்கின்றது.  முழுநாட்டிலும்  இந்த கேள்விக்கு பதிலளிக்க அக்குரெஸ்ஸவில் தொடங்கி இருக்கிறார்கள்.  தேர்தல் தொகுதி அடிப்படையில் மாத்திரமன்றி  ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவு மட்டத்திலும் தொகுதி அமைப்பு தேசிய மக்கள் சக்தியால் அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளது. மாத்தறை மாவட்டத்தில் அக்குரெஸ்ஸ தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கு இனிமேல் அவ்வாறான கேள்வியொன்று கிடையாது. எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் மாத்தறை மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும்  நிறைவேற்றுச் சபையை பூர்த்திசெய்ய நாங்கள் நடவடிக்கை எடுப்போம். தேசிய மக்கள் சக்தியின்  அரசாங்கமொன்றில் சம்பந்தப்பட்ட தேர்தல் தொகுதிகளைக் கட்டியெழுப்ப, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். எமது பொதுவான பொருளாதார வேலைத்திட்டம் உற்பத்திப் பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்பி மக்களை அதனோடு தொடர்புபடுத்தி பெறுபேறுகளை பெற்றுக்கொடுப்பதாகும். அதற்கு அமைவாக ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் தரவுகளை சேகரித்து முறையான திட்டமொன்று வகுக்கப்படும். அந்த முன்மாதிரியை அக்குரெஸ்ஸவில் இருந்து முழுநாட்டுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடன் இல்லாத நாடு உருவாக்கப்படுகின்ற நாளில், அடிமையற்ற மனிதன்  உருவாக்கப்படுகின்ற நாளில் அந்த நாட்டை உருவாக்குகின்ற அசுர மனிதர்களாக நாங்கள் அனைவரும் மாறுவோமென கேட்டுக்கொள்கிறேன்.  

சரியாக திட்டமுறைமையின் ஊடாக ஐந்து வருடங்களில் இந்த நாட்டை மாற்றியமைத்திட முடியும்

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்  சட்டத்தரணி உபுல் குமரப்பெரும

ஒரு நாட்டின் சட்ட முறைமையின் திட்டவட்டமான தன்மையின் அத்திவாரம் நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பிரதான காரணியென ஒரு சட்டத்தரணி என்றவகையில் நான் கருதுகிறேன். இன்றளவில் இந்நாட்டில் சட்டமொன்று இருக்கின்றதா, சட்டமொன்று இருக்குமாயின் அது எந்த சட்டம் எனும் கேள்வி எழுந்துள்ளது. எமக்கு விளங்குகின்ற இடத்தில் இருந்து பேசுவதற்காக எளிமையான உதாரணமொன்றைக் கூறுகிறேன். எமது நாட்டில் சிறுவர் துர்ப்பிரயோக வழக்கு ஒன்றைத் தீர்த்துக்கொள்ள 15 வருடங்களாவது கழிகின்றது. 12 வயதுடைய சிறுமியொருத்தி துரப்பிரயோகத்திற்கு இலக்காகினால் பொலீஸில் முறைப்பாடுசெய்து, பொலீஸ் புலன் விசாரணைகளின் பின்னர் புலனாய்வு அறிக்கைகள்  சட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பின்னர் சட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களத்தினால் மேல்நீதிமன்றத்திற்கு குற்றப்பகர்வு சமர்ப்பிக்கப்படுகின்றது.  இந்த செயற்பாங்கு நிறைவடைகையில் அந்த சிறுமிக்கு வயது இருபதுகளாக மாறிவிடும். தனக்கு சிறிய வயதில் நேர்ந்த குற்றச்செய்ல் சம்பந்தமாக இவ்வளவு காலமாக நினைவில் இருக்குமா?  அதைப்போலவே அவர்கள் இளம் வயதில் வெட்கப்படுவார்கள். ஒரு சில சாட்சியங்கள் அழிந்துபோயிருக்கலாம். கண்ணால் கண்ட சாட்சியாளர்கள் இறந்திருக்கலாம். வேறு சாட்சிகளும் அழிந்திருக்கலாம். எமது நாட்டின் சட்ட முறைமையில் அத்தகைய பாரிய வழுக்கள் நிலவுகின்றன. அதைப்போலவே அரசதுறை நியமனங்கள் மற்றும் பதவியுயர்வு வழங்குதல் அரசியல் அழுத்தத்தின்பேரில் இடம்பெறுகின்றது. இந்த நிலைமையை மாற்றியமைத்திட வேண்டும். எமது ஆட்சியின்கீழ் எந்தவோர் அரச அலுவலருக்கும் பக்கச்சார்புடையவர்களாக செயலாற்ற இடமளிக்கமாட்டோம்.  அதைப்போலவே உங்களின் நண்பர்கள் பலர் தினந்தோறும் வெளிநாடு செல்லும்போது உங்களுக்கு வேதனை தோன்றவில்லையா?  நாங்கள் இந்த ஒட்டுமொத்த முறைமையையும் மாற்றிடுவோம். அதனை மாற்றயமைப்பதற்கான பலம், அதனை மாற்றியமைப்பதற்கான நேர்மை, மாற்றியமைப்பதற்கான திறன் மற்றும் ஆற்றல் இங்கே இருக்கின்றது. சரியான முறையியலின் கீழ்  ஐந்து வருடங்களுக்குள் இந்த நாட்டை மாற்றியமைக்க முடியும்.

Show More

கல்வியானது நெருக்கடிக்குச் சென்றிருந்தாலும் அரசாங்கத்தின் எந்தவிதமான கவனிப்பும் கிடையாது.

இந்த ஊடக கலந்துரையாடலின் தொடக்கத்திலேயே பேராதனை பல்கலைக்கழகத்தின் மாணவரொருவர் தற்கொலை புரிந்துகொண்ட கவலைக்கிடமான சம்பவம் தொடர்பில் பேச முற்படுகிறேன்.   அண்மைக்காலத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்  தற்கொலை புரிந்துகொண்டார்கள். இளைஞர் உயிரிழத்தலானது இந்த சமூகத்தைப் பற்றிச்  சிந்திக்கின்றவர்கள்மீது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. தற்கொலை புரிந்துகொள்வது மாத்திரமல்ல இளைஞர்களின் உயிர்கள் எவ்வகையில் இழக்கப்பட்டாலும் தாங்கிக்கொள்வது கடினமாகும்.  கல்வித்துறையில் பல்வேறு சிக்கல்கள் தோன்றி பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தீவிரமாக உளரீதியான அழுத்தம் ஏற்படுகின்ற நிலைமை தற்போதும் நிலவுகின்றது. நீண்டகாலமாக […]

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை அங்கத்தவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய

இந்த ஊடக கலந்துரையாடலின் தொடக்கத்திலேயே பேராதனை பல்கலைக்கழகத்தின் மாணவரொருவர் தற்கொலை புரிந்துகொண்ட கவலைக்கிடமான சம்பவம் தொடர்பில் பேச முற்படுகிறேன்.   அண்மைக்காலத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்  தற்கொலை புரிந்துகொண்டார்கள். இளைஞர் உயிரிழத்தலானது இந்த சமூகத்தைப் பற்றிச்  சிந்திக்கின்றவர்கள்மீது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. தற்கொலை புரிந்துகொள்வது மாத்திரமல்ல இளைஞர்களின் உயிர்கள் எவ்வகையில் இழக்கப்பட்டாலும் தாங்கிக்கொள்வது கடினமாகும். 

கல்வித்துறையில் பல்வேறு சிக்கல்கள் தோன்றி பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தீவிரமாக உளரீதியான அழுத்தம் ஏற்படுகின்ற நிலைமை தற்போதும் நிலவுகின்றது. நீண்டகாலமாக கல்வி பற்றிய பொறுப்பு மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது. அதற்கு மேலதிகமாக ஏறக்குறைய இரண்டரை வருடங்கள் முறையான கல்வி இடம்பெறவில்லை. கல்வி என்பது தகவல் பரிமாற்றம் மற்றும் பரீட்சைத் திட்டம் மாத்திரமல்ல:  சமூகநல செயற்பாங்கு, வாழ்க்கையை எதிர்கொள்ளல், அறிவு, ஆளுமை விருத்தி ஆகிய அனைத்துமே கிடைக்கவேண்டிய ஒன்றாகும்.  எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது என்றவகையிலேயே எமது கல்விச் செயற்பாடு பேணிவரப்படுகின்றது. பரீட்சையொன்றை நடாத்தி பெறுபெறுகளை வெளியிடுதல், பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக்கொள்ளல் ஆகிய அனைத்துமே நெருக்கடியானவை.  அது பற்றிய நம்பிக்கை முற்றாகவே சிதைந்துவிட்டது.  பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டபின்னர்   மக்கள் பிரதிநிதிகளுக்கு மாணவர்களின் மனக்குறைகள்  அதிகமாக கிடைக்கின்றன. கல்விச் செயற்பாங்கு சீரழிந்துள்ளநிலையில் ஏனோதானோ என்று பரீட்சைகள் நடாத்தப்பட்டு பெறுபேறுகள்  வெளியிடப்படுகின்றன.  உரிய தரத்திற்கிணங்க உரிய காலங்களில் நடாத்தப்படுவதில்லை. உயர்தர பெறுபேறுகள் வெளியிட நீண்டகாலம் கழிந்தது.  பரீட்சைகளை நடாத்துகின்ற காலம் சம்பந்தமாகவும் நெருக்கடிகள் தோன்றியுள்ளன. இவையனைத்தினூடாகவும் பிள்ளைகள் பாரிய அழுத்தத்திற்கு இலக்காகிறார்கள். கொவிட் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்ட பின்னர் பொருளாதார நெருக்கடி காரணமாக மற்றுமொரு பக்கத்தில் புதிய நெருக்கடிகள் தோன்றியுள்ளன.

 பிள்ளைகள்  உணவின்றி பாடசாலைக்கு வருவது அதிகமாக பதிவாகின்றது.  பிள்ளைகள் மயங்கி விழுகிறார்கள். இத்தகைய நிலைமையின்கீழ் பிள்ளைகள் எவ்வாறு கல்வி கற்பது என்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு எந்தவிதமான கரிசனையும் கிடையாது. குடும்பங்களில் பொருளாதார அழுத்தங்கள் அதிகரித்ததால் பிள்ளைகளின் கல்வி, ஆசிரியர்கள், பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்கள் ஆகிய அனைவருக்குமே பாதிப்பு ஏற்படுகின்றது. முதலாம் வகுப்பில் இருந்து உயர்தரம் வரை இந்த அழுத்தம் நிலவுகின்றது. ஆனால் அரசாங்கம் இவையெதுவுமே  இல்லாதவகையில் செயலாற்றி பின்லாந்தின் கல்வி மாதிரியை இங்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றது.  அதைவிட பற்றியெரிகின்ற பிரச்சினைகள் கல்வித்துறையில் நிலவுகின்றன.  பாரிய மனஅழுத்தம் மற்றும் பிரச்சினைகளுடனேயே கல்வித்துறை இயங்கி வருகின்றது. இத்தருணத்தில் அவசியமாவது கல்விச் சீர்திருத்தமா அல்லது  நிலவுகின்ற சிக்கல்களுக்கு திட்டவட்டமான நடைமுறைச்சாத்தியமான தீர்வுகளா என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும். முன்பு இருந்ததைப் பார்க்கிலும் தீவிரமடைந்துள்ள உளச் சுகாதாரப்  பிரச்சினைகள்,  உளச் சமூகப் பிரச்சினைகள் சம்பந்தமாக கல்வித்துறையில் முதன்மைக் கவனம் செலுத்தப்படவேண்டியது அவசியமாகும். கல்வியின் பொறுப்பு வகுப்புகளை நடாத்துவது மாத்திரமல்ல. நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு  தீர்வுகளைக் கண்டறிதல், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக முறைமைக்குள் உளச் சுகாதார மற்றும் உளச்சமூக நெருக்கடிகள் பற்றியும்  முதன்மையான இடையீடு அவசியமாகின்றது.    

இதற்கு முன்னரும் எமது நாட்டில் தற்கொலை புரிந்துகொள்ளல் உலகின் முதலாவது இடத்திற்கு வந்திருந்தது. இன்றளவில் அந்த நிலைமை மருத்துவ இடையீடுகளினூடாக உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள  இயலுமானதாக அமைந்திருந்தாலும் தற்கொலை முயற்சிகள் குறைவடைந்துள்ளனவா எனும் கேள்வி தோன்றியுள்ளது. அது சம்பந்தமான  சரியான தரவுகள் கிடையாது.  உளச் சுகாதாரம் பற்றிய நம்பிக்கையான தரவுகள் கிடையாது. குறிப்பாக கல்வித்துறையில் தீர்மானங்களை மேற்கொள்ள தரவுகள் அத்தியாவசியமானவை.  இளம் உயிர்களின் உளரீதியான அமைதி மற்றும் உளச் சமூக நல்வழியுரிமைக்காக இடையீடுசெய்யவேண்டிய பாரிய பொறுப்பு கல்வித்துறைக்கு இருக்கின்றது. இந்த யதார்த்தத்தை  விளங்கிக்கொண்டு பிரச்சினையைத் தீர்ப்பதில் அரசாங்கம் முதன்மைத்தானம் வழங்கவேண்டும். அதைப்போலவே இந்த துறையைச் சேர்ந்த தொழிற்சங்கங்களுக்கு இது சம்பந்தமாக இடையீடு செய்வதற்கான விசேட பொறுப்பு இருக்கின்றது. கல்வித்துறையில் அவர்களின் இடையீடு அத்தியாவசியமானதாகும். அது தொடர்பில் கூருணர்வு படைத்தவர்களாக சமூக வலைத்தளங்களில் இது சம்பந்தமாக கருத்துரைக்கையில் கவனமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  அநாவசியமான கவனத்தைச் செலுத்துவதன் மூலமாக வீரத்தை  உருவாக்கிக்கொள்ளல் அல்லது இரக்கத்திற்கு இலக்காகின்ற இரு துருவங்களில் வீழ்ந்துவிடலாகாது. பிரதான ஊடகத்திலும் இது சம்பந்தமாக அறிக்கையிடுகையில் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம். அவையனைத்திற்குள்ளேயும் தனித்துவமானமுறையில் கல்வி அதிகாரிகள் இடையீடு செய்யவேண்டும். பரீட்சைகளை நடாத்துவதை மாத்திரம் இலக்காகக்கொண்டு செயற்படலாகாது. 

கல்வி எமது வாழ்க்கையை எம்மிடமிருந்து பறித்தெடுக்கின்ற செயற்பாடாக மாற்றப்பட்டுவிட்டது.  

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நிறைவேற்றுச்சபை உறுப்பினர் கலாநிதி சித்துமிண ரத்னமலல

 கல்வி சம்பந்தமாக மரபு ரீதியான “சுண்ணாம்பு வட்டம்” கதையில் கயிற்றுப் பாலத்தில் அக்கரை நோக்கிச் செல்கின்ற க்ரூஷா  கூறிய ” எமக்கு மகனே வழியில்லை, இந்த வழியைத்தவிர போ மகனே” என்ற நிலைமையே ஆராயப்பட்டிருந்தது. எமது கல்வி சம்பந்தமாக வடக்கிலிருந்து தெற்கு வரை  கண்டது அவ்வாறுதான். ஒரு குடும்பம் என்றவகையில், சமூகம் என்றவகையில் மற்றும் நாடு என்றவகையில் கரைசேரவுள்ள ஒரே வழி கல்வியே எனக் கண்டார்கள். எமக்கு பலம் சேர்த்த, நாங்கள் நம்பிக்கை வைத்த கல்வியானது குறுங்கால மற்றும் நெடுங்காலரீதியாக தீர்வுகாணக்கூடிய நெருக்கடியான நிலைமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.  நேர்மையாகக் கூறுவதாயின் எமது மீட்பைப் பார்க்கிலும் சாபக்கேடாக தற்போது மாற்றப்பட்டுள்ளது. பாடசாலை தொடக்கம் பல்கலைக்கழகம் வரை கல்வி ஒரு சுமையாக மாறிவிட்டது. தாங்கிக்கொள்ள முடியாத மட்டத்தில் மிகப்பெரிய மனஅழுத்தத்தை ஏற்படுத்தி எமது ஓய்வுநேரத்தையும் எமது வாழ்க்கையையும் எம்மிடமிருந்து பறித்தெடுக்கின்ற கூருணர்வினை மிகவும் தாழ்ந்த நிலைக்கு வீழ்த்துகின்ற செயற்பாங்காக மாற்றப்பட்டுள்ளது. பெரும்பாலான  பெற்றோர்கள், பிள்ளைகள், ஆசிரியர்கள் எப்படியாவது சிலபஸ்ஸை கவர் பண்ணி  பரீட்சையிலிருந்து கரைசேர்வதை மாத்திரமே நினைக்கிறார்கள்.

எனினும் இன்றளவில் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஆலோசகர் என்றவகையில் தாங்கிக்கொள்ள முடியாத மட்டத்திலான பிரச்சினையாக கல்வியை மாற்றியுள்ளமையையே நான் அனுபவித்து வருகிறேன். இற்றைக்கு ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்னர்   பல்கலைக்கழக மாணவர்களுக்கு உள்ள பிரச்சினைகள் சம்பந்தமாக தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்காக வருகைதந்த குழுவினரைப்போல் பத்து மடங்கிற்கு கிட்டிய எண்ணிக்கையுடையோர் தற்போது வருகிறார்கள். இது எளிதில் கரைசேர முடியாத நிலைமையாகும். இத்தருணத்தில் தோன்றியுள்ள மிகவும் பாரதூரமான நிலைமை பற்றி குறுங்காலரீதியாக போன்றே நீண்டகால தீர்வுகளையும் நாடவேண்டும். நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் உறுதியற்றநிலையுடன்  அதன் பின்னால் நிலவிய சீரழிவினைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மில்லியன் கணக்கான இளைஞர்களும் சாதாரண பொது மக்களும்   போராட்டம் நடாத்தினார்கள் என்பது பகுப்பாய்வுரீதியாக பேசப்படுவதில்லை. அந்த உரையாடல் வெகுவிரைவில் மேற்கொள்ளப்படல் வேண்டும். கல்வியூடாக பிள்ளைகள் ஏன் பாதிப்படைய வேண்டும்? கல்வியால் அடையக்கூடியது என்ன? இந்த இரண்டு அடிப்படை  பிரச்சினைகள் பற்றிய உரையாடலை விரைவில் மேற்கொண்டு பதில் பெற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் தமது அன்றாடப் பணிகளைக்கூட புரியமுடியாத மட்டத்திற்கு வீழ்ந்துள்ளமை  பொருளாதார நெருக்கடிக்கு பதில்தேட முனைகையில்  ஒரு சமூகமென்றவகையில் உருவாகியுள்ள மனஅழுத்தத்தின் பெறுபேறாகும்.  ஒருவரையொருவர்  விளங்கிக்கொள்கின்ற ஆற்றல் மிகவும் தீய மட்டத்திற்கு குறைவடைந்துள்ளது. பெற்றோர் தமது பிள்ளைகளை நோக்குவதைப் பார்க்கிலும்  அந்த பிள்ளைகளின் அடிப்படைத்தேவைகளை ஈடேற்ற அதிக  நேரத்தை அர்ப்பணிக்க நேர்ந்துள்ளது. அடுத்த தலைமுறையினருக்காக பெற்றோர்களும் முதியவர்களும் பிள்ளைகளின் அடிப்படை பௌதீக அவசியப்பாடுகளை ஈடேற்றுவதற்கு அப்பால்சென்ற உளத்தேவைகளை ஈடேற்றுவதையும் அடிப்படையாகக்கொண்டே சிந்திக்க வேண்டும்.  அதற்குப் பொருத்தமான சூழல் இந்நாட்டின் பெற்றோர்களுக்கு இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது. இந்த வெளிப்படைத்தன்மை இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது.  

இந்த நிலைமை தற்செயலாக ஏற்பட்டதொன்றல்ல.  இன்றளவில் ஒரு மனிதனுக்கு மூன்றுவேளையை ஓட்டிக்கொள்வதற்காக பல வருமான வழிவகைகளை தேடிக்கொள்ள நேர்ந்துள்ளது. இதனால் அவர்கள் உளரீதியாக மிகுந்த கூருணவற்று போயுள்ளார்கள். இவையனைத்துமே பிள்ளைகள்மீது பாய்ந்து செல்கின்றது. பிள்ளைகள் மீது ஏவப்படுகின்ற அழுத்தத்தினால் அவர்கள் நிர்க்க்கதியுறுகின்ற நிலைமை சமூகம் சீரழிகின்ற அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்பட முடியும். வெகுவிரைவில் இந்த நிலைமைக்கு தீர்வகாண வேண்டும். அரசாங்கம் இந்த பொறுப்பிலிருந்து விலகிச்செல்ல முடியாது. இதனை முக்கியமான விடயமாக கருதாமைவரை மிகவும் மோசமான நிலைமைக்கு அரசாங்கத்தினால் இழுத்துப்போடப்பட்டுள்ளது. உதாரணமாக இற்றைக்கு ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன்னர் நிலவிய இடவசதிக்குள்ளேயே பல்கலைக்கழகங்களுக்கு  அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை சேர்த்துக்கொண்டுள்ளார்கள்.  ஆய்வுகூட வசதிகளை உள்ளிட்ட ஏனைய பௌதீக வசதிகளும் அவ்வண்ணமே நிலவுகின்றன. இது தரமான கல்வி இடம்பெறாமைக்கான அடிப்படைக் காரணமாகும்.  ரூபா 5000 கிடைக்கின்ற மகாபொல புலமைப் பரிசில் தொகையைக்கொண்டு 16 இறாத்தல் பாண் மாத்திரமே வாங்கலாம். ஒரு மாதத்திற்காக கிடைக்கின்ற மகாபொலவில் இருந்து அதைவிட ஒன்றையுமே சாதிக்க முடியாது. ஒரு வறிய நாடு என்றவகையில் அதிலிருந்து விடுபடுவதற்காக உள்ள அடிப்படை உபாயமார்க்கம் கல்வியே என்பதை அறிந்த ஆட்சியாளர்கள் அதற்காக கொடுக்கின்ற முதன்மைத்தானத்தை மகாபொல உதவுதொகையிலிருந்தே விளங்கிக்கொள்ள முடியும். பிள்ளைகளும் பெற்றோர்களும் எந்தளவு மனஅழுத்தத்துடன்  இருக்கிறார்கள்   என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.  

பஸ் கட்டணம், போடிங் கட்டணம் அண்மையில் இருந்த செலவினைவிட பத்து மடங்குகளால் அதிகரித்துள்ளது. அந்த நிலைமையில் முறையான மனோநிலையுடன் பிள்ளைகளால் கல்விகற்ற இயலாது. இந்த நிலைமையின்கீழ் அவர்களை கல்வி கற்குமாறு நிர்ப்பந்திப்பது  தவறானதாகும். அதனை மனிதனால் தாங்கிக்கொள்ள முடியாது. மாணவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. இந்த சமூக பொருளாதார முறைக்குள்ளே அடுத்தவனுக்கு பக்கபலமாக அமைந்திட, நட்புறவினைப் பேணிவர, கூருணர்வுமிக்வராக இருக்க, ஒத்துணர்வினை உணர, அவசியமான தரமான கல்வி வழங்கப்படவில்லை. பாடங்களுக்கு ஏற்ப மனப்பாடம் செய்கின்ற பரீட்சைத் திட்டம் பற்றி  குறிப்பாக உயர்தர கணிதப் பாடநெறி மூலமாக விளங்கிக்கொள்ள முடியும். ஒருவிதமாக பாடத்திட்டத்திற்குள்ளே மனனம்செய்து பரீட்சைகளில் சித்தியடைகின்ற திட்டமே நிலவுகின்றது. கேள்விகளுக்கு பதில் தேடுகின்ற படைக்குந்திறன்மிக்க முறைகள் கல்விக்குள்ஆள புகட்டப்படாவிட்டால், கடமைகள் மற்றும் உரிமைகள் பற்றி  புகட்டப்படாவிட்டால்  எவ்வாறு ஒரு மனிதனைக் கட்டியெழுப்புவது? தனக்கும் பிறருக்கும் பக்கபலமாக அமைந்து வாழ எவ்வாறு கற்பிப்பது? இந்த கல்வித் திட்டத்திற்குள்ளே மனிதனுக்கு பெற்றுக்கொடுக்கவேண்டிய குறைந்தபட்ச சமூக மற்றும் உளவியல்சார்ந்த தனிநபர்சார்ந்த விடயங்கள் முழுமையாகவே பொருட்படுத்தாமல் விடப்பட்டுள்ளன. மிகவும் கடினமான, மனிதாபிமானமற்ற கல்வியாகும். ஒரு பிரச்சினைக்கான தீர்வுகாண  மிகவும் மரபுரீதியான சட்டகத்திற்குள்ளே சிந்தித்து ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. புதியவற்றைப் புனைந்திட புதுவிதமாக சிந்திக்கக்கூடியதாக அமைதல் வேண்டும்.  

புதிதாக சிந்திக்கின்ற மனிதர்களை கட்டியெழுப்புகின்ற கல்வித்திட்டமொன்று எமக்குத்தேவை. குறுங்காலரீதியாகவும்  நீண்டகாலரீதியாகவும் மனிதர்கள் என்றவகையில் கூருணர்வுபடைத்த ஏனைய மனிதர்களையும் தாங்கிக்கொள்ளக்கூடிய சமூகமொன்றைக் கட்டியெழுப்ப பொருத்தமான கல்வியொன்று இல்லாதவரை நாங்கள் மனிதர்களாக முடியாது. சுதந்திரமாகாத மனிதர்களைக்கொண்டு இந்த நாடு முன்நோக்கி நகர முடியாது.  அதனால் நாங்கள் இது சம்பந்தமாக தீவிரமான கவனத்தைச் செலுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் சீக்கிரமாகவும் நீண்டகால ரீதியாகவும் ஒன்றுசேர்வோமென அழைப்புவிடுக்கிறோம்.   

பிள்ளைகளைப் பேணிப்பாதுகாத்திட வேகமான இடையீடு அவசியமாகும். 

மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ

கல்வி என்பது மனம் சம்பந்தப்பட்ட ஒரு செயற்பாடாகும். சிறந்த கல்வியைப் பெற்றுக்கொள்ள தேகாரோக்கியமும் உளரீதியான சமநிலையும் நிலவவேண்டும். அதனால்த்தான்  புத்தரின் போதனையில் “சப்பே சத்தா ஆகாரட்டித்திகா” என கூறப்படுகின்றது.  குறிப்பாக பாடசாலைப் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய மனோநிலை உள்ளதாவென்பது பாரதூரமான பிரச்சினையாகும்.  சுகாதார அமைச்சின் தரவுகளை அடிப்படையாகக்கொண்டு யுனிசெப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையொன்றில் உலகில் சிறுவர் போசாக்கின்மையில் ஆறாவது இடமும்  ஆசியாவில் இரண்டாவது இடமும்  எமது நாட்டுக்கு கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கொழும்பு றிஜ்வே சீமாட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்ற பிள்ளைகளில் 20% போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  அதில் அரைவாசியினர் படுமோசமான போசாக்கின்மையால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் மதிப்பாய்வொன்று மூலமாக மருத்துவர்கள் வெளிப்படுத்தி இருந்தார்கள். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பிள்ளைகளில் 80% போசாக்கின்மையால்  அல்லற்படுவதாக பிரதிச் சுகாதாரப் பணிப்பாளரொருவரான டாக்டர் சமல் சஞ்சீவ கூறியுள்ளார். அதில் 30%  கடுமையான போசாக்கின்மையால் அவதிப்படுவதாகவும் கூறியுள்ளார். சனாதிபதி, பிரதமரை முதன்மையாகக்கொண்ட அரசாங்கம்   இந்த தரவுகள் பற்றி கவனஞ் செலுத்துவதில்லை. இந்த தரவுகளை பெரும்பாலும் அவர்கள் நிராகரிக்கிறார்கள்.

பாடசாலைப் பிள்ளைகள் உணவு பெற்றுக்கொள்கின்ற விதம் பற்றி  பல ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. பாராளுமன்றம் அமைந்துள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயத்தில் பாடசாலைப் பிள்ளைகள் மிளகாய்த் தூள் கலந்த சோற்றுப்பொதியைக் கொண்டுவந்ததாகவும் ஒருசில பிள்ளைகள் புத்தருக்கு படைத்த உணவை உண்டதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர் கூறியிருந்தார்.  கம்பஹா மாவட்டத்தில் மினுவங்கொட வலயத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றில் ஒரு சிறுமி மதிய உணவுக்காக தேங்காய் பருப்பு கொண்டுவந்திருந்ததாக ஊடகங்கள் அறிவித்திருந்தன. அதைப்போலவே “தந்திரிமலையில் ஒருசில பாடசாலைகளில் பிள்ளைகள் மயக்கமுற்று வீழந்தமையால் கூட்டம் மட்டுப்படுத்தப்பட்டது, ஒருசில பிள்ளைகள் இரவு – காலை இரண்டிலுமே உண்ணவில்லை” என 22 ஆந் திகதி செய்தித்தாள் ஒன்றில்  இருக்கின்றது. இங்கு இருப்பது அறிக்கை செய்யப்படுகின்ற சம்பவங்கள் மாத்திரமே. அறிக்கை செய்யப்படுகின்ற சம்பவங்களுக்கும் அரசாங்கத்தின் பிரதிபலிப்பாக அமைவது நிராகரிப்பதாகும். மினுவங்கொட சம்பவம் தொடர்பாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஊடக செயலாளர் அறிவித்தலொன்றை வெளியிட்டு அந்த சம்பவத்தை நிராகரித்துள்ளார்.   யுனிசெப் அறிக்கையையும் நிராகரித்துள்ளார். சூரியவெவ மதிப்பாய்வு சம்பந்தமாக   சுகாதார மருத்துவ உத்தியோகத்தருக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருப்பதாக பதிவாகின்றது. இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புகையில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஏறக்குறைய 43 இலட்சம் பாடசாலை பிள்ளைகளில் ஒருசிலர் சம்பந்தமான இந்த அறிக்கையை பொருட்படுத்த வேண்டியதில்லை என பதிலளித்தார். இந்த அறிக்கைகளிலிருந்து பிள்ளைகளின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதென்பதை அரசாங்கம்   ஏற்றுக்கொள்ள வேண்டும். நிர்மாணத்துறையில் 90% நின்றுவிட்டு அரச ஊழியர்களுக்காக சம்பளம் செலுத்த  பணம் கிடையாதென பந்துல குணவர்தன கூறியுள்ள பின்னணியில், தம்புள்ளவில் பெரிய வெங்காயச் செய்கையாளர்களின் கதி அதோகதியாக மாறியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றவேளையில்  இந்த போசாக்கின்மை நிலைமை இடம்பெற முடியாததொன்றல்ல.

தொழில்களை இழத்தல் அல்லது தொழில் புரிந்த காலம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள பெற்றோருக்கு தமது பிள்ளைகளை கட்டிவளர்ப்பதற்கான இயலுமை குறைவடைந்துள்ளமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிள்ளைக்கு பல மாதங்களாக முட்டை, மீன், இறைச்சி வழங்கவில்லையென இந்த பெற்றோர்கள் கூறுகிறார்கள். எமது நாட்டுச் சனத்தொகையில் 60% இற்கு மேற்பட்டோர் ஒருவேளை உணவு மாத்திரம் உட்கொள்வதாக ஒருசில அறிக்கைகள் வெளிக்காட்டுகின்றன. இந்த அறிக்கைகளையும் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளையும் நிராகரித்து  அறிக்கைகளை வழங்குகின்ற உத்தியோகத்தர்களை அச்சுறுத்திப் பயணிக்கின்ற தலைக்கனம் பொருந்திய பயணத்திலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அவை அரசாங்கத்திற்கு பிரச்சினையாக இல்லாதிருக்கலாம். கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு இவையெல்லாம் பிரச்சினைகளல்ல. சாதாரண பொதுமக்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள் எதுவுமே நாட்டை ஆட்சி செய்பவர்களுக்கு கிடையாது. எண்ணெய் பிரச்சி்னை, கேஸ் பிரச்சினை, உணவுப் பிரச்சினை, மருந்துப் பிரச்சினை,  கலாசார வாழ்க்கையைப் பேணிவருவதிலான பிரச்சினை ஆகிய எதுவுமே அவர்களின் வாழ்க்கையுடன் தொடர்பற்றவை. ஆனால் இவை பெரும்பான்மை மக்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளாகும். தற்போது பிள்ளைகள்மீது பிரச்சினைகள் பாய்ந்தோடத் தொடங்கி உள்ளன.  படுமோசமான போசாக்கின்மையின் பெறுபேறுகள் பாடசாலைக் கூட்டத்தில் பிள்ளைகள் மயங்கிவிழுவதுடன் மாத்திரம் நின்றுவிடாமல் உளரீதியான விருத்திமீது ஏற்படுத்துகின்ற தாக்கத்தினால் எதிர்கால தலைமுறையைச் சேர்ந்த பிள்ளைகளையும் பாதிக்கின்றது.  இதனால் அரசாங்கம் என்றவகையில் இது தொடர்பில் கவனஞ் செலுத்த வேண்டும். வயது ஐந்து வருடங்களைப் பார்க்கிலும் குறைவான பிள்ளைகள் இருக்கின்ற பெற்றோர்களிடம் குறிப்பாக கேட்டுக்கொள்வது  பிள்ளைகளின் போசாக்குப் பற்றாக்குறை  சம்பந்தமான முறையான பரிசோதனையை  மேற்கொள்ள வேண்டியது அத்தியாவசியம் என்பதாகும். இது சம்பந்தமாக பரிசோதனைசெய்ய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அல்லது  குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களிடம் காட்டி அறிக்கைகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். பிள்ளைகள் தொடர்பில் நிலவுகின்ற விஞ்ஞானரீதியான நிலைமையை அவர்கள் விளக்கிக் கூறுவார்கள்.  அதற்கிணங்க உங்கள் பிள்ளைகள் இருக்கின்ற நிலைமை பற்றி முதன்மைக் கவனத்தைச் செலுத்துங்கள்.

ஆனால் அரசாங்கம் சுகாதாரப் பணியாளர்களை அச்சுறுத்தி, பயமுறுத்தி இந்த அறிக்கைகளை மூடிமறைக்கவே  முயற்சி செய்கின்றது. திரிபோஷா சம்பவம் தொடர்பாகவும்   அரசாங்கம் இதே நிலைமையையே செய்ய முற்படுகின்றது. அப்லரொக்சின் எனப்படுகின்ற நச்சு இரசாயன புற்றுநோய்க் காரணி, நோயெதிர்ப்புச் சக்தியை நலிவடையச் செய்கின்ற இரசாயனம் அதிக சதவீதத்தில் இருக்கின்றமை வெளிப்பட்டது. இந்த தகவல்களை வெளியிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தைச் சேர்ந்த உபுல் றோஹணவிற்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்வதில் ஆர்வம் செலுத்துகின்ற அரசாங்கம்  திரிபோஷாவில் அப்லரொக்சின்  கலந்தமை பற்றி விசாரணைகளை மேற்கொள்ள  எந்தவிதமான அக்கறையும் காட்டவில்லை. இந்த ஆட்சியாளர்கள் உங்கள் பிள்ளைகளை நேசிப்பதில்லை.    நீங்கள் உங்கள் பிள்ளைகளை நேசிக்கிறீர்கள்.  உங்களுக்கு, எமக்கு, இந்த நாட்டுக்கு உங்கள் பிள்ளைகள் தேவை. இந்த ஆட்சியாளர்களுக்கு உங்கள் பிள்ளைகள் தேவையில்லை. அவர்களின் பிள்ளைகள் அனைத்து வசதிகளுடன் வெளிநாடுகளிலேயே இருக்கிறார்கள். அதனால் உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.  சுகாதாரரீதியாக மாத்திரமன்றி அரசியல்ரீதியாகவும் உங்கள் பிள்ளைகளை பேணிப்பாதுகாத்துக் கொள்ளுங்கள்.  அதற்காக நாமனைவரும்  மிகவும் வேகமான இடையீட்டினை செய்யவேண்டுமென்பதை வலியுறுத்துகிறேன்.

Show More

අධ්‍යාපනය අර්බුදයට ගොස් තිබුණත් ආණ්ඩුවේ කිසිදු අවධානයක් නැහැ

මේ මාධ්‍ය සාකච්ඡාව ආරම්භයේදීම පේරාදෙණිය විශ්වවිද්‍යාලයේ ශිෂ්‍යයෙකු සියදිවි නසා ගැනීමේ ශෝකජනක සිද්ධිය සම්බන්ධයෙන් අපේ ශෝකය ප්‍රකාශ කරමින් අපේ රටේ අධ්‍යාපනය සම්බන්ධ ගැටලු සම්බන්ධයෙන් සාකච්ඡා කරන්න යොමු වෙනවා. මෑත කාලයේ පේරාදෙණිය ශිෂ්‍යයන් තිදෙනෙක් සියදිවි නසා ගත්තා. තරුණ ජීවිත නැතිවීම මේ සමාජයේ හිතන මතන අයට දැඩි කම්පනයක් ඇති කරනවා. සියදිවි නසා ගැනීම පමණක් නොවේ තරුණ ජීවිත කවරාකාරයෙන් […]

ජාතික ජන බලවේගයේ ජාතික විධායක කමිටු සාමාජික, පාර්ලිමේන්තු මන්ත්‍රීනි ආචාර්ය හරිනි අමරසූරිය


මේ මාධ්‍ය සාකච්ඡාව ආරම්භයේදීම පේරාදෙණිය විශ්වවිද්‍යාලයේ ශිෂ්‍යයෙකු සියදිවි නසා ගැනීමේ ශෝකජනක සිද්ධිය සම්බන්ධයෙන් අපේ ශෝකය ප්‍රකාශ කරමින් අපේ රටේ අධ්‍යාපනය සම්බන්ධ ගැටලු සම්බන්ධයෙන් සාකච්ඡා කරන්න යොමු වෙනවා. මෑත කාලයේ පේරාදෙණිය ශිෂ්‍යයන් තිදෙනෙක් සියදිවි නසා ගත්තා. තරුණ ජීවිත නැතිවීම මේ සමාජයේ හිතන මතන අයට දැඩි කම්පනයක් ඇති කරනවා. සියදිවි නසා ගැනීම පමණක් නොවේ තරුණ ජීවිත කවරාකාරයෙන් අහිමි වුණත් දරා ගන්න අමාරුයි.

අධ්‍යාපන ක්ෂේත්‍රයේ ගැටලු රාශියක් මතුවී දෙමාපියන්ටත්, ශිෂ්‍යයන්ටත්, ගුරුවරුන්ටත් දැඩි මානසික පීඩනයක් ඇතිවන තත්වයක් අදත් තිබෙනවා. කාලයක් තිස්සේ අධ්‍යාපනය පිළිබඳ වගකීම ශිෂ්‍යයන් සහ ඔවුන්ගේ පවුල් මත පටවා තිබුණා. ඊට අමතරව අවුරුදු දෙකහමාරක පමණ කාලයක් නිසි අධ්‍යාපනයක් සිදුවුණේ නැහැ. අධ්‍යාපනය කියන්නේ තොරතුරු හුවමාරුව සහ විභාග ක්‍රමයක් පමණක් නොවේ; සමාජානුයෝජන ක්‍රියාවලිය, ජීවිතයට මුහුණ දීම, දැනුම, පෞරුෂත්ව වර්ධනය යන සියල්ලම ලැබිය යුතු දෙයක්. අපේ අධ්‍යාපන ක්‍රියාවලිය පවත්වාගෙන යන්නේ කිසිම ප්‍රශ්නයක් නැති ආකාරයටයි. විභාගයක් පවත්වා ප්‍රතිඵල නිකුත් කිරීම, විශ්වවිද්‍යාලයට ඇතුළත් කර ගැනීම යන සියල්ලම අර්බුදකාරියි. ඒ පිළිබඳ විශ්වාසය සම්පූර්ණයෙන්ම කඩා වැටිලා. විභාග ප්‍රතිඵල නිකුත් කිරීමෙන් පසුව මහජන නියෝජිතයන්ට ශිෂ්‍යයන්ගේ දුක්ගැනවිලි වැඩියෙන් ලැබෙනවා. අධ්‍යාපන ක්‍රියාවලිය කඩා වැටීම තුළ විභාග තියන්නන් වාලේ පවත්වා කරන්නන් වාලේ ප්‍රතිඵල නිකුත් කරනවා. නිසි ප්‍රමිතියකට අනුව නියමිත කාලවලදී පවත්වන්නේ නැහැ. උසස් පෙළ ප්‍රතිඵල නිකුත් කරන්න විශාල කාලයක් ගත වුණා. විභාග පවත්වන කාලය සම්බන්ධයෙනුත් අර්බුද මතුවී තිබෙනවා. මේ සියල්ල තුළින් දරුවන් විශාල පීඩනයකට ලක්වෙනවා. කෝවිඩ් නිසා පාසල් වැසීමෙන් පසුව ආර්ථික අර්බුදය නිසා තව පැත්තකින් අලුත් අර්බුද මතුවී තිබෙනවා.

 
දරුවන්ගේ පාසල් පැමිණීම නිරාහාරව සිදුවන බවට විශාල වශයෙන් වාර්තා වෙනවා. දරුවන් ක්ලාන්තවී වැටෙනවා. මෙවැනි තත්වයක් තුළ දරුවන් ඉගෙන ගන්නේ කොහොමද කියලා ආණ්ඩුව කිසිම තැකීමක් කරන්නේ නැහැ. පවුල්වල ආර්ථික පීඩනය ඉහළ යාමත් සමග දරුවන්ගේ අධ්‍යාපනයට, ගුරුවරුන්ට, විශ්වවිද්‍යාල අනධ්‍යයන කාර්ය මණ්ඩලයට යන සියලු ක්ෂේත්‍රවලට බලපානවා. පළවෙනි පන්තියේ සිට උසස් අධ්‍යාපනය දක්වාම මේ පීඩනය තිබෙනවා. නමුත් ආණ්ඩුව මේ කිසිවක් නැති ආකාරයට කටයුතු කරමින් පින්ලන්තයේ අධ්‍යාපන ආකෘතිය මෙහෙට ගේන්න සාකච්ඡා කරනවා. ඊට වඩා දැවෙන ප්‍රශ්න අධ්‍යාපන ක්‍රමය තුළ තිබෙනවා. අධ්‍යාපන ක්ෂේත්‍රය ක්‍රියාත්මක වෙන්නේ විශාල මානසික ආතතියක් සහ පීඩනයත් එක්කයි. මේ අවස්ථාවේ අවශ්‍ය වෙන්නේ අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණද, නැත්නම් තිබෙන ගැටලුවලට නිශ්චිත ප්‍රායෝගික විසඳුම්ද කියලා හිතන්න වෙනවා. පෙර තිබුණාට වඩා උග්‍රවී තිබෙන මානසික සෞඛ්‍ය ප්‍රශ්න, මනෝ සමාජීය ප්‍රශ්න, සම්බන්ධයෙන් අධ්‍යාපන ක්ෂේත්‍රය තුළ ප්‍රමුඛ අවධානයක් යොමු කිරීම අත්‍යවශ්‍යයි. අධ්‍යාපනයේ වගකීම පංති පැවැත්වීම පමණක් නොවේ. පවතින ප්‍රශ්නවලට විසඳුම් සෙවීම, පාසල් සහ විශ්වවිද්‍යාල පද්ධතිය තුළ මානසික සෞඛ්‍යය සහ මනෝ සමාජීය අර්බුදය ගැනත් ප්‍රමුඛතම මැදිහත්වීමක් අවශ්‍යයි.    

මෙයට පෙරත් අපේ රටේ සියදිවි නසා ගැනීම් ලෝකයේ මුල් තැනට ඇවිත් තිබුණා. මේ වන විට ඒ තත්වය පාලනය වී තිබුණේ වෛද්‍ය මැදිහත්වීම් තුළින් ජීවිත බේරා ගැනීමට හැකිවීම නිසා වුවත් සියදිවි නසා ගැනීමට තැත් කිරීම අඩුවක් වී තිබේදැයි ප්‍රශ්නයක් මතුවී තිබෙනවා. ඒ සම්බන්ධයෙන් නිවැරදි දත්ත නැහැ. මානසික සෞඛ්‍යය පිළිබඳව විශ්වසනීය දත්ත නැහැ. විශේෂයෙන් අධ්‍යාපන ක්ෂේත්‍රය තුළ තීරණ ගැනීමට දත්ත අත්‍යවශ්‍යයි. තරුණ ජීවිතවල මානසික සුවය සහ මනෝ සමාජීය යහපැවැත්ම වෙනුවෙන් මැදිහත්වීමේ විශාල වගකීමක් අධ්‍යාපන ක්ෂේත්‍රයට තිබෙනවා. මේ යථාර්ථය තේරුම් ගෙන ප්‍රශ්නය විසඳීමට ආණ්ඩුව ප්‍රමුඛතාවය දිය යුතුයි. ඒ වගේම මේ ක්ෂේත්‍රයේ වෘත්තීය සංවිධානවලට මේ සම්බන්ධයෙන් මැදිහත්වීමේ විශේෂ වගකීමක් තිබෙනවා. අධ්‍යාපන ක්ෂේත්‍රය තුළ ඔවුන්ගේ මැදිහත්වීම අත්‍යවශ්‍යයි. ඒ පිළිබඳව සංවේදී වී සමාජ මාධ්‍ය තුළ මේ සම්බන්ධයෙන් කතා කිරීමේදී පරිස්සම් වෙන ලෙස ඉල්ලා සිටිනවා. අනවශ්‍ය අවධානයක් දීම තුළින් වීරත්වයක් ආරෝපණය කිරීමේ හෝ අනුකම්පාවට ලක්වීමේ අන්ත දෙකට නොවැටිය යුතුයි. ප්‍රධාන මාධ්‍යයෙනුත් මේ පිළිබඳව වාර්තා කිරීමේදී ඉතාම පරෙස්සම් විය යුතු බව අවධාරණය කරනවා. මේ සියල්ල තුළ සුවිශේෂීව අධ්‍යාපන බලධාරීන් මැදිහත්වීම් කළ යුතුයි. විභාග පැවැත්වීම පමණක් ඉලක්ක කරගෙන ක්‍රියා නොකළ යුතුයි.

අධ්‍යාපනය ජීවිත අපෙන් උදුරා ගන්නා සංවේදී ක්‍රියාදාමයක් බවට පත් කරලා

ජාතික ජන බලවේගයේ කොළඹ දිස්ත්‍රික් විධායක සභික ආචාර්ය සිතුමිණ රත්නමලල

අධ්‍යාපනය සම්බන්ධයෙන් සම්ප්‍රදායක් විදිහට සාකච්ඡා කර තිබුණේ හුණුවටය කතාවේ වැල් පාලමෙන් එගොඩ වන ගෲෂා කියූ “අපට පුතේ මඟක් නැතේ, මේ මඟ මිස යමන් පුතේ” යන තත්වයයි. අපේ අධ්‍යාපනය සම්බන්ධයෙන් උතුරේ සිට දකුණටම දැක්කේ මේ විදිහට. පවුලක් විදිහට, සමාජයක් විදිහට සහ රටක් විදිහට ගොඩයන්න තිබෙන එකම මාර්ගය අධ්‍යාපනය හැටියටයි දැක්කේ. අපිට හයියක් දුන්න, අපි විශ්වාස කළ අධ්‍යාපනය කෙටි කාලීනව සහ දීර්ඝ කාලීනව විසඳුම් සෙවිය යුතු අතිශයින් අර්බුදකාරී තත්වයකට පත්කර තිබෙනවා. අවංකවම කියනවා නම්, අපේ ගැලවීමකට වඩා ශාපයක් බවට දැන් පත්කර තිබෙනවා. පාසලේ සිට විශ්වවිද්‍යාලය දක්වාම අධ්‍යාපනය බරක් කරලා. දරා ගන්න බැරි මට්ටමක අතිවිශාල මානසික පීඩනයක් ඇති කර, අපේ විවේකය සහ අපේ ජීවිතය අපෙන් උදුරා ගන්නා සංවේදීතාවය අතිශයින් පහත හෙළන ක්‍රියාදාමයක් බවට පත්කර තිබෙනවා. දෙමාපියන්, දරුවන්, ගුරුවරුන් බොහෝ දෙනෙක් හිතන්නේ කොහොම හරි සිලබස් එක කවර් කර, විභාගයෙන් ගොඩයාම ගැනයි.

 
නමුත් අද වෙනකොට විශ්වවිද්‍යාලයේ ශිෂ්‍ය උපදේශකයෙක් වශයෙන් මම අත්දකින්නේ දරාගත නොහැකි මට්ටමේ ප්‍රශ්නයක් බවට අධ්‍යාපනය පත්කර තිබීමයි. මීට අවුරුදු දහයකට පමණ පෙර විශ්වවිද්‍යාල ශිෂ්‍යයන්ට තිබෙන ප්‍රශ්න සම්බන්ධයෙන් විසඳුම් ලබාගැනීමට පැමිණි පිරිස මෙන් දහගුණයකට කිට්ටු ප්‍රමාණයක් දැන් එනවා. මේ තත්වය පහසුවෙන් ගොඩයා නොහැකි තත්වයක්. මේ මොහොතේ ඇතිවී තිබෙන අතිශය දරුණු තත්වය ගැන කෙටිකාලීනව වගේම ප්‍රශ්නයේ හේතු විමසා බලා එය ඉවත් කරන දිගුකාලීන විසඳුම්වලට ප්‍රවේශ විය යුතුයි. රටේ ආර්ථික සහ දේශපාලන අස්ථාවරභාවය එක්ක, ඒ පිටුපස තිබුණු කඩා වැටීම දරාගන්න බැරිව මිලියන ගණනක් තරුණ සහ සාමාන්‍ය ජනතාව අරගල කළ බව විශ්ලේෂණාත්මකව සාකච්ඡා කෙරෙන්නේ නැහැ. ඒ සාකච්ඡාව ඉතා ඉක්මනින් කළ යුතුයි. අධ්‍යාපනය තුළින් දරුවන් පීඩනයට පත්වෙන්නේ ඇයි? අධ්‍යාපනයෙන් ළඟාකර ගත හැක්කේ මොනවාද? මේ මූලික ප්‍රශ්න දෙක පිළිබඳ සාකච්ඡාව ඉක්මනින්ම සිදුකර පිළිතුරු ලබාගත යුතුයි. ශිෂ්‍යයන් තම දෛනික කටයුතු පවා කරගත නොහැකි මට්ටමට ඇදවැටීම ආර්ථික අර්බුදයට පිළිතුරු සෙවීමට යාමේදී සමාජයක් ලෙස ඇතිවී තිබෙන මානසික පීඩාවේ ප්‍රතිඵලයක්. එකිනෙකා අවබෝධ කර ගැනීමේ හැකියාව ඉතා නරක මට්ටමෙන් අඩු වී තිබෙනවා. දෙමාපියන් තම දරුවන් දෙස බලනවාට වඩා ඒ දරුවන්ගේ මූලික අවශ්‍යතා ඉටුකරන්න වැඩි කාලයක් කැපකරන්න සිදුවී තිබෙනවා. ඊළඟ පරම්පරාව වෙනුවෙන් දෙමාපියන් සහ වැඩිහිටියන් කල්පනා කළ යුත්තේ දරුවන්ගේ මූලික භෞතික අවශ්‍යතා ඉටුකිරීමෙන් එහාට ගිය මානසික අවශ්‍යතා ඉටුකිරීමත් අරමුණු කරගෙනයි. ඒ වෙනුවෙන් සුදුසු පරිසරයක් මේ රටේ දෙමාපියන්ට නැති කරලා. තමන්ගේ දරුවන් දෙස බලන්න හැකි මානසික මට්ටමක් දෙමාපියන්ට නැති කරලා. ඒ විවෘතභාවය නැති කරලා.

මේ තත්වය ඇති වුණේ අහම්බෙන් නොවෙයි. අද වනවිට එක් මනුස්සයෙකුට වේල් තුන පිරිමසා ගන්න ආදායම් මාර්ග කිහිපයක් සොයා ගැනීමට සිදුවී තිබෙනවා. මේ නිසා ඔවුන් මානසික වශයෙන් ඉතාමත් අසංවේදී වී තිබෙනවා. මේ සමස්තය දරුවන්ගේ පිටින් ගලාගෙන යනවා. දරුවෝ මත එල්ල වන පීඩනයෙන් ඔවුන් අසරණ වීමේ තත්වය සමාජය කඩා වැටීමේ නිර්ණායකයක් හැටියට ගන්න පුළුවන්. ඉතා ඉක්මනින් මේ තත්වයට උත්තර සොයන්න වෙනවා. ඒ සම්බන්ධ වගකීමෙන් ආණ්ඩුවට මඟහැර ඉන්න බැහැ. මෙය වැදගත් කාරණයක් ලෙස නොසැලකීම දක්වා අතිශය දරුණු තත්වයකට ආණ්ඩුව විසින් ඇද දමා තිබෙනවා. උදාරණයක් හැටියට විශ්වවිද්‍යාලවලට වැඩිපුර ශිෂ්‍යයන් ඇතුළත් කර ගන්න ඕනෑ කියන හඬට අනුව ක්‍රියා කළත් විශාල ශිෂ්‍යයන් පිරිසක් ඇතුල් කර තිබෙන්නේ මීට අවුරුදු 50කට පමණ පෙර තිබුණු ඉඩකඩ තුළටයි. විද්‍යාගාර පහසුකම් ඇතුළුව අනෙකුත් භෞතික පහසුකම්ද පවතින්නේ ඒ ආකාරයටමයි. මෙය ගුණාත්මක අධ්‍යාපනයක් සිදු නොවීමට මූලික හේතුවක්. රුපියල් 5000ක් ලැබෙන මහපොළ ශිෂ්‍යත්වයෙන් ගත හැකි වෙන්නේ පාන් රාත්තල් 16ක් විතරයි. මාසයකට ලැබෙන මහපොළෙන් ඊට වැඩි දෙයක් කරන්න බැහැ. දුප්පත් රටක් හැටියට එයින් මිදීමට තිබෙන මූලික උපායමාර්ගය අධ්‍යාපනය බව දැන දැනත් පාලකයන් ඊට දෙන මූලිකත්වය මහපොළ ආධාර මුදලෙන්ම තේරුම් ගන්න පුළුවන්. දරුවන් සහ දෙමාපියන් කෙතරම් ආතතියකින් පසුවෙනවාද කියන එක මෙයින් පැහැදිලියි.

බස් ගාස්තු, බෝඩිං ගාස්තු, මෑතදී තිබුණු වියදමට වඩා දස ගුණයකින් වැඩිවී තිබෙනවා. මේ තත්වය තුළ නිසි මානසිකත්වයකින් දරුවන්ට ඉගෙන ගන්න බැහැ. ඔවුන්ට ඉගෙන ගන්න මේ තත්වය තුළ බලකිරීම වැරදියි. එය මනුෂ්‍යයින්ට දරා ගන්න බැහැ. ශිෂ්‍යයන්ට දරා ගන්න බැහැ. මේ සමාජ ආර්ථික ක්‍රමය තුළ අනිකාට සවියක් වෙන්න, මිත්‍රකම් පවත්වාගෙන යන්න, සංවේදී වෙන්න, සහ කම්පනය දැනෙන්න, අවශ්‍ය ගුණාත්මක අධ්‍යාපනයක් ලබාදී නැහැ. විෂයවලට අනුගත කර, කටපාඩම් කරන විභාග ක්‍රමය ගැන විශේෂයෙන්ම උසස් පෙළ ගණිත විෂය ධාරාවෙන් තේරුම් ගන්න පුළුවන්. එක්තරා ආකාරයකට විෂය නිර්දේශය ඇතුළුව කටපාඩම් කර, විභාගය සමත්වීමේ ක්‍රමයක් තිබෙන්නේ. ප්‍රශ්නයකට පිළිතුරු සොයන නිර්මාණාත්මක ක්‍රම අධ්‍යාපනය තුළ උගන්වන්නේ නැත්නම්, යුතුකම් සහ අයිතිවාසිකම් ගැන උගන්වන්නේ නැත්නම් මනුෂ්‍යයෙක් ගොඩනැගෙන්නේ කෙසේද? තමන්ටත් අනුන්ටත් සවියක් වෙමින් ජීවත් වෙන්න උගන්වන්නේ කොහොමද? මේ අධ්‍යාපනය ක්‍රමය ඇතුලේ මනුෂ්‍යයෙකුට ලබාදිය යුතු අවම සමාජීය සහ මනෝ විද්‍යාත්මක පුද්ගලානුබද්ධ කරුණු සම්පූර්ණයෙන්ම නොසලකා හැරලා. පවතින්නේ ඉතාමත් දෘඪ, මානුෂිකත්වයෙන් තොර, අධ්‍යාපනයක්. ප්‍රශ්නයකට උත්තර සොයන්න අතිශයින් සම්ප්‍රදායික රාමුවක් තුළ සිතීමෙන් රටක් ගොඩනඟන්න බැහැ. අලුත් අලුත් දෑ තනන්න අලුත් අලුත් විදිහට හිතන්න හැකි වෙන්න ඕනෑ.

අලුතින් හිතන මිනිසුන්ව ගොඩනඟන අධ්‍යාපන ක්‍රමයක් අපට ඕනෙ වෙනවා. කෙටි කාලීනවත්, දීර්ඝ කාලීනවත් මනුෂ්‍යයින් විදිහට සංවේදී, තවත් මිනිසුන්ව දරාගත හැකි සමාජයක් ගොඩනැගීමට සුදුසු අධ්‍යාපනයක් නැතිතාක් කල් අපි නිදහස් මිනිසුන් වෙන්නේ නැහැ. නිදහස් නොවෙන මිනිසුන්ගෙන් මේ රට ඉස්සරහට යන්නේ නැහැ. ඒ නිසා මේ සම්බන්ධයෙන් අපි දැඩි අවධානයක් යොමුකර, රට ගොඩ ගන්නට සියලුදෙනා ඉක්මනින් සහ දීර්ඝකාලීන වශයෙන් එකතු වෙමු කියලා ආරාධනා කරනවා.

දරුවන් රැකබලා ගන්න වේගවත් මැදිහත් වීමක් අවශ්‍යයි

ජනතා විමුක්ති පෙරමුණේ මධ්‍යම කාරක සභික වෛද්‍ය නලින්ද ජයතිස්ස


අධ්‍යාපනය කියන්නේම මනස සම්බන්ධ ක්‍රියාකාරිත්වයක්. හොඳ අධ්‍යාපනයක් ලබාගන්න මානසික නිරෝගීභාවයත්, මානසික සමබරතාවයත් තියෙන්න ඕනෑ. සබ්බේ සත්ථා ආහරට්ඨිතිකා කියලා බුද්ධ දේශනාවේ තියෙන්නේ ඒ නිසයි. විශේෂයෙන් පාසල් දරුවන්ට හොඳ අධ්‍යාපනයක් ලැබිය හැකි මානසික මට්ටමක් තිබෙනවා දැයි බරපතළ ප්‍රශ්නයක් තිබෙනවා. සෞඛ්‍ය අමාත්‍යාංශයේ දත්ත මත පදනම් වී යුනිසෙෆ් ආයතනය නිකුත් කළ වාර්තාවක ලෝකයේ ළමා මන්දපෝෂණයෙන් හයවෙනි තැනත්, ආසියාවේ දෙවැනි තැනත් අපේ රටට ලැබී ඇති බව සඳහන් වෙනවා. කොළඹ රිජ්වේ ආර්යා රෝහලට ඇතුළත් වන දරුවන්ගෙන් 20%ක් මන්දපෝෂණයෙන් පෙළෙන බවත්, එයින් හරි අඩක් දරුණු මන්දපෝෂණ තත්වයෙන් පෙළෙන බවත්, සමීක්ෂණයකින් වෛද්‍යවරුන් හෙළිකර තිබුණා. හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ සූරියවැව ප්‍රදේශයේ දරුවන්ගෙන් 80%ක් මන්දපෝෂණයෙන් පෙළෙන බව නියෝජ්‍ය සෞඛ්‍ය අධ්‍යක්ෂවරයෙකු වන වෛද්‍ය චමල් සංජීව ප්‍රකාශ කර තිබෙනවා. එයින් 30%ක් උග්‍ර මන්දපෝෂණයෙන් පෙළෙන බව ප්‍රකාශ කර තිබෙනවා. ජනාධිපති, අගමැති ප්‍රමුඛ ආණ්ඩුව මේ දත්ත පිළිබඳව සැලකිල්ලක් දක්වන්නේ නැහැ. මේ දත්ත බොහෝ විට ඔවුන් විසින් ප්‍රතික්ෂේප කරනවා.

පාසල් දරුවන් ආහාර ලබාගන්නා ආකාරය ගැන මාධ්‍ය වාර්තා ගණනාවක සඳහන් වී තිබෙනවා. පාර්ලිමේන්තුව තිබෙන ශ්‍රී ජයවර්ධනපුර අධ්‍යාපන කලාපයේ පාසල් දරුවන් මිරිස් කුඩු මිශ්‍රකර ගත් බත්පතක් ගෙනා බවත්, සමහර දරුවන් බුද්ධ පූජාව අනුභව කර ඇති බවත්, කලාප අධ්‍යාපන අධ්‍යක්ෂවරිය ප්‍රකාශ කර තිබුණා. ගම්පහ දිස්ත්‍රික්කයේ මිනුවන්ගොඩ කලාපයේ පාසලක දැරිවියක් දහවල් ආහාරයට පොල් මද ගෙන ආ බව මාධ්‍ය වාර්තා කර තිබුණා. ඒ වගේම “තන්තිරිමලේ පාසල් කිහිපයක දරුවන් සිහිසුන්ව වැටී උදේ රැස්වීම සීමා කරයි, සමහර ළමයි රෑට-උදේට දෙකටම කාලා නෑ.” කියලා 22 වනදා පත්තරයක තිබෙනවා. මේ තිබෙන්නේ වාර්තා වන සිදුවීම් පමණයි. වාර්තා වන සිදුවීම්වලටත් ආණ්ඩුවේ ප්‍රතිචාරය වී තිබෙන්නේ ප්‍රතික්ෂේප කිරීමයි. මිනුවන්ගොඩ සිදුවීම සම්බන්ධයෙන් ප්‍රසන්න රණතුංග ඇමතිගේ මාධ්‍ය ලේකම් නිවේදනයක් නිකුත් කරමින් එම සිදුවීම ප්‍රතික්ෂේප කර තිබෙනවා. යුනිසෙෆ් වාර්තාවත් ප්‍රතික්ෂේප කර තිබෙනවා. සූරියවැව සමීක්ෂණය සම්බන්ධයෙන් සෞඛ්‍ය වෛද්‍ය නිලධාරීන්ට ආණ්ඩුව බලපෑම් කරමින් සිටින බව වාර්තා වෙනවා. මේ සම්බන්ධයෙන් පාර්ලිමේන්තුවේදී ප්‍රශ්න කළ විට සෞඛ්‍ය ඇමති කෙහෙළිය රඹුක්වැල්ල උත්තර දී තිබුණේ ලක්ෂ 43ක් පමණ වන පාසල දරුවන්ගෙන් කිහිපදෙනක් සම්බන්ධ මේ වාර්තා ගණන් ගත යුතු නැති බවයි.  මේ වාර්තාවලින් ආණ්ඩුව දරුවන්ගේ මන්දපෝෂණ තත්වය වර්ධනය වෙමින් තිබෙන බව පිළිගත යුතුයි. ඉදිකිරීම් ක්ෂේත්‍රයේ 90%ක් නතර වී, රාජ්‍ය සේවක වැටුප් ගෙවන්න සල්ලි නැති බව බන්දුල ගුණවර්ධන ප්‍රකාශ කර තිබෙන පසුබිමක, දඹුල්ලේ ලොකු ළුෑණු ගොවීන්ට හතේ හත වැදී ඇති බවට ප්‍රවෘත්ති පළ වෙද්දී, මේ මන්දපෝෂණ තත්වය සිදුවිය නොහැකි තත්වයක් නොවේ.

රැකියා අහිමිවීම හෝ රැකියා කළ කාලය සීමාවී සිටින මාපියන්ට තම දරුවන් පෝෂණය කිරීමේ හැකියාව අඩුවී ඇති බව පිළිගත යුතුයි. දරුවෙකුට මාස ගණනාවකින් බිත්තර, මාළු, මස් ලබානොදුන් බව දෙමාපියන් කියනවා. අපේ රටේ ජනගහනයෙන් ලක්ෂ 60කට වැඩි ප්‍රමාණයක් එක වේලක් ආහාර ගන්නා බව ඇතැම් වාර්තාවලින් හෙළිකර තිබෙනවා. මේ වාර්තා සහ අදාළ සිදුවීම් ප්‍රතික්ෂේප කරමින්, වාර්තා ලබාදෙන නිලධාරීන්ට තර්ජනය කරමින් යන උද්ධච්ඡ ගමනක ආණ්ඩුව නිරතවී සිටිනවා. ආණ්ඩුවට මේවා ප්‍රශ්න නොවෙන්න පුළුවන්. කෙහෙලිය රඹුක්වැල්ලට මේ ප්‍රශ්න නැහැ. සාමාන්‍ය ජනතාවට තිබෙන කිසිදු ප්‍රශ්නයක් රට පාලනය කරන අයට නැහැ. තෙල් ප්‍රශ්න, ගෑස් ප්‍රශ්න, ආහාර ප්‍රශ්න, ඖෂධ ප්‍රශ්න, සංස්කෘතික ජීවිතය පවත්වාගෙන යාමේ ප්‍රශ්න යන කිසිවක් ඔවුන්ගේ ජීවිතවලට අදාළම නැහැ. නමුත් සාතිශය බහුතරයක් ජනතාවට මේ ප්‍රශ්න අදාළයි. දැන් දරුවන් මතින් ප්‍රශ්න ගලාගෙන යන්න පටන්ගෙන තිබෙනවා. දරුණු මන්දපෝෂණයේ ප්‍රතිඵල පාසල් රැස්වීමේදී දරුවන් ක්ලාන්තයෙන් ඇදවැටීමෙන් පමණක් සීමා නොවී මානසික වර්ධනයට සිදුකරන බලපෑම විසින් ඉදිරි පරම්පරාවල දරුවන්ට බලපානවා. මේ නිසා ආණ්ඩුවක් හැටියට මේ කෙරෙහි අවධානයක් යොමු කරන්න ඕනෑ. අවුරුදු 5ට වඩා අඩු දරුවන් සිටින දෙමාපියන්ගෙන් විශේෂයෙන්ම ඉල්ලා සිටින්නේ දරුවා සම්බන්ධ පොෂණ ඌනතාවයන් ගැන නිසි පරීක්ෂණයක් කර ගැනීම අත්‍යවශ්‍ය බවයි. මේ සම්බන්ධයෙන් පරීක්ෂා කර ගන්න මහජන සෞඛ්‍ය පරීක්ෂක හෝ පවුල් සෞඛ්‍ය සේවා නිලධාරිනියට පෙන්වා වාර්තා ලබාගන්න ලෙස ඉල්ලා සිටිනවා. දරුවන් සම්බන්ධයෙන් පවතින විද්‍යාත්මක තත්වය ඔවුන් පැහැදිලි කර දෙනවා. ඒ අනුව ඔබේ දරුවා සිටින තත්වය ගැන ප්‍රමුඛ අවධානය යොමු කරන්න.

 
නමුත් ආණ්ඩුව උත්සාහ කරන්නේ සෞඛ්‍ය කාර්ය මණ්ඩලවලට තර්ජනය කර, බයකර, මේ වාර්තා යටගහන්නයි. ත්‍රිපෝෂ සිද්ධියට අදාළවත් ආණ්ඩුව කරන්න හදන්නේ මේ තත්වයමයි. ඇෆ්ලටොක්සීන් කියන විෂ රසායනික පිළිකාකාරකය, ප්‍රතිශක්තිය ඌන කරන රසායනිකය වැඩි ප්‍රතිශතයකින් තිබෙන බව හෙළි වුණා. මේ තොරතුර ඉදිරිපත් කළ මහජන සෞඛ්‍ය පරීක්ෂකවරුන්ගේ සංගමයේ උපුල් රෝහණට විරුද්ධව පරීක්ෂණ පවත්වන්න උනන්දුවෙන ආණ්ඩුව ත්‍රිපෝෂවලට ඇල්ෆටොක්සීන් එකතුවීම පිළිබඳව පරීක්ෂණ පවත්වන්න කිසිදු සැලකිල්ලක් නැහැ. මේ පාලකයෝ ඔබේ දරුවන්ට ආදරේ නැහැ. ඔබ ඔබේ දරුවන්ට ආදරෙයි. අපි ඔබේ දරුවන්ට ආදරෙයි. මේ රට ඔබේ දරුවන්ට ආදරෙයි. ඔබට, අපට, මේ රටට ඔබේ දරුවන් ඕනෑ. මේ පාලකයන්ට ඔබේ දරුවන් අවශ්‍ය නැහැ. ඔවුන්ගේ දරුවන් සිටින්නේ සියලු සැප පහසුකම් සහිත විදේශ රටවල. ඒ නිසා ඔබේ දරුවන් වෙනුවෙන් ඔබ කඩිනමින් පියවර ගන්න. සෞඛ්‍යමය වශයෙන් වගේම දේශපාලනිකවත් ඔබේ දරුවන් රැකබලා ගන්න. ඒ වෙනුවෙන් අපි සෑමදෙනාම ඉතාම වේගවත් මැදිහත්වීමක් කළ යුතු බව අවධාරණය කරනවා.

Show More

දූෂිත සමාජ ක්‍රමය වෙනුවට රටට ඕනෑ කරන්නේ නවමු දේශපාලන පරිවර්තනයක්

මේ පවතින දූෂිත සමාජ ක්‍රමය වෙනුවට ඇත්තම අභිමානයක් හා දැනෙන දියුණුවක් සහිත සමාජ ක්‍රමයක් ගොඩනැඟීමේ සමාජ පරිවර්තනයක් කිරීම ජාතික ජන බලවේගයේ බලාපොරොත්තුව බව ජවිපෙ මධ්‍යම කාරක සභික සමන්ත විද්‍යාරත්න මහතා පවසයි. ඒ මහතා ඒ බව ප්‍රකාශ කළේ ජාතික ජන බලවේගයේ බදුල්ල දිස්ත්‍රික් කාර්යාලය විවෘත කිරීමේ අවස්ථාවට පෙරේදා (18දා) එක්වෙමිනි. එහිදී අදහස් පළ කළ ඒ මහතා […]

මේ පවතින දූෂිත සමාජ ක්‍රමය වෙනුවට ඇත්තම අභිමානයක් හා දැනෙන දියුණුවක් සහිත සමාජ ක්‍රමයක් ගොඩනැඟීමේ සමාජ පරිවර්තනයක් කිරීම ජාතික ජන බලවේගයේ බලාපොරොත්තුව බව ජවිපෙ මධ්‍යම කාරක සභික සමන්ත විද්‍යාරත්න මහතා පවසයි.

ඒ මහතා ඒ බව ප්‍රකාශ කළේ ජාතික ජන බලවේගයේ බදුල්ල දිස්ත්‍රික් කාර්යාලය විවෘත කිරීමේ අවස්ථාවට පෙරේදා (18දා) එක්වෙමිනි.

එහිදී අදහස් පළ කළ ඒ මහතා මෙසේද පැවැසීය.

ඔබත් එක්ක අපි දිගින් දිගටම කතා කරමින් ඉන්නවා. අපේ ජීවිත කාලයේ මුහුණ දීපු දරුණුම අර්බුදයට තමයි අද අපි මුහුණ දීලා ඉන්නේ.

ලෝකයේ සාකච්ඡා කරනවා රටකට පැමිණිය හැකි ප්‍රධාන අර්බුද තුනක්.

සමාජ අර්බුද එනවා. දේශපාලන අර්බුද එනවා. ආර්ථික අර්බුද එනවා. ඕවා අපි ඉතිහාසයේ දැක්කේ එක පාරට එනවා නෙවෙයි. දැන් අපේ රට ගත්තත් යම් යම් මොහොතවල්වල ආර්ථික, සමාජ හා දේශපාලන අර්බුද ඇවිත් තියෙනවා. හැබැයි අප මේ ගත කරමින් ඉන්නේ එම අවස්ථාවන් තුනම එකවර පැමිණි වේලාවක.

මේ දැවැන්ත දේශපාලන, ආර්ථික හා සමාජ අර්බුදයක් ඇති වූයේ මොන ගර්භාශයකද?

ඇත්තටම ගත්තොත් 1948 ඉඳන් නිදහස ලබා වසර 74ක් පිරෙනවා. මේ දරුණු අසාධ්‍ය තත්ත්වයට රට පත් වුණේ අද ඊයේ නෙවෙයි.

ගෝඨාභය රාජපක්ෂගේ කාලයේ විතරක් කියන්න බෑ. මේ අසනීපය 1948 ඉඳන්ම තිබුණා. ඒක එක එක ආණ්ඩු වැඩි දියුණු කරලා අසාධ්‍ය තත්ත්වයට පත් කරපු පාලකයෝ තමයි මෛත්‍රිලා, ගෝඨාභයලා. දැන් රනිල් රාජපක්ෂලා එක් වෙලා. දැන් අසාධ්‍ය ලෙඩෙක් බඳු රටක් තමයි ඔබට අපට උරුම වෙලා තියෙන්නේ.

මෙන්න මේ අර්බුද නිර්මාණය කළ ගර්භාශ තමයි එක්සත් ජාතික පක්ෂ ගර්භාශය. නැත්නම් ශ්‍රී  ලංකා නිදහස් පක්ෂ ගර්භාශයේ තමයි මේක බිහිවුණේ. එහෙමත් නැත්නම් පොදුජන පෙරමුණ ගර්භාශ තුළ. දැන් ඒ හන්දා ඔය දේශපාලනය ගබ්සා කරන්න ඕනි. ඔය දේශපාලනය ඉවත් කරන්න ඕනි. අන්න ඒකට නැවුම් දේශපාලනයක් අවශ්‍යයි.

නව සමාජ පිබිදීමක් කරන්න අරගලය විසින් ඉල්ලපු සිස්ටම් චේන්ජ් එකක්, ක්‍රමයේ වෙනසක් අවශ්‍ය වෙලා තියෙනවා. අන්න ඒ අවශ්‍යතාව සම්පූර්ණ කරන්න තමයි මේ රටේ විවිධ ප්‍රගතිශීලී කණ්ඩායම්, වාමාංශික පක්ෂ, එක්කහු කරලා දැවැන්ත දේශපාලන ව්‍යාපාරයක් හැටියට ජාතික ජන බලවේගය ගොඩනඟලා තියෙන්නේ.

ඔබලා දන්නවා මේ අර්බුදයෙන් රට මුදා ගැනීම සඳහා සර්වපාක්ෂික ආණ්ඩුවක් හදන්න ඕනි කියලා. දැන් කාලෙක ඉඳන් සාකච්ඡාවක් තියෙනවා. සමහරුන් හිතනවා එවන් සර්වපාක්ෂික ආණ්ඩුවකින් මෙම ප්‍රශ්නය විස¼දාගන්න පුළුවන් කියලා. ඒ වගේම මේ රනිල් රාජපක්ෂ වටා රාජපක්ෂලාගේ එක්සත් ජාතික පක්ෂයේ, සජිත් පිලේ කට්ටිය එක්කහු වුණාම සර්වපාක්ෂික ආණ්ඩුවක් හැදෙනවා කියලා. ඒ හැදෙන්නේ සර්වපාක්ෂික ආණ්ඩුවක් නෙවෙයි. සර්ව චෞරයන්ගේ ආණ්ඩුවක්.

ජාතික ජන බලවේගය කියලා කියන්නේ ඔය අල්ලස්වලට ගත්ත, සල්ලිවලට, තනතුරුවලට ගත්ත ඇමැතිකම් දීලා හදා ගන්න ආණ්ඩුවක් වගේ නෙවෙයි. මේ වෙනකොට එක්සත් ජාතික පක්ෂයට, සජිත් පිලට, රාජපක්ෂලාට ඡන්දය දීපු ජනතාව ජාතික ජන බලවේගය සමඟ එකතු වෙනවා.

ඒක සර්වපාක්ෂික එකතුවක්. මේ රටේ සියලුම පක්ෂ නියෝජනය කළ ජනතාව ඒ ඒ පක්ෂ අතහැරලා දැන් මේ රට ගොඩනඟා ගන්න පුළුවන්, සැබෑ වෙනසක් කරන්න පුළුවන් දේශපාලන ව්‍යාපාරය හැටියට ජාතික ජන බලවේගය තෝරා ගනිමින් සිටිනවා. අන්න ඒ එකතුවෙන් හදා ගන්නා බලයකින් තමයි මේ රට ගොඩනඟන්න පුළුවන් වෙන්නේ.

රනිල් එනකොට සමහරුන් විශ්වාස කළා රනිල්ට මේක ගොඩ දාන්න පුළුවන් කියලා. රනිල්ගේ ඉතිහාසය අමතක කළා. එයාට දැන් අවුරුදු 74ක්, 74න් 45ක් හිටියේ පාර්ලිමේන්තුවෙ. ඒ හතළිස් පහෙන් හය වාරයක් අගමැති, වැඩි වාරයක් ඇමැති, තව කාලයක් විපක්ෂ නායක එහෙම ඉඳලත් එයාට හදන්න බැරි වුණ රටක් එයා කොහොමද ගොඩ දාන්නේ යැයිද ඒ මහතා පැවැසීය.

ඒ නිසා අපි මේ වනවිට බදුල්ල දිස්ත්‍රික්කය පුරා අෑත ගම්වල කොට්ඨාස සභා නමින් අපි සමිතියක් නිර්මාණය කරමින් ඉන්නවා. ලබන වසරේ මුල් කාර්තුව වනවිට බදුල්ල දිස්ත්‍රික්කයම ආවරණය වන පරිදි දැවැන්ත බලවේගයක් ගොඩනඟනවා.

ඒ සඳහා ඔබටත් අපටත් මේ වෙලාවේ විශාල කාර්යභාරයක් පැවැරිලා තිබෙනවා. 2022 වර්ෂයේ වුණාට දැන් රට තියෙන්නේ 1920 වගේ අෑතකට ගිය රටක්. සියලුම අංශවලින් පස්සට ගිහිල්ලා. රටේ ආගම් වාදය, ජාතිවාදය අවුස්සලා. ජාතික සමඟියත් පස්සට දාලා. අපි ජීවත් වන මේ රට ඉස්සරහට ගේන්න නම් ඔබට අපට සුවිශාල කාර්යභාරයක් කරන්න වෙලා තියෙනවා. අන්න ඒ සඳහා අපි කවුරුත් කටයුතු කළ යුතුව තිබෙනවා.

බදුල්ල _ නිශාන්ත අබේගුණවර්ධන (මව්බිම)

Show More