-Colombo, February 05, 2024- இந்திய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் அணி நேற்று (05) இரவு இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சு செயலாளர் Vinay Mohan அவர்களை சந்தித்தது.
-Colombo, February 05, 2024-
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் அணி நேற்று (05) இரவு இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சு செயலாளர் Vinay Mohan அவர்களை சந்தித்தது.

-Colombo, February 05, 2024- இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பினையேற்று அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று (05) பிற்பகல் இந்திய அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Ajit Doval அவர்களை சந்தித்தார். இந்தச் சந்திப்பு Sardar Patel Bhavan இல் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது பிராந்தியத்தின் பாதுகாப்பு பற்றியும், இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்தும் ஆழமாக கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித […]
-Colombo, February 05, 2024-
இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பினையேற்று அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று (05) பிற்பகல் இந்திய அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Ajit Doval அவர்களை சந்தித்தார். இந்தச் சந்திப்பு Sardar Patel Bhavan இல் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின்போது பிராந்தியத்தின் பாதுகாப்பு பற்றியும், இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்தும் ஆழமாக கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

-Colombo, February 03, 2024- (“பெண்களாகிய நாங்கள் ஒரே முச்சுடன்” – தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் மாநாடு – பொலநறுவை மாவட்டம் – 2024.02.03) எதிர்காலத்தில் நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ள ரணில் விக்கிரமசிங்க இந்த பிரமாண்டமான பெண்கள் சக்திக்கு முன்னால் வாக்குகளை கோருவதல்ல இரண்டு கைகளையும் உயர்த்தி “நான் தோற்றுவிட்டேன்” என்பதை ஏற்றுக்கொள்ளவே நேரிடும். எதிர்வரும் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும். தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விக்க இதுவரை தொடர்புபட்டிராத […]
-Colombo, February 03, 2024-
(“பெண்களாகிய நாங்கள் ஒரே முச்சுடன்” – தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் மாநாடு – பொலநறுவை மாவட்டம் – 2024.02.03)

எதிர்காலத்தில் நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ள ரணில் விக்கிரமசிங்க இந்த பிரமாண்டமான பெண்கள் சக்திக்கு முன்னால் வாக்குகளை கோருவதல்ல இரண்டு கைகளையும் உயர்த்தி “நான் தோற்றுவிட்டேன்” என்பதை ஏற்றுக்கொள்ளவே நேரிடும். எதிர்வரும் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும். தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விக்க இதுவரை தொடர்புபட்டிராத பிரமாண்டமான ஒரு சக்தி பெண்களே என்பதை அவர் ஏற்றுக்கொள்ள நேரிடும்.
எமது நாட்டின் சமூகத்திற்காக பெண்கள் பாரிய செயற்பொறுப்பினை ஈடேற்றினாலும் பெண்களுக்கு முன்னுரிமை கிடைக்கவில்லை. அரசியலில் இருந்தும் அவர்கள் விலக்கிவைக்கப்பட்டிருந்தார்கள். தற்போது எம்மால் பெண்களை ஒரு சக்தியாக, அமைப்பாக கட்டியெழுப்ப இயலுமானதாகி உள்ளது. பொலநறுவை மாவட்டத்தின் “பெண்கள் சக்தியே” இங்கு இருக்கின்றது. வரலாற்றில் முதல்த்தடவையாக பெண்கள் ஒரு சக்தியாக ஒழுங்கமைந்து சமமான உரிமைகளுடன் முன்வந்துள்ள ஒரு தருணமாகும். ரணில் விக்கிரமசிங்காக்கள், மகிந்த ராஜபக்ஷாக்கள், சஜித் பிரேமதாசாக்கள் ஒன்றுதிரண்டு வந்தாலும் எதிர்கால அரசியல் வெற்றி தேசிய மக்கள் சக்திக்குரியதாகும். இந்த சக்தியை தோற்கடிக்கவல்ல பிறிதொரு சக்தி இலங்கையில் கிடையாது. 05 ஆந் திகதி ரணில் தேர்தல் வேலைகளை ஆரம்பிக்க தம்புள்ளைக்கு வருகிறாராம். காணி உறுதிகளை வழங்க பெண்களை பிரிவுவாரியாக சேர்க்கிறார்கள். எமது காணிகள் நி்ர்ணயம் செய்யப்படவில்லை. எமது காணியின்மையைப் பயன்படுத்தி அவர்கள் இடைக்கிடையே உறுதிகளை வழங்குகிறார்கள். உறுதி கிடைக்கின்றது: காணி உரிமை கிடைப்பதல்லை. எமக்கு உறுதிகளை வழங்கினாலும் காணிகளை வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு வழங்கப் போகிறார்கள். அரசாங்கத்திற்குச் சொந்தமான 32 பாற்பண்ணைகளை “இந்தியாவின் அமூல்” கம்பெனிக்கு கொடுக்கப் போகிறார்கள். 32 விவசாயப் பண்கைகளுக்குள் 28,000 ஏக்கர் காணிகள் இருக்கின்றன. அத்தகைய ஏமாற்றுவேலையை செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு நாளில் காணி உறுதிகளை வழங்க, அஸ்வெசும வழங்க, குறைந்த வருமானம் பெறுபவர்கள், நுண் நிதிக்கடன் என்றவகையில் குழுக்களைக் கொண்டுவந்து தமது தேர்தல் இயக்கத்தை மேற்கொள்ள முயற்சி செய்கிறார்கள். அந்த பழைய விளையாட்டுக்கள் தற்போது செல்லுபடியாகாது என்பதை நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கூறுகிறோம். அந்த பழைய அரசியலை தோற்கடித்து எந்த தேர்தல் வந்தாலும் திசைகாட்டியை வெற்றியீட்டச் செய்விக்க மக்கள் தீர்மானித்துள்ளார்கள். அந்த தீர்மானத்திற்கு மாபெரும் பக்கபலமாக “பெண்கள் சக்தி” அமைந்துள்ளது. இதுவரைகாலமும் ஒளிந்திருந்த பெண்கள் ஒரு சக்தியாக, திடசங்கற்பத்துடன் முன்வந்து கூறுவது “நீங்கள் எந்த தேர்தலைக் கொண்டுவந்தாலும் “இந்த ஆட்சியாளர்களைத் தோற்கடித்து தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை அமைத்திட நாங்கள் தயார்” என்பதையாகும்.
நீங்கள் இங்கே வந்திருப்பது சமுர்த்தியை பெறுவதற்காக, அஸ்வெசும அமைத்துக்கொள்ளவதற்காக, காணி உறுதியைப் பெற்றுக்கொள்வதற்காகக அல்ல. 76 வருடங்களாக எமது நாட்டில் நிலவிய ஆட்சி தவறானது, அதனை மாற்றயமைத்திட வேண்டும். மாற்றியமைத்திட நாங்கள் முன்வரத் தயாரென்ற நம்பிக்கையில்தான். நாங்கள் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவே விளைகிறோம். நாமனைவரும் ஒன்றுசேர்ந்து அந்த அதிகாரத்தைப் பாவித்து, அந்த அதிகாரத்தைப் பிரயோகித்து எமது நாட்டை மாற்றியமைத்திட வேண்டும். உங்களுக்கும் எமக்கும் பாரிய செயற்பொறுப்பு இருக்கின்றது. இந்த கொடிய, திருட்டுக் கும்பலை தோற்கடித்து மக்களின் அரசாங்கமொன்றை ஆண் – பெண் இருசாராருக்கும் சமஉரிமைகள் கிடைக்கின்ற, பெண்களை கௌரவமாக கவனிக்கின்ற சமூகமொன்றை அமைத்திட வேண்டும். அந்த சமூகத்தில் பிரமாண்டமான மாற்றத்தை எற்படுத்திக்கொள்ள எமக்கு புரிந்துணர்வு இருக்கவேண்டும்.
பொருளாதாரரீதியாக அடிமட்டத்திற்கே வீழ்த்திய, வங்குரோத்து நிலைக்குள்ளாக்கிய ஒரு நாட்டிலேயே நாங்கள் வசிக்கிறோம். எம்மெதிரில் இருக்கின்ற சவால்கள் எளிமையானவையல்ல. நிவாரணம் வழங்குவதென்பது பசளையைக் கொடுப்பதோ அல்லது கெரட் விலையைக் குறைப்பதோ அல்ல, ஐயாயிரம் ரூபாவினால் சம்பளத்தை அதிகரிப்பதுமல்ல. வீழ்த்தப்பட்ட நாசமாக்கப்பட்ட பொருளாதாரத்தைக் மீட்டெடுக்கின்ற சவால் எம்மெதிரில் இருக்கின்றது. இந்த பொலநறுவை மாவட்டம் பெருந்தொகையான கமக்காரர்கள் இருக்கின்ற, நாட்டுக்கு சோறுபோடுகின்ற மாவட்டமாகும். ஆனால் இந்த மாவட்டங்களிலேயே பெருந்தொகையான வறியவர்கள் இருக்கிறார்கள். எமக்கு மனிதர்கள் என்றவகையில் உயிர்வாழ்வதற்கான உரிமை இருக்கிறது. நாடு வங்குரோத்து என்பதை ஏற்றுக்கொண்ட ஓர் அரசாங்கம் கோல்ஃபேஸ் அருகில்சென்று கடலுக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்வதில் பயனில்லை. வங்குரோத்து அடைந்து இரண்டு வருடங்களாகிவிட்டன. எமது பிள்ளைகளின் தலைமீது பாரிய கடன்மேடு இருக்கின்றது. நாடு உலகிற்கு கடன்பட்டுள்ளது. மக்கள் நுண் நிதிக் கடன் சுமையில் இருக்கிறார்கள். கடன் சுமையால் பிழியப்பட்ட மக்களே இருக்கிறார்கள். சனத்தொகையில் பெரும்பாலானோர் மூன்றுவேளை உணவு உண்பதில்லையென அறிக்கைகள் கூறுகின்றன. இப்போது அரசாங்கம் மீண்டும் பதினோராயிரம் மில்லியன் ரூபா கடன்பெற பார்த்துக்கொண்டு இருக்கின்றது. மறுபுறத்தில் வரிச்சுமை ஏற்றப்படுகின்றது. வீழ்த்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்திட வேண்டும். அதற்காக சொத்துக்களை ஈட்டுகின்ற உற்பத்திப் பொருளாதாரமொன்றை உருவாக்கிடவேண்டும். அத்தகைய பொருளாதாரமொன்றை அமைத்திட சேர்த்துக்கொள்ளக்கூடிய பிரமான்டமான சக்திதான் பெண்களின் சக்தி. அதைப்போலவே பொருளாதாரத்தின் நன்மைகள் அனைவருக்கும் நியாயமாக பகிர்ந்துசெல்ல வேண்டும்.
எமது பொருளாதாரத்தின் உரிமை எமக்கு கிடையாது. அரசாங்கத்தின் நிதி பற்றிய கொள்கையைத் தீர்மானிப்பது சர்வதேச நாணய நிதியமாகும். நாங்கள் எவ்வளவு வரி விதிக்கவேண்டும் வங்கிகளுக்கு அரச நிறுவனங்களுக்கு என்பதை தீர்மானிப்பவர்கள் அவர்களே. நாங்கள் பொருளாதாரரீதியாக சுயாதீனமற்றவர்கள். பொருளாதாரம் வங்குரோத்து என்பதைப்போன்றே சுயாதீனமானதுமல்ல. சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்காக கடலுக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்வதில் பலனில்லை. பொருளாதாரரீதியாக சுயாதீனமற்றவர்கள். சமூகரீதியாக சுயாதீனமற்றவர்கள். எமது கொள்கைகளை நாங்கள் தீர்மானிப்பதில்லை. சுதந்திரமில்லாத ஒரு நாட்டிலேயே நாங்கள் வசிக்கிறோம். பொருளாதாரத்தை சீரமைக்க மனித வளம் மற்றும் இயற்கை வளம் வேண்டும். தற்போது மனிதவளம் நாட்டைவிட்டுச் செல்கிறது. மறுபுறத்தில் சொத்துக்களை ஈட்டக்கூடிய பெரும்பாலான இயற்கை வளங்கள் இலங்கைக்குச் சொந்தமானதாக இல்லை. அம்பாந்தோட்டை துறைமுகம் டொலர்களை ஈட்டக்கூடிய ஒரு வளமாகும். துறைமுகத்தின் 99 வருடகால உரிமையை ரணில் விக்கிரமசிங்கவே சீனாவுக்கு கொடுத்தார். கொழும்புத் துறைமுகத்தின் ஒரு முனையம் எமக்குச் சொந்தமானது. ஏனையவை வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கே சொந்தமானவை. ரெலிகொம் நிறுவனத்தையும் கொடுக்கப் போகிறார்கள். ஒருபுறத்தில் பொருளாதாரத்தை வங்குரோத்து அடையச் செய்கிறார்கள். மறுபுறத்தில் சுயாதீனத்தன்மையை இழக்கச் செய்துள்ளார்கள். பொருளாதாரத்தை சீர்செய்யக்கூடிய வளங்களை விற்றுவிட்டார்கள். பிரச்சினை பாரதூரமானது. உறுதிகளை வழங்கி, சமுர்த்தியை வழங்கி, அஸ்வெசும வழங்கி அதிலிருந்து விடுபட இயலாது. இந்த படுகுழியிலிருந்து நாட்டை மீட்டுக்கவேண்டும். எமக்கு பலமான உறுதியான பொருளாதாரமொன்று தேவை. சுயாதீனமடைய வேண்டும். அடிமைநிலையிலிருந்து விடுபட வேண்டும். அதற்கான தேசிய எழுச்சி தேவை. தேசிய மறுமலர்ச்சி தேவை. அதற்கு தலைமை வகிக்கக்கூடிய ஒரே சக்தி தேசிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும். அதற்கான பொரும்பங்கினை பெண்களாகிய உங்களாலேயே ஆற்றமுடியும். நீங்கள் “ஒரே மூச்சுடன்” என்றால் அந்த சக்தியை தோற்கடிக்க எவருமே கிடையாது.
பொருளாதாரம் மாத்திரமல்ல சமூகமும் சிதைக்கப்பட்டுள்ளது. அரசியல் குப்பையாக்கப்பட்டுவிட்டது. மோசடி, உழல், களவுகள் நிரம்பி வழிகின்றன. திருடாத ஓர் ஆட்சியாளனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்தகாலத்தில் மக்களை கொலைசெய்கின்ற அளவுக்கு தரங்குறைந்த மருந்துகளைக் கொண்டுவந்தார்கள். விசாரணையின்போது உத்தியோகத்தர்கள் மாட்டிக் கொண்டார்கள். அமைச்சர் கைதுசெய்யப்படவில்லை. அமைச்சர் பதவி மாற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் அவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. பாராளுமன்றத்தில் கைகளை உயர்த்தி திருடனைப் பாதுகாத்தார்கள். பின்னர் அமைச்சு மாற்றப்பட்டது. மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அமைச்சர் கைதுசெய்யப்பட்டார். நீதிமன்றம் றிமாண்ட் பண்ணியது. எனினும் சிறைச்சாலைக்குச் செல்லவில்லை. சுகவீனம் எனக்கூறி சிறைச்சாலை வைத்தியசாலைக்குச் சென்றார். பார்த்தால் அமைச்சர் பதவியை வகித்தவர் ஒரு நோயாளி. நோயாளிகள் எப்படி நாட்டை ஆள்வது. சரியென்றால் அமைச்சுப் பதவிகளை கழற்றவேண்டும். நாங்கள் நோயாளிகளுக்கே அரசாங்க அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறோம். திருடி அகப்பட்டு றிமாண்டுக்குப் போட்டால் அவர்கள் எல்லோருமே வைத்தியசாலைக்குப் போகிறார்கள். அவர்களின் அரசாங்கங்கள் அவர்களுக்கு தண்டனை வழங்க மாட்டாது. ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை சட்டத்தால் தண்டிக்கின்ற அரசாங்கமொன்று கிடையாது. திசைகாட்டியால் மாத்திரமே அவ்வாறான அரசாங்கமொன்றை அமைத்திட முடியும்.
எமது நாட்டில் மனிதம் கிடையாது. பெண்களுக்கு பிள்ளைகளுக்கு வீதியில் செல்ல முடியாது. எல்லா இடத்திலும் போதைப்பொருள். ஒரு நாளுக்கு தொள்ளாயிரம்பேர் கைது செய்யப்பட்டதாக தற்போது நாள்தோறும் செய்திவெளியாகிறது. அப்படியானல் ஒரு மாதத்திற்கு முப்பதாயிரம்பேர் பிடிக்கப்படுகிறார்கள். முழு நாடுமே தூள்தானா என நினைக்கலாம். நாட்டின் நெறிமுறைகள் சிதைக்கப்பட்டு, சகோதரத்துவமும் கூட்டுணர்வும் நாசமாக்கப்பட்டுவிட்டது. இந்த குப்பை அரசியலை மாற்றியமைத்திடவேண்டும். தனிப்பட்ட முறையில் எதனையும் எதிர்பாராமல் நாட்டை மாற்றியமைக்கின்ற போராட்டத்தில் தலைமை வகிக்கவும் தயார் என்பதை பெண்களாகிய நீங்கள் எடுத்துக்காட்டி இருக்கிறீர்கள். இந்த நாட்டின் துன்பம் அனுபவிக்கின்ற இறுதிப் பரம்பரையினராக நாங்கள் அமையவேண்டும். இன்னும் ஒன்பது மாதங்களில் இந்த நாட்டை மாற்றியமைத்திட நாங்கள் தயார். அதற்கு பலம் சேர்ப்பதற்காகவே நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களின் அந்த முயற்சிக்கு நாங்கள் மதிப்புடன் தலைசாய்க்கிறோம். பொருளாதாரத்தையும் சமூகத்தையும் மாற்றியமைத்து சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய தேசமொன்றை அமைத்திட வேண்டும்.
எமக்கு புதிய சுதந்திரப் போராட்டமொன்று இருக்கின்றது. இந்த நாட்டின் உரிமையை உண்மையான உரித்தாளிகளின் கைகளுக்கு கைமாற்றவேண்டும். பொருளாதாரத்தை சீரமைத்திட வேண்டும். அடிமைநிலையில் இருந்து மீட்புபெற்று சுயாதீனத்தன்மையை அடையவேண்டும். எமது சிந்தனை மாற்றமடைய வேண்டும். பொதுவில் மக்களைப்பற்றிச் சிந்திக்கின்ற, சமூகத்தை மாற்றியமைத்திட வேண்டுமெனச் சிந்திக்கின்ற சமூகமொன்றை அமைக்கவேண்டியது அவசியமாகும். மனிதம் மனித மனங்களில் உதிக்கவேண்டும். அன்பை பகிர்ந்துகொள்ள வேண்டும். எமது நாட்டின் வரலாற்றினை புதிதாக எழுத நாங்கள் தயார். அதற்காக முன்னணி வகிக்க பெண்களாகிய நாங்கள் தயார். அந்த சமூகத்தை சீராக்குகின்ற சக்தியாக எமது சகோதரிகள் ஒன்றிணையவேண்டும். நாமனைவரும் ஒன்றுசேர்ந்து எமது பலத்தை கெட்டியாக்குவொம். மக்களாட்சியை உருவாக்குவோம். 2025 இல் காலடி எடுத்துவைப்பது எமது ஆட்சியின் கீழேயே எனும் திடசங்கற்பத்துடன் நாங்கள் கைகோர்த்திடுவோம்.
“சமூக மாற்றத்தை ஏற்படுத்துகின்ற வரலாற்றுப் பயணத்திற்காகவே நாங்கள் ஒன்றுசேர்ந்துள்ளோம்.” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய-

இலங்கையின் தென் மாகாணத்திலிருந்து ஆரம்பித்து முழுநாட்டையும் உலுக்கிய பெண்களின் பலம் இன்று புலதிசிபுரத்திற்கும் வந்துள்ளது. இன்று முழு நாடும் மாத்திரமல்ல முழு உலகுமே இந்த பெண்களையே பார்த்துக்கொண்டிருக்கிறது. இது ஒரு தீர்வுக்கட்டமான தருணமாகும்; திரும்பற் புள்ளியாகும். சமூக மாற்றத்தை ஏற்படுத்துகின்ற வரலாற்றுப் பயணத்திற்காகவே நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். எமது வரலாற்றினை புதிதாக எழுதுகின்ற பணியின் பங்காளிகளாக நீங்கள் மாறியுள்ளீர்கள். வரலாற்றில் பெண்களாகிய எங்களின் குரல் ஒடுக்கப்பட்டிருந்தது. எமது வரலாற்றினை எழுத எமக்கு வாய்ப்பு இருக்கவில்லை. நாடு சுதந்திரமடைந்து 76 வருடங்களாகிய போதிலும் பெண்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. எமது சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் எமக்குள் இருக்கின்ற துணிச்சலை நாட்டை மாற்றியமைப்பதற்காக பிரயோகிக்கவுமே இன்று நாங்கள் இங்கு குழுமியிருக்கிறோம்.
பெண்களின் வாழ்க்கை எந்தளவுக்கு பாதுகாப்பானது, எந்தளவுக்கு அபிமானத்துடன் வாழ்கிறார்கள் என்பது ஒரு நாட்டின் அபிவிருத்தி நாகரிகமானதா என்பதை அளக்கின்ற அளவுகோலாகும். கடந்த 17 மாதங்களில் 119 தாய் மரணங்கள் இடம்பெற்றுள்ளன. எமக்கு குடும்ப சுகாதார சேவகிகள் மூலமாக உன்னதமாக சமுதாய சுகாதார சேவை கிடைத்திருந்தது. வைத்தியசாலைக்கு கிளினிக்கிற்குச் சென்றால் ஒருசதம்கூட செலவிடாமல் உலகில் இருக்கின்ற மிகச்சிறந்த சுகாதார சேவையைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. இன்று வைத்தியசாலைக்குச் சென்றால் தாதிமார்களும் மருத்துவர்களும் இல்லை. அதைப்போலவே மருந்தும் கிடையாது. பாரிய செலவில் வெளியில் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது. இன்று பெண்கள் சுகாதாரத்தைக் கைவிட்டுள்ளார்கள். அது உணவு மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டையுமே ஒரேநேரத்தில் சமாளித்துக்கொள்ள முடியாதென்பதாலேயே. எமது சகாதார அமைச்சர் அப்பட்டமாகவே சுகாதாரத்துறையை நாசமாக்கிவிட்டார். பிரபல்யமான திருடன் எனப் பெயர்பெற்ற முன்னாள் சுகாதார அமைச்சர் சிறைவைக்கப்பட்டுள்ளார். அதனை சாதிக்க மக்கள் எவ்வளவுதான் போராட்டங்களை நடாத்தினார்கள்? எவ்வளவு காலம் எடுத்தது? எமது வாழக்கைக்கு அவசியமான அனைத்துத் துறைகளும் சீரழிக்கப்பட்டுள்ளன. கல்வி பாரதூரமான அனர்த்தமாக மாறியுள்ளது. நம்பிக்கையுடன் பிள்ளையைப் பாடசாலைக்கு அனுப்பமுடியாது. தற்போது இளைஞர்களுக்கு கல்வியின் பெறுமதி பற்றிய நம்பிக்கை கிடையாது. பிள்ளைகளை பாடசாலைகளில் தக்கவைக்க முடியாதென ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஒருபோதுமே நிலவியிராதவகையில் பிள்ளைகள் பல்கலைக்கழகம் செல்ல விருப்பமில்லாதவர்களாகி விட்டார்கள். பிள்ளைக்கு கல்விபுகட்டி கரைசேர்க்க முடியுமென்ற பெற்றோர்களின் நம்பிக்கை சிதைவடைந்துவிட்டது.
நாளைய தினம்தான் அவர்கள் சுதந்திரத்தைக் கொண்டாடுகின்ற இறுதிநாள். 76 வது சுதந்திரத்தைக் கொண்டாடுகின்ற வேளையில் இந்த ஆட்சியாளர்கள் பிரசைகளுக்கு எஞ்சவைத்துள்ள எதிர்பார்ப்பு என்ன? அவர்கள் எமது சுதந்திரத்தை நாசமாக்கி இத்தடவை சுதந்திரதின வைபவத்தை மக்களுக்குத் தடைசெய்திருக்கிறார்கள். மக்களில்லாத சுதந்திரக் கொண்டாட்டம் என்ன? நாங்கள் 2025 இல் எமது பிரசைகளின் சுதந்திரத்தை அனுபவிக்கின்ற ஆண்டாக மாற்றுவோம். மக்கள்நேயமுள்ள ஆட்சியில்தான் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கும். அத்தகைய ஆட்சியொன்றை கட்டியெழுப்புகின்ற பணியைத்தான் நாங்கள் தற்போது செய்துகொண்டிருக்கிறோம்.இந்த நாட்டு சனத்தொகையில் 52% பெண்களாவர். இந்த நாட்டில் அனைத்துத்துறைகளிலும் பெண்கள் நாட்டுக்காக பாரிய பங்கினை ஆற்றிவருகிறார்கள். ஆடைத்தொழில்த்துறையில் தொழில்புரிந்து, வெளிநாடுகளுக்குச்சென்று, தேயிலைக் கைத்தொழிலில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து டொலர்களை ஈட்டினார்கள். இந்த ஆட்சியாளர்கள் அவற்றை நாசமாக்கினார்கள். கல்வி, சுகாதாரம், போன்ற துறைகளில் பாரிய செயற்பொறுப்பினை பெண்கள் ஆற்றிவருகிறார்கள். எந்தவிதமான சம்பளத்தையும் பெறாத பெண்கள் சமூகப் பணிக்காக பாரிய பங்களிப்பினை நல்கி வருகிறார்கள். பெண்கள் ஆற்றுகின்ற பணிகள் ஈடேற்றப்படாவிடின் இந்த நாடு ஒரு நாள்கூட நிலவமாட்டாது. பிள்ளைகளை வளர்த்தெடுப்பது, பிள்ளைகளின் கல்வியை மேற்பார்வை செய்வது, முதியோரைப் பராமரிப்பது, குடும்ப அங்கத்தவர்கள் சுகவீனமுற்றால் பார்த்துக்கொள்வது இவையனைத்தையும் பெண்களே ஈடேற்றிவருகிறார்கள்.
இந்த பணிகளுக்காக சமூகத்திடமிருந்து கிடைக்கின்ற பெறுமதி என்ன? நீங்கள் சமையலறைக்குள் புரிகின்ற போராட்டம் எமக்குத் தெரியும். இந்த தருணத்திலும் இரவு என்ன சாப்பிடுவது என நீங்கள் சிந்திக்கக்கூடும். நாளைய நாள் பற்றி சிந்திக்கக்கூடும். உங்களுடைய தனித்தன்மையும் உன்னதநிலையும் அதுதான். அந்த முயற்சி மூலமாகத்தான் இந்த நாடு மாற்றமடைகின்றது. எமது வாழ்க்கை வசதியானதாக அமைகின்ற சுதந்திரமாக வாழக்கூடிய சமூகமொன்று கட்டியெழுப்பப்படல் வேண்டும். இதுவரை பொறுத்தது போதுமென இந்நாட்டின் பெண்கள் தற்போது தீர்மானித்துள்ளார்கள். அதைவிட நியாயமானதும் பெண்களுக்கு பெறுமதியளிக்கின்றதும், பெண்களாகிய எமது பலத்திற்கு இடமளிக்கின்ற சமூகமாக மாற்றியப்போமென பெண்கள் தற்போது தீர்மானித்துள்ளார்கள். அதற்கு தேசிய மக்கள் சக்தி தலைமைத்துவம் வழங்குகின்றது. அதற்காக நாமனைவரும் ஒன்றுசேர்ந்துள்ளோம். தேர்தல் காலங்களில் எம்மைப் பாவித்து அதிகாரத்திற்கு வந்து எமது வாழ்க்கையை நாசமாக்குவதையே மரபுரீதியான அரசியல் இதுவரைகாலமும் புரிந்து வந்துள்ளது. தொடர்ந்தும் அவர்களின் அதிகாரக் கருத்திட்டத்திற்காக எம்மை ஈடுபடுத்த இடமளிக்கமாட்டோம் எனும் முடிவினை எடுத்துள்ளோம். தேசிய மக்கள் சக்தி செய்துகொண்டிருப்பது வெறுமனே தேர்தல் இயக்கமொன்று மாத்திரமல்ல: நாசமாக்கிய நாட்டை சீர்செய்யவே உங்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் ஏகோபித்த நோக்கத்துடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டால்தான் இந்த நாட்டை சீராக்க முடியும். நீங்கள் அந்த பிரமாண்டமான இயக்கத்தின் பங்காளிகள். இந்த சமூகத்தை மாற்றியமைக்காமல் ஓயமாட்டோம் எனும் திடசங்கற்பத்துடன் நாங்கள் முன்நோக்கி நகர்வோம்.
-Colombo, February 03, 2024- நாளை (05) மாலை 3.00 மணிக்கு பொலிஸை சந்தித்து வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் நகரசபை உறுப்பினர் சமன்மலி குணசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சட்டத்தரணி தனுஷ்கி லியனபடபெந்தி ஆகியோருக்கு வெலிக்கடை பொலிஸ் அறிவித்திருக்கிறது. கடந்த டிசம்பர் 04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 2024 வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள் அமைச்சின் செலவுத்தலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு பாராளுமன்ற […]
-Colombo, February 03, 2024-

நாளை (05) மாலை 3.00 மணிக்கு பொலிஸை சந்தித்து வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் நகரசபை உறுப்பினர் சமன்மலி குணசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சட்டத்தரணி தனுஷ்கி லியனபடபெந்தி ஆகியோருக்கு வெலிக்கடை பொலிஸ் அறிவித்திருக்கிறது.
கடந்த டிசம்பர் 04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 2024 வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள் அமைச்சின் செலவுத்தலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு பாராளுமன்ற சுற்றுவட்டத்தின் அருகில் முன்னெடுத்திருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
-Colombo, February 03, 2024- இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பினை ஏற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் நாளைய தினம் (05) இந்தியாவிற்குச் செல்கின்றனர். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, செயலாளர் வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோரே இந்த விஜயத்தில் இணைந்துக்கொள்கின்றனர். நாளைய தினம் உத்தியோகப்பூர்வமான சந்திப்பு இடம்பெறவுள்ளது.
-Colombo, February 03, 2024-

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பினை ஏற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் நாளைய தினம் (05) இந்தியாவிற்குச் செல்கின்றனர்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, செயலாளர் வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோரே இந்த விஜயத்தில் இணைந்துக்கொள்கின்றனர். நாளைய தினம் உத்தியோகப்பூர்வமான சந்திப்பு இடம்பெறவுள்ளது.
” அதிட்டன” இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவு – மொனறாகல மாவட்ட மாநாடு – 2024 பெப்புருவரி 03 சுதந்திரம் பெற்று எழுபத்தாறு ஆண்டுகளை நாங்கள் கொண்டாடுகிறோம். மக்களுக்கு தடைசெய்யப்பட்ட நிலப்பகுதியை நோக்கி இராணுவ அணிவகுப்பினை நடாத்தி விமானக் கரணங்கள் காட்சியை நடாத்தி, பெரசூற் காட்சியை நடாத்தி சுதந்திரத்தைக் கொண்டாடுகிறார்கள். எமது நாட்டின் சுதந்திரத்திற்காக மிகப்பெரிய செயற்பொறுப்பினை ஆற்றிய முப்படை அங்கத்தவர்களை திரட்டி எவ்வாறு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வது என்பதை இன்று நாங்கள் மொனறாகலையில் ஆராய்கிறோம். அவர்கள் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டதாக […]
” அதிட்டன” இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவு – மொனறாகல மாவட்ட மாநாடு – 2024 பெப்புருவரி 03

சுதந்திரம் பெற்று எழுபத்தாறு ஆண்டுகளை நாங்கள் கொண்டாடுகிறோம். மக்களுக்கு தடைசெய்யப்பட்ட நிலப்பகுதியை நோக்கி இராணுவ அணிவகுப்பினை நடாத்தி விமானக் கரணங்கள் காட்சியை நடாத்தி, பெரசூற் காட்சியை நடாத்தி சுதந்திரத்தைக் கொண்டாடுகிறார்கள். எமது நாட்டின் சுதந்திரத்திற்காக மிகப்பெரிய செயற்பொறுப்பினை ஆற்றிய முப்படை அங்கத்தவர்களை திரட்டி எவ்வாறு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வது என்பதை இன்று நாங்கள் மொனறாகலையில் ஆராய்கிறோம். அவர்கள் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டதாக ஆர்ப்பரிக்கிறார்கள். நாங்கள் எப்படி சதந்திரம் பெறுவது என்பத பற்றி அங்கலாய்க்கிறோம்.
எமக்கு ஒருவருடத்திற்கு முன்னர் இந்தியா சுதந்திரம் பெற்றது. சந்திரனைத் தொட்ட ஐந்தாவது நாடாகவே இந்தியா அதன் சுதந்திரத்தைக் கொண்டாடுகின்றது. அதைப்போலவே உலக வரலாற்றில் ஐநூறு வானூர்திகளை ஒரேதடவையில் ஓடர் (அனுப்பாணை) செய்த நாடாகவே. உலக வரலாற்றில் ஒரே தடவையில் சமர்ப்பித்த மிக அதிகமான வானூர்தி ஓடரை இந்தியா முன்வைத்துள்ளது. இந்தியா பொருளாதாரத்திலும் விஞ்ஞானத்திலும் தேசிய ஒற்றுமையிலும் முன்நோக்கி பயணித்துள்ளது. நாங்கள் கடனை மீளச்செலுத்த முடியாத ஒரு நாடாவோம். இரண்டாயிரத்து முப்பது அளவில் இந்தியாவின் அனைத்துப் புகையிரதங்களையும் மின்சாரப் புகையிரதங்களாக மாற்றத் திட்டமிட்டு ஏற்கெனவே டீசல் எஞ்சின்களை அகற்றி வருகிறார்கள். அந்த எஞ்சின்களை எமக்கு இலவவசமாக வழங்கி வருகிறார்கள். அந்த எஞ்சின்களைக் கொண்டுவருவதைப் பார்வையிடவும் அறுபத்தைந்துபேர் போனார்கள். எம்மைவிட ஒரு வருடத்திற்கு முன்னர் சுதந்திரம்பெற்ற இந்தியா அவ்வாறு இருக்கவும் நாங்கள் இப்படி இருக்கவும் காரணம் என்ன? நாங்கள் அது பற்றி ஆழமாக சிந்திக்கவேண்டும்.
சுதந்திரம் கொண்டாடப்படுகையில் எவ்வளவு தேசிய அபிமானத்தை உணரவேண்டும்? 1505 இல் இருந்து அண்ணளவாக நானூற்றி ஐம்பது வருடங்கள் ஏதேனுமொரு மேலைத்தேய நாட்டின் அழுத்தங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டிருந்தோம். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்ற மேலைத்தேயர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்து 1796 இல் தீர்வுக்கட்டமானவகையில் ஆங்கிலேயரின் குடியேற்ற நாடாக மாறுதல் தொடங்கியது. 1815 இல் எமது தாய்நாடு முற்றாகவே ஆங்கிலேயர்களின் குடியேற்ற நாடாக மாறியதோடு 133 வருடங்கள் நேரடியாக குடியேற்நாடாக விளங்கியது. அதன் பின்னர் சுதந்திரம் பெறுகின்ற தினத்தில் எமக்கு எவ்வளவு தேசிய அபிமானம், பெருமிதம், புதிய தேசிய எழுச்சி தோன்றிட வேண்டும்? எனினும் அந்த தினத்தை பெருமிதத்துடன் கொண்டாடவேண்டுமென்ற உணர்வு எவருடைய மனதிலாவது தோன்றுகிறதா? சுற்றுநிருபம் காரணமாக அரசாங்க அலுவலகங்களில் கொடியேற்றப்படுகின்றது. சுதந்திரம் பற்றி சுயாபிமானம், தேசிய உணர்வு சுற்றுநிருபம் மூலமாகவே கொடுக்கப்பட்டுள்ளது. கெஹெலிய ரம்புக்வெல்லவை கொண்டுசெல்கின்ற சிறைச்சாலை பேருந்தில் சுற்றுநிருபம் காரணமாக தேசிய கொடி போடப்பட்டிருந்தது. பேருந்தில் தேசிய கொடியொன்றைப் போட்டுக்கொண்டு உள்ளே திருடித்தின்ற அமைச்சர் பயணிக்கிறார். தேசிய சுதந்திரம் பற்றிய பெருமிதம், அபிமானம், தேசிய எழுச்சி ஏன் எமது இதயங்களால் உணரப்படவில்லை? கடந்த எழுபத்தாறு வருடங்களாக எமது தேசிய அபிலாஷைகளையும் நோக்கங்களையும் அடைவதில் வெற்றிபெறவில்லை. பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளை உள்ளிட்ட ஆதிக்கம் வகிக்கின்ற நாடுகள் எமக்கு கொடுத்துள்ள பொருளாதார மற்றும் அரசியல் பட்டோலையில் இருந்து உண்மையாகவே சுதந்திரம்பெற இன்னமும் முடியாதுள்ளது.
எமது நாட்டை ஆட்சிசெய்வதற்காக பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் பிரித்தாளுகின்ற ஆட்சிமுறையையே மிகவும் சூட்சமமான முறையில் பயன்படுத்தினார்கள். அவர்கள் அரசுக் கழகத்திற்கு சிங்களவர், தமிழர், முஸ்லீம், பறங்கியர், மலாயர் போன்ற பிரிகையிடல் மூலமாகவே தெரிவுசெய்தார்கள். இலங்கையர் என்ற வகையில் தெரிவுசெய்வதில்லை. மேலும் மலைநாட்டுச் சிங்களவர், கரையோரச் சிங்களவர், யாழ்ப்பாணத் தமிழர், தோட்டப்பகுதித் தமிழர் என்ற வகையில் பிரித்து ஒதுக்கினார்கள். பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் பிரயோகித்த இந்த பி்ரிகையிடல் சுதந்திரத்திற்குப் பின்னர் மீளத் திருப்பவேண்டி இருந்தது. இந்தியா அதனைச் செய்தது. பிரதேச பிரிவிடல்கள், சமயரீதியான பிரிவிடல்கள், சாதிப் பி்ரிவினைகள் பல நிலவிய இந்தியாவை ஒரே கொடியின்கீழ் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஐக்கியத்தின் பேரிலேயே சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டார்கள். இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி அப்துல் கலாமிற்கு இந்தியாவின் சனாதிபதியாக இயலுமாயிற்று. அதைப்போலவே தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவரென கூறப்பட்ட ஒரு பெண் சனாதிபதியானர். தேசியரீதியான ஏகோபித்த தன்மை, தேசிய ஒருமைப்பாட்டினை முதன்மைத்தானத்தில் எடுத்து பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் விடுத்திருந்த சாபக்கேட்டில் இருந்து அவர்கள் விடுதலை பெற்றார்கள். இந்திய இனத்தவர்களை கட்டியழுப்பியதே இந்திய வெற்றியின் அத்திவாரமாகும். நாங்கள் 1948 இல் சுதந்திரம்பெற்று குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்து பெருந்தோட்டத் தமிழர்களின் பிரசாவுரிமையை ஒழித்துக்கட்டினோம். 1947 தேர்தலில் பெருந்தோட்ட மக்களை பிரதிநிதித்துவம்செய்த தொகுதிகளைப்போன்றே அந்த மக்களின் ஒத்துழைப்பினால் கிடைத்த தொகுதிகளிலும் இடதுசாரி இயக்கங்கள் வெற்றிபெற்றன. இதனால் 1947 இல் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம்செய்த ஐக்கிய தேசிய கட்சி தோல்வியுற்ற அனைத்து ஆசனங்களிலும் 1952 தேர்தலில் அவர்கள் வெற்றிபெற்றார்கள். சுதந்திரத்தின் பின்னர் இனரீதியாக பிரிப்பதன் மூலமாகவே ஆரம்பித்தார்கள். அதனால்த்தான் திருவாளர் செல்வநாயகத்தின் தமிழரசுக்கட்சி கட்சியெழுப்பப்பட்டது. 1956 இல் மொழிப் பிரச்சினையும் , 1958 இல் தமிழ் – சிங்கள கலவரமும், “ஸ்ரீ” எழுத்து தொடர்பான கலவரமும் தொடங்கி 1970 நடுப்பகுதியளவில் வடக்கில் ஆயுத இயக்கமொன்று தொடங்கி 2009 இல் இது முற்றுப்பெற்றது. 2015 இல் முஸ்லீம் எதிர்ப்பு இயக்கமொன்று தொடங்கி 2019 இல் உயிர்த்தஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. வெள்ளைக்கார ஏகாதிபத்தியவாதிகள் எமது அழிவுக்காக விரித்த பிரித்தாள்கின்ற வலையிலிருந்து இன்னமும் எம்மால் விடுபட முடியாதுள்ளது. நாங்கள் எதிர்நோக்கியுள்ள அனர்த்தத்தின் ஓரிடம் அதுவாகும்.
எம்மால் எமக்கே உரித்தான பொருளாதார உபாயமார்க்கமொன்றை நிறைவுசெய்துகொள்ள முடியாமல் போயிற்று. பெருமைமிக்க வரலாறு பற்றி கூறிக்கொண்டு எதி்ர்காலம் பற்றிய நோக்கினை முன்வைக்கவில்லை. எமது நாடும், இனமும், அரசியல்வாதியும் வரலாற்றுக்கால பெருமிதத்தில் சிக்குண்டது. புதிய உலகிற்காக எமது நாட்டைத் திறந்துவிட எமது ஆட்சியாளர்கள் தவறிவிட்டார்கள். கடந்தகாலம் பற்றி மார்தட்டிக்கெள்கின்ற ஆளுங் குழுவினரே எமக்கு இருந்தார்கள். 2009 இல் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் முழு உலகிற்குமே கற்றாராயக்கூடிய இராணுவ அக்கடமியொன்றை நிறுவுவதற்கான நவீன நோக்கு எமது ஆட்சியாளர்களிடம் இருக்கவில்லை.
450 வருடங்களாக மேற்குலகிற்கு கட்டுப்பட்டிருந்து 133 வருடங்கள் முழுமையாகவே வெள்ளைக்காரனுக்கு கட்டுப்பட்டிருந்து சுதந்திரம் கிடைக்கையில் எவ்வளவு மட்டற்றமகிழ்ச்சி எமது இதயங்களால் உணரப்பட வேண்டும்? ஆனால் சுதந்திரத்தைக் கொண்டாட பணத்தை விரயம் செய்கிறார்கள் என்று உணர்வே எமக்கு ஏற்படுகின்றது. இந்த திரிபடைந்த களியாட்டம் காரணமாக பெரசூற் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த இளைஞர்கள் விழுந்து ஏலாமைநிலையடைகிறார்கள் எனும் உணர்வு எமக்கு ஏற்படுகின்றது. பொதுமக்களுக்கு தடைசெய்யப்பட்ட ஒரு பிரதேசத்திலேயே சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. அது மக்களுக்குச் சொந்தமான சுதந்திரமல்ல. அவர்களுக்குச் சொந்தமான சுதந்திரமாகும். இன்றும் எமது வரவுசெலவினைத் தயாரிப்பது எமது நிதியமைச்சரோ அல்லது நிதியமைச்சின் செயலாளரோ அல்ல. எமக்கு பொருளாதார சுயாதீனத்தன்மை கிடையாது. எமக்கிருந்த மிகப்பெரிய உயிர்ப் பன்வகைமை மற்றும் விதைப் பன்வகைமையை இல்லாதொழித்துக்கொண்டு தும்பை விதையையும் வெளிநாட்டிலிருந்து கொண்டுவருகிறோம்.
76 வருட சுதந்திரத்தை கொண்டாடுகையில் எமது விதைகளின் சுயாதீனத்தன்மையைப் போன்றே நிதிசார் சுயாதீனத்தன்மையையும் இழந்துள்ளோம். தற்போது எமது தேவை வெறுமனே ஆட்சிமாற்றமோ ஆட்களின் மாற்றமோ அல்ல. புதிய இலங்கை தேசத்தை உருவாக்கும் திசைக்கு எமது நாட்டை மாற்றியமைக்கின்ற ஆட்சியொன்றை நிறுவிக்கொள்ள வேண்டும். கள்வர்களைப் பிடித்தல், சட்டத்தை நிலைநாட்டுதல், குற்றச்செயல்களைத் தடுத்தல், போதைப்பொருள் கடத்துதலை நிறுத்துவது பெரிய வேலையல்ல. எமது நாட்டை கொண்டுசெல்கின்ற திசை பற்றிய நோக்கினை அமைத்துக்கொள்வதே பெரிய வேலையாகும். இந்தியா, சீனா, வியட்நாம், ஜப்பான், தென் கொரியா போன்ற ஒவ்வொரு நாடும் இருபதாம் நூற்றாண்டுக்கான தமது நோக்கிற்கிணங்க பாதையைக் கண்டுபிடித்தன. இப்போது இருபத்தோராம் நூற்றாண்டில் வெற்றியை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. மேற்குலகிற்கு இருந்த பொருளாதாரப் பலம் ஆசியாவை மையமாகக்கொண்டு, உலகக் கோளம் ஆசியாவை நோக்கி சுழற்றப்பட்டிருக்கிறது. எனினும் நாங்கள் இருபதாம் நூற்றாண்டினை இழந்த ஒரு தேசமாவோம். ஏனைய நூற்றாண்டுகளுடன் ஒப்பிடுகையில் இருபதாம் நூற்றாண்டு என்பது உலகின் பிரதானமான வெற்றிகள் பெறப்பட்ட நூற்றாண்டாகும். முறையான பொருளாதார நோக்கு, சிந்தனைக்கிணங்க நாட்டை நெறிப்படுத்தாத தவறுக்காக நாங்கள் தற்போது நட்டஈடு செலுத்தி வருகிறோம்.
எமது முன்மொழிவுகள் இந்த நிலைமையிலிருந்து விடுபடுவதற்கானவையாகும். முதற்கட்டத்திலேயே கல்வி, சுகாதாரம், உணவு என்பவற்றை அனைத்துப் பிரசைகளுக்கும் உறுதிப்படுத்துவோம். இந்த அடிப்படையில் நாங்கள் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்கின்ற விதத்தை புதிதாகவே திட்டமிடுகிறோம். தற்போது எமக்கு இருப்பது சுற்றுலாக் கைத்தொழிலல்ல, ஹோட்டல் கைத்தொழிலாகும். எமது நாட்டின் சுற்றுலாத் தொழிற்றுறை அளவீடு செய்யப்படுவது ஹோட்டல்களின் அறைகள் எவ்வளவு நிரம்பியுள்ளன போன்ற தரவுகளிலன்றி சீகிரியாவிற்கு எத்தனை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சென்றார்கள் போன்ற தரவுகளிலல்ல. எனவே சுற்றலாக் கைத்தொழில் ஹோட்டல் கைத்தொழிலில் இருந்து சுற்றுலாக் கைத்தொழில்வரை மாற்றியமைக்கப்படல் வேண்டும். இதுபோன்’ற தெரிவுசெய்த முதன்மைத்துறைகளின் பேரில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் ஆரம்பிக்கப்படும். ஆனால் இந்த பயணத்திற்கு எதிரான மக்களின் பணத்தை வாரிச்சுருட்டிக்கொண்ட கொள்ளைக்கார கும்பல் இறுதிவரை பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு இழப்பதற்கு பல விடயங்கள் இருப்பதுபோல எமக்குப் பெற்றுக்கொள்ள பல விடயங்கள் இருக்கின்றன. அதனால் வெற்றிகளை இலக்காகக்கொண்டு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றிபெற வேண்டும். நாமனைவரும் ஒன்றுசேர்ந்து எமது நாட்டுக்குப் புதிய வெற்றியை மறுமலர்ச்சி யுகமொன்றுக்காக நாட்டை இட்டுச்செல்வோம். அதற்காக இளைப்பாறிய முப்படை அங்கத்தவர்களால் பாரிய செயற்பொறுப்பினை ஆற்றமுடியும். அது சம்பந்தமாக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்காக அனைவருக்கும் அழைப்புவிடுகிறோம்.
