Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதான ஆலோசகர் ஒருவர் நியமனம்

(-Colombo, November 1, 2024-) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரியவை நியமித்துள்ளார். பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், தேசிய போட்டித்தன்மை மற்றும் அனைத்து பிரஜைகளுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் எதிர்பார்ப்புடன், பிராந்தியத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளுக்கு இணையாக இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தமது தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் […]

(-Colombo, November 1, 2024-)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரியவை நியமித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், தேசிய போட்டித்தன்மை மற்றும் அனைத்து பிரஜைகளுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் எதிர்பார்ப்புடன், பிராந்தியத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளுக்கு இணையாக இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தமது தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய துறைகளை உலகத் தரத்திற்கு மேம்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். பிரஜைகளை வலுவூட்டுவதற்காக டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் (DPI) நிறுவுவதன் மூலம் பல்துறை டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு அரசாங்கம் உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளது.

அதன்படி, வேகமான டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மற்றும் அனைத்து பிரஜைகளினதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் வழிவகுக்கும் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி தொடர்பான பாரம்பரிய அபிவிருத்தி வாய்ப்புகளை உள்வாங்கக் கூடிய வகையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கலாநிதி ஹான்ஸ் விஜயசூரியவின் நியமனம் மேலே குறிப்பிட்ட தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கான ஒரு முக்கிய படியாகும்.

சர்வதேச தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் பிரபலமானவரான கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, தற்போது ஆசியாடா நிறுவனத்தின் (Axiata Group Bhd) தொலைத்தொடர்பு வணிகத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி மற்றும் குழும நிறைவேற்றுப் பணிப்பாளராக பணியாற்றுவதுடன், அவர் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில், கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய நிறைவேற்று அல்லாத தலைவராக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபைக்கு தலைமை வகிப்பார். இதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் டிஜிட்டல் பரிமாற்றத்திற்கான குறித்த வேலைத்திட்டங்களைத் திட்டமிடல் மற்றும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

குறித்த நியமனத்தின் பின்னர் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான நிறுவன கட்டமைப்பிற்குள் பல நிறைவேற்றுத் தலைமைப் பாத்திரங்களை அவர் வகிக்க உள்ளார். இதற்கு மேலதிகமாக, ஜனாதிபதியின் விடயப்பரப்பின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சான டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேற்பார்வையிடும் உயர்மட்ட நிறுவனமான டிஜிட்டல் பொருளாதார அதிகார சபையின் தலைவர் ஆகிய இரண்டு பதவிகளையும் அவர் வகிப்பார்.

Show More

சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பாக கவனம்

(-Colombo, November 1, 2024-) இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. அரிசி விலையை ஸ்திரப்படுத்தல் மற்றும் அரிசி தட்டுப்பாட்டுக்கு நீண்ட கால தீர்வு காண்பதற்கு நெல் களஞ்சிய கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதன் முக்கியத்துவம் மற்றும் அஸ்வெசும மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக நலன்புரித் திட்டங்கள் உள்ளிட்ட சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் […]

(-Colombo, November 1, 2024-)

  • நெல் களஞ்சிய கட்டமைப்பை உரிய பொறிமுறையில் முன்னோக்கிக் கொண்டு செல்ல டிஜிட்டல் மயப்படுத்தல்
  • அரிசி விலையை ஸ்திரப்படுத்தவும், அரிசி தட்டுப்பாட்டுக்கு நீண்டகால தீர்வு காணவும் நடவடிக்கை

இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

அரிசி விலையை ஸ்திரப்படுத்தல் மற்றும் அரிசி தட்டுப்பாட்டுக்கு நீண்ட கால தீர்வு காண்பதற்கு நெல் களஞ்சிய கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதன் முக்கியத்துவம் மற்றும் அஸ்வெசும மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக நலன்புரித் திட்டங்கள் உள்ளிட்ட சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

எதிர்வரும் புதிய பாடசாலை தவணையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படவுள்ள நிவாரண விநியோகத் திட்டம் மற்றும் உர மானியத் திட்டம் என்பவற்றை டிஜிட்டல் மயமாக்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

டயலொக் ஆசியாடா தனியார் நிறுவனத்தின் குழும பிரதான நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, மிலேனியம் IT நிறுவனத்தின் பிரதம தொழில்நுட்ப அதிகாரி மகேஷ் விஜேநாயக்க உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் குழுவும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Show More

இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

(-Colombo, October 31, 2024-) சுதந்திரத்திற்கு பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை தேடிவந்த இலங்கை மக்கள் தற்போது புதிய எதிர்பார்ப்புக்களை சுமந்துக்கொண்டிருக்கின்றனர். இது மக்களின் பல வருட எதிர்பார்ப்பாகும். இத்தனை நாட்களாக இலங்கையை ஆட்சி செய்தவர்களால் முடக்கி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை மலரச் செய்யும் மாற்றத்துக்கான யுகத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு பல காரணங்கள் உள்ளன. 14 வருட வனவாசத்தின் பின்னர் இராமர், இலட்சுமனர், சீதை பிராட்டி மீண்டும் அயோத்திக்கு வருகை தந்தமை மற்றும் கிருஷ்ண பகவான் […]

(-Colombo, October 31, 2024-)

President Anura Kumara Dissanayake Diwali Wish

சுதந்திரத்திற்கு பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை தேடிவந்த இலங்கை மக்கள் தற்போது புதிய எதிர்பார்ப்புக்களை சுமந்துக்கொண்டிருக்கின்றனர். இது மக்களின் பல வருட எதிர்பார்ப்பாகும். இத்தனை நாட்களாக இலங்கையை ஆட்சி செய்தவர்களால் முடக்கி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை மலரச் செய்யும் மாற்றத்துக்கான யுகத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.

தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு பல காரணங்கள் உள்ளன. 14 வருட வனவாசத்தின் பின்னர் இராமர், இலட்சுமனர், சீதை பிராட்டி மீண்டும் அயோத்திக்கு வருகை தந்தமை மற்றும் கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்தமையை நினைவுகூறும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அஞ்ஞானத்தின் இருளை போக்க மெய்ஞானத்தின் ஔியினால் மட்டுமே முடியும் என்ற தொனியில் தீபங்களை ஏற்றி இலங்கையர்களாக புதிய புரட்சிக்கு வழிவகுப்பதாக இம்முறை தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம் என மக்களிடம் கேட்டுகொள்கிறேன்.

கலாசார பல்வகைத்தன்மையின் அழகை மெருகூட்டும் வகையில், ஒருவருக்கொருவர் கௌரவம்,ஏற்றுக்கொள்ளல் மற்றும் சகோதரத்துவம் என்பவற்றுக்காக கரங்களை நீட்டுவோம்.

பிரித்து வலுவிழக்கச் செய்யப்பட்ட இலங்கை தேசத்தை பிளவுபடாமல் வலுவாக முன்னோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டிய காலம் உதயமாகியுள்ளது. அநீதி,வேறுபாடுகள், பிளவுபடுத்தல், வெறுப்புப் பேச்சுகள், வன்முறைகள் என்பதை முழுமையாக துடைத்தெறிந்து சமூகத்தில் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்வோர் மற்றும் வரப்பிரசாதங்கள் கிடைக்காதவர்கள் என்ற வேறுபாடுகளை முழுமையாக இல்லாது செய்ய முன்வருவோம்.

அவ்வறான, இரக்கம் கொண்ட ஒரு புதிய கலாசார இருப்பை உருவாக்க முன்வருமாறு அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். இந்தத் தீபாவளியில், வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை என்ற நமது எதிர்பார்ப்பு நனவாக வேண்டுமானால், அதற்கான கலாசார, அரசியல் ரீதியான மனப்பாங்கு மாற்றமும் அவசியமாகும்.

தீபாவளி தினத்தில் அனைத்து வீடுகளிலும் ஏற்றப்படும் ஆயிரக்கணக்கிலான விளக்கு ஔிகள் அனைவரினதும் மனங்களில் நட்புறவு மற்றும் ஞானத்தின் ஔியை பரவச் செய்வதாக அமையட்டும் என பிரார்த்திப்பதோடு இலங்கைவாழ் இந்து பக்தர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

அநுரகுமார திசாநாயக்க

ஜனாதிபதி

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

2024 ஒக்டோபர் 30

Show More

“அரசியலை மக்கள் சேவையாக மாற்றியமைத்திட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது” -ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க-

(-“நாட்டைக் கட்டியெழுப்பும் நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு” வெற்றிக்கான காலி பொதுக் கூட்டம் – 2024.10.27-) இந்த தேர்தலில் மக்களுக்கு கூறுவதற்கு விடயங்கள் இல்லாதவர்கள் பழைய கதைகளையே மீண்டும் கூறத்தொடங்கி இருக்கிறார்கள். புதியவர்களுக்கு அனுபவம் கிடையாதெனவும், பழக்கப்பட்டவர்களையே அனுப்பிவைக்குமாறும் அவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் கூறுகின்ற பழையவர்கள் திருட்டுகளுக்கு பழக்கப்பட்ட, சட்டத்தை முற்றாகவே மதிக்காமல் செயலாற்றுபவர்கள் என்பது ஏற்கெனவே அம்பலமாகி உள்ளது. சாதாரண மனிதர் ஒருவரின் வாகன இலக்கத்தகடு விழுந்திருந்தால், வீதியில் மிகவும் விழிப்புடன் கவனமாகவே பயணிப்பார்கள். ஆனால் அரசியல்வாதிகள் […]

(-“நாட்டைக் கட்டியெழுப்பும் நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு” வெற்றிக்கான காலி பொதுக் கூட்டம் – 2024.10.27-)

President Anura Kumara Dissanayake Addressing The Crowd At The Victory Rally Of Galle

இந்த தேர்தலில் மக்களுக்கு கூறுவதற்கு விடயங்கள் இல்லாதவர்கள் பழைய கதைகளையே மீண்டும் கூறத்தொடங்கி இருக்கிறார்கள். புதியவர்களுக்கு அனுபவம் கிடையாதெனவும், பழக்கப்பட்டவர்களையே அனுப்பிவைக்குமாறும் அவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் கூறுகின்ற பழையவர்கள் திருட்டுகளுக்கு பழக்கப்பட்ட, சட்டத்தை முற்றாகவே மதிக்காமல் செயலாற்றுபவர்கள் என்பது ஏற்கெனவே அம்பலமாகி உள்ளது. சாதாரண மனிதர் ஒருவரின் வாகன இலக்கத்தகடு விழுந்திருந்தால், வீதியில் மிகவும் விழிப்புடன் கவனமாகவே பயணிப்பார்கள். ஆனால் அரசியல்வாதிகள் இங்கிலாந்தில் இருந்து கள்ளத்தனமாக கொண்டுவந்து திருட்டு இலக்கத் தகடுகளுடன் வாகனங்கள் ஓட்டப்பட்டமை அம்பலமாகி உள்ளது. அதைப்போலவே கோடிக்கணக்கான பெறுமதிவாய்ந்த வாகனங்களை இனந்தெரியாதவர்கள் கொண்டுவந்து முற்றத்தில் வைத்துவிட்டுச்செல்வது இடம்பெற்று வருகின்றது. அவர்கள் இதுவரை சட்டத்துடன் தொடர்பு இல்லாதவர்களைப்போன்றே செயற்பட்டிருக்கிறார்கள். பொதுமக்கள் வாகனங்களை பதிவுசெய்துகொள்ள வேண்டும். ஆனால் அவர்களுக்கோ கள்ளத்தனமாக ஓட்டுவதற்கான ஆற்றல் இருக்கின்றது. அவர்கள் தற்போது மேடைகளில் கூறுகின்ற அனுபவம் அதுபோன்ற விடயங்களுக்கே இருக்கின்றது. குற்றச்செயல்களைப் புரிந்து தலைமறைவாக இருப்பதற்கான, திருடி தப்பித்துக்கொள்வதற்கான, பொதுமக்களுக்கு மேலானவர்களாக இருப்பதற்கான அனுபவம் அவர்களிடம் இருக்கின்றது. இப்படிப்பட்டவர்கள் இருந்த பாராளுமன்றத்தையே மக்கள் வெறுக்கிறார்கள். பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்கிறவர்களை நன்றாக பரிசோதிக்கிறார்கள். ஆனால் கள்ளத்தனமாக கத்திகள், மிளகாய்த்தூள் கொண்டுவரமுடியும். பாராளுமன்றத்தில் கதிரைகளைத் தூக்கி அடிக்கலாம். மக்களுக்கெதிரான சட்டங்களுக்காக கைகளை உயர்த்தலாம். இவ்வாறான செயல்களுக்கே அவர்கள் பழகி இருக்கிறார்கள். சட்டத்திற்கு மேலாக இருந்துகொண்டு, பொதுப்பணத்தைக் கோடிக்கணக்கில் மோசடி செய்யவும் மக்களைவிட அதிகமான சிறப்புரிமைகளை அனுபவிக்கவும் அவர்கள் அனுபவம் பெற்றிருக்கிறார்கள். அத்தகைய பழக்கங்களைக் கொண்டுள்ளவர்களை மக்கள் அறவே வெறுத்திருக்கிறார்கள். பழக்கப்பட்டவர்களை பாராளுமன்றம் அனுப்பிவைக்குமாறு முன்னாள் சனாதிபதி இன்றும் கூறியிருக்கிறார். நல்லவர்களால் பாராளுமன்றத்தை நிரப்புமாறே நாங்கள் கூறுகிறோம்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பாக முன்வந்துள்ளவர்கள் பாராளுமன்றத்திற்கு புதியவர்களாக இருந்தபோதிலும் அரசியலுக்கு புதியவர்கள் அல்ல. எந்தவொரு நேரத்திலும் நாடு அனர்த்தமொன்றை சந்திக்க நேரிட்டால் அதற்காக முன்நிற்பவர்கள். மக்களின் பணத்தை திருடியதற்கு எதிராக குரலெழுப்பியவர்களே இருக்கிறார்கள். இந்த நாட்டின் வளங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக அவற்றை பாதுகாத்துக் கொள்வதற்காக எந்தவொரு தருணத்திலும் முன்வந்தவர்களே இருக்கிறார்கள். இந்த நாட்டில் எங்கேயாவது ஓரிடத்தில் அநீதி ஏற்படுமானால் அதனை எதிர்த்து அரசியல் புரிந்தவர்களே இருக்கிறார்கள். அதைப்போலவே வெள்ளப்பெருக்கு அனர்த்தம், சுனாமி போன்ற பேரிடர்களின் மத்தியில் மக்களுக்காக உச்சஅளவில் அர்ப்பணிப்புச் செய்தவர்களே இருக்கிறார்கள். எம்மைக் குறைகூறுபவர்கள் தீயசெயல்களைப் புரிவதில் கைதேர்ந்தவர்களாவர். ஆனால் எம்மவர்களோ நல்ல செயல்களைப் புரிவதில் கைதேர்ந்தவர்கள். எதிர்வரும் தேர்தலில் புதியவர்களைக்கொண்டு எனினும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்களைக்கொண்டே நிரப்பவேண்டும். திசைகாட்டியை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் அத்தகையவர்களே. இளைஞர்களுக்கு வெறுப்புத்தட்டிய அரசியல் சமர்க்களத்தை சுத்தஞ்செய்வதற்காக பாராளுமன்றத்தை திசைகாட்டியால் நிரப்பி சாதகமான அரசியலை உருவாக்கவேண்டும். அவர்களுக்கோ அரசியல் என்பது பணத்தை ஈட்டுவதற்கான மார்க்கமாகும். தேசிய மக்கள் சக்திக்கோ அரசியல் என்பது மக்கள் சேவையாகும். ஒரு பிஸ்னஸாக மாற்றிக்கொண்டிருக்கின்ற அரசியலை படிப்படியாக மக்கள் சேவையாக, மக்களுக்காக செயலாற்றுகின்ற அரசியலாக மாற்றியமைத்திடுவோம். அவர்கள் ஏதேனும் கருத்திட்டம் நாட்டுக்கு நல்லதா எனப் பார்ப்பதில்லை. அதனால் பரிசுத்தமான முதலீட்டாளர்கள் இந்த நாட்டுக்கு இதுவரை வரவில்லை. அரசியலை வியாபாரமாக கொண்டிருந்தவர்களே மருந்திலிருந்தும் திருடினார்கள். அரசியல் பிஸ்னல் மூலமாக தரமற்ற பசளையைக் கொண்டுவருகிறார்கள். இதனை மக்கள் சேவையாக மாற்றுவதற்கான ஆரம்ப நடவடிக்கைளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடேற்றிவருகின்றது.

Crowd At The Victory Rally Of Galle

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளைக் குறைத்து அவர்களுக்கான செலவுச்சுமையினைக் குறைக்கவேண்டும். சனாதிபதிக்கு, முன்னாள் சனாதிபதிகளுக்கு செலவிடுகின்ற செலவுச்சுமையினைக் குறைக்கவேண்டும். முன்னாள் சனாதிபதிமார்களுக்கான செலவுச்சுமையினைக் குறைக்க நாங்கள் ஏற்கெனவே ஒரு குழுவினை நியமித்திருக்கிறோம். இது ஒரு பழிவாங்கல் அல்ல. அரசியலை மக்கள் சேவையாக மாற்றியமைப்பதாகும். எமது நாட்டில் நிலவுகின்ற பழைய அரச பொறியமைப்பு காரணமாக அரசாங்க அலுவலகங்களில் பொது உதவியைப் பெற்றுக்கொள்ளவும் வேறு எந்த சேவையையும் ஈடேற்றிக்கொள்ள வரிசையில் காத்திருக்கவும் அத்துடன் தாமதங்கள் ஏற்படவும் நேரிடுகின்றது. இந்த நிலைமையை முற்றாக மாற்றியமைத்து அரசசேவையை டிஜிட்டல்மயமாக்கி வினைத்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவோம். இந்தியாவில் ஒரு கிவ்ஆர் கோட் மூலமாக வடை விற்பனை செய்யும்போது எமது மக்கள் ஐயாயிரம் ரூபாவை வாங்கவும், பத்து கிலோ அரிசியை வாங்கவும், அஸ்வெசும பெற்றுக்கொள்ளவும், காணிக்கான உறுதியை தயாரித்துக்கொள்ளவும் வரிசைகளில் அலைக்கழிய நேரிடுகின்றது. குறுகிய காலத்திற்குள் இவையனைத்தையும் முற்றாகவே மாற்றியமைத்து பிரஜைகளுக்கு நெருக்கமான, வினைத்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவோம். நாட்டை சீராக்குவது எப்படி, யார் என்பதை நாங்கள் காட்டுகிறோம். ஒருசிலர் ஊழல், மோசடி பயில் எங்கே எனக் கேட்கிறார்கள். அதற்கான விசாரணைகளை மேற்கொள்ளக்கூடிய பொருத்தமான உத்தியோகத்தர்களை நியமித்து அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய ஒத்துழைப்பினை வழங்கி முறைப்படி சட்ட நடவடிக்கைகளுக்கு இடவசதியை ஏற்படுத்திக் கொடுப்போம். நாடகபாணியிலான அல்லது காட்சிப்படுத்துகின்ற எந்தவொரு வேலையும் கிடையாது. படிப்படியாக சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவோம்.

நாட்டின் எதிர்காலத்தை நிர்மாணிக்கின்ற பிள்ளைகளின் கல்விக்காக முன்னுரிமையளித்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கின்ற அரசாங்கமொன்று இலங்கையில் முதல்த்தடவையாக வேலைகளைத் தொடங்கியுள்ளது. அதைப்போலவே பெற்றோர்களை உள்ளிட்ட முதியவர்களைப் பராமரித்து நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பணியை முன்னெடுத்துச் செல்லாமல் தேசிய மக்கள் சக்தி மீளத்திரும்ப மாட்டாது. அவர்களின் சோகக் கதைகளை பிதற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் மனதை அசுவாசப்படுத்திக் கொள்வதற்கான கதைகளை தேவையான அளவில் கூறிக்கொள்ளலாம். எனினும் மக்கள் நேயமுள்ள பணிகளை பாராளுமன்றத்தில் நடைமுறைப்படுத்துகையில் தடையேற்படுத்தாத உறுதியான அரசாங்கமொன்று தேவை. அதற்காக அதிகமான எண்ணிக்கை கொண்டவர்களை நவெம்பர் 14 ஆந் திகதி பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுங்கள். என்றாலும் இந்த தடவை தேர்தல் சோர்வடைந்து விட்டதைப்போல் உணர்வதாக ஒருசிலர் கூறுகிறார்கள். இதுவரை காலமும் தேர்தலை நடாத்தியவர்கள் முன்னாள் ஆட்சியாளர்களின் சண்டியர்களே. சமுர்த்தியை வெட்டிவிடுவதாக அச்சுறுத்துதல், அலங்கரிப்புக் கொடிகளை அறுத்தல், அலுவலகங்களைத் தாக்குதல் போன்றே அரசாங்கத்தின் அதிகாரத்தைக் கையிலெடுத்து பலவிதமான அப்ளிகேஷன் பகிர்ந்தளித்தல், அரிசி பங்கிடுதல், தகடுகளைப் பகிர்ந்தளித்தல் போன்ற எத்தனை செயல்கள் இடம்பெற்றன? தற்போது அவையெதுவுமே கிடையாது. அதாவது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் இலங்கையில் முதல்த்தடவையாக சுதந்திரமான தேர்தலுக்கு முழுமையாகவே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட தேர்தல் நல்லதில்லையா? மக்களிடம்சென்று சுதந்திரமாக கருத்துக்களை எடுத்துரைத்து அந்த மக்கள் வாக்களிக்கின்ற ஒரு தேர்தலே எமக்குத் தேவை. அத்தகைய தேர்தலை தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் இந்த நாட்டுக்கு பெற்றுக்கொடுத்திருக்கிறோம். நாங்கள் கடமைகளைப் பொறுப்பேற்றல், அமைச்சரவையை நியமித்தல் போன்றே பொதுத்தேர்தல்வரை புதிய மாற்றங்களைக் குறுகிய காலப்பகுதிக்குள் அறிமுகஞ் செய்துள்ளோம். எமது ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டை நல்லதொரு திசையைநோக்கி நிச்சயமாக மாற்றிடுவோம். அதற்காக அனைவரும் அணிதிரள்வோம். முன்நின்று உழைப்போம் என அழைப்பு விடுக்கிறோம்.

Palitha Fernando Addressing The Crowd At The Victory Rally Of Galle

Sihadur Rahuman Addressing The Crowd At The Victory Rally Of Galle

Hasara Gampala Liyanage Addressing The Crowd At The Victory Rally Of Galle

Rathna Gamage Addressing The Crowd At The Victory Rally Of Galle

Nalin Hewage Addressing The Crowd At The Victory Rally Of Galle
Show More

“எமது அரசாங்கத்தில் மக்களின் தரமான சுகாதார சேவைக்கான உரிமையை உறுதிசெய்வோம் – பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்காக எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வது பொறுப்புடன் செயலாற்றுகின்ற அரசாங்கமொன்றின் செயற்பொறுப்பாகும்” -ஜனாதிபதி, அநுர குமார திசாநாயக்க-

(-பொதுத்தேர்தல் – புத்தளம் மாவட்டக் கூட்டம் – 2024.10.24-) கடந்த ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் பல தொகுதிகளில் எமக்கு வெற்றியைப் பெற்றுத்தந்ததைப்போன்றே பொதுத்தேர்தலிலும் இந்த மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறுவதை இந்த பெருந்திரளான மக்கள் கூட்டம் உறுதிசெய்கின்றது. புத்தளம் மாவட்டத்தில் இருந்து இதுவரை தெரிவுசெய்து அனுப்பிய உறுப்பினர்கள் மக்களுக்கு துரோகமிழைக்கும் செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள். பலவந்தமாக காணிகளை கைப்பற்றுதல், போதைத்தூள் வியாபாரம் செய்தல், கள்வர்கள் தங்கக் கடத்தலில் ஈடுபடுதல், கப்பம் பெறுதல், பலவந்தமாக இறால் பண்ணைகளை கைப்பற்றுதல் […]

(-பொதுத்தேர்தல் – புத்தளம் மாவட்டக் கூட்டம் – 2024.10.24-)

The President Anura Kumara Dissanayake Addressing At The Victory Rally Of Puttalam Crowd

கடந்த ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் பல தொகுதிகளில் எமக்கு வெற்றியைப் பெற்றுத்தந்ததைப்போன்றே பொதுத்தேர்தலிலும் இந்த மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறுவதை இந்த பெருந்திரளான மக்கள் கூட்டம் உறுதிசெய்கின்றது. புத்தளம் மாவட்டத்தில் இருந்து இதுவரை தெரிவுசெய்து அனுப்பிய உறுப்பினர்கள் மக்களுக்கு துரோகமிழைக்கும் செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள். பலவந்தமாக காணிகளை கைப்பற்றுதல், போதைத்தூள் வியாபாரம் செய்தல், கள்வர்கள் தங்கக் கடத்தலில் ஈடுபடுதல், கப்பம் பெறுதல், பலவந்தமாக இறால் பண்ணைகளை கைப்பற்றுதல் போன்ற மக்களை அல்லற்படுத்துகின்ற உறுப்பினர்களுக்குப் பதிலாக மக்களுடன் தோள்கொடுத்து நாட்டைக் கட்டியெழுப்பகின்ற புதிய கலாச்சாரத்தைக்கொண்ட உறுப்பினர்களை புத்தளம் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிவையுங்கள். அதற்காக இருப்பது தேசிய மக்கள் சக்தியின் அணி மாத்திரமே. பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது பொதுவில் நிலவுகின்ற எதிர்ப்பினை முடிவுறுத்தி பாராளுமன்றத்தை துப்பரவாக்குகின்ற பாரிய சிரமதானத்திற்காக திசைகாட்டியிலிருந்து அதிகமான எண்ணிக்கைகொண்ட உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கவேண்டும். நாங்கள் அவ்வாறு கூறும்போது திசைகாட்டி வேட்பாளர்களின் முகங்கள்கூட தெரியாதென ஒருசிலர் கூறுகிறார்கள். எனினும் பலவிதமான குற்றச்செயல்களில் ஈடுபட்டு முழுநாட்டிலுமே பிரபல்யமடைந்துள்ள குற்றச்செயல் புரிபவர்களுக்குப் பதிலாக இந்த நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய திசைகாட்டியின் பலம்பொருந்திய அரசாங்கமொன்றை உருவாக்க செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உலகில் இருக்கின்ற மிகச்சிறிய அமைச்சரவையை முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகளை உணர்கிறீர்களா? அவ்வாறான குறைபாடு கிடையாது. ஒரு பட்டாசுகூட கொளுத்தாமல் வெற்றியைக் கொண்டாடியதன் மூலமாக வெளிப்படுத்திய எடுத்துக்காட்டினை இந்த பொதுத்தேர்தலிலும் தேர்தல் இயக்கத்தில் பாதுகாத்து வருகிறோம். குறிப்பாக புத்தளம் மாவட்டம் என்பது தேர்தல் பீதிநிலையை பரப்பிய மாவட்டமாகும். எனினும் இந்த தேர்தல் காலத்தில் அமைதியான தேர்தலொன்றை நடாத்துதல் தொடர்பில் வரலாறு படைத்துள்ளோம். ஐரோப்பாவில் நிலவுகின்ற முன்னேற்றமடைந்த அரசியல் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புகின்ற தேர்தல் இயக்கமொன்றை தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்து வருகின்றது. பொதுத்தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றியின் பின்னரும் இந்த நிலைமையைப் பாதுகாக்கின்ற அரசியல் கலாச்சாரத்தை உறுதிசெய்கிறோம்.

The Victory Rally Of Puttalam Crowd People

அரசியலை வெறுத்திருந்த இளைஞர் தலைமுறையினரை முதன்மையாகக்கொண்ட மக்கள் புதிய உணர்வுடன் நாடு பூராவிலும் அரசியலில் ஒன்றுசேர்ந்து வருகிறார்கள். தேர்தலின் பின்னர் விஞ்ஞானரீதியான அடிப்படையில் இருபத்தைந்து பேருக்கு குறைவான அமைச்சரவையை நியமித்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை அமுலாக்குவோம். “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்பதைக் கட்டியெழுப்புகின்ற வேலைத்திட்டம் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எமது திட்டங்களை அமுலாக்கி வருகின்ற அதேவேளையில், குறிப்பாக மத்தியக் கிழக்கில் உருவாகியுள்ள யுத்த முரண்பாட்டின் தாக்கம் உலகம் பூராவிலும் பரவிவருவதோடு இலங்கை மீதும் ஒருசில அபாயநேர்வுமிக்க நிலைமைகள் வந்துள்ளன. அவற்றில் ஏதேனுமொரு சம்பவம் இலங்கையிலும் ஏற்படக்கூடுமென்ற தகவல் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர் எமக்கு கிடைத்தது. நாங்கள் சம்பந்தப்பட்ட இடங்களின் பாதுகாப்பினை வேகமாக உறுதிசெய்தோம். உளவுப் பிரிவுத் தகவல்கள் பதிவாகின்றபோது நாங்கள் ஊடக கலந்துரையாடல்களை நடாத்துவதில்லை. அந்த தகவல்களுக்கு நேரொத்தவகையில் பொறுப்புடன் செயலாற்றுவோம். பொறுப்புடைமயவர்களாக பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வோம். அதைப்போலவே உளவுப்பிரிவுத் தகவல்களின் அடிப்படையில் புலனாய்வுகளை துரிதமாக நடாத்தி ஒருசில சந்தேக நபர்களைக் கைதுசெய்தோம். எனினும் செய்திகளை வெளியிடுவதையோ ஊடக கலந்துரையாடல்களை நடாத்துவதையோ செய்யவில்லை. ஒரு அரசாங்கம் என்றவகையில் எமது பொறுப்பு அவ்வாறான சம்பவங்களை தடுப்பதாகும். முன்னர் செய்தது அவ்வாறான உளவுத் தகவல்களை பொருட்படுத்தாமல் விடுவது அல்லது ஊடகங்களுக்கு அறிவித்து பதற்றத்தை உருவாக்குவதாகும். மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பொலீஸாருடனும் பாதுகாப்பு பிரிவுகளுடனும் மிகவும் நெருக்கமாக கவனஞ்செலுத்தி மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். அது சம்பந்தமாகவும் ஒருசிலர் கலவரமடைந்திருக்கிறார்கள். பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது பொறுப்புடன் இயங்கிவருகின்ற அரசாங்கமொன்றின் செயற்பொறுப்பாகும். பொருளாதாரரீதியாக, பாதுகாப்புரீதியாக, தொழில்முயற்சிகளை முன்னேற்றுகின்ற பக்கத்தில், பிள்ளைகளின் கல்விப் பக்கத்தில் போன்றே உழைக்கும் மக்களின் பக்கத்தில் அனைவரையும் பேணிப்பாதுகாக்கவேண்டியது ஓர் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதனை நாங்கள் ஈடேற்றிக்கொண்டிருக்கிறோம்.

Gayan Janaka With President Waving At The Crowd At The Victory Rally Of Puttalam

வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு துறைக்குமான நிதி ஒதுக்கப்படுகின்றது. அவ்வாறின்றேல் குறைநிரப்பு மதிப்பீடு மூலமாக சம்பந்தப்பட்ட செலவினை ஏற்பதற்கான அங்கீகாரம் பெறப்படல் வேண்டும். அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பணத்தை ஒதுக்கியதாக முன்னாள் ஜனாதிபதி கூறுகிறார். அவர் ஒதுக்கியிராவிட்டாலும் எதிர்வரும் வரவுசெலவில் நாங்கள் அதற்கு அவசியமான நிதியை ஒதுக்கீடுசெய்வோம். முன்னாள் ஜனாதிபதி தோல்விகண்ட பின்னர் எம்மை அங்குமிங்கும் கிள்ளிக்கொண்டிருக்காமல் வீட்டில் இருக்கவேண்டுமென நாங்கள் ஞாபகப்படுத்துகிறோம். ஆனால் அவர்கள் ஏதாவது பிரச்சினையையோ அல்லது புனைகதையையோ உருவாக்கி மீண்டும் அதிகாரத்தைக் கையகப்படுத்திக்கொள்ள முயற்சிசெய்து வருகிறார்கள். எங்கள் அரசாங்கம் மூன்றே மாதங்களில், ஆறே மாதங்களில் வீழ்ந்துவிடுமென கூறவும்தொடங்கி இருக்கிறார்கள். நாங்கள் இந்த நாட்டை சீராக்கியே தீருவோமென்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். அதனை சாதிக்காமல் தேசிய மக்கள் சக்தி நின்றுவிடப் போவதில்லை. பொருளாதாரரீதியாக முன்னேற்றமடைந்த ஒரு நாடு, சுத்தத்தினால் முன்னேற்றமடைந்த ஒரு நாடு, மனிதர்களின் நடத்தைகளால் முன்னேற்றமடைந்த ஒரு நாடு, சட்டத்தின் ஆதிக்கத்தினால் முன்னேற்றமடைந்த ஒரு நாடு போன்றே சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களிடையே தேசிய ஒற்றுமை பாதுகாக்கப்படுகின்ற ஒரு நாட்டை நாங்கள் உருவாக்குவோம். அதற்கு மேலதிகமாக தேசிய பாதகாப்பினை உறுதிசெய்து, சுற்றாடலை நேசித்து, பாசத்துடன் பாதுகாக்கின்ற முன்னேற்றமடைந்த நாடாக இலங்கையை மாற்றியமைப்போம். எவருக்காவது இதனைப் பார்த்துப் பொறுத்துக்கொண்டிருக்க முடியாவிட்டால் ஒருபுறம் ஒதுங்கி அழுதுபுலம்பிக் கொண்டிருக்கவே நேரிடும். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எமக்கெதிரான அனைத்துவிதமான பிரச்சாரங்களையும் அவர்கள் மேற்கொண்டார்கள். எமக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் கிடையாதென அவர்கள் ஒரு பீதியைக் கிளப்பினார்கள். ஏற்கெனவே மத்தியவங்கி உத்தியோகத்தர்கள், நிதி அமைச்சின் உத்தியோகத்தர்கள், பொருளாதார ஆலோசகர்கள் அமெரிக்காவிற்குச் சென்று சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகிறார்கள். அதைப்போலவே உலகின் அனைத்து நாடுகளுடனும் நெருக்கமான உறவுகளை இராஜதந்திரரீதியாக உறுதிசெய்து கொண்டிருக்கிறோம். அதனால் இன்று அவர்களால் கூட்டமொன்றுக்கு வந்து கூறுவதற்கு ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. அதனால் ஊடக சந்திப்புகளை நடாத்தி மீண்டும் மீண்டும் அவதூறான கதைகளைக் கூற, பொய்ப்பிரசாரங்களை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். எனினும் தேசிய மக்கள் சக்தி எல்லாவேளைகளிலும் உண்மையை அடிப்படையாகக்கொண்டு அரசியலில் ஈடுபடுகின்ற இயக்கமென்பதை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். பாராளுமன்றத்திலும் காலில் இழுக்க இடமளிக்காத, பிரச்சினையை ஏற்படுத்த முடியாத பலம்பொருந்திய அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக்கொடுங்கள். உங்கள் அனைவரதும் பொறுப்பினை ஏற்கின்ற அரசாங்கமொன்றை நாங்கள் நிறுவுவோம். ஏதேனும் சந்தேகத்தை மனதில் வைத்துக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் எமக்கு வாக்குகளை அளித்திராதவர்கள் இந்த தேர்தலில் எமக்காக ஒன்றுசேர்ந்து வருகிறார்கள்.

Crowd At The Victory Rally Of Puttalam Crowd

அரசாங்கமென்பது தனக்கு வாக்குகளை அளித்திராதவர்களினதும் நம்பிக்கையை வென்றெடுத்த சக்தியாகும். கழிகின்ற ஒவ்வொரு தருணத்திலும் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை அதிகரித்து வருகின்றது. அதனால் எமது அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியுமென நினைத்துக்கூட பார்க்கவேண்டாமென அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். அவர்களின் பல தலைமுறையினர் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற நிலைமை முற்றுப்பெற்றுள்ளதால் வேதனையின் ஓலக்குரல்கள் பல ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்த எவையுமே எமது அரசாங்கத்திற்கு சிறிதளவிலேனும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாதென்பதை ஞாபகப்படுத்துகிறேன். ஒருசில அரசியல் கட்சிகள் இறுதித்தருணத்திலும் அரசியல் இலாபத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பிரச்சாரங்களை மேற்கொண்டு, தேர்தலின்பின்னர் எம்மோடு இணைவதாக கூறிவருகின்றன. அங்குமிங்கும் தாவுதல் தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு நிலவுகின்றது. சந்தர்ப்பவாதிகளாக தாவுகின்ற தரகர்கள், கொந்துராத்துக்காரர்கள் இல்லாத ஒரேயோர் அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தியாகும். எதிர்காலத்திலும் எமது நிலைப்பாட்டினை அவ்விதமாகவே பாதுகாத்து, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய மகத்தான வெற்றியைப் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். வளமான நாட்டைக் கட்டியெழுப்பி அழகான வாழ்க்கையை உருவாக்கிக் கொடுப்பதற்காக அனைவரையும் அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Dr Chandarana Abeysinghe Addressing The Crowd At The Victory Rally Of Puttalam

Sunimal Jayakodi Addressing At The Victory Rally Of Puttalam

Anton Jayakodi Addressing At The Victory Rally Of Puttalam

Hiruni Wijesinghe Addressing At The Victory Rally Of Puttalam.jpg

Show More

“நவம்பர் 14 என்பது இலங்கை பாராளுமன்றத்தை சுத்தம் செய்வதற்கான சிரமதானம் நடத்தப்படுகின்ற நாளாகும்.” -ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க-

(-பாராளுமன்றத் தேர்தல் – பொலநறுவை கூட்டம் – 2024.10.23-) பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைமழையில் நனைந்துகொண்டு பொலநறுவையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்கான கூட்டத்தை நடத்துகிறார்கள். மக்களிடமிருந்து பிரதிபலிக்கின்ற எதிர்பார்ப்பு, நோக்கம் மற்றும் திடசங்கற்பம் நவம்பர் 14 ஆம் திகதி தனிச்சிறப்பு வாய்ந்த வெற்றியை பொலநறுவையில் இருந்து பெற்றுக்கொடுப்பதையே வெளிக்காட்டுகிறது. பொலநறுவை மாவட்டத்தை உள்ளிட் இந்நாட்டு மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டை புதிய திசைக்கு அனுப்பி வைப்பதற்காக தேசிய மக்கள் சக்திக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்கள். நாட்டில் இயல்புநிலையை […]

(-பாராளுமன்றத் தேர்தல் – பொலநறுவை கூட்டம் – 2024.10.23-)

President Anura Kumara Dissanayake Addressing The Crowd At The Victory Rally Of Polonnaruwa

பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைமழையில் நனைந்துகொண்டு பொலநறுவையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்கான கூட்டத்தை நடத்துகிறார்கள். மக்களிடமிருந்து பிரதிபலிக்கின்ற எதிர்பார்ப்பு, நோக்கம் மற்றும் திடசங்கற்பம் நவம்பர் 14 ஆம் திகதி தனிச்சிறப்பு வாய்ந்த வெற்றியை பொலநறுவையில் இருந்து பெற்றுக்கொடுப்பதையே வெளிக்காட்டுகிறது. பொலநறுவை மாவட்டத்தை உள்ளிட் இந்நாட்டு மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டை புதிய திசைக்கு அனுப்பி வைப்பதற்காக தேசிய மக்கள் சக்திக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்கள். நாட்டில் இயல்புநிலையை பேணிவந்து மக்களுக்கு அவசியமான நிவாரணங்களையும் நாட்டைக் கட்டியெழுப்ப அவசியமான திட்டங்களையும் வகுத்துக்கொண்டு மூவரைக் கொண்ட அமைச்சரவை இயங்கிவருகிறது. நவம்பர் 14 ஆம் திகதிய வெற்றிக்குப் பின்னர் படிப்படியாக நாட்டைக் கட்டியெழுப்ப தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள கொள்கை வெளியீட்டை நடைமுறைப்படுத்துவோம் என்பதை நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம். ஜனாதிபதித் தேர்தல் மேடையில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இருந்த பாசறையில் இருந்து என்ன கோரினார்கள்? பௌத்த பிக்குமார்களுக்கு அன்னதானம் கிடைக்கமாட்டாது, பௌர்ணமி தினத்தை இல்லாதொழிப்பதை உள்ளிட்ட பல விடயங்களை கூறினார்கள். அவையனைத்துமே பொய்யான புனைகதைகள் என்பது கடந்த ஒரு மாத காலத்துக்குள் நிரூபிக்கப்பட்டுவிட்டது. தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு தற்போது ஒரு கூட்டத்தைக் கூட நடத்த முடியாமல் போயுள்ளது. மக்கள் பொய்யை கேட்டுக்கொண்டிருக்க தயாரில்லை என்பதால் அவர்களின் கூறைகூறல்களுக்குள்ளேயே அவர்கள் சிறைf; கைதிகளாக மாறியுள்ளார்கள்.

இந்த பொதுத் தேர்தல் எந்தவிதமான போட்டியும் இல்லாமல் சோர்ந்துபோன ஒரு தேர்தல் என சிலர் கூறுகிறார்கள். எனினும், இந்த தேர்தலில் இலங்கை வரலாற்றின் மிகவும் தனித்துவமான வெற்றியை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக்கொடுப்பது உறுதியானதாகும். கடந்த பாராளுமன்றம் பற்றி மக்கள் மத்தியில் எதிர்ப்பே நிலவியது. தங்கக் கட்டிகளை கடத்தி வந்து சுங்கத்தில் அகப்பட்டவர்கள் அண்மையில் பாராளுமன்றத்திற்கு வந்து கையை உயர்த்தினார்கள். அதைப்போலவே, அங்குமிங்கும் கட்சிதாவி இறுதியில் எங்கே இருக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ள முடியாத திரிபு நிலை உருவாகியிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக பள்ளிப்பிள்ளைகள் பாராளுமன்றம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தளவிற்கு அருவருப்பு நிலைக்கு உள்ளாகியிருந்த பாராளுமன்றத்தைக் கலைத்து மக்களுக்கு வாய்ப்பினை வழங்கியிருக்கின்றோம். நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறப்போவது ஒரு தேர்தல் அல்ல, சுத்தம் செய்வதற்கான பாரிய சிரமதானமாகும். நவம்பர் 14 ஆம் திகதி என்பது இலங்கையில் பாராளுமன்றத்தை சுத்தம் செய்தவற்கான சிரமதானம் நடத்தப்படுகின்ற நாளாகும். பொலநறுவையிலும் தன்னிச்சையாகவே சுத்தம் செய்துகொள்ள விரும்பியவர்கள் தேர்தலில் போட்டியிடுவதில்லை. எஞ்சியுள்ளவர்களை சுத்தம் செய்வதற்காக பொலநறுவை மாவட்ட மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள கடமைப் பங்கினை தன்னிச்சையாகவே பொறுப்பேற்க வேண்டும். பொலநறுவைக்கு தலைமைத்துவம் வழங்கக் கூடிய, ஊழலற்ற, நேர்மையான குழுவினரை நாங்கள் முன்வைத்திருக்கிறோம். அதைப்போலவே, அங்குமிங்கும் கட்சித்தாவாத, விலைபோகாத குழுவினரை நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.

Crowd At The Victory Rally Of Polonnaruwa

அப்படியானால் நவம்பர் 14 ஆம் திகதி திசைகாட்டியின் குழுவினரைக் கொண்டு பாராளுமன்றத்தை நிரப்ப வேண்டும். நாங்கள் அவ்வாறு கூறும்போது மற்றுமொரு கும்பல் பலம்பொருந்திய எதிர்க்கட்சியை அமைத்துக்கொள்வதற்காக அழைப்பு விடுக்கிறார்கள். அது அப்படியல்ல. இந்த நேரத்தில் பலம்பொருந்திய அரசாங்கமொன்றே இருக்க வேண்டும். அதற்கான பணியை நாங்கள் ஆற்றவேண்டும். கட்டம் கட்டமாக நாட்டை உறுதிநிலைப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து அமுலாக்க வேண்டும். அதன்பொருட்டு குறிப்பாக பொலநறுவை மாவட்டத்துடன் சம்பந்தப்பட்ட அரிசியாலை உரிமையாளர்களுடன் புரிந்துணர்வுடன் செயலாற்ற நாங்கள் தயார் என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தோம். அதற்கு உடன்படாவிட்டால் சட்டப்படி செயலாற்றவும் தயார் என்பதையும் கூறியிருக்கிறோம். சுற்றுலா தொழில்துறைக்கு அவசியமான அரிசியைத் தவிர ஒரு அரிசி மணியைக் கூட நாங்கள் இறக்குமதி செய்யமாட்டோம். கமக்காரர்களுக்கு பலம்பொருந்திய வறுமான வழிவகை கிடைக்கின்ற வகையில் விவசாயத்துறையில் நிலைமாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். அதைப்போலவே, ஓய்வூதியம் பெறுநர்களுக்கு அஸ்வெசும பயனாளிகளுக்கு, பாடசாலை பிள்ளைகளுக்கு கொடுப்பனவினை பெற்றுக்கொடுப்பதற்கான திட்டங்களை வகுத்து அரச சேவையை வினைத்திறன் கொண்டதாக மாற்றியமைக்க இலங்கையில் முதல் தடவையாக கட்டியெழுப்பப்பட்டுள்ள மக்கள் நேயமுள்ள அரசாங்கம் செயலாற்றி வருகின்றது. இந்த நாட்டையும் மக்களையும் முதன்மைப்படுத்தி வைத்துக்கொள்வதற்காகவே நாங்கள் எந்தவொரு தீர்மானத்தையும் எடுப்போம். எங்களுடைய தனிப்பட்ட தேவைக்காக எந்தவிதமான தீர்மானத்தையும் எடுக்க மாட்டோம். அதனால், தோல்விகண்ட கும்பல்கள் கலவரமடைந்து அவர்களின் ஒட்டுமொத்த அரசியலையுமே கொழும்பில் நடாத்தப்படுகின்ற ஊடக சந்திப்புகளுக்கு மட்டுப்படுத்தி இருக்கிறார்கள். அந்த கதைகள் அனைத்துமே மனவேதனைகளின் வெளிப்பாடு ஆகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எங்களுக்கு வாக்குகளை அளித்தவர்களைவிட அதிகமான எண்ணிக்கை கொண்டவர்கள் பொதுத் தேர்தலில் வாக்குகளை அளிக்க அணிதிரண்டு இருக்கிறார்கள். நாள்தோறும் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி மீண்டும் மீண்டும் நம்பிக்கை வைத்து மக்கள் குழுமி வருகிறார்கள். தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக முன்வைத்த காலை பின்வைக்க மாட்டாது என்பதை வலியுறுத்துகிறேன். வறுமையின், நிர்க்கதி நிலையின் அடித்தளத்திற்கே வீழ்ந்துள்ள நாட்டை அதிலிருந்து மீட்டெடுத்து முன்நோக்கி நகர்த்துவதற்காக புத்திஜீவிகளும் தொழில்வாண்மையாளர்களும் பெருமளவில் தன்னிச்சையாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமது பணிகளை ஈடேற்றிக் கொள்வதற்காக அரசாங்க அலுவலகங்களில் வரிசைகளில் காத்துக்கொண்டிராமல் அனைத்தையும் டிஜிட்டல்மயமாக்கி வினைத்திறனுடன் ஈடேற்றிக் கொடுப்போம். வெளிநாடொன்றில் கோடிக்கணக்கான ரூபா சம்பளம் பெற்ற டிஜிட்டல் துறையைச் சேர்ந்த முதன்மை புத்திஜீவியொருவர் தன்னிச்சையாகவே நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு பங்களிப்புச் செய்வதற்கான இன்னும் சில வாரங்களில் நாட்டுக்கு வருகைத்தரவுள்ளார்.

President Anura Kumara Dissanayake Waving At The Crowd At The Victory Rally Of Polonnaruwa.jpeg

ஊழல்பேர்வழிகளுக்கு, மோசடிப்பேர்வழிகளுக்கு தண்டனை வழங்குவது ஒரு ‘வொய்ஸ் கற்’ நாடகமல்ல. இப்பொழுது பல வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. என்றாலும் “வொய்ஸ் கற்” கிடைக்காது. மூடப்பட்டிருந்த பல கோப்புகள் திறக்கப்பட்டு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. கள்வர்களைப் போல் சம்பந்தபட்டவர்கள் பதற்றமடைந்திருக்கிறார்கள். அதற்காக மேலும் வலிமையும் பலமும் கொண்ட பாராளுமன்றத்தை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். மக்களின் பக்கத்தில் உழைத்த பொலநறுவை மாட்டத்தின் மக்களுக்கு அறிமுகமான ஒரு குழுவினரை நாங்கள் முன்வைத்திருக்கிறோம். ஔடத தீத்தொழில் சம்பந்தமாக கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட வேளையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கெஹெலிய ரம்புக்வெல்லவை பாதுகாப்பதற்காக வாக்களித்தார்கள். பிணைமுறி மோசடி சம்பந்தமாக அப்போதிருந்த நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட வேளையிலும் அந்த நிதியமைச்சரை பாதுகாத்துக் கொள்வதற்காக வாக்குகளை அளித்தார்கள். கடந்த பாராளுமன்றத்தில் எல்லா சந்தர்ப்பத்திலும் மக்களுக்கு எதிராகவே கையை உயர்த்தியிருக்கிறார்கள். இரசாயன உரம் தடைசெய்யப்பட்டதை நிறுத்துமாறு கமக்காரர்கள் குரலெழுப்பிய வேளையில் அமைச்சரவையும் பாராளுமன்றத்தின் ஆளுந்தரப்பு பிரதிநிதிகளும் மக்களுக்கு எதிராகவே செயற்பட்டார்கள். இந்த தேர்தல் சற்று சோர்வானது போல இருந்தாலும் அனைவரும் நவம்பர் 14 ஆம் திகதி வரை வீடு வீடாகச் சென்று பலம்பொருந்திய பாராளுமன்றமொன்றை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக்கொடுக்க அயராது உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

T B Sarath Addressing The Crowd At The Victory Rally Of Polonnaruwa

The Crowd At The Victory Rally Of Polonnaruwa
The Victory Rally Of Polonnaruwa Crowd
Show More