III International Dilemmas of Humanity Conference – 2023 (மனிதநேயத்தின் சங்கடங்கள் பற்றிய III சர்வதேச மாநாடு) ஒக்டோபர் 14 முதல் 18 வரை தென்னாப்பிரிக்காவின் ஜொஹனஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது. உலகம் பூராகவும் உள்ள அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் ஒன்று சேர்கின்ற இம்மாநாட்டிற்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் அருண் ஹேமச்சந்திர ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தென்னாபிரிக்காவின் ஜொஹனஸ்பர்க் நகரில் […]
III International Dilemmas of Humanity Conference – 2023 (மனிதநேயத்தின் சங்கடங்கள் பற்றிய III சர்வதேச மாநாடு) ஒக்டோபர் 14 முதல் 18 வரை தென்னாப்பிரிக்காவின் ஜொஹனஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது. உலகம் பூராகவும் உள்ள அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் ஒன்று சேர்கின்ற இம்மாநாட்டிற்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் அருண் ஹேமச்சந்திர ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
தென்னாபிரிக்காவின் ஜொஹனஸ்பர்க் நகரில் 70 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 500 உறுப்பினர்கள் இதில் பங்கேற்கின்றனர். முதலாளித்துவ அமைப்புமுறையால் உருவாக்கப்பட்ட நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதற்காக வணிகங்கள், அரசாங்கங்கள் மற்றும் உழைக்கும் மக்கள் கட்டியெழுப்பியுள்ள, கட்டியெழுப்பிக்கொண்டிருக்கும் மற்றும் கட்டியெழுப்ப வேண்டிய தீர்வுகள் பற்றிய விவாதத்திற்கும் கலந்துரையாடலுக்குமான இடமாக இம்மாநாடு காணப்படுகிறது.
பலஸ்தீனிய புரட்சியாளர் லீலா காலித், தென்னாப்பிரிக்க சேரிவாசிகள் இயக்கத்தின் S’bu Zikode, தென்னாப்பிரிக்காவின் Abahlali baseMjondolo, அமெரிக்காவின் Socialism and Liberation கட்சியின் Claudia de la Cruz, கானாவின் சோஷலிச இயக்கத்தின் Kwesi Pratt Jnr. மற்றும் பிரேசிலின் நிலமற்ற கிராமப்புற தொழிலாளர் இயக்கத்தின் (MST) João Pedro Stedile ஆகியோரும் இதில் பங்குபற்றியுள்ளனர்.
வினீ மண்டேலா, நெல்சன் மண்டேலா, ஜோ ஸ்லோவோ போன்ற தென்னாபிரிக்காவின் நிறவெறி எதிர்ப்புப் போராளிகள் மற்றும் நாட்டின் கொடூரமான நிறவெறி சகாப்தத்தின் போது குற்றச்செயல்களுக்கு மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளான ஆயிரக்கணக்கானோர் சிறைப்படுத்தப்பட்ட சிறைச்சாலையாக இருந்த Constitution Hill இல் இந்த ஐந்து நாள் மாநாடு நடைபெறுகிறது. 1996 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அவர்கள் தென்னாப்பிரிக்காவின் புதிய அரசியலமைப்பில் கைச்சாத்திட்டதும் இந்த Constitution Hill இல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மக்கள் மன்றம் மற்றும் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் Stephanie Weatherbee Brito மாநாட்டின் வரலாற்றுத் தன்மையை வலியுறுத்தினார், “நாம் 70 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 120 அமைப்புக்களின் அங்கத்தவர்கள் ஒன்று சேர்த்து மக்கள் அரசாங்கங்களை உருவாக்குதல், அதற்கான சட்டப்பூர்வமான முறை மற்றும் அதை எப்படிச் செய்ய முடியும் என்பதைப் பற்றிப் பேசுவோம். அத்துடன் இந்த மாநாடு தொழிலாள வர்க்க இயக்கங்களால் கட்டமைக்கப்பட்ட செயல்முறையின் ஒரு படியாகும். இது விவாதிப்பதற்காக மட்டுமல்ல, அனைவரும் கண்ணியமாக வாழக்கூடிய எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதற்கும் முயற்சிக்கும்”. என்பதாகக் குறிப்பிட்டார்.
2023.10.16 – ஊடக சந்திப்பு அடுத்த வருடத்தில் தேர்தலொன்று வரமாட்டாதெனும் அபிப்பிராயத்தை சமூகத்தில் உறுதிசெய்ய அரசாங்கம் செயலாற்றி வருகின்றது. இன்னும் இரண்டு வருடங்களுக்கு தேர்தல் வரமாட்டாதென கூறுகின்றது. அவர்களுக்கு வாக்குகள் கிடைக்கமாட்டாதென்பதாலும் தேர்தலைநடாத்தினால் அவர்கள் தோல்வியடைவார்கள் என்பதாலுமே அத்தகைய அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்ப முயற்சிசெய்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் கிடையாது எனக் கூறுவது தோல்வியிலிருந்து விடுபடுவதற்காகவே என்பது உறுதியாகின்றது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மக்கள் அபிப்பிராயத்திற்கு, மக்கள் அபிப்பிராயம் வெளிப்படுவதற்கு பயந்திருக்கின்றது. அதனால் மக்கள் அபிப்பிராயம் வெளிப்படுவதற்குள் அனைத்துவிதமான வழிகளையும் […]
2023.10.16 – ஊடக சந்திப்பு
அடுத்த வருடத்தில் தேர்தலொன்று வரமாட்டாதெனும் அபிப்பிராயத்தை சமூகத்தில் உறுதிசெய்ய அரசாங்கம் செயலாற்றி வருகின்றது. இன்னும் இரண்டு வருடங்களுக்கு தேர்தல் வரமாட்டாதென கூறுகின்றது. அவர்களுக்கு வாக்குகள் கிடைக்கமாட்டாதென்பதாலும் தேர்தலைநடாத்தினால் அவர்கள் தோல்வியடைவார்கள் என்பதாலுமே அத்தகைய அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்ப முயற்சிசெய்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் கிடையாது எனக் கூறுவது தோல்வியிலிருந்து விடுபடுவதற்காகவே என்பது உறுதியாகின்றது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மக்கள் அபிப்பிராயத்திற்கு, மக்கள் அபிப்பிராயம் வெளிப்படுவதற்கு பயந்திருக்கின்றது. அதனால் மக்கள் அபிப்பிராயம் வெளிப்படுவதற்குள் அனைத்துவிதமான வழிகளையும் தடுத்துநிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
ஏன் உள்ளூரதிகாரசபை தேர்தலை நடத்தாதிருக்கப் போகின்றது? உள்ளுரதிகாரசபை தேர்தலை நடாத்தினால் இத்தருணத்தில் நிலவுகின்ற மக்கள் அபிப்பிராயம் வெளிப்படும். அரசாங்கம் மீதான மக்களின் விருப்பத்தின் அளவினைக் கண்டுகொள்ளலாம். தேசிய மக்கள் சக்திக்கு நிச்சயமாக அமோக வெற்றி கிடைக்கும். ரணில் விக்கிரமசிங்காக்கள் தோல்வியடைவார்கள். அதனால் உள்ளூராட்சி தேர்தலை நடத்தாதிருக்கப் போகிறார்கள். அது முற்றிலும் சனநாயக விரோதமான செயலாகும்.
தற்போது அரசாங்கம் தொடரறா (இணையவழி) முறைகளின் பாதுகாப்பு பற்றிய சட்டமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஒன்லயின் சிக்கியுரிட்டி சட்டம். மக்கள் அபிப்பிராயம் வெளிப்படுத்தப்படுவதை தடுக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்படுகின்றது. எமது நாட்டில் மாத்திரமல்ல முழு உலகத்திலும் மக்கள் அபிப்பிராயம் மரபுரீதியான ஊடகங்களுக்கு மட்டுப்படுத்தப்படாமல் சமூக வலைத்தளங்கள் மூலமாக இடம்பெறுகின்றது. அதனை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்துவது கடினமாகும். அதன் மூலமாக அரசாங்கத்திற்கு எதிரான அபிப்பிராயங்கள், அரசாங்கத்தின் உண்மைகள் வெளிப்படுகின்ற அபிப்பிராயங்கள், எதிர்க்கட்சியின் அபிப்பிராயங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. கடந்த காலத்தில் பிரதான ஊடகங்கள் அரசாங்கத்திற்காக இயலுமானவரை பொய்களைக் கூறிவந்தன. மலட்டுக் கதைகள், மலட்டு மருத்துவர்கள் ஊடகங்கள் வாயிலாக உருவாக்கப்பட்டன. பின்னர் அவை பொய்யானவை என்பது அம்பலமாகியது. அது பற்றிய விசரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. மக்களுகக்கிடையில் பகைமையை பரவச்செய்வித்ததும் பிரதான ஊடகமாகும். சமூக வலைத்தளங்கள் ஊடாக இவை கேள்விக்குட்படுத்தப்பட்டவேளையில் அரசாங்கத்தின் நிர்வாணம் வெளிப்படுகையில் அது அரசாங்கத்திற்கு பாதகமானதாக அமைகையில் சமூக வலைத்தளங்களை தடுக்க அரசாங்கம் முயற்சி செய்கின்றது. இந்த சமூக வலைத்தளங்கள் ஊடாக பொய்யான செய்திகள் வெளியியிடப்படுகின்றன. தவறான கருத்துக்கள் சமூகமயப்படுத்தப்படுகின்றன தான். ஆனால் அரசாங்கம் செய்யப்போவது அதனைத் தடுப்பதையல்ல. அதனை காரணமாக வைத்துக்கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான அபிப்பிராயங்களை தடுக்கவே முயற்சி செய்கின்றது.
கடந்த காலத்தில் சம்பளம் செலுத்தி பல போலியான கணக்குகளைத் தயாரித்து தவறான அபிப்பிராயங்களை சமூகமயப்படுத்தியது அரசாங்கத்தின் குழுக்களாகும். மகிந்த ராஜபக்ஷாக்களின் ஒரு குழு இந்த போலியான கணக்குகளைப் பாவித்து தவறான கருத்துக்களை சமூகமயப்படுத்தியது. ஏற்கெனவே ஒரு குழு சம்பளம் பெற்று பொய்கூறி வருகின்றது. உண்மையான பொதுமக்கள் அபிப்பிராயம் சமூகமயமாவதைக் காண அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால் ஒன்லயின் சிக்கியூரிட்டி பில்லைக் கொண்டுவந்து மக்கள் அபிப்பிராயம் வெளிபடுத்தப்படுவதை தடுக்க முயற்சி செய்கிறார்கள்.
அதைப்போலவே புதிய பயங்கரவாத சட்டமொன்றையும் தயாரித்து வருகிறார்கள். அரசாங்கம் மீதான எதிர்ப்பினை தடுப்பதற்காகவே அதனைக் கொண்டுவர முயற்சிசெய்கிறார்கள். மக்கள் அபிப்பிராயம் சனநாயகரீதியாக நடுத்தெருவில் ஆர்ப்பாட்ட அழுத்தங்கள் மூலமாக வெளிப்படுவதைத் தடுக்கவே பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவர முயற்சி செய்யப்படுகின்றது. அந்த சட்டம் கொண்டுவரப்பட்டால் எதையாவது செய்யமாறு அல்லது செய்யாதிருக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவது பயங்கரவாத செயலாக மாற்றப்படும். இந்த அரசாங்கம் மக்களைக்கண்டு அஞ்சுகின்றது, மக்கள் அபிப்பிராயத்திற்கு அஞ்சுகின்றது. அவர்களால் மக்களை வென்றெடுக்க முடியாது. 75 வருடகால இந்த அரசாங்கங்களின் அழிவுமிக்க அனுபவங்களை பெற்றுள்ள மக்கள் தற்போது இந்த நாட்டை ஆட்சிசெய்த சக்திகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு மாற்று அரசியல் இயக்கங்களுடன் ஒன்றிணையத் தொடங்கி உள்ளார்கள். அதனால்த்தான் வருங்காலத்தில் நடாத்தப்படவேண்டிய சனாதிபதி தேர்தலை நடத்தப்போவதில்லை எனும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். சனாதிபதி தேர்தலை நடாத்துவதற்குப் பதிலாக அரசியலமைப்பொன்று மூலமாக அல்லது அரசியலமைப்புத் திருத்தம் மூலமாக நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக தற்போது அவர்கள் கூறிவருகிறார்கள். அப்போது அந்த நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்திடம் கையளிக்கப்படும். நிறைவேற்று முறையை ஒழித்தவிடத்து சனாதிபதி தேர்தலொன்றை நடாத்தவேண்டிய அவசியம் தோன்றமாட்டாது. தத்துவங்களை பாராளுமன்றத்திடம் கையளிப்பதன் மூலமாக அந்த தத்துவங்கள் 2025 வரை வலுவில் இருக்கும். அதனால் மேலும் 2 வருடங்களுக்கு தேர்தல் கிடையாது என பிரச்சாரம்செய்து வருகிறார்கள். அது அவ்வாறு நடைபெற மாட்டாதென நாங்கள் நினைக்கிறோம்.
நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழிக்கின்ற போராட்டம் நிறைவேற்று சனாதிபதி முறையின் தொடக்கத்திலிருந்தே சமூகத்தில் நிலவுகின்றது. நாங்கள் மக்கள் விடுதலை முன்னணி என்றவகையிலும் நாமனைவரும் சனநாயக விரோதமான சர்வாதிகாரியொருவரை உருவாக்குகின்ற நிறைவேற்று சனாதிபதி முறைக்கு எதிராக தோற்றினோம். எமது நாட்டை ஆட்சிசெய்த அரசியல் கட்சிகளும் மக்களை ஏமாற்றுவதற்காக நிறைவேற்று சனாதிபதி முறையை ஓழிக்க உடன்பட்ட தருணங்கள் தாராளமாக இருந்தன. 1994 இல் திருமதி சந்திரிக்கா குமாரதுங்க 1995 யூலை 15 ஆந் திகதிக்கு முன்னராக நிறைவேற்ற முறையை ஒழித்துக்கட்டுவதாக வாக்குறுதி அளித்தார். எனினும் செய்யவில்லை. ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ஷ வாக்குறுதி அளித்தார்கள். அவர்கள் அனைவருமே தமது கைகளில் அதிகாரம் இல்லாத தருணத்தில் நிறைவேற்று முறையை ஒழித்துக்கட்டுவதாக வாக்குறுதி அளித்தார்கள். அதிகாரம் கிடைத்ததும் ஒழித்துக் கட்டாமல் அதிகாரத்தை அதிகரித்துக் கொள்வதையே புரிந்தார்கள். 2002 நன்னடத்தை அரசாங்க காலத்தில் நாங்கள் இடையீடுசெய்து நிறைவேற்று அதிகாரங்களைக் குறைக்கின்ற 17 வது திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டோம். மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் 18 வது திருத்தத்தைக் கொண்டுவந்து மீண்டும் நிறைவேற்று சனாதிபதி அதிகாரத்தை அதிகரித்துக் கொண்டார். முந்திய அரசியலமைப்பில் சனாதிபதி தேர்தலில் போட்டியிட ஒருவருக்கு இரண்டு தடவைகள் மாத்திரம் இருந்த சந்தர்ப்பத்தை 18 வது திருத்தத்தைக் கொண்டுவந்து எந்தவொரு நேரத்திலும் போட்டியிடுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டார். மீண்டும் நாங்கள் 19 வது திருத்தத்தைக் கொண்டுவந்து சனாதிபதி தத்துவங்களை ஓரளவுக்கு குறைத்துக்கொண்டோம். கோட்டாபய ராஜபக்ஷ வந்த பின்னர் 20 வது திருத்தத்தைக் கொண்டுவந்து அந்த தத்துவங்களை மீண்டும் பெற்றுக்கொண்டார். மகிந்த ராஜபக்ஷாக்கள் அதிகாரம் கிடைத்த எல்லாச் சந்தர்ப்பத்திலும் நிறைவேற்றுத் தத்துவங்களைக் குறைப்பதற்காகவல்ல, அந்த தத்துவங்களை அதிகரித்துக் கொள்வதற்காகவே செயலாற்றியிருக்கிறார்கள். அவ்விதமாக செயலாற்றிய ராஜபக்ஷாக்கள் திடீரென இந்த தத்துவங்களை இல்லாதொழிக்க ஏன் நடவடிக்கை எடுக்கிறார்கள்? அடுத்த சனாதிபதி தேர்தலில் அவர்கள் பிணைப்பணமுமின்றி தோல்வியடைவார்கள். சனாதிபதி தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு வேட்பாளர்கூட கிடையாது. அதனால் சனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளாமல் நழுவிச்செல்ல வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அரசியமைப்பின்படி தேர்தலை பிற்போட முடியாது. அதனால் நிறைவேற்றுத் தத்துவங்களை ஒழித்துக்கட்டி பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை கையகப்படுத்திக்கொண்டு பாராளுமன்றம் மூலமாக ஆட்சிசெய்வதை தெரிவுசெய்வதாக கூறுகிறார்கள். நிறைவேற்றுத் தத்துவங்களை ஒழித்துக்கட்டுவதற்காக கட்டாயமாக மக்கள் தீர்ப்பிற்கு செல்லவேண்டி நேரிடும். அந்த மக்கள் தீர்ப்பின்போது அதற்கு ஆதரவு வழங்கவேண்டி எம்மனைவருக்கும் நேரிடும்.
நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழித்தலுடன் நாங்கள் இணங்குகிறோம். அரசியலமைப்புத் திருத்தமல்ல புதிய அரசியலமைப்பினை ஆக்கவேண்டி நேரிடும். நிறைவேற்று முறைமையுடன் பின்னிப்பிணைந்த பல பிரச்சினைகள் இருக்கின்றன. புதிய அரசியலமைப்பொன்றினைக் கொண்டு வந்தாலும், நிறைவேற்றதிகாரம் இந்த பாராளுமன்றத்திடமே கையளிக்கப்படும், இந்த அமைச்சரவையிடமே, இதே பிரதமரிடமெனில் அதற்கு இந்நாட்டு மக்கள் இணங்கமாட்டார்கள். இந்த அரசாங்கம் பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசாங்கமாகும். இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிடையாது. தற்போது இருப்பது மக்களுக்கு எதிரான அரசாங்கமே. அத்தகைய பாராளுமன்றத்திற்கு சனாதிபதியின் நிறைவேற்றதிகாரம் கையளிக்கப்படுவது எவ்விதத்திலும் நியாயமானதல்ல. அது மக்கள் விருப்பத்திற்கு எதிரானது. நாங்கள் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் வலியுறுத்திக் கூறுவது நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழிப்பதற்கான திருத்தமொன்றைக் கொண்டுவந்தாலும் அந்த திருத்தம் நிறைவேற்றப்படும்போதே இந்த பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான பிரேரணையொன்றும் இருக்கவேண்டும். அத்துடன் மக்களின் வாக்குகளால் புதியதொரு பாராளுமன்றம் கட்டியெழுப்பப்படல் வேண்டும். இந்த மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் ஆணையைக்கொண்ட பாராளுமன்றத்திடம்தான் நிறைவேற்றதிகாரத்தை கையளிப்பதற்கான தேவை நிலவுகின்றது. நிறைவேற்று சனாதிபதியொருவர் இருக்கின்ற வேளையில்தான் இந்த பாராளுமன்றம் தெரிவுசெய்யப்படுகின்றது. இந்த பாராளுமன்றத்திற்காக வழங்கப்பட்டுள்ள வாக்குகள் ஒரு நிறைவேற்றத்திகாரம்கொண்ட பாராளுமன்றத்திற்கானதல்ல. இந்த பாராளுமன்றத்திற்கு நிறைவேற்றதிகாரம் கையளிக்கப்படுமாயின் இந்த பாராளுமன்றம் அந்த புரிந்துணர்வுடன் மக்காளல் நியமிக்கப்படுகின்ற பாராளுமன்றமாக அமைதல் வேண்டும்.
ரணில் – ராஜபக்ஷாக்கள் அரசியலமைப்பு முடிச்சியொன்றைப் போட்டு, சனாதிபதி தேர்தலை நடத்தாமல், இந்த ஊழல்மிக்க, மக்கள் ஆணையற்ற பாராளுமன்றத்திற்கு தத்துவங்களை கையகப்படுத்திக்கொண்டு மேலும் இரண்டு வருடங்களுக்கு பேணிவர முயற்சி செய்வார்களாயின் அது ஒருபோதுமே இடம்பெற மாட்டாது. இந்த பாராளுமன்றம் ஒழிக்கப்படல் வேண்டும். அவ்வாறு இடம்பெறாமல் கொண்டுவரப்படுகின்ற மக்கள் தீர்ப்பிற்கு நாங்கள் உதவமாட்டோம். அவ்வாறு நேர்ந்தாலும் அது வெற்றியடையமாட்டாது. இல்லாவிட்டால் மக்கள் தீர்ப்பில் தோல்வியடைந்து தேர்தலுக்குச் செல்லவேண்டியநிலை அரசாங்கத்திற்கு ஏற்படும். அரசாங்கம் இரண்டு வழிமுறைகளையே தெரிவுசெய்ய வேண்டும். ஒன்று சனாதிபதி தேர்தலை நடாத்துதல்: சனாதிபதி தேர்தல் இல்லாவிட்டால் அடுத்த ஆண்டில் பொதுத்தேர்தல் நடாத்தப்படல் வேண்டும். அவ்வாறு இடம்பெறாமல் மக்கள் ஆணையற்ற பாராளுமன்றத்திற்கு தத்துவங்கைளை கையகப்படுத்திக்கொண்டு செல்கின்ற பயணத்திற்கு நாங்கள் ஒருபோதுமே இடமளிக்க மாட்டோம். அடுத்த ஆண்டில் தேர்தலொன்று கிடையாது என அரசாங்கத்தின் பெரியவர்கள் கூறுகின்ற அபிப்பிராயத்திற்கு ஏமாறவேண்டாமென நாங்கள் மக்களிடம் கூறுகிறோம். அடுத்த ஆண்டில் கட்டாயமாக தேர்தலொன்று வரும், முறைப்படி சனாதிபதி தேர்தல் வரும். ஏதேனும் விதத்தில் சனாதிபதி முறை ஒழிக்கப்படுமாயின் மக்கள் தீர்ப்பில் வெற்றிபெற வேண்டும். பொதுத்தேர்தலை நடாத்துகின்ற நிபந்தனையைக் கொண்டதாகவே மக்கள் தீர்ப்பில் வெற்றிபெற வேண்டும். பொதுத்தேர்தலுக்கு செல்வதன்மூலமாக தாம் விரும்புகின்ற அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்வதற்கான இயலுமை பொதுமக்களுக்கு கிடைக்கின்றது. அந்த அரசாங்கத்திற்கு நிறைவேற்றுத் தத்துவங்கள் கையளிக்கப்பட்ட அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்வதற்கான இயலுமை கிடைக்கின்றது. அந்த அரசாங்கத்திற்கு நாட்டை மாற்றிமைத்து முன்நோக்கி நகரமுடியும்.
மக்கள் ஆணையுடன் விளையாட வேண்டாமென நாங்கள் ஆட்சியாளர்களிடம் கூறுகிறோம். உள்ளூரதிகார சபைகள் தேர்தல் பிற்போடப்பட்டது, மாகாண சபை தேர்தலை நடத்தாமல் இருக்கிறார்கள். அவ்விதமாக இந்த தேர்தலையும் பிற்போட முடியுமென மக்கள் நினைக்கக்கூடும். எனினும் அவ்வாறு செய்யமுடியாது. உள்ளூராட்சி தேர்தலை நடத்தாமல் அந்த நிறுவனங்களை பேணிவருவதற்கான இயலுமையைக்கொண்ட ஏற்பாடுகள் அந்த யாப்புவிதிகளில் இருக்கின்றன. அது விசேட ஆணையாளர்களை நியமிப்பதன் மூலமாகும். மாகாண சபைகள் தேர்தலை நடாத்தாமல் மாகாண சபைகளை பேணிவருவதற்கான ஏற்பாடுகள் யாப்புவிதிகளில் இருக்கின்றன. எனினும் பாராளுமன்றத்திற்கு அத்தகைய ஒன்று கிடையாது. சனாதிபதிக்கு அத்தகைய ஒன்று கிடையாது. சனாதிபதி தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் நடாத்தப்பட்டே ஆகவேண்டும். அவர்களால் செய்யக்கூடிய ஒரேயொரு விடயம்தான் நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழித்துக்கட்டி சனாதிபதி தேர்தலை தவிர்த்துச் செல்வது. மக்களின் விருப்பத்துடனேயே அதனை சாதிக்கவேண்டும். அடுத்த ஆண்டில் கட்டாயமாக தேர்தலொன்று நடாத்தப்படல் வேண்டும். மேலும் பத்து மாத காலம் மாத்திரமே இந்த அரசாங்கத்திற்கு ஆயுள் இருக்கின்றது. சனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் கட்டாயமாக தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் வெற்றிபெறுவோம். அந்த வெற்றியுடன் நாங்கள் இந்த பாராளுமன்றத்தை வைத்துக்கொள்ள மாட்டோம். தேர்தலொன்று இருக்கின்றது. அரசியல் சதிகள் மூலமாக சட்டத்திற்கு முரணாக, மக்களுக்கு எதிரான ஆட்சியதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான இயலுமை கிடையாது. ஆட்சியாளர்கள் பரப்புகின்ற அபிப்பிராங்களுக்கு பதற்றமடைய வேண்டாம். நீங்கள் ஊக்கத்துடன் வேலைசெய்யுங்கள். நீங்கள் ஒழுங்கமையுங்கள். இந்த கொடிய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருகின்ற ஆண்டாக அடுத்த ஆண்டு அமையுமென்பதை நாங்கள் உங்களிடம் உறுதியாக கூறுகிறோம்.
சிவிலியன்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்துவதற்காக உலக சமூகம் இருதரப்பினருக்கும் அழுத்தம்கொடுக்கவேண்டும்.
மேலதிக விடயமென்ற வகையில் இஸ்ரவேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் மோதலொன்று நடைபெறுகின்றது. இது சம்பந்தமாக சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள், அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுகின்றன. நாங்கள் இதில் காண்கின்ற முக்கியமான விடயம்தான் இந்த மோதல் காரணமாக இருநாட்டினதும் நிராயுதபாணிகளான அப்பாவிக் குடிமக்கள், சிறுவர்கள், பெண்கள் பெருமளவில் சிரமங்களுக்குள்ளாகி இருக்கிறார்கள். ஏற்கெனவே இருதரப்பிலும் பெருந்தொகையான சிவிலியன்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். பெற்றோர்களை இழந்து பிள்ளைகள் திசைமாறி இடம்பெயர்ந்துள்ளார்கள். பெண்களுக்கு பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இலட்சக்கணக்கான மக்கள் இருப்பிடங்களை இழந்து தமது சொந்த ஊர்களை கைவிட்டுச் செல்லவேண்டியநிலை உருவாகி உள்ளது. இது ஒரு மனிதப் பேரவலம். இந்த இருதரப்பிலும் புரியப்படுகின்ற படுகொலைகள் நிறுத்தப்படவேண்டுமென நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இருதரப்பிலும் நிராயுதபாணிகளான சிவிலியன்களை இலக்காகக்கொண்டு புரியப்படுகின்ற படுகொலைகள் நிறுத்தப்படல் வேண்டும். இந்த படுகொலைகளை நிறுத்துவதற்காக உலக சமுதாயம் இருதரப்பினருக்கும் அழுத்தம் கொடுக்கவேண்டும். அத்தருணத்தில் யார் சரி? யார் பிழை? என தெரிவுசெய்ய வேண்டியதில்லை. இங்கு மனிதப்பேரவலமே நிலவுகின்றது. சிறுவர் தலைமுறையினர் நிர்க்கதி நிலையுற்று இருக்கிறார்கள். அதனால் மோதல்களை நிறுத்துங்கள். நிராயுதபாணிகளான சிவிலியன்களை இலக்காகக்கொண்ட தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டுமென நாங்கள் நம்புகிறோம்.
இந்த முரண்பாட்டுக்கு நீண்ட வரலாறு இருக்கின்றது. 1947 இன் பின்னரே இந்த பிரச்சினை தொடங்குகின்றது. அதில் பாரியளவிலான சிக்கல்கள் நிலவினாலும் இத்தருணத்தில் அதைப்பற்றி பேசுவதை செய்யவேண்டியதில்லை. இந்த முரண்பாடு உருவாகிய நேரத்தில் ஐக்கிய நாடுகளின் இடையீட்டின் பேரில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டு திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை அரச எண்ணக்கரு என அழைப்பார்கள். “இரண்டு நாடுகளையும் இரண்டு நாடுகளாக ஏற்றுக்கொள்க” எனும் எண்ணக்கருவாகும். ஐக்கிய நாடுகளின் திட்டத்தின்படி சுதந்திரமான பாலஸ்தீனமொன்றும் சுதந்திரமான ஈஸ்ரவேலும் எற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளையும் உறுதிநிலைக்கு கொண்டுவருவதுதான் ஐக்கிய நாடுகளின் நோக்கமாக அமைந்தது. இற்றைவரை ஐக்கிய நாடுகளின் மேற்படி பிரேரணைக்கிணங்க செயலாற்றப்படவில்லை. அதனை அமுலாக்குதல் தோல்விகண்டுள்ளது. இது தான் இந்த சிக்கலுக்கான பிரதான காரணம். ஐக்கிய நாடுகள் தாபனம் போன்ற அமைப்பொன்று கொண்டுவந்த பிரேரணையை அமுலாக்க இயலாமல் போயுள்ளதே இந்த பேரழிவிற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் இடையீடு காரணமாகவே அதனை அமுலாக்க முடியாமல் போயுள்ளது. அவர்கள் தமது ஏகாதிபத்திய நோக்கங்களுக்காக பிராந்தியத்தில் அதிகாரச் சமநிலையை உருவாக்கிக்கொள்ள முயற்சிசெய்து வருகிறார்கள். அதனால் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆரம்பத்தில் நிறைவேற்றிக்கொண்ட இரட்டை அரச எண்ணக்கருவினை அமுலாக்குவதே இந்த சிக்கலுக்கான தீர்வாகும். சுயாதீனமான சுதந்திரமான இஸ்ரவேலையும் சுயாதீனமான சுதந்திரமான பாலஸ்தீனத்தையும் ஏற்றுக்கொள்வதாகும். அந்த கொள்கையின் அடிப்படையில் செயலாற்றுவதன் மூலமாக இந்த முரண்பாட்டினைத் தீர்த்துக்கொண்டு இரண்டு நாடுகளுக்கும் நிலவுவதற்கான இயலுமை ஏற்படும். உலக வல்லரசுகளின் பொறுப்பாக அமைவதும் ஐக்கிய நாடுகளின் பிரேரணைக்கமைவாக செயலாற்றுவதாகும். சிவிலியன்கள் படுகொலை செய்யப்படுகின்ற, சிறுவர்கள், பெண்கள் பாதிக்கப்படுகின்ற, சிறுவர்கள் அநாதைகளாக மாறுகின்ற இந்த மோதலை நிறுத்திக்கொள்ள வேண்டுமென நாங்கள் மீண்டும் உலக சமூகத்திடமும் அனைத்துத் தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
“அதிகரித்து வருகின்ற பொருளாதார அழுத்தம் காரணமாக குடும்பத்திலும் வேலைத்தலத்திலும் சமூக உறவுகள் சிதைவடைந்து வருகின்றன” –தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய–
தற்போது நிலவுகின்ற சமூக நெருக்கடி பற்றிப் பேசுகையில் நிலவுகின்ற நெருக்கடி மற்றும் அதற்காக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றியே பெரும்பாலானோரின் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. அதற்கு இணையானதாகவே மிகவும் பலம்பொருந்தியதாக எமது பொருளாதாரம் சம்பந்தமாக சமூகத்தின் சீரழிவையும் சமூகத்தின் பாதுகாப்பற்றதன்மையையும் எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது. இங்கு விசேடமாக நாங்கள் மேலோங்கச் செய்விக்கவேண்டியது பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிராக வளர்ந்துவருகின்ற வன்முறையாகும். தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற பொருளாதார அழுத்தம் காரணமாக குடும்பங்களுக்குள்ளேயும் வேலைசெய்கின்ற இடங்களிலும் பாதுகாக்கப்படவேண்டிய சமூக உறவுகள் அனைத்திற்கும் அழுத்தமேற்பட்டு வருவதை எம்மால் காணக்கூடியதாக உள்ளது. இதனால் சமூக உறவுகள் சீரழிந்து மரபுரீதியாக நிலவவேண்டிய அனைத்துக் கடப்பாடுகளும் பலவீனமடைந்து வருகின்றன. இதன்விளைவாக சமூகத்தில் பலவீனமானவர்கள் என அழைக்கப்படுகின்ற அதிகாரம் குறைந்த குழுக்களுக்கு வன்முறைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அது நாளுக்குநாள் வளர்ந்து வருகின்றது. குறிப்பாக பெண்களுக்கு, பிள்ளைகளுக்கு மற்றும் மூத்த பிரசைகளுக்கும் இந்த பிரச்சினையை எதிர்கொள்ளவேண்டி நேர்ந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்துப் பகுதிகளையும் அழித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. இது சம்பந்தமாக எந்தவிதமான கூருணர்வோ இரக்கமோ தயவோ இந்த அரசாங்கத்திடம் கிடையாது. அதனைக் குடும்பங்கள் என்றவகையிலும் தனிமனிதர்கள் என்றவகையிலுமே தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. நெருக்கடிக்கு இலக்காகிய சமூகத்தினாலேயே அதற்கான தீர்வுகளைக் கண்டறிய அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. அதற்காக இயங்கவேண்டிய நிறுவனங்களான பொலீஸ், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை திணைக்களம், மகளிர் அமைச்சு அல்லது இதில் எந்தவொரு நிறுவனமாக அமையக்கூடும். இந்த நிறுவனங்களும் கடுமையான அழுத்தங்களுக்கு இலக்காகி உள்ளன. இத்தகைய பிரச்சினைகளில் இடையீடு செய்ய அவசியமான வளங்கள், தொழில்நுட்ப வளங்கள், மனித வளங்களை இழந்து இந்த நிறுவனங்கள் மேலும்மேலும் பலவீனமடைந்துள்ளன. இவை திடீரென தோன்றியவை அல்ல. நீண்டகாலமாக சமூகப் பாதுகாப்பு முறைமையை நாசமாக்கிய ஆட்சியாளர்களின் ஆற்றாமை காரணமாக தற்போது இவை பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ளன. கடந்த வாரத்தில் தேசிய மக்கள் சக்தி மூத்த பிரசைகளின் ஒன்றியத்தை சந்தித்தது. அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எமது கவனத்திற்கு கொண்டுவந்தார்கள். ஓய்வுபெற்றவர்களுடன் கலந்துரையாடினோம். 1997 இல் இருந்து நிலவிவருகின்ற பிரச்சினைகள் காரணமாக அவர்கள் மிகுந்த நிர்க்கதி அடைந்துள்ளார்கள். எவ்விதத்திலும் அதிகரிக்காத ஓய்வூதியம் மற்றும் கிடைக்கவேண்டிய சம்பளம் உரிய நேரத்தில் கிடைக்காமை காரணமாக தோன்றிய பிரச்சினைகளால் அவர்கள் மிகுந்த அழுத்தங்களுக்கு இலக்காகி உள்ளார்கள். மூத்த பிரசைகள் பாரியளவிலான சுகாதார சிக்கல்களை எதிர்நோக்கி வருகிறார்கள். மருந்து தட்டுப்பாடும் சுகாதாரத் துறையிலான சீரழிவும் அவர்கள் எதிர்நோக்குகின்ற பாரதூரமான பிரச்சினைகளாக மாறியுள்ளன.
அவர்கள் எடுத்துள்ள கடன்களின் வட்டி அதிகரித்துள்ளமையும் மற்றுமொரு நெருக்கடியை உருவாக்கி உள்ளது. இவர்கள் பிள்ளைகளுக்கு சுமையில்லாமல் வாழக்கூடிய நிலையிலுள்ள பிரிவினராவர். ஆனால் தற்போது இவர்களின் சுமையையும் பிள்ளைகளே சுமக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. அதன் மூலமாக குடும்பங்களிலும் மேலும் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. அரசாங்கம் வருங்காலத்தில் சமர்ப்பிக்கின்ற வரவுசெலவுத் திட்டம் ஊடாகவும் இதற்கான தீர்வு கிடைக்குமென நம்ப இயலாது. வரவுசெலவு சமர்ப்பிக்கப்படுகின்ற இத்தருணத்தில் மூத்த பிரசைகளின் இந்த பிரச்சினைகளுக்கும் தீர்வுதேட வேண்டுமென்பதை நாங்கள் அரசாங்கத்திற்கு ஞாபகப்படுத்துகிறோம்.
இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன்னர் பொருந்தொட்டச் செய்கைக்காக, வீதிகளை நிர்மாணித்தல் ஆகிய பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தின் வரலாறு பற்றிப் பேசவே நாங்கள் இங்கு குழுமியுள்ளோம். அந்த வரலாறே கவலைக்கிடமானது. அதைப்போலவே இது எமது நாட்டில் இடம்பெற்றுள்ள ஒரு வரலாற்றுத் தவறாகும். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் அந்த தவறினை ஒழித்துக்கட்டுவோம். அதுமாத்திரமல்ல தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் அந்த வரலாற்றுத் தவறினை சரிசெய்வோமென சபதம் செய்கிறோம். இன்று இந்த ஹற்றன் பிரகடனத்திற்கு அவசியமாகின்ற […]
இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன்னர் பொருந்தொட்டச் செய்கைக்காக, வீதிகளை நிர்மாணித்தல் ஆகிய பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தின் வரலாறு பற்றிப் பேசவே நாங்கள் இங்கு குழுமியுள்ளோம். அந்த வரலாறே கவலைக்கிடமானது. அதைப்போலவே இது எமது நாட்டில் இடம்பெற்றுள்ள ஒரு வரலாற்றுத் தவறாகும். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் அந்த தவறினை ஒழித்துக்கட்டுவோம். அதுமாத்திரமல்ல தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் அந்த வரலாற்றுத் தவறினை சரிசெய்வோமென சபதம் செய்கிறோம். இன்று இந்த ஹற்றன் பிரகடனத்திற்கு அவசியமாகின்ற அடிப்படை வழிகாட்டலை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
இந்த பிரகடனத்தைச் செய்வதற்காக ஏன் இந்த ஹற்றன் நகரம் தெரிவுசெய்யப்பட்டது? தமிழ் சமுதாயம் அதிகமாக வசிக்கின்ற மலையகப் பிரதேசம் என்பதாலா? இல்லை. 1964 சிறிமா – சாஸ்திரி உடன்படிக்கைக்குப் பின்னர் இந்தப் பிரதேசத்தில் வசித்த பெருந்தொகையான தமிழ் மக்கள் இந்தியாவிற்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அந்த தமிழ் மக்கள் இந்த ஹற்றன் புகையிரத நிலையத்தில் புகையிரதத்தில் ஏற்றப்பட்டுதான் தலைமன்னாருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள். அந்நாட்களில் இந்த ஹற்றன் நகரமும் புகையிரத நிலையமும் கண்ணீரால் நனைந்தது. வேதனையால் அழுது புலம்பினார்கள். அது பற்றி ஒரு தமிழ் இலக்கியவாதியான தெளிவத்தை ஜோசப் அவருடைய “பாலை” எனும் நூலில் பின்வருமாறு கூறுகிறார். “மீண்டும் தாயகத்திற்கு வருதல்” என ஒருசிலர் குறிப்பிட்டதை மறுத்து இங்குள்ள பெரும்பாலானோர் கூறுவதைப்போல் “பலவந்தமாக” மலையக மக்கள் நாடு கடத்தப்பட்டார்கள் என நான் கூறுகிறேன்: இந்தயாவிற்கு செல்ல மறுத்து ஆங்காங்கே மறைந்திருந்த மக்களை பொலீஸாரை ஈடுபடுத்தி பிடித்து, வாகனங்களில் ஏற்றி, மன்னாருக்கு கொண்டுவந்து இந்தியாவிற்கு அனுப்பிவைத்த விதத்திற்கு வேறுவிதமாக பொருள்விளக்கம் கொடுக்க முடியுமா?” அவர் கூறுகின்ற விதத்தில் அது வேறொன்றுமல்ல, பலவந்தமாக ஏற்றி அனுப்புவதாகும். அவ்வேளையில் 150 வருடங்கள் வரை கழிந்திருந்தது. மூன்று நான்கு தலைமுறைகளால் புதிதாகிவிட்டது. ஆனால் “நீங்கள் இங்கு பிரஜைகள் அல்ல நீங்கள் இந்தியாவிற்குச் செல்லவேண்டும்” என அந்த மக்களுக்கு சட்டத்தினால் கூறப்படுகின்றது. அவர்கள் இந்தியாவுடன் இல்லை. இந்த பரம்பரை இந்தியாவுடன் வாழவில்லை. பொருளாதாரரீதியாக இந்தியாவிற்கு பங்களிப்பு வழங்கவில்லை. பிறந்தது இந்த பெருநிலத்திலேயே. இறந்ததும் இந்த மண்ணிலேயே. புதைக்கப்பட்டதும் வளம்பெறவைத்ததும் இந்த மண்ணிலேயே. இந்த நாட்டின் பொருளாதரத்திற்கே பங்களித்தார்கள். ஆனால் சட்டம் கூறியது, நீங்கள் இந்தியாவிற்குச் செல்லவேண்டுமென. அதோ அந்த ஹற்றன் நகரத்தில் இருந்துதான் நாங்கள் இன்று பேசுகிறோம்.
வரலாற்றில் இருந்த பேரவலம் அது மாத்திரமா? இல்லை. பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் எம்மைப்போல் இந்தியாவையும் குடியேற்ற நாட்டாக்கி் இருந்தார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். 1800 – 1900 யுகம் என்பது இந்திய கமக்காரர்களின் அறுவடையை அபகரித்தமையாலும் கடுமையான வறட்சிநிலை காரணமாகவும் பாரிய பஞ்சம் ஏற்பட்ட யுகமாகும். 1800 – 1900 யுகத்தில் பஞ்சம் காரணமாக இரண்டுகோடியே பதினான்கு இலட்சம் பேர் இறந்ததாக ஒருசில அறிக்கைகள் கூறுகின்றன. அது உங்களின் மூதாதையர்களே. அதுமாத்திரமல்ல பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் இலங்கையில் போன்றே மிகையான வரி விதிப்பினை மேற்கொண்டார்கள். அதனால் மக்கள்மீது பாரிய அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. வரி செலுத்தாமை காரணமாக பாரிய சித்திரவதைகளுக்கு இலக்காகினார்கள். மேற்படி சித்திரவதைகள் பற்றி விசாரிப்பதற்காக மெட்ராஸில் சித்திரவதை ஆணைக்குழுவொன்றை நியமிக்கவேண்டியநிலை பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு ஏற்பட்டது. அந்த அறிக்கைகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ” ஜுன் மாதத்தில் இருந்து ஆகஸ்ற் மாதம்வரை வரித்தொகையைச் செலுத்துமாறு வருமானக் கட்டுப்பாட்டு அதிகாரி எம்மைக் கடுமையாக நிர்ப்பந்தித்தார். இந்த விடயத்தை அடிப்படையாகக்கொண்டு அவர்கள் என்னையும் மேலும் சிலரையும் பிடித்துக்கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் நிறுத்தி வைத்தார்கள். எமது முதுகினை வளைத்து வைத்து வெப்பமடைந்த கற்பாறையை முதுகின்மீது வைத்து முடிச்சுப்போட்டு நாள்முழுவதிலும் சூடான மணல்மீது இருக்க வைத்தார்கள். தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் இவ்வாறு சித்திரவதை புரிந்தார்கள்…” அது இந்தியாவில் அல்லற்பட்ட மூதாதையர்கள்.
அந்த சுற்றாடல் இதைவிட நல்லதோர் இடத்தை தெரிவுசெய்யுமாறு அவர்களை நிர்ப்பந்தித்தது. மறுபுறத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் அவர்களில் பெரும்பாலானோரை பல்வேறு நாடுகளுக்கு உழைப்பாளிகளாக கொண்டுசென்றார்கள். இவ்விதமாக இலங்கையில் வீதிகளை நிர்மாணிக்கவும், கோப்பிச் செய்கையை ஆரம்பிக்கவும் பெருந்தொகையான உழைப்பாளிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர். தனுஷ்கோடி துறைமுகத்தில் இவர்களை கப்பலேற்றி மன்னார் துறைமுகத்தில் தரையிறக்கினார்கள். கடலில் புயலில் சிக்குண்டு பெருந்தொகையானோர் இறந்துவிட்டதாக ஒருசில அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இறந்தவர்களின் சடலங்கள் கடலிலேயே வீசியெறியப்பட்டன. அவர்கள் மன்னாரிலிருந்து, மதவாச்சி, தம்புள்ள. மாத்தளை வரை நடந்தே வந்தார்கள். பின்னர் மலைமுகடுகளில் ஏறி இந்த பிரதேசத்திற்கு வந்தார்கள். இக்காலத்தில் இலங்கையில் 3000 அடிகளுக்கு மேற்பட்ட எந்தவொரு பிரதேசமும் குடியிருப்பு மயமாக்கப்பட்டிருக்கவில்லை. மனித வசிப்பிடங்கள் நிலவவில்லை. டயகம, ஹற்றன், தலவாகலை, றாகல இவையனைத்துமே 3000 அடிகளுக்கு மேற்பட்ட உயரத்திலேயே அமைந்திருந்தன. பாதைகள், வீதிகள் இருக்கவில்லை. இந்த மக்கள் கால்நடையாகவெ காடுகள் ஊடாக இப்பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்டார்கள். பணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டதும் சற்று சிறிய உணவையும், தேங்காய் சிரட்டையில் தண்ணீரையும் கொடுத்து இவர்களை அழைத்து வந்தார்கள். தலைமன்னார் தொடக்கம் இப்பிரதேசம்வரை காடுகளை ஊடறுத்து நடந்து வருகையில் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி அந்த பயணத்தின்போது 15% மடிந்தனர். இவர்களின் சடலங்கள் புதையுண்டு கிடப்பது இந்த மலையகப் பிரதேசத்தில் மாத்திரமல்ல: தொலைதூர தலைமன்னார், மதவாச்சி, தம்புள்ள, மாத்தளை வரை அவர்களின் சடலங்கள் பரந்து புதையுண்டு இருக்கின்றன. அவர்கள் தோட்டச் செய்கைக்காக சாதகமான எதிர்பார்ப்புடன் வந்தார்கள். அவர்களின் நாட்டார் பாடல்கள் ஊடாக அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
“குனி்ஞ்சி குனிஞ்சி ஏறிய மலை
கோப்பிச்செடி நாட்டிய மலை
அண்ணன்மார் சறுக்கி விழுந்த மலை
அதோ தெரிகிறது“
அதன் மூலமாக கூறப்படுவது என்ன? இந்த மலைகள் பூராவிலும் அவர்கள் மடிந்துள்ளார்கள் என்பதல்லவா. இந்த சிரமமான பயிர்வளர்ப்பில் அந்த மனிதர்கள் அனுபவித்த வாழ்க்கை என்ன? அது பற்றி ஒரு நாட்டார் பாடலில் பின்வருமாறு கூறப்படுகின்றது.
“கோணக்கோண மலையேறி
கோப்பிப்பழம் பறிக்கையில
ஒருபழம் தப்பிச்சின்னு
ஒதச்சான் ஐயா சின்ன தொர“
இந்த பெருந்தோட்டச் செய்கை மிகவும் கடினமானதாக அமைந்தது. வாழ்க்கை என்றால் என்னவென அறிந்திராத மக்கள், சுவையான உணவுவேளையொன்று பற்றிய உணர்வற்ற மக்கள், வீடு பற்றிய அனுபவமற்ற மக்கள், வாழ்க்கையில் எந்தவிதமான களியாட்டத்தையும் கண்டிராத மக்கள், மகிழ்ச்சியுணர்வு பெற்றராத மக்கள் இந்த மலைகளின் மத்தியில் செத்துமடிந்தார்கள். கோப்பிச் செய்கை சீரழிந்த பின்னர் அவர்கள் தேயிலைச் செய்கைக்கு இசைவாக்கம் அடைந்தார்கள். அங்கே வாழ்க்கை சாதகமானதாக அமைந்ததா? அன்று நாட்டார் பாடலாசிரியர் பின்வருமாறு கூறினார்.
“கொங்கணி போட்டு பழக்கமில்ல – நாங்க
கொழுந்தெடுத்தும் பழக்கமில்ல
சில்லறை கங்காணி சேவகமே – எங்களை
சீமைக்கு அனுப்புங்க சாமிசாமி“
இந்த மக்களில் எவருமே விருப்பத்துடன், மகிழ்ச்சியுடன், எதிர்பார்ப்புடன் இந்த தாய்மண்ணில் வாழவில்லை. பெருமூச்சு விட்டுக்கொண்டு நாள்தோறும் வேதனையின் அடித்தளத்தில் அமிழ்ந்து சீவித்தவர்களாவர்.
பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் கீழ் 125 வருடங்கள் நிகழ்கால ஆட்சியாளர்களின்கீழ் 75 வருடங்கள் என்ற வகையில் இந்த 200 வருடங்கள் நான்கிற்க மேற்பட்ட தலைமுறைக்கு வழங்கியுள்ள தலைவிதி என்ன? 1948 இல் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் சென்றபின்னர் சுதேச குழுவொன்று ஆட்சியைக் கைகளில் எடுத்துக்கொண்டது. 1949 இல் பிரசாவுரிமை சட்டம் கொண்டுவரப்படுகின்றது. பிரசாவுரிமை பெறவேண்டுமாயின் 1949 நவெம்பர் 15 இற்கு முன்னர் பிறந்திருக்கவேண்டுமென பிரசாவுரிமை சட்டத்தில் பணிப்புரை விடுக்கப்படுகின்றது. இரண்டு தலைமுறைகளாக இங்கு வசித்ததாக எழுத்திலான சான்று இருக்கவேண்டும். பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லாத, முகவரியொன்று இல்லாத, பதிவேடொன்றில் பெயர் குறிப்பிடப்படாத பிரசைகள் தாம் இரண்டு தலைமுறைகளாக இங்கு வசித்ததாக கொடுப்பதற்குள்ள சான்றிதழ் என்ன? ஏழு இலட்சம் பேருக்கு பிரசாவுரிமை கிடையாது, இந்த நாட்டில் வசிக்கிறார்கள், பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்கிறார்கள், இந்த நாட்டில் இறக்கிறார்கள், எனினும் நாட்டின் பிரசைகள் அல்ல. மிகவும் சிறிய குழுவினருக்கு மாத்திரம் பிரசாவுரிமை வழங்கப்பட்டது. வர்த்தகங்களால் செல்வத்தை திரட்டிய, தோட்டங்களிலிருந்து செல்வத்தைக் குவித்துக்கொண்ட, பெருந்தொகையான பயிர்நிலங்களை சொந்தமாகக் கொண்டிருந்த மிகவும் சிறிய குழுவினருக்கு பிரசாவுரிமை கிடைத்தாலும் ஏழு இலட்சத்திற்கு மேற்பட்ட தாழ்ந்த வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கு பிரசாவுரிமை கிடைக்கவில்லை. ஆளும் வர்க்கத்தினர் மீண்டும்மீண்டும் அவர்களாகவே பிரசாவுரிமையை ஒழித்து, மீண்டும்மீண்டும் தேர்தலின்போது “நாங்கள் பிரசாவுரிமையைக் கொடுப்போம்” என்ற அரசியல் வாக்குறுதியை வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக ஏலவிற்பனை செய்தார்கள். மக்கள் என்ற வகையில் இவர்கள் 2003 இல் பிரசாவுரிமையை நிறைவுசெய்கிறார்கள். 1949 இல் இருந்து 54 வருடங்களில் ஒரு தலைமுறைக்கு மேலானவர்கள் பிரசாவுரிமையின்றி இந்நாட்டில் இறந்தார்கள். முழுமையான பிரசாவுரிமை கிடைத்து இன்றளவில் 20 வருடங்கள் கழிந்துள்ளன. அவர்களுக்கு உத்தியோகபூர்வ ஆவணங்களில் பிரசாவுரிமை கிடைத்திருந்தாலும் இலங்கையின் பிரசைக்கு இணையான உரிமைகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை
மலையகத் தமிழ் மக்களின் தேவை கௌரவமான மனித சமுதாயமாக வளர்வதாகும். தேசிய மக்கள் சக்தி என்றவகையில் நாங்கள் உங்களை நோக்குவது இரக்கத்தை வேண்டிநிற்கின்ற மக்களாக அல்ல. உங்களுக்குத் தேவை இந்நாட்டில் கௌரவமான பிரஜைகளாக வசிப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதாகும். அதற்கான நியாயமான உரிமை உங்களுக்கு உண்டு.
உலகம் படிப்படியாக ஒன்றாக இணைந்து வந்தது. தொழில்நுட்பத்தினால், சந்தையால், தொடர்பாடலால், போக்குவரத்தினால் உலகில் ஒருங்கிணைப்புகள் கட்டியெழுப்பப்பட்டு வந்தது. உலகின் எந்தவொரு நாடும் அந்நாடு உலகச் சந்தையில் எந்தளவு பங்கினைக் கைப்பற்றியுள்ளதெனும் காரணியின்பேரிலேயே தங்கியிருக்கின்றது. கடந்த வருடத்தில் எண்ணெய், கேஸ், மின்சாரம் கிடைக்காமல் போயிற்று. மக்கள் வாழ்க்கையே செயலற்றுப் போனது. நாடு சீர்குலைந்தது. அதற்கான பிரதானமான காரணம் யாது? எமக்கு அவசியமான வெளிநாட்டுப் பணம் டொலர் அளவு எமது ஒதுக்கங்களில் இல்லாமல் போனமையாகும். நிகழ்கால உலகில் உலக சந்தையில் நியாயமான பங்கினை கையகப்படுத்திக்கொள்ள வேண்மென ஒவ்வொரு நாடும் நிர்ப்பந்திக்கப்படுகின்றது. பல தசாப்தங்காளக உலக சந்தையில் எமது பெரிய பங்கு என்ன? சேவைப் பங்களிப்பு. இன்றும் வருடமொன்றிற்கு 130 கோடி டொலர் சேவைகளை வழங்குவதன் மூலமாகவே பெறப்படுகின்றது. கொழும்பிற்குச் சென்றால் பாரிய கட்டிடங்களை நாங்கள் காண்கிறோம். அவற்றுக்காக பெரும்பாலான பண்டங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. நீங்கள் இங்கிருந்து அங்கு அனுப்பிவைத்து ஈட்டுகின்ற டொலர்களில் நாடு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இங்கிருந்து அங்கு அனுப்பிவைத்து ஈட்டுகின்ற டொலர்களைக்கெண்டு நாடு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இங்கு தேயிலை வளர்த்து ஈட்டுகின்ற டொலர்களிலிருந்து பாலங்கள் அமைத்திருக்கிறார்கள், புகையிரத பெட்டிகளைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதாவது புகையிரதத்திலும், பஸ் வண்டியிலும், பெரிய ஜீப் வண்டியிலும், பெரிய கட்டிடத்திலும், பாரிய பாலங்களுக்குள்ளேயும் உங்களின் உழைப்பு மறைந்திருக்கின்றது. அதற்கான நியாயமான பெறுமதியை செலுத்தவேண்டுமல்லவா?
எமது நாட்டில் கடந்த பல தசாப்தங்களாக ஏதேனும்வகையிலான முன்னேற்றம் காணப்பட்டிருப்பின் அதற்க பிரதான காரணமாக அமைவது நீங்கள் சிந்துகின்ற உழைப்புதான். பொருளாதாரம் மாற்றமடைந்தது. உலகம் மாற்றமடைந்தது. நீண்டகாலமாக நீங்கள் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்தீர்கள். ஆனால் உங்களுக்கு என்ன நேர்ந்துள்ளது? ஏறக்குறைய 150 வருடங்கள் பழமையான லயன் அறையில் நீங்கள் இன்றும் இன்னமும் வசிக்கிறீர்கள். இது நீதியாகுமா? 150 வருடங்களுக்கு மேலாக பழைய வீடு என்றால் என்ன? தோழர் பிரதீப் வசிக்கின்ற ஊரில்தான் கஹவத்தையிலேயே இலங்கையின் மிகப்பெரிய லயன் வரிசை இருக்கின்றது. அவை 150 வருடங்கள் பழையவையென அவர் கூறினார். உங்களை மனித சமுதாயமாக மதிக்கின்ற, அந்த பெறுமதி கிடைக்கின்ற புதிய ஆட்சியொன்று எமக்குத் தேவையில்லையா? நாங்கள் 200 வருடங்களுக்குப் பின்னராவது இந்த மாற்றத்தை செய்யவேண்டும்.
உங்களுடைய துன்பங்களும் வேதனைகளும் உங்கள் கையில் தாலாட்டுகின்ற பிள்ளைக்கு, வயிற்றில் அசைகின்ற குழந்தைக்கு உரித்தாகாத ஒரு தேசத்தை நாங்கள் உருவாக்குவோம். 1823 இல் இருந்து இங்கு கொண்டுவரப்பட்ட உழைப்பாளிகளில் இரண்டு இலட்சம் பேர் மலேரியா பெருந்தொற்றினால், அரவம் தீண்டியதால், கொலறா பெருந்தொற்றினால், அதைப்போலவே மகப்பேற்றின்போது இறந்துள்ளார்கள். வேதனையால் நசுக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொருளாதாரரீதியாக மாத்திரமல்ல சமூக மதிப்பையும் இழந்த மக்களுக்கு நல்ல வாழ்க்கையையும் மதிப்புமிக்க வாழ்க்கையையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். மக்களில் நூற்றுக்கு 63 வீதத்தினருக்கு இந்த நாட்டில் ஓரங்குல நிலம்கூட கிடையாது. இருக்க வீடு கிடையாது. தோட்டத்துடன் முடிச்சுப்போட்ட வீடொன்று இருக்கிறது. தொழிலில் இருந்து நீங்குவதாயின், வேறு தொழிலொன்றைத் தெரிவுசெய்வதாயின் லயன் அறையை விட்டுச்செல்லவேண்டும். அவர் ஒரு சுதந்திரமான பிரசையல்ல.
நீங்கள் ஒரு நல்ல வீட்டினை எதிர்பார்த்து எவ்வளவு காலமாக அரசாங்கங்களை உருவாக்கினீர்கள்? நான் ரொசிட்டா பண்ணையில் என்.எல்.டீ.பீ. விற்பனை நிலையமொன்றுக்குச் சென்றேன். அங்கு ஒரு தமிழ் சகோதரர் ” நாங்கள் பண்ணையில் வேலை செய்கிறோம். வேலை செய்கின்ற காலத்தில் எமக்குச் சிறிய அறையொன்றைத் தந்திருக்கிறார்கள். தொழிலை இழந்தால், இளைப்பாறிச் சென்றால் அறையிலிருந்து பிள்ளைகளும் மனைவியும் நானும் எங்கே போவது?” எனக் கேட்கிறார். இந்த வீடு, காணி, வீடற்ற மலையக மக்களுக்கு நாங்கள் மிகவும் தெளிவாக வாக்குறுதியையும் உத்தரவாதத்தையும் அளிக்கின்றோம். உங்களுக்கான காணியையும் வீட்டையும் உறுதிசெய்கின்ற ஆட்சி தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாகும்.
உங்களுக்கு வருமான வழியொன்று இருக்கிறதா? ஒரு நாளுக்கு 1000 ரூபா சம்பளம் பெறுவதற்காக எத்தனை நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட நேரிட்டது? சாலைமறியலில் ஈடுபட, பேரணியில்செல்ல நேரிட்டது? ரூபா 1000 போராட்டத்தை தொடங்கியவேளையில் ஒரு இறாத்தல் பாண் ரூபா 40 ஆகும். 1000 ரூபா வழங்க தீர்மானிக்கும் போது பாண் ரூபா 160. இன்று போதுமானதா? பிரஜைக்கு தான் ஈடுபடுகின்ற தொழிலில் இருந்து உணவை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால், உடையை கொள்வனவுசெய்ய முடியாவிட்டால், மருந்து வாங்க முடியாவிட்டால், பிள்ளைக்கு கல்வி புகட்ட முடியாவிட்டால் அது ஒரு தொழிலா? அதனால் தோட்டக் கம்பெனிக்காரர்களிடமிருந்து “உடலில் இருந்து ஓர் எலும்பினை எடுப்பதுபோல்தான்” தொழிலாளருக்கு ரூபா 1000 வழங்க இணங்குவது. ரூபா 1000 செலுத்தமுடியாத கைத்தொழில் எதற்காக? கைத்தொழிலின் பிரச்சினையல்ல நிலவுவது. அவர்கள் கோரிநிற்பது இந்த தோட்டத்தில் வசிக்கின்ற மக்கள் வழங்குகின்ற வருமானத்தில் இருந்து சேகரித்து பிழிந்துகொண்டிருக்கின்ற செல்வத்திலிருந்து விரல் இடுக்களிலிருந்து கீழே வடிகின்ற ஒரு சொட்டினை மாத்திரமே வேண்டிநிற்கிறார்கள். உங்களுக்கு வாழ்க்கையைப் பேணிவர அவசியமான நியாயமான வருமான வழியைக்கொண்ட பொருளாதாரத்தை அமைத்துக்கொடுப்பதாக நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். இன்றும் தோட்டத்தில் வேலைசெய்கின்ற மக்களுக்கு வெளியில் வருவதற்கான வாய்ப்பு நிலவுவது கல்வியால் மாத்திரமே. சகோதரி போல்ராஜ் இலவசக் கல்விச் சட்டத்தினால் இலவசக் கல்வி கிடைத்தாலும் நீங்கள் இந்த நாட்டில் வசித்தாலும் பிரஜையாக இல்லாமை காரணமாக அதன் நியாயமான பெறுபேறுகள் கிடைக்கவில்லையென சுட்டிக் காட்டினார். இன்றும் அப்படித்தான். இரத்தினபுரி மாவட்டத்தில் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பிரிவில் உயர்தரத்தை தமிழில் கற்பதற்கான ஒரு பாடசாலைகூட கிடையாது. இந்த மத்திய மலைநாட்டில் ஓரளவுக்கு இருந்தாலும் கீழ்நோக்கிச் செல்லும்போது கிடையவே கிடையாது. கல்வியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகள் தலைமுறையினரே இங்கு வசிக்கிறார்கள்.
இந்த மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றியமைத்திட வேண்டுமாயின் பத்தகமொன்றை வாசிக்கின்ற, கவிதையை இரசிக்கின்ற, தமழ்நாட்டுத் திரைப்படத்திலிருந்து விடுபட்டு இலங்கை சினிமா பற்றிச் சிந்திக்கின்ற புதிய தலைமுறையொன்றை நாங்கள் உருவாக்க வேண்டுமென நாம் நினைக்கிறோம். மலையக மக்களின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொள்வதற்கான நியாயமான அணுகுமுறையை உறுதிப்படுத்துவதன் மூலமாக மாத்திரமே அந்த புதிய தலைமுறையினரை உருவாக்க முடியும். அது தீர்க்கப்படவேண்டிய பிரச்சினையாகும். அதைப்போலவே பொதுவில் எடுத்துக்கொண்டால் எமது நாட்டில் பெண்கள் கடுமையாக இன்னல்களுக்கு இலக்காகி உள்ளார்கள். அதிலும் இந்த மலையகப் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்ட பெண்களாக விளங்குவது எமக்குப் புலனாகின்றது. மெலிந்த உடல்கள், பிளவுபட்ட கூந்தல், உலர்ந்த சருமத்துடனான உடல், பாரிய இன்னல்களுக்கும் விரக்திக்கும் இலக்காகிய மகள்மார் இங்கே வசிக்கிறார்கள். அவள் வாழ்க்கை என்றால் என்னவென்பதை அறியாதவள். தோட்டத்தில் பிறக்கிறாள். தோட்டத்தில் உழைக்கிறாள். தோட்டத்திலேயே இறக்கிறாள். தோட்டத்திற்கு வெளியில் உள்ள உலகம் பற்றியோ, சமூகம் பற்றியோ, வாழ்க்கை பற்றியோ அனுபவமின்றி இறக்கிறாள். அவளுக்கு நியாயமானதும் நீதியானதுமான வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
நான் உங்களிடம் கேட்கிறேன், உங்களுக்கு இருப்பது பொருளாதாரப் பிரச்சினை மாத்திரமா? உங்களுக்கு சமூக அங்கீகாரம் இருக்கிறதா? அத்தகைய அங்கீகாரம் கிடையாது. கொழும்பு வீடொன்றில் வேலைசெய்ய எவரும் இல்லாவிட்டால் ஹற்றனில் இருந்து தலவாகலையில் இருந்து இளம்பெண்ணைத் தேடுவார்கள். கொழும்பு நகரத்தை உள்ளிட்ட பாரிய நகரங்களில் ஹோட்டல்களின் பீங்கான் கழுவுபவர்கள் தோட்டங்களிலிருந்து வந்த இளைஞர்களாவர். தமக்கு இணையானவர்களாக அவர்களை நோக்குவது கிடையாது. அவர்களுக்கு தாழ்வான குறைந்த சிறப்புரிமை பெறுகின்ற மக்கட் பிரிவினரை பார்ப்பதுபோல்தான் பார்க்கிறார்கள். வீடுகளில் சமைக்க, கூட்டிச் சுத்தஞ்செய்ய, பபாவின் கக்கா கழுவ, ஹோட்டல் பீங்கான் கழுவ, கழிப்பறைத் தொகுதிகளைக் கழுவ இதற்காகத்தான் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவை தொழில்கள்தான். அப்படியில்லாத உலகமொன்ற நிலவமாட்டாது. ஆனால் அவற்றை தாழ்ந்தவையாகக் கருதி அவற்றின் மரபுரிமையாளர்களாக மலையக மக்களை மாற்றியிருப்பதே இங்குள்ள பிரச்சினையாகும். உங்களுக்கு நல்ல நியாயமான வாழ்க்கை கிடைக்கவேண்டும். பொருளாதாரரீதியாக மாத்திரமன்றி சமூக நன்மதிப்புடன் சமூக அங்கீகாரத்தைக்கொண்ட வாழ்க்கை கிடைக்கவேண்டும்
நீண்டகாலமாக அந்த பிரதேசங்களில் நிலவுவது வாக்குகள் அல்ல, வாக்கு வங்கிகளே. மகிந்த ராஜபக்ஷவிற்கு மலையகத்தில் வாக்குகள் கிடையாது. ஆனால் தொண்டமானின் வாக்கு வங்கியொன்ற இருக்கின்றது. எத்தனை அமைச்சுப் பதவிகள்? ஆளுனர் பதவி கிடைக்குமா? வாக்கு வங்கியை அடகு வைக்கிறார்கள். பிரசையின் தனித்தனி வாக்கிற்கு கிடைக்கின்ற அதிகாரத்தை வாக்கு வங்கியில் வைப்புச்செய்து அந்த இரும்புப்பெட்டியின் திறவுகோலை தொண்டமானின் திகாம்பரத்தின் கையில் வைத்துக்கொண்டு இங்கமிங்கும் இரும்புப்பெட்டியைத் திறக்கிறார்கள். இதுவரை கட்டியெழுப்பப்பட்ட அரசாங்கங்களுக்கு தனித்தனி ஆட்களுடன் பேரம்பேசுகின்ற தேவை நிலவவில்லை. தனித்தனி வாக்குகளைப் பெற்றுக்கொள்ள பிரயத்தனம் செய்யவேண்டியதில்லை. வாக்குகள் அனைத்துமே வாக்கு வங்கியின் இரும்புப் பெட்டியில் இருக்கின்றன. இரும்புப் பெட்டியின் கதவினைத்திறந்து தொண்டமான்கள் அவற்றை அங்குமிங்கும் பகிர்ந்தளிக்கிறார்கள். பேரம்பேசும் சக்தி இருந்தது வாக்காளரின் கையிலல்ல: வாக்கு வங்கி உரிமையாளரின் கையிலாகும். அரசாங்கம் டீல்பண்ணவது, பேரம்பேசுவது, அரசாங்கங்கள் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்வது. பிரச்சினைகளைத் தீர்ப்பது இரும்புப்பெட்டிச் சொந்தக்காரருடனேயே. இரும்புப்பெட்டிச் சொந்தக்காரரின் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. உங்கள் பிள்ளைக்கு தோட்டத்தில் பாடசாலை இல்லாவிட்டாலும் இரும்புப்பெட்டியின் சொந்தக்காரரின் பிள்ளை இங்கிலாந்தில் இருந்து வந்துதான் இரும்புப்பெட்டியின் திறவுகோலை பொறுப்பேற்றது. தந்தை இறந்த பின்னர் இரும்புப்பெட்டியின் திறவுகோல் மகனுக்கு கிடைத்தது. ஒருவர் போதாது என்பதால் இந்தியாவிலிருந்து ஒருவரை திறவுகோலை பொறுப்பேற்பதற்காக கொண்டுவந்தார்கள். அவர் தற்போது கிழக்கின் ஆளுனர். இந்த ஆட்சியாளர்கள் யாருடைய பிரச்சினையைத் தீர்த்துவைத்துள்ளார்கள்? தோட்டத்தில் வேலைசெய்கின்ற பிரஜையின் பிரச்சினையை அல்ல. வாக்காளரின் பிரச்சினையை அல்ல. அவர்கள் இரும்புப்பெட்டிச் சொந்தக்காரரின் பி்ரச்சியைத்தான் தீர்த்து வைத்துள்ளார்கள். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் உருவாக்குவது உங்களின் வாக்குகளை சேகரித்த வாக்கு வங்கியொன்றை அல்ல. ஒவ்வொரு பிரஜைக்கும் தமது வாக்கின் உரிமையை சுயாதீனமாக பாவிக்கக்கூடிய உளப்பாங்கினைக்கொண்ட புதிய மக்கள் உரையாடல் களமொன்றை நாங்கள் உருவாக்குவோம்.
நாட்டடின் ஆட்சியாளர்களை தெற்கின் மக்கள் வீதியில் இறங்கி விரட்டியடித்தார்கள். தெற்கின் ஆட்சியாளர்கள் மக்களுக்குப் பயந்தவர்கள். மக்கள் மத்திக்கு வரமாட்டார்கள். மக்களை தவிர்த்துச்செல்ல பதில் தேடுகிறார்கள். உள்ளுரதிகாசபைகள் தேர்தலை பிற்போடுகிறார்கள். மேலும் தேர்தல்களை பிற்போட திட்டம்தீட்டி வருகிறார்கள். கொழும்பு, தென்பகுதி, வடமத்தி அப்சற்தான் என அவர்கள் கதைக்கிறார்கள். ஆனால் நுவரெலியாவில் தொண்டமான் இருக்கிறார் அல்லவா. திகாம்பரம் இருக்கிறார் அல்லவா. அவர்கள் காப்பாற்றித் தருவார்கள். ஆட்சியார்கள் அவர்களின் மக்களுக்கு எதிரான ஆட்சியை, அழிவுமிக்க ஆட்சியை முன்னெடுத்துச்செல்ல வேண்டுமாயின் இந்த மலையக மக்களின் ஒத்துழைப்பு கிடைக்குமென நினைக்கிறார்கள். அது இறந்தகாலத்தில் உண்மை. அதனை நிகழ்காலத்தில் பொய்யாக மாற்றவேண்டும். வாக்கு இரும்புப்பெட்டிச் சொந்தக்காரரின் அரசியலுக்குப் பதிலாக பொதுமக்களின் அரசியலை மலையக மக்கள் மத்தியில் மீளக்கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.
பெருந்தொகையான இளைஞர் சமுதாயம் தற்போது தேசிய மக்கள் சக்தியைச் சுற்றிக் குழுமி வருகின்றது. இந்த நுவரெலியாவின் பலம்பொருந்திய பாராளுமன்ற உறுப்பினரொருவர் “தோட்டத்தில் வேலைசெய்பவர்கள் இன்னமும் தலைவர்களுக்கு கட்டுப்பட்டவர்களே. தோட்டத்திருந்து வெளியில் வந்துள்ள இளைஞர் தலைமுறையினர் உங்களுடனேயே, என்பி.பி. அமைப்புடன்தான் இருக்கிறார்கள்” என பாராளுமன்றத்தில் கூறினார். தோட்டத்தின் நுகத்தடியில் இருந்து விடுபட்ட புறா இன்று சுதந்திரமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டது. அதனால் மலையக மக்கள் மத்தியில் புதிய இளைஞர்கள், அவர்களின் எதிர்பார்ப்புகள் வளர்ந்துகொண்டிருக்கின்றன. மரபுரீதியான அல்லற்படுத்திய ஆட்சிக் குழுக்களுக்குப் பதிலாக பொது மக்களின் தேவைகளுடன் பின்னிப்பிணைந்த புதிய இளைஞர் தலைமுறையொன்று அந்த மலையக மக்கள் மத்தியில் இருந்து முன்நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். மென்மேலும் முன்னணிக்கு வரவேண்டியுள்ளது. 200 வருடங்களாக நேர்ந்துள்ள வரலாற்றுத் தவறினை மாற்றியமைக்கின்ற அபிலாஷையும் எதிர்பார்ப்பும் எமக்கு இருக்கின்றது. அது எமது இனிமையான கனவாக மாத்திரம் அமைந்துவிடலாகாது. வரலாற்றில் ஏற்பட்ட தவறினை திருத்தியமைக்க வேண்டுமென மலையக மக்கள் தீர்மானமொன்றை எடுத்தால் மாத்திரமே அதனை சாதிக்கமுடியும். எம்மனைவராலும் ஒன்றுசேர்ந்து இனிமையான கனவினைக் காணமுடியுமாயின் இந்த இருள்மயமான இரவினை குறுகியதாக்க இயலும். நாங்கள் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். இந்த இருள்சூழ்ந்த இரவினை குறுகியதாக மாற்றிடுவோம். அதற்காக அனைவரையும் ஒன்றுசேருமாறு அழைக்கிறோம்.
மலையகத் தமிழ் மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அந்த மக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார, அரசியல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் “ஹட்டன் பிரகடனம்” இற்கு கைச்சாத்திடும் நிகழ்வு கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. மலையக தமிழ் மக்களின் பங்களிப்புடன் ஹட்டன் நகரில் டி. கே. டபிள்யூ. கலாசார மண்டபத்தில் இந்த விசேட நிகழ்வு இடம்பெற்றது. […]
மலையகத் தமிழ் மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அந்த மக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார, அரசியல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் “ஹட்டன் பிரகடனம்” இற்கு கைச்சாத்திடும் நிகழ்வு கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. மலையக தமிழ் மக்களின் பங்களிப்புடன் ஹட்டன் நகரில் டி. கே. டபிள்யூ. கலாசார மண்டபத்தில் இந்த விசேட நிகழ்வு இடம்பெற்றது.
அங்கு வரவேற்புரையை அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பிரதிச் செயலாளர் கிருஷ்ணன் கலைச்செல்வி நிகழ்த்தியதுடன் பிரதான உரையை தோழர் அனுர திஸாநாயக்க அவர்களால் நிகழ்த்தப்பட்டது. பேராசிரியர் விஜய குமார், கலாநிதி P.P. சிவப்பிரகாசம், தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் சரோஜா போல்ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இங்கு “தீயில் முளைத்த தேயிலை கொழுந்து” என்ற ஆவணப்படமும் காட்சிப்படுத்தப்பட்டது. அத்துடன் எழுத்தாளர் சதீஷ் செல்வராஜ் எழுதிய “குளிரும் தேசத்துக் கம்பளிகள்” புத்தகம் வழங்கும் நிகழ்வும் இங்கு இடம்பெற்றதுடன் “பிடி தளராதே” குழுவினரால் பல கலாச்சார நிகழ்ச்சிகளும் வழங்கப்பட்டன.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த பிரமுகர்களான தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களான சட்டத்தரணி லால் விஜேநாயக்க, பேராசிரியர் விஜய குமார், கலாநிதி P.P. சிவப்பிரகாசம், மஹிந்த ரத்நாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரும். அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ், நுவரெலியா மாவட்ட ஜே.வி.பி. அமைப்பாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் மஞ்சுள சுரவீர, தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி அனுஷ்கா தர்ஷனீ திலகரத்ன, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப், தொழிலாளர் கூட்டுறவு சங்க அமைப்பாளர் ராமையா நடராஜா, வைத்தியர் அருள் கோகிலன், நாடக நடிகர் முனியாண்டி காளிதாஸ், சட்டத்தரணி செல்வராஜ், தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் ஸ்ரீதரன், தேசிய மக்கள் சக்தியின் ஹப்புத்தளை தொகுதி செயற்குழு உறுப்பினர் கே. அஷோக் குமார், தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாணிக்கம் அஷோக் குமார், இலங்கை ஆசிரியர் சேவை சங்க அகரபத்தனை பிரதேச செயலாளர் ரிச்சட் ரொஹான், நுவரெலியா மாவட்ட அதிபர் சேவை சங்கத்தின் நல்லமுத்து விஜயகுமாரன், தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா – மஸ்கெலியா தொகுதி செயற்குழு உறுப்பினர் அதிபர் கருப்பண்ணன் ராமராஜ், தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்னய்யா விஸ்வநாதன், தேசிய கல்வி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற மொழிபெயர்ப்பு விரிவுரையாளர் திருமதி அர்ஷலா விவேகானந்தன், நுவரெலியா மாவட்ட சோஷலிச இளைஞர் சங்கத்தின் குழு உறுப்பினர் கந்தசாமி பிரபு, அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்க மஸ்கெலியா பிரவுன்சிக் தோட்டப் பிரதிநிதி சோமசுந்தரம் ஆனந்தபாபு, வட்டவளை லோனாக் தோட்ட ஓய்வுபெற்ற தொழிலாளி திருமதி சிலம்பரம் கனகம்மா, தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா – மஸ்கெலியா தொகுதி செயற்குழு உறுப்பினர் அஷோக கருணாரத்ன, தேசிய மக்கள் சக்தியின் கம்பளை தொகுதி செயற்குழு உறுப்பினர் சிவகுமார் பிரகாஷ் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.
2023.10.11 தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பில்… எமது நாட்டுக்கு வருடாந்தம் மழைவீழ்ச்சி மூலமாக கிடைக்கின்ற நீர் இயற்கையாக பெருக்கெடுத்து ஓடுகின்ற 103 ஆறுகளாலும் 94 சிற்றாறுகளாலும் எமது நிலத்தின் இடஅமைவுக்கிணங்க இயற்கையாகவே முகாமை செய்யப்படுகின்றது. அதைப்போலவே மனிதனின் இடையீட்டினால் நிலத்தின் இடஅமைவினை பயன்படுத்தி தொடர்படு அருவி முறைமையை நிர்மாணிப்பதால் மகத்தான உயிர்ப்பன்வகைமையை மரபுரிமையாக்கிக் கொடுத்துள்ளது. இந்த நாட்டுக்கு கிடைக்கின்ற 130 பில்லியன் கன மீற்றர் மழைநீர் அளவினை சந்தைப் பெறுமானத்திற்கு சீராக்கம்செய்ய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் […]
2023.10.11 தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பில்…
எமது நாட்டுக்கு வருடாந்தம் மழைவீழ்ச்சி மூலமாக கிடைக்கின்ற நீர் இயற்கையாக பெருக்கெடுத்து ஓடுகின்ற 103 ஆறுகளாலும் 94 சிற்றாறுகளாலும் எமது நிலத்தின் இடஅமைவுக்கிணங்க இயற்கையாகவே முகாமை செய்யப்படுகின்றது. அதைப்போலவே மனிதனின் இடையீட்டினால் நிலத்தின் இடஅமைவினை பயன்படுத்தி தொடர்படு அருவி முறைமையை நிர்மாணிப்பதால் மகத்தான உயிர்ப்பன்வகைமையை மரபுரிமையாக்கிக் கொடுத்துள்ளது. இந்த நாட்டுக்கு கிடைக்கின்ற 130 பில்லியன் கன மீற்றர் மழைநீர் அளவினை சந்தைப் பெறுமானத்திற்கு சீராக்கம்செய்ய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தயாராகி வருகின்றது. இந்த ஒரு லீற்றர் நீரின் விலை ஒரு சதம் என எடுத்துக்கொண்டால் பதினொரு இலட்சம் மில்லியன் கணக்கில் ஈட்டிக்கொள்ள இந்த மோசமான சிந்தனை மூலமாக கணிப்பீடு செய்துள்ளார்கள். அதற்கிணங்க பராக்கிரம சமுத்திரத்தின் நீர்க் கொள்ளளவான 134 மில்லியன் கன மீற்றரக் விலைக் கணித்தால் 1340 மில்லியன் ரூபாவாக மதிப்பீடுசெய்ய முடியும். ஒரு லீற்றர் நீருக்கு ஒரு சதம் வீதம் கணித்தால் இந்த பெறுமானமே கிடைக்கும். எவ்வளவு பெருந்தொகையான இலாபத்தை ஈட்டுவதற்காக இயற்கையாக கிடைக்கின்ற நீரை விற்பனைசெய்ய முன்மொழிந்துள்ளமை தெளிவாகின்றது. 16 இலட்சம் ஏக்கர் வயலுக்கு நெற் செய்கைக்காகவும் நீரில் 88% ஐ பாவிக்கின்ற ஒட்டுமொத்த விவசாயத்திற்காகவும் நெற்செய்கைக்காக வயல் ஏக்கரொன்றுக்கு ஒரு போகத்தின்போது ஒரு லீற்றர் நீரை ஒரு சதம் வீதம் எடுக்க ரூ. 4000 விலையை செலுத்த நேரிடும். அதன் மூலமாக நீரை விற்பனை செய்வதில் உள்ள பாரதூரத்தன்மையை விளங்கிக் கொள்ளலாம்.
உலகின் சுற்றாடலியலாளர்கள் கணிப்பிட்டுள்ளவிதத்தில் ஒரு கிலோ தானியத்தை உற்பத்திசெய்ய 350 லீற்றருக்கு கிட்டிய அளவு அவசியமாகின்றதெனக் கண்டுபிடித்துள்ளார்கள். ரணில் – ராஜபக்ஷாக்கள் நீருக்கான விலையை நிர்ணயித்தால் எமது நாட்டில் ஒரு கிலோ அரிசியை உற்பத்திசெய்ய 35 ரூபா செலவாகும். ஒரு முட்டையை உற்பத்திசெய்ய ஏறக்குறைய 360 லீற்றர் நீர் செலவாகின்றதெனக் கண்டுபிடித்துள்ளார்கள். அப்படியானால் ஒரு முட்டைக்காக 4 ரூபாவுக்கு கிட்டிய மேலதிக செலவினை ஏற்கநேரிடும். ஒரு லீற்றர் பால் உற்பத்திசெய்ய பசுக்களுக்காக அண்ணளவாக 1000 லீற்றர் நீர் தேவைப்படுகின்றது என கண்டுபிடித்துள்ளார்கள். நெல், காய்கறிகள், பழங்கள் மாத்திரமல்ல கால்நடைவள உற்பத்தியின்போதும் அதிகூடிய கிரயத்தை ஏற்க நேரிடும். நீரை பாவிக்கின்ற எந்தவொரு துறையிலும் நீருக்காக செலுத்தவும் அதற்காக வரி விதிக்கவும் அதன் விளைவாக விலை அதிகரிப்பதையும் தடுக்கமுடியாமல் போய்விடும். இந்த சட்டத்தை உடனடியாக சுருட்டிக்கொள்ளுமாறு நாம் அனைவரும் ஏகோபித்த குரலில் அழுத்தம் கொடுக்கவேண்டும்.
2023.10.11 தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பில்… எமது நாட்டு மக்களுக்கு நீருடன் பாரிய ஆன்மீக ரீதியான தொடர்பு நிலவுகின்றது. கலாசாரரீதியாக, சமயரீதியாக உணவு மற்றும் குடிநீருக்கு மேலதிகமாகவே பாவிக்கிறார்கள். விசேட தருணங்களில் ஒரு தம்ளர் நீரைக் கொடுத்தே வரவேற்கிறார்கள். உணவு உண்ண கடைக்குச் சென்றால் முதலில் பெரிய கிளாஸ் ஒன்றில் தண்ணீர் தருவார்கள். ஐரோப்பாவில் நீர் சம்பந்தமாக உள்ளக அழுத்தத்தின்பேரில் அளவீடு ஒன்றைக் கண்டுபிடிக்கையில் எமது நாட்டு மக்கள் தரத்திற்கிணங்க நீருக்கு பெறுமதியொன்றைக் கொடுத்தார்கள். எமது […]
2023.10.11 தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பில்…
எமது நாட்டு மக்களுக்கு நீருடன் பாரிய ஆன்மீக ரீதியான தொடர்பு நிலவுகின்றது. கலாசாரரீதியாக, சமயரீதியாக உணவு மற்றும் குடிநீருக்கு மேலதிகமாகவே பாவிக்கிறார்கள். விசேட தருணங்களில் ஒரு தம்ளர் நீரைக் கொடுத்தே வரவேற்கிறார்கள். உணவு உண்ண கடைக்குச் சென்றால் முதலில் பெரிய கிளாஸ் ஒன்றில் தண்ணீர் தருவார்கள். ஐரோப்பாவில் நீர் சம்பந்தமாக உள்ளக அழுத்தத்தின்பேரில் அளவீடு ஒன்றைக் கண்டுபிடிக்கையில் எமது நாட்டு மக்கள் தரத்திற்கிணங்க நீருக்கு பெறுமதியொன்றைக் கொடுத்தார்கள். எமது நாட்டில் ஆவியாக்கம் காரணமாக நீர்தேக்கங்களில் உவர்த்தன்மை அதிகரிக்கின்றது. உயர்ந்த இடத்திலிருந்து தாழ்ந்த இடத்திற்கு நீரை வழங்குகையில் தாழ்வான இடத்தில் நீரைப் பெறுகின்றவர்களுக்கு உவர்த்தன்மை அதிகரிக்கின்றது. அதனாலேயே உயர்ந்த இடத்திலிருந்து வில்லுவிற்கு நீரை விடுவித்து இயற்கைச் சுற்றாடல் முறை ஊடாக நீரை முகாமைசெய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இவ்விதமாகத்தான் மேலேயுள்ள கிராமத்திலிருந்து கீழேயுள்ள கிராமத்திற்கு நீர் வழங்கப்பட்டது. அதற்காக குளச் செயலாளரொருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அளவுசார்ரீதியாக மாத்திரமன்றி, தரரீதியாகவும் எமது நாட்டில் இவ்விதமே நீர் முகாமை செய்யப்பட்டது.
அத்தகைய வரலாற்றினைக் கொண்டிருந்த எங்களுக்கு நீரை முகாமைசெய்யவேண்டிய விதம்பற்றி கற்றுக்கொடுக்க தற்போது எரிக் சோல்ஹயிம் போன்றவர்கள் மட்டுமன்றி சர்வதேச அமைப்புகளும் உருவாகியுள்ளன. பிரமாண்டமான பல்தேசிய கம்பெனிகளின் நிதியளிப்புகளுடன் அந்த சர்வதேச நிறுவனங்களக்கு பணம் பாய்ச்சப்படுகின்றது. வடகீழ், தென்மேல் பருவமழை மாத்திரமன்றி இடைப் பருவக்கால மழை மூலமாகவும் நீர் கிடைப்பதோடு அதற்கு மேலதிகமாக புயல்காற்று மூலமாகவும் கிடைக்கின்ற மழைநீர் மேலிருந்து கீழ்நோக்கி பாய்ந்தோடுகின்றது. எமது நாட்டின் இந்த புவியியல் இடஅமைவு காரணமாக மேற்பரப்பு நீரும் நி்றைந்துள்ளது. மேற்பரப்பு நீருக்கு மேலதிகமாக உள்ளகத்தில் நீர்ப்பீடமொன்றும் இருக்கின்றது. எமது நாட்டில் வரலாற்றுக்காலம் பூராவிலும் நீர்த் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொண்ட உருவாகிய நீர்க் கலாசாரமொன்றின் உரிமை நிலவுகின்றது.
மக்களுடன் நீருக்கு இருக்கின்ற ஆன்மீகத் தொடர்பினைத் தகர்த்து வணிகப் பெறுமதியைக் கொடுக்க பலவிதமான செயல்முறைகளை கடைப்பிடிக்கிறார்கள். இந்த ஆன்மீகத் தொடர்பினை தகர்ப்பதற்கான ஆரம்பப் படிமுறையாகவே நகர்சார்ந்த கால்வாய் வழிகளும் ஆறுகளும் குப்பைக் கான்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. களனிகங்கை எந்தளவு அழிவுமிக்கவகையில் அசுத்தமாக்கப்பட்டுள்ளதென்பது தற்போது தெளிவாகின்றது. நீருக்கு வணிகப் பெறுமதி அளிக்கப்பட்டு புரியப்போகின்ற இந்த முயற்சியால் மக்கள் மென்மேலும் பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளார்கள். கல்வி, சுகாதாரம், பெற்றோலியம் போன்றே இன்றளவில் நீரும் வணிகப் பெறுமதிகொண்ட ஒன்றாக மாற்றப்படுவதற்கான “றீகேனிங் ஸ்ரீலங்கா” நடவடிக்கை மீண்டும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாங்கள் பாடசாலை செல்கின்ற காலகட்டத்தில் நிலவிய “நீரை செல்வம்போல் பாதுகாத்திடுவோம்” எனும் மேற்கோள் வாசகத்தின் ஊடாக எமது மக்கள் உயிரைப்போல் பாதுகாத்த நீர் வணிகமயமாக்கலுக்கு குறுக்கப்பட்டுள்ளது. நீரைக் காப்பாற்றிக்கொள்ளும் பேராட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றுசேருமாறு நாங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.