தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2023.12.03 குறிப்பாக நாடு பொருளாதாரரீதியான வீழ்ச்சிக்கு இலக்காக்கப்பட்டுள்ள பின்னணியில் அடுத்த 2024 ஆம் ஆண்டுக்காக சமர்ப்பித்துள்ள வரவுசெலவு எமது குடும்ப வாழ்க்கைக்கு எவ்வளவு தாக்கம் ஏற்படுத்துகின்றதென்பதை நாங்கள் மீளாய்வுசெய்து வருகிறோம். எமது பிள்ளைகளின் உணவு, கல்வி, சுகாதாரம் ஆகிய பிரதானமான அத்தியாவசிய பிரிவுகளின் செலவுகள்கூட எவ்வளவுக்கு கத்தரிக்கப்பட நேர்ந்துள்ளதெனும் அழுத்தம் நன்றாக உணரப்பட்டு வருகின்றது. இரண்டாயிரத்து இருபத்திநான்கு வரவுசெலவில் ஏதேனுமொரு நிவாரணம் கிடைக்குமென முழுநாடுமே பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் சதாகாலம்போல் […]
தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2023.12.03

குறிப்பாக நாடு பொருளாதாரரீதியான வீழ்ச்சிக்கு இலக்காக்கப்பட்டுள்ள பின்னணியில் அடுத்த 2024 ஆம் ஆண்டுக்காக சமர்ப்பித்துள்ள வரவுசெலவு எமது குடும்ப வாழ்க்கைக்கு எவ்வளவு தாக்கம் ஏற்படுத்துகின்றதென்பதை நாங்கள் மீளாய்வுசெய்து வருகிறோம். எமது பிள்ளைகளின் உணவு, கல்வி, சுகாதாரம் ஆகிய பிரதானமான அத்தியாவசிய பிரிவுகளின் செலவுகள்கூட எவ்வளவுக்கு கத்தரிக்கப்பட நேர்ந்துள்ளதெனும் அழுத்தம் நன்றாக உணரப்பட்டு வருகின்றது. இரண்டாயிரத்து இருபத்திநான்கு வரவுசெலவில் ஏதேனுமொரு நிவாரணம் கிடைக்குமென முழுநாடுமே பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் சதாகாலம்போல் அந்த எதிர்பார்ப்பும் ஒரு கனவு மாத்திரமேயாகும். ஐ.எம்.எஃப். உடன் ஒன்றுசேர்ந்து தயாரித்த பொருளாதார நிகழ்ச்சிநிரலை அடுத்தவருடத்திற்கும் நன்றாகவே இணக்கஞ் செய்துள்ளார்கள். தற்போது வரையறையற்று பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் தரைமட்டமாக்கிச் செல்வதற்காக வரி அறவிடுகின்ற ஒரு வரவுசெலவுத் திட்டமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக அடுத்த வருடத்தின் மதிப்பீடுசெய்யப்பட்ட வருமானம் நான்காயிரத்து நூற்றி இருபத்தொன்பது பில்லியன் ரூபாவாக அமைவதோடு வரி வருமானம் என்றவகையில் மூவாயிரத்து எண்ணூற்று இருபத்தாறு பில்லியன் ரூபாவை ஈட்டிக்கொள்ள மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த வருமானத்தின் சதவீதமாக நூற்றுக்கு தொண்ணூற்றிமூன்று சதவீதத்தை வரியாக பெற்றுக்கொள்ள மதிப்பீடு செய்துள்ளார்கள். இதனால் வருடாந்த தனிநபர் வரிச்சுமை ஒரு இலட்சத்து எழுபத்து மூவாயிரத்து அறுநூற்றி முப்பத்தாறு ரூபாவாக அமைகின்றது. நாளொன்றில் ஒரு நபர்மீது நானூற்றி எழுபத்தைந்து ரூபாவிற்கு மேற்பட்ட வரிச் சுமை ஏற்றப்படுகின்றது.
நாளொன்றில் ஒருவருக்கு எவ்வளவுதான் வருமானம் கிடைத்தாலும் ஒரு நபர் என்றவகையில் நானூற்றி எழுபத்தைந்து ரூபா வரிச்சுமையை ஏற்க வேண்டும். இவ்விதமாக பெறப்படுகின்ற வருமானத்தை செலவிடுகையில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சிடமிருந்து பாரிய தொகை கத்தரிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, பாலூட்டுகின்ற தாய்மார்களுக்கு, பிள்ளைகளுக்கு போசாக்குக் குறைபாடு நிலவுகையில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகின்ற நிலையில் இரண்டாயிரத்து இருபத்திமூன்றுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நூற்றி ஐம்பத்திரண்டு பில்லியன் ரூபாவானது இரண்டாயிரத்தி இருபத்திநான்கில் எழுபத்தைந்து பில்லியன் ரூபா வரை கத்தரிக்கப்பட்டுள்ளது. இந்த வெட்டிவிடல் காரணமாக விசேட தேவைகள் நிலவுகின்ற குழுவினர் மத்தியில் சிறுவர் மற்றும் பெண்கள் மீது பாரிய அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. பிரதேச செயலாளர் அலுவலகங்களால் பேணிவரப்படுகின்ற சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு நிலையங்களிலிருந்து அவர்களை அகற்றி தத்தமது வீடுகளுக்கு கொண்டுசெல்லுமாறு நிரப்பந்திக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கம் பெற்றுக்கொள்கின்ற வரி வருமானத்தில் மிகவும் குறைந்த பகுதி அதற்காக கடந்த காலத்தில் ஒதுக்கப்பட்டிருந்தபோதிலும் அது தற்போது வெட்டிவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவர்களின் குடும்பங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமை அதனால் மேலும் அதிகரிக்கின்றது. எனினும் இளைப்பாறிய சனாதிபதிமார்கள் மற்றும் பாரியார்களை பராமரிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை இரண்டாயிரத்து இருபத்திமூன்றில் எண்பத்திநான்கு மில்லியன் ரூபாவில் இருந்து அடுத்த வருடத்தில் நூற்றிப்பத்து மில்லியன் ரூபாவரை அதிகரித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கான பணத்தை கத்தரித்து முன்னாள் சனாதிபதிமார்களின் செலவுகள் உயர்த்தப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவுவது தொடர்ந்தும் தீத்தொழில் புரிந்து மேற்கொள்ளப்படுகின்ற பொருளாதாரமாகும். இன்று அரசாங்கத்தின் செய்தித்தாளே மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு எமது பிள்ளைகளை விற்பனைசெய்கின்ற தீத்தொழில் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. ஜே.ஆர். ஜயவர்தனவினால் இந்த நாட்டுக்கு நவலிபரல்வாதம் அறிமுகஞ் செய்யப்பட்டதுமே இந்த தீத்தொழில் தொடங்கப்பட்டது. பேபி பாஃம் எனக்கூறி எமது பிள்ளைகளை விற்பனைசெய்த இறந்தகாலமே இன்று ரணில் விக்கிரமசிங்கவின்கீழும் அவ்விதத்திலேயே அமுலாக்கப்பட்டு வருகின்றது. மறுபுறத்தில் மதுபானசாலைகள் திறந்துவைக்கப்பட்டிருக்கின்ற காலத்தை நீடித்து தகப்பன்மார்களுக்கு குடிக்கக்கொடுக்கிறார்கள். தாய்மார்களை வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள். இந்த நிலைமைக்குள் பாதுகாப்பற்றதன்மைக்கு இலக்காக்கப்பட்டுள்ள பிள்ளைகள் தொடர்பான குற்றச்செய்லகள் அதிகரித்து வருகின்றன. இன்று நிலவுவது பிள்ளைகள்கூட வெறுக்கின்ற அரசாங்கமாகும். எனவே இன்று எஞ்சியிருப்பது அரசாங்கத்தை விரட்டியடித்து பதில் தேடுவது மாத்திரமாகும். அதற்காக திசெம்பர் நான்காம் திகதி சிறுவர் மற்றும் மகளிர் செலவுத்தலைப்பு அங்கீகரிக்கப்படவுள்ள தினத்தன்று பாரிய ஆர்ப்பாட்டத்தை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். அதற்கான அனைத்துப் பெண்களையும் பாராளுமன்றத்திற்கு அருகில் வருமாறு அழைப்பு விடுகிறோம்.

“கெரற் கிழங்கு அரசியலை முன்னெடுத்துச் செல்கின்ற அழகான சொற்றொடர்களே வரவுசெலவில் இருக்கின்றன.“
–தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்–
வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்துடன் எமது நாட்டின் பெண்களும் பிள்ளைகளும் பெருமளவிலான சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். அதைப்போலவே அரச பிரிவிலும் தனியார் பிரிவிலும் தொழில்புரிகின்ற பெண்களும் பெருந்தோட்டத் துறையைச்சேர்ந்த பெண்களும் புதிதாக பாரிய சிக்கல்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது. கடந்த காலத்தில் ஆடைக் கைத்தொழில், ஏனைய குடிசைக் கைத்தொழில்கள் மூடப்படுகின்ற தருணத்தில் கொண்டுவரப்பட்ட வரவுசெலவினால் வீழ்ச்சியடைந்த பொருளாதரத்தைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தைப் போலவே தமது குடும்பம் பற்றி நலமான ஒரு கனவினைக்காண மக்கள் எதிர்பார்த்தார்கள். மேற்படி எந்தவொரு விடயத்தையும் கருத்திற்கொள்ளாமல் தேர்தலை இலக்காகக்கொண்ட கெரற் கிழங்கு அரசியலை முன்னடுத்துச் செல்கின்ற பண்புகள், சில அழகான சொற்றொடர்கள் இந்த வரவுசெலவில் அடங்கியுள்ளன. மக்களின் பற்றியெரிகின்ற பிரச்சினைகளுக்கு அத்தருணத்தில் வழங்கப்படவேண்டிய குறைந்தபட்ச தீர்வுகளைக்கொண்டதாக எதிர்காலத்தில் நாட்டை உயர்த்திவைப்பது எந்த இடத்திற்கு என்பதை எதிர்வுகூறக்கூடிய விடயங்கள் வரவுசெலவில் உள்ளடங்க வேண்டும். எனினும் எழுபத்தைந்து வருடங்கள் பூராவிலும் சனாதிபதி தொடக்கம் அமைச்சர்கள் பிரமுகர்கள் வரை அவர்களின் சுகபோகத்திற்காகவும் சட்டைப்பைகளை நிரப்பிக்கொள்வதற்காகவும் கீழ்த்தரமான தேவைகளுக்காகவும் நிதியை முகாமைசெய்ததாலேயே இந்த நிலைமை ஏற்பட்டது. எனினும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திவைக்கின்ற எந்தவிதமான இலக்குகளும் இந்த வரவுசெலவில் உள்ளடக்கப்படவில்லை.
புள்ளிவிபரங்கள் என்றவகையில் எடுத்துக்கொண்டால் ஒற்றோபர் மாதமளவில் ஐந்துஇலட்சம் மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் கிடைத்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் பொருளாதாரரீதியில் தாழ்ந்த மட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். மறுபுறத்தில் மனைசார் மட்டத்தில் அல்லது சிறிய அளவிலான மட்டத்தில் மேற்கொண்டு வருகின்ற ஏதேனும் கைத்தொழில் இருப்பின் அதற்காக பாவித்த மின்கட்டணத்தைக்கூட இவ்விதமாக செலுத்தமுடியாத மட்டம் நிலவுகின்றது. எமது ஊர்களில்கூட சிறுகைத்தொழில்களில் ஈடுபட்ட பெருந்தொகையான சகோதரிகள் தொழில்களை இழந்து மேலும் பலர் தொழில்களை இழக்கின்ற அபாயமும் மின்கட்டணம் காரணமாகத் தோன்றியுள்ளது. மாத வருமானத்துடன் மின்கட்டணத்தை தாங்கிக்கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளது. வியாபார நிலையங்களில் போன்றே வீடுகளிலும் இரவுவேளைகளில் குளிர்சாதனப்பெட்டிகளில் மின்சார இணைப்பை துண்டித்துவைக்க பெரும்பாலானோர் தூண்டப்பட்டமையால் பிள்ளைகளின் உணவுப்பாதுகாப்புகூட ஆபத்திற்கு இலக்காகி உள்ளது. மின்கட்டண அதிகரிப்பு மனைசார் மட்டம் தொட்டு கைத்தொழில்கள் வரை மிகவும் மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. வரவுசெலவில் மக்கள் அதற்காக ஏதேனுமொரு விதத்திலான நிவாரணத்தை எதிர்பார்த்தாலும் நூற்றுக்கு பதினைந்தாக நிலவிய வற் வரி நூற்றுக்கு பதினெட்டு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மூலப்பொருட்கள் மீது தாக்கமேற்படுவதைப்போலவே முடிவுப்பொருளாக மாறும்போது பண்டங்களின் விலை அதிகரிக்கின்றமையை பாவனையாளர்களால் தாங்கிக்கொள்ள முடியாத நிலையேற்பட்டுள்ளது. மூலப்பொருட்கள் மீதான வரிகளின் தாக்கம் காரணமாக மேலுமொரு வருடத்திற்குள் மேலும்பல கைத்தொழில்கள் சீரழியக் காரணமாக அமையும்.
அரச மற்றும் தனியார்துறை ஊழியர்கள் நியாயமான சம்பள அதிகரிப்பினை எதிர்பார்த்தாலும் அதனை வழங்காமல் ரூபா பத்தாயிரத்தை அடுத்த ஏப்பிறல் மாதம் தொடக்கம் வழங்குவதாக ஏமாற்றுத் தேர்தல் வாக்குறுதியாயொன்று கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் கோரிநின்றதோ ரூபா இருபதாயிரம் சம்பள அதிகரிப்பையாகும். அரசாங்கம் வழங்குவதாகக்கூறிய ரூபா பத்தாயிரம் சம்பள அதிகரிப்பு தொடர்பில்கூட ஒழுங்கான முறையியலொன்று முன்மொழியப்படவில்லை. தற்போது முன்மொழியப்பட்டுள்ள வற் வரியில்இருந்து மேலும் பெருமளவிலான வருமானத்தை அரசாங்கம் பெற்றுக்கொள்கின்ற அதேவேளையில் சமூகப் பாதுகாப்பு வரியை உள்ளிட்ட மேலும் பல விதமான வரிகளை உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. மறுபுறத்தில் ஐ.எம்.எஃப். முன்மொழிவுத் திட்டம் ஊடாக ஓய்வூதியம்பெறுனர்கள்கூட வரி செலுத்துபவர்களாக மற்றுமொரு விதத்தில் மறைமுகமாக இரையாக்கப்படுகிறார்கள். ரூபா பத்தாயிரம் சம்பள அதிகரிப்பினை அரச ஊழியர்களுக்கு வழங்குவதாகக் கூறினாலும் வரி அதிகரிப்பு காரணமாக உண்மையாகவே இடம்பெறுவது சம்பளக் கத்தரிப்பாகும். வழங்குவதாகக் கூறுகின்ற ரூபா பத்தாயிரம் கொடுப்பனவு ஒரு தில்லுமுல்லு என்பது தொடர்பில் அரச ஊழியர்கள் சிறந்த புரிந்துணர்வுடனேயே இருக்கிறார்கள். ஆசிரியர்களுக்கு ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றேழாம் ஆண்டில் இருந்தே வழங்கவேண்டிய சம்பள ஏற்றங்களில் இற்றைவரை செலுத்தப்படாத மூன்றிலிரண்டு பகுதியை வழங்குதலை இரண்டாயிரத்து இருபத்திநான்காம் ஆண்டுக்கான வரவுசெலவிலும் புஸ்வானமாக மாற்றியுள்ளார்கள். இதனால் ஏறக்குறைய இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர்களாக அமைந்த ஆசிரியர்களும் அதிபர்களும் போலியான வாக்குறுதிகளை வழங்குகின்ற ஊழல்மிக்க அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வற் வரி அதிகரிப்பு மூலமாக அடுத்த ஆண்டில் ஆயிரத்து நானூறு பில்லியன் ரூபாவை அதிகரித்துக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்தாலும் தொள்ளாயிரத்து பதினெட்டு பில்லியன் ரூபாவையே பெற்றுக்கொள்ள முடியுமென பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளார்கள். இதனால் அடுத்த வருடத்தின் நடுப்பகுதியளவில் வற் வரியை நூற்றுக்கு இருபத்திநான்கு வீதம்வரை அதிகரிப்பதற்கான அபாயநேர்வு நிலவுவதாக பொருளியல் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். நுண் நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், விவசாயக் கடன்களை செலுத்த முடியாதுள்ள மக்கள், வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அனர்த்தங்களால் பாதிப்புற்றுள்ள மக்கள் மற்றும் குறிப்பாக தோட்டப்புற மக்கள் பற்றி இந்த வரவுசெலவில் எந்தவிதமான குறிப்பும் கிடையாது. இந்த நிலைமையில் மீண்டும் பணவீக்கம் உயர்வடைந்து அரசாங்கம் வழங்குவதாகக் கூறுகின்ற நிவாரணங்கள்கூட புஸ்வானமாக மாற்றமடையும்.
இந்த நாட்டில் உற்பத்தியையும் அரசாங்க வருமானத்தையும் அதிகரித்துக்கொள்ளக்கூடிய எந்தவிதமான கருத்திட்டமும் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் கிடையாது. அடுத்த வருடத்திற்குள் மாத்திரமன்றி எதிர்கால நோக்கங்களைக்கொண்ட தொலைநோக்கு எதுவுமற்ற வரவுசெலவே காணப்படுகின்றது. கொள்ளைக்கார பொருளாதாரத்தையும் ஊழில்மிக்க அரசியல் கலாசாரத்தையும் பேணிவருகின்ற இந்த முறைமைக்கு இனிமேலும் இடமளிக்கக்கூடாது. இந்த வரவுசெலவில் நூற்றுக்கு எழுபத்தொன்பது வீதமுமே சனாதிபதி மற்றும் பிரதமரின் கீழேயே நிலவுகின்றது. எஞ்சிய இருபத்தேழு அமைச்சுக்களுக்கும் ஒட்டுமொத்த வரவுசெலவில் நூற்றுக்கு இருபத்தொன்று மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. சனாதிபதி மொத்த செலவில் நூற்றுக்கு அறுபத்தாறு வீதத்தை தனக்குக்கீழ் வைத்துள்ளார். இந்த ஊழல் மிக்க அரசியல் எப்படிப்பட்டதென்பது இதன்மூலமாக தெளிவாகின்றது. தமது வாழ்க்கையின் சுகபோகத்திற்காக மக்களின் கழுத்தை நெரிக்கின்ற இந்த அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நாங்கள் பிரமாண்டமான ஆர்ப்பாட்டமொன்றை செய்வோம். தொடர்ந்தும் மக்களை ஏமாற்றவேண்டாமென அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
-2023.11.22 – தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பும் அதிட்டன இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவினதும் ஒருங்கிணைந்த ஊடக சந்திப்பு- தேசிய மக்கள் சக்தி கடந்த காலம் பூராவிலும் கணிசமான மக்கள் வெற்றியைப்பெற்று முன்னேறி வந்துகொண்டிருக்கிறது. இந்த சாக்கடை அரசியலில் இருந்து விடுபட்டு இந்த கேடுகெட்ட ஆட்சியை மாற்றியமைப்பதற்கான எதிர்ப்புக் கூட்டமொன்று கடந்த 18 ஆந் திகதி எதிர்ப்புப் பேரணியின் பின்னர் நடாத்தப்பட்டது. மக்கள் ஆணையற்ற ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் தேசிய மக்கள் சக்தியின் பயணத்தை நலிவடையச் செய்விக்க […]
-2023.11.22 – தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பும் அதிட்டன இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவினதும் ஒருங்கிணைந்த ஊடக சந்திப்பு-

தேசிய மக்கள் சக்தி கடந்த காலம் பூராவிலும் கணிசமான மக்கள் வெற்றியைப்பெற்று முன்னேறி வந்துகொண்டிருக்கிறது. இந்த சாக்கடை அரசியலில் இருந்து விடுபட்டு இந்த கேடுகெட்ட ஆட்சியை மாற்றியமைப்பதற்கான எதிர்ப்புக் கூட்டமொன்று கடந்த 18 ஆந் திகதி எதிர்ப்புப் பேரணியின் பின்னர் நடாத்தப்பட்டது. மக்கள் ஆணையற்ற ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் தேசிய மக்கள் சக்தியின் பயணத்தை நலிவடையச் செய்விக்க அரசியலல்லாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஒருசில தருணங்களில் அவை மிகவும் கீழ்த்தரமான செயற்பாடுகளாகும். தேசிய மக்கள் சக்தி எனும் அரசியல் இயக்கத்தைக் கட்டிவளர்க்க ஒன்றுசேர்ந்துள்ள ஏனைய அமைப்புகள் மத்தியில் “தேசிய மக்கள் சக்தியின் இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவு” மிகப்பெரிய பணியை ஆற்றிவருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பானது நாடுபூராவிலும் வியாபித்துள்ள ஓர் இயக்கமாகும். தேசிய மக்கள் சக்தியின் இளைப்பாறிய முப்படைக் கூட்டமைப்பிற்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்துவருகின்ற அருவருக்கத்தக்க நடவடிக்கைகள் பற்றி தெளிவுபடுத்தவே நாங்கள் இந்த ஒருங்கிணைந்த ஊடக சந்திப்பினை நடாத்துகிறோம்.
அரசாங்கம் தத்தமக்கு பக்கச்சார்பான பிரிவுகளைப் பயன்படுத்தி ஒருசில அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது. இவ்விதமாக அழுத்தம் கொடுப்பவர்களுக்கு நாங்கள் ஒரு விடயத்தைக் கூற விரும்புகிறோம். தேசிய மக்கள் சக்தியின் இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைப்பிற்கு எதிராக புரியப்படுகின்ற அழுத்தங்கள் பற்றிய பிரச்சினையை நாங்கள் உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துரைத்தோம். எனினும் எங்கள் இளைப்பாறிய முப்படை அங்கத்தவர்களுக்கு முகாம்களுக்குள் பிரவேசித்தல், வருடாந்த ஒன்றுகூடல்களில் பங்கேற்ற தடைவிதித்தல், மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்ள தடையேற்படுத்துதல் போன்ற செயற்பாடுகளை வாய்மொழிரீதியாக மேற்கொண்டு வருகிறார்கள். ஊடக சந்திப்பில் பங்கேற்கின்ற திரு. சம்பத் துய்யகொன்தாவை விமானப்படையில் வாய்மொழிரீதியாக கறைநிரலில் சேர்த்தார்கள். இது சம்பந்தமாக நாங்கள் உயர்நீதிமன்’றத்திற்கு FCR 132/2023 எனும் வழக்கினைத் தாக்கல் செய்தோம். தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடுசெய்யப்பட்ட கம்பஹா மாவட்டக் கூட்டமொன்றில் ஆற்றிய உரையை அடிப்படையாகக்கொண்டு கறைநிரலில் சேர்த்திருந்தார்கள். இந்த ஒட்டுமொத்த உரையையும் நாங்கள் உயர்நீதிமன்ற நீதியரசர் குழாத்திற்கு செவிமடுக்கச் செய்வித்தோம். கோட்டாபய ராஜபக்ஷ, சரத் பொன்சேகா, சரத் வீரசேகர, கமல் குணரத்ன போன்ற இளைப்பாறிய இராணுவ உத்தியோகத்தர்களுக்கு அரசியலில் ஈடுபடுவதற்குள்ள உரிமை ஏன் திரு. சம்பத் துய்யகொன்தாவிற்கு கிடையாதெனும் பிரச்சினையை நாங்கள் உய்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். விமானப் படையின்சார்பில் தோற்றிய சட்டத்துறை தலைமைஅதிபதி திணைக்கள சட்டத்தரணியால் தனது தரப்பு தவறிழைத்துள்ளதென்பதை ஏற்றுக்கொள்ளவேண்டி நேரிட்டது. அடுத்த வழக்கு விசாரணை 2024 சனவரி 10 ஆந் திகதியளவில் சம்பந்தப்பட்ட தடையை நீக்கி அதுபற்றி உயர்நீதிமன்றத்திற்கு எழுத்தில் அறிவிக்கவேண்டி உள்ளது. திரு. சம்பத் துய்யகொன்தாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது.
அத்துடன் நின்றுவிடாமல் இந்த கூட்டமைவிற்கு ஒருசில அழுத்தங்களைப் பிரயோகித்து வருகிறார்கள். இந்த நாட்டின் பொருளாதாரப் படுகொலைக்கு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சரவை, பொதுதிறைசேரியின் செயலாளர், மத்திய வங்கி ஆளுனர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பொறுப்புக்கூற வேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதைப்போலவே உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் முன்னாள் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவில் இருந்து கீழ்மட்டம் வரையானவர்களுக்கு குற்றத் தீர்ப்பளித்து நட்டஈடு செலுத்துமாறும் பணிப்புரை விடுத்துள்ளது. இத்தகைய பின்னணியில் திரு. சம்பத் துய்யகொன்தாவின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பிரதிவாதிகள் ஏற்றுக்கொண்டுள்ளபோதிலும் தொடரந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. நாங்கள் அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டே அரசியலில் ஈடுபட்டு வருகிறோம். அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் 14 (1) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமையை அடிப்படையாகக்கொண்டே தேசிய மக்கள் சக்தியின் அதிட்டன இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவு அரசியலில் ஈடுபட்டு வருகின்றது. அந்த உரிமைமீது சட்டரீதியாக ஆட்சேபனை விடுக்க எவருக்குமே முடியாது.
ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றம்மீது குற்றஞ்சுமத்தி தொடங்கியவிதம் எமக்கு ஞாபகம் இருக்கின்றது. ஈ.பி.எஃப் மற்றும் ஈ.ரீ.எஃப். வழக்குகள் சம்பந்தமாக பாராளுமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க நீதிமன்றத்திற்கு முடியாதென ரணில் விக்கிரமசிங்க கூறினார். அதன்பின்னர் சபாநாயகரும் அதுபற்றிக் கூறினார். மூன்று கோபுரங்களில் ஒன்றுக்கு அச்சுறுத்தல்விடுத்த அவர்கள் மேற்கொண்டுவருகின்ற இந்த பயணம் அடுத்த வருடம் ஓகத்து மாதத்தில் முற்றுப்பெறும். அதற்காக பயப்பட்ட இந்த கீழ்த்தரமான அரசாங்கம் தமது பொலீஸாரைப் பயன்படுத்தி வளர்ந்துவருகின்ற எதிர்ப்பினை அடக்கியாள முற்படுகின்றது. இளைப்பாறியோர் கூட்டமைவின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடன் பலவிதமான தடைகளை ஏற்படுத்துகிறார்கள். அரசாங்கத்தின் இந்த கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கு தேசிய மக்கள் சக்தி பயப்படமாட்டாது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த கூட்டமைவிற்கு எதிராகப் புரிகின்ற அனைத்துவிதமான தொந்தரவுகள் தொடர்பிலும் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் தோற்றுவார்கள். இலங்கையின் எந்தப் பிரதேசத்திலிருந்தும் இந்த கூட்டமைவிற்கு தொல்லைகள் புரிந்தாலும் நாங்கள் அத்தகைய எந்தவோர் இடத்திலும் தோற்றுவோம். இந்த அங்கத்தவர்களின் உரிமைகளை அரசாங்கத்தின் கோழைத்தனமான, கீழ்த்தரமான வேலைகளால் அடக்கமுடியாதென்பதையும் அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறும் வலியுறுத்துகிறோம். நாங்கள் சனநாயக சட்டகத்திற்குள்ளேயும் சட்டக் கட்டமைப்பிற்குள்ளேயும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதோடு அதற்குப் புறம்பாக எவரேனும் புரிகின்ற அழுத்தங்களுக்கு கட்டுப்படப்போவதில்லை என்பதையும் வலியுறுத்துகிறோம்.
“எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் எமது நாட்டுக்காக வருங்காலத்திலும் செயலாற்றுவோம்”
-இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவின் பிரதான ஒருங்கிணைப்பாளர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர-

தேசிய மக்கள் சக்தியின் அதிட்டன இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவு தறபோது பாரிய விருட்சமாக கட்டிவளர்க்கப்பட்டுள்ளது. இந்த வருடம் பெப்புருவரி மாதம் 11 ஆந் திகதியன்று மகரகம இளைஞர் சேவைகள் மன்ற மண்டபத்திலேயே “அதிட்டன” எனும் பெயரில் இந்த இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவு தாபிக்கப்பட்டது. நாட்டுக்கு விளைவித்துள்ள அநியாயத்தின் மத்தியில் இளைப்பாறியவர்கள் என்ற வகையில் எம்மால் பாராமுகமாக இருந்துவிட முடியாது. நாடு வீழ்த்தப்பட்டுள்ள நிலையிலிருந்து மீட்டெடுக்க இந்நாட்டின் பிள்ளைகளுக்காக நல்லதொரு நாட்டை நல்லதொரு நாளைய தினத்தை உருவாக்குவதற்காக நாங்கள் இந்த கூட்டமைவினை நிறுவிக்கொண்டோம். இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவில் இருக்கின்ற அனைத்து அங்கத்தவர்களும் இராணுவ, விமான, கடற்படையினர் ஆகிய முப்படையினரதும் நன்மதிப்பினை பாதுகாத்திட செயலாற்றி வருகிறார்கள். தொழில்வாண்மை மட்டத்தில் உயர்ந்த பங்களிப்பினை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குவதற்காகவே நாங்கள் இந்த கூட்டமைவினை அமைத்துக்கொண்டோம். நாங்கள் சட்டபூர்வமாக செயலாற்றி வருவதோடு இந்த கூட்டமைவின் அங்கத்தவர்களுக்கு பலவிதமான வாய்மொழிரீதியான தடைகளை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களின் எத்தகைய தடைகள் தோன்றினாலும் எமது அதிட்டன கூட்டமைவின் அனைத்து அங்கத்தவர்களும் மென்மேலும் முன்னணிக்கு வந்து செயலாற்றுவார்கள் என்பதை உறுதியாகக் கூறுகிறோம். தேசிய மக்கள் சக்தி கொண்டுள்ள ஊழலற்ற, தன்னிச்சையாக அரப்பணிக்கின்ற ஆற்றலை இனங்கண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக நாங்கள் இந்த கட்சியுடன் இணைந்து செயலாற்றிவருகிறோம். எமக்கு எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் எமது நாட்டுக்காக தொடரந்தும் செயலாற்றுவோம் என்பதை உறுதியாகக் கூறுகிறோம்.
“‘அதிட்டன’ அங்கத்தவர்கள் வாழ்க்கையால் அல்லது மனச்சாட்சியால் ஓய்வுபெறவில்லை“
-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி ஹர்ஷண நாணாயக்கார –

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி அடுத்த ஆண்டில் உருவாவது பெருநிலத்தின் யதார்த்தமாக மாறியுள்ளது. அதற்காக தேர்தலைப் பிற்போட்ட அரசாங்கம் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளுக்கு எல்லாவிதத்திலும் தடைகளை ஏற்படுத்த பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அத்தகைய எதனாலும் எம்மைத் தோற்கடிக்க முடியாது. தொழில்வாண்மையாளர்களை ஒழுங்கமைத்து, மக்களை ஒழுங்கமைத்து, வட்டார சபைகளை நிறுவி பாரிய சக்தியாக முன்னேறிவருகிறோம். அதேவேளையில் இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவு கிராமங்கள்தோறும் வேகமாக வியாபித்து ஒன்றரை வருடங்களுக்குள் பெருந்தொகையான அங்கத்தவர்களை சேர்த்துக்கொண்டு பலமடைந்துள்ளது. “அதிட்டன” அமைப்பினைக்கண்டு அரசாங்கம் எந்தளவிற்கு எஞ்சுகின்றது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகின்றது. அவர்கள் தொழிலில் இருந்து மாத்திரமே இளைப்பாறியுள்ளார்கள் என்பதை அரசாங்கம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் வாழ்க்கையால் அல்லது மனச்சாட்சியால் ஓய்வுபெறவில்லை. அரசியல்ரீதியாக அவர்கள் ஓய்வுபெறவில்லை. இந்த சமூகத்தை ஒழுங்கமைத்து குணப்படுத்துவதற்கான பாரிய செயற்பொறுப்பினை ஈடேற்ற அவர்கள் முன்வந்துள்ளார்கள். கடமைப் பருவத்தில் நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் இவ்விதமாக தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி குழுமியுள்ளார்கள். அவர்களுக்கு எதிராக சட்டரீதியற்றமுறையில் கொண்டுவரப்படுகின்ற எந்தவொரு தடைக்கும் நாம் எவருமே அஞ்சப்போவதில்லை. அரசாங்கத்தின் தேவைக்கிணங்க ஒருசில உத்தியோகத்தர்கள் வாய்மொழிரீதியான பணிப்புரைகளை ஏற்றுநடக்க வேண்டாமென நான் அனைவருக்கும் ஞாபகப்படுத்துகிறேன். இவ்விதமாக அழுத்தம் கொடுக்கின்ற அதிகாரிகளுக்கும் குறிப்பாக ஒன்றைக் கூறிக்கொள்ள நான் விரும்புகிறேன். உங்களின் மூப்புநிலை, உங்களின் பதவி, உங்களின் கட்டளைகள் முகாமிற்குள் பலம்பொருந்தியதாக இருந்தாலும் நீதிமன்றத்தின் முன்னிலையில் நாமனைவரும் சமமான பிரஜைகளே. சமமான உரிமைகளே இருக்கின்றன. நீங்கள் தோற்றவேண்டியது அரசியல் பலத்தினால் வருகின்ற போகின்ற அரசாங்கங்களுக்கல்ல, அரசுக்கும் மக்களுக்காகவுமே.
அடுத்த ஒற்றோபர் மாதத்தின் பின்னர் ரணில் விக்கிரமசிங்காக்கள், ராஜபக்ஷாக்கள் எவருமே அதிகாரத்தில் இல்லை. அடுத்ததாக நியமிக்கப்படுகின்ற அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை சரிவர அமுலாக்கும். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின்கீழ் அந்த பணிகள் முறைப்படி ஈடேற்றப்படுமென்பதை அந்த உயரதிகாரிகளுக்கு வினயமாக ஞாபகப்படுத்துகிறேன். சட்டமுறையற்ற கட்டளைகளுக்கு அடிபணிந்து அரசி்யல்வாதிகளுக்கு வக்காலத்துவாங்கி ஒட்டுமொத்த தொழில்சார் வாழ்க்கையையுமே இருள்மயமாக்கி்க்கொள்ள வேண்டாமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சட்டமுறையாக சனநாயகரீதியாக அரசியலில் ஈடுபடுதல் சம்பந்தமாக விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்கள் அல்லது பொய்யான எமாற்றுவேலைகளுக்கு இளைப்பாறிய முப்படையினர் எவரையும் அகப்பட்டுவிட வேண்டாமெனவும் கேட்டுக்கொள்கிறேன். தேசிய மக்கள் சக்தியிலிருந்து விலகினால் சிறப்புரிமைகளைத் தருவதாக கடிதங்களை அனுப்பிவைக்கவும் ஒருசிலர் நடவடிக்கை எடுத்துவருகின்றமை வெளிப்பட்டுள்ளது. எனது இந்த தயவான நினைவுறுத்தல் சட்டரீதியற்றவகையில் செயலாற்றுகின்ற உயரதிகாரிகளுக்கே.

–2023.11.18 – தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி – நுகேகொட– இந்த மாநாட்டின் உட்பொருள் இன்றேல் வழங்குகின்ற மிகவும் குறுகிய செய்தியாக அமைவது “ரணில் முடிந்துவிட்டார்” என்பதாகும். எனினும் இலங்கை முடிவடையவில்லை என்பதாகும். தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த நாங்கள் தொடங்கியது மாத்திரமே. அனைவரையும் படுகுழிக்குள் இழுத்துப்போட்ட மிருகத்தனமான பொருளாதாரக் கொலைஞர்களின் பட்டியல் நாட்டின் மீயுயர் நீதிமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அப்படியானால் எமது வாழ்க்கையை இந்த அனர்த்தத்திற்கு இலக்காக்கியமைக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் பற்றி எமக்கு எந்தவிதமான சந்தேகமும் நிலவ […]
–2023.11.18 – தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி – நுகேகொட–

இந்த மாநாட்டின் உட்பொருள் இன்றேல் வழங்குகின்ற மிகவும் குறுகிய செய்தியாக அமைவது “ரணில் முடிந்துவிட்டார்” என்பதாகும். எனினும் இலங்கை முடிவடையவில்லை என்பதாகும். தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த நாங்கள் தொடங்கியது மாத்திரமே. அனைவரையும் படுகுழிக்குள் இழுத்துப்போட்ட மிருகத்தனமான பொருளாதாரக் கொலைஞர்களின் பட்டியல் நாட்டின் மீயுயர் நீதிமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அப்படியானால் எமது வாழ்க்கையை இந்த அனர்த்தத்திற்கு இலக்காக்கியமைக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் பற்றி எமக்கு எந்தவிதமான சந்தேகமும் நிலவ முடியாது. சிறியதொரு குறைபாடு லிஸ்ற் இன்னமும் நிறைவுசெய்யப்படவில்லை. ரணில் விக்கிரமசிங்காக்கள், அர்ஜுன மகேந்திரன்களின் பெயர்களையும் சேர்த்து அந்த லிஸ்ற்றை நிறைவுசெய்ய தேசிய மக்கள் சக்தி தயார்.
இவர்கள் நாசமாக்கி இருப்பது இரண்டரைகோடி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் கனவுகளையாகும்: வாழ்க்கையையாகும். அவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறுகிறது. முறைப்படி பார்த்தால் இத்தரணமாகும்போது இரண்டரைகோடி மக்கள் மனுக்களை தாக்கல் செய்திருக்கவேண்டும். எங்கள் ஒவ்வொருவரினதும் வாழ்க்கை பாரிய அழிவுக்கு தள்ளப்பட்டு விட்டது. நாங்கள் நிச்சயமாக இரண்டரை கோடி மக்கள் சக்தியாக முகாமைத்துவம் செய்வோம். அதற்காகத்தான் தூரநோக்குடைய, தேசிய தலைமையைக்கொண்ட, தேசிய கொள்கைத் திரட்சியைக்கொண்ட தேசிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது.
கலை, கலாசாரம், கல்வித்துறையை உள்ளிட்ட எமது நாட்டின் அனைத்து மக்கள் நிரல்களிலுள்ள புத்திஜீவிகள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியிலாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்களை உள்ளிட்ட அனைவரும் இந்த தருணத்தை விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் மனிதர்கள் என்றவகையில் எடுக்ககூடிய உன்னதமானதும் சரியானதும் அரசியல் கணப்பொழுதே தற்போது உருவாகி இருக்கின்றது. இதுவரை இந்த நாட்டின் அரசியல் பெருநிலம், இந்த மக்கள் பிரமிட்டின் உச்சியும் அடித்தளமும் இவ்விதமாக தயாரிக்கப்படவில்லை. அழுத்தம் எங்கள் வாழ்க்கையின் உச்சிக்கே வந்துவிட்டது. இந்த அழுத்தத்தை உருவாக்கிய அரசியல் அதிகாரக் கூட்டமைப்புகள் பலதிசைகளில் பரந்துள்ளன. தேசிய மக்கள் சக்தி மக்களை ஒழுங்கமையச் செய்விக்கின்றது. அதைவிட சிறப்பான தருணம் உருவாகப் போவதில்லை. சிசேரியன் அறுவைசிகிச்சைக்காக வைத்தியசாலையில் தனது மனைவியை அனுமதித்த கணவனுக்கு அந்த மனைவியின் அறுவைசிகிச்சைக்காக அவசியமான நூலை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. எமது பல்கலைக்கழகங்கள் சீரழிந்துவிட்டன. எனது பல்கலைக்கழகத்தில் 650 பேர் இருக்கவேண்டிய கல்விசாரா பணியாட்டொகுதியில் தற்போது இருப்பவர்களின் எண்ணிக்கை 300 பேர் மாத்திரமே. ரணில் விக்கிரமசிங்க டெம்பரியொன்றை இழுத்துச்சென்றாலும் பல்கலைக்கழகங்களை அவ்விதமாக ஓட்டிச்செல்ல முடியாது. எமது பிரவாகத்தில் சேர்ந்துகொண்ட புத்திஜீவிகளிடமும் கலைஞர்களிடமும் எம்முடன் ஒன்றிணையுமாறும் கூருணர்வுகொண்டவர்களாகவும் மாறுங்கள் என மிகவும் வினயமாக கேட்டுக்கொள்கிறோம்.
மின்சாரம் இல்லாத கிராமத்தில் விளக்கு வெளிச்சத்தில் உயர்தரம் கற்றவன் நான். இன்று இலங்கையின் ஒரு பல்கலைக்கழக பேராசிரியர். 2023 ஆம் ஆண்டில் பத்து மாதங்களாக நான்பெற்ற சம்பளத்தில் மாதத்திற்கு எழுபதாயிரம் வீதம் வரியாக மாத்திரம் ஏழு இலட்சத்தை வெட்டியுள்ளார்கள். இந்த ஏழு இலட்சம் என்னிடம் இருந்திருப்பின் எனது விருப்பத்தின்படி பிள்ளைகளுக்கு புலமைப்பரிசிலொன்றை வழங்க, நிர்க்கதியுற்ற புற்றுநோயாளிகளுக்கு உதவக்கூடியதாக இருந்திருக்கும். எனினும் அந்த பணத்தில் ஒரு ரூபாவையேனும் இந்த கல்வர்கள் கும்பலை, கொள்ளையடித்த நாட்டை, பொருளாதாரக் கொலைஞர்கள் என நீதிமன்றத்தினால் பெயர்குறித்த நாட்டை ஆட்சிசெய்கின்ற அரசாங்கத்திற்கு கொடுக்க நான் விரும்பமாட்டேன்.
தேசிய ஒற்றுமைக்காக, பெண்கள், பிள்ளைகளுக்காக முழு வாழ்நாளையும் அர்ப்பணித்த நான் அறிந்த தலைசிறந்த பெண் கலைஞர் ஒருவர் வெகுசனஊடக கலைஞரொருவர் தற்போது புற்றுநோயுடன் போராடிக்கொண்டு இருக்கிறார். இறந்த நோயாளர்களிடம் எஞ்சியிருந்த மருந்துகளிலிருந்தே அவருக்கு அவசியமான ஊசி மருந்து கடந்த இரண்டு மூன்று மாதங்களாக தேடிக்கொள்ளப்பட்டது. ஒரு மாதம் அவருக்கு காலாவதியான ஊசி மருந்தினையே ஏற்ற நேரிட்டது. 75 வருடங்களாக உருவாக்கிய இந்த நாடு இந்த நிலைமையை அடைவதை நீங்கள் விரும்புகிறீர்களா? சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பேராசிரியர் கூறினைக் கோருவதற்காக கொழும்புக்கு வந்து உயிரியல் பயின்று மூன்று “ஏ” சித்திகளைப்பெற்ற பிள்ளைகள்மீது இந்த அரசாங்கம் தாக்குதல் நடாத்தியது. அவர்களை கைது செய்தது. ஏறக்குறைய 35 பிள்ளைகள் அடுத்த நாளன்று பிணை அனுமதிக்கப்பட்டு என்னுடன் பேசினார்கள். அவர்கள் பெலிஹுல்ஓயாவிற்குப் போகவேண்டும். பெலிஹுல் ஓயாவிற்கான அவர்களின் பஸ் கட்டணம் 30,000/-. பேராசிரியர் கூறு ஒன்றினை கோர வந்தவர்கள் எந்தவிதமான தவறினையும் புரியாத பிள்ளைகளாவர். இந்த வரலாற்றினை நாங்கள் மாற்றியமைத்திட வேண்டும்.
அண்மையில் ரணில் விக்கிரமசிங்கவின் கோப் குழுவினால் ராஜபக்ஷாக்களின் காலத்தின் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். கோப் குழுவின் தலைவர்களின் போலியான சிங்கத்தோல் கழன்று குள்ளநரி வெளிப்பட்டது. அண்மையில் கோப் குழுவிற்கு சுனில் ஹந்துன்னெத்தி தோழர் கொடுத்த எடுத்துக்காட்டினைக் கடைப்பிடிப்பதை மாத்திரமே செய்யவேண்டி ஏற்பட்டது. தலைசிறந்த அரசியல் நோக்கினைக்கொண்ட மனிதனொருவன் பிறரது கட்டமைப்பிற்குள்ளே தற்காலிகமாகவேனும் வேலைசெய்யவேண்டி கிடைத்த தருணமென்றில் அந்த ஒட்டுமொத்த கட்டமைப்பு மீதும் தாக்கமேற்படுத்தத்தக்கவகையில் சுற்றுச்சூழலை மாற்றியமைத்திடுவான். உண்மையான ஒரு ஹந்துன்னெத்தியை உருவாக்க எந்தவொரு காலத்திலும் இந்த அரசாங்கங்களால் முடியாது. இத்தகைய ஓர் இயக்கத்தினால் மாத்திரமே அதனை சாதிக்கமுடியும். ஊழல்பேர்வழிகள் ஒருபோதுமே ஊழல் புரிந்தவர்களைத் தண்டிக்கமாட்டார்கள். ராஜபக்ஷாக்களின் வழக்குகளை ரணில் தற்காலிகமாக விசாரிக்கட்டும். இந்த இருசாராரினதும் வழக்குகளை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றின்கீழ் குறுகிய எதிர்காலத்தில் நாங்கள் விசாரிப்போம். இந்த இனிமையான கனவுக்கான பலமும் விவேகமும் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டுமாக! புத்திஜீவிகளே, மக்களே தேசிய மக்கள் சக்தியின் உன்னதமான வேலைத்திட்டத்துடன் ஒருங்கிணையுங்கள். இந்த நாட்டின் வரலாற்றினைப் புதுப்பிப்போம்.
–2023.11.18 – தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி – நுகேகொட– இன்றைய தினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். நாங்கள் மிகவும் பலம்பொருந்திய வகையில், துணிச்சலுடன், திடசங்கற்பத்துடன் ஆட்சியாளருக்கு ஒரு செய்தியைக் கொடுக்கிறோம். உங்கள் யுகம் முடிந்துவிட்டதென்பதை நாங்கள் இந்த மேடையில் இருந்து உரத்தகுரலில் கூறுகிறோம். இந்த வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த தினத்திலேயே உங்களின் யுகத்தை மாற்றியமைக்கின்ற, எமது அத்தியாயத்தை தொடங்குகின்ற, எமது தலைமுறையினர் பொறுப்புக்களை ஏற்கின்ற, புதிய வரலாற்றினை எழுதுகின்ற இந்த தருணம் குறிக்கப்படுகின்றது. 75 […]
–2023.11.18 – தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி – நுகேகொட–

இன்றைய தினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். நாங்கள் மிகவும் பலம்பொருந்திய வகையில், துணிச்சலுடன், திடசங்கற்பத்துடன் ஆட்சியாளருக்கு ஒரு செய்தியைக் கொடுக்கிறோம். உங்கள் யுகம் முடிந்துவிட்டதென்பதை நாங்கள் இந்த மேடையில் இருந்து உரத்தகுரலில் கூறுகிறோம். இந்த வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த தினத்திலேயே உங்களின் யுகத்தை மாற்றியமைக்கின்ற, எமது அத்தியாயத்தை தொடங்குகின்ற, எமது தலைமுறையினர் பொறுப்புக்களை ஏற்கின்ற, புதிய வரலாற்றினை எழுதுகின்ற இந்த தருணம் குறிக்கப்படுகின்றது. 75 வருடங்களில் இந்த கொடிய ஆட்சி எமக்கு எதனை மீதமாக்கியது என்பதை அனைவரும் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தற்போது பயத்துடனேயே எமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவைக்க நேர்ந்துள்ளது. பாடசாலைகளின் கட்டுமாணங்கள்கூட பாதுகாப்பற்றவையாகும். ஆறு வயது நிரம்பிய சிறுமி பிறந்த நாளன்று கட்டுமாணம் சிதைந்து மடிகின்றது. மேலும் சில பிள்ளைகள் வைத்தியசாலையில். இவற்றைத்தான் எமக்கு எமது கல்வி எஞ்சவைத்துள்ளது. பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவைகக்க முடியாத நிலைமை உருவாகி இருக்கின்றது. எமது பிள்ளைகள் மிகவும் சிரமப்பட்டு கல்வி பயின்று, தகைமைகளை சேர்த்துக்கொண்டு, சித்தியடைவேண்டிய அனைத்துப் பரீட்சைகளிலும் சித்தியடைந்து, தொழிலொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக எட்டாம்வகுப்பில் சித்தியடைந்த அமைச்சர்களின் பின்னால் செல்லவேண்டி நேர்ந்துள்ளது. நோயுற்று மருந்து வாங்கப்போனால் அந்த மருந்து தொடர்பில் நம்பிக்கை கிடையாது. நிபுணத்துவ மருத்துவர்கள் வைத்தியசாலைகளில் கிடையாது. தாதிமார் கிடையாது. நாட்டை விட்டுச் சென்றுள்ளார்கள்.
விடுமுறைக்காக இரண்டுநாள் சுற்றுலாசெல்ல வழியில்லை. ஓய்வுநேரத்தில் வாசிக்க புத்தகமொன்றை விலைக்கு வாங்க, திரைப்படமொன்றை பார்க்கச்செல்ல ஆயிரம்தடவைகள் சிந்திக்கவேண்டி ஏற்பட்டுள்ளது. எப்போதாவது ஹோட்டலொன்றுக்குச் சென்று ஒருவேளை உணவு உண்ணுவதற்கு வழியில்லாமல் செய்துவிட்டார்கள். ஓய்வுநேரத்தை இல்லாதொழித்து விட்டார்கள். மனிதத்திற்கு அர்த்தம்தரவல்ல எல்லாவற்றையும் ஒழித்துவிட்டார்கள். எமது நிலைமை அப்படியானாலும் அவர்களின் வாழ்க்கைக்கு அவசியமான எல்லா வசதிகளையும் அவர்கள் அனுபவித்து வருகிறார்கள். விக்கிரமசிங்காக்கள், ராஜபக்ஷாக்கள் அனைவரும் ஒன்றுகூடி 17 ஆந் திகதி பிறந்தநாள் கேக் வெட்டுகிறார்கள். ஆறு வயது சிறுமி பிறந்தநாளன்று இறக்கின்றது. இரண்டு நாட்கள்கூட கழியவில்லை. நாட்டுப் பிள்ளைகளுக்கு அவ்வாறு நேரும்போது பெற்றோர்களின் மனநிலை எப்படி இருக்கும்.
இந்த நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யாரென நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒருவாரம்கூட கழியவில்லை. பெயர்குறிக்கப்பட்டவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. “ஹெப்பி பேர்த் டே” எனக் குறிக்கொண்டு அவர்கள் கேக் ஊட்டிக் கொள்கிறார்கள். எந்தளவு கொடூரம்? எந்தளவு கூருணவற்றவர்கள்? எவ்வளவு நெருக்கடி தோன்றியுள்ளபோதிலும் மக்களின் துன்பதுயரங்களை அறியாத ஆட்சியாளர்களை விரட்டியடிக்கவேண்டிய தேவையில்லையா?
அவர்களின் வாழ்க்கை எவ்வாறு கழிகின்றது? நோயுற்றால் மருந்து வாங்க வெளிநாடு செல்லலாம். பெற்றோல் விலை அதிகரிக்கின்றமை, போக்குவரத்து அவர்களுக்கு பிரச்சினையில்லை. எம்மீது வரி விதித்து, எம்மைச் சுரண்டித் தின்றே அவர்கள் சுகபோக வாழ்க்கையைக் கழிக்கிறார்கள். இதற்கு நாங்கள் மென்மேலும் இடமளிக்கவேண்டுமா? மக்களுக்கு எதிரான ஆட்சிக்கு முற்றுப்புள்ளிவைக்க நாங்கள் ஒன்றுசேர்ந்திருப்பதும் திடசங்கற்பம் பூண்டு இருப்பதும் அதற்காகவே. அவர்களுக்குத் தேவையான விதத்தில் எம்மை மிதித்து, துன்பப்படுத்தி, எமது மனிதத்தையும் கனவுகளையும் பிடுங்கிக்கொண்டு இனிமேலும் இந்த பயணத்தை தொடர இடமளிக்க நாங்கள் தயாரில்லை. ரணில் விக்கிரமசிங்க தனது கூட்டாளிகளுடன் புரிகின்ற டீல் அரசியல் யுகத்தை இந்த நாட்டின் பிரஜைகள் இப்போது முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். எமது யுகம் ஆரம்பித்துள்ளது.
–2023.11.18 – தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி – நுகேகொட– நாங்கள் நுகேகொடவில் குழுமியிருப்பது ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மகிந்த ராஜபக்ஷ கும்பலுக்கும் இறுதி அறிவித்தலைக் கொடுப்பதற்காகும்: “எமது நாட்டை எங்களுக்கு எஞ்சவைத்து, இறங்கிப்போங்கள்” எனக் கூறுவதற்காகவே: இந்த கொடிய ஆட்சிக்கு முற்றுப்புள்ளிவைத்து, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியால் நாட்டை மீட்டெடுப்பதை உறுதிசெய்யவும் அதற்காக நாட்டுமக்கள் அனைவரும் கைகோர்த்திருக்கிறார்கள் எனும் செய்தியைக் கொடுப்பதற்காகவுமே. எமது நாட்டின் பொருளாதாரம், விவசாயம், சுகாதாரம் என ஓரிரண்டு துறைகளை வீழ்த்தியிருப்பின் மீட்டெடுப்பது […]
–2023.11.18 – தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி – நுகேகொட–

நாங்கள் நுகேகொடவில் குழுமியிருப்பது ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மகிந்த ராஜபக்ஷ கும்பலுக்கும் இறுதி அறிவித்தலைக் கொடுப்பதற்காகும்: “எமது நாட்டை எங்களுக்கு எஞ்சவைத்து, இறங்கிப்போங்கள்” எனக் கூறுவதற்காகவே: இந்த கொடிய ஆட்சிக்கு முற்றுப்புள்ளிவைத்து, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியால் நாட்டை மீட்டெடுப்பதை உறுதிசெய்யவும் அதற்காக நாட்டுமக்கள் அனைவரும் கைகோர்த்திருக்கிறார்கள் எனும் செய்தியைக் கொடுப்பதற்காகவுமே. எமது நாட்டின் பொருளாதாரம், விவசாயம், சுகாதாரம் என ஓரிரண்டு துறைகளை வீழ்த்தியிருப்பின் மீட்டெடுப்பது இலகுவானது. எனினும் கடந்த காலப்பகுதி பூராவிலும் நாடு பொருளாதாரரீதியாக, அரசியல்ரீதியாக, சமூகரீதியாக மற்றும் கலாசாரரீதியாக அனைத்துப் பிரிவுகளிலும் சிதைக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஒரு நாட்டை கொள்கைகளால் மாத்திரம் மீட்டெடுக்க முடியாது. அதனை மீட்டெடுக்க பல நற்பண்புகள் அவசியமாகின்றன. அவையனைத்துமே பொதிந்திருப்பது தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே என்பது இந்த ஒழுக்கத்தை மதிக்கின்ற போராட்டத்தன்மைமிக்க ஊர்வலத்தினால் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஒரே நோக்கத்துடன் ஒரே போராட்டக் கோஷத்தை எழுப்பி ஒழுக்கமும் அடக்கமும் நிறைந்தவர்களாக தனிப்பட்ட நோக்கங்களுக்காகவன்றி பொதுநோக்கமொன்றுக்காக பேரணியில் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். எம்மிடம் இருப்பது தனித்தனியாக பிரத்தியேக நோக்கங்களன்றி வீழ்த்திய நாட்டைக் கட்டியழுப்புகின்ற பொதுவான ஒரே நோக்கமே என்பதை உறுதிப்படுத்தினோம். வேறு கட்சிகளின் ஊர்வலங்களில் ஒவ்வொருவரினதும் முகங்களைப் போட்டுக்கொண்டு ஒவ்வொருவரை வெற்றியீட்டச் செய்விப்பதற்காக வருகின்ற பிரிவினரே இருக்கிறார்கள். நாங்கள் எவருக்கும் பின்னால் செல்வதற்காக இங்கு வரவில்லை. நாசமாக்கியுள்ள எமது தாய்நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக போராட, அர்ப்பணிக்கத் தயார் என்பதை நிரூபிப்பதற்காகவே. அதற்கு அவசியமான பண்புகள், வலிமை, ஆன்மீகம் இருப்பது தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே.
நாடு எக்கேடுகெட்டாலும் தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு பிரச்சினை கிடையாது. நாட்டுமக்கள் உணவின்றி, மருந்துகளின்றி, கல்விகற்பதற்கான வசதிகளின்றி இருக்கையில் ஆட்சியாளர்கள் பாரியளவிலான ஊழல் – மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்கள். மனிதர்களை மனிதன் நேசிக்கின்ற, தமக்கு தனிப்பட்டமுறையில் எதனையும் எதிர்பார்க்காமல் 75 வருடகாலமாக பாதிப்படையச் செய்வித்துள்ள மக்களை நேசிக்கிறோம் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். இந்த நாட்டைக் கட்டியெழுப்ப அவசியமான அனைத்துவிதமான அர்ப்பணிப்புகளையும் செய்ய நாங்கள் தயார் என்பதை மீண்டும்மீண்டும் உறுதிசெய்துள்ளோம். இங்கே இருப்பது வெறுமனே மண்டைகள் மாத்திரமல்ல: எமது நாட்டில் இருக்கின்ற மிகச்சிறந்த பண்புகளைக்கொண்ட துணிச்சல்மிக்க பல்லாயிரக்கணக்கான மனிதர்களே. சிலகாலம் பொய்யாக பிரிந்துநின்று, நாடகமாடி, தற்போது ஒன்றாகக்கூடி பழைய வரலாற்றின் இறுதிக் காட்சியை அவர்கள் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். எமது நாட்டின் வரலாற்றினை புதிதாக எழுதவல்ல சக்தியே இந்த இடத்தில் குழுமி இருக்கின்றது. நாங்கள் கடந்துவந்த தூரப் பயணத்தைப்போன்றே அடக்கமாக, ஊக்கத்துடன் முன்நோக்கிச் செல்கின்ற பொறுப்பு எம்மிடம் இருக்கின்றது.
இங்கே இன்று குழுமியிருப்பவர்கள் வெற்று மனிதர்கள் அல்லவென்பதாலேயே எதி்ரி தேசிய மக்கள் சக்திக்கு பயந்துபோயுள்ளார்கள்: வெறுமனே வாக்காளர் மாத்திரம் அல்லவென்பதாலேயே. ஒரு தீர்மானத்தை எடுத்தால் கற்பாறையிலும் சாகுபடி செய்யக்கூடிய ஆற்றல் படைத்த மனிதர்களே இங்கு குழுமியிருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்காக்கள், மகிந்த ராஜபக்ஷாக்கள் மக்கள் அபிப்பிராயத்திற்கு அஞ்சுகிறார்கள். தேர்தல்கள் மூலமாக மக்கள் அபிப்பிராயம் வெளிப்படுவதற்கு அஞ்சுகின்ற ரணில் விக்கிரமசிங்காக்கள், மகிந்த ராஜபக்ஷாக்கள் தேர்தலை பிற்போட்டுள்ளார்கள். அதற்கெதிராக உயர்நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்துள்ள வழக்கு பிற்போடப்பட்டு வருகின்றது. அதேவேளையில் அரசாங்கம் தேர்தலுக்கு முன்னராகவே மக்கள் அபிப்பிராயம் வெளிபடுத்தப்படுகின்ற சமூக வலைத்தளங்களை அடக்குவதற்காக சட்டங்களக் கொண்டுவந்துள்ளது. மக்கள் அபிப்பிராயம் வெளிப்படுத்தப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களுக்குப் பயந்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவரத் தயாராகி வருகின்றது. எவருடன் அந்த விளையாட்டை நடாத்தினாலும் மாபெரும் மக்கள் பலத்தைக்கொண்ட ஒழுக்கமும் திடசங்கற்பமும்கொண்ட தேசிய மக்கள் சக்தியுடன் விளையாட இயலாதென ரணிலுக்கும் அவருடைய கையாட்களுக்கும் கூறிவருகிறோம். ரணில் விக்கிரமசிங்கவிற்கு எஞ்சியிருப்பது அதிகபட்சமாக இன்னும் பத்து மாதங்களில் படுக்கையைச் சுருட்டிக்கொண்டு போவது மாத்திரமே என்பதை வலியுறுத்துகிறோம். ராஜபக்ஷாக்களுக்கும் அப்படித்தான். அரசாங்கங்களை மாற்றி மெச் விளையாடிய எதிரிகளின் யுகம் முடிந்துவிட்டது. தற்போது பிறந்துள்ளது மக்களின் யுகமாகும். இந்த யுகத்தை எமது கைகளால் நிர்மாணிப்போம் என்பதைக் கூறுவதற்காகவே நாங்கள் இங்கு குழுமியிருக்கிறோம். அதனை நிறுத்தவல்ல எந்தவொரு சக்தியும் கிடையாது.
பல மாதங்களுக்கு முன்னர் “மகிந்தவுடன் எழுந்திடுவோம்” என ஒன்றைப் போட்டுப் பார்த்தார்கள். சரிவரவில்லை என்பதால் “நாமலுடன் எழுந்திடுவோம்” எனப் போட்டார்கள். தற்போது பசிலுடன் எழ எத்தனிக்கிறார்கள், எனினும் முடியவில்லை. அவர்களின் காலம் கடந்துவிட்டது. இப்போது மக்களின் யுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நாட்டை வீழ்ச்சியுறச் செய்வித்து திசைமாறி பயணித்துக் கொண்டிருந்த மக்களுக்கு தமக்கு என்ன நேர்ந்ததென்பதை திரும்பிப் பார்க்கமாறு ஆட்சியாளர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டது. இவ்விதமாக நிர்ப்பந்திக்கின்ற தருணத்தில் மக்களுக்கு உண்மையை எடுத்துரைத்து பயணப்பாதையைக் காட்ட தேசிய மக்கள் சக்தி இருந்தது. திருடனைப்பார்த்து திருடன் என்று நாட்டு மத்தியில் வெளிபடுத்திய ஒரே தலைவர் அநுர குமார திசாநாயக்க மாத்திரமே. ஒரு காலத்தில் அவர்களின் ஆட்கள் “திருடினாலும் வீதிகளை அமைத்தார்களே” போன்ற அபிப்பிராயங்களை தெரிவித்து வந்தார்கள். இன்று மக்களுக்கு அந்த வீதிகளில் பயணிக்க வாகனங்களுக்கு எரிபொருள் அடிக்கக்கூட முடியாது. இதனால் திருடர்களுக்கு மீண்டும் வாய்ப்பினை அளிக்காதிருக்க மக்கள் திசங்கற்பத்துடன் இருக்கிறார்கள். மக்களை வென்றெடுக்கின்ற போராட்டத்தின் மிகப்பெரிய ஆயுதம் கருத்துக்களே. எம்மிடம் சரியான கருத்துக்கள் இருப்பதைப்போலவே எம்மொவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் கொண்டுள்ள அந்த சரியான கருத்து ஏனைய அனைத்தையும்விட பலம்பொருந்தியது. தேசிய மக்கள் சக்தியின் கருத்துக்களுடன் போராடக்கூடிய எந்தவொரு சக்தியும் இலங்கையில் கிடையாது. ஒழுங்கமைத்தல் கோணத்தில் பார்த்தாலும் தோல்விதான். தனியொரு தலைவனின் பின்னால் செல்கின்ற ஒரு குழுவினரை நாங்கள் அமைக்கவில்லை. அநுர தோழரின் தலைமையில் நாமனைவரும் ஒன்றுசேர்ந்து வெற்றிதோல்வியை தாங்கிக்கொண்டு நம்பிக்கையுடன் பயணிக்கின்ற கூட்டான தலைமைத்துவத்தை அமைத்தோம். இந்த கூட்டுமனப்பாங்கிற்கு வெற்றியீட்ட முடியுமென்பது தற்போது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
அவர்களால் கூட்டாக சாதிக்கக்கூடியது திருடுவதை மாத்திரமே. கருத்தியல்ரீதியாகவும் ஒழுங்கமைத்தல் திறனிலும் நாங்கள் அவர்களை தோற்கடித்துவிட்டோம். அரசியலமைப்பில், சனாதிபதி பதவியில் மற்றும் பாராளுமன்றத்தில் மாத்திரமே அவர்களுக்கு அதிகாரம் இருக்கின்றது. அதிலும் அடுத்த வருடம் அக்டோபர் மாதத்தில் சனாதிபதி தேர்தலில் எமது நாட்டு வரலாற்றில் முதல்த்தடவையாக பொதுமக்கள் தலைவரொருவரை வெற்றியீட்டச் செய்விக்க நாமனைவரும் தயார். சனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதும் உடனடியாக இந்த கொடிய, ஊழல்மிக்க பாராளுமன்றத்தைக் கலைத்து அந்த அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு நாட்டை சரிக்கட்டுவதை தொடங்குவோம். நாட்டை சரிக்கட்டுவதைப்போலவே கள்வர்களைப் பிடிக்கவும் வேண்டியுள்ளது. கள்வர்களுக்கு நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கவும் வேண்டியுள்ளது. எம்மைச்சுற்றி நம்பிக்கைவைத்து ஒன்றுசேர்கின்ற பிரமாண்டமான மக்கள் சக்தி புதியதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதை நிச்சயமாக செய்யும். உழைக்கும் மக்கள், கமக்காரர்கள், மீனவர்கள், கைத்தொழிலதிபர்கள், இளைய தலைமுறையினர் மற்றும் நீதியைக்கோரி கண்ணீர்வடிக்கின்ற பெண்களின் சக்திகள் எம்மைச் சுற்றிக் குழுமி இருக்கின்றன. இந்த நாட்டைக் கட்டியழுப்புகின்ற அறிவும் விருப்பமும் கொண்ட தீத்தொழில் புரிபவரல்லாத அனைத்து தொழிலதிபர்களினதும் ஒன்றிணைதல் இடம்பெறுகின்றது. கடந்த நாட்களில் எம்முடன் புதிதாக சேர்ந்தவர்கள் முப்படையிலிருந்து இளைப்பாறிய அதிகாரிகளை உள்ளிட்ட அனைவருமாவர். அவர்கள் மாபெரும் சக்தியாக திடசங்கற்பத்துடன் ஒன்றுசேர்ந்துள்ளார்கள். மகிந்த ராஜபக்ஷாக்கள், ரணில் விக்கிரமசிங்காக்களுடன் இருக்கின்ற திருட்டுக் கும்பலைத் தவிர புதிய அனைத்துச் சக்திகளும் தேசிய மக்கள் சக்தியை சுற்றிக் குழுமிவிட்டன. இன்றளவில் மக்கள் கருத்து ஆய்வின்படி 50% ஐ விஞ்சிய வெற்றி தேசிய மக்கள் சக்திக்கு கிடைப்பது உறுதியாகியுள்ளது. அரசாங்கம் மீதான விருப்பம் 9% வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றளவில் கத்தரிக்கப்பட்டுள்ள சனநாயக பிரவாகத்தில் எம்மால் வெற்றிபெற முடியும். அது தொடர்பில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. அதனால் தாம் விரும்புகின்ற ஆட்சியை அமைத்துக்கொள்ள மக்கள்கொண்டுள்ள உரிமைமீது கைவைக்க தயாராக வேண்டாமென நாங்கள் ரணிலிடம் கூறுகிறோம். கைவைத்தால் கோட்டாபய சென்ற பாதையிலேயே ரணில் விக்கிரமசிங்கவையும் அனுப்பிவைக்க மக்கள் செயற்படுவார்கள் என்பதில் ஐயம் கிடையாது.
நாங்கள் எவருமே தற்போது பொறுப்புடையவர்களாக அரசியலில் ஈடுபடவேண்டும். கிராமங்களுக்கு புதிய தலைமைகளை அறிமுகஞ்செய்து தேசிய மக்கள் சக்தியை பலப்படுத்த வேண்டும். பௌத்த, கத்தோலிக்க, இஸ்லாம், இந்து சமயங்களைச்சேர்ந்த மக்களை இலங்கையர்கள் என்றவகையில் ஒன்றுசேர்க்க வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய நாமனைவரும் எமது கைகளால் இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவோமென்ற திடசங்கற்பத்துடன் ஒன்றுசேர்வோம். எவராலும் தோற்கடித்திடமுடியாத நாட்டை சரிக்கட்டுகின்ற பிரமாண்டமான மக்கள் பலத்தை நாங்கள் கட்டியெழுப்புவோம். அதற்காக கூட்டுமனப்பான்மை, சகோதரத்துவம், பொதுநலம் போன்ற சிறந்த பண்புகளை ஒன்றாக சேர்த்திடுவோம். கிடைக்கின்ற முதலாவது தருணத்திலேயே ரணில் விக்கிரமசிங்காக்களை மகிந்த ராஜபக்ஷாக்களை விரட்டியடித்து வீழ்த்தப்பட்ட நாட்டை கட்டியழுப்புவதற்காக அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள நாங்கள் தயார். நாட்டின் அனைத்து மக்களும் சந்தோஷமாக வசிக்கின்ற நாளைய தினத்தை எம்மால் உருவாக்க முடியும். அதற்காக போராட, அர்ப்பணிப்புச்செய்ய, உழைத்திட நாங்கள் தயார். எங்கள் கைகளால் எமது நாட்டைக் கட்டியெழுப்புவோம். எமது தலைமுறையினர் நாட்டின் வரலாற்றினை புதிதாக எழுதுவார்கள். இந்த கொடிய ஆட்சிக்குள் வசிக்கின்ற இறுதிப் பரம்பரை நாங்கள்தான். அனைவருக்கும் வெற்றிகிட்டட்டுமாக!
–2023.11.18 – தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி – நுகேகொட– இன்று தெல்கந்த சந்தியில் இருந்து நுகேகொட வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏன் எதிர்ப்பு பேரணியில் வந்தார்கள்? அரசாங்கம் எமது நாட்டின் பெறுமதிமிக்க தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக: வரம்பற்ற வரிச்சுமையை திணித்து மக்கள்மீது சுமத்தியுள்ள அழுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக: மக்களின் அத்தியாவசிய பண்டங்களின் விலையை வரம்பற்ற வகையில் அதிகரித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே. எனினும் இந்த எதிர்ப்பு தெரிவிப்பதால் மாத்திரம் நின்றுவிட மாட்டாது. […]
–2023.11.18 – தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி – நுகேகொட–

இன்று தெல்கந்த சந்தியில் இருந்து நுகேகொட வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏன் எதிர்ப்பு பேரணியில் வந்தார்கள்? அரசாங்கம் எமது நாட்டின் பெறுமதிமிக்க தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக: வரம்பற்ற வரிச்சுமையை திணித்து மக்கள்மீது சுமத்தியுள்ள அழுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக: மக்களின் அத்தியாவசிய பண்டங்களின் விலையை வரம்பற்ற வகையில் அதிகரித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே. எனினும் இந்த எதிர்ப்பு தெரிவிப்பதால் மாத்திரம் நின்றுவிட மாட்டாது. தேசிய மக்கள் சக்தியின் மக்கள் நேயமுள்ள ஆட்சியைக் கட்டியெழுப்புவதற்காக வரிசைப்படுத்துகின்ற எதிர்ப்பு இயக்கமாகும். இந்நாட்டின் ஆட்சியாளர்கள் பொது ஆதனங்களைக் கொள்ளையடிக்கையில் நாட்டின் தேசிய சொத்துக்களை விற்கையில் சனநாயகத்தை சுருட்டிக்கொள்ளும்போது பல தசாப்தங்களாக நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம். தற்போது எதிர்ப்பு ஒரு திட்டவட்டமான திருப்புமுனைக்கு வந்து ஊழல்மிக்க ஆட்சியாளர்களை விரட்டியடிக்கும்வரையும் மக்கள்நேயமுள்ள ஆட்சியொன்றை கட்டியெழுப்புதல் வரையும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. எமது நாட்டின் அரசியல் மிகவும் திட்டவட்டமான தீர்வுக்கட்டமான திருப்புமுனையை நோக்கிப் பயணித்துள்ளது. அடுத்த வருடத்தின் நவெம்பர் மாதமளவில் புதிய அரசாங்கமொன்றை, புதிய ஆட்சியொன்றை நிறுவுவோமென நாங்கள் உங்களிடம் உறுதியாகக் கூறுகிறோம். ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது இந்த கொடிய அழிவுமிக்க ஆட்சியின் இறுதி வரவுசெலவுத் திட்டமாக மாறுவது திண்ணம்.
இந்த வரவுசெலவினை சமர்ப்பித்து தலையணை உறைபோல மறுபக்கம் புரட்டுவதாக ரணில் குறிப்பிட்டார். இதற்கு ஒருசில மாதங்களுக்கு முன்னரும் ரணில் தலையணை உறையை மறுபக்கம் புரட்டியதாகக் கூறினார். இரண்டு தடவைகள் தலையணை உறையை திருப்பிப்போட்டால் இருந்த அதே பக்கமல்லவா தற்போது இருக்கும். நாட்டின் வளங்களை விற்று, கடன்பெற்று வருகைதந்த பயணத்தின் மற்றுமொரு அடியெடுப்பு மாத்திரமே. ஒரு நாட்டினதும் உலக மக்களினதும் அவசியப்பாடுகளுடன் அமைந்தொழுகத்தக்கவகையில் பண்டங்கள் மற்றும் சேவைகள் உற்பத்தியை மாற்றியமைத்து முன்கொண்டுசெல்கின்ற திட்டமொன்று இந்த ஆட்சியாளர்களிடம் கிடையாது. சதாதகாலமும் தேயிலை, இரப்பர், தெங்கு ஏற்றுமதிப் பொருளாதாரம் பற்றியே பேசினார்கள். தேயிலை, இரப்பர், தெங்கின் அளவுக்கே இந்த தலைவர்களும் பழையவர்களே. உலகில் ஏற்படுகின்ற மாற்றங்களுடன் நேரொத்தவகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய உற்பத்திகளை செய்வதில் இந்த ஆட்சியாளர்கள் வெற்றிபெறவில்லை. உலகில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு நேரொத்ததாக அமையத்தக்கவகையில் கல்வியை மாற்றியமைப்பதில் இந்த தலைவர்கள் வெற்றிபெறவில்லை. அதனால் உலகத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டு, பொருளாதாரம் சீரழிந்து, குற்றச்செயல்கள் நிறைந்த நாடொன்று எஞ்சியுள்ளது. பிரஜைகளுக்கு தமது அத்தியாவசிய உணவுகள் மற்றும் ஔடதங்களை உள்ளிட்ட பண்டங்களைப் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நாட்டை உருவாக்கி இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அழிந்துபோன ஒரு நாடும் சமூகமும் எம்மெதிரில் உள்ளது. எழுபத்தைந்து வருட சாபக்கேடு இதுதான். ரணில் விக்கிரமசிங்க வரவுசெலவில் முன்வைப்பது அந்த சாபக்கேட்டின் நீடிப்பினையாகும். ரணில் வரவுசெலவின் முதலாவது அத்தியாயத்திலேயே எழுபத்தைந்து வருடகால சாபக்கேடு பற்றி சொல்லாமல் சொல்லப்படுகின்றது. ரணில்களின் அரசியல் கொள்கைதான் வரவுசெலவுத் திட்டத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது. 75 வருடகால அழிவினைப் பற்றி அவர்கள் இப்போது எம்மிடம் கூறுகிறார்கள். ரணிலிடமிருந்தோ அல்லது மகிந்தவிடமிருந்தோ அல்லது அதே பாணியிலான பின்தொடர்பவர் ஒருவரிமிடருந்தோ நாட்டை மீட்டெடுத்தலை எதிர்பார்க்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தியின் கனவான்கள் கூறுவது “எங்கள் கொள்கையையே ரணில் அமுலாக்கி வருகிறார்” என்பதாகும். நாட்டை முன்நோக்கி நகர்த்தவல்ல உபாய மார்க்கம் தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே இருக்கின்றது.
கால்நடை வளங்கள் சபைக்குச் சொந்தமான விவசாயப் பண்ணைகள் தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் கைகளிலேயே இருக்கின்றன. எமது நாட்டின் பாற்பண்ணைத் தொழிலுக்கு புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டுவந்து மாற்றத்தை ஏற்படுத்துவதைக் கைவிட்டு இருபத்தெட்டாயிரம் ஏக்கர் காணிகளை விற்கத் தயாராகி வருகிறார். 31 விவசாயப் பண்ணைகளைச் சேர்ந்த 28,000 ஏக்கர்களை இந்தியாவின் “அமூல்” கம்பெனிக்கு விற்றுத் தீர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் விற்பனைப் பட்டியலில் இருப்பது நட்டமடைகின்ற நிறுவனங்கள் மாத்திரமல்ல. இலங்கையின் அரச நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய இலாபத்தை ஈட்டுகின்ற நிறுவனங்களும் விற்கப்படுகின்றன. இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் கடந்த வருடத்தில் பன்னிரண்டாயிரத்து நானூற்றி எண்பத்தாறு மில்லியன் இலாபத்தை ஈட்டியது. இந்த வருடத்தின் செத்தெம்பர்வரை நான்காயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது மில்லியன் இலாபம் பெற்றுள்ளது. காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வரி வருமானமும் பங்கிலாபமும் பொது திறைசேரிக்கு கிடைத்துக்கொண்டிருந்தது. இலங்கை வங்கியின் கடந்த வருட இலாபம் முப்பதாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தேழு மில்லியன் ஆகும். மக்கள் வங்கியின் கடந்த வருட இலாபம் இருபத்தோராயிரம் மில்லியன் ஆகும். விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் இவ்வருட செத்தெம்பர் வரையான இலாபம் இருபத்தாறாயிரம் மில்லியன் ஆகும். மக்களுக்குச் சொந்தமான பாரிய இலாபம் ஈட்டுகின்ற இந்’த நிறுவனங்களை விற்க ரணிலுக்கு இடமளிக்கப் போகிறோமா? தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டின் தொழிற்சங்க இயக்கத்துடன் ஒன்றுசேர்ந்து இந்த வளங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு பாதுகாத்துக் கொடுக்க செயலாற்றி வருகின்றது.
இந்நாட்களில் பாராளுமன்றத்தில் ஊழலுக்கெதிரான நாடகமொன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. அதற்குள்ளே இருப்பது ஊழல்பேர்வழிகளுக்கு இடையிலான முரண்பாடாகும். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எங்களுக்கு குறைந்த அளவிலான ஊழல்பேர்வழிகள் அல்லது அதிக அளவிலான ஊழல்பேர்வழிகள் என்ற தெரிவு கிடையாது. கள்வன் கள்வனே, ஊழலை நிறுத்துவதற்கான இடையறாத போராட்டமே தேசிய மக்கள் சக்திக்கு இருக்கிறது. அதனை நாங்கள் புரிந்து வருகிறோம். இந்த நாட்டை படுகுழிக்குள் தள்ளுவதில் தாக்கமேற்படுத்தியது தவறான பொருளாதாரக் கொள்கைகள் மாத்திரமல்ல: மக்களின் செல்வத்தைக் கோடிக்கணக்கில் கொள்ளையடித்தமையும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் – மோசடிகளில் கைதேர்ந்தவர்களான மொட்டுவிடமே ரணில் விக்கிரமசிங்கவின் உயிர் இருக்கின்றது. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியால் மாத்திரமே அதனை முடிவுக்கு கொண்டுவர முடியும்.
அதைப்போலவே ஒட்டுமொத்த அரச பொறியமைப்புமே ஆட்டங்கண்டுள்ளது. இலங்கையில் போதைத்தூள் சம்பந்தமான அனைத்துத் தகவல்களையும் பொலீஸார் அறிந்துள்ளதாக மேல்மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேட்ட பிரதிப் பொலீஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கூறுகிறார். எனினும் எண்ணிக்கையில் ஏறக்குறைய முப்பது நாற்பது வரையுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பற்றி அறியாதிருக்கும் அளவுக்கு பொலீஸார் பச்சிளம் பாலகர்களா? அரச பொறியமைப்பினை அரசியல் பலத்தினால் இருகூறாக்கியதன் விளைவுகள்தான் இவை. கோப் குழுவின் முன்னிலையில் விசாரணைக்காக அழைப்பிக்கப்பட்ட குற்றஞ்சுமத்தப்பட்டவர்களுடன் கோப் குழுவின் தவிசாளர் சைகை மொழியில் குறிப்பால் உணர்த்துகிறார். எந்தவொரு நிறுவனத்திற்கும் தற்போது பொறுப்புக் கூறுதலோ பொறுப்பு வகித்தலோ கிடையாது. கிரிக்கெற் நிறுவனம் தொடர்பில் அமைச்சரவையில் இணக்கப்பாடு கிடையாது. பொலீஸ் மா அதிபரொருவரை நியமிக்க இயலாதுள்ளது. பல சிரேட்ட பிரதிப் பொலீஸ் மா அதிபர்களுக்கு எதிராக வழங்குகள் நிலவுகின்றன. ஒரு நாடு இவ்வாறு பயணிக்க முடியுமா? இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ்பெற்றுக்கொண்டு பயணிக்க முடியுமா? சிதைக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த அரச பொறியமைப்பினையும் மேலிருந்து கீழ்நோக்கி மீண்டும் பலப்படுத்த வேண்டும். பொலீஸின் சுற்றுப்புறங்களிலும் குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன, பாதாள உலகத்தினர் காணிகளை கைப்பற்றிக் கொள்கிறார்கள். எனினும் எந்தவிதமான பொறுப்புக்கூறலும் கிடையாது. சுங்கம், உண்ணாட்டரசிறை திணைக்களம், பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு, சபாநாயகருக்கு எந்தவிதமான பொறுப்புக்கூறலுமின்ற நாட்டை நகர்த்திச்செல்ல முடியுமா?
அரச பொறியமைப்பு மாத்திரமல்ல, அரசியல் பொறியமைப்பும் சிதைவடைந்து இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க சனாதிபதியாக இருந்தபோதிலும் பிறரது அமைச்சரவையால் நாட்டை ஓட்டிச்செல்ல முடியாது. அரசியல் கட்டமைப்பினால் அரச பொறியமைப்பு நெறிப்படுத்தப்படல் வேண்டும். ரணிலிடம் அரசியல் கட்டமைப்பு கிடையாது. ரணில் விக்கிரசிங்க எந்தவொரு குழுவினை நியமித்தாலும் அந்த குழுவின் தலைவர் சாகல. வேறு அரசியல் கட்டமைப்பு கிடையாது. முன்னர் நிலவியது ராஜபக்ஷாக்களின் அரசியல் கட்டமைப்பு. அரச கட்டமைப்பு முறைப்படி நெறிப்படுத்தப்படுவதில்லை என்பது உயர்நீதிமன்றத்திலும்கூட நிரூபணமாகிவிட்டது.
அரச பொறியமைப்பு மாத்திரமல்ல, அரசியல் பொறியமைப்பும் சிதைவடைந்து இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க சனாதிபதியாக இருந்தபோதிலும் பிறரது அமைச்சரவையால் நாட்டை ஓட்டிச்செல்ல முடியாது. அரசியல் கட்டமைப்பினால் அரச பொறியமைப்பு நெறிப்படுத்தப்படல் வேண்டும். ரணிலிடம் அரசியல் கட்டமைப்பு கிடையாது. ரணில் விக்கிரசிங்க எந்தவொரு குழுவினை நியமித்தாலும் அந்த குழுவின் தலைவர் சாகல. வேறு அரசியல் கட்டமைப்பு கிடையாது. முன்னர் நிலவியது ராஜபக்ஷாக்களின் அரசியல் கட்டமைப்பு. அரச கட்டமைப்பு முறைப்படி நெறிப்படுத்தப்படுவதில்லை என்பது உயர்நீதிமன்றத்திலும்கூட நிரூபணமாகிவிட்டது.
ராஜபக்ஷாக்கள் அரசாங்கமொன்றை அமைத்தார்கள். தவறாகவேனும் தலைமைத்துவம் வழங்க அரசியல் கட்டமைப்பொன்று இருந்தது. இன்று ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமொன்றை அமைத்திருக்கின்றபோதிலும் அரசியல் கட்டமைப்பொன்று கிடையாது. அரசாங்கம் எடுக்கின்ற தீர்மானங்கள் தொலைதூரக் கிராமங்கள்வரை பயணிக்கின்ற, தொலைதூரக் கிராமங்களின் அவசியப்பாடுகள் கொழும்பை மையமாகக்கொண்ட கட்டமைப்புவரை பயணிக்கின்ற புதிய அரச கட்டமைப்பினையே எமது நாடு தாபிக்கவேண்டும். தேசிய மக்கள் சக்தி மாத்திரமே அதற்காக செயற்படுகின்ற ஒரே அரசியல் கட்டமைப்பினைக்கொண்ட இயக்கமாகும். முறையான அரசியல் தலைமைத்துவத்தைக்கொண்ட கிராமங்கள் வரை தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய பொறியமைப்பினைக் கட்டியழுப்பியே நாங்கள் அரசாங்கமொன்றை நிறுவுவோம். தேசிய மக்கள் சக்தியை கிராமம்வரை விரிவாக்குவதன் மூலமாக மாத்திரமே சீரழித்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். நாங்கள் கிராம அலுவலர் பிரிவு வரை வட்டாரச் சபைகளை நிறுவுவது வாக்குப் பெட்டியில் வாக்குகளை நிரப்பிக் கொள்வதற்காக மாத்திரமல்ல. கிராமத்தைக் கட்டியெழுப்புதல்வரை அவசியமாகின்ற அரசியல் தலைமைத்துவத்தை வழங்குகின்ற கட்டமைப்பு என்றவகையிலாகும்.
அரச வருமானத்தைப் பெற்றுத்தருகின்ற நான்கு பிரதான தோற்றுவாய்கள் இருக்கின்றன. உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம் என்பவையே அவை. இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் கட்டியெழுப்பப்படவேண்டியது தேர்தல் நடைபெறுகின்ற நாளில் சென்று புள்ளடி இடுவதற்காக மாத்திரம் அல்ல. திறைசேரிக்கு செல்வத்தை அழைப்பிக்கின்ற வினைத்திறன்கொண்ட நான்கு நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள் என்றவகையிலாகும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் நாட்டை சரிக்கட்டக்கூடிய செயற்பாட்டாளர்கள் என்றவகையிலேயே பொறியியலாளர்கள், கல்விமான்கள், சுகாதாரத்துறையில் திறன்கொண்டவர்கள், விவசாய விஞ்ஞானிகளை உள்ளிட்ட குழுவினர் உருவாக்கப்பட வேண்டும். தேசிய மக்கள் சக்தியைத் தவிர வேறு எவருக்கும் மக்கள் முன்னிலையில் சென்று கூறுவதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. 1977 இல் திறந்த பொருளாதாரத்தைக் கொண்டுவந்தோம் என்றுதான் முன்னர் ஐக்கிய தேசிய கட்சி ஊருக்குப் போய் கூறியது. மகிந்த ராஜபக்ஷ சிங்கப்பூரின் “லீ குவான் யூ” எனவும் கோட்டாபய ராஜபக்ஷ மலேசியாவின் “மஹதீர் மொஹமட்” போன்றவர் எனவுமே மகிந்தவின் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள். அந்த இருவரும் சேர்ந்து உருவாக்குகின்ற நாடு எப்படியிருக்குமென எங்களிடம் கேட்டார்கள். மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். அவர்கள் ஆசியாவின் அதிசயத்தைக் கட்டியெழுப்புவதாகக் கூறினார்கள். அப்பா வீடுகளை அமைத்தாரென சஜித் பிரேமதாசவால் இன்று கூறமுடியுமா? தற்போது எவராலும் ஒன்றுமே கூறமுடியாத “பக்காத் திருடர்கள்” என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
உலகத்துடன் முன்நோக்கிப் பயணிக்கின்ற புதிய உரையாடலொன்றை சமூகத்துடன் கட்டியெழுப்ப முடிவதும் அதனை அமுலாக்க முடிவதும் தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே ஆகும். இதற்காக செயலாற்றி வரும்போது ரணில் விக்கிரமசிங்க தேர்தலொன்றைத் தருவாரா எனும் உரையாடலும் ஒருபுறம் இருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க தற்போது இழுத்துக்கொண்டிருப்பது கோட்டாவின் குற்றியையாகும். ரணில் விக்கிரமசிங்கவின் கோட்டா குற்றி அடுத்த வருடத்தின் அக்டோபர் 17 ஆந் திகதிக்கு முன்னர் நடாத்தப்படவேண்டிய சனாதிபதி தேர்தலுடன் முற்றுப்பெறுகின்றது. உரிய வகையில் சனாதிபதி தேர்தல் கிடைக்காதென்பது மக்களுக்கு உறுதியாகின் அடுத்த செப்தெம்பருக்கு முன்னர் ரணிலை வீட்டுக்கு அனுப்புவார்கள். இன்று மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டியடிக்க வீதியில் இறங்கியதுபோல் செயற்படாதிருப்பது சனாதிபதி தேர்தலை இலக்காகக்கொண்டேயாகும். கோட்டாபயவை விரட்டியப்பதன் மூலமாக இடைவெளியை நிரப்பவல்ல மக்கள்நேயமுள்ள அரசாங்கமொன்று இருக்கவில்லை. முண்டம் பாராளுமன்றத்தில் எஞ்சியது. பாராளுன்றத்தினால் ரணிலின் தலை பொருத்தப்பட்டது. விரட்டியடிப்பதால் பயனில்லை என்பதையும் மக்கள் எதி்ர்பார்ப்புகளை ஈடேற்றுகின்ற அரசாங்கமொன்றைக் கட்டியெழுப்புவதன் மூலமாக மாத்திரமே விரட்டியடிக்க வேண்டுமென்பதையும் அந்த அனுபவ வாயிலாக மக்கள் தற்போது அறிவார்கள். ரணில் விக்கிரமசிங்கவைப்போல் புண்ணியத்திற்காக சான்ஸ் எடுப்பதற்காக நாங்கள் போராட்டம் நடத்தமாட்டோம். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை கட்டியெழுப்பும் திட்டத்தைக் கொண்டதாகவே நாங்கள் அரசாங்கத்தை விரட்டியடிப்போம். அதன் மிகவும் முக்கியமான மைல்கல் சனாதிபதி தேர்தலாகும். பாரியளவில் எதிர்பார்ப்புச் சிதைவினை அடைந்துள்ள மக்கள் எம்மீது அபார நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவர்கள் தொடர்பில் மிகவும் பாரதூரமான பொறுப்பே எமக்கு இருக்கின்றது.
பாரம்பரியரீதியாக மகிந்தாக்களை ரணில் விக்கிரமசிங்காக்களை நம்பி செயலாற்றிய பெருந்தொகையான மக்கள் அவர்கள்மீது கொண்டிருந்த நம்பிக்கையைப் பார்க்கிலும் பல்லாயிரம் மடங்கு நம்பிக்கையுடனேயே எம்மை நாடி வருகிறார்கள். இவ்விதம் வருகின்ற மக்களிடம் பிரதானமாக இரண்டு எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. ஒன்று தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை நிறுவுவது பற்றிய நம்பிக்கை. இந்த நாட்டில் மாத்திரமல்ல வெளிநாட்டில் வசிக்கின்ற நல்ல வாழ்க்கையைக் கழிக்கின்ற இலங்கையர்கள்கூட பல்லாயிரக்கணக்கில் எம்மைச்சுற்றிக் குழுமியுள்ளமை ஐக்கிய அமெரிக்காவில் உறுதியாகியது. வருகின்ற முதலாவது சந்தர்ப்பத்திலேயே நாங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றை நிறுவவேண்டும். அதற்காக செயலாற்றவேண்டிய முக்கியமான ஏறக்குறைய பத்து மாதங்கள் பிறந்துள்ளது. இலங்கை அரசியலிலும் இலங்கை வரலாற்றிலும் மிகவும் முக்கியமானதாக அமைகின்ற ஏறக்குறைய பத்து மாத காலப்பகுதிக்கள் பலம்பொருந்தியவகையில் கைவிடாமல் மல்லுக்கட்டவேண்டும். தேசிய மக்கள் சக்தியின் பலம்பொருந்திய அரசாங்கமொன்றை நிறுவவேண்டும். வரிச்சுமைக்கு எதிராக, விற்றுத்தீர்ப்பதற்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக, சனநாயகத்தை சுருட்டுவதற்கு எதிராக, தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவோம். அதற்காக நாங்கள் அரசாங்கமொன்றைக் கட்டியெழுப்புவோம். நாங்கள் அமைக்கின்ற அரசாங்கத்தைச் சுற்றி உலகத்தின் புதிய அறிவினை வரிசைப்படுத்தி, உலகத்துடன் போட்டியிடக்கூடிய பொருளாதாரமொன்றைக் கட்டியழுப்பிட வேண்டும். சமூக நீதி, நேர்மை, வினைத்திறன், ஒவ்வொரு பிரஜையினதும் நன்மதிப்பு உறுதிப்படுத்தப்படுகின்ற ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம். எம்மனைவரதும் தோள்கள்மீது தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியைக் கட்டியழுப்புகின்ற அத்துடன் நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பொறுப்பு சமத்தப்பட்டுள்ளது. நிச்சயமாக வருங்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியொன்றை நிறுவி வீழ்ச்சியடையச் செய்வித்துள்ள நாட்டைக் கட்டியெழுப்புவோம். அதற்காக நாமனைவரும் ஒருவர்போல் செயலாற்றுவோம். உங்கள் அனைவருக்கும் வெற்றிகிட்டட்டும்.