இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன்னர் பொருந்தொட்டச் செய்கைக்காக, வீதிகளை நிர்மாணித்தல் ஆகிய பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தின் வரலாறு பற்றிப் பேசவே நாங்கள் இங்கு குழுமியுள்ளோம். அந்த வரலாறே கவலைக்கிடமானது. அதைப்போலவே இது எமது நாட்டில் இடம்பெற்றுள்ள ஒரு வரலாற்றுத் தவறாகும். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் அந்த தவறினை ஒழித்துக்கட்டுவோம். அதுமாத்திரமல்ல தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் அந்த வரலாற்றுத் தவறினை சரிசெய்வோமென சபதம் செய்கிறோம். இன்று இந்த ஹற்றன் பிரகடனத்திற்கு அவசியமாகின்ற […]
இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன்னர் பொருந்தொட்டச் செய்கைக்காக, வீதிகளை நிர்மாணித்தல் ஆகிய பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தின் வரலாறு பற்றிப் பேசவே நாங்கள் இங்கு குழுமியுள்ளோம். அந்த வரலாறே கவலைக்கிடமானது. அதைப்போலவே இது எமது நாட்டில் இடம்பெற்றுள்ள ஒரு வரலாற்றுத் தவறாகும். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் அந்த தவறினை ஒழித்துக்கட்டுவோம். அதுமாத்திரமல்ல தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் அந்த வரலாற்றுத் தவறினை சரிசெய்வோமென சபதம் செய்கிறோம். இன்று இந்த ஹற்றன் பிரகடனத்திற்கு அவசியமாகின்ற அடிப்படை வழிகாட்டலை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
இந்த பிரகடனத்தைச் செய்வதற்காக ஏன் இந்த ஹற்றன் நகரம் தெரிவுசெய்யப்பட்டது? தமிழ் சமுதாயம் அதிகமாக வசிக்கின்ற மலையகப் பிரதேசம் என்பதாலா? இல்லை. 1964 சிறிமா – சாஸ்திரி உடன்படிக்கைக்குப் பின்னர் இந்தப் பிரதேசத்தில் வசித்த பெருந்தொகையான தமிழ் மக்கள் இந்தியாவிற்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அந்த தமிழ் மக்கள் இந்த ஹற்றன் புகையிரத நிலையத்தில் புகையிரதத்தில் ஏற்றப்பட்டுதான் தலைமன்னாருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள். அந்நாட்களில் இந்த ஹற்றன் நகரமும் புகையிரத நிலையமும் கண்ணீரால் நனைந்தது. வேதனையால் அழுது புலம்பினார்கள். அது பற்றி ஒரு தமிழ் இலக்கியவாதியான தெளிவத்தை ஜோசப் அவருடைய “பாலை” எனும் நூலில் பின்வருமாறு கூறுகிறார். “மீண்டும் தாயகத்திற்கு வருதல்” என ஒருசிலர் குறிப்பிட்டதை மறுத்து இங்குள்ள பெரும்பாலானோர் கூறுவதைப்போல் “பலவந்தமாக” மலையக மக்கள் நாடு கடத்தப்பட்டார்கள் என நான் கூறுகிறேன்: இந்தயாவிற்கு செல்ல மறுத்து ஆங்காங்கே மறைந்திருந்த மக்களை பொலீஸாரை ஈடுபடுத்தி பிடித்து, வாகனங்களில் ஏற்றி, மன்னாருக்கு கொண்டுவந்து இந்தியாவிற்கு அனுப்பிவைத்த விதத்திற்கு வேறுவிதமாக பொருள்விளக்கம் கொடுக்க முடியுமா?” அவர் கூறுகின்ற விதத்தில் அது வேறொன்றுமல்ல, பலவந்தமாக ஏற்றி அனுப்புவதாகும். அவ்வேளையில் 150 வருடங்கள் வரை கழிந்திருந்தது. மூன்று நான்கு தலைமுறைகளால் புதிதாகிவிட்டது. ஆனால் “நீங்கள் இங்கு பிரஜைகள் அல்ல நீங்கள் இந்தியாவிற்குச் செல்லவேண்டும்” என அந்த மக்களுக்கு சட்டத்தினால் கூறப்படுகின்றது. அவர்கள் இந்தியாவுடன் இல்லை. இந்த பரம்பரை இந்தியாவுடன் வாழவில்லை. பொருளாதாரரீதியாக இந்தியாவிற்கு பங்களிப்பு வழங்கவில்லை. பிறந்தது இந்த பெருநிலத்திலேயே. இறந்ததும் இந்த மண்ணிலேயே. புதைக்கப்பட்டதும் வளம்பெறவைத்ததும் இந்த மண்ணிலேயே. இந்த நாட்டின் பொருளாதரத்திற்கே பங்களித்தார்கள். ஆனால் சட்டம் கூறியது, நீங்கள் இந்தியாவிற்குச் செல்லவேண்டுமென. அதோ அந்த ஹற்றன் நகரத்தில் இருந்துதான் நாங்கள் இன்று பேசுகிறோம்.
வரலாற்றில் இருந்த பேரவலம் அது மாத்திரமா? இல்லை. பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் எம்மைப்போல் இந்தியாவையும் குடியேற்ற நாட்டாக்கி் இருந்தார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். 1800 – 1900 யுகம் என்பது இந்திய கமக்காரர்களின் அறுவடையை அபகரித்தமையாலும் கடுமையான வறட்சிநிலை காரணமாகவும் பாரிய பஞ்சம் ஏற்பட்ட யுகமாகும். 1800 – 1900 யுகத்தில் பஞ்சம் காரணமாக இரண்டுகோடியே பதினான்கு இலட்சம் பேர் இறந்ததாக ஒருசில அறிக்கைகள் கூறுகின்றன. அது உங்களின் மூதாதையர்களே. அதுமாத்திரமல்ல பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் இலங்கையில் போன்றே மிகையான வரி விதிப்பினை மேற்கொண்டார்கள். அதனால் மக்கள்மீது பாரிய அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. வரி செலுத்தாமை காரணமாக பாரிய சித்திரவதைகளுக்கு இலக்காகினார்கள். மேற்படி சித்திரவதைகள் பற்றி விசாரிப்பதற்காக மெட்ராஸில் சித்திரவதை ஆணைக்குழுவொன்றை நியமிக்கவேண்டியநிலை பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு ஏற்பட்டது. அந்த அறிக்கைகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ” ஜுன் மாதத்தில் இருந்து ஆகஸ்ற் மாதம்வரை வரித்தொகையைச் செலுத்துமாறு வருமானக் கட்டுப்பாட்டு அதிகாரி எம்மைக் கடுமையாக நிர்ப்பந்தித்தார். இந்த விடயத்தை அடிப்படையாகக்கொண்டு அவர்கள் என்னையும் மேலும் சிலரையும் பிடித்துக்கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் நிறுத்தி வைத்தார்கள். எமது முதுகினை வளைத்து வைத்து வெப்பமடைந்த கற்பாறையை முதுகின்மீது வைத்து முடிச்சுப்போட்டு நாள்முழுவதிலும் சூடான மணல்மீது இருக்க வைத்தார்கள். தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் இவ்வாறு சித்திரவதை புரிந்தார்கள்…” அது இந்தியாவில் அல்லற்பட்ட மூதாதையர்கள்.
அந்த சுற்றாடல் இதைவிட நல்லதோர் இடத்தை தெரிவுசெய்யுமாறு அவர்களை நிர்ப்பந்தித்தது. மறுபுறத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் அவர்களில் பெரும்பாலானோரை பல்வேறு நாடுகளுக்கு உழைப்பாளிகளாக கொண்டுசென்றார்கள். இவ்விதமாக இலங்கையில் வீதிகளை நிர்மாணிக்கவும், கோப்பிச் செய்கையை ஆரம்பிக்கவும் பெருந்தொகையான உழைப்பாளிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர். தனுஷ்கோடி துறைமுகத்தில் இவர்களை கப்பலேற்றி மன்னார் துறைமுகத்தில் தரையிறக்கினார்கள். கடலில் புயலில் சிக்குண்டு பெருந்தொகையானோர் இறந்துவிட்டதாக ஒருசில அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இறந்தவர்களின் சடலங்கள் கடலிலேயே வீசியெறியப்பட்டன. அவர்கள் மன்னாரிலிருந்து, மதவாச்சி, தம்புள்ள. மாத்தளை வரை நடந்தே வந்தார்கள். பின்னர் மலைமுகடுகளில் ஏறி இந்த பிரதேசத்திற்கு வந்தார்கள். இக்காலத்தில் இலங்கையில் 3000 அடிகளுக்கு மேற்பட்ட எந்தவொரு பிரதேசமும் குடியிருப்பு மயமாக்கப்பட்டிருக்கவில்லை. மனித வசிப்பிடங்கள் நிலவவில்லை. டயகம, ஹற்றன், தலவாகலை, றாகல இவையனைத்துமே 3000 அடிகளுக்கு மேற்பட்ட உயரத்திலேயே அமைந்திருந்தன. பாதைகள், வீதிகள் இருக்கவில்லை. இந்த மக்கள் கால்நடையாகவெ காடுகள் ஊடாக இப்பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்டார்கள். பணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டதும் சற்று சிறிய உணவையும், தேங்காய் சிரட்டையில் தண்ணீரையும் கொடுத்து இவர்களை அழைத்து வந்தார்கள். தலைமன்னார் தொடக்கம் இப்பிரதேசம்வரை காடுகளை ஊடறுத்து நடந்து வருகையில் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி அந்த பயணத்தின்போது 15% மடிந்தனர். இவர்களின் சடலங்கள் புதையுண்டு கிடப்பது இந்த மலையகப் பிரதேசத்தில் மாத்திரமல்ல: தொலைதூர தலைமன்னார், மதவாச்சி, தம்புள்ள, மாத்தளை வரை அவர்களின் சடலங்கள் பரந்து புதையுண்டு இருக்கின்றன. அவர்கள் தோட்டச் செய்கைக்காக சாதகமான எதிர்பார்ப்புடன் வந்தார்கள். அவர்களின் நாட்டார் பாடல்கள் ஊடாக அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
“குனி்ஞ்சி குனிஞ்சி ஏறிய மலை
கோப்பிச்செடி நாட்டிய மலை
அண்ணன்மார் சறுக்கி விழுந்த மலை
அதோ தெரிகிறது“
அதன் மூலமாக கூறப்படுவது என்ன? இந்த மலைகள் பூராவிலும் அவர்கள் மடிந்துள்ளார்கள் என்பதல்லவா. இந்த சிரமமான பயிர்வளர்ப்பில் அந்த மனிதர்கள் அனுபவித்த வாழ்க்கை என்ன? அது பற்றி ஒரு நாட்டார் பாடலில் பின்வருமாறு கூறப்படுகின்றது.
“கோணக்கோண மலையேறி
கோப்பிப்பழம் பறிக்கையில
ஒருபழம் தப்பிச்சின்னு
ஒதச்சான் ஐயா சின்ன தொர“
இந்த பெருந்தோட்டச் செய்கை மிகவும் கடினமானதாக அமைந்தது. வாழ்க்கை என்றால் என்னவென அறிந்திராத மக்கள், சுவையான உணவுவேளையொன்று பற்றிய உணர்வற்ற மக்கள், வீடு பற்றிய அனுபவமற்ற மக்கள், வாழ்க்கையில் எந்தவிதமான களியாட்டத்தையும் கண்டிராத மக்கள், மகிழ்ச்சியுணர்வு பெற்றராத மக்கள் இந்த மலைகளின் மத்தியில் செத்துமடிந்தார்கள். கோப்பிச் செய்கை சீரழிந்த பின்னர் அவர்கள் தேயிலைச் செய்கைக்கு இசைவாக்கம் அடைந்தார்கள். அங்கே வாழ்க்கை சாதகமானதாக அமைந்ததா? அன்று நாட்டார் பாடலாசிரியர் பின்வருமாறு கூறினார்.
“கொங்கணி போட்டு பழக்கமில்ல – நாங்க
கொழுந்தெடுத்தும் பழக்கமில்ல
சில்லறை கங்காணி சேவகமே – எங்களை
சீமைக்கு அனுப்புங்க சாமிசாமி“
இந்த மக்களில் எவருமே விருப்பத்துடன், மகிழ்ச்சியுடன், எதிர்பார்ப்புடன் இந்த தாய்மண்ணில் வாழவில்லை. பெருமூச்சு விட்டுக்கொண்டு நாள்தோறும் வேதனையின் அடித்தளத்தில் அமிழ்ந்து சீவித்தவர்களாவர்.
பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் கீழ் 125 வருடங்கள் நிகழ்கால ஆட்சியாளர்களின்கீழ் 75 வருடங்கள் என்ற வகையில் இந்த 200 வருடங்கள் நான்கிற்க மேற்பட்ட தலைமுறைக்கு வழங்கியுள்ள தலைவிதி என்ன? 1948 இல் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் சென்றபின்னர் சுதேச குழுவொன்று ஆட்சியைக் கைகளில் எடுத்துக்கொண்டது. 1949 இல் பிரசாவுரிமை சட்டம் கொண்டுவரப்படுகின்றது. பிரசாவுரிமை பெறவேண்டுமாயின் 1949 நவெம்பர் 15 இற்கு முன்னர் பிறந்திருக்கவேண்டுமென பிரசாவுரிமை சட்டத்தில் பணிப்புரை விடுக்கப்படுகின்றது. இரண்டு தலைமுறைகளாக இங்கு வசித்ததாக எழுத்திலான சான்று இருக்கவேண்டும். பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லாத, முகவரியொன்று இல்லாத, பதிவேடொன்றில் பெயர் குறிப்பிடப்படாத பிரசைகள் தாம் இரண்டு தலைமுறைகளாக இங்கு வசித்ததாக கொடுப்பதற்குள்ள சான்றிதழ் என்ன? ஏழு இலட்சம் பேருக்கு பிரசாவுரிமை கிடையாது, இந்த நாட்டில் வசிக்கிறார்கள், பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்கிறார்கள், இந்த நாட்டில் இறக்கிறார்கள், எனினும் நாட்டின் பிரசைகள் அல்ல. மிகவும் சிறிய குழுவினருக்கு மாத்திரம் பிரசாவுரிமை வழங்கப்பட்டது. வர்த்தகங்களால் செல்வத்தை திரட்டிய, தோட்டங்களிலிருந்து செல்வத்தைக் குவித்துக்கொண்ட, பெருந்தொகையான பயிர்நிலங்களை சொந்தமாகக் கொண்டிருந்த மிகவும் சிறிய குழுவினருக்கு பிரசாவுரிமை கிடைத்தாலும் ஏழு இலட்சத்திற்கு மேற்பட்ட தாழ்ந்த வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கு பிரசாவுரிமை கிடைக்கவில்லை. ஆளும் வர்க்கத்தினர் மீண்டும்மீண்டும் அவர்களாகவே பிரசாவுரிமையை ஒழித்து, மீண்டும்மீண்டும் தேர்தலின்போது “நாங்கள் பிரசாவுரிமையைக் கொடுப்போம்” என்ற அரசியல் வாக்குறுதியை வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக ஏலவிற்பனை செய்தார்கள். மக்கள் என்ற வகையில் இவர்கள் 2003 இல் பிரசாவுரிமையை நிறைவுசெய்கிறார்கள். 1949 இல் இருந்து 54 வருடங்களில் ஒரு தலைமுறைக்கு மேலானவர்கள் பிரசாவுரிமையின்றி இந்நாட்டில் இறந்தார்கள். முழுமையான பிரசாவுரிமை கிடைத்து இன்றளவில் 20 வருடங்கள் கழிந்துள்ளன. அவர்களுக்கு உத்தியோகபூர்வ ஆவணங்களில் பிரசாவுரிமை கிடைத்திருந்தாலும் இலங்கையின் பிரசைக்கு இணையான உரிமைகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை
மலையகத் தமிழ் மக்களின் தேவை கௌரவமான மனித சமுதாயமாக வளர்வதாகும். தேசிய மக்கள் சக்தி என்றவகையில் நாங்கள் உங்களை நோக்குவது இரக்கத்தை வேண்டிநிற்கின்ற மக்களாக அல்ல. உங்களுக்குத் தேவை இந்நாட்டில் கௌரவமான பிரஜைகளாக வசிப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதாகும். அதற்கான நியாயமான உரிமை உங்களுக்கு உண்டு.
உலகம் படிப்படியாக ஒன்றாக இணைந்து வந்தது. தொழில்நுட்பத்தினால், சந்தையால், தொடர்பாடலால், போக்குவரத்தினால் உலகில் ஒருங்கிணைப்புகள் கட்டியெழுப்பப்பட்டு வந்தது. உலகின் எந்தவொரு நாடும் அந்நாடு உலகச் சந்தையில் எந்தளவு பங்கினைக் கைப்பற்றியுள்ளதெனும் காரணியின்பேரிலேயே தங்கியிருக்கின்றது. கடந்த வருடத்தில் எண்ணெய், கேஸ், மின்சாரம் கிடைக்காமல் போயிற்று. மக்கள் வாழ்க்கையே செயலற்றுப் போனது. நாடு சீர்குலைந்தது. அதற்கான பிரதானமான காரணம் யாது? எமக்கு அவசியமான வெளிநாட்டுப் பணம் டொலர் அளவு எமது ஒதுக்கங்களில் இல்லாமல் போனமையாகும். நிகழ்கால உலகில் உலக சந்தையில் நியாயமான பங்கினை கையகப்படுத்திக்கொள்ள வேண்மென ஒவ்வொரு நாடும் நிர்ப்பந்திக்கப்படுகின்றது. பல தசாப்தங்காளக உலக சந்தையில் எமது பெரிய பங்கு என்ன? சேவைப் பங்களிப்பு. இன்றும் வருடமொன்றிற்கு 130 கோடி டொலர் சேவைகளை வழங்குவதன் மூலமாகவே பெறப்படுகின்றது. கொழும்பிற்குச் சென்றால் பாரிய கட்டிடங்களை நாங்கள் காண்கிறோம். அவற்றுக்காக பெரும்பாலான பண்டங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. நீங்கள் இங்கிருந்து அங்கு அனுப்பிவைத்து ஈட்டுகின்ற டொலர்களில் நாடு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இங்கிருந்து அங்கு அனுப்பிவைத்து ஈட்டுகின்ற டொலர்களைக்கெண்டு நாடு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இங்கு தேயிலை வளர்த்து ஈட்டுகின்ற டொலர்களிலிருந்து பாலங்கள் அமைத்திருக்கிறார்கள், புகையிரத பெட்டிகளைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதாவது புகையிரதத்திலும், பஸ் வண்டியிலும், பெரிய ஜீப் வண்டியிலும், பெரிய கட்டிடத்திலும், பாரிய பாலங்களுக்குள்ளேயும் உங்களின் உழைப்பு மறைந்திருக்கின்றது. அதற்கான நியாயமான பெறுமதியை செலுத்தவேண்டுமல்லவா?
எமது நாட்டில் கடந்த பல தசாப்தங்களாக ஏதேனும்வகையிலான முன்னேற்றம் காணப்பட்டிருப்பின் அதற்க பிரதான காரணமாக அமைவது நீங்கள் சிந்துகின்ற உழைப்புதான். பொருளாதாரம் மாற்றமடைந்தது. உலகம் மாற்றமடைந்தது. நீண்டகாலமாக நீங்கள் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்தீர்கள். ஆனால் உங்களுக்கு என்ன நேர்ந்துள்ளது? ஏறக்குறைய 150 வருடங்கள் பழமையான லயன் அறையில் நீங்கள் இன்றும் இன்னமும் வசிக்கிறீர்கள். இது நீதியாகுமா? 150 வருடங்களுக்கு மேலாக பழைய வீடு என்றால் என்ன? தோழர் பிரதீப் வசிக்கின்ற ஊரில்தான் கஹவத்தையிலேயே இலங்கையின் மிகப்பெரிய லயன் வரிசை இருக்கின்றது. அவை 150 வருடங்கள் பழையவையென அவர் கூறினார். உங்களை மனித சமுதாயமாக மதிக்கின்ற, அந்த பெறுமதி கிடைக்கின்ற புதிய ஆட்சியொன்று எமக்குத் தேவையில்லையா? நாங்கள் 200 வருடங்களுக்குப் பின்னராவது இந்த மாற்றத்தை செய்யவேண்டும்.
உங்களுடைய துன்பங்களும் வேதனைகளும் உங்கள் கையில் தாலாட்டுகின்ற பிள்ளைக்கு, வயிற்றில் அசைகின்ற குழந்தைக்கு உரித்தாகாத ஒரு தேசத்தை நாங்கள் உருவாக்குவோம். 1823 இல் இருந்து இங்கு கொண்டுவரப்பட்ட உழைப்பாளிகளில் இரண்டு இலட்சம் பேர் மலேரியா பெருந்தொற்றினால், அரவம் தீண்டியதால், கொலறா பெருந்தொற்றினால், அதைப்போலவே மகப்பேற்றின்போது இறந்துள்ளார்கள். வேதனையால் நசுக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொருளாதாரரீதியாக மாத்திரமல்ல சமூக மதிப்பையும் இழந்த மக்களுக்கு நல்ல வாழ்க்கையையும் மதிப்புமிக்க வாழ்க்கையையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். மக்களில் நூற்றுக்கு 63 வீதத்தினருக்கு இந்த நாட்டில் ஓரங்குல நிலம்கூட கிடையாது. இருக்க வீடு கிடையாது. தோட்டத்துடன் முடிச்சுப்போட்ட வீடொன்று இருக்கிறது. தொழிலில் இருந்து நீங்குவதாயின், வேறு தொழிலொன்றைத் தெரிவுசெய்வதாயின் லயன் அறையை விட்டுச்செல்லவேண்டும். அவர் ஒரு சுதந்திரமான பிரசையல்ல.
நீங்கள் ஒரு நல்ல வீட்டினை எதிர்பார்த்து எவ்வளவு காலமாக அரசாங்கங்களை உருவாக்கினீர்கள்? நான் ரொசிட்டா பண்ணையில் என்.எல்.டீ.பீ. விற்பனை நிலையமொன்றுக்குச் சென்றேன். அங்கு ஒரு தமிழ் சகோதரர் ” நாங்கள் பண்ணையில் வேலை செய்கிறோம். வேலை செய்கின்ற காலத்தில் எமக்குச் சிறிய அறையொன்றைத் தந்திருக்கிறார்கள். தொழிலை இழந்தால், இளைப்பாறிச் சென்றால் அறையிலிருந்து பிள்ளைகளும் மனைவியும் நானும் எங்கே போவது?” எனக் கேட்கிறார். இந்த வீடு, காணி, வீடற்ற மலையக மக்களுக்கு நாங்கள் மிகவும் தெளிவாக வாக்குறுதியையும் உத்தரவாதத்தையும் அளிக்கின்றோம். உங்களுக்கான காணியையும் வீட்டையும் உறுதிசெய்கின்ற ஆட்சி தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாகும்.
உங்களுக்கு வருமான வழியொன்று இருக்கிறதா? ஒரு நாளுக்கு 1000 ரூபா சம்பளம் பெறுவதற்காக எத்தனை நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட நேரிட்டது? சாலைமறியலில் ஈடுபட, பேரணியில்செல்ல நேரிட்டது? ரூபா 1000 போராட்டத்தை தொடங்கியவேளையில் ஒரு இறாத்தல் பாண் ரூபா 40 ஆகும். 1000 ரூபா வழங்க தீர்மானிக்கும் போது பாண் ரூபா 160. இன்று போதுமானதா? பிரஜைக்கு தான் ஈடுபடுகின்ற தொழிலில் இருந்து உணவை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால், உடையை கொள்வனவுசெய்ய முடியாவிட்டால், மருந்து வாங்க முடியாவிட்டால், பிள்ளைக்கு கல்வி புகட்ட முடியாவிட்டால் அது ஒரு தொழிலா? அதனால் தோட்டக் கம்பெனிக்காரர்களிடமிருந்து “உடலில் இருந்து ஓர் எலும்பினை எடுப்பதுபோல்தான்” தொழிலாளருக்கு ரூபா 1000 வழங்க இணங்குவது. ரூபா 1000 செலுத்தமுடியாத கைத்தொழில் எதற்காக? கைத்தொழிலின் பிரச்சினையல்ல நிலவுவது. அவர்கள் கோரிநிற்பது இந்த தோட்டத்தில் வசிக்கின்ற மக்கள் வழங்குகின்ற வருமானத்தில் இருந்து சேகரித்து பிழிந்துகொண்டிருக்கின்ற செல்வத்திலிருந்து விரல் இடுக்களிலிருந்து கீழே வடிகின்ற ஒரு சொட்டினை மாத்திரமே வேண்டிநிற்கிறார்கள். உங்களுக்கு வாழ்க்கையைப் பேணிவர அவசியமான நியாயமான வருமான வழியைக்கொண்ட பொருளாதாரத்தை அமைத்துக்கொடுப்பதாக நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். இன்றும் தோட்டத்தில் வேலைசெய்கின்ற மக்களுக்கு வெளியில் வருவதற்கான வாய்ப்பு நிலவுவது கல்வியால் மாத்திரமே. சகோதரி போல்ராஜ் இலவசக் கல்விச் சட்டத்தினால் இலவசக் கல்வி கிடைத்தாலும் நீங்கள் இந்த நாட்டில் வசித்தாலும் பிரஜையாக இல்லாமை காரணமாக அதன் நியாயமான பெறுபேறுகள் கிடைக்கவில்லையென சுட்டிக் காட்டினார். இன்றும் அப்படித்தான். இரத்தினபுரி மாவட்டத்தில் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பிரிவில் உயர்தரத்தை தமிழில் கற்பதற்கான ஒரு பாடசாலைகூட கிடையாது. இந்த மத்திய மலைநாட்டில் ஓரளவுக்கு இருந்தாலும் கீழ்நோக்கிச் செல்லும்போது கிடையவே கிடையாது. கல்வியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகள் தலைமுறையினரே இங்கு வசிக்கிறார்கள்.
இந்த மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றியமைத்திட வேண்டுமாயின் பத்தகமொன்றை வாசிக்கின்ற, கவிதையை இரசிக்கின்ற, தமழ்நாட்டுத் திரைப்படத்திலிருந்து விடுபட்டு இலங்கை சினிமா பற்றிச் சிந்திக்கின்ற புதிய தலைமுறையொன்றை நாங்கள் உருவாக்க வேண்டுமென நாம் நினைக்கிறோம். மலையக மக்களின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொள்வதற்கான நியாயமான அணுகுமுறையை உறுதிப்படுத்துவதன் மூலமாக மாத்திரமே அந்த புதிய தலைமுறையினரை உருவாக்க முடியும். அது தீர்க்கப்படவேண்டிய பிரச்சினையாகும். அதைப்போலவே பொதுவில் எடுத்துக்கொண்டால் எமது நாட்டில் பெண்கள் கடுமையாக இன்னல்களுக்கு இலக்காகி உள்ளார்கள். அதிலும் இந்த மலையகப் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்ட பெண்களாக விளங்குவது எமக்குப் புலனாகின்றது. மெலிந்த உடல்கள், பிளவுபட்ட கூந்தல், உலர்ந்த சருமத்துடனான உடல், பாரிய இன்னல்களுக்கும் விரக்திக்கும் இலக்காகிய மகள்மார் இங்கே வசிக்கிறார்கள். அவள் வாழ்க்கை என்றால் என்னவென்பதை அறியாதவள். தோட்டத்தில் பிறக்கிறாள். தோட்டத்தில் உழைக்கிறாள். தோட்டத்திலேயே இறக்கிறாள். தோட்டத்திற்கு வெளியில் உள்ள உலகம் பற்றியோ, சமூகம் பற்றியோ, வாழ்க்கை பற்றியோ அனுபவமின்றி இறக்கிறாள். அவளுக்கு நியாயமானதும் நீதியானதுமான வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
நான் உங்களிடம் கேட்கிறேன், உங்களுக்கு இருப்பது பொருளாதாரப் பிரச்சினை மாத்திரமா? உங்களுக்கு சமூக அங்கீகாரம் இருக்கிறதா? அத்தகைய அங்கீகாரம் கிடையாது. கொழும்பு வீடொன்றில் வேலைசெய்ய எவரும் இல்லாவிட்டால் ஹற்றனில் இருந்து தலவாகலையில் இருந்து இளம்பெண்ணைத் தேடுவார்கள். கொழும்பு நகரத்தை உள்ளிட்ட பாரிய நகரங்களில் ஹோட்டல்களின் பீங்கான் கழுவுபவர்கள் தோட்டங்களிலிருந்து வந்த இளைஞர்களாவர். தமக்கு இணையானவர்களாக அவர்களை நோக்குவது கிடையாது. அவர்களுக்கு தாழ்வான குறைந்த சிறப்புரிமை பெறுகின்ற மக்கட் பிரிவினரை பார்ப்பதுபோல்தான் பார்க்கிறார்கள். வீடுகளில் சமைக்க, கூட்டிச் சுத்தஞ்செய்ய, பபாவின் கக்கா கழுவ, ஹோட்டல் பீங்கான் கழுவ, கழிப்பறைத் தொகுதிகளைக் கழுவ இதற்காகத்தான் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவை தொழில்கள்தான். அப்படியில்லாத உலகமொன்ற நிலவமாட்டாது. ஆனால் அவற்றை தாழ்ந்தவையாகக் கருதி அவற்றின் மரபுரிமையாளர்களாக மலையக மக்களை மாற்றியிருப்பதே இங்குள்ள பிரச்சினையாகும். உங்களுக்கு நல்ல நியாயமான வாழ்க்கை கிடைக்கவேண்டும். பொருளாதாரரீதியாக மாத்திரமன்றி சமூக நன்மதிப்புடன் சமூக அங்கீகாரத்தைக்கொண்ட வாழ்க்கை கிடைக்கவேண்டும்
நீண்டகாலமாக அந்த பிரதேசங்களில் நிலவுவது வாக்குகள் அல்ல, வாக்கு வங்கிகளே. மகிந்த ராஜபக்ஷவிற்கு மலையகத்தில் வாக்குகள் கிடையாது. ஆனால் தொண்டமானின் வாக்கு வங்கியொன்ற இருக்கின்றது. எத்தனை அமைச்சுப் பதவிகள்? ஆளுனர் பதவி கிடைக்குமா? வாக்கு வங்கியை அடகு வைக்கிறார்கள். பிரசையின் தனித்தனி வாக்கிற்கு கிடைக்கின்ற அதிகாரத்தை வாக்கு வங்கியில் வைப்புச்செய்து அந்த இரும்புப்பெட்டியின் திறவுகோலை தொண்டமானின் திகாம்பரத்தின் கையில் வைத்துக்கொண்டு இங்கமிங்கும் இரும்புப்பெட்டியைத் திறக்கிறார்கள். இதுவரை கட்டியெழுப்பப்பட்ட அரசாங்கங்களுக்கு தனித்தனி ஆட்களுடன் பேரம்பேசுகின்ற தேவை நிலவவில்லை. தனித்தனி வாக்குகளைப் பெற்றுக்கொள்ள பிரயத்தனம் செய்யவேண்டியதில்லை. வாக்குகள் அனைத்துமே வாக்கு வங்கியின் இரும்புப் பெட்டியில் இருக்கின்றன. இரும்புப் பெட்டியின் கதவினைத்திறந்து தொண்டமான்கள் அவற்றை அங்குமிங்கும் பகிர்ந்தளிக்கிறார்கள். பேரம்பேசும் சக்தி இருந்தது வாக்காளரின் கையிலல்ல: வாக்கு வங்கி உரிமையாளரின் கையிலாகும். அரசாங்கம் டீல்பண்ணவது, பேரம்பேசுவது, அரசாங்கங்கள் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்வது. பிரச்சினைகளைத் தீர்ப்பது இரும்புப்பெட்டிச் சொந்தக்காரருடனேயே. இரும்புப்பெட்டிச் சொந்தக்காரரின் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. உங்கள் பிள்ளைக்கு தோட்டத்தில் பாடசாலை இல்லாவிட்டாலும் இரும்புப்பெட்டியின் சொந்தக்காரரின் பிள்ளை இங்கிலாந்தில் இருந்து வந்துதான் இரும்புப்பெட்டியின் திறவுகோலை பொறுப்பேற்றது. தந்தை இறந்த பின்னர் இரும்புப்பெட்டியின் திறவுகோல் மகனுக்கு கிடைத்தது. ஒருவர் போதாது என்பதால் இந்தியாவிலிருந்து ஒருவரை திறவுகோலை பொறுப்பேற்பதற்காக கொண்டுவந்தார்கள். அவர் தற்போது கிழக்கின் ஆளுனர். இந்த ஆட்சியாளர்கள் யாருடைய பிரச்சினையைத் தீர்த்துவைத்துள்ளார்கள்? தோட்டத்தில் வேலைசெய்கின்ற பிரஜையின் பிரச்சினையை அல்ல. வாக்காளரின் பிரச்சினையை அல்ல. அவர்கள் இரும்புப்பெட்டிச் சொந்தக்காரரின் பி்ரச்சியைத்தான் தீர்த்து வைத்துள்ளார்கள். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் உருவாக்குவது உங்களின் வாக்குகளை சேகரித்த வாக்கு வங்கியொன்றை அல்ல. ஒவ்வொரு பிரஜைக்கும் தமது வாக்கின் உரிமையை சுயாதீனமாக பாவிக்கக்கூடிய உளப்பாங்கினைக்கொண்ட புதிய மக்கள் உரையாடல் களமொன்றை நாங்கள் உருவாக்குவோம்.
நாட்டடின் ஆட்சியாளர்களை தெற்கின் மக்கள் வீதியில் இறங்கி விரட்டியடித்தார்கள். தெற்கின் ஆட்சியாளர்கள் மக்களுக்குப் பயந்தவர்கள். மக்கள் மத்திக்கு வரமாட்டார்கள். மக்களை தவிர்த்துச்செல்ல பதில் தேடுகிறார்கள். உள்ளுரதிகாசபைகள் தேர்தலை பிற்போடுகிறார்கள். மேலும் தேர்தல்களை பிற்போட திட்டம்தீட்டி வருகிறார்கள். கொழும்பு, தென்பகுதி, வடமத்தி அப்சற்தான் என அவர்கள் கதைக்கிறார்கள். ஆனால் நுவரெலியாவில் தொண்டமான் இருக்கிறார் அல்லவா. திகாம்பரம் இருக்கிறார் அல்லவா. அவர்கள் காப்பாற்றித் தருவார்கள். ஆட்சியார்கள் அவர்களின் மக்களுக்கு எதிரான ஆட்சியை, அழிவுமிக்க ஆட்சியை முன்னெடுத்துச்செல்ல வேண்டுமாயின் இந்த மலையக மக்களின் ஒத்துழைப்பு கிடைக்குமென நினைக்கிறார்கள். அது இறந்தகாலத்தில் உண்மை. அதனை நிகழ்காலத்தில் பொய்யாக மாற்றவேண்டும். வாக்கு இரும்புப்பெட்டிச் சொந்தக்காரரின் அரசியலுக்குப் பதிலாக பொதுமக்களின் அரசியலை மலையக மக்கள் மத்தியில் மீளக்கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.
பெருந்தொகையான இளைஞர் சமுதாயம் தற்போது தேசிய மக்கள் சக்தியைச் சுற்றிக் குழுமி வருகின்றது. இந்த நுவரெலியாவின் பலம்பொருந்திய பாராளுமன்ற உறுப்பினரொருவர் “தோட்டத்தில் வேலைசெய்பவர்கள் இன்னமும் தலைவர்களுக்கு கட்டுப்பட்டவர்களே. தோட்டத்திருந்து வெளியில் வந்துள்ள இளைஞர் தலைமுறையினர் உங்களுடனேயே, என்பி.பி. அமைப்புடன்தான் இருக்கிறார்கள்” என பாராளுமன்றத்தில் கூறினார். தோட்டத்தின் நுகத்தடியில் இருந்து விடுபட்ட புறா இன்று சுதந்திரமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டது. அதனால் மலையக மக்கள் மத்தியில் புதிய இளைஞர்கள், அவர்களின் எதிர்பார்ப்புகள் வளர்ந்துகொண்டிருக்கின்றன. மரபுரீதியான அல்லற்படுத்திய ஆட்சிக் குழுக்களுக்குப் பதிலாக பொது மக்களின் தேவைகளுடன் பின்னிப்பிணைந்த புதிய இளைஞர் தலைமுறையொன்று அந்த மலையக மக்கள் மத்தியில் இருந்து முன்நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். மென்மேலும் முன்னணிக்கு வரவேண்டியுள்ளது. 200 வருடங்களாக நேர்ந்துள்ள வரலாற்றுத் தவறினை மாற்றியமைக்கின்ற அபிலாஷையும் எதிர்பார்ப்பும் எமக்கு இருக்கின்றது. அது எமது இனிமையான கனவாக மாத்திரம் அமைந்துவிடலாகாது. வரலாற்றில் ஏற்பட்ட தவறினை திருத்தியமைக்க வேண்டுமென மலையக மக்கள் தீர்மானமொன்றை எடுத்தால் மாத்திரமே அதனை சாதிக்கமுடியும். எம்மனைவராலும் ஒன்றுசேர்ந்து இனிமையான கனவினைக் காணமுடியுமாயின் இந்த இருள்மயமான இரவினை குறுகியதாக்க இயலும். நாங்கள் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். இந்த இருள்சூழ்ந்த இரவினை குறுகியதாக மாற்றிடுவோம். அதற்காக அனைவரையும் ஒன்றுசேருமாறு அழைக்கிறோம்.
மலையகத் தமிழ் மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அந்த மக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார, அரசியல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் “ஹட்டன் பிரகடனம்” இற்கு கைச்சாத்திடும் நிகழ்வு கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. மலையக தமிழ் மக்களின் பங்களிப்புடன் ஹட்டன் நகரில் டி. கே. டபிள்யூ. கலாசார மண்டபத்தில் இந்த விசேட நிகழ்வு இடம்பெற்றது. […]
மலையகத் தமிழ் மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அந்த மக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார, அரசியல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் “ஹட்டன் பிரகடனம்” இற்கு கைச்சாத்திடும் நிகழ்வு கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. மலையக தமிழ் மக்களின் பங்களிப்புடன் ஹட்டன் நகரில் டி. கே. டபிள்யூ. கலாசார மண்டபத்தில் இந்த விசேட நிகழ்வு இடம்பெற்றது.
அங்கு வரவேற்புரையை அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பிரதிச் செயலாளர் கிருஷ்ணன் கலைச்செல்வி நிகழ்த்தியதுடன் பிரதான உரையை தோழர் அனுர திஸாநாயக்க அவர்களால் நிகழ்த்தப்பட்டது. பேராசிரியர் விஜய குமார், கலாநிதி P.P. சிவப்பிரகாசம், தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் சரோஜா போல்ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இங்கு “தீயில் முளைத்த தேயிலை கொழுந்து” என்ற ஆவணப்படமும் காட்சிப்படுத்தப்பட்டது. அத்துடன் எழுத்தாளர் சதீஷ் செல்வராஜ் எழுதிய “குளிரும் தேசத்துக் கம்பளிகள்” புத்தகம் வழங்கும் நிகழ்வும் இங்கு இடம்பெற்றதுடன் “பிடி தளராதே” குழுவினரால் பல கலாச்சார நிகழ்ச்சிகளும் வழங்கப்பட்டன.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த பிரமுகர்களான தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களான சட்டத்தரணி லால் விஜேநாயக்க, பேராசிரியர் விஜய குமார், கலாநிதி P.P. சிவப்பிரகாசம், மஹிந்த ரத்நாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரும். அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ், நுவரெலியா மாவட்ட ஜே.வி.பி. அமைப்பாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் மஞ்சுள சுரவீர, தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி அனுஷ்கா தர்ஷனீ திலகரத்ன, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப், தொழிலாளர் கூட்டுறவு சங்க அமைப்பாளர் ராமையா நடராஜா, வைத்தியர் அருள் கோகிலன், நாடக நடிகர் முனியாண்டி காளிதாஸ், சட்டத்தரணி செல்வராஜ், தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் ஸ்ரீதரன், தேசிய மக்கள் சக்தியின் ஹப்புத்தளை தொகுதி செயற்குழு உறுப்பினர் கே. அஷோக் குமார், தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாணிக்கம் அஷோக் குமார், இலங்கை ஆசிரியர் சேவை சங்க அகரபத்தனை பிரதேச செயலாளர் ரிச்சட் ரொஹான், நுவரெலியா மாவட்ட அதிபர் சேவை சங்கத்தின் நல்லமுத்து விஜயகுமாரன், தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா – மஸ்கெலியா தொகுதி செயற்குழு உறுப்பினர் அதிபர் கருப்பண்ணன் ராமராஜ், தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்னய்யா விஸ்வநாதன், தேசிய கல்வி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற மொழிபெயர்ப்பு விரிவுரையாளர் திருமதி அர்ஷலா விவேகானந்தன், நுவரெலியா மாவட்ட சோஷலிச இளைஞர் சங்கத்தின் குழு உறுப்பினர் கந்தசாமி பிரபு, அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்க மஸ்கெலியா பிரவுன்சிக் தோட்டப் பிரதிநிதி சோமசுந்தரம் ஆனந்தபாபு, வட்டவளை லோனாக் தோட்ட ஓய்வுபெற்ற தொழிலாளி திருமதி சிலம்பரம் கனகம்மா, தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா – மஸ்கெலியா தொகுதி செயற்குழு உறுப்பினர் அஷோக கருணாரத்ன, தேசிய மக்கள் சக்தியின் கம்பளை தொகுதி செயற்குழு உறுப்பினர் சிவகுமார் பிரகாஷ் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.
2023.10.11 தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பில்… எமது நாட்டுக்கு வருடாந்தம் மழைவீழ்ச்சி மூலமாக கிடைக்கின்ற நீர் இயற்கையாக பெருக்கெடுத்து ஓடுகின்ற 103 ஆறுகளாலும் 94 சிற்றாறுகளாலும் எமது நிலத்தின் இடஅமைவுக்கிணங்க இயற்கையாகவே முகாமை செய்யப்படுகின்றது. அதைப்போலவே மனிதனின் இடையீட்டினால் நிலத்தின் இடஅமைவினை பயன்படுத்தி தொடர்படு அருவி முறைமையை நிர்மாணிப்பதால் மகத்தான உயிர்ப்பன்வகைமையை மரபுரிமையாக்கிக் கொடுத்துள்ளது. இந்த நாட்டுக்கு கிடைக்கின்ற 130 பில்லியன் கன மீற்றர் மழைநீர் அளவினை சந்தைப் பெறுமானத்திற்கு சீராக்கம்செய்ய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் […]
2023.10.11 தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பில்…
எமது நாட்டுக்கு வருடாந்தம் மழைவீழ்ச்சி மூலமாக கிடைக்கின்ற நீர் இயற்கையாக பெருக்கெடுத்து ஓடுகின்ற 103 ஆறுகளாலும் 94 சிற்றாறுகளாலும் எமது நிலத்தின் இடஅமைவுக்கிணங்க இயற்கையாகவே முகாமை செய்யப்படுகின்றது. அதைப்போலவே மனிதனின் இடையீட்டினால் நிலத்தின் இடஅமைவினை பயன்படுத்தி தொடர்படு அருவி முறைமையை நிர்மாணிப்பதால் மகத்தான உயிர்ப்பன்வகைமையை மரபுரிமையாக்கிக் கொடுத்துள்ளது. இந்த நாட்டுக்கு கிடைக்கின்ற 130 பில்லியன் கன மீற்றர் மழைநீர் அளவினை சந்தைப் பெறுமானத்திற்கு சீராக்கம்செய்ய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தயாராகி வருகின்றது. இந்த ஒரு லீற்றர் நீரின் விலை ஒரு சதம் என எடுத்துக்கொண்டால் பதினொரு இலட்சம் மில்லியன் கணக்கில் ஈட்டிக்கொள்ள இந்த மோசமான சிந்தனை மூலமாக கணிப்பீடு செய்துள்ளார்கள். அதற்கிணங்க பராக்கிரம சமுத்திரத்தின் நீர்க் கொள்ளளவான 134 மில்லியன் கன மீற்றரக் விலைக் கணித்தால் 1340 மில்லியன் ரூபாவாக மதிப்பீடுசெய்ய முடியும். ஒரு லீற்றர் நீருக்கு ஒரு சதம் வீதம் கணித்தால் இந்த பெறுமானமே கிடைக்கும். எவ்வளவு பெருந்தொகையான இலாபத்தை ஈட்டுவதற்காக இயற்கையாக கிடைக்கின்ற நீரை விற்பனைசெய்ய முன்மொழிந்துள்ளமை தெளிவாகின்றது. 16 இலட்சம் ஏக்கர் வயலுக்கு நெற் செய்கைக்காகவும் நீரில் 88% ஐ பாவிக்கின்ற ஒட்டுமொத்த விவசாயத்திற்காகவும் நெற்செய்கைக்காக வயல் ஏக்கரொன்றுக்கு ஒரு போகத்தின்போது ஒரு லீற்றர் நீரை ஒரு சதம் வீதம் எடுக்க ரூ. 4000 விலையை செலுத்த நேரிடும். அதன் மூலமாக நீரை விற்பனை செய்வதில் உள்ள பாரதூரத்தன்மையை விளங்கிக் கொள்ளலாம்.
உலகின் சுற்றாடலியலாளர்கள் கணிப்பிட்டுள்ளவிதத்தில் ஒரு கிலோ தானியத்தை உற்பத்திசெய்ய 350 லீற்றருக்கு கிட்டிய அளவு அவசியமாகின்றதெனக் கண்டுபிடித்துள்ளார்கள். ரணில் – ராஜபக்ஷாக்கள் நீருக்கான விலையை நிர்ணயித்தால் எமது நாட்டில் ஒரு கிலோ அரிசியை உற்பத்திசெய்ய 35 ரூபா செலவாகும். ஒரு முட்டையை உற்பத்திசெய்ய ஏறக்குறைய 360 லீற்றர் நீர் செலவாகின்றதெனக் கண்டுபிடித்துள்ளார்கள். அப்படியானால் ஒரு முட்டைக்காக 4 ரூபாவுக்கு கிட்டிய மேலதிக செலவினை ஏற்கநேரிடும். ஒரு லீற்றர் பால் உற்பத்திசெய்ய பசுக்களுக்காக அண்ணளவாக 1000 லீற்றர் நீர் தேவைப்படுகின்றது என கண்டுபிடித்துள்ளார்கள். நெல், காய்கறிகள், பழங்கள் மாத்திரமல்ல கால்நடைவள உற்பத்தியின்போதும் அதிகூடிய கிரயத்தை ஏற்க நேரிடும். நீரை பாவிக்கின்ற எந்தவொரு துறையிலும் நீருக்காக செலுத்தவும் அதற்காக வரி விதிக்கவும் அதன் விளைவாக விலை அதிகரிப்பதையும் தடுக்கமுடியாமல் போய்விடும். இந்த சட்டத்தை உடனடியாக சுருட்டிக்கொள்ளுமாறு நாம் அனைவரும் ஏகோபித்த குரலில் அழுத்தம் கொடுக்கவேண்டும்.
2023.10.11 தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பில்… எமது நாட்டு மக்களுக்கு நீருடன் பாரிய ஆன்மீக ரீதியான தொடர்பு நிலவுகின்றது. கலாசாரரீதியாக, சமயரீதியாக உணவு மற்றும் குடிநீருக்கு மேலதிகமாகவே பாவிக்கிறார்கள். விசேட தருணங்களில் ஒரு தம்ளர் நீரைக் கொடுத்தே வரவேற்கிறார்கள். உணவு உண்ண கடைக்குச் சென்றால் முதலில் பெரிய கிளாஸ் ஒன்றில் தண்ணீர் தருவார்கள். ஐரோப்பாவில் நீர் சம்பந்தமாக உள்ளக அழுத்தத்தின்பேரில் அளவீடு ஒன்றைக் கண்டுபிடிக்கையில் எமது நாட்டு மக்கள் தரத்திற்கிணங்க நீருக்கு பெறுமதியொன்றைக் கொடுத்தார்கள். எமது […]
2023.10.11 தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பில்…
எமது நாட்டு மக்களுக்கு நீருடன் பாரிய ஆன்மீக ரீதியான தொடர்பு நிலவுகின்றது. கலாசாரரீதியாக, சமயரீதியாக உணவு மற்றும் குடிநீருக்கு மேலதிகமாகவே பாவிக்கிறார்கள். விசேட தருணங்களில் ஒரு தம்ளர் நீரைக் கொடுத்தே வரவேற்கிறார்கள். உணவு உண்ண கடைக்குச் சென்றால் முதலில் பெரிய கிளாஸ் ஒன்றில் தண்ணீர் தருவார்கள். ஐரோப்பாவில் நீர் சம்பந்தமாக உள்ளக அழுத்தத்தின்பேரில் அளவீடு ஒன்றைக் கண்டுபிடிக்கையில் எமது நாட்டு மக்கள் தரத்திற்கிணங்க நீருக்கு பெறுமதியொன்றைக் கொடுத்தார்கள். எமது நாட்டில் ஆவியாக்கம் காரணமாக நீர்தேக்கங்களில் உவர்த்தன்மை அதிகரிக்கின்றது. உயர்ந்த இடத்திலிருந்து தாழ்ந்த இடத்திற்கு நீரை வழங்குகையில் தாழ்வான இடத்தில் நீரைப் பெறுகின்றவர்களுக்கு உவர்த்தன்மை அதிகரிக்கின்றது. அதனாலேயே உயர்ந்த இடத்திலிருந்து வில்லுவிற்கு நீரை விடுவித்து இயற்கைச் சுற்றாடல் முறை ஊடாக நீரை முகாமைசெய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இவ்விதமாகத்தான் மேலேயுள்ள கிராமத்திலிருந்து கீழேயுள்ள கிராமத்திற்கு நீர் வழங்கப்பட்டது. அதற்காக குளச் செயலாளரொருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அளவுசார்ரீதியாக மாத்திரமன்றி, தரரீதியாகவும் எமது நாட்டில் இவ்விதமே நீர் முகாமை செய்யப்பட்டது.
அத்தகைய வரலாற்றினைக் கொண்டிருந்த எங்களுக்கு நீரை முகாமைசெய்யவேண்டிய விதம்பற்றி கற்றுக்கொடுக்க தற்போது எரிக் சோல்ஹயிம் போன்றவர்கள் மட்டுமன்றி சர்வதேச அமைப்புகளும் உருவாகியுள்ளன. பிரமாண்டமான பல்தேசிய கம்பெனிகளின் நிதியளிப்புகளுடன் அந்த சர்வதேச நிறுவனங்களக்கு பணம் பாய்ச்சப்படுகின்றது. வடகீழ், தென்மேல் பருவமழை மாத்திரமன்றி இடைப் பருவக்கால மழை மூலமாகவும் நீர் கிடைப்பதோடு அதற்கு மேலதிகமாக புயல்காற்று மூலமாகவும் கிடைக்கின்ற மழைநீர் மேலிருந்து கீழ்நோக்கி பாய்ந்தோடுகின்றது. எமது நாட்டின் இந்த புவியியல் இடஅமைவு காரணமாக மேற்பரப்பு நீரும் நி்றைந்துள்ளது. மேற்பரப்பு நீருக்கு மேலதிகமாக உள்ளகத்தில் நீர்ப்பீடமொன்றும் இருக்கின்றது. எமது நாட்டில் வரலாற்றுக்காலம் பூராவிலும் நீர்த் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொண்ட உருவாகிய நீர்க் கலாசாரமொன்றின் உரிமை நிலவுகின்றது.
மக்களுடன் நீருக்கு இருக்கின்ற ஆன்மீகத் தொடர்பினைத் தகர்த்து வணிகப் பெறுமதியைக் கொடுக்க பலவிதமான செயல்முறைகளை கடைப்பிடிக்கிறார்கள். இந்த ஆன்மீகத் தொடர்பினை தகர்ப்பதற்கான ஆரம்பப் படிமுறையாகவே நகர்சார்ந்த கால்வாய் வழிகளும் ஆறுகளும் குப்பைக் கான்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. களனிகங்கை எந்தளவு அழிவுமிக்கவகையில் அசுத்தமாக்கப்பட்டுள்ளதென்பது தற்போது தெளிவாகின்றது. நீருக்கு வணிகப் பெறுமதி அளிக்கப்பட்டு புரியப்போகின்ற இந்த முயற்சியால் மக்கள் மென்மேலும் பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளார்கள். கல்வி, சுகாதாரம், பெற்றோலியம் போன்றே இன்றளவில் நீரும் வணிகப் பெறுமதிகொண்ட ஒன்றாக மாற்றப்படுவதற்கான “றீகேனிங் ஸ்ரீலங்கா” நடவடிக்கை மீண்டும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாங்கள் பாடசாலை செல்கின்ற காலகட்டத்தில் நிலவிய “நீரை செல்வம்போல் பாதுகாத்திடுவோம்” எனும் மேற்கோள் வாசகத்தின் ஊடாக எமது மக்கள் உயிரைப்போல் பாதுகாத்த நீர் வணிகமயமாக்கலுக்கு குறுக்கப்பட்டுள்ளது. நீரைக் காப்பாற்றிக்கொள்ளும் பேராட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றுசேருமாறு நாங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.
2023.10.11 தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பில்… ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் இந்நாட்டின் தேசிய வளங்களை விற்பதற்காக தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற நடவடிக்கைகளின் புத்தம்புதிய படிமுறை இந்நாட்டின் நீரை விற்பனை செய்தலுடன் தொடர்புடைய புதிய சட்டமொன்றை ஆக்கி வருவதாகும். அதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக மாத்திரமன்றி இந்நாட்டை நேசிக்கின்ற சுற்றாடல் அமைப்புகள், அரசியல் கட்சிகளை உள்ளிட்ட சிவில் அமைப்புகளை குடிமக்கள் ஒன்றுதிரட்டி அதனை தோற்கடித்திட செயலாற்ற வேண்டும். எமது நாட்டில் 3000 ஆண்டுகளுக்கு கிட்டிய வரலாற்றில் நீரை அடிப்படையாகக்கொண்ட […]
2023.10.11 தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பில்…
ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் இந்நாட்டின் தேசிய வளங்களை விற்பதற்காக தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற நடவடிக்கைகளின் புத்தம்புதிய படிமுறை இந்நாட்டின் நீரை விற்பனை செய்தலுடன் தொடர்புடைய புதிய சட்டமொன்றை ஆக்கி வருவதாகும். அதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக மாத்திரமன்றி இந்நாட்டை நேசிக்கின்ற சுற்றாடல் அமைப்புகள், அரசியல் கட்சிகளை உள்ளிட்ட சிவில் அமைப்புகளை குடிமக்கள் ஒன்றுதிரட்டி அதனை தோற்கடித்திட செயலாற்ற வேண்டும். எமது நாட்டில் 3000 ஆண்டுகளுக்கு கிட்டிய வரலாற்றில் நீரை அடிப்படையாகக்கொண்ட நாகரிகம் உலகின் ஏனைய நாடுகளைப் பார்க்கிலும் வித்தியாசமான வகையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. எனினும் எமது நாட்டில் இருப்பது மனித உழைப்பின் மூலமாக கட்டியெழுப்பப்பட்ட நீர்ப்பாசன நாகரிகமாகும். அதாவது மனிதனால் கட்டியெழுப்பப்பட்ட நீர்ப்பாசனத் தொழிற்றுறை மூலமாக நாகரிகத்தைக் கட்டியெழுப்பிய ஒருசில நாடுகள் மத்தியில் எமது நாடும் ஒன்றாகும். அதியுயர் நீர் முகாமைத்துவத்தைக் கொண்டதாக எமது நாகரிகம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
அத்தகைய வரலாற்றினைக்கொண்ட நீர்சார்ந்த நாகரிகம் இருக்கையில் நிகழ்கால ஆட்சியாளர்கள் வெறுமனே ஒரு வர்த்தகப் பண்டமாக மாத்திரம்நீரை இனங்கண்டுள்ளார்கள். அதற்கிணங்க நீர்வளத்தை விற்றுத்தீரக்க அரசாங்கம் நடவக்கை எடுத்து வருகின்றது. எனினும் எதிர்காலத்திற்காக நீர்வளத்தைப் பாதுகாப்பது எம்மனைவருக்கும் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பாகும். நிகழ்கால அரசாங்கம் மாத்திரமன்றி குறிப்பாக சனாதிபதி சந்திரிக்கா பண்’டாரநாயக்கவின் காலத்தில் இருந்தே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அன்று நீர்ப்பாசன அமைச்சராக விளங்கிய சரத் அமுணுகம இதற்கான சட்டங்களை முன்வைத்தார். அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் 2001 இல் தொடங்கிய ஆட்சிக்காலத்தில் “றீகேனிங் ஸ்ரீலங்கா” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழும் நீரை விற்பனைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது புத்தம்புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. 2020 ஒக்டோபர் 12 ஆந் திகதி அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் நீரை விற்பனைசெய்வதை மீண்டும் அறிமுகஞ்செய்ய ஒருங்கிணைந்த அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதில் நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்காரவும் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷவும் ஒருங்கிணைந்த அமைச்சரவைப் பத்திரம் என்றவகையில் கையொப்பமிட்டிருந்தார்கள். வக்கடையில் கரங்களைக் கழுவி வேட்புமனுவில் கையொப்பமிட வந்ததாக கூறுகின்றவர்கள் தேசத்தின் சாவுமணிக் அடிக்க நீரை விற்பதற்கான சட்டத்தை இவ்வாறுதான் கொண்டுவந்தார்கள். நீரை தனியார்மயமாக்கிட தொடர்புடைய அடிப்படைக் கட்டமைப்பினை “பொது தியபெத்ம – பொதுவான நீர்ப்பிரிமேடு” முகாமைத்துவம் செய்வதற்கான குழு எனும் பெயரில் கொண்டுவர முயற்சி செய்தார்கள்.
மகிந்த ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இரண்டாவது அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டு நீரை விற்பனை செய்வதற்கான ஏற்புடைய குழு பெயர் குறிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சீ.எம். மத்துமபண்டாரவின் தலைமையின்கீழ் குழுவிற்கு பத்து அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டார்கள். 2003 இல் ரணிலின் அரசாங்கம் நீரை விற்பதற்கான சட்டத்தை ஆக்கியதும் இதே பேராசிரியர்தான். 20 வருடங்களுக்குப் பின்னரும் இன்னமும் அந்த ஆபத்து அவ்விதமாகத்தான் வருகிறது. அன்று சோஷலிஸ கமக்காரர் சங்கம் என்றவகையில் நீரை விற்பனை செய்வதற்கு எதிராக நாங்கள் தலைமைத்துவம் வழங்கினோம். உலக நீர்த்தினமாக பிரகடனஞ் செய்யப்பட்டுள்ள மார்ச்சு 22 ஆந் திகதி இலங்கையின் 18 பிரதான குளங்களின் மேடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான கமக்காரர்கள் புடைசூழ இந்த நாடு கட்டியெழுப்பிய நீர்வளத்தை விற்பனைசெய்ய இடமளியோமென சபதம் செய்தார்கள். எனினும் இருபது வருடங்களுக்குப் பின்னரும் அதே சூனியத்தை அறுக்கவேண்டியநிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.
நிகழ்காலப் பிரதமர் தினேஷ் குணவர்தன 2023 யூன் 28 இல் புதிய அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்தார். ” இலங்கையின் தேசிய நீர்க்கொள்கை வரைவு” அதன்மூலமாக அறிமுகஞ் செய்யப்பட்டது. வரைவுடன் நின்றுவிடாமல் அதனோடு தொடர்புடைய ஏனைய அமைச்சுக்களையும் சேர்த்துக்கொண்டு சட்டத்தை ஆக்கவே தற்போது தொடங்கியுள்ளார்கள். தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த வரைவில் 2003 இல் சமர்ப்பித்த பணிகள் அவ்வண்ணமே இருக்கின்றன. நீரை விற்பனை செய்வதற்கான தாபனஞ்சார் கட்டமைப்பு பற்றி 08 வது பிரிவில் காட்டப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி என்றவகையில் நாங்கள் வலியுறுத்துவது வரலாற்றில் நிலவியதுபோல் தலைசிறந்த நீர் முகாமைத்துவம் நிலவவேண்டும் என்பதாகும். எனினும் முகாமைத்துவத்தின் நாமத்தால் வருகின்ற நீரை விற்பனை செய்வதற்கான செய்பாங்கினை சரிவர இனங்கண்டு தோற்கடித்திட வேண்டும். நாட்டுக்கு அனைத்து வளங்களும் கிடைக்கவேண்டுமாயின் உரிய நேரத்தில் மழை கிடைக்கவேண்டுமென பௌத்த தர்மத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் நீருக்கான தலைசிறந்த தொனிப்பொருள் வாசகத்தை பராக்கிரமபாகு மன்னரே 900 வருடங்களுக்கு முன்னர் முன்வைத்தார். “வானிலிருந்து விழுகின்ற ஒரு துளி நீரையும் மானிட வர்க்கத்தின் பாவனைக்கு எடுக்காமல் கடலில் சேர இடமளிக்க மாட்டேன்” எனக் கூறினார். அதன்வழி சென்று அன்று இருந்த இந்நாட்டுப் பிரசைகள் பல்லாயிரக்கணக்கான குளங்களைக் கட்டினார்கள். அதற்கிணங்கவே நாடு பூராவிலும் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட குளங்களை அமைத்தார்கள்.
நாங்கள் வலியுறுத்துவது யாதெனில் தேசிய மக்கள் சக்தி நீர் முகாமைத்துவத்தை ஆதரிக்கின்றது. ஆனால் அந்த போர்வையில் மூடிக்கொண்டு வருகின்ற விற்பனை செயற்பாங்கிற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். தினேஷ் குணவர்தன முன்வைத்த பிரேரணைக்கிணங்க “தேசிய நீர்வளங்கள் சபை” என அழைக்கப்படுகின்ற நிறுவனமொன்று தாபிக்கப்படும். அதைப்போலவே “தேசிய நீர்வளங்கள் செயலகம்”. மற்றும் “நீர்வளங்கள் மேன்முறையீட்டுச் சபை” என மூன்று நிறுவனங்கள் தாபிக்கப்படும். இவ்விதமாக மூன்று நிறுவனங்கள் தாபிக்கப்பட்டு உத்தியோகத்தர்களை நியமிக்கின்ற அதிகாரம் சனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய சுற்றாடல் வானிலை தரங்கள் பற்றிய புத்திஜீவியொருவர் தலைவராக நியமிக்கப்படுவாரென குறிப்பிடப்பட்டிருந்தாலும் ஏற்கெனவே அவர் நியமிக்கப்பட்டுவிட்டார். காலநிலை மாற்றங்கள் கற்கைக்காக ரணில் ராஜபக்ஷ இன்றளவில் நியமித்துள்ள அந்த ஆள் நாமனைவரும் அறிந்த எரிக் சோல்ஹயிம். அவருக்கு டொலரிலேயே சம்பளம் செலுத்தப்படுகின்றது. அவரை இந்த நிறுவனங்களுக்கும் நியமிப்பாரென நாங்கள் நம்புகிறோம். மாலைதீவின் மொஹமட் நசீம் மற்றுமொரு ஆலோசகராக நியமிக்கப்பட்டு டொலரில் சம்பளம் செலுத்தப்படுகின்றது. 2003 இன் செயற்பாங்கின் மறைவில் இருந்த சதிகார எரிக் சோல்ஹயிம் நீண்டகால நோக்குடனேயே நியமிக்கப்பட்டுள்ளார். விவசாயம்சார்ந்த புத்திஜீவியொருவர், நீர்வளங்கள் முகாமைத்துவ புத்திஜீவிகள் இருவர் என்றவகையில் சானாதிபதியால் இந்த பேரவைக்கு உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படுவர். அதற்கிணங்க பார்க்கும்போது சனாதிபதியுடன் நெருக்கமான குழுவொன்று நீரை விற்பனைசெய்தலுடன் தொடர்புடைய செயற்பாங்கிற்காக நியமிக்கப்படுவது தெளிவாகின்றது. இந்த கருத்திட்டங்களுக்கான முதலீடாக எடுக்கப்படுகின்ற டொலர்களில் தரகு பெறுகின்ற ஆட்சியாளர்கள் இதுவரை முன்னெடுத்துவந்த செயற்பாங்ககுகளைப் பார்க்கிலும் இது பயங்கரமானதென்பதை நாங்கள் மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.
அது சம்பந்தமாக கடந்த ஆகஸ்ற் 29 ஆந் திகதி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிட்ட கடிதத்தில் அமைச்சரவை செயலாளர் டபிள்யு.டீ.ஜே. பர்னாபந்துவின் கையொப்பத்துடன் சனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சு செயலாளர், கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்களின் செயலாளர்கள் பலருக்கு நீர்ச்சட்டமொன்றை தயாரிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தை தயாரிக்கையில் உள்ளடக்கவேண்டிய சில தீர்மானங்கள் காட்டப்பட்டுள்ளன. முகாமைத்துவம் சம்பந்தமாக தற்போது செயலாற்றி வருகின்ற நீரப்பாசனத் திணைக்களம், இலங்கை மகாவலி அதிகாரசபை மற்றும் நீர்வளச் சபை ஆகிய நிறுவனங்களின் செயற்பொறுப்பினை மீளாய்வுசெய்து நிகழ்காலத்திற்கு ஒத்துவரக்கூடியவகையில் அந்த நிறுவனங்களை மறுசீரமைத்த பின்னர் இந்த மூன்று நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து தனி நிறுவனமொன்று நீர் முகாமைத்துவத்திற்காக நிறுவப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. மனைத் தேவைகள், விவசாயம் போன்றே கைத்தொழில்கள், வலுச்சக்தி மற்றும் சேவைகள் ஆகிய அலுவல்களுக்காக எமது நாட்டின் நீர் பாவிக்கப்படுகின்றது. அவை மத்தியில் முதன்மை வகிப்பது விவசாயமாகும். பிரதமர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில் இந்நாட்டின் நீர்வளங்களை கணிப்பீடுசெய்து மேற்பரப்பு நீர் 52 பில்லியன் கனமீற்றர், தரைக்கீழ் நீர் 07 பில்லியன் கனமிற்றர் மற்றும் கடனீரேரி சார்ந்ததாக 07 பில்லியன் கனமீற்றர் இருப்பதாக புள்ளிவிபரத் தரவுகள் காட்டுகின்றன. இதன்படி எமது நாட்டில் 66 பில்லியன் கன மிற்றர் நீர் இருக்கின்றது.
அதைப்போலவே மழைவீழ்ச்சி மூலமாக ஆண்டுக்கு 130 பில்லியன் கனமீற்றர் நீர் கிடைக்கின்றது. உலகின் சராசரி வருடாந்த மழைவீழ்ச்சி 750 மில்லி மீற்றராகும். எனினும் எமது நாட்டின் சராசரி வருடாந்த மழைவீழ்ச்சி 900 மில்லிலீற்றராகும். நாங்கள் வரண்ட அல்லது கடிமான எனக் கூறுகின்ற பிரதேசங்களில்கூட உலகின் சராசரி நிலைமையைப் பார்க்கிலும் உயர்வான இடத்தில் இருக்கிறோம். இலங்கையின் சராசரி மழைவீழச்சி வருடத்திற்கு 2080 மில்லி லீற்றர் ஆகும்.
எதிர்காலத்தில் பெருமைமிக்க ஒரு நாட்டைக் கட்டியெழுப்பிட உதவுகின்ற இந்த நீர்வளத்தின் உரிமையைப் பெற்றுக்கொள்ள பல்தேசியக் கம்பெனிகள் ஏறக்குறைய 30 வருடங்களாக முயற்சிசெய்து வருகின்றன. சந்திரிக்காவின் காலத்தில் நீர்வளத்தைக் கொள்வனவுசெய்ய மூன்று பல்தேசிய கம்பெனிகள் இந்நாட்டுக்கு வந்தன. பல வாரங்கள் தங்கி இருந்தன. எனினும் எமது பிரமாண்டமான எதிர்ப்பின் மத்தியில் அவை விரட்டியடிக்கப்பட்டன. அவ்விதமாக பாதுகாத்துக்கொண்ட நீர்வளத்தையே தற்போது விற்க முனைகிறார்கள். இலங்கையின் நீர் நுகர்வின் 88% விவசாயத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றது. குடிநீர் மற்றும் மனைசார் தேவைகளுக்காக 6% உம் வலுச்ச்கதி மற்றும் கைத்தொழில்களுக்கு 6% உம் நுகரப்படுகின்றது. கைத்தொழில்களுக்காக 88% நீரை வழங்குகின்ற நீர்ப்பாசனத் திணைக்களத்தை இல்லாதொழித்து தனிவேறான நிறுவனமொன்று உருவாக்கப்படுகின்றது. இந் நிறுவனத்தினால் அமுலாக்கப்பட நீர் வள முகாமைத்துவச் சட்டம் என ஒரு சட்டம் கொண்டுவரப்படுகிறது. அந்த சட்டத்தில்தான் நீரை விற்பதற்கான வாசகங்கள் இருக்கின்றன. அதைப்போலவே “நெற்செய்கை மற்றும் ஏனைய செய்கைகளுக்காக அத்தியாவசிய நீரை மாத்திரம் பாவிக்க ஆவனசெய்யவேண்டும்” எனவும் குறிப்பிடப்படுகின்றது. அதற்காக நெற்செய்கையை உள்ளிட்ட ஏனைய செய்கைகளுக்கு நீரைப் பாவிப்பதற்கான அளவுகோல்கள் அறிமுகஞ் செய்யப்படுவதாக அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நீர் ஆட்சியாளர்களுக்கா உரித்தானது? இயற்கையால் பொதுமக்களுக்கும் விலங்குகளுக்கும் கொடையாக அளித்த நீரை விற்பதற்கான உரிமை இந்த ஆட்சியாளர்களுக்கு இருக்கின்றதா? விற்பது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரத்தில் “நீர்ச்சந்தை எண்ணக்கருவினை அமுலாக்குவதற்கான இயலுமை பற்றி விரிவாக கற்றாராய்தல் ” என மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரங்களின் உண்மையான நோக்கம் இந்த இடத்தில்தான் வெளிப்படுகின்றது. நீர்ச்சந்தை என்றால் என்ன? சந்தையிலிருந்து நீரைக் கொள்வனவுசெய்ய இருப்பவர்கள் யார்? இந்த நாட்டின் நீரில் 88% விவசாயத்திற்காகவே பாவிக்கப்படுகின்றதென அமைச்சரவைப் பத்திரத்தில் கையொப்பமிட்டவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். விவசாயத்திற்காக பாவிக்கப்படுகின்ற நீரிலிருந்து அறவிடவே தயாராகி வருகிறார்கள். நீர்ச்சந்தை இருப்பது இங்கு தானே. மனைசார் தேவைகளுக்காக நீரைப் பாவிக்கின்ற 6 வீதமானவர்கள் ஏற்கெனவே விலைச்சிட்டைக் கட்டணத்தைச் செலுத்தி வருகிறார்கள். வலுச்சக்தி மற்றும் கைத்தொழில் தேவைகளுக்காகவும் செலுத்தி ஏற்கெனவே வருகிறார்கள். விவசாயத்திற்காக எடுக்கின்ற 88% அளவுக்கு விலையை அறவிடவே இவர்கள் தயாராகி வருகிறார்கள். இந்த முயற்சியை முறையிலெயே கிள்ளியெறிய வேண்டும்.தேசத்திற்கு சாவுமணி அடிக்கின்ற இந்த நீர்ச்சட்டத்திற்கு இடமளிக்க வேண்டாமென நாங்கள் இந்நாட்டு மக்களுக்கு கூறுகிறோம்.
இந்த அமைச்சரவைப் பத்திரம் மாத்திரமல்ல நீரை சந்தைப்படுத்துவதற்கான தனியார் கம்பெனிகளுக்கு கொடுத்து பேரவலமாக மாறியுள்ள உலக நாடுகள் பற்றி நாமறிவோம். கொலொம்பியா, பொலீவியா ஆகிய நாடுகளுக்கு ஏற்பட்ட கதி பற்றி நாமறிவோம். தற்போது மூன்றுவேளை உண்ணமுடியாமல் இருக்கின்ற மக்களின் கிணறுகளுக்கும் ஒரு தொகை பணத்தைச் செலுத்த வக்கடைக்கு மீற்றர் பொருத்த வந்த பின்னர் கத்திக்கொண்டிருப்பதில் பலனில்லை. இப்போதே விளங்கிக்கொண்டு ஆபத்தினை தடுக்க நாம் அனைவரும் செயற்பட வேண்டும். அதற்காக தலைமைத்துவம் அளித்திட நாங்கள் தயார். அதற்கான இலங்கை காலநிலை நிதியம் தனியார் துறையினால் ஈடுபடுத்தப்படுவதோடு, சர்வதேச முகாமைத்துவ நிறுவனங்களையும் சேர்த்துக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. 70 வது தசாப்தத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, நாணய நிதியம் கூட்டுச்சேர்ந்து நீரை விற்பனைசெய்ய உலக மட்டத்திலான நிறுவனமொன்றை அமைக்கத் தயாராகியது. அதற்காக லத்தீன் அமெரிக்காவிற்கு, ஆபிரிக்காவிற்கு போன்றே ஆசியாவின் பல்வேறு இடங்களுக்குச்சென்றும் அந்த நிறுவனத்தை தாபிக்க காணிகளைத் தேடிக்கொள்ள முடியாமல் போயிற்று. ஆனால் அந்த நிறுவனத்தை அமைக்க இலங்கை அரசாங்கம் இடமளித்தது. நீரை தனியாரமயப்படுத்துவதற்கான நிறுவனம் பத்தரமுல்ல, பெலவத்தையில் தாபிக்கப்பட்டுள்ளது. அது தான் “இமி” எனப்படுகின்ற நிறுவனமாகும். சோல்ஹயிமையும் போட்டுக்கொண்டு உலக வங்கியின் அறிவுறுத்தல்களின்படி புரியப்போகின்ற இந்த அழிவு பற்றிய தகவல்களைக் கற்றாராய்ந்து இந்த முதலாவது ஊடக சந்திப்பில் நாங்கள் நாட்டுக்கு தகவல்களை அம்பலப்படுத்துவோம். 2001 றீகேனிங் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தைக் கொண்டுவந்த ரணிலின் அரசாங்கத்தின் ஆயுட்காலம் குறுகி வீடுசெல்லவேண்டிய நிலையேற்பட்டது. அந்த ரணில் இன்று ராஜபக்ஷாக்களின் கரங்களை பற்றிக்கொண்டு நீர் வளத்தை விற்க எடுக்கின்ற முயற்சியை தோற்கடித்திட வேண்டும். இந்த சட்டத்தை உடனடியாக தோற்கடித்திட ஒட்டுமொத்த மக்களையும் எம்மோடு கூட்டுச்சேருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மலையகத் தமிழ் மக்கள் இனியும் இந்த அழுத்தத்தைத் தாங்க வேண்டியதில்லைதேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மலையக தமிழ் மக்கள் எமது நாட்டிற்கு வருகை தந்து 200 வருடங்கள் ஆகின்றன. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அவர்களை கொண்டுவருவது 1820 இல் தொடங்கியது. ஒரு உழைக்கும் சமூகமாக முதன்முதலில் கொண்டுவரப்பட்டது, வருகை தந்தது 1823 இல் ஆகும். கடந்த 200 வருடங்களில் இலங்கையின் குடிமக்களாக மலையகத் தமிழ் சமூகம் மிகுந்த துன்புறுத்தல்களுக்கு உட்பட்டிருக்கின்றனர். இந்த சமூகத்தில் […]
மலையகத் தமிழ் மக்கள் இனியும் இந்த அழுத்தத்தைத் தாங்க வேண்டியதில்லை
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்
மலையக தமிழ் மக்கள் எமது நாட்டிற்கு வருகை தந்து 200 வருடங்கள் ஆகின்றன. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அவர்களை கொண்டுவருவது 1820 இல் தொடங்கியது. ஒரு உழைக்கும் சமூகமாக முதன்முதலில் கொண்டுவரப்பட்டது, வருகை தந்தது 1823 இல் ஆகும். கடந்த 200 வருடங்களில் இலங்கையின் குடிமக்களாக மலையகத் தமிழ் சமூகம் மிகுந்த துன்புறுத்தல்களுக்கு உட்பட்டிருக்கின்றனர். இந்த சமூகத்தில் 67% ஆனோர் இன்றும் சிறிய சுண்ணாம்பு அறைகளிலேயே (Lime rooms) வசிக்கின்றனர். அவர்களின் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் நிலையும் அப்படித்தான். அவர்களுக்குச் சொந்தமாக நிலங்கள் இல்லை, பிள்ளைகளுக்குச் சரியான கல்வி இல்லை, இன்றும் இலங்கையில் அதிகளவு சுகாதாரப் பிரச்சினைகளால் அவதியுறும் மக்கள் அவர்களே. அவ்வாறே, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சிதறிக் கிடந்தாலும் வறுமையால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதும் இவர்களே.
ஆட்சியாளர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த மக்களின் வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறிக்கப்பட்டன. 1948 ஆம் ஆண்டு வாக்குரிமை பறிக்கப்பட்ட பின்னர் அவர்கள் 35 வருடங்கள் வாக்குரிமை இல்லாமல் இந்த நாட்டில் இருந்தனர். இந்த அரசாங்கங்கள் அவர்களை இலங்கைப் பிரஜைகளாகக் கருதுவதில்லை. நாடு, நிலம், வீடு, முறையான கல்வி, சுகாதார வசதிகள் இன்றி இன்றும் அந்நியர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மலையக தமிழ் மக்கள் என்பதும் இலங்கைப் பிரஜைகள். இலங்கையர் என்ற வகையில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து அடிப்படை உரிமைகளும் அவர்களுக்குக் கண்டிப்பாக கிடைக்க வேண்டும். எனினும் 200 ஆண்டுகள் கடந்தும் அந்த அடிப்படை அங்கீகாரம் கூட இவர்களுக்கு வழங்கப்படவில்லை. தேசிய மக்கள் சக்தி இந்த சமூகத்தை இலங்கை பிரஜைகளாக கருதுகிறது. மேலும், “தாய்நாட்டிற்கோர் பலம், கெளரவமான குடிமகன்” ஐ உருவாக்கும் நோக்கில் தேசிய மக்கள் சக்தி இம்மக்களின் பிரச்சினைகளுக்காக தலையீடு செய்கிறது. அவர்களைப் பற்றிய 200 ஆண்டுகளைக் கொண்டாடுவது அல்ல எங்கள் நோக்கம். தேசிய மக்கள் சக்தியாகிய நாம் கொள்கை ரீதியாகவும், வேலைத்திட்டமாகவும், மலையகத் தமிழ் மக்களை இலங்கைப் பிரஜைகளாகவே கருதி, ஏனைய இலங்கைப் பிரஜைகளுக்குச் சமமான அனைத்து உரிமைகளையும் இம்மக்களுக்கும் பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தை தொடர்வோம்.
அந்த வகையில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலையகத் தமிழ் மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டு, ஏற்பாடு செய்யப்பட்டு வருவதுடன், ஒக்டோபர் 01 முதல் 15 வரையிலான காலப்பகுதியில், “மலையகம் 200” என அந்த மக்களின் உரிமைக்காக விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் காலப்பகுதியாக பெயரிடப்பட்டு, பல நிகழ்ச்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹட்டன் பிரகடனத்தை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி ஹட்டனில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அனுர திஸாநாயக்க உட்பட பலதரப்பட்ட தலைவர்களின் பங்குபற்றுதலுடனும், மலையகத் தமிழ் மக்களின் பங்களிப்புடனும் அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டம் வலுப்படுத்தப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படும்.
இனியும் இம் மக்கள் இந்த அழுத்தத்தை தாங்கக்கூடாது என்ற உறுதியுடனும், இந்த மக்களின் வாழ்வுரிமைக்காகவும் நாம் அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் செயற்படுவதுடன், ஏனைய அனைத்து இலங்கையர்களும் தலையிடுவார்கள் என்றும் நம்புகின்றோம். அத்துடன், இப்போராட்டத்தில் இணைந்து வெற்றிபெறும் வரை கைகோர்த்து முன்செல்ல அனைவரது தலையீட்டையும் நாம் எதிர்பார்க்கிறோம்.
200 ஆண்டுகள் பூர்த்தியாகும் மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் அனைவரும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கலாநிதி பெருமாள் சிவப்பிரகாசம், பேராசிரியர் விஜயகுமார், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் கிட்ணன் செல்வராஜ், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்க செயலாளர் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.