–2023.11.17 – தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு– ராஜபக்ஷாக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாட்டை ஒப்படைத்த பின்னர் இற்றைவரை பயணித்த பாதையை மாற்றியமைக்க வேண்டுமென பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி இருந்தோம். எனினும் எந்தவிதமான மாற்றமுமின்றி இற்றைவரை பயணித்த பாதையிலேயே பயணித்து மக்களால் வாழமுடியாத அளவுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முன்னிலையில் மண்டியிட்டு எதேனும் தொகையை பெற்றுக்கொள்ள செயலாற்றுவதோடு ஒட்டுமொத்த நெருக்கடியின் சுமையை மக்கள் மீது திணிப்பதே சமர்ப்பித்துள்ள வரவுசெலவில் அடங்கியுள்ளது. வரவுசெலவுக்குள்ளேயோ அதற்கு வெளியிலோ […]
–2023.11.17 – தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு–

ராஜபக்ஷாக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாட்டை ஒப்படைத்த பின்னர் இற்றைவரை பயணித்த பாதையை மாற்றியமைக்க வேண்டுமென பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி இருந்தோம். எனினும் எந்தவிதமான மாற்றமுமின்றி இற்றைவரை பயணித்த பாதையிலேயே பயணித்து மக்களால் வாழமுடியாத அளவுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முன்னிலையில் மண்டியிட்டு எதேனும் தொகையை பெற்றுக்கொள்ள செயலாற்றுவதோடு ஒட்டுமொத்த நெருக்கடியின் சுமையை மக்கள் மீது திணிப்பதே சமர்ப்பித்துள்ள வரவுசெலவில் அடங்கியுள்ளது. வரவுசெலவுக்குள்ளேயோ அதற்கு வெளியிலோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான எந்தவொரு நடைமுறைச்சாத்தியமான வேலைத்திட்டமும் கிடையாது. ரணில் விக்கிரமசிங்காக்கள் பொறுப்புக்கூறவேண்டிய நெருக்கடியின் சுமையை மென்மேலும் மக்கள்மீது திணித்து ஒருவருட காலத்திற்குள் மின்கட்டணம் மூன்றுதடவைகளில் 400% இற்கு மேல் அதிகரிக்கப்பட்டது. இதனால் மக்களால் மின்கட்டணத்தை தாங்கிக்கொள்ள முடியாததைப்போன்றே கைத்தொழில்கள் சீரழியவும் காரணமாக அமைந்துள்ளது. மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டமை, எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டமை மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக ஏறக்குறைய 2000 கைத்தொழில்களும் தொழில் முயற்சிகளும் மூடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் அறிவித்திருந்தன. இதனால் கடந்த ஒன்றரை வருட காலப்பகுதிக்குள் ஏறக்குறைய பதினைந்து இலட்சம் பேருக்கு தொழில்கள் அற்றுப்போயின. வங்கிக்கடன்பெற்ற 556 தொழில்முயற்சிகள் வங்கிகளுக்கு சொந்தமாகிவிட்டன. நாட்டின் பொருளாதாரத்தை மென்மேலும் பலவீனப்படுத்துகின்ற செயற்பாங்கில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை இந்த தரவுகளின்படி தெளிவாகின்றது. நாட்டை மீட்டெடுப்பதற்கான நோக்கு, திட்டம் அல்லது தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. அன்றைய பொழுதினைக் கழித்து மக்கள் பாரிய அழுத்தத்திற்கு இலக்காக்கப்பட்டுள்ளார்கள்.
மீண்டுமொரு சுற்றில் பாரியளவில் வரிச்சுமை அதிகரிக்கப்பட்டமையால் மற்றுமொரு சுற்றில் பண்டங்களின் விலைகள் அதிகரிக்கின்றன. பொதுமக்கள் மீது இந்த வரிச்சுமையை அதிகரித்து அரசாங்கத்தைச் சுற்றியுள்ள செல்லங்களுக்கு பாரிய சலுகைகளை வழங்கி இருபத்தைந்து சதமாக விளங்கிய சீனி வரியை ரூபா 50 வரை அதிகரித்தமை போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஒட்டுமொத்த நெருக்கடியையும் மக்கள்மீது திணித்து அழிவுமிக்க பாதையிலேயே இழுத்துச்சென்று அழுத்தத்தை மென்மேலும் மக்கள்மீது சுமத்தி அரசாங்கம் வேறு நடிப்புகளில் ஈடுபட்டு வருகின்றது. இலங்கை பொதுஜன பெரமுனவினதும் மகிந்த ராஜபக்ஷவினதும் இந்த வரவுசெலவு பற்றிய நிலைப்பாட்டினை மக்களிடம் முன்வைக்கவேண்டும். ஒவ்வொருவரும் தாம் விடுபட்டுக் கொள்வதற்காக பலவிதமான கதைகளைக் கூறிவருகிறார்கள். அவ்வாறான கேலிக்கூத்துகளால் மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது. இந்த நெருக்கடிக்கு மகிந்த ராஜபக்ஷாக்களும் ரணில் விக்கிரமசிங்காக்களும் இணையாக பொறுப்புக்கூறவேண்டும். உயர்நீதிமன்றம்கூட அவர்கள் பொறுப்புக்கூறவேண்டுமெனத் தீர்மானித்துள்ளது. நீதிமன்றம் என்னதான் கூறினாலும் அவர்கள் பொறுப்பினை ஏற்கப்போவதும் கிடையாது: அதிகாரத்தைக் கைவிடவும் போவதில்லை. மிகவும் சாதகமான வாழ்க்கையை எதிர்பார்த்து இவர்களிடம் அதிகாரத்தைக் கையளித்த பொதுமக்களுக்கு எந்தவிதமான நிவாரணத்தையும் வழங்க நடைமுறைச்சாத்தியமான எதனையும் செய்வதில்லை. அரசாங்க ஊழியர்களுக்கு ஏப்பிறல் மாதத்தில் இருந்து ரூபா 10,000 சம்பளத்தை அதிகரிப்பதாக கூறினாலும் சனவரி மாதத்தில் இருந்தே வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமைகளுக்கு எதிராக வீதியில் இறங்குகின்ற மக்களை அடக்குவதற்கான பங்கரவாத தடுப்புச் சட்டம், சமூக வலைத்தள கட்டுப்பாட்டுச் சட்டம் போன்ற சட்டங்களை கொண்டுவரத் தொடங்கியுள்ளார்கள். தமது உரிமைகளுக்காக கல்வி அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்செய்த ஆசிரியர்கள், அதிபர்கள்மீது தாக்குதல் நடாத்தினார்கள். நாட்டைக் கட்டியெழுப்புவதற்குள்ள இயற்கை வளங்களையும் மனித வளங்களையும் அழித்து வருகிறார்கள்.
எஞ்சியுள்ள இறுதி வளங்களையும் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு விற்று வருகிறார்கள். தபால் அலுவலகத்தையும் விற்றுத்தீர்க்கப் போகிறார்கள். நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இருக்கின்ற கைத்தொழில் அதிபர்களை மின்கட்டணம், எரிபொருள் விலை, வரிச் சுமையை அதிகரித்து வீழ்த்துகிறார்கள். ஏற்றுமதியாளர்களை வீழ்த்துகிறார்கள். நாட்டை கட்டியெழுப்புவதற்காக இடையீடுசெய்யக்கூடிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட தொழில்வாண்மையாளர்கள் மீது பாரிய வரிச்சுமையைத் திணித்து நாட்டைக் கைவிட்டுச் செல்கின்ற நிலையை ஏற்படுத்தி உள்ளார்கள். மக்களுக்கு எதிரான, மக்களை வதைக்கின்ற சர்வாதிகாரத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கைக்கு உலகின் முன்னிலையில் ஏதேனும் நன்மதிப்பினைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்த அனைத்து துறைகளையும் அழித்து வருகிறார்கள். அதற்காக இருந்த கிரிக்கெற் விளையாட்டினையும் எமது கலாசாரத்தையும் கைத்தொழில்களையும் அழித்து நாட்டை வெற்றுத் தரிசுநிலமாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த அழிவுமிக்க பயணப்பாதைக்கு ஒட்டுத் தீர்வுகள் கிடையாது. ரணில் விக்கிரமசிங்காக்களையும் இந்த அழிவுமிக்க வழிமுறையையும் தோற்கடித்து மக்கள்நேயமுள்ள ஆட்சியை உருவாக்குவதை விடுத்து வேறு பதில் கிடையாது. இந்த ஆட்சியைத் தோற்கடித்திட பிரமாண்டமான மக்கள் பலத்தை உருவாக்க வேண்டியுள்ளது. அதேவேளையில் மக்களின் உரிமைகளுக்காக போராடவும் வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
இந்த ஆட்சியைத் தோற்கடித்திட பிரமாண்டமான மக்கள் பலத்தை உருவாக்க வேண்டியதே மக்களின் பொறுப்பாக அமைந்துள்ளது. மறுபுறத்தில் மக்களுக்கு எதிரானவகையில் செயலாற்ற வேண்டாமென நாங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்ய வேண்டியுள்ளது. அரசாங்கம் மீது இருந்த நம்பிக்கை 9% வரை வீழ்ச்சியடைந்துள்ளமை மதிப்பாய்வு அறிக்கையொன்றில் அண்மையில் வெளியாகி இருந்தது. இந்த நிலைமையில் ரணில் விக்கிரமசிங்காக்கள் அரசியலமைப்பின் மறைவில் இருந்துகொண்டு பலவந்தமாக அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சிசெய்து வருகிறார்கள். தேசிய மக்கள் சக்திக்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான திட்டமொன்றும் மக்கள் பலமும் சேர்ந்திருக்கின்றது. மிகுந்த ஒழுக்கத்துடனும் ஒழுங்கமைந்தவகையிலும் நோக்கமொன்றைக் கொண்டதாகவும் அரசாங்கம் மீதான எதிர்ப்பினை வெளிக்காட்ட வேண்டியுள்ளது. அரசாங்கத்தின் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை தோற்கடிப்பதற்கான ஆர்ப்பாட்ட இயக்கத்தையும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மக்களை அணிதிரட்டுவதற்கான செயற்பாடுகளையும் தேசிய மக்கள் சக்தி அமுலாக்கி வருகின்றது. தனித்த போராட்டங்களுக்குப் பதிலாக ஒட்டுமொத்த மக்களையும் சேர்த்துக்கொண்ட செயற்பாடுகள் மூலமாக இந்த ஆட்சியை முடிவுறுத்தி மக்கள்நேயமுள்ள ஆட்சியை நிறுவுவதற்கான இலக்கினைக் கொண்டதாக செயலாற்றுதல் வேண்டும். அதற்கான எதிர்கால செயற்பாடுகளில் ஒரு படிமுறையாக நுகோகோடவில் பாரிய எதிர்ப்பு பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகுந்த சனநாயகரீதியாக ஒழுக்கத்துடன் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதுவரை முன்நோக்கிப் பயணிக்கவேண்டியுள்ளது. மக்களை அல்லற்படுத்த ரணிலுக்கு இடமளித்து வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க எவருக்கும் உரிமை கிடையாது. அமைதிவழியில் எதிர்ப்பினைக் காட்டுவதற்கான மக்களின் உரிமையைப் பாவித்து மக்களை வதைக்கின்ற ஆட்சிக்கு எதிராக தமது எதிர்ப்பினைக் காட்டுவதை நுகேகொடவில் தொடங்குகிறோம். மக்கள் பலத்தை அரசாங்கத்திற்கு வெளிக்காட்டுவதற்காக அனைவரும் நுகேகொடவிற்கு வந்து அரசாங்கத்தை தோற்கடிக்கின்ற போராட்டத்தில் ஒன்றுசேருமாறு கேட்டுக்கொள்கிறோம்.ල්ලා සිටිනවා.
“அரசாங்கத்தின் காலத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமென மக்கள் தீர்மானித்து விட்டார்கள்” –தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய–

இந்த ஆட்சியானது தமது அதிகாரக் கருத்திட்டத்திற்காக தமது வழியுரிமைக்காக மாத்திரம் இயங்கிவருகின்ற அரசாங்கமென்பது மிகவும் நன்றாக உறுதியாகி உள்ளது. அரசாங்கத்தின் பல்வேறு தரப்பினர்களுமே அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்தாலும் தீர்வுக்கட்டமான விடயங்களின்போது அரசாங்கத்தை தோற்கடித்திட செயலாற்றுவதில்லை என்பது மிகவும் தெளிவாகின்றது. மக்களை அல்லற்படுத்திய அவர்களுக்கு எதிராக மக்களிடமிருந்து கிடைக்கின்ற தண்டனையை காலந்தாழ்த்த அவர்கள் செயலாற்றி வருகிறார்கள். சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருக்கு பழக்கமான டீல் அரசியலில் ஈடுபட்டு செயலாற்றி வருகின்ற விதம் தெளிவானதாகும். பௌத்த சமயத்தையும் பல்வேறு நூல்களையும் மேற்கோள்காட்டி அவர் பலவிதமான ஒப்புதல் வாக்குமூலங்களை முன்வைக்கிறார். மாபெரும் உன்னதமான கதைகளைக் கூறினாலும் விற்றுத் தின்கின்ற மற்றும் மற்றும் டீல் அரசியலைத் தவிர வேறு பதில் ரணில் விக்கிரமசிங்கவிடம் கிடையாது. மாறியுள்ளதாக குறிப்பால் உணர்த்துவதற்காக ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொடுத்தாலும் நடைமுறையில் தெளிவாகின்ற விடயம் கடுகளவேனும் மாறத் தயாரில்லை என்பதாகும். வரவுசெலவு பற்றிய கேள்விகளை எழுப்புகையில் ஐ.எம்.எஃப். நிபந்தனைகள் காரணமாக ஒன்றையுமே செய்யமுடியாது எனக் கூறுகிறார். அப்படியானால் நிதி அமைச்சரோ அல்லது அரசாங்கமோ எதற்காக? சர்வதேச தாபனங்களுடன் செயலாற்றுகையில் நாட்டுக்கு அவசியமான மக்களின் பக்கத்தில் இருந்து சிந்திக்கின்ற நிகழ்ச்சிநிரலை அமுலாக்குவதற்காகவே அரசாங்கமும் அமைச்சரவையும் நியமிக்கப்படுகின்றது. சர்வதேச தாபனங்களின் நிகழ்ச்சிநிரல்களையும் விளங்கிக்கொண்டு எமது நிகழ்ச்சிநிரலை வெற்றியீட்டச் செய்விக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
இந்த அரசாங்கத்தின் காலத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென மக்கள் தீர்மானித்து விட்டார்கள். தேர்தலொன்று கிடைக்கின்ற முதலாவது தருணத்திலே அரசாங்கம் விரட்டியடிக்கப்படுமென்பதை அறிந்த அரசாங்கம் மக்கள் அபிப்பிராயத்திற்குப் பயந்து ஒளிந்து இருக்கின்றது. இந்த நிலைமையில் பிரசைகள் என்றவகையில் எமக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது. இந்த நாட்டின் எதிர்காலம், சனநாயகம், எமது உரிமைகளை பாதுகாத்துக்கொள்வதற்காக பிரசைகளே முன்வரவேண்டும். ஆட்சியாளர்கள் பொறுப்பினை கைவிட்டுள்ள தருணத்தில் பிரசைகள் ஏனைய நாட்களைவிட பலம்பொருந்தியவகையில், துணிச்சலுடன், திடங்கற்பத்துடன், நோக்கமொன்றுடன் அதற்காக செயலாற்ற வேண்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அற்காகவே எந்நேரமும் மக்களுடன் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றது. பிரசையின் பொறுப்பினை ஈடேற்றுவதற்காக ஓர் அரசியல் இயக்கமென்றவகையில் பிரசைகளுக்கு அவசியமான ஒழுங்கமைத்தல் பலத்தையும் தலைமைத்துவத்தையும் வழங்கி முன்நோக்கி நகரும்பொருட்டு மிகுந்த திடசங்கற்பத்துடன் செயலாற்றி வருகின்றது. நீண்டகாலம் கழிவதற்கு முன்னர் மக்கள்நேயமுள்ள ஆட்சியொன்றை உருவாக்குகின்ற வரலாற்றுரீதியான மாற்றத்திற்காக திடசங்கற்பத்துடன் செயலாற்றி வருகின்றது. அதுவரை நிலவுகின்ற ஆட்சிக்கு தலைசாய்த்துக்கொண்டு இருக்கவேண்டியதில்லை. எமது உரிமைகளுக்காக நுகோகொடவில் நடாத்தப்படுகின்ற எதிர்ப்பு பேரணியில் பங்கேற்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக மக்கள் ஆணையற்ற அரசாங்கத்திற்காக, ரீலோட் பொலிஸ் மா அதிபரின்கீழ் சட்டமுறையற்ற செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாமென நாங்கள் பாதுகாப்புப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு கூறிக்கொள்கிறோம்.

-Colombo, November 17, 2023- இன்று (17) பிற்பகல் இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் திரு. கோபால் பாக்லேவுக்கு (Gopal Bagle) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் நிகழ்கால அரசியல் நிலைமைகள் மற்றும் இலங்கை முகம்கொடுத்து வருகின்ற பொருளாதார நெருக்கடி தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பில் இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் முதல்நிலை செயலாளர் எல்டோஸ் மெத்திவ் […]
-Colombo, November 17, 2023-
இன்று (17) பிற்பகல் இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் திரு. கோபால் பாக்லேவுக்கு (Gopal Bagle) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது இலங்கையின் நிகழ்கால அரசியல் நிலைமைகள் மற்றும் இலங்கை முகம்கொடுத்து வருகின்ற பொருளாதார நெருக்கடி தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில் இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் முதல்நிலை செயலாளர் எல்டோஸ் மெத்திவ் (Eldos Mathew) அவர்களும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.


-Colombo, November 16, 2023- காசா துண்டுநிலத்தில் உடனடியாக யுத்த நிறுத்தமொன்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் தாபனத்தை வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியின் மகளிர் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்திற்கும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கும் (OHCHR) இன்று கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளனர். சர்வதேச மனிதாபிதான சட்டத்திற்கு அமைவாக பாலஸ்தீனத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனைத்து தரப்பினர்களுடனும் உடனடியாக ஒத்துழைத்துச் செயலாற்றுமாறும் இந்த கடிதத்தில் கோரிக்கை […]
-Colombo, November 16, 2023-
காசா துண்டுநிலத்தில் உடனடியாக யுத்த நிறுத்தமொன்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் தாபனத்தை வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியின் மகளிர் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்திற்கும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கும் (OHCHR) இன்று கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
சர்வதேச மனிதாபிதான சட்டத்திற்கு அமைவாக பாலஸ்தீனத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனைத்து தரப்பினர்களுடனும் உடனடியாக ஒத்துழைத்துச் செயலாற்றுமாறும் இந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கலாநிதி ஹரினி அமரசூரிய (பாராளுமன்ற உறுப்பினர்)> சமன்மலீ குணசிங்க (தேமச நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்)> டாக்டர் ஸ்;வஸ்திகா சமரதிவாகர (தேமச உறுப்பினர்) ஆகியோரால் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் சிரேட்ட மனித உரிமைகள் ஆலோசகர் ரகு மேனனிடம் இன்று இந்த கடிதம் கொழும்பு ஐக்கிய நாடுகள் தாபன அலுவலக வளாகத்தில் கையளிக்கப்பட்டது.
மேலும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நலன்புரி சேவைகளை வெட்டிவிடுகின்ற நடவடிக்கைகளின் தாக்கங்கள் மற்றும் பெண்களினதும் சிறுவர்களினதும் பாதுகாப்பிற்கான வரவுசெலவு ஏற்பாடுகள் குறைக்கப்பட்டமையை உள்ளிட்ட இலங்கையின் நிகழ்கால சமூக – பொருளாதார மற்றும் அரசியல் சூழமைவு பற்றிய கலந்துரையாடலும் இடம்பெற்றது.

-Colombo, November 13, 2023- கார்த்திகை வீரர்களை இழந்து கழிந்துசென்ற 34 வருடங்களில் எமது நாடு முழுமையாகவே அயோக்கியத்தனத்திற்கு இரையாக மாறியுள்ளது. பொதுமக்களின் ஆதனங்களை தமது எண்ணப்படி அனுபவிக்க அவசியமான அரசியல் அயோக்கியத்தனம் உருவாகி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக நாசமாகிய சமூகமொன்று உருவாகி இருக்கின்றது. இந்த நிலைமை தற்செயலாக ஏற்பட்டதொன்றல்ல. அரசியல் அயோக்கியத்தனமும் குற்றச்செயல்களும் நிறைந்த சமூகமொன்று உருவாகியமை மற்றும் பொருளாதாரரீதியாக நாடு முற்றாகவே சீரழிந்தமைக்கு ஏதுவாக அமைந்த பலம்பொருந்திய அடியெடுப்பு 1977 இல் அதிகாரத்திற்குவந்த ஜே. ஆர். […]
-Colombo, November 13, 2023-

கார்த்திகை வீரர்களை இழந்து கழிந்துசென்ற 34 வருடங்களில் எமது நாடு முழுமையாகவே அயோக்கியத்தனத்திற்கு இரையாக மாறியுள்ளது. பொதுமக்களின் ஆதனங்களை தமது எண்ணப்படி அனுபவிக்க அவசியமான அரசியல் அயோக்கியத்தனம் உருவாகி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக நாசமாகிய சமூகமொன்று உருவாகி இருக்கின்றது. இந்த நிலைமை தற்செயலாக ஏற்பட்டதொன்றல்ல. அரசியல் அயோக்கியத்தனமும் குற்றச்செயல்களும் நிறைந்த சமூகமொன்று உருவாகியமை மற்றும் பொருளாதாரரீதியாக நாடு முற்றாகவே சீரழிந்தமைக்கு ஏதுவாக அமைந்த பலம்பொருந்திய அடியெடுப்பு 1977 இல் அதிகாரத்திற்குவந்த ஜே. ஆர். ஜயவர்தன அரசாங்கத்தினாலேயே தொடங்கப்பட்டது. அதுவரை நிலவிய அனைத்துவிதமான சமூக நிறுவனங்களையும் முற்றாகவே சிதைத்து, சனநாயகத்தை முழுமையாகவே வாரிச்சுருட்டி, இலக்கியவாதிகள்மீது தாக்குதல் நடாத்தி, தொழிற்சங்க இயக்கத்தை முற்றாகவே அடக்கி, தேர்தலை நடத்தாமல், தேர்தல்களை பிற்போடுகின்ற தில்லுமுல்லுகளை கடைப்பிடித்து வந்தார்கள். ஜே.ஆர். ஜயவர்தனவின் மேல்மட்டத்திலான மேற்படி செயற்பாடுகளுடன் அடி மட்டத்திலான ஒட்டுமொத்த அரசியல் அதிகாரத்தையும் அயோக்கியர்களின் கைகளுக்கு எடுத்துக்கொள்ளத் தொடங்கினார்கள். பெஸ்டஸ் பெரேரா, அதிகாரி போன்ற காடையர்களால் பாராளுமன்றம் நிரம்பிவழியத் தொடங்கியது. மனிதர்களின் சமூக நன்மதிப்பு, ஒருவர்மீது ஒருவர் கொண்டிருந்த ஈடுபாடுகள் சுக்குநூறாக்கப்பட்டன. மனிதனுக்கு மனிதன் என்றவகையில் இருந்த கௌரவத்தை நாசமாக்கினார்கள். பெரும்பாலானவர்கள் ஜே.ஆர். ஜயவர்தனவின் இந்த வெறித்தனமான ஆட்சிக்கு, ஆயோக்கியத்தனமான தேவைக்கு கட்டுப்பட்டு வாழ ஆரம்பித்தார்கள். அதனை யதார்த்தமாக எற்றுக்கொள்ள பலர் தூண்டப்பட்டார்கள்.
எனினும் இந்த அழிவுமிக்க பயணத்திற்கு எதிராக பொது சமூகத்தின் நன்மதிப்பிற்காக மக்கள் விடுதலை முன்னணி முன்வந்தது. கொடூரத்தை அநியாயத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஜே.ஆர். ஜயவர்தனவின் அணியும் மறுபுறத்தில் சமூக நன்மதிப்பு, சமூக நீதி, சனநாயகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற மக்கள் விடுதலை முன்னணியும் என்றவகையில் 1980 இன் நடுப்பகுதியளவில் சமூகம் கடுமையான பிளவினை நோக்கி பயணித்து இருந்தது. பொதுமக்கள் மனித மாண்பிற்காக, தமது சுதந்திரத்திற்காக மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து வந்தார்கள். இதோ இந்த முரண்பாடு இறுதியில் கருத்தியல்சார்ந்த முரண்பாட்டுக்குப் பதிலாக, மேடைசார்ந்த மோதலுக்குப் பதிலாக, ஆயுதமேந்திய மோதலாக மாறியது. ஜே. ஆர். ஜயவர்தனவின் சர்வாதிகார வெறிக்கு எமது நாட்டின் பல்லாயிரக்கணக்கான மக்கள் இரையாக மாறினார்கள். மக்கள் விடுதலை முன்னணி கட்டியெழுப்பிய, பொதுமக்களின் ஆன்மீகத்தை அழைத்து வந்த எமது கட்சியின் சிருஷ்டிகர்த்தா தோழர் றோஹண விஜேவீர உள்ளிட்ட பல போராட்ட சகபாடிகள் 1989 நவெம்பர் 13 ஆந் திகதி படுகொலை செய்யப்பட்டார்கள். எமது நாட்டையும் சமூகத்தையும் பொருளாதாரத்தையும் அந்த பேரவலம் மூலமாக எடுத்துச்சென்ற பயணத்திற்கு எதிராக சமூக நீதி, நியாயம், சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம்செய்த எமது சகோதர சகோதரிகளை இன்று நாங்கள் நினைவு கூறுகிறோம்.
இன்று எமது சமூகம் பாரிய மாற்றமொன்றைக் கோரிநிற்கிறது. அதற்கான தேவை நிலவுகின்ற, நோக்கு இருக்கின்ற, நேர்மையுள்ள, தாக்குப்பிடிக்கும் ஆற்றல் நிறைந்த, பொறுமையுள்ள அமைப்பினால் மாத்திரமே இந்த மாற்றத்தைச் செய்யமுடியும். வெறுமனே ஆட்களை மாற்றுவதால் அல்லது அரசாங்கத்தை மாற்றுவதால் இதனை சாதிக்க இயலாது. இந்த இயக்கத்திற்கு நேர்மை, தெம்பு, புதிய அரசியல் நோக்கு, அவசியமான பொறுமை, சமூக நீதி பற்றிய எண்ணம், மனித மனங்களுக்கு நெருக்கமான ஆன்மீகம் என்பவற்றை இந்த இயக்கத்திற்கு எவ்வாறு அழைத்து வருவது? நூல்களால், இலக்கியத்தால் மாத்திரம் அவ்வாறான இயக்கத்தைக் கட்டியெழுப்ப முடியாது. இலங்கையில் மாத்திரமன்றி உலகம் பூராவிலும் சமூக மாற்றத்திற்காக தம்மை அர்ப்பணித்த மனிதர்கள் பற்றிய முறையான கற்றாராய்தல் மூலமாக அதனை சாதிக்க முடியும். நான் இவ்வாறு கூறுவது சமூக இயக்கமென்றவகையில் கட்டியழுப்பப்பட்டு வருகையில் 88 – 89 பற்றி ஏன் நினைவுகூறப்படுகின்றது? இந்த சமூக மாற்றத்தை செய்யவேண்டுமாயின் இந்த ஆன்மீகத்தைக்கொண்ட மனிதர்கள் தேவை. இந்த மேடையில் இருக்கின்ற என்னையும் உள்ளிட்ட தொலைக்காட்சியில் காண்கின்ற, அதன் காரணமாகவே சமூகத்தில் அங்கீகாரம் நிலவுகின்ற பலரும் இந்த இயக்கத்தின் பின்னணியில் பெருந்தொகையினராக இருக்கிறார்கள். இன்றும் இந்த மேடையின் வெற்றிக்குப் பின்னால் இருப்பவர்கள் இந்த இயக்கத்தில் இருக்கின்ற தோழர்களின் அர்ப்பணிப்பின் பெறுபேறு ஆகும். அர்ப்பணிப்பு தியாகத்தின் ஊடாக சமூகத்தை மாற்றியமைக்கத் தயாராகின்ற மக்கள் கட்டியெழுப்பட்டுள்ளமை தற்செயலானதொன்றல்ல. எமது கட்சியின் சிருஷ்டிகர்த்தாவை உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான தோழர்கள் எமக்கு அந்த முன்மாதிரியைக் கொடுத்துள்ளார்கள். அந்த கடந்தகாலத்தை மீண்டும்மீண்டும் அசைபோட்டுப்பார்த்து இந்த திட்டவட்டமான சமூக மாற்றத்திற்கு தயாராகி வருகின்ற தருணத்தில் முன்பிருந்ததைவிட அதிகமாக அந்த ஆன்மீகத்தை எமது இயக்கத்தில் கொண்டுவரவேண்டும். அவ்வாறின்றி இடிபாடுகளால் அமைத்துக்கொள்கின்ற அரசாங்கத்தால் அல்லது இயக்கத்தினால் இந்த மாற்றத்தைச் செய்யமுடியாது.
வரலாற்றுடன் பின்னப்பிணைந்த ஆன்மீக நூலில் இருந்து விடுபட்டு இந்த மாபெரும் சமூக மாற்றத்தைச் செய்துவிட முடியாது. பாய்ந்து வருகின்ற அந்த ஆன்மீகத்தை மென்மேலும் பலப்படுத்தி முன்நோக்கி கொண்டுசெல்வதன் மூலமாக மாத்திரமே சம்பந்தப்பட்ட பண்புரீதியான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அத்தகைய ஆன்மீகத்தைக்கொண்ட சமூக இயக்கமொன்றையே மக்கள் விடுதலை முன்னணியைச்சேர்ந்த நாங்கள் கட்டியெழுப்புவோம். சமூக மாற்றத்தை ஆழமாக ஏற்படுத்த வேண்டுமாயின் இறந்தகாலத்தின் ஆன்மீகத்தை மூடி துண்டாடுவதன் மூலமாகவன்றியே அதனை ஏற்படுத்தக்கூடியதாக அமையும். நாங்கள் அச்சமின்றி கடந்த காலத்தில் இடம்பெற்ற தவறுகளை ஏற்றுக்கொள்ளத் தயார். 88 – 89 இல் இடம்பெற்ற தவறுகளை நாங்கள் பல தடவைகள் ஏற்றுக்கொண்டுள்ளோம். அதைப்போலவே ஆயிரக்கணக்கான தடவைகள் அதன் பண்புகளை ஈர்த்துக்கொள்ளத் தயங்காத இயக்கமென்றவகையிலேயே மக்கள் விடுதலை முன்னணி முன்நோக்கி நகரும். கடந்த இரண்டு தசாப்த காலத்திலும் எமது கட்சி கடினமான காலங்களை கடந்து வந்தது. ஒருசில அரசியல் தந்திரோபாங்கள் எமக்கு தோல்வியைத் தந்தன. அந்த தவறுகள் அரசியலில் மாத்திரம் தங்கியிருக்கப் போவதில்லை. கட்சிக்குள்ளேயும் ஊடுருவிச் செல்லும். 2004 இல் ஒருசில அரசியல் தந்திரோபாங்கள் தவறியமை எங்கள் இயக்கத்திற்குள் கசிவடைந்தது. அதனால் இயக்கத்திற்குள் பிளவுகளை தோற்றுவித்தன. மீண்டும் 2012 அளவில் இடம்பெற்ற தோல்விகளை விளங்கிக்கொள்ள முடியாமல், தாக்குப்பிடிக்க முடியாமல், வெற்றிகள் பற்றிய நம்பிக்கையின்றி மேலும் பல பிளவுகள் ஏற்பட்டன. இவ்விதமாக கட்சிக்குள் பலவிதமான நெருக்கடிகளும் முரண்பாடுகளும் உருவாகி இரண்டு தசாப்தங்கள் கழிந்தன. இக்காலத்தில் இருந்த ஒருசில தோழர்கள் தந்திரோபாயங்களில் மாட்டிக்கொண்டு எம்மை குற்றஞ்சுமத்தப்பட்டவர்களாக மாற்றினார்கள். அவர்களும் பங்கேற்று மேற்கொண்ட தீர்மானங்களுக்காக எம்மைக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக மாற்றினார்கள். எதிரியால் கட்டியெழுப்பப்பட்ட குறைகூறல்களுக்கு ஒன்றாக பதிலளித்த ஒருசிலர் வெளியில் சென்று எதிரியின் குறைகூறல்களையே எம்மீது சுமத்தினார்கள்.
இந்த நிலைமைகள் உள்ளகத்தில் மாத்திரமன்றி சமூக அடுக்கிலும் வெளிப்படத் தொடங்கின. கடந்த தேர்தல் முடிவுகளில் 3% இற்கு குறைவடைந்தமை குறைகூறல்களுக்கும் ஏளனம்செய்தலுக்கும் காரணமாக அமைந்தன. உள்ளேயும் வெளியேயும் ஏற்பட்ட பாரிய அழுத்தங்களை தாங்கிக்கொண்டு கிடைகின்ற சிறிய வாய்ப்பினையேனும் வெற்றியாக மாற்றிக்கொள்ள தெம்பினைக் கொண்டு வந்தவர்கள் யார்? வெற்றி பற்றிய நம்பிக்கையுடன் இந்த இயக்கத்தைக் கட்டியெழுப்பக் காரணமாக அமைந்தது இந்த இயக்கத்தில் இருக்கின்ற ஆன்மீகமாகும். தனித்தனி ஆட்களின் சிறப்பம்சங்கள் அல்ல, இடையறாமல் பாய்ந்துவர இயக்கத்தின் ஆன்மீகரீதியான பெறுபேறுகளே அதற்கான காரணமாகும். நிகழ்கால தலைமைக்குழுவின் வியத்தகு ஆற்றல் காரணமாக தற்போதுள்ள பெறுபேறு கிடைக்கவில்லை. இடையறாமல் பாய்ந்து வருகின்ற கார்த்திகை வீரர்களின் சமூக நீதி, சமூக நியாயம் பற்றிய பொறுப்புகளை கைவிடாமையின் பெறுபேறு தற்போது உருவாகி இருக்கின்றது. அவை சாதாரண மனிதர்களால் சாதிக்கக்கூடிய விடயங்களல்ல. அத்தகைய இயக்கமொன்றில் உள்ளடங்குகின்ற மனிதர்களால் மாத்திரம் இத்தகையவற்றை சாதிக்க முடியும். சிறியதொரு வெற்றி கிடைக்காதவிடத்து கட்சியை மாற்றுகின்ற, அழுதுபுலம்புகின்ற நாட்டில் பிரத்தியேக தனித்துவங்களைவிட இயக்கத்திற்குள் இருக்கின்ற சாரம் உறுதுணையாக அமைந்துள்ளது. அந்த சாரம் இந்த கட்சி கட்டியெழுப்பப்பட்ட நாளில் இருந்தே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. சமூக அடுக்கில் தோன்றியுள்ள பாரிய எதிர்பார்ப்புகளால் வசீகரிக்கப்பட்டு சமூக இயக்கமொன்றினால் முன்நோக்கி நகர முடியாது. சமூகத்தின் நம்பிக்கை, கௌரவம் ஒன்று சேரச்சேர மீண்டும்மீண்டும் அதில் பொதிந்துள்ள சாரத்தை உறிஞ்சிக் கொள்ளுமாறு எமக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றது. நாங்கள் அந்த சாரத்தை உறிஞ்சிக் கொள்கிறோம்.
தலைவர்கள் மேல் மட்டத்தில் இருக்கின்ற மற்றும் சமூகத்தை அடிமைத்தனத்திற்கு இலக்காக்கிய நிலைமைக்கிணங்கவே அவர்கள் சமூகத்தை ஒழுங்கமைக்கிறார்கள். அவர்களின் இருப்பு சமூகப் பாதக நிலைமைகளை ஒன்றுதிரட்டுவதாகும். அதற்கு முரணாக சமூக சாதகநிலைமைகளை ஒன்று திரட்டுதல், அனைவரும் ஒன்றுசேர்ந்து கூட்டாக வேலைசெய்கின்ற சமூகமொன்றை ஏற்பாடு செய்வதே எமது பொறுப்பாகும். ஒவ்வொருவரிடமும் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை விளங்கிக்கொண்ட கூட்டாண்மையே தேவை. அவர்கள் இனவாதத்தை கட்டியெழுப்புகிறார்கள். அளவுக்கதிகமாகவே அதன் வேதனைகளை அனுபவித்த ஒரு நாடாக இருந்தபோதிலும் இன்றும் அவர்கள் அதனையே ஒழுங்கமைத்து வருகிறார்கள். அதற்கு எதிராக நாங்கள் தேசிய ஒற்றுமையைக் கட்டிவளர்க்கிறோம். சமூகத்தை சாதகமான பண்புகளைக் கொண்டதாக ஒழுங்கமைப்பதன் மூலமாக நாங்கள் சாதகமான மாற்றமொன்றை செய்துவருகிறோம். அதற்காக ஆக்கமுறையான பண்புகளைக்கொண்ட ஆட்சியொன்றைக் கட்டியெழுப்பவேண்டும். தெற்கின் மக்கள் எம்மீது கவனஞ் செலுத்தியுள்ள அளவுக்கு தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் சமுதாயத்தின் கவனத்தை வென்றெடுப்பதில் நாங்கள் வெற்றிபெறவில்லை. அதனால் வேகமாக இனவாதத்தை நிராகரிக்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களை சமத்துவமான உரிமைகளின் பேரில் ஒழுங்கமைக்கின்ற முதன்மைப் பணியை நாங்கள் ஈடேற்றவேண்டும். அவ்வாறு செய்யாமல் அரசாங்கத்தை அமைப்பதில் பலனில்லை. அவர்கள் சாதிபேதத்தினால் சமூகத்தை ஒழுங்கமைக்கிறார்கள். அதைப்போலவே தொழில்முயற்சி வர்க்கத்தினர் படுமோசமான ஊழல் பேர்வழிகளால் ஒழுங்கமைக்கப்படுகிறார்கள். உண்மையான கைத்தொழிலதிபர்களையும் தொழில்முனைவோரையும் ஒழுங்கமைக்க அவர்கள் முன்வருவதில்லை. உண்மையான கைத்தொழிலதிபர்களையும் தொழில்முனைவோரையும் நாங்கள் ஒழுங்கமைக்க வேண்டும். நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ள சமூக மாற்றத்தின் பருப்பொருளாக அமைவது சாதகமான பண்புகளைக்கொண்டதாக சமூகத்தை ஒழுங்கமைப்பதாகும்.
கூட்டான சமூக மாற்றத்தை மேற்கொள்வதற்கான பண்புகளை கார்த்திகை வீரர்களின் பண்புகளிலிருந்தே சேர்த்துக்கொள்ள முடியும். அந்த வீரர்களின் முன்மாதிரிகள் எமது ஆன்மீகத்திற்குள்ளே இருக்கின்ற அடையாளமாகும். இந்த அடையாளத்தை மறப்பதென்பது வெறுமனே ஐக்கிய தேசிய கட்சியாகவோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாகவோ அமைவதாகும். முன்பிருந்ததைவிட அதிகமாக அந்த ஆன்மீகம் எமக்குத் தேவைப்படுகின்றது. அதிகாரத்தை நெருங்கநெருங்க மிகவும் சாதகமான ஆன்மீகங்களை ஈர்த்தெடுத்த ஆட்களாகவும் இயக்கமாகவும் மாறவேண்டும். இந்த கார்த்திகை வீரர் ஞாபகார்த்தம் முன்னையவற்றைவிட முக்கியமானதாக அமையக் காரணம் அடுத்த கார்த்திகை வீரர் ஞாபகார்த்தத்தை எமது ஆட்சியில் நடாத்த எதிர்பார்த்துள்ளதாலாகும். பொதுவான ஆட்சியொன்றின்கீழ் இந்த பண்புகளை சமூகத்திற்கு எடுத்துச்செல்லவேண்டும். இந்த சமூகம் பல தசாப்தங்களாக அரசாங்கங்களை நிறுவி சாதகமான சமூக மாற்றத்தை எதிர்பார்த்தது. எனினும் அந்த பல தசாப்தங்களாக ஏமாற்றப்படுதலுக்கு இலக்காகி நிர்க்கதிநிலைக்கு வீழ்ந்துள்ளது. ஏமாற்றத்தின் அடிமட்டத்திற்கே தள்ளப்பட்டுள்ளது. அவ்வாறான மக்களை மீண்டும் ஏமாற்ற எமக்கு உரிமை கிடையாது. அந்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்ற ஆட்சியொன்றை உருவாக்கிட வேண்டுமாயின் கார்த்திகை வீரர்களின் ஆன்மீகம் எமக்குத் தேவை. அந்த மக்களை நாங்கள் நேர்மையாகவே நேசிக்கவேண்டும். அவர்களின் எதிர்பார்ப்புகளை அடைவதற்காக நாங்கள் இதயசுத்தியுடன் செயலாற்றுதல் வேண்டும். அதனை விடுத்து வெறுமனே வாக்குகளை பெற்றுக்கொள்கின்ற நோக்கம் மாத்திரம் எமக்கு கிடையாது. இதயத்தின் அடிமட்டத்தில் இருந்து உருப்பெறுகின்ற நேர்மையால் நாங்கள் கட்டிவளர்க்கப்பட வேண்டும்.
சமூக மாற்றத்தை செய்வதற்குப் பொருத்தமான இயக்கமொன்றை நாங்கள் கட்டியெழுப்பி இருக்கிறோமென்ற நம்பிக்கை எம்மிடம் இருக்கவேண்டும். சமூகத்திற்கு நாங்கள் வெறுமனே கனவுகளை, வார்த்தைகளைக் கொடுக்கக்கூடாது. “ஆசியாவின் அதிசயம்” போன்றவற்றை அவர்கள் கூறியுள்ளார்கள். அவர்கள் கூறுவது மாத்திரமே: நாங்கள் கூறுவதை செய்வோம். எனவே முன்னரைவிட தற்போது இந்த இயக்கத்திற்கு கூட்டுமனப்பான்மை அவசியமாகின்றது. அரசியல் வெற்றிக்குள் எமது பங்கினை கைப்பற்றிக்கொள்வதற்காக கட்டியெழுப்பக்கூடிய மனநிலையை இப்போதே கைவிடவேண்டும். வெற்றியில் எங்கேயாவது தமது தனிப்பட்ட பங்கு கிடையாது. அங்கு எல்லா இடத்திலும் இருப்பது எமது கூட்டான பங்காகும். நாங்கள் எமது தனிப்பட்ட எல்லையைக் குறித்துக்கொள்வதன் மூலமாகவன்றி மாபெரும் மனித சமூகத்திற்கு தலைமைத்துவம் வழங்கக்கூடிய ஆற்றல்களும் திறமைகளும் இருக்கின்ற பகுதிகளை உறிஞ்சிக்கொள்வதன் மூலமாகவே வெற்றியை அடைய முடியும்.
நாங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்திலேயே கார்த்திகை வீரர் ஞாபகார்த்தத்தை நடாத்துகிறோம். சமூக மாற்றமொன்றிற்கான பெருங்குரல் நாட்டுக்குள்ளே மாத்திரமன்றி ஐக்கிய அமெரிக்காவில் இருக்கின்ற இலங்கையர் மத்தியிலும்கூட நிலவுகின்ற தருணமாகும். அந்த இலங்கையர்கள் மிகவும் உயர்வான வாழ்க்கையைக் கழித்தாலும் எம்மீது பாரிய எதிர்பார்ப்பினை வைத்துள்ளார்கள். அந்த எதிர்பார்ப்புடன் சூதாட, அவற்றை அதிகார சூதாட்டத்திற்கு எதிரீடு செய்வதற்கான உரிமை எங்களுக்கு இருக்கின்றதா? அந்த எதிர்பார்ப்புகள், அதிகார சூதாட்டத்துடன் பேரம்பேசுகின்ற இடத்திற்கு கொண்டுவர எமக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. எமது பொறுப்பு அந்த எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக மாற்றுவதாகும். இயக்கத்தை சரிவர கட்டியெழுப்பினால் மாத்திரமே அதனை யதார்த்தமாக மாற்றமுடியுமென நான் மீண்டும்மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவல்ல இயக்கமொன்று எம்மிடம் இருக்கின்றதென்பதை நாமறிவோம். அந்த தெம்புடன் எதிரியின் முன்னால் இந்திரகீலம்போல் நிலைதளராமல் இருக்க இயக்கத்தின் பலத்தினாலேயே முடியும். இதுதான் உயிர். அதைனை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
தேசிய மக்கள் சக்தி என்றவகையில் பொதுமக்களை ஒழுங்கமைக்க நாங்கள் பாரிய பணியை மேற்கொண்டுவருகிறோம். அந்த இயக்கத்திற்கு ஆன்மீகத்தை அழைப்பிப்பதற்கான அதிகாரத்தை மக்கள் விடுதலை முன்னணி என்றவகையில் நாங்கள் பொறுப்பேற்க வேண்டும். அதற்காக கார்த்திகை வீரர்களை முன்னொருபொதும் இருந்திராதவகையில் எங்கள் இதயத்திற்குள் சேர்த்துக்கொள்வோம். முன்னொருபோதும் இருந்திராத வகையில் அவர்களின் சாரத்தை நாங்கள் எமது ஆன்மீகத்துடன் சேர்த்துக்கோள்வோம்.
-Colombo, November 13, 2023- இற்றைக்கு 34 வருடங்களுக்கு முன்னராக மக்கள் விடுதலை முன்னணியின் சிருஷ்டிகர்த்தா தோழர் றோஹண விஜேவீர, கட்சியின் பொதுச் செயலாளராக விளங்கிய தோழர் உபதிஸ்ஸ கமநாயக்க உள்ளிட்ட எமது கட்சியின் தலைவர்கள் எமது ஆசான்களாகிய கட்சியின் பெருந்தொகையான சகோதர சகோதரிகளை நாங்கள் “கார்த்திகை ” மாதத்தில் நினைவுகூறுகிறோம். “கார்த்திகை மாதம்” எமது நி்னைவுகளை புதுப்பிக்கின்ற, பல விடயங்களைக் கற்றுக்கொள்கின்ற மாதமாகும். 1989 இன் பின்னர் எம்மால் கார்த்திகை மாதத்தை மறக்க முடியாதுள்ளது. ” […]
-Colombo, November 13, 2023-

இற்றைக்கு 34 வருடங்களுக்கு முன்னராக மக்கள் விடுதலை முன்னணியின் சிருஷ்டிகர்த்தா தோழர் றோஹண விஜேவீர, கட்சியின் பொதுச் செயலாளராக விளங்கிய தோழர் உபதிஸ்ஸ கமநாயக்க உள்ளிட்ட எமது கட்சியின் தலைவர்கள் எமது ஆசான்களாகிய கட்சியின் பெருந்தொகையான சகோதர சகோதரிகளை நாங்கள் “கார்த்திகை ” மாதத்தில் நினைவுகூறுகிறோம். “கார்த்திகை மாதம்” எமது நி்னைவுகளை புதுப்பிக்கின்ற, பல விடயங்களைக் கற்றுக்கொள்கின்ற மாதமாகும். 1989 இன் பின்னர் எம்மால் கார்த்திகை மாதத்தை மறக்க முடியாதுள்ளது. ” நாங்கள் நேரத்தோடு எழுந்துவிட்டோம். நாங்கள் நேரத்தோடு எழுந்துவிட்டோம் என்பதற்காக சூரியன் நேரத்தோடு உதிப்பதில்லை. எனினும் சூரியன் உதிக்கும்போது நேரத்தோடு நாங்கள் விழித்திருப்பது எமக்கு நன்மையைத் தரும்” என தோழர் றோஹண கூறியிருந்தார்.
நாம் அனைவரும் நேரத்துடன் விழித்தெழுந்தவர்களே. நாங்கள் நீண்டகாலமாக விழித்திருந்தோம். மிகவும் இருள்சூழ்ந்த இரவுகள், மிகவும் கடினமான இரவுகளைக் கழித்தோம். நேரத்தோடு விழித்திருந்த எங்களுக்கு தற்போது புதிய உலகத்திற்காக உதயமாகின்ற விடியல், புதிய சூரியக் கதிர்கள் எமது கண்களுக்கு புலப்படத் தொடங்கி உள்ளது. புதிய சமூகமொன்றை நிர்மாணிக்கின்ற வெற்றியை கைக்கெட்டிய தூரத்தில் வைத்துக்கொண்டே 34 வது கார்த்திகை வீரர் ஞாபகார்த்தத்திற்கு வருகைதந்துள்ளீர்கள். இந்த வாய்ப்பினை தவறவிடவோ தவறிழைக்கவோ எவருக்கும் உரிமை கிடையாது. நாங்கள் செல்லவேண்டிய திசை, நோக்கங்களை மீண்டும் நினைவுமீட்க இது எமக்கு நல்லதொரு வாய்ப்பாகும்.
நாங்கள் ஏன் இன்னமும் இறந்தகாலத்திலேயே இருக்கிறோமென ஒருசிலர் எம்மிடம் கேட்கிறார்கள். நாங்கள் கடந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு மிகவும் ஒளிமயமான எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தில் உழைக்கின்ற மனிதர்களாவோம். எதிர்காலத்திற்காக செயலாற்றும்போது எமக்கு இறந்தகாலம் அவசியமாகின்றது. எதிர்கால வெற்றிகளுக்கு வரலாற்றின் பாடங்களே எமக்கு வழிகாட்டுகின்றன. எமது நாட்டில் நிலவுகின்ற இந்த பேரவலத்திற்கான காரணம் ஆட்சியாளர்கள் கடந்த காலத்தில் வரலாற்றினை ஒருபுறம் ஒதுக்கிவைத்தமையாகும். வரலாற்றினை ஒருபுறம் ஒதுக்கிவைப்பதையே 1978 இல் நாட்டை ஆட்சிசெய்த ஜே.ஆர். ஜயவர்தன முதலில் செய்தார். வரலாறு, நோக்கம், ஆழம், ஆன்மீகம் இல்லாத வெற்றுச் சமூகமொன்றை உருவாக்கினார். அந்த சமூகப் பேரவலத்தில் நாமனைவரும் மூழ்கி இருக்கிறோம். எமக்கு வரலாறு தேவை. வரலாற்றில் வாழ்ந்துகொண்டிருப்பதற்காக அல்ல, வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதற்காக. அந்த குறைகூறுகின்ற கனவான்களால் இன்னமும் வரலாற்றிலிருந்து விடுபட இயலாதுள்ளது.
எம்மைக் குறைகூறுகின்ற அவர்கள் இன்னமும் உயிர்வாழ்வது ஜயவர்தன நிர்மாணித்த வரலாற்றிலேயே. அவர்கள் அடிக்கடி கூறுகின்ற விடயம்தான் “88 பீதிநிலை தருணம்”. 77 இல் இருந்தே பீதிநிலை நிலவியது. அதுதான் ஐக்கிய தேசிய கட்சியின் பீதிநிலை. அதற்கு முகங்கொடுத்த இயக்கமே நாங்கள். எமது இயக்கத்தை அடக்கி, தலைவர்களை படுகொலை செய்து ஜயவர்தன ஒரு வரலாற்றினை எழுதினார். இந்த வரலாற்றினைத்தான் மகிந்த ராஜபக்ஷ ஏந்திச் செல்கிறார். அவர்கள் வரலாற்றினை தத்தமக்கு தேவையான வகையில் எழுதிக் கொள்கிறார்கள். போராட்டத்தின் பின்னர் வரலாற்றினை எழுதியவர்கள் வெற்றிபெற்றவர்களே. சமூக நீதிக்காக, விடுதலைக்காக புரிந்த போராட்டம் தோல்வியடைந்த பின்னர் அந்த போராட்டத்திற்கு சேதமேற்படுகின்றவகையில் வெற்றிபெற்றவர்கள் வரலாற்றினை எழுதினார்கள். இந்த வரலாற்றினை மாற்றியமைப்பதற்கான காலம் தற்போது பிறந்துள்ளது. இதுவரை கொண்டுவந்த தவறான வரலாற்றினை மாற்றியமைப்பதற்கும் புதிதாக எழுதுவதற்குமான பொறுப்பு உங்களிடமும் எங்களிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.
உரோமாபுரியில் அடிமைத்தனம் நிலவியவேளையில் அந்த அடிமைமுறைக்கு எதிராகப்போராடிய ஸ்பாட்டகஸ் ஆட்சியார்களால் படுகொலை செய்யப்பட்டார். உரோம ஆட்சியாளர்களின் வரலாற்றின்படி ஸ்பாட்டகஸ் ஒரு குற்றவாளி. எனினும் பல வருடங்களுக்குப் பின்னர் இன்று ஸ்பாட்டகஸ் முழு உலகிற்குமே ஒரு வீரனாக மாறியுள்ளார். 1818 இல் தோன்றிய ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சி வெள்ளைக்கார ஏகாதிபத்தியவாதிகளால் தவிடுபொடியாக்கப்பட்டது. கிளர்ச்சியை நெறிப்படுத்திய கெப்பெட்டிபொல போன்றவர்கள் வெள்ளைக்கார ஏகாதிபதியவாதிகளுக்கணங்க ராஜதுரோகிகள், பயங்கரவாதிகளானார்கள். வெள்ளைக்கார ஆட்சியாளர்கள் அவ்வாறுதான் வரலாற்றினை எழுதினார்கள். அதைப்போலவே 1848 மாத்தளைக் கிளர்ச்சியை நெறிப்படுத்திய வீரபுரன்அப்பு அணியினர் படுகொலை செய்யப்பட்டார்கள். புரன்அப்புவின் அணியினரை பங்கரவாதிகளாக மாற்றி அவர்கள் வரலாற்றினை எழுதினார்கள். அதே வரலாற்றினைத்தான் ஒருசிலர் இன்றும் புரிந்து வருகிறார்கள். வரலாற்றினை மீண்டும் வாசிக்க , எழுத அவசியமான காலமொன்று தற்போது வந்துள்ளது.
இந்த வரலாற்றினை 1977 இல் இருந்து தொடங்கவேண்டும். 1977 இல் ஜே.ஆர். ஜயவர்தன அதிகாரத்திற்கு வந்து நிறைவேற்று அதிகாரம்கொண்ட அரசாங்கத்தை அமைத்துக்கொண்டார். தனியொருவரின் கைகளில் அதிகாரத்தை எடுத்துக்கொண்டார். நியதிச்சட்டமுறையான சர்வாதிகாரத்தை உருவாக்கினார். எதிர்க்கட்சியை அடக்கியாளத் தொடங்கினார். அனைத்துச் சக்திகளையும் அடக்கத் தொடங்கினார். பொலீஸ், இராணுவத்திற்கு மேலதிகமாக தொழிற்சங்களிலிருந்தும் காடையர் குழுக்களை அமைத்தார். செய்தித்தாள்களில் அந்தக் குழுக்கள் “சண்டியர் கூட்டுத்தாபனம்” என அழைக்கப்பட்டது. மக்களை அதிகளவில் அல்லற்படுத்தினார்கள். 1980 யூலை வேலைநிறுத்தத்திற்கு முன்னர் சோமபால எனும் தொழிலாளியை படுகொலை செய்தார்கள். 80 யூலை வேலைநிறுத்தத்தின்போது ஒரு இலட்சத்தை விஞ்சிய எண்ணிக்கை கொண்டவர்கள் தொழிலில் இருந்து வெளியில் போடப்பட்டார்கள். ஒருசிலர் தற்கொலை புரிந்துகொண்டார்கள். அந்த வரலைாற்றினை எவருமே பேசுவதில்லை. 1981 மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலின்போது காடைத்தனமிக்க அமைச்சர்கள் யாழ்ப்பாணத்தின் வாக்குப்பெட்டிகளைத் திருடித் தீமூட்டினார்கள். நூலகத்திற்கு தீ மூட்டினார்கள். வடக்கின் பிரிவினையில் தாக்கமேற்படுத்திய ஒரு காரணம் அதுவாகும். ரணில் என்பவர் அக்காலத்தில் ஜே.ஆர். அரசாங்கத்திள் ஓர் அமைச்சர். வெள்ளையறிக்கைக்கு எதிராக போராடிய மாணவர்களைத் தாக்கினார். உரிமைகளைக் கோரிய மக்களைத் தாக்கினார். கல்வியைக் கத்தரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட வெள்ளையறிக்கைக்கு எதிரான போராட்டத்திற்கு மக்கள் விடுதலை முன்னணி தலைமைத்துவம் அளித்தமையால் அதனை அமுலாக்க ஆட்சியாளர்களால் இயலாமல் போயிற்று. மாணவர் இயக்கம் முன்னெடுத்த போராட்டம் காரணமாக கல்வியைப் பாதுகாத்துக்கொள்ள இயலுமாயிற்று..
அத்துடன் நின்றுவிடாமல் அரசாங்கத்தை விமர்சித்த பலர்மீது தாக்குதல் நடாத்த தொடங்கினார்கள். “தார்மீக சமுதாயம்” எனும் நூலை எழுதிய பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திரவை வடிகானில் இட்டுத் தாக்கினார்கள். பெண்கள் பேரணியொன்று செல்கையில் விவியன் குணவர்தனவை உள்ளிட்ட பெண்கள்மீது தாக்குதல் நடாத்தினார்கள். ஒருசில வழக்குத் தீர்ப்புகளை வழங்கிய நீதியரசர்களின் வீடுகள்மீது குண்டர்களைக்கொண்டு கல்லெறிந்தார்கள். நீதித்துறைமீது அழுத்தம் கொடுத்தார்கள். இவ்வாறான வரலாற்றினையே ஜே,ஆர். ஜயவர்தனாக்கள் உருவாக்கினார்கள். பெண்கள் மீதான வல்லுறவுக்காக சிறைப்படுத்தப்படடிருந்த கோனவல சுனிலுக்கு சனாதிபதி மன்னிப்பு வழங்கி அத்துடன் நின்றுவிடாமல் சமாதான நீதிவான் பதவியையும் கொடுத்தார்கள். இத்தகைய வலாற்றுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார்? ரணில் அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சராவார். அவரும் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும்.
1982 இல் மக்கள் கருத்துக் கணிப்பு கொண்டுவரப்பட்டது. 1983 பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டிருப்பின் மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்திற்கு வந்திருக்கும். ஜே.ஆரின் ஆறில்ஐந்து பெரும்பான்மைப்பலம் இல்லாமல் போயிருக்கும். அதனைத் தடுப்பதற்காக மேலும் ஆறு வருடங்களுக்கு நீடித்துக்கொள்வதற்காக மக்கள் கருத்துக் கணிப்பு நடாத்தப்பட்டது. அது ஒரு கொள்ளைக்கார மக்கள் கருத்துக்கணிப்பு. எமது தலைவர் தோழர் றோஹண விஜேவீர இந்த மக்கள் கருத்துக் கணிப்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். அனைவரையும் அடக்கியாண்டாலும் மக்கள் விடுதலை முன்னணியை அடக்க முடியாதென்பதை ஜே.ஆர். உணர்ந்தார். 1983 இல் ஜே.ஆர். உருவாக்கிய யூலை இனக் கலவரத்தைப் பாவித்து மக்கள் விடுதலை முன்னணி, நவ சமசமாஜக் கட்சி, கமியுனிஸ்ற் கட்சி என்பவற்றைத் தடைசெய்தார். சில மாதங்களுக்குப் பின்னர் கமியுனிஸ்ற் கட்சியினதும் நவ சமசமாஜக் கட்சியினதும் தடையை நீக்கினார். மக்கள் விடுதலை முன்னணியின் தடையை நீக்கவில்லை.
மக்கள் விடுதலை முன்னணி சனநாயகரீதியாக அரசியலில் ஈடுபட்ட ஓர் இயக்கமாகும். சனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோழர் றோஹண விஜேவீர ஐவரில் மூன்றாமிடத்தைப் பெற்றார். தேர்தலில் போட்டியிட முன்வந்த, பகிரங்க அரசியலுக்கு வந்த, பொதுமக்கள் ஒழுங்கமைத்த அரசியல் இயக்கமொன்றை தடைசெய்தலுக்காக நிலவிய காரணமென்ன? இன்றும் அதற்கான காரணம் கிடையாது. 1983 யூலை கலவரங்களுடன் எம்மை தொடர்புபடுத்தினாலும் எமக்கெதிராக வழக்கு கிடையாது. கட்சியைத் தடைசெய்தது மாத்திரமன்றி அதனைத் தொடர்ச்சியாக பேணிவந்தார். தோழர் றோஹண விஜேவீர கட்சித் தடையை நீக்குமாறு உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்: சனாதிபதி செயலாளருக்கு எழுதினார்: மனித உரிமைகள் அமைப்புகளுக்கு எழுதினார். அக்காலகட்டத்தில் கட்சி செயலாளர் லயனல் போபகே கைதுசெய்யப்பட்டார். விடுதலை பெற்று வந்து சனாதிபதி செயலாளர் மெணிக்திவெலவை சந்தித்து தடையை நீக்குமாறு கோரினார். அதற்கு எவருமே செவிசாய்க்கவில்லை. ஜே.ஆர். ஆல் விலைக்கு வாங்க முடியாத, அடிமைப்படுத்த முடியாத, பயமுறுத்த முடியாத, அவர்களுக்கு அரசியல் சவாலாக அமைந்த எமது வர்க்கத்திலிருந்து உருவாகிய இந்த இயக்கத்தை அழிக்கும் நோக்கத்துடன் இருந்தார்கள். ஏன் அந்த வரலாறு எதனையும் பற்றிப் பேசுவதில்லை?
1988 தற்செயலாக வந்ததொன்றல்ல. 83 இல் மக்கள் விடுதலை முன்னணி ஆயுதமேந்தியதா? 84, 85, 86, 87 இல் ஆயுதமேந்தியதா? இல்லை. நாங்கள் தொடர்ச்சியாக தடையை நீக்கிக்கொள்ள முயற்சிசெய்தோம். “தடையை நீக்கு” என நானும் போஸ்டர் ஒட்டியிருக்கிறேன். அவ்விதம் போஸ்டர் ஒட்டிய தோழர்களை பிடித்துக்கொண்டுபோய் கொலை செய்தார்கள். அந்த வரலாறு எழுதப்பட்டுள்ளதா? விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதா? 1987 மே தினம் தடைசெய்யப்பட்டது. மக்கள் அபயாராமவில் ஒன்றுகூடியதும் அங்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இருவர் இறந்தார்கள். அதுமாத்திரமல்ல 1987 உடன்படிக்கையை கைச்சாத்திட்டு இலங்கையை இந்தியாவிற்கு தாரைவார்த்துக் கொடுத்தார்கள். அதன்போது தேசப்பற்றுகொண்ட போராட்டமொன்று தொடங்கியது. அது சிவில் யுத்தம் வரை பயணித்தது. அந்த சிவில் யுத்தத்திற்குள்ளே தான் 88 – 89 பற்றி பேசப்படுகின்றது. 88 – 89 ஜயவர்தனாக்கள் திட்டமிட்டு நிர்மாணித்த ஒன்றாகும். அதனைத் தவிர்த்துச் செல்வதற்காக மேற்கொண்ட பிரயத்தனங்கள் தோல்வியடைந்தமையால் அதனை எதிர்கொள்ளவேண்டி நேரிட்டது. “மண்டியிட்டு வாழ்வதைப் பார்க்கிலும் சொந்தக் கால்களால் எழுந்துநின்று மடிவது மேலானது” என்ற நம்பிக்கை எமக்கு நிலவியது. இன்றும் நாங்கள் மண்டியிட்டு வாழத் தயாரில்லை.
இன்று அரசியல் மாறிவிட்டது. எமது இயக்கத்துடன் பாரிய மக்கள் இயக்கம் ஒன்றுசேர்ந்துள்ளது. இன்று உலக அரசியல் மாறியுள்ளது. வெகுசன ஊடகங்கள் விரிவடைந்துவிட்டன. மக்களை தகவல்கள் வேகமாக சென்றடைகின்றன. அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களிடம் கூட்டுமனப்பான்மை கிடையாது. பலவீனமடைந்துள்ளார்கள். சனாதிபதிக்கு அரசியலமைப்பினாலன்றி மக்களின் பலம் கிடையாது. அன்று ஆடிய ஆட்டங்களை தற்போது ஆடமுடியாது. அன்று ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் “பச்சைப் புலிகள்”, “பிறா” போன்ற உத்தியோகபூர்வமற்ற காடையர் கும்பல்களை உருவாக்கியது. மக்கள் விடுதலை முன்னணியை அபகீர்த்திக்கு உள்ளாக்க, தனிப்பட்ட பழிவாங்கல்களுக்காக எக்கச்சக்கமான படுகொலைகளை செய்தார்கள். சதித்திட்டத்தின் விளைவாகவே இராணுவக் குடும்பங்களை படுகொலை செய்தார்கள். அன்று தொழில்நுடபம் இருந்திருப்பின் அவையனைத்துமே அம்பலமாகி இருக்கும். ஓர் உதாரணத்தை எடுத்துக்கொண்டால் பிரேமகீர்த்தி த அல்விஸ் அவர்களின் படுகொலை பற்றி கூறியவேளையில் அரசாங்கத்துடன் இப்போதும் இருக்கின்ற ஊடகத்துறையைச் சேர்ந்த பலம்பொருந்திய ஒருவர் இந்த படுகொலைக்கு பங்காளியாக இருந்தாரென அவரது மனைவியும் பிள்ளைகளும் உறுதிப்படுத்திக் கூறினார்கள். பகிரங்கமாகக் கூறினாலும் இற்றைவரை அதுபற்றிய விசாரணையொன்று மேற்கொள்ளப்படவில்லை.
இந்த வரலாற்றுப் பயணம்பற்றி அறிந்திராமல் ரணில் விக்கிரமசிங்காக்களின், ராஜபக்ஷாக்களின் பேஸ்புக்குகளில் எழுதுகின்ற தம்பிமார்களிடம் வரலாற்றினை சரிவரக் கற்றுக்கொள்ளுமாறு கூறுகிறேன். எங்களுக்கு மனிதர்கள் பெறுமதியானவர்கள். எமது இயக்கம் உருவாக்கப்பட்டிருப்பதும் பிரமாண்டமான சிரமங்களின் மத்தியில் செயலாற்றி வருவதும் நாங்கள் மக்களை நேசிப்பதாலேயே. நாங்கள் மக்களின் கவலைகளைத் துடைத்தெறிந்து மகிழ்ச்சியாக வைப்பதற்காக உழைக்கின்ற இயக்கமாவோம். தமது வாழ்க்கையை ஒருபுறம் வைத்துவிட்டு பொதுமக்களின் வாழ்க்கைக்கு மகிழ்ச்சியையும் பெறுமதியையும் வழங்குவதற்காக செயலாற்றிய இயக்கமொன்றின் வீரர்களையே நாங்கள் இன்று நினைவுகூறுகிறோம். மக்கள் விடுதலை முன்னணி 1988 – 89 காலப்பகுதியிலான சம்பவங்கள் பற்றி அவ்வாறுதான் நோக்குகின்றது. நாட்டைக் கட்டியெழுப்பவிருந்த பிரமாண்டமான இளைஞர் தலைமுறையினரை நாசமாக்கிய அரசியலைத் தோற்கடித்து நாங்கள் முன்நோக்கி நகரவேண்டும். அந்த வரலாற்றுக்குள் நாங்கள் எமது குறைபாடுகளைக் கண்டோம். ஆட்சிக் குழுக்கள், ரணில் விக்கிரமசிங்க இன்றும் அந்த வரலாறு பற்றி எதுவுமே கூறுவதில்லை. இப்போது நாங்கள் அந்த வரலாற்றிலிருந்து முன்நோக்கி நகரவேண்டும். நாடு தற்போது மிகவும் கவலைக்கிடமான நிலைமையிலேயே இருக்கின்றது.
முன்னர் புரிந்த ஏமாற்றுவேலையையே ஆட்சியாளர்கள் இன்று சமர்ப்பிக்கின்ற வரவுசெலவிலும் புரிந்து வருகிறார்கள். 15 இலட்சம் பேருக்கு தொழில்களை இழக்கச்செய்வித்து கைத்தொழில்களின் உற்பத்தி 27% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று இந்த நாட்டில் பொருளாதாரமொன்று கிடையாது. நாட்டில் இருந்த கைத்தொழில்களை விற்றுத் தின்பதில் ஆரம்பித்த செயற்பாடு இன்று தபால் கந்தோரை விற்பது வரை வந்துள்ளது.
மனிதநேயமுள்ள அரசியலில் ஈடுபட்டு சமூகமொன்றை மாற்றியமைக்கவே கார்த்திகை ஞாபகார்த்தத்தின் அனுபவங்களை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். இந்த சமூகத்தை மாற்றியமைக்கவல்ல பிரமாண்டமான மனித பலத்தைக்கொண்ட, திராணிகொண்ட, விடாப்பிடியாக பேராடுகின்ற அரசியல் இயக்கமொன்றை நாங்கள் கட்டியெழுப்பி இருக்கிறோம். வசதியீனங்களை விஞ்சியதாக நோக்கங்களின்பால் இடையறாமல் பயணிக்கின்ற அரசியல் இயக்கமொன்று இருக்குமாயின் அது மக்கள் விடுதலை முன்னணி மாத்திரமே. நிலைமைகளுடன் புதுப்பொலிவு அடைந்த, புதியதாக மாற இயலுமென்பதை நிரூபித்த, தமது மிகச்சிறந்தவற்றை தக்கவைத்துக்கொண்டு மாறிவருகின்ற ஒரே அரசியல் இயக்கம் மக்கள் விடுதலை இயக்கமாகும். தன்னலமற்ற மனிதனை உருவாக்க முடியுமென்பதை எமது கட்சி நடைமுறையில் நிரூபித்துள்ளது. பொது நோக்கமொன்றுக்காக உழைக்கின்ற குழுவொன்று மக்கள் விடுதலை இயக்கத்தில் இருக்கின்றதென்பதை மக்கள் எற்றுக்கொண்டுள்ளார்கள். இறுதியில் உயிரையும் அர்ப்பணிக்கவல்ல, நோக்கங்களை கைவிடாத இயக்கமென்பதையும் நிரூபித்துள்ளது.
அதைப்போலவே தேசிய மக்கள் சக்தியுடன் நாங்கள் ஒன்றுசேர்ந்து ஊழலற்ற அரசியல் இயக்கமொன்றைக் கட்டியெழுப்பி உள்ளோம். ஊழல்நிறைந்த கறுப்புப் பொருளாதாரத்திற்குள்ளே ஊழலற்ற அரசியல் இயக்கமொன்றை உருவாக்குவது, ஊழலற்ற அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்குவது, ஊழலற்ற அங்கத்தவர்களை உருவாக்குவது மிகவும் சிரமமான வேலையாகும். அதோ அந்த வேலையை நாங்கள் செய்திருக்கிறோம். தேசிய மக்கள் சக்தியை விரும்புபவர்கள் அவ்வாறு விரும்புவதற்கான பிரதான காரணம் ஊழலற்ற அரசியல் இயக்கமாக அமைவதே என்பது மதிப்பாய்வுகள் மூலமாக வெளிப்பட்டுள்ளது. அது எளிமையான விடயமல்ல. ஊழலற்றவர்களாக இருப்பது கேலிக்கூத்தாக அமைந்துள்ள சமூகத்தில் அவற்றைத் தாங்கிக்கொண்டு முன்மாதிரியாகத் திகழ்வது இலகுவான ஒன்றல்ல. திருடினால் பரிகாசம் செய்யாத, நண்பரிடமிருந்து கொடையாக கிடைப்பது பரிகாசத்திற்கு இலக்காகியுள்ள சமூகமொன்றில் நாங்கள் ஊழல்நிறைந்த கலாசாரமொன்றை உருவாக்கி இருக்கிறோம். இப்போது அவர்களுக்கு எமது ஊழலற்ற தன்மை ஒரு சவாலாக மாறியுள்ளது. அவர்கள் ஊழல் பேர்வழிகள் என்பதால் ஜேவீபியும் ஊழல் நிறைந்தது எனும் சமூக கருத்தியலை உருவாக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். அதற்காக படைக்கப்பட்ட ஒருசில செய்திகளுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் அவற்றை படைத்தவர்கள் மன்னிப்புக் கோரவேண்டியும் ஏற்பட்டது. குறிப்பாக தோழர் அநுரவை இலக்காகக்கொண்ட சேறுபூசுகின்ற இயக்கமொன்று தொடங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒருவர்மீது ஒருவர் குறைகூறிக்கொண்டு முன்னெடுத்துவருகின்ற இந்த சேறுபூசுகின்ற இயக்கத்தினால் இரத்தத்தால் இணைந்த எமது சகோதரத்துவத்தை சிதைக்க முடியாது. எமது கட்சியில் இருந்த தவறுபுரிந்தவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். இத்தகைய எமது நல்ல பண்புகளை பாதுகாத்துக்கொண்டு முன்நோக்கி நகர்ந்துள்ளோம். எமது வாழ்க்கையில் சேகரித்துக்கொண்ட மிகச்சிறந்தவற்றை கட்சியுடன் சேர்த்துவந்த பயணத்தில் மக்கள் விருப்பத்தின்பேரில் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் இலக்கினை நாங்கள் நெருங்கியுள்ளோம்..
கார்த்திகை வீரர் ஞாபகார்த்தத்தில் அந்த சகோதர சகோதரிகள் எமக்குப் பெற்றுத்தந்துள்ள அனுபவங்கள், மிகச்சிறந்த முன்னுதாரணங்கள் மற்றும் அவர்களின் நோக்கங்களுக்கிணங்க மிகவும் சாதகமாக சமூகத்தைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம். நீதியான சமூகம், நெறிமுறைசார்ந்த மனிதன், அடிமைத்தனமற்ற இலங்கையை உருவாக்கும் நோக்கத்துடன் முன்நோக்கி நகர்ந்த அவர்களை இடைநடுவில் கொன்றுபோடுகையில் எமக்கு பொறுப்புக்களை ஏற்கவேண்டி நேரிட்டது. மிகவும் குறுகிய எதி்ர்காலத்தில் அவர்களின் எதிர்பார்ப்புகள் இந்த பெருநிலத்தில் விளைகின்ற நாள் வரும். அதனை ஊழல்பேர்வழிகளால், ரணில் விக்கிரமசிங்காக்களால், மகிந்த ராஜபக்ஷாக்களால் தடுக்க முடியாது. சேர்க்கக்கூடிய, சேர்த்துக்கொள்ள வேண்டிய குழுவினரை, அனுவங்களையும் அறிவினையும் சேர்த்துக்கொண்டு மிகப்பிரமாண்டமான மக்கள் இயக்கமொன்றைக் கட்டியெழுப்பி, நெறிமுறைகளை பாதுகாத்துக்கொண்டு முன்நோக்கிச் செல்லவேண்டிய பொறுப்பு எம்மனைவருக்கும் இருக்கிறது. நாங்கள் மக்களின் ஆட்சியை உருவாக்க வேண்டும். அதற்காக பொருத்தமான பொதுமக்களை நிர்மாணிக்க ஒன்றுபட்டு அடக்கமாகவும், இலக்குகளைக் கொண்டதாகவும், பொய்க்கிடங்குகளில் கால் பதிக்காமல், மிகுந்த போராட்டக் குணத்துடன் இந்த பயணத்தை மேற்கொள்ள நாங்கள் பலமடையவேண்டும். இந்த யுகத்தின் பலம்பொருந்திய ஆயுதம் “கருத்துக்களால் ” போராடுவதே என தோழர் றோஹண விஜேவீர கூறியுள்ளார். ரணில் விக்கிரமசிங்காக்கள், மகிந்த ராஜபக்ஷாக்கள் ஆகியோரை கருத்துக்களால், கருத்தியல்களால் தோற்கடித்துவிட்டோம். தற்போது எஞ்சியிருப்பது அரச அதிகாரத்தில் இருந்து தோற்கடிப்பதாகும். அதற்காக கார்த்திகைவீரர் ஞாபகார்த்தத்தில் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய பெறுமானங்கள் இருக்கின்றன.
நாங்கள் வசிப்பது மிகுந்த அழிவுநிறைந்த படுமுமோசமான சமூகத்திலேயே ஆகும். எல்லாவற்றினதும் விலையை அறிந்த, பெறுமதியை அறியாத சமூகத்தை மாற்றியமைத்து இந்த நாட்டை நாங்கள் உயிர்வாழக்கூடிய நாடாக மாற்றுகின்ற நோக்கத்தை வெற்றியீட்டவேண்டும். முப்பத்தைந்தாவது கார்த்திகைவீரர் ஞாபகார்த்தத்தை மக்களின் ஆட்சிக்குள் நினைவுகூற முப்பத்தி நான்காவது கார்த்திகை வீரர் ஞாபகார்த்தத்தில் திடங்கற்பம் பூணுவோம். எனது உரையை நிறைவுசெய்ய முன்னராக ரத்ன ஸ்ரீ விஜேசிங்க எழுதிய கவிதையின் ஒருபகுதியை மேற்கோள்ள காட்ட விரும்புகிறேன். 1971 போராட்டம் பற்றி எழுதிய அந்த கவிதைப்பகுதி இன்றும் பொருந்தக்கூடியதாக பாரிய பொருள்நிறைந்த கவிதையாகும்.
என் நண்பர்களே பூக்கள் மலர்ந்தால் மரத்தில்
காய்ப்பது நிச்சயமதில் சந்தேகம் கிடையாது
மனதால் தளரவிடாமல் மலர்களின் மென்மையை
வாரீர் மகரந்தச் சேர்க்கைக்கு சீக்கிரம் கூட்டமாக
இந்த கொடிய சமூகத்தை மாற்றியமைத்து மிகவும் சாதகமான சமூகமொன்றை எமது கைகளால் நிர்மாணித்திட அனைவருக்கும் ஆக்கமும் ஊக்கமும் கிடைக்கட்டுமாக
-Colombo, November 06, 2023- கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியைப் பெற்றுக்கொண்ட ஆரம்ப காலத்தில் பெறுமதி கணிக்கப்பட்ட ரூபா 50/- இறக்குமதித் தீர்வையை 25 சதத்திற்கு குறைத்ததால் புரிந்த வேலையையே தற்போது ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் 25 சத வரியை ரூபா 50/- வரை அதிகரித்து தமது கூட்டாளிகளுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மக்கள் இருப்பது பிரமிட் வில்மா எனப்படுகின்ற கம்பெனியை முதன்மையாகக்கொண்ட கூட்டாளிகள் சிலருக்கு செல்வத்தைக் குவிக்க வாய்ப்பினை எற்படுத்திக்கொடுக்கும் அளவிலான பின்புலத்தில் அல்ல. மரத்தால் வீழ்ந்தவனுக்கு […]
-Colombo, November 06, 2023-


கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியைப் பெற்றுக்கொண்ட ஆரம்ப காலத்தில் பெறுமதி கணிக்கப்பட்ட ரூபா 50/- இறக்குமதித் தீர்வையை 25 சதத்திற்கு குறைத்ததால் புரிந்த வேலையையே தற்போது ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் 25 சத வரியை ரூபா 50/- வரை அதிகரித்து தமது கூட்டாளிகளுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மக்கள் இருப்பது பிரமிட் வில்மா எனப்படுகின்ற கம்பெனியை முதன்மையாகக்கொண்ட கூட்டாளிகள் சிலருக்கு செல்வத்தைக் குவிக்க வாய்ப்பினை எற்படுத்திக்கொடுக்கும் அளவிலான பின்புலத்தில் அல்ல. மரத்தால் வீழ்ந்தவனுக்கு மாடு ஐந்தாறு தடவைகள் முட்டியதுபோல் அரசாங்கம் எரிபொருள் விலை, மின்சாரக் கட்டணம், வற் வரியை அதிகரித்து பலவிதமான வாதங்களை கொண்டுவருகின்றது. சீனி வரியை விதித்தல் சம்பந்தமாக வர்த்தக அமைச்சர் நளீன் பர்னாந்து பொறுப்புக்கூற வேண்டும். இந்த வரி திடீரென ஏன் அதிகரிக்கப்பட்டதென்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். சந்தையில் நிலவுகின்ற விலைகளில் பாவனையாளர் அதிகாரசபை விதிக்கின்ற அதிகபட்ச விலை மற்றும் வரி விதிக்கப்பட்ட பின்னர் தனிவேறாக வற் என்ற வகையில் சீனி சம்பந்தமாக பல்வேறு விலைமட்டங்கள் நிலவுகின்றன. சீனிக்காக 25 சத வரியைச் செலுத்தி துறைமுகத்திலிருந்து விடுவித்துக்கொள்ளப்பட்ட சீனிக்காக ரூபா 50/- வரியை விதித்ததன் மூலமாக ரூ 40.75 வரியை ஒரு கிலோவுக்காக செலுத்தாமல் பாரிய இலாபத்தை ஈட்டிக்கொள்ள இடமளிக்கப்பட்டுள்ளது.
எமக்கு பதிவாகின்ற விதத்தில் ஏறக்குறைய 850 மெட்றிக்தொன் சீனியை இறக்குமதிசெய்த கம்பெனிகளுக்கு இந்த வரி காரணமாக மேலதிக இலாபம் கிடைத்துள்ளது. 2023 அக்டோபர் 30 ஆந் திகதி 520 மெட்றிக் தொன் சீனியை வில்மா கம்பெனி 25 சதத்தை செலுத்தி விடுவித்துக் கொண்டுள்ளது. முன்னர் மிகப்பெரிய நன்மையைப் பெற்றதும் இதே கம்பெனிதான். இந்த சீனித் தொகையினை நவெம்பர் 01 ஆந் திகதி விடுவித்துக் கொண்டதும் உடனடியாக இரண்டாந் திகதியில் இருந்து அமுலுக்கு வரத்தக்கதாக ரூபா 50/- வரி விதிக்கப்படுகின்றது. தற்போது நாங்கள் கடைக்குச் சென்றால் எமக்கு ஒரு கிலோவைக் கொடுப்பது 25 சத வரிக்காக அல்ல, ரூபா 50/- வரி சேர்க்கப்பட்ட சீனி விலைக்காகும். இந்த செயற்பாங்கு கபடத்தனமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெளிவாகின்றது. இந்த சீனித் தொகையிலிருந்து மாத்திரம் அண்ணளவாக 25 மில்லியன் ரூபா மேலதிக இலாபம் கிடைக்கிறது. இதுபோன்ற சூழ்ச்சிகளால் அரசாங்கம் இழக்கின்ற வரியைப் பற்றி நன்றாக விளங்கிக்கொள்ள அன்று ராஜபக்ஷாக்கள் சீனி வரி சம்பந்தமாக மேற்கொண்ட நடவடிக்கைபற்றி கணக்காய்வாளர் தலைமை அதிபதி அறிக்கையிலிருந்து விடயங்களை முன்வைக்கிறேன். அரசாங்கத்தின் கணக்காய்வாளர் தலைமை அதிபதி சமர்ப்பித்த அறிக்கையில் “வெள்ளைச் சீனிக்காக அர்ப்பணித்த வரி” என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. ராஜபக்ஷாக்கள் அன்று பிரமிட் வில்மா கம்பெனிக்கு அர்ப்பணித்த வரியைப்போன்றே ரணில் விக்கிரமசிங்க தற்போது அர்ப்பணித்துள்ளார். அரசாங்கத்திற்கு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்த பதினாறாயிரத்து எழுநூற்றி அறுபத்தி மூன்று மில்லியன் வரி வருமானத்தை 2020 அக்டோபர் 17 ஆந் திகதி தொடக்கம் 2021 பெப்புருவரி 28 ஆந் திகதி வரை இழந்துள்ளதாக இந்த அறிக்கையில் கணக்காய்வாளர் தலைமை அதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த செயற்பாங்கு காரணமாக ஆயிரத்து அறுநூற்று எழுபது கோடி ரூபா வரி வருமானம் இழந்தமைக்கு மேலதிகமாக மேலும் பல வருமான இழப்புகள் பற்றிய பட்டியலொன்றை கணக்காய்வாளர் தலைமை அதிபதி சமர்ப்பித்துள்ளார். சதொசவிற்கு சீனி விற்பனையால் 102 மில்லியன், இறக்குமதி அபராதக் கட்டணம் குறைத்தமையால் 433 மில்லியன், உரிமம் பெறாமல் இறக்குமதி செய்தமையால் 283 மில்லியன், இறக்குமதிக் கட்டுப்பாட்டாளர் உரிமக் கட்டணத்தை இழந்தமையால் 203 மில்லியன், சுங்கக் கட்டணம் 267 மில்லியன் என்றவகையில் மேலதிக வருமானம் இழக்கப்பட்டுள்ளது. இந்த வருமானம் கூட்டாளிக் கம்பெனிகளுக்கிடையில் இலாபமென்றவகையில் பகிர்ந்துசெல்ல இரண்டு இலட்சத்து எழுபத்தேழாயிரத்து எழுநூற்றி பதினைந்து மெட்றிக்தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இந்த அளவில் 45% பிரமிட் வில்மா கம்பெனியாலேயே கொண்டுவரப்பட்டது. வில்மா கம்பெனிக்கு மாத்திரம் 622 கோடி மேலதிக இலாபம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய ஆயிரம் கோடி மேலும் ஒன்பது கம்பெனிகளுக்கிடையில் பகிர்ந்துசென்றுள்ளது. இது சம்பந்தமாக நாங்கள் நீதிமன்றத்தில் முறைப்பாடொன்றினை தாக்கல் செய்துள்ளோம்.
பாவனையாளர் அதிகாரசபையினால் வெள்ளை சீனிக்கான உச்ச சில்லறை விலை ஒரு கிலோவிற்கு 275/- எனவும் பழுப்பு சீனிக்கான உச்ச சில்லறை விலை ஒரு கிலோவிற்கு 330/- எனவும் குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டது. இந்த வர்த்தமானிக்கிணங்க சீனி விற்பனை செய்யப்பட்டாலும் மோசடியை சட்டபூர்வமானதாக்கியதன் மூலமாக கம்பெனிகளுக்கு மேலதிகமாக பாரிய இலாபம் ஈட்டுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சந்தையில் தற்போது 330/- ரூபாவிற்கும் சீனி விற்பனை செய்யப்படுகின்றது. அரசாங்கம் கூறுகின்ற உச்ச விலை தேநீர் பருகுகின்ற, சாயம் குடிக்கின்ற மக்களுக்கு அமுலாக்கப்படுவதில்லை. சீனியைப் பாவித்து தயாரிக்கப்படுகின்ற அனைத்து உணவு வகைகளினதும் விலை அதிகரிக்கின்றது. திடீரென இந்த வரியை விதிக்கக் காரணம் அக்டோபர் மாதத்தில் மாபெரும் அளவிலான சீனியைக் கொண்டுவந்து இலங்கை மக்களை எறும்பு தின்று இறக்கின்ற நிலைமை உருவாகியதாலா? அவ்வாறின்றேல் இந்த வரியை அதிகரிக்க ஏதுவாக அமைந்த காரணங்களை அமைச்சர் நாட்டுக்குக் கூறவேண்டும். அடுத்ததாக நடைபெறப் போகின்ற தேர்தல்களின்போது பிரமிட் வில்மா ரணில் விக்கிரமசிங்கவிற்கு பணத்தை அள்ளிவீசுவதற்கான முயற்சியா இது? சந்தைக்கு வருவதற்கு முன் 520 மெட்றிக் தொன் சீனியிலிருந்து 25 மில்லியன் ரூபா இலாபத்தை ஒரு கம்பெனிக்கு வழங்கிய சூதாட்டமே இங்கு இடம்பெற்றுள்ளது. இந்த சூதாட்டத்தை நிறுத்த வேண்டும். இதற்கு முன்னர் இதே தீத்தொழில் புரிபவர்கள் அரசாங்கத்திற்கு இழக்கச்செய்வித்துள்ள வரித்தொகையின் அளவினை கணக்காய்வாளர் தலைமை அதிபதி வெளிக்கொணர்ந்துள்ள வேளையில் மீண்டும் அவர்களுக்கே சீனி வரியை அதிகரித்ததன் மூலமாக அநுகூலம்பெற இடமளித்துள்ளார்கள் என்பதை மக்களுக்கு வலியுறுத்திக் கூறுகிறோம். அனைத்திலிருந்தும் கைநழுவிச் செல்கின்ற அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சரைக் கேள்விக்குட்படுத்துமாறு நாங்கள் ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். வரி விதிக்கப்படுவதை அறிந்து தகவல்கள் எவ்வாறு வெளியில் சென்றன எனவும் கோள்வி கேட்கிறோம். இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது அரசாங்கத்திற்கோ அல்லது மக்களுக்கோ அநுகூலம் பெறுவதற்காக அல்ல.

“அழுத்தத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் பதிற்செயலை வெளிக்காட்டும்போது “கடனிறுக்க வகையற்ற சர்வாதிகாரத்தை” நோக்கிப் பயணிக்க முயற்சி செய்கிறார்களா எனும் சந்தேகம் எமக்குத் தோன்றுகிறது.” –தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் – பேராசிரியர் அனில் ஜயசிங்க–
இத்தருணத்தில் நாடும் மக்களும் எவ்வளவு ஆழமான பிரச்சினைகளுடன் மல்லுக்கட்டிக்கொண்டு இருகிறார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். பிரச்சினைகளிலிருந்து மக்களை மீட்டெடுப்பதாகக்கூறி அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட அரசாங்கம் தற்போது சாதாரண பொதுமக்கள்மீது மென்மேலும் பாரிய அழுத்தத்தைப் பிரயோகித்து வருகின்றது. குறிப்பாக 2024 ஆண்டுடன் தொடர்புடைய வரவுசெலவு வருவதற்கு முன்னராகவே இந்த வரிவிதித்தல் இடம்பெறுகின்றது. சீனி வரிக்கு மேலதிகமாகவே சேர்பெறுமதி வரி (வற்) 18% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேரில் வரிகளை அதிகரிப்பதன் மூலமாக சாதாரண மக்கள் கைகளில் உள்ள பணத்திலிருந்து கொள்வனவு செய்யக்கூடிய பண்டங்களின் அளவு வேகமாக வீழ்ச்சியடைவதே இடம்பெறும். எரிபொருள், மின் கட்டணம், கேஸ் விலையை அதிகரித்து வருகின்ற பின்னணியில் வற் வரியும் மற்றுமொரு சுற்றில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் புகையிலை மற்றும் புகைக்கும் பொருட்கள் மூலமாக அறவிடப்படத்தக்கதாக இருந்த 113 பில்லியன் வரியை அறவிட்டுக் கொள்ளாமல் போர்ட் சிட்டி போன்ற விசேட இடங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட அதானி போன்ற வெளிநாட்டுத் தீத்தொழில் புரிபவர்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏன் அவ்வாறான நிலைமை வரவுசெலவுக்கு முன்னராகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றது? ஐ.எம்.எஃப். இன் அடுத்த கடன் தவணையை பெற்றுக்கொள்ள அவசியமான நிபந்தனைகளை ஈடேற்றுவதே இங்கு இடம்பெறுகின்றது. அவர்களின் நிபந்தனைகள் மத்தியில் அரசாங்கத்தின் வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுப்பதே முதன்மைத்தானம் வகிக்கின்றது. அதைப்போலவே அரசாங்கத்திற்குச் சொந்தமான வளங்களை விற்குமாறு நிர்ப்பந்தித்தலாகும். ஐ.எம்.எஃப். பணிப்புரைகளுக்கிணங்க இலக்காகக்கொள்ளப்பட்ட வரி வருமானத்தின் 15% செத்தெம்பர் இறுதியளவில் அறவிடப்பட்டிருக்கவில்லை. இந்த வருடத்தில் அந்த வரியை அறிவிட்டுக்கொள்வதற்காக பொதுமக்கள் மீது திணிப்பதே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நாணய நிதியத்தினாலேயே சமர்ப்பிக்கப்பட்டுள்ள உலக நாடுகளின் வரி அறவிடல் பற்றிய விபரங்கள் தொடர்பில் உங்களின் கவனத்தை ஈர்க்கச்செய்விப்பது அவசியமானதாகும். உலக நாடுகளில் அந்தந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% ஐ விட அதிகமான அளவினை அந்தந்த அரசாங்கங்கள் வரியாக அறவிட்டுக்கொண்டுள்ளன. இத்தகைய அளவிலான வரியை அறிவிட்டால் மாத்திரமே மக்களுக்கு அவசியமான பொது வசதிகளை வழங்க முடியும். ஆசிய பிராந்தியத்தை ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டாலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 20% வரியாக அறவிட்டாலும் இலங்கையில் அந்த அளவு 10% ஐ விடக் குறைவானதாகும். எனினும் ஆசியாவில் மிகவும் அதிகமான நேரில் வரிகள் இலங்கையிலேயே நிலவுகின்றன. அதைப்போலவே வருமான வரி அறவிடுகின்ற அளவும் 36% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேரில் வரியையும் வருமான வரியையும் மிகவும் அதிகமான சதவீதத்தில் அறவிட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% ஐ விடக் குறைவான அளவினையே பொதுமக்கள்மீது அனைத்துவிதமான அழுத்தங்களையும் சுமத்தியே அரசாங்கத்தின் வரியாக அறவிடப்பட்டுள்ளது. எனினும் அவர்களின் கூட்டாளிகளான தீத்தொழில் புரிபவர்களுக்கு வரி வலையிலிருந்து தப்பிச்செல்ல இடமளிக்கப்பட்டுள்ளது. இதன் இறுதிப்பெறுபேறு மக்கள் மென்மேலும் அழுத்தங்களுக்கு இரையாவதாகும். ஒருபுறத்தில் மக்களின் வாழ்க்கையை குற்றுயிராக்குதல் இடம்பெற்று வருவதோடு மறுபுறத்தில் நாட்டின் அபிவிருத்திச் செயற்பாங்கு நலிவடையவும் இந்த வரிகள் தாக்கமேற்படுத்தி உள்ளன. ஒட்டுமொத்த கேள்வி குறைவடைந்தவிடத்து பொருளாதார வளர்ச்சி செயற்பாங்கிற்கு உந்துசக்தி கிடைக்கமாட்டாது. அரசாங்கத்தின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் முரண்பாடு நிலவுகின்றது.
குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு பேணிவருகின்ற உற்பத்திகளுக்கும் சந்தையில் நிலவுகின்ற கேள்வி இல்லாதொழிகின்றது. இறுதியில் அனைத்தினதும் நன்மைகள் கிடைப்பது கொள்ளைக்காரப் கும்பலுக்கு மாத்திரமேயாகும். தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை என்றவகையில் இத்தருணத்தில் எம்மால் செய்யக்கூடியது சம்பந்தப்பட்ட விடயங்களை மக்களுக்கு விளக்கிக்கூறுவது மாத்திரமேயாகும். அரசாங்கத்தின் ஊழல்மிக்க மற்றும் தவறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை மாத்திரமே இவ்வேளையில் செய்யமுடியும். அதற்கு மேலதிகமாக விசேடமாக செய்யவேண்டியது ஊழலற்ற ஆட்சியொன்றை நிறுவவேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு தெளிவுபடுத்திக் கூறுவதாகும். மக்களால் இனிமேலும் அழுத்தத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் பதிற்செயல் புரிகையில் ” கடனிறுக்கவகையற்ற சர்வாதிகாரத்தை” நோக்கிச்செல்ல முயற்சி செய்கிறார்களா எனும் கடுமையான சந்தேகம் எமக்கு எழுகின்றது. ஏற்கெனவே இவ்விதமாக வரிகளை விதித்து எதிர்வரும் வரவுசெலவிலும் மீண்டும் அழுத்தத்தைக் கொடுத்து கடனிறுக்கவகையற்ற சர்வாதிகாரத்திற்கான பாதையை அமைத்துக்கொண்டு மக்களை அடக்கியாள முயற்சி செய்கிறார்களா? 2024 ஆம் ஆண்டுக்காக முன்வைத்துள்ள செலவுத் தலைப்புகளுக்கு அமைவாக மிகவும் அதிகமான பணத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது மக்களின் பொது வசதிகளுடன் தொடர்புடைய செலவுகளுக்காகவல்ல. அந்த செலவுகளை வெட்டிவிட்டு சனாதிபதிக்கும் அவரைச் சுற்றியுள்ள குழுக்களுக்கும் பாதுகாப்புப் பிரிவுகளுக்கும் செய்கின்ற செலவுகளை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளே காணப்படுகின்றன. தற்போது விதிக்கப்பட்டுள்ள வரிச்சுமை மாத்திரமன்றி வரவுசெலவு மூலமாக வருங்காலத்தில் மேலும் பாரியளவில் நேரில்வரிகளை அறிவிட்டுக்கொள்கின்ற ஆபத்து நிலவுகின்றதென்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். அது சம்பந்தமாக விழிப்புணர்வூட்டப்பட்டு ஒழுங்கமைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்
கேள்வி :- விளையாட்டுத்துறை மூலமாக எமது நாட்டுக்கு பணம் தேடிக்கொள்ள முடியாதா?
பதில் :- முடியும். யுறோக்களில், டொலர்களில் பணத்தை ஈட்டிக்கொள்ள முடியும். விளையாட்டு அணிகளுக்கு மாத்திரமல்ல விளம்பரங்கள் மூலமாகவும் பணத்தை ஈட்டிக்கொள்ள முடியும். ஆனால் தற்போது கிரிக்கெற் பற்றியே விசேடமாக பேசப்படுகின்றது. கிரிக்கெற் கட்டுப்பாட்டுச் சபை ஈடுபடாதது கிரிக்கெற்றுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் மாத்திரமே. கிரிக்கெற் நிறுவன உத்தியோகத்தர்களின் பிரத்தியேக கணக்குகளுக்கு பணம் சென்றவிதம் வெளிப்பட்டுள்ளது. அதனால்த்தான் ஒருசிலரது தனிப்பட்ட முதுசமாக கிரிக்கெற் கட்டுப்பாட்டுச் சபையை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டுக்கு வருகின்ற வருமானத்தை பகிர்ந்து கொள்வதற்கான பாரிய போட்டியே சபைக்குள்ளே நிலவுகின்றது.
கேள்வி :- அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் இடைக்கால நிருவாக சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நிலவுகின்ற சிக்கல்களுக்கு தீர்வினைப்பெற்றுக்கொடுக்க அந்த சபைக்கு இயலுமா?
பதில் :- என்னால் அதுபற்றி இப்போதே சரியான பதிலைக் கூறமுடியாது. காரணம் அந்த சபையை நிறுவி இன்னமும் ஒரு நாள்தான் கழிந்துள்ளது. ஆனால் இவ்வாறு கூறலாம். எவர் நியமிக்கப்பட்டாலும் வேறு தில்லுமுல்லுகள் இடம்பெறாமல் கிரிக்கெற் விளையாடினால் எமது நாட்டில் கிரிக்கெற்றை உருப்படியாக்க முடியும். இந்த விளையாட்டு எமது மக்களின் உயிரோடும் உணர்வோடும் ஒன்றிப்போயுள்ளது. பொருட்களின் விலைகளால் வரிச் சுமையினால் இவ்வளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அதனால்த்தான் கிரிக்கெற் மீது விரக்தியடைந்துள்ளார்கள். கிரிக்கெற் தோல்வியால் வேதனை அடைந்துள்ளமைக்கான காரணம் அவர்கள் கிரிக்கெற்றை நேசிப்பதாலாகும்.