Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

புதிய ஜனாதிபதி செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்

(-Colombo, September 23, 2024-) புதிய ஜனாதிபதி செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். களனிப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத்துறையில் கௌரவப் பட்டம் பெற்றுள்ள குமாநாயக்க, ஜப்பானின் National Graduate Institute for Policy Studies (GRIPS) நிறுவனத்தில் அபிவிருத்தி பொருளாதாரம் தொடர்பான கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளதோடு அரச நிதி முகாமைத்துவம் மற்றும் அரச பொருளியல் தொடர்பில் (Public Economics) முதுமாணிப் பட்டம் […]

(-Colombo, September 23, 2024-)

புதிய ஜனாதிபதி செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

களனிப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத்துறையில் கௌரவப் பட்டம் பெற்றுள்ள குமாநாயக்க, ஜப்பானின் National Graduate Institute for Policy Studies (GRIPS) நிறுவனத்தில் அபிவிருத்தி பொருளாதாரம் தொடர்பான கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளதோடு அரச நிதி முகாமைத்துவம் மற்றும் அரச பொருளியல் தொடர்பில் (Public Economics) முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.

அவர் மாத்தறை ராகுல கல்லூரியின் பழைய மாணவராவார்.

கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சுங்கத்துறையில் ஊழல் ஒழிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளதோடு அந்த ஆய்வுகள், சர்வதேச வெளியீடுகள் பலவற்றில் பிரசுரமாகயுள்ளன.

அவர் உலக சுங்க அமைப்பின் (World Customs Organization) சுங்க நவீனமயமாக்கல் தொடர்பான பட்டய ஆலோசகர் என்பதோடு பணிவிணக்க மேம்பாடு தொடர்பான நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக சுங்க அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல நாடுகளுக்கு விஜயம் செய்து சுங்க இணக்க மேம்பாடு தொடர்பான பல நிகழ்வுகளில் இவர் பங்கேற்றுள்ளார்.

1997 ஆம் ஆண்டு சுங்க அதிகாரியாக சேவையில் இணைந்த அவர் இலங்கை சுங்கத் திணைக்கள பிரதிப் பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார்.

Show More

வாருங்கள் நாங்கள் அதற்காக கைகோர்த்துக்கொள்வோம்!

(-Colombo, September 22, 2024-) பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகிக்கொண்டிருக்கிறது. இந்த கனவை நனவாக்குவதற்காக பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்கான நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி பலனளித்துள்ளது. அதற்காக என்னால்உங்களுக்கு நன்றிகூற முடியாது. அதற்கான காரணம் அது என்னுடையதல்ல, எமது கூட்டுமுயற்சியின் பெறுபேறாகும். இது எம்மனைவரதும் வெற்றியாகும். நாங்கள் மாத்திரமல்ல இந்த வெற்றிக்காக பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் தமது இரத்தம், கண்ணீர், வியர்வையை மாத்திரமன்றி உயிர்களைக்கூட தியாகம்செய்துள்ளார்கள். எமக்கு முந்திய […]

(-Colombo, September 22, 2024-)

பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகிக்கொண்டிருக்கிறது. இந்த கனவை நனவாக்குவதற்காக பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்கான நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி பலனளித்துள்ளது. அதற்காக என்னால்உங்களுக்கு நன்றிகூற முடியாது. அதற்கான காரணம் அது என்னுடையதல்ல, எமது கூட்டுமுயற்சியின் பெறுபேறாகும். இது எம்மனைவரதும் வெற்றியாகும்.

நாங்கள் மாத்திரமல்ல இந்த வெற்றிக்காக பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் தமது இரத்தம், கண்ணீர், வியர்வையை மாத்திரமன்றி உயிர்களைக்கூட தியாகம்செய்துள்ளார்கள். எமக்கு முந்திய தலைமுறையினர் எம்மிடம் கையளித்த குறுந்தடியில் வீணாகிப்போய்விடாத அவர்களின் முடிவிலா அர்ப்பணிப்பே பொதிந்துள்ளது. அதன் சுமையை நாங்கள் நன்றாகவே அறிவோம். எதிர்பார்ப்புகள் நிறைந்த உங்களின் இலட்சக்கணக்கான விழிகள் எமக்கு தெம்பூட்டுகின்றன. இலங்கையின் வரலாற்றினை புதிதாக எழுதவேண்டுமென எமக்கு அழைப்பு விடுக்கின்றன.

கனவை முழுமையாகவே யதார்த்தபூர்வமானதாக அமைத்துக்கொள்வதற்காக இந்த மண்ணுக்கு புத்தம்புதிய ஆரம்பமொன்று அவசியமாகும். சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய எம்மனைவரதும் ஒன்றுசேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன்மீதுதான் புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும்.

வாருங்கள் நாங்கள் அதற்காக கைகோர்த்துக்கொள்வோம்!

Anura Kumara Disanayake As The President
Show More

“தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இனவாதம், மதவாதத்திற்கு இடமில்லை.” -தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்க-

(-பெருவெற்றிக்கான நுகேகொடை கூட்டம் – 18-09-2024-) இலங்கை வரலாற்றில் பல்வேறு அரசாங்கங்கள் உருவாகியுள்ளன. அவ்வனைத்து அரசாங்கங்களும் கடந்த காலங்களில் தமது அரசியல் வெற்றிகளுக்காக இனவாதத்தை, மதவாதத்தை, குல மரபினை பயன்படுத்திக் கொண்டார்கள். எனினும், நாங்கள் தேசிய நல்லிணக்கத்திற்கு உயிரூட்டியவண்ணம் இந்த வெற்றியை அண்மித்துள்ளோம். இந்த இறுதி கூட்டத்திலே கூறுவதற்கு தீர்மானித்திருக்காவிட்டாலும் கூட இந்த அரசியல் மேடையில், எமது நாட்டின் இந்த அரசியல் போர்க்களத்தில் இந்த இனவாத மதவாத கோஷங்கள் அகற்றப்பட வேண்டுமென்பதை ஓரளவுக்காவது வலியுறுத்த வேண்டும் என […]

(-பெருவெற்றிக்கான நுகேகொடை கூட்டம் – 18-09-2024-)

Anura Kumara Dissanayake Addressing The Victory Rally Of Nugegoda

இலங்கை வரலாற்றில் பல்வேறு அரசாங்கங்கள் உருவாகியுள்ளன. அவ்வனைத்து அரசாங்கங்களும் கடந்த காலங்களில் தமது அரசியல் வெற்றிகளுக்காக இனவாதத்தை, மதவாதத்தை, குல மரபினை பயன்படுத்திக் கொண்டார்கள். எனினும், நாங்கள் தேசிய நல்லிணக்கத்திற்கு உயிரூட்டியவண்ணம் இந்த வெற்றியை அண்மித்துள்ளோம். இந்த இறுதி கூட்டத்திலே கூறுவதற்கு தீர்மானித்திருக்காவிட்டாலும் கூட இந்த அரசியல் மேடையில், எமது நாட்டின் இந்த அரசியல் போர்க்களத்தில் இந்த இனவாத மதவாத கோஷங்கள் அகற்றப்பட வேண்டுமென்பதை ஓரளவுக்காவது வலியுறுத்த வேண்டும் என எண்ணினேன். நீங்கள் பார்த்திருப்பீர்கள் சஜித் பிரேமதாசவின் அனைத்து தேர்தல் மேடைகளும் மீண்டும் இனவாதம் மதவாதம் நடத்தையை நோக்கமாகக் கொண்டவையாகவே இருந்தன. ஆரம்பத்தில் அவர்கள் கண்டி மற்றும் குருநாகல் கூட்டங்களில் குறிப்பிடுகிறாரகள், தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்தவுடன் கண்டி பெரகராவை நிறுத்தி விடுவார்கள். எத்கந்துவிகாரை பெரகரவை நிறுத்தி விடுவார்கள். அவை என்ன? எமது நாகரீகம் கட்டியெழுப்பப்படும் பொழுது ஒரு தேசமாக, எமக்கான கலாசார மரபுரிமைகள் அவை.

அவை ஐக்கிய மக்கள் சக்திக்கோ எமக்கோ ரணிலுக்கோ மொட்டு கட்சிக்கோ தொடர்புடையவையல்ல. அவை எமது தேசிய மரபுரிமைகள். எமது நாகரீகத்தில் எமக்கு எஞ்சியுள்ள கலாசார பெறுமதிகள். ஆனால் சஜித் பிரேமதாச போன்றோர் அவற்றை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் தமது அரசியல் போர்க்களத்தில் கோஷமாகக் கொண்டார்கள். நாம் ஆட்சிக்கு வந்தால் பௌத்த தேரர்களுக்கு தானம் வழங்குதல் நிறுத்தப்படும் என்றார்கள். நாங்கள் கேட்பது ஒன்று தான் இந்த நாட்டில் தேரர்களுக்கு அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் தானங்கள் வழங்கப்படுவதில்லை. அரசாங்கச் சுற்றறிக்கையின் மூலம் அல்ல பிக்குகளுக்கு தானம் வழங்குவது. எமது நாட்டில் நாகரீகம் கட்டியெழுப்பப்பட்ட விதம். எமது நாட்டில் பௌத்த மதத்தவர்கள் தாம் வளர்த்துக் கொண்டுள்ள சமய நம்பிக்கையின் இயல்புகள், அவர்கள் தமது சமயத்தைக் குறித்து கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்படுத்தல்கள், இவை அரசாங்கமொன்று மாறியதன் காரணமாக மாற்றமடையுமா? அவ்வாறான கீழ்மட்ட நிலைக்கு சஜித் பிரேமதாச போன்றோர் இந்த தேர்தல் செயற்பாட்டைக் கொண்டு வந்தார்கள்.

Crowd At The Victory Rally Of Nugegoda

அதுமட்டுமல்ல, பௌத்த சிங்கள மக்களுக்கு இவ்வாறு கூறிக்கொண்டு, கிழக்கிற்குச் சென்று அவரது சீடர் ஹிஸ்புல்லாஹ் கூறுகிறார், தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால் இப்பொழுது முஸ்லிம்கள் ராமஸான் கொண்டாடுகிறார்கள். ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் இரண்டில் ஒன்று தேர்ந்தெடுக்க வேண்டுமாம். இரண்டும் முடியாதாம். எமக்கு வேறு வேலையில்லை தானே. இஸ்லாமியர்கள் ஒரு நாளில் ஐந்து வேளை தொழுகையில் ஈடுபடுகிறார்கள். ஹிஸ்புல்லாஹ் சஜித்தின் மேடையில் கூறுகிறார், நாம் ஆட்சியமைத்தால் ஐந்து வேளை தொழ அனுமதிக்க மாட்டோமாம். தாடி வைத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டோமாம். கீழ்த்தரமான அரசியல். அதனால் சஜித் பிரேமதாசவின் இந்த கைவிடப்பட்ட நிலைமையை இந்த வங்குரோத்து நிலைமையைக் குறித்து நாங்கள் வருந்துகின்றோம்.

ஆனால் இந்த தேர்தலின் பின்னர் எமது நாட்டில் எந்த மூலையிலாவது இனவாதத்தைத் தூண்டும்படியான, இனவாதத்தை ஊக்குவிக்கும்படியான, மற்றவரை அசட்டைச் செய்யும்படியான, அடுத்தவரின் அடையாளங்களுக்கு மதிப்பளிக்காத வகையிலான, அடுத்தவரின் அடையாளங்களைத் தனிமைப்படுத்தும்படியான எந்தவொரு நடவடிக்கைக்கும், எந்தவொரு வெளிப்பாடுகளுக்கும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் இடமில்லை. இந்த நாட்டை மீட்டெடுக்க அந்த இடத்திலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் மறுபக்கம் நான் சஜித் பிரேமதாசவைக் குறித்து பெரிதாகக் கலவரமடையவில்லை.

Anura Kumara Dissanayake And Tilvin Silva At The Victory Rally Of Nugegoda
The Victory Rally Of Nugegoda Crowd
Show More

“இந்த வெற்றிக்கான மிக பெரிய பங்கினை எங்கள் முன் இருக்கின்ற நீங்கள் தான் செய்கிறீர்கள்.” -தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க-

(-பெருவெற்றிக்கான களுத்துறை கூட்டம் – 18-09-2024-) இன்று பிரச்சார வேலைத்திட்டத்தின் இறுதி நாள். தோ்தல் சனிக்கிழமை. பெறுபேறு ஞாயிற்றுக்கிழமை என்ன நடக்கும்? இது வெற்றிபெறக்கூடிய ஒரு தோ்தல் நிச்சயமாக தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும். நீண்ட காலமாக எமது நாட்டு மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்திருந்தார்கள். அதற்காக அயராது உழைத்தார்கள். பல காலமாக பல்வேறு இன்னல்களை மக்கள் எதிர்நோக்கினார்கள். நீதி, நியாயத்திற்காக போராடினார்கள். பல விதமான போராட்டங்களை நடாத்தினார்கள். ஆனால் எங்களால் இறுதி வெற்றியை பெற்றுக்கொள்ள முடியவில்லை. […]

(-பெருவெற்றிக்கான களுத்துறை கூட்டம் – 18-09-2024-)

Anura Kumara Dissanayake At The Public Rally Of Kaluthara

இன்று பிரச்சார வேலைத்திட்டத்தின் இறுதி நாள். தோ்தல் சனிக்கிழமை. பெறுபேறு ஞாயிற்றுக்கிழமை என்ன நடக்கும்? இது வெற்றிபெறக்கூடிய ஒரு தோ்தல் நிச்சயமாக தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும். நீண்ட காலமாக எமது நாட்டு மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்திருந்தார்கள். அதற்காக அயராது உழைத்தார்கள். பல காலமாக பல்வேறு இன்னல்களை மக்கள் எதிர்நோக்கினார்கள். நீதி, நியாயத்திற்காக போராடினார்கள். பல விதமான போராட்டங்களை நடாத்தினார்கள். ஆனால் எங்களால் இறுதி வெற்றியை பெற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் இந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி அந்த வெற்றியை எங்களால் பெற்றுக்கொள்ள முடியுமென நினைக்கிறோம். உண்மையை எடுத்துக்கொண்டால் எமது மூதாதையர் எங்களுடைய பழைய தலைமுறையினர் இந்த துன்பங்களிலிருந்து விடுபட அநீதிக்கு எதிராக நியாயமான ஒரு சமூகத்திற்காக இந்த அநாகரிகத்திற்கு பதிலாக நாகரிகத்திற்காக நீண்டகாலமாக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார்கள். அந்த முயற்சிகளுக்கான பெறுபேறு எதிர்வரும் 21 ஆம் திகதி கிடைக்குமென்பது நிச்சயம். இந்த வெற்றியின்போது நாங்கள் ஆற்றிய ஒரு பணி இருந்தது. நாங்கள் திட்டங்களை வகுக்கிறோம். வேலைத்திட்டத்தை வகுக்கிறோம். வேலையை செய்யக்கூடிய குழுவினரை இனங்காண்கிறோம். கருத்தியலை சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்வதற்காக இவ்வாறான கூட்டங்களை நடாத்துகிறோம். அது எங்களின் பங்கு. ஆனால் இந்த வெற்றிக்கான மிக பெரிய பங்கினை எங்கள் முன் இருக்கின்ற நீங்கள் தான் செய்கிறீர்கள். நீங்கள் பல வருடங்களாக வட்டார சபைகளை அமைத்து, பெண்கள் சபைகளை அமைத்து, வீடுவீடாகச் சென்று எத்தனை தடவைகள் மக்களை சந்திக்க போயிருப்பீர்கள். நாங்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து இந்த கட்டத்தை அடைந்திருக்கிறோம்.

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை பிரார்த்திக்கின்ற மக்களின் முகங்களில் தெரிகின்ற எதிர்பார்ப்பினை நீங்கள் பாருங்கள்

இதற்கு முன்னர் தோ்தல் தினம் பற்றி நாட்களை எண்ணிக்கொண்டிருந்தவர்கள் அரசியல்வாதிகள் தான். ஆனால் இலங்கையில் முதல் தடவையாக தோ்தல் எப்போது நடைபெறும் என இந்த தடவை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது வரலாற்றில் முதல் தடவையாகும். ஒரு சிலர் கூறுகிறார்கள் தேசிய மக்கள் சக்தியின் இந்த எழுச்சி ஒரு வகையான பகைமையின் வெளிப்பாடு என்று. ஏனைய கட்சிகள் மீதான பகைமை. அத்துடன் விரக்தியே இதற்கான காரணமென கூறுகிறார்கள். அது ஆரம்ப காலகட்டமாக அமையலாம். ஏனைய இயக்கங்களிலிருந்து பிரிந்து செல்ல, விலகிச் செல்ல விரக்தி நிலை காரணமாக அமையக்கூடும். ஆனால் இன்று தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி குழுமியிருக்கும் மக்கள் விரக்தி அல்லது பகைமை காரணமாகவன்றி எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பு காரணமாகவே மக்கள் எம்மைச் சுற்றி குழுமியிருக்கிறார்கள். நீங்கள் பாருங்கள் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை பிரார்த்திக்கின்ற மக்களின் முகங்களில் தெரிகின்ற எதிர்பார்ப்பினை. எதிர்காலம் பற்றிய கனவு அவர்களுடைய முகங்களில் தெரிகின்றது. அதனாலேயே இலட்சக்கணக்கான மக்கள் எம்மைச் சுற்றி குழுமியிருக்கிறார்கள்.

Crowd Of The Public Rally Of Kalutahra

நீண்ட ஒரு பயணத்திற்கான காரணம் முதலாவது சிறிய அடியெடுப்பே என்பது எங்களுக்கு தெரியும்

செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி அதற்கான முதலாவது அடியெடுப்பு வைக்கப்படும். நீண்ட ஒரு பயணத்திற்கான காரணம் முதலாவது சிறிய அடியெடுப்பே என்பது எங்களுக்கு தெரியும். அது தான் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி அடியெடுப்பு. நாங்கள் மக்களிடம் கேட்டுக்கொள்வது 21 ஆம் திகதி காலையிலேயே வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லுங்கள். திசை காட்டியின் முன்னால் புள்ளடியிட்டு வாக்குகளை பதிவு செய்யுங்கள். 1, 2, 3 அதைப்பற்றியெல்லாம் யோசிக்க வேண்டாம். பெயர் இருக்கிறது சின்னம் இருக்கிறது. புள்ளடியிடுங்கள் அது போதும். அவ்வளவு தான். பெறுபேறுகள் வெளிவரும்போது நாங்கள் வெற்றியடைந்திருப்போம். வெற்றிக்கு பின்னர் நாங்கள் எந்த விதமான மோதலிலும் ஈடுபடக்கூடாது. ஏனைய கட்சியைச் சோ்ந்தவர்களுக்கு ஏனைய கட்சிக்காக உழைத்தவர்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய வேண்டாம். நாங்கள் எமது நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நாங்கள் தோ்தல் காலத்தில் அவர்களுக்கு விடயங்களை எடுத்துக்கூறுகிறோம். மாற்றமடையுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். ஆனால் வேறொரு கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான அவர்களுடைய உரிமையை வாக்களிப்பதற்கான உரிமையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஏனென்றால் அது சனநாயக ரீதியான உரிமை. எனவே எமது வெற்றிக்கு பின்னர் வரலாற்றில் இடம்பெற்றது போல் தாக்குதல், துப்பாக்கிச் சூடுகள், சீரீபீ என்றால் கறுப்பெண்ணை ஊற்றுதல், துறைமுகமென்றால் கடமைக்கு வரவிடாமை, சமுர்த்தி வெட்டுதல், இடமாற்றம் செய்வதாக அச்சுறுத்துதல் இவை எதுவுமே இடம்பெறலாகாது. ஏனென்றால் தோ்தல் வரை நாங்கள் பிரிந்திருக்கலாம். தோ்தலுக்கு பின்னர் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக நாங்கள் அவர்கள் அனைவரையும் ஒன்றுசோ்த்துக் கொள்ளவேண்டும்.

வாகனங்கள் புடைசூழ மக்களின் பணத்தை விரயமாக்கிக் கொண்டு பயணிக்கின்ற இந்த கலாச்சாரத்தை இல்லாதொழிப்போம்.

எனவே எதிர்தரப்பினர் திட்டமிட்ட அடிப்படையிலான சதிவேளைகளில் ஈடுபட்டு மோதல்களை உருவாக்க எத்தனித்தால் நீங்கள் ஒருபோதுமே அதில் பங்கேற்க வேண்டாம். நாங்கள் பொலிஸாரிடம், முப்படையினரிடம் அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகார எல்லைக்குள் மோதல்கள் ஏற்படுவதை தடுப்பதற்காக அவர்களின் கடமையை ஈடேற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம். எமது நாட்டு அரசியலில் மோசடி, ஊழல், விரயம் என்பவையே மையப்பொருளாக இருக்கிறது. நாங்கள் அவை ஒழிக்கப்பட்ட ஒரு கலாச்சாரத்தை இலங்கை அரசியலில் அறிமுகம் செய்வோம். அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆட்சியாளர்கள் மக்களுக்கு மேலாக இருக்கின்ற நிலைமை தான் காணப்படுகிறது. அவர்கள் சட்டத்திற்கு மேலாக இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் சட்டத்திற்கு கட்டுப்படுகின்ற அரசியல் நிலைமையை நாங்கள் உருவாக்குவோம். வாகனங்கள் புடைசூழ மக்களின் பணத்தை விரயமாக்கிக் கொண்டு பயணிக்கின்ற இந்த கலாச்சாரத்தை இல்லாதொழிப்போம். பிரஜைகளுடன் சமமாக இருக்கக்கூடிய அரசியலை தேசிய மக்கள் சக்தி உருவாக்கும். இதனை நாங்கள் கட்டம் கட்டமாக சாதிப்போம். எமது நாட்டில் எந்தவொரு நேரத்திலும் எந்தவொரு இடத்திலும் இனவாதத்திற்கு, மதவாதத்திற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். இனவாத, மதவாத முரண்பாடுகள், அவ்வாறான கூற்றுக்கள், கருத்தியல்கள் இனிமேல் இலங்கையில் நிலவ முடியாது. இலங்கையில் தேசிய ஒற்றுமை பற்றிய எதிர்பார்ப்பு மாத்திரமே நிலவ முடியும். நாங்கள் எங்கள் தோ்தல் இயக்கத்தில் அந்த முன்மாதிரியை நன்றாகவே வெளிக்காட்டியிருக்கிறோம். எங்களுடைய தோ்தல் மேடையில் இனவாத, மதவாத போராட்டக்கோஷங்களுக்கு இடமில்லை.

Anura Nalinda And Tilvin On Stage At The Public Rally Of Kalutahra

பிறரது கலாச்சார அடையாளங்களை எமது அரசியலுக்கு பிரயோகித்துக்கொள்வது இந்த யுகத்தின் தலைசிறந்த அரசியல் எடுத்துக்காட்டாகும்.

ஆனால் இறுதிக்கூட்டத்தில் கவலையுடனேனும் தெரிவித்துக்கொள்ள வேண்டிய விடயம் சஜித் பிரேமதாசவின் ஒட்டுமொத்த பாசறையுமே இனவாத, மதவாத முரண்பாட்டுக்கான கருத்தியலை விதைத்து வருகின்றது. நாங்கள் வந்ததும் பெரஹேராக்களை நிறுத்துவோமாம். பிக்குமார்களுக்கு தானம் கிடைக்காமல் போய்விடுமாம். தேசிய கொடியை மாற்றியமைத்தல், மதச்சார்பற்ற நாட்டை உருவாக்குதல் போன்ற மிகவும் கீழ்த்தரமான குறைகளைக் கூறத்தொடங்கினார்கள். பிக்குமார்களுக்கு தானம் கொடுக்கும்போது யு.என்.பி., ஸ்ரீலங்கா எனப் பிரிந்தா கொடுக்கிறார்கள்? மறுபுறத்தில் முஸ்லீம் மக்கள் மத்தியில்சென்று ஹஜ்ஜி, ரமழான் ஆகிய இரண்டு வைபவங்களை நடாத்த விடாமல் ஒன்றுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துவதாக கூறுகிறார்கள். ஐந்து தடவைகள் தொழுவதை ஒரு தடவைக்கு மட்டுப்படுத்துவதாக கூறினார்கள். ஒருபோதுமே தேர்தல் மேடைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாத இனவாத, மதவாத, பழங்குடிவாத போராட்டக் கோஷங்களை சஜித் பிரேமதாசவின் தேர்தல் இயக்கத்தில் பிரயோகி த்தார்கள். ஒருவிதத்தில் நான் வியப்படையப் போவதில்லை. சஜித் பிரேமதாசவிற்கு இந்த நாட்டின் பொருளாதாரம், சனநாயகம் உள்ளிட்ட ஆழமான எண்ணக்கருக்கள் பற்றிய கருத்து கிடையாது. அவருடைய அரசியல் சேறுபூசுதலும் பொய் கூறுவதும் தான். யானைகளின் அட்டகாசம் நிலவுகின்ற பிரதேசங்களுக்குச்சென்று யானை மந்திரம் மனனம்செய்வித்தல் மூலமாக தீர்வு பெற்றுக்கொடுப்பதாக ஆழமான நோக்கினைக்கொண்ட ஒருவர் கூறுவாரா? எமது நாடு முகங்கொடுத்துள்ள ஆழமான தோற்றுவாய்கள், அவை வளர்ந்தவிதம், தீர்வுகளைக் காணுதல் பற்றிய எந்தவிதமான கருத்தும் கிடையாது. பிறரது கலாச்சார அடையாளங்களை எமது அரசியலுக்கு பிரயோகித்துக்கொள்வது இந்த யுகத்தின் தலைசிறந்த அரசியல் எடுத்துக்காட்டாகும். தேசிய மக்கள் சக்தியே அதனைக் பெற்றுக்கொடுத்தது என்பதையிட்டு மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் வடக்கிற்கு சென்று இந்த கதையை எவ்வாறு கூறுகின்றோமோ அதேபோல்தான் கிழக்கிற்கும் போய் கூறுகிறோம். தெற்கிற்கும் அதைத்தான் கூறுகிறோம். தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே அவ்வாறு கூறமுடியும். நாங்கள் அதற்காக மகிழ்ச்சியடைகிறோம். ஆரம்பத்தில் எமக்கு தெற்கில் மாத்திரம்தான் வெற்றிகிடைக்குமென்ற ஐயப்பாடு நிலவியது. தெற்கில் மாத்திரம் பெறுகின்ற வெற்றி எமது எதிர்கால அரசியல் இலக்குகளுக்கு போதுமானதாக அமையமாட்டாது. அண்மையில் நாங்கள் கிழக்கிலங்கையில் பல நகரங்களில் கூட்டங்களை நடாத்தினோம். அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் இதனையொத்த வகையில் எமக்கு செவிசாய்க்க வந்திருந்தார்கள். யாழ்ப்பாணம் சென்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வங்கி உத்தியோகத்தர்களை உள்ளிட்ட தொழில்வாண்மையாளர்களை நாங்கள் சந்தித்தோம். பெருந்தொகையான வடக்கு மக்கள் தேசிய மக்கள் சக்திமீது விருப்பம்கொண்டவர்களாக இருப்பதாக அவர்கள் கூறினார்கள். வடக்கை பிரதிநிதித்துவம் செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் தபால்மூல வாக்களிப்பபு எமக்கு எப்படி எனக் கேட்டேன். ஆரம்பத்தில் நூற்றுக்கு 10 சதவீதமாக அமையுமென நினைத்தாலும் இப்போது அது நூற்றுக்கு 40 வீதத்தை விஞ்சிசென்றுவிட்டதாக அனுமானிப்பதாகக் கூறினார்.

கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வீடமைப்பு, உணவு என்பவை ஓர் அரசாங்கத்தால் கைவிட முடியாத பொறுப்பாகும்.

குறுகிய காலத்திற்காக உயிர்வாழ்வதில் சிரமங்களை எதிர்நோக்குகின்ற மக்களுக்கு ரூபா 10,000 இல் இருந்து ரூபா 17,500 வரையான கொடுப்பனவினை செலுத்துவோம். ஆசியாவில் மிகவுயர்ந்த மின் கட்டணம் எமது நாட்டிலேயே அறவிடப்படுகின்றது. உணவு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்கு முழுமையாகவே வரிவிலக்கு அளிப்போம். பொருளாதாரம் பற்றிய ஆழமான மாற்றங்களை ஏற்படுத்த முன்னராக மக்களுக்கான இந்த நலன்புரி பணிகளைச்செய்வோம். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வீடமைப்பு, உணவு என்பவை ஓர் அரசாங்கத்தால் கைவிட முடியாத பொறுப்பாகும். குறுகிய காலத்தில் பயணிகள் போக்குவரத்தில் நூற்றுக்கு 70 வீதத்தை பொதுப்போக்குவரத்தில் அடக்குவது எமது நோக்கமாகும். ஆரோக்கியமான வாழ்க்கைக்காக சிறந்த சுகாதாரசேவையை வழங்கவது எமது நோக்கமாகும்.

Crowd At The Public Rally Of Kalutahra

நெருக்கடியின் சிருஷ்டிகர்த்தா ரணில் விக்கிரமசிங்க ஆவார்

அடுத்த 21 ஆந் திகதி வெறுமனே ஆட்சியாளர்களை மாற்றியமைப்பது மாத்திரம் இடம்பெறப் போவதில்லை. பலநூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவினை ஈடேற்றுவதே எமது நோக்கமாகும். இதைவிட சிறந்த நாட்டை உருவாக்குகின்ற யுகப் புரட்சியையே நாங்கள் செய்யப்போகிறோம். உற்பத்திக்கு உயிர்கொடுக்கக்கூடிய அனைத்து இடங்களையும் இனங்கண்டு மீளவும் உயிர்கொடுத்து மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம். அதற்காக கமக்காரன், மீனவன், தொழிலாளி, இளைஞன் மாத்திரமன்றி அரச ஊழியர்களைப்போன்றே பொலீஸாரை உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தத்தமது துறைகளில் இலக்ககளைக் கொண்டவர்களாக இயங்குவார்கள். அடிமட்டத்திற்கே விழுந்த நாட்டை கட்டியெழுப்புவதையே நாங்கள் செய்வோம். அந்த பயணத்தின்போது தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்தால் எரிவாயு இல்லாமல் போய்விடும், எரிபொருள் இல்லாமல் போய்விடும் என ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். அவர் என்ன எரிவாயுப் படிவுகளின் உரிமையாளரா? உண்மையை எடுத்துக்கொண்டால் இந்த எல்லா வரிசைகளினதும் மூலகர்த்தா ரணில் விக்கிரமசிங்க ஆவார். அப்பாவி கோட்டாபய தலையைக் கொடுத்தார். உண்மை அதுதான். 2022 ஏப்பிறல் மாதத்தில் கடனைச்செலுத்த முடியாமல் ஆப்பு வைத்தவர் ரணில்தான். அதற்கான காரணம் சர்வதேச இறையாண்மை முறிகள் மூலமாக பெறப்பட்ட கடன்களை மீளச்செலுத்த முடியாமல் போனமையாகும். மின்சாரத்தை பிற்பிக்க எரிபொருள் கொண்டுவர பணம் இல்லாமல் போயிற்று. நெருக்கடியின் சிருஷ்டிகர்த்தா ரணில் விக்கிரமசிங்க ஆவார். மக்களுக்கு எஅத்தியாவசிய பண்டங்கள் இடையறாமலும், தரமிக்கவையாகவும், தட்டுப்பாடின்றியும் வழங்குவதற்காகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறுவப்படுகின்றது. நாட்டில் டொலர் தட்டுப்பாட்டிளை உருவாக்கிய ரணில் விக்கிரமசிங்க இன்று கூறுகிறார் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் ஒரு டொலர் ரூபா 400.00 ஆக மாறுமென்று. ஆனால் அந்த நிலைமையை உருவாக்கியவர்கள் ரணில் விக்கிரமசிங்கவே. சேனைகளும் வயல்வெளிகளும் பாழடைந்தன. கங்குங் கீரை, வெங்காயம், பயறு, உளுந்து, கவ்பி, குரக்கன் , முட்டை, விதையினங்கள், மருந்துவகைகள் எல்லாமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டமையே ரணில் விக்கிரமசிங்க கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கையாகும். எல்லாவற்றையும் சீரழித்து பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை மாத்திரமே டொலர்களை ஈட்டுவதற்கான ஒரே வழிவகையாக மாற்றிக்கொண்டார். பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதை டொலர் ஊற்றாக மாற்றிக்கொண்டார். டொலர் தட்டுப்பாடு தோன்றுகையில் இருப்பவற்றை விற்று டொலர்களை கடனாகப் பெற்றார். பொருளாதாரம் அவ்வாறுதான் வீழ்ச்சியடைந்தது.

பலநூற்றாண்டு காலமாக கைநழுவிய வெற்றியைப் பெற்றுக்கொள்ள கைதளராமல் ஒன்றுசேருமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நிலைமையை திசைதிருப்பி டொலர் வெளியில் பாய்ந்துசெல்வதை தடுத்து டொலர் உள்ளே பாய்ந்துவருகின்ற நிலைமையை வளர்த்துக்கொள்கின்ற வழிமுறைகளை அமுலாக்கும். 1977 இல் பாராளுமன்றத்திற்கு வந்து எந்த நாட்டை ஒரு சப்பலாக மாற்றிக்கொண்டு இற்றைவரை பல்வேறு பதவிகளை வகித்து இன்னமும் பற்றிப்பிடித்துக்கொண்டு இருக்கிறார். மகிந்த ராஜபக்ஷாக்கள் பாராளுமன்றத்திற்கு வந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகின்றது. அவரும் நாட்டை ஒரு சப்பலாகவே பாவித்து வருகிறார். பழங்குடிடவாத, தோல்விகண்ட நாடாக மாற்றிய ஆட்சியாளர்களிடமிருந்டது 21 ஆந் திகதி விடுவித்துக்கொள்வோம். கோட்டாபய நிர்க்கதியுற்றவராக இந்த நாட்டை நிர்க்கதி நிலைக்கு ஆளாக்கினார். 69 இலட்சம் மக்களே வெட்கித் தலைகுனிந்தார்கள். 2015 இல் ரணில் – மைத்திரி ஹைபிரிட் அரசாங்கத்தை அமைத்துக்கொள்ள இலட்சக்கணக்கில் வாக்குகளை அளித்தவர்களும் நிர்க்கதி நிலையை அடைந்தார்கள். இந்த நிலைமைகள் அனைத்தையும் மாற்றியமைத்திட 2024 செப்டெம்பர் மாதம் 21 அந் திகதி வாக்குகளை அளித்ததாக பல தசாப்தங்களுக்குப் பின்னரேனும் பெருமிதமாகக் கூறக்கூடியவகையில் இந்த நாட்டை மாற்றியமைத்திவோம். பலநூற்றாண்டு காலமாக கைநழுவிய வெற்றியைப் பெற்றுக்கொள்ள கைதளராமல் ஒன்றுசேருமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

Anura Kumara Dissanayake Nalinda Jayathissa And Tilvin Silva At The Public Rally Of Kalutahra
Anura Nalinda And Tilvin On Stage At The Public Rally Of Kalutahra
The Public Rally Of Kalutahra People
Show More

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப்போல் வித்தியாசமாக சிந்திக்கத் தொடங்குபவர்களாக மாறுங்கள்!

(-Colombo, September 16, 2024-) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினம் அல்லது மீலாத் – உன் – நபி தினம் இன்றைய (16) தினம் ஆகும். அதனை வைபவரீதியாக கொண்டாடுகின்ற இலங்கைவாழ்; இஸ்லாமிய அடியார்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். பலவீனமுற்று, பலம்பொருந்திய பூர்வீகக் குடிகளின் கட்டுப்பாட்டுக்கு இலக்காகி அரபு பிரதேசத்தில் பரந்து காணப்பட்ட சிறிய சிறிய ஆட்சிப் பிரதேசங்களை ஒன்றுசேர்த்து அரபுப் பிரதேசத்திற்கு பலம்பொருந்திய இராச்சியமொன்றை உருவாக்கித் தந்தவர் நபிகள் […]

(-Colombo, September 16, 2024-)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினம் அல்லது மீலாத் – உன் – நபி தினம் இன்றைய (16) தினம் ஆகும். அதனை வைபவரீதியாக கொண்டாடுகின்ற இலங்கைவாழ்; இஸ்லாமிய அடியார்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

பலவீனமுற்று, பலம்பொருந்திய பூர்வீகக் குடிகளின் கட்டுப்பாட்டுக்கு இலக்காகி அரபு பிரதேசத்தில் பரந்து காணப்பட்ட சிறிய சிறிய ஆட்சிப் பிரதேசங்களை ஒன்றுசேர்த்து அரபுப் பிரதேசத்திற்கு பலம்பொருந்திய இராச்சியமொன்றை உருவாக்கித் தந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாவார். அது எவராலும் சாதிக்க இயலுமென எவருமே நம்பியிராத யுகமொன்றில் வித்தியாசமாக சிந்தித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வித்தியாசமான சிந்தனைக்கான ஆரம்பகர்த்தாவாகவும் அதனை நடைமுறைப்படுத்திய மார்க்க அறிஞராகவும் விளங்கினார்.

ஒட்டுமொத்த இலங்கைவாழ் மக்களும் சகோதரத்துவத்தின் நாமத்தால் ஒன்றாக கைகோர்த்துக்கொண்டு புதிய மாற்றத்தின் அருகில் நிலைகொண்டுள்ள தருணத்தில் வித்தியாசமாக சிந்தித்து, நாட்டின் மரபுரீதியான பயணத்தை மாற்றியமைக்கின்ற உண்மையான மாற்றத்துடன் அணிதிரள மீலாத் உன் நபி தினம் இலங்கைவாழ் இஸ்லாமிய அடியார்களுக்கு வலிமையையும் ஊக்கத்தையும் வழங்குமென நாங்கள் வாழ்த்துக் கூறுகிறோம்.

அநுர குமார திசாநாயக்க

தலைவர்

தேசிய மக்கள் சக்தி

2024.09.16

Show More

“சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலாயர் நாமனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த அழகான நாட்டைக் கட்டியெழுப்புவோம்” -தேசிய மக்கள் சக்தியின் சனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க-

(-“நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – தலவாக்கலை – 2024.09.15-) எமக்குத் தேவை மக்கள் ஆட்சியாளருக்கு பயந்துவாழ்கின்ற ஒரு நாடு அல்ல. இதுவரை காலமும் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் எவ்வாறு வாக்குகளைப் பெற்றார்கள்? உண்ணக் கொடுத்து, குடிக்கக் கொடுத்து, பயமுறுத்தி வாக்குகளைப் பெறுகிறார்கள். குறிப்பாக பெருந்தோட்ட மக்களைப் பயமுறுத்தி வாக்குகளைப் பெறுகிறார்கள். பணியவைத்து வாக்குகளைப் பெறுகிறார்கள். இதனை நாங்கள் மாற்றியமைக்க வேண்டாமா? இந்த மலையக மக்கள் சதாகாலமும் அடிமைகளாக வாழவேண்டுமா? பயந்து வாழவேண்டுமா? […]

(-“நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – தலவாக்கலை – 2024.09.15-)

Anura Kumara Dissanayake At The Victory Rally Of Thalawakale

எமக்குத் தேவை மக்கள் ஆட்சியாளருக்கு பயந்துவாழ்கின்ற ஒரு நாடு அல்ல.

இதுவரை காலமும் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் எவ்வாறு வாக்குகளைப் பெற்றார்கள்? உண்ணக் கொடுத்து, குடிக்கக் கொடுத்து, பயமுறுத்தி வாக்குகளைப் பெறுகிறார்கள். குறிப்பாக பெருந்தோட்ட மக்களைப் பயமுறுத்தி வாக்குகளைப் பெறுகிறார்கள். பணியவைத்து வாக்குகளைப் பெறுகிறார்கள். இதனை நாங்கள் மாற்றியமைக்க வேண்டாமா? இந்த மலையக மக்கள் சதாகாலமும் அடிமைகளாக வாழவேண்டுமா? பயந்து வாழவேண்டுமா? ஹங்குரன்கெத்த மக்கள் எஸ்.பீ. இற்கு பயந்து வாழவேண்டுமா? மலையக மக்கள் தொண்டமான்களுக்கு திகாம்பரத்திற்கு பயந்து வாழ்ந்திருக்கிறார்கள். எமக்குத் தேவை மக்கள் ஆட்சியாளருக்கு பயந்துவாழ்கின்ற ஒரு நாடு அல்ல. மக்களைப் பற்றிச் சிந்தித்து அவர்களின் எதிர்பார்பபுகளை ஈடேற்றி நாட்டை ஆட்சிசெய்கின்ற அரசாங்கமே இப்போது எங்களுக்குத் தேவை. சுதந்திரமான மக்களை நாங்கள் கட்டியெழுப்பவேண்டும். அதனால் இந்த செப்டெம்பர் 21 ஆந் திகதி நாங்கள் நல்லதொரு முடிவினை எடுப்போம். இப்பொழுது முழுநாட்டினதும் மக்கள் அந்த முடிவினை எடுக்க தயாராகி இருக்கிறார்கள்.

மலையக மக்கள் என்றவகையில் உங்களின் முடிவு என்ன?

எமது நாட்டில் அரசாங்கங்கள் எவ்வாறு அமைக்கப்பட்டன? மலையகத் தலைவர்களின் ஒத்துழைப்பினை பெறுகிறார்கள். தலைவர்களுக்கு அமைச்சர் பதவிகளைக் கொடுக்கிறார்கள். தலைவர்களுக்கு கப்பம் கொடுக்கிறார்கள். பணம் கொடுக்கிறார்கள். தலைவர் வந்து மக்களை ஏமாற்றுகிறார். ஆனால் இப்போது நாட்டு மக்கள் விழிப்படைந்துவிட்டார்கள். தென்மாகாணத்தில் மில்லியன் கணக்கான மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் ஒருங்கிணைந்துள்ளார்கள். அதைப்போலவே கிழக்கிலங்கை முஸ்லீம்கள் பல்லாயிரக்கணக்கில் இன்று தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றுசேர்ந்திருக்கிறார்கள். அதைப்போலவே வடக்கின் தமிழ் மக்களின் நம்பிக்கையும் தற்போது தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்பியுள்ளது. மலையக மக்கள் என்றவகையில் உங்களின் முடிவு என்ன? ஆம், அதுதான் தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விப்பது. ஹங்குரன்கெத்த, வலப்பனை, கொத்மலை, நுவரெலியா – மஸ்கெலியா தொகுதிகளில் நாங்கள் அமோக வெற்றியீட்ட வேண்டும். இன்று நீங்கள் ஒரு கிளாஸ் சாராயத்திற்காகவா இங்கே குழுமியிருக்கிறீர்கள்? சாப்பாட்டுப் பொதிக்காகவா? இல்லை. நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காகவே. இன்று நாங்கள் முதல்த்தடவையாக நாட்டு மக்கள் என்ற வகையில் பொதுத்தேவைக்காக ஒன்றுசேர்ந்திருக்கிறோம். இது ஒரு விசேடமான தருணமாகும். நாட்டு மக்கள் புதிய மாற்றத்திற்காக அணிதிரண்டு இருக்கிறார்கள்.

The Victory Rally Of Thalawakale Crowd

இதுவரை நிலவியது மக்களின் அரசாங்கங்கள் அல்ல

நாங்கள் நீண்டகாலமாக மேற்கொண்ட முயற்சிகளின் பெறுபேறுகள் செப்டெம்பர் 21 அந் திகதி உறுதியாகின்றது. தோட்டங்களில் வசிக்கின்றவர்களின் வாழ்க்கை பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்களுக்கு வசிக்க பொருத்தமான வீடு கிடையாது. சரியான கழிப்பறை வசதிகள் கிடையாது. தோட்டத்திற்குச் செல்ல சரியான பாதை கிடையாது. பிள்ளைகளுக்கு கல்வி வசதி கிடையாது. உங்கள் பிள்ளைகளுக்கு சரியான ஒருவேளை உணவு கிடையாது. மருந்து வாங்கிட வழியில்லை. முழு வாழ்க்கையும் துன்பம் நிறைந்தது. நீங்கள் இவ்வாறு வசிக்கவேண்டியவர்களா? இல்லை. இதனை நாங்கள் மாற்றியமைத்திட வேண்டும். இதுவரை நிலவியது மக்களின் அரசாங்கங்கள் அல்ல: மேலே இருக்கின்ற தலைவர்களின் அரசாங்கமாகும். அவர்கள்தான் நாட்டை ஆட்சிசெய்தார்கள். அவர்களுக்காகவே தீர்மானங்களை மேற்கொண்டார்கள்.

நாங்கள் போதைப்பொருளற்ற ஒரு நாட்டை உருவாக்குவோம் என்பது உறுதியானது

பெருந்தோட்டத் தமிழ்த் தலைவர்களின் பிள்ளைகள் இங்கே கல்வி பயில்கிறார்களா? இல்லை. ஒன்றில் கொழும்பிலுள்ள பெரிய பாடசாலைகளில். இல்லாவிட்டால் வெளிநாடுகளில். தோட்டங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்வி பயில பாடசாலை கிடையாது, பாடப் புத்தகங்களை கொள்வனவுசெய்ய பணம் கிடையாது. வசதிகள் கிடையாது. வாழ்க்கை வீணே நாசமாகி வருகிறது. இதனை மாற்றியமைத்திடவே நாங்கள் அதிகாரத்தைக் கோரிநிற்கிறோம். மக்கள் பட்ட துன்பங்கள் போதும். நாங்கள் மலையக மக்களை உள்ளிட்ட நாட்டின் அனைத்து மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்க்கின்ற அரசாங்கமொன்றை அமைப்போம். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமென்பது மக்களைப் பற்றிச் சிந்தித்து பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கின்ற அரசாங்கமாகும். நாங்கள் இந்த நாட்டில் முதல்த்தடவையாக பெரியபுள்ளிகளின் அரசாங்கத்திற்குப் பதிலாக மக்களின் அரசாங்கமொன்றை அமைப்போம். தற்போது இந்த மலையகப் பிரதேசங்களில் போதைத்தூள் பெருந்தொற்று வியாபித்துள்ளது. போதைத்தூளற்ற மலையகமொன்று எமக்குத் தேவையில்லையா? போதைத்தூளற்ற ஒரு நாடு எமக்குத் தேவையில்லையா? தேவை. ஏன் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த முடியவில்லை? நுவரெலியாவுக்கு தூள் கொண்டுவருபவர் யார்? இந்த பிரதேசத்தைச்சேர்ந்த அரசியல்வாதிகளே கொண்டுவருகிறார்கள். அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின்போது திகாம்பரமும் வேலுகுமாரும் பங்கேற்றார்கள். இருவரும் ஒரே கட்சியில் இருந்தவர்கள். திகாம்பரம் நுவரெலியாவில் இருந்தும் வேலுகுமார் கண்டியில் இருந்தும் பாராளுமன்றம் சென்றார்கள். வேலுகுமார் ரணிலுக்கும் திகாம்பரம் சஜித்திற்கும் ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்தார்கள். இருவரும் தொலைக்காட்சி விவாதமொன்றுக்கு வந்தார்கள். என்ன நேர்ந்தது? திகாம்பரம் வேலுகுமாருக்கு என்ன கூறினார்? பார்குமார் என்று கூறினார். வேலுகுமார் திகாம்பரத்திற்கு என்ன கூறினார்? குடுதிகா என்று கூறினார். அது ஏன்? அவர்களே கூறுகின்ற விதத்தில் அவர்கள் தான் இந்த போதைப்பொருள் வியாபாரத்தில் இருக்கிறார்கள். இங்கு மாத்திரமல்ல, முழு நாட்டிலுமே அப்படித்தான். அரசியல்வாதிகள் தான் நாட்டில் போதைப்பொருள் வியாபாரத்தின் திரைமறைவில் இருப்பவர்கள். போதைப்பொருளால் எமது ஊர், எமது நாடு, எமது பிள்ளைகள் காப்பாற்றப்பட வேண்டுமானால் பொய்யாக இரு பக்கத்தில் பிரிந்து இந்த நாட்டு மக்களை ஏமாற்றுகின்ற அரசியல்வாதிகளை தோற்கடிக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியையே வெற்றிபெறச் செய்விக்க வேண்டும். நாங்கள் போதைப்பொருளற்ற ஒரு நாட்டை உருவாக்குவோம் என்பது உறுதியானது. போதைப் பொருட்களை முற்றாகவே கட்டுப்படுத்துவோம். நாட்டிலிருந்து ஒழித்துக் கட்டுவோம். பிள்ளைகளைப் பற்றிய பயமின்றி சந்தேகமின்றி பெற்றோர்கள் வாழக்கூடிய ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம். பிள்ளை தூள் பாவிக்குமாயின் கல்வி கற்க மாட்டாதெனில் இந்த அரசியல்வாதிகள் அதை விரும்புவார்கள். அப்போது தான் அவர்கள் விரும்பியவாறு நாட்டின் பொதுப்பணத்தை கொள்ளையடிக்க முடியும்.

Anura Kumara Dissanayake Addressing The Victory Rally Of Thalawakale

நீங்கள் இந்தியாவுக்கு போனால் இலங்கை தமிழர் என்று தானே கூறுகிறார்கள்?

இந்த மலையகத்தில் வசிக்கின்ற மக்கள் இலங்கைக்கு வந்து இப்போது 200 வருடங்களாகிவிட்டன. அந்த சகோதர மக்கள் எங்கிருந்து வந்தார்கள் என நாங்கள் கேட்பதில் பயன் உண்டா? தமிழ் நாட்டிலிருந்து வந்தார்களா? கேரளாவிலிருந்து வந்தார்களா? என கேட்பதில் பயன் இருக்கிறதா? இப்போது நீங்கள் இந்த நாட்டிலே பிறந்திருக்கிறீர்கள். இந்த நாட்டுக்கே வியர்வையை சிந்துகிறீர்கள். இந்த மண்ணுக்கே உரமாகுகிறீர்கள். அப்படியானால் நீங்கள் எப்படி இந்திய தமிழர்களாக முடியும்? நீங்கள் தமிழ் மொழியை பேசுகின்ற இலங்கை பிரஜைகள். நீங்கள் இந்த நாட்டின் மக்கள். நீங்கள் இந்தியாவுக்கு போனால் இலங்கை தமிழர் என்று தானே கூறுகிறார்கள். இலங்கையில் இருக்கும்போது இந்திய தமிழர்கள் என்று கூறுகிறார்கள். இவர்கள் எமது நாட்டின் பிரஜைகள். நாட்டின் பொருளாதாரத்தின் பங்காளிகள். இந்த தேயிலைத் தோட்டங்கள் உங்களின் உழைப்பால் செழிப்படைந்தன. உங்களின் முதாதைகள் தான் இந்த மலைநாட்டில் பயிர் செய்ய ஆரம்பித்தவர்கள். நோய் நொடிகளுக்கு இறையாகி பட்டினியால் வாடி செத்து மடிந்தார்கள். அவ்வாறு துன்பங்களை அனுபவித்துத்தான் நீங்கள் இந்த நாட்டை பிரஜைகள் ஆகினீர்கள். இன்றும் வாழ்க்கையில் மாற்றமில்லை. 1 1/2 இலட்சம் குடும்பங்களுக்கு தமக்கென ஒரு அங்குல நிலம் கூட இல்லை. ஒரு நாட்டில் வசிக்கின்ற மக்கள் ஒரு அங்குல நிலம் கூட இல்லாமல், வீடு இல்லாமல், கழிப்பறை இல்லாமல் இருப்பார்கள் எனில் அந்த பிரச்சினையை தீர்த்து வைக்கவேண்டுமல்லவா? நீங்கள் மனிதர்கள் இல்லையா? தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் இந்த அனைத்துப் பிரஜைகளினதும் வீடமைப்பு பிரச்சினைக்கு தீர்வுகொடுக்கும். வழங்கக்கூடிய எல்லா இடங்களிலிருந்தும் பொருத்தமான காணிகளை நாங்கள் உங்களுக்கு பெற்றுக்கொடுப்போம். உங்களால் பயிர் செய்ய, வீடுகளை அமைத்துக்கொள்ள, குடும்பத்தார் அனைவரும் ஒன்றாக சீவிக்க தொடங்க முடிகின்ற வாழ்க்கையொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம். தோட்டத்தில் உள்ள பிள்ளைகள் தமது வாழ்க்கையிலிருந்து வெளியே வர, தொந்தரவுகளிலிருந்து வெளியே வருவதற்கான சிறந்த கல்வியை எங்களுடைய ஆட்சியின் கீழ் உங்கள் பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுப்போம் என்பதை உறுதியாக கூறுகிறோம்.

Crowd The Victory Rally Of Thalawakale

தமது மொழியில் அரசாங்கத்துடன் செயலாற்றுவதற்கான உரிமையை நாங்கள் உறுதி செய்வோம்

இந்த பிரதேசங்களின் பிள்ளைகள் தமது வறுமையிலிருந்து வெளியில் வருவதற்குள்ள பிரதான வழிவகையாக ஒழுங்கமைந்த நவீன கல்வி வசதிகள் நிலவுகின்ற, ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவாத பாடசாலைகளை நாங்கள் இந்த பிரதேசங்களுக்கும் பெற்றுக்கொடுப்போம். ஒவ்வொரு பிள்ளையையும் கவனித்துக் கொள்கின்ற அரசாங்கமொன்றை ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வியை உறுதி செய்கின்ற அரசாங்கமொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம். நீங்கள் இந்த பிரதேசத்திலுள்ள அரசாங்க நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகையில் மொழிப்பிரச்சினை காரணமாக பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருக்கிறீர்கள். தத்தமது மொழிகளில் எந்தவொரு பிரஜையும் சிரமங்களின்றி அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதற்கான ஆட்சியொன்றை நாங்கள் அமைப்போம். நாங்கள் இந்த நாட்டின் மொழிப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கொடுப்போம். நீங்கள் அரசாங்க அலுவலகமொன்றுக்கு தமிழ் மொழியில் கடிதமொன்றை அனுப்பினால் தமிழ் மொழியில் கடமை புரியக்கூடிய உத்தியோகத்தர்களை அரச சேவைக்கு சோ்த்துக் கொள்வோம். அதனை ஈடேற்றும்வரை தற்காலிகமாக அதற்கான மொழிபெயர்ப்பாளர்களை ஈடுபடுத்துவோம். தமது மொழியில் அரசாங்கத்துடன் செயலாற்றுவதற்கான உரிமையை நாங்கள் உறுதி செய்வோம். அப்போது தான் நீங்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். அதுமாத்திரமல்ல உங்களுக்கு உயிர்வாழ்வதற்கு ஏற்ற வருமான வழிவகை தேவை. புதிய தொழில்வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கொழும்பு வீடுகளில் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள, ஹோட்டல்களில் வெய்ட்டர் வேலையை செய்வதுதானா மலையக இளைஞர்களின் தொழிலாக அமைய வேண்டும்? நீங்கள் புதிய உயர் தொழில்களுக்கு செல்லக்கூடிய வகையில் இந்த கல்வி வாய்ப்புகளை விரிவாக்க வேண்டும். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக நுவரெலியா மாவட்டம் சுற்றுலா தொழில் துறைக்கு பொருத்தமான மாவட்டமாகும். அதில் தொழில்கள் உருவாக வேண்டும். வருடத்திற்கு நாற்பது இலட்சம் சுற்றுலா பயணிகளை கொண்டுவர நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம். அவர்கள் நுவரெலியாவிற்கும் வருவார்கள். புதிய ஹோட்டல்கள் உருவாகும். புதிய பொழுதுபோக்குகள் உருவாகும். மலையக விவசாயிக்கு பயிர்ச் செய்ய அவசியமான வசதிகளைப் போன்றே தமது உற்பத்திகளை நியாயமான விலைக்கு சந்தைப்படுத்தவும் விளைச்சல் விரயமாவதை தடுப்பதற்கும் அவசியமான திட்டங்களை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.

பெருந்தோட்டத்துறையில் பிரதான பிரச்சினையான போஷாக்கின்மை நிலவுகின்றது

பெருந்தோட்டத்துறையில் பிரதான பிரச்சினையான போஷாக்கின்மை குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள் எதிர்நோக்கியுள்ள இரத்தச்சோகை ஆகிய நிலைமைகளுக்கு பரிகாரம் காண்பதற்காகவும் பெருந்தோட்டங்களில் மாத்திரமன்றி முழுநாட்டிலுமே அந்த நிலைமைக்கு தீர்வுகாண்பதற்காகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் திட்டமிட்டிருக்கிறோம். இந்த 21 ஆம் திகதி வெற்றிக்கு பின்னர் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலாயர், பறங்கியர் ஆகிய நாங்கள் அனைவரும் ஒன்றுசோ்ந்து அந்த அழகான நாட்டை கட்டியெழுப்புவது உறுதியாகும்.

Show More