Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

“இந்த வெற்றியை பெருவெற்றியாக உயர்த்தி வைப்பதுதான் எங்களுடைய பொறுப்பு” -தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க-

(-“நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – அநுராதபுரம் – 2024.09.14-) தேசிய மக்கள் சக்திக்கு வரலாற்றுரீதியான வெற்றியை இந்த அநுராதபுர மக்கள் கொண்டுவருவார்கள் என்பது எமது நம்பிக்கையாகும். இந்த மேடையில் இன்று நூற்றுக்கணக்கான பிக்குமார்கள் வருகைதந்து மதத்தைப் பாவித்து எமக்கெதிராக முன்வைக்கின்ற பொய்யான குறைகூறல்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்கள். நாங்கள் மிகவும் ஒழுங்கமைந்தவகையில் இந்த தேர்தல் இயக்கத்தை முன்னெடுத்து வந்தோம். இன்றளவில் எமது தேர்தல் இயக்கம் இந்த நாட்டின் பொதுமக்களால் தமது கைகளில் […]

(-“நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – அநுராதபுரம் – 2024.09.14-)

Anura Kumara Dissanayake Addressing The Victory Rally Of Anuradhapura

தேசிய மக்கள் சக்திக்கு வரலாற்றுரீதியான வெற்றியை இந்த அநுராதபுர மக்கள் கொண்டுவருவார்கள் என்பது எமது நம்பிக்கையாகும். இந்த மேடையில் இன்று நூற்றுக்கணக்கான பிக்குமார்கள் வருகைதந்து மதத்தைப் பாவித்து எமக்கெதிராக முன்வைக்கின்ற பொய்யான குறைகூறல்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்கள். நாங்கள் மிகவும் ஒழுங்கமைந்தவகையில் இந்த தேர்தல் இயக்கத்தை முன்னெடுத்து வந்தோம். இன்றளவில் எமது தேர்தல் இயக்கம் இந்த நாட்டின் பொதுமக்களால் தமது கைகளில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது சஜித், ரணில் இந்த நிலைமையில் மிகவும் பதற்றமடைந்திருக்கிறார்கள். எங்களுக்கு எதிராக பலவிதமான சேறுபூசல்கள், குறைகூறல்கள், பொய்யான தகவல்களை மொத்தமாக பரப்பி வருகிறார்கள். நாங்கள் அவர்களுக்கு கூறவேண்டியது நீங்கள் தாமதித்துவிட்டீர்கள் என்பது தான். இந்த வெற்றியை இப்போது நிறுத்திவிட முடியாது. இந்த வெற்றியை பெருவெற்றியாக உயர்த்தி வைப்பதுதான் எங்களுடைய பொறுப்பு. நாங்கள் நேற்று அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை, ஒலுவில், சாய்ந்தமருது, சம்மாந்துறை, நிந்தவூர் ஆகிய பல இடங்களில் கூட்டங்களை நடத்தினோம்.

ராஜபக்ஷாக்கள் மீண்டும் மீண்டும் கூறிக்கூறி உக்கிப்போன மதவாத, இனவாத போராட்டக் கோஷங்களை இப்போது தோளில் சுமந்து செல்பவர்கள் சஜித் அணியைச் சோ்ந்தவர்களாவர்.

அந்த இடங்களில் முஸ்லிம் மக்கள் பல்லாயிரக்கணக்கில் இந்த நாட்டை மாற்றியமைப்பதற்காக எம்மைச்சுற்றி அணிதிரண்டுள்ள விதத்தை நாங்கள் கண்டோம். அதனால் இலங்கையில் முதல் தடவையாக மிகவும் தனித்துவமான அரசாங்கமொன்று அமையப்போகிறது. அது எப்படிப்பட்ட அரசாங்கம்? இதுவரை காலமும் பிறருக்கு எதிரான அரசாங்கங்களே அமைக்கப்பட்டன. வடக்கு கிழக்கிலுள்ள இனத்துவங்களுக்கு எதிரான அரசாங்கங்கள். அரசியல் மேடைகளில் “தேசம் ஆபத்தில். ஏனைய இனங்களைச் சோ்ந்த மக்கள் பெரும்பான்மை இனத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தேசத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக அவர்களுக்கு வாக்குகளை அளிக்குமாறு” கூறினார்கள். மதத்தை காப்பாற்றிக் கொள்ள அவர்களுக்கு வாக்குகளை அளிக்குமாறு கூறினார்கள். இப்போதும் அந்த வகையிலான தோ்தல் இயக்கமொன்றை அமுலாக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ராஜபக்ஷாக்கள் மீண்டும் மீண்டும் கூறிக்கூறி உக்கிப்போன மதவாத, இனவாத போராட்டக் கோஷங்களை இப்போது தோளில் சுமந்து செல்பவர்கள் சஜித் அணியைச் சோ்ந்தவர்களாவர். அந்த போராட்ட கோஷங்கள் ராஜபக்ஷாக்களையும் அழித்தொழித்த போராட்டக் கோஷங்களாகும். அவை இலங்கையின் இடதுசாரி இயக்கத்திற்கு எதிராக 1960 களிலிருந்து கூறிக்கொண்டிருப்பவையாகும். இப்போது அவை இற்றுப்போன போராட்டக் கோஷங்களாகும். அதனால் சில புதிய பொருட்களை தேடிக்கொள்ளுங்கள் என நான் சஜித் பிரேதாசவிற்கு கூறுகிறேன். அந்த பழைய சாமான் கடையிலிருந்து சாமான்களை கொண்டுவராதிருக்குமாறு கூறுகிறேன்.

Few Of The Crowd At The Victory Rally Of Anuradhapura

நாங்கள் சுதந்திரம் பெறும்போதும் பிளவுபட்டிருந்தோம். சுதந்திரத்திற்கு பின்னரும் எங்களை பிளவுபடுத்தினார்கள்

வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய எல்லா பிரதேசங்களிலும் வசிக்கின்ற மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த அரசாங்கமொன்றை முதல் தடவையாக அமைக்கப்போகிறோம். சிங்கள, தமிழ், முஸ்லிம், மலாயர், பறங்கியர் ஆகிய அனைத்து மக்களினதும் நம்பிக்கையை வென்றெடுத்த அரசாங்கமொன்று. இந்த நாட்டில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு இருந்த வரலாற்று ரீதியான வாய்ப்புக்களை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் கைவிட்டுவிட்டார்கள். வெள்ளைக்காரனின் ஆட்சியின் கீழும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் உருவாகக்கூடிய வகையில் ஒருவரையொருவர் பிரித்தே எமது நாட்டை ஆட்சி செய்தார்கள். 1818 கலகத்தின்போது வெள்ளைக்காரனுக்கு எதிராக எமது நாட்டு மக்களால் ஒன்று சேரமுடியாமல் போய்விட்டது. 1848 இலும் அதுவே இடம்பெற்றது. 1919 இல் சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுசோ்ந்து இலங்கை தேசிய காங்கிரஸை கட்டியெழுப்பினார்கள். மிகவும் குறுகிய காலத்தில் அது சிதைவடைந்தது. 1928 இல் பண்டாரநாயக்க தனிவேறான சிங்கள மகா சபையை அமைக்கத்தொடங்கினார்கள். தமிழ் காங்கிரஸ் தனிவேறாக உருவாகக் தொடங்கியது. சோனகர் சங்கம் தனிவேறாக உருவாகியது. எதிரிக்கு எதிராக ஒன்று சோ்ந்து போராடுவதற்கு பதிலாக பிளவுபட தொடங்கினார்கள். அந்தந்த கூட்டமைப்புகளின் தலைவர்கள் கள்ளத்தனமாகச் சென்று புறங்கூறி ஒரு சில அவா நிறைவுகளை கேட்கத் தொடங்கினார்கள். தேசம் பிளவுபட்டது. 1948 இல் சுதந்திரம் பெறும்போதும் நிலைமை அப்படித்தான். இந்தியா சுதந்திரமடைகின்ற வேளையில் அந்த நாட்டின் வலதுசாரி, இடதுசாரி தலைவர்கள் அனைவருமே ஒன்று சோ்ந்து இந்திய சுதந்திர போராட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்கினார்கள். நாங்கள் சுதந்திரம் பெறும்போதும் பிளவுபட்டிருந்தோம். சுதந்திரத்திற்கு பின்னரும் எங்களை பிளவுபடுத்தினார்கள். 1948 சுதந்திரம் கிடைக்கிறது. 1949 இல் குடியுரிமைச்சட்டம் நிறைவேற்றப்படுகிறது. அந்த சட்டத்தை கொண்டுவந்து பெருந்தோட்டத்தைச் சோ்ந்த மக்களின் வாக்குரிமையை பறித்தார்கள். 1930 களில் வடக்கில் பலம்பொருந்திய தமிழ் இளைஞர் இயக்கமொன்று இருந்தது. அவர்கள் பகுதியளவிலான சுதந்திரம் வேண்டாம் என்று கூறி முழுமையான தன்னாதிக்கத்தை கோரி போராடினார்கள். எமது நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணத்தின் இளைஞர் இயக்கம் பாரிய செயற்பொறுப்பினை ஆற்றியது. எனினும் அதிகாரத்தை பெற்ற எமது ஆட்சியாளர்கள் அதிகாரத்திற்காகவே எம்மை பிரித்தார்கள்.

ஒருவருக்கொருவர் முட்டிமோதிக்கொள்கின்ற நாடாக இந்த நாட்டை மாற்றினார்கள்.

நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தமிழ் இளைஞர்கள் 1949 இல் கொண்டுவந்த குடியுரிமைச் சட்டம் காரணமாக தமிழரசுக் கட்சியென தனிவேறான கட்சியொன்றை உருவாக்கிக் கொள்கிறார்கள். வடக்கிற்கு தனியான ஆட்சியொன்றை கோரினார்கள். 1956 அளவில் மொழிப் பிரச்சினையொன்று உருவாக்கப்படுகிறது. 1958 அளவில் ஸ்ரீ எழுத்தில் கறுப்பெண்ணை பூசப்படுகிறது. மீண்டும் சிங்கள, தமிழ், முஸ்லிம் கலவரம் ஆரம்பிக்கின்றது. 1965 இல் டட்லியின் வயிற்றில் மசாலை வடை என்று பேரணி செல்ல தொடங்குகிறார்கள். மீண்டும் 1972 இல் தமிழர் ஐக்கிய முன்னணி அமைக்கப்படுகிறது. 1976 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உருவாக்கப்படுகிறது. எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்றுசோ்ந்து வட்டுக்கோட்டை சம்மேளனம் என கூறி தனிவேறான அரசசொன்றுக்கான மக்கள் ஆணையை கோரி நிற்கிறது. 1978 இல் பயங்கரவாத தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. மக்களை அடக்க தொடங்குகிறார்கள். 1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபை தோ்தலின் போது அன்று யாழ்ப்பாணத்திற்கு சென்ற ரணில், காமினி திசாநாயக்க, ஜே.ஆர். வடக்கு மக்களின் வாக்குரிமையை கொள்ளையடித்தார்கள். யாழ் நூலகத்திற்கு தீ வைத்தார்கள். மீண்டும் மீண்டும் மோதல்களை உருவாக்கினார்கள். 1983 இல் மீண்டும் கறுப்பு ஜுலையை உருவாக்கினார்கள். நாடு பூராவிலும் கடைகளையும் சினிமா தியேட்டர்களையும் தீக்கிரையாக்கினார்கள் எம்மை பிளவுபடுத்தினார்கள். பிரித்தார்கள். ஒருவருக்கொருவர் முட்டிமோதிக்கொள்கின்ற நாடாக இந்த நாட்டை மாற்றினார்கள். 1984 அளவில் பிரபாகரன் தற்கொலை குண்டுதாரிகளை உருவாக்கினார். அதன் பின்னர் சிவில் யுத்தம் ஒன்று ஆரம்பிக்கிறது. மிருகத்தனமான மனித படுகொலைகள் தொடங்குகின்றது. நாட்டை பாரிய அனர்த்தத்திற்கு இரையாக்கியனார்கள். 2009 இல் யுத்தம் முற்றுப்பெற்றது. சில நாட்கள் தான் உருண்டோடியது. தோ்தல் நெருங்கும்போது மலட்டுக் கொத்து, மலட்டு ஆடைகள், மலட்டு மருந்துவர்கள் இருப்பதாக கூறத்தொடங்கினார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உருவாக்கினார்கள். மக்களை பிரித்தார்கள். அது தானே நடந்தது.

Maha Sangha At The Victory Rally Of Anuradhapura

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி நாட்டை போதைப்பொருள் அனர்த்தத்திலிருந்து விடுவித்துக்கொள்ளும்

வெள்ளைக்காரர்கள் எங்களை பிரித்தார்கள். கறுப்பு வெள்ளைக்காரர்களும் எங்களை பிரித்தார்கள். அதனால் இந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலாயர், பறங்கியர் ஆகிய நாம் அனைவரும் ஒரே இலங்கை தேசத்தவரை கட்டியெழுப்புதல் பற்றிய எதிர்பார்ப்புடன் இருந்தோம். எமது ஆட்சியாளர்கள் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. எம்மை பிரித்தார்கள். முட்டி மோதுகின்ற நிலைமையை உருவாக்கினார்கள். யுத்தத்தை உருவாக்கினார்கள். வடக்கையும் தெற்கையும் அழித்தார்கள். இப்போது எங்களுக்கு முதல் தடவையாக சிங்கள, தமிழ், முஸ்லிம், மலாயர், பறங்கியர் ஆகிய அனைவருமே ஒன்றாக சோ்ந்து ஒரே கொடியின் நிழலில் இருக்க தேசிய ஒற்றுமையை மலரச் செய்விக்கின்ற வாய்ப்பு உருவாகியிருக்கிறது. சஜித் பிரேதாசாக்கள் பழைய மதவாத, இனவாத அழுக்குத் துணிகளை சலவை செய்ய தொடங்கியிருக்கிறார்கள். இந்த அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். நாங்கள் எல்லா சமயங்களுக்கும் மதிப்பளிப்பவர்கள். இந்த நாட்டில் பல நூற்றாண்டுகளாக மக்கள் பிரார்த்திக்கின்ற தேசிய ஒற்றுமையை உறுதி செய்கின்ற அரசாங்கத்தை நாங்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் நிறுவுவோம். அநுராதபுரம் எமது நாகரிகத்தின் நகரகமாகும். இன்று போதைத்தூள் தாண்டவமாடுகிறது. போதை பொருட்கள் பெரும் தொற்றாக மாறியிருக்கிறது. இந்த முழு நாட்டையும் அந்த அனர்தத்திலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும். இந்த அனர்த்தங்கள் அனைத்தினதும் திரைமறைவில் இருப்பவர்கள் ஆட்சியாளர்களே. அரசியல்வாதிகளின் அனுசரணை கிடைக்காமல் இந்த குற்றச் செயல் மிக்க தீத்தொழில் நிலவமாட்டாது. இந்த அனைத்து அனர்த்தங்களிலிருந்தும் தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை முற்றாகவே விடுவித்துக் கொள்ளும் என நாங்கள் உறுதியாக கூறுகிறோம். எமது வெற்றியை மகத்தான வெற்றியாக உயர்த்திப்பிடிக்கவே முழு நாடும் செப்டெம்பர் 21 ஆம் திகதிவரை காத்திருக்கிறது. நாங்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து அதன் பின்னர் இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்.

Kamal Addararachchi Addressing The Victory Rally Of Anuradhapura
Crowd Outside From Hut At The Victory Rally Of Anuradhapura
Show More

“தேசிய ஒற்றுமை நிலவுகின்ற அனைவரும் சகோதரத்துவத்துடன் வசிக்கின்ற ஒரு நாடே எமக்குத் தேவை” -தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க-

(-“நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – சாய்ந்தமருது – 2024.09.13-) இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நிச்சயம். நீண்ட காலமாக இந்த ஆட்சியாளர்கள் எமது நாட்டை ஆட்சிசெய்தார்கள். நாடும் மக்களும் வறுமையின் அடிமட்டத்திற்கே வீழ்ந்தது. ஆட்சியாளர்கள் கட்டியெழுப்பப்பட்டார்கள், நாடு வீழ்ந்தது. நாங்கள் செப்டெம்பர் 21 ஆந் திகதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கமொன்றை அமைப்போம். இந்த நாட்டைக் கட்டியெழுப்புகின்ற தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை நாங்கள் அமைத்துக்கொள்வோம். இந்த தேர்தலில் […]

(-“நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – சாய்ந்தமருது – 2024.09.13-)

Anura Kumara Dissanayake Addressing The Crowd At The Victory Rally Of Saindamarudu

இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நிச்சயம்.

நீண்ட காலமாக இந்த ஆட்சியாளர்கள் எமது நாட்டை ஆட்சிசெய்தார்கள். நாடும் மக்களும் வறுமையின் அடிமட்டத்திற்கே வீழ்ந்தது. ஆட்சியாளர்கள் கட்டியெழுப்பப்பட்டார்கள், நாடு வீழ்ந்தது. நாங்கள் செப்டெம்பர் 21 ஆந் திகதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கமொன்றை அமைப்போம். இந்த நாட்டைக் கட்டியெழுப்புகின்ற தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை நாங்கள் அமைத்துக்கொள்வோம். இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நிச்சயம். தெற்கில் வசிக்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்து இருக்கிறார்கள். சாய்ந்தமருதுவில் வசிக்கின்ற முஸ்லீம் மக்களின் தீர்மானம் என்ன? நீங்கள் உரத்தகுரலில் கூறுவதுபோல் தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விப்பது உறுதியானது.

உங்கள் கலாச்சார அடையாளத்தை ஏற்றுக்கொண்டு சுதந்திரமான நாட்டை உருவாக்குவதுதான் தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு.

எமது வெற்றியை தடுப்பதற்காக இன்று பல்வேறு தரப்பினர்கள் எமக்கு எதிரான சேறுபூசுதல்களிலும் பொய்யான தகவல்களை பரப்புவதிலும் ஈடுபட்டுள்ளார்கள். அண்மையில் ஹிஸ்புல்லா இங்கு வந்தாரா? அவர் வந்து எம்மைப்பற்றிய பல அவதூறுகளையும் பொய்களையும் கூறியிருக்கிறார். முஸ்லீம் மக்கள் மதரீதியாக கொண்டாடுகின்ற இரண்டு தருணங்கள் இருக்கின்றன. ஒன்று றமழான் வைபவம். அடுத்தது ஹஜ்ஜி வைபவம். நாங்கள் வந்ததும் இதில் ஒன்றை நிறுத்துவோமென ஹிஸ்புல்லா கூறியுள்ளார். அவருடைய மண்டையை பரிசோதித்துப் பார்க்கவேண்டும். மக்களை பள்ளிவாசலுக்குப்போக அனுமதிக்கமாட்டோமெனவும் கூறியுள்ளார். இவர்கள் முஸ்லீம் மக்கள் மத்தியில் வந்து அவ்வாறான கதைகளைக் கூறுகிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் திஸ்ஸ அத்தநாயக்க நாங்கள் அதிகாரத்திற்கு வந்ததும் கண்டி பெரஹெராவை நடாத்த விடமாட்டோம் என்று கூறுகிறார். அவர்களின் மேடைகளில் ஏறுகின்ற ஒருசில பிக்குமார்கள் நாங்கள் வந்தால் தானம் கிடைக்கமாட்டாதெனக் கூறுகிறார்கள். இவை அரசியல் கதைகளா? அவை அரசியல் விமர்சனங்களா? அவை குறைகூறல்கள். அவைதான் பொய்கள். உண்மையாகவே மதம் பற்றிய கௌரவம் இருக்குமானால், மதம் சம்பந்தமான சுதந்திரத்தை உண்மையாகவே எதிர்பார்ப்பின் அவற்றை அரசியல் மேடைகளில் கூறக்கூடாது. அவை மதவாதத்தைக் கிளப்புகின்ற பேச்சுகள். எமது நாடு சிங்கள, தமிழ், முஸ்லீம், மலாயர், பறங்கியர் வசிக்கின்ற நாடு. சிங்களவர்களுக்கு தமக்கே உரித்தான கலாச்சாரமொன்று, தமிழர்களுக்கு துனித்துவமான கலாச்சாரமொன்று. முஸ்லீம்களுக்கு தனித்துவமான கலாச்சாரமொன்று என்றவகையில் பல கலாச்சாரங்களைக்கொண்ட மக்கள் வசிக்கின்ற நாடே எமது நாடு. அதனால் இந்த நாட்டின் எதிர்காலம் இந்த பன்வகைமைகொண்ட மக்கட்குழுக்கள் மத்தியில் ஒற்றுமை நிலவினால் மாத்திரமே நிலைத்திருக்கும். அதனால் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி உங்களின் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை, மொழியைப் பேசுவதற்கான உரிமையை வழங்குகின்ற ஆட்சியாகும். உங்கள் கலாச்சார அடையாளத்தை ஏற்றுக்கொண்டு சுதந்திரமான நாட்டை உருவாக்குவதுதான் தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு.

இந்த நாட்டில் தூள் வியாபாரம், பாதாள உலகின் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பது உங்களுக்குத் தெரியும். இந்த தேர்தலுக்காக அவர்கள் செலவுசெய்வது தூள் வியாபாரிகளின் பணத்தையாகும். எமது நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவேண்டும். தூள் வியாபாரத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். அதோ அந்த வேலையை செய்வது தேசிய மக்கள் சக்தியாகும். இந்த ஆட்சியார்கள் ஒருபோதுமே அதனை செய்யமாட்டார்கள். விரும்பிய எல்லாவற்றையும் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவந்து இங்கே விற்பனை செய்கின்ற வழிமுறையையே அவர்கள் விரும்புகிறார்கள். அப்போதுதான் ஆட்சியாளர்களக்கு கொமிஸ் கிடைக்கும். ரணிலின் அரசாங்கத்தில் படகுகள் கரையில் குவிந்துள்ளன, மாலைதீவிலிருந்து கருவாடு இறக்குமதி செய்கிறார்கள். மீன்களுக்கு வாக்குரிமை இருந்தால் ரணிலுக்கே வாக்குகள் கிடைக்கும். நாங்கள் இந்த நாட்டில் கடலுக்குச் செல்கின்ற அனைத்து மீனவர்களுக்கும் அவசியமான நிவாரணங்கள் அனைத்தையும் வழங்குவோம். இந்தப் பிரதேசத்தில் கடலரிப்பு காரணமாக கரையோரம் உள்நாட்டை நோக்கி வருகின்றது. ஒருசில தென்னந்தோட்டங்கள், கட்டிடங்கள் கடலில் அமிழ்ந்துள்ளன. அதனால் இந்த கரையோரத்தைப் பேணிப்பாதுகாத்து கடலரிப்பினைத் தடுக்க அவசியமான சுற்றாடல் ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும். அவ்வாறுசெய்து பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயமாக அதனைச்செய்யும். இந்நாட்டின் இளைஞர்கள் தொழிலைத் தேடிக்கொள்வதென்பது கனவாகும். இயலுமானவர்கள் தொழில்தேடி வெளிநாடு செல்கிறார்கள். நாங்கள் மக்கள் வாழக்கூடிய அழகான ஒரு நாட்டை உருவாக்கிடவேண்டும். அதற்காக செப்டெம்பர் 21 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விப்போம். நாட்டை சீராக்குகின்ற அரசாங்கமொன்றைக் கட்யெழுப்புவோம். திருட்டுகளை நிறுத்துகின்ற, மக்களின் சொத்துக்களை திருடிய அரசியல்வாதிகுளக்கு தண்டனை வழங்குகின்ற அரசாங்கமொன்றை, திருடிய பொதுமக்களின் சொத்துக்களை பறிமுதல்செய்கின்ற, உண்மையான மக்கள்நேயமுள்ள அரசாங்கமொன்றை நாங்கள் இந்த நாட்டில் கட்டியெழுப்புவோம். செப்டெம்பர் 21 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நிச்சயமே. உறுதியானதே.

Crowd At The Victory Rally Of Saindamarudu

தேசிய ஒற்றுமை நிலவுகின்ற ஒரு நாடே எங்களுக்குத் தேவை.

இப்போது ஹிஸ்புல்லா பொய்யான உண்மையற்ற விடயங்களை பரப்பத் தொடங்கியிருக்கிறார். நாங்கள் எங்கள் கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளோம். எதேனும் மதம் பற்றி, கலாச்சாரம் பற்றி, மொழி பற்றி எவரேனும் தீவிரவாதக் கருத்தினைப் பரப்புவாராயின் அதற்கெதிராக முறைப்பாடுசெய்து சட்டத்தினால் தண்டனை வழங்கவதற்கான ஆணைக்குழுவொன்றை நியமிப்போம். அரசியலில் மதவாதக் கூற்றுகளை வெளியிடுவதை, இனவாதக் கூற்றுகளை வெளியிடுவதை நிறுத்துவதுதான் தேசிய சக்தி அரசாங்கத்தின் பொறுப்பாகும். தேசிய ஒற்றுமை நிலவுகின்ற ஒரு நாடே எங்களுக்குத் தேவை. அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ்கின்ற நாடே எமக்குத் தேவை. அதனால்த்தான் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம். செப்டெம்பர் 21 ஆந் திகதி நாங்கள் வெற்றிபெற வேண்டும். தெற்கிலுள்ள மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து மாத்திரமல்ல கிழக்கிலுள்ள உங்களின் நம்பிக்கையும் எமக்குத் தேவை. வடக்கிலுள்ள மக்களின் நம்பிக்கையும் எமக்குத் தேவை. இலங்கையில் முதல்த்தடவையாக தெற்கின் மக்களும் கிழக்கின் மக்களும் வடக்கின் மக்களும் மலையக மக்களும் ஏற்றுக்கொள்கின்ற அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் அனைவரதும் நம்பிக்கையை வென்றெடுத்த ஓர் அரசாங்கத்தை நாங்கள் அமைத்திடுவோம்.

ஒற்றுமையின் இயக்கமொன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அரசியல் கட்சிகள் போட்டிக்கு வருவது எப்படியென உங்களுக்குத் தெரியும். சஜித் வருவது ஹக்கீமை தோளில் வைத்துக்கொண்டே. ரணில் வருவது அதாவுல்லாவை தோளில் வைத்துக்கொண்டே. நாங்கள் வருவது மக்களை தோளில் வைத்துக்கொண்டு உங்களின் நம்பிக்கையால்தான். அதோ அவ்வாறான ஒற்றுமையின் இயக்கமொன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அது தமிழ் மக்களை, சிங்கள மக்களை, முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சியையோ தலைவர்களையோ பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒன்றல்ல. அதுதான் தேசிய மக்கள் சக்தி. இன்று இங்கே பல்லாயிரக்கணக்கான முஸ்லீம் மக்கள் எமது சகோதர சகோதரிகள் ஒன்றுசேர்ந்து எமக்கு கூறுவது என்ன? எம்மை நம்பியமைக்காக உங்களுக்கு நன்றி. நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு துளியளவிலேனும் சேதமேற்படத்தாமல் அதனைப் பாதுகாப்போமென நாங்கள் உங்களுக்கு உத்தரவாதமளிக்கிறோம்.

The Victory Rally Of Saindamarudu Crowd

இனவாதத்தில் வீழ்ந்திடாத, அந்த சேற்றில் அமிழ்ந்துவிடாத ஒரே அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே.

2015 இல் மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தது உங்களுக்குத் தெரியும். அவர்கள் மீண்டும் அரசியலில் கரைசேர ஒரு பாதையைத் தேடிக்கொண்டு இருந்தார்கள். அவர்களால் திருட்டுகளை நிறுத்துகிறோம் எனக்கூறி அதிகாரத்தைப் பெறமுடியாது, சனநாயகத்தை நிலைநாட்டுவொம் எனக்கூறி அதிகாரத்தைப் பெறமுடியாது, 2015 இன் பின்னர் நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க முடியுமெனக்கூறி அதிகாரத்தைப் பெற முடியாது. அதனால் ராஜபக்ஷாக்கள் அதிகாரத்தைப் பெறுவதற்கான வீதி வரைபடமொன்றை தயாரித்து விரித்தார்கள். அதற்காக முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனவாத இயக்கமொன்றை ஆரம்பித்தார்கள். உண்டால் மலடாகுகின்ற கொத்து ரொட்டி தயாரிப்பதாகக் கூறினார்கள். மீண்டும் வருவதற்காக இனவாதத்தை விதைக்கத் தொடங்கினார்கள். முஸ்லீம் கடைகளில் மலட்டு உடைகளை விற்பதாகக் கூறினார்கள். அவற்றை அணிந்தால் மலட்டுத்தன்மை ஏற்படுமெனக் கூறினார்கள். இனவாதத்தைக் கிளப்பினார்கள். சிங்களப் பெண்களை மலடாக்குகின்ற மலட்டு மருத்துவர்கள் இருப்பதாகக் கூறினார்கள். 2019 இல் நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள மதத்தைப் பாதுகாத்துக்கொள்ள அவரை வெற்றியீட்டச் செய்விக்குமாறு கோட்டாபய கூறினார். சிங்கள மக்கள் முண்டியடித்துக்கொண்டு போய் வாக்குகளைப் போட்டு வெற்றிபெறச் செய்வித்தார்கள். இப்போது அந்த மொட்டு எங்கே? அந்த மொட்டு அரசாங்கம்தான் கொவிட் பெருந்தொற்றுவேளையில் முஸ்லீம்கள் இறந்தால் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்காமல் தகனம் செய்யுமாறு கூறியது. இப்போது அந்த மொட்டின் பெரும்பான்மையினர் ரணிலோடுதான் இருக்கிறார்கள். இப்போது மொட்டின் தலைவர் ரணில். ஏனையோர் எவருடன் இருக்கிறார்கள்? மொட்டின் தவிசாளர் ஜீ்.எல். பீரிஸ் உள்ளிட்ட இனவாதத்தை விதைத்தவர்கள் முஸ்லீம் ஜனாஸாக்களை தகனம்செய்யுமாறு தீர்மானிக்கையில் அமைச்சரவையில் இருந்த ஜீ. எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, நாலக்க கொடஹேவா இன்று எங்கே இருக்கிறார்கள். சஜித் பிரேமதாசவிடம். இனவாதக் கும்பல்கள் எல்லாமே இன்று அவர்களிடமே இருக்கின்றது. அதனால் நீங்கள் ரணிலைப் பார்த்தாலும் மொட்டின் அரைப்பகுதியுடன். சஜித்தைப் பார்த்தாலும் மொட்டின் அரைப்பகுதியுடன். அவர்கள் அனைவருமே இனவாதத்தை விதைத்தவர்கள். அதோ அந்த இனவாதத்தில் வீழ்ந்திடாத, அந்த சேற்றில் அமிழ்ந்துவிடாத ஒரே அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. நான் உங்களிடம் கேட்கிறேன் யாரை தெரிவுசெய்யப் போகிறீர்கள்? தெரிவுசெய்ய வேண்டியது தேசிய மக்கள் சக்தியையாகும்.

அங்குமிங்கும் தாவுகின்ற இந்த அரசியலை நிறுத்தவேண்டாமா?

இந்த அரசியலில் ஓர் அசிங்கமான சூதாட்டம் நிலவுகின்றது. அங்குமிங்கும் தாவிக்கொண்டு இருக்கிறார்கள். அங்கும் வாங்கிக் கொள்கிறார்கள்: இங்கும் வாங்கிக் கொள்கிறார்கள். இப்போது அதாவுல்லா எந்தப் பக்கத்தில்? அங்குமிங்கும் தாவுகின்ற இந்த அரசியலை நிறுத்தவேண்டாமா? இந்த அசிங்கமான அயோக்கியத்தனமான அரசியல் காரணமாகவே எமது நாடு நாசமாகியது. கடந்த மாதம் ஏசுகிறார்கள்: இந்த மாதம் போய் கட்டிப்பிடிக்கிறார்கள். இதனை மாற்றியமைத்திட வேண்டாமா? வேண்டும். இப்போது அந்த கீதா நோனாவைப் பாருங்கள். சென்ற வாரம் ரணில்தான் டொப் எனக் கூறுகிறார். இந்த வாரம் சஜித் தான் டொப் எனக் கூறுகிறார். அவர்களுக்கு வெட்கம் கிடையாது. எடுப்பவர்களுக்கும் வெட்கம் கிடையாது.

People At The Victory Rally Of Saindamarudu

வடக்கிற்குச் சென்றும், கிழக்கிற்குச் சென்றும், தெற்கிற்குச் சென்றும் ஒரே கதையைக் கூறுகின்ற ஒரே இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே.

மகரகம பொதுபல செனையின் மேடையில் ஏறிய சம்பிக்க ரணவக்க இப்போது சஜித்துடன். றிசாட் பதுர்தீன் அவரும் சஜித் பிரேமதாசவுடன். சஜித் பிரேமதாச கிழக்கிற்க வரும்போது ஹக்கீமை அழைத்து வருகிறார், சம்பிக்கவை ஒளித்துவைத்துவிட்டு வருகிறார். மாத்தறைக்குப் போகும்போது ஹக்கீமை ஒளித்துவைத்துவிட்டு சம்பிக்கவை கூட்டிக்கொண்டு போகிறார். மன்னாருக்கு போகும்போது றிசாட் பதுர்தீனை கூட்டிக்கொண்டு போகிறார். சம்பிக்கவை ஒளித்துவைத்துவிட்டுப் போகிறார். காலிக்குப்பொகும்போது றிசாட்டை ஒளித்துவைத்துவிட்ட சம்பிக்கவை கூட்டிக்கொண்டு போகிறார். கொள்கைப்பிடிப்பு இல்லாத அரசியல்வாதி. இன்று வடக்கிற்குச் சென்றும், கிழக்கிற்குச் சென்றும், தெற்கிற்குச் சென்றும் ஒரே கதையைக் கூறுகின்ற ஒரே இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. நாங்கள் இந்த விளையாட்டை மூடிமறைத்து “பிளே’ பண்ணவில்லை. அவர்கள் மறைமுகமாகவே விளையாடுகிறார்கள். அவர்களைத் தோற்கடித்திட இந்த அசிங்கமான விளையாட்டே போதும். இவையனைத்தையும் கருத்தில்கொண்டு நாங்கள் செப்டெம்பர் 21 ஆந் திகதி நல்லதொரு முடிவினை எடுக்கவேண்டும். அவர்கள் வருவது பகிர்ந்துகொள்வதற்காகவே. சிறப்புரிமைகளைக் கைவிடுகின்ற அரசியல்வாதிகள் இருக்கின்ற ஓர்அரசாங்கத்தை நாங்கள் அமைத்திடுவோம்.

எமது நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவேண்டும்

இந்த நாட்டில் தூள் வியாபாரம், பாதாள உலகின் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பது உங்களுக்குத் தெரியும். இந்த தேர்தலுக்காக அவர்கள் செலவுசெய்வது தூள் வியாபாரிகளின் பணத்தையாகும். எமது நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவேண்டும். தூள் வியாபாரத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். அதோ அந்த வேலையை செய்வது தேசிய மக்கள் சக்தியாகும். இந்த ஆட்சியார்கள் ஒருபோதுமே அதனை செய்யமாட்டார்கள். விரும்பிய எல்லாவற்றையும் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவந்து இங்கே விற்பனை செய்கின்ற வழிமுறையையே அவர்கள் விரும்புகிறார்கள். அப்போதுதான் ஆட்சியாளர்களக்கு கொமிஸ் கிடைக்கும். ரணிலின் அரசாங்கத்தில் படகுகள் கரையில் குவிந்துள்ளன, மாலைதீவிலிருந்து கருவாடு இறக்குமதி செய்கிறார்கள். மீன்களுக்கு வாக்குரிமை இருந்தால் ரணிலுக்கே வாக்குகள் கிடைக்கும். நாங்கள் இந்த நாட்டில் கடலுக்குச் செல்கின்ற அனைத்து மீனவர்களுக்கும் அவசியமான நிவாரணங்கள் அனைத்தையும் வழங்குவோம். இந்தப் பிரதேசத்தில் கடலரிப்பு காரணமாக கரையோரம் உள்நாட்டை நோக்கி வருகின்றது. ஒருசில தென்னந்தோட்டங்கள், கட்டிடங்கள் கடலில் அமிழ்ந்துள்ளன. அதனால் இந்த கரையோரத்தைப் பேணிப்பாதுகாத்து கடலரிப்பினைத் தடுக்க அவசியமான சுற்றாடல் ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும். அவ்வாறுசெய்து பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயமாக அதனைச்செய்யும். இந்நாட்டின் இளைஞர்கள் தொழிலைத் தேடிக்கொள்வதென்பது கனவாகும். இயலுமானவர்கள் தொழில்தேடி வெளிநாடு செல்கிறார்கள். நாங்கள் மக்கள் வாழக்கூடிய அழகான ஒரு நாட்டை உருவாக்கிடவேண்டும். அதற்காக செப்டெம்பர் 21 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விப்போம். நாட்டை சீராக்குகின்ற அரசாங்கமொன்றைக் கட்யெழுப்புவோம். திருட்டுகளை நிறுத்துகின்ற, மக்களின் சொத்துக்களை திருடிய அரசியல்வாதிகுளக்கு தண்டனை வழங்குகின்ற அரசாங்கமொன்றை, திருடிய பொதுமக்களின் சொத்துக்களை பறிமுதல்செய்கின்ற, உண்மையான மக்கள்நேயமுள்ள அரசாங்கமொன்றை நாங்கள் இந்த நாட்டில் கட்டியெழுப்புவோம். செப்டெம்பர் 21 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நிச்சயமே. உறுதியானதே.

Anura Kumara Dissanayake On Stage At The Victory Rally Of Saindamarudu
Show More

“சுயாதீனமான தேர்தல் அண்மித்துள்ளவேளையில் பயங்கரமான பிரச்சாரங்களை முன்னெடுத்துவருதல் தொடர்பில் சட்டம் கடுமையாக அமுலாக்கப்படல் வேண்டும்” -தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி அகலங்க உக்வத்த-

(-தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் ஊடக சந்திப்பு – 2024.09.14-) தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு நிலையத்திற்கு கிடைகின்ற முறைப்பாடுகளை பிரதேச மற்றும் வட்டாரசபை மட்டத்தில் கண்காணிப்பதற்கான கண்காணிப்பாளர்களை நியமித்திருக்கிறோம். தொடக்கத்திலிருந்து இற்றைவரையான காலப்பகுதியை ஒட்டுமொத்தமாக நோக்கினால் தேர்தல் சட்டமீறல்களில் துரித அதிகரிப்பு காணப்படுகின்றது. தேர்தல் சட்டங்களை மீறுதல் பற்றிய 392 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதோடு, சட்டவிரோதமான பிரச்சாரம் 186, சட்டரீதியான தேர்தலுக்கு தடையேற்படுத்துதல் 06, வன்செயல்கள் 30, மக்கள் அபிப்பிராயத்திற்கு முறையற்ற அழுத்தம் […]

(-தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் ஊடக சந்திப்பு – 2024.09.14-)

Akalanka Ukwaththe At NPP EMC Press Conference

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு நிலையத்திற்கு கிடைகின்ற முறைப்பாடுகளை பிரதேச மற்றும் வட்டாரசபை மட்டத்தில் கண்காணிப்பதற்கான கண்காணிப்பாளர்களை நியமித்திருக்கிறோம். தொடக்கத்திலிருந்து இற்றைவரையான காலப்பகுதியை ஒட்டுமொத்தமாக நோக்கினால் தேர்தல் சட்டமீறல்களில் துரித அதிகரிப்பு காணப்படுகின்றது. தேர்தல் சட்டங்களை மீறுதல் பற்றிய 392 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதோடு, சட்டவிரோதமான பிரச்சாரம் 186, சட்டரீதியான தேர்தலுக்கு தடையேற்படுத்துதல் 06, வன்செயல்கள் 30, மக்கள் அபிப்பிராயத்திற்கு முறையற்ற அழுத்தம் பிரயோகித்தல் 120, அரச வளங்களின் முறையற்ற பாவனை 73 மற்றும் அரச உத்தியோகத்தர்களை பாவித்தல் 39 என்றவகையில் பதிவாகியுள்ளது. சமூக ஊடகங்களை பாவித்து தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்கவை மையப்படுத்தி பாரிய சேறுபூசுதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடமென உணர்த்தக்கூடியவகையில் தயாரித்த போலியான தகவல்களையும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை திரிபுபடுத்தியும் தொகுத்தமைத்து தயாரித்த காணொளிகளைப்போன்றே தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்கவின் பெயரில் தயாரித்த போலியான மருத்துவ அறிக்கை போன்றவற்றை பிரசுரித்துள்ளார்கள். அந்த மருத்துவ அறிக்கை உண்மையானதென காட்டுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் கடிதத்தலைப்பின்கீழ் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி திரு. சுனில் வட்டகலவின் போலியான கையொப்பத்துடன் தயாரித்த போலியாவணத்தையும் சமூகமயப்படுத்தி உள்ளார்கள். அது சம்பந்தமாக புலன்விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சமூக ஊடக முறைப்பாடுகள் பிரிவிற்கு விடயங்களை முன்வைத்தோம்.

தேர்தல்கள் சட்டம் மாத்திரமன்றி அதற்கு அப்பால்சென்ற தண்டனைச் சட்டக்கோவையில் காட்டப்பட்டுள்ள போலியாவணம் புனைதல் எனும் குற்றச்செயலையும் புரிந்துள்ளார்கள். போலியான மருத்துவக் குறிப்பினை பிரசுரித்த பின்னர் ஆசிரி வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ “பேஸ் புக்” தளத்திலிருந்து மும்மொழியிலும் அறிவித்தல்களை விடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவக் குறிப்பு போலியானதென சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த போலியான குறிப்பினை தொலைக்காட்சி உரையாடலொன்றின்போதும் காட்டுவதற்காகவும் பிரயோகித்தார்கள். தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் பொலீசுக்கும் முறைப்பாடு செய்தாலும் அவற்றை தடுத்துநிறுவத்துவதற்காக தெளிவான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை புலனாகவில்லை. நியாயமான தேர்தலொன்றை நடத்துவது மாத்திரமன்றி அதற்காக பின்புலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டியதும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும். தேர்தல்கள் சட்டத்தை ஒருபுறம் வைத்தாலும் சாதாரண சட்டம் சீராக அமுலாக்கப்படுகின்றதென நாங்கள் நல்லெண்ணத்துடன் நம்பிக்கை வைத்திருக்கிறோம். “புதிய பாதை தேசிய இயக்கம்” எனும் அமைப்பினை உருவாக்கிக்கொண்ட ஒருவர் அதன் செயலாளராக அனில் சாந்த பர்னாந்து என்ற பெயரில் தோற்றி, ஊடக கலந்துரையாடலொன்றையும் நடாத்தினார். அவர் 21 ஆந் திகதிக்குப் பின்னர் மதம்சார் வன்முறையொன்று வருமெனவும் மக்கள் விடுதலை முன்னணி ஆயுதங்களை சேகரித்து வருவதாகவும் பாரதூரமான ஒரு கூற்றினை வெளியிட்டுள்ளார். இல்லாத பீதிநிலையை சமூகத்தில் உருவாக்கிட முயற்சிக்கின்ற அவர்கள் தேர்தல்கள் சட்டத்திற்கும் அப்பால்சென்ற சிவில் மற்றும் கலாச்சார உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயத்தை (ஐ.சீ.சி.பி. ஆர்.) மீறுவதில் ஈடுபட்டுள்ளார். மக்கள் மத்தியில் சமூக சகவாழ்வினை இல்லாதொழிக்க மேற்கொள்கின்ற முயற்சியாகும்.

இந்த சர்வதேச சமவாயத்திற்கிணங்க இந்த நாட்டில் விதிக்கப்பட்டுள்ள சட்டங்களை எவ்வளவு பலம்பொருந்தியதாக அமுலாக்கினார்கள் என்பது கடந்த காலங்களில் நன்றாகவே சித்தரிக்கப்பட்டது. சமூகத்தில் சட்டத்திற்கிணங்க நடந்துகொள்ளத் தெரியாவிட்டால் அந்த ஆட்களை சட்டத்தினால் கட்டிப்போட வேண்டும். தமது மண்டைகளில் இருக்கின்ற திரிபுநிலைகளை சமூகமயப்படுத்தி மற்றவர்களின் மனதை திரிபுபடுத்துகின்ற வகையில் நடந்துகொள்வார்களாயின் இது ஒரு பாரதூரமான நிலைமையாகும். அமைதியான சுயாதீனமான தேர்தலுக்கான சுற்றுச்சூழல் கட்டியெழுப்பப்பட்டுள்ளவேளையில் இவ்வாறான ஆட்கள் மேற்கொண்டு வருகின்ற திகிலூட்டுகின்ற பிரச்சாரங்கள் சம்பந்தமாக சட்டம் கடுமையாக அமுலாக்கப்படல் வேண்டும். இவ்வாறான செயல்கள் தொடர்பில் நாட்டில் சட்டத்தை அமுலாக்குகின்ற நிறுவனங்கள் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்.

கடந்த 07 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் மாநாட்டுக்கு நாடு பூராவிலும் பரந்துள்ள சட்டத்தரணிகள் வருகைதந்திருந்தவேளையில் ஒரு போத்தல் தண்ணீர் மாத்திரமே கொடுத்தோம். எனினும் அன்றைய தினம் மாலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் சந்திப்பின் பின்னர் இராப்போசன விருந்து மதுபானத்தை உள்ளிட்டதாகவே வழங்கப்பட்டது. அது சம்பந்தமாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நாங்கள் அதனை நடாத்துவதற்கு முன்னராகவே முறைப்பாடு செய்தபோதிலும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காலைவேளையில் 2,800 இற்கு மேற்பட்டோர் கலந்துகொண்ட எமது சட்டத்தரணிகள் மாநாடு நடாத்தப்பட்டபோதிலும் மாலையில் அவர்கள் அதே வளவில் நடாத்திய மாநாட்டில் தேர்தல் சட்டத்தை மீறி செயலாற்றி உள்ளார்கள். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கையளிக்கப்பட்டுள்ள தத்துவங்களின்படி சனாதிபதி வேட்பாளர்கள் அனைவருக்கும் நியாயமாக நடந்துகொள்வார்களென நாங்கள் எதிர்பார்க்கிறோம். தேர்தல் சட்டத்தைப்போன்றே தண்டனைச் சட்டக்கோவையையும் மீறுதல் தொடர்பில் அந்த நிறுவனம் கடுமையாக இயங்கிவருமென நாங்கள் நம்புகிறோம்.

Mark Gunawardhana At NPP EMC Press Conference

“தேர்தல்கள் ஆணைக்குழு தனது தத்துவங்களின்படி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்”
-தேசிய மக்கள் சக்தியின் தேர்தல்கள் கண்காணிப்பு நிலையத்தின் பிரதானீ இளைப்பாறிய சிரேட்ட பிரதிப் பொலீஸ் மா அதிபர் மார்க் குணவர்தன-

இன்று முதல் ஜனாதிபதி தேர்தலுக்கு சரியாக ஏழு நாட்கள் மாத்திரமே இருக்கின்றன. ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான சட்டத்தின்படி சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடாத்துவதற்கான பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிடமே இருக்கிறது. அந்த பொறுப்பினை நடைமுறையில் ஈடேற்றுகையில் பொலீஸாரும் ஏனைய அரச சேவைகளும் உதவி புரிகின்றன. இவ்விதமாக நடாத்தப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தோழர் அநுர குமார திசாநாயக்கவின் பெருவெற்றி நாட்டின் எல்லாபக்கங்களிலும் உறுதியாகி உள்ளது. நாங்கள் இதுவரை முன்வைத்துள்ள முறைப்பாடுகள் சம்பந்தமாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடமிருந்து எந்தவிதமான நியாயமும் கிடைக்கவில்லை. 2024 செப்டெம்பர் மாதத்தில் இலங்கை மன்றக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் விருந்துபசாரமொன்ற நடைபெற்றது. இதுவும் மக்கள் அபிப்பிராயத்தை மாற்றுவதற்கான உபசரிப்பாக நிலவுகின்றது. அதைப்போலவே சுகாதார அமைச்சர் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு “வோட்டர்ஸ் எஜ்” ஹோட்டலில் கூட்டமொன்றை நடாத்துவதற்காக அழைப்பு விடுத்திருந்தார். அது நடாத்தப்பட்டது. எந்தவிதமான தயக்கமும் அச்சமுமின்றி சனாதிபதியின் உத்தியோகபூர்வ “பேஸ்புக் கணக்கில்” இது நேரலையாக பிரசுரமாகியது. அவர்கள் சட்டத்தை மீறி எம்மை குறைகூறுகிறார்கள்.

கடந்த 13 ஆந்திகதி நிரொஷன் பாதுக்க இணைப்பாக்கம்செய்து “சினமன் லேக்’ ஹோட்டலில் போசன விருந்தொன்று நடாத்தப்பட்டது. அதில் ஒரு பீங்கான் சாப்பாட்டின் பெறுமதி ரூபா 5,500 விட அதிகமாகும். அதைப்போலவே பிலியந்தலையில் சனாதிபதியின் கூட்டமொன்றை நடாத்த நீர்கொழும்பு டிப்போவிலிருந்து லங்கம சாரதிகள், நடாத்துனர்கள் மற்றும் ஏனைய குழுவினரை ஈடுபடுத்தி சட்டவிரோதமான போக்குவரத்து அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஏதாவது நடந்தபின்னர் அந்த இடங்களுக்குச் செல்வதில் பலனில்லை. எனினும் எதிர்காலத்திலேனும் தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கு அமைவாக துரித நடவடிக்கைகள் எடுக்கப்படுமென நம்புகிறோம். அதன் மூலமாக உண்மையாகவே சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

H U Piyananda At NPP EMC Press Conference

“வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை கடுகளவேனும் குறைத்துவிட முடியாது”
-தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் அங்கத்தவர் இளைப்பாதறிய பொலீஸ் அத்தியட்சகர் எச்.யூ. பியனந்த-

இன்னும் ஆறு நாட்களில் இந்நாட்டின் ஜனாதிபதியாக எவரை நியமித்துக்கொள்ள வேண்டுமென்பதை பெரும்பான்மையான மக்கள் தீர்மானித்து விட்டார்கள். அதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஏனைய பிரதான வேட்பாளர்கள் பலவிதமான வன்செயல்களுக்கு தூபமிட்டு வருகிறார்கள். எனினும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் மிகுந்த கவனத்துடன் கீழ்மட்ட அங்கத்தவர்கள் வரை வார்த்தையால்கூட எந்தவிதமான துன்புறுத்தலையும் புரியவேண்டாமென வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு இருக்கையில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பிரதான அலுவலகத்திற்கும் பம்பல தேர்தல் அலுவலகத்திற்கும் கறுப்பெண்ணெய் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக நேற்று (13) மொனறாகலையில் நடைபெற்ற எமது கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிக்கொண்டிருந்த மக்கள்நிறைந்த பஸ்வண்டிமீது புத்தல, மஹபொடயாய பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தின் முன்னால்வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இன்றளவில் தேசிய மக்கள் சக்தியை சுற்றி மக்கள் திரண்டுவருவதை தாங்கிக்கொள்ள முடியாமலேயே இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறார்கள். எமக்கு இதுபற்றி அறிவித்ததும் புத்தல பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்து இது சம்பந்தமாக வெளிப்படைத்தன்மைகொண்ட விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு அறிவித்தோம். நாங்கள் எதிர்பார்ப்பது சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலாகும். அவர்கள் எமது கூட்டமைவைச்சேர்ந்த மூவரைத் தாக்கியுள்ளதோடு அவர்களில் ஒரு பெண்ணும் அடங்குகிறார். அவருக்கு ஆறு தையல்கள் போடப்படப்பட்டுள்ளது. எமக்கு கிடைத்த தகவலின்படி சீ.பீ.ஐ. 1077 இலக்கமுடைய அல்ட்டோ காரில்வந்த குழுவினர் மதுபானங்களை பகிர்ந்தளித்து தாக்குதல் நடாத்த தூண்டியுள்ளார்கள். அது சம்பந்தமாக சாகர எனும் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு வாக்குமூலத்தை வழங்கியவேளையில் மதுபானம் வழங்கி பஸ் வண்டிகளுக்கு தாக்குதல் நடாத்துமாறு அறிவுறுத்தியதை ஏற்றுக்கொண்டுள்ளார். அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்தவர் அல்லது குழுவினர் எதேனும் வன்செயலை கட்டவிழ்த்துவிட்டால் பொலீஸார் முறைப்படி செயலாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. புத்தல தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் அனைவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறான வன்முறைச்செயல்களை கட்டவிழ்த்துவிட்டு தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை கடுகளவேனும் குறைத்துவிட முடியாது. புத்தல தாக்குதலுடன் தொடர்புடைய அண்ணன், தம்பி ஆகிய பிரதான சந்தேகநபர்கள் பொலீஸில் சரணடைந்துள்ளார்கள். இந்த நாட்டின் அமைதியை விரும்புகின்ற பிரஜைகள் இவ்வாறான செயல்களுக்கு ஒருபோதுமே இடமளிப்பார்கள் என்பதை நாங்கள் நம்பமாட்டோம்.

Speakers Of NPP EMC Press Conference

Show More

“உழைப்பின் மூலமாக இந்த வெற்றியை பெருவெற்றியாக மாற்றிடுவோம்” -தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க-

(-“நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கான கூட்டம் – அம்பலாந்தோட்டை – 2024.09.12-) முன்பெல்லாம் தேர்தலொன்று வரும்போது தேர்தல் தினம் எப்போது என நாட்களை எண்ணிக்கொண்டிருந்தவர்கள் இந்த நாட்டின் ஆளுங் கும்பலாகும். எனினும் இத்தடவை தேர்தல்வரும்வரை பார்த்துக்கொண்டிருப்பவர்கள் இந்நாட்டு மக்களே. 21 அல்ல, தேர்தல் நாளை நடைபெற்றாலும் நாங்கள் வெற்றிபெறுவோம். இந்த நாட்டு மக்கள் நீண்டகாலமாக இந்த தேர்தலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த மரபுரீதியான அதிகாரப் பாங்கினை மாற்றியமைத்திட 21 ஆம் திகதி உதயமாகும் வரை […]

(-“நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கான கூட்டம் – அம்பலாந்தோட்டை – 2024.09.12-)

Anura Kumara Dissanayake Addressing The Crowd At The Victory Rally Of Ambalanthota

முன்பெல்லாம் தேர்தலொன்று வரும்போது தேர்தல் தினம் எப்போது என நாட்களை எண்ணிக்கொண்டிருந்தவர்கள் இந்த நாட்டின் ஆளுங் கும்பலாகும். எனினும் இத்தடவை தேர்தல்வரும்வரை பார்த்துக்கொண்டிருப்பவர்கள் இந்நாட்டு மக்களே. 21 அல்ல, தேர்தல் நாளை நடைபெற்றாலும் நாங்கள் வெற்றிபெறுவோம். இந்த நாட்டு மக்கள் நீண்டகாலமாக இந்த தேர்தலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த மரபுரீதியான அதிகாரப் பாங்கினை மாற்றியமைத்திட 21 ஆம் திகதி உதயமாகும் வரை இந்நாட்டு மக்கள் வழிமேல்விழிவைத்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஒருசிலநாட்களில் நாங்கள் நன்றாக உழைப்போம். உழைப்பின் மூலமாக இந்த வெற்றியை பெருவெற்றியாக மாற்றிடுவோம்.

இந்த வாய்ப்பினை நாங்கள் கைநழுவ விடமாட்டோம்.

நாங்கள் ஒருசில பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. எமது நாட்டின் அரசியல் ஊழல்பேர்வழிகளான சில அரசியல் குடும்பங்களின் கைகளில் குவிந்திருந்தது. அவர்கள் சதாகாலமும் அவர்களுக்காகவே அரசியலில் ஈடுபட்டார்கள்: ஒரு பரம்பரையிலிருந்து மற்றுமொரு பரம்பரைக்கு கொண்டுசெல்கின்ற விதத்திலாகும். அரசியல் மாத்திரமன்றி நாட்டின் வளங்களையும் சில குடும்பங்களின் கைகளில் மையப்படுத்திக் கொண்டார்கள். நாட்டு மக்களின் பணத்தை கோடிக்கணக்கில் அவர்களின் பைகளில் நிரப்பிக்கொண்டார்கள். இந்த ஊழல்மிக்க குடும்ப ஆட்சியின் கைகளிலிருந்து மக்களின் கைகளுக்கு அதிகாரம் வருகின்ற இந்த சந்தர்ப்பத்தை நீங்களும் நாங்களும் தவறவிடக்கூடாது. இந்த வாய்ப்பினை நாங்கள் கைநழுவ விடமாட்டோம். இப்போது எமக்கு நேரெதிரான தரப்பினர் மிகவும் அச்சமடைந்துள்ளார்கள். அவர்களுக்கு வலி அதிகரித்துள்ளது. அவர்கள் கணிசமான அளவில் வெறிபிடித்தவர்களாக உள்ளார்கள். அதனால் எதிர்வரும் சில நாட்களில் அவர்களிடமிருந்து நழுவிச்செல்கின்ற அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக எப்படிப்பட்டவற்றை செய்யவேண்டுமென அவர்கள் சிந்தித்துக்கொண்டு, கலந்தாலோசித்து வருகிறார்கள். அவர்கள் என்ன செய்தாலும் பலனில்லை.

Ambalanthota Victory Rally Crowd

இப்போது இந்நாட்டு மக்கள் இனவாதத்திற்கு எதிராக தேசிய ஒற்றுமையின் கொடியை கையிலேந்தி இருக்கிறார்கள்

தேசிய மக்கள் சக்தியின் அரசியல் இயக்கம் தற்போது மக்களின் கைகளிலேயே இருக்கின்றது. மக்கள் இப்போது எங்களின் அரசியல் இயக்கத்தை அவர்களின் கைகளில் எடுத்துவிட்டார்கள். குறைகூறல்கள், வெறிபிடித்த பிரதிபலிப்புகளால் இதனை திசைதிருப்ப முடியாது. எவருக்கேனும் சந்தேகம் நிலவுமாயின் நாங்கள் இந்த விடயங்களை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் எமது நாட்டின் அரசியல் மேடையில் மிகவும் அதிகமாக பேசப்பட்ட விடயம் இனம், மதம், நாட்டைப் பாதுகாத்துக் கொள்வது பற்றியாகும். மகிந்தாக்கள் கோட்டாபயாக்கள் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இனவாத, மதவாத போராட்டக் கோஷங்களையே பாவித்தார்கள். தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களை ஒருவருக்கொருவர் எதிராக வைத்து தமது அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்கின்ற இனவாத போராட்டக் கோஷங்களையே அவர்கள் அதிகமாக பாவித்தார்கள். தமது அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உணவு, உடைகள் தொடக்கம் உயிர்த்தஞாயிறு தாக்குதல்வரை அவர்கள் இனவாதத்தைப் பாவித்து இனவாதத்தின் ஊடாக சென்றால் இந்த நாடு இருள்மயமான படுகுழிக்குள்ளேயே விழுமென்பதை இப்போது மக்கள் படிப்படியாக உணர்ந்து வருகிறார்கள். இப்போது இந்நாட்டு மக்கள் இனவாதத்திற்கு எதிராக தேசிய ஒற்றுமையின் கொடியை கையிலேந்தி இருக்கிறார்கள். எனினும் இன்றளவில் மீண்டும் இனவாதம் மற்றும் மதவாதம் என்பவற்றைக் களமிறக்கத் தொடங்கி உள்ளார்கள்.

ஒருதுண்டு கல்லைக்கூட கையில் எடுக்கவேண்டாமென நாங்கள் எங்கள் அங்கத்தவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்

நாங்கள் கலவரங்களை ஏற்படுத்தப் போவதாக இப்போது கூறுகிறார்கள். வெற்றிபெறப் போகின்ற தேர்தலுக்காக கலவரங்களை ஏற்படுத்தப்பபோவது யார்? எமக்கு அமைதியான ஒரு தேர்தலே அவசியம். தோற்பவர்களுக்குத் தான் கலவரங்கள் தேவை, அவர்களுக்குத்தான் மோதல்கள் தேவை, சமூகத்தில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த வேண்டியது தேவை. அதனால் தேர்தல் வரையும் தேர்தல் தினத்தன்றும் தேர்தலுக்குப் பின்னரும் உச்சஅளவில் அமைதியான சூழ்நிலைக்காக இடையீடுசெய்கின்ற இயக்கம் தேசிய மக்கள் சக்தியாகும். எனினும் அவர்கள் மீண்டும் மீண்டும் இதனைக் கூறுவதிலிருந்து இதன் பின்னணியில் ஏதொவொரு சதித்திட்டம் இருக்கின்றதோ எனும் சந்தேகம் எமக்கு எழுகின்றது. ஒருதுண்டு கல்லைக்கூட கையில் எடுக்கவேண்டாமென நாங்கள் எங்கள் அங்கத்தவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். இந்த நாட்டு மக்களின் விருப்பத்துடன் அரசாங்கமொன்றை மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கின்றதென நாங்கள் பொலீஸாரிடம் தெரிவித்துக்கொள்கிறோம். அது நாட்டின் ஜனநாயகம். எமது நாட்டின் பொலீஸார், இராணுவம், விசேட அதிரடிப் படையினர் இவையனைத்துமே நாட்டின் அரசியலமைப்பினை பாதுகாப்பதற்கான கடப்பாடு கொண்டிருக்கின்றன. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான கடப்பாடு கொண்டிருக்கின்றன. அதனால் தோல்வியடைகின்ற தரப்பினரால் ஏதேனும் சதிவேலையை புரிவதற்கான தயார்நிலை இருக்குமாயின் ஓர் அரசியல் இயக்கமென்றவகையில் அதனைத் தடுக்க நாங்கள் ஆவனசெய்வோம்.

Anura Kuamra Dissanayake At The Victory Rally Of Ambalanthota

ரணில் ஐயா! இதில் வீழ்வதற்கு இன்னும் என்ன எஞ்சியிருக்கிறது?

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் வந்தால் பொருளாதாரம் வீழச்சியடைந்துவிடுமென அடுத்ததாக கூறுகிறார்கள். ரணில் அவர்களே இதைவிட பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைய என்ன இருக்கின்றது? உலகில் கடனை திருப்பிச் செலுத்தாத ஒரு நாடு. உலகமும் கடன் கொடுக்காத ஒரு நாடு. வைத்தியசாலைகளில் மருந்து இல்லாத ஒரு நாடு. இளைஞர்களால் ஒரு தொழிலைத் தேடிக்கொள்ள முடியாத நாடு. தொழில்தேடி நாட்டைக் கைவிட்டுச் செல்லவேண்டிய நிலையேற்பட்டுள்ள ஒரு நாடு. கமக்காரர்களுக்கு விவசாயத்திலிருந்து முறையான வருமானம் கிடைக்காத ஒரு நாடு. கடலுக்குச் செல்லமுடியாமல் மீன்பிடிப் படகுகள் கரையில் குவிந்துள்ள ஒரு நாடு. தொழில்முயற்சியாளர் தமது கடன்களை மீளச்செலுத்த முடியாமல் இறுகிப்போயுள்ள நாடு. முச்சக்கரவண்டி வாங்கி லீசிங் தவணையைச் செலுத்த முடியாதுள்ள நாடு. மக்களுக்கு மூன்றுவேளை உண்ணக்கிடைக்காத ஒரு நாடு. போதைப்பொருள் நிரம்பி வழிகின்ற ஒரு நாடு. ரணில் ஐயா! இதில் வீழ்வதற்கு இன்னும் என்ன எஞ்சியிருக்கிறது? வீழ்ந்துவிட்டோம். வீழ்ந்த இந்த நாட்டை மீட்டெடுக்கவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வருகின்றது. 76 வருடங்களாக நீங்கள் இந்த நாட்டை வீழ்த்தினீர்கள். தற்போது எங்களால் செலுத்த முடியாமல் போயுள்ள சர்வதேச இறையாண்மை முறிக்கடன் 12.5 பில்லியன் டொலர்களாகும். இந்த 12.5 பில்லியன் டொலர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பெற்ற கடனாகும். இதுதான் நாட்டை வீழ்த்திய விதம். அதேநேரத்தில் ரணில் அரச நிறுவனங்களை விற்கும்போது நாங்கள் அதற்கெதிராக குரல் எழுப்பவில்லையென சஜித் கூறுகிறார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்று காசோலையை வாங்கும்போது சஜித் காசோலையை வணங்கிக்கொண்டு இருக்கிறார். நீங்கள் பார்த்திருப்பீர்கள். நாங்கள் எதிராக குரல் எழுப்பவில்லையென அப்படிப்பட்ட மகன் கூறுகிறார். இப்போது அவர் திகைப்படைந்து இருக்கிறார். எங்கள் மேடையில் கூறவேண்டிய ஒருசிலவற்றை அவர் அவருடைய மேடையில் கூறுகிறார். அவர் குழப்பியடித்துக் கொள்கிறார். என்ன கூறவேண்டுமென அவரால் நினைத்துக்கொள்ள முடியாது.

செப்டெம்பர் 21 ஆந் திகதி எமது நாட்டின் வரலாற்று முக்கியம் வாய்ந்த தினமாகும்

நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்று 03 – 04 மாதங்களில் செய்கின்ற வேலைகளைப் பார்த்தால் எங்களுக்கு வாக்களிக்காதவர்களும் அநியாயம் நாங்களும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கவில்லையே என நினைப்பார்கள். நாங்கள் அமைப்பது 06 மாதங்களில் 01 வருடத்தில் விழ்கின்ற அரசாங்கத்தையல்ல. வீழ்த்தக்கூடிய அரசாங்கத்தையல்ல. இங்கு கட்டியெழுப்பப்படுவது நாட்டு மக்களுடன் ஒருங்கிணைந்த அரசாங்கமாகும். தற்போது எங்கள் தேர்தல் இயக்கத்தை முன்னெடுத்து வருபவர்கள் மக்களாவர். நீங்கள் இந்த கூட்டங்களுக்கு வந்து கைதட்டி 21 ஆந் திகதி வரை கைகட்டிக்கொண்டு இருக்கப்போகிறீர்களா? இல்லை. மற்றவர்களை சந்திக்கிறார்கள். எமது செய்தி போகின்றது. எமது பக்கம் இன்னமும் திரும்பியிராதவர்களை திருப்பிக்கொள்கிறார்கள். நீங்கள் அந்த முயற்சியில் நிலைதளராமல் இருக்கிறீர்கள். அதில் சந்தேகமே கிடையாது. இவ்வளவு பெருந்தொகையான மக்கள் எங்களுடன் தன்னிச்சையாக இணைந்திருப்பது 06 மாதங்களில் கைவிட்டுச் செல்வதற்காகவா? 06 மாதங்களில் வீழ்த்திவிடுவதற்காகவா? இல்லை. இந்த நாட்டுக்கு அவசியமான அனைத்துவிதமான பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பினை ஏற்படுத்துவோம். அதனால் செப்டெம்பர் 21 ஆந் திகதி எமது நாட்டின் வரலாற்று முக்கியம் வாய்ந்த தினமாகும். 21 ஆந் திகதிதான் இதுவரை அவர்கள் கையிலிருந்த அதிகாரம் பொதுமக்களின் கைகளுக்கு கைமாறுகின்ற தினமாகும்.

Crowd At The Victory Rally Of Ambalnthota

நாட்டின் முன்னால் மக்களின் முன்னால் ஒரே இடத்தில் இருந்துகொண்டு வாதம் புரிவோம்.

இப்போது ரணில் விக்கிரமசிங்க ஏதோ கூறிக்கொண்டு நாட்டைச்சுற்றிக் கொண்டிருக்கிறார். எனக்கு சவால் விடுக்கிறார். அவர் ஏதேதோ கூறி பதிலளிக்குமாறு என்னிடம் கூறுகிறார். இது உடனடிக் கவிதை அரங்கமா? அவருக்கு பொருளாதாரம் பற்றிய முறைசார்ந்த உரையாடல் அவசியமாயின் தொலைக்காட்சி அலைவரிசையொன்றை தெரிவுசெய்வோம். நான் வருவேன். நாட்டின் முன்னால், மக்களின் முன்னால், ஒரே இடத்தில் இருந்துகொண்டு வாதம் புரிவோம். ஐ.எம்.எஃப். பிரதிநிதிகளை கூட்டிக்கொண்டு வரத்தேவையில்லை. ஐ.எம்.எஃப். தேர்தலில் போட்டியிடுகின்றதா? அவர் கூறுவது சிறுபிள்ளைத்தனமான கதைகளையே. எந்தவிதமான பொறுப்பும் கிடையாது. அவர் கூறுவது என்னவென்று அவருக்கே தெரியாது. அவர் கூறுவதை கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் விளங்கமாட்டாது. தேர்தலொன்றில் இருக்கின்ற சிக்கலானதன்மையும் பொறுப்புடைமையும் அவருக்குத் தெரியாது. சஜித்தைப் பற்றிப் பேசுவதில் பயனில்லை. இந்த அம்பலாந்தோட்டை மக்களுக்கு அவரை நன்றாகவே தெரியுமல்லவா? நாங்கள் செப்டெம்பர் 21 ஆந் திகதி வெற்றிபெறுவோம், அது உறுதியானது. எங்களுக்கு அம்பலாந்தோட்டையிலிருந்தும் சிறந்த பெறுபேறு தேவை. அம்பாந்தோட்டை மாவட்டம்தான் எமக்கு சதாகாலமும் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த மாவட்டம். நீங்கள் எங்களுக்கு அமோக வெற்றியை பெற்றுக்கொடுப்பீர்களென்பதில் சந்தேகம் கிடையாது.

எமது நாட்டின் ஒரு பிள்ளைகூட போதைப்பொருள் தொல்லைக்கு இரையாகக்கூடாது.

நாங்கள் அதிகாரத்தை பெற்றபின்னர் இந்த நாட்டில் பயிர்செய்யக்கூடிய காணிகள் அனைத்தையும் பயிர்செய்யுமாறு நாங்கள் விவசாயிகளிடம் கேட்டுக்கொள்கிறோம். ஒருதுண்டு காணியையேனும் தரிசுநிலமாக இடமளிக்கவேண்டாம். பயிர்செய்வதற்கு அவசியமான எல்லா வசதிகளையும் நாங்கள் உங்களுக்கு பெற்றுக்கொடுப்போம். தற்போது பாதாளக்கோஷ்டி, போதைத்தூள் தீத்தொழில் நாட்டை ஆக்கிரமித்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் நாட்டின் அரசியல்வாதிகளாவர். ஒரு தடவை கொழும்பில் உறுப்பினர் ஒருவரின் வாகனத்தில் இருந்து 8 கிலோ போதைத்தூள் அகப்பட்டது. கேகாலையில் இருந்த முதலமைச்சரின் ஜீப் மூலமாகத்தான் அநுராதபுரத்திற்கு கஞ்சா இழுத்தார்கள். பொலீஸில் மாட்டிக் கொண்டார்கள். அவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. குற்றச்செயல்புரிபவர்கள். எமது நாட்டின் ஒரு பிள்ளைகூட போதைப்பொருள் தொல்லைக்கு இரையாகக்கூடாது. நாங்கள் அதற்கு இடமளிக்கமாட்டோம். எமது ஆட்சியன்கீழ் நாங்கள் போதைத்தூள், குற்றச்செயல்கள் அற்ற ஒரு நாட்டை உருவாக்குவோம். நாங்கள் எவருக்கும் கடப்பாடு கொண்டவர்களுமல்ல: பயந்தவர்களும் அல்ல. பொலீஸாருக்கு நாங்கள் பாதாள உலகத்தையும் போதைத்தூளையும் ஒழித்துக்கட்ட அவசியமான அதிகாரத்தைக் கொடுப்போம். நாங்கள் ஒன்றுசேர்ந்து இந்த நாட்டை அழிவிலிருந்து விடுவித்துக்கொள்வோம்.

எல்லாவற்றிலும் புதுதன்மை அடைகின்ற, மாறிவருகின்ற நாட்டை, அனைத்துத் துறைகளிலும் புதியவை உருவாக்கப்படுகின்ற நாட்டை, எல்லாப் பக்கத்திலும் உலகத்தாருடன் முன்நோக்கி நகர்கின்ற தேசத்தை நாங்கள் கட்டியெழுப்புவோம். அதற்காக செப்டெம்பர் 21 ஆந் திகதி திசைகாட்டியை வெற்றிபெறச் செய்விப்போம். அதற்காக உச்சமட்டத்தில் இடையீடுசெய்ய ஒன்றுசேருமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

Anura Kumara Dissanayake Addressing The Ambalanthota Victory Rally
The Victory Rally Crowd At Ambalanthota
The Victory Rally Of Ambalanthota Crowd
Show More

“ரணில் விக்கிரமசிங்கவின் தோ்தல் இயக்கத்தில் அரச ஊழியர்களை ஈடுபடுத்துதல் முனைப்பாக தெரிகிறது.” -தேசிய மக்கள் சக்தியின் தோ்தல் கண்காணிப்பு நிலையத்தின் பிரதானி இளைப்பாறிய பிரதிப் பொலிஸ் மா அதிபர். டீ. கஜசிங்க-

(-தேசிய மக்கள் சக்தியின் தோ்தல் கண்காணிப்பு நிலையத்தின் ஊடக சந்திப்பு – 2024-09-11-) ஜனாதிபதி தோ்தல் பிரகடனம் செய்யப்பட்டுள்ள தருணத்தில் செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் 1981 இல் 15 ஆம் இலக்கமுடைய ஜனாதிபதியொருவரை தெரிவு செய்வதற்கான சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற வேட்பாளரும் மேலும் பலரும் இந்த சட்டத்தை தொடர்ச்சியாக மீறுதல் பற்றி மொத்தமாக 358 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பான 178 முறைப்பாடுகளும், சட்டமுறையான தோ்தல் இயக்கங்களுக்கு தடை […]

(-தேசிய மக்கள் சக்தியின் தோ்தல் கண்காணிப்பு நிலையத்தின் ஊடக சந்திப்பு – 2024-09-11-)

D Gajasinghe At EMC Press Conference

ஜனாதிபதி தோ்தல் பிரகடனம் செய்யப்பட்டுள்ள தருணத்தில் செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் 1981 இல் 15 ஆம் இலக்கமுடைய ஜனாதிபதியொருவரை தெரிவு செய்வதற்கான சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற வேட்பாளரும் மேலும் பலரும் இந்த சட்டத்தை தொடர்ச்சியாக மீறுதல் பற்றி மொத்தமாக 358 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பான 178 முறைப்பாடுகளும், சட்டமுறையான தோ்தல் இயக்கங்களுக்கு தடை ஏற்படுத்துதல் தொடர்பான 06 முறைப்பாடுகளும், வன்முறை செயல்கள் சம்பந்தமாக 26 முறைப்பாடுகளும், மக்கள் அபிப்பிராயம் மீது முறைதகாதவகையில் அழுத்தம் கொடுத்தல் பற்றிய 104 முறைப்பாடுகளும், அரச வளங்களின் துஷ்பிரயோகம் சம்பந்தமாக 62 முறைப்பாடுகளும், அரச உத்தியோகத்தர்களை தோ்தல் நடவடிக்கைகளில் முறை தகாதவகையில் ஈடுபடுத்துதல் சம்பந்தமாக 33 முறைப்பாடுகளும் என்ற வகையில் இவை கிடைத்துள்ளன.

இந்த அனைத்து முறைப்பாடுகள் சம்பந்தமாகவும் தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கும் பொலிசுக்கும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பில் சாதகமான பிரதிபலிப்புக்கள் கிடைத்து சட்டவிரோத செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தோ்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது. அரச ஆதனங்கள் எனும் பதத்தில் தோ்தல்கள் சட்டத்திற்கிணங்க உத்தியோகத்தர்களும் உள்ளடங்குவர். ரணில் விக்கிரமசிங்கவின் தோ்தல் இயக்கத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்காக அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவது முனைப்பான ஒரு விடயமாக அமைந்துள்ளது. ரணவிரு சேவா அதிகார சபை மூலமாக இராணுவ வீரர்களை அழைப்பித்து அவர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்த தயாராகி வருவது உறுதியாகி இருக்கிறது. நாளை (12 ஆம் திகதி) ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சார அலுவல்களை மேம்படுத்துவதற்கான மாநாடொன்றினை நடாத்த ஏற்பாடு செய்துள்ளார். அரசாங்க வாகனங்களும் உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இதனை ஏற்பாடு செய்தவர் ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவராவார். அதைப்போலவே அரசாங்கத்திற்கு சொந்தமான வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் எல்.ஆர்.டி.சி. பாதுகாப்பு கம்பெனியின் ஊழியர்களையும் கடமைக்கு சமூகமளித்த பின்னர் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறும் போக்குவரத்து வசதிகளை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Akalanka Ukwaththa At EMC Press Conference

“போலி ஆவணம் தயாரித்தவர்கள் மாத்திரமல்ல பிரச்சாரம் செய்த சமூக ஊடகங்களும் பொறுப்புக்கூறவேண்டும்.”
-தேசிய மக்கள் சக்தி தோ்தல் கண்காணிப்பு அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி அகலங்க உக்வத்த-

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு சுயேட்சை வேட்பாளராக தோ்தலில் போட்டியிட முன்வந்துள்ளபோதிலும் சுயாதீனத்தன்மையை வெளிப்படுத்தாமல் அரச வளங்கள், ஆதனங்கள், அரச உத்தியோகத்தர்கள், இராணுவ உத்தியோகத்தர்கள், விமான நிலைய உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். எனினும் அந்த செயல்களை நிறுத்துவதற்கான ஆக்கமுறையான பிரதிபலிப்பு தென்படவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியை போன்றே சுயேட்சை வேட்பாளர் ஆகிய இருவரும் ஊடகங்களை பாவித்து தொடர்ச்சியாக பொய்யான விடயங்களையும் சேறு பூசல்களையும் மேற்கொண்டு வருகிறார்கள். அவ்வாறான செயல்கள் தோ்தல் தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஆங்காங்கே பதிவாகியபோதிலும் இன்றளவில் அன்றாடம் பல சம்பவங்கள் பற்றி பதிவாகி வருகின்றது. பிரச்சார நடவடிக்கைகளுக்காக எஞ்சியுள்ள ஒரு வாரகாலத்திற்குள் இந்த நிலைமை தொடர்ந்தும் வளர்ச்சியடைவதற்காக செயலாற்றிக் கொண்டிருப்பதும் எமக்கு அறியக்கூடியதாக உள்ளது.

அந்த விடயங்கள் சம்பந்தமாக முறைப்பாடு செய்வதே எங்களுடைய பொறுப்பாகும். புலனாய்வு செய்வது தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கும் பொலிசுக்கும் பொறுப்பான விடயமாகும். இது சம்பந்தமாக துரிதமாக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் 22 ஆம் திகதிக்கு பின்னரேனும் பெற்றுக்கொள்ள வேண்டிவரும். போலியாவணம் பிரச்சாரம் செய்தல் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. இவை தண்டனைச் சட்டகோவையின் 154 தொடக்கம் 159 வரையான பிரிவுகளில் உள்ளடக்கப்பட்ட கடுமையான விடயங்களாகும். தோ்தல் காலத்தின் பின்னர் இது சம்பந்தமாக சிக்கலொன்று ஏற்படமாட்டாதென சமூக ஊடகங்களை பாவித்து இந்த சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் நினைத்துக்கொண்டிருப்பார்களாயின் அது அப்படியல்ல. போலியாவணம் புனைந்தவர்கள் மாத்திரமல்ல அவற்றை பிரச்சாரம் செய்த சமூக ஊடகங்களும் பொறுப்புக்கூற வேண்டும். தண்டனைச் சட்டக்கோவை அமுலில் இருக்கிறது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காலை நேர நிகழ்ச்சிகள் பற்றியும் விசேட கவனம் செலுத்தினால் நீண்டகாலமாக சமூகத்தில் துர்நாற்றம் வீசுகின்ற ஒரு நிகழ்ச்சியாக இனம்காணப்பட்டிருந்தது. இப்பொழுது அது மிகவும் அருவருக்கத்தக்க வித்தத்தில் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவரால் தேசிய மக்கள் சக்தியின் தலைவரையும் அரசியல் இயக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு பொய்யான விடயங்களையும் தோ்தலை அடிப்படையாகக் கொண்டு மக்களின் மனங்களை திரிபுபடுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக தனித்துவமான முறைப்பாடொன்று நாளையதினம் மேற்கொள்ளப்படும். அவரால் தலைவர் வகிபாகத்தை தோ்தல் காலத்தில் முறைப்படி ஈடேற்ற முடியாவிட்டால் தகுதிவாய்ந்த அதிகாரியின் கீழ் கொண்டுவருமாறு கோரிக்கை விடுக்க நேரிடும். இந்த துர்நாற்றத்தை தாங்கிக் கொள்வது சமூகத்திற்கு மிகவும் சிரமமானதாகும். அதனை நீக்கவேண்டும். அரச நிறுவனமொன்றான ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இந்த செயற்பாடு சம்பந்தமாக ஏற்கெனவே எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதென்பதை அறியக்கூடியதாக இருக்கிறது. தோ்தல் சட்டம் மாத்திரமன்றி குற்றவியல் சட்டத்தையும் மீறி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் புரிகின்ற இந்த செயல்கள் சுதந்திரமானதும் நியாயமானதுமான தோ்தல் நடைமுறைக்கு தடையாக அமைந்துள்ளது.

Ravi Senevirathne At EMC Press Conference

“பொதுமக்கள் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தோ்தலையே எதிர்பார்க்கிறார்கள்”
-தேசிய மக்கள் சக்தியின் இளைப்பாறிய பொலிஸ் கூட்டமைவின் பிரதானி இளைப்பாறிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனெவிரத்ன-

கடந்த 30 ஆம் திகதிவரை எமக்கு பதிவாகிய தோ்தல் வன்செயல்கள் மற்றும் சட்டமீறல்கள் சம்பந்தமாக பொலிஸ் தலைமையகத்தின் தோ்தல் தொழிற்பாடுகள் பணியகத்தில் முறைப்பாடு செய்திருக்கிறோம். அந்த முறைப்பாடுகள் பற்றி ஆக்கமுறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம். மக்கள் எதிர்பார்ப்பது சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தோ்தலையே. அரசியல் இயக்கமென்ற வகையில் நாங்களும் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தோ்தல் இயக்கத்திற்காக முழுமையாக எங்களை அர்ப்பணித்துள்ளோம். எனினும் ஒரு சில சந்தர்ப்பங்களில் தேசிய மக்கள் சக்தியை இலக்காகக் கொண்டு வன்முறை செயல்கள் புரியப்படுவது பதிவாகியுள்ளது. கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஒரு வீட்டுக்குச் சென்று இவ்வாறு அச்சுறுத்தியிருக்கிறார்கள். ராஜகிரியவிலும் மருதானையிலும் இரண்டு அச்சகங்களில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரை இலக்காகக் கொண்டு சேறுபூசும் போஸ்டர்கள் அச்சிடப்பட்டு வருவதாக இன்று காலை பதிவாகியது. அது சம்பந்தமாக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் தயாராகிவருகிறோம்.

அதைப்போலவே கழிந்த 07 நாட்களுக்குள் இடம் பெற்றுள்ள சட்டவிரோதமான செயல்கள் பற்றிய விபரமொன்றை சமர்ப்பிக்கிறேன். செப்டெம்பர் 03 ஆம் திகதி மகாஓயா பிரதேச செயலாளர் பிரிவில் பொல்லபெத்த பிரிவில் அமைந்திருந்த தோ்தல் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே நோனாகம உஹபிட்டகொடவில் அமைந்திருந்த தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தின் முன்னால் காணப்பட்ட பதாகையை உடைத்து எடுத்துச் சென்றிருக்கிறார்கள். செப்டெம்பர் 07 ஆம் திகதி ஹாரிஸ்பத்துவ, உகுரெஸ்ஸபிட்டிய அலுவலகம் மீதும் கம்பொல, தெல்பிட்டிய அலுவலகத்திற்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே பிபில பொலிஸ் பிரிவில் “அதிட்டன” இளைப்பாறிய முப்படை அங்கத்தவரொருவரின் வீட்டுக்கு கல்லெறிந்து சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. அதைப்போலவே செப்டெம்பர் 08 ஆம் திகதி நாத்தண்டிய, இரணவில பிரதேசத்தின் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் 10 ஆம் திகதி கம்பொல, அட்டபாகே அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அன்றையதினமே திஸ்ஸமஹாராம, ரன்மிணிதென்ன பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த முறைப்பாடுகளை நோக்கும்போது தோ்தல் சார்ந்த வன்முறை சம்பவங்களின் தெளிவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை தெளிவாகிறது. தேசிய மக்கள் சக்தியை சோ்ந்தவர்களின் முழுமையான ஒத்துழைப்பு தோ்தல்கள் செயலகத்திற்கும் பொலிசுக்கும் வழங்கப்படுகிறது. சுதந்திரமான, நீதியான மற்றும் அமைதியான தோ்தலை நடத்துவதே எம்மனைவரின் எதிர்பார்ப்பாகும். தோ்தல்கள் ஆணைக்குழு அந்த எதிர்பார்ப்பினை ஈடேற்றுமென எதிர்பார்க்கிறோம்.

EMC Press Conference
Show More

“மரணம் எங்கள் வீட்டுக் கதவுகளை தட்டிக்கொண்டிருந்தது” -தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர திசாநாயக்க-

(-‘நாடு அநுரவோடு’ தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – தம்புத்தேகம – 2024-09-09-) இதற்கு முன்னர் இந்த தோ்தல் மல்யுத்தம் அவர்களின் ஒரு சில குடும்பங்கள் மத்தியிலேயே நிலவியது. இன்று 2024 இல் அது ஒரு சில வளவுகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான போராட்டமாக மாறியுள்ளது. தேசிய மட்டத்திலிருந்து ஊர்கள் வரை இந்த போராட்டம் வியாபித்துள்ளது. இதுவரை காலமும் ஒரு சில குடும்பங்களே இந்த நாட்டை ஆட்சி செய்தன. ஆனாலும் நாட்டுக்கு எதையாவது செய்திருந்தால், மக்களை துன்ப […]

(-‘நாடு அநுரவோடு’ தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – தம்புத்தேகம – 2024-09-09-)

Anura Kumara Dissanayake Addressing The Victory Rally Of Thambuththegama

இதற்கு முன்னர் இந்த தோ்தல் மல்யுத்தம் அவர்களின் ஒரு சில குடும்பங்கள் மத்தியிலேயே நிலவியது. இன்று 2024 இல் அது ஒரு சில வளவுகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான போராட்டமாக மாறியுள்ளது. தேசிய மட்டத்திலிருந்து ஊர்கள் வரை இந்த போராட்டம் வியாபித்துள்ளது. இதுவரை காலமும் ஒரு சில குடும்பங்களே இந்த நாட்டை ஆட்சி செய்தன. ஆனாலும் நாட்டுக்கு எதையாவது செய்திருந்தால், மக்களை துன்ப துயரங்களிலிருந்து மீட்டெடுத்திருந்தால் பரவாயில்லை. பல தசாப்தங்களாக என்னை உள்ளிட்ட நீங்களும் இந்த அனர்த்தத்தை பார்த்துக் கொண்டிருந்தீர்கள். நாங்கள் சிறிய மனிதர்கள் என்றாலும் திடசங்கற்பம் கொண்டவர்கள். நோக்கத்தை கைவிடாத மக்கள்.

மரணம் எங்கள் வீட்டுக் கதவுகளை தட்டிக்கொண்டிருந்தது.

நான் இந்த அரசியல் பயணத்தை 1988 இல் தம்புத்தேகம மத்திய மாகாண பாடசாலையில் கல்வி பயின்ற காலத்திலிருந்தே தொடங்கினேன். அந்த பயணம் தற்போது 36 வருடங்களாக தொடர்கிறது. நாங்கள் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்நோக்கியுள்ளோம். எங்கள் நண்பர்கள் எங்கள் கண்ணெதிரில் இறந்ததை கண்டிருக்கிறோம். மரணம் எங்கள் வீட்டுக் கதவுகளை தட்டிக்கொண்டிருந்தது. எனினும் இந்த நாட்டையும் மக்களையும் இந்த அனர்த்தத்திலிருந்து விடுவித்துக்கொள்வதற்கான திடசங்கற்பத்தை நாங்கள் கைவிடவில்லை. 1994 இல் இருந்து நாங்கள் மீண்டும் ஓரளவு தலைத்தூக்கத் தொடங்கினோம். வெற்றிகளை பெற்றோம். பின்னடைவுகளை சந்தித்தோம். ஒரு சிலர் எம்மை விட்டு நீங்கிச் சென்றார்கள். குறைகூறல்கள் வந்தன. பொய்யான தகவல்கள் வரத்தொடங்கின. சதி வேலைகள் இயங்கத் தொடங்கின. எனினும் இந்த முயற்சியில் எங்கேயாவது என்றாவது ஒரு நாள் வெற்றிபெறுவோம் என்கின்ற கடுமையான திடசங்கற்பத்தை நாங்கள் கைவிடவில்லை. இந்த 36 வருடங்களுக்குள் நான் 24 வருடங்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கிறேன்.

The Victory Rally Of Thambuththegama Crowd

நாங்கள் எவருமே தனிப்பட்ட முறையில் எங்களுக்கு ஏதாவது ஈட்டிக்கொள்ளும் நோக்கத்துடன் அரசியல் புரிய வந்த மனிதர்கள் அல்ல.

நாங்கள் இந்த அரசியலிலியிருந்து ஒரு சதத்தைக்கூட ஈட்டிக்கொள்ளாதவர்கள். பொதுப்பணத்தில் ஒரு சதம் கூட விரயம் செய்யாதவர்கள். நாங்கள் எவருமே தனிப்பட்ட முறையில் எங்களுக்கு ஏதாவது ஈட்டிக்கொள்ளும் நோக்கத்துடன் அரசியல் புரிய வந்த மனிதர்கள் அல்ல. நாங்களும் பல்கலைக்கழகங்களுக்கு சென்று பட்டம் பெறுகிறோம். தொழில் ஒன்றை புரிந்து தனிப்பட்ட முறையில் ஒரு வாழ்க்கைத்தரத்திற்கு அமைவாக வாழ்க்கையை நடாத்திச் செல்லக்கூடிய மனிதர்கள். இந்த மேடையில் இருக்கின்ற தோழர் வசந்த சமரசிங்கவும் அப்படித்தான். எங்களுக்கு எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள கல்வி மூலமாகவும் பாதைகள் நிலவின. அரசியல் பக்கத்திலும் பாதைகள் இருந்தன. எனினும் இந்த நாட்டையும் மக்களையும் இந்த அனர்த்தத்திலிருந்து மீட்டெடுக்கும் நற்பணியை ஒரு புறம் ஒதுக்கிவைக்க எங்களுக்கு தார்மீக உரிமை கிடையாது. இந்த தொலைதூர கிராமங்களில் எவ்வளவோ பெருந்தொகையான மக்கள் வறுமையால் வாடுகிறார்கள்? எமது உறவினர்கள், நண்பர்கள் இந்த வறுமையில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொண்ட தருணங்களை நாங்கள் கண்டிருக்கிறோம். பாரிய எதிர்பார்ப்புடன் வளர்த்தெடுக்கின்ற தமது பிள்ளைக்கு முறையான கல்வியை வழங்க முடியாமல் தமது கண்ணெதிரில் நாசமாகின்ற விதத்தை கண்டு பெருமூச்சு விடவேண்டிய நிலை பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஊர்களின் குடும்பங்களில் தமது பிள்ளைகளை தவிக்கவிட்டு, கணவன்மார்களை கைவிட்டு எமது தாய்மார்கள் சகோதரிகள் மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப்பெண்களாக தொழில்களுக்கு போய் இருக்கிறார்கள் அல்லவா? அவற்றில் எத்தனை குடும்பங்கள் நாசமாகியிருக்கின்றன? மத்திய கிழக்கிற்கு சென்ற எமது தாய்மார்களும் அக்காமார்களும் பலவிதமான துன்பங்களை எதிர்நோக்கி வருகிறார்கள். நாங்கள் அவற்றையெல்லாம் கண்டிருக்கிறோம்.

இந்த அத்தனை பேருடைய வண்டவாளங்களையும் நான் அறிவேன்

எங்களுடைய ஊர் மக்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது? பிறக்கிறார்கள் ஏதாவது செய்கிறார்கள் செத்து மடிகிறார்கள். எங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையா தேவை? கிடையாது. எங்கள் மக்களுக்கு தமது வாழ்நாளில் மகிழ்ச்சியாக நல்ல உணவு வேளையொன்று, ஆரோக்கியமான வாழ்க்கை, பொழுதுபோக்கு, மகிழ்ச்சி தேவையில்லையா? அந்த வாழ்க்கை அந்த வர்க்கத்தை சோ்ந்தவர்களுக்கு மாத்திரம் தான் உரித்தானதா? எமது ஊரில் உள்ளவர்களுக்கு அந்த வாழ்க்கை உரித்தற்றதா? நீங்கள் இயலுமானவரை இந்த பெருநிலத்துடன் மல்லுகட்டுகிறீர்கள். விளைச்சலை விற்பனை செய்ய எவ்வளவோ கஷ்டப்படுகிறீர்கள்? எனினும் அவர்கள் மேலே இருந்துகொண்டு பொது திறைசேரியின் பணத்தை எப்படி திருடுவது? என திட்டம் தீட்டுகிறார்கள். நீங்கள் ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ள எவ்வளவோ பிரச்சினைகளை எதிர்நோக்குகிறீர்கள். அவர்கள் ஒரு டீல் மூலமாக கொழும்பில் மிகவும் சொகுசான அப்பாற்மண்ட் ஒன்றை கொள்வனவு செய்கிறார்கள். ஒரு கொடுக்கல் வாங்கலில் துபாயில் இங்கிலாந்தில் அவுஸ்ரேலியாவில் வீடுகளை வாங்குகிறார்கள். அமெரிக்காவில் வீடுகளை வாங்குகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு அதிகாரத்தை கொடுக்கிறீர்கள். உங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறார்கள். அவர்கள் நாட்டின் செல்வத்தை வாரிச்சுருட்டிக் கொள்கிறார்கள். அது தான் இந்த முறைமை. நாங்கள் சிறுபராயத்தில் இதனை அவ்வளவு ஆழமாக காணவில்லை. ஆனால் இந்த அரசியலை மாற்ற வேண்டுமென எமக்கொரு ஆசை இருந்தது. அத்தகைய அரசியலில் தொடர்ச்சியாக ஈடுபடுகையில் இவர்கள் எவ்வளவு வெட்கமில்லாத மனிதர்கள் என்பதை நாங்கள் கண்டோம். நான் 24 வருடங்களாக பாராளுமன்றத்தில் இருக்கிறேன். இந்த அத்தனை பேருடைய வண்டவாளங்களையும் நான் அறிவேன். அவர்கள் எப்படி தமக்கும் தமது குடும்பத்திற்கும் வழிசமைத்துக்கொள்வது எனப்பார்ப்பார்கள். மக்களுக்கு குழிதோண்டி அவர்களின் எதிர்காலத்திற்கான பாதையை அமைத்துக் கொள்கிறார்கள். அன்று தபால் நயின்டீனில் பயணித்த அவர்கள் இன்று பாரிய மாளிகைகளை அமைத்துக் கொள்கிறார்கள். ஏழு எட்டு வாகனங்களை கொள்வனவு செய்கிறார்கள். நாங்கள் கண்கூடாகவே பார்த்திருக்கிறோம். சாரதியாக தொழில் புரிந்த ஒரு சிலர் அரசியலுக்கு வந்து கலாவெவில், கொழும்பு, நுவரெலியாவில் பாரியளவிலான காணிகளை எவ்வாறு வாங்கினார்கள் என்று எங்களுக்கு தெரியும். தேயிலை கொழுந்தை போக்குவரத்துச் செய்தவர்கள் அரசியலுக்கு வந்து எப்படி தேயிலைத்தோட்ட சொந்தக்காரர்களாக மாறினார்கள் என எங்களுக்கு தெரியும்.

Anura Kumara Dissanayake On Stage At The Victory Rally Of Thambuththegama

இந்த நாட்டை செல்வந்த நாடாக மாற்ற எங்களுக்கு உரிமை கிடையாதா?

ரணில் விக்கிரமசிங்க 2015 ஜனவரி 08 ஆம் திகதி ஊழல் மோசடியை இல்லாதொழிப்பதாக கூறியே அதிகாரத்திற்கு வந்தார். பெப்ருவரி மாதம் 28 ஆம் திகதி மத்திய வங்கியை கொள்ளையடித்தார்கள். அதிகாரத்தை எடுத்துக்கொண்டது கொள்ளையடிப்பதற்காகத்தான். விரயம் செய்வதற்காகத்தான் அதன் பின்னர் என்ன நடந்தது? நாடு சீரழிந்தது. பிள்ளை கல்வியை இழந்தது. வைத்தியசாலைகளில் மருந்து இல்லாமல் போயிற்று. திரையரங்குகள் மூடப்பட்டன. பொதுமக்கள் பொழுதுபோக்கினை இழந்தார்கள். இவை நாங்கள் கண்கூடாக கண்டவை. எங்களுடன் நண்பர்களின் வாழ்க்கை எவ்வாறு முற்றுப்பெற்றது என்பதனை எங்கள் கண்ணெதிரில் கண்டோம். எங்களுக்கு விளங்குமாயின், எங்களால் உணரமுடியுமாயின், நாங்கள் மனிதாபிமானம் கொண்டவர்களாயின், எங்களுக்கு மனசாட்சி இருக்குமாயின் இதனை மாற்றியமைப்பதற்காக உயிரை பணயம் வைத்து போராட, அரசியல் இயக்கமொன்றின் பங்காளிகளாக எங்களுக்கு உரிமை கிடையாதா? நான் அவ்வாறு போராடுகின்ற அரசியல் இயக்கமொன்றின் பங்காளி. இந்த நாட்டை செல்வந்த நாடாக மாற்ற எங்களுக்கு உரிமை கிடையாதா? அண்டை நாடான இந்தியா பழைய புகையிரத எஞ்சின்களை கழற்றி மின்சார புகையிரத கருத்திட்டத்தை அமுலாக்கி வருகிறது. இந்த ஆட்சியாளர்கள் போய் அந்த பழைய எஞ்சின்களை பரிசுப் பொருட்களாக சேகரித்துக் கொண்டு வருகிறார்கள்.

இந்தியா கைத்தொழில்களை உருவாக்கி வருகிறது. நாங்கள் தொழிற்சாலைகளை மூடிவருகிறோம்.

உலகம் முன்னேறி வருகிறது. நாங்கள் பிச்சை ஏந்திக் கொண்டிருக்கிறோம். குறைந்த பட்சம் 60 -70 தசாப்தத்தில் சிறிய கைத்தொழில் முறைமையொன்று கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருந்தது. அவை அனைத்தையுமே இந்த ஆட்சியாளர்கள் நாசமாக்கி விட்டார்கள். எல்லாவற்றையும் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரத் தொடங்கினார்கள். இந்தியா கைத்தொழில்களை உருவாக்கி வருகிறது. நாங்கள் தொழிற்சாலைகளை மூடிவருகிறோம். ஒருபோதுமே எங்களுடைய உற்பத்திகளை அதிகரிக்க வேண்டிய தேவை இந்த ஆட்சியாளர்களுக்கு இருக்கவில்லை. மூடிவிடுவது மாத்திரமல்ல இருக்கின்றவற்றையும் விற்றுத்தீர்க்கிறார்கள். ஒரே முயற்சி விற்றுத்தீர்ப்பதுதான். அமைக்கும்போதும் சூறையாடுகிறார்கள். விற்கும்போதும் பைக்குள் போட்டுக்கொள்கிறார்கள். வழக்குத் தீர்ப்பின் மறைவிலிருந்து கொண்டு பொஸ்பேட் படிவின் மண்ணை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இந்தியா பசளை தயாரிக்கின்றது. நாங்கள் அதனை இறக்குமதி செய்கிறோம்.

Crowd At The Victory Rally Of Thambuththegama

நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை கடுகளவேனும் சிதைவடைய நாங்கள் இடமளிக்கமாட்டோம்

மாவிலாறு அணையை மூடியவேளையில் வயல்கள் பாழடைந்தன. இழப்பீடு செலுத்த அரசாங்கம் தீர்மானித்தது. அதிகமாக இழப்பீடு பெற்றவர் எஸ்.எம். சந்திரசேன. என்னிடம் இருக்கிறது கொழும்பு திமிபிரிகஸ்யாய கொமர்ஷல் வங்கி கிளையிலிருந்து அநுராதபுரம் கிளைக்கு பணத்தை வைப்பு செய்தார். எஸ்.எம். சந்திரசேனவினதும் அவருடைய மனைவியினதும் இணைந்த கணக்கிற்கே. காசோலைகளின் பிரதிகள் என்னிடம் இருக்கின்றன. எங்களுடைய ஊர் மக்களுடன் எங்களுக்கு உண்மையான ஈடுபாடு இருக்குமாயின், உண்மையான நேசம் இருக்குமாயின் இந்த நிலைமையை மாற்றியமைக்க நாங்கள் மல்லுக்கட்ட வேண்டாமா? தற்போது எங்களுக்கு தீர்மானகரமான வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது. இந்த நாட்டுக்கு கேடு விளைவித்த, நாட்டை நாசமாக்கிய இந்த ஆட்சிக்குழுக்களை நிச்சயமாக விரட்டியடித்து மக்கள் ஆட்சியை மலரச்செய்விக்க வேண்டும். நாங்கள் நிச்சயமாக அப்படிப்பட்ட அரசாங்கமொன்றை நிறுவுவோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் எல்லா பக்கங்களிலிருந்தும் எதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்? நீங்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். எம்மீது நேசம் வைத்திருக்கிறீர்கள். எம்முடன் ஈடுபாடு கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்கு ஒரு உத்தரவாதத்தை தருகிறேன். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை கடுகளவேனும் சிதைவடைய நாங்கள் இடமளிக்கமாட்டோம்.

Wasantha Samarasinghe At The Victory Rally Of Thambuththegama
A Book Handover By The Victory Rally Of Thambuththegama
Show More