-Colombo, November 13, 2023- கார்த்திகை வீரர்களை இழந்து கழிந்துசென்ற 34 வருடங்களில் எமது நாடு முழுமையாகவே அயோக்கியத்தனத்திற்கு இரையாக மாறியுள்ளது. பொதுமக்களின் ஆதனங்களை தமது எண்ணப்படி அனுபவிக்க அவசியமான அரசியல் அயோக்கியத்தனம் உருவாகி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக நாசமாகிய சமூகமொன்று உருவாகி இருக்கின்றது. இந்த நிலைமை தற்செயலாக ஏற்பட்டதொன்றல்ல. அரசியல் அயோக்கியத்தனமும் குற்றச்செயல்களும் நிறைந்த சமூகமொன்று உருவாகியமை மற்றும் பொருளாதாரரீதியாக நாடு முற்றாகவே சீரழிந்தமைக்கு ஏதுவாக அமைந்த பலம்பொருந்திய அடியெடுப்பு 1977 இல் அதிகாரத்திற்குவந்த ஜே. ஆர். […]
-Colombo, November 13, 2023-
கார்த்திகை வீரர்களை இழந்து கழிந்துசென்ற 34 வருடங்களில் எமது நாடு முழுமையாகவே அயோக்கியத்தனத்திற்கு இரையாக மாறியுள்ளது. பொதுமக்களின் ஆதனங்களை தமது எண்ணப்படி அனுபவிக்க அவசியமான அரசியல் அயோக்கியத்தனம் உருவாகி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக நாசமாகிய சமூகமொன்று உருவாகி இருக்கின்றது. இந்த நிலைமை தற்செயலாக ஏற்பட்டதொன்றல்ல. அரசியல் அயோக்கியத்தனமும் குற்றச்செயல்களும் நிறைந்த சமூகமொன்று உருவாகியமை மற்றும் பொருளாதாரரீதியாக நாடு முற்றாகவே சீரழிந்தமைக்கு ஏதுவாக அமைந்த பலம்பொருந்திய அடியெடுப்பு 1977 இல் அதிகாரத்திற்குவந்த ஜே. ஆர். ஜயவர்தன அரசாங்கத்தினாலேயே தொடங்கப்பட்டது. அதுவரை நிலவிய அனைத்துவிதமான சமூக நிறுவனங்களையும் முற்றாகவே சிதைத்து, சனநாயகத்தை முழுமையாகவே வாரிச்சுருட்டி, இலக்கியவாதிகள்மீது தாக்குதல் நடாத்தி, தொழிற்சங்க இயக்கத்தை முற்றாகவே அடக்கி, தேர்தலை நடத்தாமல், தேர்தல்களை பிற்போடுகின்ற தில்லுமுல்லுகளை கடைப்பிடித்து வந்தார்கள். ஜே.ஆர். ஜயவர்தனவின் மேல்மட்டத்திலான மேற்படி செயற்பாடுகளுடன் அடி மட்டத்திலான ஒட்டுமொத்த அரசியல் அதிகாரத்தையும் அயோக்கியர்களின் கைகளுக்கு எடுத்துக்கொள்ளத் தொடங்கினார்கள். பெஸ்டஸ் பெரேரா, அதிகாரி போன்ற காடையர்களால் பாராளுமன்றம் நிரம்பிவழியத் தொடங்கியது. மனிதர்களின் சமூக நன்மதிப்பு, ஒருவர்மீது ஒருவர் கொண்டிருந்த ஈடுபாடுகள் சுக்குநூறாக்கப்பட்டன. மனிதனுக்கு மனிதன் என்றவகையில் இருந்த கௌரவத்தை நாசமாக்கினார்கள். பெரும்பாலானவர்கள் ஜே.ஆர். ஜயவர்தனவின் இந்த வெறித்தனமான ஆட்சிக்கு, ஆயோக்கியத்தனமான தேவைக்கு கட்டுப்பட்டு வாழ ஆரம்பித்தார்கள். அதனை யதார்த்தமாக எற்றுக்கொள்ள பலர் தூண்டப்பட்டார்கள்.
எனினும் இந்த அழிவுமிக்க பயணத்திற்கு எதிராக பொது சமூகத்தின் நன்மதிப்பிற்காக மக்கள் விடுதலை முன்னணி முன்வந்தது. கொடூரத்தை அநியாயத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஜே.ஆர். ஜயவர்தனவின் அணியும் மறுபுறத்தில் சமூக நன்மதிப்பு, சமூக நீதி, சனநாயகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற மக்கள் விடுதலை முன்னணியும் என்றவகையில் 1980 இன் நடுப்பகுதியளவில் சமூகம் கடுமையான பிளவினை நோக்கி பயணித்து இருந்தது. பொதுமக்கள் மனித மாண்பிற்காக, தமது சுதந்திரத்திற்காக மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து வந்தார்கள். இதோ இந்த முரண்பாடு இறுதியில் கருத்தியல்சார்ந்த முரண்பாட்டுக்குப் பதிலாக, மேடைசார்ந்த மோதலுக்குப் பதிலாக, ஆயுதமேந்திய மோதலாக மாறியது. ஜே. ஆர். ஜயவர்தனவின் சர்வாதிகார வெறிக்கு எமது நாட்டின் பல்லாயிரக்கணக்கான மக்கள் இரையாக மாறினார்கள். மக்கள் விடுதலை முன்னணி கட்டியெழுப்பிய, பொதுமக்களின் ஆன்மீகத்தை அழைத்து வந்த எமது கட்சியின் சிருஷ்டிகர்த்தா தோழர் றோஹண விஜேவீர உள்ளிட்ட பல போராட்ட சகபாடிகள் 1989 நவெம்பர் 13 ஆந் திகதி படுகொலை செய்யப்பட்டார்கள். எமது நாட்டையும் சமூகத்தையும் பொருளாதாரத்தையும் அந்த பேரவலம் மூலமாக எடுத்துச்சென்ற பயணத்திற்கு எதிராக சமூக நீதி, நியாயம், சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம்செய்த எமது சகோதர சகோதரிகளை இன்று நாங்கள் நினைவு கூறுகிறோம்.
இன்று எமது சமூகம் பாரிய மாற்றமொன்றைக் கோரிநிற்கிறது. அதற்கான தேவை நிலவுகின்ற, நோக்கு இருக்கின்ற, நேர்மையுள்ள, தாக்குப்பிடிக்கும் ஆற்றல் நிறைந்த, பொறுமையுள்ள அமைப்பினால் மாத்திரமே இந்த மாற்றத்தைச் செய்யமுடியும். வெறுமனே ஆட்களை மாற்றுவதால் அல்லது அரசாங்கத்தை மாற்றுவதால் இதனை சாதிக்க இயலாது. இந்த இயக்கத்திற்கு நேர்மை, தெம்பு, புதிய அரசியல் நோக்கு, அவசியமான பொறுமை, சமூக நீதி பற்றிய எண்ணம், மனித மனங்களுக்கு நெருக்கமான ஆன்மீகம் என்பவற்றை இந்த இயக்கத்திற்கு எவ்வாறு அழைத்து வருவது? நூல்களால், இலக்கியத்தால் மாத்திரம் அவ்வாறான இயக்கத்தைக் கட்டியெழுப்ப முடியாது. இலங்கையில் மாத்திரமன்றி உலகம் பூராவிலும் சமூக மாற்றத்திற்காக தம்மை அர்ப்பணித்த மனிதர்கள் பற்றிய முறையான கற்றாராய்தல் மூலமாக அதனை சாதிக்க முடியும். நான் இவ்வாறு கூறுவது சமூக இயக்கமென்றவகையில் கட்டியழுப்பப்பட்டு வருகையில் 88 – 89 பற்றி ஏன் நினைவுகூறப்படுகின்றது? இந்த சமூக மாற்றத்தை செய்யவேண்டுமாயின் இந்த ஆன்மீகத்தைக்கொண்ட மனிதர்கள் தேவை. இந்த மேடையில் இருக்கின்ற என்னையும் உள்ளிட்ட தொலைக்காட்சியில் காண்கின்ற, அதன் காரணமாகவே சமூகத்தில் அங்கீகாரம் நிலவுகின்ற பலரும் இந்த இயக்கத்தின் பின்னணியில் பெருந்தொகையினராக இருக்கிறார்கள். இன்றும் இந்த மேடையின் வெற்றிக்குப் பின்னால் இருப்பவர்கள் இந்த இயக்கத்தில் இருக்கின்ற தோழர்களின் அர்ப்பணிப்பின் பெறுபேறு ஆகும். அர்ப்பணிப்பு தியாகத்தின் ஊடாக சமூகத்தை மாற்றியமைக்கத் தயாராகின்ற மக்கள் கட்டியெழுப்பட்டுள்ளமை தற்செயலானதொன்றல்ல. எமது கட்சியின் சிருஷ்டிகர்த்தாவை உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான தோழர்கள் எமக்கு அந்த முன்மாதிரியைக் கொடுத்துள்ளார்கள். அந்த கடந்தகாலத்தை மீண்டும்மீண்டும் அசைபோட்டுப்பார்த்து இந்த திட்டவட்டமான சமூக மாற்றத்திற்கு தயாராகி வருகின்ற தருணத்தில் முன்பிருந்ததைவிட அதிகமாக அந்த ஆன்மீகத்தை எமது இயக்கத்தில் கொண்டுவரவேண்டும். அவ்வாறின்றி இடிபாடுகளால் அமைத்துக்கொள்கின்ற அரசாங்கத்தால் அல்லது இயக்கத்தினால் இந்த மாற்றத்தைச் செய்யமுடியாது.
வரலாற்றுடன் பின்னப்பிணைந்த ஆன்மீக நூலில் இருந்து விடுபட்டு இந்த மாபெரும் சமூக மாற்றத்தைச் செய்துவிட முடியாது. பாய்ந்து வருகின்ற அந்த ஆன்மீகத்தை மென்மேலும் பலப்படுத்தி முன்நோக்கி கொண்டுசெல்வதன் மூலமாக மாத்திரமே சம்பந்தப்பட்ட பண்புரீதியான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அத்தகைய ஆன்மீகத்தைக்கொண்ட சமூக இயக்கமொன்றையே மக்கள் விடுதலை முன்னணியைச்சேர்ந்த நாங்கள் கட்டியெழுப்புவோம். சமூக மாற்றத்தை ஆழமாக ஏற்படுத்த வேண்டுமாயின் இறந்தகாலத்தின் ஆன்மீகத்தை மூடி துண்டாடுவதன் மூலமாகவன்றியே அதனை ஏற்படுத்தக்கூடியதாக அமையும். நாங்கள் அச்சமின்றி கடந்த காலத்தில் இடம்பெற்ற தவறுகளை ஏற்றுக்கொள்ளத் தயார். 88 – 89 இல் இடம்பெற்ற தவறுகளை நாங்கள் பல தடவைகள் ஏற்றுக்கொண்டுள்ளோம். அதைப்போலவே ஆயிரக்கணக்கான தடவைகள் அதன் பண்புகளை ஈர்த்துக்கொள்ளத் தயங்காத இயக்கமென்றவகையிலேயே மக்கள் விடுதலை முன்னணி முன்நோக்கி நகரும். கடந்த இரண்டு தசாப்த காலத்திலும் எமது கட்சி கடினமான காலங்களை கடந்து வந்தது. ஒருசில அரசியல் தந்திரோபாங்கள் எமக்கு தோல்வியைத் தந்தன. அந்த தவறுகள் அரசியலில் மாத்திரம் தங்கியிருக்கப் போவதில்லை. கட்சிக்குள்ளேயும் ஊடுருவிச் செல்லும். 2004 இல் ஒருசில அரசியல் தந்திரோபாங்கள் தவறியமை எங்கள் இயக்கத்திற்குள் கசிவடைந்தது. அதனால் இயக்கத்திற்குள் பிளவுகளை தோற்றுவித்தன. மீண்டும் 2012 அளவில் இடம்பெற்ற தோல்விகளை விளங்கிக்கொள்ள முடியாமல், தாக்குப்பிடிக்க முடியாமல், வெற்றிகள் பற்றிய நம்பிக்கையின்றி மேலும் பல பிளவுகள் ஏற்பட்டன. இவ்விதமாக கட்சிக்குள் பலவிதமான நெருக்கடிகளும் முரண்பாடுகளும் உருவாகி இரண்டு தசாப்தங்கள் கழிந்தன. இக்காலத்தில் இருந்த ஒருசில தோழர்கள் தந்திரோபாயங்களில் மாட்டிக்கொண்டு எம்மை குற்றஞ்சுமத்தப்பட்டவர்களாக மாற்றினார்கள். அவர்களும் பங்கேற்று மேற்கொண்ட தீர்மானங்களுக்காக எம்மைக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக மாற்றினார்கள். எதிரியால் கட்டியெழுப்பப்பட்ட குறைகூறல்களுக்கு ஒன்றாக பதிலளித்த ஒருசிலர் வெளியில் சென்று எதிரியின் குறைகூறல்களையே எம்மீது சுமத்தினார்கள்.
இந்த நிலைமைகள் உள்ளகத்தில் மாத்திரமன்றி சமூக அடுக்கிலும் வெளிப்படத் தொடங்கின. கடந்த தேர்தல் முடிவுகளில் 3% இற்கு குறைவடைந்தமை குறைகூறல்களுக்கும் ஏளனம்செய்தலுக்கும் காரணமாக அமைந்தன. உள்ளேயும் வெளியேயும் ஏற்பட்ட பாரிய அழுத்தங்களை தாங்கிக்கொண்டு கிடைகின்ற சிறிய வாய்ப்பினையேனும் வெற்றியாக மாற்றிக்கொள்ள தெம்பினைக் கொண்டு வந்தவர்கள் யார்? வெற்றி பற்றிய நம்பிக்கையுடன் இந்த இயக்கத்தைக் கட்டியெழுப்பக் காரணமாக அமைந்தது இந்த இயக்கத்தில் இருக்கின்ற ஆன்மீகமாகும். தனித்தனி ஆட்களின் சிறப்பம்சங்கள் அல்ல, இடையறாமல் பாய்ந்துவர இயக்கத்தின் ஆன்மீகரீதியான பெறுபேறுகளே அதற்கான காரணமாகும். நிகழ்கால தலைமைக்குழுவின் வியத்தகு ஆற்றல் காரணமாக தற்போதுள்ள பெறுபேறு கிடைக்கவில்லை. இடையறாமல் பாய்ந்து வருகின்ற கார்த்திகை வீரர்களின் சமூக நீதி, சமூக நியாயம் பற்றிய பொறுப்புகளை கைவிடாமையின் பெறுபேறு தற்போது உருவாகி இருக்கின்றது. அவை சாதாரண மனிதர்களால் சாதிக்கக்கூடிய விடயங்களல்ல. அத்தகைய இயக்கமொன்றில் உள்ளடங்குகின்ற மனிதர்களால் மாத்திரம் இத்தகையவற்றை சாதிக்க முடியும். சிறியதொரு வெற்றி கிடைக்காதவிடத்து கட்சியை மாற்றுகின்ற, அழுதுபுலம்புகின்ற நாட்டில் பிரத்தியேக தனித்துவங்களைவிட இயக்கத்திற்குள் இருக்கின்ற சாரம் உறுதுணையாக அமைந்துள்ளது. அந்த சாரம் இந்த கட்சி கட்டியெழுப்பப்பட்ட நாளில் இருந்தே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. சமூக அடுக்கில் தோன்றியுள்ள பாரிய எதிர்பார்ப்புகளால் வசீகரிக்கப்பட்டு சமூக இயக்கமொன்றினால் முன்நோக்கி நகர முடியாது. சமூகத்தின் நம்பிக்கை, கௌரவம் ஒன்று சேரச்சேர மீண்டும்மீண்டும் அதில் பொதிந்துள்ள சாரத்தை உறிஞ்சிக் கொள்ளுமாறு எமக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றது. நாங்கள் அந்த சாரத்தை உறிஞ்சிக் கொள்கிறோம்.
தலைவர்கள் மேல் மட்டத்தில் இருக்கின்ற மற்றும் சமூகத்தை அடிமைத்தனத்திற்கு இலக்காக்கிய நிலைமைக்கிணங்கவே அவர்கள் சமூகத்தை ஒழுங்கமைக்கிறார்கள். அவர்களின் இருப்பு சமூகப் பாதக நிலைமைகளை ஒன்றுதிரட்டுவதாகும். அதற்கு முரணாக சமூக சாதகநிலைமைகளை ஒன்று திரட்டுதல், அனைவரும் ஒன்றுசேர்ந்து கூட்டாக வேலைசெய்கின்ற சமூகமொன்றை ஏற்பாடு செய்வதே எமது பொறுப்பாகும். ஒவ்வொருவரிடமும் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை விளங்கிக்கொண்ட கூட்டாண்மையே தேவை. அவர்கள் இனவாதத்தை கட்டியெழுப்புகிறார்கள். அளவுக்கதிகமாகவே அதன் வேதனைகளை அனுபவித்த ஒரு நாடாக இருந்தபோதிலும் இன்றும் அவர்கள் அதனையே ஒழுங்கமைத்து வருகிறார்கள். அதற்கு எதிராக நாங்கள் தேசிய ஒற்றுமையைக் கட்டிவளர்க்கிறோம். சமூகத்தை சாதகமான பண்புகளைக் கொண்டதாக ஒழுங்கமைப்பதன் மூலமாக நாங்கள் சாதகமான மாற்றமொன்றை செய்துவருகிறோம். அதற்காக ஆக்கமுறையான பண்புகளைக்கொண்ட ஆட்சியொன்றைக் கட்டியெழுப்பவேண்டும். தெற்கின் மக்கள் எம்மீது கவனஞ் செலுத்தியுள்ள அளவுக்கு தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் சமுதாயத்தின் கவனத்தை வென்றெடுப்பதில் நாங்கள் வெற்றிபெறவில்லை. அதனால் வேகமாக இனவாதத்தை நிராகரிக்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களை சமத்துவமான உரிமைகளின் பேரில் ஒழுங்கமைக்கின்ற முதன்மைப் பணியை நாங்கள் ஈடேற்றவேண்டும். அவ்வாறு செய்யாமல் அரசாங்கத்தை அமைப்பதில் பலனில்லை. அவர்கள் சாதிபேதத்தினால் சமூகத்தை ஒழுங்கமைக்கிறார்கள். அதைப்போலவே தொழில்முயற்சி வர்க்கத்தினர் படுமோசமான ஊழல் பேர்வழிகளால் ஒழுங்கமைக்கப்படுகிறார்கள். உண்மையான கைத்தொழிலதிபர்களையும் தொழில்முனைவோரையும் ஒழுங்கமைக்க அவர்கள் முன்வருவதில்லை. உண்மையான கைத்தொழிலதிபர்களையும் தொழில்முனைவோரையும் நாங்கள் ஒழுங்கமைக்க வேண்டும். நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ள சமூக மாற்றத்தின் பருப்பொருளாக அமைவது சாதகமான பண்புகளைக்கொண்டதாக சமூகத்தை ஒழுங்கமைப்பதாகும்.
கூட்டான சமூக மாற்றத்தை மேற்கொள்வதற்கான பண்புகளை கார்த்திகை வீரர்களின் பண்புகளிலிருந்தே சேர்த்துக்கொள்ள முடியும். அந்த வீரர்களின் முன்மாதிரிகள் எமது ஆன்மீகத்திற்குள்ளே இருக்கின்ற அடையாளமாகும். இந்த அடையாளத்தை மறப்பதென்பது வெறுமனே ஐக்கிய தேசிய கட்சியாகவோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாகவோ அமைவதாகும். முன்பிருந்ததைவிட அதிகமாக அந்த ஆன்மீகம் எமக்குத் தேவைப்படுகின்றது. அதிகாரத்தை நெருங்கநெருங்க மிகவும் சாதகமான ஆன்மீகங்களை ஈர்த்தெடுத்த ஆட்களாகவும் இயக்கமாகவும் மாறவேண்டும். இந்த கார்த்திகை வீரர் ஞாபகார்த்தம் முன்னையவற்றைவிட முக்கியமானதாக அமையக் காரணம் அடுத்த கார்த்திகை வீரர் ஞாபகார்த்தத்தை எமது ஆட்சியில் நடாத்த எதிர்பார்த்துள்ளதாலாகும். பொதுவான ஆட்சியொன்றின்கீழ் இந்த பண்புகளை சமூகத்திற்கு எடுத்துச்செல்லவேண்டும். இந்த சமூகம் பல தசாப்தங்களாக அரசாங்கங்களை நிறுவி சாதகமான சமூக மாற்றத்தை எதிர்பார்த்தது. எனினும் அந்த பல தசாப்தங்களாக ஏமாற்றப்படுதலுக்கு இலக்காகி நிர்க்கதிநிலைக்கு வீழ்ந்துள்ளது. ஏமாற்றத்தின் அடிமட்டத்திற்கே தள்ளப்பட்டுள்ளது. அவ்வாறான மக்களை மீண்டும் ஏமாற்ற எமக்கு உரிமை கிடையாது. அந்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்ற ஆட்சியொன்றை உருவாக்கிட வேண்டுமாயின் கார்த்திகை வீரர்களின் ஆன்மீகம் எமக்குத் தேவை. அந்த மக்களை நாங்கள் நேர்மையாகவே நேசிக்கவேண்டும். அவர்களின் எதிர்பார்ப்புகளை அடைவதற்காக நாங்கள் இதயசுத்தியுடன் செயலாற்றுதல் வேண்டும். அதனை விடுத்து வெறுமனே வாக்குகளை பெற்றுக்கொள்கின்ற நோக்கம் மாத்திரம் எமக்கு கிடையாது. இதயத்தின் அடிமட்டத்தில் இருந்து உருப்பெறுகின்ற நேர்மையால் நாங்கள் கட்டிவளர்க்கப்பட வேண்டும்.
சமூக மாற்றத்தை செய்வதற்குப் பொருத்தமான இயக்கமொன்றை நாங்கள் கட்டியெழுப்பி இருக்கிறோமென்ற நம்பிக்கை எம்மிடம் இருக்கவேண்டும். சமூகத்திற்கு நாங்கள் வெறுமனே கனவுகளை, வார்த்தைகளைக் கொடுக்கக்கூடாது. “ஆசியாவின் அதிசயம்” போன்றவற்றை அவர்கள் கூறியுள்ளார்கள். அவர்கள் கூறுவது மாத்திரமே: நாங்கள் கூறுவதை செய்வோம். எனவே முன்னரைவிட தற்போது இந்த இயக்கத்திற்கு கூட்டுமனப்பான்மை அவசியமாகின்றது. அரசியல் வெற்றிக்குள் எமது பங்கினை கைப்பற்றிக்கொள்வதற்காக கட்டியெழுப்பக்கூடிய மனநிலையை இப்போதே கைவிடவேண்டும். வெற்றியில் எங்கேயாவது தமது தனிப்பட்ட பங்கு கிடையாது. அங்கு எல்லா இடத்திலும் இருப்பது எமது கூட்டான பங்காகும். நாங்கள் எமது தனிப்பட்ட எல்லையைக் குறித்துக்கொள்வதன் மூலமாகவன்றி மாபெரும் மனித சமூகத்திற்கு தலைமைத்துவம் வழங்கக்கூடிய ஆற்றல்களும் திறமைகளும் இருக்கின்ற பகுதிகளை உறிஞ்சிக்கொள்வதன் மூலமாகவே வெற்றியை அடைய முடியும்.
நாங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்திலேயே கார்த்திகை வீரர் ஞாபகார்த்தத்தை நடாத்துகிறோம். சமூக மாற்றமொன்றிற்கான பெருங்குரல் நாட்டுக்குள்ளே மாத்திரமன்றி ஐக்கிய அமெரிக்காவில் இருக்கின்ற இலங்கையர் மத்தியிலும்கூட நிலவுகின்ற தருணமாகும். அந்த இலங்கையர்கள் மிகவும் உயர்வான வாழ்க்கையைக் கழித்தாலும் எம்மீது பாரிய எதிர்பார்ப்பினை வைத்துள்ளார்கள். அந்த எதிர்பார்ப்புடன் சூதாட, அவற்றை அதிகார சூதாட்டத்திற்கு எதிரீடு செய்வதற்கான உரிமை எங்களுக்கு இருக்கின்றதா? அந்த எதிர்பார்ப்புகள், அதிகார சூதாட்டத்துடன் பேரம்பேசுகின்ற இடத்திற்கு கொண்டுவர எமக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. எமது பொறுப்பு அந்த எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக மாற்றுவதாகும். இயக்கத்தை சரிவர கட்டியெழுப்பினால் மாத்திரமே அதனை யதார்த்தமாக மாற்றமுடியுமென நான் மீண்டும்மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவல்ல இயக்கமொன்று எம்மிடம் இருக்கின்றதென்பதை நாமறிவோம். அந்த தெம்புடன் எதிரியின் முன்னால் இந்திரகீலம்போல் நிலைதளராமல் இருக்க இயக்கத்தின் பலத்தினாலேயே முடியும். இதுதான் உயிர். அதைனை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
தேசிய மக்கள் சக்தி என்றவகையில் பொதுமக்களை ஒழுங்கமைக்க நாங்கள் பாரிய பணியை மேற்கொண்டுவருகிறோம். அந்த இயக்கத்திற்கு ஆன்மீகத்தை அழைப்பிப்பதற்கான அதிகாரத்தை மக்கள் விடுதலை முன்னணி என்றவகையில் நாங்கள் பொறுப்பேற்க வேண்டும். அதற்காக கார்த்திகை வீரர்களை முன்னொருபொதும் இருந்திராதவகையில் எங்கள் இதயத்திற்குள் சேர்த்துக்கொள்வோம். முன்னொருபோதும் இருந்திராத வகையில் அவர்களின் சாரத்தை நாங்கள் எமது ஆன்மீகத்துடன் சேர்த்துக்கோள்வோம்.
-Colombo, November 13, 2023- இற்றைக்கு 34 வருடங்களுக்கு முன்னராக மக்கள் விடுதலை முன்னணியின் சிருஷ்டிகர்த்தா தோழர் றோஹண விஜேவீர, கட்சியின் பொதுச் செயலாளராக விளங்கிய தோழர் உபதிஸ்ஸ கமநாயக்க உள்ளிட்ட எமது கட்சியின் தலைவர்கள் எமது ஆசான்களாகிய கட்சியின் பெருந்தொகையான சகோதர சகோதரிகளை நாங்கள் “கார்த்திகை ” மாதத்தில் நினைவுகூறுகிறோம். “கார்த்திகை மாதம்” எமது நி்னைவுகளை புதுப்பிக்கின்ற, பல விடயங்களைக் கற்றுக்கொள்கின்ற மாதமாகும். 1989 இன் பின்னர் எம்மால் கார்த்திகை மாதத்தை மறக்க முடியாதுள்ளது. ” […]
-Colombo, November 13, 2023-
இற்றைக்கு 34 வருடங்களுக்கு முன்னராக மக்கள் விடுதலை முன்னணியின் சிருஷ்டிகர்த்தா தோழர் றோஹண விஜேவீர, கட்சியின் பொதுச் செயலாளராக விளங்கிய தோழர் உபதிஸ்ஸ கமநாயக்க உள்ளிட்ட எமது கட்சியின் தலைவர்கள் எமது ஆசான்களாகிய கட்சியின் பெருந்தொகையான சகோதர சகோதரிகளை நாங்கள் “கார்த்திகை ” மாதத்தில் நினைவுகூறுகிறோம். “கார்த்திகை மாதம்” எமது நி்னைவுகளை புதுப்பிக்கின்ற, பல விடயங்களைக் கற்றுக்கொள்கின்ற மாதமாகும். 1989 இன் பின்னர் எம்மால் கார்த்திகை மாதத்தை மறக்க முடியாதுள்ளது. ” நாங்கள் நேரத்தோடு எழுந்துவிட்டோம். நாங்கள் நேரத்தோடு எழுந்துவிட்டோம் என்பதற்காக சூரியன் நேரத்தோடு உதிப்பதில்லை. எனினும் சூரியன் உதிக்கும்போது நேரத்தோடு நாங்கள் விழித்திருப்பது எமக்கு நன்மையைத் தரும்” என தோழர் றோஹண கூறியிருந்தார்.
நாம் அனைவரும் நேரத்துடன் விழித்தெழுந்தவர்களே. நாங்கள் நீண்டகாலமாக விழித்திருந்தோம். மிகவும் இருள்சூழ்ந்த இரவுகள், மிகவும் கடினமான இரவுகளைக் கழித்தோம். நேரத்தோடு விழித்திருந்த எங்களுக்கு தற்போது புதிய உலகத்திற்காக உதயமாகின்ற விடியல், புதிய சூரியக் கதிர்கள் எமது கண்களுக்கு புலப்படத் தொடங்கி உள்ளது. புதிய சமூகமொன்றை நிர்மாணிக்கின்ற வெற்றியை கைக்கெட்டிய தூரத்தில் வைத்துக்கொண்டே 34 வது கார்த்திகை வீரர் ஞாபகார்த்தத்திற்கு வருகைதந்துள்ளீர்கள். இந்த வாய்ப்பினை தவறவிடவோ தவறிழைக்கவோ எவருக்கும் உரிமை கிடையாது. நாங்கள் செல்லவேண்டிய திசை, நோக்கங்களை மீண்டும் நினைவுமீட்க இது எமக்கு நல்லதொரு வாய்ப்பாகும்.
நாங்கள் ஏன் இன்னமும் இறந்தகாலத்திலேயே இருக்கிறோமென ஒருசிலர் எம்மிடம் கேட்கிறார்கள். நாங்கள் கடந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு மிகவும் ஒளிமயமான எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தில் உழைக்கின்ற மனிதர்களாவோம். எதிர்காலத்திற்காக செயலாற்றும்போது எமக்கு இறந்தகாலம் அவசியமாகின்றது. எதிர்கால வெற்றிகளுக்கு வரலாற்றின் பாடங்களே எமக்கு வழிகாட்டுகின்றன. எமது நாட்டில் நிலவுகின்ற இந்த பேரவலத்திற்கான காரணம் ஆட்சியாளர்கள் கடந்த காலத்தில் வரலாற்றினை ஒருபுறம் ஒதுக்கிவைத்தமையாகும். வரலாற்றினை ஒருபுறம் ஒதுக்கிவைப்பதையே 1978 இல் நாட்டை ஆட்சிசெய்த ஜே.ஆர். ஜயவர்தன முதலில் செய்தார். வரலாறு, நோக்கம், ஆழம், ஆன்மீகம் இல்லாத வெற்றுச் சமூகமொன்றை உருவாக்கினார். அந்த சமூகப் பேரவலத்தில் நாமனைவரும் மூழ்கி இருக்கிறோம். எமக்கு வரலாறு தேவை. வரலாற்றில் வாழ்ந்துகொண்டிருப்பதற்காக அல்ல, வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதற்காக. அந்த குறைகூறுகின்ற கனவான்களால் இன்னமும் வரலாற்றிலிருந்து விடுபட இயலாதுள்ளது.
எம்மைக் குறைகூறுகின்ற அவர்கள் இன்னமும் உயிர்வாழ்வது ஜயவர்தன நிர்மாணித்த வரலாற்றிலேயே. அவர்கள் அடிக்கடி கூறுகின்ற விடயம்தான் “88 பீதிநிலை தருணம்”. 77 இல் இருந்தே பீதிநிலை நிலவியது. அதுதான் ஐக்கிய தேசிய கட்சியின் பீதிநிலை. அதற்கு முகங்கொடுத்த இயக்கமே நாங்கள். எமது இயக்கத்தை அடக்கி, தலைவர்களை படுகொலை செய்து ஜயவர்தன ஒரு வரலாற்றினை எழுதினார். இந்த வரலாற்றினைத்தான் மகிந்த ராஜபக்ஷ ஏந்திச் செல்கிறார். அவர்கள் வரலாற்றினை தத்தமக்கு தேவையான வகையில் எழுதிக் கொள்கிறார்கள். போராட்டத்தின் பின்னர் வரலாற்றினை எழுதியவர்கள் வெற்றிபெற்றவர்களே. சமூக நீதிக்காக, விடுதலைக்காக புரிந்த போராட்டம் தோல்வியடைந்த பின்னர் அந்த போராட்டத்திற்கு சேதமேற்படுகின்றவகையில் வெற்றிபெற்றவர்கள் வரலாற்றினை எழுதினார்கள். இந்த வரலாற்றினை மாற்றியமைப்பதற்கான காலம் தற்போது பிறந்துள்ளது. இதுவரை கொண்டுவந்த தவறான வரலாற்றினை மாற்றியமைப்பதற்கும் புதிதாக எழுதுவதற்குமான பொறுப்பு உங்களிடமும் எங்களிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.
உரோமாபுரியில் அடிமைத்தனம் நிலவியவேளையில் அந்த அடிமைமுறைக்கு எதிராகப்போராடிய ஸ்பாட்டகஸ் ஆட்சியார்களால் படுகொலை செய்யப்பட்டார். உரோம ஆட்சியாளர்களின் வரலாற்றின்படி ஸ்பாட்டகஸ் ஒரு குற்றவாளி. எனினும் பல வருடங்களுக்குப் பின்னர் இன்று ஸ்பாட்டகஸ் முழு உலகிற்குமே ஒரு வீரனாக மாறியுள்ளார். 1818 இல் தோன்றிய ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சி வெள்ளைக்கார ஏகாதிபத்தியவாதிகளால் தவிடுபொடியாக்கப்பட்டது. கிளர்ச்சியை நெறிப்படுத்திய கெப்பெட்டிபொல போன்றவர்கள் வெள்ளைக்கார ஏகாதிபதியவாதிகளுக்கணங்க ராஜதுரோகிகள், பயங்கரவாதிகளானார்கள். வெள்ளைக்கார ஆட்சியாளர்கள் அவ்வாறுதான் வரலாற்றினை எழுதினார்கள். அதைப்போலவே 1848 மாத்தளைக் கிளர்ச்சியை நெறிப்படுத்திய வீரபுரன்அப்பு அணியினர் படுகொலை செய்யப்பட்டார்கள். புரன்அப்புவின் அணியினரை பங்கரவாதிகளாக மாற்றி அவர்கள் வரலாற்றினை எழுதினார்கள். அதே வரலாற்றினைத்தான் ஒருசிலர் இன்றும் புரிந்து வருகிறார்கள். வரலாற்றினை மீண்டும் வாசிக்க , எழுத அவசியமான காலமொன்று தற்போது வந்துள்ளது.
இந்த வரலாற்றினை 1977 இல் இருந்து தொடங்கவேண்டும். 1977 இல் ஜே.ஆர். ஜயவர்தன அதிகாரத்திற்கு வந்து நிறைவேற்று அதிகாரம்கொண்ட அரசாங்கத்தை அமைத்துக்கொண்டார். தனியொருவரின் கைகளில் அதிகாரத்தை எடுத்துக்கொண்டார். நியதிச்சட்டமுறையான சர்வாதிகாரத்தை உருவாக்கினார். எதிர்க்கட்சியை அடக்கியாளத் தொடங்கினார். அனைத்துச் சக்திகளையும் அடக்கத் தொடங்கினார். பொலீஸ், இராணுவத்திற்கு மேலதிகமாக தொழிற்சங்களிலிருந்தும் காடையர் குழுக்களை அமைத்தார். செய்தித்தாள்களில் அந்தக் குழுக்கள் “சண்டியர் கூட்டுத்தாபனம்” என அழைக்கப்பட்டது. மக்களை அதிகளவில் அல்லற்படுத்தினார்கள். 1980 யூலை வேலைநிறுத்தத்திற்கு முன்னர் சோமபால எனும் தொழிலாளியை படுகொலை செய்தார்கள். 80 யூலை வேலைநிறுத்தத்தின்போது ஒரு இலட்சத்தை விஞ்சிய எண்ணிக்கை கொண்டவர்கள் தொழிலில் இருந்து வெளியில் போடப்பட்டார்கள். ஒருசிலர் தற்கொலை புரிந்துகொண்டார்கள். அந்த வரலைாற்றினை எவருமே பேசுவதில்லை. 1981 மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலின்போது காடைத்தனமிக்க அமைச்சர்கள் யாழ்ப்பாணத்தின் வாக்குப்பெட்டிகளைத் திருடித் தீமூட்டினார்கள். நூலகத்திற்கு தீ மூட்டினார்கள். வடக்கின் பிரிவினையில் தாக்கமேற்படுத்திய ஒரு காரணம் அதுவாகும். ரணில் என்பவர் அக்காலத்தில் ஜே.ஆர். அரசாங்கத்திள் ஓர் அமைச்சர். வெள்ளையறிக்கைக்கு எதிராக போராடிய மாணவர்களைத் தாக்கினார். உரிமைகளைக் கோரிய மக்களைத் தாக்கினார். கல்வியைக் கத்தரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட வெள்ளையறிக்கைக்கு எதிரான போராட்டத்திற்கு மக்கள் விடுதலை முன்னணி தலைமைத்துவம் அளித்தமையால் அதனை அமுலாக்க ஆட்சியாளர்களால் இயலாமல் போயிற்று. மாணவர் இயக்கம் முன்னெடுத்த போராட்டம் காரணமாக கல்வியைப் பாதுகாத்துக்கொள்ள இயலுமாயிற்று..
அத்துடன் நின்றுவிடாமல் அரசாங்கத்தை விமர்சித்த பலர்மீது தாக்குதல் நடாத்த தொடங்கினார்கள். “தார்மீக சமுதாயம்” எனும் நூலை எழுதிய பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திரவை வடிகானில் இட்டுத் தாக்கினார்கள். பெண்கள் பேரணியொன்று செல்கையில் விவியன் குணவர்தனவை உள்ளிட்ட பெண்கள்மீது தாக்குதல் நடாத்தினார்கள். ஒருசில வழக்குத் தீர்ப்புகளை வழங்கிய நீதியரசர்களின் வீடுகள்மீது குண்டர்களைக்கொண்டு கல்லெறிந்தார்கள். நீதித்துறைமீது அழுத்தம் கொடுத்தார்கள். இவ்வாறான வரலாற்றினையே ஜே,ஆர். ஜயவர்தனாக்கள் உருவாக்கினார்கள். பெண்கள் மீதான வல்லுறவுக்காக சிறைப்படுத்தப்படடிருந்த கோனவல சுனிலுக்கு சனாதிபதி மன்னிப்பு வழங்கி அத்துடன் நின்றுவிடாமல் சமாதான நீதிவான் பதவியையும் கொடுத்தார்கள். இத்தகைய வலாற்றுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார்? ரணில் அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சராவார். அவரும் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும்.
1982 இல் மக்கள் கருத்துக் கணிப்பு கொண்டுவரப்பட்டது. 1983 பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டிருப்பின் மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்திற்கு வந்திருக்கும். ஜே.ஆரின் ஆறில்ஐந்து பெரும்பான்மைப்பலம் இல்லாமல் போயிருக்கும். அதனைத் தடுப்பதற்காக மேலும் ஆறு வருடங்களுக்கு நீடித்துக்கொள்வதற்காக மக்கள் கருத்துக் கணிப்பு நடாத்தப்பட்டது. அது ஒரு கொள்ளைக்கார மக்கள் கருத்துக்கணிப்பு. எமது தலைவர் தோழர் றோஹண விஜேவீர இந்த மக்கள் கருத்துக் கணிப்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். அனைவரையும் அடக்கியாண்டாலும் மக்கள் விடுதலை முன்னணியை அடக்க முடியாதென்பதை ஜே.ஆர். உணர்ந்தார். 1983 இல் ஜே.ஆர். உருவாக்கிய யூலை இனக் கலவரத்தைப் பாவித்து மக்கள் விடுதலை முன்னணி, நவ சமசமாஜக் கட்சி, கமியுனிஸ்ற் கட்சி என்பவற்றைத் தடைசெய்தார். சில மாதங்களுக்குப் பின்னர் கமியுனிஸ்ற் கட்சியினதும் நவ சமசமாஜக் கட்சியினதும் தடையை நீக்கினார். மக்கள் விடுதலை முன்னணியின் தடையை நீக்கவில்லை.
மக்கள் விடுதலை முன்னணி சனநாயகரீதியாக அரசியலில் ஈடுபட்ட ஓர் இயக்கமாகும். சனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோழர் றோஹண விஜேவீர ஐவரில் மூன்றாமிடத்தைப் பெற்றார். தேர்தலில் போட்டியிட முன்வந்த, பகிரங்க அரசியலுக்கு வந்த, பொதுமக்கள் ஒழுங்கமைத்த அரசியல் இயக்கமொன்றை தடைசெய்தலுக்காக நிலவிய காரணமென்ன? இன்றும் அதற்கான காரணம் கிடையாது. 1983 யூலை கலவரங்களுடன் எம்மை தொடர்புபடுத்தினாலும் எமக்கெதிராக வழக்கு கிடையாது. கட்சியைத் தடைசெய்தது மாத்திரமன்றி அதனைத் தொடர்ச்சியாக பேணிவந்தார். தோழர் றோஹண விஜேவீர கட்சித் தடையை நீக்குமாறு உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்: சனாதிபதி செயலாளருக்கு எழுதினார்: மனித உரிமைகள் அமைப்புகளுக்கு எழுதினார். அக்காலகட்டத்தில் கட்சி செயலாளர் லயனல் போபகே கைதுசெய்யப்பட்டார். விடுதலை பெற்று வந்து சனாதிபதி செயலாளர் மெணிக்திவெலவை சந்தித்து தடையை நீக்குமாறு கோரினார். அதற்கு எவருமே செவிசாய்க்கவில்லை. ஜே.ஆர். ஆல் விலைக்கு வாங்க முடியாத, அடிமைப்படுத்த முடியாத, பயமுறுத்த முடியாத, அவர்களுக்கு அரசியல் சவாலாக அமைந்த எமது வர்க்கத்திலிருந்து உருவாகிய இந்த இயக்கத்தை அழிக்கும் நோக்கத்துடன் இருந்தார்கள். ஏன் அந்த வரலாறு எதனையும் பற்றிப் பேசுவதில்லை?
1988 தற்செயலாக வந்ததொன்றல்ல. 83 இல் மக்கள் விடுதலை முன்னணி ஆயுதமேந்தியதா? 84, 85, 86, 87 இல் ஆயுதமேந்தியதா? இல்லை. நாங்கள் தொடர்ச்சியாக தடையை நீக்கிக்கொள்ள முயற்சிசெய்தோம். “தடையை நீக்கு” என நானும் போஸ்டர் ஒட்டியிருக்கிறேன். அவ்விதம் போஸ்டர் ஒட்டிய தோழர்களை பிடித்துக்கொண்டுபோய் கொலை செய்தார்கள். அந்த வரலாறு எழுதப்பட்டுள்ளதா? விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதா? 1987 மே தினம் தடைசெய்யப்பட்டது. மக்கள் அபயாராமவில் ஒன்றுகூடியதும் அங்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இருவர் இறந்தார்கள். அதுமாத்திரமல்ல 1987 உடன்படிக்கையை கைச்சாத்திட்டு இலங்கையை இந்தியாவிற்கு தாரைவார்த்துக் கொடுத்தார்கள். அதன்போது தேசப்பற்றுகொண்ட போராட்டமொன்று தொடங்கியது. அது சிவில் யுத்தம் வரை பயணித்தது. அந்த சிவில் யுத்தத்திற்குள்ளே தான் 88 – 89 பற்றி பேசப்படுகின்றது. 88 – 89 ஜயவர்தனாக்கள் திட்டமிட்டு நிர்மாணித்த ஒன்றாகும். அதனைத் தவிர்த்துச் செல்வதற்காக மேற்கொண்ட பிரயத்தனங்கள் தோல்வியடைந்தமையால் அதனை எதிர்கொள்ளவேண்டி நேரிட்டது. “மண்டியிட்டு வாழ்வதைப் பார்க்கிலும் சொந்தக் கால்களால் எழுந்துநின்று மடிவது மேலானது” என்ற நம்பிக்கை எமக்கு நிலவியது. இன்றும் நாங்கள் மண்டியிட்டு வாழத் தயாரில்லை.
இன்று அரசியல் மாறிவிட்டது. எமது இயக்கத்துடன் பாரிய மக்கள் இயக்கம் ஒன்றுசேர்ந்துள்ளது. இன்று உலக அரசியல் மாறியுள்ளது. வெகுசன ஊடகங்கள் விரிவடைந்துவிட்டன. மக்களை தகவல்கள் வேகமாக சென்றடைகின்றன. அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களிடம் கூட்டுமனப்பான்மை கிடையாது. பலவீனமடைந்துள்ளார்கள். சனாதிபதிக்கு அரசியலமைப்பினாலன்றி மக்களின் பலம் கிடையாது. அன்று ஆடிய ஆட்டங்களை தற்போது ஆடமுடியாது. அன்று ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் “பச்சைப் புலிகள்”, “பிறா” போன்ற உத்தியோகபூர்வமற்ற காடையர் கும்பல்களை உருவாக்கியது. மக்கள் விடுதலை முன்னணியை அபகீர்த்திக்கு உள்ளாக்க, தனிப்பட்ட பழிவாங்கல்களுக்காக எக்கச்சக்கமான படுகொலைகளை செய்தார்கள். சதித்திட்டத்தின் விளைவாகவே இராணுவக் குடும்பங்களை படுகொலை செய்தார்கள். அன்று தொழில்நுடபம் இருந்திருப்பின் அவையனைத்துமே அம்பலமாகி இருக்கும். ஓர் உதாரணத்தை எடுத்துக்கொண்டால் பிரேமகீர்த்தி த அல்விஸ் அவர்களின் படுகொலை பற்றி கூறியவேளையில் அரசாங்கத்துடன் இப்போதும் இருக்கின்ற ஊடகத்துறையைச் சேர்ந்த பலம்பொருந்திய ஒருவர் இந்த படுகொலைக்கு பங்காளியாக இருந்தாரென அவரது மனைவியும் பிள்ளைகளும் உறுதிப்படுத்திக் கூறினார்கள். பகிரங்கமாகக் கூறினாலும் இற்றைவரை அதுபற்றிய விசாரணையொன்று மேற்கொள்ளப்படவில்லை.
இந்த வரலாற்றுப் பயணம்பற்றி அறிந்திராமல் ரணில் விக்கிரமசிங்காக்களின், ராஜபக்ஷாக்களின் பேஸ்புக்குகளில் எழுதுகின்ற தம்பிமார்களிடம் வரலாற்றினை சரிவரக் கற்றுக்கொள்ளுமாறு கூறுகிறேன். எங்களுக்கு மனிதர்கள் பெறுமதியானவர்கள். எமது இயக்கம் உருவாக்கப்பட்டிருப்பதும் பிரமாண்டமான சிரமங்களின் மத்தியில் செயலாற்றி வருவதும் நாங்கள் மக்களை நேசிப்பதாலேயே. நாங்கள் மக்களின் கவலைகளைத் துடைத்தெறிந்து மகிழ்ச்சியாக வைப்பதற்காக உழைக்கின்ற இயக்கமாவோம். தமது வாழ்க்கையை ஒருபுறம் வைத்துவிட்டு பொதுமக்களின் வாழ்க்கைக்கு மகிழ்ச்சியையும் பெறுமதியையும் வழங்குவதற்காக செயலாற்றிய இயக்கமொன்றின் வீரர்களையே நாங்கள் இன்று நினைவுகூறுகிறோம். மக்கள் விடுதலை முன்னணி 1988 – 89 காலப்பகுதியிலான சம்பவங்கள் பற்றி அவ்வாறுதான் நோக்குகின்றது. நாட்டைக் கட்டியெழுப்பவிருந்த பிரமாண்டமான இளைஞர் தலைமுறையினரை நாசமாக்கிய அரசியலைத் தோற்கடித்து நாங்கள் முன்நோக்கி நகரவேண்டும். அந்த வரலாற்றுக்குள் நாங்கள் எமது குறைபாடுகளைக் கண்டோம். ஆட்சிக் குழுக்கள், ரணில் விக்கிரமசிங்க இன்றும் அந்த வரலாறு பற்றி எதுவுமே கூறுவதில்லை. இப்போது நாங்கள் அந்த வரலாற்றிலிருந்து முன்நோக்கி நகரவேண்டும். நாடு தற்போது மிகவும் கவலைக்கிடமான நிலைமையிலேயே இருக்கின்றது.
முன்னர் புரிந்த ஏமாற்றுவேலையையே ஆட்சியாளர்கள் இன்று சமர்ப்பிக்கின்ற வரவுசெலவிலும் புரிந்து வருகிறார்கள். 15 இலட்சம் பேருக்கு தொழில்களை இழக்கச்செய்வித்து கைத்தொழில்களின் உற்பத்தி 27% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று இந்த நாட்டில் பொருளாதாரமொன்று கிடையாது. நாட்டில் இருந்த கைத்தொழில்களை விற்றுத் தின்பதில் ஆரம்பித்த செயற்பாடு இன்று தபால் கந்தோரை விற்பது வரை வந்துள்ளது.
மனிதநேயமுள்ள அரசியலில் ஈடுபட்டு சமூகமொன்றை மாற்றியமைக்கவே கார்த்திகை ஞாபகார்த்தத்தின் அனுபவங்களை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். இந்த சமூகத்தை மாற்றியமைக்கவல்ல பிரமாண்டமான மனித பலத்தைக்கொண்ட, திராணிகொண்ட, விடாப்பிடியாக பேராடுகின்ற அரசியல் இயக்கமொன்றை நாங்கள் கட்டியெழுப்பி இருக்கிறோம். வசதியீனங்களை விஞ்சியதாக நோக்கங்களின்பால் இடையறாமல் பயணிக்கின்ற அரசியல் இயக்கமொன்று இருக்குமாயின் அது மக்கள் விடுதலை முன்னணி மாத்திரமே. நிலைமைகளுடன் புதுப்பொலிவு அடைந்த, புதியதாக மாற இயலுமென்பதை நிரூபித்த, தமது மிகச்சிறந்தவற்றை தக்கவைத்துக்கொண்டு மாறிவருகின்ற ஒரே அரசியல் இயக்கம் மக்கள் விடுதலை இயக்கமாகும். தன்னலமற்ற மனிதனை உருவாக்க முடியுமென்பதை எமது கட்சி நடைமுறையில் நிரூபித்துள்ளது. பொது நோக்கமொன்றுக்காக உழைக்கின்ற குழுவொன்று மக்கள் விடுதலை இயக்கத்தில் இருக்கின்றதென்பதை மக்கள் எற்றுக்கொண்டுள்ளார்கள். இறுதியில் உயிரையும் அர்ப்பணிக்கவல்ல, நோக்கங்களை கைவிடாத இயக்கமென்பதையும் நிரூபித்துள்ளது.
அதைப்போலவே தேசிய மக்கள் சக்தியுடன் நாங்கள் ஒன்றுசேர்ந்து ஊழலற்ற அரசியல் இயக்கமொன்றைக் கட்டியெழுப்பி உள்ளோம். ஊழல்நிறைந்த கறுப்புப் பொருளாதாரத்திற்குள்ளே ஊழலற்ற அரசியல் இயக்கமொன்றை உருவாக்குவது, ஊழலற்ற அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்குவது, ஊழலற்ற அங்கத்தவர்களை உருவாக்குவது மிகவும் சிரமமான வேலையாகும். அதோ அந்த வேலையை நாங்கள் செய்திருக்கிறோம். தேசிய மக்கள் சக்தியை விரும்புபவர்கள் அவ்வாறு விரும்புவதற்கான பிரதான காரணம் ஊழலற்ற அரசியல் இயக்கமாக அமைவதே என்பது மதிப்பாய்வுகள் மூலமாக வெளிப்பட்டுள்ளது. அது எளிமையான விடயமல்ல. ஊழலற்றவர்களாக இருப்பது கேலிக்கூத்தாக அமைந்துள்ள சமூகத்தில் அவற்றைத் தாங்கிக்கொண்டு முன்மாதிரியாகத் திகழ்வது இலகுவான ஒன்றல்ல. திருடினால் பரிகாசம் செய்யாத, நண்பரிடமிருந்து கொடையாக கிடைப்பது பரிகாசத்திற்கு இலக்காகியுள்ள சமூகமொன்றில் நாங்கள் ஊழல்நிறைந்த கலாசாரமொன்றை உருவாக்கி இருக்கிறோம். இப்போது அவர்களுக்கு எமது ஊழலற்ற தன்மை ஒரு சவாலாக மாறியுள்ளது. அவர்கள் ஊழல் பேர்வழிகள் என்பதால் ஜேவீபியும் ஊழல் நிறைந்தது எனும் சமூக கருத்தியலை உருவாக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். அதற்காக படைக்கப்பட்ட ஒருசில செய்திகளுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் அவற்றை படைத்தவர்கள் மன்னிப்புக் கோரவேண்டியும் ஏற்பட்டது. குறிப்பாக தோழர் அநுரவை இலக்காகக்கொண்ட சேறுபூசுகின்ற இயக்கமொன்று தொடங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒருவர்மீது ஒருவர் குறைகூறிக்கொண்டு முன்னெடுத்துவருகின்ற இந்த சேறுபூசுகின்ற இயக்கத்தினால் இரத்தத்தால் இணைந்த எமது சகோதரத்துவத்தை சிதைக்க முடியாது. எமது கட்சியில் இருந்த தவறுபுரிந்தவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். இத்தகைய எமது நல்ல பண்புகளை பாதுகாத்துக்கொண்டு முன்நோக்கி நகர்ந்துள்ளோம். எமது வாழ்க்கையில் சேகரித்துக்கொண்ட மிகச்சிறந்தவற்றை கட்சியுடன் சேர்த்துவந்த பயணத்தில் மக்கள் விருப்பத்தின்பேரில் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் இலக்கினை நாங்கள் நெருங்கியுள்ளோம்..
கார்த்திகை வீரர் ஞாபகார்த்தத்தில் அந்த சகோதர சகோதரிகள் எமக்குப் பெற்றுத்தந்துள்ள அனுபவங்கள், மிகச்சிறந்த முன்னுதாரணங்கள் மற்றும் அவர்களின் நோக்கங்களுக்கிணங்க மிகவும் சாதகமாக சமூகத்தைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம். நீதியான சமூகம், நெறிமுறைசார்ந்த மனிதன், அடிமைத்தனமற்ற இலங்கையை உருவாக்கும் நோக்கத்துடன் முன்நோக்கி நகர்ந்த அவர்களை இடைநடுவில் கொன்றுபோடுகையில் எமக்கு பொறுப்புக்களை ஏற்கவேண்டி நேரிட்டது. மிகவும் குறுகிய எதி்ர்காலத்தில் அவர்களின் எதிர்பார்ப்புகள் இந்த பெருநிலத்தில் விளைகின்ற நாள் வரும். அதனை ஊழல்பேர்வழிகளால், ரணில் விக்கிரமசிங்காக்களால், மகிந்த ராஜபக்ஷாக்களால் தடுக்க முடியாது. சேர்க்கக்கூடிய, சேர்த்துக்கொள்ள வேண்டிய குழுவினரை, அனுவங்களையும் அறிவினையும் சேர்த்துக்கொண்டு மிகப்பிரமாண்டமான மக்கள் இயக்கமொன்றைக் கட்டியெழுப்பி, நெறிமுறைகளை பாதுகாத்துக்கொண்டு முன்நோக்கிச் செல்லவேண்டிய பொறுப்பு எம்மனைவருக்கும் இருக்கிறது. நாங்கள் மக்களின் ஆட்சியை உருவாக்க வேண்டும். அதற்காக பொருத்தமான பொதுமக்களை நிர்மாணிக்க ஒன்றுபட்டு அடக்கமாகவும், இலக்குகளைக் கொண்டதாகவும், பொய்க்கிடங்குகளில் கால் பதிக்காமல், மிகுந்த போராட்டக் குணத்துடன் இந்த பயணத்தை மேற்கொள்ள நாங்கள் பலமடையவேண்டும். இந்த யுகத்தின் பலம்பொருந்திய ஆயுதம் “கருத்துக்களால் ” போராடுவதே என தோழர் றோஹண விஜேவீர கூறியுள்ளார். ரணில் விக்கிரமசிங்காக்கள், மகிந்த ராஜபக்ஷாக்கள் ஆகியோரை கருத்துக்களால், கருத்தியல்களால் தோற்கடித்துவிட்டோம். தற்போது எஞ்சியிருப்பது அரச அதிகாரத்தில் இருந்து தோற்கடிப்பதாகும். அதற்காக கார்த்திகைவீரர் ஞாபகார்த்தத்தில் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய பெறுமானங்கள் இருக்கின்றன.
நாங்கள் வசிப்பது மிகுந்த அழிவுநிறைந்த படுமுமோசமான சமூகத்திலேயே ஆகும். எல்லாவற்றினதும் விலையை அறிந்த, பெறுமதியை அறியாத சமூகத்தை மாற்றியமைத்து இந்த நாட்டை நாங்கள் உயிர்வாழக்கூடிய நாடாக மாற்றுகின்ற நோக்கத்தை வெற்றியீட்டவேண்டும். முப்பத்தைந்தாவது கார்த்திகைவீரர் ஞாபகார்த்தத்தை மக்களின் ஆட்சிக்குள் நினைவுகூற முப்பத்தி நான்காவது கார்த்திகை வீரர் ஞாபகார்த்தத்தில் திடங்கற்பம் பூணுவோம். எனது உரையை நிறைவுசெய்ய முன்னராக ரத்ன ஸ்ரீ விஜேசிங்க எழுதிய கவிதையின் ஒருபகுதியை மேற்கோள்ள காட்ட விரும்புகிறேன். 1971 போராட்டம் பற்றி எழுதிய அந்த கவிதைப்பகுதி இன்றும் பொருந்தக்கூடியதாக பாரிய பொருள்நிறைந்த கவிதையாகும்.
என் நண்பர்களே பூக்கள் மலர்ந்தால் மரத்தில்
காய்ப்பது நிச்சயமதில் சந்தேகம் கிடையாது
மனதால் தளரவிடாமல் மலர்களின் மென்மையை
வாரீர் மகரந்தச் சேர்க்கைக்கு சீக்கிரம் கூட்டமாக
இந்த கொடிய சமூகத்தை மாற்றியமைத்து மிகவும் சாதகமான சமூகமொன்றை எமது கைகளால் நிர்மாணித்திட அனைவருக்கும் ஆக்கமும் ஊக்கமும் கிடைக்கட்டுமாக
-Colombo, November 06, 2023- கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியைப் பெற்றுக்கொண்ட ஆரம்ப காலத்தில் பெறுமதி கணிக்கப்பட்ட ரூபா 50/- இறக்குமதித் தீர்வையை 25 சதத்திற்கு குறைத்ததால் புரிந்த வேலையையே தற்போது ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் 25 சத வரியை ரூபா 50/- வரை அதிகரித்து தமது கூட்டாளிகளுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மக்கள் இருப்பது பிரமிட் வில்மா எனப்படுகின்ற கம்பெனியை முதன்மையாகக்கொண்ட கூட்டாளிகள் சிலருக்கு செல்வத்தைக் குவிக்க வாய்ப்பினை எற்படுத்திக்கொடுக்கும் அளவிலான பின்புலத்தில் அல்ல. மரத்தால் வீழ்ந்தவனுக்கு […]
-Colombo, November 06, 2023-
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியைப் பெற்றுக்கொண்ட ஆரம்ப காலத்தில் பெறுமதி கணிக்கப்பட்ட ரூபா 50/- இறக்குமதித் தீர்வையை 25 சதத்திற்கு குறைத்ததால் புரிந்த வேலையையே தற்போது ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் 25 சத வரியை ரூபா 50/- வரை அதிகரித்து தமது கூட்டாளிகளுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மக்கள் இருப்பது பிரமிட் வில்மா எனப்படுகின்ற கம்பெனியை முதன்மையாகக்கொண்ட கூட்டாளிகள் சிலருக்கு செல்வத்தைக் குவிக்க வாய்ப்பினை எற்படுத்திக்கொடுக்கும் அளவிலான பின்புலத்தில் அல்ல. மரத்தால் வீழ்ந்தவனுக்கு மாடு ஐந்தாறு தடவைகள் முட்டியதுபோல் அரசாங்கம் எரிபொருள் விலை, மின்சாரக் கட்டணம், வற் வரியை அதிகரித்து பலவிதமான வாதங்களை கொண்டுவருகின்றது. சீனி வரியை விதித்தல் சம்பந்தமாக வர்த்தக அமைச்சர் நளீன் பர்னாந்து பொறுப்புக்கூற வேண்டும். இந்த வரி திடீரென ஏன் அதிகரிக்கப்பட்டதென்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். சந்தையில் நிலவுகின்ற விலைகளில் பாவனையாளர் அதிகாரசபை விதிக்கின்ற அதிகபட்ச விலை மற்றும் வரி விதிக்கப்பட்ட பின்னர் தனிவேறாக வற் என்ற வகையில் சீனி சம்பந்தமாக பல்வேறு விலைமட்டங்கள் நிலவுகின்றன. சீனிக்காக 25 சத வரியைச் செலுத்தி துறைமுகத்திலிருந்து விடுவித்துக்கொள்ளப்பட்ட சீனிக்காக ரூபா 50/- வரியை விதித்ததன் மூலமாக ரூ 40.75 வரியை ஒரு கிலோவுக்காக செலுத்தாமல் பாரிய இலாபத்தை ஈட்டிக்கொள்ள இடமளிக்கப்பட்டுள்ளது.
எமக்கு பதிவாகின்ற விதத்தில் ஏறக்குறைய 850 மெட்றிக்தொன் சீனியை இறக்குமதிசெய்த கம்பெனிகளுக்கு இந்த வரி காரணமாக மேலதிக இலாபம் கிடைத்துள்ளது. 2023 அக்டோபர் 30 ஆந் திகதி 520 மெட்றிக் தொன் சீனியை வில்மா கம்பெனி 25 சதத்தை செலுத்தி விடுவித்துக் கொண்டுள்ளது. முன்னர் மிகப்பெரிய நன்மையைப் பெற்றதும் இதே கம்பெனிதான். இந்த சீனித் தொகையினை நவெம்பர் 01 ஆந் திகதி விடுவித்துக் கொண்டதும் உடனடியாக இரண்டாந் திகதியில் இருந்து அமுலுக்கு வரத்தக்கதாக ரூபா 50/- வரி விதிக்கப்படுகின்றது. தற்போது நாங்கள் கடைக்குச் சென்றால் எமக்கு ஒரு கிலோவைக் கொடுப்பது 25 சத வரிக்காக அல்ல, ரூபா 50/- வரி சேர்க்கப்பட்ட சீனி விலைக்காகும். இந்த செயற்பாங்கு கபடத்தனமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெளிவாகின்றது. இந்த சீனித் தொகையிலிருந்து மாத்திரம் அண்ணளவாக 25 மில்லியன் ரூபா மேலதிக இலாபம் கிடைக்கிறது. இதுபோன்ற சூழ்ச்சிகளால் அரசாங்கம் இழக்கின்ற வரியைப் பற்றி நன்றாக விளங்கிக்கொள்ள அன்று ராஜபக்ஷாக்கள் சீனி வரி சம்பந்தமாக மேற்கொண்ட நடவடிக்கைபற்றி கணக்காய்வாளர் தலைமை அதிபதி அறிக்கையிலிருந்து விடயங்களை முன்வைக்கிறேன். அரசாங்கத்தின் கணக்காய்வாளர் தலைமை அதிபதி சமர்ப்பித்த அறிக்கையில் “வெள்ளைச் சீனிக்காக அர்ப்பணித்த வரி” என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. ராஜபக்ஷாக்கள் அன்று பிரமிட் வில்மா கம்பெனிக்கு அர்ப்பணித்த வரியைப்போன்றே ரணில் விக்கிரமசிங்க தற்போது அர்ப்பணித்துள்ளார். அரசாங்கத்திற்கு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்த பதினாறாயிரத்து எழுநூற்றி அறுபத்தி மூன்று மில்லியன் வரி வருமானத்தை 2020 அக்டோபர் 17 ஆந் திகதி தொடக்கம் 2021 பெப்புருவரி 28 ஆந் திகதி வரை இழந்துள்ளதாக இந்த அறிக்கையில் கணக்காய்வாளர் தலைமை அதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த செயற்பாங்கு காரணமாக ஆயிரத்து அறுநூற்று எழுபது கோடி ரூபா வரி வருமானம் இழந்தமைக்கு மேலதிகமாக மேலும் பல வருமான இழப்புகள் பற்றிய பட்டியலொன்றை கணக்காய்வாளர் தலைமை அதிபதி சமர்ப்பித்துள்ளார். சதொசவிற்கு சீனி விற்பனையால் 102 மில்லியன், இறக்குமதி அபராதக் கட்டணம் குறைத்தமையால் 433 மில்லியன், உரிமம் பெறாமல் இறக்குமதி செய்தமையால் 283 மில்லியன், இறக்குமதிக் கட்டுப்பாட்டாளர் உரிமக் கட்டணத்தை இழந்தமையால் 203 மில்லியன், சுங்கக் கட்டணம் 267 மில்லியன் என்றவகையில் மேலதிக வருமானம் இழக்கப்பட்டுள்ளது. இந்த வருமானம் கூட்டாளிக் கம்பெனிகளுக்கிடையில் இலாபமென்றவகையில் பகிர்ந்துசெல்ல இரண்டு இலட்சத்து எழுபத்தேழாயிரத்து எழுநூற்றி பதினைந்து மெட்றிக்தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இந்த அளவில் 45% பிரமிட் வில்மா கம்பெனியாலேயே கொண்டுவரப்பட்டது. வில்மா கம்பெனிக்கு மாத்திரம் 622 கோடி மேலதிக இலாபம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய ஆயிரம் கோடி மேலும் ஒன்பது கம்பெனிகளுக்கிடையில் பகிர்ந்துசென்றுள்ளது. இது சம்பந்தமாக நாங்கள் நீதிமன்றத்தில் முறைப்பாடொன்றினை தாக்கல் செய்துள்ளோம்.
பாவனையாளர் அதிகாரசபையினால் வெள்ளை சீனிக்கான உச்ச சில்லறை விலை ஒரு கிலோவிற்கு 275/- எனவும் பழுப்பு சீனிக்கான உச்ச சில்லறை விலை ஒரு கிலோவிற்கு 330/- எனவும் குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டது. இந்த வர்த்தமானிக்கிணங்க சீனி விற்பனை செய்யப்பட்டாலும் மோசடியை சட்டபூர்வமானதாக்கியதன் மூலமாக கம்பெனிகளுக்கு மேலதிகமாக பாரிய இலாபம் ஈட்டுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சந்தையில் தற்போது 330/- ரூபாவிற்கும் சீனி விற்பனை செய்யப்படுகின்றது. அரசாங்கம் கூறுகின்ற உச்ச விலை தேநீர் பருகுகின்ற, சாயம் குடிக்கின்ற மக்களுக்கு அமுலாக்கப்படுவதில்லை. சீனியைப் பாவித்து தயாரிக்கப்படுகின்ற அனைத்து உணவு வகைகளினதும் விலை அதிகரிக்கின்றது. திடீரென இந்த வரியை விதிக்கக் காரணம் அக்டோபர் மாதத்தில் மாபெரும் அளவிலான சீனியைக் கொண்டுவந்து இலங்கை மக்களை எறும்பு தின்று இறக்கின்ற நிலைமை உருவாகியதாலா? அவ்வாறின்றேல் இந்த வரியை அதிகரிக்க ஏதுவாக அமைந்த காரணங்களை அமைச்சர் நாட்டுக்குக் கூறவேண்டும். அடுத்ததாக நடைபெறப் போகின்ற தேர்தல்களின்போது பிரமிட் வில்மா ரணில் விக்கிரமசிங்கவிற்கு பணத்தை அள்ளிவீசுவதற்கான முயற்சியா இது? சந்தைக்கு வருவதற்கு முன் 520 மெட்றிக் தொன் சீனியிலிருந்து 25 மில்லியன் ரூபா இலாபத்தை ஒரு கம்பெனிக்கு வழங்கிய சூதாட்டமே இங்கு இடம்பெற்றுள்ளது. இந்த சூதாட்டத்தை நிறுத்த வேண்டும். இதற்கு முன்னர் இதே தீத்தொழில் புரிபவர்கள் அரசாங்கத்திற்கு இழக்கச்செய்வித்துள்ள வரித்தொகையின் அளவினை கணக்காய்வாளர் தலைமை அதிபதி வெளிக்கொணர்ந்துள்ள வேளையில் மீண்டும் அவர்களுக்கே சீனி வரியை அதிகரித்ததன் மூலமாக அநுகூலம்பெற இடமளித்துள்ளார்கள் என்பதை மக்களுக்கு வலியுறுத்திக் கூறுகிறோம். அனைத்திலிருந்தும் கைநழுவிச் செல்கின்ற அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சரைக் கேள்விக்குட்படுத்துமாறு நாங்கள் ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். வரி விதிக்கப்படுவதை அறிந்து தகவல்கள் எவ்வாறு வெளியில் சென்றன எனவும் கோள்வி கேட்கிறோம். இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது அரசாங்கத்திற்கோ அல்லது மக்களுக்கோ அநுகூலம் பெறுவதற்காக அல்ல.
“அழுத்தத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் பதிற்செயலை வெளிக்காட்டும்போது “கடனிறுக்க வகையற்ற சர்வாதிகாரத்தை” நோக்கிப் பயணிக்க முயற்சி செய்கிறார்களா எனும் சந்தேகம் எமக்குத் தோன்றுகிறது.” –தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் – பேராசிரியர் அனில் ஜயசிங்க–
இத்தருணத்தில் நாடும் மக்களும் எவ்வளவு ஆழமான பிரச்சினைகளுடன் மல்லுக்கட்டிக்கொண்டு இருகிறார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். பிரச்சினைகளிலிருந்து மக்களை மீட்டெடுப்பதாகக்கூறி அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட அரசாங்கம் தற்போது சாதாரண பொதுமக்கள்மீது மென்மேலும் பாரிய அழுத்தத்தைப் பிரயோகித்து வருகின்றது. குறிப்பாக 2024 ஆண்டுடன் தொடர்புடைய வரவுசெலவு வருவதற்கு முன்னராகவே இந்த வரிவிதித்தல் இடம்பெறுகின்றது. சீனி வரிக்கு மேலதிகமாகவே சேர்பெறுமதி வரி (வற்) 18% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேரில் வரிகளை அதிகரிப்பதன் மூலமாக சாதாரண மக்கள் கைகளில் உள்ள பணத்திலிருந்து கொள்வனவு செய்யக்கூடிய பண்டங்களின் அளவு வேகமாக வீழ்ச்சியடைவதே இடம்பெறும். எரிபொருள், மின் கட்டணம், கேஸ் விலையை அதிகரித்து வருகின்ற பின்னணியில் வற் வரியும் மற்றுமொரு சுற்றில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் புகையிலை மற்றும் புகைக்கும் பொருட்கள் மூலமாக அறவிடப்படத்தக்கதாக இருந்த 113 பில்லியன் வரியை அறவிட்டுக் கொள்ளாமல் போர்ட் சிட்டி போன்ற விசேட இடங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட அதானி போன்ற வெளிநாட்டுத் தீத்தொழில் புரிபவர்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏன் அவ்வாறான நிலைமை வரவுசெலவுக்கு முன்னராகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றது? ஐ.எம்.எஃப். இன் அடுத்த கடன் தவணையை பெற்றுக்கொள்ள அவசியமான நிபந்தனைகளை ஈடேற்றுவதே இங்கு இடம்பெறுகின்றது. அவர்களின் நிபந்தனைகள் மத்தியில் அரசாங்கத்தின் வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுப்பதே முதன்மைத்தானம் வகிக்கின்றது. அதைப்போலவே அரசாங்கத்திற்குச் சொந்தமான வளங்களை விற்குமாறு நிர்ப்பந்தித்தலாகும். ஐ.எம்.எஃப். பணிப்புரைகளுக்கிணங்க இலக்காகக்கொள்ளப்பட்ட வரி வருமானத்தின் 15% செத்தெம்பர் இறுதியளவில் அறவிடப்பட்டிருக்கவில்லை. இந்த வருடத்தில் அந்த வரியை அறிவிட்டுக்கொள்வதற்காக பொதுமக்கள் மீது திணிப்பதே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நாணய நிதியத்தினாலேயே சமர்ப்பிக்கப்பட்டுள்ள உலக நாடுகளின் வரி அறவிடல் பற்றிய விபரங்கள் தொடர்பில் உங்களின் கவனத்தை ஈர்க்கச்செய்விப்பது அவசியமானதாகும். உலக நாடுகளில் அந்தந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% ஐ விட அதிகமான அளவினை அந்தந்த அரசாங்கங்கள் வரியாக அறவிட்டுக்கொண்டுள்ளன. இத்தகைய அளவிலான வரியை அறிவிட்டால் மாத்திரமே மக்களுக்கு அவசியமான பொது வசதிகளை வழங்க முடியும். ஆசிய பிராந்தியத்தை ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டாலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 20% வரியாக அறவிட்டாலும் இலங்கையில் அந்த அளவு 10% ஐ விடக் குறைவானதாகும். எனினும் ஆசியாவில் மிகவும் அதிகமான நேரில் வரிகள் இலங்கையிலேயே நிலவுகின்றன. அதைப்போலவே வருமான வரி அறவிடுகின்ற அளவும் 36% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேரில் வரியையும் வருமான வரியையும் மிகவும் அதிகமான சதவீதத்தில் அறவிட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% ஐ விடக் குறைவான அளவினையே பொதுமக்கள்மீது அனைத்துவிதமான அழுத்தங்களையும் சுமத்தியே அரசாங்கத்தின் வரியாக அறவிடப்பட்டுள்ளது. எனினும் அவர்களின் கூட்டாளிகளான தீத்தொழில் புரிபவர்களுக்கு வரி வலையிலிருந்து தப்பிச்செல்ல இடமளிக்கப்பட்டுள்ளது. இதன் இறுதிப்பெறுபேறு மக்கள் மென்மேலும் அழுத்தங்களுக்கு இரையாவதாகும். ஒருபுறத்தில் மக்களின் வாழ்க்கையை குற்றுயிராக்குதல் இடம்பெற்று வருவதோடு மறுபுறத்தில் நாட்டின் அபிவிருத்திச் செயற்பாங்கு நலிவடையவும் இந்த வரிகள் தாக்கமேற்படுத்தி உள்ளன. ஒட்டுமொத்த கேள்வி குறைவடைந்தவிடத்து பொருளாதார வளர்ச்சி செயற்பாங்கிற்கு உந்துசக்தி கிடைக்கமாட்டாது. அரசாங்கத்தின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் முரண்பாடு நிலவுகின்றது.
குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு பேணிவருகின்ற உற்பத்திகளுக்கும் சந்தையில் நிலவுகின்ற கேள்வி இல்லாதொழிகின்றது. இறுதியில் அனைத்தினதும் நன்மைகள் கிடைப்பது கொள்ளைக்காரப் கும்பலுக்கு மாத்திரமேயாகும். தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை என்றவகையில் இத்தருணத்தில் எம்மால் செய்யக்கூடியது சம்பந்தப்பட்ட விடயங்களை மக்களுக்கு விளக்கிக்கூறுவது மாத்திரமேயாகும். அரசாங்கத்தின் ஊழல்மிக்க மற்றும் தவறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை மாத்திரமே இவ்வேளையில் செய்யமுடியும். அதற்கு மேலதிகமாக விசேடமாக செய்யவேண்டியது ஊழலற்ற ஆட்சியொன்றை நிறுவவேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு தெளிவுபடுத்திக் கூறுவதாகும். மக்களால் இனிமேலும் அழுத்தத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் பதிற்செயல் புரிகையில் ” கடனிறுக்கவகையற்ற சர்வாதிகாரத்தை” நோக்கிச்செல்ல முயற்சி செய்கிறார்களா எனும் கடுமையான சந்தேகம் எமக்கு எழுகின்றது. ஏற்கெனவே இவ்விதமாக வரிகளை விதித்து எதிர்வரும் வரவுசெலவிலும் மீண்டும் அழுத்தத்தைக் கொடுத்து கடனிறுக்கவகையற்ற சர்வாதிகாரத்திற்கான பாதையை அமைத்துக்கொண்டு மக்களை அடக்கியாள முயற்சி செய்கிறார்களா? 2024 ஆம் ஆண்டுக்காக முன்வைத்துள்ள செலவுத் தலைப்புகளுக்கு அமைவாக மிகவும் அதிகமான பணத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது மக்களின் பொது வசதிகளுடன் தொடர்புடைய செலவுகளுக்காகவல்ல. அந்த செலவுகளை வெட்டிவிட்டு சனாதிபதிக்கும் அவரைச் சுற்றியுள்ள குழுக்களுக்கும் பாதுகாப்புப் பிரிவுகளுக்கும் செய்கின்ற செலவுகளை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளே காணப்படுகின்றன. தற்போது விதிக்கப்பட்டுள்ள வரிச்சுமை மாத்திரமன்றி வரவுசெலவு மூலமாக வருங்காலத்தில் மேலும் பாரியளவில் நேரில்வரிகளை அறிவிட்டுக்கொள்கின்ற ஆபத்து நிலவுகின்றதென்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். அது சம்பந்தமாக விழிப்புணர்வூட்டப்பட்டு ஒழுங்கமைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்
கேள்வி :- விளையாட்டுத்துறை மூலமாக எமது நாட்டுக்கு பணம் தேடிக்கொள்ள முடியாதா?
பதில் :- முடியும். யுறோக்களில், டொலர்களில் பணத்தை ஈட்டிக்கொள்ள முடியும். விளையாட்டு அணிகளுக்கு மாத்திரமல்ல விளம்பரங்கள் மூலமாகவும் பணத்தை ஈட்டிக்கொள்ள முடியும். ஆனால் தற்போது கிரிக்கெற் பற்றியே விசேடமாக பேசப்படுகின்றது. கிரிக்கெற் கட்டுப்பாட்டுச் சபை ஈடுபடாதது கிரிக்கெற்றுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் மாத்திரமே. கிரிக்கெற் நிறுவன உத்தியோகத்தர்களின் பிரத்தியேக கணக்குகளுக்கு பணம் சென்றவிதம் வெளிப்பட்டுள்ளது. அதனால்த்தான் ஒருசிலரது தனிப்பட்ட முதுசமாக கிரிக்கெற் கட்டுப்பாட்டுச் சபையை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டுக்கு வருகின்ற வருமானத்தை பகிர்ந்து கொள்வதற்கான பாரிய போட்டியே சபைக்குள்ளே நிலவுகின்றது.
கேள்வி :- அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் இடைக்கால நிருவாக சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நிலவுகின்ற சிக்கல்களுக்கு தீர்வினைப்பெற்றுக்கொடுக்க அந்த சபைக்கு இயலுமா?
பதில் :- என்னால் அதுபற்றி இப்போதே சரியான பதிலைக் கூறமுடியாது. காரணம் அந்த சபையை நிறுவி இன்னமும் ஒரு நாள்தான் கழிந்துள்ளது. ஆனால் இவ்வாறு கூறலாம். எவர் நியமிக்கப்பட்டாலும் வேறு தில்லுமுல்லுகள் இடம்பெறாமல் கிரிக்கெற் விளையாடினால் எமது நாட்டில் கிரிக்கெற்றை உருப்படியாக்க முடியும். இந்த விளையாட்டு எமது மக்களின் உயிரோடும் உணர்வோடும் ஒன்றிப்போயுள்ளது. பொருட்களின் விலைகளால் வரிச் சுமையினால் இவ்வளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அதனால்த்தான் கிரிக்கெற் மீது விரக்தியடைந்துள்ளார்கள். கிரிக்கெற் தோல்வியால் வேதனை அடைந்துள்ளமைக்கான காரணம் அவர்கள் கிரிக்கெற்றை நேசிப்பதாலாகும்.
-Colombo, November 10, 2023- இலங்கை மண்ணுடன் தாயகத்துடன் இருக்கின்ற பிணைப்பினைக் கைவிட்டுவிடாமல் அங்கு வசிக்கின்ற மக்கள் எதிர்நோக்கியுள்ள மிகவும் ஆழமான நெருக்கடிகள் பற்றிய ஒத்துணர்வுடன் இருக்கிறீர்கள் என்பது நீங்கள் இங்க வருகைதருவதன் மூலமாக உறுதியாகியுள்ளது. நீங்கள் இதில் கலந்து கொண்டமைக்காக உங்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் இலங்கையில் அரசியல் மாற்றமொன்று தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தோற்றியவர்களே. வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களில் பெரும்பான்மையானவர்கள் 2019 சனாதிபதி தேர்தலிலும் அதனைத் தொடர்ந்துவந்த பொதுத்தேர்தலிலுமே முனைப்பாக பங்கேற்றார்கள். ஆனால் இன்று […]
-Colombo, November 10, 2023-
இலங்கை மண்ணுடன் தாயகத்துடன் இருக்கின்ற பிணைப்பினைக் கைவிட்டுவிடாமல் அங்கு வசிக்கின்ற மக்கள் எதிர்நோக்கியுள்ள மிகவும் ஆழமான நெருக்கடிகள் பற்றிய ஒத்துணர்வுடன் இருக்கிறீர்கள் என்பது நீங்கள் இங்க வருகைதருவதன் மூலமாக உறுதியாகியுள்ளது. நீங்கள் இதில் கலந்து கொண்டமைக்காக உங்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் இலங்கையில் அரசியல் மாற்றமொன்று தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தோற்றியவர்களே. வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களில் பெரும்பான்மையானவர்கள் 2019 சனாதிபதி தேர்தலிலும் அதனைத் தொடர்ந்துவந்த பொதுத்தேர்தலிலுமே முனைப்பாக பங்கேற்றார்கள். ஆனால் இன்று உங்களுக்கு என்ன நேர்ந்துள்ளது. உங்களின் எதிர்பார்ப்புகள் முற்றாகவே நாசமடைந்துள்ளன. எனினும் அதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கங்களைக் கவிழ்க்கவும் அரசாங்கங்களை அமைக்கவும் நீங்கள் பங்களித்துள்ளமை உறுதியாகின்றது. மேற்படி அத்தனை தருணங்களையும் திரும்பிப் பார்க்கையில் உங்களுக்கு நேர்ந்துள்ளது மனவேதனையும் எதிர்பார்ப்புச் சிதைவும் மாத்திரமே. நான் உங்களிடம் ஒரு விடயத்தை உறுதியாகக் கூறுகிறேன். தற்போது எம்மோடு உரையாடுவதற்கும் நாம் கூறுவதை செவிமடுக்கவும் பெருமளவிலான குழுவினர் இருக்கிறார்கள் என்பதை நம்புகிறோம். நீங்கள் எம்மீது வைத்தள்ள நம்பிக்கை கடுகளவேனும் சிதைவடைய இடமளியோம் என்று சபதம் செய்கிறோம். நீங்கள் இத்தருணத்தில் பங்கேற்று நாட்டுக்காக ஏதேனுமொரு பணியை ஈடேற்றினீர்கள் என்பது நினைவில் நிற்கின்ற நாளாக அமையுமென்பது உறுதியானதாகும்.
இவ்விதமாக தொடர்ந்தும் நாட்டுக்கோ மக்களுக்கோ முன்நோக்கி நகரமுடியாது. மக்களின் அடிப்படைத் தேவையான உணவு சம்பந்தமாக நாட்டில் எத்தகைய நிலைமை நிலவுகின்றது? சனத்தொகையில் 68% ஏதேனும் விதத்திலான உணவு நெருக்கடிக்குள் வீழ்ந்துள்ளதாக மத்தியவங்கி அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது. இந்த நிலைமை மாற்றப்படக்கூடாதா? அதைப்போலவே குறைந்தபட்ச சுகாதார வசதிகள் கூட அவலநிலைக்குச் சென்றுள்ள நிலைமையை மாற்றியமைத்தே ஆகவேண்டும். அதைப்போலவே போதைப்பொருட்களையும் பாதாள உலகத்தையும் பயங்கரமான முறையில் வளர்த்தெடுத்துள்ள அரசியல் சுற்றுச் சூழலே நிலவுகின்றது. அம்பாந்தோட்டை வம்பொட்டா, ஜுலம்பிட்டியே அமரே போன்ற குற்றச்செயல் புரிபவர்களை வளர்த்தெடுத்துள்ள அரசியலை மாற்றயமைத்திட வேண்டும். சட்டத்தின் ஆட்சியை முற்றாகவே சிதைத்து குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் நாட்டை ஆட்சிசெய்கின்ற நிலைமைக்கு நாசமாக்கியுள்ளார்கள். இந்த நிலைமையை மாற்றியமைத்திட நாட்டில் மாற்றமொன்றை ஏற்படுத்த உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு எமக்கு அவசியமாகும். எனினும் மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோன்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படக்கூடும். அது நியாயமானதே. ஆனால் உங்களுக்கு தற்போது வாய்ப்பு உருவாகி இருக்கின்றது: அது பற்றி எம்மிடம் கேழுங்கள். அதனால் இந்த உரையாடல் சிக்கல்களை தீர்த்துக்கொள்ளலின்பால் பிரவேசிப்பது முக்கியமானது.
இதுவரை காலமும் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள முடியாமல் போனவர்களுக்கு இத்தடவை அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான இயலுமை எப்படி கிடைத்துள்ளது? அரசியல் பலதசாப்தங்களாக தன்வழியில் பாய்ந்தோடினாலும் அதற்குப் பதிலாக அரசியல் மாற்றமொன்றை ஏற்படுத்த அவசியமான அடிப்படை அத்திவாரம் உருவாக்கப்பட்டுள்ளது. ரணிலுக்கு எதிராக மகிந்த ராஜபக்ஷவின் அணியை தெரிவுசெய்தவர்களுக்கு இப்போது என்ன நடந்துள்ளது? ஆளும் வர்க்கத்தினருக்கு அனைத்துவிதமான முரண்பாடுகளையும் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு ஒன்றுசேரும் அளவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அதைப்போலவே இரண்டாவதாக மக்களால் தொடர்ந்தும் வழமைபோல் வாழமுடியாதவகையில் அடிமட்டத்திலிருந்து தோன்றுகின்ற நெருக்கடியும் மிகவும் உயரத்திற்குச் சென்றுள்ளது. இவ்விதமாக ஆட்சியாளர்களுக்கு வழமைபோல் ஆட்சியை நடாத்திவர இயலாதென்பதாலும் மக்களால் வழமைபோல் தொடர்ந்தும் செயலாற்ற இயலாதென்பதாலும் சமூக மாற்றத்திற்கு அவசியமான பலம்பொருந்திய காரணிகளை நெறிப்படுத்துதல் வரை வந்துள்ளது. இப்போது அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள முடியுமா முடியாதா எனும் கேள்வி இருப்பது எம்மிடமே. அப்படியானால் எம்மிடமிருக்கின்ற வெற்றிகள் மற்றும் தோல்விகள் யாவை? அவர்கள் இந்த நிலைமைக்கு முகங்கொடுக்க பாரிய செல்வத்தையும் அரச பலத்தையும் ஊடகப் பலத்தையும் கொண்டுள்ளார்கள். எவ்வளவு எனக் கூறுவதானால் எனக்கு கிறெபைற் எனும் சொல் தவறியமை டேலி மிரர் செய்தித் தாளில் முதற்பக்கச் செய்தியாக மாறுகின்றது. இந்த ஊடகப் பலத்தினால் சமூக மனதை திரிபுநிலைக்கு உள்ளாக்க முடியும். கடந்த சனாதிபதி தேர்தலின்போது முன்னெடுத்துவந்த பிரச்சாரங்களை உச்ச மட்டத்திற்கு கொண்டுவந்த டாக்டர் சாஃபியின் மலட்டு அறுவை சிகிச்சைகளும் களணி கங்கையில் நாகம் தோன்றியதுமாகும். இலங்கையின் சொல்லகராதியில் கருப்பை யுத்தம் எனும் நிலைமை வரை புனைகதைகள் பிரச்சாரம் செய்யப்பட்டன. இறுதியாக தேசம் ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும் அதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள, உயிர்த்தஞாயிறு தாக்குதலால் நாடு அராஜகநிலை அடைந்ததிலிருந்து காப்பாற்றிக்கொள்ள “நாகலோகத்திலிருந்து” நாகம் கொண்டுவரப்பட்டது. அத்துடன் அவர்களிடம் மிகப்பெரிய கறுப்புப்பண பலமும் இருக்கின்றது. இவையனைத்தினதும் மத்தியில் எம்மிடம் இருக்கின்ற ஒரே பலம் மக்களின் பலமாகும். இந்த மாற்றத்திற்காக இருக்கின்ற பலம்பொருந்திய அரண் எமது மக்கள் பலமாகும்.
இந்த மக்கள் கமக்காரர், மீனவர், தொழில்வாண்மையாளர்கள், கலைஞர்களை உள்ளிட்ட பலவிதமானவர்களாக இருப்பதோடு தேர்தல்களின்போது பாரிய அழுத்தங்களைப் புரிபவர்கள் வெளிநாடுசென்றுள்ள இலங்கையர்களே என்பது இனங்காணப்பட்டுள்ளது. எனினும் தற்போது இவையனைத்தையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற மக்கள் அபிப்பிராயத்திற்கு இடமளிக்காமல் உள்ளுரதிகாரசபை தேர்தலும் மாகாணசபைகள் தேர்தலும் சுருட்டிக்கொள்ளப்பட்டது. எனினும் அரசியலமைப்பில் மிகவும் தெளிவாக மக்களின் நிறைவேற்றுத் தத்துவம் மக்களால் தெரிவுசெய்யப்படுகின்ற சனாதிபதியால் வகிக்கப்படல் வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளுரதிகார சபைகளை ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழும் மாகாண சபைகளை ஆளுனரின் கட்டுப்பாட்டின்கீழும் கொண்டுவர இயலுமெனினும் அடுத்த வருடத்தின் அக்டோபர் 17 ஆந் திகதிக்கு முன்னர் கட்டாயமாக சனாதிபதி தேர்தல் நடாத்தப்பட வேண்டும். ஏதேனும் விதத்தில் தேர்தலை நடத்தாதிருக்க அவர் தீர்மானிப்பாராயின் அடுத்த வருடத்தின் அக்டோபர் 17 ஆந் திகதிக்கு முன்னர் அவருக்கு செல்லவேண்டிய நிலையேற்படும். இத்தனை பாதிப்புகள் வந்தபோதிலும் ஏன் மக்கள் வீதியில் இறங்குவதில்லை என ஒருசிலர் கேட்கிறார்கள். அக்டோபரில் சனாதிபதி தேர்தல் நடாத்தப்படும்வரை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அதனை நடாத்துதில்லை எனும் சமிக்ஞை வந்தால் மக்கள் வீதியில் இறங்குவார்கள்.
அதிகாரத்திற்கு வந்த பின்னர் நாட்டை எவ்வாறு மாற்றுவது எனும் கேள்வி இருக்கக்கூடும். அதற்கு அவசியமான அனைத்து சகக்திகளும் எம்மிடம் இருக்கின்றன. அதுவன்றி நானோ எனது கட்சியோ மாயாஜால வித்தைக்காரர்கள் அல்ல. ஆசியாவின் மிகப்பெரிய மூளையுமல்ல. மனித வரலாற்றில் ஒவ்வொரு பிரமாண்டமான வெற்றியும் கூட்டு முயற்சியாலேயே பெறப்பட்டுள்ளன. மனிதன் கையப்படுத்திக்கொண்ட அறிவின் திரட்சி என்றவகையில் நாகரிகம் கூட்டுமுயற்சியிலேயே உருவாகி உள்ளது. எமது ஆட்சியென்பது அவ்வாறான கூட்டு முயற்சியாகும். அரசியலமைப்பின்படி அமைச்சரவையொன்று நியமிக்கப்படல் வேண்டும். அதில் நியமிக்கப்படுகின்ற அமைச்சர்களுக்கு ஏதேனும்விதமான அனுபவமும் அறிவும் இருக்கின்றது. எனினும் எம்மில் எவருக்குமே எல்லாமே தெரியாது. எமது கல்வித்திட்டமே உடைத்து பிரித்துக் கற்றுக்கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் காட்டுகின்ற திறன்களின் கூட்டுமனப்பான்மை மூலமாக அமைச்சுக்கள் நெறிப்படுத்தப்படல் வேண்டும். எனினும் அதற்காக நிபுணத்துவ அறிவுபடைத்த அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கத்தக்க சிறப்பறிஞர் குழுவொன்று நியமிக்கப்படும். புதிய ஆராய்ச்சிகளுக்காக அமெரிக்காவில் வருடமொன்றுக்கு 500 பில்லியன் டொலர் ஈடுபடுத்தப்படுகின்றது. இலங்கையின் ஒட்டுமொ்த பொருளாதாரமே அண்ணளவாக 80 பில்லியன் டொலராகும். புதிய அறிவின் உற்பத்திக்கு அவசியமான மேலதிக செல்வம் மேலைத்தேய நாடுகளில் இருக்கின்றனவென்பதே அதன்மூலமாக கூறப்படுகின்றது. அவர்கள் உருவாக்குகின்ற சிறப்பறிஞர்களில் பெருந்தொகையான இலங்கையர் இருக்கிறார்கள். நாமனைவரும் ஒன்றுசேர்ந்து எமது நாட்டை மீட்டெடுப்போம்.
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமென்பது உலகம் பூராவிலும் பரந்துள்ள இலங்கையின் அறிவினை ஒன்றுதிரட்டுவதற்கு அவசியமான அமைப்பாண்மை பொறியமைப்பினையும் நெறிப்படுத்துதலையும் வழங்குகின்ற ஆட்சியாகும். பொருளாதார, சமூக, அரசியல் வேறுபாடுகளை உருவாக்கவேண்டுமாயின் ஊழல், களவு, மோசடி, விரயம் என்பவற்றைக் கட்டாயமாக நிறுத்தி அந்த மோசடிப்பேர்வழிகளுக்கும் ஊழல்பேர்வழிகளுக்கும் தண்டனை வழங்கி நிச்சயமாக பொதுமக்களின் ஆதனங்களைக் கையகப்படுத்தும். நோய்வாய்ப்பட்டுள்ள தாய் தந்தையருக்கு வைத்தியசாலையில் இருந்து மருந்து வாங்கிக் கொடுப்பதற்காக ஈடுபடுத்தவேண்டிய செல்வத்தைக் கோடிக்கணக்கில் அவர்கள் குவித்துள்ளார்கள். பழிவாங்குதலல்ல, எவரையும் தனிப்பட்டமுறையில் பழிவாங்கும் நோக்கமோ கோபமோ எம்மிடம் இல்லை. எனினும் சமூக நீதி மற்றும் நியாயம் பற்றிய பிரச்சினையொன்று எமது நாட்டில் நிலவுகின்றது. நாங்கள் அதனை ஈடேற்றுவோம். எமது பிள்ளைகளின் 20% இற்கு கிட்டிய தொகையினர் மிகையான போசாக்கின்மையாலும் கரப்பிணித் தாய்மார்களில் 17% இற்கு கிட்டிய தொகையினர் இரத்தச் சோகையாலும் அவதிப்படக் காரணம் மக்களின் செல்வத்தைக் குவித்துக்கொண்ட கொள்ளைக்காரக் கும்பல் காரணமாகவே. அந்த செல்வத்தை சமூகமயப்படுத்தவேண்டும். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அந்த பணியைச் செய்யும். அதைப்போலவே நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக தற்போது நிலவுகின்ற அழிவுமிக்க அசிங்கமான அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்போம். அதைப்போலவே மனோபாவரீதியான மாற்றத்தை நவீன தொழில்நுட்பத்தை பாவிக்கின்ற அரச சேவையொன்றை உருவாக்குவோம். அதைப்போலவே சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கிடையில் தேசிய ஒற்றுமையை உருவாக்கிட வேண்டும். இரண்டு மொழிகளைப் பேசுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லீம் ஆகிய மூன்று இனக்குழுக்கள் இருக்கின்றன. நான்கு பிரதான மதங்கள் இருக்கின்றன. பௌத்தம், இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் என்பவற்றுக்கிணங்க மூன்று பிரதான கலாசாரங்கள் நிலவுகின்றன. சிங்கள பௌத்தர்கள், தமிழ் இந்துக்கள் மற்றும் முஸ்லீம் இஸ்லாம் ஆகிய கலாசாரங்கள் பிரதானமாக நிலவுகின்றன. வெசாக், பொசொன், நத்தார், பெரிய வெள்ளிக்கிழமை, உயிர்த்த ஞாயிறு, தைப்பொங்கல், ரமழான் ஆகிய சமய கலாசார வைபவங்கள் இருக்கின்றன. இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொண்டாடுகின்ற கலாசார வைபவமொன்றேனும் கிடையாது. எம்மை பிரித்தே வைத்துள்ளார்கள்.
முப்பது வருடகால யத்தத்தில் பெருநிலம் ஈரமாகும் வரை இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடும்வரை கண்ணீர் சிந்தப்பட்டுள்ளது. மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை உருவாகாதிருக்க சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கிடையில் ஒற்றுமையை உருவாக்கவேண்டும். எமது பரம்பரையினர் யுத்தம் புரிந்துகொண்டாலும் எமது பிள்ளைகளின் தலைமுறையினருக்கு யுத்தம் இல்லாத நாடு தேவை. இந்த ஆட்சியாளர்கள் இருந்தால் எமது பிள்ளைகளின் தலைமுறையினருக்கும் யுத்தம் புரியவேண்டிய நிலையேற்படும். அவர்களுக்கு யத்தம் இல்லாவிட்டால் மகிழ்ச்சி கிடையாது, நட்டமே ஏற்படும். யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தால் எண்ணெய் இல்லாமை போனமை, கேஸ் இல்லாமல் போனமை, கடன்செலுத்த முடியாமல் போனமை, மருந்து இல்லாமை இவற்றுக்கு காரணம் யுத்தமையே எனக் கூறுவார்கள். அதனால்த்தான் அவர்களுக்கு யுத்தம் இல்லாவிட்டால் மகிழ்ச்சி கிடையாது: நட்டம் எனக் கூறப்படுகின்றது. சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கிடையில் ஓற்றுமை நிலவுகின்ற நாட்டைப்போலவே சட்டத்தின் ஆட்சி நிலவுகின்ற ஒரு நாடு உருவாக்கப்படும். செல்வம் இருப்பவருக்கு அதிகாரம் இருப்பவருக்கு ஒரு சட்டமும் செல்வமும் அதிகாரமும் இல்லாதவருக்கு ஒரு சட்டமும் இருக்கின்ற நிலைமையை முடிவுக்கு கொண்டுவந்து சட்டம்மீது நம்பிக்கை கொண்ட ஒரு நாட்டை உருவாக்கிடுவோம். நாகரிகமுடைய ஒரு நாட்டை உருவாக்குகையில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படும். எமது நாட்டின் அத்திவாரம் சின்னாபின்னமக்கப்பட்டுள்ளது. நாங்கள் அந்த அத்திவாரத்தை மீண்டும் பலம்பொருந்தியவகையில் இட்டு அதன்மீது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம். அதற்குள்ளே பிறர்மீது ஒத்துணர்வும் ஈரமும் கொண்ட மனித சமூகத்தை உருவாக்கிடுவோம்.
இன்று கனவுகள் மடிந்துபோன, எதிர்பார்ப்புகள் சிதைவடைந்த ஒரு நாடாக இருக்கின்ற இலங்கையை கனவுகள் காண்கின்ற, எதிர்பார்ப்புகள் நிறைந்த நாடாக கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றுசேர்ந்து செயற்படுவோமென அழைப்பு விடுக்கிறோம்.
-Colombo, October 31, 2023- இங்கு இருக்கின்ற எவருமே அரசியலில் ஈடுபடுவதற்காக அமெரிக்காவிற்கு வரவில்லை. பெரும்பாலானவர்கள் தொழில்தேடிக்கொண்டு, பிள்ளைகளின் கல்விக்காக அல்லது இலங்கையைவிட பாதுகாப்பான நாடொன்றைத் தேடியே வந்துள்ளீர்கள். நீங்கள் இலங்கையிலிருந்து மிகவும் தொலைவில் அமைந்துள்ள நாட்டில் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையைக் கழிக்கையில் இலங்கை பற்றி மிகுந்த கவனத்துடன் இருக்கின்ற, இலங்கைச் சம்பவங்கள் தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ள ஒரு குழுவென்ற வகையிலேயே இன்று இதில் பங்கேற்றுள்ளீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு இருக்கின்ற பெரும்பாலானவர்கள் இதற்கு […]
-Colombo, October 31, 2023-
இங்கு இருக்கின்ற எவருமே அரசியலில் ஈடுபடுவதற்காக அமெரிக்காவிற்கு வரவில்லை. பெரும்பாலானவர்கள் தொழில்தேடிக்கொண்டு, பிள்ளைகளின் கல்விக்காக அல்லது இலங்கையைவிட பாதுகாப்பான நாடொன்றைத் தேடியே வந்துள்ளீர்கள். நீங்கள் இலங்கையிலிருந்து மிகவும் தொலைவில் அமைந்துள்ள நாட்டில் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையைக் கழிக்கையில் இலங்கை பற்றி மிகுந்த கவனத்துடன் இருக்கின்ற, இலங்கைச் சம்பவங்கள் தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ள ஒரு குழுவென்ற வகையிலேயே இன்று இதில் பங்கேற்றுள்ளீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு இருக்கின்ற பெரும்பாலானவர்கள் இதற்கு முன்னர் எம்மைச் சந்தித்ததில்லை. பெரும்பாலானவர்கள் எம்மைச் சந்திக்க வந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாக அமையக்கூடும். அதைப்போலவே நீங்கள் அனைவரும் இதற்கு முன்னர் ஏதாவது அரசியல் இயக்கத்திற்கு உதவிபுரிந்திருக்கக்கூடும். பங்களிப்பு செய்திருக்கக்கூடும். அது உங்களின் சாதகமான எதிர்பார்ப்புகளுக்கானதே. பெரும்பாலானவர்கள் தலைவர்களை அதிகாரத்திற்கு கொண்டுவர, அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவர உதவியது தனிப்பட்ட நன்மைகளுக்காகவல்ல. ஆனால் அந்த தலைவர்களும் அரசாங்கங்களும் உங்களின் எதிர்பார்ப்புகளை இம்மியளவேனும் பொருட்படுத்தாமல் சிதைத்துவிட்டார்கள். அந்த அரசியல் கட்சிகள் பற்றி தலைவர்கள் பற்றி விரக்தியும் கோபமும் நிலவக்கூடும். அதுதான் கடந்த காலத்தில் கோல்பேஸ் மைதானத்தில் வெளிப்பட்டது. அதற்கு உங்களின் நல்வாழ்த்துப் பங்களிப்பு கிடைத்தது. அது ஏன்? உங்களால் கொண்டுவரப்பட்ட தலைவர்கள் உங்களின் எதிர்பார்ப்புகளைச் சிதைத்தமையாகும். நான் உங்களுக்கு ஓர் எதிர்பார்ப்பினைக் கொடுக்கிறேன். நீங்கள் எம்மீது வைக்கின்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பினை கடுகளவேனும் சிதைக்க இடமளியோம் என்பதை உறுதியாகக் கூறுகிறேன். உங்களுக்கு எமது நாடு மீதுள்ள அக்கறையும் எதிர்பார்ப்பும் சிலவேளை உங்களைவிட அதிகமாக எமக்கும் இருக்கின்றது. ஏனென்றால் இவ்விதமாக எமது தாயகத்தினால் ஓரங்குலம்கூட முன்நோக்கி நகரமுடியாது. இனிமேலும் எமது மக்களால் வேதனைகளையும் துன்பங்களையும் எதிர்கொண்டு வாழஇயலாது. இதனை கட்டாயமாக மாற்றியமைத்திட வேண்டும். இந்த நாடு தொடர்ந்தும் இவ்விதமாக பயணிக்கவேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்களா? எமது நாட்டு மக்கள் இவ்விதமாக வாழவேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்களா. அதனால் இந்த நாட்டை மாற்றியமைப்பதற்கான உறுதியான திடசங்கற்பமும் மாறாத நோக்கமும் எமக்கு இருக்கின்றது. நாங்கள் நிச்சயமாக இலங்கையை நலமான திசையைநோக்கி மாற்றியமைப்போம்.
நீங்கள் அறிந்திருந்தாலும் தற்போது எமது நாட்டின் அவலநிலை எத்தகையது என்பதை விளங்கிக்கொள்வதற்காக ஒருசில விடயங்களைக் கூறுகிறேன். கண்களில் சிறிய கோளாறு சம்பந்தமாக சிகிச்சைபெற வைத்தியசாலைக்குச் சென்றால் வாழ்நாள் முழுவதிலும் பார்வையை இழக்கின்ற நிலை எற்படுகின்றது. பச்சிளம் குழந்தையின் நோய்க்காக ஊசி மருந்து போட்டால் பிள்ளை இறக்கின்றது. எமது கண்ணெதிரில் நீதிமன்றத்தில் குற்றவாளியாக தண்டனை விதிக்கப்பட்ட, கடுமையான குற்றச்செயல்களைப் புரிந்த, குற்றச்செயல்களுக்கு பங்களிப்புச் செய்தவர்கள் நாட்டை ஆட்சி செய்கிறார்கள். சட்டத்தின் ஆட்சி இல்லாத நாடாக எமது நாடு மாறி உள்ளது. குற்றச்செயல்கள் கட்டுக்கடங்காத நாடாக எமது நாடு மாறியுள்ளது. அப்படிப்பப்பட்ட நாடு எமக்குத் தேவையா? இதனை மாற்றவேண்டிய தேவை கிடையாதா? அண்மையில் மத்திய வங்கி அறிக்கையின்படி மக்களில் 68% மூன்றுவேளை உணவு உண்பதில்லை. உண்கின்ற அளவினைக் குறைத்து விட்டார்கள். அப்படியில்லாவிட்டால் விருப்பமற்ற உணவினை உட்கொள்கிறார்கள். மக்களுக்கு சரியான உணவுவேளையொன்று கிடையாது. அதைப்போலவே நாடு பாரிய கடன் மேட்டில் இறுகிப்போயுள்ளது.
கடந்த திசெம்பர் 31 ஆந் திகதியில் எமது நாட்டின் கடன்அளவு 30 ரில்லியன் ஆகும். (30 இலட்சம் கோடியாகும்) சனத்தொகை 2.2 கோடி. இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு அற்ற நாடாகும். ஒவ்வோர் இளைஞனும் யுவதியும் ஏதாவது வருமானம் தரக்கூடிய தொழில்தேடி இலங்கைக்கு வெளியில் செல்ல தூண்டப்பட்டுள்ளார்கள். இன்று எமது நாடு இவ்வாறான நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கி உள்ளது. தொடர்ந்தும் இவ்விதமாக முன்நோக்கி நகரமுடியாது. இந்த பயணப்பாதையை நாங்கள் மாற்றியமைத்திட வேண்டும். முதலில் நாங்கள் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக நாட்டை உருப்படியாக்கவேண்டும். எமது நாட்டில் ஏறக்குறைய 75 வருடங்களாக பெரும்போக்கில் இருந்த இரண்டு கட்சிகளிடமே ஆட்சி மையப்படுத்தப்பட்டிருந்தது. இன்றளவில் அந்த இரண்டு கட்சிகள் இரண்டல்ல என்பது நீரூபணமாகி உள்ளது. இலங்கையில் முதல்த்தடவையாக இந்த இரண்டு அரசியல் பாசறைகளும் ஒன்றுசேர்ந்துள்ளன. ஊழல், மோசடியின்போது இவர்கள் ஒரே பாசறையில்தான் இருக்கிறார்கள். மோசடியில் ஈடுபடுகிறார்கள். கடனெடுத்தல் மற்றும் விற்பனையின்போது பொருளாதாரக் கொள்கை ஒன்றாகும்.
இதற்கு முன்னர் ஆட்சியாளர்களுக்கு பயந்து முடங்கிய மக்களே இருந்தார்கள். அமைச்சர் வரும்போது வடிகானில் இறங்குகிறார்கள். ஊரில் அரசியல் அதிகாரியிடமிருந்து அதிகாரத்தை பெற்றுக்கொண்ட சண்டியர்கள் இருந்தார்கள். ஊர் மக்களை பயமுறுத்தினார்கள். இன்று முதல்த்தடவையாக அமைச்சர் மக்களைக்கண்டு அஞ்சுகிறார். இலங்கையில் மக்கள் அரசியல்ரீதியாக கூர்மையடைந்து முனைப்பானவர்களாக மாறியுள்ளார்கள். அது எந்தளவு எனக் கூறுவதாயின் 69 இலட்சம் வாக்குகளைப்பெற்று அதிகாரத்திற்கு வந்த சனாதிபதியை விரட்டியடிக்கும் அளவுக்கு மக்கள் வெற்றியடைந்துள்ளார்கள். இன்று இருப்பவர்கள் வித்தியாசமாக சிந்திக்கக்கூடிய மக்களே. அது எமக்கு நல்லதொரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. முன்பு யு.என்.பி. அல்லது ஸ்ரீலங்கா ஆட்சியைக் கட்யெழுப்பிக்கொண்ட மக்கள் வொச்சர் ஜொப்பிற்கு எம்மிலும் ஒருசிலரை அனுப்பிவைக்கவேண்டுமென்றே அச்சந்தர்ப்பத்தில் எம்மை நோக்கினார்கள். பாராளுமன்றத்தில் சத்தம்போட நான்கு ஐந்து பேரை அனுப்பிவைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன்தான் எம்மைத் தெரிவுசெய்தார்கள். எங்கள் அரசாங்கமொன்றை அமைத்திட, பிரதான எதிர்க்கட்சியாக மாற்ற அன்று மக்களுக்கு தேவை இருக்கவில்லை. இன்று இலங்கையின் அரசியல் மாறிவிட்டது. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை கட்டியெழுப்புவதற்கான ஆர்வமும் எதிர்பார்ப்பும் தோன்றியுள்ளது.
இந்த அனைத்தையும் பார்க்கையில் அதிகாரத்தைக் கட்டியெழுப்புகின்ற ஆற்றல்படைத்த வாய்ப்பொன்று உருவாகி இருக்கிறதென்பது எமக்குப் புலனாகின்றது. எமக்கு அதிகாரத்திற்கான அவசியப்பாடு இருந்தாலும் அதற்குத் தேவையான நிலைமைகள் உருவாகாமல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஏனைய எக்காலத்தையும்விட மாற்றமொன்றிற்கான தேவைக்கான காலம் பிறந்துள்ளது. தற்போது இருப்பது அதிகாரத்தைக் கையகப்படுத்திக்கொள்ள நாங்கள் திறமையானவர்களா, திறமையற்றவர்களா? என்கின்ற விடயமாகும். அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அனைத்து வளங்களையும் திரட்டி, சிறப்பாக முகாமைசெய்து, நெறிப்படுத்த வேண்டியதுதான் தேசிய மக்கள் சக்தியின் பொறுப்பு.
தோழர்கள் முன்வைக்கின்ற கேள்விதான் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வாய்ப்பு உருவாகியுள்ளபோதிலும் தேர்தலை நடத்தாமல் எவ்வாறு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது? என்பதாகும். சனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது. அடுத்த வருடத்தின் ஒக்டோபர் 17 ஆந் திகதிக்கு முன்னர் எமது நாட்டில் சனாதிபதி தேர்தல் நடாத்தப்படல் வேண்டும். அடுத்த வருடத்தின் ஒக்டோபர் இக்காலத்தில் இலங்கையில் புதியதோர் அரசாங்கம், புதியதோர் ஆட்சி. இந்த அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்காக கருத்தியல்சார்ந்த போராட்டமொன்றை நடாத்த வேண்டியுள்ளது. இன்று பிரதான ஊடகங்களுக்குப் பதிலாக சமூக வலைத்தளங்கள் மக்கள்மத்தியில் சென்றுள்ளன. இன்று எங்களையும் வெளிநாடுகளிலுள்ள உங்களையும் நெருக்கமடையச் செய்விக்க பிரதானமாக உறுதுணையாக அமைந்தவை சமூக வலைத்தளங்களே. இன்று உங்களால் சமூக வலைத்தளங்கள் ஊடாக இலங்கை மக்கள் மீது பலம்பொருந்திய அழுத்தத்தைக் கொடுக்கமுடியும். உலகத்தைக் கண்ட, உலகத்தின் சமூகப் பாதுகாப்பினை அனுபவித்த, சுகாதாரக் கவனிப்பு, கல்விக் கவனிப்பு, தொழில்கள் பற்றிய அனுபவம் பெற்ற சமுதாயம் என்றவகையில் உங்களால் எமது நாட்டின் சகோதர மக்களுக்கு விழிப்புணர்வூட்ட முடியும். அவர்களிடம் எம்மைவிட செல்வம் நிலவுகின்றது. அவர்களிடம் அரச அதிகாரம் இருக்கின்றது. மரபுரீதியான ஊடகங்களில் எம்மைவிட உயர்வான இடத்தில் இருக்கிறார்கள். அவையனைத்தையும்விட பலம்பொருந்தியது மக்களின் குரல். அதனால் பொதுமக்களை ஒழுங்கமைத்து அந்த சக்திகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதுதான் தேசிய மக்கள் சக்தியின் கடமைப்பெறுப்பு.
இந்த அதிகாரப் பரிமாற்றத்தின்போது வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களாகிய உங்களுக்கு அதற்கான பாரிய செயற்பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த சனாதிபதி தேர்தலின் மிகப்பெரிய செயற்பொறுப்பினை வெளிநாடு சென்றுள்ள இலங்கையர் ஆற்றினார்கள். அதனைச் சாதிக்க வேண்டுமாயின் எமக்கிடையில் ஏதேனும் இணக்கப்பாடு, தெளிவற்ற இடங்களை தீர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் கூறுவது சரி, நாங்கள் உங்களை எவ்வாறு நம்புவது? எனும் கேள்வி எழுகின்றது. கேள்வி நியாயமானதே. பல சந்தர்ப்பங்களில், பல்வேறு தலைவர்கள், பலவிதமான வாக்குறுதிகளைக் கொடுத்த அரசாங்கங்கள், பலதலைமுறையினராக உங்களை இயலுமானவரை ஏமாற்றி இருக்கிறார்கள். எம்மைப் பற்றி ஆராய்ந்து பாருங்கள், நெருங்கிப் பழகுங்கள். நாங்கள் கூறுவது என்னவென விளங்கிக்கொள்ளுங்கள். சிலவேளையில் இவ்வளவு காலம் தாமதித்தது அநியாயமென உங்களுக்குத் தோன்றும்.
இரண்டாவதாக நீங்கள் கேட்பீர்கள், உங்களால் அதிகாரத்தைப் பெறமுடியும். ஆனால் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் அரசாங்கத்தை நெறிப்படுத்த குழுவொன்று இருக்கிறதா? என. நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர் யார்? பொருளாதாரத்தைப் பொறுப்பேற்பது யார்? அந்த கேள்விகள் நியாயமானவையே. ஏனைய இரண்டு கட்சிகளிடம் இந்த கேள்விகளைக் கேட்பதில்லையே. அவர்கள் அரசாங்கங்களைக் கொண்டுநடாத்தி இருக்கிறார்கள், செயலாற்றிய விதத்தையும் அறிவார்கள். பசில் ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க நிதி அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளும்போது என்ன நினைத்தீர்கள்? அவர்கள் செய்தவை தெரியும். ஆனால் நாங்கள் அதிகாரத்தைக் கேட்கும்போது எங்களிடம் கேட்கிறார்கள், “உங்களால் செய்ய முடியுமா? செய்வதற்கான டீம் ஒன்று இருக்கின்றதா?” என. எம்மைப் பற்றிய சிறிய சந்தேகமொன்று நிலவுகின்றது.
ஆம், எமக்கு குழுவொன்று அவசியம், எப்படிப்பட்ட குழு? தனிப்பட்டவகையில் எதனையும் எதிர்பார்த்திராத, தமது அறிவு, தமது நேரம், தமது உழைப்பினை நாட்டுக்காகவும் பொது மக்களுக்காகவும் செலவிடவல்ல நேர்மையான மனிதர்கள். அந்த நேர்மை எங்கள் குழுவிடம் இருக்கின்றது. நான் ஓர் ஆள் என்றவகையில் உயர்தரம் பயில்கையிலேயே அரசியலுடன் தொடர்புகோண்டேன். இந்த அரசியலுடன் இணைந்து 34 – 35 வருடங்களாகின்றன. நானோ எமது இயக்கத்தைச் சேர்ந்த எவருமோ தமக்கு கிடைத்த அமைச்சுப் பதவிகள், பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள், தமக்கு கிடைத்துள்ள அரசியல் அதிகாரம் எதையும் பொதுப்பணத்தை விரயமாக்கவோ அல்லது திருடவோ பிரயோகிக்கவில்லை. எமது நாட்டையும் எமது மக்களையும் இந்த பேரவலத்தில் இருந்து விடுவித்துக்கொள்வதற்கான நேர்மையான நல்லெண்ணம் எமக்கு இருக்கின்றது. அதோ அந்த டீம் எங்களிடம் இருக்கின்றது. தம்மிடமுள்ள சாத்தியவளம், தம்மிடமுள்ள அறிவினை உண்மையாகவே சமூக முன்னேற்றத்திற்காக செலவிடக்கூடியவர்களே தேவை. அறிவு இருந்தால் மாத்திரம் போதாது. அயோக்கியத்தனமான தேவைகளுக்குப் பதிலாக சமூகத் தேவைகளுக்காக எமது அறிவினை, சாத்தியவளங்களை பிரயோகிப்போமாயின் பொருளாதாரம் பற்றிய, வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய, கல்வி, சுகாதாரம், விவசாயம் பற்றிய திறன்கள் உள்ள ஆற்றல்கள் உள்ள குழுவொன்று எம்மிடம் இருக்கின்றது. பொருளியல் பற்றிய அறிவுபடைத்த பேராசிரியர் அனில் ஜயந்த, பேராசிரியர் ஜனக் குமாரசிங்க, பேராசிரியர் சீதா பண்டார எமது பொருளாதாரக் குழுவில் இருக்கிறார்கள். ஐக்கிய அமெரிக்காவின் பெரும்பாலான ஆராய்ச்சி நிறுவனங்களில் இலங்கையர்கள் தொழில்புரிந்து வருகிறார்கள்.
அந்த அறிவினைப் பெற்றுக்கொண்டு நாட்டை முன்னேற்ற எமது நாட்டில் அரசாங்கமொன்று இருக்கவில்லை. தலைவரரொருவர் இருக்கவில்லை. அதோ அந்த ஆட்சியாயாளன்தான் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாளன். தேசிய மக்கள் சக்தியின் பிரதமர், அந்தந்த விடயங்களை யார்யார் பொறுப்பேற்பது என்பது பற்றிய மொத்த திட்டமொன்று எம்மிடம் இருக்கின்றது. பிரதமருடன் வேலைசெய்கின்ற அணி யாரென எம்மிடம் திட்டமொன்று இருக்கின்றது. ஏனென்றால் தனியொருவரால் அற்புதம் நிகழ்த்திவிட முடியாது. அதனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்கீழ் அமைக்கப்படுவது மரபுரீதியான அமைச்சரவையொன்று அல்ல. அதற்கு அப்பால் செல்கின்ற சமூகத்தின் ஒவ்வொருவரினதும் முனைப்பான பங்களிப்பினை பெறத்தயாரான அரசாங்கமாகும். அது எமது நாட்டில் இடம்பெறுகின்ற புதிய மாற்றமாகும். அதைப்போலவே அரசாட்சி செய்கின்ற வழிமுறையும் வித்தியாசமானது.
அடுத்த விடயமாக எமது நாட்டுக்கு பலம்பொருந்திய அரச ஆட்சியொன்று தேவை. எமது நாட்டின் அரச ஆட்சிப் பொறியமைப்பு மிகவும் பலவீனமானது. ஒட்டுமொத்த அரச பொறியமைப்பையும் அரச செயற்பாங்கினையும் அரசியலில் இருந்து விடுவித்து அனைவருக்கும் சனநாயகரீதியாக அரசாங்க தொழிலில் பிரவேசிப்பதற்கான வாய்ப்பையும் அரசாங்கத்துடன் தொழில்முயற்சிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் நாங்கள் ஏற்படுத்திக் கொடுப்போம். அதைப்போலவே அமைச்சர் மற்றும் அவரைச் சுற்றிக் குழுமியுள்ள வளையத்தின் கையில்தான் ஒட்டுமொத்த பொருளாதார தேகமுமே ஒருங்கிணைந்துள்ளது. இதனை மாற்றியமைத்திட வேண்டும். நாங்கள் பொருளாதார சனநாயகத்தை உருவாக்குவோம். அது மிகவும் முக்கியமானது. உங்களிடம் பொதிந்துள்ள திறமைகள், திறன்கள், உங்களிடம் இருக்கின்ற கருத்திட்டத்தின் அடிப்படையில் பொருளாதாரத்தில் பிரவேசிக்க உங்களுக்கு வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கப்படும். ஒரு கும்பலின் கைகளில், மூன்றுநான்கு பேர்களின் கைகளில் உள்ள பொருளாதாரத்தைக் கொண்டு நாட்டை மீட்டெடுக்க முடியாது. அனைவருக்கும் சனநாயகரீதியான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமாக மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை முன்நோக்கி நகர்த்துவதற்கான இயலுமை கிடைக்கும். நாங்கள் பொருளாதார சனநாயகத்தை உருவாக்குவோம்.
உலகின் எந்தவொரு நாட்டுக்கும் தனித்து வாழ முடியாது. பொருளாதாரத்தினால் தொடர்பாடலினால் தொழில்நுட்பத்தினால் உலகம் ஒன்றாக மூடிச்சுப்போடப்பட்டுள்ளது. பலம்பொருந்திய நாடுகளுக்கிடையில் யுத்தம் பிரகடனஞ் செய்யப்பட்டிராவிட்டாலும் அதிகார மோதல்கள் நிலவுகின்றன, ஐக்கிய அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையில், பொருளாதார முரண்பாடு நிலவுகின்றது. அதற்காக சந்தையைக் கைப்பற்றிக் கொள்கின்ற மோதலொன்று நிலவுகின்றது. இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடையில் மோதலொன்று நிலவுகின்றது. ரஷ்யா ஒரு புறத்திலும் ஐரோப்பா மற்றுமொரு புறத்திலும் வருகின்றது. உலகின் பல்வேறு அதிகார கேந்திரங்கள் இருக்கின்றன. இலங்கைக்கு ஓர் அதிகார கேந்திரமாக மாறக்கூடிய சாத்தியவளம் இத்தருணத்தில் கிடையாது. எனினும் அந்த அதிகார கேந்திரங்களில் நிலவுகின்ற முரண்பாடுகளுக்கு தடுக்கமுடியாதவகையில் தரப்பினர்களாக அல்லது அதனால் பாதிக்கப்படுகின்ற பங்காளிகளாக மாறியுள்ளது. அதிகார மோதல் நிலவுவது எம்மைக் கைவிட்டல்ல. உலக தேசப்படத்திலிருந்து எம்மை அழித்தல்ல. அதிகார கேந்திரமாக அமையாவிட்டாலும் நாங்களும் உலக தேசப்படத்தில் இருக்கிறோம். அப்படியானால் முதலாவது வெளிநாட்டுக் கொள்கையாக அமைவது அந்த எந்தவோர் அதிகார கேந்திரத்துடனும் நேரடியாக அல்லது மறைமுகமாக பங்கிப்பினை வழங்காத அணிசேரா வெளியுறவுக் கொள்கையாகும்.
விற்பனை செய்தல் மற்றும் கடனுக்கு வாங்குதலை நாங்கள் எண்பதாவது தசாப்தத்தில் தொடங்கினோம். ரணில் விக்கிரமசிங்க இன்றும் எதிர்பார்ப்பது எதனை?எப்படியாவது கடன்பெறுவதையாகும். இருக்கின்றவற்றையும் விற்றுத் தீர்ப்பதாகும். அது ஒரு புதிய பயணமா? அது பழைய தோல்விகண்ட பயணப்பாதையாகும். நாங்கள் அதிலிருந்து தீர்வுக்கட்டமான வகையில் வித்தியாசப்பட வேண்டும். உலக சந்தையின் பொருளாதாரத்தின் ஒரு பகுதியை கைப்பற்றிக் கொள்வதற்கான திட்டமொன்று எம்மிடம் இருக்கின்றது.
உலகின் புதிய தேவைப்பாடுகளுக்கு அவசியமான அறிவு, உலகின் புதிய அவசியப்பாடுகளுக்கு அவசியமான பண்டங்களுக்கான உலகச் சந்தையில் ஒரு பங்கினைக் கைப்பற்றிக் கொள்வதில் நாங்கள் வெற்றியடையவேண்டும். உலகில் எந்தளவு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன? ஆனால் நாங்கள் ஒரு நாடு என்றவகையில் அதே இடத்தில் தான். இந்த ஆட்சியாளர்கள் வெட்கப்படவேண்டியதில்லையா? வெள்ளைக்காரன் போகும்வேளையிலும் எமது பிரதான பொருளாதாரம் தேயிலை, இரப்பர், தெங்கு. இன்றும் அதே பொருளாதாரமே. நாங்கள் உலகில் இடம்பெறுகின்ற புதிய மாற்றத்திற்கு ஒத்துவரக்கூடிய பண்டங்களையும் சேவைகளையும் கையகப்படுத்திக் கொள்வதில் தோல்வியடைந்ததன் பாதகவிளைவுகளை இன்று அனுபவித்து வருகிறோம்.
புதிய உலகிற்கு அவசியமான அறிவினைப் பெற்றுக்கொள்கின்ற இலங்கையை நாங்கள் உருவாக்கிட வேண்டும். உலகின் விருத்திக்கு அவசியமான பண்டங்களை உற்பத்திசெய்கின்ற தொழிற்சாலைகளை நாங்கள் ஆரம்பிக்கவேண்டும். அதோ அத்தகைய பண்டங்களினதும் சேவைகளினதும் உற்பத்தியால் எதிர்கால இலங்கையை நாங்கள் கட்டியெழுப்புவோம். கடனெடுப்பதால் விற்பனை செய்வதால் இந்த நாட்டைக் கரைசேரக்க இயலாது.
பாலஸ்தீன – இஸ்ரவேல் மோதலில் ஈரான் ஆயுதங்களுடன் இடையீடுசெய்தால் உலகில் மீண்டும் மிகப்பெரிய மோதல் உருவாகும். பாலஸ்தீன – இஸ்ரவேல் யுத்தம் காரணமாக எதிர்காலத்தில் எண்ணெய் விலை அதிகரிக்கக் கூடுமென ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். எம்மால் உலகின் பெருந்தொற்றுகளைத் தடுக்க முடியாது. யுத்தங்களை தடுக்க முடியாது. பாரிய நிதிசார் வீழ்ச்சியைத் தடுக்க முடியாது. உலகில் பெருந்தொற்றுகள், யுத்தங்கள், நிதிசார் வீழ்ச்சிகள் உருவாகையில் அதற்கு தாக்குப்பிடிக்கக்கூடிய பொருளாதாரமொன்றை நாங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும். எமது நாட்டின் வளங்கள், எம்மால் கையகப்படுத்திக் கொள்ளக்கூடிய சந்தை, எம்மிடம் இருக்கின்ற முகாமைத்துவம், தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்துக்கொண்ட புதிய சந்தையொன்றைத் தேடிக்கொண்டு பண்டங்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியின்பால் நாங்கள் பிரவேசிக்க வேண்டும். அதுதான் எமது பொருளாதாரம், நிலைதளராத பொருளாதாரம். “ஐக்கிய அமெரிக்காவிற்கு தும்மல் வந்தால் எமக்கு தடிமன் வரும்.” அது சீனாவுக்கு, தென் கொரியாவுக்கு, வியட்நாமிற்கு ஏற்படுவதில்லை. அந்த நாடுகள் உலக சந்தையில் பண்டங்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியில் ஒரு பங்கினைக் கையகப்படுத்தி உள்ளன. வளர்ச்சியை அகப்படுத்திக் கொண்டுள்ளன. நாங்கள் படிப்படியாக சரியான இடங்களைத் தெரிவுசெய்து வேகமாக தொடர்நடவடிக்கைகளை மேற்கொண்டு தொடர்ச்சியாக நெறிப்படுத்தவேண்டும்.
நாங்கள் மாற்றமடையவேண்டிய இடங்களை இனங்கண்டுள்ளோம். அதோ அதனை வேகமாக தொடர்நடவடிக்கைகளுடன் நாங்கள் நெறிப்படுத்துவோம். எங்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவும் அதிகாரத்தைப் பெற்றபின்னர் இந்த நாட்டைக் கட்டியெழுப்பவும் அவசியமான குழுவும் நோக்கும் விசேட தேவையும் நிலவுகின்றது. நாங்கள் அந்த வேலையைச் செய்வோம். இது எம்மால் மாத்திரம் சாதிக்கக்கூடிய ஒன்றல்ல. நீங்கள் இலங்கைக்கு வெளியில் வசித்தாலும் இன்றும் இலங்கை ஏதேனுமொரு வெற்றியைப் பெற்றால் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள். நீங்கள் ஐக்கிய அமெரிக்காவில் வசித்தாலும் நீங்கள் அதிகமாக பார்ப்பது இலங்கையின் தகவல்களையாகும். செவிமடுப்பது இலங்கையின் பாடல்களையாகும். அதாவது நாங்கள் உடலால் தொலைவில் இருந்தாலும் எமது கடப்பாடுகள் பெருநிலத்துடனேயே இருக்கின்றன. எமது அனைவரதும் மனங்களில் சுபமான கனவு நிலவுகின்றது. எமது தாயகத்தை முன்னேற்றமடைந்த நாடாக, அதில் வசிக்கின்ற மக்கள் அழகான வாழ்க்கையைக் கழிக்கின்ற நாட்டை எதிர்பார்க்கின்ற கனவொன்று இருக்கின்றது. அது எனக்கும் இருக்கின்றது. உங்களுக்கும் இருக்கின்றது. அதனால் நாமனைவரும் ஒன்றுசேர்ந்து அந்த கனவை நனவாக்குவோம். அதற்காக தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற வேண்டும். அது ஒர் அரசியல் இயக்கமல்ல. அது மக்கள் இயக்கமாகும். அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அதிகாரத்தைக் கையகப்படுத்திக் கொள்வோம்.
தேசிய மக்கள் சக்தியின் கம்பளை தொகுதி மாநாடு – 2023.10.21 தேசிய மக்கள் சக்தியின் 90% தொகுதி மாநாடுகள் நாடு பூராவிலும் நடாத்தி முடிக்கப்பட்டு விட்டன. அதைப்போலவே உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாநாடுகளை நடாத்தி ஒருங்கிணைத்து வருகிறார்கள். கமக்காரர்களின் மாநாடுகள், இளைஞர் சங்கத்தின் புதிய அரசியல் உரையாடல்கள், இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவு உள்ளிட்ட பல்வேறு தொழில்வாண்மையாளர்களை ஒழுங்கமைத்து தொழிலதிபர்களையும் கைத்தொழில் உரிமையாளர்களையும் ஒழுங்கமைத்து வருகிறோம். அதைப்போலவே திசெம்பர் இறுதியளவில் எமது நாட்டின் மிகப்பிரமாண்டமான பெண்களின் ஒருங்கிணைவினை உருவாக்குவோம். […]
தேசிய மக்கள் சக்தியின் கம்பளை தொகுதி மாநாடு – 2023.10.21
தேசிய மக்கள் சக்தியின் 90% தொகுதி மாநாடுகள் நாடு பூராவிலும் நடாத்தி முடிக்கப்பட்டு விட்டன. அதைப்போலவே உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாநாடுகளை நடாத்தி ஒருங்கிணைத்து வருகிறார்கள். கமக்காரர்களின் மாநாடுகள், இளைஞர் சங்கத்தின் புதிய அரசியல் உரையாடல்கள், இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவு உள்ளிட்ட பல்வேறு தொழில்வாண்மையாளர்களை ஒழுங்கமைத்து தொழிலதிபர்களையும் கைத்தொழில் உரிமையாளர்களையும் ஒழுங்கமைத்து வருகிறோம். அதைப்போலவே திசெம்பர் இறுதியளவில் எமது நாட்டின் மிகப்பிரமாண்டமான பெண்களின் ஒருங்கிணைவினை உருவாக்குவோம். இவ்விதமாக ஒழுங்கமைத்து இந்நாட்டின் அதிகாரத்தைப் பரிமாற்றிக்கொள்ள நாங்களும் தயாராகி வருகிறோம். ஏனைய தரப்பினரின் கையில் பல சாதனங்கள் இருக்கின்றன. வரி மோசடிகளிருந்து குவித்துக்கொண்ட அளப்பரிய செல்வம் அவர்களின் கையில் இருக்கின்றது. மக்களிடமிருந்து கொள்ளையடித்த அந்த செல்வத்தை அவர்களின் தேர்தல்களுக்கான பம்ப் பண்ணுகிறார்கள். ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பிற்குச் சென்று தங்கியிருந்த ஹோட்டலுக்காக செலவிட்டது யாரென முடியுமானால் கூறுங்கள். அரசாங்கத்தின் பாதுகாவலுடன் தீத்தொழில் புரிபவர்கள் சேகரித்து வைத்துள்ள பணம் தேர்தல் காலங்களில் வெளியில் வருகின்றது. ஊர் மக்களுக்கு பணம்கொடுத்து ஏமாற்றி வாக்குகளைப் பெறுகின்ற சூதாட்டத்தை சதாகாலமும் புரிய அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தீத்தொழில் புரிபவர்களின் செல்வத்தை தேர்தலுக்காக சேகரிக்கின்றவேளையில் நாங்கள் மக்களை ஒன்றுசேர்த்து தேர்தலை நோக்கிச் செல்கிறோம்.
மறுபுறத்தில் ரணில் விக்கிரமசிங்காக்கள் தேர்தலை பிற்போடுவதற்காக மாளிகை சதித்திட்டங்களைத் தீட்டிவருகிறார்கள். மக்களுக்கு முகங்கொடுக்காமல் அவர்கள் மாளிகை சதித்திட்டங்களை தீட்டுகையில் நாங்கள் மக்களை ஒன்றுதிரட்டி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள அணிதிரள்கிறோம். மிகவும் முக்கியமான தருணத்திலேயே கம்பளை தொகுதி மாநாடு நடைபெறுகின்றது. எதிர்வரும் 10 மாதகாலப்பகுதிக்குள் இலங்கையின் தலைவிதி எழுதப்படுகின்ற காலப்பகுதியொன்று வருகின்றது. ரணில் வந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பாரென ஒருசில சிறப்பறிஞர்கள் செய்தித்தாள்களில் எழுதினார்கள். ரீ.வீ. இல் வந்து கூறினார்கள். ஆனால் என்ன நேர்ந்துள்ளது? இந்த நெருக்கடியின் வேரில் இருக்கின்ற கடனெடுத்தல் மற்றும் விற்பனை செய்தலின் பேரில் நெருக்கடியின் மூலவேர் அமைந்துள்ளது. நீண்டகாலமாக இந்த பாதையில் வந்தார்கள். கடனெடுத்தல் மற்றும் விற்பனைசெய்தல் நீங்கலாக வேறு பொருளாதார உபாய மார்க்கத்தை எமது நாட்டுக்கு அறிமுகஞ் செய்யவில்லை. அரசாங்கத் தொழிற்சாலைகள் அனைத்துமே மூடப்பட்டுவிட்டன. 21 பெருந்தோட்டக் கம்பெனிகள் விற்பனை செய்யப்பட்டன. ரெலிகொம்மில் அரைவாசிக்கு கிட்டிய பங்கினை விற்றார்கள். ஒருசில வங்கிகளை விற்றார்கள். தற்போது விற்பதற்கு ஒன்றுமே இல்லாமல் இறுகிப்போகும் நிலைக்கு வந்துள்ளார்கள். எஞ்சியுள்ளவற்றை வேகமாக விற்பதற்கே ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருகிறார்.
முதன்முதலாக இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை விற்கப் போகிறார்கள். பொருளாதார நெருக்கடியொன்று நிலவுகையில் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் 1000 கோடி ரூபா இலாபத்தை ஈட்டியது. தேசிய பாதுகாப்பினைப்போன்றே நாட்டின் எதிர்காலத்துடன் பின்னிப்பிணைந்துள்ள ரெலிகொம் நிறுவனத்தை விற்கத் தயாராகி வருகிறார்கள். அதன் ஒரு வருடத்திற்கான இலாபம் 1300 கோடி ரூபாவாகும். ஹில்டன் ஹோட்டல், லங்கா ஹொஸ்பிட்டல், லிற்றோ கேஸ் கம்பெனி, மில்கோ நிறுவனம், தேசிய கால்நடைவள நிறுவனம், பொஸ்பேற் படிவுகள், கனிய மணல் வளம் மற்றும் இரத்தினக்கல் காணிகளை விற்பனை செய்யத் தயாராகி வருகிறார்கள். எதிர்வரும் ஏழு, எட்டு மாதங்களுக்குள் எமது அனைத்து வளங்களையும் விற்கத் தயாராகி வருகிறார்கள். மின்சார சபையின் மின்சார பிறப்பாக்கத்தை சமனல வெவ, மகாவலி தொகுதி மற்றும் லக்ஷபான என மூன்றுதுண்டுகளாக உடைத்து விற்கப் போகிறார்கள். இவ்வாறு விற்பனை செய்வது மின்நிலையங்களையாகும். அத்துடன் நீர்த்தேக்கங்களின் உரிமையையும் விற்கப் போகிறார்கள். அதைப்போலவே நீர் வளத்தையும் விற்கப் போகிறார்கள்.
எமது தொழில்வாண்மையாளர்கள்மீது பாரிய வசிச்சுமையை ஏற்றி அவர்கள் நாட்டைக் கைவிட்டுச் செல்லும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். எமது நாட்டின் உழைப்புப் படையில் 15% தொழில்வாண்மையாளர்களாவர். வரிச்சுமையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவர்கள் நாட்டைவிட்டுச் செல்வதைப்போலவே பொதுமக்கள்மீது பாரிய வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது. மறுபுறத்தில் சிலமாதங்களுக்கொருதடவை எண்ணெய் விலை, மின்சார விலை அதிகரிக்கப்பட்டு வருகின்றது. மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத வாழ்க்கைச் சுமையை ஏற்றி எஞ்சிய வளங்கள் அனைத்தையும் தேர்தலுக்கு முன்னர் விற்றுவிட ரணில் செயலாற்றி வருகிறார். அவர்கள் அடுத்த தேர்தலுக்கான திட்டங்களை வகுத்து வருகிறார்களேயொழிய நாட்டின் எதிர்காலத்திற்காக திட்டங்களை வகுப்பதில்லை. உலகமானது இன்று தொழில்நுட்பத்தினால் சந்தையால் அபிவிருத்தியால் மூடிச்சிப் போடப்பட்டுள்ளது. அதனால் உலகில் ஏற்படுகின்ற எந்தவொரு சிறிய அசைவும் மற்றுமொரு நாட்டில் தாக்மேற்படுத்துவதை தடுக்க இயலாது. கொவிட் பெருந்தொற்று நிலைமை முழுஉலகம் மீதும் தாக்கமேற்படுத்தி பயணித்த பொருளாதாரப் பயணப்பாதையை மீள்பரிசீலனை செய்யுமாறே கூறிநின்றது. யுக்கிரெயின் யுத்தம் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளிலும் தாக்கமேற்படுத்தி உள்ளது. காசா துண்டுநிலத்தை மையமாக்கொண்டு தோன்றியுள்ள மோதலைத் தீர்த்துக்கொள்ளாவிட்டால் புதிய உலகமொன்று நிர்மாணிக்கப்படுகின்ற நிலைமைக்குச் பயணிக்க இயலும். ஐக்கிய அமெரிக்காவும் மேற்குலக நாடுகள் சிலவும் தனிமைப்பட்டு ஏனைய நாடுகள் அனைத்துமே அவற்றுக்கு எதிராக அணிதிரளுகின்ற நிலைமை உருவாகக்கூடும். இந்த விடயங்களை கவனத்திற்கொள்ளாமல் இனிமேலும் பயணிக்க முடியாது.
இவையனைத்தின் மத்தியிலும் பலம்பொருந்தியவகையில் முகங்கொடுக்கின்ற ஒருசில நாடுகளின் அத்திவாரமாக அமைவது அவற்றின் தேசிய உற்பத்தியை அதிகரித்துள்ளமையாகும். தென் கொரியாவின் ஒரு வருடத்திற்கான ஏற்றுமதி வருமானம் 680 பில்லியன் டொலர்களாகும். எமது நாட்டில் 12 பில்லியன் டொலர்களாகும். புதிய சந்தைகளைக் கைப்பற்றிக்கொள்வதற்கான திட்டங்கள் அவர்களிடம் இருந்தது. ஆழகுச்சாதனப் பொருட்களைப்போன்றே செம்சசுங் போன்களில் உலகின் முதன்மை உற்பத்தியாளன் கொரியாவாகும். மனிதர்களின் இரசனையையும் இன்பத்தையும் தேடிச் செல்கின்ற பாதைகள் பலதரப்பட்டவையாக மாறியுள்ளன. மனிதர் ஒரே இடத்தில் நின்றுவிடுவார்களாயின் உலகம் நின்று நீண்டகாலமரகி இருக்கும். கொரியாவைப் போலவே சீனாவிற்கும் இந்தியாவிற்கும் வியட்நாமிற்கும் எதிர்காலத் திட்டங்கள் இருந்தமையால் கொவிட் நிலைமைக்குப் பின்னரும் யுக்கிரெயின் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கையிலும் தாக்குப்பிடித்து வளர்ந்துவருகின்ற ஆற்றலை அவர்கள் அடைந்துள்ளார்கள். எனினும் பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் அத்தகைய வளர்ச்சியை அடையவில்லை.
எனினும் எமது நாட்டில் இருப்பவர்கள் இன்னமும் தேர்தலின்போது சாதியடிப்படையில் வேட்பாளர்களைத் தெரிவுசெய்கின்ற பழங்குடித் தலைவர்களே இருக்கிறார்கள். அப்படியில்லாவிட்டால் இந்திய ஆலயங்களுக்குச்சென்று நேர்த்திக்கடன் வைக்கின்ற தலைவர்கள். ரணில் விக்கிரமசிங்க சனாதிபதியான பின்னர் வெளிநாட்டு விஜயங்களுக்காக ஸ்ரீலங்கன் விமான சவையை பாவிக்கவில்லை. காரணம் பஸ்ற் கிளாஸ் இன்மையாகும். பிரதமருக்கு மூவாயிரத்து தொள்ளாயிரம் இலட்சம் பெறுமதியான கார் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டது. அந்த வாகனங்களில் அதிகபட்சமாக பயணிப்பது 25 கிலோமீற்றராகும். எஞ்சிய தூரம் செல்வது ஹெலிகொப்டர்களில். மந்திரம் ஓதிய வளையல்களை அணிந்துகொண்டு பாதுகாப்பு புடைசூழ பாரிய வாகனங்களில் அவர்கள் பயணிப்பது தமிழ்நாட்டுத் திரைப்படங்களில் போன்றாகும். வெட்டுக்கத்தி மாத்திரமே குறைவு. நவீனத்துவத்தை நோக்கி நாட்டைக் கொண்டுசெல்ல அவர்களுக்கு முடியுமா?
திரைப்படக் கலையில், இசையில், இலக்கியத்தில் எத்தனை மாற்றங்கள் உலகில் இடம்பெற்றுள்ளன? எனினும் இரண்டுகோடியே இருபது இலட்சம் பேர் இருக்கின்ற எமது நாட்டில் இலக்கியப் புத்தகமென்றின் ஆயிரம் பிரதிகள் விற்பனையாவதில்லை. கவிதையை இரசிக்காத, திரைப்படத்தை இரசிக்காத, பாடலொன்றை இரசிக்காத, புதியவற்றை கற்றுக்கொள்ளத் தவறிய ஒரு நாடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பழைய தடைகளை அகற்றி நாட்டை மாற்றியமைக்கின்ற யுகத்தை நாங்கள் தொடங்கவேண்டும். பேராதனை பூங்காவின் வருமானத்திலிருந்து 1000 கோடி ரூபாவை செலவிட்டு தி.மு. ஜயரத்ன அம்புலுவாவவை அமைத்தார். அதன்பின்னர் அவருக்கு கீழிருந்த அமைச்சுக்களிலிருந்து பணம் செலவிட்டார். இறுதியாக அவர்களின் குடும்பத்திற்கு எழுதிக்கொள்வதற்காக பாராளுமன்றத்திற்கு சட்டமொன்றைக் கொண்டுவந்தார். இந்த நாட்டின் மலைகளை, பூங்காக்களை தமது குடும்பங்களுக்கு எழுதிக்கொள்ள தலைவர்களுக்கு எப்படிப்பட்ட நோய் இருக்கவேண்டும்? இப்படிப்பட்ட தலைலவர்கள் தமது குடும்பத்தையும் தம்மைச் சுற்றியுள்ள கொள்ளைக்கார கும்பலையும் உருப்படியாக்கிக்கொள்வதை மாத்திரமே செய்தார்கள். கடந்த 20 வருடங்களில் உலகம் பல பாரிய வெற்றிகளை அடைந்துள்ளது. எமது ஆட்சியாளர்கள் அந்தக் காலப்பகுதிக்குள் எமது நாட்டை பின்நோக்கித் தள்ளினார்கள். இந்த படுமோசமான, அயோக்கியத்தனமான, அசிங்கமான, மரபுரீதியான, பழங்குடித்தன்மைகொண்ட அரசியலை மாற்றியமைத்து நவீன தேசமொன்றை நாங்கள் உருவாக்குவோம்.
எளிமை எமது அரசியல் கலாசாரமாக மாறவேண்டும். பிறருக்கு செவிமடுத்தல், சட்டத்தை மதித்தல் எமது கலாசாரமாக அமைதல் வேண்டும். பொதுமக்களின் ஒவ்வொரு சதமும் மீண்டும் மக்கள் சேவைக்காக ஈடுபடுத்தப்படுகின்ற அரசியல் கலாசாரம் தேவை. இந்த ஆட்சியாளர்களின் ஆடை அணிகலன்கள், நிறம் நவீனமானதாக இருக்கலாம். எனினும் அவர்களின் ஆசாபாசங்கள் ஒரு நூற்றாண்டைவிடப் பழமை வாய்ந்தது. அதனால்த்தான் பாராளுமன்றத்திற்குள்ளே அடிபட்டுக்கொள்கிறார்கள். அவர்கள் எந்த மனோநிலையில் செயற்படுகிறார்கள் என்பதை நினைத்துப்பார்க்கவும் முடியாது. அந்த ஆட்சியாளர்கள் இந்த நாட்டுக்கு புரிந்தவற்றினால் ஏற்பட்ட அழிவினைப் பார்க்கிலும் அந்த தருணத்தில் செய்யவேண்டி இருந்தவற்றை செய்யாமையால் அதிக அழிவினை ஏற்படுத்தியுள்ளார்கள். உலகத்துடன் முன்நோக்கிச் செல்கின்ற வழிமுறைகளை மேற்கொள்ளாமையே அந்த அழிவாகும்.
தேசிய மக்கள் சக்தி உலகத்துடன் முன்நோக்கிச் செல்கின்ற ஆட்சியொன்றைக் கொண்டுவரும். அவர்கள் அதற்குத்தான் பயப்படுகிறார்கள். தேர்தலை நடத்தாமல் வெட்டுப்போடுவது அதற்காகத்தான். நாட்டில் வசிக்கின்ற அனைத்து இனக்குழுக்களினதும் உரிமைகளை ஏற்றுக்கொண்டு பாதுகாத்து சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை வளர்க்கின்ற ஆட்சியை நாங்கள் நிறுவுவோம். சிங்கள, தமிழ், முஸ்லீம் அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற அந்த அனைவரதும் உரிமைகளைப் பாதுகாக்கின்ற ஆட்சியொன்றையே நாங்கள் அமைப்போம். தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்புவது தேசிய ஒற்றுமையை பாதுகாக்கின்ற ஆட்சியையாகும். அதற்காக நாங்கள் அனைவரும் ஒழுங்கமைந்து பலம்பொருந்தியவகையில் முன்னணிக்கு வரவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். கம்பளை தொகுதியில் தேசிய மக்கள் சக்தியின் கொடியை உச்சத்தில் உயர்த்திவைக்க அனைவரையும் முன்னணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறோம்.
“அரசியலமைப்பு சதிவேலைகளை செய்துகொண்டு எவ்வளவு தூரம் போகமுடியுமெனப் பார்ப்போமே”
–தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கே.டீ. லால்காந்த–
நேற்றைய தினமானகும்போது மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதென்பதை நாமனைவரும் அறிவோம். அதற்கெதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பந்தம் ஏந்திய ஆர்ப்பாட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் நாங்களும் அதில் பங்கேற்போம். ரணில், ராஜபக்ஷாக்கள், மகிந்தானந்தாக்கள் ஒன்றுசேர்ந்து வாக்களிக்கின்ற உரிமையைப் பெற்றுக்கொடுக்காமல் பலவிதமான வெட்டுகளைப்போட்டு பயணிக்கின்ற பயணத்தை தொடங்கி உள்ளார்கள். எனினும் நாங்கள் தேர்தல் பாதைக்கு மேலதிகமாக அதிகாரத்தை மாற்றிக்கொள்ள இருக்கின்ற மாற்று வழிமுறைகள் பற்றியும் சிந்திக்கவேண்டி உள்ளது. ஆனால் தேர்தல் மூலமாக அதிகாரத்தைப் பெறுவதையே நாங்கள் மிகவும் விரும்புகிறோம். அதனாலேயே ரணில் வெட்டு போடும்போது நாங்கள் மூன்றாவது பாதையையும் தொடங்கியுள்ளோம் என்பதை கம்பளை தொகுதி மாநாட்டில் கூறவிரும்புகிறோம். தேர்தலை நடத்தாவிட்டால் ஆட்சியாளர்களை வேறுவிதத்தில் விரட்டியடித்திடுவதற்கான வேலைத்திட்டமொன்றையும் தொடங்கியுள்ளோம். அதில் ஒன்றுதான் எம்மிடம் இருக்கின்ற பிரமாண்டமான தொழிற்சங்கப் பலம். அதைப்போலவே மிகப்பெரிய கமக்காரர் , இளைஞர், மாணவர் போன்றே கலையமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சக்திகளை ஒருங்கிணைத்து வருகிறோம்.
கடந்த வருடத்தின் மே மாதத்தின் ஒன்பதாந் திகதி மகிந்தவிற்கு பிரதமர் பதவியைக் கைவிட்டுச்செல்லவேண்டி நேரிட்டது. விரும்பிச் செல்லவில்லை விரட்டியடிக்கப்பட்டார். அதுவும் ஒரு வழிமுறையாகும். கோட்டாபய ராஜபக்ஷ சனாதிபதி பதவியைக் கைவிட்டு ஓட்டம் பிடித்தார். அவை தேர்தலால் நிகழவில்லை. அந்த போராட்டம் அவ்வேளையில் பாராளுமன்றப் பக்கத்திற்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தால் அதனையும் கலைக்கவேண்டி நேரிட்டிருக்கும். அந்தப் பாதை பற்றியும் நாங்கள் ரணிலுக்கும் ராஜபக்ஷாக்களுக்கும் ஞாபகப்படுத்துகிறோம். தொழிற்சங்க இயக்கத்திற்கு மேலதிகமாக நகரங்களின் வர்த்தக சங்கங்கள், சட்டத்தரணிகள் சங்கங்கள் போன்ற அமைப்புகளும் இருக்கின்றன. அவர்களை ஒழுங்கமைக்கும் பாதையில் நாங்கள் நீண்டதூரம் பயணித்துள்ளோம். ” உங்களின் ஆட்சியின்கீழ் தொடர்ந்தும் வேலைசெய்ய நாங்கள் தயாரில்லை, நீங்கள் அதிகரித்த மின்கட்டணத்தை செலுத்த நாங்கள் தயாரில்லை, நீங்கள் அதிகரித்த வரியைச் செலுத்த நாங்கள் தயாரில்லை. நீங்கள் போய்விடுங்கள்.” என்ற இடத்திற்கு நிர்ப்பந்திக்கும் அளவுக்கு நாங்கள் வேலைசெய்கிறோம். அதன் பின்னர் எங்கள் ஆட்சியின் கீழ் டபிள் வேலை செய்வோம். அரசியலமைப்பு சதிகளைப் புரிந்துகொண்டு எவ்வளவு தூரம் போகமுடியுமெனப் பார்ப்போமே. நாங்களும் மாநாடுகளை நடாத்தி மக்களை ஒழுங்கமைத்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப வேலைசெய்து வருகிறோம். நாங்கள் தேர்தலுக்கு தயாராவோம். தேர்தலை நடத்தாவிட்டால் வீதியில் இறங்கி அவர்களை விரட்டியடிக்கும்வரை பேராடத் தயாராவோமென அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.
“நாங்கள் அசுப நேரத்தை முடிவுக்கு கொண்டுவரவே உழைக்கவேண்டும்“
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் முதுபெரும் கலைஞர் ஜகத் மனுவர்ண-
இன்று ஒரு முகூர்த்த நாள். ஆனால் நாங்கள் இருப்பதோ முழுநாட்டையுமே அசுபத்தில் அமிழ்த்திய ஆட்சியின் கீழாகும். அவ்வாறான ஒரு நாட்டில் சுபமுகூர்த்தத்தில் ஒன்றைத் தொடங்குவதற்கு முன்னராக நாங்கள் அசுப நேரத்தை முடிவுக்கு கொண்டுவரவே உழைக்கவேண்டும். அடைமழை பொழிகின்ற வானிலையைப் பொருட்படுத்தாமல் நீங்கள் இங்கு வந்திருப்பது இந்த அசுபநேரத்தை முடிவுக்க கொண்டுவரவே என்பது எமக்குத் தெரியும். இந்நறாட்டின் எதிர்காலத்தை அனைவருக்கும் சாதகமானதாக அமைத்துக் கொடுத்திட, இதுவரை ஆட்சியாளர்கள் புரிந்த பொய்களை விளங்கிக் கொண்டதாலேயே திசைகாட்டியைச் சுற்றி மக்கள் குழுமுகிறார்கள். இந்த பிரதேசத்தில் பெரும்பான்மையானவர்கள் அன்றாட ஈட்டல்களில் தங்கிவாழ்வதைப்போன்றே அரசியல்வாதிகளிடமிருந்து ஏதேனம் சலுகைகளைப்பெற எதிர்பார்த்துள்ளவர்களாவர். அதனால் தமது அரசியல் அபிப்பிராயத்தை வெளிப்படுத்த இன்னமும் இவர்கள் பயப்படுகிறார்கள். அவ்வாறு பயமில்லாதவர்களே இங்கு குழுமி இருக்கிறார்கள்.
மற்றவர்களுக்கு தைரியமூட்டுவதற்கான ஒரு பொறுப்பு எமக்கு இருக்கின்றது. அதற்காக பலவற்றை சாதிக்கவேண்டும். இந்த ஆட்சியாளர்கள் புரிந்த அழிவுகளை தெளிவுபடுத்தவும் தேசிய மக்கள் சக்தி நாட்டைக் கட்டியெழுப்புகின்ற விதத்தை தெளிவுபடுத்தவும் அர்ப்பணிப்புச்செய்ய வேண்டும். 75 வருடங்களாக இந்த நாட்டை ஆட்சிசெய்த எந்தவொரு கட்சிக்கும் அடுத்த தேர்தலில் அதிகாரத்திற்கு வரமுடியாதென்பது அனைத்துவிதமான மதிப்பாய்வு அறிக்கைகள் மூலமாகவும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் தேர்தல் தேசப்படத்தை சுருட்டுவதற்கான பலவிதமாக தந்திரோபாயங்களை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றிக் குழுமியுள்ளவர்கள் மக்களின் வாக்களிக்கும் உரிமைக்காக வீதியில் இறங்கி விளங்கக்கூடிய மொழியில் எடுத்துரைக்கவேண்டி நேரிடும்.
கம்பளை நகரத்தின் அசுத்தமான வடிகான் தொகுதி உள்ளிட்ட அனைத்துமே இன்றும் அவ்வண்ணமே நிலவுவது கம்பளையில் இருந்து பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்ட பின்னணியிலாகும். அவர்களின் பரம்பரையினர் வந்து இந்த நிலைமையை மாற்றித்தருவார்கள் என நினைக்கிறீர்களா? மரபுவழிச் சொத்தினால் அரசியல் புரிந்த காலத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சிந்திக்கின்ற இலட்சக் கணக்கான மக்கள் திசைகாட்டியைச் சுற்றிக் குழுமியுள்ளார்கள். திசைகாட்டியின் ஆட்சி இனிமேலும் ஒரு கனவல்ல என்பதை முழுநாட்டு மக்களுமே ஏற்றுக்கொள்கிறார்கள்.
“பாதிக்கப்பட்ட பெண்கள் அரசியல் மாற்றத்திற்காக அணிதிரளவேண்டும்”
-உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் கம்பஹா கம்பளை அமைப்புக்குழு உறுப்பினர் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் சூலா குமுதினீ-
கட்சிசார்பற்றவர்களாக ஒன்றுசேர்ந்த மக்கள் போராட்டம் நடாத்தி முன்னாள் சனாதிபதியையும் பிரதமரையும் விரட்டியடித்தார்கள். எனினும் அதற்குப் பின்னர் அதிகாரத்திற்கு வந்த ஆட்சியாளர்களின்கீழ் மக்கள் பரம நிர்க்கதி நிலையுற்றார்கள். ஒரு பெண் என்றவகையில் இற்றைவரை நானும் நாட்டின் ஏனைய பெண்கள் சிந்திக்கின்ற விதத்திலேயே சிந்தித்தேன். குறிப்பாக அரசியல் எமக்கு உரிமையற்ற ஒன்றென நினைத்தேன். நாங்கள் தேடிக்கொண்டால் எமக்கு உண்டுகளிக்க முடியுமென நினைத்தேன். ஆனால் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்புடனும் முற்போக்கான மகளிர் கூட்டமைவுடனும் ஒன்றுசேர்ந்து செயலாற்றக் கிடைத்தபின்னர் பெயரளவிலான பிரபுக்கள் அரசியல்வாதிகள் ஏமாற்றுகின்ற அளவினை விளங்கிக்கொண்டேன். எமது உரிமைகளுக்காக குரல்கொடுக்கவேண்டுமென்பதை விளங்கிக்கொண்டேன். பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் உண்மையான அரசியல் மாற்றத்திற்காக அணிதிரளவேண்டுமென நாமனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. இருளில் துலாவிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு ஒன்றூக முன்னணிக்கு வந்து ஒழுங்கமைந்து வெற்றியை நொக்கி வீறுநடைபோடவேண்டும்.
“தேசிய மக்கள் சக்தியைத் தவிர வேறு எவருடனும் அணிதிரள்வதில் அர்த்தமில்லை என்பது மக்களுக்குத் தெரியும்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் மௌலவி முனீர் முலாஃபர்-
சுதந்திரத்திற்குப் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலவிதமான வாக்குறுதிகளை வழங்கி ஐந்து வருடங்களுக்கொருதடவை ஆட்சிக்கு வந்தவர்கள் பற்றி எமக்குத் தெரியும். தேர்தல் மேடைகளில் அவர்கள் கூறிய விடயங்களை நம்பி வாக்குகளை அளித்த நாங்கள் 75 வருடங்களுக்குப் பின்னர் நேர்ந்த அழிவுகளை அனுபவித்து வருகிறோம். எனினும் தேசிய மக்கள் சக்தியைத் தவிர்ந்த வேறு எவருடனும் அணிதிரள்வதில் அர்த்தமில்லை என்பதை மக்கள் விளங்கிக்கொண்டுள்ளார்கள். சனாதிபதி சந்திரிக்காவின் கீழ் அமைச்சர் பதவியை வகித்து பின்னர் பிரதமராகிய கம்பளை பிரதேசத்தைச் சேரந்த தி.மு. ஜயரத்னவைப் பற்றியும் ஹொரண ரத்னசிறி விக்ரமநாயக்கவைப் பற்றியும் நாங்கள் அறிவோம். அவர்கள் தற்போது உயிருடன் இல்லாவிட்டாலும் அந்த இருவரினதும் புதல்வர்கள் இருவர் தற்போது ரணில் விக்கிரமசிங்கவின்கீழ் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – ஐக்கிய தேசிய கட்சி என அடிபட்டுக்கொண்டாலும் அந்த பிரதமர்கள் இருவரினதும் புதல்வர்கள் இன்று இருப்பது ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் ஆகும்.
அந்த ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் தமக்கு அடிமைச்சேவகம் புரிகின்றவர்களுக்கு அரசாங்க நிறுவனங்களில் பதவிகளைக் கொடுக்க செயலாற்றினார்கள். அந்த நிறுவனங்களில் தேவையான அளவில் பொதுப்பணத்தைக் கொள்ளையடிக்க இடமளித்தார்கள். அந்த பணத்தின் ஒருபகுதியை அந்த அரசியல்வாதிகளின் தேர்தல்களுக்காக மீண்டும் பெற்றுக்கொண்டார்கள். அந்த ஆட்சியாளர்களின்கீழ் பாதிக்கப்பட்ட மக்கள் எந்தவிதமான பேதமுமின்றி வீதியில் இறங்கி அசிங்கமான அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டுமென உரத்த குரலில் கூறினார்கள். போராட்டம் நடத்தினார்கள். அவ்வாறான நிலைமையில் நியமனம்பெற்ற ரணில் விக்கிரமசிங்க இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பார்களென ஒருசிலர் நினைத்தார்கள். எனினும் அவர் சனாதிபதியான இடத்தில் இருந்து அசிங்கமான காடைத்தனமான அரசியலை முன்னெடுத்து வந்துகொண்டிருக்கிறார்கள். தேர்தலை சதிநிறைந்த வகையில் நடத்தாதிருப்பதற்காக ஆணைக்குழுவிலிருந்து பதவிவிலகிய அம்மையாருக்கு வடக்கின் ஆளுனர் பதவி வழங்கப்பட்டது. அவர்கள் தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபட்டது இந்த அசிங்கமான கலாசாரத்தைப் பாதுகாப்பதற்காகவேயொழிய பொதுமக்களுக்கு நன்மை விளைவிப்பதற்காவல்ல. நாடு எவ்வளவு சீரழிந்துள்ளது எனக் கூறுவதாயின் இந்த வனப்புமிகு நாடு பங்களாதேஷின் முன்னிலையில் தோற்கடிக்கப்படுகின்ற நிலைமைக்கு இழுத்துப்போடப்பட்டுள்ளது. இந்த ஆட்சியாளர்களின் வழிப்பறிக்கொள்ளை செயற்பாங்குகள் காரணமாக எமது நாட்டு மக்கள் இன்று உலகத்தார் முன்னிலையில் பிச்சையேந்துகின்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். தமது வீட்டில் இருந்தாலும் வாடகை வீட்டில் இருப்பதுபோன்ற உணர்வு பெரும்பாலானோருக்கு எற்பட்டுள்ளது. எந்த நேரத்தில் தண்ணீரை மின்சாரத்தை துண்டிப்பார்கள் என்ற பிரச்சினையில் சிக்கியுள்ளார்கள். ஆனால் நாமனைவரும் நம்பிக்கையை தளரவிடக்கூடாது. அனைத்து இனத்தவர்களுக்கும் மதத்தவர்களுக்கும் “இலங்கையர்” எனும் பெருமையுடன் செயலாற்றக்கூடிய தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியொன்றை நிறுவுவோம் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.