Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

“சமூகத்திற்கு மீண்டும் அன்பையும், நேசத்தையும், ஒத்துணர்வையும் கொண்டுவர வேண்டும்” -தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர திசாநாயக்க-

(-தேசிய மக்கள் சக்தி கலைஞர்களின் தேசிய மாநாடு – 2024.09.08 – காசல் வீதி தெப்ரொபேன் மண்டபம்-) எங்களுடைய சமூகம் ஒருவருக்கொருவர் பாதுகாப்பற்ற நாடாக மாறியிருக்கிறது. பெண்களுக்கு சிறுமிகளுக்கு பாதுகாப்பற்று இருக்கிறது. பிறரின் வேதனையின்போது அதிர்ச்சியற்ற சமூகமாக மாறியிருக்கிறது. சிரிப்பு இல்லாத வறண்ட ஒரு சமூகம் எம்மெதிரில் இருக்கிறது. ஏனைய எல்லாத்துறைகளும் போன்றே இந்த சமூகத்தையும் குணப்படுத்துகின்ற பொறுப்பு அரசாங்கம் என்ற வகையில் எமக்கும் அதன் முனைப்பான ஒரு பங்கு உங்களுக்கும் கையளிக்கப்பட்டுள்ளதென நாங்கள் நம்புகிறோம். சமூகத்திற்கு […]

(-தேசிய மக்கள் சக்தி கலைஞர்களின் தேசிய மாநாடு – 2024.09.08 – காசல் வீதி தெப்ரொபேன் மண்டபம்-)

Anura Kumara Dissanayake With Rathna Sri And Saumya Sandaruwan Liyanage

எங்களுடைய சமூகம் ஒருவருக்கொருவர் பாதுகாப்பற்ற நாடாக மாறியிருக்கிறது. பெண்களுக்கு சிறுமிகளுக்கு பாதுகாப்பற்று இருக்கிறது. பிறரின் வேதனையின்போது அதிர்ச்சியற்ற சமூகமாக மாறியிருக்கிறது. சிரிப்பு இல்லாத வறண்ட ஒரு சமூகம் எம்மெதிரில் இருக்கிறது. ஏனைய எல்லாத்துறைகளும் போன்றே இந்த சமூகத்தையும் குணப்படுத்துகின்ற பொறுப்பு அரசாங்கம் என்ற வகையில் எமக்கும் அதன் முனைப்பான ஒரு பங்கு உங்களுக்கும் கையளிக்கப்பட்டுள்ளதென நாங்கள் நம்புகிறோம். சமூகத்திற்கு மீண்டும் அன்பையும், நேசத்தையும், ஒத்துணர்வையும் கொண்டுவர வேண்டும். அதற்காக பல துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டியது அவசியமாகும். அதன் ஒரு பகுதி கல்வித்துறையிடம் கையளிக்கப்படுவதோடு நீங்கள் ஈடுபட்டுள்ள கலைத்துறைக்கும் பாரிய செயற்பொறுப்பு இருக்கின்றது. அதனால் உங்களுடைய சுதந்திரமான சிந்தனைகளை சமூகத்திற்கு விடுவிப்பதற்கான வசதிகளை வழங்குவதை நாங்கள் எங்களுடைய பொறுப்பாக கருதுகிறோம்.

வறண்டு போன மனித சமூகமொன்றை எம்மெதிரில் இருக்கின்றது.

நீங்கள் எவ்வளவுதான் உயர் படைப்புக்களை செய்தாலும் அதனை சமூகத்திடம் கொண்டு செல்ல முடியுமா எனும் கேள்வி எழுகிறது. குடும்பத்தவர்களுடன் இறுதியாக திரைப்படமொன்றை பார்க்க, மேடை நாடகமொன்றை கண்டுகளிக்க அரங்கிற்கு எப்போது சென்றீர்கள் என ஊரில் போய் கேட்டு பாருங்கள். பெரும்பான்மையினருக்கு அப்படிப்பட்ட அனுபவமொன்று கிடையாது. புதிதாக வெளியான நாவலொன்றை வாசித்தீர்களா, புதிதாக வெளியாகிய கவிதை நூல் ஒன்றின் கவிதையை ரசித்தீர்களா எனக்கேட்டுப் பாருங்கள். அவையொன்றுமே கிடையாது. வறண்டு போன மனித சமூகமொன்றை எம்மெதிரில் இருக்கின்றது. நாடக அரங்குகள், சினிமா கொட்டகைகள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்ற ஒரு நாடு உருவாகி வருகின்றது. எனக்கு ஞாபகமிருக்கிறது நான் சிறு பராயத்தில் முதல் முதலில் பார்த்த திரைப்படம் தான் “சிங் சிங் நோனா.” அதனை எங்களுடைய பிரதேசத்தில் உள்ள தம்புத்தேகம ஈகள் தியேட்டரில் தான் பார்த்தேன். இப்போது அந்த சினிமா தியேட்டர் ஒரு நெற் களஞ்சியமாகும். மாத்தறை புரோட்வே சினிமா தியேட்டர் இப்போது ஒரு சுப்பர் மார்க்கட். ஒரு சில சினிமா மண்டபங்களில் ரியூஷன் வகுப்புகள் நடைபெறுகின்றன. இவை எதை எடுத்துக்காட்டுகின்றன? எமது நாடு எந்த திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை அல்லவா?

Crowd At The Artists Summit

நாங்கள் சினிமா கொட்டகைகளில் வரிசைகளை காண விரும்புகிறோம்.

மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்ட சினிமா மண்டபங்களே எஞ்சியுள்ளன. ஏனையவை மூடப்பட்டு விட்டன. இப்பொழுது கேஸ் வரிசைகள் கிடையாது, எண்ணெய் வரிசைகள் கிடையாது போன்ற கதைகளை நாங்கள் கேட்கிறோம். ஆனால் நாங்கள் சினிமா கொட்டகைகளில் வரிசைகளை காண விரும்புகிறோம். நாடக அரங்கொன்றின் முன்னால் வரிசையைக் காண விரும்புகிறோம். எனவே நாங்கள் எமது ஆட்சியின் கீழ் கலைக்கு உரிய இடம் கொடுத்து உயர்த்தி வைக்க நடவடிக்கை எடுப்போம். நாங்கள் தொடக்கத்திலேயே ஆச்சரியத்தை படைத்துவிடமாட்டோம். மீண்டும் மக்களை சினிமா தியேட்டர்களை நோக்கி அழைப்பிக்கின்ற, நாடக அரங்குகளை நோக்கி அழைப்பிக்கின்ற, மீண்டும் இலக்கிய நூல்களை வாசிக்கின்ற இடத்திற்கு அழைப்பிக்கின்ற எமது நாட்டு பிரஜையின் இரசனையை முன்னேற்றுவதற்காக கட்டம் கட்டமான நடவடிக்கைகளை எமது ஆட்சியின் கீழ் நாங்கள் மேற்கொள்வோம்.

மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலில் எமது மக்கள் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.

எமது நாட்டின் பொருளாதாரம் இருக்கின்ற இடம் பற்றி எங்களுக்கு தெரியும். அதனால் இன்று எங்களுடைய நாட்டு மக்களில் ஒரு சிறு பகுதியினர் தான் சினிமா, இலக்கியம் போன்ற துறைகளில் இரசிக்க தூண்டப்பட்டிருக்கிறார்கள். அதற்கான இயலுமை மிகச் சிறிய குழுவினரிடமே இருக்கின்றது. மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலில் எமது மக்கள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற டெலி நாடகமொன்றை சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்புகின்ற ஏதாவதொரு கலைப்பிரிவை மாத்திரம் கண்டுகளிக்குமளவிற்கு தற்போது மக்களின் கலை இரசனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொலைக்காட்சியின் டெலி நாடகத்திற்கு, சமூக வலைத்தளங்களின் சிறிய வீடியோ கிளிப்பொன்றுக்கு அது சுருக்கப்பட்டுள்ளது. நாங்கள் அதற்கு அப்பால் உயிர்ப்பூட்டலை நோக்கி இந்த மனித சமூகத்தை அழைப்பிக்க வேண்டும். வெறுமனே புத்தகமொன்றை வாசிப்பதல்ல. தனிமையாக திரைப்படமொன்றை பார்ப்பதல்ல. அந்த அனுபவத்தை சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள, சமூகத்துடன் விரிவான உரையாடலில் ஈடுபட, சமூக ரீதியாக கட்டி வளர்க்கப்படுகின்ற, அனுபவங்களை ஒருவருக்கொருவர் இடையில் பகிர்ந்து கொள்கின்ற இலக்கிய ரீதியான மற்றும் கலாச்சார ரீதியான சமூகமொன்று இலங்கையில் உருவாக வேண்டுமென்ற நிலையான திடசங்கற்பத்துடன் நாங்கள் இருக்கிறோம்.

Anura Kumara Dissanayake Surrounded By Artists

கலாச்சார படைப்புகளை எமக்கு வெளியில் உள்ள உலகத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்வது என்பதை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

எங்களுக்கு தெரியும் இனிமேலும் சினிமா, இலக்கியம், இசை தீவுகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த யுகம் தற்போது முடிவடைந்து விட்டது என்பது எங்களுக்கு தெரியும். அந்த யுகம் இற்றைக்கு பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகளுக்கே சொந்தமானதாக இருந்தது. இன்று உலகத்தையும் தொழில்நுட்பத்தையும் பரிமாற்றிக் கொண்டு ஒவ்வொருவரும் அனுபவிப்பதை போன்றே சுகாதார முன்னேற்றத்தின் அனுபவங்களை உறிஞ்சியெடுத்து ஒருவரையொருவர் கட்டி வளர்ப்பதை போன்றே உலகில் இசையும், சினிமாவும் பரிமாற்றிக் கொள்ளப்படுகிறது. நாங்கள் ஒரு சிறிய தீவுக்கு வரையறுக்கப்பட்டிருப்பது எமது துர்ப்பாக்கியமாகும். அதனால் எமது நாட்டின் இசை, திரைப்படம் மற்றும் ஏனைய கலாச்சார படைப்புகளை எமக்கு வெளியில் உள்ள உலகத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்வது என்பதை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். நாங்கள் இது பற்றி ஏற்கெனவே கலந்துரையாடலுக்கு இலக்காகியிருக்கிறோம். எம்மை விட பல காத தூரம் பின்னால் இருந்த தென்கொரியா அவர்களுக்கே தனித்துவமான இசையொன்றை படைப்பதில் வெற்றிக்கண்டது. நீங்கள் யூடியூப்பிற்கு சென்றால் தென்கொரியாவின் பிரீஎஸ் இசைக்குழுவின் காணொளியை தற்போது 1800 மில்லியன் கண்டுகளித்துள்ளார்கள். தென்கொரியாவின் சனத்தொகை 50 மில்லியன் ஆகும். அவர்கள் இசையை தமது நாட்டுக்கு அப்பால் கொண்டு செல்வதில் வெற்றியடைந்துள்ளார்கள். அவர்களுக்கே தனித்துவமான இசையொன்றை அமைத்துக் கொள்வதில் வெற்றிபெற்றுள்ளார்கள். நீங்கள் உலகின் எந்தவொரு வானூர்தியில் பயணித்தாலும் அந்த ஊர்தியின் தொலைக்காட்சி திரையின் மீது கொரியன் திரைப்படங்களில் சோ்க்கையொன்றை காண முடியும். எனினும் இலங்கையை பயண முடிவிடமாக கொண்டுள்ள விமானத்தில் உச்சஅளவில் 04 திரைப்படங்களே இருக்கின்றன.

எங்களிடமும் திறமையான படைப்பாளிகள் இருக்கிறார்கள் என்பது எமக்கு தெரியும்.

பல தசாப்தங்களாக உலகில் இசையில், சினிமாவில், இலக்கியத்தில் பாரிய மாற்றங்களும் திறந்து விடல்களும் இடம்பெற்று வந்தபோதிலும் நாங்கள் அந்த திறந்து விடப்பட்ட உலகத்தை கையகப்படுத்திக் கொள்வதில் தோல்விகண்ட ஒரு நாடாவோம். அது தான் உண்மை. நாங்கள் சில நேரங்களில் வரலாற்றில் சிறைப்பட்டும் சில நேரங்களில் எமக்கே உரித்தான காரணிகளிலும் சிறைப்பட்ட தேசமாவோம். எத்தகைய தடைகளின் மத்தியிலும் இன்றைய ஈரான் எந்தளவிற்கு உலகத்தில் பிரவேசித்துள்ளது? எங்களிடமும் திறமையான படைப்பாளிகள் இருக்கிறார்கள் என்பது எமக்கு தெரியும். பல்வேறு சந்தர்ப்பங்களில் உலகின் பிரதான திரைப்பட விழாக்களில் பாரிய வெற்றிகளை பெற்ற திரைப்பட இயக்குனர்கள் எமக்கிருக்கிறார்கள். எனினும் எங்களால் உலக சினிமாவின் ஒரு பங்கினை கையகப்படுத்திக் கொள்ள இயலாமல் போயுள்ளது. கடந்த காலத்தில் உலகில் பல்வேறு புத்திஜீவிகள் உலகம் எத்திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என்பது பற்றிய எதிர்வுகூறல்களை முன்வைத்தார்கள். அங்கு பாரிய பரப்பு சினிமாக்கலையின் திசையை நோக்கியும் திறந்து விடப்படுகிறது. அது அவ்வாறு இருந்தபோதிலும் அந்த புதிய உலகில் ஒரு பங்கினை கையகப்படுத்திக் கொள்வதில் நாங்கள் தோல்வி கண்டுள்ளோம்.

Artists Summit Crowd

நாங்கள் மலையகத்தில் வசிக்கின்ற கவிஞர் ஒருவரைப் பற்றியோ கவிதையொன்றை பற்றியோ யாழ்ப்பாண இலக்கியவாதிகள் பற்றியோ பேசுகின்றோமா?

நான் உங்களுக்கு ஒரு சில விடயங்களை சுட்டிக்காட்டுகிறேன். இசையானது ஒரு தொழிற்துறை என்ற வகையில் உலகில் வேகமாக வியாபித்துக் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் இசை சந்தை 2024 ஆம் ஆண்டில் 24.5 பில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளது. அதைபோலவே 2022 இல் உலக சினிமா மற்றும் களியாட்டச் சந்தை 94 பில்லியன் டொலர்களை உருவாக்கியிருக்கிறது. 2031 அளவில் அது 192 பில்லியன் டொலர் வரை வளர்ச்சியடைவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 7 வீத வளர்ச்சி வேகம் அந்த துறையில் எதிர்வுகூறப்பட்டிருக்கிறது. நாங்கள் ஒரு புறத்தில் சமூக வாழ்க்கை பற்றி சிந்திப்பதை போலவே மறுபுறத்தில் பொருளாதார ரீதியாக உலகில் எதிர்வுகூறப்பட்ட இந்த துறைகளிலான பங்கினை கையகப்படுத்தி கொள்ள திட்டமிடல் வேண்டும். 2031 இல் 192 பில்லியன் டொலர் உருவாக்கப்படுகின்ற உலகில் நாங்கள் எந்த அளவினை பற்றிப்பிடிக்க திட்டமிடவேண்டும்? நாங்கள் அதில் ஒரு சிறிய துளியையேனும் கையகப்படுத்திக் கொள்ள வேண்டும். அது பற்றிய திட்டங்களை நாங்கள் முன்வைப்போம். ஒரு நேரத்தில் நாங்கள் உலக சினிமா பற்றி, உலக இலக்கியம் பற்றி, அவற்றின் வளர்ச்சி பற்றி பேசுகிறோம். எனினும் நாங்கள் மலையகத்தில் வசிக்கின்ற கவிஞர் ஒருவரைப் பற்றியோ கவிதையொன்றை பற்றியோ பேசுகின்றோமா? நாங்கள் ஹொலிவுட், பொலிவுட் சினிமா பற்றி பேசுகின்றோம். எனினும் யாழ்ப்பாணத்தின் தமிழ் இலக்கியவாதிகள் பற்றி தமிழ் நாவலாசிரியர்கள் பற்றி பேசுகின்றோமா? நாங்கள் உலகில் பெரும்பாலான கலைப்படைப்புக்கள் பற்றிய திறனாய்வில் ஈடுபட்டு வருகிறோம். எனினும் நாங்கள் தமிழ் இலக்கியம் பற்றியோ இலக்கியவாதிகள் பற்றியோ திறனாய்வில் ஈடுபட்டிருக்கிறோமா? நாங்கள் எந்தளவுக்கு குறுகிய தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் தான் வசிக்கிறோம். உலகத்திற்கல்ல குறைந்தபட்சம் மலையகத்திற்கேனும் எம்மால் திறந்த நிலையில் இருக்க முடியாதுள்ளது. எம்மால் வடக்கிற்கும் திறந்த நிலையில் இருக்க முடியாதுள்ளது. வடக்கை தெற்கிற்கு திறந்து வைக்க முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம். அது தான் உண்மை. அதனால் நாங்கள் நினைக்கிறோம் எமது நாட்டுக்கே தனித்துவமான கலாச்சாரங்கள் இருக்கின்றன. தனித்துவமான கலை நுணுக்கங்கள் இருக்கின்றன. இவையனைத்தையும் திரட்டிய தனித்துவமான இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பாகும்.

சிங்கள கலாச்சாரத்திற்கு தமிழ் கலாச்சாரம் எதிரானதென நினைக்கிறோம்.

பிறரை பொருட்படுத்தாமல் விட்டு பிறருடைய அடையாளங்களை தாழ்வாக கருதி பிறருடைய அடையாளங்களை கொச்சைப்படுத்திக் கொண்டு இருக்கின்றோமேயொழிய சில வேளைகளில் பிறரின் அடையாளம் எமக்கு எதிரானவை என நினைக்கிறோம். தமிழ்க் கவிதை சிங்களத்தின் எதிரியென நினைக்கிறோம். சிங்கள கலாச்சாரத்திற்கு தமிழ் கலாச்சாரம் எதிரானதென நினைக்கிறோம். பிறருடைய படைப்புக்களை பாராட்டுக்கின்ற கண்ணோட்டத்தில் நாங்கள் அவற்றை பார்ப்பதில்லை. பகைமை உணர்வு கொண்ட பார்வை கோணத்திலாகும். இத்தகைய சமூகமொன்றுக்கு எதிர்காலப்பயணமொன்று இருக்குமா? அதனால் பிறருடைய அடையாளங்களை மதித்து அவற்றை பொறுத்துக் கொள்ளக்கூடிய அவற்றுக்கு மதிப்பளிக்கின்ற அவற்றை ரசிக்கக்கூடிய புதிய சமூகமொன்றை உருவாக்குவதே எங்களுடைய எதிர்பார்ப்பாக அமையும்.

Crowd At Artists Summit

உங்கள் சிந்தனையின் நோக்கங்களை யதார்த்தமாக மாற்றக்கூடிய ஒரு தேசத்தை நாங்கள் உருவாக்குவோம்.

இந்த துறை பற்றி என்னைவிட சிறப்பறிஞர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் நீண்டகாலமாக இந்த துறையிலான புத்தாக்கங்கள் பற்றி போராடிய, எழுதிய, விமர்சனம்செய்த கருத்தியல்களை படைத்தவர்களாவர். அத்தகைய பெருந்தொகையானோர் இங்கே இருக்கிறார்கள். நான் இந்த துறையில் சிறப்பறிஞர் அல்ல. நான் அந்த துறையை வெளியில் இருந்து பார்ப்பவன். நீங்கள் இந்த துறைக்குள்ளே வாழ்பவர்கள். போராட்டத்தில் ஈடுபட்ட அத்துடன் புதிய படைப்புகளை பரீட்சித்துப் பார்த்தவர்கள். அதற்குள்ளேயே புதிய உலகம் பற்றி சிந்திப்பவர்கள். அதனால் நான் உங்களுக்கு ஓர் உத்தரவாதம் அளிக்கிறேன். உங்கள் படைப்புகளை நீங்கள் முன்வைக்கையில் ஏதேனும் தயக்கம் இருந்திருப்பின் அதனை முற்றாகவே நீக்குகின்ற சமூகமொன்றை எமது ஆட்சியின்கீழ் நாங்கள் கட்டியெழுப்புவோம். நீங்கள் இந்த சமூகத்தின் முன்னேற்றப்பாதையை எதிர்பார்த்து பலவற்றை எழுதினீர்கள்: கூறினீர்கள்: பல்வேறு படைப்புக்களை செய்தீர்கள். எனினும் இந்த முறையியலின்கீழ் அவற்றை வெற்றியீட்டச் செய்விக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்கள் உள்ளத்தை வதைத்துக்கொண்டிருந்த அந்த தேவை, நீங்கள் உங்கள் படைப்புக்களில் கண்ட புதிய உலகத்தை நிர்மாணிக்க மேற்கொள்கின்ற முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவது எமது கடமையாகும். நீங்கள் மென்மேலும் எழுதுங்கள். நாவல்களை படையுங்கள். படைப்பாக்கத்தில் ஈடுபடுங்கள். நாங்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற தரப்பினர்களாக மாறுவோம். உங்கள் சிந்தனையின் நோக்கங்களை யதார்த்தமாக மாற்றக்கூடிய ஒரு தேசத்தை நாங்கள் உருவாக்குவோம். இந்த முயற்சியை வெற்றியீட்டச் செய்விப்பதற்காக நாங்கள் ஒன்றுசேர்ந்து சிறகடிப்போம்.

Liyanage Amarakeerthi Addressing The Artists Summit
Singers At The Stage Of Artists Summit
Show More

“ஒருபுறத்தில் பாஸ்போர்ட் வரிசை நீண்டுகொண்டிருப்பதோடு மறுபுறத்தில் இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டவர்களைக்கூட அலைக்கழித்து வீசா வரிசை நீண்டுள்ளது.” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், விஜித ஹேரத்-

(-தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 20224.09.09-) தற்போது எமது அரசாங்கம் ஒரு பாஸ்போர்ட்கூட வழங்கமுடியாத நிலைமையை அடைந்துள்ளது. ஒருபுறத்தில் பாஸ்போர்ட் வரிசை நீண்டுகொண்டிருப்பதோடு மறுபுறத்தில் இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டவர்களைக்கூட அலைக்கழித்து வீசா வரிசை நீண்டுள்ளது. கடந்த காலத்தில் சாதாரண பாஸ்போர்ட் வழங்கலுக்குப் பதிலாக ‘இ – பாஸ்போர்ட்’ சேவையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியதன் பின்னணியில் நிலவிய கொமிஸ்பெறல் தீத்தொழில் காரணமாக அனைத்துமே செயலிழந்தன. ரணில் விக்கிரமசிங்கவின் நண்பரொருவரான ஜித் வர்ணகுலசூரியவின் ஜஸ்ட் இன் டைம் கம்பெனிக்கு […]

(-தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 20224.09.09-)

Vijitha Herath Speaking At NPP Press Conference

தற்போது எமது அரசாங்கம் ஒரு பாஸ்போர்ட்கூட வழங்கமுடியாத நிலைமையை அடைந்துள்ளது. ஒருபுறத்தில் பாஸ்போர்ட் வரிசை நீண்டுகொண்டிருப்பதோடு மறுபுறத்தில் இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டவர்களைக்கூட அலைக்கழித்து வீசா வரிசை நீண்டுள்ளது. கடந்த காலத்தில் சாதாரண பாஸ்போர்ட் வழங்கலுக்குப் பதிலாக ‘இ – பாஸ்போர்ட்’ சேவையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியதன் பின்னணியில் நிலவிய கொமிஸ்பெறல் தீத்தொழில் காரணமாக அனைத்துமே செயலிழந்தன. ரணில் விக்கிரமசிங்கவின் நண்பரொருவரான ஜித் வர்ணகுலசூரியவின் ஜஸ்ட் இன் டைம் கம்பெனிக்கு அது சம்பந்தமான டெண்டர் வழங்கப்பட்டிருந்தது. உடன்படிக்கையின்படி கடந்த ஜுன் மாதத்தில் இருந்து இ – பாஸ்போர்ட் சேவையை வழங்க கம்பெனி தவறியமையால் வரிசைகள் உருவாகின. நாட்டை வெறுத்து ஏறக்குறைய 3000 பேர்வரை நாளொன்றில் கடவுச்சீட்டு பெறவருகிறார்கள். எனினும் டெண்டர் தில்லுமுல்லுடன் “ஒன்லயின்” முறைக்கிணங்க பாஸ்போர்ட் வழங்க அரசாங்கம் தீர்மானித்தது. அதற்படி நாளொன்றில் 250 – 300 வரையான அளவே விநியோகிக்கப்படுகின்றது. நிலைமை அவ்வாறு இருக்கையில் ‘இ – பாஸ்போர்ட்’ வழங்குவதற்கான டெண்டரைப் பெற்றுக்கொண்ட கம்பெனிக்கு சாதாரண திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் வழங்குவதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கான கடந்த வாரத்தில் அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டு அதன் விதப்புரையின் பேரிலெனக்கூறி, பழைய முறையின்படியே பாஸ்போர்ட் வழங்க அனுமதி கோரப்பட்டிருந்தது. அந்த அமைச்சரவை பத்திரத்தில் 48 பக்கங்களைக் கொண்ட பாஸ்போர்ட் வழங்குவதல் பற்றியே குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் தொடக்கத்தில் 64 பக்கங்களை கொண்ட பாஸ்போர்ட்டே இருந்தது.

ஆரம்பத்தில் பாஸ்போர்ட் வழங்கிய கம்பெனி ஏழரை இலட்சம் பாஸ்போர்ட்டை துரிதமாக வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டார். ஆனால் முன்னர் பெற்றுக்கொண்ட கம்பெனிக்கு டெண்டர் வழங்கப்பட்டிருப்பின் தாமதம் ஏற்பட்டிருக்கமாட்டாது. எனினும் 64 பக்கங்களைக் கொண்ட பாஸ்போர்ட்டை 48 பக்கங்களாக குறைத்தல் பற்றி வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஊடாக உலகின் 192 நாடுகளுக்கு உத்தியோகபூர்வ ரீதியாக அறிவித்தல் வழங்கப்படவேண்டும். அதற்கிணங்க அந்த நாடுகளின் அங்கீகாரத்தை பெற மேலும் இரண்டு மாதங்கள் வரை கழியும். அமைச்சரவை பத்திரத்திற்கிணங்க 48 பக்கங்களை கொண்ட பாஸ்போர்ட்டுக்காக 7.98 டொலர் செலவாவதாக குறிப்பிடப்படுகிறது. ரூபாவில் எடுத்துக்கொண்டால் ஒரு பக்கத்திற்கு 31.00 ரூபா செலவாகின்றது. ஆனால் முன்னர் இருந்த விலை மட்டங்களுக்கிணங்க ரூபா 5.99 மாத்திரமே செலவாகிறது. இந்த தில்லுமுல்லு காரணமாகவே ஆயிரக்கணக்கில் வரிசையில் அலைந்து திரிகிறார்கள். இன்று இந்த நாட்டிலே இருக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ள அதேவேளையில் நாட்டை விட்டு வெளியேற இடமளிக்காமல் சிறைப்படுத்தியும் வைத்திருக்கிறார்கள். இந்த நிலைமையை சீக்கிரமாக மாற்றியமைத்து இதுவரை சாதாரண கடவுச்சீட்டு வழங்கிய விதத்திலேயே அவற்றை வழங்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். அதன்படி 192 நாடுகளிடமிருந்து புதிதாக அங்கீகாரம் பெறப்படவேண்டியதில்லை. அமைச்சர்களின் ஜனாதிபதிமார்களின் நட்புக்காக சூறையாட இடமளிப்பதன் மூலமாக இலங்கைக்கு வரவிருக்கின்ற இலங்கையர்களுக்கு வாய்ப்புக்கிடைக்க மாட்டாது. குறிப்பாக இந்த தோ்தல் காலத்தில் கடவுச்சீட்டு கலாவதியாவதால் இலங்கைக்கு வரமுடியாத நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பழைய வெப்தளத்தை திறந்து அவசியமான வசதிகளை வழங்காதிருக்கிறார்கள். இந்த நிலைமையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவருமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம்.

அதைப்போலவே தோ்தல் காலத்தில் மக்களை ஏமாற்ற பலவிதமான அரசியல் வாக்குறுதிகளை வழங்கியதோடு நகர்சார் மாடிவீடுகளில் இருக்கின்ற மக்களுக்கு உறுதிகளை வழங்குவதாக கூறினார்கள். எனினும் வழங்கப்பட்டுள்ள உறுதிகளில் சட்டபூர்வமாக இடம்பெறவேண்டிய உறுதி இலக்கம் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதைப்போலவே உறுதியில் இரண்டு சாட்சிக்காரர்கள் கையொப்பம் இடவேண்டும். எனினும் இந்த உறுதிகளில் சாட்சிக்காரர்களைப் போன்று சான்றுப்படுத்தலும் மேற்கொள்ளப்படாத ஒரு கடதாசித் துண்டு வழங்கப்பட்டுள்ளது. உறுதியொன்று சட்டபூர்வமானதாக அமையவேண்டுமானால் உறுதி இலக்கம் கட்டாயமாக குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். மக்களின் பணத்தை விரயமாக்கி விழாக்களை நடாத்தி அந்த சுமையையும் மக்கள் மீது சுமத்தி முன்னெடுத்து வருகின்ற தில்லுமுல்லு வேலைகளையும் நிறுத்த வேண்டும். குறிப்பாக நகர்சார் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு கடந்த காலத்தில் வழங்கிய கடதாசித் துண்டை உறுதியெனக்கூறி வாக்குகளை அபகரிக்க மேற்கொள்ளப்படுகின்ற முயற்சியைக் கண்டு ஏமாந்துவிடவேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறான கூட்டங்களுடன் மாத்திரம் நின்று விடாமல் ரணில் விக்கிரமசிங்க மேடைகளில் கபடத்தனமான கதைகளையும் கூற பழகியுள்ளார். ஏனைய மேடைகளில் முட்டாள் தனமான கதைகளைக்கூறுகின்ற அதேவேளையில் ரணில் விக்கிரமசிங்க கபடத்தனமான கதைகளையும் கூறிவருகிறார். மாத்தறை மொரவக்க கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க அநுர திசாநாயக்கவின் கொள்கைப் பிரகடனத்தை ஒரே இரவில் வாசித்து முடித்ததாகக்கூறினார். இது அப்பட்டமான பொய்யாகும். தேசிய மக்கள் சக்தி சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகளை ஒழிப்பதாக அவர் கூறினார். இவ்வாறான ஒரு குறிப்பீடு எங்களுடைய கொள்கை வெளியீட்டில் எந்த பக்கத்தில் எந்த பிரிவில் இருக்கிறதென சுட்டிக்காட்டுமாறு சவால் விடுகிறேன். சுற்றியிருக்கின்ற துதிபாடுபவர்கள் கூறுகின்றவற்றை கேட்டு மேடைகளில் இவ்விதமான அப்பட்டமான பொய்களை கட்டவிழ்த்து விடவேண்டாம். ஒரு இரவு மாத்திரமல்ல ஒரு மாதமேனும் விழித்திருந்து மீண்டும் வாசிக்குமாறு சவால் விடுக்கிறேன். எமது கொள்கைப் பிரகடனத்தில் 151 வது பக்கத்தில் “சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தையை விரிவுபடுத்துதலும் வினைத்திறனும்” என்ற தலைப்பின் கீழ் நாங்கள் “நிலவுகின்ற சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை இற்றைப்படுத்துதலும் புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளில் பிரவேசித்தலும்” என்றே வலியுறுத்தியிருக்கிறோம்.

Vijitha Herath At NPP Press Coference

ரணில் நீங்கள் வாசித்தது எதனை? பார்க்காமலா சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகளை இல்லாதொழிப்பதாக கூறினீர்கள்? அல்லது வேண்டுமென்றே தவிர்த்துச் சென்றீர்களா? நாட்டில் பொறுப்புக்கூறவேண்டிய ஜனாதிபதி ஒருவர் என்ற வகையில் அறிந்திருந்தும் பொய் கூறவேண்டாம். நீங்கள் வெறுமனே ஒரு வேட்பாளர் மாத்திரமல்ல. நீங்கள் இப்போது இந்த நாட்டின் ஜனாதிபதி பதவியை வகிக்கின்ற வேட்பாளர். மக்களை ஏமாற்ற வேண்டாம். சர்வதேச சமூகத்தை ஏமாற்ற வேண்டாம். நிலவுகின்ற வர்த்தக உடன்படிக்கைகளை நடப்பு நிலைமைக்கு இணங்க இற்றைப்படுத்துவது மாத்திரமன்றி புதிய வர்த்தக உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பில் பக்கம் 84 இல் அது பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நாளில் விளங்காவிட்டால் ஒரு வாரமேனும் கண்விழித்து ரணில் நீங்கள் இதனை மீண்டும் வாசியுங்கள். தோழர் அநுர திசாநாயக்கவை மன்னிப்பு கோருமாறு ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். ரணில் விக்கிரமசிங்க நீங்கள்தான் இப்போது மன்னிப்புக்கோர வேண்டும். இந்த கொள்கைப் பிரகடனத்தை கபடத்தனமான முறையில் மாற்றியமைத்து பொய்கூறுதல் சம்பந்தமாக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். நாடு மாத்திரமல்ல சர்வதேச சமூகமும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக அவரையே நியமித்துக் கொண்டுள்ளது.

தோழர் அநுர வடக்கிற்கு சென்று மக்களிடம் மிகவும் தெளிவாக முழு நாடுமே ஒன்றுசோ்ந்து நாட்டை கட்டியெழுப்புகின்ற கொள்கையை வெற்றியீட்டச் செய்விக்க ஒன்று சேருமாறே கேட்டுக்கொண்டார். தெற்கில் உள்ள மக்கள் வெற்றிக்காக அணிதிரண்டுள்ள நேரத்தில் அந்த வாய்ப்பினை வடக்கிலுள்ள மக்கள் கைவிடவேண்டாம் என்றே அவர் வலியுறுத்தினார். தெற்கில் உள்ள மக்களின் ஒத்துழைப்பு மாத்திரம் போதாது. வடக்கு, கிழக்கு சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலாயர் ஆகிய அனைத்து இனங்களினதும் ஒத்துழைப்பு நாட்டை கட்டியெழுப்ப அவசியமெனவும் ஒற்றுமை நிறைந்த ஒரு நாட்டை கட்டியெழுப்ப ஒற்றுமை நிறைந்த அரசாங்கமொன்று அவசியமெனவும் வலியுறுத்தினார். எனினும் ரணில் வேண்டுமென்றே அதனை திரிபுபடுத்தி இனவாதக் கூற்றொன்றை வெளியிட்டுள்ளார். 1981 அபிவிருத்திச் சபை தோ்தலின்போது சிறில் மத்தியு, காமினி ஜயவிக்கிரம பெரேரா, காமினி திஸாநாயக்க ஆகியோர் காடையர்களை நெறிப்படுத்தி குருணாகலில் இருந்து அனுப்பிவைத்த காடையர்கள் வாக்குப்பெட்டிகளை கொள்ளையடித்து, அழித்து, தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகத்தை தீக்கிரையாக்கிய வரலாறுதான் இருக்கிறது. குருணாகலிலிருந்து புகையிரதத்தில் சென்று இந்துக்கல்லூரியில் தங்கியிருந்து இரவு 10.00 மணிக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தல் வழங்கியமை பற்றிய நேரடியான சான்றுகள் இன்னமும் இருக்கிறன. அன்று யாழ் நூலகத்திற்கு தீமூட்டி வாக்குகளை கொள்ளையடித்ததால் தான் யுத்தத்திற்கு வழிசமைக்கப்பட்டது. நாட்டை தீக்கிரையாக்குகின்ற இனவாதத்திற்கு வழிசமைத்தது 81 இல் மேற்கொண்ட இந்த நாசகார செயலாகும். அவ்வாறு நடந்து கொண்ட ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஆட்சியாளர்கள் இன்று அநுர தோழரின் உரையினை திரிபுபடுத்தி வேறு கூற்றுக்களை மேற்கொண்டு வருகிறார்கள். எங்களுடைய கொள்கை பிரகடனத்தை கருத்தோன்றிய வகையில் திரிபுபடுத்துதல் மற்றும் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கான கூற்றுக்களை மேற்கொள்ளல் சம்பந்தமாக ரணில் விக்கிரமசிங்க மன்னிப்புக்கோர வேண்டும். நெறிமுறைசார்ந்த அரசியல் நடைமுறை இருக்குமாயின் அதனை நீங்கள் நாட்டுக்கு வெளிப்படுத்திக்காட்ட வேண்டும்.

Show More

“சமூக மாற்றத்திற்காக இளைஞர் தலைமுறையினரை ஈடேற்றுகின்ற பொறுப்பினை நாங்கள் ஏற்றுகொள்வோம்” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(-தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் மாநாடு – 2024.09.08 – சுகததாச உள்ளக விளையாட்டரங்கு-) எமது எதிரி எமக்கெதிராக என்னதான் செய்தாலும் எமது வெற்றியை நிறுத்திவிட முடியாது இந்த செப்டெம்பர் 21 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியால் வெற்றிபெற இயலுமென எம்மனைவருக்கும் பாரிய நம்பிக்கை இருக்கின்றது. தற்போது எமது எதிர்த்தரப்பினர் அவர்கள் ஒருபோதுமே எதிர்பார்த்திராத தலைவிதியை எதிர்நோக்கி இருக்கிறார்கள். அவர்கள் அவர்களுக்கிடையில் மாத்திரம் அதிகாரத்தை கைமாற்றிக்கொள்வதை நீண்டகாலமாக செய்துவர முடியுமென நினைத்தார்கள். எனினும் எதிர்வரும் செப்டெம்பர் […]

(-தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் மாநாடு – 2024.09.08 – சுகததாச உள்ளக விளையாட்டரங்கு-)

Anura Kumara Dissanayake Addressing The Crowd At NPP Youth Summit

எமது எதிரி எமக்கெதிராக என்னதான் செய்தாலும் எமது வெற்றியை நிறுத்திவிட முடியாது

இந்த செப்டெம்பர் 21 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியால் வெற்றிபெற இயலுமென எம்மனைவருக்கும் பாரிய நம்பிக்கை இருக்கின்றது. தற்போது எமது எதிர்த்தரப்பினர் அவர்கள் ஒருபோதுமே எதிர்பார்த்திராத தலைவிதியை எதிர்நோக்கி இருக்கிறார்கள். அவர்கள் அவர்களுக்கிடையில் மாத்திரம் அதிகாரத்தை கைமாற்றிக்கொள்வதை நீண்டகாலமாக செய்துவர முடியுமென நினைத்தார்கள். எனினும் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆந் திகதி நிச்சயமாக அந்த மரபுரீதியான அதிகாரப் பரிமாற்றம் முற்றுப்பெறும். தற்போது அவர்கள் மிகவும் அசிங்கமான, அவலட்சணமான. காட்டுமிராண்டித்தனமான அரசியலில் பிரவேசித்துள்ளார்கள். பொய்கள், சேறுபூசல்கள, குறைகூறல்கள், அத்துடன் குரோதம், பகைமை என்பவற்றை எமக்கெதிரா பரப்பி வருகிறார்கள். எதிர்வரும் சில தினங்களில் மேலும் அதனை தீவிரப்படுத்துவார்களென நினைக்கிறோம். நாங்கள் ஒரேயொரு விடயத்தைதான் கூறவேண்டியுள்ளது. அது எமது எதிரி எமக்கெதிராக என்னதான் செய்தாலும் எமது வெற்றியை நிறுத்திவிட முடியாது என்பதாகும். நான் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஒரு கூற்றினை வெளியிட்டதாக அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஒரு கூற்றினை வெளியிட்டார். அவர் தனது கூற்றினை சரி செய்து கவலையை தெரிவிக்க அவருக்கு வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு செய்யாவிட்டால் நாங்கள் வழக்கு போடுவோம். நாங்கள் வந்ததும் கண்டி பெரஹெராவை நிறுத்திவிடுவதாக திஸ்ஸ அத்தநாயக்க கூறியிருந்தார். இப்போது அவர்கள் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிட முயற்சி செய்கிறார்கள். திஸ்ஸ அத்தநாயக்க கவலையை தெரிவித்தாலும் நாங்கள் அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அவர் போலி ஆவணம் புனைவதில் கிண்ணத்தை வென்றெடுத்தவர். அவ்வாறு செய்து விளக்கமறியலில் இருந்த ஒருவராவார். இற்றைக்கு சில தினங்களுக்கு முன்னர் எங்களுடைய தோழர் வசந்தவை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதாக பாரிய சேறுபூசினார். அது பற்றியும் கட்டாயமாக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம். இந்த அசிங்கமான அரசியல் விளையாட்டை இப்போதாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் இந்த நிலைமைக்கு எதிராக எடுக்க வேண்டிய எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம்.

அண்மையில் ரணில் விக்கிரமசிங்க “எனது நண்பர் அநுர, எனது கூட்டாளி” எனக்கூறிக் கொண்டிருப்பதை நான் கண்டேன். அவர் “ஷேப் ஆகவே வருகிறார்.” நண்பன் எனக்கூறிக்கொண்டு எவ்வளவு தான் ஷேப் ஆக வந்தாலும் எமது ஆட்சியின் கீழ் மத்திய வங்கி மோசடிக்கு எதிராக அவசியமான சட்ட நடவடிக்கைகளை எடுத்தே தீருவோம். கடந்த காலத்தில் அவர் பார் லைசன் வழங்கியமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. “கூட்டாளி”, “கூட்டாளி” எனக்கூறிக்கொண்டு எவ்வளவு தான் எங்கள் பின்னால் வந்தாலும் எல்.ஆர்.சி. இன் காணிகளை பகிர்ந்தளித்த விதம் பற்றி நாங்கள் கட்டாயமாக விசாரணைகளை மேற்கொள்வோம். அதைபோலவே அவர் எமது நாட்டின் மோசடிப்போ்வழிகளை பாதுகாக்க மேற்கொள்கின்ற முயற்சிகள் பற்றியும் நாங்கள் கட்டாயமாக விசாரணைகளை மேற்கொள்வோம். ரணில், செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் உங்களுடைய கூட்டாளியை பற்றி விளங்கிக் கொள்வீர்.

NPP Youth Summit Crowd

எமது நாட்டின் இளைஞர் தலைமுறையினர் நீண்டகாலமாக சமூக மாற்றமொன்றுக்காக மல்லுக்கட்டினார்கள். சிலவேளைகளில் போராளிகளாகவும் சிலவேளைகளில் கருத்தியல் சார்ந்தவர்களாகவும் மல்லுக்கட்டினார்கள். எனினும் இறுதி வெற்றியை பெற்றுக்கொள்ள தவறினார்கள். நீங்கள் புரிந்த இந்த போராட்டத்திற்குள் இருந்த ஒவ்வொரு எதிர்பார்ப்பையும் குறிக்கோளையும் ஈடேற்றுகின்ற பொறுப்பினை செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். எமது நாட்டின் அரசியலுக்கு வருவதற்குள்ள கதவுகளை பழைய ஆட்சியாளர்கள் மூடியிருந்தார்கள். ஆதனங்களை ஒரு பரம்பரையிலிருந்து மற்றொரு பரம்பரைக்கு கையளிப்பதைப்போல் எமது நாட்டின் அரசியலும் ஒரு பரம்பரையிலிருந்து அடுத்த பரம்பரையை நோக்கியே பாய்ந்து சென்றது. அந்த பரம்பரையினரின் அரசியல் பற்றி இளைஞர் தலைமுறையினர் வெறுப்பையும் அருவருப்பையுமே கொண்டிருக்கிறார்கள். புதிய பரம்பரைக்கு அரசியலை ஒரு கௌரவமான இடமாகவும் பெறுமதியுள்ள இடமாகவும் எடுத்துக்காட்ட அவசியமான மாற்றத்தை தேசிய மக்கள் சக்தியை சோ்ந்த நாங்கள் செய்து காட்டுவோம்.

இந்த நாட்டின் தேசிய அரசியல் நான்கு அல்லது ஐந்து குடும்பங்களின் கைகளிலேயே குவிந்துள்ளது.

சஜித் கூறுகின்ற விகாரமடைந்த விடங்களை நோக்கும்போது அவர் ஒரு பிரதேச சபை உறுப்பினராவதற்கான தகைமையையேனும் கொண்டிருக்கிறாரா என நீங்களே சிந்தித்து பாருங்கள். தகப்பன் ஜனாதிபதி இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காகவே அவர் ஜனாதிபதி வேட்பாளராக மாறியிருக்கிறார். இந்த நாட்டின் தேசிய அரசியல் நான்கு அல்லது ஐந்து குடும்பங்களின் கைகளிலேயே குவிந்துள்ளது. உங்கள் மாவட்டத்தில் உங்கள் தோ்தல் தொகுதியில் மாத்திரமல்ல பிரதேச சபை ஆளுகை பிரதேசத்தின் அரசியல் நிலைமையும் அதுவல்லவா? ஒரு சில குடும்பங்கள் இருக்கின்றன தகப்பன் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கிறார். மூத்த மகன் மாகாண சபையை பிரதிநிதித்துவம் செய்கிறார். சின்ன மகன் பிரதேச சபையை பிரதிநிதித்துவம் செய்கிறார். அரசியல் குடும்ப படிக்கட்டு வரிசையில் வைத்ததுபோல். அப்பா ஒரு படிக்கட்டிலிருந்து விலகும்போது மகன் அந்த படிக்கட்டில் ஏறுகிறார். இந்த பரம்பரைவழி அரசியல் குடும்பங்கள் எமது நாட்டுக்கு பாரிய அழிவினை ஏற்படுத்தியுள்ளன. இந்த குடும்பத் தலைமுறையினருக்கிடையில் கைமாறுகின்ற அரசியல் பெட்டனை தற்காலிகமாக நாங்கள் கையிலெடுத்து இளைஞர்களாகிய உங்களின் கைகளில் ஒப்படைப்பதை நாங்கள் ஒரு பொறுப்பாக கையிலெடுத்திருக்கிறோம்.

Anura Kumara Dissanayake At NPP Youth Summit

எமது வறிய மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சோ்ந்த இளைஞர் தலைமுறையினர் கரைசோ்வதற்குள்ள ஒரே பாதை கல்வியாகும்

அந்த அரசியல் பெட்டனை நாங்கள் ஒரு பரம்பரையிடமிருந்து இன்னொரு பரம்பரைக்கு ஒப்படைக்க மாட்டோம். அதைப்போலவே கிடைக்கின்ற இந்த பெட்டனை உயிர் பிரியும்வரை எங்களுடைய கைகளில் வைத்துக்கொள்ளவும் மாட்டோம். நாங்கள் அதனை ஒரு குறுகிய காலத்திற்கே வைத்திருப்போம். எங்களுடைய பொறுப்பினை ஈடேற்றிய பின்னர் நாங்கள் அதனை நாட்டின் இளைஞர் தலைமுறையினரிடம் ஒப்படைத்து நீங்கள் நாட்டை ஆட்சி செய்கின்ற விதத்தை நிம்மதியாக பார்த்துக்கொண்டிருப்போம். நாங்கள் பேராசைக்காரர்கள் அல்ல. கைவிட பழகிய மனிதர்கள். செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறுவது வெறுமனே அரசியல் கைமாறுதல் அல்ல. இதுவரை எமது நாட்டுக்கு உரித்தாக்கிக் கொடுத்திருந்த அயோக்கியமான அரசியலுக்குப் பதிலாக முற்றாகவே நிலைமாற்ற யுகமொன்றுக்கு ஆற்றுப்படுத்துகின்ற அரசியலை செப்டெம்பர் 21 ஆம் திகதி உருவாக்குவோம். அதனாலேயே நீங்கள் எங்களுடன் இந்த சில நாட்களில் இணைந்து செயற்பட வேண்டும். எமது வறிய மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சோ்ந்த இளைஞர் தலைமுறையினர் கரைசோ்வதற்குள்ள ஒரே பாதை கல்வியாகும். எமது நாட்டில் இலவசக் கல்வி இருந்திராவிட்டால் தனிப்பட்ட முறையில் நானும் நீங்களும் இந்த இடத்தில் இல்லாதிருந்திருக்கலாம். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த நாட்டின் இளைஞர் தலைமுறையினர் மற்றும் பிள்ளைகளுக்காக நாங்கள் ஏற்படுத்துவோம்.

மிகவும் குறுகிய வரையறைக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது நாட்டின் விளையாட்டுத்துறையை நாங்கள் உங்களுக்கு ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் கொண்டு வருகின்ற துறையாக மாற்றுவோம். சுற்றுலாத் தொழிற்துறையை நாட்டுக்கு வருமானம் கொண்டுவருகின்ற மற்றும் தொழில்களை பிறப்பிக்கின்ற முன்னேற்றமடைந்த தொழிற்துறையாக மாற்றியமைப்போம். இந்த நாட்டை எல்லா பக்கங்களிலும் சுத்தம் செய்து உங்களின் கனவுகளை நனவாக்குகின்ற அழகான வாழ்க்கையை அனுபவிக்க உங்களுக்கு கிடைக்கின்ற வளமான இலங்கையை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் நாங்கள் கட்டியெழுப்புவோம்.

Kalana Gunasekara At NPP Youth Summit
Crowd At NPP Youth Summit
Eranga Gunasekara At NPP Youth Summit
Anura Kumara Dissanayake Handover The Policy Book
Show More

“இனவாதத்தை தூண்டிவிட ரணில் மேற்கொண்ட முயற்சி வடக்கில் திரு. சுமந்திரனே நிராகரித்தமையால் ரணில்தான் மன்னிப்புக் கோரவேண்டும்.” -தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க-

(-கம்பெனிகளுக்கிடையிலான ஊழியர் சங்கத்தின் 25 வது வருடாந்த மாநாடு – மாளிகாவத்த பி.டீ. சிறிசேன விளையாட்டரங்கு-) இலங்கையில் இதுவரைகாலமும் இருபக்கத்திற்கு பரிமாறிக்கொண்டிருந்த அரசியல் அதிகாரம் இந்த செப்டெம்பர் 21 ஆந் திகதி முற்றுப்பெறுவது நிச்சயமாகிவிட்டது. இதன்காரணமாக பகைவர்கள் அனைவரும் அரசியல் வாதங்களுக்குப் பதிலாக பொய்யான குறைகூறல்கள், திரிபுபடுத்தல்களை பாரியளவில் பிரச்சாரம்செய்த வருகிறார்கள். தோழர் வசந்தவையும் தோழர் மகிந்தவையும் கைதுசெய்யுமாறு நீதிமன்றம் பணிப்புரை விடுத்ததாக கடந்த 06 ஆந் திகதி பிரச்சாரமொன்று மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்ற பணிப்பரையொன்றை திரிபுபடுத்தியமை தொடர்பாக […]

(-கம்பெனிகளுக்கிடையிலான ஊழியர் சங்கத்தின் 25 வது வருடாந்த மாநாடு – மாளிகாவத்த பி.டீ. சிறிசேன விளையாட்டரங்கு-)

Anura Kumara Dissanayake At Stage Of ICEU Summit

இலங்கையில் இதுவரைகாலமும் இருபக்கத்திற்கு பரிமாறிக்கொண்டிருந்த அரசியல் அதிகாரம் இந்த செப்டெம்பர் 21 ஆந் திகதி முற்றுப்பெறுவது நிச்சயமாகிவிட்டது. இதன்காரணமாக பகைவர்கள் அனைவரும் அரசியல் வாதங்களுக்குப் பதிலாக பொய்யான குறைகூறல்கள், திரிபுபடுத்தல்களை பாரியளவில் பிரச்சாரம்செய்த வருகிறார்கள். தோழர் வசந்தவையும் தோழர் மகிந்தவையும் கைதுசெய்யுமாறு நீதிமன்றம் பணிப்புரை விடுத்ததாக கடந்த 06 ஆந் திகதி பிரச்சாரமொன்று மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்ற பணிப்பரையொன்றை திரிபுபடுத்தியமை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம். இன்றளவில் எமக்கு கோரிக்கைக் கடிதம் அனுப்பிவைத்தல், முறைப்பாடுகள் செய்தல் குறைவின்றி இடம்பெற்று வருகின்றது. நீதிமன்றம் தொடர்பில் பொய்யான கூற்றுகளை வெளியிடுதல் சம்பந்தமாக சட்டத்தரணிகளின் மேலங்கிகளைக்கூட கழற்றமுடியும். நாங்கள் நீதிமன்றத்தின் முன் அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். அரசியல் மேடையில் இந்த திரிபுபடுத்தல்களையும் பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதையும் இப்போதாவது நிறுத்தவேண்டும். றவூப் ஹக்கீம், திஸ்ஸ அத்தநாயக்க போன்றவர்களுக்கும் கோரிக்கைக் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. திஸ்ஸ அத்தநாயக்க மன்னிப்புக் கோரினாலும் வழக்கத் தொடுக்கக்கூடிய அளவில் போலியாவணம் புனைவதில் பிறவித்திறமை கொண்டவராக மாறியிருக்கிறார். அதைப்போலவே ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்குப்போய் தமிழ் மக்களை அச்சுறுத்தியதாகக் கூறுகிறார். அதற்காக மன்னிப்புக் கோரவேண்டுமாம். நான் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கூறுகிறேன் “ரணில் விக்கிரமசிங்க, நீங்கள் அசிங்கமானவகையில் அரசியலில் இனவாதத்தை விதைக்க முயற்சிசெய்ய வேண்டாம்.” என்றாலும் தான் அதற்கு பதிலளிக்க முன்னராக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சரியான பதிலை அளித்துள்ளமை தொடர்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வடக்கிற்குச்சென்று இனவாதத்தை தூண்டிவிட ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட முயற்சியை வடக்கு மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற திரு. சுமந்திரனே நிராகரித்துள்ளார், இப்போது ரணில் நீங்கள் மன்னிப்புக் கோருங்கள்.

மத்திய வங்கி மோசடி பற்றிய விசாரணைகளை மேற்கொள்வோம்.

நாட்டில் மற்றவருக்கு எதிராக இனவாதத்தை விதைத்திட, ஒருவருக்கொருவர் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த மேற்கொள்கின்ற முயற்சிகள் இப்போது செல்லுபடியாக மாட்டாது. எனினும் ரணில் விக்கிரமசிங்காக்கள் இப்போதும் பழைய கடையிலேயே சாமான்களை வாங்குகிறார்கள். ரணில் விக்கிரமசிங்க அண்மைக்காலமாக பல சந்தர்ப்பங்களில் “எனது நண்பர் அநுர, எனது கூட்டாளி அநுர” எனக் கூறியிருக்கிறார். அது “ஷேப்” ஆக்க வருவதாகும். ரணில் விக்கிரமசிங்க உங்களால் எங்களுடன் ‘ஷேப்” ஆக முடியாது. மத்திய வங்கி மோசடி பற்றிய விசாரணைகளை மேற்கொள்வோம். காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகளை நண்பர்களுக்கு பகிர்ந்தளித்த விதத்தை விசாரிப்போம். அதைப்போலவே மோசடிக்காரர்கள், ஊழல் பேர்வழிகளை பாதுகாத்த விதம்பற்றி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும். அதேவேளையில் மென்மேலும் குறைகூறல்களை முன்வைத்து தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்தால் 22 ஆம் திகதி கலவரங்கள் இடம்பெறும் எனவும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

Crowd At ICEU Summit

தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்த பின்னர் வெற்றியை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை நாங்கள் கற்றுக்கொடுப்போம்.

வெற்றிபெற்றதும் தோல்விகண்டவர்களை துன்புறுத்துகின்ற வரலாறு அவர்களுக்கே இருக்கின்றது. குறிப்பாக 1977 இல் இருந்து ரணில் விக்கிரமசிங்க தொடர்பிலாகும். அன்று தோ்தல் வெற்றியின் பின்னர் இரண்டு வாரங்கள் பொலிஸாரை பொலிஸ் நிலையங்களில் முடக்கி வைத்து எதிர்கட்சியினர் மீது தாக்குதல் நடாத்த, வீடுகளை தீக்கிரையாக்க, துப்பாக்கி பிரயோகம் செய்ய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். எனினும் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்த பின்னர் வெற்றியை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை நாங்கள் கற்றுக்கொடுப்போம். செப்டெம்பர் 23 ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு கட்சியையும் சோ்ந்த ஆதரவாளர்களை சந்தித்து மாற்றமடையுமாறு அழைப்பு விடுப்போம். ஆனாலும் மாற்றமடைய விரும்பாவிட்டால் அவர்கள் விரும்பிய அரசியல் இயக்கத்தின் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை இருக்கிறது. அது ஒரு ஜனநாயக உரிமையாகும். செப்டெம்பர் 21 ஆம் திகதிவரை கட்சிகளாக பிரிந்து நாங்கள் உழைப்போம். எனினும் செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக எமக்கு வாக்களிக்காதவர்களையும் சோ்த்துக் கொண்டு இந்த நாட்டை கட்டியெழுப்புவோம். அதனால் வெற்றிக்கு பின்னர் ஏனைய கட்சியைச் சோ்ந்தவர்களுக்கு நகத்தின் நுனியினால் கூட சேதம் விளைவிக்க தேசிய மக்கள் சக்தி இடமளிக்கமாட்டாது.

இந்நாட்டு மக்கள் நேரடியாகவே திசைக்காட்டிக்கு புள்ளடியிட அணிதிரண்டிருக்கிறார்கள்.

நூற்றுக்கு மூன்று வீதத்தை வைத்துக்கொண்டு வெற்றி பெறுவது எப்படியென முன்னர் கேட்டார்கள். இப்போது சஜித்திற்கு புள்ளடியிட்டு எம்மை தோற்கடிக்க முடியாதென ரணில் கூறுகிறார். ரணிலுக்கு புள்ளடியிட்டு எம்மை தோற்கடிக்க முடியாதென சஜித் கூறுகிறார். இப்போது இந்நாட்டு மக்கள் நேரடியாகவே திசைக்காட்டிக்கு புள்ளடியிட அணிதிரண்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் ஏற்கெனவே எங்கள் வெற்றியை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். வென்றாலும் ஆறு மாதங்கள் ஓட்ட முடியாதென புதிதாகக் கூறுகிறார்கள். அவர்களின் பிரச்சாரங்களில் ஆரம்பத்தில் “திசைக்காட்டிக்கு வெற்றிபெற முடியாது.” எனக்கூறினார்கள். அடுத்ததாக “திசைக்காட்டி வெற்றிபெற்றால்…” எனக்கூறினார்கள். “திசைக்காட்டி வெற்றிபெற்றால் ஆறு மாதங்கள் கூட ஓட முடியாது.” என இப்போது கூறுகிறார்கள். இந்த மாற்றம் பற்றி ஆழமாகவும் பாரிய எதிர்பார்ப்புடனும் நாங்கள் நீண்டகாலமாக திடசங்கற்பத்துடன் இருந்து கொண்டு பாரிய சக்திகளை ஒன்று திரட்டியிருக்கிறோம். அதைபோலவே பலம்பொருந்திய வேலைத்திட்டமொன்றை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். நாங்கள் இந்த வெற்றியை அடைந்தது ஆறு மாதங்கள் பயணம் செய்யவா? இந்த வெற்றி மூலமாக இலங்கை வரலாற்றில் மிக நீண்ட வெற்றியை உருவாக்குவோம் என்பது உறுதியாகும்.

Lal Kantha-Anura Kumara Dissanayake-Wasantha Samarasinghe At ICEU Summit

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் வேலை செய்கின்ற எல்லா இடத்திலும் மிகவும் அமைதியான வகையில் செயலாற்றி வருகின்றதென்பதை மகிழ்ச்சியுடன் கூறவேண்டும்.

இந்த இடத்தில் குழுமியுள்ளவர்கள் இலங்கையின் தனியார் துறையில் பணியாற்றுபவர்களாவர். இலங்கையின் பலம்பொருந்திய தனியார் துறையின் தொழிற்சங்க இயக்கம் கம்பெனிகளுக்கிடையிலான ஊழியர் சங்கமே என்பதை எவரும் அறிவார்கள். தேசிய மக்கள் சக்தியின் தொழிற்சங்க இயக்கத்தினால் தனியார் துறையை சீரழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் வேலை செய்கின்ற எல்லா இடத்திலும் மிகவும் அமைதியான வகையில் செயலாற்றி வருகின்றதென்பதை மகிழ்ச்சியுடன் கூறவேண்டும். அதன் விளைவாக தனியார் துறையின் மிக அதிகமான சம்பளம் பெறுகின்ற நிறுவனங்கள் கம்பெனிகளுக்கிடையிலான ஊழியர் சங்கத்தில் உள்ள நிறுவனங்களாகும். அந்த நிறுவனங்களிலிருந்து மிக அதிகமான போனஸ் ஊழியர்களுக்கு வழங்கப்படுவதோடு மிக அதிகமான அந்நிய செலாவணி இந்நாட்டுக்கு அந்த நிறுவனங்களாலேயே ஈட்டித்தரப்படுகிறது. தேசிய பொருளாதாரத்திற்கு தனியார்துறையை பலம் பொருந்திய வகையில் பங்களிக்கச் செய்வித்து அவர்கள் பெறுகின்ற வருமானத்திலிருந்து நியாயமான ஒரு பங்கினை அந்த ஊழியர்களுக்கு பெற்றக்கொடுப்பது எங்களுடைய கொள்கையாகும்.

ஒவ்வொருவருக்கும் நியாயமான மனநிறைவுகொண்ட இளைப்பாறிய வாழ்க்கையொன்று அவசியமாகும்.

தனியார் துறையின் முன்னேற்றம் தொடர்பில் ஏற்கெனவே ஏதேனும் தடைகள் இருப்பின் அந்த சிக்கல்களை தீர்த்து வைக்க தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் முன்னுரிமையளிக்கும். எனினும் இலாபத்தில் ஒரு நியாயமான பங்கு உழைக்கும் மக்களுக்கு நன்மைகளாக வழங்கப்படல் வேண்டும். அது தவறா? அந்த நிறுவனங்கள் சீர்குலையுமா? ஒருபோதும் இல்லை. கைத்தொழில் அதிபர்களைப்போன்றே அதன் ஊழியர்கள் ஆகிய இரு தரப்பினரதும் உறுதி நிலையினை பாதுகாக்கின்ற கொள்கையொன்றை அமுலாக்குவோம். ஒன்றரை தசாப்தங்களாக கட்டி வளர்க்கப்பட்டுள்ள “மேன்பவர் ஏஜன்சி” ஊடாக தொழில்களை வழங்குகின்ற முறைமை நவீன அடிமை வியாபாரத்தை ஒத்ததாகும். அந்த மாதிரியை தொடர்ந்தும் பேணிவரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். பொருளாதாரம் உறுதியானதெனில் பண்டங்களினதும் சேவைகளினதும் விலைகள் தளம்பலடைய மாட்டாது. பொருளாதாரத்தில் நிலவுகின்ற உறுதியற்றத்தன்மை நிலையான சம்பளம் பெறுபவர்களுக்கு பாரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதனால் அதனை பாதுகாப்பதற்கான வழிமுறைகளுக்கு நாங்கள் முன்னுரிமையளிப்போம். மீன்பிடி, விவசாயம், கைத்தொழில்கள், பெருந்தோட்டச் சேவை போன்றே அரசாங்க சேவை ஆகிய அனைத்து பிரிவுகளிலும் செல்வத்தை உற்பத்தி செய்கின்ற குழுவினருக்கு வாழ்க்கையின் இறுதிவரை அவ்வண்ணமே தொழில் புரிய முடியாது. ஒரே மாதிரியாக வேலைசெய்ய முடியாது. ஒவ்வொருவருக்கும் நியாயமான மனநிறைவுகொண்ட இளைப்பாறிய வாழ்க்கையொன்று அவசியமாகும். எனினும் எமது நாட்டில் பெரும்பாலானோர் துன்பகரமான, விரக்தியடைந்த, உணவு பெற்றுக்கொள்ள முடியாத, மருந்து பெற்றக்கொள்ள முடியாத கடினமான வாழ்க்கையையே கழித்து வருகிறார்கள். அதனால் அனைவரும் பங்கேற்கக்கூடிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டமொன்றை வழங்குவதற்கான முறையொன்று வகுக்கப்படும். அரச பிரிவில் அனைவரும் செய்ய வேண்டிய பங்கினையும் தனியார் துறையின் பங்கினையும் நாங்கள் மிகவும் நன்றாக விளங்கிக் கொண்டுள்ளோம். தனியார் துறையின் செயற்பொறுப்பினை வெற்றியீட்டச் செய்விக்கையில் அந்த ஊழியர்கள் மிகப்பெரிய செயற்பொறுப்பினை ஆற்றி வருகிறார்கள். அவர்களை பேணிப்பாதுகாக்கின்ற அவர்கள் மீது கவனிப்பு காட்டுகின்ற அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தியே தாபிக்கும்.

AKD AT ICEU Summit

உழைக்கும் மக்களின் உழைப்பில் கட்டியெழுப்பப்பட்ட ஊழியர் சேமலாப நிதியத்தைக் கொள்ளையடித்த அரசாங்கங்களே இதுவரை நிலவின.

செப்டெம்பர் 21 ஆம் திகதி கட்டியெழுப்பப்படுகின்ற அரசாங்கம் ஏனைய எல்லா அரசாங்கங்களைவிட வித்தியாசப்படுவது அதனலேயே. உழைக்கும் மக்களின் உழைப்பில் கட்டியெழுப்பப்பட்ட ஊழியர் சேமலாப நிதியத்தைக் கொள்ளையடித்த அரசாங்கங்களே இதுவரை நிலவின. சீர்குலைகின்ற கம்பெனிகளில், சீர்குலைகின்ற நிறுவனங்களில் முதலீடுசெய்து பல்லாயிரக்கணக்கான கோடி நட்டம் விளைவித்தார்கள். எனினும் முதலீடுசெய்த டீல்காரர்கள் தமக்கிடையே பெருந்தொகையான பணத்தை பகிர்ந்து கொண்டார்கள். ஊழியர் சேமலாப நிதியத்தை கொள்ளையடிப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டது. பெருந்தொகையானோர் காயமுற்று ஏலாமை நிலையை அடைந்தார்கள். அண்மையில் கடன் மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தை அமுலாக்கி மிகப்பெரிய சேதத்தை ஊழியர் சேமலாப நிதியத்திற்கு விளைவித்தார்கள். ஆட்சியாளர்கள் உழைக்கும் மக்களை பற்றி சிந்திப்பதற்கு பதிலாக எல்லா நேரத்திலும் அவர்களுக்கு எதிரான தீர்மானங்களையே மேற்கொண்டார்கள். அதற்கு வித்தியாசமாக செயற்படுகின்ற உழைக்கும் மக்கள் பற்றி சிந்தித்து தீர்மானம் மேற்கொள்கின்ற அரசாங்கமொன்றை கட்டியெழுப்புவோம். இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி இலங்கையின் எதிர்காலத்தை கட்டியெழுப்புகின்ற அரசாங்கமொன்றை உருவாக்குவதை செப்டெம்பர் 21 ஆம் திகதி ஆரம்பிப்போம். இந்த வெற்றியை மென்மேலும் உறுதி செய்வதற்காக அனைவரையும் செயலாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.

Wasantha Samarasinghe Addressing The ICEU Summit
Lal Kantha Addressing The ICEU Summit
Anupa Nandima Addressing The ICEU Summit
Show More

“சட்டத்தின் முன் “அனைவரும் சமம்” எனும் கோட்பாட்டுக்கு உயிர்கொடுப்போம்.” -ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க-

(-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் மாநாடு – 2024.09.07 – தாஜ் சமுத்ரா ஹோட்டல்-) மக்களின் நோக்கங்களும் ஆட்சியாளரின் நோக்கங்களும் இணையாக பயணிக்கின்ற அரசாங்கமொன்றே இப்போது எங்களுக்கு தேவை. இந்த நாட்டில் கீர்த்திமிக்கவர்களாக இருந்த நீதிபதிகள், சட்டத்தரணிகள் பெருந்திரளாக இன்று இந்த இடத்தில் குழுமியிருப்பது மிக்க மகிழ்ச்சிதருகின்ற விடயமாகும். நாட்டின் ஏதேனும் அரசியல் நகர்வு இடம்பெற போகின்றபோது முதன்முதலில் அது சட்டத்தரணிகளாலேயே உணரப்படுகிறது. அதனால் தான் இவ்வளவு பெருந்தொகையானோர் இன்று இந்த இடத்தில் குழுமியிருக்கிறார்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் […]

(-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் மாநாடு – 2024.09.07 – தாஜ் சமுத்ரா ஹோட்டல்-)

Anura Kumara Dissanayake Addressing The Crowd At Lawyers Summit

மக்களின் நோக்கங்களும் ஆட்சியாளரின் நோக்கங்களும் இணையாக பயணிக்கின்ற அரசாங்கமொன்றே இப்போது எங்களுக்கு தேவை.

இந்த நாட்டில் கீர்த்திமிக்கவர்களாக இருந்த நீதிபதிகள், சட்டத்தரணிகள் பெருந்திரளாக இன்று இந்த இடத்தில் குழுமியிருப்பது மிக்க மகிழ்ச்சிதருகின்ற விடயமாகும். நாட்டின் ஏதேனும் அரசியல் நகர்வு இடம்பெற போகின்றபோது முதன்முதலில் அது சட்டத்தரணிகளாலேயே உணரப்படுகிறது. அதனால் தான் இவ்வளவு பெருந்தொகையானோர் இன்று இந்த இடத்தில் குழுமியிருக்கிறார்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் எமது நாட்டு மக்கள் அரசாங்கங்களை அமைத்தார்கள். தலைவர்களை நியமித்தார்கள். அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமது பிரஜைகள் ஒரு சாதகமான எதிர்பார்ப்பினையே கொண்டிருந்தார்கள். சிறிய ஒரு குழுவினர் தனிப்பட்ட முறையில் தமக்கு எதையாவது பெற்றுக்கொள்ள முடியுமென நினைத்திருக்கக்கூடும். எனினும் பெரும்பாலானவர்கள் வாக்குச்சாவடிக்கு செல்வது சாதகமான ஒரு நாட்டை உருவாக்கிக் கொள்ளும் எதிர்பார்ப்புடனேயேயாகும். மக்களின் அந்த எதிர்பார்ப்புக்களை அந்த ஆளும் குழுக்கள் சிதைத்துவிட்டார்கள். மக்களின் நோக்கங்களும் ஆட்சியாளரின் நோக்கங்களும் இணையாக பயணிக்கின்ற அரசாங்கமொன்றே இப்போது எங்களுக்கு தேவை. எமது நாட்டில் மக்களின் எதிர்பார்ப்பும் ஆட்சியாளரின் எதிர்பார்ப்பும் ஒன்றுக்கொன்று முரணாக அமைகின்ற அரசாங்கங்களே சதாகாலமும் உருவாகின. இந்த இடத்தில் தான் சிக்கல் நிலவுகின்றது.

“சட்டத்தின் ஆட்சியின் முன் அனைவரும் சமமானவர்களே” எனும் கோட்பாட்டினை நாங்கள் கட்டாயமாக அமுலாக்குவோம்.

உங்களுக்கு உங்களின் விடயத்துறை சார்ந்த பாரிய அனுபவம் இருக்கின்றது. எமது நாட்டில் “அனைவரும் சட்டத்தின்முன் சமமானவர்களே” எனும் கோட்பாட்டுக்கு உயிர்கொடுக்கவேண்டியது அவசியமாகும். இன்னமும் எமது சமூகத்தில் அது நடைமுறையில் சாத்தியமாகவில்லை. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் இந்த கோட்பாட்டுக்கு புத்துயிரளிக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை நாங்கள் கொடுக்கிறோம். “சட்டத்தின் ஆட்சியின் முன் அனைவரும் சமமானவர்களே” எனும் கோட்பாட்டினை நாங்கள் கட்டாயமாக அமுலாக்குவோம். சட்டத்தை அமுலாக்குகின்ற நிறுவனங்களுக்கு நாங்கள் சுயாதீனத்தன்மையை வழங்குவோம். அந்த நிறுவன முறைமையை சம்பந்தப்பட்ட நோக்கங்களுக்கு அமைவாக நெறிப்படுத்த நாங்கள் தலைமைத்துவம் வழங்குவோம். ஒருபோதும் மேற்படி நிறுவன முறைமையை நாங்கள் எங்களுடைய தனிப்பட்ட நோக்கங்களுக்காக ஈடுபடுத்தமாட்டோம். எமது நாட்டில் ஜனாதிபதிமார்கள் கூட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பொருட்படுத்தாமல் விடுவார்களாயின் எமது நாட்டின் தலைவிதி எப்படிப்பட்டதாக அமையும்?

Lawyers Summit

இப்பொழுது இலஞ்சமும் ஊழலும் ஒருவருடைய கடமையாகவும் மற்றுமொருவரின் உரிமையாகவும் மாறிவிட்டது.

சட்டத்தின் ஆட்சியை ஆட்சியாளர்களே பொருட்படுத்தாமல் விடுவது எமது நாட்டின் பொருளாதாரமும் சமூக கட்டமைப்பும் சீரழிவதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இப்போது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. நான் ஓரிரு உதாரணங்களை தருகிறேன். ஹோட்டல் ஒன்றை நிர்மானிப்பதற்காக காணியொன்றை வாங்கப்போனால் அரசாங்கத்தின் அமைச்சர் அவருடைய கையொப்பத்தினால் தான் அந்த காணி கிடைக்கின்றதெனும் கருத்தினை உருவாக்குவார். அதனால் ஒருவர் ஹோட்டல் ஒன்றை அமைப்பதானால், அதிலிருந்து இலாபமும் கிடைக்குமென்றால், அந்த இலாபம் எனது கையொப்பத்தினாலேயே கிடைப்பதனால் அந்த இலாபத்தின் ஒரு பகுதி எனக்கு சொந்தமானது என நினைக்கிறார். இப்பொழுது எமது நாட்டில் ஊழலும் மோசடியும் தொடர்ந்தும் நிலவுவது ஒரு மோசடி என்ற வகையில் அல்ல; உரிமையென்ற வகையிலாகும். என்ன ஆனாலும் அமைச்சரல்லவா எனக்கு ஒரு துண்டு காணியை கொடுத்தார் என பிரஜைகள் நினைக்கிறார்கள். அதனால் அவருக்கு ஒரு தொகை பணத்தை கொடுப்பது எனது கடமையென நினைக்கிறார்கள். இப்பொழுது ஊழலும் இலஞ்சமும் ஒருவருடைய கடமையாகவும் மற்றுமொருவரின் உரிமையாகவும் மாறிவிட்டது. இந்த அரசியல் கலாசாரத்தை நிச்சயமாக மாற்றியமைக்க வேண்டும்.

மோசடி, ஊழலை நிறுத்திவிடாமல் நாட்டை சீராக்குவது பற்றி நினைத்துப்பார்க்கக்கூட முடியாது.

மோசடியையும் ஊழலையும் நிறுத்திவிட்டால் மாத்திரம் நாட்டை சீராக்கிவிட முடியாதென ஒரு சிலர் கூறுகிறார்கள். அது எங்களுக்கும் தெரியும். ஆனால் மோசடி, ஊழலை நிறுத்திவிடாமல் நாட்டை சீராக்குவது பற்றி நினைத்துப்பார்க்கக்கூட முடியாது. தற்போது இந்த மோசடி, ஊழல்கள் காரணமாகவே எமது பெரும்பாலான துறைகள் சீர்குலைந்துள்ளன. மருந்துகளிலிருந்து திருடுவார்களாயின் சுகாதாரத்தை சீராக்க முடியுமா? மோசடி ஊழல்களை வைத்துக் கொண்டு வீதிகளை அமைக்க முடியுமா? இந்த பாராளுமன்றத்தில் அவர்கள் அமைச்சர் பதவி வகிப்பது திருடுவதற்காகவே என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஜனாதிபதி அமைச்சர் பதவியை கொடுப்பதா இல்லையா என்பதை அவருக்கு அதிகமான பணத்தொகை கிடைக்கின்றதா என்ற அடிப்படையிலேயே கருத்திற்கொள்வார். கரையோரம் பேணல் சுற்றாடல் அமைச்சிற்கே சொந்தமானது. ஒரு காலகட்டத்தில் கரையோரம் பேணல் நாட்டின் சனாதிபதியின் கையிலேயே இருந்தது. ஏனென்றால் பெறுமதிமிக்க காணிகள் கரையோரம் பேணலின் கீழேயே இருந்தன. தொலைத்தொடர்பு அமைச்சுப் பதவி இருந்தது. அதில் ரீ.ஆர்.சீ. ஐ சனாதிபதியின்கீழ் கொண்டுவந்தார். ஏன்? அங்குதான் பெருமளவிலான பணம் சுற்றோட்டத்தில் இருந்தது. நீதி அமைச்சின்கீழ் சட்டவரைஞர் திணைக்களம் இருந்தது. அதனை சனாதிபதியின்கீழ் எடுத்துக்கொண்டார். இலஞ்சம், ஊழலுக்கு வாய்ப்பு கிடைக்கத்தக்க வகையிலேயே இந்த விடயத்துறைகள் பகிர்ந்துசென்றன. இது எமது சமூகம், பொருளாதாரம் சீர்குலைய உறுதுணையாக அமைந்த பலம்பொருந்திய விடயமாகும்.

Crowd At Lawyers Summit

அரசியல் அதிகாரத்துவத்திற்கு எவ்வளவு பணம் கிடைக்கின்றது என்ற விடயத்தின் அடிப்படையில் தான் இந்த கருத்திட்டங்கள் தாமதமாகின்றன

எமது களணிதிஸ்ஸ மின்நிலையம் உள்ளிட்ட கெரவலபிட்டிய மின்நிலைய தொகுதியை இயற்கை வாயுவுக்கு மாறியமைக்க முடியும். இதனை தற்காலிகமாக டீசலில் இயக்கத்தொடங்கினார்கள். செலவு அதிகமாகின்றது. இதனை இயற்கை வாயுவுக்கு சீராக்கி இயங்க தொடங்கியிருந்தால் செலவு மிகவும் குறைவானதாகும். தற்போது 15 வருடங்களுக்கு கிட்டிய காலமாக அதனை செயற்படுத்தாமல் காலந்தாழ்த்தி வைத்திருக்கிறார்கள். அது ஏன்? முதல் முதலில் ரணில் – மைத்திரி முரண்பாடு அந்த இடத்திலிருந்து தான் ஆரம்பித்தது. ரணில் எல்.என்.ஜி.ற்கான கருத்திட்டத்தை ஜப்பானிலிருந்து கொண்டு வந்தார். மைத்திரி கொரியன் கம்பெனியிலிருந்து கொண்டு வந்தார். கொரியன் கம்பெனிக்கு கொடுப்பதா ஜப்பானிய கம்பெனிக்கு கொடுப்பதா என்ற பிரச்சினையிலேயே பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சண்டை ஆரம்பித்தது. ஐந்து வருடங்களாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். கருத்திட்டம் ஸ்தம்பித்தது. அதன் பின்னர் இலங்கை மின்சார சபையும் பெற்றோலியக்கூட்டுத்தாபனமும் இதனை அமுலாக்க முயற்சி செய்தன. குழாய் தொகுதிக்காக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டென்டரை அழைப்பித்தது. டென்டர் திறக்கும் நாள் நெருங்குகையில் அதனை நிறுத்திவிட்டு பசில் ராஜபக்ஷ நிவ்போட்ரஸ் எனும் கம்பெனியை கொண்டு வந்தார். அதன் பின்னர் பசில் ராஜபக்ஷ நிதியமைச்சிலிருந்து போனார். கருத்திட்டம் இன்னும் அதே இடத்தில் தான். இப்பொழுது நாங்கள் ஏறக்குறைய 15 வருடங்களாக ரூபா 70 ற்கு – 120 ற்கு மின்சார அலகொன்றை உற்பத்தி செய்கிறோம். ரூபா 30 ற்கு மின்சார அலகொன்றை உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கையில் பிரஜை இந்த வலுச்சக்திக்காக செலுத்துகின்ற விலை நியாயமானதொன்றல்ல. அரசியல் அதிகாரத்துவத்திற்கு எவ்வளவு பணம் கிடைக்கின்றது என்ற விடயத்தின் அடிப்படையில் தான் இந்த கருத்திட்டங்கள் தாமதமாகின்றன.

உங்களின் தேவையும் எங்களின் தேவையும் ஒன்றேயன்றி இரண்டல்ல.

இந்த ஆட்சியாளர்கள் திட்டவட்டமான அந்த தருணத்தில் செய்ய வேண்டியவற்றை கைவிட்டார்கள். இது மக்களின் பக்கத்தில் நாட்டின் உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தின் பக்கத்தில் மிகவும் பயங்கரமான நிலைமையாகும். நீங்கள் சட்டத்தரணிகள் சமுதாயம் என்ற வகையில் அடிக்கடி இந்த நாட்டின் சனநாயக்கத்திற்காக குரல் கொடுக்கின்ற குழுவினராவீர்கள். நான் உங்களுக்கு ஒரு விடயத்தை கூறி வைக்க வேண்டும். உங்களின் தேவையும் எங்களின் தேவையும் ஒன்றேயன்றி இரண்டல்ல. இந்த சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்த நாட்டை மீளக்கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றாக மல்லுக்கட்டுவோம். அதற்காக அனைவரையும் ஒன்றுசேருமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்.

Upul Kumarapperuma Addressing The Crowd At Lawyers Summit
Lawyers Summit Crowd
Upul Kumarapperuma Gifting The Policy To Anura Kumara Dissanayake At Lawyers Summit
Show More

“புதிய பாராளுமன்றம் கூடும்வரை அரசியலமைப்பிற்கிணங்க நாட்டை ஆட்சிசெய்வோம்” -தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க-

(-”நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – ஜாஎல – 2024.09.04-) அவர்கள் தற்போது தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பதே உண்மை. கடந்த காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி பற்றிய விடயங்களை நாங்களே முன்வைத்தோம். இப்போது அவர்கள்தான் எமது வெற்றியை உறுதிசெய்கிறார்கள். ஒருவாரத்திற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகிய தலதா அத்துகோரள சஜித் – ரணில் ஒன்றுசேராவிட்டால் அவர்கள் தோல்வியடைவார்கள் எனக் கூறினார். இன்று (04) அருந்திக்க பர்னாந்து ஒன்றுசேராவிட்டால் அவர்கள் தோல்வியடைந்துவிடுவதாக […]

(-”நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – ஜாஎல – 2024.09.04-)

Anura Kumara Dissanayake At The Victory Rally Of Ja-Ela

அவர்கள் தற்போது தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பதே உண்மை.

கடந்த காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி பற்றிய விடயங்களை நாங்களே முன்வைத்தோம். இப்போது அவர்கள்தான் எமது வெற்றியை உறுதிசெய்கிறார்கள். ஒருவாரத்திற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகிய தலதா அத்துகோரள சஜித் – ரணில் ஒன்றுசேராவிட்டால் அவர்கள் தோல்வியடைவார்கள் எனக் கூறினார். இன்று (04) அருந்திக்க பர்னாந்து ஒன்றுசேராவிட்டால் அவர்கள் தோல்வியடைந்துவிடுவதாக பாராளுமன்றத்தில் உரத்தகுரலில் கூறினார். அதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பாராளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக செயற்படப்போவதாக கூறினார். அடுத்ததாக தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுக்க முடியாதென ரணில் கூறுகிறார். அதனால் சஜித்திற்கு வாக்களிக்காமல் தனக்கு வாக்களிக்குமாறு அவர் கூறுகிறார். ‘ரணில் எப்படியும் தோல்வியடைவார். தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறுவதை தடுக்கவேண்டுமானால் சஜித்திற்கு வாக்களியுங்கள்’ என சஜித்தின் ஆட்கள் கூறுகிறார்கள். இவை அனைத்திலிருந்தும் தெளிவாகின்ற விடயம் என்ன? அவர்கள் தற்போது தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பதே உண்மை. அதனால் எமக்கு எதிராக கதைகளை சோடிக்க, குறைகூற, பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்ற நிலையை அவர்கள் அடைந்திருக்கிறார்கள். என்னதான் செய்தாலும் தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ள இந்த வெற்றியை எவராலும் திசைத்திருப்ப முடியாது.

People At The Victory Rally Of Ja-Ela

இந்த வெற்றியை எவராலும் திசைதிருப்ப முடியாது.

தற்போது எமது தேர்தல் இயக்கத்தை மேற்கொள்வதை பொதுமக்கள் பொறுப்பேற்று விட்டார்கள். முன்னர் அவர்கள் கூறிக்கொண்டு இருந்தார்கள் “ஐயோ தேசிய மக்கள் சக்தி 3% அல்லவா. அது எப்படி 51% ஆகும் ” என. நாங்கள் வெற்றிபெற்றால் நாடு ஆபத்தில் என்று தற்போது ரணில் கூறத்தொடங்கி இருக்கிறார். தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றால் 22 ஆந் திகதி பாரிய கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்கள் என்று குருநாகல் பக்கத்தில் உள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூறுகிறார். நாங்கள் வெற்றிபெற்றால் 6 மாதங்கள்கூட அரசாங்கத்தை கொண்டுநடாத்த முடியாதென ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றுமொரு பெண் கூறுகிறார். வெற்றிபெறுவது ஒருபுறமிருக்க நினைத்துப்பார்க்ககூட முடியாது என அவர்கள் முன்னர் கூறினார்கள். இப்பொழுது “வெற்றிபெற்றால்” எனக் கூறுகிறார்கள். “தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றால் உங்களின் பன்றிக்கொட்டில் இல்லாமல் போய்விடும்” எனக் கூறுகிறார். அதாவது கொட்டிலுக்குள் அவர்கள் வந்துவிடுவதாக நினைத்தா எனத் தெரியாது. ஜாஎலவில் உள்ள பன்றிக்கொட்டில்களை மூடி அவர்களை பன்றிக்கொட்டிலில் கட்டிவிடுவார்களா என்ற பயம்தான் காரணமோ தெரியவில்லை. எம்மால் வெற்றிபெற முடியாதென தேர்தல் இயக்கத்தின் ஆரம்பத்தில் அவர்கள் கூறினார்கள். இடைநடுவில் ‘வெற்றிபெற்றால்” எனக் கூறுகிறார்கள். “22 ஆம் திகதி ” அப்பச்சி அவர்கள்தான் வெற்றிபெறுவார்கள்” எனக் கூறுவார்கள். இந்த வெற்றியை எவராலும் திசைதிருப்ப முடியாது. அதனால் வெற்றியின் பின்னர் நாங்கள் நாங்கள் பயணிக்கின்ற பாதைபற்றி சற்று பேசுவோம்.

AKD At The Victory Rally Of Ja-Ela

அரசியலமைப்பின்படி ஜனாதிபதியால் அனைத்து அமைச்சுக்களினதும் பொறுப்பினை தனக்குக்கீழ் எடுத்துக்கொள்ளமுடியும்.

நாங்கள் வெற்றிபெற்றதன் பின்னர் எங்கள் மக்கள் ஆணைக்கும் பாராளுமன்றத்தின் மக்கள் ஆணைக்கும் இடையில் துரித திரிபுநிலையொன்று தோன்றும். மொட்டுக்கு வாக்களித்து நாலக்க கொடஹேவாவிற்கு விருப்புவாக்கினைக் கொடுத்தார்கள். இப்போது அவர் சஜித்திடம். எனவே இப்போது 2020 மக்கள் ஆணை எங்கே? அது ஒழிந்துவிட்டது. அதனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடக்கத்திலேயே இந்த பாராளுமன்றத்தை கலைத்துவிடும். அவ்வாறு செய்து அடுத்த பாராளுமன்றம் உருவாகும்வரை அமைச்சரவைக்கு என்னநேரிடுமென அவர்கள் கேட்கிறார்கள். பதற்றப்பட வேண்டாம். அரசியலமைப்பிற்கு அமைவாக நாங்கள் அந்த இடைக்காலத்தில் நாட்டை ஆட்சிசெய்வோம். எப்படி? ஒன்றுதான் நாங்கள் வென்றதும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகும். வேறொருவர் அதற்காக நியமிக்கப்படமுடியும். நால்வரைக்கொண்ட அமைச்சரவையை அமைக்கலாம். அது அரசியலமைபிற்கு அமைவானதாகும். அவ்வாறில்லாவிட்டால் அரசியலமைப்பின்படி ஜனாதிபதியால் அனைத்து அமைச்சுக்களினதும் பொறுப்பினை தனக்குக்கீழ் எடுத்துக்கொள்ளமுடியும். அப்படியும் இல்லாவிட்டால் காபந்து அரசாங்கமொன்றையும் அமைத்துக்கொள்ளலாம். மூன்றுவிதமாக செயலாற்றலாம். அதனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய பாராளுமன்றம் நியமிக்கப்படும்வரை நாங்கள் அரசியலமைப்பிற்கு அமைவாக நாட்டை ஆட்சிசெய்வோம்.

Crowd At The Victory Rally Of Ja-Ela

இப்போது இருக்கின்றவர்களில் 2/3 பங்கினர் அடுத்த பாராளுமன்றத்தில் இல்லையென்பது எமக்குத்தெரியும்.

அடுத்ததாக பாராளுமன்றத் தேர்தல் வரும். இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்ற உறுப்பினர்களின் பெரும்பகுதியினரை வீட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென்ற பாரிய உரையாடலொன்று தற்போது நாட்டில் நிலவிவருகின்றது. இப்போது இருக்கின்றவர்களில் 2/3 பங்கினர் அடுத்த பாராளுமன்றத்தில் இல்லையென்பது எமக்குத்தெரியும். அதன்படி அந்த 2/3 பங்கினரின் இறுதி பாராளுமன்ற அமர்வுதினமே இன்று. அதன்பின்னர் தேசிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருவார்கள். அதில் 25 பேரை உச்ச அளவினராகக்கொண்ட அமைச்சரவையொன்றை நாங்கள் நியமிப்போம். இன்றைய பாராளுமன்ற அமர்வின் பின்னர் அடுத்த ஒக்டோபர் மாதம் முதலாந் திகதியே பாராளுமன்ற அமர்வு நடைபெறும். 25 பேரைக்கொண்ட அமைச்சரவைக்கு அறிவியல்ரீதியாக விடயத்துறைகள் பகிரப்படும். இதுவரை காலமும் அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அல்ல. தமக்கிடையே பகிர்ந்து கொண்டார்கள். நாங்கள் அந்தந்த விடயத்துறைகளுக்கு பொருந்தக்கூடிய ஒருங்கிணைப்புகளைச்செய்து அமைச்சுக்களை பிரித்தொதுக்குவோம்.

The Victory Rally Of Ja-Ela Crowd

நாங்கள் அமைச்சர்களுக்கு கார் பேர்மிட் வழங்குவதை நிறுத்துவோம்

நாங்கள் அமைச்சர்களுக்கு கார் பேர்மிட் வழங்குவதை நிறுத்துவோம். “மரிக் கார் பேர்மிட்” ஐயும் நிறுத்துவோம். இந்த தடவை சரியாக புள்ளடி இடுக. அப்போதுதான் வீட்டுக்கு அனுப்பவேண்டியவர்களை வீட்டுக்கு அனுப்ப முடியும். இந்த 21 ஆந் திகதி இடுகின்ற புள்ளடிமூலமாக வீட்டுக்குப்போவது ரணில் மாத்திரமல்ல: இது மிகவும் பலம்பொருந்திய புள்ளடியாகும். நாங்கள் நீண்டகாலமாக இந்த அரசியலில் ஈடுபட்டிருக்கிறோம். சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறோம். குறைகூறல்களுக்கு இலக்காகி இருக்கிறோம். 06 மாதங்களில் வீட்டுக்குச்செல்வதற்கான ஒரு அரசாங்கத்தை நாங்கள் அமைப்போமா? இல்லை. நாங்கள் இந்த நாட்டின் மிகஉறுதியான அரசாங்கத்தை அமைப்போம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். எமது வெற்றி உறுதியானது. அந்த உறுதிநிலையை ஏற்கெனவே இந்த நாட்டுமக்கள் எற்கெனவே உறுதிசெய்துவிட்டார்கள்.

Mahinda Pathirage At The Victory Rally Of Ja-Ela
JMK Mark At The Victory Rally Of Ja-Ela
Show More