-Colombo, November 10, 2023- இலங்கை மண்ணுடன் தாயகத்துடன் இருக்கின்ற பிணைப்பினைக் கைவிட்டுவிடாமல் அங்கு வசிக்கின்ற மக்கள் எதிர்நோக்கியுள்ள மிகவும் ஆழமான நெருக்கடிகள் பற்றிய ஒத்துணர்வுடன் இருக்கிறீர்கள் என்பது நீங்கள் இங்க வருகைதருவதன் மூலமாக உறுதியாகியுள்ளது. நீங்கள் இதில் கலந்து கொண்டமைக்காக உங்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் இலங்கையில் அரசியல் மாற்றமொன்று தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தோற்றியவர்களே. வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களில் பெரும்பான்மையானவர்கள் 2019 சனாதிபதி தேர்தலிலும் அதனைத் தொடர்ந்துவந்த பொதுத்தேர்தலிலுமே முனைப்பாக பங்கேற்றார்கள். ஆனால் இன்று […]
-Colombo, November 10, 2023-

இலங்கை மண்ணுடன் தாயகத்துடன் இருக்கின்ற பிணைப்பினைக் கைவிட்டுவிடாமல் அங்கு வசிக்கின்ற மக்கள் எதிர்நோக்கியுள்ள மிகவும் ஆழமான நெருக்கடிகள் பற்றிய ஒத்துணர்வுடன் இருக்கிறீர்கள் என்பது நீங்கள் இங்க வருகைதருவதன் மூலமாக உறுதியாகியுள்ளது. நீங்கள் இதில் கலந்து கொண்டமைக்காக உங்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் இலங்கையில் அரசியல் மாற்றமொன்று தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தோற்றியவர்களே. வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களில் பெரும்பான்மையானவர்கள் 2019 சனாதிபதி தேர்தலிலும் அதனைத் தொடர்ந்துவந்த பொதுத்தேர்தலிலுமே முனைப்பாக பங்கேற்றார்கள். ஆனால் இன்று உங்களுக்கு என்ன நேர்ந்துள்ளது. உங்களின் எதிர்பார்ப்புகள் முற்றாகவே நாசமடைந்துள்ளன. எனினும் அதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கங்களைக் கவிழ்க்கவும் அரசாங்கங்களை அமைக்கவும் நீங்கள் பங்களித்துள்ளமை உறுதியாகின்றது. மேற்படி அத்தனை தருணங்களையும் திரும்பிப் பார்க்கையில் உங்களுக்கு நேர்ந்துள்ளது மனவேதனையும் எதிர்பார்ப்புச் சிதைவும் மாத்திரமே. நான் உங்களிடம் ஒரு விடயத்தை உறுதியாகக் கூறுகிறேன். தற்போது எம்மோடு உரையாடுவதற்கும் நாம் கூறுவதை செவிமடுக்கவும் பெருமளவிலான குழுவினர் இருக்கிறார்கள் என்பதை நம்புகிறோம். நீங்கள் எம்மீது வைத்தள்ள நம்பிக்கை கடுகளவேனும் சிதைவடைய இடமளியோம் என்று சபதம் செய்கிறோம். நீங்கள் இத்தருணத்தில் பங்கேற்று நாட்டுக்காக ஏதேனுமொரு பணியை ஈடேற்றினீர்கள் என்பது நினைவில் நிற்கின்ற நாளாக அமையுமென்பது உறுதியானதாகும்.
இவ்விதமாக தொடர்ந்தும் நாட்டுக்கோ மக்களுக்கோ முன்நோக்கி நகரமுடியாது. மக்களின் அடிப்படைத் தேவையான உணவு சம்பந்தமாக நாட்டில் எத்தகைய நிலைமை நிலவுகின்றது? சனத்தொகையில் 68% ஏதேனும் விதத்திலான உணவு நெருக்கடிக்குள் வீழ்ந்துள்ளதாக மத்தியவங்கி அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது. இந்த நிலைமை மாற்றப்படக்கூடாதா? அதைப்போலவே குறைந்தபட்ச சுகாதார வசதிகள் கூட அவலநிலைக்குச் சென்றுள்ள நிலைமையை மாற்றியமைத்தே ஆகவேண்டும். அதைப்போலவே போதைப்பொருட்களையும் பாதாள உலகத்தையும் பயங்கரமான முறையில் வளர்த்தெடுத்துள்ள அரசியல் சுற்றுச் சூழலே நிலவுகின்றது. அம்பாந்தோட்டை வம்பொட்டா, ஜுலம்பிட்டியே அமரே போன்ற குற்றச்செயல் புரிபவர்களை வளர்த்தெடுத்துள்ள அரசியலை மாற்றயமைத்திட வேண்டும். சட்டத்தின் ஆட்சியை முற்றாகவே சிதைத்து குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் நாட்டை ஆட்சிசெய்கின்ற நிலைமைக்கு நாசமாக்கியுள்ளார்கள். இந்த நிலைமையை மாற்றியமைத்திட நாட்டில் மாற்றமொன்றை ஏற்படுத்த உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு எமக்கு அவசியமாகும். எனினும் மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோன்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படக்கூடும். அது நியாயமானதே. ஆனால் உங்களுக்கு தற்போது வாய்ப்பு உருவாகி இருக்கின்றது: அது பற்றி எம்மிடம் கேழுங்கள். அதனால் இந்த உரையாடல் சிக்கல்களை தீர்த்துக்கொள்ளலின்பால் பிரவேசிப்பது முக்கியமானது.
இதுவரை காலமும் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள முடியாமல் போனவர்களுக்கு இத்தடவை அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான இயலுமை எப்படி கிடைத்துள்ளது? அரசியல் பலதசாப்தங்களாக தன்வழியில் பாய்ந்தோடினாலும் அதற்குப் பதிலாக அரசியல் மாற்றமொன்றை ஏற்படுத்த அவசியமான அடிப்படை அத்திவாரம் உருவாக்கப்பட்டுள்ளது. ரணிலுக்கு எதிராக மகிந்த ராஜபக்ஷவின் அணியை தெரிவுசெய்தவர்களுக்கு இப்போது என்ன நடந்துள்ளது? ஆளும் வர்க்கத்தினருக்கு அனைத்துவிதமான முரண்பாடுகளையும் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு ஒன்றுசேரும் அளவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அதைப்போலவே இரண்டாவதாக மக்களால் தொடர்ந்தும் வழமைபோல் வாழமுடியாதவகையில் அடிமட்டத்திலிருந்து தோன்றுகின்ற நெருக்கடியும் மிகவும் உயரத்திற்குச் சென்றுள்ளது. இவ்விதமாக ஆட்சியாளர்களுக்கு வழமைபோல் ஆட்சியை நடாத்திவர இயலாதென்பதாலும் மக்களால் வழமைபோல் தொடர்ந்தும் செயலாற்ற இயலாதென்பதாலும் சமூக மாற்றத்திற்கு அவசியமான பலம்பொருந்திய காரணிகளை நெறிப்படுத்துதல் வரை வந்துள்ளது. இப்போது அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள முடியுமா முடியாதா எனும் கேள்வி இருப்பது எம்மிடமே. அப்படியானால் எம்மிடமிருக்கின்ற வெற்றிகள் மற்றும் தோல்விகள் யாவை? அவர்கள் இந்த நிலைமைக்கு முகங்கொடுக்க பாரிய செல்வத்தையும் அரச பலத்தையும் ஊடகப் பலத்தையும் கொண்டுள்ளார்கள். எவ்வளவு எனக் கூறுவதானால் எனக்கு கிறெபைற் எனும் சொல் தவறியமை டேலி மிரர் செய்தித் தாளில் முதற்பக்கச் செய்தியாக மாறுகின்றது. இந்த ஊடகப் பலத்தினால் சமூக மனதை திரிபுநிலைக்கு உள்ளாக்க முடியும். கடந்த சனாதிபதி தேர்தலின்போது முன்னெடுத்துவந்த பிரச்சாரங்களை உச்ச மட்டத்திற்கு கொண்டுவந்த டாக்டர் சாஃபியின் மலட்டு அறுவை சிகிச்சைகளும் களணி கங்கையில் நாகம் தோன்றியதுமாகும். இலங்கையின் சொல்லகராதியில் கருப்பை யுத்தம் எனும் நிலைமை வரை புனைகதைகள் பிரச்சாரம் செய்யப்பட்டன. இறுதியாக தேசம் ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும் அதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள, உயிர்த்தஞாயிறு தாக்குதலால் நாடு அராஜகநிலை அடைந்ததிலிருந்து காப்பாற்றிக்கொள்ள “நாகலோகத்திலிருந்து” நாகம் கொண்டுவரப்பட்டது. அத்துடன் அவர்களிடம் மிகப்பெரிய கறுப்புப்பண பலமும் இருக்கின்றது. இவையனைத்தினதும் மத்தியில் எம்மிடம் இருக்கின்ற ஒரே பலம் மக்களின் பலமாகும். இந்த மாற்றத்திற்காக இருக்கின்ற பலம்பொருந்திய அரண் எமது மக்கள் பலமாகும்.
இந்த மக்கள் கமக்காரர், மீனவர், தொழில்வாண்மையாளர்கள், கலைஞர்களை உள்ளிட்ட பலவிதமானவர்களாக இருப்பதோடு தேர்தல்களின்போது பாரிய அழுத்தங்களைப் புரிபவர்கள் வெளிநாடுசென்றுள்ள இலங்கையர்களே என்பது இனங்காணப்பட்டுள்ளது. எனினும் தற்போது இவையனைத்தையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற மக்கள் அபிப்பிராயத்திற்கு இடமளிக்காமல் உள்ளுரதிகாரசபை தேர்தலும் மாகாணசபைகள் தேர்தலும் சுருட்டிக்கொள்ளப்பட்டது. எனினும் அரசியலமைப்பில் மிகவும் தெளிவாக மக்களின் நிறைவேற்றுத் தத்துவம் மக்களால் தெரிவுசெய்யப்படுகின்ற சனாதிபதியால் வகிக்கப்படல் வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளுரதிகார சபைகளை ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழும் மாகாண சபைகளை ஆளுனரின் கட்டுப்பாட்டின்கீழும் கொண்டுவர இயலுமெனினும் அடுத்த வருடத்தின் அக்டோபர் 17 ஆந் திகதிக்கு முன்னர் கட்டாயமாக சனாதிபதி தேர்தல் நடாத்தப்பட வேண்டும். ஏதேனும் விதத்தில் தேர்தலை நடத்தாதிருக்க அவர் தீர்மானிப்பாராயின் அடுத்த வருடத்தின் அக்டோபர் 17 ஆந் திகதிக்கு முன்னர் அவருக்கு செல்லவேண்டிய நிலையேற்படும். இத்தனை பாதிப்புகள் வந்தபோதிலும் ஏன் மக்கள் வீதியில் இறங்குவதில்லை என ஒருசிலர் கேட்கிறார்கள். அக்டோபரில் சனாதிபதி தேர்தல் நடாத்தப்படும்வரை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அதனை நடாத்துதில்லை எனும் சமிக்ஞை வந்தால் மக்கள் வீதியில் இறங்குவார்கள்.
அதிகாரத்திற்கு வந்த பின்னர் நாட்டை எவ்வாறு மாற்றுவது எனும் கேள்வி இருக்கக்கூடும். அதற்கு அவசியமான அனைத்து சகக்திகளும் எம்மிடம் இருக்கின்றன. அதுவன்றி நானோ எனது கட்சியோ மாயாஜால வித்தைக்காரர்கள் அல்ல. ஆசியாவின் மிகப்பெரிய மூளையுமல்ல. மனித வரலாற்றில் ஒவ்வொரு பிரமாண்டமான வெற்றியும் கூட்டு முயற்சியாலேயே பெறப்பட்டுள்ளன. மனிதன் கையப்படுத்திக்கொண்ட அறிவின் திரட்சி என்றவகையில் நாகரிகம் கூட்டுமுயற்சியிலேயே உருவாகி உள்ளது. எமது ஆட்சியென்பது அவ்வாறான கூட்டு முயற்சியாகும். அரசியலமைப்பின்படி அமைச்சரவையொன்று நியமிக்கப்படல் வேண்டும். அதில் நியமிக்கப்படுகின்ற அமைச்சர்களுக்கு ஏதேனும்விதமான அனுபவமும் அறிவும் இருக்கின்றது. எனினும் எம்மில் எவருக்குமே எல்லாமே தெரியாது. எமது கல்வித்திட்டமே உடைத்து பிரித்துக் கற்றுக்கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் காட்டுகின்ற திறன்களின் கூட்டுமனப்பான்மை மூலமாக அமைச்சுக்கள் நெறிப்படுத்தப்படல் வேண்டும். எனினும் அதற்காக நிபுணத்துவ அறிவுபடைத்த அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கத்தக்க சிறப்பறிஞர் குழுவொன்று நியமிக்கப்படும். புதிய ஆராய்ச்சிகளுக்காக அமெரிக்காவில் வருடமொன்றுக்கு 500 பில்லியன் டொலர் ஈடுபடுத்தப்படுகின்றது. இலங்கையின் ஒட்டுமொ்த பொருளாதாரமே அண்ணளவாக 80 பில்லியன் டொலராகும். புதிய அறிவின் உற்பத்திக்கு அவசியமான மேலதிக செல்வம் மேலைத்தேய நாடுகளில் இருக்கின்றனவென்பதே அதன்மூலமாக கூறப்படுகின்றது. அவர்கள் உருவாக்குகின்ற சிறப்பறிஞர்களில் பெருந்தொகையான இலங்கையர் இருக்கிறார்கள். நாமனைவரும் ஒன்றுசேர்ந்து எமது நாட்டை மீட்டெடுப்போம்.
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமென்பது உலகம் பூராவிலும் பரந்துள்ள இலங்கையின் அறிவினை ஒன்றுதிரட்டுவதற்கு அவசியமான அமைப்பாண்மை பொறியமைப்பினையும் நெறிப்படுத்துதலையும் வழங்குகின்ற ஆட்சியாகும். பொருளாதார, சமூக, அரசியல் வேறுபாடுகளை உருவாக்கவேண்டுமாயின் ஊழல், களவு, மோசடி, விரயம் என்பவற்றைக் கட்டாயமாக நிறுத்தி அந்த மோசடிப்பேர்வழிகளுக்கும் ஊழல்பேர்வழிகளுக்கும் தண்டனை வழங்கி நிச்சயமாக பொதுமக்களின் ஆதனங்களைக் கையகப்படுத்தும். நோய்வாய்ப்பட்டுள்ள தாய் தந்தையருக்கு வைத்தியசாலையில் இருந்து மருந்து வாங்கிக் கொடுப்பதற்காக ஈடுபடுத்தவேண்டிய செல்வத்தைக் கோடிக்கணக்கில் அவர்கள் குவித்துள்ளார்கள். பழிவாங்குதலல்ல, எவரையும் தனிப்பட்டமுறையில் பழிவாங்கும் நோக்கமோ கோபமோ எம்மிடம் இல்லை. எனினும் சமூக நீதி மற்றும் நியாயம் பற்றிய பிரச்சினையொன்று எமது நாட்டில் நிலவுகின்றது. நாங்கள் அதனை ஈடேற்றுவோம். எமது பிள்ளைகளின் 20% இற்கு கிட்டிய தொகையினர் மிகையான போசாக்கின்மையாலும் கரப்பிணித் தாய்மார்களில் 17% இற்கு கிட்டிய தொகையினர் இரத்தச் சோகையாலும் அவதிப்படக் காரணம் மக்களின் செல்வத்தைக் குவித்துக்கொண்ட கொள்ளைக்காரக் கும்பல் காரணமாகவே. அந்த செல்வத்தை சமூகமயப்படுத்தவேண்டும். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அந்த பணியைச் செய்யும். அதைப்போலவே நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக தற்போது நிலவுகின்ற அழிவுமிக்க அசிங்கமான அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்போம். அதைப்போலவே மனோபாவரீதியான மாற்றத்தை நவீன தொழில்நுட்பத்தை பாவிக்கின்ற அரச சேவையொன்றை உருவாக்குவோம். அதைப்போலவே சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கிடையில் தேசிய ஒற்றுமையை உருவாக்கிட வேண்டும். இரண்டு மொழிகளைப் பேசுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லீம் ஆகிய மூன்று இனக்குழுக்கள் இருக்கின்றன. நான்கு பிரதான மதங்கள் இருக்கின்றன. பௌத்தம், இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் என்பவற்றுக்கிணங்க மூன்று பிரதான கலாசாரங்கள் நிலவுகின்றன. சிங்கள பௌத்தர்கள், தமிழ் இந்துக்கள் மற்றும் முஸ்லீம் இஸ்லாம் ஆகிய கலாசாரங்கள் பிரதானமாக நிலவுகின்றன. வெசாக், பொசொன், நத்தார், பெரிய வெள்ளிக்கிழமை, உயிர்த்த ஞாயிறு, தைப்பொங்கல், ரமழான் ஆகிய சமய கலாசார வைபவங்கள் இருக்கின்றன. இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொண்டாடுகின்ற கலாசார வைபவமொன்றேனும் கிடையாது. எம்மை பிரித்தே வைத்துள்ளார்கள்.
முப்பது வருடகால யத்தத்தில் பெருநிலம் ஈரமாகும் வரை இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடும்வரை கண்ணீர் சிந்தப்பட்டுள்ளது. மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை உருவாகாதிருக்க சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கிடையில் ஒற்றுமையை உருவாக்கவேண்டும். எமது பரம்பரையினர் யுத்தம் புரிந்துகொண்டாலும் எமது பிள்ளைகளின் தலைமுறையினருக்கு யுத்தம் இல்லாத நாடு தேவை. இந்த ஆட்சியாளர்கள் இருந்தால் எமது பிள்ளைகளின் தலைமுறையினருக்கும் யுத்தம் புரியவேண்டிய நிலையேற்படும். அவர்களுக்கு யத்தம் இல்லாவிட்டால் மகிழ்ச்சி கிடையாது, நட்டமே ஏற்படும். யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தால் எண்ணெய் இல்லாமை போனமை, கேஸ் இல்லாமல் போனமை, கடன்செலுத்த முடியாமல் போனமை, மருந்து இல்லாமை இவற்றுக்கு காரணம் யுத்தமையே எனக் கூறுவார்கள். அதனால்த்தான் அவர்களுக்கு யுத்தம் இல்லாவிட்டால் மகிழ்ச்சி கிடையாது: நட்டம் எனக் கூறப்படுகின்றது. சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கிடையில் ஓற்றுமை நிலவுகின்ற நாட்டைப்போலவே சட்டத்தின் ஆட்சி நிலவுகின்ற ஒரு நாடு உருவாக்கப்படும். செல்வம் இருப்பவருக்கு அதிகாரம் இருப்பவருக்கு ஒரு சட்டமும் செல்வமும் அதிகாரமும் இல்லாதவருக்கு ஒரு சட்டமும் இருக்கின்ற நிலைமையை முடிவுக்கு கொண்டுவந்து சட்டம்மீது நம்பிக்கை கொண்ட ஒரு நாட்டை உருவாக்கிடுவோம். நாகரிகமுடைய ஒரு நாட்டை உருவாக்குகையில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படும். எமது நாட்டின் அத்திவாரம் சின்னாபின்னமக்கப்பட்டுள்ளது. நாங்கள் அந்த அத்திவாரத்தை மீண்டும் பலம்பொருந்தியவகையில் இட்டு அதன்மீது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம். அதற்குள்ளே பிறர்மீது ஒத்துணர்வும் ஈரமும் கொண்ட மனித சமூகத்தை உருவாக்கிடுவோம்.
இன்று கனவுகள் மடிந்துபோன, எதிர்பார்ப்புகள் சிதைவடைந்த ஒரு நாடாக இருக்கின்ற இலங்கையை கனவுகள் காண்கின்ற, எதிர்பார்ப்புகள் நிறைந்த நாடாக கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றுசேர்ந்து செயற்படுவோமென அழைப்பு விடுக்கிறோம்.



-Colombo, October 31, 2023- இங்கு இருக்கின்ற எவருமே அரசியலில் ஈடுபடுவதற்காக அமெரிக்காவிற்கு வரவில்லை. பெரும்பாலானவர்கள் தொழில்தேடிக்கொண்டு, பிள்ளைகளின் கல்விக்காக அல்லது இலங்கையைவிட பாதுகாப்பான நாடொன்றைத் தேடியே வந்துள்ளீர்கள். நீங்கள் இலங்கையிலிருந்து மிகவும் தொலைவில் அமைந்துள்ள நாட்டில் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையைக் கழிக்கையில் இலங்கை பற்றி மிகுந்த கவனத்துடன் இருக்கின்ற, இலங்கைச் சம்பவங்கள் தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ள ஒரு குழுவென்ற வகையிலேயே இன்று இதில் பங்கேற்றுள்ளீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு இருக்கின்ற பெரும்பாலானவர்கள் இதற்கு […]
-Colombo, October 31, 2023-

இங்கு இருக்கின்ற எவருமே அரசியலில் ஈடுபடுவதற்காக அமெரிக்காவிற்கு வரவில்லை. பெரும்பாலானவர்கள் தொழில்தேடிக்கொண்டு, பிள்ளைகளின் கல்விக்காக அல்லது இலங்கையைவிட பாதுகாப்பான நாடொன்றைத் தேடியே வந்துள்ளீர்கள். நீங்கள் இலங்கையிலிருந்து மிகவும் தொலைவில் அமைந்துள்ள நாட்டில் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையைக் கழிக்கையில் இலங்கை பற்றி மிகுந்த கவனத்துடன் இருக்கின்ற, இலங்கைச் சம்பவங்கள் தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ள ஒரு குழுவென்ற வகையிலேயே இன்று இதில் பங்கேற்றுள்ளீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு இருக்கின்ற பெரும்பாலானவர்கள் இதற்கு முன்னர் எம்மைச் சந்தித்ததில்லை. பெரும்பாலானவர்கள் எம்மைச் சந்திக்க வந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாக அமையக்கூடும். அதைப்போலவே நீங்கள் அனைவரும் இதற்கு முன்னர் ஏதாவது அரசியல் இயக்கத்திற்கு உதவிபுரிந்திருக்கக்கூடும். பங்களிப்பு செய்திருக்கக்கூடும். அது உங்களின் சாதகமான எதிர்பார்ப்புகளுக்கானதே. பெரும்பாலானவர்கள் தலைவர்களை அதிகாரத்திற்கு கொண்டுவர, அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவர உதவியது தனிப்பட்ட நன்மைகளுக்காகவல்ல. ஆனால் அந்த தலைவர்களும் அரசாங்கங்களும் உங்களின் எதிர்பார்ப்புகளை இம்மியளவேனும் பொருட்படுத்தாமல் சிதைத்துவிட்டார்கள். அந்த அரசியல் கட்சிகள் பற்றி தலைவர்கள் பற்றி விரக்தியும் கோபமும் நிலவக்கூடும். அதுதான் கடந்த காலத்தில் கோல்பேஸ் மைதானத்தில் வெளிப்பட்டது. அதற்கு உங்களின் நல்வாழ்த்துப் பங்களிப்பு கிடைத்தது. அது ஏன்? உங்களால் கொண்டுவரப்பட்ட தலைவர்கள் உங்களின் எதிர்பார்ப்புகளைச் சிதைத்தமையாகும். நான் உங்களுக்கு ஓர் எதிர்பார்ப்பினைக் கொடுக்கிறேன். நீங்கள் எம்மீது வைக்கின்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பினை கடுகளவேனும் சிதைக்க இடமளியோம் என்பதை உறுதியாகக் கூறுகிறேன். உங்களுக்கு எமது நாடு மீதுள்ள அக்கறையும் எதிர்பார்ப்பும் சிலவேளை உங்களைவிட அதிகமாக எமக்கும் இருக்கின்றது. ஏனென்றால் இவ்விதமாக எமது தாயகத்தினால் ஓரங்குலம்கூட முன்நோக்கி நகரமுடியாது. இனிமேலும் எமது மக்களால் வேதனைகளையும் துன்பங்களையும் எதிர்கொண்டு வாழஇயலாது. இதனை கட்டாயமாக மாற்றியமைத்திட வேண்டும். இந்த நாடு தொடர்ந்தும் இவ்விதமாக பயணிக்கவேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்களா? எமது நாட்டு மக்கள் இவ்விதமாக வாழவேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்களா. அதனால் இந்த நாட்டை மாற்றியமைப்பதற்கான உறுதியான திடசங்கற்பமும் மாறாத நோக்கமும் எமக்கு இருக்கின்றது. நாங்கள் நிச்சயமாக இலங்கையை நலமான திசையைநோக்கி மாற்றியமைப்போம்.
நீங்கள் அறிந்திருந்தாலும் தற்போது எமது நாட்டின் அவலநிலை எத்தகையது என்பதை விளங்கிக்கொள்வதற்காக ஒருசில விடயங்களைக் கூறுகிறேன். கண்களில் சிறிய கோளாறு சம்பந்தமாக சிகிச்சைபெற வைத்தியசாலைக்குச் சென்றால் வாழ்நாள் முழுவதிலும் பார்வையை இழக்கின்ற நிலை எற்படுகின்றது. பச்சிளம் குழந்தையின் நோய்க்காக ஊசி மருந்து போட்டால் பிள்ளை இறக்கின்றது. எமது கண்ணெதிரில் நீதிமன்றத்தில் குற்றவாளியாக தண்டனை விதிக்கப்பட்ட, கடுமையான குற்றச்செயல்களைப் புரிந்த, குற்றச்செயல்களுக்கு பங்களிப்புச் செய்தவர்கள் நாட்டை ஆட்சி செய்கிறார்கள். சட்டத்தின் ஆட்சி இல்லாத நாடாக எமது நாடு மாறி உள்ளது. குற்றச்செயல்கள் கட்டுக்கடங்காத நாடாக எமது நாடு மாறியுள்ளது. அப்படிப்பப்பட்ட நாடு எமக்குத் தேவையா? இதனை மாற்றவேண்டிய தேவை கிடையாதா? அண்மையில் மத்திய வங்கி அறிக்கையின்படி மக்களில் 68% மூன்றுவேளை உணவு உண்பதில்லை. உண்கின்ற அளவினைக் குறைத்து விட்டார்கள். அப்படியில்லாவிட்டால் விருப்பமற்ற உணவினை உட்கொள்கிறார்கள். மக்களுக்கு சரியான உணவுவேளையொன்று கிடையாது. அதைப்போலவே நாடு பாரிய கடன் மேட்டில் இறுகிப்போயுள்ளது.
கடந்த திசெம்பர் 31 ஆந் திகதியில் எமது நாட்டின் கடன்அளவு 30 ரில்லியன் ஆகும். (30 இலட்சம் கோடியாகும்) சனத்தொகை 2.2 கோடி. இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு அற்ற நாடாகும். ஒவ்வோர் இளைஞனும் யுவதியும் ஏதாவது வருமானம் தரக்கூடிய தொழில்தேடி இலங்கைக்கு வெளியில் செல்ல தூண்டப்பட்டுள்ளார்கள். இன்று எமது நாடு இவ்வாறான நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கி உள்ளது. தொடர்ந்தும் இவ்விதமாக முன்நோக்கி நகரமுடியாது. இந்த பயணப்பாதையை நாங்கள் மாற்றியமைத்திட வேண்டும். முதலில் நாங்கள் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக நாட்டை உருப்படியாக்கவேண்டும். எமது நாட்டில் ஏறக்குறைய 75 வருடங்களாக பெரும்போக்கில் இருந்த இரண்டு கட்சிகளிடமே ஆட்சி மையப்படுத்தப்பட்டிருந்தது. இன்றளவில் அந்த இரண்டு கட்சிகள் இரண்டல்ல என்பது நீரூபணமாகி உள்ளது. இலங்கையில் முதல்த்தடவையாக இந்த இரண்டு அரசியல் பாசறைகளும் ஒன்றுசேர்ந்துள்ளன. ஊழல், மோசடியின்போது இவர்கள் ஒரே பாசறையில்தான் இருக்கிறார்கள். மோசடியில் ஈடுபடுகிறார்கள். கடனெடுத்தல் மற்றும் விற்பனையின்போது பொருளாதாரக் கொள்கை ஒன்றாகும்.
இதற்கு முன்னர் ஆட்சியாளர்களுக்கு பயந்து முடங்கிய மக்களே இருந்தார்கள். அமைச்சர் வரும்போது வடிகானில் இறங்குகிறார்கள். ஊரில் அரசியல் அதிகாரியிடமிருந்து அதிகாரத்தை பெற்றுக்கொண்ட சண்டியர்கள் இருந்தார்கள். ஊர் மக்களை பயமுறுத்தினார்கள். இன்று முதல்த்தடவையாக அமைச்சர் மக்களைக்கண்டு அஞ்சுகிறார். இலங்கையில் மக்கள் அரசியல்ரீதியாக கூர்மையடைந்து முனைப்பானவர்களாக மாறியுள்ளார்கள். அது எந்தளவு எனக் கூறுவதாயின் 69 இலட்சம் வாக்குகளைப்பெற்று அதிகாரத்திற்கு வந்த சனாதிபதியை விரட்டியடிக்கும் அளவுக்கு மக்கள் வெற்றியடைந்துள்ளார்கள். இன்று இருப்பவர்கள் வித்தியாசமாக சிந்திக்கக்கூடிய மக்களே. அது எமக்கு நல்லதொரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. முன்பு யு.என்.பி. அல்லது ஸ்ரீலங்கா ஆட்சியைக் கட்யெழுப்பிக்கொண்ட மக்கள் வொச்சர் ஜொப்பிற்கு எம்மிலும் ஒருசிலரை அனுப்பிவைக்கவேண்டுமென்றே அச்சந்தர்ப்பத்தில் எம்மை நோக்கினார்கள். பாராளுமன்றத்தில் சத்தம்போட நான்கு ஐந்து பேரை அனுப்பிவைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன்தான் எம்மைத் தெரிவுசெய்தார்கள். எங்கள் அரசாங்கமொன்றை அமைத்திட, பிரதான எதிர்க்கட்சியாக மாற்ற அன்று மக்களுக்கு தேவை இருக்கவில்லை. இன்று இலங்கையின் அரசியல் மாறிவிட்டது. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை கட்டியெழுப்புவதற்கான ஆர்வமும் எதிர்பார்ப்பும் தோன்றியுள்ளது.
இந்த அனைத்தையும் பார்க்கையில் அதிகாரத்தைக் கட்டியெழுப்புகின்ற ஆற்றல்படைத்த வாய்ப்பொன்று உருவாகி இருக்கிறதென்பது எமக்குப் புலனாகின்றது. எமக்கு அதிகாரத்திற்கான அவசியப்பாடு இருந்தாலும் அதற்குத் தேவையான நிலைமைகள் உருவாகாமல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஏனைய எக்காலத்தையும்விட மாற்றமொன்றிற்கான தேவைக்கான காலம் பிறந்துள்ளது. தற்போது இருப்பது அதிகாரத்தைக் கையகப்படுத்திக்கொள்ள நாங்கள் திறமையானவர்களா, திறமையற்றவர்களா? என்கின்ற விடயமாகும். அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அனைத்து வளங்களையும் திரட்டி, சிறப்பாக முகாமைசெய்து, நெறிப்படுத்த வேண்டியதுதான் தேசிய மக்கள் சக்தியின் பொறுப்பு.
தோழர்கள் முன்வைக்கின்ற கேள்விதான் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வாய்ப்பு உருவாகியுள்ளபோதிலும் தேர்தலை நடத்தாமல் எவ்வாறு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது? என்பதாகும். சனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது. அடுத்த வருடத்தின் ஒக்டோபர் 17 ஆந் திகதிக்கு முன்னர் எமது நாட்டில் சனாதிபதி தேர்தல் நடாத்தப்படல் வேண்டும். அடுத்த வருடத்தின் ஒக்டோபர் இக்காலத்தில் இலங்கையில் புதியதோர் அரசாங்கம், புதியதோர் ஆட்சி. இந்த அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்காக கருத்தியல்சார்ந்த போராட்டமொன்றை நடாத்த வேண்டியுள்ளது. இன்று பிரதான ஊடகங்களுக்குப் பதிலாக சமூக வலைத்தளங்கள் மக்கள்மத்தியில் சென்றுள்ளன. இன்று எங்களையும் வெளிநாடுகளிலுள்ள உங்களையும் நெருக்கமடையச் செய்விக்க பிரதானமாக உறுதுணையாக அமைந்தவை சமூக வலைத்தளங்களே. இன்று உங்களால் சமூக வலைத்தளங்கள் ஊடாக இலங்கை மக்கள் மீது பலம்பொருந்திய அழுத்தத்தைக் கொடுக்கமுடியும். உலகத்தைக் கண்ட, உலகத்தின் சமூகப் பாதுகாப்பினை அனுபவித்த, சுகாதாரக் கவனிப்பு, கல்விக் கவனிப்பு, தொழில்கள் பற்றிய அனுபவம் பெற்ற சமுதாயம் என்றவகையில் உங்களால் எமது நாட்டின் சகோதர மக்களுக்கு விழிப்புணர்வூட்ட முடியும். அவர்களிடம் எம்மைவிட செல்வம் நிலவுகின்றது. அவர்களிடம் அரச அதிகாரம் இருக்கின்றது. மரபுரீதியான ஊடகங்களில் எம்மைவிட உயர்வான இடத்தில் இருக்கிறார்கள். அவையனைத்தையும்விட பலம்பொருந்தியது மக்களின் குரல். அதனால் பொதுமக்களை ஒழுங்கமைத்து அந்த சக்திகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதுதான் தேசிய மக்கள் சக்தியின் கடமைப்பெறுப்பு.
இந்த அதிகாரப் பரிமாற்றத்தின்போது வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களாகிய உங்களுக்கு அதற்கான பாரிய செயற்பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த சனாதிபதி தேர்தலின் மிகப்பெரிய செயற்பொறுப்பினை வெளிநாடு சென்றுள்ள இலங்கையர் ஆற்றினார்கள். அதனைச் சாதிக்க வேண்டுமாயின் எமக்கிடையில் ஏதேனும் இணக்கப்பாடு, தெளிவற்ற இடங்களை தீர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் கூறுவது சரி, நாங்கள் உங்களை எவ்வாறு நம்புவது? எனும் கேள்வி எழுகின்றது. கேள்வி நியாயமானதே. பல சந்தர்ப்பங்களில், பல்வேறு தலைவர்கள், பலவிதமான வாக்குறுதிகளைக் கொடுத்த அரசாங்கங்கள், பலதலைமுறையினராக உங்களை இயலுமானவரை ஏமாற்றி இருக்கிறார்கள். எம்மைப் பற்றி ஆராய்ந்து பாருங்கள், நெருங்கிப் பழகுங்கள். நாங்கள் கூறுவது என்னவென விளங்கிக்கொள்ளுங்கள். சிலவேளையில் இவ்வளவு காலம் தாமதித்தது அநியாயமென உங்களுக்குத் தோன்றும்.
இரண்டாவதாக நீங்கள் கேட்பீர்கள், உங்களால் அதிகாரத்தைப் பெறமுடியும். ஆனால் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் அரசாங்கத்தை நெறிப்படுத்த குழுவொன்று இருக்கிறதா? என. நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர் யார்? பொருளாதாரத்தைப் பொறுப்பேற்பது யார்? அந்த கேள்விகள் நியாயமானவையே. ஏனைய இரண்டு கட்சிகளிடம் இந்த கேள்விகளைக் கேட்பதில்லையே. அவர்கள் அரசாங்கங்களைக் கொண்டுநடாத்தி இருக்கிறார்கள், செயலாற்றிய விதத்தையும் அறிவார்கள். பசில் ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க நிதி அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளும்போது என்ன நினைத்தீர்கள்? அவர்கள் செய்தவை தெரியும். ஆனால் நாங்கள் அதிகாரத்தைக் கேட்கும்போது எங்களிடம் கேட்கிறார்கள், “உங்களால் செய்ய முடியுமா? செய்வதற்கான டீம் ஒன்று இருக்கின்றதா?” என. எம்மைப் பற்றிய சிறிய சந்தேகமொன்று நிலவுகின்றது.
ஆம், எமக்கு குழுவொன்று அவசியம், எப்படிப்பட்ட குழு? தனிப்பட்டவகையில் எதனையும் எதிர்பார்த்திராத, தமது அறிவு, தமது நேரம், தமது உழைப்பினை நாட்டுக்காகவும் பொது மக்களுக்காகவும் செலவிடவல்ல நேர்மையான மனிதர்கள். அந்த நேர்மை எங்கள் குழுவிடம் இருக்கின்றது. நான் ஓர் ஆள் என்றவகையில் உயர்தரம் பயில்கையிலேயே அரசியலுடன் தொடர்புகோண்டேன். இந்த அரசியலுடன் இணைந்து 34 – 35 வருடங்களாகின்றன. நானோ எமது இயக்கத்தைச் சேர்ந்த எவருமோ தமக்கு கிடைத்த அமைச்சுப் பதவிகள், பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள், தமக்கு கிடைத்துள்ள அரசியல் அதிகாரம் எதையும் பொதுப்பணத்தை விரயமாக்கவோ அல்லது திருடவோ பிரயோகிக்கவில்லை. எமது நாட்டையும் எமது மக்களையும் இந்த பேரவலத்தில் இருந்து விடுவித்துக்கொள்வதற்கான நேர்மையான நல்லெண்ணம் எமக்கு இருக்கின்றது. அதோ அந்த டீம் எங்களிடம் இருக்கின்றது. தம்மிடமுள்ள சாத்தியவளம், தம்மிடமுள்ள அறிவினை உண்மையாகவே சமூக முன்னேற்றத்திற்காக செலவிடக்கூடியவர்களே தேவை. அறிவு இருந்தால் மாத்திரம் போதாது. அயோக்கியத்தனமான தேவைகளுக்குப் பதிலாக சமூகத் தேவைகளுக்காக எமது அறிவினை, சாத்தியவளங்களை பிரயோகிப்போமாயின் பொருளாதாரம் பற்றிய, வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய, கல்வி, சுகாதாரம், விவசாயம் பற்றிய திறன்கள் உள்ள ஆற்றல்கள் உள்ள குழுவொன்று எம்மிடம் இருக்கின்றது. பொருளியல் பற்றிய அறிவுபடைத்த பேராசிரியர் அனில் ஜயந்த, பேராசிரியர் ஜனக் குமாரசிங்க, பேராசிரியர் சீதா பண்டார எமது பொருளாதாரக் குழுவில் இருக்கிறார்கள். ஐக்கிய அமெரிக்காவின் பெரும்பாலான ஆராய்ச்சி நிறுவனங்களில் இலங்கையர்கள் தொழில்புரிந்து வருகிறார்கள்.
அந்த அறிவினைப் பெற்றுக்கொண்டு நாட்டை முன்னேற்ற எமது நாட்டில் அரசாங்கமொன்று இருக்கவில்லை. தலைவரரொருவர் இருக்கவில்லை. அதோ அந்த ஆட்சியாயாளன்தான் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாளன். தேசிய மக்கள் சக்தியின் பிரதமர், அந்தந்த விடயங்களை யார்யார் பொறுப்பேற்பது என்பது பற்றிய மொத்த திட்டமொன்று எம்மிடம் இருக்கின்றது. பிரதமருடன் வேலைசெய்கின்ற அணி யாரென எம்மிடம் திட்டமொன்று இருக்கின்றது. ஏனென்றால் தனியொருவரால் அற்புதம் நிகழ்த்திவிட முடியாது. அதனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்கீழ் அமைக்கப்படுவது மரபுரீதியான அமைச்சரவையொன்று அல்ல. அதற்கு அப்பால் செல்கின்ற சமூகத்தின் ஒவ்வொருவரினதும் முனைப்பான பங்களிப்பினை பெறத்தயாரான அரசாங்கமாகும். அது எமது நாட்டில் இடம்பெறுகின்ற புதிய மாற்றமாகும். அதைப்போலவே அரசாட்சி செய்கின்ற வழிமுறையும் வித்தியாசமானது.
அடுத்த விடயமாக எமது நாட்டுக்கு பலம்பொருந்திய அரச ஆட்சியொன்று தேவை. எமது நாட்டின் அரச ஆட்சிப் பொறியமைப்பு மிகவும் பலவீனமானது. ஒட்டுமொத்த அரச பொறியமைப்பையும் அரச செயற்பாங்கினையும் அரசியலில் இருந்து விடுவித்து அனைவருக்கும் சனநாயகரீதியாக அரசாங்க தொழிலில் பிரவேசிப்பதற்கான வாய்ப்பையும் அரசாங்கத்துடன் தொழில்முயற்சிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் நாங்கள் ஏற்படுத்திக் கொடுப்போம். அதைப்போலவே அமைச்சர் மற்றும் அவரைச் சுற்றிக் குழுமியுள்ள வளையத்தின் கையில்தான் ஒட்டுமொத்த பொருளாதார தேகமுமே ஒருங்கிணைந்துள்ளது. இதனை மாற்றியமைத்திட வேண்டும். நாங்கள் பொருளாதார சனநாயகத்தை உருவாக்குவோம். அது மிகவும் முக்கியமானது. உங்களிடம் பொதிந்துள்ள திறமைகள், திறன்கள், உங்களிடம் இருக்கின்ற கருத்திட்டத்தின் அடிப்படையில் பொருளாதாரத்தில் பிரவேசிக்க உங்களுக்கு வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கப்படும். ஒரு கும்பலின் கைகளில், மூன்றுநான்கு பேர்களின் கைகளில் உள்ள பொருளாதாரத்தைக் கொண்டு நாட்டை மீட்டெடுக்க முடியாது. அனைவருக்கும் சனநாயகரீதியான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமாக மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை முன்நோக்கி நகர்த்துவதற்கான இயலுமை கிடைக்கும். நாங்கள் பொருளாதார சனநாயகத்தை உருவாக்குவோம்.
உலகின் எந்தவொரு நாட்டுக்கும் தனித்து வாழ முடியாது. பொருளாதாரத்தினால் தொடர்பாடலினால் தொழில்நுட்பத்தினால் உலகம் ஒன்றாக மூடிச்சுப்போடப்பட்டுள்ளது. பலம்பொருந்திய நாடுகளுக்கிடையில் யுத்தம் பிரகடனஞ் செய்யப்பட்டிராவிட்டாலும் அதிகார மோதல்கள் நிலவுகின்றன, ஐக்கிய அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையில், பொருளாதார முரண்பாடு நிலவுகின்றது. அதற்காக சந்தையைக் கைப்பற்றிக் கொள்கின்ற மோதலொன்று நிலவுகின்றது. இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடையில் மோதலொன்று நிலவுகின்றது. ரஷ்யா ஒரு புறத்திலும் ஐரோப்பா மற்றுமொரு புறத்திலும் வருகின்றது. உலகின் பல்வேறு அதிகார கேந்திரங்கள் இருக்கின்றன. இலங்கைக்கு ஓர் அதிகார கேந்திரமாக மாறக்கூடிய சாத்தியவளம் இத்தருணத்தில் கிடையாது. எனினும் அந்த அதிகார கேந்திரங்களில் நிலவுகின்ற முரண்பாடுகளுக்கு தடுக்கமுடியாதவகையில் தரப்பினர்களாக அல்லது அதனால் பாதிக்கப்படுகின்ற பங்காளிகளாக மாறியுள்ளது. அதிகார மோதல் நிலவுவது எம்மைக் கைவிட்டல்ல. உலக தேசப்படத்திலிருந்து எம்மை அழித்தல்ல. அதிகார கேந்திரமாக அமையாவிட்டாலும் நாங்களும் உலக தேசப்படத்தில் இருக்கிறோம். அப்படியானால் முதலாவது வெளிநாட்டுக் கொள்கையாக அமைவது அந்த எந்தவோர் அதிகார கேந்திரத்துடனும் நேரடியாக அல்லது மறைமுகமாக பங்கிப்பினை வழங்காத அணிசேரா வெளியுறவுக் கொள்கையாகும்.
விற்பனை செய்தல் மற்றும் கடனுக்கு வாங்குதலை நாங்கள் எண்பதாவது தசாப்தத்தில் தொடங்கினோம். ரணில் விக்கிரமசிங்க இன்றும் எதிர்பார்ப்பது எதனை?எப்படியாவது கடன்பெறுவதையாகும். இருக்கின்றவற்றையும் விற்றுத் தீர்ப்பதாகும். அது ஒரு புதிய பயணமா? அது பழைய தோல்விகண்ட பயணப்பாதையாகும். நாங்கள் அதிலிருந்து தீர்வுக்கட்டமான வகையில் வித்தியாசப்பட வேண்டும். உலக சந்தையின் பொருளாதாரத்தின் ஒரு பகுதியை கைப்பற்றிக் கொள்வதற்கான திட்டமொன்று எம்மிடம் இருக்கின்றது.
உலகின் புதிய தேவைப்பாடுகளுக்கு அவசியமான அறிவு, உலகின் புதிய அவசியப்பாடுகளுக்கு அவசியமான பண்டங்களுக்கான உலகச் சந்தையில் ஒரு பங்கினைக் கைப்பற்றிக் கொள்வதில் நாங்கள் வெற்றியடையவேண்டும். உலகில் எந்தளவு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன? ஆனால் நாங்கள் ஒரு நாடு என்றவகையில் அதே இடத்தில் தான். இந்த ஆட்சியாளர்கள் வெட்கப்படவேண்டியதில்லையா? வெள்ளைக்காரன் போகும்வேளையிலும் எமது பிரதான பொருளாதாரம் தேயிலை, இரப்பர், தெங்கு. இன்றும் அதே பொருளாதாரமே. நாங்கள் உலகில் இடம்பெறுகின்ற புதிய மாற்றத்திற்கு ஒத்துவரக்கூடிய பண்டங்களையும் சேவைகளையும் கையகப்படுத்திக் கொள்வதில் தோல்வியடைந்ததன் பாதகவிளைவுகளை இன்று அனுபவித்து வருகிறோம்.
புதிய உலகிற்கு அவசியமான அறிவினைப் பெற்றுக்கொள்கின்ற இலங்கையை நாங்கள் உருவாக்கிட வேண்டும். உலகின் விருத்திக்கு அவசியமான பண்டங்களை உற்பத்திசெய்கின்ற தொழிற்சாலைகளை நாங்கள் ஆரம்பிக்கவேண்டும். அதோ அத்தகைய பண்டங்களினதும் சேவைகளினதும் உற்பத்தியால் எதிர்கால இலங்கையை நாங்கள் கட்டியெழுப்புவோம். கடனெடுப்பதால் விற்பனை செய்வதால் இந்த நாட்டைக் கரைசேரக்க இயலாது.
பாலஸ்தீன – இஸ்ரவேல் மோதலில் ஈரான் ஆயுதங்களுடன் இடையீடுசெய்தால் உலகில் மீண்டும் மிகப்பெரிய மோதல் உருவாகும். பாலஸ்தீன – இஸ்ரவேல் யுத்தம் காரணமாக எதிர்காலத்தில் எண்ணெய் விலை அதிகரிக்கக் கூடுமென ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். எம்மால் உலகின் பெருந்தொற்றுகளைத் தடுக்க முடியாது. யுத்தங்களை தடுக்க முடியாது. பாரிய நிதிசார் வீழ்ச்சியைத் தடுக்க முடியாது. உலகில் பெருந்தொற்றுகள், யுத்தங்கள், நிதிசார் வீழ்ச்சிகள் உருவாகையில் அதற்கு தாக்குப்பிடிக்கக்கூடிய பொருளாதாரமொன்றை நாங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும். எமது நாட்டின் வளங்கள், எம்மால் கையகப்படுத்திக் கொள்ளக்கூடிய சந்தை, எம்மிடம் இருக்கின்ற முகாமைத்துவம், தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்துக்கொண்ட புதிய சந்தையொன்றைத் தேடிக்கொண்டு பண்டங்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியின்பால் நாங்கள் பிரவேசிக்க வேண்டும். அதுதான் எமது பொருளாதாரம், நிலைதளராத பொருளாதாரம். “ஐக்கிய அமெரிக்காவிற்கு தும்மல் வந்தால் எமக்கு தடிமன் வரும்.” அது சீனாவுக்கு, தென் கொரியாவுக்கு, வியட்நாமிற்கு ஏற்படுவதில்லை. அந்த நாடுகள் உலக சந்தையில் பண்டங்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியில் ஒரு பங்கினைக் கையகப்படுத்தி உள்ளன. வளர்ச்சியை அகப்படுத்திக் கொண்டுள்ளன. நாங்கள் படிப்படியாக சரியான இடங்களைத் தெரிவுசெய்து வேகமாக தொடர்நடவடிக்கைகளை மேற்கொண்டு தொடர்ச்சியாக நெறிப்படுத்தவேண்டும்.
நாங்கள் மாற்றமடையவேண்டிய இடங்களை இனங்கண்டுள்ளோம். அதோ அதனை வேகமாக தொடர்நடவடிக்கைகளுடன் நாங்கள் நெறிப்படுத்துவோம். எங்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவும் அதிகாரத்தைப் பெற்றபின்னர் இந்த நாட்டைக் கட்டியெழுப்பவும் அவசியமான குழுவும் நோக்கும் விசேட தேவையும் நிலவுகின்றது. நாங்கள் அந்த வேலையைச் செய்வோம். இது எம்மால் மாத்திரம் சாதிக்கக்கூடிய ஒன்றல்ல. நீங்கள் இலங்கைக்கு வெளியில் வசித்தாலும் இன்றும் இலங்கை ஏதேனுமொரு வெற்றியைப் பெற்றால் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள். நீங்கள் ஐக்கிய அமெரிக்காவில் வசித்தாலும் நீங்கள் அதிகமாக பார்ப்பது இலங்கையின் தகவல்களையாகும். செவிமடுப்பது இலங்கையின் பாடல்களையாகும். அதாவது நாங்கள் உடலால் தொலைவில் இருந்தாலும் எமது கடப்பாடுகள் பெருநிலத்துடனேயே இருக்கின்றன. எமது அனைவரதும் மனங்களில் சுபமான கனவு நிலவுகின்றது. எமது தாயகத்தை முன்னேற்றமடைந்த நாடாக, அதில் வசிக்கின்ற மக்கள் அழகான வாழ்க்கையைக் கழிக்கின்ற நாட்டை எதிர்பார்க்கின்ற கனவொன்று இருக்கின்றது. அது எனக்கும் இருக்கின்றது. உங்களுக்கும் இருக்கின்றது. அதனால் நாமனைவரும் ஒன்றுசேர்ந்து அந்த கனவை நனவாக்குவோம். அதற்காக தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற வேண்டும். அது ஒர் அரசியல் இயக்கமல்ல. அது மக்கள் இயக்கமாகும். அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அதிகாரத்தைக் கையகப்படுத்திக் கொள்வோம்.



தேசிய மக்கள் சக்தியின் கம்பளை தொகுதி மாநாடு – 2023.10.21 தேசிய மக்கள் சக்தியின் 90% தொகுதி மாநாடுகள் நாடு பூராவிலும் நடாத்தி முடிக்கப்பட்டு விட்டன. அதைப்போலவே உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாநாடுகளை நடாத்தி ஒருங்கிணைத்து வருகிறார்கள். கமக்காரர்களின் மாநாடுகள், இளைஞர் சங்கத்தின் புதிய அரசியல் உரையாடல்கள், இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவு உள்ளிட்ட பல்வேறு தொழில்வாண்மையாளர்களை ஒழுங்கமைத்து தொழிலதிபர்களையும் கைத்தொழில் உரிமையாளர்களையும் ஒழுங்கமைத்து வருகிறோம். அதைப்போலவே திசெம்பர் இறுதியளவில் எமது நாட்டின் மிகப்பிரமாண்டமான பெண்களின் ஒருங்கிணைவினை உருவாக்குவோம். […]
தேசிய மக்கள் சக்தியின் கம்பளை தொகுதி மாநாடு – 2023.10.21

தேசிய மக்கள் சக்தியின் 90% தொகுதி மாநாடுகள் நாடு பூராவிலும் நடாத்தி முடிக்கப்பட்டு விட்டன. அதைப்போலவே உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாநாடுகளை நடாத்தி ஒருங்கிணைத்து வருகிறார்கள். கமக்காரர்களின் மாநாடுகள், இளைஞர் சங்கத்தின் புதிய அரசியல் உரையாடல்கள், இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவு உள்ளிட்ட பல்வேறு தொழில்வாண்மையாளர்களை ஒழுங்கமைத்து தொழிலதிபர்களையும் கைத்தொழில் உரிமையாளர்களையும் ஒழுங்கமைத்து வருகிறோம். அதைப்போலவே திசெம்பர் இறுதியளவில் எமது நாட்டின் மிகப்பிரமாண்டமான பெண்களின் ஒருங்கிணைவினை உருவாக்குவோம். இவ்விதமாக ஒழுங்கமைத்து இந்நாட்டின் அதிகாரத்தைப் பரிமாற்றிக்கொள்ள நாங்களும் தயாராகி வருகிறோம். ஏனைய தரப்பினரின் கையில் பல சாதனங்கள் இருக்கின்றன. வரி மோசடிகளிருந்து குவித்துக்கொண்ட அளப்பரிய செல்வம் அவர்களின் கையில் இருக்கின்றது. மக்களிடமிருந்து கொள்ளையடித்த அந்த செல்வத்தை அவர்களின் தேர்தல்களுக்கான பம்ப் பண்ணுகிறார்கள். ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பிற்குச் சென்று தங்கியிருந்த ஹோட்டலுக்காக செலவிட்டது யாரென முடியுமானால் கூறுங்கள். அரசாங்கத்தின் பாதுகாவலுடன் தீத்தொழில் புரிபவர்கள் சேகரித்து வைத்துள்ள பணம் தேர்தல் காலங்களில் வெளியில் வருகின்றது. ஊர் மக்களுக்கு பணம்கொடுத்து ஏமாற்றி வாக்குகளைப் பெறுகின்ற சூதாட்டத்தை சதாகாலமும் புரிய அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தீத்தொழில் புரிபவர்களின் செல்வத்தை தேர்தலுக்காக சேகரிக்கின்றவேளையில் நாங்கள் மக்களை ஒன்றுசேர்த்து தேர்தலை நோக்கிச் செல்கிறோம்.
மறுபுறத்தில் ரணில் விக்கிரமசிங்காக்கள் தேர்தலை பிற்போடுவதற்காக மாளிகை சதித்திட்டங்களைத் தீட்டிவருகிறார்கள். மக்களுக்கு முகங்கொடுக்காமல் அவர்கள் மாளிகை சதித்திட்டங்களை தீட்டுகையில் நாங்கள் மக்களை ஒன்றுதிரட்டி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள அணிதிரள்கிறோம். மிகவும் முக்கியமான தருணத்திலேயே கம்பளை தொகுதி மாநாடு நடைபெறுகின்றது. எதிர்வரும் 10 மாதகாலப்பகுதிக்குள் இலங்கையின் தலைவிதி எழுதப்படுகின்ற காலப்பகுதியொன்று வருகின்றது. ரணில் வந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பாரென ஒருசில சிறப்பறிஞர்கள் செய்தித்தாள்களில் எழுதினார்கள். ரீ.வீ. இல் வந்து கூறினார்கள். ஆனால் என்ன நேர்ந்துள்ளது? இந்த நெருக்கடியின் வேரில் இருக்கின்ற கடனெடுத்தல் மற்றும் விற்பனை செய்தலின் பேரில் நெருக்கடியின் மூலவேர் அமைந்துள்ளது. நீண்டகாலமாக இந்த பாதையில் வந்தார்கள். கடனெடுத்தல் மற்றும் விற்பனைசெய்தல் நீங்கலாக வேறு பொருளாதார உபாய மார்க்கத்தை எமது நாட்டுக்கு அறிமுகஞ் செய்யவில்லை. அரசாங்கத் தொழிற்சாலைகள் அனைத்துமே மூடப்பட்டுவிட்டன. 21 பெருந்தோட்டக் கம்பெனிகள் விற்பனை செய்யப்பட்டன. ரெலிகொம்மில் அரைவாசிக்கு கிட்டிய பங்கினை விற்றார்கள். ஒருசில வங்கிகளை விற்றார்கள். தற்போது விற்பதற்கு ஒன்றுமே இல்லாமல் இறுகிப்போகும் நிலைக்கு வந்துள்ளார்கள். எஞ்சியுள்ளவற்றை வேகமாக விற்பதற்கே ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருகிறார்.
முதன்முதலாக இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை விற்கப் போகிறார்கள். பொருளாதார நெருக்கடியொன்று நிலவுகையில் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் 1000 கோடி ரூபா இலாபத்தை ஈட்டியது. தேசிய பாதுகாப்பினைப்போன்றே நாட்டின் எதிர்காலத்துடன் பின்னிப்பிணைந்துள்ள ரெலிகொம் நிறுவனத்தை விற்கத் தயாராகி வருகிறார்கள். அதன் ஒரு வருடத்திற்கான இலாபம் 1300 கோடி ரூபாவாகும். ஹில்டன் ஹோட்டல், லங்கா ஹொஸ்பிட்டல், லிற்றோ கேஸ் கம்பெனி, மில்கோ நிறுவனம், தேசிய கால்நடைவள நிறுவனம், பொஸ்பேற் படிவுகள், கனிய மணல் வளம் மற்றும் இரத்தினக்கல் காணிகளை விற்பனை செய்யத் தயாராகி வருகிறார்கள். எதிர்வரும் ஏழு, எட்டு மாதங்களுக்குள் எமது அனைத்து வளங்களையும் விற்கத் தயாராகி வருகிறார்கள். மின்சார சபையின் மின்சார பிறப்பாக்கத்தை சமனல வெவ, மகாவலி தொகுதி மற்றும் லக்ஷபான என மூன்றுதுண்டுகளாக உடைத்து விற்கப் போகிறார்கள். இவ்வாறு விற்பனை செய்வது மின்நிலையங்களையாகும். அத்துடன் நீர்த்தேக்கங்களின் உரிமையையும் விற்கப் போகிறார்கள். அதைப்போலவே நீர் வளத்தையும் விற்கப் போகிறார்கள்.
எமது தொழில்வாண்மையாளர்கள்மீது பாரிய வசிச்சுமையை ஏற்றி அவர்கள் நாட்டைக் கைவிட்டுச் செல்லும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். எமது நாட்டின் உழைப்புப் படையில் 15% தொழில்வாண்மையாளர்களாவர். வரிச்சுமையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவர்கள் நாட்டைவிட்டுச் செல்வதைப்போலவே பொதுமக்கள்மீது பாரிய வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது. மறுபுறத்தில் சிலமாதங்களுக்கொருதடவை எண்ணெய் விலை, மின்சார விலை அதிகரிக்கப்பட்டு வருகின்றது. மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத வாழ்க்கைச் சுமையை ஏற்றி எஞ்சிய வளங்கள் அனைத்தையும் தேர்தலுக்கு முன்னர் விற்றுவிட ரணில் செயலாற்றி வருகிறார். அவர்கள் அடுத்த தேர்தலுக்கான திட்டங்களை வகுத்து வருகிறார்களேயொழிய நாட்டின் எதிர்காலத்திற்காக திட்டங்களை வகுப்பதில்லை. உலகமானது இன்று தொழில்நுட்பத்தினால் சந்தையால் அபிவிருத்தியால் மூடிச்சிப் போடப்பட்டுள்ளது. அதனால் உலகில் ஏற்படுகின்ற எந்தவொரு சிறிய அசைவும் மற்றுமொரு நாட்டில் தாக்மேற்படுத்துவதை தடுக்க இயலாது. கொவிட் பெருந்தொற்று நிலைமை முழுஉலகம் மீதும் தாக்கமேற்படுத்தி பயணித்த பொருளாதாரப் பயணப்பாதையை மீள்பரிசீலனை செய்யுமாறே கூறிநின்றது. யுக்கிரெயின் யுத்தம் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளிலும் தாக்கமேற்படுத்தி உள்ளது. காசா துண்டுநிலத்தை மையமாக்கொண்டு தோன்றியுள்ள மோதலைத் தீர்த்துக்கொள்ளாவிட்டால் புதிய உலகமொன்று நிர்மாணிக்கப்படுகின்ற நிலைமைக்குச் பயணிக்க இயலும். ஐக்கிய அமெரிக்காவும் மேற்குலக நாடுகள் சிலவும் தனிமைப்பட்டு ஏனைய நாடுகள் அனைத்துமே அவற்றுக்கு எதிராக அணிதிரளுகின்ற நிலைமை உருவாகக்கூடும். இந்த விடயங்களை கவனத்திற்கொள்ளாமல் இனிமேலும் பயணிக்க முடியாது.
இவையனைத்தின் மத்தியிலும் பலம்பொருந்தியவகையில் முகங்கொடுக்கின்ற ஒருசில நாடுகளின் அத்திவாரமாக அமைவது அவற்றின் தேசிய உற்பத்தியை அதிகரித்துள்ளமையாகும். தென் கொரியாவின் ஒரு வருடத்திற்கான ஏற்றுமதி வருமானம் 680 பில்லியன் டொலர்களாகும். எமது நாட்டில் 12 பில்லியன் டொலர்களாகும். புதிய சந்தைகளைக் கைப்பற்றிக்கொள்வதற்கான திட்டங்கள் அவர்களிடம் இருந்தது. ஆழகுச்சாதனப் பொருட்களைப்போன்றே செம்சசுங் போன்களில் உலகின் முதன்மை உற்பத்தியாளன் கொரியாவாகும். மனிதர்களின் இரசனையையும் இன்பத்தையும் தேடிச் செல்கின்ற பாதைகள் பலதரப்பட்டவையாக மாறியுள்ளன. மனிதர் ஒரே இடத்தில் நின்றுவிடுவார்களாயின் உலகம் நின்று நீண்டகாலமரகி இருக்கும். கொரியாவைப் போலவே சீனாவிற்கும் இந்தியாவிற்கும் வியட்நாமிற்கும் எதிர்காலத் திட்டங்கள் இருந்தமையால் கொவிட் நிலைமைக்குப் பின்னரும் யுக்கிரெயின் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கையிலும் தாக்குப்பிடித்து வளர்ந்துவருகின்ற ஆற்றலை அவர்கள் அடைந்துள்ளார்கள். எனினும் பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் அத்தகைய வளர்ச்சியை அடையவில்லை.
எனினும் எமது நாட்டில் இருப்பவர்கள் இன்னமும் தேர்தலின்போது சாதியடிப்படையில் வேட்பாளர்களைத் தெரிவுசெய்கின்ற பழங்குடித் தலைவர்களே இருக்கிறார்கள். அப்படியில்லாவிட்டால் இந்திய ஆலயங்களுக்குச்சென்று நேர்த்திக்கடன் வைக்கின்ற தலைவர்கள். ரணில் விக்கிரமசிங்க சனாதிபதியான பின்னர் வெளிநாட்டு விஜயங்களுக்காக ஸ்ரீலங்கன் விமான சவையை பாவிக்கவில்லை. காரணம் பஸ்ற் கிளாஸ் இன்மையாகும். பிரதமருக்கு மூவாயிரத்து தொள்ளாயிரம் இலட்சம் பெறுமதியான கார் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டது. அந்த வாகனங்களில் அதிகபட்சமாக பயணிப்பது 25 கிலோமீற்றராகும். எஞ்சிய தூரம் செல்வது ஹெலிகொப்டர்களில். மந்திரம் ஓதிய வளையல்களை அணிந்துகொண்டு பாதுகாப்பு புடைசூழ பாரிய வாகனங்களில் அவர்கள் பயணிப்பது தமிழ்நாட்டுத் திரைப்படங்களில் போன்றாகும். வெட்டுக்கத்தி மாத்திரமே குறைவு. நவீனத்துவத்தை நோக்கி நாட்டைக் கொண்டுசெல்ல அவர்களுக்கு முடியுமா?
திரைப்படக் கலையில், இசையில், இலக்கியத்தில் எத்தனை மாற்றங்கள் உலகில் இடம்பெற்றுள்ளன? எனினும் இரண்டுகோடியே இருபது இலட்சம் பேர் இருக்கின்ற எமது நாட்டில் இலக்கியப் புத்தகமென்றின் ஆயிரம் பிரதிகள் விற்பனையாவதில்லை. கவிதையை இரசிக்காத, திரைப்படத்தை இரசிக்காத, பாடலொன்றை இரசிக்காத, புதியவற்றை கற்றுக்கொள்ளத் தவறிய ஒரு நாடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பழைய தடைகளை அகற்றி நாட்டை மாற்றியமைக்கின்ற யுகத்தை நாங்கள் தொடங்கவேண்டும். பேராதனை பூங்காவின் வருமானத்திலிருந்து 1000 கோடி ரூபாவை செலவிட்டு தி.மு. ஜயரத்ன அம்புலுவாவவை அமைத்தார். அதன்பின்னர் அவருக்கு கீழிருந்த அமைச்சுக்களிலிருந்து பணம் செலவிட்டார். இறுதியாக அவர்களின் குடும்பத்திற்கு எழுதிக்கொள்வதற்காக பாராளுமன்றத்திற்கு சட்டமொன்றைக் கொண்டுவந்தார். இந்த நாட்டின் மலைகளை, பூங்காக்களை தமது குடும்பங்களுக்கு எழுதிக்கொள்ள தலைவர்களுக்கு எப்படிப்பட்ட நோய் இருக்கவேண்டும்? இப்படிப்பட்ட தலைலவர்கள் தமது குடும்பத்தையும் தம்மைச் சுற்றியுள்ள கொள்ளைக்கார கும்பலையும் உருப்படியாக்கிக்கொள்வதை மாத்திரமே செய்தார்கள். கடந்த 20 வருடங்களில் உலகம் பல பாரிய வெற்றிகளை அடைந்துள்ளது. எமது ஆட்சியாளர்கள் அந்தக் காலப்பகுதிக்குள் எமது நாட்டை பின்நோக்கித் தள்ளினார்கள். இந்த படுமோசமான, அயோக்கியத்தனமான, அசிங்கமான, மரபுரீதியான, பழங்குடித்தன்மைகொண்ட அரசியலை மாற்றியமைத்து நவீன தேசமொன்றை நாங்கள் உருவாக்குவோம்.
எளிமை எமது அரசியல் கலாசாரமாக மாறவேண்டும். பிறருக்கு செவிமடுத்தல், சட்டத்தை மதித்தல் எமது கலாசாரமாக அமைதல் வேண்டும். பொதுமக்களின் ஒவ்வொரு சதமும் மீண்டும் மக்கள் சேவைக்காக ஈடுபடுத்தப்படுகின்ற அரசியல் கலாசாரம் தேவை. இந்த ஆட்சியாளர்களின் ஆடை அணிகலன்கள், நிறம் நவீனமானதாக இருக்கலாம். எனினும் அவர்களின் ஆசாபாசங்கள் ஒரு நூற்றாண்டைவிடப் பழமை வாய்ந்தது. அதனால்த்தான் பாராளுமன்றத்திற்குள்ளே அடிபட்டுக்கொள்கிறார்கள். அவர்கள் எந்த மனோநிலையில் செயற்படுகிறார்கள் என்பதை நினைத்துப்பார்க்கவும் முடியாது. அந்த ஆட்சியாளர்கள் இந்த நாட்டுக்கு புரிந்தவற்றினால் ஏற்பட்ட அழிவினைப் பார்க்கிலும் அந்த தருணத்தில் செய்யவேண்டி இருந்தவற்றை செய்யாமையால் அதிக அழிவினை ஏற்படுத்தியுள்ளார்கள். உலகத்துடன் முன்நோக்கிச் செல்கின்ற வழிமுறைகளை மேற்கொள்ளாமையே அந்த அழிவாகும்.
தேசிய மக்கள் சக்தி உலகத்துடன் முன்நோக்கிச் செல்கின்ற ஆட்சியொன்றைக் கொண்டுவரும். அவர்கள் அதற்குத்தான் பயப்படுகிறார்கள். தேர்தலை நடத்தாமல் வெட்டுப்போடுவது அதற்காகத்தான். நாட்டில் வசிக்கின்ற அனைத்து இனக்குழுக்களினதும் உரிமைகளை ஏற்றுக்கொண்டு பாதுகாத்து சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை வளர்க்கின்ற ஆட்சியை நாங்கள் நிறுவுவோம். சிங்கள, தமிழ், முஸ்லீம் அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற அந்த அனைவரதும் உரிமைகளைப் பாதுகாக்கின்ற ஆட்சியொன்றையே நாங்கள் அமைப்போம். தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்புவது தேசிய ஒற்றுமையை பாதுகாக்கின்ற ஆட்சியையாகும். அதற்காக நாங்கள் அனைவரும் ஒழுங்கமைந்து பலம்பொருந்தியவகையில் முன்னணிக்கு வரவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். கம்பளை தொகுதியில் தேசிய மக்கள் சக்தியின் கொடியை உச்சத்தில் உயர்த்திவைக்க அனைவரையும் முன்னணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறோம்.
“அரசியலமைப்பு சதிவேலைகளை செய்துகொண்டு எவ்வளவு தூரம் போகமுடியுமெனப் பார்ப்போமே”
–தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கே.டீ. லால்காந்த–

நேற்றைய தினமானகும்போது மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதென்பதை நாமனைவரும் அறிவோம். அதற்கெதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பந்தம் ஏந்திய ஆர்ப்பாட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் நாங்களும் அதில் பங்கேற்போம். ரணில், ராஜபக்ஷாக்கள், மகிந்தானந்தாக்கள் ஒன்றுசேர்ந்து வாக்களிக்கின்ற உரிமையைப் பெற்றுக்கொடுக்காமல் பலவிதமான வெட்டுகளைப்போட்டு பயணிக்கின்ற பயணத்தை தொடங்கி உள்ளார்கள். எனினும் நாங்கள் தேர்தல் பாதைக்கு மேலதிகமாக அதிகாரத்தை மாற்றிக்கொள்ள இருக்கின்ற மாற்று வழிமுறைகள் பற்றியும் சிந்திக்கவேண்டி உள்ளது. ஆனால் தேர்தல் மூலமாக அதிகாரத்தைப் பெறுவதையே நாங்கள் மிகவும் விரும்புகிறோம். அதனாலேயே ரணில் வெட்டு போடும்போது நாங்கள் மூன்றாவது பாதையையும் தொடங்கியுள்ளோம் என்பதை கம்பளை தொகுதி மாநாட்டில் கூறவிரும்புகிறோம். தேர்தலை நடத்தாவிட்டால் ஆட்சியாளர்களை வேறுவிதத்தில் விரட்டியடித்திடுவதற்கான வேலைத்திட்டமொன்றையும் தொடங்கியுள்ளோம். அதில் ஒன்றுதான் எம்மிடம் இருக்கின்ற பிரமாண்டமான தொழிற்சங்கப் பலம். அதைப்போலவே மிகப்பெரிய கமக்காரர் , இளைஞர், மாணவர் போன்றே கலையமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சக்திகளை ஒருங்கிணைத்து வருகிறோம்.
கடந்த வருடத்தின் மே மாதத்தின் ஒன்பதாந் திகதி மகிந்தவிற்கு பிரதமர் பதவியைக் கைவிட்டுச்செல்லவேண்டி நேரிட்டது. விரும்பிச் செல்லவில்லை விரட்டியடிக்கப்பட்டார். அதுவும் ஒரு வழிமுறையாகும். கோட்டாபய ராஜபக்ஷ சனாதிபதி பதவியைக் கைவிட்டு ஓட்டம் பிடித்தார். அவை தேர்தலால் நிகழவில்லை. அந்த போராட்டம் அவ்வேளையில் பாராளுமன்றப் பக்கத்திற்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தால் அதனையும் கலைக்கவேண்டி நேரிட்டிருக்கும். அந்தப் பாதை பற்றியும் நாங்கள் ரணிலுக்கும் ராஜபக்ஷாக்களுக்கும் ஞாபகப்படுத்துகிறோம். தொழிற்சங்க இயக்கத்திற்கு மேலதிகமாக நகரங்களின் வர்த்தக சங்கங்கள், சட்டத்தரணிகள் சங்கங்கள் போன்ற அமைப்புகளும் இருக்கின்றன. அவர்களை ஒழுங்கமைக்கும் பாதையில் நாங்கள் நீண்டதூரம் பயணித்துள்ளோம். ” உங்களின் ஆட்சியின்கீழ் தொடர்ந்தும் வேலைசெய்ய நாங்கள் தயாரில்லை, நீங்கள் அதிகரித்த மின்கட்டணத்தை செலுத்த நாங்கள் தயாரில்லை, நீங்கள் அதிகரித்த வரியைச் செலுத்த நாங்கள் தயாரில்லை. நீங்கள் போய்விடுங்கள்.” என்ற இடத்திற்கு நிர்ப்பந்திக்கும் அளவுக்கு நாங்கள் வேலைசெய்கிறோம். அதன் பின்னர் எங்கள் ஆட்சியின் கீழ் டபிள் வேலை செய்வோம். அரசியலமைப்பு சதிகளைப் புரிந்துகொண்டு எவ்வளவு தூரம் போகமுடியுமெனப் பார்ப்போமே. நாங்களும் மாநாடுகளை நடாத்தி மக்களை ஒழுங்கமைத்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப வேலைசெய்து வருகிறோம். நாங்கள் தேர்தலுக்கு தயாராவோம். தேர்தலை நடத்தாவிட்டால் வீதியில் இறங்கி அவர்களை விரட்டியடிக்கும்வரை பேராடத் தயாராவோமென அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.
“நாங்கள் அசுப நேரத்தை முடிவுக்கு கொண்டுவரவே உழைக்கவேண்டும்“
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் முதுபெரும் கலைஞர் ஜகத் மனுவர்ண-

இன்று ஒரு முகூர்த்த நாள். ஆனால் நாங்கள் இருப்பதோ முழுநாட்டையுமே அசுபத்தில் அமிழ்த்திய ஆட்சியின் கீழாகும். அவ்வாறான ஒரு நாட்டில் சுபமுகூர்த்தத்தில் ஒன்றைத் தொடங்குவதற்கு முன்னராக நாங்கள் அசுப நேரத்தை முடிவுக்கு கொண்டுவரவே உழைக்கவேண்டும். அடைமழை பொழிகின்ற வானிலையைப் பொருட்படுத்தாமல் நீங்கள் இங்கு வந்திருப்பது இந்த அசுபநேரத்தை முடிவுக்க கொண்டுவரவே என்பது எமக்குத் தெரியும். இந்நறாட்டின் எதிர்காலத்தை அனைவருக்கும் சாதகமானதாக அமைத்துக் கொடுத்திட, இதுவரை ஆட்சியாளர்கள் புரிந்த பொய்களை விளங்கிக் கொண்டதாலேயே திசைகாட்டியைச் சுற்றி மக்கள் குழுமுகிறார்கள். இந்த பிரதேசத்தில் பெரும்பான்மையானவர்கள் அன்றாட ஈட்டல்களில் தங்கிவாழ்வதைப்போன்றே அரசியல்வாதிகளிடமிருந்து ஏதேனம் சலுகைகளைப்பெற எதிர்பார்த்துள்ளவர்களாவர். அதனால் தமது அரசியல் அபிப்பிராயத்தை வெளிப்படுத்த இன்னமும் இவர்கள் பயப்படுகிறார்கள். அவ்வாறு பயமில்லாதவர்களே இங்கு குழுமி இருக்கிறார்கள்.
மற்றவர்களுக்கு தைரியமூட்டுவதற்கான ஒரு பொறுப்பு எமக்கு இருக்கின்றது. அதற்காக பலவற்றை சாதிக்கவேண்டும். இந்த ஆட்சியாளர்கள் புரிந்த அழிவுகளை தெளிவுபடுத்தவும் தேசிய மக்கள் சக்தி நாட்டைக் கட்டியெழுப்புகின்ற விதத்தை தெளிவுபடுத்தவும் அர்ப்பணிப்புச்செய்ய வேண்டும். 75 வருடங்களாக இந்த நாட்டை ஆட்சிசெய்த எந்தவொரு கட்சிக்கும் அடுத்த தேர்தலில் அதிகாரத்திற்கு வரமுடியாதென்பது அனைத்துவிதமான மதிப்பாய்வு அறிக்கைகள் மூலமாகவும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் தேர்தல் தேசப்படத்தை சுருட்டுவதற்கான பலவிதமாக தந்திரோபாயங்களை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றிக் குழுமியுள்ளவர்கள் மக்களின் வாக்களிக்கும் உரிமைக்காக வீதியில் இறங்கி விளங்கக்கூடிய மொழியில் எடுத்துரைக்கவேண்டி நேரிடும்.
கம்பளை நகரத்தின் அசுத்தமான வடிகான் தொகுதி உள்ளிட்ட அனைத்துமே இன்றும் அவ்வண்ணமே நிலவுவது கம்பளையில் இருந்து பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்ட பின்னணியிலாகும். அவர்களின் பரம்பரையினர் வந்து இந்த நிலைமையை மாற்றித்தருவார்கள் என நினைக்கிறீர்களா? மரபுவழிச் சொத்தினால் அரசியல் புரிந்த காலத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சிந்திக்கின்ற இலட்சக் கணக்கான மக்கள் திசைகாட்டியைச் சுற்றிக் குழுமியுள்ளார்கள். திசைகாட்டியின் ஆட்சி இனிமேலும் ஒரு கனவல்ல என்பதை முழுநாட்டு மக்களுமே ஏற்றுக்கொள்கிறார்கள்.
“பாதிக்கப்பட்ட பெண்கள் அரசியல் மாற்றத்திற்காக அணிதிரளவேண்டும்”
-உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் கம்பஹா கம்பளை அமைப்புக்குழு உறுப்பினர் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் சூலா குமுதினீ-

கட்சிசார்பற்றவர்களாக ஒன்றுசேர்ந்த மக்கள் போராட்டம் நடாத்தி முன்னாள் சனாதிபதியையும் பிரதமரையும் விரட்டியடித்தார்கள். எனினும் அதற்குப் பின்னர் அதிகாரத்திற்கு வந்த ஆட்சியாளர்களின்கீழ் மக்கள் பரம நிர்க்கதி நிலையுற்றார்கள். ஒரு பெண் என்றவகையில் இற்றைவரை நானும் நாட்டின் ஏனைய பெண்கள் சிந்திக்கின்ற விதத்திலேயே சிந்தித்தேன். குறிப்பாக அரசியல் எமக்கு உரிமையற்ற ஒன்றென நினைத்தேன். நாங்கள் தேடிக்கொண்டால் எமக்கு உண்டுகளிக்க முடியுமென நினைத்தேன். ஆனால் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்புடனும் முற்போக்கான மகளிர் கூட்டமைவுடனும் ஒன்றுசேர்ந்து செயலாற்றக் கிடைத்தபின்னர் பெயரளவிலான பிரபுக்கள் அரசியல்வாதிகள் ஏமாற்றுகின்ற அளவினை விளங்கிக்கொண்டேன். எமது உரிமைகளுக்காக குரல்கொடுக்கவேண்டுமென்பதை விளங்கிக்கொண்டேன். பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் உண்மையான அரசியல் மாற்றத்திற்காக அணிதிரளவேண்டுமென நாமனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. இருளில் துலாவிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு ஒன்றூக முன்னணிக்கு வந்து ஒழுங்கமைந்து வெற்றியை நொக்கி வீறுநடைபோடவேண்டும்.
“தேசிய மக்கள் சக்தியைத் தவிர வேறு எவருடனும் அணிதிரள்வதில் அர்த்தமில்லை என்பது மக்களுக்குத் தெரியும்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் மௌலவி முனீர் முலாஃபர்-

சுதந்திரத்திற்குப் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலவிதமான வாக்குறுதிகளை வழங்கி ஐந்து வருடங்களுக்கொருதடவை ஆட்சிக்கு வந்தவர்கள் பற்றி எமக்குத் தெரியும். தேர்தல் மேடைகளில் அவர்கள் கூறிய விடயங்களை நம்பி வாக்குகளை அளித்த நாங்கள் 75 வருடங்களுக்குப் பின்னர் நேர்ந்த அழிவுகளை அனுபவித்து வருகிறோம். எனினும் தேசிய மக்கள் சக்தியைத் தவிர்ந்த வேறு எவருடனும் அணிதிரள்வதில் அர்த்தமில்லை என்பதை மக்கள் விளங்கிக்கொண்டுள்ளார்கள். சனாதிபதி சந்திரிக்காவின் கீழ் அமைச்சர் பதவியை வகித்து பின்னர் பிரதமராகிய கம்பளை பிரதேசத்தைச் சேரந்த தி.மு. ஜயரத்னவைப் பற்றியும் ஹொரண ரத்னசிறி விக்ரமநாயக்கவைப் பற்றியும் நாங்கள் அறிவோம். அவர்கள் தற்போது உயிருடன் இல்லாவிட்டாலும் அந்த இருவரினதும் புதல்வர்கள் இருவர் தற்போது ரணில் விக்கிரமசிங்கவின்கீழ் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – ஐக்கிய தேசிய கட்சி என அடிபட்டுக்கொண்டாலும் அந்த பிரதமர்கள் இருவரினதும் புதல்வர்கள் இன்று இருப்பது ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் ஆகும்.
அந்த ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் தமக்கு அடிமைச்சேவகம் புரிகின்றவர்களுக்கு அரசாங்க நிறுவனங்களில் பதவிகளைக் கொடுக்க செயலாற்றினார்கள். அந்த நிறுவனங்களில் தேவையான அளவில் பொதுப்பணத்தைக் கொள்ளையடிக்க இடமளித்தார்கள். அந்த பணத்தின் ஒருபகுதியை அந்த அரசியல்வாதிகளின் தேர்தல்களுக்காக மீண்டும் பெற்றுக்கொண்டார்கள். அந்த ஆட்சியாளர்களின்கீழ் பாதிக்கப்பட்ட மக்கள் எந்தவிதமான பேதமுமின்றி வீதியில் இறங்கி அசிங்கமான அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டுமென உரத்த குரலில் கூறினார்கள். போராட்டம் நடத்தினார்கள். அவ்வாறான நிலைமையில் நியமனம்பெற்ற ரணில் விக்கிரமசிங்க இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பார்களென ஒருசிலர் நினைத்தார்கள். எனினும் அவர் சனாதிபதியான இடத்தில் இருந்து அசிங்கமான காடைத்தனமான அரசியலை முன்னெடுத்து வந்துகொண்டிருக்கிறார்கள். தேர்தலை சதிநிறைந்த வகையில் நடத்தாதிருப்பதற்காக ஆணைக்குழுவிலிருந்து பதவிவிலகிய அம்மையாருக்கு வடக்கின் ஆளுனர் பதவி வழங்கப்பட்டது. அவர்கள் தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபட்டது இந்த அசிங்கமான கலாசாரத்தைப் பாதுகாப்பதற்காகவேயொழிய பொதுமக்களுக்கு நன்மை விளைவிப்பதற்காவல்ல. நாடு எவ்வளவு சீரழிந்துள்ளது எனக் கூறுவதாயின் இந்த வனப்புமிகு நாடு பங்களாதேஷின் முன்னிலையில் தோற்கடிக்கப்படுகின்ற நிலைமைக்கு இழுத்துப்போடப்பட்டுள்ளது. இந்த ஆட்சியாளர்களின் வழிப்பறிக்கொள்ளை செயற்பாங்குகள் காரணமாக எமது நாட்டு மக்கள் இன்று உலகத்தார் முன்னிலையில் பிச்சையேந்துகின்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். தமது வீட்டில் இருந்தாலும் வாடகை வீட்டில் இருப்பதுபோன்ற உணர்வு பெரும்பாலானோருக்கு எற்பட்டுள்ளது. எந்த நேரத்தில் தண்ணீரை மின்சாரத்தை துண்டிப்பார்கள் என்ற பிரச்சினையில் சிக்கியுள்ளார்கள். ஆனால் நாமனைவரும் நம்பிக்கையை தளரவிடக்கூடாது. அனைத்து இனத்தவர்களுக்கும் மதத்தவர்களுக்கும் “இலங்கையர்” எனும் பெருமையுடன் செயலாற்றக்கூடிய தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியொன்றை நிறுவுவோம் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.


III International Dilemmas of Humanity Conference – 2023 (மனிதநேயத்தின் சங்கடங்கள் பற்றிய III சர்வதேச மாநாடு) ஒக்டோபர் 14 முதல் 18 வரை தென்னாப்பிரிக்காவின் ஜொஹனஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது. உலகம் பூராகவும் உள்ள அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் ஒன்று சேர்கின்ற இம்மாநாட்டிற்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் அருண் ஹேமச்சந்திர ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தென்னாபிரிக்காவின் ஜொஹனஸ்பர்க் நகரில் […]

III International Dilemmas of Humanity Conference – 2023 (மனிதநேயத்தின் சங்கடங்கள் பற்றிய III சர்வதேச மாநாடு) ஒக்டோபர் 14 முதல் 18 வரை தென்னாப்பிரிக்காவின் ஜொஹனஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது. உலகம் பூராகவும் உள்ள அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் ஒன்று சேர்கின்ற இம்மாநாட்டிற்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் அருண் ஹேமச்சந்திர ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
தென்னாபிரிக்காவின் ஜொஹனஸ்பர்க் நகரில் 70 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 500 உறுப்பினர்கள் இதில் பங்கேற்கின்றனர். முதலாளித்துவ அமைப்புமுறையால் உருவாக்கப்பட்ட நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதற்காக வணிகங்கள், அரசாங்கங்கள் மற்றும் உழைக்கும் மக்கள் கட்டியெழுப்பியுள்ள, கட்டியெழுப்பிக்கொண்டிருக்கும் மற்றும் கட்டியெழுப்ப வேண்டிய தீர்வுகள் பற்றிய விவாதத்திற்கும் கலந்துரையாடலுக்குமான இடமாக இம்மாநாடு காணப்படுகிறது.
பலஸ்தீனிய புரட்சியாளர் லீலா காலித், தென்னாப்பிரிக்க சேரிவாசிகள் இயக்கத்தின் S’bu Zikode, தென்னாப்பிரிக்காவின் Abahlali baseMjondolo, அமெரிக்காவின் Socialism and Liberation கட்சியின் Claudia de la Cruz, கானாவின் சோஷலிச இயக்கத்தின் Kwesi Pratt Jnr. மற்றும் பிரேசிலின் நிலமற்ற கிராமப்புற தொழிலாளர் இயக்கத்தின் (MST) João Pedro Stedile ஆகியோரும் இதில் பங்குபற்றியுள்ளனர்.
வினீ மண்டேலா, நெல்சன் மண்டேலா, ஜோ ஸ்லோவோ போன்ற தென்னாபிரிக்காவின் நிறவெறி எதிர்ப்புப் போராளிகள் மற்றும் நாட்டின் கொடூரமான நிறவெறி சகாப்தத்தின் போது குற்றச்செயல்களுக்கு மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளான ஆயிரக்கணக்கானோர் சிறைப்படுத்தப்பட்ட சிறைச்சாலையாக இருந்த Constitution Hill இல் இந்த ஐந்து நாள் மாநாடு நடைபெறுகிறது. 1996 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அவர்கள் தென்னாப்பிரிக்காவின் புதிய அரசியலமைப்பில் கைச்சாத்திட்டதும் இந்த Constitution Hill இல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மக்கள் மன்றம் மற்றும் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் Stephanie Weatherbee Brito மாநாட்டின் வரலாற்றுத் தன்மையை வலியுறுத்தினார், “நாம் 70 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 120 அமைப்புக்களின் அங்கத்தவர்கள் ஒன்று சேர்த்து மக்கள் அரசாங்கங்களை உருவாக்குதல், அதற்கான சட்டப்பூர்வமான முறை மற்றும் அதை எப்படிச் செய்ய முடியும் என்பதைப் பற்றிப் பேசுவோம். அத்துடன் இந்த மாநாடு தொழிலாள வர்க்க இயக்கங்களால் கட்டமைக்கப்பட்ட செயல்முறையின் ஒரு படியாகும். இது விவாதிப்பதற்காக மட்டுமல்ல, அனைவரும் கண்ணியமாக வாழக்கூடிய எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதற்கும் முயற்சிக்கும்”. என்பதாகக் குறிப்பிட்டார்.



2023.10.16 – ஊடக சந்திப்பு அடுத்த வருடத்தில் தேர்தலொன்று வரமாட்டாதெனும் அபிப்பிராயத்தை சமூகத்தில் உறுதிசெய்ய அரசாங்கம் செயலாற்றி வருகின்றது. இன்னும் இரண்டு வருடங்களுக்கு தேர்தல் வரமாட்டாதென கூறுகின்றது. அவர்களுக்கு வாக்குகள் கிடைக்கமாட்டாதென்பதாலும் தேர்தலைநடாத்தினால் அவர்கள் தோல்வியடைவார்கள் என்பதாலுமே அத்தகைய அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்ப முயற்சிசெய்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் கிடையாது எனக் கூறுவது தோல்வியிலிருந்து விடுபடுவதற்காகவே என்பது உறுதியாகின்றது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மக்கள் அபிப்பிராயத்திற்கு, மக்கள் அபிப்பிராயம் வெளிப்படுவதற்கு பயந்திருக்கின்றது. அதனால் மக்கள் அபிப்பிராயம் வெளிப்படுவதற்குள் அனைத்துவிதமான வழிகளையும் […]

2023.10.16 – ஊடக சந்திப்பு
அடுத்த வருடத்தில் தேர்தலொன்று வரமாட்டாதெனும் அபிப்பிராயத்தை சமூகத்தில் உறுதிசெய்ய அரசாங்கம் செயலாற்றி வருகின்றது. இன்னும் இரண்டு வருடங்களுக்கு தேர்தல் வரமாட்டாதென கூறுகின்றது. அவர்களுக்கு வாக்குகள் கிடைக்கமாட்டாதென்பதாலும் தேர்தலைநடாத்தினால் அவர்கள் தோல்வியடைவார்கள் என்பதாலுமே அத்தகைய அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்ப முயற்சிசெய்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் கிடையாது எனக் கூறுவது தோல்வியிலிருந்து விடுபடுவதற்காகவே என்பது உறுதியாகின்றது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மக்கள் அபிப்பிராயத்திற்கு, மக்கள் அபிப்பிராயம் வெளிப்படுவதற்கு பயந்திருக்கின்றது. அதனால் மக்கள் அபிப்பிராயம் வெளிப்படுவதற்குள் அனைத்துவிதமான வழிகளையும் தடுத்துநிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
ஏன் உள்ளூரதிகாரசபை தேர்தலை நடத்தாதிருக்கப் போகின்றது? உள்ளுரதிகாரசபை தேர்தலை நடாத்தினால் இத்தருணத்தில் நிலவுகின்ற மக்கள் அபிப்பிராயம் வெளிப்படும். அரசாங்கம் மீதான மக்களின் விருப்பத்தின் அளவினைக் கண்டுகொள்ளலாம். தேசிய மக்கள் சக்திக்கு நிச்சயமாக அமோக வெற்றி கிடைக்கும். ரணில் விக்கிரமசிங்காக்கள் தோல்வியடைவார்கள். அதனால் உள்ளூராட்சி தேர்தலை நடத்தாதிருக்கப் போகிறார்கள். அது முற்றிலும் சனநாயக விரோதமான செயலாகும்.
தற்போது அரசாங்கம் தொடரறா (இணையவழி) முறைகளின் பாதுகாப்பு பற்றிய சட்டமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஒன்லயின் சிக்கியுரிட்டி சட்டம். மக்கள் அபிப்பிராயம் வெளிப்படுத்தப்படுவதை தடுக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்படுகின்றது. எமது நாட்டில் மாத்திரமல்ல முழு உலகத்திலும் மக்கள் அபிப்பிராயம் மரபுரீதியான ஊடகங்களுக்கு மட்டுப்படுத்தப்படாமல் சமூக வலைத்தளங்கள் மூலமாக இடம்பெறுகின்றது. அதனை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்துவது கடினமாகும். அதன் மூலமாக அரசாங்கத்திற்கு எதிரான அபிப்பிராயங்கள், அரசாங்கத்தின் உண்மைகள் வெளிப்படுகின்ற அபிப்பிராயங்கள், எதிர்க்கட்சியின் அபிப்பிராயங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. கடந்த காலத்தில் பிரதான ஊடகங்கள் அரசாங்கத்திற்காக இயலுமானவரை பொய்களைக் கூறிவந்தன. மலட்டுக் கதைகள், மலட்டு மருத்துவர்கள் ஊடகங்கள் வாயிலாக உருவாக்கப்பட்டன. பின்னர் அவை பொய்யானவை என்பது அம்பலமாகியது. அது பற்றிய விசரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. மக்களுகக்கிடையில் பகைமையை பரவச்செய்வித்ததும் பிரதான ஊடகமாகும். சமூக வலைத்தளங்கள் ஊடாக இவை கேள்விக்குட்படுத்தப்பட்டவேளையில் அரசாங்கத்தின் நிர்வாணம் வெளிப்படுகையில் அது அரசாங்கத்திற்கு பாதகமானதாக அமைகையில் சமூக வலைத்தளங்களை தடுக்க அரசாங்கம் முயற்சி செய்கின்றது. இந்த சமூக வலைத்தளங்கள் ஊடாக பொய்யான செய்திகள் வெளியியிடப்படுகின்றன. தவறான கருத்துக்கள் சமூகமயப்படுத்தப்படுகின்றன தான். ஆனால் அரசாங்கம் செய்யப்போவது அதனைத் தடுப்பதையல்ல. அதனை காரணமாக வைத்துக்கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான அபிப்பிராயங்களை தடுக்கவே முயற்சி செய்கின்றது.
கடந்த காலத்தில் சம்பளம் செலுத்தி பல போலியான கணக்குகளைத் தயாரித்து தவறான அபிப்பிராயங்களை சமூகமயப்படுத்தியது அரசாங்கத்தின் குழுக்களாகும். மகிந்த ராஜபக்ஷாக்களின் ஒரு குழு இந்த போலியான கணக்குகளைப் பாவித்து தவறான கருத்துக்களை சமூகமயப்படுத்தியது. ஏற்கெனவே ஒரு குழு சம்பளம் பெற்று பொய்கூறி வருகின்றது. உண்மையான பொதுமக்கள் அபிப்பிராயம் சமூகமயமாவதைக் காண அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால் ஒன்லயின் சிக்கியூரிட்டி பில்லைக் கொண்டுவந்து மக்கள் அபிப்பிராயம் வெளிபடுத்தப்படுவதை தடுக்க முயற்சி செய்கிறார்கள்.
அதைப்போலவே புதிய பயங்கரவாத சட்டமொன்றையும் தயாரித்து வருகிறார்கள். அரசாங்கம் மீதான எதிர்ப்பினை தடுப்பதற்காகவே அதனைக் கொண்டுவர முயற்சிசெய்கிறார்கள். மக்கள் அபிப்பிராயம் சனநாயகரீதியாக நடுத்தெருவில் ஆர்ப்பாட்ட அழுத்தங்கள் மூலமாக வெளிப்படுவதைத் தடுக்கவே பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவர முயற்சி செய்யப்படுகின்றது. அந்த சட்டம் கொண்டுவரப்பட்டால் எதையாவது செய்யமாறு அல்லது செய்யாதிருக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவது பயங்கரவாத செயலாக மாற்றப்படும். இந்த அரசாங்கம் மக்களைக்கண்டு அஞ்சுகின்றது, மக்கள் அபிப்பிராயத்திற்கு அஞ்சுகின்றது. அவர்களால் மக்களை வென்றெடுக்க முடியாது. 75 வருடகால இந்த அரசாங்கங்களின் அழிவுமிக்க அனுபவங்களை பெற்றுள்ள மக்கள் தற்போது இந்த நாட்டை ஆட்சிசெய்த சக்திகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு மாற்று அரசியல் இயக்கங்களுடன் ஒன்றிணையத் தொடங்கி உள்ளார்கள். அதனால்த்தான் வருங்காலத்தில் நடாத்தப்படவேண்டிய சனாதிபதி தேர்தலை நடத்தப்போவதில்லை எனும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். சனாதிபதி தேர்தலை நடாத்துவதற்குப் பதிலாக அரசியலமைப்பொன்று மூலமாக அல்லது அரசியலமைப்புத் திருத்தம் மூலமாக நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக தற்போது அவர்கள் கூறிவருகிறார்கள். அப்போது அந்த நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்திடம் கையளிக்கப்படும். நிறைவேற்று முறையை ஒழித்தவிடத்து சனாதிபதி தேர்தலொன்றை நடாத்தவேண்டிய அவசியம் தோன்றமாட்டாது. தத்துவங்களை பாராளுமன்றத்திடம் கையளிப்பதன் மூலமாக அந்த தத்துவங்கள் 2025 வரை வலுவில் இருக்கும். அதனால் மேலும் 2 வருடங்களுக்கு தேர்தல் கிடையாது என பிரச்சாரம்செய்து வருகிறார்கள். அது அவ்வாறு நடைபெற மாட்டாதென நாங்கள் நினைக்கிறோம்.
நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழிக்கின்ற போராட்டம் நிறைவேற்று சனாதிபதி முறையின் தொடக்கத்திலிருந்தே சமூகத்தில் நிலவுகின்றது. நாங்கள் மக்கள் விடுதலை முன்னணி என்றவகையிலும் நாமனைவரும் சனநாயக விரோதமான சர்வாதிகாரியொருவரை உருவாக்குகின்ற நிறைவேற்று சனாதிபதி முறைக்கு எதிராக தோற்றினோம். எமது நாட்டை ஆட்சிசெய்த அரசியல் கட்சிகளும் மக்களை ஏமாற்றுவதற்காக நிறைவேற்று சனாதிபதி முறையை ஓழிக்க உடன்பட்ட தருணங்கள் தாராளமாக இருந்தன. 1994 இல் திருமதி சந்திரிக்கா குமாரதுங்க 1995 யூலை 15 ஆந் திகதிக்கு முன்னராக நிறைவேற்ற முறையை ஒழித்துக்கட்டுவதாக வாக்குறுதி அளித்தார். எனினும் செய்யவில்லை. ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ஷ வாக்குறுதி அளித்தார்கள். அவர்கள் அனைவருமே தமது கைகளில் அதிகாரம் இல்லாத தருணத்தில் நிறைவேற்று முறையை ஒழித்துக்கட்டுவதாக வாக்குறுதி அளித்தார்கள். அதிகாரம் கிடைத்ததும் ஒழித்துக் கட்டாமல் அதிகாரத்தை அதிகரித்துக் கொள்வதையே புரிந்தார்கள். 2002 நன்னடத்தை அரசாங்க காலத்தில் நாங்கள் இடையீடுசெய்து நிறைவேற்று அதிகாரங்களைக் குறைக்கின்ற 17 வது திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டோம். மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் 18 வது திருத்தத்தைக் கொண்டுவந்து மீண்டும் நிறைவேற்று சனாதிபதி அதிகாரத்தை அதிகரித்துக் கொண்டார். முந்திய அரசியலமைப்பில் சனாதிபதி தேர்தலில் போட்டியிட ஒருவருக்கு இரண்டு தடவைகள் மாத்திரம் இருந்த சந்தர்ப்பத்தை 18 வது திருத்தத்தைக் கொண்டுவந்து எந்தவொரு நேரத்திலும் போட்டியிடுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டார். மீண்டும் நாங்கள் 19 வது திருத்தத்தைக் கொண்டுவந்து சனாதிபதி தத்துவங்களை ஓரளவுக்கு குறைத்துக்கொண்டோம். கோட்டாபய ராஜபக்ஷ வந்த பின்னர் 20 வது திருத்தத்தைக் கொண்டுவந்து அந்த தத்துவங்களை மீண்டும் பெற்றுக்கொண்டார். மகிந்த ராஜபக்ஷாக்கள் அதிகாரம் கிடைத்த எல்லாச் சந்தர்ப்பத்திலும் நிறைவேற்றுத் தத்துவங்களைக் குறைப்பதற்காகவல்ல, அந்த தத்துவங்களை அதிகரித்துக் கொள்வதற்காகவே செயலாற்றியிருக்கிறார்கள். அவ்விதமாக செயலாற்றிய ராஜபக்ஷாக்கள் திடீரென இந்த தத்துவங்களை இல்லாதொழிக்க ஏன் நடவடிக்கை எடுக்கிறார்கள்? அடுத்த சனாதிபதி தேர்தலில் அவர்கள் பிணைப்பணமுமின்றி தோல்வியடைவார்கள். சனாதிபதி தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு வேட்பாளர்கூட கிடையாது. அதனால் சனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளாமல் நழுவிச்செல்ல வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அரசியமைப்பின்படி தேர்தலை பிற்போட முடியாது. அதனால் நிறைவேற்றுத் தத்துவங்களை ஒழித்துக்கட்டி பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை கையகப்படுத்திக்கொண்டு பாராளுமன்றம் மூலமாக ஆட்சிசெய்வதை தெரிவுசெய்வதாக கூறுகிறார்கள். நிறைவேற்றுத் தத்துவங்களை ஒழித்துக்கட்டுவதற்காக கட்டாயமாக மக்கள் தீர்ப்பிற்கு செல்லவேண்டி நேரிடும். அந்த மக்கள் தீர்ப்பின்போது அதற்கு ஆதரவு வழங்கவேண்டி எம்மனைவருக்கும் நேரிடும்.
நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழித்தலுடன் நாங்கள் இணங்குகிறோம். அரசியலமைப்புத் திருத்தமல்ல புதிய அரசியலமைப்பினை ஆக்கவேண்டி நேரிடும். நிறைவேற்று முறைமையுடன் பின்னிப்பிணைந்த பல பிரச்சினைகள் இருக்கின்றன. புதிய அரசியலமைப்பொன்றினைக் கொண்டு வந்தாலும், நிறைவேற்றதிகாரம் இந்த பாராளுமன்றத்திடமே கையளிக்கப்படும், இந்த அமைச்சரவையிடமே, இதே பிரதமரிடமெனில் அதற்கு இந்நாட்டு மக்கள் இணங்கமாட்டார்கள். இந்த அரசாங்கம் பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசாங்கமாகும். இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிடையாது. தற்போது இருப்பது மக்களுக்கு எதிரான அரசாங்கமே. அத்தகைய பாராளுமன்றத்திற்கு சனாதிபதியின் நிறைவேற்றதிகாரம் கையளிக்கப்படுவது எவ்விதத்திலும் நியாயமானதல்ல. அது மக்கள் விருப்பத்திற்கு எதிரானது. நாங்கள் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் வலியுறுத்திக் கூறுவது நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழிப்பதற்கான திருத்தமொன்றைக் கொண்டுவந்தாலும் அந்த திருத்தம் நிறைவேற்றப்படும்போதே இந்த பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான பிரேரணையொன்றும் இருக்கவேண்டும். அத்துடன் மக்களின் வாக்குகளால் புதியதொரு பாராளுமன்றம் கட்டியெழுப்பப்படல் வேண்டும். இந்த மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் ஆணையைக்கொண்ட பாராளுமன்றத்திடம்தான் நிறைவேற்றதிகாரத்தை கையளிப்பதற்கான தேவை நிலவுகின்றது. நிறைவேற்று சனாதிபதியொருவர் இருக்கின்ற வேளையில்தான் இந்த பாராளுமன்றம் தெரிவுசெய்யப்படுகின்றது. இந்த பாராளுமன்றத்திற்காக வழங்கப்பட்டுள்ள வாக்குகள் ஒரு நிறைவேற்றத்திகாரம்கொண்ட பாராளுமன்றத்திற்கானதல்ல. இந்த பாராளுமன்றத்திற்கு நிறைவேற்றதிகாரம் கையளிக்கப்படுமாயின் இந்த பாராளுமன்றம் அந்த புரிந்துணர்வுடன் மக்காளல் நியமிக்கப்படுகின்ற பாராளுமன்றமாக அமைதல் வேண்டும்.
ரணில் – ராஜபக்ஷாக்கள் அரசியலமைப்பு முடிச்சியொன்றைப் போட்டு, சனாதிபதி தேர்தலை நடத்தாமல், இந்த ஊழல்மிக்க, மக்கள் ஆணையற்ற பாராளுமன்றத்திற்கு தத்துவங்களை கையகப்படுத்திக்கொண்டு மேலும் இரண்டு வருடங்களுக்கு பேணிவர முயற்சி செய்வார்களாயின் அது ஒருபோதுமே இடம்பெற மாட்டாது. இந்த பாராளுமன்றம் ஒழிக்கப்படல் வேண்டும். அவ்வாறு இடம்பெறாமல் கொண்டுவரப்படுகின்ற மக்கள் தீர்ப்பிற்கு நாங்கள் உதவமாட்டோம். அவ்வாறு நேர்ந்தாலும் அது வெற்றியடையமாட்டாது. இல்லாவிட்டால் மக்கள் தீர்ப்பில் தோல்வியடைந்து தேர்தலுக்குச் செல்லவேண்டியநிலை அரசாங்கத்திற்கு ஏற்படும். அரசாங்கம் இரண்டு வழிமுறைகளையே தெரிவுசெய்ய வேண்டும். ஒன்று சனாதிபதி தேர்தலை நடாத்துதல்: சனாதிபதி தேர்தல் இல்லாவிட்டால் அடுத்த ஆண்டில் பொதுத்தேர்தல் நடாத்தப்படல் வேண்டும். அவ்வாறு இடம்பெறாமல் மக்கள் ஆணையற்ற பாராளுமன்றத்திற்கு தத்துவங்கைளை கையகப்படுத்திக்கொண்டு செல்கின்ற பயணத்திற்கு நாங்கள் ஒருபோதுமே இடமளிக்க மாட்டோம். அடுத்த ஆண்டில் தேர்தலொன்று கிடையாது என அரசாங்கத்தின் பெரியவர்கள் கூறுகின்ற அபிப்பிராயத்திற்கு ஏமாறவேண்டாமென நாங்கள் மக்களிடம் கூறுகிறோம். அடுத்த ஆண்டில் கட்டாயமாக தேர்தலொன்று வரும், முறைப்படி சனாதிபதி தேர்தல் வரும். ஏதேனும் விதத்தில் சனாதிபதி முறை ஒழிக்கப்படுமாயின் மக்கள் தீர்ப்பில் வெற்றிபெற வேண்டும். பொதுத்தேர்தலை நடாத்துகின்ற நிபந்தனையைக் கொண்டதாகவே மக்கள் தீர்ப்பில் வெற்றிபெற வேண்டும். பொதுத்தேர்தலுக்கு செல்வதன்மூலமாக தாம் விரும்புகின்ற அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்வதற்கான இயலுமை பொதுமக்களுக்கு கிடைக்கின்றது. அந்த அரசாங்கத்திற்கு நிறைவேற்றுத் தத்துவங்கள் கையளிக்கப்பட்ட அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்வதற்கான இயலுமை கிடைக்கின்றது. அந்த அரசாங்கத்திற்கு நாட்டை மாற்றிமைத்து முன்நோக்கி நகரமுடியும்.
மக்கள் ஆணையுடன் விளையாட வேண்டாமென நாங்கள் ஆட்சியாளர்களிடம் கூறுகிறோம். உள்ளூரதிகார சபைகள் தேர்தல் பிற்போடப்பட்டது, மாகாண சபை தேர்தலை நடத்தாமல் இருக்கிறார்கள். அவ்விதமாக இந்த தேர்தலையும் பிற்போட முடியுமென மக்கள் நினைக்கக்கூடும். எனினும் அவ்வாறு செய்யமுடியாது. உள்ளூராட்சி தேர்தலை நடத்தாமல் அந்த நிறுவனங்களை பேணிவருவதற்கான இயலுமையைக்கொண்ட ஏற்பாடுகள் அந்த யாப்புவிதிகளில் இருக்கின்றன. அது விசேட ஆணையாளர்களை நியமிப்பதன் மூலமாகும். மாகாண சபைகள் தேர்தலை நடாத்தாமல் மாகாண சபைகளை பேணிவருவதற்கான ஏற்பாடுகள் யாப்புவிதிகளில் இருக்கின்றன. எனினும் பாராளுமன்றத்திற்கு அத்தகைய ஒன்று கிடையாது. சனாதிபதிக்கு அத்தகைய ஒன்று கிடையாது. சனாதிபதி தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் நடாத்தப்பட்டே ஆகவேண்டும். அவர்களால் செய்யக்கூடிய ஒரேயொரு விடயம்தான் நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழித்துக்கட்டி சனாதிபதி தேர்தலை தவிர்த்துச் செல்வது. மக்களின் விருப்பத்துடனேயே அதனை சாதிக்கவேண்டும். அடுத்த ஆண்டில் கட்டாயமாக தேர்தலொன்று நடாத்தப்படல் வேண்டும். மேலும் பத்து மாத காலம் மாத்திரமே இந்த அரசாங்கத்திற்கு ஆயுள் இருக்கின்றது. சனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் கட்டாயமாக தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் வெற்றிபெறுவோம். அந்த வெற்றியுடன் நாங்கள் இந்த பாராளுமன்றத்தை வைத்துக்கொள்ள மாட்டோம். தேர்தலொன்று இருக்கின்றது. அரசியல் சதிகள் மூலமாக சட்டத்திற்கு முரணாக, மக்களுக்கு எதிரான ஆட்சியதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான இயலுமை கிடையாது. ஆட்சியாளர்கள் பரப்புகின்ற அபிப்பிராங்களுக்கு பதற்றமடைய வேண்டாம். நீங்கள் ஊக்கத்துடன் வேலைசெய்யுங்கள். நீங்கள் ஒழுங்கமையுங்கள். இந்த கொடிய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருகின்ற ஆண்டாக அடுத்த ஆண்டு அமையுமென்பதை நாங்கள் உங்களிடம் உறுதியாக கூறுகிறோம்.
சிவிலியன்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்துவதற்காக உலக சமூகம் இருதரப்பினருக்கும் அழுத்தம்கொடுக்கவேண்டும்.
மேலதிக விடயமென்ற வகையில் இஸ்ரவேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் மோதலொன்று நடைபெறுகின்றது. இது சம்பந்தமாக சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள், அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுகின்றன. நாங்கள் இதில் காண்கின்ற முக்கியமான விடயம்தான் இந்த மோதல் காரணமாக இருநாட்டினதும் நிராயுதபாணிகளான அப்பாவிக் குடிமக்கள், சிறுவர்கள், பெண்கள் பெருமளவில் சிரமங்களுக்குள்ளாகி இருக்கிறார்கள். ஏற்கெனவே இருதரப்பிலும் பெருந்தொகையான சிவிலியன்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். பெற்றோர்களை இழந்து பிள்ளைகள் திசைமாறி இடம்பெயர்ந்துள்ளார்கள். பெண்களுக்கு பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இலட்சக்கணக்கான மக்கள் இருப்பிடங்களை இழந்து தமது சொந்த ஊர்களை கைவிட்டுச் செல்லவேண்டியநிலை உருவாகி உள்ளது. இது ஒரு மனிதப் பேரவலம். இந்த இருதரப்பிலும் புரியப்படுகின்ற படுகொலைகள் நிறுத்தப்படவேண்டுமென நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இருதரப்பிலும் நிராயுதபாணிகளான சிவிலியன்களை இலக்காகக்கொண்டு புரியப்படுகின்ற படுகொலைகள் நிறுத்தப்படல் வேண்டும். இந்த படுகொலைகளை நிறுத்துவதற்காக உலக சமுதாயம் இருதரப்பினருக்கும் அழுத்தம் கொடுக்கவேண்டும். அத்தருணத்தில் யார் சரி? யார் பிழை? என தெரிவுசெய்ய வேண்டியதில்லை. இங்கு மனிதப்பேரவலமே நிலவுகின்றது. சிறுவர் தலைமுறையினர் நிர்க்கதி நிலையுற்று இருக்கிறார்கள். அதனால் மோதல்களை நிறுத்துங்கள். நிராயுதபாணிகளான சிவிலியன்களை இலக்காகக்கொண்ட தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டுமென நாங்கள் நம்புகிறோம்.
இந்த முரண்பாட்டுக்கு நீண்ட வரலாறு இருக்கின்றது. 1947 இன் பின்னரே இந்த பிரச்சினை தொடங்குகின்றது. அதில் பாரியளவிலான சிக்கல்கள் நிலவினாலும் இத்தருணத்தில் அதைப்பற்றி பேசுவதை செய்யவேண்டியதில்லை. இந்த முரண்பாடு உருவாகிய நேரத்தில் ஐக்கிய நாடுகளின் இடையீட்டின் பேரில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டு திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை அரச எண்ணக்கரு என அழைப்பார்கள். “இரண்டு நாடுகளையும் இரண்டு நாடுகளாக ஏற்றுக்கொள்க” எனும் எண்ணக்கருவாகும். ஐக்கிய நாடுகளின் திட்டத்தின்படி சுதந்திரமான பாலஸ்தீனமொன்றும் சுதந்திரமான ஈஸ்ரவேலும் எற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளையும் உறுதிநிலைக்கு கொண்டுவருவதுதான் ஐக்கிய நாடுகளின் நோக்கமாக அமைந்தது. இற்றைவரை ஐக்கிய நாடுகளின் மேற்படி பிரேரணைக்கிணங்க செயலாற்றப்படவில்லை. அதனை அமுலாக்குதல் தோல்விகண்டுள்ளது. இது தான் இந்த சிக்கலுக்கான பிரதான காரணம். ஐக்கிய நாடுகள் தாபனம் போன்ற அமைப்பொன்று கொண்டுவந்த பிரேரணையை அமுலாக்க இயலாமல் போயுள்ளதே இந்த பேரழிவிற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் இடையீடு காரணமாகவே அதனை அமுலாக்க முடியாமல் போயுள்ளது. அவர்கள் தமது ஏகாதிபத்திய நோக்கங்களுக்காக பிராந்தியத்தில் அதிகாரச் சமநிலையை உருவாக்கிக்கொள்ள முயற்சிசெய்து வருகிறார்கள். அதனால் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆரம்பத்தில் நிறைவேற்றிக்கொண்ட இரட்டை அரச எண்ணக்கருவினை அமுலாக்குவதே இந்த சிக்கலுக்கான தீர்வாகும். சுயாதீனமான சுதந்திரமான இஸ்ரவேலையும் சுயாதீனமான சுதந்திரமான பாலஸ்தீனத்தையும் ஏற்றுக்கொள்வதாகும். அந்த கொள்கையின் அடிப்படையில் செயலாற்றுவதன் மூலமாக இந்த முரண்பாட்டினைத் தீர்த்துக்கொண்டு இரண்டு நாடுகளுக்கும் நிலவுவதற்கான இயலுமை ஏற்படும். உலக வல்லரசுகளின் பொறுப்பாக அமைவதும் ஐக்கிய நாடுகளின் பிரேரணைக்கமைவாக செயலாற்றுவதாகும். சிவிலியன்கள் படுகொலை செய்யப்படுகின்ற, சிறுவர்கள், பெண்கள் பாதிக்கப்படுகின்ற, சிறுவர்கள் அநாதைகளாக மாறுகின்ற இந்த மோதலை நிறுத்திக்கொள்ள வேண்டுமென நாங்கள் மீண்டும் உலக சமூகத்திடமும் அனைத்துத் தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
“அதிகரித்து வருகின்ற பொருளாதார அழுத்தம் காரணமாக குடும்பத்திலும் வேலைத்தலத்திலும் சமூக உறவுகள் சிதைவடைந்து வருகின்றன” –தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய–

தற்போது நிலவுகின்ற சமூக நெருக்கடி பற்றிப் பேசுகையில் நிலவுகின்ற நெருக்கடி மற்றும் அதற்காக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றியே பெரும்பாலானோரின் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. அதற்கு இணையானதாகவே மிகவும் பலம்பொருந்தியதாக எமது பொருளாதாரம் சம்பந்தமாக சமூகத்தின் சீரழிவையும் சமூகத்தின் பாதுகாப்பற்றதன்மையையும் எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது. இங்கு விசேடமாக நாங்கள் மேலோங்கச் செய்விக்கவேண்டியது பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிராக வளர்ந்துவருகின்ற வன்முறையாகும். தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற பொருளாதார அழுத்தம் காரணமாக குடும்பங்களுக்குள்ளேயும் வேலைசெய்கின்ற இடங்களிலும் பாதுகாக்கப்படவேண்டிய சமூக உறவுகள் அனைத்திற்கும் அழுத்தமேற்பட்டு வருவதை எம்மால் காணக்கூடியதாக உள்ளது. இதனால் சமூக உறவுகள் சீரழிந்து மரபுரீதியாக நிலவவேண்டிய அனைத்துக் கடப்பாடுகளும் பலவீனமடைந்து வருகின்றன. இதன்விளைவாக சமூகத்தில் பலவீனமானவர்கள் என அழைக்கப்படுகின்ற அதிகாரம் குறைந்த குழுக்களுக்கு வன்முறைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அது நாளுக்குநாள் வளர்ந்து வருகின்றது. குறிப்பாக பெண்களுக்கு, பிள்ளைகளுக்கு மற்றும் மூத்த பிரசைகளுக்கும் இந்த பிரச்சினையை எதிர்கொள்ளவேண்டி நேர்ந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்துப் பகுதிகளையும் அழித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. இது சம்பந்தமாக எந்தவிதமான கூருணர்வோ இரக்கமோ தயவோ இந்த அரசாங்கத்திடம் கிடையாது. அதனைக் குடும்பங்கள் என்றவகையிலும் தனிமனிதர்கள் என்றவகையிலுமே தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. நெருக்கடிக்கு இலக்காகிய சமூகத்தினாலேயே அதற்கான தீர்வுகளைக் கண்டறிய அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. அதற்காக இயங்கவேண்டிய நிறுவனங்களான பொலீஸ், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை திணைக்களம், மகளிர் அமைச்சு அல்லது இதில் எந்தவொரு நிறுவனமாக அமையக்கூடும். இந்த நிறுவனங்களும் கடுமையான அழுத்தங்களுக்கு இலக்காகி உள்ளன. இத்தகைய பிரச்சினைகளில் இடையீடு செய்ய அவசியமான வளங்கள், தொழில்நுட்ப வளங்கள், மனித வளங்களை இழந்து இந்த நிறுவனங்கள் மேலும்மேலும் பலவீனமடைந்துள்ளன. இவை திடீரென தோன்றியவை அல்ல. நீண்டகாலமாக சமூகப் பாதுகாப்பு முறைமையை நாசமாக்கிய ஆட்சியாளர்களின் ஆற்றாமை காரணமாக தற்போது இவை பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ளன. கடந்த வாரத்தில் தேசிய மக்கள் சக்தி மூத்த பிரசைகளின் ஒன்றியத்தை சந்தித்தது. அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எமது கவனத்திற்கு கொண்டுவந்தார்கள். ஓய்வுபெற்றவர்களுடன் கலந்துரையாடினோம். 1997 இல் இருந்து நிலவிவருகின்ற பிரச்சினைகள் காரணமாக அவர்கள் மிகுந்த நிர்க்கதி அடைந்துள்ளார்கள். எவ்விதத்திலும் அதிகரிக்காத ஓய்வூதியம் மற்றும் கிடைக்கவேண்டிய சம்பளம் உரிய நேரத்தில் கிடைக்காமை காரணமாக தோன்றிய பிரச்சினைகளால் அவர்கள் மிகுந்த அழுத்தங்களுக்கு இலக்காகி உள்ளார்கள். மூத்த பிரசைகள் பாரியளவிலான சுகாதார சிக்கல்களை எதிர்நோக்கி வருகிறார்கள். மருந்து தட்டுப்பாடும் சுகாதாரத் துறையிலான சீரழிவும் அவர்கள் எதிர்நோக்குகின்ற பாரதூரமான பிரச்சினைகளாக மாறியுள்ளன.
அவர்கள் எடுத்துள்ள கடன்களின் வட்டி அதிகரித்துள்ளமையும் மற்றுமொரு நெருக்கடியை உருவாக்கி உள்ளது. இவர்கள் பிள்ளைகளுக்கு சுமையில்லாமல் வாழக்கூடிய நிலையிலுள்ள பிரிவினராவர். ஆனால் தற்போது இவர்களின் சுமையையும் பிள்ளைகளே சுமக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. அதன் மூலமாக குடும்பங்களிலும் மேலும் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. அரசாங்கம் வருங்காலத்தில் சமர்ப்பிக்கின்ற வரவுசெலவுத் திட்டம் ஊடாகவும் இதற்கான தீர்வு கிடைக்குமென நம்ப இயலாது. வரவுசெலவு சமர்ப்பிக்கப்படுகின்ற இத்தருணத்தில் மூத்த பிரசைகளின் இந்த பிரச்சினைகளுக்கும் தீர்வுதேட வேண்டுமென்பதை நாங்கள் அரசாங்கத்திற்கு ஞாபகப்படுத்துகிறோம்.
இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன்னர் பொருந்தொட்டச் செய்கைக்காக, வீதிகளை நிர்மாணித்தல் ஆகிய பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தின் வரலாறு பற்றிப் பேசவே நாங்கள் இங்கு குழுமியுள்ளோம். அந்த வரலாறே கவலைக்கிடமானது. அதைப்போலவே இது எமது நாட்டில் இடம்பெற்றுள்ள ஒரு வரலாற்றுத் தவறாகும். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் அந்த தவறினை ஒழித்துக்கட்டுவோம். அதுமாத்திரமல்ல தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் அந்த வரலாற்றுத் தவறினை சரிசெய்வோமென சபதம் செய்கிறோம். இன்று இந்த ஹற்றன் பிரகடனத்திற்கு அவசியமாகின்ற […]

இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன்னர் பொருந்தொட்டச் செய்கைக்காக, வீதிகளை நிர்மாணித்தல் ஆகிய பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தின் வரலாறு பற்றிப் பேசவே நாங்கள் இங்கு குழுமியுள்ளோம். அந்த வரலாறே கவலைக்கிடமானது. அதைப்போலவே இது எமது நாட்டில் இடம்பெற்றுள்ள ஒரு வரலாற்றுத் தவறாகும். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் அந்த தவறினை ஒழித்துக்கட்டுவோம். அதுமாத்திரமல்ல தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் அந்த வரலாற்றுத் தவறினை சரிசெய்வோமென சபதம் செய்கிறோம். இன்று இந்த ஹற்றன் பிரகடனத்திற்கு அவசியமாகின்ற அடிப்படை வழிகாட்டலை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
இந்த பிரகடனத்தைச் செய்வதற்காக ஏன் இந்த ஹற்றன் நகரம் தெரிவுசெய்யப்பட்டது? தமிழ் சமுதாயம் அதிகமாக வசிக்கின்ற மலையகப் பிரதேசம் என்பதாலா? இல்லை. 1964 சிறிமா – சாஸ்திரி உடன்படிக்கைக்குப் பின்னர் இந்தப் பிரதேசத்தில் வசித்த பெருந்தொகையான தமிழ் மக்கள் இந்தியாவிற்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அந்த தமிழ் மக்கள் இந்த ஹற்றன் புகையிரத நிலையத்தில் புகையிரதத்தில் ஏற்றப்பட்டுதான் தலைமன்னாருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள். அந்நாட்களில் இந்த ஹற்றன் நகரமும் புகையிரத நிலையமும் கண்ணீரால் நனைந்தது. வேதனையால் அழுது புலம்பினார்கள். அது பற்றி ஒரு தமிழ் இலக்கியவாதியான தெளிவத்தை ஜோசப் அவருடைய “பாலை” எனும் நூலில் பின்வருமாறு கூறுகிறார். “மீண்டும் தாயகத்திற்கு வருதல்” என ஒருசிலர் குறிப்பிட்டதை மறுத்து இங்குள்ள பெரும்பாலானோர் கூறுவதைப்போல் “பலவந்தமாக” மலையக மக்கள் நாடு கடத்தப்பட்டார்கள் என நான் கூறுகிறேன்: இந்தயாவிற்கு செல்ல மறுத்து ஆங்காங்கே மறைந்திருந்த மக்களை பொலீஸாரை ஈடுபடுத்தி பிடித்து, வாகனங்களில் ஏற்றி, மன்னாருக்கு கொண்டுவந்து இந்தியாவிற்கு அனுப்பிவைத்த விதத்திற்கு வேறுவிதமாக பொருள்விளக்கம் கொடுக்க முடியுமா?” அவர் கூறுகின்ற விதத்தில் அது வேறொன்றுமல்ல, பலவந்தமாக ஏற்றி அனுப்புவதாகும். அவ்வேளையில் 150 வருடங்கள் வரை கழிந்திருந்தது. மூன்று நான்கு தலைமுறைகளால் புதிதாகிவிட்டது. ஆனால் “நீங்கள் இங்கு பிரஜைகள் அல்ல நீங்கள் இந்தியாவிற்குச் செல்லவேண்டும்” என அந்த மக்களுக்கு சட்டத்தினால் கூறப்படுகின்றது. அவர்கள் இந்தியாவுடன் இல்லை. இந்த பரம்பரை இந்தியாவுடன் வாழவில்லை. பொருளாதாரரீதியாக இந்தியாவிற்கு பங்களிப்பு வழங்கவில்லை. பிறந்தது இந்த பெருநிலத்திலேயே. இறந்ததும் இந்த மண்ணிலேயே. புதைக்கப்பட்டதும் வளம்பெறவைத்ததும் இந்த மண்ணிலேயே. இந்த நாட்டின் பொருளாதரத்திற்கே பங்களித்தார்கள். ஆனால் சட்டம் கூறியது, நீங்கள் இந்தியாவிற்குச் செல்லவேண்டுமென. அதோ அந்த ஹற்றன் நகரத்தில் இருந்துதான் நாங்கள் இன்று பேசுகிறோம்.
வரலாற்றில் இருந்த பேரவலம் அது மாத்திரமா? இல்லை. பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் எம்மைப்போல் இந்தியாவையும் குடியேற்ற நாட்டாக்கி் இருந்தார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். 1800 – 1900 யுகம் என்பது இந்திய கமக்காரர்களின் அறுவடையை அபகரித்தமையாலும் கடுமையான வறட்சிநிலை காரணமாகவும் பாரிய பஞ்சம் ஏற்பட்ட யுகமாகும். 1800 – 1900 யுகத்தில் பஞ்சம் காரணமாக இரண்டுகோடியே பதினான்கு இலட்சம் பேர் இறந்ததாக ஒருசில அறிக்கைகள் கூறுகின்றன. அது உங்களின் மூதாதையர்களே. அதுமாத்திரமல்ல பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் இலங்கையில் போன்றே மிகையான வரி விதிப்பினை மேற்கொண்டார்கள். அதனால் மக்கள்மீது பாரிய அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. வரி செலுத்தாமை காரணமாக பாரிய சித்திரவதைகளுக்கு இலக்காகினார்கள். மேற்படி சித்திரவதைகள் பற்றி விசாரிப்பதற்காக மெட்ராஸில் சித்திரவதை ஆணைக்குழுவொன்றை நியமிக்கவேண்டியநிலை பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு ஏற்பட்டது. அந்த அறிக்கைகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ” ஜுன் மாதத்தில் இருந்து ஆகஸ்ற் மாதம்வரை வரித்தொகையைச் செலுத்துமாறு வருமானக் கட்டுப்பாட்டு அதிகாரி எம்மைக் கடுமையாக நிர்ப்பந்தித்தார். இந்த விடயத்தை அடிப்படையாகக்கொண்டு அவர்கள் என்னையும் மேலும் சிலரையும் பிடித்துக்கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் நிறுத்தி வைத்தார்கள். எமது முதுகினை வளைத்து வைத்து வெப்பமடைந்த கற்பாறையை முதுகின்மீது வைத்து முடிச்சுப்போட்டு நாள்முழுவதிலும் சூடான மணல்மீது இருக்க வைத்தார்கள். தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் இவ்வாறு சித்திரவதை புரிந்தார்கள்…” அது இந்தியாவில் அல்லற்பட்ட மூதாதையர்கள்.
அந்த சுற்றாடல் இதைவிட நல்லதோர் இடத்தை தெரிவுசெய்யுமாறு அவர்களை நிர்ப்பந்தித்தது. மறுபுறத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் அவர்களில் பெரும்பாலானோரை பல்வேறு நாடுகளுக்கு உழைப்பாளிகளாக கொண்டுசென்றார்கள். இவ்விதமாக இலங்கையில் வீதிகளை நிர்மாணிக்கவும், கோப்பிச் செய்கையை ஆரம்பிக்கவும் பெருந்தொகையான உழைப்பாளிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர். தனுஷ்கோடி துறைமுகத்தில் இவர்களை கப்பலேற்றி மன்னார் துறைமுகத்தில் தரையிறக்கினார்கள். கடலில் புயலில் சிக்குண்டு பெருந்தொகையானோர் இறந்துவிட்டதாக ஒருசில அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இறந்தவர்களின் சடலங்கள் கடலிலேயே வீசியெறியப்பட்டன. அவர்கள் மன்னாரிலிருந்து, மதவாச்சி, தம்புள்ள. மாத்தளை வரை நடந்தே வந்தார்கள். பின்னர் மலைமுகடுகளில் ஏறி இந்த பிரதேசத்திற்கு வந்தார்கள். இக்காலத்தில் இலங்கையில் 3000 அடிகளுக்கு மேற்பட்ட எந்தவொரு பிரதேசமும் குடியிருப்பு மயமாக்கப்பட்டிருக்கவில்லை. மனித வசிப்பிடங்கள் நிலவவில்லை. டயகம, ஹற்றன், தலவாகலை, றாகல இவையனைத்துமே 3000 அடிகளுக்கு மேற்பட்ட உயரத்திலேயே அமைந்திருந்தன. பாதைகள், வீதிகள் இருக்கவில்லை. இந்த மக்கள் கால்நடையாகவெ காடுகள் ஊடாக இப்பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்டார்கள். பணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டதும் சற்று சிறிய உணவையும், தேங்காய் சிரட்டையில் தண்ணீரையும் கொடுத்து இவர்களை அழைத்து வந்தார்கள். தலைமன்னார் தொடக்கம் இப்பிரதேசம்வரை காடுகளை ஊடறுத்து நடந்து வருகையில் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி அந்த பயணத்தின்போது 15% மடிந்தனர். இவர்களின் சடலங்கள் புதையுண்டு கிடப்பது இந்த மலையகப் பிரதேசத்தில் மாத்திரமல்ல: தொலைதூர தலைமன்னார், மதவாச்சி, தம்புள்ள, மாத்தளை வரை அவர்களின் சடலங்கள் பரந்து புதையுண்டு இருக்கின்றன. அவர்கள் தோட்டச் செய்கைக்காக சாதகமான எதிர்பார்ப்புடன் வந்தார்கள். அவர்களின் நாட்டார் பாடல்கள் ஊடாக அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
“குனி்ஞ்சி குனிஞ்சி ஏறிய மலை
கோப்பிச்செடி நாட்டிய மலை
அண்ணன்மார் சறுக்கி விழுந்த மலை
அதோ தெரிகிறது“
அதன் மூலமாக கூறப்படுவது என்ன? இந்த மலைகள் பூராவிலும் அவர்கள் மடிந்துள்ளார்கள் என்பதல்லவா. இந்த சிரமமான பயிர்வளர்ப்பில் அந்த மனிதர்கள் அனுபவித்த வாழ்க்கை என்ன? அது பற்றி ஒரு நாட்டார் பாடலில் பின்வருமாறு கூறப்படுகின்றது.
“கோணக்கோண மலையேறி
கோப்பிப்பழம் பறிக்கையில
ஒருபழம் தப்பிச்சின்னு
ஒதச்சான் ஐயா சின்ன தொர“
இந்த பெருந்தோட்டச் செய்கை மிகவும் கடினமானதாக அமைந்தது. வாழ்க்கை என்றால் என்னவென அறிந்திராத மக்கள், சுவையான உணவுவேளையொன்று பற்றிய உணர்வற்ற மக்கள், வீடு பற்றிய அனுபவமற்ற மக்கள், வாழ்க்கையில் எந்தவிதமான களியாட்டத்தையும் கண்டிராத மக்கள், மகிழ்ச்சியுணர்வு பெற்றராத மக்கள் இந்த மலைகளின் மத்தியில் செத்துமடிந்தார்கள். கோப்பிச் செய்கை சீரழிந்த பின்னர் அவர்கள் தேயிலைச் செய்கைக்கு இசைவாக்கம் அடைந்தார்கள். அங்கே வாழ்க்கை சாதகமானதாக அமைந்ததா? அன்று நாட்டார் பாடலாசிரியர் பின்வருமாறு கூறினார்.
“கொங்கணி போட்டு பழக்கமில்ல – நாங்க
கொழுந்தெடுத்தும் பழக்கமில்ல
சில்லறை கங்காணி சேவகமே – எங்களை
சீமைக்கு அனுப்புங்க சாமிசாமி“
இந்த மக்களில் எவருமே விருப்பத்துடன், மகிழ்ச்சியுடன், எதிர்பார்ப்புடன் இந்த தாய்மண்ணில் வாழவில்லை. பெருமூச்சு விட்டுக்கொண்டு நாள்தோறும் வேதனையின் அடித்தளத்தில் அமிழ்ந்து சீவித்தவர்களாவர்.
பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் கீழ் 125 வருடங்கள் நிகழ்கால ஆட்சியாளர்களின்கீழ் 75 வருடங்கள் என்ற வகையில் இந்த 200 வருடங்கள் நான்கிற்க மேற்பட்ட தலைமுறைக்கு வழங்கியுள்ள தலைவிதி என்ன? 1948 இல் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் சென்றபின்னர் சுதேச குழுவொன்று ஆட்சியைக் கைகளில் எடுத்துக்கொண்டது. 1949 இல் பிரசாவுரிமை சட்டம் கொண்டுவரப்படுகின்றது. பிரசாவுரிமை பெறவேண்டுமாயின் 1949 நவெம்பர் 15 இற்கு முன்னர் பிறந்திருக்கவேண்டுமென பிரசாவுரிமை சட்டத்தில் பணிப்புரை விடுக்கப்படுகின்றது. இரண்டு தலைமுறைகளாக இங்கு வசித்ததாக எழுத்திலான சான்று இருக்கவேண்டும். பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லாத, முகவரியொன்று இல்லாத, பதிவேடொன்றில் பெயர் குறிப்பிடப்படாத பிரசைகள் தாம் இரண்டு தலைமுறைகளாக இங்கு வசித்ததாக கொடுப்பதற்குள்ள சான்றிதழ் என்ன? ஏழு இலட்சம் பேருக்கு பிரசாவுரிமை கிடையாது, இந்த நாட்டில் வசிக்கிறார்கள், பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்கிறார்கள், இந்த நாட்டில் இறக்கிறார்கள், எனினும் நாட்டின் பிரசைகள் அல்ல. மிகவும் சிறிய குழுவினருக்கு மாத்திரம் பிரசாவுரிமை வழங்கப்பட்டது. வர்த்தகங்களால் செல்வத்தை திரட்டிய, தோட்டங்களிலிருந்து செல்வத்தைக் குவித்துக்கொண்ட, பெருந்தொகையான பயிர்நிலங்களை சொந்தமாகக் கொண்டிருந்த மிகவும் சிறிய குழுவினருக்கு பிரசாவுரிமை கிடைத்தாலும் ஏழு இலட்சத்திற்கு மேற்பட்ட தாழ்ந்த வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கு பிரசாவுரிமை கிடைக்கவில்லை. ஆளும் வர்க்கத்தினர் மீண்டும்மீண்டும் அவர்களாகவே பிரசாவுரிமையை ஒழித்து, மீண்டும்மீண்டும் தேர்தலின்போது “நாங்கள் பிரசாவுரிமையைக் கொடுப்போம்” என்ற அரசியல் வாக்குறுதியை வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக ஏலவிற்பனை செய்தார்கள். மக்கள் என்ற வகையில் இவர்கள் 2003 இல் பிரசாவுரிமையை நிறைவுசெய்கிறார்கள். 1949 இல் இருந்து 54 வருடங்களில் ஒரு தலைமுறைக்கு மேலானவர்கள் பிரசாவுரிமையின்றி இந்நாட்டில் இறந்தார்கள். முழுமையான பிரசாவுரிமை கிடைத்து இன்றளவில் 20 வருடங்கள் கழிந்துள்ளன. அவர்களுக்கு உத்தியோகபூர்வ ஆவணங்களில் பிரசாவுரிமை கிடைத்திருந்தாலும் இலங்கையின் பிரசைக்கு இணையான உரிமைகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை
மலையகத் தமிழ் மக்களின் தேவை கௌரவமான மனித சமுதாயமாக வளர்வதாகும். தேசிய மக்கள் சக்தி என்றவகையில் நாங்கள் உங்களை நோக்குவது இரக்கத்தை வேண்டிநிற்கின்ற மக்களாக அல்ல. உங்களுக்குத் தேவை இந்நாட்டில் கௌரவமான பிரஜைகளாக வசிப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதாகும். அதற்கான நியாயமான உரிமை உங்களுக்கு உண்டு.
உலகம் படிப்படியாக ஒன்றாக இணைந்து வந்தது. தொழில்நுட்பத்தினால், சந்தையால், தொடர்பாடலால், போக்குவரத்தினால் உலகில் ஒருங்கிணைப்புகள் கட்டியெழுப்பப்பட்டு வந்தது. உலகின் எந்தவொரு நாடும் அந்நாடு உலகச் சந்தையில் எந்தளவு பங்கினைக் கைப்பற்றியுள்ளதெனும் காரணியின்பேரிலேயே தங்கியிருக்கின்றது. கடந்த வருடத்தில் எண்ணெய், கேஸ், மின்சாரம் கிடைக்காமல் போயிற்று. மக்கள் வாழ்க்கையே செயலற்றுப் போனது. நாடு சீர்குலைந்தது. அதற்கான பிரதானமான காரணம் யாது? எமக்கு அவசியமான வெளிநாட்டுப் பணம் டொலர் அளவு எமது ஒதுக்கங்களில் இல்லாமல் போனமையாகும். நிகழ்கால உலகில் உலக சந்தையில் நியாயமான பங்கினை கையகப்படுத்திக்கொள்ள வேண்மென ஒவ்வொரு நாடும் நிர்ப்பந்திக்கப்படுகின்றது. பல தசாப்தங்காளக உலக சந்தையில் எமது பெரிய பங்கு என்ன? சேவைப் பங்களிப்பு. இன்றும் வருடமொன்றிற்கு 130 கோடி டொலர் சேவைகளை வழங்குவதன் மூலமாகவே பெறப்படுகின்றது. கொழும்பிற்குச் சென்றால் பாரிய கட்டிடங்களை நாங்கள் காண்கிறோம். அவற்றுக்காக பெரும்பாலான பண்டங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. நீங்கள் இங்கிருந்து அங்கு அனுப்பிவைத்து ஈட்டுகின்ற டொலர்களில் நாடு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இங்கிருந்து அங்கு அனுப்பிவைத்து ஈட்டுகின்ற டொலர்களைக்கெண்டு நாடு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இங்கு தேயிலை வளர்த்து ஈட்டுகின்ற டொலர்களிலிருந்து பாலங்கள் அமைத்திருக்கிறார்கள், புகையிரத பெட்டிகளைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதாவது புகையிரதத்திலும், பஸ் வண்டியிலும், பெரிய ஜீப் வண்டியிலும், பெரிய கட்டிடத்திலும், பாரிய பாலங்களுக்குள்ளேயும் உங்களின் உழைப்பு மறைந்திருக்கின்றது. அதற்கான நியாயமான பெறுமதியை செலுத்தவேண்டுமல்லவா?
எமது நாட்டில் கடந்த பல தசாப்தங்களாக ஏதேனும்வகையிலான முன்னேற்றம் காணப்பட்டிருப்பின் அதற்க பிரதான காரணமாக அமைவது நீங்கள் சிந்துகின்ற உழைப்புதான். பொருளாதாரம் மாற்றமடைந்தது. உலகம் மாற்றமடைந்தது. நீண்டகாலமாக நீங்கள் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்தீர்கள். ஆனால் உங்களுக்கு என்ன நேர்ந்துள்ளது? ஏறக்குறைய 150 வருடங்கள் பழமையான லயன் அறையில் நீங்கள் இன்றும் இன்னமும் வசிக்கிறீர்கள். இது நீதியாகுமா? 150 வருடங்களுக்கு மேலாக பழைய வீடு என்றால் என்ன? தோழர் பிரதீப் வசிக்கின்ற ஊரில்தான் கஹவத்தையிலேயே இலங்கையின் மிகப்பெரிய லயன் வரிசை இருக்கின்றது. அவை 150 வருடங்கள் பழையவையென அவர் கூறினார். உங்களை மனித சமுதாயமாக மதிக்கின்ற, அந்த பெறுமதி கிடைக்கின்ற புதிய ஆட்சியொன்று எமக்குத் தேவையில்லையா? நாங்கள் 200 வருடங்களுக்குப் பின்னராவது இந்த மாற்றத்தை செய்யவேண்டும்.
உங்களுடைய துன்பங்களும் வேதனைகளும் உங்கள் கையில் தாலாட்டுகின்ற பிள்ளைக்கு, வயிற்றில் அசைகின்ற குழந்தைக்கு உரித்தாகாத ஒரு தேசத்தை நாங்கள் உருவாக்குவோம். 1823 இல் இருந்து இங்கு கொண்டுவரப்பட்ட உழைப்பாளிகளில் இரண்டு இலட்சம் பேர் மலேரியா பெருந்தொற்றினால், அரவம் தீண்டியதால், கொலறா பெருந்தொற்றினால், அதைப்போலவே மகப்பேற்றின்போது இறந்துள்ளார்கள். வேதனையால் நசுக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொருளாதாரரீதியாக மாத்திரமல்ல சமூக மதிப்பையும் இழந்த மக்களுக்கு நல்ல வாழ்க்கையையும் மதிப்புமிக்க வாழ்க்கையையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். மக்களில் நூற்றுக்கு 63 வீதத்தினருக்கு இந்த நாட்டில் ஓரங்குல நிலம்கூட கிடையாது. இருக்க வீடு கிடையாது. தோட்டத்துடன் முடிச்சுப்போட்ட வீடொன்று இருக்கிறது. தொழிலில் இருந்து நீங்குவதாயின், வேறு தொழிலொன்றைத் தெரிவுசெய்வதாயின் லயன் அறையை விட்டுச்செல்லவேண்டும். அவர் ஒரு சுதந்திரமான பிரசையல்ல.
நீங்கள் ஒரு நல்ல வீட்டினை எதிர்பார்த்து எவ்வளவு காலமாக அரசாங்கங்களை உருவாக்கினீர்கள்? நான் ரொசிட்டா பண்ணையில் என்.எல்.டீ.பீ. விற்பனை நிலையமொன்றுக்குச் சென்றேன். அங்கு ஒரு தமிழ் சகோதரர் ” நாங்கள் பண்ணையில் வேலை செய்கிறோம். வேலை செய்கின்ற காலத்தில் எமக்குச் சிறிய அறையொன்றைத் தந்திருக்கிறார்கள். தொழிலை இழந்தால், இளைப்பாறிச் சென்றால் அறையிலிருந்து பிள்ளைகளும் மனைவியும் நானும் எங்கே போவது?” எனக் கேட்கிறார். இந்த வீடு, காணி, வீடற்ற மலையக மக்களுக்கு நாங்கள் மிகவும் தெளிவாக வாக்குறுதியையும் உத்தரவாதத்தையும் அளிக்கின்றோம். உங்களுக்கான காணியையும் வீட்டையும் உறுதிசெய்கின்ற ஆட்சி தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாகும்.
உங்களுக்கு வருமான வழியொன்று இருக்கிறதா? ஒரு நாளுக்கு 1000 ரூபா சம்பளம் பெறுவதற்காக எத்தனை நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட நேரிட்டது? சாலைமறியலில் ஈடுபட, பேரணியில்செல்ல நேரிட்டது? ரூபா 1000 போராட்டத்தை தொடங்கியவேளையில் ஒரு இறாத்தல் பாண் ரூபா 40 ஆகும். 1000 ரூபா வழங்க தீர்மானிக்கும் போது பாண் ரூபா 160. இன்று போதுமானதா? பிரஜைக்கு தான் ஈடுபடுகின்ற தொழிலில் இருந்து உணவை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால், உடையை கொள்வனவுசெய்ய முடியாவிட்டால், மருந்து வாங்க முடியாவிட்டால், பிள்ளைக்கு கல்வி புகட்ட முடியாவிட்டால் அது ஒரு தொழிலா? அதனால் தோட்டக் கம்பெனிக்காரர்களிடமிருந்து “உடலில் இருந்து ஓர் எலும்பினை எடுப்பதுபோல்தான்” தொழிலாளருக்கு ரூபா 1000 வழங்க இணங்குவது. ரூபா 1000 செலுத்தமுடியாத கைத்தொழில் எதற்காக? கைத்தொழிலின் பிரச்சினையல்ல நிலவுவது. அவர்கள் கோரிநிற்பது இந்த தோட்டத்தில் வசிக்கின்ற மக்கள் வழங்குகின்ற வருமானத்தில் இருந்து சேகரித்து பிழிந்துகொண்டிருக்கின்ற செல்வத்திலிருந்து விரல் இடுக்களிலிருந்து கீழே வடிகின்ற ஒரு சொட்டினை மாத்திரமே வேண்டிநிற்கிறார்கள். உங்களுக்கு வாழ்க்கையைப் பேணிவர அவசியமான நியாயமான வருமான வழியைக்கொண்ட பொருளாதாரத்தை அமைத்துக்கொடுப்பதாக நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். இன்றும் தோட்டத்தில் வேலைசெய்கின்ற மக்களுக்கு வெளியில் வருவதற்கான வாய்ப்பு நிலவுவது கல்வியால் மாத்திரமே. சகோதரி போல்ராஜ் இலவசக் கல்விச் சட்டத்தினால் இலவசக் கல்வி கிடைத்தாலும் நீங்கள் இந்த நாட்டில் வசித்தாலும் பிரஜையாக இல்லாமை காரணமாக அதன் நியாயமான பெறுபேறுகள் கிடைக்கவில்லையென சுட்டிக் காட்டினார். இன்றும் அப்படித்தான். இரத்தினபுரி மாவட்டத்தில் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பிரிவில் உயர்தரத்தை தமிழில் கற்பதற்கான ஒரு பாடசாலைகூட கிடையாது. இந்த மத்திய மலைநாட்டில் ஓரளவுக்கு இருந்தாலும் கீழ்நோக்கிச் செல்லும்போது கிடையவே கிடையாது. கல்வியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகள் தலைமுறையினரே இங்கு வசிக்கிறார்கள்.
இந்த மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றியமைத்திட வேண்டுமாயின் பத்தகமொன்றை வாசிக்கின்ற, கவிதையை இரசிக்கின்ற, தமழ்நாட்டுத் திரைப்படத்திலிருந்து விடுபட்டு இலங்கை சினிமா பற்றிச் சிந்திக்கின்ற புதிய தலைமுறையொன்றை நாங்கள் உருவாக்க வேண்டுமென நாம் நினைக்கிறோம். மலையக மக்களின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொள்வதற்கான நியாயமான அணுகுமுறையை உறுதிப்படுத்துவதன் மூலமாக மாத்திரமே அந்த புதிய தலைமுறையினரை உருவாக்க முடியும். அது தீர்க்கப்படவேண்டிய பிரச்சினையாகும். அதைப்போலவே பொதுவில் எடுத்துக்கொண்டால் எமது நாட்டில் பெண்கள் கடுமையாக இன்னல்களுக்கு இலக்காகி உள்ளார்கள். அதிலும் இந்த மலையகப் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்ட பெண்களாக விளங்குவது எமக்குப் புலனாகின்றது. மெலிந்த உடல்கள், பிளவுபட்ட கூந்தல், உலர்ந்த சருமத்துடனான உடல், பாரிய இன்னல்களுக்கும் விரக்திக்கும் இலக்காகிய மகள்மார் இங்கே வசிக்கிறார்கள். அவள் வாழ்க்கை என்றால் என்னவென்பதை அறியாதவள். தோட்டத்தில் பிறக்கிறாள். தோட்டத்தில் உழைக்கிறாள். தோட்டத்திலேயே இறக்கிறாள். தோட்டத்திற்கு வெளியில் உள்ள உலகம் பற்றியோ, சமூகம் பற்றியோ, வாழ்க்கை பற்றியோ அனுபவமின்றி இறக்கிறாள். அவளுக்கு நியாயமானதும் நீதியானதுமான வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
நான் உங்களிடம் கேட்கிறேன், உங்களுக்கு இருப்பது பொருளாதாரப் பிரச்சினை மாத்திரமா? உங்களுக்கு சமூக அங்கீகாரம் இருக்கிறதா? அத்தகைய அங்கீகாரம் கிடையாது. கொழும்பு வீடொன்றில் வேலைசெய்ய எவரும் இல்லாவிட்டால் ஹற்றனில் இருந்து தலவாகலையில் இருந்து இளம்பெண்ணைத் தேடுவார்கள். கொழும்பு நகரத்தை உள்ளிட்ட பாரிய நகரங்களில் ஹோட்டல்களின் பீங்கான் கழுவுபவர்கள் தோட்டங்களிலிருந்து வந்த இளைஞர்களாவர். தமக்கு இணையானவர்களாக அவர்களை நோக்குவது கிடையாது. அவர்களுக்கு தாழ்வான குறைந்த சிறப்புரிமை பெறுகின்ற மக்கட் பிரிவினரை பார்ப்பதுபோல்தான் பார்க்கிறார்கள். வீடுகளில் சமைக்க, கூட்டிச் சுத்தஞ்செய்ய, பபாவின் கக்கா கழுவ, ஹோட்டல் பீங்கான் கழுவ, கழிப்பறைத் தொகுதிகளைக் கழுவ இதற்காகத்தான் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவை தொழில்கள்தான். அப்படியில்லாத உலகமொன்ற நிலவமாட்டாது. ஆனால் அவற்றை தாழ்ந்தவையாகக் கருதி அவற்றின் மரபுரிமையாளர்களாக மலையக மக்களை மாற்றியிருப்பதே இங்குள்ள பிரச்சினையாகும். உங்களுக்கு நல்ல நியாயமான வாழ்க்கை கிடைக்கவேண்டும். பொருளாதாரரீதியாக மாத்திரமன்றி சமூக நன்மதிப்புடன் சமூக அங்கீகாரத்தைக்கொண்ட வாழ்க்கை கிடைக்கவேண்டும்
நீண்டகாலமாக அந்த பிரதேசங்களில் நிலவுவது வாக்குகள் அல்ல, வாக்கு வங்கிகளே. மகிந்த ராஜபக்ஷவிற்கு மலையகத்தில் வாக்குகள் கிடையாது. ஆனால் தொண்டமானின் வாக்கு வங்கியொன்ற இருக்கின்றது. எத்தனை அமைச்சுப் பதவிகள்? ஆளுனர் பதவி கிடைக்குமா? வாக்கு வங்கியை அடகு வைக்கிறார்கள். பிரசையின் தனித்தனி வாக்கிற்கு கிடைக்கின்ற அதிகாரத்தை வாக்கு வங்கியில் வைப்புச்செய்து அந்த இரும்புப்பெட்டியின் திறவுகோலை தொண்டமானின் திகாம்பரத்தின் கையில் வைத்துக்கொண்டு இங்கமிங்கும் இரும்புப்பெட்டியைத் திறக்கிறார்கள். இதுவரை கட்டியெழுப்பப்பட்ட அரசாங்கங்களுக்கு தனித்தனி ஆட்களுடன் பேரம்பேசுகின்ற தேவை நிலவவில்லை. தனித்தனி வாக்குகளைப் பெற்றுக்கொள்ள பிரயத்தனம் செய்யவேண்டியதில்லை. வாக்குகள் அனைத்துமே வாக்கு வங்கியின் இரும்புப் பெட்டியில் இருக்கின்றன. இரும்புப் பெட்டியின் கதவினைத்திறந்து தொண்டமான்கள் அவற்றை அங்குமிங்கும் பகிர்ந்தளிக்கிறார்கள். பேரம்பேசும் சக்தி இருந்தது வாக்காளரின் கையிலல்ல: வாக்கு வங்கி உரிமையாளரின் கையிலாகும். அரசாங்கம் டீல்பண்ணவது, பேரம்பேசுவது, அரசாங்கங்கள் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்வது. பிரச்சினைகளைத் தீர்ப்பது இரும்புப்பெட்டிச் சொந்தக்காரருடனேயே. இரும்புப்பெட்டிச் சொந்தக்காரரின் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. உங்கள் பிள்ளைக்கு தோட்டத்தில் பாடசாலை இல்லாவிட்டாலும் இரும்புப்பெட்டியின் சொந்தக்காரரின் பிள்ளை இங்கிலாந்தில் இருந்து வந்துதான் இரும்புப்பெட்டியின் திறவுகோலை பொறுப்பேற்றது. தந்தை இறந்த பின்னர் இரும்புப்பெட்டியின் திறவுகோல் மகனுக்கு கிடைத்தது. ஒருவர் போதாது என்பதால் இந்தியாவிலிருந்து ஒருவரை திறவுகோலை பொறுப்பேற்பதற்காக கொண்டுவந்தார்கள். அவர் தற்போது கிழக்கின் ஆளுனர். இந்த ஆட்சியாளர்கள் யாருடைய பிரச்சினையைத் தீர்த்துவைத்துள்ளார்கள்? தோட்டத்தில் வேலைசெய்கின்ற பிரஜையின் பிரச்சினையை அல்ல. வாக்காளரின் பிரச்சினையை அல்ல. அவர்கள் இரும்புப்பெட்டிச் சொந்தக்காரரின் பி்ரச்சியைத்தான் தீர்த்து வைத்துள்ளார்கள். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் உருவாக்குவது உங்களின் வாக்குகளை சேகரித்த வாக்கு வங்கியொன்றை அல்ல. ஒவ்வொரு பிரஜைக்கும் தமது வாக்கின் உரிமையை சுயாதீனமாக பாவிக்கக்கூடிய உளப்பாங்கினைக்கொண்ட புதிய மக்கள் உரையாடல் களமொன்றை நாங்கள் உருவாக்குவோம்.
நாட்டடின் ஆட்சியாளர்களை தெற்கின் மக்கள் வீதியில் இறங்கி விரட்டியடித்தார்கள். தெற்கின் ஆட்சியாளர்கள் மக்களுக்குப் பயந்தவர்கள். மக்கள் மத்திக்கு வரமாட்டார்கள். மக்களை தவிர்த்துச்செல்ல பதில் தேடுகிறார்கள். உள்ளுரதிகாசபைகள் தேர்தலை பிற்போடுகிறார்கள். மேலும் தேர்தல்களை பிற்போட திட்டம்தீட்டி வருகிறார்கள். கொழும்பு, தென்பகுதி, வடமத்தி அப்சற்தான் என அவர்கள் கதைக்கிறார்கள். ஆனால் நுவரெலியாவில் தொண்டமான் இருக்கிறார் அல்லவா. திகாம்பரம் இருக்கிறார் அல்லவா. அவர்கள் காப்பாற்றித் தருவார்கள். ஆட்சியார்கள் அவர்களின் மக்களுக்கு எதிரான ஆட்சியை, அழிவுமிக்க ஆட்சியை முன்னெடுத்துச்செல்ல வேண்டுமாயின் இந்த மலையக மக்களின் ஒத்துழைப்பு கிடைக்குமென நினைக்கிறார்கள். அது இறந்தகாலத்தில் உண்மை. அதனை நிகழ்காலத்தில் பொய்யாக மாற்றவேண்டும். வாக்கு இரும்புப்பெட்டிச் சொந்தக்காரரின் அரசியலுக்குப் பதிலாக பொதுமக்களின் அரசியலை மலையக மக்கள் மத்தியில் மீளக்கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.
பெருந்தொகையான இளைஞர் சமுதாயம் தற்போது தேசிய மக்கள் சக்தியைச் சுற்றிக் குழுமி வருகின்றது. இந்த நுவரெலியாவின் பலம்பொருந்திய பாராளுமன்ற உறுப்பினரொருவர் “தோட்டத்தில் வேலைசெய்பவர்கள் இன்னமும் தலைவர்களுக்கு கட்டுப்பட்டவர்களே. தோட்டத்திருந்து வெளியில் வந்துள்ள இளைஞர் தலைமுறையினர் உங்களுடனேயே, என்பி.பி. அமைப்புடன்தான் இருக்கிறார்கள்” என பாராளுமன்றத்தில் கூறினார். தோட்டத்தின் நுகத்தடியில் இருந்து விடுபட்ட புறா இன்று சுதந்திரமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டது. அதனால் மலையக மக்கள் மத்தியில் புதிய இளைஞர்கள், அவர்களின் எதிர்பார்ப்புகள் வளர்ந்துகொண்டிருக்கின்றன. மரபுரீதியான அல்லற்படுத்திய ஆட்சிக் குழுக்களுக்குப் பதிலாக பொது மக்களின் தேவைகளுடன் பின்னிப்பிணைந்த புதிய இளைஞர் தலைமுறையொன்று அந்த மலையக மக்கள் மத்தியில் இருந்து முன்நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். மென்மேலும் முன்னணிக்கு வரவேண்டியுள்ளது. 200 வருடங்களாக நேர்ந்துள்ள வரலாற்றுத் தவறினை மாற்றியமைக்கின்ற அபிலாஷையும் எதிர்பார்ப்பும் எமக்கு இருக்கின்றது. அது எமது இனிமையான கனவாக மாத்திரம் அமைந்துவிடலாகாது. வரலாற்றில் ஏற்பட்ட தவறினை திருத்தியமைக்க வேண்டுமென மலையக மக்கள் தீர்மானமொன்றை எடுத்தால் மாத்திரமே அதனை சாதிக்கமுடியும். எம்மனைவராலும் ஒன்றுசேர்ந்து இனிமையான கனவினைக் காணமுடியுமாயின் இந்த இருள்மயமான இரவினை குறுகியதாக்க இயலும். நாங்கள் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். இந்த இருள்சூழ்ந்த இரவினை குறுகியதாக மாற்றிடுவோம். அதற்காக அனைவரையும் ஒன்றுசேருமாறு அழைக்கிறோம்.