(-NPP பொறியியலாளர்களின் தேசிய மாநாடு – ஸ்ரீ ஜயவர்தனபுர Monarch Imperial இல் – 2024.06.01.-) இதோ எங்கள் முன்னிலையில் இருப்பது இலங்கையால் நிர்மாணிக்கப்பட்ட மிகவும் தலைசிறந்த மனித வளமாகும். உங்களின் அறிவு, ஆற்றல். அனுபவம் இந்த நாட்டை மாற்றியமைக்க போதுமான அளவிலான ஆற்றல்களை நீங்கள் கொண்டுள்ளீர்கள். எமது நாட்டுக்கே இருப்பது பொறியியல் வரலாறாகும். கி.மு. 5 வது நூற்றாண்டில் பண்டுகாபய மன்னன் வசபக் குளத்தை அமைத்தான். அதிலிருந்து ஆரம்பித்த எமது நீர்ப்பாசனத் தொழிற்றுறை மாபெரும் கடல்போன்ற […]
(-NPP பொறியியலாளர்களின் தேசிய மாநாடு – ஸ்ரீ ஜயவர்தனபுர Monarch Imperial இல் – 2024.06.01.-)
இதோ எங்கள் முன்னிலையில் இருப்பது இலங்கையால் நிர்மாணிக்கப்பட்ட மிகவும் தலைசிறந்த மனித வளமாகும். உங்களின் அறிவு, ஆற்றல். அனுபவம் இந்த நாட்டை மாற்றியமைக்க போதுமான அளவிலான ஆற்றல்களை நீங்கள் கொண்டுள்ளீர்கள்.
எமது நாட்டுக்கே இருப்பது பொறியியல் வரலாறாகும். கி.மு. 5 வது நூற்றாண்டில் பண்டுகாபய மன்னன் வசபக் குளத்தை அமைத்தான். அதிலிருந்து ஆரம்பித்த எமது நீர்ப்பாசனத் தொழிற்றுறை மாபெரும் கடல்போன்ற முப்பதாயிரம் குளங்களை அமைக்குமளவுக்கு பொறியியல் தொழில்நுட்பத்திற்கு உயிர்கொடுத்துள்ளார்கள். உலகத்தில் எவரையும் வியப்படையச் செய்கின்ற இராட்சதக் கால்வாய் (யோத எல) கி.மு. ஐந்தாம் நூற்றாண்டளவில் நிர்மாணிக்கப்படுகின்றது. கலா வெவவில் இருந்து திசா வெவ வரை 120 சிறிய குளங்களுக்கு நீரை நிரப்பி பதினோராயிரம் ஏக்கர் வயல்களுக்கு நீர்பாய்ச்சி 54 மைல்கள் நீளம்வரை நீர்ப்பிரவாகத்தை ஏந்தி இராட்சதக் கால்வாய் பாய்ந்து செல்கின்றது. முதல் 17 மைல்களில் சாய்வு ஒரு மைலுக்கு ஒரு அங்குலம் ஆகும். இற்றைக்கு 1500 வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட இன்றைய உலகத்தை வியப்படையச் செய்விக்கின்ற சீகிரியாவில் மிகவும் முன்னேற்றமான நகரத் திட்டம் இருக்கின்றது. அங்கே மிகவும் முன்னேற்றமான வாஸ்துக்கலை நிலவுகின்றது. மிகவும் முன்னேற்றகரமான சூழற்றொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மிகவும் விருத்தியடைந்த பொறியியல் தொழில்நுட்பம் நிலவுகின்றது. எமக்கு மிகவும் நீண்ட பொறியியல் வரலாறு உண்டு. அந்த வரலாறு 17 ஆம் நூற்றாண்டின் பின்னரைப்பகுதி 18 அம் நூற்றாண்டின் முன்னரைப்பகுதில் நீராவித் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டதும் உலகின் கைத்தொழில் துறையில் பாரிய பாயச்சலொன்று இடம்பெறுகின்றது. அதனூடாக புகையிரத சேவைகள், கப்பற் கைத்தொழில், சுரங்கக் கைத்தொழிலிலான முன்னேற்றங்கள், கைத்தொழில் துறைக்குள்ளே நீராவி இயந்திரம் சேர்க்கப்பட்டமை உலகில் பாரிய வெற்றிக்கான பாய்ச்சலாக அமைகின்றது. அதனை நாங்கள் முதலாவது கைத்தொழில் புரட்சி என அழைக்கிறோம்.
நாங்கள் கழித்துக் கொண்டிருப்பது நான்காவது கைத்தொழில் புரட்சியின் இறுதிப்பகுதியில் ஐந்தாவது கைத்தொழில் புரட்சியின் தொடக்கத்திலாகும். இந்த உலகில் தோன்றிய புதிய தொழில்நுட்ப மாற்றங்களை உறிஞ்சிக்கொள்வதில் நாங்கள் வெற்றிபெற்றோமா எனும் கேள்வி எம்முன் நிலவுகின்றது. இந்த கைத்தொழில் புரட்சிகளிலிருந்து தோன்றிய பொறியியல் அறிவு, தொழில்நுட்ப அறிவு, பொருளியல் மாற்றங்களை உறிஞ்சிக்கொண்ட நாடுகளால் அது அபிவிருத்தியை நெருங்குவதற்கான பாரிய பாய்ச்சலாக அமைந்தது. அதன் பெறுபேறாக 433 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை நிர்மாணிக்க வியட்நாமிற்கு இயலுமை கிடைக்கின்றது. தென் கொரியாவினால் 1.7 ரில்லியன் பொருளாதாரத்தை நிர்மாணிக்க இயலுமாயிற்று. பங்களாதேஷின் 459 பில்லியன் டொலர் பொருளாதாரமானது உலகில் தோன்றிய புதிய மாற்றங்களுடன் சார்புரீதியாக தமது கொள்கைகளை அமைத்துக்கொண்டமையால் ஆசியப் பிராந்தியம் 21 ஆம் நூற்றாண்டின் அபிவிருத்திப் பிராந்தியமாகி இருக்கின்றது. எனினும் இலங்கை 70 பில்லியன் டொலரையே நிர்மாணித்துள்ளது. உலகில் தோன்றிய புதிய மாற்றங்களை புதிய நிலைமாறல்களை சமூக மாற்றத்துடன் பொருளாதாரத்தின் முன்னேற்றத்துடன் சேர்த்துக்கொள்ளத் தவறிய நாடுதான் எமது நாடு. அதன் காரணமாகவே கொரியா 685 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டுகையில் வியட்நாம் 380 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டுகையில் பங்களாதேஷ் 70 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டுகையில் இலங்கை 12 பில்லியன் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டுகின்றது.
எமது ஆட்சியாளர்கள் வரலாற்றுமோகத்தில் தேசத்தை சிறைவைத்து இலங்கையை உலகத்திலிருந்து விலக்கிவைத்திருந்த ஆட்சியாளர்கள், உலகம் வேகமாக பயணித்துக் கொண்டிருக்கையில் நாங்கள் அவற்றின் பின்னால் ஆமைவேகத்தில் சென்றுகொண்டிருக்கிறோம். இந்த நிலைமையானது வெறுமனே தரவுகளுக்குள்ளே, இறக்குமதி – ஏற்றுமதிக்குள்ளே, தொழில்நுட்ப வறுமைநிலைக்குள்ளே மாத்திரம் நிலவ மாட்டாது. அது சமூகத்தில் அனர்த்தமொன்றை பேரழிவொன்றை உருவாக்கும்.
அதனால் 54% இற்கு கிட்டிய மக்கள் பலவிதமாக ஏழ்மைநிலையினால் பீடிக்கப்பட்டுள்ள நாடாக மாறியுள்ளது. சனத்தொகைகளில் 68% இற்கு சரியான உணவுவேளையொன்றை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
34 இலட்சம் குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு 10 கிலோ அரிசியை வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்கவேண்டிய நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் தொடர்ந்தும் இந்த பயணத்தை இவ்விதமாகத் தொடர இடமளிக்கப் போகிறோமா? நாங்கள் இதனை மாற்றியமைப்போம்.
ஒவ்வொரு பிரசைக்கும் தமது மனச்சாட்சியுடன் பிரசைகளின் அவலக்குரல் கேட்குமாயின், கண்களுக்குப் புலப்படுமாயின், பிரசைகளின் வேதனைகள், அவர்களின் வாழ்க்கையின் துன்பங்களை இதயத்தால் உணரத்தக்கதாக இருக்குமாயின் இந்த நிலைமையை மௌனமாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்காக முன்னணிக்கு வரவேண்டியது ஒவ்வொரு பிரசையினதும் செயற்பொறுப்பாகும். அதனை மாற்றியமைப்பதற்காக தெம்புடைய, நம்பிக்கை கொண்ட, எதிர்பார்ப்புடைய மாபெரும் மனிதக்குழுமத்தின் சேர்க்கைதான் தேசிய மக்கள் சக்தியாகும். அதனைச் சுற்றி ஒன்றுசேருமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். நாங்கள் அதனை மாற்றியமைத்திட வேண்டும். இதனை மாற்றியமைக்க வேண்டுமாயின் பொருளாதாரத் தேகத்திலும் சமூகத் தேகத்திலும் பாரிய அதிர்வினை ஏற்படுத்த வேண்டியுள்ளது. நாங்கள் எவ்வாறு இந்த அதிர்வினை ஏற்படுத்துவது? புதியவற்றைக் கண்டுபிடிக்கின்ற புதியவற்றை உருவாக்குகின்ற சமூகமொன்றை நாங்கள் நிர்மாணிக்கவேண்டும். வழமைபோல் விவசாயத்தை, கைத்தொழிலை, அன்றாட வாழ்க்கையை பேணிவந்து இந்த சமூகத்தை மாற்றிவிட முடியாது. இந்த சமூகத்தை மாற்றியமைத்திட வேண்டுமாயின் புதியவற்றை நிர்மாணிக்கவேண்டும். புத்தாக்கங்களை உருவாக்கிட வேண்டும். புதிய ஆராய்ச்சியாளர்கள், புதிய எண்ணக்கருக்கள், புதிய கருத்துக்கள், புதிய சந்தைகள் அவசியமாகும்.
எமது நாட்டில் முக்கியமான நிறுவனங்களாக அமைவன மிகவும் அதிகமாக பணப்புழக்கம் இடம்பெறுகின்ற நிறுவனங்களாகும். மிக அதிகமாக நிர்மாணிப்புகள் இடம்பெறுகின்ற இடத்தைத்தான் அமைச்சர் அதிகமாக விரும்புவார். நெடுஞ்சாலைகள் அமைச்சு கிடைக்குமாயின் சனாதிபதியின் மிகச்சிறந்த கவனிப்பு அவருக்கு கிடைக்கும். துறைமுகங்கள் அமைச்சு கிடைப்பவருக்கு சனாதிபதியின் மிகச்சிறந்த கவனிப்பு அவருக்கு கிடைக்கும். வலுச்சக்தி அமைச்சு கிடைக்குமாயின் சனாதிபதியின் மிகச்சிறந்த கவனிப்பு அவருக்கு கிடைக்கும். விஞ்ஞான, தொழில்நுட்பவியல் அமைச்சு கிடைப்பவருக்கு சனாதிபதியின் கவனிப்பு கிடைக்கவே மாட்டாது. அதனால் இதில் மாற்றத்தை ஏற்படுத்த IT அத்தியாவசியமாகும். எதிர்வரும் 29 ஆந் திகதி உலகத்தினதும் இலங்கையினதும் ஆராய்ச்சியாளர்களுடன் பாரிய கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது பல்கலைக்கழகங்களால் உருவாக்கப்பட்ட பெருந்தொகையானோர் இன்று உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் விஞ்ஞானிகள் மண் பற்றி, புதிய தொழில்நுட்பம் பற்றி பாரிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். புற்றுநோய்க்கு நிரந்தர மருந்தினைக் கண்டுபிடிக்க இலங்கை விஞ்ஞானியொருவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். உலகம் பூராவிலும் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள அவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளோம். பலர் 29 ஆந் திகதி இலங்கைக்கு வருகிறார்கள். இன்றேல் தொழில்நுட்பத்துடன் இணைந்து புதியதொரு கட்டத்திற்கு எமது நாட்டை மாற்றியமைக்க முயற்சி செய்து வருகிறோம்.
அடுத்ததாக சிறந்த நோக்கினைக்கொண்ட தலைவரொருவர் எமக்குத் தேவை. நோக்குடைய தலைவர் தேவைப்படுவது அரசியலுக்காக மாத்திரமல்ல. ஐ.ரீ. துறையை முன்னெடுத்துச் செல்லக்கூடிய, பலம்பொருந்தியவகையில் முட்டிமோதக்கூடிய, சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, எதிர்காலத்தைக் காணக்கூடிய சிறந்த நோக்கினைக்கொண்ட தலைவர்களை உருவாக்க வேண்டும். அந்த அத்தனை துறைகளும் நிர்மாணிக்கப்படவேண்டும். அரசியலுக்கு மாத்திரமே சிறந்த நோக்கினைக்கொண்ட தலைவர் தேவையென நாங்கள் பெரும்பாலும் நினைக்கிறோம். அவ்வாறு நினைக்கக் காரணம் எமது நாட்டில் நோக்கு இல்லாத தலைவர்கள் அரசியல்வாதிகளாக அமைவதாலாகும். எதிர்காலத்தைக் காண்கின்ற, அதற்கான திட்டங்களை வகுக்கின்ற அதற்கு தலைமைத்துவம் வழங்குகின்ற தலைவர்களை உருவாக்கவேண்டும். அதற்காக பாரிய அழுத்தங்களைக்கொண்ட ஆட்களாக அமையவேண்டும். அவர்கள் கண்டுபிடிக்கின்றவை, அவர்கள் உருவாக்குகின்ற கருத்திட்டங்கள், ஈடுபடுத்துகின்ற தொழில்முனைவோர் என்றவகையில் அந்த அனைத்திற்குமே அழுத்தம் கொடுக்கக்கூடிய ஆட்கள் உலகத்திற்காக புதியவற்றை நிர்மாணிக்கையில் அந்த அழுத்தத்தைக்கொண்ட ஆட்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். நிர்மாணத் தொழிற்றுறையில், வலுச்சக்தி துறையில், புதிய திசைகளைத் தெரிவுசெய்கின்ற வழிகாட்டுகின்ற தலைவர்கள் அவசியமாகும். எங்களுக்கு மாரி கியூரி, ஐன்ஸ்டைன், ஸ்டீவ் ஜோன்ஸ் போன்றவர்கள் அவசியமில்லையா? அந்த அனைத்து துறைகளிலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் அழுத்தத்தைக்கொண்ட தலைவர்களாவர். அதைப்போலவே எமக்கு வரக்கூடிய சவால்களை மீறிச்செல்லக்கூடிய தலைமைத்துவம் எமக்கு அவசியமாகும். சவால்களுக்கு மத்தியில் மண்டியிடுகின்ற, சவால்களைக்கண்டு அஞ்சியோடுகின்ற, வாரிச்சுருட்டிக் கொள்கின்ற தலைமைகளால் எமக்குப் பயனில்லை.
நான் இங்க மீண்டும் கூறுவது அரசியல்வாதிகளைப் பற்றி மாத்திரமல்ல. சவால்களுக்கு மத்தியில் தப்பியோடியிருந்தால் அணுக்குண்டு தயாரிக்கப்பட்டிருக்க மாட்டாது. மனித குலம் இந்த அபிவிருத்தியை அடைய சவால்களை வென்றெடுக்ககூடிய தலைமைத்துவம் அவசியமாகின்றது. அவர்கள் தான் Crown Makers. இதனை முற்றாகவே மாற்றியமைக்கவல்ல தலைமைத்துவ சமுதாயமொன்று எமக்கு அவசியமாகும். இதுதான் இந்த மாநாட்டின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது. அதனால் நாமனைவரும் கிரவுன் மேக்கர்களாவோம். அதற்காக உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறோம்.
நாங்கள் பலவற்றை இழந்திருக்கிறோம். உலகில் தோன்றுகின்ற புதிய மாற்றங்களுக்கு இணையாக, சமாந்தரமாக எமது நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்ல வேண்டும். நாங்கள் உலகத்துடன் பல காத தூரத்தில் பின்னால் இருக்கிறோம். இதனை மாற்றியமைத்திட, ஒட்டுமொத்த முறைமையையும் மறுபுறம் மாற்றவேண்டுமாயின், வேகமாக திடசங்கற்பத்துடன், அரசியல் தலைமைத்துவத்துடன் ஒருங்கிணைந்த மக்கள் இயக்கமொன்று அவசியமாகும். அது ஏன்? இன்றைய உலகில் நிர்மாணத் தொழிற்றுறையின் 11 மில்லியன் டொலர்களாகும். 2030 அளவில் நிர்மாணத் துறையின் பொருளாதாரம் 17 ரில்லியன் டொலர்களாக ( 17,000 பில்லியன் டொலர்) அமையும். எமது நாட்டின் நிர்மாணத் தொழிற்றுறை 12 மில்லியன் டொலராகும். 22 மில்லியன் மக்களுக்கு மாத்திரம் அவசியமான நிர்மாணிப்புகளை மேற்கொண்டு எமது நிர்மாணத் தொழிற்றுறையை முன்னெடுத்துச் செல்லமுடியுமா? இந்த நிர்மாணத் தொழிற்றுறை இந்த இடத்திலிருந்து முன்நோக்கி நகரவேண்டும். சாத்தியவளம், ஆற்றல்கள், திறன்கள் நிறைந்த பலம்பொருந்திய கம்பெனிகள் இலங்கையில் இருக்கின்றன. நாங்கள் அவர்களை பாராட்டவும் பெறுமதியளிக்கவும் வேண்டும். அவர்களுடன் உலகின் நிர்மாணத் தொழிற்றுறை சந்தையில் பிரவேசிப்பதற்காக அவசியமான வழிகாட்டல்கள், பங்களிப்பு, அரச அனுசரணை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியால் வழங்கப்படுமென்பதற்கு உத்தரவாதமளிக்கிறோம். 17,000 பில்லியன் டொலர்களில் ஒரு பகுதியையாவது நிர்மாணத் தொழிற்றுறையிலிருந்து ஈட்டிக்கொள்ள வேண்டும்.
உலகில் மென்பொருள் துறையில் வேகமான வளர்ச்சி இடம்பெற்று வருகின்றது. அது நாங்கள் கைவிட்டுள்ள ஒரு துறையாகும். வெள்ளைக்காரன் நாட்டைவிட்டுச் செல்லும்போது எமது தலைவர்களுக்கு கொடுத்துச் சென்றது தேயிலை, இரப்பர், தெங்கு மாத்திரமாகும். அதற்கு அப்பால்சென்று உலகத்தைக் காண்பதற்கான நோக்கு இருக்கவில்லை. IT துறை உலகில் வேகமாக வளரச்சியடைந்து வருவது அறுபதாம் தசாப்தத்தின் பின்னரைப் பகுதியில் ஆராய்ச்சிகள் மூலமாக வெளியில் வருகின்றது. எனினும் நாங்கள் அதற்குத் தயாராகவில்லை. எமது அண்டை நாடான இந்தியா IT துறையுடன் சமாந்திரமாக தமது பொருளாதார, கல்விக் கொள்கைகளை வகுத்துக் கொள்வதில் வெற்றியடைகின்றது. அதன் விளைவாக இந்தியா தற்போது 150 பில்லியன் பொருளாதாரத்தைப் பெற்று வருகின்றது. உலகில் எண்ணெய் எற்றுமதி செய்கின்ற பிரதான நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவின் பொருளாதாரம் 113 பில்லியன் டொலர்களாகும். உலகின் பிரதானமான மென்பொருள் நிறுவனங்களில் உயர்ந்த இடத்தை இந்தியா வகிக்கின்றது. கூகல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் சுந்தர் ஓர் இந்தியராவார். அதைப்போலவே அடோபி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் சங்கான நாராயணன் ஓர் இந்தியராவார். ஐ.பீ.எம். நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் சத்யா நாதில்லா ஓர் இந்தியராவார். உலகம் எந்த திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது? எந்த வகையைச்சேர்ந்த பொருளாதாரத்தை நிர்மாணிப்பது எனும் நோக்கு இந்தியத் தலைவர்களிடம் இருந்தது.
தற்போது வெளிநாடு செல்பவர்களிடமிருந்து எமக்கு ஆறு பில்லியன் டொலர் வரை கிடைக்கின்றது. வெளிநாடு சென்றவர்களிடமிருந்து பெரும்பங்கு மத்திய கிழக்கில் இருந்தே கிடைக்கின்றது. உலகின் IT சந்தையில் பெரும்பகுதியை கைப்பற்றிக்கொள்ள தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் திட்டங்களை வகுத்துள்ளோம். 2023 அளவில் 19 பில்லியன் பெறுமதியான மென்பொருள் பொறியியலாளர் அவசியமாகி இருந்தார்கள். எம்மால் கார் மார்க்கெற்றுடன் அல்லது போன் மார்க்கெற்றுடன் போட்டியிட முடியாமல் போகும். எமக்கு IT மார்க்கெற்றில் இந்தியாவுடன் இணைப் போட்டியாளர்களாக மாறக்கூடிய இயலுமை நிலவுகின்றது. இணைச் சந்தையில் ஒரு பங்குடன் மாத்திரமல்ல, உலகத்தாருக்கு அவசியமான மென்பொருள் நிர்மாணிப்பில் ஒரு பங்கினை கைப்பற்றிக் கொள்வதற்கான கம்பெனியொன்றை நாங்கள் ஆரம்பிக்க வேண்டும். முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவேண்டிய நிலை எமக்கு ஏற்படும். தொடக்கத்தில் எம்மால் தனித்து பிரவேசிப்பதற்கான சாத்தியப்பாடு இல்லாதிருக்கக்கூடும். நாங்கள் ஏனைய மென்பொருள் கம்பெனிகளுடன் ஒன்றுசேர்ந்து வேர்ல்ட் மார்க்கெற்றிற்கு செல்வதற்கான திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும்.
ஹைட்றோ பவர், சோலா பவர், வின்ட் பவர் சாத்தியப்பாடுகள் நிலவுகின்றன. இன்றளவில் எமது அனைத்து மின்நிலையத் தொகுதிகளையும் சேர்த்தால் நான்கு கிகாவொற் மாத்திரமாகும். 2040 இல் நாற்பது கிகாவொற் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் வின்ட் பவரில் மாத்திரம் எமக்கு 40 கிகாவொற்றுக்கு மேலான கொள்திறன் நிலவுகின்றது. மிகச்சிறந்த சாத்தியப்பாடு ஆகும். உலகத்தின் எதிர்கால மார்க்கெற் பீன் றைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி சாத்தியவளங்களிலேயே நிலவுகின்றது. அதற்கான மிகச்சிறந்த சாத்தியவளங்கள் எமது கைத்தொழில்கள், எமது பாவனையாளர்களுக்கு நியாயமான விலையில் மின்சாரத்தை வழங்குவதற்காக மாத்திரமல்ல. அதற்கு அப்பால் சந்தையில் பிரவேசிப்பது எவ்வாறு என சிந்தித்துப் பார்க்க வேண்டும். அந்த இடத்தில் எமக்கு சாத்தியப்பாடு நிலவுகின்றது. அதைப்போலவே மெராயன் தொழிற்றுறையிலும் எமக்கு பாரிய சாத்தியவளம் நிலவுகின்றது. இந்த 21 ஆம் நூற்றாண்டு ஆசியாவிற்கு உரித்தானதெனில் ஆசியாவின் பிரதான கேந்திரநிலையம் இலங்கையாகும். நாங்கள் ஆசியாவின் நாடுகளை வெற்றிகொள்வதற்கான திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். வெற்றியின் பெறுபேறுகளை எவ்வாறு இலங்கைக்கு கொண்டுவருவது. “தனியாக தென்னை மரம் வளர்வதுபோல் நாடுகள் கரைசேர மாட்டாது” ஏனைய நாடுகளுடன் நிலவுகின்ற ஒருமைப்பாடு, அதைப்போலவே ஏற்படுகின்ற வளர்ச்சிகள், அதைப்போலவே ஏற்படுகின்ற அபிவிருத்திகள் என்பவற்றுடன் நேரொத்தவகையில் நாங்கள் எவ்வாறு சீராக்கிக்கொள்வது? ஆசியா பாரிய அபிவிருத்தி பற்றி 21 ஆம் நூற்றாண்டில் நம்பிக்கை வைத்திருக்குமாயின், ஆசியாவின் ஏனைய நாடுகள் அடைகின்ற வெற்றிகளின் நன்மைகளை எவ்வாறு இலங்கைக்கு கொண்டுவருவது. அவ்வாறு கொண்டு வருகையில் மெராயன் தொழிற்றுறை எமது நாட்டின் இடஅமைவின்படி முக்கிய இடம் வகிக்கின்றது. நாங்கள் அது பற்றிக் கவனஞ் செலுத்தி இருக்கிறோம்.
அதைப்போலவே எமக்கு கனிய வளங்கள் தாராளமாக பாரிய அளவில் நிலவுகின்றன. அது சம்பந்தமாக நீண்டகாலமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பல ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள். எமது அரசியல் அதிகாரிகளுக்கு அவசியமாவது மிகவும் பலம்பொருந்திய நிலையான நோக்கினைக்கொண்ட பயணப்பாதையல்ல. அவர்களுக்கு சதாகாலமும் தேவைப்பட்டது பயிங் அன்ட் செலிங் மாத்திரமே. இப்போதே எடுத்து இப்போதே விற்பது. அவர்களுக்கு இல்மனைற் படிவத்தை மணலுடன் ஏற்றியனுப்புவது இலாபமாகும். பொஸ்பேற் படிவத்தை மண்ணாகவே விற்பனை செய்வது இலாபமாகும். 1998 இல் மிகவும் முக்கியமான வழக்குத் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. இந்த வழக்குத் தீர்ப்பினை ஒருபுறம் வைத்துவிட்டு பொஸ்பேற் படிவினை மண்ணாகவே தற்போது விற்கிறார்கள். எம்மிடமுள்ள வளங்கள் மிகவும் நன்றாக முற்றாய்வு செய்யப்பட்டுள்ளன. புதிதாக முற்றாய்வு செய்யப்படவேண்டிய அவசியமில்லை. புதிய தொழில்நுட்பத்துடன் விருத்திசெய்யக்கூடிய ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகள் இலங்கையில் இருக்கிறார்கள். அவர்களுடன் ஒன்றுசேர்ந்து புதிய பொருளாதார திசைக்கு அவசியமான உற்பத்திகளில் நாங்கள் கைவைக்கவேண்டும். எங்களிடமிருந்து கைநழுவிச் சென்றவற்றை நாங்கள் வேகமாக பின்தொடர்ந்துசென்று கைப்பற்றிக்கொள்ள வேண்டும். 20 ஆம் நூற்றாண்டிலும் இந்த பாதை பற்றிய கலந்துரையாடலொன்று நிலவியது. திரு விமலசுரேந்திர 1918 இல் லக்ஷபான மின்நிலையத்தை முன்மொழிகிறார். அந்த கைத்தொழில் புரட்சிக்கு ஊக்கியாக அமைந்தது மின்னியலாகும். 1918 இல் சோவியத் தேசத்தின் அதிகாரத்தை லெனின் கைப்பற்றிக்கொண்ட பின்னர், ஒரு பெண் உடகவியலாளர் லெனினிடம் கேட்கிறார், ” நீங்கள் ரஷ்யாவில் சோசலிஸத்தை எப்போது முடிவுறுத்தப் போகிறிர்கள்? என்று. அவர் கூறுகிறார் ” ரஷ்யாவை எப்போது இலத்திரனியல்மயமாக்கி முடிக்கிறோமோ, அன்றுதான்”. என்று. அன்று கைத்தொழில் புரட்சிக்கு அவசியமான தொழில்நுட்பத்தின் பிரதானமான சாதனத்தையும் ஊக்கியையும் வழங்கியது மின்னியலாகும்.
அன்று ரஷ்யாவில் அந்த லெனின் பிரகடனம் வரும்போது இலங்கையில் திரு. விமலசுரேந்திர லக்ஷபான மின்நிலையத்தை முன்மொழிகிறார். மேலதிக மின்சாரத்தைக்கொண்டு புகையிரதம் ஓட்டப்படவேண்டுமென அவர் கூறினார். அரசியல் ஒரு பண்டைய கால அதிகார நிலையாகும். இருந்ததோ நவீனத்துடன் பின்னிப்பிணைந்த அரசியல் அதிகாரசபையல்ல. அதனால் அந்த முன்மொழிவுகள் பயனற்றுப் போயின. ஔடதத்துறையில் பாரிய ஆராய்ச்சிகள், உற்பத்திகள் பற்றி பேராசிரியர் சேனக்க பிபிலே முன்மொழிந்தார். அவை ஏற்புடையதாகவில்லை. உலகில் வாஸ்துக்கலையில் ஏற்படுகின்ற வளர்ச்சிகளை இலங்கையில் உள்ள கலாசாரத்துடன் ஒருங்கிணைத்து அந்த துறையிலான வளர்ச்சிகளை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்வது என்பது பற்றி மிதின் த சில்வா போன்றவர்கள் உரையாடுகிறார்கள். அவற்றை உள்வாங்கக்கூடிய அரசியல் தலைமைத்துவம் எமக்கு இருக்கவில்லை. இருந்ததோ பழமைவாத தலைமைகளாகும். தற்போது எம்மெதிரில் இருப்பது உருவாகி வருகின்ற இந்த மாற்றங்களை நன்றாக உள்வாங்கி எமது நாட்டை வேகமான மாற்றத்திற்கு இலக்காக்குவதாகும். இங்கு குழுமியுள்ள ஆயிரக்கணக்கான பொறியிலாளர்களாகிய நீங்கள் இந்த பணியில் முன்னணிவகித்து செயற்பொறுப்பினை ஈடேற்றவேண்டுமென நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இந்த நாட்டைக் கைவிட்டுச்சென்ற புத்திஜீவிகள், தொழில்வாண்மையாளர்கள் பெருந்தொகையானோர் இருக்கிறார்கள். அவர்களின் அறிவும் அனுபவமும் இந்த தாய்நாட்டுக்கு அவசியமாகி உள்ளது. இந்த மாபெரும் மனிதக் கூட்டத்தினாலேயே இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
இலக்கியம், கலை ஆகிய துறைகளிலும் எமக்கு மாற்றம் அவசியமாகும். வெறுமனே அரசாங்க மாற்றம், ஆட்களின் மாற்றமல்ல. மறுமலரச்சி யுகமொன்று எமக்கு அவசியமாகும். முழுமையான முறைமையுமே சீரழிந்த ஒரு நாட்டை எளிதில் நிமிர்த்திவைக்க முடியாது. ஒவ்வொரு துறையிலும் புதிய மாற்றமொன்று அவசியமாகும். அதற்காக ஒரு நாடு தங்கியிருப்பது தொழில்நுட்பவியலாளர்கள், பொறியியலாளர்கள் ஆகிய உங்களின் கைகளிலாகும். அதில் முக்கிய இடம் வகிப்பவர்கள் நீங்களே. அதனால் உங்களின் பங்களிப்பு, இடையீடு இந்த மாற்றித்தின்போது அத்தியாவசியமானதாகும். அதற்காக முன்வருமாறு உங்களை அழைக்கிறோம்.
(-Colombo, May 28, 2024-) உள்ளூரதிகாரசபை ஆளுகைப் பிரதேசங்களுக்காக ஆலோசனைக் குழுக்கள் நியமிக்கப்படுவதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியால் அடிப்படை உரிமைகள் மனுவொன்று இன்று (28) பிற்பகல் 2.30 இற்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இத்தருணத்திற்காக தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வட்டகல, கொழும்பு மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான அசித்த நிரோஷணவை உள்ளிட்ட குழுவினர் கலந்துகொள்வர்.
(-Colombo, May 28, 2024-)
உள்ளூரதிகாரசபை ஆளுகைப் பிரதேசங்களுக்காக ஆலோசனைக் குழுக்கள் நியமிக்கப்படுவதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியால் அடிப்படை உரிமைகள் மனுவொன்று இன்று (28) பிற்பகல் 2.30 இற்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இத்தருணத்திற்காக தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வட்டகல, கொழும்பு மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான அசித்த நிரோஷணவை உள்ளிட்ட குழுவினர் கலந்துகொள்வர்.
(-தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட பெண்கள் மாநாடு – 2024.05.25-) சனாதிபதி தேர்தல் முறைப்படி நடாத்தப்படவேண்டும். எனினும் சனாதிபதி தேர்தலை நடத்தாமல் மேலும் ஐந்து வருடங்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கொடுக்கப்பட வேண்டுமென ரங்கே பண்டார கூறியிருந்தார். இலங்கையில் அவ்வாறு செய்வதற்கு இனிமேலும் இடமில்லை என நான் ரங்கே பண்டாரவிற்கு வலியுறுத்திக் கூறுகிறேன். அதைப்போலவே வேறு எந்த வேட்பாளரையும் போட்டியிட இடமளிக்காமல் ரணில் விக்கிரமசிங்கவை மாத்திரம் இடமளிக்குமாறு வஜிர அபேவர்தன கூறுகிறார். அதாவது தேர்தலில் ரணிலால் வெற்றிபெற […]
(-தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட பெண்கள் மாநாடு – 2024.05.25-)
சனாதிபதி தேர்தல் முறைப்படி நடாத்தப்படவேண்டும். எனினும் சனாதிபதி தேர்தலை நடத்தாமல் மேலும் ஐந்து வருடங்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கொடுக்கப்பட வேண்டுமென ரங்கே பண்டார கூறியிருந்தார். இலங்கையில் அவ்வாறு செய்வதற்கு இனிமேலும் இடமில்லை என நான் ரங்கே பண்டாரவிற்கு வலியுறுத்திக் கூறுகிறேன். அதைப்போலவே வேறு எந்த வேட்பாளரையும் போட்டியிட இடமளிக்காமல் ரணில் விக்கிரமசிங்கவை மாத்திரம் இடமளிக்குமாறு வஜிர அபேவர்தன கூறுகிறார். அதாவது தேர்தலில் ரணிலால் வெற்றிபெற முடியாதென்பதை அவர்கள் அறிவார்கள். அதைப்போலவே சஜித் பிரேமதாசவின் கூட்டங்களில் கோமாளிகள் இருப்பதுபோல் உணரப்படுகின்றது. இலங்கையின் ஒட்டுமொத்த அரசியலும் தற்போது தேசிய மக்கள் சக்தியை மையப்படுத்தியதாக நிலவுகின்றது. இதற்கு முன்னர் பொறுப்பினை ஈடேற்ற, நன்றிக்கடன் செலுத்த எனக்கூறி பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு கட்சிகளுக்கு வாக்களித்த பெரும்பாலானோர் இங்கு குழுமி இருக்கிறார்கள். இதுவரை ஏனைய கட்சிகளுக்கு வாக்களித்த பெருந்தொகையானோர் எம்முடன் இணைந்துள்ளதாலேயே தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறுகின்றது. இதற்கு முன்னர் பாரியளவில் அரசியல்மீது அக்கறை செலுத்தாதவர்களும் வேறு கட்சிகளுக்கு வாக்களித்தவர்களும் ஏன் எம்மைச் சுற்றிக் குழுமி இருக்கிறார்கள்?
பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியைப் பெற்றுக்கொடுக்கவே எவரும் மிகவும் அதிகமாக முயற்சி செய்கிறார்கள். எனினும் தற்போது பாடசாலைக் கல்வியை சீரழித்து, ரியுஷன் கல்விக்காக பாரிய சுமையை தாங்கிக்கொள்ள வேண்டியநிலை அவர்களுக்கு எற்பட்டுள்ளது. பிள்ளை கல்வி கற்பது தற்போது வீட்டுக்கு சுமையாக மாற்றப்பட்டுள்ளது. பிள்ளைகளுக்கு சரியான கல்வியை பெற்றுக்கொடுப்பது பெற்றோருக்கு பாரிய சுமையாக விளங்குகின்றது. அந்த சுமையிலிருந்து உங்களை விடுவித்து அரசாங்கத்தின் பொறுப்பாக மாற்றுவோமென நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம். நாட்டை மீட்டெடுத்திட வேண்டுமாயின் முன்னேற்றமடைந்த மனித வளம் அவசியம். இந்த நாட்டை சீராக்க வேண்டுமானால் அறிவும் பண்பும் நிறைந்த பிள்ளைகள் தலைமுறையொன்று எமக்குத் தேவை. அதனால் இற்றைவரை அரசாங்கங்கள் ஈடேற்றியிராத மிகப்பெரிய செயற்பொறுப்பினை நாங்கள் எற்றுக்கொள்கிறோம். அடுத்ததாக பிள்ளைகளுக்கு நல்ல தொழில் தேவை. உண்மையைக் கூறுவதானால் தேவைப்படுவது நல்ல தொழிலல்ல: நல்ல வருமான வழிவகையாகும். எனினும் பெற்றோர்களையும் வளர்ந்த சூழலையும் கைவிட்டு எப்படியாவது வெளிநாட்டுக்குச் செல்லவே தற்போது இளைஞர்கள் முயற்சி செய்கிறார்கள். அதனால் பெற்றோர்கள் நிர்க்கதிநிலையில் இருக்கிறார்கள். சிறந்த வருமான வழியைத் தேடிக்கொள்வதற்கான முறையான வாய்ப்பு கிடையாது. அவர்கள் கொழும்பில் கொங்கிறீட் கலவைசெய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றபோது போதைப்பொருட்களுக்கு அடிமையாகிறார்கள். தற்போது ஊர்கள்தோறும் போதைப்பொருட்கள் வியாபித்து விட்டன. அவற்றிலிருந்து பிள்ளைகளை மீட்டெடுத்து பெற்றோர்கள் அச்சமும் சந்தேகமும் இன்றி பிள்ளைகளுக்கு எதிர்காலத்தை நிர்மாணித்துக் கொடுக்கின்ற பொறுப்பினை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
அடுத்ததாக எமது மிகப்பெரிய எதிர்பார்ப்பு வீடு, வாசலை அமைத்துக்கொள்வதே. நனையாமல் இருப்பதற்காக கூரையொன்றை அமைத்துக்கொள்வோம் என்றே முன்னர் கூறினார்கள். ஆனால் இன்றளவில் பல தலைமுறையினர் வசிப்பதோ முழு வாழ்நாளிலும் மல்லுக்கட்டினாலும் அரைவாசி அமைத்துக்கொண்ட வீட்டில் தான். அதனால் இந்த நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நனையாமல், நல்ல காற்றோட்டம் நிலவுகின்ற வீடொன்றை அமைத்துக் கொடுப்பதற்கான பொறுப்பினை எங்கள் அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. அத்துடன் இன்றளவில் சனத்தொகையில் நூற்றுக்கு நாற்பத்தெட்டு வீதமானோர் தொற்றா நோய்களுக்கு இரையாகி இருக்கிறார்கள். அவர்களை அவற்றிலிருந்து மீட்டெத்து ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம். இந்த பேரழிவிலிருந்து மக்களை விடுவித்துக்கொள்கின்ற சாதகமான சுகாதார பழக்கவழக்கங்கள், சிறந்த உணவுவேளையொன்றை வழங்குதல், தரமான மருந்துகளை வழங்குதல் மற்றும் சுகாதார ஆராய்ச்சிகளை முறைப்படி மேற்கொள்ளல் அரசாங்கத்தின் பொதுவான பொறுப்பாக ஏற்றுக்கொள்வோம். சிசுவை வயிற்றில் சுமந்துள்ள தாய் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளமை இன்றைய நிலைமையாகும். அதனால் பிள்ளையும் தாயும் இருவருமே நோயாளியாகி இருக்கிறார்கள். இதனால் பிரஜைகளுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவுவேளையொன்றை வழங்கி, ஆரோக்கியமான வாழ்க்கையின் முதலாவது அவசியப்பாட்டினை நிறைவுசெய்வோம். தற்போது எழுபத்தைந்து வயதாகின்ற திருவாளர் ரணில் விக்கிரமசிங்கவினதும் அதே வயதுடைய எமது ஊரிலுள்ள தகப்பனதும் நிலைமை சமமானதா? அரசாங்கங்களுக்கு வாக்குகளை அளித்த எமது ஊரிலுள்ளவர்கள் குறைந்த காலம் வசித்தும் வாக்குகளைப் பெற்றவர்கள் நீண்டகாலம் உயிர்வாழ்கின்றதுமான சுகாதார முறைமையே இருக்கின்றது. இந்த நிலைமையை முற்றாகவே மாற்றியமைத்து நாட்டு ஆட்சியாளர்களின் வாழ்க்கையையும் பிரஜைகளின் வாழ்க்கையையும் சமமானதாக கவனிக்கின்ற அரசாங்கமொன்றை தேசிய மக்கள் சக்தி நிறுவும்.
நீண்ட ஆயுள் பற்றி நாங்கள் கூறினாலும் நாட்டு மக்கள் மருந்துகள் இன்றி, சரியாக ஆப்பரேஷன் செய்துகொள்ள முடியாமல், தரமற்ற மருந்துகள் காரணமாக மடிகின்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களாக எமது ஊர்களில் வசிக்கிறார்கள். பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி, அவர்களுக்கான வருமான வழிவகை. போதிய அளவிலான வீடு, ஆரோக்கியமான வாழ்க்கையைக் கழிப்பதை உறுதிசெய்கின்ற கொள்கைகளையும் இலக்குகளையும் கொண்ட வேலைத்திட்டமொன்றை நாங்கள் அமுலாக்குவோம்.
இந்த கிராமங்களில் வசிக்கின்ற கமக்காரர்கள் தற்போது சிறுபோகத்தில் பயிர்செய்து பெரும்போகத்தில் கடன் செலுத்தியே வசித்து வருகிறார்கள். பிள்ளையின் திருமண வைபவத்தை கொண்டாடுவதாயின், ஒரு துண்டு காணியை விற்பனை செய்யவோ அல்லது டிராக்டெர், பைசிக்கிள், முச்சக்கரவண்டியை அடகுவைக்க நேரிடுகின்றது. இதனால் விவசாயத்தை முன்னேற்றுவதை எமது பொருளாதார வேலைத்திட்டத்தின் அத்திவாரமாக அமைத்துக்கொள்வோம். அது ஒரு வருமான வழிவகையாக மாத்திரமன்றி நாட்டுக்கு உணவு உற்பத்தியை செய்வதற்கான அத்திவாரமாகவும் அமையும். ஆனால் தற்போது பொன்னாங்கண்ணி, கங்குங் கீரைகூட வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்படுகின்றது. இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படுகின்ற முட்டையை சாப்பிடவேண்டிய நிலையேற்படுமென இந்நாட்டு மக்கள் எப்போதாவது நினைத்திருந்தார்களா? எம்மிடமிருந்த விதையின வளங்களை முற்றாகவே நாசமாக்கி இறக்குமதிசெய்த விதையினங்களில் விவசாயத்தை தங்கிநிற்க வைத்துள்ளார்கள். எமக்கு இருந்த விதையின உற்பத்திகளை நாசமாக்கிய பின்னர் சந்தையிலிருந்து வாங்குகின்ற விதை நாற்றுகளிலிருந்து மீண்டும் விதைகளைப் பெற இயலாது. அந்த விதைகள் முளைக்க மாட்டாது. முன்பு நவதெலிஹேனவில் இயற்கையாக வளர்ந்த தும்பைக்கு தற்போது என்ன நேர்ந்துள்ளது? பல பாகற்காய் வகைகள், மிளகாய் வகைகள், பறங்கிக்காய் வகைகள். வெள்ளரிக்காய் வகைகள் என எம்மிடம் இருந்த விதையினங்களும் எமது சூழலில் இருந்த உயிர்ப்பன்வகைமையும் முழுமையாகவே அழிக்கப்பட்டன. பழைய விதையினங்களை மீண்டும் கண்டுபிடித்து விருத்திசெய்து மீளவும் மேம்படுத்துவதற்காக பலவற்றை சாதிக்கவேண்டியுள்ளது.
சிறுபோகத்திலும் பெரும்போகத்திலும் மழையை நம்பி பயிரிடுகின்ற விவசாயத்தை மாற்றியமைத்து நீர்ப்பாசனத்தினால் பேணிவரப்படுகின்ற விவசாயமொன்றை திட்டமிட்டு அமுலாக்கவேண்டும். அதைப்போலவே விவசாயத்துடன் எமது கால்நடைவளம் பின்னிப்பிணைந்திருந்தது. விவசாயத்தையும் கிராமிய பாலுற்பத்தியையும் மீண்டும் சமாந்தரமாக முன்னெடுத்துச் செல்கின்ற வேலைத்திட்டமொன்று எமக்கு இருக்கின்றது. அதைப்போலவே கிராமிய மக்களுக்கு தொழில் வாய்ப்புகளைத் தருகின்ற முதலீடுகளை இந்த பிரதேசங்களுக்கும் அழைப்பிக்க வேண்டும். அதற்காக தொழில்கள் மற்றும் போதியளவிலான வருமானத்தை பெற்றுக்கொடுத்து சிறந்த மன நிம்மதியை உறுதிப்படுத்துவது எமது ஆட்சியின் அடிப்படை நோக்கமொன்றாக அமைகின்றது. தற்போது எந்தளவு தலையிடிகளால் மண்டைகள் நிரம்பி இருக்கின்றன.? இவ்விதமான பிரச்சினைகளால் நிரம்பியுள்ளவர்கள் பயணமொன்றை மேற்கொள்ளும்வேளையில் தாம் இறங்கிய பஸ் வண்டியிலேயே மோதி இறக்கின்ற பல தருணங்கள் பதிவாகி இருக்கின்றன. எனினும் நாங்கள் களிப்படைவதற்காக மகிழ்ச்சியடைவதற்காக மாத்திரமன்றி மதரீதியான யாத்திரைகளை மேற்கொள்ள வாய்ப்பு நிலவுகின்ற வாழ்க்கையைக் கட்டியெழுப்புவோம். எங்களுக்கு தற்போது வாழ்க்கைக்கான உரிமை கிடைத்திராவிட்டால் எமது பிள்ளைகளுக்கேனும் அத்தகைய வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க வேண்டும்.
அதற்காக நாங்கள் முதலில் எங்கள் அரசாங்கமொன்றை அதிகாரத்திற்கு கொண்டுவரவேண்டும். பொதுமக்களுக்கு நன்மை, நிம்மதி, முன்னேற்றத்தை பெற்றுத்தருகின்ற தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கமொன்றை நிறுவுவோம். ஊர்களுக்கு வந்து அரிசி பங்கிட்டு. மீண்டும் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவே ஆட்சியாளர்கள் முனைகிறார்கள். ஒரு மாதத்திற்கு அரிசி பங்கிட வரவுசெலவில் 550 கோடி செலவிட்டாலும் 650 கோடியை அதற்காக செலவிடுகிறார்கள். மறுபுறத்தில் சீனி வரி மோசடி 1500 கோடி என்பது மாதமொன்றுக்கு அரிசி பங்கிட அறுநூற்றி ஐம்பது கோடி செலவாகின்றதென எடுத்துக்கொண்டால் சீனி வரி மோசடி மூலமாக சூறையாடிய பணத்திலிருந்து ஒரு குடும்பத்திற்கு இருபத்தைந்து கிலோ அரிசி வீதம் கொடுக்க முடியும். பிணைமுறி மோசடியும் அதுபோன்றதே. பொருட்களை பங்கிடுதல் தொடர்பில் நீங்கள் ஏமாற வேண்டாமென நாங்கள் மக்களிடம் கேட்டுக் கொள்கிறோம். காணிகளுக்கு உறுதிகளை வழங்குகிறார்களாம். “அஸ்வெசும” பணத்தொகையை அதிகரிக்கப் போகிறார்களாம். இவ்விதமாக “அஸ்வெசும” எதிர்வரும் திசெம்பர் 31 வரை மாத்திரமே செலுத்தப்படும். அத்திகதியாகும்போது பொதுத் தேர்தலும் முடிந்திருக்கும்: அஸ்வெசுமவும் முடிந்திருக்கும்: ரணில் விக்கிரமசிங்கவும் இல்லை. ரணில் 1977 இல் இருந்து பாராளுமன்றத்தில் இருக்கிறார். மக்களின் பிரச்சினைகளுக்கு உண்மையாகவே தீர்வுகளை வழங்கியிருந்தால் இந்த நாட்டுக்கு இந்த கதி நேர்ந்திருக்கமாட்டாது. அதனால் இந்த ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
நாங்கள் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்பதற்கான உத்தரவாதத்தை அளிக்கிறோம். நாட்டைக் கட்டியெழுப்பும்வரை அவசியமான மக்களுக்கு மானியம் வழங்குவோம். எமது அரசாங்கத்தின் முதலாவது பொறுப்பு உணவு, சுகாதாரம், கல்வியாக அமையும். ஒவ்வொரு பிரஜைக்கும் உணவு கிடைக்கின்ற, அவசியமான சுகாதார வசதிகள் வழங்கப்படுகின்ற அத்துடன் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குகின்ற வேலைத்திட்டத்தை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். இது ஒரு வறிய பி்ச்சையேந்துகின்ற நாடாக விளங்கவேண்டியதில்லை. மக்கள் அவ்விதமாக துன்பப்படுகின்ற நாடாக அமையவேண்டியதில்லை. அது இயற்கை வளங்கள் அனைத்தும் நிறைந்த ரத்னதுவீபம் ஆகும். இத்தகைய ரத்னதுவீபத்தில் மக்கள் உணவின்றி மடிகிறார்கள். மருந்து இல்லாமல் மடிகிறார்கள். சரியான வீடு இன்றி மக்கள் அல்லற்படுகிறார்கள். நாங்களும் நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அனைவரும் வாழக்கூடிய ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவோம். இதுவரை நாட்டை ஆட்சிசெய்தவர்கள் மக்களை பிளவுபடுத்தி பாரிய யுத்தமொன்றை உருவாக்கினார்கள். வடக்கிலும் தெற்கிலும் அரசியல்வாதிகள் தமது அதிகாரத்திற்காக யுத்தத்தை உருவாக்கினார்கள். பிரபாகரனால் தற்கொலை குண்டுதாரிகளை உருவாக்கக்கூடியவகையில் 1981 அபிவிருத்தி சபை தேர்தலை சீர்குலைத்திட நடவடிக்கை எடுத்தார்கள். ரணில் விக்கிரமசிங்கவை உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினர் காடையர் கும்பலை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச்சென்று நூலகத்தை தீக்கிரையாக்கினார்கள். வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக நூலகதிற்கு தீ மூட்டுதல் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? யாழ் மக்கள் அந்த நூலகத்துடன் இணைந்து பல நூல்களை வாசித்தறிந்தார்கள். நானறிந்த நூலகங்கள் மத்தியில் பாதணிகளை கழற்றிவைத்துவிட்டு உட்பிரவேசிக்கின்ற நூலகம் யாழ்ப்பாண நூலகம் மாத்திரமே. மத வழிபாட்டுத் தலமொன்றுக்குச் செல்வதுபோல்தான் உட்பிரவேசிப்பார்கள். வடபகுதி மக்களுக்கும் யாழ் நூலகத்திற்கும் இடையில் அத்தகைய உறவே நிலவியது. எனினும் 1981 இல் ரணில் விக்கிரமசிங்கவை உள்ளிட்ட குழுவினருக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அந்த நூலகத்திற்கு தீமூட்டினார்கள். தாம் அந்தளவுக்கு மதிப்பளித்த நூலகத்திற்கு தேர்தலுக்காக தீவைத்ததும் தமிழ் மக்களின் இதயங்கள் வெடித்தன.
தெற்கின் அரசாங்கங்கள் தமது நூலகத்தை தீக்கிரையாக்கிய வேதனையில் இருந்து விடுபட முன்னராகவே 1983 “கறுப்பு ஜுலையை” உருவாக்கினார்கள். எமது கட்சியைத் தடைசெய்யவேண்டிய தேவை ஜே.ஆருக்கு ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் மக்கள் விடுதலை முன்னணிமீது நம்பிக்கைவைத்து அதனைச் சுற்றி குழுமத் தொடங்கினார்கள். ஜே. ஆர். ஜயவர்தன அதனைக்கண்டு அச்சமடைந்தார். அன்றைய மக்கள் விடுதலை முன்னணியின் வளர்ச்சி ஜே. ஆர். ஜயவர்தனவின் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலெனக் கருதி 1983 கறுப்பு ஜுலையைக் காரணங்காட்டி எமது கட்சியை தடைசெய்தார். ஜே. ஆர். ஜயவர்தன, ரணில் விக்கிரமசிங்க கொழும்பு நான்காம் குறுக்குத் தெருவினை தீக்கிரையாக்கி கறுப்பு ஜுலையை நிர்மாணித்தார். ஜே. ஆர். ஜயவர்தனவின் காடையர்கள் முழுநாட்டையும் தீப்பிழம்பாக மாற்றினார்கள். தமிழ் மக்களின் உடைமைகள், உயிர்களை கறுப்பு ஜுலை மூலமாக நாசமாக்கினார்கள். தற்போது தமிழ் “டயஸ்போறா” என இருக்கின்ற பலர் 1983 இல் நாட்டை விட்டுச் சென்றவர்களாவர். தெற்கில் தமிழ் மக்களின் சொத்துக்களைப்போன்றே தமிழ் மக்களின் உயிர்களை அழித்தமை மற்றும் விரட்டியத்தமை காரணமாக தனிநாடு ஒன்றை கட்டியெழுப்புகின்ற பிரபாகரனின் எண்ணக்கருவிற்கு பாரிய உந்துசக்தி கிடைத்தது. அதனூடாக பாரிய ஆயுதமேந்திய இயக்கமொன்று உருவாகியது. வடக்கிலும் தெற்கிலும் உயிர்களால் நட்டஈடு செலுத்தியவர்கள் சாதாரண தாய் தந்தையரின் பிள்ளைகளாவர். வடக்கின் தாய்மார்களின் பிள்ளைகள் எல்ரீரீஈ இல் இணைந்தார்கள். மேலே இருக்கின்ற ஆட்சியாளர்கள் யுத்தத்தை உருவாக்கி எமது ஊர்களை பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளினார்கள். சிங்களப் பிள்ளைகளை யுத்தத்திற்கு அனுப்பிவைத்தார்கள்.
மீண்டும் மோதல்கள் ஏற்படாத சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கிடையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புகின்ற தேசத்தை உருவாக்குவதே எமது தலையாய நோக்கம். எமது தலைமுறையினர் யுத்தம் புரிந்தாலும் எமது பிள்ளைகள் யுத்தத்தில் ஈடுபட இடமளிக்க முடியாது. சிங்கள அம்மா, அப்பாவைப்போன்றே தமிழ் அம்மா, அப்பாவிற்றகும் தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி இல்லாமல் போனமை, விவாகம் இல்லாமல் போனமை, மருந்துகள் இல்லாமல் போனமை போன்றே மனநிம்மதி இல்லாமல் போனமை தொடர்பில் பிரச்சினை நிலவுகின்றது. அதனால் எமது தேவை பிளவுபடுவதை விடுத்து ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதாகும். மீண்டும் பிளவுபடாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பொறுப்பு தேசிய மக்கள் சக்திக்கு உண்டு. அதனால் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். அதற்காக அனைவருக்கும் அழைப்பு விடுகிறோம்.
(-Colombo, May 21, 2024-) பயங்கரமான ஹெலிகொப்டர் விபத்தில் கவலைக்கிடமாக உயிரிழந்த மாண்புமிகு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசி, வெளியுறவு அமைச்சர் ஹொசெயின் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளின் திடீர் மரணம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி என்றவகையிலும் இலங்கை மக்கள் என்றவகையிலும் நாங்கள் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம். கவலைக்கிடமான இத்தருணத்தில் இறந்த அனைவரதும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நாங்கள் எமது அனுதாபத்தை பகிர்ந்து கொள்கிறோம். ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசியின் மறைவு ஈரானிய மக்கள் […]
(-Colombo, May 21, 2024-)
பயங்கரமான ஹெலிகொப்டர் விபத்தில் கவலைக்கிடமாக உயிரிழந்த மாண்புமிகு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசி, வெளியுறவு அமைச்சர் ஹொசெயின் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளின் திடீர் மரணம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி என்றவகையிலும் இலங்கை மக்கள் என்றவகையிலும் நாங்கள் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம். கவலைக்கிடமான இத்தருணத்தில் இறந்த அனைவரதும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நாங்கள் எமது அனுதாபத்தை பகிர்ந்து கொள்கிறோம்.
ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசியின் மறைவு ஈரானிய மக்கள் மற்றும் மத்தியகிழக்கு மக்களுக்கு மாத்திரமன்றி உலக மக்கள் அனைவருக்கும் நிவர்த்திசெய்ய இயலாத நட்டமாகும். இலங்கையை உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளுடன் ஜனாதிபதி ரயிசி நட்புறவையும் ஆதிக்கவாதமற்ற உறவினையும் பலப்படுத்திக் கொள்வதற்காக அயராது உழைத்தார். ஈரானிய மக்களின் நிதியங்களால் நிர்மாணிக்கப்பட்ட நீர்மின் நிலையங்களை அங்குரார்ப்பணம் செய்துவைப்பதற்காக அவர் அண்மையில் மேற்கொண்ட இலங்கை விஜயமானது சர்வதேச ஒத்துழைப்பிற்கும் நிலைபெறுதகு அபிவிருத்திக்குமான அவரது மாற்றமில்லாத அர்ப்பணிப்பிற்கான தக்க சான்றாகும். அத்துடன் அதனையொத்த கருத்திட்டமொன்றை அங்குரார்ப்பணம் செய்துவைப்பதற்காக சென்ற அவருடைய இறுதிப்பயணமும் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர சுபிட்சத்திற்கான அவரது திடமான அர்ப்பணிப்பினை வலியுறுத்துகின்றது.
ஒத்துழைப்பு, அபிவிருத்தி மற்றும் நட்புறவினை விருத்தி செய்வதற்கான அவரது முன்மாதிரியானது ஈரானுக்கு உள்ளேயும் பொதுவில் மத்தியகிழக்கு பூராவிலும் இடையறாத அபிவிருத்தி மற்றும் உறுதிநிலையை உறுதிப்படுத்தி அவரது நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக ஈரானிய மக்களுக்கு நிச்சயமாக புத்துணர்ச்சி அளிக்குமென்பது தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எமது நம்பிக்கையாகும்.
கவலைக்குரிய இத்தருணத்தில் ஈரானிய மக்களுக்கு நாங்கள் எமது தீவிரமான ஒத்துழைப்பினை தெரிவித்துக் கொள்கிறோம்.
அநுர குமார திசாநாயக்க
தலைவர்
தேசிய மக்கள் சக்தி
2024.05.21
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசி, வெளியுறவு அமைச்சர் ஹொசெயின் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளின் திடீர் மரணம் தொடர்பில், இன்று (21) பிற்பகல் ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்கள் இலங்கையர் சார்பிலும் தேசிய மக்கள் சக்தியின் சார்பிலும் அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார்.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் பிமல் ரத்நாயக்க அவர்களும் இணைந்துகொண்டார்.
(-தேசிய மக்கள் சக்தி – 2024.05.19-) அரசாங்கம் என்பது மக்கள் வாக்களித்து நியமிக்கின்ற ஆட்சியாகும். ஆட்சியொன்றின் அடிப்படைப் பொறுப்பு அந்த நாட்டின் பிரஜைகளை கவனித்துக்கொள்வதாகும். அவர்களுக்கு பலம்பொருந்திய வருமான வழிவகை, பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி, சிறந்த சுகாதார முறைமை, சட்டத்தின் ஆட்சி நிலவுகின்ற நாட்டை உருவாக்குதல், மனநிம்மதியுடன் வாழக்கூடிய சமுதாயமொன்றை உருவாக்குதல், மகிழ்ச்சியுடன் சிரித்துவாழும் பிரஜைகளை கட்டியெழுப்புவதாகும். எமது பிரஜைகளில் ஒரு பகுதியினர் இந்த பொருளாதாரத்துடன் பின்னிப்பிணைந்து தமது வாழ்க்கைத் தொழிலை அமைத்துக் கொள்கிறார்கள். பிரஜைகளின் கணிசமான […]
(-தேசிய மக்கள் சக்தி – 2024.05.19-)
அரசாங்கம் என்பது மக்கள் வாக்களித்து நியமிக்கின்ற ஆட்சியாகும். ஆட்சியொன்றின் அடிப்படைப் பொறுப்பு அந்த நாட்டின் பிரஜைகளை கவனித்துக்கொள்வதாகும். அவர்களுக்கு பலம்பொருந்திய வருமான வழிவகை, பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி, சிறந்த சுகாதார முறைமை, சட்டத்தின் ஆட்சி நிலவுகின்ற நாட்டை உருவாக்குதல், மனநிம்மதியுடன் வாழக்கூடிய சமுதாயமொன்றை உருவாக்குதல், மகிழ்ச்சியுடன் சிரித்துவாழும் பிரஜைகளை கட்டியெழுப்புவதாகும். எமது பிரஜைகளில் ஒரு பகுதியினர் இந்த பொருளாதாரத்துடன் பின்னிப்பிணைந்து தமது வாழ்க்கைத் தொழிலை அமைத்துக் கொள்கிறார்கள். பிரஜைகளின் கணிசமான பகுதியினர் அன்றாடம் உழைப்பையும் நேரத்தையும் பொருளாதாரத்துடன் தொடர்புபடுத்த இயலாத, பொருளாதாரத்துடன் இணைந்தாலும் அதன் நன்மைகள் போதியளவில் கிடைக்காத மக்களாக இருக்கிறார்கள். அதாவது தொழிலொன்றைப் புரிந்தாலும் கிடைக்கின்ற வருமானம் உயிர்வாழ போதுமானதாக அமையாத மக்கள். வயது முதிர்வு காரணமாக வேலை செய்வதற்காக உழைப்பையும் நேரத்தையும் ஈடுபடுத்த இயலாத அதைப்போலவே பல்வேறு காரணங்களால் ஊனமுற்ற நிலையை அடைந்துள்ள மக்கள்.
பொருளாதாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள, அன்றாடம் உழைப்பையும் நேரத்தையும் பொருளாதாரத்துடன் இணைத்திராத மக்களால் கிராமிய வறுமைநிலை கட்டியெழுப்பப்பட்டுள்ளது. கிராமிய வறுமைநிலையை ஒழித்துக்கட்டுவதற்கான வேலைத்திட்டமொன்று எமக்கு அவசியமில்லையா? சரியான உணவவேளையொன்று கிடைக்காத குழுவினர் சனத்தொகையில் 68% என மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 34 இலட்சம் குடும்பங்களுக்கு அரிசி 10 கிலோ வீதம் பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டது. அதாவது மக்களில் நூற்றுக்கு 50% இற்கு அதிகமானோருக்கு 10 கிலோ அரிசியை வழங்க வேண்டி நேரிடும். அதாவது தமது வாழ்க்கையை ஒட்டிக்கொள்ள முடியாத மக்கள். அந்த மக்களுக்கான வேலைத்திட்டமொன்று எமக்கு இருக்கவேண்டும். உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள மக்களை கவனிப்பதற்காக மானியம் வழங்குதல் இடம்பெறுகின்றது. எமது நாட்டில் கிராமிய வறுமையை ஒழித்துக்கட்டுவதற்காகவும் மானிய வேலைத்திட்டமொன்று அவசியமாகும். ஆனால் அவர்களை நீண்டகாலம் மானியத் திட்டத்தில் வைத்திராமல், படிப்படியாக அவர்களுக்கு உயிர்வாழ்வதற்கான வருமான வழிவகையொன்றை அமைத்துக் கொடுப்பதற்கான பொருளாதார வேலைத்திட்டத்துடன் இணைக்கவேண்டும். அதைப்போலவே ஊனமுற்றவர்களும் எவருடைய தயவுமற்ற முதியோரையும் நாங்கள் பேணிப்பாதுகாத்திட வேண்டும். தனியார் துறையைப் போன்றே அரசாங்கத் துறையிலும் பணியாற்றி, வயது காரணமாக வேலையைக் கைவிட்ட மக்களைப் பாதுகாப்பதற்கான கடப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு. ஒவ்வொரு பிரசைக்கும் உயிர்வாழ்வதற்கு சிறந்த வருமான வழிவகை, சிறந்த வீடு, ஆரோக்கியமான வாழ்க்கை, முறையான கல்வி, மன நிம்மதி, சிறந்த போக்குவரத்து, குறைந்தபட்ச வசதிகள் இருக்கவேண்டும். எமது நாட்டில் இளைப்பாறியவர்களில் பெரும்பாலானோருக்கு இவை கிடைப்பதில்லை.
எனினும் நாட்டின் பிரஜைகள் குழுவொன்றுக்கு சிறப்புரிமைகளும் பொதுப் பிரஜைகளுக்கு துணைநிலைத் தரமும் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் இளைப்பாறிய சனாதிபதிகளின் ஓய்வூதியம், படிகள், வீடுகள், வாகனங்கள் அனைத்துமே இல்லாதொழிக்கப்படுமென நாங்கள் உங்களுக்கு உறுதியாக கூறுகிறோம். அதைப்போலவே வாழ்க்கைச் செலவு வேகமாக அதிகரிக்கும்போது அவர்களின் ஒரே வாழ்வாதாரமாக அமைகின்ற ஓய்வூதியம் உயிர்வாழப் போதுமானதாக அமையமாட்டாது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்புடன் சார்புரீதியாக அவர்களின் ஓய்வூதியமும் படிகளும் அதிகரிக்கப்படல் வேண்டும். பல்வேறு குழுக்களின் அறிக்கைகள் மூலமாக அரசாங்க ஊழியரின் சம்பளம் 70% ஆல் அதிகரிக்கப்பட வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ளது. உங்களின் வாழக்கைச் செலவுக்கு எற்ற ஓய்வூதியத்தை வழங்குவதாக நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறோம். 2016 – 2019 இளைப்பாறியவர்களின் விசேட குழுவொன்று இருக்கின்றது. பொது நிருவாக செயலாளரால் கையொப்பமிடப்பட்ட கடிதத்தில் 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இளைப்பாறுகையில் ரூ. 10,000 அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்பட்டு வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நியாயமான அந்த சம்பளம் கிடைக்காத ஒரு பகுதியினர் இருக்கிறார்கள். தோழர் மகிந்தவும் தோழர் சரத் லாலும் ஒரு வழக்கினை தாக்கல் செய்திருக்கிறார்கள். அதன் தீர்ப்பு மே மாதம் 31 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. 1997 இல் இருந்து தோன்றியுள்ள அதிபர் ஆசிரியர்களின் சிக்கலொன்று தீர்க்கப்படவேண்டி உள்ளது. அக்ரஹார வழங்குகையில் 2016 இற்கு முன்னர் இளைப்பாறிய மற்றும் 2016 இன் பின்னர் இளைப்பாறிய என இரண்டு தொகுதிகளாக வகுத்துள்ளார்கள். அது எவ்விதத்திலும் நியாயமான பிரிகையிடல் அல்ல. அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமொன்று வகுக்கப்படல் வேண்டுமென நாங்கள் நம்புகிறோம்.
மூத்த பிரஜைகளின் கணக்குகளுக்காக 15% வட்டி செலுத்தப்பட்டது. பெரும்பாலான ஒய்வூதியம் பெறுனர்கள் தமக்கு கிடைத்த 15% வட்டியைக் கொண்டுதான் தமது மருந்துகளை வாங்கினார்கள், தண்ணீர் பில் – லயிற் பில் செலுத்தினார்கள்: உணவு பானவகைகளை கொள்வனவு செய்தார்கள். பொருளாதாரம் சரிந்துகொண்டிருந்தவேளையில் மூத்த பிரஜைகளுக்கு கிடைத்துக்கொண்டிருந்த பொருளாதார அநுகூலத்தை அரசாங்கம் அபகரித்துக் கொண்டது. அதனால் மீண்டும் விசேட வட்டி வீதத்தில் மூத்த பிரஜைகளின் கணக்குகள் வைக்கப்படல் வேண்டுமென்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். நீங்கள் கொள்வனவு செய்கின்ற பண்டங்களுக்கு மாத்திரமல்ல உங்களின் ஓய்வூதியத்தை அல்லது பணிக்கொடையை வங்கியில் வைப்புச் செய்கையில் பெறுகின்ற வட்டி மீதும் வரி விதிக்கப்படுகின்றது. அது கட்டாயமாக நீக்கப்படல் வேண்டும். அதன் மூலமாக இந்த சிக்கல் தீர்ந்துவிட மாட்டாதென்பதை நாங்கள் அறிவோம். மிகவும் பலம்பொருந்திய பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று அவசியமாகும்.
உலகில் விருத்தியடைந்தவை என அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் பலம்பொருந்திய பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று இருக்கின்றது. பொருளாதாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகின்றவர்கள், பொருளாதாரத்தில் பங்கேற்காதவர்கள், முதியவர்கள், பல்வேறு வலதுகுறைந்த குழுவினர், தொழில்முயற்சிகள் சீரழிதல், திடீர் நெருக்கடிகளின்போது அவற்றை எதிர்கொள்வதற்காக பலம்பொருந்திய பாதுகாப்பு நிதியமொன்று அவசியமாகும். எமது பொருளாதாரத்திற்கு அத்தகைய நிலைமையை எதிர்கொள்ளக்கூட, தனித்துவமான ஆட்களை கவனிப்பதற்காகக்கூட பலம்பொருந்திய நிதியமொன்று கிடையாது. நாங்கள் கடைப்பிடிக்கின்ற பொருளாதார உபாயமார்க்கங்கள் வெற்றிகரமான பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதில் மாத்திரமே இவையனைத்தும் முடிச்சிப்போடப்பட்டுள்ளன. அதனால் இந்த பொருளாதாரத்தை புதிய சாதகமான திசையைநோக்கி ஆற்றுப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று எமக்கு அவசியமாகும். அதன்போது அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது தீர்மானகரமானதாகும்.
பாராளுமன்றத் தேர்தலையா சனாதிபதி தேர்தலையா நடாத்துவதென்பதே இத்தருணத்தில் தோன்றியுள்ள பிரச்சினையாகும். அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரமும் செத்தெம்பர் 16 இற்கும் ஒற்றோபர் 17 இற்கும் இடையில் சனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான அதிகாரமும் சனாதிபதிக்கு உண்டு. அப்படியானால் இன்றோ நாளையோ ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான தீர்மானத்தை எடுத்தால் அவரது அதிகாரம் இல்லாதொழியும். அவரால் மேலும் சில மாதங்கள் அதிகாரத்தில் இருக்க வாய்ப்பு நிலவுகையில் அவர் முன்கூட்டியே கதிரையில் இருந்து எழமாட்டார். பாராளுமன்றத்தைக் கலைத்தால் அவரைச் சுற்றி இருக்கின்ற மொட்டுக்கட்சிக் குழவைச் சேர்ந்த அனைவருமே தேர்தலில் போட்டியிடுவதற்காக மீண்டும் மொட்டுக்கட்சியில் சேர்வார்கள். பாராளுமன்றத்தைக் கலைத்து அதனால் கிடைக்கின்ற பெறுபேற்றுக்கிணங்க ரணில் விக்கிரமசிங்கவிற்கு சனாதிபதியல்ல சனாதிபதி வேட்பாளராகவும் ஆக முடியாது. கலைத்தால் ஐக்கிய தேசிய கட்சி முற்றுப்பெறும். அதன்படி கலைப்பதற்கான வாய்ப்பு அவருக்கு அரசியல்ரீதியாக பாதகமானதாகும். ஆனால் பாராளுமன்றத்தைக் கலைக்கவேண்டிய தேவை பசில் ராஜபக்ஷவிற்கு இருக்கிறது. ஒன்றில் அவர் ரணிலுக்கு ஆதரவு வழங்கவேண்டும். மக்களின் ஆதரவுடன் ரணில் சனாதிபதியாகினால் மொட்டின் பயணம் அத்துடன் நின்றுவிடும். ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் பிறிதோர் வேட்பாளரை நிறுத்தினால் மொட்டுக்கு இருக்கின்ற வாக்குகளும் இல்லாமல் போய்விடும். நிறுத்துவதற்கு வேறு வேட்பாளரும் இல்லை. சனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுபவர் எவராக இருந்தாலும் பாராளுமன்றத்தைக் கலைப்பார். சனாதிபதி தேர்தலின் பெறுபேறுகள் பொதுத்தேர்தலைப் பாதிக்கும். அதனால் அவர்களும் விரைவில் பாராளுமன்றத்தை எடுக்கவே முயற்சி செய்வார்கள். பாராளுமன்றத்தைக் கலைக்கவேண்டிய தேவை ஐ.ம.ச. உம் உண்டு. சனாதிபதி தேர்தல் ஆட்களை மையப்படுத்தியதாகும். சஜித்தைப் பார்க்கிலும் ஐ.ம.ச. ஐ பந்தயத்தில் இடுவது அவர்களுக்கு நன்மை பயக்கும். அதனால் அவர்களும் பாராளுமன்றம் கலைக்கப்படுவதை விரும்புகிறார்கள். தேசிய மக்கள் சக்தியாகிய நாங்கள் இந்த இரண்டுக்குமே தயார். அரசியலமைப்பிற்கு அமைவாக இவை இரண்டையுமே நடாத்த வாய்ப்பு நிலவியபோதிலும் அரசியல்ரீதியாக சனாதிபதி தேர்தல் நடாத்தப்பட உள்ளது.
எமது நாட்டில் அதிகாரம் பரிமாற்றப்படுகின்ற தீர்மானகரமான தேர்தலொன்று வருகின்றது. எமது சமூகம் திட்டவட்டமாக விழிப்படைய வேண்டும். அவர்களிடம் பாரிய ஊடக பலமொன்று இருக்கின்றது. முக்கியமான பிரச்சினைகளை மூடிமறைத்து மக்களை காட்டுப்பாதையில் வழிநடாத்த, குறுக்குப் பாதைகளில் வழிப்படுத்த அவர்களால் முடியும். உண்மையான பிரச்சினைகளை மூடிமறைத்து சமூகத்தை குழப்பியடிக்க அவர்களால் முடியும். உண்மையான பிரச்சினைக்குப் பதிலாக மீண்டும் மீண்டும் 88/89 பற்றிக் கூறுகிறார்கள். 88/89 இல் குற்றம் புரிந்தவர்கள் நாமெனில் ஏன் நந்தா எமக்காக பாடுகிறார்? அரச பயங்கரவாதத்தின் இயல்புதான் இங்கே பாடிய பாடலில் முழுமையாக இருந்தது. பிள்ளைகளை கடத்திய விதம். அமைச்சர்களின் வீடுகளில் சித்திரவதைக் கூடங்கள் இருந்தன. ஏ.எம்.எஸ். அதிகாரியின் வீட்டில், புத்தளத்தின் அமைச்சரது வீட்டில், திக்வெல்ல அமைச்சரின் வீட்டில், பதுளை அமைச்சரின் வீட்டில் சித்திரவதைக் கூடங்கள் இயங்கின. காடையர் படைகளை அமைத்துக் கொண்டிருந்தார்கள். அதனால்த்தான் நந்தா மாலினிக்கு இவ்வாறான பாடல்களை பாட நேர்ந்தது. ஆனால் மக்களை காட்டுவழியில் கொண்டுசெல்வதற்காக அரசியலால் இது பாரிய குழப்பநிலைக்கு மாற்றப்படுகின்றது, நாங்கள் திட்டவட்டமான பிரச்சினைக்கு எம்மை மையப்படுத்துவவோமென நான் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
சமூகத்தில் உண்மை மற்றும் பொய் என இரண்டு இருக்கின்றது. எமது ஒட்டுமொத்த அரசியலும் உண்மையை அடிப்படையாகக்கொண்ட அரசியலாகும். அவர்களின் ஒட்டுமொத்த அரசியலுமே பொய்யை அடிப்படையாகக்கொண்ட அரசியலாகும். அவர்கள் மக்களை உண்மையாகவே நேசிப்பதானால் இந்த தலைவர்களால் ஊசிமருந்தில் நஞ்சு கலக்க முடியுமா? மக்களை உண்மையாகவே நேசிக்கின்ற தலைவர்களால் மக்கள் பருகுகின்ற தேநீரில் கலக்கின்ற சீனிக்கு விதிக்கின்ற வரியில் இருந்து திருட முடியுமா? முழு நாட்டிலுமே வாகன பேர்மிற் நிறுத்திவைக்கப்பட்டிருக்கையில் 82 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு பேர்மிற் வாங்குவதற்காக கையொப்பமிடுகிறார்கள். இப்படியான ஒருநேரத்தில் அத்தகைய கடிதங்களில் கையொப்பமிட தலைவர்களால் முடியுமா? பேர்மிற் கோரியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை பகிரங்கப்படுத்துமாறு நாங்கள் சபாநாயகரிடம் கேட்கிறோம். நாங்கள் வாகன பேர்மிற் எடுப்பதுமில்லை. இதனை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். நாங்கள் உண்மையிலேயே இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த வாழ்க்கையையும் சாதகமான அரசினையும் எதிர்பார்ப்பவர்கள். நாங்கள் சமூகத்திற்கு உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான வித்தியாசத்தை வெளிப்படுத்த வேண்டும்.
எமது நாட்டில் பயணித்துக் கொண்டிருக்கின்ற பொருளாதார உபாயமார்க்கத்திற்கும் புதிய பொருளாதார உபாயமார்க்கத்திற்கும் இடையிலான உரையாடல் தோன்றவேண்டும். உண்மையான நிலைமை என்ன? இந்த பொருளாதாரப் பயணம் தவறானது. இந்த பொருளாதாரப் பயணம் சரியானதெனில் நாட்டுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கமாட்டாது. நாட்டை புதிய பொருளாதாரத்தில் பிரவேசிக்க வைக்கவேண்டும். 1948 இல் எமது நாடு சுதந்திரம் பெறுகையில் எமது நாட்டை எந்த திசையில் கொண்டுசெல்லவேண்டுமென்ற நோக்கு இருக்கவில்லை. அதன் விளைவாக இன்று சந்திரனுக்குச் செல்கின்ற, ஆசிய பிராந்தியத்திற்கு ஔடதங்களை வழங்குகின்ற, வாகனங்களை உற்பத்தி செய்கின்ற, உணவு வழங்குகின்ற, புடவைகளை உற்பத்தி செய்கின்ற, விதையினங்களை உற்பத்தி செய்கின்ற ஓர் இந்தியா உருவாகி இருக்கின்றது. 20 ஆம் நூற்றாண்டு மானிட வரலாற்றில் மிகப்பெரிய திருப்பங்கள் ஏற்பட்ட நூற்றாண்டாகும். தென் கொரியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா 20 ஆம் நூற்றாண்டிலேயே பலம்பொருந்திய பொருளாதார அத்திவாரத்தை அமைத்துக்கொண்டன. ஐரோப்பா 17 ஆம் நூற்றாண்டில் நாடுகளை ஆக்கிரமித்து பலம்பொருந்திய பொருளாதாரங்களை அமைத்துக்கொண்டன. நாங்கள் இருபதாம் நூற்றாண்டினை கைப்பற்றிக் கொள்வதற்குப் பதிலாக கைவிட்ட தேசமாவோம்.
20 ஆம் நூற்றாண்டில் நாட்டின் பயணப்பாதை பற்றிய உரையாடலொன்று வெளியில் நிலவியது.1918 இல் இலங்கை பொறியியலாளர் சங்கத்தைச் சேர்ந்த திரு. விமலசுரேந்திர லக்ஷபான மின்நிலையத்தை அமைக்கவும் அதிலிருந்து எஞ்சுகின்ற மின்சாரத்தைக்கொண்டு மின்சார புகையிரதத்தை ஓட்டுவிக்கவும் திட்டமொன்றை முன்வைத்தார். இலங்கையில் உள்ள கனியவளங்கள் பற்றி முற்றாய்வுசெய்து பொருளாதார நோக்கு ஒன்றை முன்வைத்தார். பேராசிரியர் சேனக்க பிபிலே சுகாதாரக் கொள்கை எந்த திசையை நோக்கிச் செல்லவேண்டுமென உரையாடினார். மார்ட்டின் விக்ரமசிங்க இலக்கியம் பயணிக்கவேண்டிய திசை, சரத்சந்திர அவர்கள் நாடகக்கலையின் திசை, கிளெரன்ஸ் இசையின் திசை இப்படிப்பட்ட புதிய தோற்றப்பாடுகள் பற்றி வெளியில் உரையாடினார்கள். எனினும் எமது அரசியல் அதிகாரிகள் எம்மை முற்றாகவே வரலாற்றில் சிறைப்படுத்தி வைத்தார்கள். நாங்கள் நவீனத்துவத்தின் வித்தியாசத்தைக் கைவிட்டுவிட்டோம். நாங்கள் இன்று உலகில் தனிமைப்படுத்தப்பட்ட இராச்சியமாக மாறிவிட்டோம். நாங்கள் வருடத்திற்கான ஏற்றுமதி வருமானமாக 12 பில்லியன் டொலர்களை ஈட்டுகையில் தென்கொரியா 685 பில்லியன் டொலர்களை ஈட்டுகின்றது.
பயணித்துக் கொண்டிருக்கின்ற பொருளாதாரப் பாதைக்குப் பதிலாக உற்பத்தியை மையப்படுத்திய புதிய பொருளாதாரப் பாதையில் பிரவேசிக்க வேண்டும். அனைத்தையும் விற்பதே அவர்களின் பாதை. ரெலிகொம் நிறுவனத்தின் அரைவாசியை ஏற்கெனவே விற்றுவிட்டார்கள். ஐ.ரீ. இல் எமக்கு 15 பில்லியன் டொலர்களை ஈட்டக்கூடிய இயலுமை நிலவுகின்றது. ஐ.ரீ. தொழிற்றுறைக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ரெலிகொம் நிறுவனமே அமைக்க வேண்டும். அரசாங்கம் ரெலிகொம்மை விற்கத் தயாராகிவிட்டது. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், கேஸ் கம்பெனி, மின்சார சபை, மின்நிலையங்களை விற்கத் தயாராகி இருக்கின்றது. அது சரியெனக்கூறி ஹர்ஷ த சில்வா கைதட்டுகிறார். புதிய உற்பத்தியை மையப்படுத்திய பொருளாதாரத்தை நோக்கி எமது நாட்டை திசைப்படுத்தவேண்டும். ஐ.ரீ. தொழிற்றுறை, சுற்றுலாக் கைத்தொழில் சேவைகள், நாட்டின் கனியவளங்களைப் பாவித்து புதிய கைத்தொழில் கட்டத்தில் பிரவேசிக்கவேண்டும். எமது நாட்டின் கனிய வளங்கள் பற்றிய முற்றாய்வினை மேற்கொண்ட பேராசிரியர் இலேபெரும தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்திருப்பதாக என்னிடம் கூறினார்.
எமது நாட்டில் மிக அதிகமாக மல்லுக்கட்டுகின்ற அமைச்சுகள் பெருந்தெருக்கள், துறைமுகங்கள் ( மிக அதிகமான கொள்வனவு), எயார் லங்கா (மிக அதிகமான கொள்வனவு), மின்சக்தி (மிக அதிகமான பிஸ்னஸ்), பெற்றோலியம் (மிக அதிகமான ஏற்றுமதிச் செலவு) இங்கு கூறப்படுவது என்னவென்றால் எமது அமைச்சர்கள் பிஸ்னஸ் பண்ணுவதற்காகவே தோன்றினார்கள். இந்த நாட்டை தரமான மாற்றத்திற்கு உட்படுத்த அவசியமான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு பொருட்படுத்தாமல் விடப்படுகின்ற அமைச்சாக மாறிவிட்டது. உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றுகின்ற பெருந்தொகையானோரை நாங்கள் சேர்த்துவருகிறோம். உலகில் புற்றுநோய்த் தடுப்பிற்கான மருந்தினை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அது மிகவும் முன்னேற்றகரமான மட்டத்தில் நிலவுகின்றது. அங்கே இருக்கின்ற இலங்கையர் எம்மோடு செயலாற்றி வருகிறார்கள். உலகில் உள்ள அறிவு, தொழில்நுட்பம் என்பவற்றை சேகரிக்கின்ற திட்டமொன்றை நாங்கள் வகுத்துக் கொண்டிருக்கிறோம். ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி விஞ்ஞானிகளின் சந்திப்பொன்றினை நடாத்த நாங்கள் தயாராகி வருகிறோம். அதன் ஊடாகத்தான் இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
எமது நாட்டின் காடைத்தனமான அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும். எமது நாட்டின் மையப் பிரச்சினை பொலிட்டிகல் கலாச்சாரமாகும். “பாராளுமன்ற உறுப்பினர்கள் திருடுவதை நிறுத்தவேண்டுமானால், சம்பளம் அதிகரிக்கப்படல் வேண்டும், மேலும் வசதிகள் வழங்கப்படல் வேண்டும்” என ஹர்ஷ த சில்வா கூறுகிறார். இதன் எல்லை எங்கே? அரசியலுக்கு வருவதே அதிலிருந்து கிடைக்கின்ற அதிகாரத்தையும் அவாநிறைவுகளையும் சிறப்புரிமைகளையும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரத்தினூடாக செல்வத்தை திரட்டிக் கொள்ளவும் ஆகும். ஹினிதும பிரதேசத்தில் கென்டர் ஒன்றில் தேயிலைக் கொழுந்து ஏற்றிய கென்டர் பியசேன அந்த பிரதேசத்தின் பிரதானமான தேயிலைத் தோட்ட உரிமையாளராகி இருக்கிறார். தற்போது அமைச்சர் பியசேன. தபால் நயின்டியில் பயணித்த எஸ்.பீ. திசாநாயக்க எப்படி ஹங்குரன்கெத்தவில் மாளிகையை அமைத்தார்? இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்திட வேண்டும். ஊடகவியலாளர் கேட்கிறார் ” உங்களுக்கு சேர்ட் வாங்கித் தந்தவர் யார்?” என. ஆனால் “அந்த இடத்தில் எப்படி ஹோட்டலொன்றை அமைத்தீர்கள்? “என அவர்களிடம் கேட்க அவர்களால் முடியாமல் போயுள்ளது.
2016 இல் 540 பிறாடோ ஊர்திகளைக் கொண்டுவந்திருந்தார்கள். வரி மோசடியொன்று இடம்பெற்றது. விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டு வந்தது. ரவி கருணாநாயக்க 540 பிறாடோ ஊர்திகளை விடுவித்தார். ஏன் மோட்டார் வாகனங்களை விடுவித்தீர்கள் என ரவி கருணாநாயக்கவிடம் கேட்க வேண்டும். அவர் நிதி அமைச்சர் காலத்தில் அவருடைய கம்பெனிக்கு அரசாங்க குதங்கள் வாங்கப்பட்டன. அதனை அவரிடம் கேட்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் மத்திய வங்கியில் மோசடியொன்று இடம்பெறவில்லையா? இடம்பெற்றிராவிட்டால் அர்ஜுன் அலோசியஸின் 800 கோடி பணம் ஏன் சென்ரல் பேங்கில் தடுத்துவைக்கப்பட்டது? களவு இடம்பெற்றிராவிட்டால் அதனைக் கொடுக்கவேண்டுமல்லவா. “களவு இடம்பெற்றாலும் நட்டம் ஏற்படவில்லையே” என ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்கள் அந்நாட்களில் கூறினார்கள். நாமல் ராஜபக்ஷ வந்தால் ” இன்னமும் நீங்கள் எப்படி அரசாங்க வீட்டில் இருப்பது? நீங்கள் அமைச்சரல்ல” எனக் கேட்க வேண்டும். அவையல்லவா கேள்வி. இன்று ஊடகத்தின் முன்னால் தோற்றுபவர் யார் என்று கூறினால் அவர்களிடம் கேட்கவேண்டிய கேள்விகளை நாங்கள் தருகிறோம். ஆனால் நாங்கள் போனதும் கேட்பதோ “உங்களின் சேர்ட் எங்கிருந்து?” என்றுதான். நாங்கள் அதனையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். இந்த அரசியல் கலாசாரத்தில் இருந்து வித்தியாசமான அரசியல் கலாசாரத்தை தேசிய மக்கள் சக்தி மாத்திரமே உருவாக்கும்.
உங்களுக்கு நான் உத்தரவாதமென்றை அளிக்கிறேன். நானோ தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ குழுக்களில் இருக்கின்ற எவருமோ பிஸ்னஸ்பண்ண வரப்போவதில்லை. நாங்கள் இந்த நாட்டில் நல்லவழியில் தொழில்முயற்சிகளை மேற்கொள்கின்ற தொழில்முனைவோருக்கு கைத்தொழிலதிபர்களுக்கு அவசியமான சுற்றுச்சூழலை அமைத்துக்கொடுப்போம். நீங்கள் இந்த நாட்டில் செல்வத்தைப் பிறப்பியுங்கள். செல்வத்தை பிறப்பிப்பவர் தனிப்பட்ட தொழில்முனைபவராவார். ஈட்டுகின்ற செல்வத்தில் ஒரு பகுதியை எடுப்பதையே அரசாங்கம் செய்துவருகின்றது. திறைசேரியை நிரப்பவேண்டுமானால் வெளியில் செல்வம் அதிகமாக உருவாகவேண்டும். எமது நாட்டில் வெளியில் செல்வம் உருவாவதில் உள்ள மிகப்பெரிய தடை இந்த அரசியல் கலாசாரமாகும். அமைச்சருக்கு அறிமுகமானவராக இல்லாவிட்டால் ச.தொ.ச. விற்கு பொருட்களைப் போட, தொழில்முனைவோர் காணியொன்றைக் கொள்வனவுசெய்ய, ஹோட்டலுக்கு உரிமமொன்றைப் பெற முடியாது. இந்த பொலிட்டிகல் கல்ச்சரில் சிறிய கும்பலொன்றின் கையில், பொருளாதாரத்தை நெறிப்படுத்துகின்ற அதிகாரம் சுருங்கி இருக்கின்றது. எமது நாட்டுக்கு நேரடியான வெளிநாட்டு முதலீடுகள் பாய்ந்து வருவதில்லை. 1978 இல் இருந்து 2022 வரை வந்துள்ள வெளிநாட்டு முதலீடுகள் 22 பில்லியன் டொலர்களாகும். 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் வியட்நாமிற்கு 23 பில்லியன் டொலர் வந்துள்ளது. நாங்கள் இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்திடுவோம். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பேர்மிற் கிடையாது. உறுப்பினர் பதவியை வகிக்கின்ற காலத்திற்கு வாகனமொன்று வழங்கப்படும். சேவைக்காலம் முடிவடைகையில் அவர் வாகனத்தை ஒப்படைத்துவிட்டு வீடுசெல்ல வேண்டும். வீடு வழங்குதல், சனாதிபதி மாளிகைகளை பராமரித்தல், இளைப்பாறிய சனாதிபதிகளை பராமரித்தல் நிறுத்தப்படல் வேண்டும். இந்த அரசியல் கலாசாரத்தை நிறுத்துவது எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பாகும். அரசியல்வாதி சட்டத்திற்கும் பிரஜைக்கும் மேலாக இருக்கின்ற ஒருவராக அமையமுடியாது. மனிதர்கள் தவறிழைக்கலாம். புரிகின்ற தவறுகளுக்கு தராதாரம் பாராமல் சட்டம் அமுலாக்கப்படவேண்டும்.
நாங்கள் சரியாக மையத்தை கேள்விக்குட்படுத்த வேண்டும். உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான பிரச்சினை, ஊழல் மற்றும் விரயத்தை எதிர்ப்பதற்கு இடையிலான பிரச்சினை, கடைப்பிடிக்கின்ற பழைய பொருளாதாரக் கொள்கைக்கும் புதிய பொருளாதாரக் கொள்கைக்கும் இடையிலான பிரச்சினை என்பவற்றை மையப்படுத்த வேண்டும். பாரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் எம்மைக் குழப்பியடிக்க இடமளிக்கவேண்டாம். உங்களிடம் பாரிய செயற்பொறுப்பு இருக்கின்றது. நீங்கள் கூறுவதை செவிமடுக்க பாரிய குழுவொன்று இருக்கிறது. உங்களுக்கு சமூகத்தில் பாரிய பலம், பொறுப்பு, நன்மதிப்பு இருக்கின்றது. இந்த அரசியலை மாற்றியமைப்பதற்காக உங்களிடம் இருக்கின்ற பலத்தை பயன்படுத்திக் கொள்வோம். இந்த மாற்றத்தின் முனைப்பான பங்காளியாக, முன்னணி பங்காளியாக அமையுமாறு நாங்கள் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். இந்த நாட்டை இதைவிட சிறந்த நாடாக மாற்றியமைக்க, இந்த பிரஜைகளுக்கு இதைவிட சிறந்த வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க முடியும். அதற்காக நாங்கள் ஒன்றுசேர்வோம். சாதகமானதா, பாதகமானதா, உண்மையா, பொய்யா, நேர்மையா, போலித்தனமா என்பதை தெரிவுசெய்யவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. சரியான தெரிவுக்காக நாங்கள் ஒன்றிணைவோம்.
(தேசிய மக்கள் சக்தி சட்டத்தரணிகளின் ஊடக சந்திப்பு – 2024.05.10) இந்த தருணம் தேசிய மக்கள் சக்திக்கும் அதன் தலைமைத்துவத்திற்கும் கணிசமான அளவிலான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற தருணமாகும். ரணிலை முதன்மையாகக்கொண்ட ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்கள், மொட்டு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தரப்பினர்கள் ஒன்றுசேர்ந்து எமது தலைவர்கள் பிரயோகிக்கின்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்திற்குப் பதிலாக திரிபான அர்த்தத்தை முன்வைத்து தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த தினமொன்றில் தேசிய மக்கள் சக்தியின் தோழர் லால் காந்த […]
(தேசிய மக்கள் சக்தி சட்டத்தரணிகளின் ஊடக சந்திப்பு – 2024.05.10)
இந்த தருணம் தேசிய மக்கள் சக்திக்கும் அதன் தலைமைத்துவத்திற்கும் கணிசமான அளவிலான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற தருணமாகும். ரணிலை முதன்மையாகக்கொண்ட ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்கள், மொட்டு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தரப்பினர்கள் ஒன்றுசேர்ந்து எமது தலைவர்கள் பிரயோகிக்கின்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்திற்குப் பதிலாக திரிபான அர்த்தத்தை முன்வைத்து தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த தினமொன்றில் தேசிய மக்கள் சக்தியின் தோழர் லால் காந்த மே தினத்தில் கூறிய கூற்றினை தொடர்புபடுத்திக்கொண்டு சேறு பூசுகின்ற தாக்குதல் நடாத்தப்பட்டு வருகின்றது. ஒட்டுமொத்த கதையினதும் அர்த்தத்திற்குப் பதிலாக பிரித்தடுத்த ஒருசில பகுதிகளை மேற்கோள் காட்டி உண்மையான அர்த்தத்தை மூடிமறைக்க முயற்சிசெய்து வருகிறார்கள். தோழர் லால் காந்த “ஊருக்கு நீதித்துறை தத்துவத்தை வழங்குவோம். நீதி நிருவாகத்திற்கான உரிமையை ஊருக்கு வழங்குவோம்” எனக் கூறியதாக குற்றச்சாட்டுசார்ந்த அபிப்பிராயமொன்றை முன்வைக்கிறார்கள். மேடையில் ஆற்றிய ஒட்டுமொத்த உரையின் கருப்பொருளை முன்வைக்காமல் எதிரான அரசியல் குழுக்கள் திரிபுநிலையுற்ற அபிப்பிராயமொன்றை சமூகமயப்படுத்த விளைகிறார்கள்.
தேசிய மக்கள் சக்தி என்றவகையில் நிலவுகின்ற இந்த சட்டக்கட்டமைப்பு மாற்றமடைய வேண்டுமென நாங்கள் நினைக்கிறோம். அதுமாத்திரமல்ல எமது ஆட்சியின்கீழ் புதிய அரசியலமைப்பு ஒன்றினையும் வகுப்போம். நாங்கள் அதிகாரத்திற்கு வந்ததும் உடனடியாக அரசியலமைப்பு ஒன்றினை முன்வைப்பது சிரமமானதாகும். அதனால் நிலவுகின்ற அரசியலமைப்பிற்குள்ளே சிறிது தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அவ்வாறு பயணிக்கையில் இந்த அரசியலமைப்பில் மக்களுக்கு சாதகமான வழிமுறை இருப்பின் அதனை தேசிய மக்கள் சக்தி கடைப்பிடிக்கும். ஊர்மக்களின் பி்ரச்சினைகளை எளிமையாக தீர்த்துக்கொள்கின்ற வழிமுறையொன்று இருப்பின் அந்த வழிமுறையை ஆராய்ந்து ஊர் மக்களுக்கு நியாயமான வழிமுறையொன்றை நாங்கள் அமைத்திடுவோம். அது இடம்பெற வேண்டும். தோழர் லால் காந்தவின் உரையின் ஒட்டுமொத்த அர்த்தத்தை எடுத்துக்கொண்டால் அது மிகவும் நன்றாக தெளிவாகின்றது.
அரசியலமைப்பின் 3 வது அத்தியாயத்தில் மக்களின் இறைமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் காட்டப்பட்டுள்ளவாறு ” இலங்கை குடியரசின் இறைமைத் தத்துவம் மக்களுக்குரியதாகும். இறைமைத் தத்துவத்தை பாராதீனப்படுத்த முடியாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இறைமைத் தத்துவம் சனநாயக நாடுகளில் ஆட்சியின் வசதிகருதி நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை, நீதித்துறை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. “நீதிமன்றம்” அரசியலமைப்பின் மூன்றாவது பிரிவுக்கிணங்க அமுலாக்கப்படுகின்ற நிறுவனமாகும். மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக ஆட்சியின் வசதிகருதி பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதியுர் நிலையில் உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் என கீழ்நோக்கி முறைமையொன்று வியாபித்துச் செல்லக்கூடியவகையில் அமைந்துள்ளது. நீதிவான் நீதிமன்றத்திற்குக் கீழாக அமுலாகின்ற நீதிமன்றத்திற்கு உதவி புரிகின்ற ஒருசில கூறுகள் நிலவுகின்றன.
உதாரணமாக கமநல சேவைகள் சட்டம் நீதவான் நீதிமன்றத்தில் அமுலாக்கப்படுவதில்லை. கமக்காரனின் “வாய்க்கால்” பிரச்சினை கிராமத்திலுள்ள கமக்காரர் சங்கத்தினாலேயே தீர்க்கப்படுகின்றது. அதற்கான அதிகாரம் ஊரிலுள்ள கமக்காரர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை சம்பந்தமான சிக்கல் தோன்றியவிடத்து அறுதியிடுகின்ற வாக்கெடுப்பினை நடாத்தி அந்த சிக்கலைத் தீர்த்துக்கொள்ள கூட்டுறவுத்துறை சட்டத்திற்குள்ளே ஏற்பாடுகள் நிலவுகின்றன. அதைப்போலவே மத்தியஸ்த சபைகள் ஊடாகவும் சிக்கலுக்குத் தீர்வுகாண்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தினால் மத்தியஸ்த சபையின் சான்றிதழ் கோரப்படுகின்றது. ஒருசில சிக்கல்கள் நீதிமன்றத்தைப் போன்றே பொலீஸாலும் மத்தியஸ்த சபைக்கு ஆற்றுப்படுத்தப்படுகின்றது. அதன்போது மத்தியஸ்த சபைக்கு” தீர்க்கப்படாமைக்கான சான்றிதழை” வழங்குவதற்கான அதிகாரம் இருக்கின்றது. “நடுத்தீர்ப்பு” என்பதும் அத்தகைய ஒரு செயற்பாடாகும். கீழ் மட்டத்தில் உள்ள பொலீஸின் தரத்தை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கான இயலுமை நிலவுமாயின் அதனை எவருமே விரும்பாதிருக்கப் போவதில்லை. அதோ அந்த கருத்தில் எதேனுமொரு கட்டமைப்பினை உருவாக்கி அதற்கு அதிகாரத்தை வழங்குவதையே தோழர் லால் காந்த குறிப்பிட்டார். தேசிய மக்கள் சக்தியின் அங்கத்தவர்களுக்கு அதிகாரத்தை வழங்க மேற்கொள்ளப்படுகின்ற முயற்சி என எதிரிகள் அதற்கு பொருள்கொடுக்க தாழ்ந்த மட்டத்திலான முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
தேசிய மக்கள் சக்தி எந்த இடத்தில் இருக்கின்றதென அனைவரும் அறிவார்கள். எதிரிகள் மிகவும் பதற்றமடைந்துள்ளார்கள். அதனாலேயே எமது வார்த்தைகளை திரிபுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். எதிரியின் இந்த குறைகூறல்களை நாங்கள் புறந்தள்ளுகிறோம். அதைப்போலவே தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்றவகையில் எமது ஆட்சியின்கீழ் முறையான சட்டமுறைமையொன்றை எவ்வாறு கொண்டுவருவது எனும் விடயம் பற்றி ஆராய்ந்து வருகின்றது. சனாதிபதி தேர்தல் அண்மிக்கையில் எமது கொள்கை வெளியீட்டினை முன்வைப்போம் அதனை வாசித்துப் பார்க்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.
“”உண்மையின் பயணத்தை தொடர தயாரகும்வேளையில், பொய் உலகத்தைச் சுற்றி மூன்று தடவைகள் அலைந்துவந்து வீட்டுக்கும் வந்துவிட்டது” என ஒரு கூற்று இருக்கின்றது.”
-சட்டத்தரணி ஹர்ஷண நானாயக்கார-
ஒரு கூற்று இருக்கின்றது “உண்மையின் பயணத்தை தொடர தயாரகும்வேளையில், பொய் உலகத்தைச் சுற்றி மூன்று தடவைகள் அலைந்துவந்து வீட்டுக்கும் வந்துவிட்டது” என. தற்போது திசைகாட்டிக்கு எதிரான எதி்ரிகள் பொய்களை சமூகமயப்படுத்தப்படுகின்ற வேகம் அதிகரித்துள்ளது.
லால் காந்தவின் உரையை தொடக்கத்தில் இருந்தே கேட்குமாறு நான் முதலில் கூறுகிறேன். ஒட்டுமொத்த உரை 42 நிமிடங்களாகும். வகுத்த தொகுத்தமைத்த உரையின் ஒன்றரை நிமிட பகுதியையே நீங்கள் கேட்டிருப்பீர்கள். லால் காந்த முன்வைப்பது மிகவும் முன்னேற்றகரமான பிரதிநிதித்துவ சனநாயக பண்பினையாகும். அதிகாரம் என்பதால் மக்களை எவ்வாறு பலப்படுத்துவது எனும் விடயத்தையாகும். அதிகாரம் கீழ்நோக்கி பகிர்ந்து செல்வதன் கருத்து ஊரிலுள்ள ஐந்துபேர் மதகொன்றின்மீது அமர்ந்து வழக்கு விசாரிப்பதல்ல. எனினும் எதிரானவர்கள் ஊடகத்திற்கு வந்து கூற முயற்சிசெய்வது அதைத்தான். சட்டத்தின் ஆட்சியில் உள்ள பிரதான அம்சம்தான் நீதிக்கான அணுகலுக்கு இருக்கின்ற வாய்ப்பு (Access to Justice). ஆளொருவர் அரசாங்கத்திற்கோ அல்லது பொலீஸிற்கோ எதிராக தனது சட்டமுறையான உரிமையை உறுதிப்படுத்துகின்ற நிலைமையை எற்படுத்துதல். நீதியை அணுக முயற்சிசெய்கின்றபோது தோன்றுகின்ற பிரதானமான தடைதான் அதற்கான மிகையான செலவும் காலமும். அதனால் ஆட்கள் தமது உரிமைகள் மீறப்பட்டால் தீர்வு காண்பதற்காக நீதிமன்றம் செல்ல முனைவதில்லை. யாழ்ப்பாணத்தில், அம்பாந்தோட்டையில், அநுராதபுரத்தில் ஆட்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு ஆஜராக கட்டாயமாக கொழும்பிற்கு வரவேண்டும். அது மிகவும் சிரமமான நிலைமையாகும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் மக்களிடம் நீதியை எடுத்துச்செல்வதற்காக எம்மால் மாகாணத்திற்கும் ஓர் சுப்ரீம் கோர்ட்டினை பெற்றுக்கொடுக்கமுடியுமா எனும் உரையாடலுக்குச் செல்லமுடியும்.
இந்த வழிமுறையை இந்த நாடு பயணித்த பாதையை மாற்றியமைத்திட வேண்டுமென்பதை தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகளாகிய நாங்கள் அறிவோம். அதன் பிரதானமான பகுதிதான் சட்டத்தின் ஆட்சி. சட்டத்திலும் நீதிமன்றங்களிலும் பலவீனங்கள் நிலவுமாயின் அவற்றை மாற்றியமைத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும். தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் எந்தவொரு சட்டத்தையும் ஒருதலைப்பட்சமாக தீர்மானித்து அமுலாக்க எத்தனிக்கமாட்டோம். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுடனும் கலந்துபேசியதன் பின்னரே தீர்மானிப்போம். இந்தியாவிலும் பங்களாதேஷிலும் நீதிக்கான அணுகலை வசதிப்படுத்துவதற்காக கிராமங்களில் நீதிமன்றம் (Village Courts) இருக்கின்றது. இவற்றில் சட்டமுறையான பயிற்சியைப் பெறுகின்ற உத்தியோகத்தர்கள் ஊடாக ஊரில் இடம்பெறுகின்ற சிறியஅளவிலான குற்றச்செயல்களை தீர்த்துக்கொள்கிறார்கள். அத்தகைய நீதிவழங்குவதை கீழ்நோக்கி கொண்டுசெல்வதைத்தான் தோழர் லால் காந்த அன்று தெளிவுபடுத்தினார். அதனால் ஆகின்ற செலவு குறைவடைதல், பிரதான நீதிமன்றங்களில் வழக்குகள் குவிவதற்கான போக்கு குறைவடைதல் போன்ற சாதகமான நிலைமைகள் உருவாகும். நீதிக்கான அணுகல் என்பது இந்த நன்மைகள் மாத்திரமல்ல. மக்களை வலுவூட்டுவதற்கான சட்ட உதவிகளின் அளவினை அதிகரிக்க வேண்டியநிலை ஒருசிலவேளைகளில் இடம்பெறும். சட்டத்தின் உதவி நீதவான் நீதிமன்றத்திற்கு கட்டாயமானதல்ல. மக்களை வலுவூட்டுவதற்கு அவசியமான நிருவாகக் கட்டமைப்புகளை உருவாக்கிக்கொள்ள நாங்கள் முயற்சி செய்கிறோம். எனினும் ஐமச உள்ளிட்ட அரசியல் எதி்ரிகள் அதனை திரிபுபடுத்தி வருகிறார்கள். அதைப்போலவே நேர்காணலொன்றின்போது சட்டத்தரணிகளை நீதிமன்றத்தை அவமதித்ததாக கதையொன்றை புனைந்து வருகிறார்கள். ஒருசில சட்டத்தரணிகளின் கூற்றுகளை அவர் விமர்சித்தார். அவர்கள் அரசியல் இலாபத்திற்காக உண்மைகளை திரிபுபடுத்தி வருகிறார்கள்.
நாங்கள் ஊரில் உள்ள மீனவர் சங்கமொன்றை உதாரணமாக கொள்வோம். மீனவர்களின் சிக்கல்களை அவர்களின் மீனவர் சங்கங்கள் ஊடாக நீதிமன்றமல்லாத கட்டமைப்பு ஊடாக தீர்த்துக்கொள்ள முடியும். அது நீதிமன்ற முறைமையைவிட வித்தியாசமானது. கிராமம் வரை வியாபித்துச்சென்ற மக்களுக்கு வலுவூட்டுகின்ற நிருவாக மாதிரியொன்றே அவசியமாகின்றது. புதிய மாதிரிகள் பற்றி நாங்கள் கலந்துரையாடிக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் நீதி நிருவாக வழிமுறைகள் எவ்வாறானதாக அமையவேண்டுமென கலந்துரையாடிப் பார்ப்போம்.
“பிரதேசவாரியாக சட்டத்தை அமுலாக்குவது தவறானதெனில் முதலில் இவர்கள் மாகாண மேல்நீதிமன்றங்களை நிறுவுகையில் எதிர்த்திருக்கவேண்டும்.”
-சட்டத்தரணி ஹேமக்க சேனாநாயக்க – தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் கொழும்பு மாவட்டத் தலைவர்-
அதிகாரப் பகிர்வு எண்ணக்கருவின் ஆழமான நிலைமையையே தோழர் லால் காந்த விளக்க முற்பட்டார். இலங்கையில் அதிகாரப் பகிர்வு பற்றி நீதிமன்றம் பற்றி மாத்திரமல்ல நாங்கள் பல தசாப்தங்காளக கலந்தரையாடி வருகிறோம். தோழர் விஜேவீர வடக்கு கிழக்கில் நிலவுகின்ற சிக்கலுக்கான தீர்வு என்னவென்பது பற்றி “ஈழப் போராட்டத்திற்கான தீர்வுகள்” எனும் நூலில் விடயங்களை முன்வைத்துள்ளார். அதிகாரப் பகிர்வு பற்றி 1988 இல் இருந்தே பேசப்பட்டு வருகின்றது. அதற்கான தீர்வு என்றவகையிலேயே மாகாணசபைகள் அறிமுகஞ் செய்யப்பட்டன. நாட்டு மக்களின் இறைமைத் தத்துவம் மக்களிடமே இருக்கின்றது. அதனைப் பாராதீனப்படுத்த முடியாது. இறைமைத் தத்துவம் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை ஊடாக அமுலாக்கப்படுகின்றது.
நீதிமன்றங்களில் நீதி நிருவாகத்திற்காக கழிகின்ற காலம் மற்றும் அதற்காக செலவாகின்ற நிதிசார் செலவுகள் சம்பந்தமாக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்றவகையில் நாங்கள் கவனஞ்செலுத்தி இருக்கிறோம். எமது நாட்டில் பிரிகையிடல் வழக்கொன்று காணி வழக்கொன்று தொடரப்பட்டால் முழுப்பரம்பரையுமே வழக்காடவேண்டிய நிலையேற்படும். ஏன் இவ்வளவு காலம் எடுக்கின்றது? இது சம்பந்தமாக வழக்காடுகின்ற பணிகளை மிகவும் வினைத்திறனுடையதாக்குவதற்காக முன்மொழிவுகளை சமர்ப்பிக்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். நீதிமன்றங்களில் அலுவலக வசதிகள் கிடையாது, ஊழியர்களின் வசதிகள் பற்றிய சிக்கல் நிலவுகின்றது. சுருக்கெழுத்தாளர்களின் பிசுக்கல்மார்களின் பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது. பல தசாப்தங்கள் பழமையான 1977 இல் ஆக்கப்பட்ட பிரிகையிடல் வழக்குச் சட்டங்களுடன் 2024 இலும் செயலாற்றி வருகிறோம். பிரிகையிடல் வழக்குகளில் தம்பட்டமடித்தல் இடம்பெறுகின்றது. இயந்திரங்கள் பல மாதங்களாக உடைந்துபோயுள்ளன. இதனால் பணம் செலவாகின்றமையும் காலம் விரயமாதலும் இடம்பெறுகின்றது. ஒருசில வழக்குகளும் ஒருசில சட்ட நிலைமைகளும் கொழும்பில் மாத்திரமே விசாரிக்கப்படுகின்ற நிலைமையின் காரணமாக ஆட்களுக்கு ஏற்படுகின்ற நட்டமும் காலம் விரயமாதலும் கடுமையாக அதிகரித்துள்ளது. மாகாண மேல் நீதிமன்றங்கள் நிறுவப்படமுன்னர் மாவட்ட நீதிமன்றங்களுக்கும் நீதவான் நீதிமன்றங்களுக்குமே அதிகாரம் இருந்தது. மேன்முறையீடு செய்கின்ற அதிகாரம் நீதிமன்றத்திற்கும் அதற்கு மேலாக உயர்நீதிமன்றத்திற்கும் அதிகாரம் இருந்தது. வழக்குகளிலான தாமதம் ஒருசில சந்தர்ப்பங்களில் பத்து வருடங்கள், பன்னிரண்டு வருடங்கள் வரை நீண்டுசெல்லத் தொடங்கின. இதனைக் கண்ட சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் சட்டமும் நீதியும் நிலைநாட்டப்படுகின்ற முறையியல் ஊருக்கு கொண்டுசெல்லப்பட வேண்டுமென தீர்மானித்தார்கள்.
தோழர் லால் காந்த மேடையில் முன்வைத்ததது நீண்டகாலமாக இந்த நாட்டில் இடம்பெற்ற விடயத்தையாகும். பிரதேசரீதியாக வழக்காடுவது தவறானதெனில் மாகாண மேல்நீதிமன்றம் நிறுவப்படுகையிலேயே இவர்கள் எதிர்ப்பினைத் தெரிவித்திருக்க வேண்டும். நீதிமன்றமொன்றில் சட்டம் அமுலாக்கப்படுதல் தாமதிக்கின்ற அளவுக்கு நீதி நிலைநாட்டப்படுவதும் தாமதமாகின்றது. அதனால் மாகாண மேல்நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. மாகாண மேல்நீதிமன்றங்கள் நிறுவப்பட்டமையால் வழக்கு விசாரிப்பதிலான தாமதங்கள் பாரியளவில் குறைவடைந்தன. அத்துடன் மாகாண மேல் நீதிமன்றங்களில் சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டமையால் அதிகாரமளித்தல் மேற்கொள்ளப்பட்டது. கொழும்பில் குவிந்திருந்த அதிகாரம் ஊருக்குச் செல்லத் தொடங்கியது. அதனால் மேன்முறையீட்டு விசாரணைக்காக அநுராதபுரத்தில் இருந்து வந்தவர் ஹோட்டலில் தங்கியிருந்து பலநாட்களைக் கழித்து திரும்பிச் செல்வது நின்றுவிட்டது. இதுபோன்ற செயற்பாங்கே மத்தியஸ்த சபை ஊடாகவும் இடம்பெறுகின்றது.
இந்தியாவில் பஞ்சாயத்து முறையியல் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனால் பிரதேசரீதியாக நீதியை நிலைநாட்டுவதற்கான மிகவும் முக்கியமான தெளிவான முறையியலுக்கு செல்லவேண்டுமென நாங்கள் நம்புகிறோம். அடிப்படை உரிமைகள் பற்றிய வழக்கினை விசாரிப்பதற்கான அதிகாரம் கொழும்பிற்கு மாத்திரமே இருக்கின்றது. இந்த அதிகாரம் மாகாணங்களுக்குச் செல்லவேண்டுமென்ற உரையாடல் நிலவிவருகின்றது. பண்டையகாலத்தில் உயர்நீதிமன்றம் பிரதேசரீதியாக செயலாற்றியது. இந்த நீதியை நிலைநாட்டுதல் பிரதேரரீதியாக பயணித்தல் ஊடாகவும் அவர்களுக்கு நன்மை விளைகின்றது. வழக்கொன்றின்போது பொலீஸ் முறைப்பாட்டினை எடுக்க வழியில்லை, திட்டமொன்றை எடுப்பதற்கான விளக்கம் கிடையாது. வழக்காடச் சென்றதும் ஆட்கள் பாரிய துன்பங்களை அனுபவிக்கிறார்கள். அதனாலேயே மக்கள் நீதிமன்றத்திற்குச் செல்வதிலான சிக்கலொன்று தோன்றியுள்ளது. இதற்கிணங்க அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டும்.
தற்போது விசாரிக்கவேண்டியது இவ்வாறான பிரச்சினைளையல்ல. டயனாவின் வழக்கு தொடர்பான தீர்ப்பினை வழங்க எவ்வளவு காலம் சென்றது? அவர் எவ்வாறு தேசிய பட்டியலில் விழுந்தார்? சனாதிபதி வெளிநாட்டுப் பெண்ணெருவரை எவ்வாறு இராஜாங்க அமைச்சராக்கினார்? அவர் எவ்வாறு கட்சியொன்றின் செயலாளர் ஆகினார்? அவர் இ்ந்த நாட்டில் இருக்கின்ற பாராளுமன்ற சிறப்புரிமைகள், அமைச்சரின் சிறப்புரிமைகளை எவ்வாறு அனுபவித்தார்? இவைதான் பாரதூரமான பிரச்சினைகள். “வேலியில் சென்ற ஓணானை பிடித்து வேட்டிக்குள் போட்டதைப்போல்” சம்பவங்கள் இடம்பெறக் கூடாது. ஐக்கிய மக்கள் சக்தி அவர் ஒரு வெளிநாட்டுப் பெண்மணி என்பதை அறிந்திருந்தும் பாராளுமன்ற ஆசனமொன்றை எவ்வாறு வழங்கியது? நாட்டுக்கு உல்லாசப் பயணத்திற்காக வந்த ஒரு பெண்ணை சனாதிபதி இராஜாங்க அமைச்சராக நியமித்துள்ளார். இது மிகவம் பாரதூரமான மிகவும் பயங்கரமான அத்துடன் கண்டனம் தெரிவிக்கப்படவேண்டிய நிலைமையாகும். இது உங்களதும் எனதும் வாழ்க்கை பற்றிய பிரச்சினையாகும். தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்றவகையில் இத்தகைய விடயங்கள் பற்றிக் கவனஞ் செலுத்தப்படவேண்டுமென்பது எனது முன்மொழிவாகும்.
“நீதித்துறை தத்துவத்தை பன்முகப்படுத்துவது தொடர்பில் பயப்படவேண்டிய காரணம் என்ன?”
-சட்டத்தரணி அகலங்க உக்வத்த-
அதிகாரம் ஓரிடத்தில் குவியாமல் பன்முக்கப்படத்தப்படவேண்டுமென மே தினத்தன்று ஒட்டுமொத்த உரையில் தோழர் லால் காந்த கூறுகையில் 1600 – 1700 களில் இருந்த சார்ள்ஸ் மொன்டெஸ்கியு நீதி சுதந்திரமானதாக அமையவேண்டுமாயின் ஓரிடத்தில் குவிந்துவிடக்கூடாது எனக் கூறியுள்ளார். 2024 இல் அதிகாரம் பன்முகப்படுத்தப்பட வேண்டுமெனக் கூறும்போது அதற்கெதிராக கூற்றுகளை வெளியிடுகிறார்கள், பொய்யான பயத்தை உருவாக்குகிறார்கள். பிரதிநிதித்துவ சனநாயகத்தை நாங்கள் எவ்வாறு உயர்த்திப்பிடிப்பது மற்றும் எவ்வாறு வலுப்படுத்துவது எனும் விடயம் ஒட்டுமொத்த உரையிலுமே பொதிந்திருந்தது. நேரடி சனநாயகத்தை எவ்வாறு நிலைநாட்டுவதென்பது. நிலைநாட்டப்பட்டிராத விடயமொன்றைப் பற்றியும் கூறினார். பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறவேண்டிய பிரதமரொருவரை நியமித்துக்கொள்ள வேண்டுமெனக் கூறினார். இது சீனாவோ கியுபாவோ அல்ல, அது பலகட்சி முறையை ஏற்றுக்கொள்கிறது, இது தொடர்ந்தும் இந்த நாட்டில் இருக்கவேண்டுமெனக் கூறினார். இவை எல்லாவற்றையும் கூறி, நீதித்துறை தத்துவத்தை பன்முகப்படுத்த வேண்டுமெனக் கூறியதும் அதனைப் பிடித்துக்கொண்டு அல்லோலகல்லோலப் படுத்துகிறார்கள். சமூகத்தில் எம்மைப் பற்றிய பயத்தை உருவாக்குகிறார்கள்.
நாங்கள் இவையனைத்தையும் செய்வது நாங்கள் அதிகாரத்திற்கு வந்து அடுத்த நாளிலேயே அல்ல, புதிய அரசியலமைப்பின் ஊடாகவே இது சாதிக்கப்படும். புதிய அரசியலமைப்பினை ஆக்கும்போது எம்மால் ஏதேனும் முன்மொழிவு செய்யப்படுமாயின் அதற்காக நிபுணத்துவ ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வோம். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்ற சட்டங்கள் ஊடாக மாத்திரமே இவை இடம்பெறும். அதனால் நாங்கள் பிரதிநிதித்துவ சனநாயகத்தை வலுப்படுத்த வேண்டுமென்பதை ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் பலகட்சி முறைமையை எற்றுக்கொள்கிறோம். பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறுகின்ற பிரதமரை ஏற்றுக்கொள்கிறோம். அதனால் சமூகத்தில் எந்தவிதமான பீதியையும் ஏற்படுத்தவேண்டாம். பாராளுமன்றத்திற்கு மக்களின் விருப்பத்தினால் தெரிவுசெய்யப்பட்டு வருகின்ற எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் நாங்கள் சமர்ப்பிக்கின்ற சட்டத்திற்கு சார்பாகவோ எதிராகவோ வாதங்களை முன்வைத்து ஆதரவு வழங்கவோ எதிர்ப்பு தெரிவிக்கவோ வாய்ப்பு உண்டு. இவை பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படுகின்ற சட்டங்கள். இங்கு நேரடி சனநாயகம் பற்றி கூறப்படுகின்றது. ஒருசில விடயங்களுக்காக மக்களின் விருப்பத்தை நேரடியாக பெறமுடிகின்றது. தோழர் லால் காந்தவின் ஒட்டுமொத்த உரை பற்றியும் கலந்துரையாடலுக்கு இலக்காக்குங்கள். அதில் சிறியதொரு துண்டினை எடுத்துக்கொண்டு காலவதியான பழைய கீழ்த்தரமான அரசியல் பிரயோகங்களை பாவிக்க வேண்டாம்.
யூத் ஃபோ ஜஸ்டிஸ் எனப்படுகின்ற அரசசார்பற்ற அமைப்பொன்றின் சட்டத்தரணியொருவர், நானறிந்தவகையில் அவர் அரச தலைவரின் ஆலோசகர் கூறுகிறார் அவருக்கு புலனாகியதாம் இது 88 – 89 காலத்தில் போன்ற ஒன்றை செய்யப்போவதாம். அவர் பயந்துபோய் இருந்தாராம். அவருக்கு அப்போது நடந்தவை ஞாபகமிருக்கிறதாம். என்னைவிட அவருக்கு நான்கு வயது குறைவு. அக்காலத்தில் எனக்கும் வயது ஒன்பது. இ்ந்தக் காலத்தில் அவருக்கு ஞாபகம் இருக்கிறதாம். என்ன கேலிக்கூத்துகள் இவை. போராட்டத்தில் நடந்தவற்றை இலத்திரனியல் ஊடகங்கள் இருந்தமையால் நாங்கள் கண்டோம். 88 – 89 இல் இந்த இலத்திரனியல் ஊடகங்கள் இருக்கவில்லை. அன்று இடம்பெற்ற உண்மைச் சம்பவங்கள் எமக்குத் தெரியாது. நாங்கள் சனநாயக வழியில் 40 வருட காலத்தில் எம்மில் எந்தவிதமான தவறுமே கிடையாது என்பதை சமூகம் அறியும். நிரூபித்திருக்கிறோம். ஆனால் அவர்களின் தவறுகளை இந்த ஒட்டுமொத்த சமூகமுமே கண்டிருக்கிறது.
நாட்டின் சட்டத்தில் நீதி நிருவாகத் திட்டம் நிலவிய காலத்தில் “சூல நீதிமன்றம்” “முதனிலை நீதிமன்றம்” கொண்டிருந்த அதிகாரத்தை அதன் பின்னர் நீதவான் நீதிமன்றத்திற்கு கொடுத்தார்கள். 1992 இல் மாகாண நீதி மன்றங்கள் வந்தன. அந்த மாகாண நீதிமன்றங்கள் வரும்போது ஒருசிலர் எதிர்த்தார்கள். எனினும் வழங்குக் காலம் நீடிக்கின்றமை, மேன்முறையீடுகள் தாமதிக்கின்றமை ஓரளவுக்கு குறைந்திருந்தது. மத்தியஸ்த சபைகளுக்கு இருந்த நிதி அளவு 25000 வரை அதிகரிக்கப்பட்டது. நாங்கள் கூறுவது அத்தகைய ஒரு முறையியலையாகும். மத்தயஸ்த சபைகளுக்கு, கமநல சபைகளுக்கு, கிராமோதய சபைகளுக்கு, கூட்டுறவுச் சங்கத்திற்கு நாங்கள் அதிகமாக அதிகாரங்களை வழங்குவோம். நீதிமன்ற வளாகத்திற்குள் தீர்க்கப்பட வேண்டியதல்லாத சிறிய சிறிய விடயங்களுக்காக அந்தந்த இடங்களில் தீர்ப்பளித்து அகற்றிக்கொள்வோம்.
“யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல்செய்ய கொழும்பிற்கு வரவேண்டும்…”
-சட்டத்தரணி உபுல் குமரப்பெரும-
மாகாண சபை முறை வந்த பின்னர் நாட்டின் நிருவாகம் எவ்வாறு பன்முகப்படுத்தபட்டது எனும் விடயத்துடன் மற்றமொரு விடயத்தையும் சேர்க்கிறேன். கொழும்பில் குவிந்திருந்த அதிகாரம் மாகாண சபை முறைமை ஊடாக மற்றமொரு அடுக்கில் கொழும்பிற்கு வெளியில் சென்றது. அரசியலமைப்பிற்கான 13 வது திருத்தத்தின்படி மூன்று நிரல்கள் இருக்கின்றன. மூடப்பட்ட நிரல், மாகாணசபை நிரல், ஒருங்கிணை நிரல். மாகாண சபையுடன் தொடர்புடைய விடயங்கள், மத்திய அரசாங்கத்துடன் தொடர்புடைய விடயங்கள் மற்றும் மாகாண சபைகளுடனும் மத்திய அரசாங்கத்தடனும் தொடர்புடைய விடயங்கள். கொழும்பில் குவிந்திருந்த அதிகாரம் மாகாண சபைகளுக்கு கொண்டுசெல்லப்பட்ட விதம் அதில் சுட்டிக்காட்டப்படுகின்றது. தோழர் லால் காந்த கூறுவதன்படி அதிகாரத்தை எவ்வாறு கீழ்நோக்கி கொண்டுசெல்வது என்கின்ற விடயத்தில் ” நீதித்துறை தத்துவத்தை கீழ்மட்டத்தில் ஊரில் உள்ளவர்களுக்கு கொடுத்தால் என்ன நேரிடும்” எனும் விடயத்தை தான் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற குழுவினர் முதன்மையாகக் கொண்டுள்ளார்கள். இவர்கள் இதனை 88 – 89 உடன் இணைக்க முயற்சிசெய்து வருகிறார்கள்.
அமெரிக்காவில் யூரர் சபை முறைமை இருக்கின்றது. குற்றவியல் வழக்கொன்றுக்காக நீதி மன்றத்திற்கு வருகின்ற பிரஜையின் தலைவிதியை தன்னைப்போன்ற வேறுசில பிரஜைகளே தீர்மானிக்கிறார்கள். இலங்கையிலும் யூரர் சபை முறைமை இருக்கின்றது. இலங்கையில் யூரர் சபை என்பது சட்டமுறைக் கல்வியைப் பெற்றிராத, சட்டத்தரணிகள் அல்லாத, சாதாரண பிரஜைகள் ஏழு போ் முறைப்பாட்டாளர் நெறிப்படுத்துகின்ற சாட்சிகள், பிரதிவாதி நெறிப்படுத்துகின்ற சாட்சி மற்றும் அந்த சாட்சிகள் சம்பந்தமாக நீதிபதி வழங்குகின்ற கருத்தினை எடுத்துக்கொண்டு தமது தீர்ப்பினைக் கொடுப்பதாகும். அந்த ஏழு பேராலும் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்க இயலும் இன்றேல் விடுதலைசெய்ய இயலும். பிரஜைகளால் தீர்ப்பளிக்கப்படுதல் (kaudge by pierce) என்பது உலகில் உள்ள ஒர் எண்ணக்கருவாகும். தோழர் லால் காந்த திட்டவட்டமாகக் கூறுகிறார் ஒருசில விடயங்களை ஊரிலேயே தீர்த்துக்கொள்ள முடியுமென. இவை ஏற்கெனவே சட்டத்தில் இருக்கின்ற விடயங்களாகும். உதாரணமாக கமநல அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் “கமக்காரர் பிணக்குகள்” கமநல சேவைகள் நிலையத்தில் உத்தியோகத்தர்களால் சமரசத்திற்கு கொண்டுவர சட்டத்திலேயே ஏற்பாடுகள் நிலவுகின்றன. கூட்டுறவுடன் நாட்டின் பிரஜைகள் பிணக்குகளை ஏற்படுத்திக்கொண்டால் கூட்டுறவுச் சட்டத்தின் பிரகாரம் அதனை நடுத்தீர்ப்பாளர் ஒருவரிடம் ஆற்றுப்படுத்த இயலுமை இருக்கின்றது. மேற்படி தீர்ப்பிற்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்க நீதிமன்றத்திடம் ஆற்றுப்படுத்த முடியாது. “கஸ்டம்ஸில்” சுங்கக் கட்டளைச் சட்டத்தின்கீழ் சுங்கம்சார்ந்த தவறொன்று சம்பந்தமாக சுங்க அதிகாரிகளின் தலைமையில் விசாரணைகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுடுபடைக்கலன் கட்டளைச் சட்டத்தின்கீழ் துப்பாக்கியொன்றின் உரிமத்தை இற்றைப்படுத்தாவிட்டால் பாதுகாப்பு செயலாளரிடம் மேன்முறையீடு செய்யலாம். பாதுகாப்புச் செயலாளர் மூவரைக்கொண்ட சபையொன்றை அதனை பரிசீலனை செய்வதற்காக நியமிப்பார். அந்த தீர்மானத்தின்படிதான் மேன்முறையீட்டினை சமர்ப்பிக்கலாம். அதைப்போலவே சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் உரிமமமொன்று மறுக்கப்பட்டால் அதன் மேற்முறையீடு செயலாளருக்கே உண்டு. அந்த தீர்மானத்தின் பேரில்தான் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கோ அல்லது உயர்நீதிமன்றத்திற்கோ வழக்குத் தொடருவதற்கான இயலுமை கிடைக்கின்றது. இந்த விடயத்தை முன்வைத்து தோழர் லால் காந்த அது மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டுமெனவே கூறுகிறார். நான் இண்டுமூன்று வருடங்களுக்கு முன்னர் பிரிகையிடல் வழக்கொன்றை முடிவுக்கு கொண்டுவந்தேன். 1971 மே மாதத்திலேயே இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. நான் பிறந்தது 1971 இல். வழக்கு நிறைவடையும்போது 49 வருடங்கள் கழிந்திருந்தன. எனக்கும் வயது 49 ஆகும்.
அதைப்போலவே யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற ஒருவர் கொழும்பிற்கு வந்து உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் வழக்கொன்றை தாக்கல்செய்ய அல்லது மேன்றையீடொன்றை சமர்ப்பிக்க அதிக செலவாகின்றது. இறுதி மேன்முறையீட்டு நீதிமன்றத் தத்துவம் உயர்நீதிமன்றத்திற்கே உண்டு. யாழ்ப்பாணத்தில் இருந்து வருகின்ற ஒவ்வாரு மேன்முறையீடும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அவற்றின் சாட்சிக் குறிப்புகள் தமிழ் மொழியிலேயே இருக்கின்றன. இந்த ஏற்புடைய உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்புக் குறிப்புகளைப் பெற்றுக்கொள்ள ஒருவடத்திற்கு மேற்பட்ட காலம் எடுக்கும். தொலைதூரப் பிரதேசத்தைச்சேர்ந்த ஒருவர் பெறுமதி ஒரு இலட்சத்திற்கு குறைவான காணிக்காக கொழும்பிற்கு வந்து வழக்காடுவது நீதியானதா, அநீதியானதா என்பது எமக்கு விளங்குகின்றது. இது சட்டத்தரணிகள் சமூகம் அறியாத விடயமல்ல. தோழர் லால் காந்த கூறுவது இந்த விடயத்தைதான். அது பயப்படவேண்டிய ஒரு விடயமல்ல. தாக்குபவர்கள் நல்லெண்ணத்துடன் கூறுகின்ற கதையல்ல இது. இத்தருணத்தில் தேசிய மக்கள் சக்தி இருக்கின்ற இடம் பற்றிய புரிந்துணர்வுடன் அத்துடன் அந்த இடத்தில் இருந்து கீழே இழுத்துப்போடுவதற்கான தேவையுடன் புரிந்த சதிவேலைதான் இது.